Wednesday 16 September 2015

இறையச்சம்! அதன் அவசியமும்… வலிமையும்….



இறையச்சம்! அதன் அவசியமும்வலிமையும்….



இறையச்சம் - தக்வா என்பது ஓர் இறைநம்பிக்கையாளனின் வாழ்க்கையில் உயிரோடும், உணர்வோடும் இரண்டறக் கலந்திருக்க வேண்டிய ஓர் உயரிய அம்சமாகும்.

இறையச்சம் என்கிற இந்த அம்சம் தான்நாம் யார்?” என்பதை அல்லாஹ்வின் திருமுன் அடையாளப்படுத்தும் ஆதாரமாகும்.

ஓர் இறைநம்பிக்கையாளனின் ஈருலக வாழ்க்கையின் வெற்றி, தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றுவதும் இந்த இறையச்சம் தான்.

அல்லாஹ் தன் திருமறையில் சுமார் 258 இடங்களில் தக்வா குறித்து பல்வேறு வாசக வடிவில் குறிப்பிடுகின்றான். அதிலும் குறிப்பாக, சுமார் 70 இடங்களில்நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து வாழுங்கள்என்பதாக முஃமின்களை நோக்கி நேரடியாக ஆணை பிறப்பிக்கின்றான்.

இந்த ஆணைகளின் மூலம் வணக்க வழிபாடு, சமூக, பொருளாதார, தனிமனித வாழ்க்கை, இல்லற வாழ்க்கை, கூட்டு வாழ்க்கை, நீதி, நிர்வாகம், அரசியல், கொடுக்கல் வாங்கல் என மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிற அத்துனை துறைகளிலும் இறையச்சம் நிச்சயம் இடம் பெற்றிருக்க வேண்டும்என அல்லாஹ் வலியுறுத்துகின்றான்.

இறைவனிடம் நெருக்கத்தைப் பெற்றுத் தருகிற நன்மையான செயல்களில் ஈடுபடும் போதும் தக்வா இடம் பெற்றிருக்க வேண்டும். இறை நெருக்கத்தை விட்டும் தூரமாக்குகிற பாவமான குற்றங்களில் ஈடுபடாமல் இருக்கும் போதும் தக்வா இடம் பெற்றிருக்க வேண்டும்எனவும் இஸ்லாம் இயம்புகின்றது.

அல்லாஹ் மூன்று விஷயங்களில் ஓர் அடியானிடமிருந்து உண்மையான, போலித்தனமில்லாத நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றான்.
1. அல்லாஹ்வை மதிக்கும் விஷயத்தில் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்..

وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ

அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு அவர்கள் மதிக்கவில்லை                                               ( அல்குர்ஆன்: 6:91 )

2. அல்லாஹ்விற்காக தியாகம், அர்ப்பணம் செய்யும் விஷயத்தில் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்

وَجَاهِدُوا فِي اللَّهِ حَقَّ جِهَادِهِ

“ ( இறைநம்பிக்கையாளர்களே! ) நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் எவ்வாறு தியாகம், அர்ப்பணம் செய்ய வேண்டுமோ, அவ்வாறு தியாகம், அர்ப்பணம் செய்யுங்கள்”.                                                 ( அல்குர்ஆன்: 22:78 )

3. அல்லாஹ்வை பயந்து வாழும் விஷயத்தில் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ (102)

இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு எவ்வாறு பயந்து வாழ வேண்டுமோ, அவ்வாறு பயந்து வாழுங்கள்! மேலும், நீங்கள் முஸ்லிம்களாகவே அன்றி மரணிக்க வேண்டாம்”.                                 ( அல்குர்ஆன்: 3:102 )

அல்லாஹ் ஓர் அடியானிடம் எதிர் பார்க்கும் முக்கியமான மூன்று அம்சங்களில் ஒன்று தக்வா எனும் இறையச்சம் என்பதை மேற்கூறிய இறை வசனம் நமக்கு உணர்த்துகின்றது.

தக்வா என்றால் என்ன?

أما التقوى: لغة فهي مأخوذة من الوقاية وما يحمي به الإنسان رأسه.
اصطلاحا: أن تجعل بينك وبين ما حرّم الله حاجبا وحاجزا.

தக்வா التقوى எனும் சொல் விகாயத் ( பாதுகாத்து கொள்ளல்) என்னும் வேர் சொல்லிலிருந்து பிறந்ததாகும். அகராதியில் தன்னைத் தானே ஒரு மனிதன் பாதுகாத்துக் கொள்வது என்பதாகும்.

ஷரீஅத்தின் புழக்கத்தில் “இறைவன் வெறுக்கும் செயல்களை விட்டும் தன்னை பாதுகாத்து கொள்வது தான் தக்வாவின் அடிப்படை.

وسأل عمر كعبا فقال له: ما التقوى؟ فقال كعب: يا أمير المؤمنين أما سلكت طريقا فيه شوك؟ قال: نعم. قال: فماذا فعلت؟ فقال عمر: أشمر عن ساقي، وانظر إلى مواضع قدمي وأقدم قدما وأؤخر أخرى مخافة أن تصيبني شوكة. فقال كعب: تلك هي التقوى.

உமர் (ரலி) அவர்கள் உபை இப்னு கஅபு (ரலி) அவர்களிடத்திலேதக்வாஎன்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு, உபை (ரலி) அவர்கள்நீங்கள் முட்கள் நிறைந்த மரங்கள் அடர்ந்த காட்டில் நடந்து செல்வதுண்டா?” என்று கேட்டார்கள்.

அதற்கு, உமர் (ரலி) அவர்கள்ஆம்என்றார்கள். ”எப்படிக் கடந்து சென்றீர்கள்?” சொல்லுங்கள்! என உபை (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள்.

அதற்கு, உமர் (ரலி) அவர்கள்உடல் மற்றும் உடையைப் பாதுகாத்தவாறு, வழியையும் கடக்க வேண்டும். அதே நேரத்தில் உடலிலோ, உடையிலோ முள்ளும் தைத்து விடக் கூடாது என மிக கவனத்தோடும், பேணுதலோடும் ஒவ்வொரு எட்டாக எடுத்து வைத்து நடப்பேன்என்று பதிலளித்தார்கள்.

அப்போது, உபை (ரலி) அவர்கள்இவ்வாறு தான் இறையச்சமும்என்று பதிலளித்தார்கள்.

அதாவது, மனிதன் தன் வாழ்க்கையில் ஈமானும் கெட்டு விடாமல், அமலும் கெட்டு விடாமல் சூழ்நிலை எனும் முட்கள் நாலாபுறமும் சூழ்ந்திருக்க, அவற்றில் சிக்கி விடாமல் விலகியிருந்து கவனமாக வாழ்க்கையை கழிப்பது தான் இறையச்சம் எனப்படும்.

தக்வாவிற்கான வரையறை என்ன?

அல்லாஹ்வை பயந்து வாழ்வதன் அடிப்படை தான் இறையச்சம் எனும் தக்வா ஆகும். அல்லாஹ் நாம் செய்கிற அத்துனை காரியங்களையும் நமக்கு சமீபமாக இருந்து கண்காணித்துக் கொண்டு இருக்கின்றான் என்கிற அச்சத்தோடு நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் நகர்த்திச் செல்வதற்கே தக்வா என்று சொல்லப்படும்.

நம்மில் பலர் தக்வா உடைய வாழ்விற்கான அடையாளமாக நன்மைகளை அதிகமாகச் செய்வதையும், நன்மையான அமல்கள் கூடுவதையும் தான் கருதிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அது ஒன்று மட்டுமே அதன் அடையாளம் அல்ல.

மாறாக, பாவங்கள் குறைவதும், பாவமான காரியங்களில் இருந்து விலகி வாழ்வதும், பாவத்திலிருந்து மீட்சி பெற்று பாவக்கறை இல்லாமல் வாழ்வதும் தான் தக்வாஇறையச்சம் என இஸ்லாம் கூறுகின்றது.

ஆச்சர்யமூட்டும் இறையச்சம்….

و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا يَحْيَى بْنُ يَعْلَى وَهُوَ ابْنُ الْحَارِثِ الْمُحَارِبِيُّ عَنْ غَيْلَانَ وَهُوَ ابْنُ جَامِعٍ الْمُحَارِبِيُّ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ
جَاءَ مَاعِزُ بْنُ مَالِكٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ طَهِّرْنِي فَقَالَ وَيْحَكَ ارْجِعْ فَاسْتَغْفِرْ اللَّهَ وَتُبْ إِلَيْهِ قَالَ فَرَجَعَ غَيْرَ بَعِيدٍ ثُمَّ جَاءَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ طَهِّرْنِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيْحَكَ ارْجِعْ فَاسْتَغْفِرْ اللَّهَ وَتُبْ إِلَيْهِ قَالَ فَرَجَعَ غَيْرَ بَعِيدٍ ثُمَّ جَاءَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ طَهِّرْنِي فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ حَتَّى إِذَا كَانَتْ الرَّابِعَةُ قَالَ لَهُ رَسُولُ اللَّهِ فِيمَ أُطَهِّرُكَ فَقَالَ مِنْ الزِّنَى فَسَأَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبِهِ جُنُونٌ فَأُخْبِرَ أَنَّهُ لَيْسَ بِمَجْنُونٍ فَقَالَ أَشَرِبَ خَمْرًا فَقَامَ رَجُلٌ فَاسْتَنْكَهَهُ فَلَمْ يَجِدْ مِنْهُ رِيحَ خَمْرٍ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَزَنَيْتَ فَقَالَ نَعَمْ فَأَمَرَ بِهِ فَرُجِمَ فَكَانَ النَّاسُ فِيهِ فِرْقَتَيْنِ قَائِلٌ يَقُولُ لَقَدْ هَلَكَ لَقَدْ أَحَاطَتْ بِهِ خَطِيئَتُهُ وَقَائِلٌ يَقُولُ مَا تَوْبَةٌ أَفْضَلَ مِنْ تَوْبَةِ مَاعِزٍ أَنَّهُ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَضَعَ يَدَهُ فِي يَدِهِ ثُمَّ قَالَ اقْتُلْنِي بِالْحِجَارَةِ قَالَ فَلَبِثُوا بِذَلِكَ يَوْمَيْنِ أَوْ ثَلَاثَةً ثُمَّ جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُمْ جُلُوسٌ فَسَلَّمَ ثُمَّ جَلَسَ فَقَالَ اسْتَغْفِرُوا لِمَاعِزِ بْنِ مَالِكٍ قَالَ فَقَالُوا غَفَرَ اللَّهُ لِمَاعِزِ بْنِ مَالِكٍ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَدْ تَابَ تَوْبَةً لَوْ قُسِمَتْ بَيْنَ أُمَّةٍ لَوَسِعَتْهُمْ قَالَ ثُمَّ جَاءَتْهُ امْرَأَةٌ مِنْ غَامِدٍ مِنْ الْأَزْدِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ طَهِّرْنِي فَقَالَ وَيْحَكِ ارْجِعِي فَاسْتَغْفِرِي اللَّهَ وَتُوبِي إِلَيْهِ فَقَالَتْ أَرَاكَ تُرِيدُ أَنْ تُرَدِّدَنِي كَمَا رَدَّدْتَ مَاعِزَ بْنَ مَالِكٍ قَالَ وَمَا ذَاكِ قَالَتْ إِنَّهَا حُبْلَى مِنْ الزِّنَى فَقَالَ آنْتِ قَالَتْ نَعَمْ فَقَالَ لَهَا حَتَّى تَضَعِي مَا فِي بَطْنِكِ قَالَ فَكَفَلَهَا رَجُلٌ مِنْ الْأَنْصَارِ حَتَّى وَضَعَتْ قَالَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ قَدْ وَضَعَتْ الْغَامِدِيَّةُ فَقَالَ إِذًا لَا نَرْجُمُهَا وَنَدَعُ وَلَدَهَا صَغِيرًا لَيْسَ لَهُ مَنْ يُرْضِعُهُ فَقَامَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَالَ إِلَيَّ رَضَاعُهُ يَا نَبِيَّ اللَّهِ قَالَ فَرَجَمَهَا فَيُقْبِلُ خَالِدُ بْنُ الْوَلِيدِ بِحَجَرٍ فَرَمَى رَأْسَهَا فَتَنَضَّحَ الدَّمُ عَلَى وَجْهِ خَالِدٍ فَسَبَّهَا فَسَمِعَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبَّهُ إِيَّاهَا فَقَالَ مَهْلًا يَا خَالِدُ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ تَابَتْ تَوْبَةً لَوْ تَابَهَا صَاحِبُ مَكْسٍ لَغُفِرَ لَهُ ثُمَّ أَمَرَ بِهَا فَصَلَّى عَلَيْهَا وَدُفِنَتْ..

விபச்சாரக் குற்றத்தில் ஒருவர் ஈடுபட்டால் அது தண்டனை வழங்கும் அளவிற்கான குற்றம் என்பதாக அல்லாஹ் இறைவசனத்தை இறக்கியருளியிருந்த தருணம் அது

புரைதா, இப்னு அப்பாஸ், அனஸ் ( ரலிஅன்ஹும் ) அறிவிக்கின்றார்கள்:

பனூ அஸ்லம் குலத்தைச் சேர்ந்த மாஇஸ் இப்னு மாலிக் என்கிற நபித்தோழர்  நபி(ஸல்) அவர்களின் சமூகத்தில் வந்து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டும்  தம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்.

மீண்டும் வந்து முறையிடவே, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்குமாறு கூறி மாயிஸ் (ரலி) அவர்களை நபி {ஸல்} அனுப்பி வைத்தார்கள்.

இவ்வாறு, அவர் மூன்று முறை அண்ணலாரின் சபைக்கு வருவதும், செல்வதுமாக இருந்தார்.

நான்காவது முறையாக முன்பு போல் அவர் அவ்வாறு கூறவே அவரை நோக்கி அண்ணலார் {ஸல்} அவர்கள் ”(அவளை) நீர் முத்தமிட்டிருக்கலாம்! அல்லது (கண்ணாலோ கையாலோ) சைகை செய்திரக்கலாம்! அல்லது (ஆசையுடன்) பார்த்திருக்கலாம்!என்றார்கள்.

ஆனால், அவரோ முன்பு போலவே தாம் விபச்சாரம் புரிந்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

அப்போது அவரிடம் நபி(ஸல்) அவர்கள் உமக்குப் பைத்தியமா?” என்று கேட்டார்கள். அவர்இல்லைஎன்றார்.

ஆனால், அவரோ மீண்டும் முன்பு போலவே தாம் விபச்சாரம் புரிந்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

அப்போது, அருகில் இருந்த நபித்தோழர்களிடம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “இவர் மது அருந்தி இருக்கிறாரா?” என்று பரிசோதித்துப் பாருங்கள்” என்றார்கள்.

பரிசோதித்த நபித்தோழர்கள் “இல்லை, இவர் மது அருந்த வில்லை” என்று பதில் கூறினார்கள்.


இறுதியாக அவர் நான்கு முறை தமக்கெதிராகத் தாமே சாட்சியம்அளித்தார். அப்போது, அவரிடம் நபி (ஸல்) அவர்கள் சாடைமாடையாகக் கேட்காமல் அவளுடன் நீர் உடலுறவு கொண்டீரா?” என்று (வெளிப்படையாகவே) கேட்டார்கள். அவர், ”ஆம்'” என்று கூறினார்.

அப்போதுதான் அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

பெருநாள் தொழுகைத் திடல்  அருகில்  அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அப்போது,  நபி (ஸல்) அவர்கள்அவரைக் குறித்து நல்லதைக் கூறியதோடு அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழவைத்தார்கள்”.

மாயிஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் விபச்சாரம் செய்து கையும் களவுமாக பிடிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப் பட்டவர்கள் அல்ல.
 
மாறாக, தான் செய்த தண்டனைக்குரிய குற்றத்தை யாரும் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற அவர்களின் உள்ளத்தில் வெளிப்பட்ட தக்வா - இறையச்சம்தான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சமூகம் நோக்கி இழுத்து வந்தது.

அங்கே, மாயிஸ் (ரலி) குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனை கேட்டபோது, மாயிஸ் (ரலி) அவர்களின் இறையச்சத்தை அறிந்த  நபியவர்கள்,
 
”போய் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்” என்றார்கள். பின்னர், உமக்குப் பைத்தியமா..? என்கிறார்கள், இவர் மது குடித்திருக்கின்றாரா? என பரிசோதிக்கச் சொல்கின்றார்கள்.

பின்பு நீர் முத்தமிட்டிருக்கலாம்; அல்லது சைகை செய்திருக்கலாம்; அல்லது ஆசையோடு பார்த்திருக்கலாம் என்றெல்லாம் சொல்லி மாயிஸ் (ரலி) அவர்களை திருப்பி அனுப்ப முயற்சிக்கின்றார்கள்.

ஆனாலும், மாயிஸ் (ரலி) அவர்களின் உறுதியான நிலைப்பாட்டால் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டார்கள்.
 
தான் செய்த பாவத்தை தம்மைத் தவிர யாருமே பார்க்காத போதும், படைத்த இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற இறையச்சத்தால் உந்தப்பட்டு, வேதனை மிகுந்த தண்டனையை  ஏற்கும் அளவுக்கு சஹாபாக்கள் இறையச்சம் மிகுந்தவர்களாக திகழ்ந்திருக்கின்றார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மாயிஸ் (ரலி) அவர்களை பொருந்திக் கொள்வானாக!

இந்த தண்டனை வழங்கப்பட்டு சில நாட்கள் கூட கழிந்திருக்காத நிலையில் அண்ணலாரையும், நபித்தோழர்களையும் அதிர்ச்சியடையச் செய்த ஓர் சம்பவம் நபிகளாரின் சபையில் நடந்தேறியது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் திருச்சமூகத்திற்கு அஸ்த் குலத்தின் கிளையான ஃகாமிதிய்யா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வருகை தந்தார்கள்.

வந்த அந்தப் பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்து விட்டேன். எனக்கு உரிய தண்டனையை நிறைவேற்றி என்னை தூய்மை படுத்துங்கள்! என்றார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்பெண்மணியை திருப்பி அனுப்பி விட்டார்கள். அப்பெண் மறு நாளும் அல்லாஹ்வின் தூதரின் முன் வந்து நின்று முன்பு சொன்னது போலவே சொன்னார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் திரும்பிச் செல்லுமாறு கூறிய போது, அப்பெண்மணிஅல்லாஹ்வின் தூதரே! ஏன் என்னை திருப்பியனுப்புகின்றீர்கள்? மாயிஸ் இப்னு மாலிக் {ரலி} அவர்களின் விஷயத்தில் நடந்து கொண்டதைப் போன்றல்லவா என் விஷயத்திலும் நடந்து கொள்கின்றீர்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் தகாத உறவில் ஈடுபட்டு கர்ப்பமாக இருக்கின்றேன்என்று கூறினார்.

நபி {ஸல்} அவர்கள் ஆச்சர்யத்தோடுநீயா அது?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணிஆம்என்றார்.

அப்படியானால் உமது வயிற்றினுள் உள்ள குழந்தையை பெற்றெடுத்து விட்டு வா!” என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

குழந்தையை பெற்றெடுத்த பின்னர் அப்பெண்மணி ஒரு துணியில் அந்தக் குழந்தையை சுற்றியெடுத்துக் கொண்டு, மாநபி {ஸல்} அவர்களிடம் வந்துஇது நான் பெற்றெடுத்த குழந்தைஎன்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், “நீ சென்று அந்தக் குழந்தைக்கு அமுதூட்டு! பால்குடி மறக்கடிக்கப்பட்ட பின் வா! என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

அமுதூட்டும் காலம் நிறைவடைந்த பின்னர், அக்குழந்தையை அழைத்துக் கொண்டு, அக்குழந்தையின் கையில் ரொட்டித் துண்டு ஒன்றை கொடுத்து அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சபைக்கு வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இதோ நான் பால்குடி மறக்கடித்து விட்டேன். இப்போது என் குழந்தை உணவை உட்கொள்ள ஆரம்பித்து விட்டதுஎன்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், அக்குழந்தையை அன்ஸாரிகளில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள்.

அதன் பின்னர் அந்தப் பெண்ணுக்கு கல்லெறி தண்டனை வழங்குமாறு உத்தரவிட்டார்கள். எனவே, அவருக்காக மார்பளவு குழி தோண்டப்பட்டது.

பின்னர் அக்குழிக்குள் அப்பெண் நிறுத்தி வைக்கப்பட்ட பின் கல்லெறியுமாறு மக்களுக்கு கட்டளையிட, மக்கள் அவர் மீது கல்லெறிந்து அல்லாஹ்வின் தண்டனையை நிறைவேற்றினார்கள்.

அப்போது, காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் கல் ஒன்றை எடுத்து அப்பெண்ணின் தலைமீது எறிந்தார்கள். பீறிட்டு வந்த இரத்தம் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் முகத்தில் தெரித்தது.

அப்போது, காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் அப்பெண்ணை சபித்தார்கள்; ஏசினார்கள்.

இதை அருகில் நின்று கேட்ட மாநபி {ஸல்} அவர்கள் காலிதே! நிறுத்துங்கள். என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! அப்பெண்மணி அழகிய முறையில் தவ்பா பாவமன்னிப்புத் தேடிக்கொண்டார்.

பொது நிதியை மோசடி செய்த ஒருவன் இப்படி பாவமன்னிப்புக் கோரினால் அவனுக்கும்கூட மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும்.என்று கூறினார்கள்.

பிறகு அப்பெண்ணுக்கு ஜனாஸா தொழுகை நடத்த ஏற்பாடு செய்யுமாறு நபித்தோழர்களை பணித்தார்கள்.

அவருக்காக ஜனாஸா தொழுகையை தாமே தொழவைத்தார்கள். பின்னர் அப்பெண்மணி நல்லடக்கமும் செய்யப்பட்டார்.

( நூல்: முஸ்லிம், பாபு மன் இஃதரஃப அலா நஃப்ஸிஹி பிஸ்ஸினா, புகாரி, பாபு மன் தரகல் ஃபவாஹிஷ், ஹதீஸ் எண்: 6820, 6824, மிஷ்காத், கிதாபுல் ஹுதூத், பக்கம்: 310 )

தன் கண் முன்னால் ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டதைப் பார்த்த பின்னரும் கூட, தான் செய்த விபச்சார குற்றத்திற்குரிய  தண்டனையை நிறைவேற்றுமாறு ஒரு பெண்மணி பெருமானார் {ஸல்} அவர்களின் திருச்சமூகத்தின் முன் வந்து நின்றார்கள் என்றால் அந்தப் பெண்மணியை அங்கு வந்து நிறுத்தியது தக்வா எனும் இறையச்சம் தான்.

அவர் செய்த குற்றத்தை அவரைத் தவிர வேறெவரும் பார்க்கவில்லை எனும் போது, தனக்கு முன்பாக ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டதைப் பார்த்த பின்னரும் கூட அந்த தண்டனையை வழிய வந்து ஏற்றுக் கொண்டார் எனில் அவரின் இறையச்சத்தை எந்த உரைகல் வைத்து உரசிப்பார்ப்பது.

இந்த இரு செய்திகளையும் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் முஸ்லிம் ஷரீஃபில் கிதாபுல் ஹுதூத் பாடத்தில்,  பாபு மன் இஃதரஃப அலா நஃப்ஸிஹி பிஸ்ஸினா எனும் பாபில் ஒரே ஹதீஸாகப் பதிவு செய்திருப்பார்கள்.

இந்த ஹதீஸிற்கு விளக்கம் தருகிற வரலாற்று ஆசிரியர்களில் சிலர் நபி {ஸல்} அவர்கள் அப்பெண்மணியிடம் “ஆச்சர்யத்தோடுநீயா அது?” என்று கேட்ட அந்த அமைப்பும், அதற்கு அப்பெண்மணிஆம்என்று கூறிய விதமும்” மாயிஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களோடு தவறான உறவில் ஈடுபட்ட பெண் இவர் தான்” என்று கூறுகின்றார்கள்.

பாவத்தில் வீழ்வதிலிருந்து பாதுகாக்கும் கேடயம் இறையச்சம்....

حَدَّثَنَا عَطَّافُ بْنُ خَالِدٍ ، قَالَ : حَدَّثَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ خَرَجَ لَيْلَةً يَحْرُسُ النَّاسَ ، فَمَرَّ بِامْرَأَةٍ وَهِيَ فِي بَيْتِهَا وَهِيَ تَقُولُ

تَطَاوَلَ هَذَا اللَّيْلُ وَاسْوَدَّ جَانِبُهْ ... وَطَالَ عَلَيَّ أَنْ لاَ خَلِيلَ أُلاَعِبُهْ
فَوَاللَّهِ لَوْلاَ خَشْيَةُ اللهِ وَحْدَهْ ... لَحُرِّكَ مِنْ هَذَا السَّرِيرِ جَوَانِبُهْ
فَلَمَّا أَصْبَحَ عُمَرُ أَرْسَلَ إِلَى الْمَرْأَةِ ، فَسَأَلَ عَنْهَا ، فَقِيلَ
 هَذِهِ فُلاَنَةُ بِنْتُ فُلاَنٍ ، وَزَوْجُهَا غَازٍ فِي سَبِيلِ اللهِ ، فَأَرْسَلَ إِلَيْهَا امْرَأَةً ، فَقَالَ : كُونِي مَعَهَا حَتَّى يَأْتِيَ زَوْجُهَا ، وَكَتَبَ إِلَى زَوْجِهَا ، فَأَقْفَلَهُ ، ثم دخل على حفصة ابنته رضي الله عنها فقال اني سائلك عن آمر قد أهمني فافرجيه عني. في كم تشتاق امرأة الى زوجها فخفضت رأسها واستحيت قال : فان الله لا يستحي من الحق قَالَتْ : أَرْبَعَةَ أَشْهُرٍ ، أَوْ خَمْسَةَ أَشْهُرٍ ، أَوْ سِتَّةَ أَشْهُرٍ ، فكتب عمر رضي الله عنه ان لا تحـبس الجيوش فوق أربعة اشهر
رواه سعيد بن منصور في سننه واخرجه عبد الرزاق في مصنفه

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் அது. ஒரு நாள் இரவு உமர் (ரலி) அவர்கள் நகர்வலம் வருகின்றார்கள். ஒரு வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்கிறது. அழுகையின் ஊடாக இடையே ஏதோ சில வாசகங்களையும் அப்பெண்மனி உதிர்த்துக் கொண்டிருந்தார்.

செவியைக் கூர்மையாக்கி கேட்கின்றார்கள். அப்பெண்மனிஎத்துனை இரவுகள் என் துணைவர் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. எத்துனை நீண்டதாகத் தெரிகிறது இந்த இரவுகள்? என் துணைவர் என்னுடன் கொஞ்சிக் குலாவாமல் எங்கோ இருப்பதனால்….

அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன்! அல்லாஹ்வின் அச்சம் மட்டும் என் உள்ளத்தில் இல்லாது போயிருக்குமானால், இந்த கட்டில் என்றோ அதன் உண்மைத் தன்மையை இழந்திருக்கும்என் தேகமும் தான்…” என்ற பொருள் பட கவி நடையில் தன் உணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

கவிதை வரிகள் உமர் (ரலி) அவர்களின் உள்ளத்தைப் பிழிந்தது. நெருஞ்சி முள்ளாய் தைத்தது. அங்கிருந்து அமைதியாய் அகன்று விட்டார்கள்.

மறுநாள் காலை அந்த வீட்டின் விவரங்களை சேகரிக்க உத்தரவுகள் பரந்தன. இறுதியில், அப்பெண்மனியின் கணவர் அறப்போரில் கலந்து கொள்ளச் சென்று, நீண்ட காலம் ஆகியும் திரும்பி வரவில்லை என்கிற தகவல் பெறப்பட்டு கலீஃபா உமர் (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

உடனே, கலீஃபா உமர் (ரலி) அவர்கள்ஒரு பெண்ணை தன்னோடு அழைத்துக் கொண்டு அப்பெண்மனியின் வீட்டிற்குச் சென்றார்கள். அப்பெண்மனியை அழைத்துதன்னோடு அழைத்து வந்த அப்பெண்மனியை சுட்டிக் காட்டி இதோ! இப்பெண்மனியை  உங்களுக்குத் துணையாக வைத்துக் கொள்ளுங்கள்! தங்கள் கணவருக்கு நான் கடிதம் எழுதி அவர் உடனே ஊருக்குப் புறப்பட்டு வர ஏற்பாடு செய்கிறேன்என்று கூறினார்கள்.

பின்னர், நேராக தங்களுடைய மகளான உம்முல் முஃமினீன் அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றுமகளே! கடந்த இரு தினங்களாக என் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்திக் கொண்டிருக்கிற ஒரு விஷயத்திற்கு நீ தெளிவாக விடையளித்து, என் உள்ளத்தை சிரமத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்என்று கூறி விட்டு

தம் கணவனை விட்டும் பிரிந்து வாழ்கிற ஒரு பெண் எவ்வளவு நாள் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, இயல்புகளோடு இருக்க இயலும்என்று கேட்டார்கள்.

இந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பாராத அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள் வெட்கத்தால் தலை கவிழ்ந்தார்கள். தந்தையே! என்ன கேள்வி கேட்கிறீர்கள் என்று தெரிந்து தான் கேட்கின்றீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு, உமர் (ரலி) அவர்கள்அல்லாஹ் சத்தியத்தைச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லைஎன்கிற இறைவசனத்தை ஓதிக் காண்பித்து விட்டு, நடந்த சம்பவத்தை கூறினார்கள்.

அப்போது, அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள்நான்கு மாதம் அல்லது ஆறு மாதம்என்று பதில் கூறினார்கள்.

இதைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள் விரைவாக மஸ்ஜிதுன் நபவீயை நோக்கி வந்தார்கள். அறப்போரில் பங்கு பெற உலகின் நாலா பாகங்களுக்கும் சென்றிருக்கிற அத்துனை படைத் தளபதிகளுக்கும்நான்கு மாதங்களுக்கு மேலாக படையில் பங்கு பெற்றிருக்கும் போர் வீரர்கள் அனைவருக்கும் ஒரு மாத காலம் விடுப்பு கொடுத்து அவரவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப் பட வேண்டும்; இனிமேல் எந்தப் படை வீரர்களும் நான்கு மாதத்திற்கு மேல் போர்ப் பணி செய்யக்கூடாதுஎன கடிதம் எழுதி தூது அனுப்பினார்கள்.

        ( நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக், ஃகுலஃபாவுர் ரஸூல் {ஸல்}…. }

தன் இளமை சார்ந்த எதிர்பார்ப்புகள், உணர்வுகள் ஒரு கட்டத்தில் தன்னை வாட்டி வதைக்கும் போது அல்லாஹ்வின் மீதான இறையச்சம் தான் இயற்கைச் சார்ந்த குற்றங்கள் நிகழாமல் தன்னைத் தடுத்தது என்று அப்பெண்மனி கூறிய விதம் உண்மையில் தக்வாவிற்கு பாவத்தில் வீழ்வதில் இருந்து பாதுகாக்கும் வலிமை உள்ளது என்பதை உணர்த்துகின்றது.

உயரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும்  இறையச்சம்….

அல்லாஹ் வேறெந்த வரலாற்றுச் செய்திக்கும் தராத நற்சான்றிதழை யூஸுஃப் (அலை) அவர்களின் வரலாற்றிற்கு வழங்குவான்.

نَحْنُ نَقُصُّ عَلَيْكَ أَحْسَنَ الْقَصَصِ بِمَا أَوْحَيْنَا إِلَيْكَ هَذَا الْقُرْآنَ

“ ( நபியே! ) இந்தக் குர்ஆனை நாம் வஹீ மூலம் உமக்கு அருளினோம்; மேலும், உமக்கு அழகிய ஒரு வரலாற்றையும் இப்போது எடுத்துரைக்கின்றோம்”.
                                                       ( அல்குர்ஆன்: 12: 3 )

அழகிய வரலாறு என அல்லாஹ்வால் பெரிதும் புகழப்படுகிற வரலாற்றின் ஒரு பகுதியில் நடைபெறுகிற காட்சி இது

கடுமையான பஞ்சத்தால் யூஸுஃப் (அலை) அவர்களின் சகோதரர்கள் பாதிக்கப்பட்டிருந்த போது அவர்கள் எகிப்திற்கு பயணமாகிப் போனார்கள்.

அங்கு நடந்த காட்சியை குர்ஆன் இவ்வாறு விவரிக்கின்றது….

فَلَمَّا دَخَلُوا عَلَيْهِ قَالُوا يَا أَيُّهَا الْعَزِيزُ مَسَّنَا وَأَهْلَنَا الضُّرُّ وَجِئْنَا بِبِضَاعَةٍ مُزْجَاةٍ فَأَوْفِ لَنَا الْكَيْلَ وَتَصَدَّقْ عَلَيْنَا إِنَّ اللَّهَ يَجْزِي الْمُتَصَدِّقِينَ ()
قَالَ هَلْ عَلِمْتُمْ مَا فَعَلْتُمْ بِيُوسُفَ وَأَخِيهِ إِذْ أَنْتُمْ جَاهِلُونَ () قَالُوا أَإِنَّكَ لَأَنْتَ يُوسُفُ قَالَ أَنَا يُوسُفُ وَهَذَا أَخِي قَدْ مَنَّ اللَّهُ عَلَيْنَا

அவர்கள் எகிப்து சென்ற பின் யூஸுஃப்ஃபின் அவைக்கு வந்த போதுஅரசரே! எங்களையும், எங்கள் குடும்பத்தாரையும் கடுந்துன்பம் பீடித்துள்ளது. மேலும், நாங்கள் அற்பமான சில பொருள்கள் கொண்டு வந்திருக்கின்றோம்; அவற்றுக்குப் பதிலாக நீங்கள் எங்களுக்கு நிறைவாக தானியம் வழங்கி எங்களுக்கு நன்மை செய்யுங்கள்! இவ்வாறு நன்மை செய்வோருக்கு திண்ணமாக, அல்லாஹ் நற்கூலி வழங்குவான்என்றார்கள். ( இதைக் கேட்டதும்… )

யூஸுஃப் கூறினார்: “நீங்கள் அறிவற்றவர்களாய் இருந்த போது, யூஸுஃப் மற்றும் அவரது சகோதரரிடம் ( புன்யாமீன் ) எவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்பது நீங்கள் அறிந்த விஷயம் தானே!” என்று.

உடனே அவர்கள்நீர் தானா யூஸுஃப்?” என்று ஆச்சர்யத்துடன் கேட்க, அதற்கு யூஸுஃப்ஆம்நான் தான் யூஸுஃப். ( புன்யாமீனைச் சுட்டிக்காட்டி ) இவர் என் சகோதரர் அல்லாஹ் எங்கள் மீது அருள்புரிந்துள்ளான்என்றார். ( 12: 88 - 90 )

இங்கே, அவர்களின் ஆச்சர்யத்துக்கும், அவர்கள் கேட்ட கேள்விக்கும் உள்ள பிண்ணனியை குர்ஆனே விவரிக்கிறது.

யூஸுஃப் (அலை) அவர்கள் மீது இவர்கள் கொண்ட பொறாமை, அதன் விளைவாக யூஸுஃப் (அலை) அவர்களைக் கொல்லத்துணிந்து கிணற்றில் போட்டது என யூஸுஃப் அத்தியாயத்தின் 8 –வது வசனம் முதல் 18 –வது வசனம் வரை விவரிக்கிறது.

அவர்களின் கேள்வியின் தொணி இது தான்நீர் தான் யூஸுஃபா, நீர் இருக்கவே கூடாது என்பதற்காகத்தானே உன்னை கொலை செய்தோம்; ஆனால், நீரோ இங்கே, இப்போது எகிப்தின் நிதியமைச்சராக வீற்றிருக்கின்றீர்? எப்படி? உம்மால் இவ்வளவு உயர்ந்த இடத்துக்கு வரமுடிந்ததுஎன்று.

إِنَّهُ مَنْ يَتَّقِ وَيَصْبِرْ فَإِنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ ()

யூஸுஃப் (அலை) அவர்கள் இதற்கான பதிலை ஒற்றை வார்த்தையில் இப்படி கூறினார்கள்: “திண்ணமாக, எவர்கள் இறையச்சம் கொண்டு, நிலைகுலையாது இருக்கின்றார்களோஅத்தகைய நல்லோர்களின் கூலியை அல்லாஹ் ஒரு போதும் வீணாக்குவதில்லை!” என்று.                                  ( அல்குர்ஆன்: 12: 90 )

கொஞ்சம் முன்னே சென்று, யூஸுஃப் (அலை) அவர்களின் கடந்த கால வாழ்க்கையை அவர்களுக்கு அவர் நினைவு படுத்தினார்.

நாமும் கொஞ்சம் நினைவு படுத்தித் தான் பார்ப்போமே!...

وَرَاوَدَتْهُ الَّتِي هُوَ فِي بَيْتِهَا عَنْ نَفْسِهِ وَغَلَّقَتِ الْأَبْوَابَ وَقَالَتْ هَيْتَ لَكَ قَالَ مَعَاذَ اللَّهِ إِنَّهُ رَبِّي أَحْسَنَ مَثْوَايَ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ (23)

“அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அந்தப் பெண் அவரை அடைய வலை விரித்தார்! ஒரு நாள் வாயில்களை எல்லாம் அடைத்துத் தாழிட்டு விட்டு “வாரும்!” என்று அழைத்தார். அதற்கு, யூஸுஃப் “அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்!” திண்ணமாக, என் ரப் – அதிபதி எனக்கு நல்ல கண்ணியத்தை வழங்கியுள்ளான். ( அப்படியிருக்க இது போன்ற இழிவான ஒரு செயலை நான் செய்வேனா என்ன?” ) இது போன்ற அக்கிரமமான செயலைச் செய்வோர் ஒரு போதும் வெற்றி அடைவதில்லை!” என்று கூறினார்.  (அல்குர்ஆன்: 12: 23 )

நேற்று வரை தம்மை அரவணைத்து நின்ற, தாய் போன்று பராமரித்த ஒரு பெண் அரண்மனையின் ஒரு வாசலை அல்ல, அத்துனை வாசல்களையும் அடைத்து விட்டு, யாரும் இல்லை, யாரும் பார்க்க முடியாது என்கிற தொணியில் தவறான உறவிற்கு அழைத்த போதும் அவரை அந்த இழி செயலை செய்வதை விட்டும் தடுத்த அம்மாபெரும் சக்தி தக்வா எனும் இறையச்சம் தான்.

இதைத் தான் யூஸுஃப் (அலை) அவர்கள் தம் உயர்விற்கும், அந்தஸ்திற்குமான அடிப்படை ஆதாரமாக தங்களது சகோதரர்களுக்கு குறிப்பிட்டார்கள்.

ஆகவே, தக்வா என்பது ஓர் இறைநம்பிக்கையாளனின் வாழ்வில் எந்தளவு அவசியமானது என்பதையும், அதன் வலிமையையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

தக்வா என்பது வெறும் வார்த்தை அல்ல. அது தான் வாழ்க்கை என்பதை மேற்கூறிய நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனை உண்மையாக அஞ்சி வாழ்கிற பெரும் பாக்கியத்தை தந்தருள்வானாக!
  
       ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

12 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ் தக்வாவின் விளக்கம் அருமை

    ReplyDelete
  2. அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக ஆமீன்

    ReplyDelete
  3. அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக ஆமீன்

    ReplyDelete
  4. அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக ஆமீன்

    ReplyDelete
  5. அருமையான.பதிவு

    ReplyDelete
  6. மேற்கூறிய உமர்ரலி & கஅப் ரலி செய்தி பெற்றுள்ளண் கிடைக்குமா???

    ReplyDelete
  7. நம் எல்லோர் மனதிலும் இந்த தக்வாவை
    அல்லாஹ் வரசெய்வானாக!

    ReplyDelete
  8. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  9. அல் ஹம்து லில்லாஹ் என்னை போன்ற புதிதாக பயான் பேசக்கூடிய வர்களுக்கு வரப் பிரசாதமாக தரப்பட்டுள்ளது

    ReplyDelete
  10. Masha allah. Great effort . Tommrrow jumah bayan ready

    ReplyDelete