Thursday 31 October 2013

இதயத்தை சுவனத்தோடு தொடர்பு படுத்துங்கள்!

     உலகைத் துறந்த ஆத்ம ஞானி இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்( அவர்கள். ஒரு முறை ஒரு குளியல் அறைக்கு குளிக்கச் சென்றார்கள். அந்த குளியல் அறையின் சொந்தக்காரன் காசு கொடுத்தால் தான் குளிக்க அனுமதிக்க முடியும் காசு இல்லையென்றால் வெளியே செல்லுங்கள் என்று கூறினான்.
அதைக் கேட்ட இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்கள் தேம்பித் தேம்பி அழுதார்கள்.
மன்னர் அந்த குளியல் அறையின் சொந்தக் காரனை நோக்கி
ஷைத்தான்கள் குடியிருக்கும் வீட்டை சிறிது நேரம் பயன்படுத்தவே கூலி கேட்கின்றாயே?
நபிமார்களும், ஸித்தீகீன்களும், ஷூஹதாக்களும் குடியிருக்கக்கூடிய சுவனத்திற்கு நான் என்ன கூலி கொடுக்கப் போகின்றேன்?
அல்லாஹ் என்னிடம் என்ன கூலியை கேட்பானோ?
என்று தெரியவில்லையே! என்று கூறினார்கள்.

ஓர் உண்மையான இறை நம்பிக்கையாளனின் வாழ்வு அங்கு நுழைந்த பின்னர்தான் உதயமாகின்றது.
ஆம்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேன் மக்களான தம் தோழர்களை முழுவதுமாக அதற்குத் தான் ஆயத்தப்படுத்தினார்கள்.
எதுவரையெனில்,
இசைத் செய்தால் சுவனம் சென்றிடுவோமா? அதைக் கொடுத்தால் சுவனம் கிடைத்திடுமா? இப்படிப் பேசினால் சுவனம் நுழையும் பேரு பெற்றிடுவோமா?
சதாவும் அவர்களின் இதயங்கள் சுவனத்தோடும், சுவனத்தின் இன்பங்களோடும் தான் தொடர்பில் இருந்தன.
எப்படியாவது சுவனம் கிடைத்திட வேண்டும்?
எப்படியாவது சுவனத்தில் நுழைந்திட வேண்டும்?
என்று ஆவல் கொண்டார்கள்.
விளைவு.
சில மேன்மக்கள் இவ்வுலகிலேயே நபிகளாரின் அமுத வாயால் நேரிடையாக சுவனத்தைக் கொண்டு சோபனம் சொல்லப்பட்டார்கள்.
இன்னும் சிலரை சாடை மாடையாக, இன்னும் சிலரிடத்தில் அதற்கான அறிகுறிகள் தென்படுவதாக, இன்னும் சிலரிடத்தில் அதற்கான தகுதிகள் இருப்பதாக மாநபி (ஸல்) அவர்கள் சோபனம் சொல்லியிருக்கின்றார்கள்.
ஆக அத்தனை பேரும் ஆசைப்பட்டார்கள்!
சுவனத்தின் அத்துணை அந்தஸ்துகளுக்கும் ஆசைபட்டார்கள்! நாமும் ஆசைப்படுவோம்!

சுவனமும், நரகமும்.

ஆக சுவனம் என்பது ஏக இறைவனை ஏற்றுக்கொண்டு, இறைத்தூதருக்கு கட்டுப்பட்டு, வாழ்வின் அனைத்து நிலைகளிலும் நல்லறங்கள் ஆற்றுபவர்களுக்கே கிடைக்கும்.

அல்லாஹ் கூறுகின்றான்:
     “எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ, அவர்களை உபசரிப்பதற்காகஃபிர்தௌஸ்எனும் சுவனங்கள் இருக்கின்றன. அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவற்றைவிட்டு வெளியேறி வேறு எங்கேனும் சென்றிட அவர்கள் சற்றும் விரும்ப மாட்டார்கள்.
அல்குர்ஆன்: 18:108
நரகம் என்பது ஏக இறைவனை ஏற்றுக்கொள்ளாமல், இறைத்தூதருக்கு கட்டுப்படாமல் மனம் போன போக்கில் வாழ்பவர்களுக்கே கிடைக்கும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
     “நிச்சயமாக நாம் நிராகரிப்பாளர்களை உபசரிப்பதற்காக நரகத்தை தயார் செய்துவைத்துள்ளோம்.
அல்குர்ஆன்: 18:102
தேட்டமும், ஏக்கமும்
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
சுவர்க்கப் பூங்காக்களை கடந்து சென்றால் நன்றாக மேய்ந்து கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறிய போது,
அல்லாஹ்வின் தூதரே! சுவர்க்கப் பூங்காக்கள் என்றால் எது? என்று ஸஹாபாக்கள் வினவினர்.
அல்லாஹ்வை நினைவு படுத்தக்கூடிய சபைகள் என்று நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.
நூல்: திர்மிதி, எண்: 3510
நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுக்கு சுவனத்தின் மீதான தேட்டத்தையும், அதை அடையத்துடிக்கும் ஆர்வத்தையும் தூண்டினார்கள்.
ஒரு சந்தர்ப்பம் வந்தது. அது நபித் தோழர்களை எந்த அளவு பாதித்தது எனில்,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் எடுத்துப் பணிக்கு நியமிக்கப்பட்ட ஹன்ழலா இப்னு அர் ரபீவு அல் உஸைதீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு நாள் அபூபக்கர் (ரலி) அவர்கள் என்னை சந்தித்து ஹன்ழலா எப்படி இருக்கின்றீர்? என்று கேட்டார்கள்.
நான்ஹன்ழலா நயவஞ்சனாகிவிட்டான் என்று சொன்னேன்.
அதற்குசுப்     ஹானல்லாஹ் என்ன சொல்கிறீர்? என்று கேட்டார்.
அதற்கு நான்அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சபையில் அமர்ந்திருக்கும் போது அவர்கள் சொர்க்கம், நரகம் ஆகியவற்றை குறித்து நாம் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறார்கள்.
அவர்களிடமிருந்து நாம் வெளியேறி வீட்டுக்கு வந்ததும், மனைவி மக்களுடன் உறவாடுகின்றோம், பிழைப்புகளில் ஈடுபடுகின்றோம்,
நபிகளார் சொன்னவற்றில் பலதை நாம் மறந்துவிடுகின்றோம்


நபிகளார் சொன்னவற்றில் பலதை நாம் மறந்து விடுகின்றோம்
அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதே மனோ நிலையை நானும் உணர்கிறேன். என்று கூறினார்கள்.
பிறகு, நானும், அபூபக்கர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம்.
பின்பு நான், அபூபக்கர் (ரலி) அவர்களிடம் கூறியதைப் போன்று நபிகளாரிடமும் கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்.
“என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணை!
நீங்கள் என்னிடம் இருக்கும் போதுள்ள நிலையிலும், இறைவனின் நினைப்பிலும் எப்போதும் இருப்பீர்களாயின், உங்கள் படுக்கைகளிலும், நீங்கள் செல்லும் பாதையிலும் வானவர்கள் (மூஸா பஹா) கை குலுக்கியிருப்பார்கள். மாறாக, இப்படிச் சில நேரம், அப்படிச் சில நேரம் நிலைமைகள் மாறிக் கொண்டு தானிருக்கும்
நூல்: முஸ்லிம், பாபு ஃபள்லி தவாமுத்திக்ர்

சுவனத்தின் சிந்தனையை விட்டும் சற்று விலகியிருப்பதையே நயவஞ்சகத் தனத்தின் அடையாளமாக கருதுகின்ற அளவிற்கு நபித் தோழர்களை மாநபி (ஸல்) அவர்கள் உருவாக்கினார்கள்.

ஏழ்மையும், வரமும்
ரபீ அத் இப்னு கஃபுல் அஸ்லம் எனும் நபித்தோழர், நபிகளாரின் பிரயாணத்திலும், ஊரில் தங்கியிருக்கும் போதும் நபிகளாரின் சுய தேவைகளின் போது தண்ணீர் எடுத்து கொடுக்கும் பணியை மேற்கொண்டிருந்த நபித்தோழர்.
கடும் குளிர் காலத்தில் ஒருநாள் நடு நிசி நேரம், மாநபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜத் தொழுகைக்காக எழுந்து, வாயிற்கதவை திறநது உளு செய்ய வெளியெ வந்த போது,
அங்கே சூடாக்கப்பட்ட தன்னீரோடு ரபீஆ, பெருமானாரின் முன் வந்து நின்றார்,
மாநபி (ஸல்) அவர்கள் அந்த வெந்நீரைக் கொண்டு உளு செய்தார்கள்.
பின்னர் ரபீஆவை நோக்கி
ரபீஆவே! கேளும்! உமக்கு என்ன வேண்டும்?
அல்லாஹ்வின் தூதரே!
எனக்கு உண்ண உணவு இல்லை!
உடுத்த உடை இல்லை!
குடியிருக்க வீடு இல்லை!
தேவையான அளவு பொருளும், பணமும் இல்லை!
     ஆகவே, இதை அடைந்திட வேண்டும் என்றார்களா? இல்லை!
நபியே! நாளை சுவனத்தில் உங்களின் நெருக்கத்தோடு உலவும் நற்பாக்யம் வேண்டும்! தூதரே! என்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவரகள்:
ஆச்சர்யம் மேலிட்டவர்களாக “எம்மிடம் இவ்வாறு கேட்குமாறு யார் தூண்டினார்கள்? எது தூண்டியது? என்று கேட்டார்கள்.
இல்லை அல்லாஹ்வின் தூதரே!
யாரும் தூண்டவில்லை! நான் தான் கேட்டேன்!
சுவனத்தின் மீதான ஆசையும், தங்களின் மீதான நேசமும் என்றார் ரபீஆ (ரலி) அவர்கள்.
அப்படியென்றால்,
உன் வாழ்க்கையில் “சுஜீத்செய்வதை அதிகம் கடை பிடித்து வாரும்!
அதாவது வாழ் நாள் முடியும்வரை விடாமல் தொழுது வாரும் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.
நூல்: மதாரிஜ்-அஸ்-ஸாலிக்கீன்
பாகம்:3, பக்கம்:147

நோயும், சோபனமும்
அபூ நயீம் (ரஹ்) அவர்கள், இம்ரான் இப்னு ஹஸீன் (ரலி) அவர்களின் மூலம் அறிவிக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தமது அருமை மகளார் அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள் நோயுற்றிருந்தபோது நலம் விசாரிக்கச் சென்றார்கள்,
மகளே! எப்படி இருக்கின்றாய்? உடல் நிலை எவ்வாறு இருக்கிறது?
என்று விசாரித்தார்கள்.
அப்போது அன்னை பாத்திமா (ரலி) அவர்கள்:
தந்தையே! உடல் நிலை கடுமையாக இருக்கின்றது.
நாளுக்கு நாள் வேதனை கூடிக் கொண்டிருக்கின்றது.
உணவு கூட என்னால் சாப்பிட முடியவில்லை. என்று கூறினார்கள்.
மகளே! பொறுத்துக்கொள்ள மாட்டாயா?
நாளை மறுமையில் சுவர்க்கத்தில் அல்லாஹ் உன்னை உலகத்து பெண்களுக்கு தலைவியாக ஆக்கினால் நீ திருப்தி அடைந்திடுவாய் அல்லவா? என்று கேட்டார்கள்.
அதற்கு, அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள்
முன்பொருமுறை மர்யம் (அலை) அவர்கள் சுவர்க்கத்தில் உலகத்தின் பெண்களுக்கு தலைவி என்று கூறினீர்களே!
அப்படியென்றால்? அவர்களின் நிலை என்ன?
மர்யம் (அலை) அவர்கள், அவர்கள் காலத்தைய பெண்களுக்கு சுவனத்தின் தலைவியாகவும்,
மகளே! நீ உன் காலத்தைய பெண்களுக்கு சுவனத்தின் தலைவியாகவும் இருப்பீர்கள்என்று மாநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: ஹூல்யத்துல் அவ்லியா, பாகம்:2, பக்கம்:42

இழப்பும், தேடலும்
பத்ரு யுத்தம் முடிந்து மாநபி (ஸல்) அவர்களும், மாநபித் தோழர்களும் மதீனாவின் எல்லையை வந்தடைந்த போது, பத்ரு ஸஹாபாக்களின் உறவினர்கள் வந்து குவியத்தொடங்கினர்,
திரும்பிவந்தவர்களை ஆரத் தழுவினர், ஷஹீதானவர்களின் குடும்பத்தினர் இரங்கல் தெரிவித்துக் கொண்டனர்.
எங்கே என் மகன்? எங்கே என் மகன்?
குரல் வந்த திசையை நோக்கி திரும்பினார்கள் நபித் தோழர்களில் சிலர்,
ஓ! ஹாரிஸாவின் தாயார் உம்மு ஹாரிஸா தானே நீங்கள்
யுத்தம் துவங்கும் முன்னரே உங்களது மகன் கொல்லப்பட்டுவிட்டார்? என்றார் ஒரு நபித் தோழர்,
என்ன? யுத்தம் நடக்கும் முன்னரே கொல்லப்பட்டுவிட்டானா? எப்படி?
அதுவா? முஸ்லிம் படையினருக்கும், படையின் ஒட்டகத்திற்கும், தண்ணீர் சேகரித்துக் கொண்டிருக்கும் போது,
முஸ்லிம் படையினரில் யாரோ ஒருவர் தவறாக எய்த அம்பு பட்டு கிணற்றருகே வீழ்ந்து இறந்து போனார்,
என்றார் மற்றொரு நபித் தோழர்,
எங்கே அல்லாஹ்வின் தூதர்? எங்கே அல்லாஹ்வின் தூதர்? என்று பதறி துடித்தபடி கூட்டத்தில் அங்குமிங்கும் சப்தமிட்டாவறு ஓடினார்.
எதிரே ஓரிடத்தில் மாநபி(ஸல்) அவர்கள் நிற்பதை கண்ட அப்பெண்மணி கூட்டத்தை விலக்கி மாநபி (ஸல்) அவர்களின் முன் வந்து நின்று
“அல்லாஹ்வின் தூதரே! என் மகன் மீது நானும், என்மீது என் மகனும் கொண்டிருந்த பாசத்தை நீங்களும் இந்த மக்களும் நன்கு அறிகின்றேன்.
அவன் சுவர்க்கத்தில் இருப்பான், இருக்கின்றான் என்றால் நான் பொருமையாகவும், கட்டுக்கோப்பானவளாகவும் இருப்பேன்.
அவன் சுவனத்தில் மட்டும் இல்லை என்றால் நான் என்ன செய்வேன் என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகின்றீர்கள் என்று கூறினார் உம்மு ஹாரிஸா (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்:
“சுவனம் ஒன்று தான் உள்ளது என நினைத்துக் கொண்டிருக்கின்றீரா?
இல்லை, பல சுவனங்கள் இருக்கின்றது
உனது மகன் ஹாரிஸா உயர்வான சுவனமாக ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்-ல் இருக்கின்றான்.
என்று கூறினார்கள்.
அதைக் கேட்டு மகிழ்ச்சியோடு திரும்பிச் சென்றார்கள் உம்மு ஹாரிஸா (ரலி) அவர்கள்
நூல்: இஸ்தீஆப், பாகம்:1,? பக்கம்:166

வியப்பும், ஆர்வமூட்டலும்
தாத்து ஜன்தல் எனும் கோத்திரத்தார் வசித்து வந்த பிரதேசத்தின் தலைவன் அகீதர் இப்னு அப்துல் மாலிக் என்பவன் ஜிஸ்யா- பாதுகாப்பு வரி கொடுக்காமல் ஏமாற்றிக் கொண்டிருந்தான்.
அவனைக் கைது செய்து உயிருடன் கொண்டுவருமாறு நபித்தோழர் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் 500 பேர் கொண்ட படைப்பிரிவை நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

சொன்னது போலவே காலித் பின் வலீத் (ரலி) அவர்கள்
அகீதர்பின் அப்துல் மாலிக் –கை உயிருடன் பிடித்து இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

அவன் விலையுயர்ந்த ஆடைகளையும், அதில் தங்கத்தால் நெய்யப்பட்ட விலையுயர்ந்த ஜரிகைகளையும் இணைத்திருந்தான். மேலும், தங்கத்தால் நெய்யப்பட்ட கயிற்றை தலையில் கட்டியிருந்தான்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் இந்த காட்சியைப் பார்த்து விட்டு
“இது என்ன பெருமையும் அகங்காரமும்? என வியப்பு மேலிட விமர்சித்தார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள்:
“என்ன ஆச்சர்யமாய் இருக்கின்றதா?
சுவனத்தில் ஸஅத் இப்னு முஆதின் கைக்குட்டை இதை விட மிகச் சிறந்த்து; விலை உயர்ந்த்து”.
என்று கூறினார்கள்.
நூல்: தஹ்தீப் சீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:257
ஸஅத் இப்னு முஆதின் மேலாடையையோ, அல்லது சிறப்பு அணிகலனையோ இங்கே நபியவர்கள் குறிப்பிடவில்லை. மாறாக, வெறும் கைக்குட்டையைக் கூறி மாநபித் தோழர்களின் இதயங்களை சுவனத்தின்பால் தொடர்பு படுத்தினார்கள்.

ஆசையும், தேடலும்
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-
“நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு அமர்ந்திருந்தோம்,
அப்போது நபி (ஸல்) அவர்கள் “இப்போது ஒரு மனிதர் வருவார் அவர் சுவனவாதிஎன்று கூறினார்கள்.
அப்போது எங்கள் முன் அன்ஸாரித் தோழர், உளு செய்த தண்ணீரின் ஈரம் சொட்டச் சொட்ட, இடதுகையில் செருப்பை தூக்கியவாறு பள்ளியில் நுழைந்தார்.
இரண்டாவது நாளும், நபிகளார் அது போன்று கூறவே, அவர்தான் எங்கள் முன் தோன்றினார்,
மூன்றாவுத நாளும் நபிகளார் அது போன்று கூறவே அவர்தான் எங்கள் முன் தோன்றினார்.

நபி (ஸல்) அவரக்ள் எழுந்து சென்றுவிட்ட போது,
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள், நேராக அவரிடம் சென்று “நான் என் தந்தையிடம் சண்டையிட்டு, மூன்று நாள் வீட்டிற்கு வரமாட்டேன் என சத்தியமிட்டு கூறிவிட்டேன். ஆகவே, மூன்று நாள் உங்களோடு உங்கள் வீட்டில் தங்கிக் கொள்கின்றேன்என்று கூறியுள்ளார்.
அதற்கு அந்த அன்ஸாரித் தோழர் சரி என சொல்லிவிட்டார்,
பிறகு அப்துல்லாஹ் இப்னு அம்ரு அவரோடு தங்கிய அந்த நாட்களைப்பற்றி என்னிடம் விவரித்தார்.

அவர் ஒருநாளும் இரவுத் தொழுகையில் ஈடுபடவில்லை,
ஆனால், படுக்கையில் புரண்டால் அல்லாஹ்வை நினைவு கூறுவார். பாங்கு சொன்னதும் விழித்து ஃபஜ்ர் தொழ செல்வார். மற்றபடி நம்மைப் போன்றுதான் வணக்க வழிபாடுகளைச் செய்கின்றார்.
வேறு ஒன்றும் சிறப்பாக செய்ய நான் காணவில்லை.
பின்பு, நான் அவரிடம், நான் ஒன்றும் என் தந்தையோடு பிணங்க வில்லை. மாறாக, மாநபி (ஸல்) அவர்கள் கூறிய சோபனத்தையும், அதைத் தொடர்ந்து மூன்று முறை நீங்களே வந்த்தையும் வைத்து, உங்களோடு இருந்து அதைக் கண்ணுற்று நானும் கடைபிடிக்கவே ஆவல்கொண்டு உங்களோடு தங்கினேன்.
ஆனால், அப்படியொன்றும் நீங்கள் உயர்வாக அமல் செய்ய நான் காணவில்லை.
நபிகளார் சொன்னால் அது உண்மையாகத் தான் இருக்கும், சொல்லுங்கள் இப்போதே!
அந்த உயர்வான நல்லறம் எது?
அவர் கூறினார்:
“எப்போதும் நான் மற்றெந்த முஸ்லிம்களின் மீதும், குரோதமே, பகைமையோ கொண்டதில்லை.
அல்லாஹ் எனக்கு கொடுத்தைக்கொண்டு நான் திருப்தி கொள்கின்றேன்.
எந்த சந்தர்ப்பத்திலும் பிறருக்கு வழங்கப்பட்டிருக்கும் எந்த பாக்கியத்தின் மீதும் நான் பொறாமை கொண்டதில்லை. என்றார்
நூல்: அல்ஃப கிஸ்ஸதுவ் – வகிஸ்ஸா, பாகம்:2, பக்கம்:487
ஆகவே மேறகூறிய அத்துணை நிகழ்வுகளும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
புனித நபித் தோழர்களையும், நபித் தோழர்களின் இதயங்களையும் சுவனத்தோடும், சுவனத்து இன்பங்களோடும் இணைவிட்டார்கள்.

அவர்களின் அத்துணை அசைவுகளும்
சுவனத்தோடு தொடர்புடையவைகளாகவே அமைந்திருந்தன.

நாமும் சுவனத்தோடு தொடர்பு கொள்வோம்!

அல்லாஹ் அத்தகைய மேன்மக்களோடு
சுவனத்தில் உலவும் பாக்யத்தை தருவானாக!
ஆமீன்!

சுவனத்தைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு நமது முந்தைய
“முந்திச் செல்பவர்களுக்கே முன்னுரிமை!
சுவனத்தில்.....

எனும் தலைப்பில் தேடவும்.

எனதருமை இஸ்லாமிய சமுதாயமே!
           இன்று உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய முஸ்லிமிகள் அனைவர்களின் உள்ளத்திலும் ஒரு ஆசை அது என்ன தெரியுமா? எப்படியாவது சுவர்க்கத்திற்கு சென்றுவிட வேண்டும் என்பது தான்.
           பள்ளிவாசலுக்கு போனமா? தொழுதோமா? குர் ஆன் ஓதினோமா? என்பதையெல்லாம் நினைத்துக்கூட பார்ப்பது கிடையாது. ஆனால் சுவர்க்கத்திற்கு போகனும். எப்படி போறது?
           சுவர்க்கம் என்ன மரிந்தா கிடக்கிறது ஒன்னுமே செய்யாம ஓடி போவதற்கு.
           சுவர்க்கம் எப்படிபட்டது, சுவர்க்கத்தின் மாளிகை எப்படிப்பட்டது என்பதை மாநபி (ஸல்) அவர்க் எப்படிகுறிப்பிட்டார்கள், தெரியுமா?
           “சுவனத்தின் கட்டிடத்தில் ஒரு செங்கள், வெள்ளியாகவும், மற்றொன்று தங்கமாகவும் இருக்கும் மேலும் அதன் கலவைத்தூய கஜ்தூரியாகவும், அதன் ஜல்லி முத்துக்களாகவும் அதன் மண் குங்கும்ப்பூவாகவும் இருக்கும்என கூறினார்கள்.
           இந்த சுவர்க்கத்தினுல் ஈஸியாக போக முடியுமா? என நாம் நினைப்பது போன்றே அல்லாஹ்வும் குர்ஆனில் கேட்கிறான்
           “உங்களுக்கு முன்னால் சென்று விட்டவர்களுக்கு ஏற்பட்டமைப்போன்று சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சொர்க்கத்தில் நீங்கள் பிரவேசித்துவிடலாம் என்று நினைக்கிறீர்களா?
                மாநபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் சுவர்க்கத்தில் ஒரு சாட்டையின் அளவு இடம் உங்களுக்கு சொந்தமாக இருப்பத என்பது உலகம் மற்றும் உலகத்தின் அனைத்து பொருள்களையும் விட சிறந்தது.

           நாம் எந்த அளவு சுவர்க்கத்தை விரும்புகின்றோமோ அது மாதிரிதான் இறைநேசர்களும், ஸஹாபாக்களும் சுவர்க்கத்தை விரும்பினார்கள். நாம் அதற்க்கான முயற்ச்சி செய்வதில் ஆர்வம் குறைந்தவர்களாக இருக்கின்றோம். ஆனால் அவர்கள் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் சுவர்க்கத்தின் சிந்தனையிலேயே இருந்து கொண்டிருந்தார்கள். நம்முடைய நிலைமைஇ என்னவாகுமோ, நமக்கு சுவர்க்கம் கிடைக்குமா, கிடைக்காதா தெரியவில்லையே கிடைக்க வேண்டும் என்கின்ற எண்ணத்திலேயே வாழ்ந்தார்கள் என்பது அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்கின்ற போது நாம் புரிந்து கொள்ளலாம்.



Friday 25 October 2013

நிலை மாற வேண்டும்!

நிலை மாற வேண்டும்!
ஒரு மனிதன் தன் குடும்பத்தார்களின் இயல்புகள் மாற வேண்டும்!
             தன் சுற்றத்தார்களின் குணம் மாற வேண்டும்!
             தன் சமூகத்தின் நிலை மாற வேண்டும்!
அவர் மாற வேண்டும்! இவர் மாற வேண்டும்!
என நிறைய மாற்றங்களை எதிர் பார்க்கின்றான்;  விரும்புகின்றான்.

ஆனால், தான் மாற வேண்டும், தன் இயல்புகளில் மாற்றம் வரவேண்டும் என ஒருபோதும் நினைப்பதில்லை. தன் இயல்புகளை மாற்றிக் கொள்ள முன்வராத ஒருவனால், தன் சமூகம், குடும்பம் தன்னை சுற்றியுள்ளவர்கள் என எவரிடத்திலும் மாற்றத்தைக்காண இயலாது.
என இஸ்லாம் இயம்புகின்றது.
அல்லாஹ் கேட்கின்றான்:
     பிற மனிதர்களை நன்மை செய்யும்படி ஏவிவிட்டு
      உங்களை நீஙகள் மறந்து விடுகின்றீர்களா?

அண்ணல் காந்தி இப்படிச் சொன்னார்கள்:
“இந்த இந்திய தேசத்தின் முழுமையான சுதந்திரத்தை இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் நீதிமான் உமர் அவர்களின் ஆட்சியின் அடிப்படையில் அமைகிறபோது தான் சுவைக்க முடியும்.”

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு பின்னால் வாழ்ந்த அண்ணல் காந்து கலீஃபா உமர் (ரலி) அவர்கள் பற்றி இப்படிச் சொன்னார்

ஆனால்,
உமர் முஸ்லிமாக தன்னை அடையாளப் படுத்தும் முன் அன்றைய அரபுலகமும், உமரின்  சக காலத்து மக்களும் இப்படிச் சொன்னார்கள்.
“கத்தாப் வளர்க்கும் கழுதை ஒருவேளை சரியாகிவிடும் ஆனால் கத்தாபின் மகன் ஒருபோதும் சரியாக மாட்டார்
ஒருபடி மேலாக,
கத்தாப் தன்மகன் உமரைப் பார்த்து நீ ஒட்டகம் மேய்க்க கூட லாய்க்கு இல்லைஎன்பார்.

உலகமே கண்டு வியக்கும் மனிதராக,
உலக அரசியல், ஆட்சியாளர்களே வியந்து போற்றும் புனிதராக உமர் மாறியது எப்படி?
உமர் (ரலி) அவர்கள் என்று இறை நம்பிக்கையுள்ள அனைவராலும் அழைக்கப்பெற்றது எப்படி?

     வாருங்கள்! உமரின் வரலாற்றுப் பக்கங்களில் மறு பக்கத்தை
     கொஞ்சம் வாசித்துவிட்டு வருவோம்.
உக்காழ்இது எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மக்காவின் பிரபல்யமான சந்தை (வணிக கேந்திரம்) அன்றைய உலக நாடுகளின் அறியப்பட்ட அனைத்து வியாபாரிகளும் தங்களின் சரக்குகளோடு வாரக் கணக்கில், மாதக் கணக்கில் தஙகி பொருளீட்டி செல்வார்கள்.
ஆனால்,
அங்கே போடப்பட்டுள்ள ஒரு (பெஞ்ச்) இருக்கையில் சதா ஒரு பெரிய மதுக் கோப்பையை கையில் ஏந்தியவாறு, போதை இறங்கியதும் மீண்டும் வாயில் ஊற்றி போதை ஏற்றியவாறு அமர்ந்திருப்பார் கத்தாபின் மகன் உமர்.
அபுஜஹ்ல், உத்பா போன்ற பெருந்தலைகள் கூட உமரைக்கண்டு அஞ்சுவார்கள்.
தனக்கு ஏதேனும் பணம் தேவைப்பட்டால் வந்திருக்கும் வியாபாரிகளை நாளு தட்டு தட்டி பறித்துக்கொள்வார்.
ஏதாவது பெண் தேவைப்பட்டால் வீதியில், சந்தையில் என கண்ணில் படும் பெண்களை அழைத்துச் சென்றுவிடுவார்.
மதுவிற்கு அடிமை, பெண் சுகத்திற்கு அடிமை, ரோம, பாரசீக வியாபாரிகள் பொழுது போக்கிற்காக மல்யுத்த வீர்ர்களை அழைத்து வந்து சண்டை நடத்தி பரிசுகள் வழங்குவார்கள்.
அப்படி ஒருமுறை ஒரு மல்யுத்த வீரன் தன்னோடு சண்டையிட்ட அனைவரையும் வென்று
     என்னை ஜெயிக்க மக்காவில் யாரடா இருக்கின்றான்? என அறைகூவல் விடுத்தான்.
சந்தையில் கூடியிருந்த ஒட்டுமொத்த மக்களின் பார்வையும் பெஞ்ச்-சின் மீது அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்த உமரின் மீது விழுந்தது.

உமர் எழுந்தார், நடையில் தள்ளாட்டம் இல்லை.
மல்யுத்த வீரரின் அருகே வந்தார்,
மக்களின் ஆரவாரம், பலத்த கரகோஷம்
முன்நெற்றியில் ஒரு அடி விட்டார்.
பலபேரை பந்தாடிய வீரன் சப்த நாடிகளெல்லாம் அடங்கி உமரின் காலில் வீழ்ந்து கிடந்தான்.
வீரனின் நெஞ்சின்மீது காலை வைத்துக் கொண்டு
என்னை வீழ்த்த இந்த உலகத்தில் யாரடா இருக்கிறார்கள் என்று கர்ஜித்தார் உமர்.
இப்படி தன் உடல பலத்தால் மக்காவையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தவர் தான்
கத்தாபின் மகன் உமர்.
இஸ்லாமிய ஜோதி மக்காவின் இருளை விரட்டிக் கொண்டிருந்த நேரம்.
ஆம்! ஏகத்துவ அழைப்பை மாநபி (ஸல்) அவர்கள் அந்த முரட்டி மக்களிடையே எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்த தருணம் அது.
ஒருநாள் மக்கமாநகரின் பிரபல்யமான ஒரு தெருவில் உமர் குதிரையின் மீது சென்று கொண்டிருக்கின்றார்.
ஒரு குடிசை வீட்டிலிருந்து
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
வத்தூர் வகிதாபிம் மஸ்த்தூர் எனும் அத்தியாயத்தின் வசனங்கள் ஓதப்படும் ஓசையை கேட்டார்.
குதிரையின் மேலிருந்து இறங்கி அதை கேட்க ஆரம்பித்தார்.
தலையசைத்து ரசித்து கேட்டார்.
ஓரிடம் அங்கே அந்த வார்த்தையை கேட்டதும் உமர் மயங்கி கீழே சாய்ந்து விட்டார்.
மாபெரும் மல்யுத்த வீரனை சாய்த்த உமரை அல்லாஹ்வின் வசனம் ஒன்று சாய்த்து விட்டது.
ஆம் அந்த வசனம் இது தான்
இன்ன அதாப ரப்பிக்க லவாகிஃ
மா லஹூ மின்  தாபிஃ
நிச்சயமாக உமதிறைவனின் வேதனை அது நிகழ்ந்தே தீரும்.
அதிலிருந்து காப்பாற்றுபவர், தடுப்பவர் யார் இருக்கின்றார்?
மயங்கினார் இரண்டு மாதம் கடுமையான ஜுரம் ஆனால், அந்த வசனம் அடிக்கடி அவரின் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது உமர் மாறினார், உமரின் செயல்பாடுகள் மாறியது
மறு அருந்துவதை நிறுத்தினர், உக்காழ் சந்தையை உதறித் தள்ளினார், அடாவடித்தனத்தை அடியோடு கைவிட்டார்.

மாநபி (ஸல்) அவர்கள் ஏற்றிவைத்த ஏகத்துவ தீபத்தை அணைத்திட அத்துனை வழிகளும் முயற்சி மேற்கொண்டு தோல்விக்கு மேல் தோல்வியைத் தழுவிய இறைமறுப்பாளர்கள் இறுதியாக நபி (ஸல்) அவர்கள் இறந்தால் மட்டுமே இது சாத்தியம்.
இப்போது முஹம்மது இறந்து போவது சாத்தியமில்லை எனவே, முஹம்மதின் இறப்பை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். ஆம்! கொலை செய்திட வேண்டும்.
அறிவிப்புச் செய்தார்கள்.
100- செந்நிற ஒட்டகம் முஹம்மதின் தலையை கொய்து வருபவருக்கு….
நவூது பில்லாஹ்….
மக்கத்து தலைவர்களை சந்தித்தார் உமர்!
100- ஒட்டகங்களை தயார் செய்து வையுங்கள்!
இதோ! திரும்பி வரும்போது அறிவிப்பை உண்மை யாக்கிடுவேன்!
-என்று முழங்கியவாறு உருவிய வாளுடன் புறப்பட்டார்!

அப்போது உமருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
அவர் செல்லும் பாதை ஏகத்துவ அருளை நோக்கி என்று….

ஆம்! வழியில் பனீ ஜஹ்ரா கோத்திரத்தைச் சார்ந்த ஒரு மனிதர் உமரை சந்தித்தார்!
உமரிடம் அவர் கேட்டார்!
உருவிய வாளுடன் எங்கே செல்கிறீர்?
முஹம்மதின் தலையை கொய்துவர…..
முஹம்மதை கொலை செய்துவிட்டு எப்படி நீங்கள் நிம்மதியாக நடமாடமுடியும்?
பனூ ஹாஷிம் குலம் விட்டு விடுவார்களா?
இல்லை எங்கள் பனூ ஜஹ்ரா குலத்தார்கள்தான் விட்டுவிடுவார்களா?
என்றார் அவர்.
உம்முடைய பேச்சை சரியில்லையே!
நீரும் மதம் மாறிவிட்டீரா?
உம்மை தான் முதலில் முடிக்க வேண்டும் என்றார் உமர்.
உமரே! அது இருக்கட்டும்! உமக்கொரு அதிர்ச்சியான தகவலை சொல்லட்டுமா?
உமரின் சகோதரி பாத்திமாவும் அவரின் கணவரும் மதம் மாறிவிட்டனர்.
முதலில் அவர்களை முடித்துவிட்டுவாரும்!
புயலென கிளம்பினார். தம்வீட்டை நோக்கி
அங்கே….
தாஹா அத்தியாயத்தின் 14-ம் வசனம் ஓதப்பட்டுக்கொண்டிருந்தது.
தின்னமாக! நான் தான் அல்லாஹ்! என்னைத்தவிர வேறு இறைவன் இல்லை.
எனவே எனக்கு அடிபணிவீராக!
என்னை நினைவு கூர்வதற்காக தொழுகையை நிலை நிறுத்துவீராக!

பொறுமையாக நின்று கேட்டார்!
மாறினார் உமர்! மாற்றினார் தன் முழு நிலையையும்
அன்றிலிருந்து இஸ்லாம் எழுச்சியடைவதற்காக தன் முழு வாழ்க்கையையும் மாற்றினார்.
அவர் மாறினார்,
இஸ்லாமிய அழைப்புப் பணியின் நிலை மாறியது!
முஸ்லிம்களின் நிலைமாறியது.
நபிகளார் வாழும் போது சரி!
நபிகளார் இவ்வுலகைவிட்டு மறைந்த பின்னரும்சரி
சமூக கட்டமைப்பின் பல்வேறு மாற்றங்களுக்கு அடித்தளமிட்டவர் ஹள்ரத் உமருல் ஃபாரூக் (ரலிஅவர்களே!
இஸ்லாமிய உலகின் ஆரம்ப காலம் அது
ஒரு நாள் நபிகளாரின் வீட்டில், உமர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.
மூவரும் ஒரே தட்டில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர் எதேச்சையாக உமர் (ரலி) அவர்களின் கரம், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் கரத்தில் இலேசாக பட்டுவிட்டது.
அவ்வளவுதான் உமர் துடித்துப் போய்விட்டார்.
அல்லாஹ்வே! இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் மத்தியில் ஒரு திரை இருந்தால் நன்றாக இருக்குமே! என்று தன் ரப்பிடம் முறையிட்டார் ஹிஜாப்சட்டம் இறங்கியது.

மாநபி (ஸல்) அவர்களின் வஃபாத்க்குப்பின்னால் மக்களின் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கண்டார் உமர் (ரலி) அவர்கள்.
அண்ணார் ஆட்சிப் பொறுப் பேற்றதும் அதை சரிசெய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
சில நபித்தோழர்கள் உமர் (ரலி) அவர்களிடம் ஒரு வைகறைப் :பொழுதில் மக்களின் செயல் குறித்து கவலை கொண்டனர்.
அது இதுதான்
நபிகளார் காலத்தில் ஒரு மரத்தின் கீழ் நபிகளார் நபித்தோழர்களிடத்தில் பை அத் பெற்றார்கள்.
அல்லாஹ்வும் அந்த மரம் குறித்து குர்ஆனில் இப்படிப் பேசுவான்:
இறை நம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திலிருந்துக் கீழே சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருந்தபோது அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தி கொண்டான்.
அவர்களுடைய உள்ளங்களின் நிலமைகளை அவன் அறிநிதிருந்தான். இதனால் அவன் அவர்கள் மீது நிம்மதியை இறக்கியருளினான். விரைவில் கிடைக்கும் வெற்றியையும் அவர்களுக்கு வெகுமதியாக வழங்கினான்.
அல்குர்ஆன்:48:18)
அம் மேன்மக்களை கவலையில் ஆழ்த்தியது இதுதான்.
அந்த மரத்தின் கீழ் அமர்ந்தால் எத்தகைய கவலையும், கஷ்டமும் நீங்கிவிடுவதாக மக்கள் கருதி அங்கே குழும ஆரம்பித்தனர்.
உமர் எழுந்தார், மரத்தருகே சென்றார். மரத்தை வெட்டினார் வேரோடு பிடுங்கி எறிந்தார்.
மக்களின் மனதினில் குடியிருந்த தவறான எண்ணங்களையும் சேர்த்துதான்.
ஆகவே, மாற்றம் என்பது தன்னில் ஏற்படாத வரை சமூகத்தில் ஏற்படுத்த முடியாது.
உமரும் மாறினார், சமூகத்தின் நிலைகளையும் மாற்றினார், ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதா் (ஸல்) அவா்கள் தமது மனைவி யார்களில் சிலரோடு வீட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது உமா் (ரலி) அவா்கள் நபிகளார் வீட்டில் ஸலாம் சொல்லி உள்ளே வர அனுமதி கேட்டார்கள் ஒளிந்து கொண்டனா். அனுமதி பெற்று உள்ளே வந்த உமரிடம்உமரே! அல்லாஹ்வின் தூதரின் குடும்பத்தினர்கள் உமரின் குரலைக் கேட்டதும் பயந்து ஓடி ஒளிந்துவிட்டார்கள் என்று புன்னகைத்தவாரே கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! பயப்படுவதற்கு அதிகம் தகுதியுடையோர் அல்லாஹ்வும், தாங்களும் தானே என்றார் உமா் (ரலி) அவா்கள். அப்போது நபி (ஸல்) அவா்கள்உமரே! நீா் ஓா் வழியில் சென்றால் ஷைத்தான் வேறு வழியில் செல்வான்உம்மைக் கண்டு ஷைத்தான் விரன்டோடுவான்என்று கூறினார்கள்.
                           நூல் . இஸ்தீ ஆப் மனாகிப் உமா்,
                                     இப்னுல் ஜவ்ஸீ,
                                     அல் ஃபாரூக்.
உஸ்மான் (ரலி) அவா்களின் ஆட்சிக்காலம் பல இடங்களில் ஒட்டுப் போட்ட சட்டை யணிந்த நிலையில் அபூதா் (ரலி) அவா்களை கண்டா்கள் உஸ்மான் (ரலி) அவா்கள். அபூதரே! தங்களுக்காக ஏதேனும் வசதிகள் செய்து தரட்டுமா? என்று உஸ்மான் (ரலி) அவா்கள் கேட்ட போது. ”உங்களின் உலகத்திலே எனக்கு எந்தத் தேவையும் இல்லைஎன்று பதில் தந்தார் அபூதா் (ரலி). இந்த அபூதா் யார் தெரியுமா?
ஒரு காலத்தில் மாபெரும் வழிப்பறி கொள்ளையா். தனி நபராக இருப்பினும், 100 பேர் கொண்ட குழுவாக இருந்தாலும் சரி தனி ஆளாக நின்று அடித்து அத்தனை பொருட்களையும் கொள்ளையடித்து வந்திடுவார். மனம் விரும்பியவாறு வாழ்ந்துவந்தார்.
எல்லோரையும் வென்ற இஸ்லாம் அவரையும் வென்றது. ஆம்! இஸ்லாத்தில் இணைந்தார்.
அடியோடு மாறிப் போனார். தம் கோத்திரம். தம் அண்டை கோத்திரம் என 1000 க்கும் மேற்பட்ட மக்களை முஸ்லிம்களாக மாற்றினார்.
நபிகளாரோடு வாழ்ந்து கொண்டிருந்த போது. ”அவா்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யயாமலிருக்கின்றார்களோ, அவா்களுக்கு துன்புருத்தும் தண்டனை இருக்கிறது எனும் நற்செய்தியை நீா் அவா்களிடம் அறிவித்து விடுவீராக!
ஒரு நாள் வரும் . அந் நாளில் இதே தங்கமும், வெள்ளியும் நரக நெருப்பில் பழுக்க காய்ச்சப்பட்டு, அவற்றால் அவா்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும்இவைதாம் நீங்கள் சேகரித்து வைத்த கருவூலங்கள்! எனவே நீங்கள் சேகரித்து வைத்திருந்த செல்வத்தைச் சுவையுங்கள்.
                                           (அல்குா்ஆன்  9. 35)
இந்த வசனம் இறங்கப் பெற்றதும்,அல்லாஹ்வின் தூதரே! இந்தாருங்கள்! இதோ என் செல்வங்கள். இவைகள் நான் முஸ்லிமாக மாறும் முன் சம்பாதித்தவை, தவறான வழிகளில் சம்பாதித்தவை, உழைத்து சம்பாதித்து சேமித்து வைத்த பொருளுக்கே இந்த தண்டணை என்றால்,
நினைக்கவே பயமாய் இருக்கின்றது அல்லாஹ்வின் தூதரே! இதோ! இதைப் பெற்றுக்கொண்டு என்னை நரகின் நெருப்பிலிருந்து காப்பாற்றுங்கள்.
நான் முஸ்லிமாகி சம்பாதித்த, ஒரு சிறிய வீடு, ஒரு ஒட்டகம் சிறு விவசாய நிலம் இதை மட்டும் நான் வைத்துக் கொள்கிறேன் தூதரே!
என்று பற்றி துடித்தவாறு நின்றார்,
இஸ்லாம் முன் சென்ற பாவங்களை அழித்து விடுகிறது, எனும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தும் கூட தான் மாற வேண்டும், தன் நிலை மாற வேண்டும்.
என்று விரும்பினார்
அப்போது நபி (ஸல்) அவர்கள்
இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களின்  துறவறத்தைக்காண விரும்புபவர்கள் இதோ இந்த அபூதர் (ரல்) அவர்களிடம் கண்டு கொள்ளுங்கள்.
என்று கூறினார்கள்.
     நூல்-இஸ்தீஆப், கிஸஸ்- அஸ்-ஸவ்பா
மாறவே மாட்டார்கள், மாற்றவேமுடியாது என்று உலக வரலாற்றின் அத்தனை அரசர்களாலும், மன்னர்களாலும் கைவிடப்பட்டவர்கள்,
உலக வரலாற்றின் அன்றைய வல்லரசுகளான ரோம், பாரசீகம் ஆகியவற்றாலும் கைவிடப்பட்ட அந்த அரபுலக மக்களை மாற்றிக் காட்டினார்கள் மாநபி (ஸல்) அவர்கள்.
கொடூரமனம் படைத்த வஹ்ஷீ, ஹின்தா மாறினார்கள். சித்ரவதையை ரசிக்கும் அம்ருப்னுல் ஆஸ் மாறினார் முஸ்லிம்களை அழிக்க படை நடத்திய அபூசுப்யான் மாறினார்.
இவர்கள் மாறினார்கள், சமூகத்தையும் மாற்றினார்கள்
ஏன் நாம் மாறக் கூடாது?
ஒவ்வொரு நாளும் நாம் கிழித்து எறிகிற காலண்டர் தேதி கேட்கிறது.
தினம், தினம் நான் மாறுகின்றேன்.
ஆனால், நீ அப்படித்தானே இருக்கின்றாய்!

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கள் முன்வந்து
நான் மாற வேண்டும் அல்லாஹ்வின் தூதரே
நான் மாற வேண்டும்!
என் கண்கள் பாவம் செய்கிறது! என் கரங்கள் பாவம் செய்கிறது!
என் பாதங்கள் பாவம் செய்கிறது! என் செவிகள் பாவம் செய்கிறது! என் இதயம் பாவம் செய்கிறது!
நான் மாற வேண்டும்! என் நிலை மாற வேண்டும்!
அல்லாஹ்வின் தூதரே!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“மறுமைக்காக செல்படு! மரணத்தை நினைத்து செயல்படு!
மாற்றம் வரும் நீ மாறிவிடுவாய்!
நூல்:தாரமீ
காலங்களில் சிறந்த இரண்டாம் நூற்றாண்டில் வாழந்தவர்கள் ஃபுளைல் இப்னு இயாள் (ரஹ்) அவர்கள்.
வரலாற்று ஆசிரியர்களால், ஹதீஸ்கலை வல்லுனர்களால் பெரிதும் மதிக்கப்படுவார்கள்.

ஹிஜ்ரி 107-ல் பிறந்து ஹிஜ்ரி – 187-ல் மறைந்தார்கள்.
தஸவ்வுஃப் கலையில நிகரற்று விளங்கியவர்கள்.
ஆனால்,
ஒரு காலத்தில், தூரத்து தேச மக்களே இவர் பெயரைக் கேட்டால் அஞ்சி நடுங்குவார்கள்.
பயங்கரத் திருடர்
தாரீதீ திமிஷ்க் எனும் நூலின் ஓர் அறிவிப்பில்,
ஒரு நாள் ஒரு இடத்திற்கு திருடச் சென்றார் ஃபுளைல், அங்கே ஒரு வியாபாரக் கூட்டத்தினர் இப்படிப் பேசிக் கொண்டார்கள்.
இங்கே ஃபுளைல் என்றொரு திருடர் இருக்கின்றாராம்.
எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும், கன நேரத்தில், அசால்ட்டாக திருடி விட்டுச் சென்றிடுவாராம்.
எனவே, ரொம்ப உஷாராக இருக்க வேண்டும்.
தூரத்தில் நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஃபுளைல் திடுக்கிட்டார். வெட்கித் தலை குனிந்தார்.
அவர்களின் அருகே வந்த ஃபுளைல் நீங்கள் பயப்படவேண்டாம் இன்று இரவு முழுவதும் உங்களுக்கு நான் காவல் இருக்கின்றேன். ஃபுளைல் இடம் இருந்து உங்கள் பொருளை நான் பாதுகாக்கிறேன். என்றார்
வியாபாரக் கூட்டத்தினர் உறங்கினார்கள்
இரவில் விழித்துக்கொண்டிருந்த ஃபுளைல் சிந்திக்க ஆரம்பித்தார்.
ஆம்! நாம் மாறினால் என்ன?
நம் செயலைக் கண்டு மக்கள் இப்படி அச்சப்பட்டு இரவெல்லாம் தூங்காமல் நிம்மதியிழந்து துன்பப்படுகின்றார்களே!
ஆம்! இனி நான் திருட மாட்டேன் என உறுதி கொண்டார்.
காலை நேரம் வியாபாரிகள் சில அன்பளிப்புகளை ஃபுளைலிடம் கொடுத்து விடைபெறுகிற போது இரவெல்லாம் கண்விழித்து எங்களின் பொருட்களையெல்லாம் பாதுகாத்த தாங்களின் பெயர் என்னவோ?
நான் தான் நேற்றிரவு நீங்கள் பயந்து கொண்டிருந்த ஃபுளைல் என்று கூறிவிட்டு, என்னை குறித்து நீங்கள் பேசியதை நான் கேட்ட போதே நான் மாற வேண்டும் என முடிவெடுத்தேன் என்றார் ஃபுளைல்.
இதை இப்னு அஸாகிர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல் தாரீகீ திமிஷ்க் பாகம் 48, பக்கம்-384
என்றாலும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க  முடியாமல் மீண்டும் திருட ஆரம்பித்தார்கள்.
இப்ராஹீம் இப்னு அஷ் அஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்
ஒரு நாள் இரவு நேரம் ஒரு வீட்டில் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற போது அங்கே ஒரு பெண்மணி குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தார்.
திருடச் சென்ற ஃபுளைல் செவி தாழ்த்தி கேட்க ஆரம்பித்தார்.

“நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவினால் உருகுவதற்கும், அவன் இறக்கிவைத்த சத்தியத்தின் முன் பணிவதற்கும் நேரம் இன்னும் வரவில்லையா?
எனும் 57-ம் அத்தியாயத்தின் 16-ம் வசனத்தை கேட்டதும்
இதோ வந்துவிட்டேன் என் இறைவா?
இதோ உருகிவிட்டேன் என் இறைவா?
இதோ பணிந்துவிட்டேன் என் இறைவா?

என் பாவங்களை மன்னித்துவிடு! என் – குற்றங்களை பொறுத்து விடு! என்றார்.
ஃபுளைல் மாறினார்! ஆம்! நம்பத்தகுந்த ஆலிமாக, சுஃப்யான் இப்னு உயைனா, ஷாபிஈ, இப்னுல் முபாரக் ஹூமைதீ, ஸவ்ரீ பிஷ்ருல் ஹாபி போன்ற ஈடு இணையில்லா மார்க்க ஞானிகளின் ஆசானாக, நஸாயீ, தஹபீ போன்ற ஹதீஸ் கலா வல்லுநர்களின் வலுவான ஆதாரமாக மாற்றம் பெற்றார். ஏற்றம் பெற்றார்,
நூல்- ஸியரு அஃலாமின் நுபலா, பாகம்-13, பக்கம்-59எண்-3793
நாம் மாற வேண்டும் மக்களே!

பின்பு,
நாம் மற்றவர்களும், சமூகமும் மாற வேண்டும் என்பதில் அக்கறை கொள்வோம்.
நம்முடைய மாற்றம் நாளையோ, அல்லது நாளை மறுநாளோ அல்ல
இன்றே! இப்பொழுதே மாறுவோம்.
நம் பண்புகளையும் குணங்களையும் மாற்றுவோம்!
அல்லாஹ் கூறுகின்றான்!
எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை மாற்றிக் கொள்ளாதவரை, உண்மையில் அல்லாஹ்வும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை.
அல்குர்ஆன்-13:11

அல்லாஹ் மாற்றத்தை தருவானாக! ஆமீன்