Thursday 8 December 2016

மரணம்! அது தரும் பாடங்களும்… படிப்பினைகளும்…



மரணம்! அது தரும் பாடங்களும்படிப்பினைகளும்




ஒருவருக்கு ஏற்படும் மரணம் என்பது இன்னொருவருக்கோ, ஒரு குடும்பத்திற்கோ, ஒரு சமூகத்திற்கோ, ஒரு சமுதாயத்திற்கோ சொல்கிற செய்திவாழ்ந்தால் என்னைப் போல் வாழ்! என்றோ, அல்லது ஒரு போதும் என்னைப் போல் வாழ்ந்து விடாதே! என்றோ இவ்விரண்டில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும்.

நாளை நம்முடைய மரணமும் உலக சமூகத்திற்கு இவ்விரண்டில் ஏதாவது ஒன்றைத் தான் சொல்லவிருக்கின்றது.

மாநபி {ஸல்} அவர்கள்மரணம் என்பது ஓர் மௌன உபதேசியாகும்என்று கூறினார்கள்.

எப்படியானவர்களையும் மாற்றவல்ல ஆயுதமான உபதேசத்தை மரணத்தோடு மாநபி {ஸல்} அவர்கள் ஒப்பிட்டுக் கூறியதன் அவசியத்தை நாம் சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்!

ஆயிரமாயிரம் வார்த்தைகள், நூல்கள் உண்டு பண்ணாத தாக்கத்தை சில போது ஒரு சில வார்த்தைகளைக் கொண்ட உபதேசம் மனிதனிடம் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தி விடும்.

அது போன்றே ஒரு மனிதனின் மரணம் அது பற்றி பேசுகிற போதோ, கேள்வி படுகிற போதோ, அதைப் பார்க்கிற போதோ ஒரு நொடியில் மனித வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திடும், புரட்டிப் போட்டு விடும் ஆற்றல் உண்டு என்பதைத் தான் மாநபி {ஸல்} அவர்களின் அழகிய மொழி நமக்கு உணர்த்துகின்றது.

தமிழகத்தில் ஒரு மௌனம் நிலவிக்கொண்டிருக்கின்றது. அந்த மௌனத்திற்கு பின்னால் ஒரு ஆளுமையின் மரணம் நிகழ்ந்திருக்கின்றது என்பதை நாம் எல்லாம் அறிவோம்.

ஆம்! தமிழகத்தின் முதலமைச்சர் மரணம் அடைந்திருக்கின்றார், குடிமக்கள் ஆட்சியாளர் என்கிற அடிப்படையிலான தொடர்பு நமக்கும், அவருக்கும் இடையே இருக்கின்றது.

உலகிலேயே மிக உயரிய மருத்துவமனையின், மிக உயரிய மருத்துவ உபகரணங்களின் துணை கொண்டு, மிக உயரிய மருத்துவ சிகிச்சைப் பிரிவில், மிக உயரிய மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் சுமார் 75 நாட்களாக போராடி இறுதியாக அங்கே மரணம் நிகழ்ந்திருக்கிறது.

கடைசி நிமிடம் வரை மதங்களைக் கடந்து, சமயங்களைத் தாண்டி பிரார்த்தனைகள், சடங்குகள், வழிபாடுகள், நேர்த்திக் கடன்கள், லட்சக் கணக்கில், அல்ல கோடிக்கணக்கில் செலவுகள் செய்தும் உயிரை உடலோடு தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

முதலமைச்சரின் மரணம் மாத்திரமல்ல. பொதுவாக, நம்மைச் சுற்றி யார் மரணம் அடைந்தாலும் அங்கிருந்து இறைநம்பிக்கையாளர்களாகிய நாம் பெற வேண்டிய பாடங்களும், அங்கே குவிந்து கிடக்கிற படிப்பினைகளும் ஏராளம், தாராளம்.

வாருங்கள்! மரணம்!! அது தரும் பாடங்களும்அங்கே குவிந்து கிடக்கிற படிப்பினைகளும் என்னவென்பதை பார்த்து விட்டு நம் மரணமும் நல்லதாக அமைய முயற்சிப்போம்!

பெற வேண்டிய பாடங்கள்….

1. ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும்…

நபி ஸல் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் வலியுறுத்திச் சொன்ன ஓர் அம்சம் இருக்குமானால் அது ஆரோக்கியம் எனும் அருட்கொடை குறித்து தான்.

روى الترمذي في سننه من حديث رفاعة بن رافع قال: قام أبوبكر الصديق على المنبر، ثم بكى فقال: قام رسول الله -صلى الله عليه وسلم- عام الأول على المنبر ثم بكى، فقال: "سلوا الله العفو و العافية ، فإن أحدًا لم يعط بعد اليقين خيرًا من العافية".

நீங்கள் லாஇலாஹ இல்லல்லாஹீ என்று கூறும் வார்த்தைக்குப் பிறகு ஆரோக்கியத்தைத் தவிர வேறு எதனையும் சிறந்த ஒன்றாக உங்களுக்கு வங்கப்பட வில்லை. எனவே நீங்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை கேளுங்கள் என்று நபி {ஸல்} அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்று அபூபக்கர் சித்தீக் (ர­லி) அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )

மக்களுக்கு கட்டளையிட்டது மட்டும் நின்று விடாமல் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை கேட்டுள்ளார்கள்.

اللهم إني أسألك العافية من كل بلية ، وأسألك تمام العافية ، وأسألك دوام العافية ، وأسألك الشكر على العافية ،

யாஅல்லாஹ்! உன்னிடம் நான், அனைத்து வகையான சோதனைகளின் போதும் ஆரோக்கியத்தைக் கேட்கிறேன்! நிறைவான ஆரோக்கியத்தைக் கேட்கிறேன்! நீடித்த ஆரோக்கியத்தைக் கேட்கிறேன்! நீ வழங்கிய ஆரோக்கியத்திற்காக உனக்கு நன்றி செலுத்தும் நற்பண்பை உன்னிடம் கேட்கிறேன்!” என்று மாநபி {ஸல்} அவர்கள் ஓதியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒர் அறிவிப்பை இமாம் திர்மிதீ (ரஹ்) அவர்கள் தங்களின் நவாதிருல் உஸூலில் பதிவு செய்திருக்கின்றார்கள்.

     اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி­) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “யா அல்லாஹ் உன்னுடைய அருள் என்னை விட்டு நீங்குவதில் இருந்தும், நீ எனக்கு கொடுத்த ஆரோக்கியம் என்னிடம் இருந்து விலகுவதை விட்டும், உன்னுடைய தண்டனை திடீரென்று வருவதையும், உன்னுடைய அனைத்து கோபத்தை விட்டும் நான் பாதுகாப்பு தேடுகிறேன் என்று பிரார்த்தனை செய்வார்கள். இது அவர்களின் (வழமையான) பிரார்த்தனைகளில் ஒன்றாகும். ( நூல்: முஸ்லிம் )


நபி {ஸல்} அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு நபித்தோழரை நலம் விசாரிக்கச்சென்றார்கள். அவர் நோயினால் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் நீர் இறைவனிடம் ஆரோக்கியத்தை கேட்டு பிரார்த்தனை செய்யக்கூடாதா? என்று கேட்டார்கள். அதற்கவர், ”நபிகளாரின் முன்னிலையில் யா அல்லாஹ்! மறுமையில் என்னை நீ தண்டிப்பதாக இருந்தால் இவ்வுலகத்திலேயே அதற்காக தண்டனையை வழங்கிவிடு!” என்று பிரார்த்தனை செய்தார்.

அப்போது, நபி (ஸல்) அவர்கள் ”அல்லாஹ் உமக்கு இவ்வுலகத்திலேயே தண்டனையை வழங்கிவிட்டால் நீர் தாங்கிக் கொள்ள முடியாது. எனவே, யா அல்லாஹ் இவ்வுலத்திலும் எனக்கு நன்மையை வழங்குவாயாக! மறு உலகத்திலும் எனக்கு நன்மையை வழங்குவாயாக என்று கேட்பீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதி )

ஆரோக்கியத்தோடு இருக்கிற போது தான் ஒர் இறைநம்பிக்கையாளனாக படைத்த ரப்புக்கு செய்யவேண்டிய கடமைகளையும், சக அடியார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், தனக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் முழுமையாக செய்ய முடியும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ

மேலும், அளப்பரிய அல்லாஹ்வின் நேசத்தையும் பெற முடியும். ஏனெனில், அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:  “இறைநம்பிக்கையோடு வாழ்கிற பலகீனமான அடியாரை விட சிறந்தவரும், அல்லாஹ்வின் நேசத்திற்குரியவரும் எவர் என்றால் ஆரோக்கியத்தோடு வாழும் இறைநம்பிக்கையாளரே!” என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல் முஸ்லிம் )

2. நோய்வாய்ப்பட்டால் அதில் பொறுமையும், சகிப்புத்தன்மையும் வேண்டும்

عمران بن حصين
أسلم عام خيبر، وغزا مع رسول الله صلى الله عليه وسلم غزوات، بعثه عمر بن الخطاب إلى البصرة، ليفقه أهلها وكان من فضلاء الصحابة، واستقضاه عبد الله بن عامر على البصرة، فأقام قاضياً يسيراً، ثم استعفي فأعفاه.
قال محمد بن سيرين: لم نر في البصرة أحداً من أصحاب النبي صلى الله عليه وسلم يفضل على عمران بن حصين.
وكان مجاب الدعوة وكان في مرضه تسلم عليه الملائكة، فاكتوى ففقد التسليم، ثم عادت إليه، وكان به استسقاء فطال به سنين كثيرة، وهو صابر عليه، وشق بطنه، وأخذ منه شحم، وثقب له سرير فبقي عليه ثلاثين سنة، ودخل عليه رجل فقال: يا أبا نجيد، والله إنه ليمنعني من عيادتك ما أرى بك! فقال: يا ابن أخي، فلا تجلس، فوالله إن أحب ذلك إليّ أحبه إلى الله عز وجل.
وحقق ايمان عمران بن حصين أعظم نجاح، حين أصابه مرض موجع لبث معه ثلاثين عاما، ما ضجر منه ولا قال: أفّ..
بل كان مثابرا على عبادته قائما، وقاعدا وراقدا..
وكان اذا هوّن عليه اخوانه وعوّاده أمر علته بكلمات مشجعة، ابتسم لها وقال:
" ان أحبّ الأشياء الى نفسي، أحبها الى الله"..!!
وكانت وصيته لأهله واخوانه حين أدركه الموت:
" اذا رجعتم من دفني، فانحروا وأطعموا"..

இம்ரான் இப்னு ஹஸீன் (ரலி) அவர்கள் நபித்தோழர்களில் நபிகளாரின் தனிப் பெரும் பாசத்திற்குரிய ஒருவர். கைபரின் போது இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

துஆ ஒப்புக்கொள்ளப்படும் தூய நபர்களில் ஒருவராகவும் விளங்கினார்கள்.
கைபருக்குப் பின் நடந்த அனைத்துப் போர்களிலும் நபி {ஸல்} அவர்களோடு ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள்.

      அவர்களுக்கு வயிற்றில் ஒரு கட்டி இருந்தது. அக்கட்டியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினார்கள். முறையான மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் முடக்கு வாதத்தால் முடங்கிப் போனார்கள்.

      கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அவர்கள் படுத்தப் படுக்கையாய் ஆனார்கள். என்ற போதிலும் இறைவழிபாட்டில் சிறிதேனும் அவர்கள் விலகிட வில்லை.

      ஒரு நாள் அன்னாரை நலம் விசாரிக்க வந்த ஒருவர், “அபா நுஜைதே! உம்மை நலம் விசாரிக்க ஒவ்வொரு நாளும் வரவேண்டும் என நினைப்பேன். ஆனால், மக்கள் உன் நிலை குறித்து என்னிடம் சொன்ன போது இந்த நிலையில் உம்மைப் பார்க்கும் சக்தி எமக்கு வரவில்லை. இப்போது கூட மனதைக் கல்லாக்கிக் கொண்டு தான் உம்மை நலம் விசாரிக்க வந்தேன்என்று கூறியவாறு அமர்ந்தார்கள்.

      அப்போது, இம்ரான் பின் ஹஸீன் (ரலி) அவர்கள்தோழரே! நீர் அமரவேண்டாம்! அல்லாஹ் நான் எப்படி இருக்க வேண்டும் என விரும்புகின்றானோ, அவ்வாறே நானும் இருக்க விரும்புகின்றேன். என்னை இப்படிப் பார்க்க விரும்புகின்றான். நான் அதை மனப்பூர்வமாக பொருந்திக்கொண்டேன்என்று பதில் கூறினார்கள்.

      فدخل عليه بعض الصحابة فرأوه فبكوا، فنظر إليهم وقال: لم تبكون؟! قالوا: لحالك، وما أنت عليه من هذا الابتلاء؛ فقال عمران بن حصين -رضي الله عنه-: "شيء أحبه الله أحببته، أنتم تبكون، أما أنا فراضٍ، أحب ما أحبه الله، وأرضى بما ارتضاه الله تعالى، وأسعد بما اختاره الله"، ثم قال لهم: "والله أكون على حالي هذا فأحس بتسبيح الملائكة وأحس بزيارة الملائكة، فأعلم هذا الذي بي ليس عقوبة وإنما يختبر رضائي عنه،

       இன்னொரு முறை அவர்களை சந்திக்கச்சென்ற சில ஸஹாபாக்கள் அவர்களின் நிலை கண்டு அழுதபோது, ஏன் அழுகிறீர்கள்? அல்லாஹ் பிரியப்பட்டதை நான் பிரியப்பட்டுவிட்டேன். அவன் திருப்திபட்டதை நான் திருப்திபட்டு விட்டேன். என்று சொன்னதுடன், நீங்கள் என்னை இந்த நிலையை பரிதாபமாகக் காண்கிறீர்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! இதே நிலையில் இருக்கவே நான் விரும்புகின்றேன். ஏனெனில், நான் மலக்குமார்களின் தஸ்பீஹை கேட்கிறேன். அவர்களை சந்திக்கிறேன், அவர்களின் ஸலாமிற்கு பதில் கூறுகின்றேன், நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள்! அல்லாஹ் எனக்கு வழங்கிய தண்டனையாக இதை நான் கருத வில்லை, மாறாக, அவனிம் முடிவை நான் திருப்தியோடு ஏற்றுக் கொள்கின்றேனா என்பதை சோதிப்பதற்காக எனக்கு இதை வழங்கியதாக நான் கருதுகின்றேன்என்றும் கூறினார்கள்.

             ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}...., உஸ்துல் ஃகாபா )

3. இறந்தால் இப்படித்தான் இறக்க வேண்டும் என்று பிறரால் விரும்பப்படுகிற அளவுக்கு நம்முடைய மரணமும் அமைய வேண்டும் ….

وفي ليلة من الليالي نام هو والصحابة، وكانوا في غزوة في سبيل الله، قال ابن مسعود - رضي الله عنه وأرضاه -: قمت آخر الليل فنظرت إلى فراش الرسول - صلى الله عليه وسلم - فلم أجده في فراشه، فوضعت كفي على فراشه فإذا هو بارد، وذهبت إلى فراش أبي بكر فلم أجده على فراشه، فالتفت إلى فراش عمر فما وجدته، قال: وإذا بنور في آخر المخيم، وفي طرف المعسكر، فذهبت إلى ذلك النور ونظرت، فإذا قبر محفور، والرسول - عليه الصلاة والسلام - قد نزل في القبر، وإذا جنازة معروضة، وإذا ميت قد سجي في الأكفان، وأبو بكر وعمر حول الجنازة، والرسول - صلى الله عليه وسلم - يقول لأبي بكر وعمر: « دليا لي صاحبكما».

فلما أنزلاه نزله - صلى الله عليه وسلم - في القبر، ثم دمعت عيناه - صلى الله عليه وسلم - ثم التفت إلى القبلة ورفع يديه وقال: «اللهم إنّي أمسيت عنه راض فأرض عنه، اللهم إنّي أمسيت عنه راض فارض عنه».
قال: قلت من هذا؟

قالوا: هذا أخوك عبد الله ذو البجادين مات في أول الليل.

قال ابن مسعود: فوددت والله أني أنا الميت



இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

தபூக் யுத்தத்திற்காக எதிரிகளின் இருப்பிடத்திற்கே நபித்தோழர்களை அண்ணலார் அழைத்துச் சென்றிருந்த தருணம் அது.

முதல் நாள் இரவு திடீரென நான் கண்விழித்தேன். அண்ணலாரின் கூடாரத்தில் அண்ணலாரைப் பார்த்தேன். ஆனால், நபி {ஸல்} அவர்கள் அங்கு இல்லை.

உடனடியாக நபி {ஸல்} அவர்களைத் தேடியவாறு அபூபக்ர் (ரலி) அவர்களின் கூடாரத்திற்கு வந்தேன். அங்கு அண்ணலாரும் இல்லை, அபூபக்ர் (ரலி) அவர்களும் இல்லை.

அங்கிருந்து நேராக உமர் (ரலி) அவர்களின் கூடாரத்திற்குச் சென்று தேடினால், அங்கு உமர் (ரலி) அவர்களும் இல்லை.

மூவரையும் தேடிக் கொண்டிருக்கும் போது படை வீரர்கள் முகாமிட்டிருந்த பகுதியின் எல்லைப் பகுதியிலிருந்து நெருப்பு மூட்டப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

அதன் அருகே விரைவாகச் சென்று பார்த்தேன். அங்கு அண்ணலார் {ஸல்} அவர்களும், அபூபக்ர்(ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களும் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன்.

அங்கே, கப்ர் ஒன்று தோண்டப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் அருகே ஒரு ஜனாஸாவும் வைக்கப்பட்டிருந்தது.

அப்போது, நான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் இறந்து போன அந்த மனிதர் யார்? என்று வினவினேன்.

அதற்கு அண்ணல் நபி {ஸல்} அவர்கள் உமது தோழர் அப்துல்லாஹ் துல் பஜாதைன் (ரலி) அவர்கள் தான் என்று கூறினார்கள்.

மாநபி {ஸல்} அவர்கள் மண்ணறைக்குள் இறங்கினார்கள். பின்னர் அப்துல்லாஹ் துல் பஜாதைன் அவர்களின் உடலை குழிக்குள் இறக்குமாறு கூறினார்கள்.

பின்னர், மண்ணறைக்குள் நின்றவாறு வானை நோக்கி கையை உயர்த்தியாஅல்லாஹ்! இன்று மாலை நேரத்தை அடைகிற போது இந்த அப்துல்லாஹ் துல் பஜாதைன் அவர்கள் வாழ்வை  நான் பொருந்திக் கொண்டேன்! உன்னுடைய தூதராகிய நான் பொருந்திக் கொள்கிற நிலையில் அவர் இவ்வுலகில் வாழ்ந்தார்! எனவே யாஅல்லாஹ் நீயும் அவரைப் பொருந்திக் கொள்வாயாக!” என்று இருமுறை துஆ செய்தார்கள். பின்னர் தாங்களே நல்லடக்கமும் செய்தார்கள்.

அப்போது நான் இறந்து போன அப்துல்லாஹ் துல் பஜாதைனாக இருந்திருக்கக் கூடாதா என ஏங்கினேன்.”

                                   ( நூல்: அல் இஸ்தீஆப், உஸ்துல்ஃகாபா )

4. வாழும் போதே புகழோடும், வாழ்ந்து மரணித்த பின்னரும் அப்புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் அளவுக்கான வாழ்க்கை அமைய வேண்டும் என ஆசை வேண்டும்.

இப்ராஹீம் {அலை} அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது….

وَاجْعَلْ لِي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ

 “இறைவா! பிற்கால மக்களிடையே எனக்கு உண்மையான புகழை வழங்குவாயக!” என்று பிரார்த்தித்ததை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

மேலும், மறுமை நாளில் நடைபெறும் நிகழ்வுகளைக் கூறும் போது….

يُنَبَّأُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ

“அந்த நாளில் மனிதனுக்கு அவன் மரணத்திற்கு முன் செய்த, அவன் மரணத்திற்கு பின் தனக்காக செய்து வைத்து விட்டு வந்த அனைத்துச் செயல்களும் எடுத்துக் காட்டப்படும்”

عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ

“ஒவ்வொரு மனிதனும் தான் முன்பும் பின்பும் செய்த செயல்கள் அனைத்தையும் நன்கு அறிந்து கொள்வான்”.

என்று கூறுகின்றான். மேற்கூறிய இறைவசனங்களுக்கு விரிவுரை தருகிற அறிஞர் பெருமக்கள் ஒரு மனிதன் மரணத்திற்கு பின்னரும் அவனுக்காக நாளை மறுமையில் அவனை ஈடேற்றம் பெறச் செய்கிற நல்லறங்களை மேற்கொண்டு, புகழ்மிக்க வாழ்க்கையை வாழவேண்டும் என்று” விளக்கம் தருகிறார்கள்.

5. மரணத்தை எந்த உயரிய உபகரணத்தின் துணை கொண்டும் வெல்ல முடியாது எனும் நம்பிக்கை ஆளமாகவும், எந்நேரத்திலும் நடக்கும் என்கிற நம்பிக்கையோடும் இருக்க வேண்டும்.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம்மை மரணம் வந்து அடைந்தே தீரும்.

இது வரை உலகில் எவரும் மரணத்தில் இருந்து தப்பித்து விட்டதாக செய்தி கிடையாது.

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ

அல்லஹ் கூறுகின்றான்: “ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்”.                                                    ( அல்குர்ஆன்: 3: 185 )

أَيْنَمَا تَكُونُوا يُدْرِكْكُمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ

அல்லாஹ் கூறுகின்றான்: “நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை வந்து அடைந்தே தீரும். நீங்கள் உறுதி மிக்க கோட்டைகளில் இருந்தாலும் சரியே!”

                                                     ( அல்குர்ஆன்: 4: 78 )

قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ (8)

நபியே அம்மக்களிடம் நீர் கூறுவீராக! நீங்கள் மரணத்தை விட்டும் விரண்டோடிக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால், நிச்சயம் அந்த மரணம் உங்களை ஒரு நாள் தழுவியே தீரும்”.                                   ( அல்குர்ஆன்: 62: 8 )

எனவே, நாம் ஒவ்வொருவரும் நிச்சயமாக ஒரு நாள் மரணத்தை தழுவ இருக்கின்றோம். இப்போது நாம் அமர்ந்திருக்கிற இதே பள்ளிவாசலிலோ, அல்லது இது போன்றதொரு பள்ளிவாசலிலோ நம்முடைய உடலை கஃபன் செய்து இறுதி பிரார்த்தனைக்காக எடுத்து வர இருக்கின்றார்கள்.

6. மாற்றுக் கருத்து கொண்டவர்கள், மாற்றுக் கொள்கை கொண்டவர்கள் மரணத்தை தழுவினால் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
فلما رأى النبي - صلى الله عليه وسلم
 عكرمة وثب إليه ، وما على النبي - صلى الله عليه وسلم ـ رداء ، فرحا بعكرمة
ثم جلس رسول الله - صلى الله عليه وسلم - فوقف بين يديه ، وزوجته منتقبة ، فقال: يا محمد إن هذه أخبرتني أنك أمنتني ، فقال رسول الله - صلى الله عليه وسلم
صدقت
 فأنت آمن
 فقال عكرمة
 فإلى ما تدعو يا محمد ؟
 قال
 ( أدعوك إلى أن تشهد أن لا إله إلا الله وأني رسول الله ، وأن تقيم الصلاة وتؤتي الزكاة ، وتفعل ، وتفعل ـ ، حتى عَدَّ خصال الإسلام..
فقال عكرمة
 والله ما دعوتَ إلا إلى الحق وأمرٍ حسن جميل ، قد كنتَ والله فينا قبل أن تدعو إلى ما دعوت إليه وأنت أصدقنا حديثا وأبرنا برا ..

ثم قال عكرمة
 فإني أشهد أن لا إله إلا الله ، وأشهد أن محمدا عبده ورسوله .. فسُرَّ بذلك رسول الله - صلى الله عليه وسلم -، ثم قال : يا رسول الله علمني خير شيء أقوله ، قال
 ( تقول أشهد أن لا إله إلا الله وأن محمد عبده ورسوله ) قال عكرمة
 ثم ماذا ؟ ، قال رسول الله - صلى الله عليه وسلم - : ( تقول أُشْهِد الله وأشهد من حضر أني مسلم مهاجر ومجاهد ) ، فقال عكرمة ذلك ..
فقال رسول الله
 ( لا تسألني اليوم شيئا أعطيه أحدا إلا أعطيتكه
 فقال عكرمة
 فإني أسألك أن تستغفر لي كل عداوة عاديتكها ، أو مسير وضعت فيه ، أو مقام لقيتك فيه ، أو كلام قلته في وجهك أو وأنت غائب عنه ، فقال رسول الله - صلى الله عليه وسلم
 اللهم اغفر له كل عداوة عادانيها ، وكل مسير سار فيه إلى موضع يريد بذلك المسير إطفاء نورك ، فاغفر له ما نال مني من عرض في وجهي أو أنا غائب عنه ) ..
فقال عكرمة
رضيت يا رسول الله ، لا أدع نفقة كنت أنفقها في صدٍ عن سبيل الله إلا أنفقتُ ضعفها في سبيل الله ، ولا قتالا كنت أقاتل في صد عن سبيل الله إلا أبليت ضعفه في سبيل الله .. ثم اجتهد في القتال حتى قتِل شهيدا (أي في يوم اليرموك) .. وبعد أن أسلم رد رسول الله - صلى الله عليه وسلم - امرأته له بذلك النكاح الأول .." .

وقد أخرج ابن عساكر عن عمرو
ابن دينار) قال : " .. لما قدم عكرمة بن أبي جهل المدينة ، اجتمع الناس ، فجعلوا يقولون : هذا ابن أبي جهل ، هذا ابن أبي جهل ! ، فقال رسول الله ـ صلى الله عليه وسلم ـ
 لا تؤذوا الأحياء بسبِّ الأموات ) ..
மக்கா வெற்றியின் போது நபி {ஸல்} அவர்களின் வருகையையும்,முஸ்லிம்களின் எழுச்சியையும் கண்டு பயந்துபோய் இக்ரிமா எமனுக்குச் சென்று விட்டார்.

இக்ரிமா வேறு யாருமல்ல. அபூஜஹ்லின் மகன், இவரும் தந்தையைப் போலவே இஸ்லாத்திற்கெதிராக கடும் பகமை கொண்டிருந்தார்.

இவரின் மனைவி உம்மு ஹக்கீம் பின்த் ஹாரிஸ் {ரலி} அவர்கள் எமனுக்குச் சென்று அழைத்து வந்தார்கள். பின்பு மாநபியின் சபைக்கு அழைத்து வந்தார்கள். தூரத்தில் இக்ரிமா வருவதைக் கண்ட பெருமானார் {ஸல்} அவர்கள் வெகு தூரத்திலிருந்து சிரமத்துடன் பயணித்து வரும் பயணியே, வாருங்கள்! தங்கள் வருகை நல்வரவாகட்டும்!என்று கூறி தம் அருகே அமர வைத்தார்கள்.

இக்ரிமா கேட்டார் இப்போது நான் என்ன சொல்ல வேண்டும்.?  நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: ஷஹாதத் சொல்லுங்கள். உடனடியாக ஷஹாதாவை மொழிந்து இக்ரிமா முஸ்லிமானார்கள். பின்னர் நபி {ஸல்} அவர்கள் இக்ரிமா.. உமக்கு என்ன வேண்டும் கேளுங்கள். எது கேட்டாலும் தருகிறேன்.என்றார்கள்.

இக்ரிமா {ரலி} அவர்கள் சொன்னார்கள்: அல்லாஹ்வின் தூதரே! ஆரம்பமாக என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். உங்கள் மீதான பகைமையால் உங்களை நான் கடுமையாக ஏசியிருக்கிறேன். போர்களில் கலந்து கொண்டு கண்மூடித்தனமாக நான் நடந்து கொண்டிருக்கிறேன். இவை அத்தனைக்காகவும் என்னை மன்னித்து விடுங்கள். 

அப்போது நபி {ஸல்} அவர்கள் தம் இரு கைகளையும் வானை நோக்கி உயர்த்தி யா அல்லாஹ்! இந்த இக்ரிமா எனக்கு எதிராக நடத்திய போருக்காக, என்மேல் கொண்டிருந்த பகைமைக்காக, என்னை ஏசியதற்காக, இவை அத்தனைக்காகவும் இவரை மன்னித்துவிடுஎன்று துஆ செய்தார்கள்.          

 இதனைக் கேட்ட இக்ரிமா {ரலி} அவர்கள்:   அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த மார்க்கத்தை தடுப்பதற்காக எவ்வளவு பொருளாதாரத்தை செலவு செய்தேனோ, அதைவிட பன்மடங்கு இந்த மார்க்கத்தின் உயர்விற்காக நான் செலவு செய்வேன்.

இந்த மார்க்கத்திற்கெதிராக எவ்வளவு போர்களில் நான் கலந்து கொண்டேனோ, அதைவிட பன்மடங்கு இந்த மார்க்கத்தின் உயர்விற்காக இறைவனின் பாதையில் நான் போர் செய்வேன்.என முக மலர்ச்சியோடு கூறினார்கள்.  

மாநபி {ஸல்} அவர்கள், இக்ரிமா {ரலி} அவர்கள் தம்மை நோக்கி சபைக்குள் நுழைகிற போதே அவரின் நோக்கத்தை அறிந்து கொண்டு அபூஜஹ்லின் மகன் இக்ரிமா நம்பிக்கை கொண்டவராக உங்கள் முன் வருகிறார். அவரைக் கண்டால் அவரின் தந்தையைக் குறித்து குறை கூறி விமர்சனம் செய்யாதீர்கள். இறந்து போன ஒருவரை ஏசினால் அது உயிருடன் இருப்பவருக்கு மனவேதனையையே தரும் என்றார்கள்.

                                                                   (  நூல்: இஸ்தீஆப், பாகம்:2, பக்கம்:269,270,271.   )

روى مُحَمَّد بن إسحاق عن نافع وزيد بن أسلم، عن ابن عُمر، وعن سعيد بن أبي المقبري، وابن المنكدر عن أبي هريرة، وعن عَمَّار بن ياسر، قالوا: قد قدمت دُرَّة بِنْت أبي لهب المدينة مهاجرةً، فنزلت في دار رافع بن المعلّي الزرقيّ، فقال لها نسوة جلسْنَ إليها من بني زريق: أنتِ ابِنة أبي لهب الذي يقول الله له: " تبّت يدا أبي لهب وتبّ " فما يغني عنكِ مهاجرتكِ؟ فأتت دُرَّة النَّبِيّ صلّى الله عليه وسلّم فذكرت له ما قلن لها فسكّنها وقال: " اجلسي " . ثم صلى بالناس الظهر، وجلس على المنبر ساعةً ثم قال: " أيها الناس، ما لي أُوذى في أهلي؟ فوالله إن شفاعتي لتنال بقرابتي حتى إن صُداءَ وحكماً وسلهماً لتنالها يوم القيامة وسِلْهَمُ في نسب اليمن " .

அண்ணல் நபிகளாரின் அவைக்கு அழுத வண்ணமாக ஓடோடி வருகின்றார் துர்ரா பின்த் அபூலஹப் (ரலி) என்ற பெண்மணி.

மிகவும் ஆர்வத்தோடு இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்ட பெண்மணிகளில் அவரும் ஒருவர்.

ஹிஜ்ரத் எனும் புனிதப் பயணத்தின் பதிவேட்டில் இடம் பெற்றவர்களில் அவரும் ஒருவர்.

அந்தப் பெண்மணியின் அழுகையைப் பார்த்து அண்ணலாரின் திரு முகம் கூட மாறிப் போனது.

காரணம் கேட்கின்றார்கள் நபிகளார். அந்தப் பெண்மணி அன்ஸாரிப் பெண்மணிகளில் பனீ ஸரீக் குடும்பப் பெண்கள் தன்னை சுடு வார்த்தைகளால் காயப் படுத்தி விட்டதாகஅழுது கொண்டே கூறினார்கள்.

அவர்களின் கரம் பற்றிப் பிடித்து, ஆறுதல் கூறி அமர வைத்தார்கள். அப்போது ளுஹர் தொழுகைக்கான நேரமாக அது இருந்தது.

துர்ரா (ரலி) அவர்கள் வேறு யாருமல்ல. அண்ணலாரின் மிக நெருங்கிய உறவினரான அபூ லஹபின் மகள் தான்.

இப்போது நமக்கு புலப்பட்டிருக்கும் பனூ ஸரீக் பெண்மணிகள் எத்தகைய வார்த்தைகளால் துர்ரா (ரலி) அவர்களைக் காயப் படுத்தியிருப்பார்கள் என்று.

ஆம்! இப்படிச் சொன்னார்களாம்: உமது தந்தை அபூலஹபின் கேட்டினாலும், உமது தாயின் தகாத செயலினாலும், அண்ணலாரின் மீது கொண்டிருந்த தீராத பகமையினாலும் அல்லாஹ் உமது தாயையும், தந்தையையும் சபித்து ஒரு சூராவையே தனது குர்ஆனில் இடம் பெறச் செய்துள்ளான். நீ ஹிஜ்ரத் செய்து எந்த பலனையும் அடையப் போவதில்லை என்று.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ளுஹர் தொழுகைக்குப் பின்னர், மிம்பரின் மீதேறிமக்களே! என் குடும்பத்தார்களின் விஷயத்தில் இப்படி இப்படியெல்லாம் பேசி என்னையும் என் குடும்பத்தாரையும் நோவினைப் படுத்தாதீர்கள்.என்று கூறினார்கள்.

பின்னர், துர்ரா (ரலி) அவர்களை தமதருகே அழைத்து எவர் உம்மை கோபப்படுத்துவாரோ, அவர் மீது அல்லாஹ்வும் கோபப்படுவான். நீ என்னைச் சார்ந்தவள். நான் உன்னைச் சார்ந்தவன்.என்று கூறினார்கள்.

பின்னர், இது பற்றி அறிந்த அப்பெண்மணிகள் தமது தவறை உணர்ந்து மிகவும் வருந்தினார்கள்.

                        ( நூல்: உஸ்துல் ஃகாபா, தபகாத் இப்னு ஸஅத், அல் இஸ்தீஆப். )

இஸ்லாத்தோடும், நபி {ஸல்} அவர்களோடும் முஸ்லிம்களோடும் கடுமையான முறையில் விரோதத்தை வெளிப்படுத்தியவர்களின் சந்ததிகளின் முன்னால் அவர்கள் மரணித்து நீண்ட காலங்கள் கழிந்த பின்னரும் கூட அவர்களின் வாழ்க்கை முறை குறித்து, விரோத மனப்பான்மை குறித்து விமர்சிக்க வேண்டாம் என்று கூறி மாநபி {ஸல்} அவர்கள் தடுத்திருக்கின்றார்கள்.

இன்னும் ஒரு படி மேலே சென்று அவர்கள் செய்த நல்லறங்களை நினைவு கூறி வாழ்த்தினார்கள் பெருமானார் {ஸல்} அவர்கள்.
سفانة بنت حاتم الطائي
الكريمة بنت الكريم
كان أبوها مضرب الأمثال في الكرم في الجاهلية، فلما ظهر الإسلام وانتشرت الفتوح، غزت خيلُ رسول اللَّه صلى الله عليه وسلم قبيلتها “طَـيِّئ”، وأخذوها بين مَنْ أخذوا من السبايا. وكانت امرأة بليغة عاقلة، مرّ عليها النبي صلى الله عليه وسلم فقالت له: يا رسول اللَّه! امْـنُنْ عَلَي، مَنَّ اللَّه عليك، فقد هلك الوالد، وغاب الوافد (تَنَصَّرَ أخوها وفرّ حتى كان قريبًا من أرض الروم، وكان ذلك قبل أن يُسلم ويَحْسُنَ إسلامه) ولاتُشَمِّتْ بى أحياء العرب، فإنى بنتُ سيد قومي، كان أبى يفك الأسير ويحمى الضعيف، ويَقْرِى (يكرم) الضيف، ويشبع الجائع، ويفرّج عن المكروب، ويطعم الطعام، ويفشى السلام، ولم يرد طالب حاجة قط، أنا بنت حاتم الطائي.
فقال لها رسول اللَّه صلى الله عليه وسلم: “يا جارية، هذه صفة المؤمن، لو كان أبوك مسلمًا لترحمنا عليه”. ثم قال لأصحابه: “خلوا عنها، فإن أباها كان يحب مكارم الأخلاق”. ثم قال لها: “فلا تعجلي حتى تجدي ثقة يبلغك بلادك، ثم آذنيني” [ابن هشام].
فلما قدم ركب من أهلها، أرادت الخروج معهم، وذهبت إلى رسول اللَّه صلى الله عليه وسلم تستأذنه، فأذن لها وكساها من أحسن ما عنده من الثياب، وجعل لها ما تركبه، وأعطاها نفقة تكفيها مؤنة السفر وزيادة.
ஸஃபானா நஜ்த் தேசத்தின் பெரும் கொடையாளர் ஹாதிம் தாயி அவர்களின் மகளார் இப்போது நபிகளாரின் முன்னால் கைதியாக பிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டு இருந்தார்.

ஸஃபானாவோடு, அவர்களின் கோத்திரத்தார் சிலரும் கைதிகளாக பிடிக்கப்பட்டு இருந்தனர். ஸஃபானா வின் சகோதரர் அதீ இப்னு ஹாதிம் முஸ்லிம்களின் படை தமது தேசத்திற்குள் நுழைவதை அறிந்ததும், ஸஃபானா வையும், தமது குடும்பத்தாரையும் விட்டு விட்டு ஓடிவிட்டார்.

அண்ணலார், மஸ்ஜிதுன் நபவீயில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட ஒரு குடிலைத் தாண்டி தமது இல்லத்திலிருந்து மஸ்ஜிதை நோக்கி சென்று கொண்டிருந்த போது, அல்லாஹ்வின் தூதரே! எனும் ஒரு குரல் அழைத்ததை கேட்கிறார்கள்.குரல் வந்த திசை நோக்கி பார்க்கின்றார்கள் அங்கே ஸஃபானா நின்று கொண்டிருந்தார்கள்.

தொடர்ந்தார் ஸஃபானா தமது பேச்சை, “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை இறந்து விட்டார். எங்களின் தலைவரோ எங்களை விட்டு ஓடிவிட்டார். தாங்கள் தான் என்மீது கருணை காட்ட வேண்டும்! என்று கூறி முடித்தார்.

நபிகளார் மௌனமாக சென்று விடுகின்றார்கள். மறு நாளும் அது போன்றே நடக்கிறது. மூன்றாம் நாளும் ஸஃபானா அழைக்க, அருகே வந்த அண்ணலார் ஆதரவாய் பார்க்கின்றார்கள்.

ஸஃபானா, ”அல்லாஹ்வின் தூதரே! இல்லாதோருக்கு உதவிகள் புரிந்தும், கஷ்டத்தில் சிக்கியவர்களை அதிலிருந்து காப்பாற்றியும், பலகீனமானவர்களை தூக்கிப் பிடித்தும், குடும்ப உறவுகளை பலப்படுத்தியும், பிரயாணிகளுக்கு உணவளித்தும், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து கொடுத்தும் வந்த ஒருவரான ஹாத்திம் தாயின் மகள் தான் நான். நீங்கள் எனக்கு கருணை காட்ட வேண்டும்” என்று வேண்டி நின்றார்கள்.

ஸஃபானாவின் பேச்சை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த அண்ணலார் உண்மையில் நீ உம் தந்தை செய்ததாகச் சொன்ன அனைத்து நற்காரியங்களும், இஸ்லாம் உயர்த்திக் கூறுகின்ற நற்காரியங்களே! அவை அனைத்தும் ஒரு முஃமின் செய்ய வேண்டிய காரியங்களே! உம் தந்தை மாத்திரம் முஸ்லிமாக இருந்திருப்பாரேயானால் இன்னும் பேருபகாரம் வழங்கப்பட்டிருப்பார்! உனக்கு எம் கருணையுண்டு! என்று கூறி விட்டு, தோழர்களை நோக்கி “ தோழர்களே! இவரின் தந்தை நற்குணங்களின் பிறப்பிடமாக இருந்து, நற்குணங்களை அதிகம் நேசித்து வாழ்ந்திருக்கின்றார்! ஆகவே, இவரை விடுதலை செய்து விடுங்கள்” என்று கூறினார்கள்.

சிறிது நேரத்தில், ஸஃபானா அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வீட்டின் முன் நின்று அண்ணலாரை அழைக்கின்றார்கள்.

வெளியில் வந்த அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் குடிமக்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் என் தந்தை உறங்கவே மாட்டார். அப்படிப் பட்ட நல்ல மனிதர் ஒருவரின் மகளான எனக்கு என்னை மட்டும் நீங்கள் விடுவித்ததில் எனக்கு எப்படி மகிழ்ச்சியாய் இருக்கும்? என் நாட்டு மக்களையும் நீங்கள் விடுதலை செய்ய வேண்டும்” என்று ஸஃபானா கூறினார்.

இது கேட்ட அண்ணலார், சிரித்தவாரே ஸஃபானாவின் கோத்திரத்தார் அனைவரையும் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார்கள்.

மேலும், ஸஃபானா விற்கு அணிய ஆடைகளையும், பயணிக்க வாகனமும், வழிச்செலவுக்கு பணமும் வழங்கி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கண்ணியப்படுத்தினார்கள்.

                          ( நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:272 )

இப்படியான, இன்னும் பல பாடங்களும், படிப்பினைகளும் நம் கண் முன்னே மரணம் என்கிற நிகழ்வு தந்து கொண்டிருக்கின்றது.

அல்லாஹ் நாம் பெறுகிற பாடங்களைக் கொண்டும், படிப்பினைகளைக் கொண்டும் வாழ்க்கையில் மாற்றத்தைத் தருவானாக! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

4 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்! பசியான நேரத்தில் பிடித்தமான உணவு கிடைத்தால் எவ்வளவு திருப்தியாக இருக்குமோ அது போன்று கால சூழ்நிலைக்கேற்ப பயான் குறிப்புகளை வழங்கி உதவியுள்ளீர்கள். جزاكم الله خيرا كثيرا يا أستاذ الكريم

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்! பசியான நேரத்தில் பிடித்தமான உணவு கிடைத்தால் எவ்வளவு திருப்தியாக இருக்குமோ அது போன்று கால சூழ்நிலைக்கேற்ப பயான் குறிப்புகளை வழங்கி உதவியுள்ளீர்கள். جزاكم الله خيرا كثيرا يا أستاذ الكريم

    ReplyDelete
  3. படிப்பினையூட்டக் கூடிய வரலாற்று தரவுகளுக்கு நன்றிகள். ஜஸாக் கல்லாஹ்

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ் மிக அற்புதமான பதிவு படிக்கும் போதே நல்லவர்களாக மரணிக்க வேண்டும் என்ற ஆசை தான் வருகிறது

    ReplyDelete