Wednesday 13 November 2013

முழு வெற்ற கண்ட முழு மனிதர் முஹம்மது (ஸல்) அவர்கள்


முழு வெற்ற கண்ட முழு மனிதர் முஹம்மது (ஸல்) அவர்கள்

Mohammed is the most successful leader in the world - (Carl – Marks)
முஹம்மத் இஸ் மோஸ்ட் சக்ஸஸ் ஃபுல் லீடர் இன் வேர்ல்ட் (காரல் மார்க்ஸ்)

உலகத் தலைவர்களில் முழு வெற்றகண்ட முழு மனிதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தான்என காரல் மார்க்ஸ் எனும் அறிஞன் புகழாரம் சூட்டினான்.
THE 100 எனும் தனது நூலில் மைக்கேல் H.ஹார்ட் என்ற கிறிஸ்துவ எழுத்தாளர் உலகில் தலை சிறந்த நூறு நபர்களில் முதலாம் நபராக முஹம்மத் (ஸல்) அவர்களை தேர்வு செய்து முதல் இடம் பெறச் செய்திருக்கிறார்.
இதுபோன்று எண்ணற்ற அறிஞர்கள், ஆய்வாளர்கள், மேதைகள், அறிவியலாளர்கள், அரசியல் தலைவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை குறித்து சிறப்பித்து புகழாரம் சூட்டியுள்ளனர்.
உலகில் வேறெந்த தலைவருக்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பு உண்டென்றால் அது
நபி (ஸல்) அவர்களைப் பற்றி பதிவு செய்யப்படுகிற எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் அது தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதும், அதைச் சொன்னவரின் வாழ்க்கை அலசி ஆராயப்படுவதும் உலகில் வேறெந்த தலைவரின் வரலாற்றை பதிவு செய்யும் போது இவ்விதி பின்பற்றப்படுதில்லை.

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை சொன்னவர்களின் (பல்லாயிரக் கணக்கானவர்களின்) வாழ்கை்கையும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது மற்றுமோர் சிறப்பாகும்.

உதயமும், வெளிச்சமும்
கி.பி. 571-ல் பிறந்து சற்றேறக்குறைய 63 ஆண்டு காலத்தில் வெறும் 23 ஆண்டு காலம்தான் இப்புவியை புரட்டிப்போட, உலக மாந்தர்களின் அறியாமையை அகற்ற, இருளடைந்திருந்த மனித குல இதயங்களில் வெளிச்ச மேற்றிட, முஹம்மத் (ஸல்) அவர்கள் எடுத்துக்கொண்டது.
இந்த 23 ஆண்டுகளில்
தனி மனித ஒழுங்கு, பொது வாழ்க்கை, ஆன்மீகம், குடும்பவாழ்க்கை மனிதநேயம், சமய நல்லிணக்கம், அரசியல், கல்வி என அனைத்து தளங்களிலும் தங்கள் வாழும் காலத்திலேயே முழு வெற்றியை கண்டவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்கள்.
இன்று 140 இஸ்லாமிய நாடுகள், 160 கோடி முஸ்லிம்கள் கோடிக்கணக்காண இறையில்லங்கள், லட்சக் கணக்கான இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள். இவை அனைத்தும் அந்த 23 ஆண்டு கால முழு வெற்றிக்கான சான்றுகளாகும்.
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாலும் இருக்கிற ரணங்கள், காயங்கள், தோல்விகள், அவமானங்கள், இழப்புகள் முஹம்மத் (ஸல்) அவர்களின் வெற்றிக்குப் பின்னாலும் உண்டு. ஆனால் வெற்றியின் மமதையில், பெருமையில், செருக்கில் ஒருபோதும் மாநபி(ஸல்) அவர்கள் நடந்து கொண்டதில்லை.
ஆகவே, உலக மனித சமூகத்தின் உயர்வுக்கும், வெற்றிக்குமு் வித்திடுகின்ற வாழ்க்கை, முன்மாதிரி முஹம்மத் (ஸல்) அவர் அல்லாஹ் கூறுகின்றான்

உங்களில் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகின்றவர்களுக்கும், அல்லாஹ்வை அதிக மாக நினைவு கூறுபவருக்கும் அல்லாஹ்வின் தூதரிடத்தில் ஓர் அழகிய முன்மாதிர் இருக்கின்றது
(அல்குர்-ஆன்: 33:21)
உலகத் தலைவர்களும், முஹம்மத் (ஸல்) அவர்களும்
மனித வாழ்க்கையில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் உலகையே தமது கொள்கையால் திரும்பித் பார்க்க வைத்தவர்கள் மனித வாழ்வை புரட்டிப் போட்டவர்கள் என்றெல்லாம் வரலாறு போற்றும் பலதவைர்கள்
அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்கள் கண் முன்னிலேயே அவர்களின் கொள்கைகள், கோட்பாடுகள் குழிதோண்டி புதைக்கப்படுவதை கண்டார்கள், அவர்களால் ஒன்றும் செய்திட இயலவில்லை.

அஹிம்சையை உலகில் நிலையான வெற்றியை பெற்றுத்தரும் என்று போதித்தார் காந்தியடிகள்.
சுந்திர இந்தியா அமைய அவரின் அஹிம்சையே அடித்தளம் என இன்றளவும் சொல்லப்பட்டு வருகிறது.
ஒருமுறை லூயிஸ்பெஷர் எனும் ஆங்கிலேயன் காந்தியை சந்தித்தார்.

லூயில் பெஷர்:   சுதந்திர இந்தியாவிற்காக போராடும் நீங்கள் இந்தியா சுதந்திர மடைந்தால் ஆயுதங்களை என்ன செய்வீர்கள்? எனக் கேட்டார்.
காந்தி                       கடலில் எறிந்திடுவேன், வயலிலும், தோட்டங்களிலும் வேலை செய்ய ராணுவப்படைகளை அனுப்புவேன் என்றார்.
லூயிஸ் பெஷர்   யாராவது போர் தொடுத்தால்? என்ன செய்வீர்கள்? எனக் கேட்டார்.
காந்தி                       போர் செய்ய வருபவர்களை நாங்கள் விருந்தினர்களாக அங்கீகரிப்போம், எங்களோடு வாழச் செய்வோம், உபசரிப்போம் என்றார்.
இந்தியா சுதந்திர நாடானது. நாட்டை தலைமை தாங்கி வழி நடத்துமாறு நாட்டு மக்களும், அரசியல் தலைவர்களும் அழைப்பு விடுத்தனர் காந்திக்கு,
பதவி வேண்டாம் என்றார், தட்டிக் கழித்தார்.
உலக நாடுகளின் நாளைய கேள்விக்கு பயந்து மறுத்தார்?
அவருடைய சீடர்கள் அரசாங்கத்தை அமைத்தனர், ராணுவத்தை கலைத்துவிடச் சொல்லவில்லை காந்தி.
இந்தியாவை பாகிஸ்தான் தாக்கியபோது வாருங்கள் விருந்தாளிகளாகநாங்கள் உபசரிக்கின்றோம் எனக்கூறவில்லை காந்தி
குண்டு நிரப்பப்பட்ட மூன்று விமானங்களை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.
எங்கே போனது அவர் முழுங்கிய அஹிம்சை முழக்கம்?

அபூ சுஃப்யான் இஸ்லாத்திற்கெதிராக ஃப்தஸ் மக்கா முன்வரை நடந்த அனைத்து யுத்த களத்தையும் தலைமையேற்று வழி நடத்திய மாபெரும் தளபதி.

முழுக்க தமது சிந்தையையெல்லாம் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் எப்படி அழிப்பது என்பது பற்றியே பயன்படுத்தியவர் குறிப்பாக உஹத்முஸ்லிம்கள் சிதறி ஓடுவதற்கும், முஸ்லிம்கள் தோற்றுப் போவதற்கும் முக்கிய காரணியாய் திகழ்ந்தவர். நல்ல மதயோகி. இஸ்லாத்திற்கெதிரான எந்த ஒரு கூட்டமும், ஆலோசனையும் இவர் இன்றி நடைபெறாது.

ஹிஜ்ரி8 ரமால் பிறை10, 10000 தோழர்களுடன் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து மக்கா நோக்கி புறப்பட்டார்கள். இரவில் மர்ருள்ளஹ்ரான் எனும் இடத்தில் கூடாரம் அமைத்து இரவு தங்கினார்கள். நெருப்பு மூட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு கட்டளையிட்டார்கள். உமர் (ரலி) தலைமையில் பாதுகாப்புபடையொன்றை நியமித்தார்கள் (ஸல்) அவர்கள்.

அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வெண்மை நிற கோவேறு கழுதையில் ஏறி அப்படியே வந்த கொண்டிருந்தார்கள்.

ஓரிடத்தில் ஸஹாபாக்களால் மூட்டப்பட்ட நெருப்பின் பிரம்மாண்ட வெளிச்சத்தைப்பற்றி இருவர் பேசிக் கொண்டிருப்பது கேட்டு அந்த இடத்தை நோக்கி சென்றார்கள் அப்பாஸ் (ரலி)

அவர்களின் குரலை வைத்து இருவரில் ஒருவர் அபூ சுஃப்யான் இப்னு ஹர்ப் என்றும் மற்றொருவர் புதைல் இப்னு வரகா என்றும் தெரிந்து கொண்டார்கள்.

அபூ சுஃப்யான் சொன்னார்இன்று இரவில் தெரியும் நெருப்பு போன்றும், அங்கு கூடியிருக்கும் படையைப் போன்றும் நான் வேறெங்கும் பார்த்ததில்லை.

அதற்கு புதைல் சொன்னார்: இது குஸாஆ கோத்திரத்தின் படையாகும். நம்மீது போர் தொடுக்கத்தான் இவர்கள் இவ்வாறு நெருப்பு மூட்டியிருக்கிறார்கள்

அபூ சுஃப்யான் சொன்னார்: இல்லை, அவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைந்தவர்கள். மேலும், நம்மீது போர் தொடுக்குமு் அளவு துணிவு இல்லாதவர்கள் இது அவர்களின் படையாகவோ, அவர்கள் மூட்டிய நெருப்பாகவேர இருக்க வாய்ப்பில்லை.
என்று இருவரும் உறையாடிக் கொணடிருந்ததைக் கேட்டுக்கொண்டே அபா ஹன்ளலா (இது அபூ சுஃப்யானின் புனைப்பெயர்) என்று அழைத்தார்கள். பதிலிக்கு பதிலுக்கு அபூ சுஃப்யானும் அபுல் பள்ல்? எனக் (இது அப்பாஸ் (ரலி) அவர்களின் புனைப்பெயர்) கேட்டார்.
அபூ சுஃப்யானே நீ அழிந்து போனாய்! குறைஷிகளும் அழிந்தே விட்டனர்! அவர்களும் அவர்களின் தோழர்களும் வந்து இறங்கியுள்ளனர் என்றார் அப்பாஸ் (ரலி)

நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டார்கள் என்றால் உன்னை கொன்றே விடுவார்கள், என்றார் அப்பாஸ் (ரலி)

தப்பிக்க என்ன வழி?

இதோ! என் கோவேறு கழுதையில் ஏறு! உன்னை நான் நபி (ஸல்) அவர்களின்முன் கொண்டு நிறுத்துகிறேன். உனக்கு நான் அவர்களிடமிருந்து அபயம் பெற்றுத் தருகிறேன்.

முஸ்லிம்களின் கூடாரத்தை நெருங்கிய ஒவ்வொருவரின் நெருப்புக்குண்டத்தை தாண்டும்போதும் யார் எனக் கேட்கப்பட்டு இவர்கள் நபிகளாரின் பெரிய தந்தை என்றும் இது நபிகளாரின் கோவேறு எழுதையென்றும் அவர்களாகவே பதில் கூறிக் கொண்டனர்.

உமர் (ரலி) அவர்களுக்கருகில் நான் கடந்து சென்ற போது
அல்லாஹ்வின் எதிரி அபூ சுஃப்யான்! எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! எவ்வித ஒப்பந்தமும், விதியும், உம்மோடு இல்லாதபோது உம்மை என்னிடம் சிக்கவைத்துவிட்டான்என்று கூறியவாறு விருவிய வாளுடன் ஓடி வந்தார்.

அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்
நிலைமையை உணர்ந்துகொண்ட நான் வேகமாக கழுதையை செலுத்தி நபி (ஸல்) அவர்களின் கூடாரத்திற்குள் அபூ சுஃப்யானோடு நுழைந்து கொண்டேன். அடுத்ததாக உமர் (ரலி) நுழைந்து

அல்லாஹ்வின் தூதரே! இதோ அல்லாஹ்வின் எதிரி அபூ சுஃப்யான் எந்த விதிமுறையும், ஒப்பந்தமும் இல்லாத நிலையில் அல்லாஹ் சிக்க வைத்துள்ளான். அனுமதி கொடுங்கள் அவர் கழுத்தை அறுத்துவிடுகிறேன்.

அப்பாஸ் (ரலி) சொன்னார்கள்
            நான் அடைக்கலம் கொடுத்துள்ளேன்.
            அல்லாஹ்வின் தூதரே!
ஆனால், உமர் (ரலி) அவர்கள் அபூ சுஃப்யானை கொன்று விட அதிக முனைப்புடன் இருந்தார்கள்.

என்னை தனிமையில் விட்டுவிடுங்கள். யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்.
என்னிடம் காலையில் அபூ சுஃப்யானை அழைத்து வாருங்கள் என்று அப்பாஸ் (ரலி) அவர்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மறுநாள் காலை நபி (ஸல்) அவர்களின் முன் அமர்ந்திருந்த அபூ சுஃப்யானை நோக்கி

அபூ சுஃப்யானே! உனக்கு என்ன கேடு?
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்று நீ இன்னுமா தெரிந்துகொள்ளவில்லை என்று  நபி (ஸல்) அவர்கள் கேட்க,
என் தாய், தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!
எவ்வளவு பெரிய சாந்த குணம் கொண்டவர்கள் நீங்கள்!
எவ்வளவு சங்கையானவர்கள் நீங்கள்!
குடும்ப உறவுகளை எவ்வளவு பேணுகிறீர்கள் நீங்கள் எனப் பதிலளித்தார் அபூ சுஃப்யான்.

மீண்டும் நபி (ஸல்) அவர்கள்
அபூ சுஃப்யானே உனக்கு என்ன கேடு!
நான் அல்லாஹ்வின் தூதர் தான் எனறு விலங்கிக் கொள்ள இன்னுமா உனக்கு நேரம் வரவில்லை? எனக் கேட்டார்கள்.

என் மனதில் இந்த விஷயத்தில் இன்னும் சிறிதளவு சந்தேகம் இருந்து கொண்டுதானிருக்கிறது என்றார் அபூ சுஃப்யான்.

அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் அபூ சுஃப்யானே
உன்னை கொள்வதற்குமுன் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்! என்றார்கள்.
அபூ சுஃப்யான் அக்கணமே இஸ்லாத்தை ஏற்று ஏகத்துவ சாட்சியம் அளித்தார்கள்.

அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம்

அபூ சுஃப்யான் கொளரவத்தை விரும்புபவர் அவரை ஏதாவது கொண்டு கொளரவியுங்கள், என்றார்.
ஆம் அப்பாஸே!
யார் அபூ சுஃப்யான் வீட்டுக்குள் நுழைந்து கொண்டாரோ அவர் அபயம் பெற்றார்!
யார் வீட்டுக்குள் நுழைந்து தாழிட்டுக்கொண்டாரோ அவர் அபயம் பெற்றார்!
யார் கஃபாவில் நுழைந்து கொண்டாரோ அவர் அபயம் பெற்றார்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த இடத்தைவிட்டும் அபூ சுஃப்யான் (ரலி) நகர்ந்தும் அப்பாஸ் (ரலி) அவர்களை அழைத்து நபி (ஸல்) அவர்கள்
அப்பாஸே! பாதைகள் பிரிந்து செல்கிற முக்கிய மலைப் பள்ளத்தாக்கில் அபூ சுஃப்யானை நிறுத்தி வையுங்கள் அல்லாஹ்வின் படையை அவர் பார்க்கட்டும் என்று கூறினார்கள்.
அதுபோன்றே அப்பாஸ்  (ரலி) அவர்கள் அபூ சுஃப்யான் (ரலி) அவர்களை நிறுத்திவைத்தார்கள்.

நபித் தோழர்கள் ஒவ்வொரு குழுக்களாக அணிவகுத்துச் சென்ற அந்த அணிவகுப்பை கண்ணுற்ற அபூ சுஃப்யான் (ரலி)
இவர்கள் யார்?
சுலைம் கோத்திரம்
இவர்கள் யார்?
முஜைனா
இப்படி கேட்டு, அப்பாஸ் (ரலி) பதில் கூறும்போது, எனக்கு என்ன நேர்ந்தது? எனக்கும் முன்பாகவே இவர்களெல்லாம் வந்து விட்டார்களே! என்று அபூ சுஃப்யான் (ரலி) கூறிக்கொண்டிருந்தார்.
அந்நேரத்தில் அந்த அணிவகுப்பில்,
நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரிகள், முஹாஜிர்கள் புடைசூழ ஆயுத மேந்தி அணிவகுத்து வந்து கொண்டிருந்தனர்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆயுதங்களாகவே தெரிந்தது
அப்பாஸே! சுப்ஹானல்லாஹ்! இவர்கள் யார்?
இக்குழுவில் முஹம்மத் (ஸல்) அவர்களும் முஹாஜிர் மற்றும் அன்ஸார் தோழர்களும் செல்கிறார்கள் என்றார் அப்பாஸ் (ரலி)

நிச்சயமாக! இவர்களை யாராலும் எதிர்கொண்டு வெல்லமுடியாது!. அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம் சகோதரனின் மகனின் ஆட்சி மிகப்பிரமாண்டமே! என்றார்.
அதற்கு அப்பாஸ் (ரலி)
            அபூ சுஃப்யானே!
            இதுதான் நபித்துவமாகும் என்றார்கள்.
            ஆம். விலங்கிக் கொண்டேன் என்றார் அபூ சுஃப்யான் (ரலி) அப்படியானால் உன் சமூகத்தாரின் வெற்றியும் அங்குதான் இருக்கிறது என்றார்கள் அப்பாஸ் (ரலி) அவர்கள்.
நூல் தஹ்தீப் சீரத் இப்னு ஹிஷாம் பக்கம்
முஸ்லிம்களையும், முஹம்மத் (ஸல்) அவர்களையும் துன்புறுத்திக் கொண்டிருந்த ஒருவர்,
இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்று முணைப்புடன் செயல்பட்ட ஒருவர்
எவ்வித சாட்சியும் இன்றி, நிராயுதபாணியாய் கொண்டுவந்து நிறுத்தப்பட்டபோது,
அகிலத்தின் அருட்கொடை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட விதம் எவ்வளவு விந்தையானது?
நபி (ஸல்) அவர்கள் தாம் போதித்த போதனையை நிலை நிறுத்துவதில் எந்தளவு உறுதியாய் இருந்தார்கள்!
புரட்சியே வெற்றியின் வழி என்றார் ரஷ்யாவின் லெனின் தனது கொள்கையை பரப்பிட ஏதுவாக சில கோட்பாடுகளை வரையறுத்தார்.

1.     முதலாளித்துவத்திற்கெதிராக பாட்டாளி வர்க்கத்தை ஒன்று திரட்டுவது
2.     முழுத்திறனையும் அதற்கென செலவிடுவது.
3.     நடைமுறை அரசியலில் சில மாற்றங்களை கொண்டு வருவது.
4.     திருமணம், குடும்பம் எனும் தனி மனித சித்தாந்தத்தை தகர்த்தெறிவது.
மக்களிடம் பெரும் வரவேற்கு கிடைத்தது. சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்று மகிழ்ந்தனர் மக்கள்.
பூரித்துப் போனார் லெனின். ஆட்சியமைத்துக் காட்டினார்.
1.     குழந்தை, முதியோர்களை அரசே கண்காணிக்கும்.
2.     விரும்பும் ஆண் அல்லது பெண், விரும்புகிற பெண் அல்லது ஆணை திருமணம் ஒப்பந்தம் இன்றி சேர்ந்து வாழலாம்.
என்று சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.
ஆனால், நீண்ட காலம் நீடிக்கவில்லை சோவியத் யூனியன் எனும் வல்லரசு ரஷ்யாவின் அரசியல் பயணம்.

வெகு சீக்கிரமே வந்தது தொடர் பயணத்துக்கு முற்றுப்புள்ளி ஆம்! சிதருண்டு போன கண்ணாடி போல் சோவியத் யூனியன் 35-க்கும் மேற்பட் நாடுகளாக சிதறிப் போயின.
எந்த புரட்சியால் சிம்மாசனம் ஏறினாரோ அதே புரட்சியால் அறியணையிலிருந்து இறக்கிவிடப்பட்டார் லெனின்.

செல்வந்தர்கள் ஏழைகளை அரவணைக்க வேண்டும். ஒருபோதும் கைவிடலாகாது என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.

ஜகாத் எனும் கட்டாய தர்மம், ஸதக்கா எனும் மேல் மிச்சமான தர்மத்தை செல்வந்தர்கள் மீது விதித்து ஏழைகள் இல்லா ஓர் உலகத்தை தாங்கள் வாழும் காலத்திலேயே உருவாக்கிக் காண்பித்தார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

அல்லாஹ் கூறுகின்றான்:
நபியே! அவர்களின் செல்வத்திலிருந்து ஜகாத் நிதியை (வசூல் செய்து) கைப்பற்றுவீராக!                                                                         அல்குர்-ஆன்: 9:103

அல்லாஹ்வின் வழிகாட்டலுக்கேற்ப மாநபி (ஸல்) அவர்கள் ஜகாத் பணத்தை வசூல் செய்து உரியவர்களிடம் ஒப்படைத்த எண்ணற்ற செய்திகள் ஹதீஸ் கிரந்தங்களில் காணப்படுகின்றன.

நபிகளாரின் மறைவுக்குப்பின் ஹிஜ்ரி99-ல் கலீபாவான உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) உலகமே வியக்கும் வண்ணம் ஆட்சி புரிந்தார்கள்.

ஒருமுறை கலீபா உமர் (ரஹ்) அவர்கள் தமது ஈராக்கின் ஆளுநர் அப்துல் ஹமீது இப்னு அப்துர் ரஹ்மான் என்பவருக்கு கடிதம் எழுதினார்கள்.

மக்களுக்கு கொடுக்க வேண்டிய மாதாந்திர உதவித் தொகையை ஜகாத் நிதியிலிருந்து கொடுத்து விடுங்கள்அதற்கு ஆளுநர் நான் கொடுத்து விட்டேன்! ஆயினும் ஏராளமான நிதி மீதமிருக்கிறது என பதில் கடிதம் அனுப்பினார்.
கடனாளிகளுக்கு கொடுத்துவிடுங்கள் என்று இன்னொரு கடிதம் அனுப்பினார்கள் அதற்கு ஆளுநர்.
அப்படிக் கொடுத்து விட்டேன்! ஆயினும் ஏராளமான நிதி மீதமிருக்கிறது என்று பதில் கடிதம் அனுப்பினார்.

திருமண மஹர் தொகை கொடுக்க சிரமப்படுபவருக்கு கொடுத்துவிடுங்கள் என்றொரு கடிதம்,
அதற்கு ஆளுநர், அதுபோக இன்னும் மீதமிருக்கிறது என்று பதில் கடிதம்.

இறுதியாக கலீஃபா உமர் (ரஹ்) அவர்கள் ஜிஸ்யா வரி செலுத்தக் கடமைப்பட்ட மாற்று சமயத்தவர்களில் யாராவது விவசாயத்தொழில் செய்ய முற்பட்டால் அவர்களுக்குத் தேவையான தொகையைக் கருவூல நிதியிலிருந்து கொடுத்து விடுங்கள் என்று பரிந்துரைத்தார்கள்.
நூல் அல்-அம்வால்
            நன்றி வறுமையின் கோரமும் இஸ்லாத்தின் தீர்வும்எனும் தமிழ் நூலிலிருந்து…..

ஒரு நூற்றாண்டு முடிவடைந்தும் கூட அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கொள்கையும், கோட்பாடுகளும் காணாமல் போய்விடவில்லை
அறியாமைக் காலத்தில் நான்கு வகையான திருமண நடைமுறைகளை பின்பற்றினர் அரபுலக மக்கள்.

1.      இன்று மக்களிடையே நடைமுறையிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும்.
2.      ஒருவர் தம் மனைவியிடம்மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்தவுடன் இன்ன நபருடன் படுக்கையை பகிர்ந்துகொள் என்பார் கருத்தரித்துவிட்டால் மீண்டும் சேர்த்துக்கொள்வார். ஆரோக்கியமான குழந்தை வேண்டுமென விரும்பிய இவ்வாறு செய்து வந்தனர்.
3.      பத்து பேருக்கும் குறைவான ஒரு குழுவினர் ஒன்றுகூடி அவர்கள் அனைவரும் ஒரே பெண்ணுடன் உறவு கொள்வார்கள். கருத்தரித்து குழந்தை பிறந்தபின் இது இன்னாரின் குழந்தையே என ஒருவரை சுட்டிக் காட்டி அனைவரையும் ஒன்றுகூட்டிச் சொல்வாள். பின்னர் அக்குழந்தை அவரிடம் ஒப்படைக்கப்படும்
4.      பலர் ஒரு பெண்ணுடன் உறவு கொள்வார்கள். கருத்தரித்து குழந்தையை பிரசவித்துவிட்டால் குழந்தையின்அங்க அடையாளங்களை வைத்து, முகக்குறி நிபுணர்களை கொண்டு ஆராய்ந்து தந்தையை முடிவு செய்து குழந்தை ஒப்படைக்கப்படும் அவன் மறுக்கமாட்டான் அவனின் மகன் என்றே மக்கள் அழைப்பார்கள்.
நூல்: ரஹீத்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருமண சட்ட வசனங்களான 4:45, 4:19, 19:23, 2:221, 24:3, 24:26, 24:32,32.

இவைகளை கொண்டு அறியாமைக் காலத் திருமணங்களை தகர்த்தெறிந்துவிட்டார்கள்.
ஒருமனிதனின் வெற்றிக்கு திருமண வாழ்வுஅதுவும் முறையான வாழ்வே துணையாக அமையும் என்று வழியுறுத்திக் கூறி மக்களை ஒருமுகப்படுத்தினார்கள்.

வட்டியில்லா பொருளாதாரம், வீண் விரயமில்லா செலவினங்கள் கஞ்சத்தனமில்லை சிக்கனம் என்று மிகப் பெரும் கோட்பாடுகளை வரையறுத்தார்கள் மாநபி (ஸல்) அவர்கள்.

ஒருவரையொருவர் நேருக்குநேர் தாக்கிக் கொணடு புரட்சி செய்து வெற்றி பெறமுடியாது, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழும் வாழ்க்கையில்தான் வெற்றிக்கான வழி உள்ளது என்பதை உலகிற்கு உணர்த்தியவர்கள் உத்தமர் (ஸல்) அவர்கள்.

அபூ சுஃப்யானிடம் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தி பார்ப்போம்.

இது தான் நபித்துவ மாகும்.

ஆக, தாங்கள் வாழ்கிற போது தாங்கள் சொன்னதையே செய்தார்கள்.
தங்களுக்குப்பின் அவர்கள் சொன்னதை செய்ததை நிலை நிறுத்துகிற சீடர்களையும், சமுதாயத்தையும் உருவாக்கி வரலாற்றில் முழு வெற்றி கண்ட முழு மனிதராக வாகாய் ஜொலித்துக் கொண்டிருக்கின்றார்கள் முஹம்மத் (ஸல்) அவர்கள்.

ஆக, சொன்னதை செய்வதிலும், சொல்வதை செய்கிற ஒரு சமுதாயத்தை உருவாக்கி காட்டியதிலும் முழு வெற்றிபெற்ற வீரராக வலம் வருகிறாரகள் முஹம்மத (ஸல்) அவர்கள்.
நபி (ஸல்) அவர்களின் மீது நேசங் கொண்டவராகவும்,
அவர்களின் வழியில் நடக்கும் நற்பேறுபெற்றவர்களாகவும் அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக! ஆமீன்!

வஸ்ஸலாம்

இன்ஷா அல்லாஹ்…..

நமது அடுத்த பதிவு
ஒரு வார இடைவெளிக்குப் பின்னர்
வெளியிடப்படும்.
துஆ செய்யுங்கள்
                        அன்புடன்
                        N.S.M. பஷீர் அஹ்மத்  (உஸ்மானி)



3 comments:

  1. basheer ahmad is the most successful artisit in the tamil nadu - (dglyousufigal)

    ReplyDelete
  2. அற்புதமான கட்டுறை.

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் அருமையான பதிவு

    ReplyDelete