Thursday 24 November 2016

முஸ்லிம் எனும் அடையாளத்தை இழக்க முடியுமா?



முஸ்லிம் எனும் அடையாளத்தை இழக்க முடியுமா?



21/11/2016 அன்றைய தமிழ் தி இந்து நாளிதழில் ஆர்.பி.ஐ ரிஸர்வ் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் வெளியிடப்பட்ட ஒரு செய்தி பிரசுரமாகி இருந்தது.

அதில் “தற்போது இருக்கும் வங்கி நடைமுறையில் முஸ்லிம்களுக்கு தனியான பிரிவை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசும், ரிஸர்வ் வங்கியும் முஸ்லிம் மக்களை வங்கி அமைப்புக்குள் கொண்டுவரும் நோக்கில் தனியான முஸ்லிம் வங்கிகளை ஏற்படுத்த உண்டான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றது. முஸ்லிம் மக்கள் அவர்களுடைய மத நம்பிக்கைகளின் காரணமாக வங்கி அமைப்புக்குள் வருவதில்லை.

பல்வேறு விதிகள், சவால்கள் இந்த விஷயத்தில் அடங்கியுள்ளது. மேலும், இந்திய வங்கிகளுக்கு இதில் முன் அனுபவம் இல்லை. முஸ்லிம் வங்கிகள் இந்தியாவில் படிப்படியாக கொண்டு வரப்படும். முதலில் தற்போதுள்ள வங்கிகளில் முஸ்லிம்களுக்கு தனிப்பிரிவு மூலம் சில திட்டங்கள் கொண்டு வரப்படும்” என்று.

இதுவும் கூட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு ரிஸர்வ் வங்கி கொடுத்துள்ள பதிலாகும்.

இந்த அறிவிப்பு கடந்து வந்த பாதை…

இன்றைய வங்கிகளின் இயக்கம் வட்டியை அடிப்படையாக கொண்டிருப்பதால் முஸ்லிம்கள் வங்கிகளில் சேமிக்கத் தவறுகின்றார்கள் என்றும் ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்த.

ஆய்வு 1. நீதியரசர் ராஜீந்தர் சச்சார் தமது அறிக்கையில் நாட்டில் இயங்குகின்ற 27 பொதுத்துறை வங்கிகளில் முஸ்லிம்கள் சேமிப்பு கக்கு பரிவர்த்தனையில் 12 விழுக்காடு தான் பங்கு பெற்றுள்ளனர்.

அதாவது நாட்டில் வசிக்கும் 25 கோடி முஸ்லிம்களில் 3 1/2 கோடி முஸ்லிம்களுக்கு வங்கித் தொடர்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வு 2. மேலும் 2005ல் Legal News and Views எனும் ஆய்வில் வங்கிகளில் முஸ்லிம்களால் கைவிடப்பட்ட வட்டிப்பணம் 75,000 கோடி கேட்பாரற்று கிடக்கின்றது. அதிலும் குறிப்பாக கேரள வங்கிகளில் மட்டும் 45,000 கோடி என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்குப் பின்னர் முஸ்லிம் சமூகம் அப்போது ஆளும் காங்கிரசின் கதவைத் தட்டியது.

கடந்த காங்கிரஸ் அரசிடம் வட்டியில்லா வங்கி குறித்த இக்கோரிக்கை  முன் வைக்கப்பட்ட போது 2006ம் ஆண்டில் இது குறித்து பரிசீலனை செய்யுமாறு ரிசர்வ் வங்கியை மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார். ஆனால் சாத்தியமில்லை என்று கூறி ரிசர்வ் வங்கி கையை விரித்தது.

அப்போது கைவிரித்த அல்லது கைவிட்ட ரிஸர்வ் வங்கி தான் இப்போது, சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும், அதற்கு முன்னோட்டமாக தற்போதைய வங்கி முறையில் முஸ்லிம்களுக்கு தனிப்பிரிவை துவங்க முயற்சி மேற்கொள்வதாகவும் அறிவித்துள்ளது.

காலம் கடந்த முடிவு என்றாலும் முஸ்லிம் சமூகத்தின் குரல்களைப் புறக்கணிக்க முடியாது எனும் நிலையை மத்திய அரசும், நாட்டின் முதன்மை நிறுவனமும் ஒப்புக்கொண்டிருக்கும் நிலை இன்று ஏற்பட்டிருக்கின்றது.

அல்ஹம்து லில்லாஹ்….

ரிஸர்வ் வங்கி கொடுத்திருக்கிற அறிக்கையில், மத்திய அரசும், ரிஸர்வ் வங்கியும், “முஸ்லிம் சமூகம் மத நம்பிக்கைக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள், எந்த ஒரு காரணத்திற்காகவும் முஸ்லிம் எனும் அடையாளத்தை விட்டுத் தரவும் மாட்டார்கள், வளைந்து கொடுக்கவும் மாட்டார்கள் என்று ஒத்துக் கொண்டுள்ளதை” உணர முடிகின்றது.

2050 –ஆம் ஆண்டை சர்வதேச மனித சமூகம் மிகப் பெரிய அளவில் எதிர் நோக்கி இருக்கிறதென்றால் அது மிகையல்ல.

மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகள் முதற்கொண்டு, உலகின் பல நாடுகளைத் தாண்டி இந்தியா வரை இஸ்லாம் தன் ஆளுமையை விரிவாக்கம் செய்து, மிகப் பெரிய அளவிலான எண்ணிக்கையை கொண்ட முஸ்லிம் சமூகமாக உருவாக்கம் பெரும் என்கிற பல்வேறு கருத்துக் கணிப்புகளின் முடிவு தான் இந்த எதிர்பார்ப்பின் அடிப்படையாகும்.

2050 –இல் முஸ்லிம்களின் எண்ணிக்கை உயர்ந்து விடக்கூடாது, இஸ்லாத்தின் ஆளுமை விரிவடைந்து விடக்கூடாது என்பதில் உறுதியாகவும் அதே நேரத்தில் கண்காணிப்போடும் இருக்கின்றார்கள்.

ஆகவே, மிகக் கவனமாக, சர்வதேச ஆட்சியாளர்கள் முஸ்லிம்களின் மீது மறைமுக தாக்குதல்களைத் துவக்கி நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

அதில் ஒன்று முஸ்லிமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போதே முஸ்லிம் எனும் அடையாளத்தை முஸ்லிம் சமூகத்திடம் இருந்து அகற்ற வேண்டும். இஸ்லாத்தை விட்டும் முஸ்லிம்களை தூரமாக்க வேண்டும் என்கிற முயற்சிகளில் முழு மூச்சாக இரவு, பகலாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இத்தகைய காலகட்டத்தில் ரிஸர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு வெளிவந்திருப்பது தான் முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாகும்.

முஸ்லிம் எனும் அடையாளத்தை ஏன் முஸ்லிம்கள் இழக்கத் துணிவதில்லை?...

هُوَ اجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ مِنْ قَبْلُ وَفِي هَذَا

மேலும், அவன் தனது பணிக்காக உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். மேலும், அவன் வழங்கிய மார்க்கத்தில் ( இஸ்லாத்தில் ) உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் வைத்திடவில்லை.

உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத்தில் நிலைத்திருங்கள். அல்லாஹ் தான் இதற்கு முன்பும், இப்போதும் உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயர் சூட்டியுள்ளான். தூதர் உங்கள் மீது சான்று வழங்குபவராகவும், நீங்கள் மக்கள் மீது சான்று வழங்குபவர்களாகவும் திகழ வேண்டும் என்பதற்காக!”.         ( அல்குர்ஆன்: 22: 78 )

அடையாளத்தை இழக்க, முகவரியைத் தொலைக்க ஒரு முஸ்லிம் ஒரு போதும் முன் வரமாட்டான்.

ஏனெனில், இந்த அடையாளத்தையும், முகவரியையும் தந்தவன் அனைத்துலகையும் படைத்துப் பரிபாலனம் செய்யும் ரப்புல் ஆலமீன் ஆகிய அல்லாஹ் தான் என்று மேற்கூறிய இறைவசனம் நமக்கு உணர்த்துகின்றது.

அடையாளத்தை இழக்க விரும்பாத மேன்மக்கள்….

பைத்துல்லாஹ்வின் அஸ்திவாரத்தை உயர்த்திய இப்ராஹீம் {அலை} அவர்கள் அல்லாஹ்விடம் கை உயர்த்தி, தம் திருப்பணியை ஏற்றுக் கொள்ளுமாறு இறைஞ்சியதோடு,

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ

“எங்கள் இரட்சகனே! எங்களிருவரையும் உனக்கு முற்றிலும் கீழ்ப்படிகிற முஸ்லிம்களாகவும், எங்களுடைய சந்ததியில் இருந்தும் உனக்கு கீழ்ப்படிகிற முஸ்லிம்களையும் ஆக்கியருள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். ( அல்குர்ஆன்: 2:128 )

وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَا بَنِيَّ إِنَّ اللَّهَ اصْطَفَى لَكُمُ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ ()

இப்ராஹீமும், யஃகூபும் தங்களுடைய இறுதி நேரத்தில் தங்களின் மக்களுக்கு “என் மக்களே! நிச்சயமாக, அல்லாஹ் இஸ்லாம் மார்க்கத்தையே உங்களுக்காக தேர்ந்தெடுத்துள்ளான்; ஆகவே, நீங்கள் முஸ்லிம்களாக அன்றி நிச்சயமாக மரணிக்க வேண்டாம் என்று வஸிய்யத் செய்தார்கள்”.                   ( அல்குர்ஆன்: 2: 132 )

1. அடையாளத்தை இழக்கச் செய்யும் எதையும் ஓர் இறை நம்பிக்கையாளன் அங்கீகரிக்க மாட்டார்….

فذهب إلى بيت إسماعيل فقال لامرأته : أين صاحبك ؟ قال ذهب للصيد وكان إسماعيل عليه السلام يخرج من الحرم فيصيد ، فقال لها إبراهيم : هل عندك ضيافة ؟ قالت ليس عندي ضيافة ، وسألها عن عيشهم ؟ فقالت : نحن في ضيق وشدة ، فشكت إليه فقال لها : إذا جاء زوجك فأقرئيه السلام وقولي له فليغير عتبة بابه ، فذهب إبراهيم فجاء إسماعيل فوجد ريح أبيه فقال لامرأته : هل جاءك أحد ؟ قالت : جاءني شيخ صفته كذا وكذا كالمستخفة بشأنه قال فما قال لك ؟ قالت قال أقرئي زوجك السلام وقولي له فليغير عتبة بابه ، قال ذلك أبي وقد أمرني أن أفارقك الحقي بأهلك ، فطلقها وتزوج منهم أخرى ، فلبث إبراهيم ما شاء الله أن يلبث ، ثم استأذن سارة أن يزور إسماعيل فأذنت له وشرطت عليه أن لا ينزل ، فجاء إبراهيم عليه السلام حتى انتهى إلى باب إسماعيل فقال [ ص: 148 ] لامرأته أين صاحبك ؟ قالت ذهب يتصيد وهو يجيء الآن إن شاء الله ، فانزل يرحمك الله ، قال : هل عندك ضيافة ؟ قالت : نعم فجاءت باللبن واللحم ، وسألها عن عيشهم ؟ فقالت : نحن بخير وسعة ، فدعا لهما بالبركة ولو جاءت يومئذ بخبز بر أو شعير وتمر لكانت أكثر أرض الله برا أو شعيرا أو تمرا ، فقالت له : انزل حتى أغسل رأسك ، فلم ينزل فجاءته بالمقام فوضعته عن شقه الأيمن فوضع قدمه عليه فغسلت شق رأسه الأيمن ثم حولت إلى شقه الأيسر فغسلت شق رأسه الأيسر فبقي أثر قدميه عليه ، فقال لها : إذا جاء زوجك فأقرئيه السلام وقولي له قد استقامت عتبة بابك ، فلما جاء إسماعيل ، وجد ريح أبيه فقال لامرأته : هل جاءك أحد ؟ قالت : نعم شيخ أحسن الناس وجها وأطيبهم ريحا ، وقال لي كذا وكذا وقلت له كذا وكذا ، وغسلت رأسه وهذا موضع قدميه فقال : ذاك إبراهيم النبي أبي ، وأنت العتبة أمرني أن أمسكك .

இப்ராஹீம் (அலை) அவர்கள் பாலைவனத்தில் தாம் விட்டுச் சென்ற (தம் மனைவி மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துக் கொள்வதற்காக சில காலம் கழித்து (திரும்பி) வந்தார்கள்.

அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை. ஆகவே இஸ்மாயீல் மனைவியிடம் இஸ்மாயீலை குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர் எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார்.

பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர் நாஙகள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம் என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிட்டார்.

உடனே இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் சொல். மேலும், அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி சொல் என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது எவரோ வந்து சென்றிருப்பது போல் உணர்ந்தார்கள்.

ஆகவே எவரேனும் உங்களிடம் வந்தார்களா என்று கேட்டார்கள். அவருடைய மனைவி ஆம் இப்படிப்பட்ட (அடையாளஙகள் கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார் எங்களிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விவரம்) தெரிவித்தேன்.

என்னிடம் உஙகள் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் அவரிடம் நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம் என்று சொன்னேன் என்று பதிலளித்தார்.

அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா என்று கேட்க, அதற்கு அவர் ஆம் உங்களுக்கு தன் சார்பாக சலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு உன் நிலைப்படியை மாற்றிவிடு என்று (உஙகளிடம் சொல்லச்) சொன்னார் என்று பதிலளித்தார்.

இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தைதான். உன்னைவிட்டு பிரிந்து விடும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார். ஆகவே நீ உன் (தாய்) வீட்டாருடன் போய் சேர்ந்துக்கொள் என்று சொல்லிவிட்டு உடனே அவரை விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார்.

பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவன் நாடிய காலம் வரை அவர்களை (ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்.

அதன் பிறகு அவர்களிடம் சென்றார். ஆனால் இஸ்மாயீல் (அலை) அவர்களை (இந்த முறையும்) அவர் (அஙகு) காணவில்லை. ஆகவே இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவர் எங்களுக்காக வருமானம் தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் நீஙகள் எப்படியிருக்கிறீர்கள் (நலம்தானா) என்று கேட்டார்கள். மேலும் அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார். அதற்கு இஸ்மாயீலின் துணைவியார் நாஙகள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமாக அல்லாஹ்வைப் புகழ்ந்தார்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் உஙகள் உணவு எது என்று கேட்க அவர் இறைச்சி என்று பதிலளித்தார். அவர்கள் உஙகள் பானம் எது என்று கேட்க தண்ணீர் என்று பதிலளித்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும் தண்ணீரிலும் பரக்கத்தை அருள் வளத்தை அளிப்பாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தாணியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் அருள் வளம் தரும்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித்திருப்பார்கள். 

ஆகவே தான் மக்காவைத் தவிர பிற இடஙகளில் அவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாக பயன்படுத்தி வருபவர்களுக்கு அவை ஒத்தக்கொள்வதே இல்லை என்று சொன்னார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவன் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் உரை. அவரது (வீட்டு) நிலைப்படியை உறுதிபடுத்தி வைக்கும்படி சொல் என்று சொன்னார்கள்.

இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்த போது உங்களிடம் எவரேனும் வந்தார்களா என்று கேட்க அவருடைய மனைவி ஆம் எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார் என்று (சொல்லிவிட்டு) அவரை புகழ்ந்தார். (பிறகு தொடர்ந்து) என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் நாங்கள் நலமுடன் இருக்கிறோம் என்று தெரிவித்தேன் என்று பதில் சொன்னார்.

அவர் உனக்கு அறிவுரை ஏதேனும் சொன்னாரா என்று இஸ்மாயீல் (அலை) கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் உஙகளுக்கு சலாம் உரைக்கிறார் உஙகள் நிலைப்படியை உறுதிப்பபடித்திக் கொள்ளும்படி உஙகளுக்கு கட்டளையிடுகின்றார் என்று சொன்னார்.

இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தை நீ தான் அந்த நிலைப்படி உன்னை (விவாகரத்து செய்யாமல்) அப்படியே மணைவியாக வைத்தக் கொள்ளும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளான் என்று சொன்னார்கள். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ் நாடிய காலம் வரை அவர்களை(ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்கள்.                             ( நூல்: தஃப்ஸீர் அல் பஃக்வீ, அத்தபரீ )

இஸ்மாயீல் {அலை} அவர்களின் முதல் மனைவியிடம் 1. முழுக்க முழுக்க அல்லாஹ்வைச் சார்ந்திருத்தல். 2. அல்லாஹ் வழங்கியதைக் கொண்டு போது மாக்கிக் கொள்தல், 3. குடும்ப இரகசியத்தை பேணிப் பாதுகாத்தல் ஆகிய ஒரு முஸ்லிமுக்கான இலக்கணப் பண்புகள் இல்லாததால் விவாகரத்துச் செய்யச் சொன்னார்கள்.

அதே நேரத்தில், இந்த அத்துனை அம்சங்களும் ஒருங்கே பெற்றிருந்த இரண்டாவது மனைவியை இறுதி வரை தம்மோடு வைத்துக் கொள்ளுமாறு தங்களது மகனார் இஸ்மாயீல் {அலை} அவர்களுக்கு ஆணையிட்டார்கள் இப்ராஹீம் {அலை} அவர்கள்.

சொந்த வாழ்வானாலும் ஒரு முஸ்லிம் தன் அடையாளத்தை இழக்கச் செய்யும் எந்த ஒரு செயலையும் அங்கீகரிக்கக் கூடாது என்பதை இந்த வரலாறு உணர்த்துகின்றது.

2. வேறெந்த முஸ்லிமும் முஸ்லிம் எனும் அடையாளத்தை இழந்து விடுவதை ஒரு முஸ்லிம் அங்கீகரிக்க மாட்டார்.

وجاء رجل شاب فقال: أبشر يا أمير المؤمنين ببشرى الله لك، من صحبة رسول الله صلى الله عليه وسلم، وقدم في الإسلام ما قد علمت، ثم وليت فعدلت، ثم شهادة
فلما أدبر إذا إزاره يمس الأرض
 قال
 ردوا علي الغلام، قال: ابن أخي ارفع ثوبك، فإنه أنقى لثوبك، وأتقى لربك

உமர் (ரலி) அவர்கள் அபூலுஃலுவுல் ஃபைரோஸீ என்பவனால் குத்தப்பட்டு, ஷஹாதத்தின் விளிம்பில் இருக்கும் போது ஒரு இளைஞர் உமர் (ரலி) அவர்களின் அருகே வந்து அமர்ந்தார்.

”இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உமர் (ரலி) அவர்களே! உங்களுக்கு சோபனம் உண்டாகட்டும்!

நபி {ஸல்} அவர்களின் தோழமையப் பெற்றிருக்கின்றீர்கள்! இஸ்லாத்தை அதன் ஆரம்ப காலத்திலேயே ஏற்றுக் கொண்டீர்கள்! முஸ்லிம்களின் ஆட்சியாளராக அரியணையில் அமர்ந்து நல்லாட்சி வழங்கினீர்கள்! உயரிய ஷஹாதா வீரமரணத்தை நோக்கி நீங்கள் வீற்றிருக்கின்றீர்கள்! இவைகள் எல்லாம் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய சோபனங்களே!” என்று கூறி விட்டு அந்த இளைஞர் அங்கிருந்து விடை பெற்றுச் செல்கின்றார்.

நடந்து செல்லும் அந்த இளைஞரின் கீழாடை தரையைத் தொட்டவாறே சென்றதைக் கண்டதும் உமர் (ரலி) அவர்கள் அந்த இளைஞரை என்னிடம் அழைத்து வாருங்கள் என்றார்கள்.

அந்த இளைஞர் அருகே வந்ததும், என் சகோதரனின் மகனே! உன் கீழாடையை உயர்த்திக் கட்டுவாயாக! உன் ஆடையை தூய்மையாக வைத்துக் கொள்வாயாக! உமதிறைவனை பயந்து வாழ்வீராக!” என்று கூறினார்கள்.

( நூல்:ஸஃகத்துஸ் ஸில்ஸால் லிநஸஃபி அபாதீலுர் ரஃப்ளி வல் இஃதிஸால் )

இக்கட்டான நிலைமையில், உயிர் போகும் அந்த தருணத்திலும் கூட ஒரு முஸ்லிம் தன் அடையாளத்தில் இருந்து அகன்று விடக்கூடாது என்று பதறித் துடித்தார்கள் உமர் (ரலி) அவர்கள்.

அனைத்து நபிமார்களும் தங்களை முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்துவதையே விரும்பியிருக்கின்றார்கள் என்று குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் குறிப்பிடுவதைப் பார்க்க முடிகின்றது.

எனவே, முஸ்லிம்களாக வாழ்வோம்! முஸ்லிம் எனும் அடையாளத்தோடு வாழ்வோம்! முஸ்லிம் எனும் அடையாளத்தை இழக்கச் செய்யும் எதையும் அணுவளவேனும் வாழ்க்கையில் அங்கீகரிக்காமல் வாழ்வோம்! அதற்காக உயிர் போனாலும் சரியே!!!

யாஅல்லாஹ்! எங்களை முஸ்லிம்களாக வாழச்செய்வாயாக! முஸ்லிம்களாகவே மரணிக்கச்செய்வாயாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

6 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ் காலத்திற்கேற்ற பதிவு

    ReplyDelete
  2. ماشاء الله ! ماشاء الله !

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத். காலத்திற்கேற்அருமையான பதிவை வழங்கியுள்ளீர்கள் جزاكم الله خيرا كثيرا

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத். காலத்திற்கேற்அருமையான பதிவை வழங்கியுள்ளீர்கள் جزاكم الله خيرا كثيرا

    ReplyDelete