Monday 14 October 2013

உடமைகளும் தியாகமும்

உடமைகளும் தியாகமும்
அடுத்து புலனுக்கு எட்டுகிற நிதர்சனமானவைகளை தியாகம் செய்ய முன்வருமாறு அல்லாஹ் அழைக்கின்றான்.

இப்னு அப்தில் பர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒரு அனாதை வாலிபருக்கும் நபித்தோழர் அபூலுபாபா (ரலி) அவர்களுக்கும் ஒரு பேரீத்தமரம் சம்பந்தாக நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்த்து.
இறுதியாக நபி (ஸல்) அவர்களிடம் இந்த வழக்கு கொண்டு வரப்பட்டது.
ஆதாரங்களின் அடிப்படையில் அது அபூலுபாபா (ரலி) அவர்களுக்கு உரியது என நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். அதைக் கேட்ட அந்த வாலிபர் மிகவும் அழுதார், சோர்வடைந்தார்,
இதைக் கண்ணுற்ற மாநபி (ஸல்) அவர்களின் இதயம் இரக்கத்தால் சூழ்ந்த்து.
அபூலுபாபாவிடம் அந்த மரத்தை இந்த ஏழை வாலிபனுக்கு கொடுத்துவிடுங்கள் என்று மனித நேயப் பண்பு அடிப்படையில் கேட்டார்கள் நபி (ஸல்) அவர்கள்.
அபூலுபாபா (ரலி) அவர்கள் தர முடியாது என மறுத்துவிட்டார்கள்.

அந்த மரத்தை அவருக்கு கொடுத்துவிட்டீர்களென்றால் சுவனத்தில் அதற்குபகரமாக சுவையூட்டும் ஒரு மதுரமான கனி தரும் மரத்தைப் பெற்றுத்தர நான் பொருப்பேற்றுக் கொள்கிறேன் என்று மீண்டும் அபூலுபாபா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
இரண்டாம் முறையும் தரஇயலாது என மறுத்துவிட்டார்கள் அபூலுபாபா (ரலி) அவர்கள்.
இவையனைத்தையும் அங்கே இருந்து கண்ணுற்ற மற்றொரு நபித் தோழர் அபுத் தஹ்தாஹ் (ரலி) அவர்கள், நேராக அபூலுபாபா (ரலி) அவர்களிடம் சென்று உங்களின் அந்த மரத்தை என்னுடைய பேரீத்தமர தோட்டத்திற்கு பகரமாக விலைக்கு தர விரும்புவீர்களா? என்று கேட்டார் இதற்கு அபூலுபாபா (ரலி) அவர்கள் சரியென்று ஆமோதிக்கின்றார்கள்.
இப்போது, அபுத் –தஹ்தாஹ் (ரலி) அவர்கள் மகிழ்ச்சியோடு மாநபியை சந்தித்து நடந்த உரையாடலை சொல்லிவிட்டு இந்த ஏழை வாலிபருக்கு நான் அந்த பேரீத்த மரத்தை கொடுத்துவிட்டால், நீங்கள் அபூலுபாபாவிற்கு அறிவித்த அந்த நற்பேறு எனக்கும் கிடைக்குமா?
-என்று வினவியபோது ஆம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபுத் தஹ்தாஹ் (ரலி) அவர்கள் உஹதிலே ஷஹீதாக்கப்பட்டார்கள். அன்றைய தினத்தில் அன்னாரைப்பற்றி நபி (ஸல்) அவர்கள், எத்தனையோ சுவை தரும் மரங்கள் சுவனத்தில் அபுத்-தஹ்தாஹ் வின் வரவிற்காக காத்து நிற்கின்றன என்றார்கள்.
நூல்: இஸ்தீஆப் பாகம்:3, பக்கம்:102
சுவர்க்கத்தின் ஒரு மரத்திகாக சுமார் 100 பேரீத்த மரங்கள் கொண்ட தோட்டத்தை அபுத்-தஹ்தாஹ் (ரலி) தர முன்வந்தார்களென்றால்.....
அது எப்படி?
அல்லாஹ்விற்காக அர்ப்பணிப்பதினால் ஏற்படும் மாற்றத்தை முன்பொறுமுறை அபுத்-தஹ்தாஹ் (ரலி) அவர்கள் தம் வாழ்வினிலே அனுபவித்ததின் விளைவு.
ஆம்!
“அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுப்போர் (உங்களில்) யார் இருக்கிறார்கள்? (அப்படி கடன் கொடுத்தால்) அல்லாஹ் அதனை பன்மடங்காக அவர்களுக்குத் திருப்பிக் கொடுப்பான். அல்லாஹ் தான் (செல்வத்தை) குறைக்கவும், பெருக்கவும் செய்கின்றான்.

மேலும், நீங்கள் அவன் பக்கமே திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்
அல்-குர்ஆன்: 2 : 243
எனும் இறைவசனம் இறக்கியருளப்பட்டபோது சுமார் 600 பேரீத்த மரங்கள் கொண்ட பெரிய தோட்டத்தை இதோ அல்லாஹ்விற்காக கடன் தருகிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒப்படைத்த மாபெரும் தியாகத்திற்கு சொந்தக்கார்ர் தான் அபுத் – தஹ்தாஹ்(ரலி) அவர்கள்.
நூல்: தஃப்ஸீர், இப்னுகஸீர், பாகம் 1: பக்கம் 39
பொருளாதாரத்தை வளத்தை ஈட்டித் தருகிற உடமைகளை, செல்வத்தை அல்லாஹ் கைர் – சிறந்த்தென்றும், உலக வாழ்வின் அலங்காரம் என்றும் சொல்வான்
அத்தகைய அலங்காரத்தையும், சிறந்த்தையும் இழக்க, அர்ப்பணிக்க முன்வர மாபெரும் இதயம் வேண்டும் அது அங்கிருந்த்து, அபுத் – தஹ்தாஹ் இடம் இருந்த்து.

இன்றைய சூழலில் பேணுதலானவர்களாகவும், வணக்கசாலிகளாகவும் அறியப்படுகின்ற பலர்
தங்கள் வியாபார நேரத்தில் அன்பொழுக பார்க்கவோ, பண்புடன் பேசவோ, இறை தியானத்திற்கு முன்னுரிமை வழங்கவோ முன்வருவதில்லை.
ஏனெனில், வியாபாரமும், வியாபாரத்தின் மூலம கிடைக்கும் ஆதாயமும் தான் தங்களது வாழ்வை தீர்மானிப்பதாக கருதுகின்றான்.

இயற்கையாகவே தீர்க்கமான அறிவு கொண்டவர் என போற்றப்பட்டவர் அபு-த்-தர்தா (ரலி) அவர்கள்.

இஸ்லாத்திறகு வருவதற்கு முன்னால் மதீனாவின் மாபெரும் வியாபாரியாக அறியப்பட்டவர்கள்.
அல்லாஹ்வின் தூதர் மாநபி (ஸல்) அவரகள், அபுத் தர்தா-வின் அறிவுக் கூர்மையை கண்டு வியந்து என் உம்மத்தின் ஹக்கீம் மதிவாணர் அபுத் தர்தா (ரலி) என்று சிறப்பு செய்தார்கள்.

காலித் முஹம்மத் காலித் (ரஹ்) எனும் வரலாற்று ஆசிரியர் அபுத் –தர்தா (ரலி) அவர்களின் வாழக்கை முழுவதும் அல்குர்ஆன் 6-ஆம் அத்தியாயம் 162-ம் வசனத்தின் விளக்கமாக அமைந்திருப்பதை நான் காண்கிறேன் என்று கூறுகிறார்கள்.

அபுத் தர்தா (ரலி) அவர்களே தங்களைப்பற்றி கூறும்போது:
 நான் நபியை சந்தித்து ஈமான் கொள்ளும்போது மதீனா மாநகரின் செல்வாக்கு நிறைந்த வியாபாரி.

ஈமான் கொண்டதின் பின்னர் வியாபாரத்தையும் இறைதியானத்தையும் ஒரே கண்ணோட்டத்தில் – வட்டத்தில் கொண்டு வர முயற்சித்தேன் ஆனால் அது இயலாமல் போனது.
வியாபாரத்தை விட இறை தியானத்திற்கும், வணக்க வழிபாடுகளுக்கும் முன்னுரிமை கொடுக்க ஆரம்பித்தபின்னர்,
நாள் ஒன்றுக்கு 300 தீனார் லாபம் ஈட்டிய போதும்
இறை தியானத்தில் கிடைத்த மன திருப்தி என் வியாபாரத்தின் மூலம் கிடைத்த நான் அடைந்த்தில்லை.
ஏனெனில், நான் அல்லாஹ் விமர்சிக்கும் அழகிய வியாபாரியாக மிளிர வேண்டும் என ஆவல் கொண்டேன்.
ஆம்!
சில மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்களின் வியாபாரமும், கொள்வினை கொடுப்பினையும் இறைவனை நினைவு கூறுவதை விட்டும் அவர்களைப் பாராமுகமாக்கி விடுவதில்லை. மேலும, இதயங்கள் நிலை குலைந்து, பார்வைகள் நிலைகுத்தி நிற்கின்ற மறுமைநாள் குறித்து அஞ்சிக் கொண்டிருக்கின்றார்கள்
அல்குர்ஆன்: 24:37
இந்த வசனத்தில் கூறப்படும் வாய்மை யாளராய் மாறிடவே நான் விரும்புகின்றேன்.
நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரசூல் (ஸல்) பக்கம் 330
அல்லாஹ்வின் வணிகர் எனும் புகழாரத்தைப் பெற்ற அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபீ (ரலி) அவர்களின் வாழ்விலும் ஏராளமான முன்மாதிரிகள் உண்டு.

மனித வாழ்க்கையின் பெரும்பகுதி செலவிடப்படும் இடங்களில் முக்கிய இடத்தைப் பெறுவது வீடாகும்.
மனிதன் எங்கு சுற்றி எங்கு திரிந்தாலும் இறுதியில் தன் வீட்டில் இருப்பதையே விரும்புவான்.
மனிதனின் உடமைகளில் மிகவும் நேசத்திற்குரியது தான் வசிக்கும் வீடுதான்
அந்த இல்லம் இறைவனின் அருள் நிரம்பி வழியும் வீடாக இருக்க வேண்டுமெனில்
சில அர்ப்பணிப்புகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்.
ஏனெனில், அர்ப்பணிப்புகளை மேற்கொள்ளாத இல்லங்களில் குழப்பம் சூழ்ந்துவிடும், பிள்ளைகளுக்கு மத்தியில் விரோதம் முளைத்துவிடும். கணவன் – மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டுவிடும். அருளுக்கு பதில் வேதனையாக மாறிவிடும்.
இன்றைய அநேக வீடுகள் இஸ்லாம் விரும்பும் வகையில் அமைந்திடாமல் ஷைத்தானின் உறைவிடமாக மாறி இருப்பதைக் காண முடிகிறது.
உங்கள் இல்லஹ்களை மன அமைதி தரும் இடமாக நாம் ஆக்கியுள்ளோம் என்று இறைவன் கூறினாலும்
இறை நினைவும், இறைத்தூதர் வழியும் பின்பற்றப்படாத எந்த ஓர் இல்லத்திலும் மன அமைதியை மருந்துக்கும் காண முடியாது.
என்பதை அர்ப்பணிப்புடன் வாழும் ஓர் இறைநம்பிக்கையாளன் வைத்திருப்பான்.
எனவே தான் அல்லாஹ் இப்படிக்கூறுவான்:
(“அவனது ஒளியின் வழிகாட்டுதலைப் பெற்றவர்கள்) எந்த இல்லங்கள் உயர்த்தப் படுவதற்கும், எங்கே தன் பெயர் நினைவு கூறப்படுவதற்கும் அல்லாஹ் அனுமதி வழங்கியுள்ளானோ அந்த இல்லங்களில் காலை, மாலை நேரங்களில் அவனை துதிப்பவர்களாக காணப்படுகின்றார்கள்.
அல்-குர்ஆன்:24:36
எனவே, மேற்கூறிய எட்டு அம்சங்களும் மனித இயல்போடும், உணர்வோடும் ஒன்ற்றக் கலந்தவை என்பதால் தான் அல்லாஹ் இவைகளை அல்லாஹ் ரசூலின் மீதான நேசத்திற்கும் மேலாக நேசிப்பதை தியாகம் செய்ய முன்வருமாறு அழைக்கின்றான்.
தேவைபட்டால் இவைகளை அல்லாஹ்விற்காக தியாகம் செய்ய முன்வருமாறு கட்டளை பிறப்பிக்கின்றான்.

ஏனெனில், தன் உடமைகளையும், உணர்வுகளையும் தியாகம் செய்ய முன்வருபவர்களால் மட்டும்தான்  தான் மேலாக மதிக்கும் “உயரை இந்த இஸ்லாத்திற்காக தியாகம் செய்ய முன்வருவான்.
இப்போது இதே உணர்வோடு
ரளியல்லாஹீ அன்ஹீம் வரளு அன்ஹீ
அல்லாஹ் அவர்கள பொருந்திக்கொண்டான்!
அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள்!!
என்று ஸஹாபாக்களை குறித்து வாய்விட்டு சொல்லிப்பாருங்கள். அதன் உள்ளார்ந்த பொருள் ஒரு கனம் உங்கள் உடலை சிலிர்த்து விட்டுச் செல்லும்,

ஏனென்றால் அவர்கள் இறைவின் விருப்பத்தை தங்களின் விருப்பமாக மாற்றிக் கொண்டார்கள் அல்லாஹ் வெறுத்த்தை அவர்களும் வெறுத்தனர். தங்களது உணர்வுகளையும், உடமைகளையும், உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்தனர். மறக்கப்படாத வரலாற்றுக்கு சொந்தக்காரர்களாக நிர்மானித்திக் கொண்டனர்.

உயிரும்.... தியாகமும்.......
யமாமா புத்தகளம் தங்களை நபியாக வாதிட்ட ருஜ்ஜால் இப்னும் ஹனீஃபா, முஸைலமா மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் நடைபெற்ற யுத்தமாகும்.
உமர் (ரலி) அவர்கள் ஒரு வீரத்தியாகியின் உடல் முன்னால் நின்று கொண்டு தேம்பித் தேம்பித் அழுதார்கள்.
அவரிடம் தான் அன்றைய போரின் கொடி வழங்கப்பெற்றிருந்த்து ஆனால், இப்போது உயிரின்றி உடல்மட்டும் காயங்களோடு அசைவற்று கிடந்த்து.
அவர் வேறு யாருமல்ல! இஸ்லாமிய வரலாற்றில் அதிகம் அறியப்படும் இரண்டு ஹிஜ்ரத்திலும் கலந்துகொண்ட மாண்புக்க சொந்தக்காரர் உமர் (ரலி) இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் முன்னரே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட  உமர் (ரலி) அன்ஹூ அவர்களின் தகப்பனாருக்கு இன்னொரு தாயின் மூலம் பிறந்த சகோதரர் ஜைதுப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள்.

உஹத் யுத்தத்தில் எதிரிகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது ஜைது (ரலி) அவர்களின் வாள் இரண்டாக உடைந்து விட்டது உடைந்த வாளை வைத்து போரிட்டுக் கொண்டிருந்த தம் சகோதரரிடம் உமர் (ரலி) அவர்கள் ஒருவாளை காட்டி இதைவைத்துப் போரிடு என்று கூறிய போது நான் வீரமரணமடையும் வேட்கையிலே வந்திருக்கின்றேன். எனக்கு இந்த வாளே போதும்! என்றார்களாம்.
பத்ரில் துவங்கி அனைத்து யுத்த களங்களிலும் ஷஹீதாக வேண்டும் எனற் எண்ணத்திலேயே கலந்து கொண்ட  அவர்களுக்கு யமாமா தான் நிறைவேற்றிவைத்தது.
அந்த மாவீரரின் முன்னின்று அழுது கொண்டிருந்து உமர் (ரலி) அவர்கள்
யா அல்லாஹ்!
     இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதிலும் பேரார்வத்துடன்
     என்னை முந்திக் கொண்டார்!
     இஸ்லாத்திற்காக உயிரை அர்ப்பணிப்பதிலும்
     என்னை முந்திக் கொண்டார்!
     யா அல்லாஹ்! ஜைதின் மீது உன் அருள் மழையை
     என்றென்றும் பொழியச் செய்வாயாக!
என்று துஆ செய்தார்கள்.
நூல்:ரிஜாலுன் ஹவ்லர் ரசூல் (ஸல்)
பக்கம்:341

இரு நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் எங்கு போவார்கள் என்பது நமக்குத் தெரியும்.
ஆனால் நபிகளார் காலத்து இரு நண்பர்கள் சஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களும், அப்துல்லாஹ் இப்னு ஜஹீஷ் (ரலி) அவர்களும் ஒருமுறை சந்தித்துக் கொண்டபோது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் சஅத் (ரலி) அவர்களிடம் வாங்க இரண்டு பேரும் சேர்ந்து துஆ செய்ய போவோமா என்று கேட்டார்கள்.
சரி என்று சம்மதித்து சஅதும் வந்தார்,
முதலில் துஆ கேட்கும் வாய்ய்பு சஅதிற்கு சென்றது
அவர்கள் “யா அல்லாஹ் நாளை உஹதிலே கடுமையான போர்வீரனை நான் சந்திக்க வேண்டும். அவனுடன் நானும், என்னுடன் அவனும் கடுமையாக மோதிக் கொள்ளவேண்டும். இறுதியாக நான் அவனை வீழ்த்த வேண்டும். அவன் பொருள் எனக்கு சொந்தமாக வேண்டும்.
என்று கேட்டுமுடித்த போது அப்துல்லாஹ் (ரலி) “ஆமீன்என்று சொன்னார்கள்.
பின்பு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்:
“யா அல்லாஹ்!
நாளை உஹதிலே வீராதி வீரனை நான் சந்திக்க வேண்டும்
அஞ்சா நெஞ்சத்துடன் அவனை உனக்காக நான் எதிர்கொள்ள வேண்டும். அவனுடன் நானும், என்னுடன் அவனும் கடுமையாக மோதிக்கொள்ள வேண்டும்.
இறுதியில், என் உறுப்புக்கள் ஒவ்வொன்றாக சிதைக்கப்பட வேண்டும். 
நாளை மறுமையில் என்னை நீ சந்தித் து அடியானே!
உன் மூக்கு அறுபட்டுள்ளதே!
உன் காது வெட்டப்பட்டுள்ளதே!
என்று நீ கேட்க வேண்டும்
அதற்கு நான்
யா அல்லாஹ்! அதுவா? அதை உனக்காகத்தான், உன் தூதருக்காகத்தான் நான் அர்ப்பணித்தேன்.
என்று சொல்ல வேண்டும்.
அப்போது அதைக்கேட்டுஅடியானே! நீ உண்மையையே சொன்னாய்! என்று என்னிடம் நீ சொல்ல வேண்டும்.
என்று கேட்டார்கள்
அதற்கு சஅத் (ரலி) அவர்கள் ஆமீன் என்று கூறினார்கள்.
இந்த செய்தியை அறிவிக்கும் ஸஅத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
என்னைவிட அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அழகிய துஆவை கேட்டார்கள்.
நான் போர் முடிந்து அவரின் ஷஹீத்தாக்கப்பட்ட உடலை கண்ட போது அவர் கேட்டது போலவே நடந்திருக்க கண்டேன்
நூல்: இஸ்தீஆப், பாகம்:2: பக்கம் : 43
மறக்கப்படுவதில்லை
அல்லாஹ்விற்காக தன் இளமையின் உணர்வுகளை தியாகம் செய்த இறைத்தூதர் யூசுப் (அலை) அவர்களை இந்த சமூகம் மறந்திடக்கூடாது என்பதற்காக அல்லாஹ் அல்குர்ஆனில் அவரின் பெரிலேயே ஒரு அத்தியாத்தை இறக்கிவைத்து அவர்களின் தியாகத்தை கௌரவிக்கின்றான்,

அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக, கொண்ட கொள்கைக்காக, நாட்டைவிட்டு. ஊரை விட்டு, சொந்த பந்தங்களைவிட்டு ஓடிவந்த இளைஞர்களின் தியாகத்தை இந்த சமுதாயம் மறந்திடக்கூடாது என்பதற்காக அல்லாஹ் அல்குர்ஆனில் கஹ்ஃப்-குகைவாசிகள் எனும் பெயரிலே ஒரு அத்தியாத்தை இறக்கியருளி அவர்களின் தியாகத்தை போற்றுகின்றான்.

தன்னுடைய தந்தை, மனைவி, மக்கள், தன்உயிர், என அனைத்தையும் அர்ப்பணிக்கத் துணிந்திட்ட ஒரு மாமனிதரின் தியாகத்தை தியாகத்திற்கே முன்னோடி என்றும், பல்வேறு சிறப்புப் பெயர்களோடும், குர்ஆனின் பல்வேறு இடங்களில் போற்றிப் புகழ்வதோடு இப்ராஹீம் எனும் அவரின் பெயரிலேயே ஓர் அத்தியாயத்தை இறக்கிவைத்து ஒட்டுமொத்த உம்மத்தும் மறந்திடாதவாறு அவர்களின் தியாகத்தை உள்ஹிய்யா எனும் பெயரில் பாதுகாத்து நிலைநிறுத்துகின்றான்

ஸிஃப்பீன் போர்முடிந்து திரும்பிக் கொண்டிருந்த அலீ (ரலி) அவர்கள் வழியில் ஒரு மண்ணறை – கப்ரைக் கண்டு இது யாருடைய கப்ர்? என்று வினவ,
மக்கள் நபித் தோழர் கப்பாப் (ரலி)அவர்களுடையதுஎன்று கூறினார்கள்.
கேட்ட மாத்திரத்திலேயே மண்ணறையின் முன் நின்று தேம்பித் தேம்பி அழுதவர்களாக!
வானை நோக்கி இருகரம் உயரத்தி....
யா அல்லாஹ்! கப்பாப் அவர்கள் பேரார்வத்துடன்
                இஸ்லாத்தை தழுவினார்கள்.

                உனக்கும், உன் நேசருக்கும் அடிபணிந்து வாழும்
                முனைப்போடு தமது தாயகத்தையே துறந்தார்கள்!
                வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிப்போடும்,
                தியாகத்தோடும் அமைத்துக் கொண்டார்கள்.
யா  அல்லாஹ்!      கப்பாபின் மீது உன் கருணை மழையை
                பொழயச் செய்வாயாக!
என்று துஆ செய்தார்கள்.
நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரசூல்(ஸல்) பக்கம்:235
அமீருல் முஃமினீன், படைத்தளபதி எனும் அதிகாரச் சுமை சந்தித்துவிட்ட போரில் ஏற்பட்ட இழப்பு, வீர்ர்களின் காயம், தியாகம் என எண்ணிப்பார்ப்பதற்கும், நினைத்துப்பார்ப்பதற்கும் எவ்வளவோ இருந்துகூட கப்பாப் (ரலி) அவர்களை நினைக்கத் தூண்டியது, கப்பாப் (ரலி) அவர்களின் அப்பழுக்கற்ற தியாகமே!

உஹத் யுத்தகளம் சண்டை ஓய்ந்த்து
வீர மரணமடைந்தவர்களை அடையாளம் காணும் பயிணில் நபி (ஸல்) அவர்களும், நபித் தோழர்களும் ஈடுபட்டிருந்தனர். தூரத்தில் செந்நிற  மேனியோடு, செங்குருதியின் வெள்ளத்தில் உணர்வற்றுக் கிடந்த அந்த தியாகியின் சடலத்தை நோக்கி மாநபி (ஸல்) அவர்கள் விரைந்தோடிச் சென்று பார்த்தார்கள். அவர் மக்கமாநகரின் பேரழகு முஸஅப் இப்னு உமைர் (ரலி) அவர்கள் ஆவார்கள் வாரி அணைத்த மடியில் தூக்கிவைத்து,
முஸ்அப் அவர்களின் துவக்க கால ஆடம்பர வாழ்வின் வனப்பும், இஸ்லாமிய வாழ்வில் அவர் பெற்ற தியாக வாழ்வின் வடுக்களை நபித் தோழர்களுக்கு எடுத்துக் கூறி நினைவு படுத்தினார்கள்.
நூல்: இஸ்தீஆப், பாகம்:2: பக்கம் : 400
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழுவதற்கும், நினைத்துப் பார்ப்பதற்கும் அங்கே அவரின் பெரிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடக்கின்றார்கள்.
ஆனால், முஸ் அபின் அர்ப்பணிப்பை நபித் தோழர்களிடையே மாநபி (ஸல்) அவர்கள் நினைவுபடுத்தினார்கள்.

தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) – சுபைர் பின் அவ்வாம் (ரலி) இருவரும் நண்பர்கள்.
இஸ்லாமிய வரலாற்றிலும் கூட இருவரின் பெயர்களில் ஒன்றாகவே இடம் பெறும்.
சுவனத்தை கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்டவர்களில் இருவரும் உண்டு.
தல்ஹா (ரலி) அவர்கள் தங்களுக்கு பிறந்த 10 குழந்தைகளுக்கும்
நபிமார்களின் பெயரை சூட்டினர்கள்
சுபைர் (ரலி) அவர்கள் தங்களுக்கு பிறந்த குழநதை தியாகிகளின் பெயரை சூட்டினார்கள்

முடிந்துவரும் உலகு, குடும்ப உயர்வின் நலன், நாட்டுமக்களின் மீதான அக்கறை என நாளும் மனிதர்கள் மேற்கொள்ளும் தியாகங்களும் அதற்காக அவர்களுக்கு வழங்கப்படும் மரியாதைகளும் கௌரவங்களும்,
மணிமண்டபங்காக , சாலை, வீதி. தெருக்களின் பெயர்களாக, விருதுகாக,
மதிக்கப்படுகிறதென்றால்....
முடிவற்ற உலகு, உலக மக்களின் நலனையும், உயர்வையும், மேலா இஸ்லாத்தின் எழுச்சியையும், மாண்பையுயும் தம் உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய அல்லாஹ்விற்காகவும், அவரின் தூதருக்காகவும் செய்யவேண்டும் ஓர் முஸ்லிமின் தியாகங்களும், அதற்காக அருக்கு வழங்கப்படும் அங்கீகாரங்களும், அந்தஸ்துகளும்,
எத்துணை மதிப்பு வாய்ந்தவைகளாக இருக்கும் என்பதை இஸ்லாமிய வரலாறு உலகிற்கு உணர்த்திக் கொண்டிருகிறது.

ஆம்!
அத்தகைய தியாகங்கள் ஒரு போதும் வீண் போவதில்லை!
மதிக்கப்படுகின்றது!
ஆம்!
அத்தகைய தியாகிகள் ஒருபோதும் மறக்கப்படுவதில்லை!
போற்றப்படுகின்றார்கள்!

அந்த உயர்வான சிந்தனையைத்தான் ஈதுல் அள்ஹா நமக்கு போதிக்கின்றது.

அல்லாஹ்வின் விருப்பத்தையே நமது விருப்பமாக ஏற்று நடந்திடும் நல்லோர்களில் ஒருவராக உங்களையும் என்னையும் வல்ல ரஹ்மான் ஆக்கி அருள் புரிவானாக! ஆமீன்!



Sunday 13 October 2013

தியாகிகள் மறக்கப்படுதில்லை

தியாகம் என்பது எத்தன்மையது என்பதைப் புரிந்து கொண்டால் தியாகிகள் ஏன் மறக்கப்படுதில்லை என்பதை எளிதாக தீர்மானம் செய்துவிடலாம்.

இஸ்லாத்தை பொருத்தமாட்டில் தியாகம் என்பதற்கு மதிப்புமிக்க மிகவும் விரும்பக்கூடிய விஷயங்களை ஒருமனிதன் இறைவனுக்காக விட்டுக் கொடுப்பது அல்லது அர்ப்பணிப்பது என்பது பொருளாகும்.

உதாரணமாக, கால நேரங்கள், பொருளாதாரம், வாழ்க்கை போன்ற நிதர்சனமானவைகளாகவோ,
உணர்வுகள், கருத்துக்கள், நாட்டங்கள், உள்ளார்ந்த மன்ப்பான்மைகள் போன்ற மனம் சம்பந்தப் பட்டவைகளாகவோ இருக்கலாம்.

தியாகம் என்பதற்கு ஷரீஆ வின் பார்வையில் விலங்கையோ, மனிதனையோ, இறைவனுக்கு காணிக்கையாக பலியிடுதல்; அல்லது இறைவன் முன் அர்ப்பணித்துவிடுதல்என்பதும் பொருளாகும்.

முஸ்லிம், இறைநம்பிக்கையாளன் என்பவன் ஒரு சாதாரண மனிதனைப் போல் அல்ல,
தனது செயல்பாடுகளின் வழியாக உலக மாந்தர்களிடையே மிகப்பெரும் தாக்கத்தையும், மாற்றத்தையும் கொண்டுவர பாடுபடவேண்டும்.

பரந்து விரிந்த இப்பூலகில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமெனில் அவன் அனைத்து நிலைகளிலும் தன் இறைவனுக்காக, இறைவனின் திருப்திக்காக சில, பல விஷயங்களை விட்டுக் கொடுக்க முன்வர வேண்டும்.

மேலும், தியாகத்தின் மூலம் தான் அரிய பல மாற்றங்களை உண்டாக்க முடியும் என்கிற திடமான நம்பிக்கையோடு வாழ்க்கைப் பாதையில் பயணிக்க வேண்டும்.
ஏனெனில், தியாகம் என்பது உயிரால், உடலால், உடமையால், வாழ்வால், உணர்வுகளால், எண்ணங்களால், பாசப் பிணைப்புகளால் எல்லையில்லா இழப்புக்களை உள்ளடக்கியது.
இதில் எதையும் அர்ப்பணித்திட முன்வருபவர்களை தியாகிகள்அவர்களே மதிக்கப்படுவார்கள்! போற்றப்படுவார்கள்! மறக்கப்படாமல் மக்களின் உள்ளங்களில் என்றென்றும் நிறுத்தப்படுவார்கள்.

ஆம்! அத்தகைய தியாகங்கள் ஒருபோதும் வீண் போவதில்லை!
     மதிக்கப்படுகின்றது!!
ஆம்! அத்தகைய தியாகிகள் ஒருபோதும் மறக்கப்படுவதில்லை!
     போற்றப்படுகின்றார்கள்!!

தியாகத்தின் முன்னோடி
     ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாக இறைத் தோழர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்த தியாகத்தை இஸ்லாம் எந்தளவு உயர்த்திப் பிடிக்கின்றது, போற்றுகின்றது என்றால், நம் உயிரினும் மேலான பெருமாளார் (ஸல்) அவர்களைப் புகழ வேண்டும், அவர்களின் மீது ஸலவாத்  ஓத வேண்டும் என்றால்,
இறைவா! நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள்  மீதும், நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார்களுக்கும் எவ்வாறு அருள்புரிந்தாயோ அது போன்று அருள்புரிவாயாக! நீயே! புகழுக்குரியோனும், மதிப்புமிக்கவனும் ஆவாய்!

இறைவா! நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள்  மீதும், நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார்களுக்கும் எவ்வாறு கருணைபுரிந்தாயோ அது போன்று கருணைபுரிவாயாக! நீயே! புகழுக்குரியோனும், மதிப்புமிக்கவனும் ஆவாய்!
இந்த யுக முடிவு நாள்  வரையிலும் இன்றளவும், ஏன்? தனியாகவோ, கூட்டாகவோ, கடமையான தொழுகையிலோ, ஜனாஸா தொழுகையிலோ, மேற்கூறியவாறு தான் ஓத முடியும். இன்னும் சொல்லப் போனால் இது தான் நாம் நபி (ஸல்) அவர்களின்மீது ஓதகிற ஸலவாத்தில் மிகச் சிறந்த்தும், உயர்வானதும் ஆகும்.

அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் நின்ற இடம் இன்று மகாமு இப்ராஹீம்தொழுமிடமாக.....

அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஷைத்தானை கல்லெடுத்து விரட்டிய இடம், இன்று ரம்யுல் ஹிஜார்எனும் அமலாக.....

அன்று அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க தமது மனைவி மக்களை விட்டு விட்டு வந்த இடம் பாலைவனம் இன்று ஜம் ஜம் நீருற்று...

அன்று அல்லாஹவிற்காக தம் மகனை அர்ப்பணிக்கத்துணிந்த அந்த தீர செயல்
இன்று உள் ஹிய்யாஎனும் இபாத்த்தாக.....

எல்லாவற்றிற்கும் மேலாக இறைத்தூதர் எனும் நிலையிலிருந்து இறைத் தோழராக....

தனியொரு மனிதர் எனும் நிலையிலிருந்து ஒரு சமுதாயத்துக்கு நிகரானவராக....

இன்னும் ஏராளம், தாராளமாக,

திண்ணமாக! உங்களுக்கு இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்க்கையில் அழகியதோர் முன்மாதிரி இருக்கிறது.
அல்-குர்ஆன்: 60 : 4
உலக முஸ்லிம்களின் முன்னோடியாக, தியாகத்தின் முன் மாதிரியாக உலக வரலாற்றில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றார்கள், மறக்காமல் நினைவு கூறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தியாகத்தின் வரையறை:
தியாகம் என்றாலே உயிரை விடுவது தான் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
அது தவறான கண்ணோட்டமல்ல. ஆனால், அது இறுதியான ஒன்று.
அதற்கு முன்னால் மனிதன் பல்வேறு தியாகங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது.
ஏனென்றால்,
     உயிரை துறப்பது மட்டும் தியாகம் அல்ல
     உயிர்ப்போடும், அர்ப்பணிப்போடும் வாழ்வது தான் தியாகம்!
என்று இஸ்லாம் தியாகத்திற்கான இலக்கணத்தை சொல்லித்தருகின்றது.

உயிரை விடுவது மட்டும்தான் தியாகம் என்று மார்க்கம் சொல்லியிருக்மேயானால் இன்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை மயானமும், மண்ணறைகளும் மட்டும்தான் காட்சி தரும்.

உணர்வுப்பூர்வமான தியாகம்:
அல்லாஹ் கூறுகின்றான்:
நபியே! நீங்கள் சொல்லுங்கள்!
உங்கள் தந்தையர், உங்கள் பிள்ளைகள், உங்கள் சகோதரர்கள், உங்கள் மனைவியர், உங்கள் உறவினர்கள், நீங்கள் சம்பாதித்த செல்வங்கள், இன்றும் நஷ்டமடைந்துவிடுமோ என நீங்கள் அஞ்சுகின்ற உங்களுடைய வியாபாரம், மற்றும் உங்களுக்கு விருப்பமான உங்கள் இல்லங்கள் ஆகியவை அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விட – அவன் வழியில் போராடுவதைவிட உங்களுக்கு நேசமானவையாயிருந்தால், அல்லாஹ் தன் முடிவினை செயல்படுத்தும்வரை நீங்கள் எதிர்பார்த்திருங்கள்! அல்லாஹ் தீய சமூகத்திற்கு ஒருபோதும் நேர்வழிகாட்டுவதில்லை.
(அல்-குர்ஆன்: 9:24)
தியாகம் என்பது எங்கிருந்து, எப்படி துவங்க வேண்டும் என்பதை மேற்கூறிய வசனத்தில் 8 கூறுகளாக பிரித்து அல்லாஹ் கூறியுள்ளான்.
அதில் 5 விஷயங்கள் உணர்வுகளோடும், 3 விஷயங்கள் பொருளாதாரத்தோடும், நிதர்சனமானவையாகவும் அமைந்திருப்பதைக் காண முடிகிறது.
பெற்றோரை பொருத்தவரையில் அவர்களுக்கு வழிபட்டுநடப்பது, அவர்களை உதாசினப்படுத்தாமல் இருப்பது, அவர்களோடு நல்லமுறையில் நடந்து கொள்வது, அவர்களுக்காக துஆ செய்வது என பல்வேறு போதனைகளை அல்குர்அஆன் அறிவுறுத்துகிறது. ஆனால், அதே பெற்றோர் இறைவனுக்கு மாறு செய்யும்மாறு வற்புறுத்தினால் ஒருபோதும் அவர்களுக்கு அந்த விஷயத்தில் உடன்பட வேண்டாம் என கட்டளை பிறப்பித்துள்ளது.

அல்லாஹ் கூறுகின்றான்:
பெற்றோர் நலம் பேண வேண்டுமென நாம் மனிதனுக்கு அறிவுறித்துயுள்ளோம். ஏனெனில் அவனுடைய தாய் நலிவுக்கு மேல் நலிமை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். மேலும், அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் (சிரம்ம் மேற்கொண்டாள்) பிடித்தன. எனவே எனக்கு நன்றிசெலுத்து! உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து! என் பக்கமே நீ திரும்பிவரவேண்டியுள்ளது.
ஆனால், நீ எதனை அறிய மாட்டாயோ? அதனை என்னோடு நீ இணை கற்பிக்க வேண்டுமென்று அவர்கள் இருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுடைய பேச்சை நீ ஒருபோதும் நீ கேட்காதே! இவ்வுலகில் அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்!
(அல்-குர்ஆன்: 31:14,15)
இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது ஏகத்துவ பயணத்தில் முதலில், தனது தந்தையை மறுதலிக்க வேண்டியிருந்த்து, ஆரம்பத்தில் அவருக்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு வேண்டி மன்றாடினார். ஆனால் அல்லாஹ் மன்னிப்புத் தேடும் மன ஏக்கத்தைவிட்டுவிடுமாறு கூறிய போது அதை முற்றிலுமாக கை விட முன் வந்தார் என அல்லாஹ் அழகிய முறையில் விமாசிப்பான்.

அல்லாஹ் கூறுகின்றான்:
இறைவனுக்கு இணை வைப்பவர்கள் நரகத்திற்குரியவர்கள் என்பது நன்கு தெளிவாகிவிட்ட பின்னர் அவர்களுக்காகப் பாவ மன்னிப்பு கோரிப் பிரார்த்திப்பது நபிக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் ஏற்ற செயல் அல்ல. அவர்கள் நெருங்கிய உறவினராய் இருப்பினும் சரியே!
இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவமன்னிப்புக் கோரியது அவருக்கு தாம் கொடுத்திருந்த வாக்குறுதியின் அடிப்படையில் தான். ஆனால், தம்முடைய தந்தை அல்லாஹ்வுக்கு விரோதியாய் இருக்கின்றார் என்பது இப்ராஹீமுக்கு தெளிவாக விளங்கியபோது அவர் தம் தந்தை (க்காக கேட்ட பிரார்த்தனை) யை விட்டு விலகிக்கொண்டார். திண்ணமாக, இப்ராஹீம் மிக இளகிய மனமும், இறையச்சமும், சகிப்புத்தன்மையும் உள்ளவராக இருந்தார்.
அல்-குர்ஆன்:9:14
பத்ர் யுத்தத்திற்கான தயிப்புகளை சரிசெய்து முடித்த பின்னர் நபித்தோழர்களை நோக்கி மாநபி (ஸல்) அவர்கள் இப்படிக் கூறினார்கள்: நாளை நடைபெறும் யுத்தத்தில் உங்கள் எதிரே பனூ ஹாஷிம் கிளையார்களில் யாரையும் கண்டால் அவர்களை கொலை செய்துவிட வேண்டாம். அவர்கள் நிர்பந்தமாக அழைத்து வரப்பட்டுள்ளார்கள். மேலும். அப்பாஸ் அவர்களையும், அபுல் புக்தரி அவர்களையும் கொலை செய்யவேண்டாம்இவர்கள் இருவரும் பட்டு வற்புறுத்தல் மற்றும் நிர்பந்த்ததின் அடிப்படையில் அழைத்துவரப்ட்டுள்ளனர்.
கண்ணில் படுகின்ற எந்தர ஒரு .இறைவிரோதியையும் விட்டவிடக் கூடாது எனகிற தீர்மானத்தோடு இருந்த் தோழர்களிடையே அறிவிப்பை வெளியிட்டார்கள்.

குறைஷிகளின் மாபெரும் தலைவர்களில் உத்பா இப்னு ரபீஆ ஒருவன். பதீரில் குறைஷிப் படையை வழிநடத்தியதில் இவனுக்கும் முக்கிய பங்குண்டு.
ஆச்சர்யம் என்னவென்றால் உத்பாவின் மகன் அபூஹுதைஃபா முஸ்லிம்கள் அணியில் இருக்கிறார்.
அவர்களால் இந்த அறிவிப்பை மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவர் இப்படிச் சொன்னார்! எங்கள் தந்தையரையும், சகோதரர்களையும், சொந்த பந்தங்களையும் நாங்கள் போரில் கொல்ல வேண்டும்
ஆனால், அப்பாஸை கண்டால் மட்டும் விட்டுவிட வேண்டுமா?
படைத்த ரப்பின் மீது ஆணை!
“அவரைப் போர்க்களத்தில் எங்கு கண்டாலும் என் வாளால் வெட்டுவேன்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அபூஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறிய விபரம் தெரிய வந்த போது
உமர் (ரலி) அவர்களை அழைத்து “ஹஃப்ஸாவின் தந்தையேநாளை நடக்கும் போரில் அல்லாஹ்வின் தூதருடைய பெரிய தந்தையின் முகம் வாளால் வெட்டப்படுமா?“ – என்று கேட்டார்கள்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள்: “அனுமதி மட்டும் தாருங்கள் நயவஞ்சகனாக மாறிவிட்ட இவரின் தலையை இந்த இடத்திலேயே கொய்து விடுகிறேன்என்றார்கள்.
வேண்டாம் என மாநபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களை தடுத்து விட்டார்கள்.
நூல்: தஹ்தீப் சீரத் இப்னு ஹிஷாம்
பக்கம்:132
அபூஹுதைஃபா ஒன்றும் சாமானியர் அல்ல, நபித் தோழர்களில் மிகச் சறிப்பு பெற்றவர். இரண்டு ஹிஜ்ரத்திலும் கலந்து கொண்டவர், இரண்டு கிப்லாவிலும் தொழும் பாக்கியம் பெற்றவர், என்ற போதிலும், குடும்ப்பாசம், உணர்வு ரீதா அவரை இவ்வாறு பேசத்தூண்டியது. பான்மையை தமது உள்ளத்தில் கொண்டிவர இயலாமல் போனது.
ஆனாலும், அவர் அந்த உணர்ச்சி வெளிபாட்டிற்குப் பின் பெரிதும் வருத்தப்பட்டார்.
சந்திக்கும் நபர்களிடத்திலும் சந்தப்பம் கிடைக்கும் போதிலும்

அபூஹுதைஃபா (ரலி) இப்படிச் சொல்வார்களாம்:
“பத்ரில் நான் சொன்ன அந்த வார்த்தை என் நிம்மதியை சீர்குலைத்துவிட்டது.
அப்பாஸ் அவர்கள் குறித்து நான் அன்று கூறிய வார்த்தைகளை நினைத்து சதா பயந்து கொண்டே இருந்தேன்.
அதற்கு பரிகாரம் போர்க்களத்தில் நான் ஷஹீத் ஆவது தான் என்று உறுதிகொண்டேன்.

இப்னு அப்துல் பர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
பத்ருக்குப்ப பின் நடந்த அனைத்து யுத்த களங்களிலும் கலந்து கொண்டார்கள். இறுதியாக அபூபக்ர் (ரலி) அவர்கள் காலத்தில் நடந்த யமாமா போர்க்களத்தில் ஷஹீத் வீர மணரம் அடைந்தார்கள்.
நூல் : இஸ்தீஆப்: பாகம்3
நூல்: தஹ்தீப் சீரத் இப்னு ஹிஷாம்
பக்கம்:132


ஹல்ரத் உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் உயர்மட்ட ஆலோசனைக்குழு ஒன்றை அமைத்திருந்தார்கள் அதில் ஆறு சிறந்த நபித் தோழர்களை நியமித்திருந்தார்கள். அந்த அறுவரில் ஒருவர் அபூஉபைதா (ரலி) அவர்கள் ஆவார்கள்.

தங்களுடைய மரண நேரத்தில் உமர் (ரலி) அவர்கள் “அபூஉபைதா மட்டும் உயிரோடு இருந்தால் அவரை நான் எனக்குப் பின் கலீஃபாவாக பிரமாணமெடுத்திருப்பேன் எனக் கூறினார்கள்.
சகதோழர்கள் அது என்ன? அபூஉபைதா (ரலி) அவர்களுக்கும் மட்டும் உங்களிடத்தில் அவ்வளவு மதிப்பு? என்று வினவிய போது, பத்ர் யுத்த களத்தில் எதிரணியில் தமது தந்தை ஜர்ராஹ் பங்கெடுத்து முஸ்லிம்களுக்கெதிராக கடுமையாக சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு சந்தர்ப்பம் தமது தந்தையை யுத்த களத்தில் நேரெதிரே சந்திக்க வேண்டி வந்த்து.
சற்றும் தாமதிக்காமல் அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக, அல்லாஹ் ரசூலின் மேல்கொண்ட பிரியத்திற்காக தமது தந்தையை கொன்றுவிட்டார்.
ஆதலால் தான் என உமர் (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்.
நூல்: தஹ்தீப் சீரத் இப்னு ஹிஷாம்
பாகம்:4, பக்கம்:420

இறைத்தூதர் நூஹ் நபி (ஸல்) அவர்கள் தங்கள 950 ஆண்டுகால அழைப்பியல் பணியில் மூலம் 100க்கும் குறைவாவர்கேயை நுழைவிக்க வேண்டியிருந்த்து.

அல்-குர்ஆன் கூறுகிறது:
அக்கப்பல் அவர்களைச் சுமந்து சென்று கொண்டிருந்த்து. அலைகள் ஒவ்வொன்றும் மலையளவு உயர்ந்து கொண்டிருந்தன. நூஹுடைய மகன் தொலைவில் இருந்தான். அவர் தம் மகனை கூவியழைத்து கூறினார்: “என் அன்பு மகனே! எங்களோடு நீயும் ஏறிக்கொள்; நிராகரிப்பாளர்களுடன் இருக்காதே!அதற்கு அவன் பதிலளித்தான்: “ நான் இப்போதே ஒரு மலையின் மீது ஏறிக் கொள்கிறேன்; அது என்னை வெள்ளத்திலிருந்து காப்பாற்றிவிடும்”.

அதற்கு நூஹ் கூறினார்: “இன்று அல்லாஹ்வின் தீர்ப்பிலிருந்து காப்பாற்றக் கூடியது எதுவும் இல்லை. அல்லாஹ் யாருக்கு கருணை புரிந்தானோ அவர்கள் மட்டும் காப்பாற்றப்படுவார்கள்.
இதற்குள்ளாக இருவருக்குமிடையே ஓர் அலை குறுக்கிட்டு மூழ்கடிக்கப்பட்டவர்களில் அவன் சேர்ந்துவிட்டான்.

(பின்பு) நூஹ் தன் இறைவனிடம் பிரார்த்தித்துக் கூறினார்: என் இறைவனே! என்னுடைய மகன் எனது குடும்பத்தைச் சேர்ந்தவன் மேலும், திண்ணமாக உனது வாக்குறுதி உண்மையானதாகும். மேலும், நீயே தீர்ப்பளிப் போர்களில் உயர்ந்தோனாவாய்!
அதற்கு அல்லாஹ் பதிலளித்தான்: “நூஹே! திண்ணமாக அவன் உனது குடும்பத்தைச் சார்ந்தவன் அல்லன். அவன் ஒரு வீணான செயல் ஆவான். எதனுடைய உண்மை நிலையை நீர் அறிய மாட்டீரோ அதைப்பற்றி நீர் எம்மிடம் கேட்காதீர்!
அறிவிலிகளில் ஒருவராக நீரும் ஆகிவிட வேண்டாம் என நான் உம்மை அறிவுறுத்துகிறேன்.
(உடனே) நூஹ் பணிவுடன் கூறினார்: “என் இறைவனே! எதைப் பார்த்து எனக்கு அறிவு இல்லையோ அதைப் பற்றி உன்னிடம் கேட்பதைவிட்டு உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். நீ என்னை மன்னிக்காவிட்டால், என்மீது அருள்புரியாவிட்டால் நான் அழிந்தே போய்விடுவேன்.
அல்-குர்ஆன்: 11: 42 முதல் 47 வரை)
தனது மகன் மீது கொண்ட அதீத பாசத்தால் அல்லாஹ்விடம் கெஞசிக் கேட்டார்கள் நூஹ் (அலை) அவர்கள்.
அல்லாஹ்வின் பதில் இப்படி அமைந்தபின நூஹ் தம் மகன் விஷயத்தில் மன்றாடிக் கேட்பதைத் கூட நிறுத்தி விடுவதற்கு மனமுவந்து ஏற்றுக் கொண்டார்கள்.
பத்ரு யுத்தம் தீமையின் ஆணி வேர்கள் பிடுங்கி எறியப்பட்ட நாள் நச்சுப் பாம்புகளைவிட கொடியவர்கள் நசுக்கப்பட்ட நாள்.
அந்த பத்ர் யுத்தத்தில்
தன் சுக போகமான வாழ்வையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு நபிகளாரோடும், நபித் தோழர்களோடும், இஸ்லாமிய பண்பியலில்தான் வாழ்வேன் என சூளுரைத்த முஸ் அப் பின் உமைர் (ரலி) அவர்கள் ஒருபுறம் நேர் எதிரே உருவிய வாளோடு தம் அருமைச் சகோதரர் உபைத் பின் உமைர் மறுபுறம்,
சகோதர பாசமா? சன்மார்க்கத்தின் மீதான நேசமா? வென்றது சன்மார்க்கத்தின் மீதான நேசம் தான்,
ஆம்! அடுத்த கணமே, தன் சகோதர்ரை தம் வாளுக்கு இறையாக்கினார் முஸ் அப் (ரலி) அவர்கள்.
நூல்: தஹ்தீப் சீரத் இப்னு ஹிஷாம்
பாகம்:4, பக்கம்:420
தன்னோடு பிறக்காவிட்டாலும் இறைநம்பிக்கையாளர்களை தம் சொந்த சகோதரனைப் போலல்லவா உரிமை வழங்கச் சொல்கிறான் அல்லாஹ்.
நம் சொந்த சகோதரனாக இருந்தாலும் இஸ்லாத்தின் உரிமையை பறிக்க முயலும் பட்சத்தில் சகோதர பாசத்தைவிட சன் மார்க்க இஸ்லாத்தின் மீதான நேசமே உயர்வாய் தெரிந்த்து முஸ் அப் (ரலி) அவர்களுக்கு,
இறைத்தூதர் நூஹ் (அலை)மற்றும் இறைத்தூதர் லூத் (அலை) ஆகிய இருவர்களின் துணைவியரும் இறை நிராகரிப்பில் அதீத ஆர்வம் காட்டியபோது,
குறிப்பாக இறைத்தூதர் லூத் (அலை) அவர்களின் மனைவி இறைமறுப்பாளர்களின் மீது அனுதாபம் காட்டினாள், அவர்கள் தரங்கெட்ட செயலை செய்வதற்கு துணை போனாள்.
தங்களின் மனைவியரை கைவிடும் சூழ்நிலை ஏற்பட்டபோது மனமுவந்து இருவரம் கைவிட்டு விட்டனர்.

“நூஹ் உடைய மனைவியையும், லூத் உடைய மனைவியையும் அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கான உதாரணமாக எடுத்துக் காட்டுகின்றான்.
இவ்விருவரும் நம்முடைய இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர்.
எனினும், அவ்விருவரும் த்த்தமது கணவருக்கு துரோகமிழைத்தனர். பிறகு அவ்விரு நல்லடியார்களும் அல்லாஹ்வுக்கு எதிராக இவர்களுக்கு எவ்வித பயனையும் அளிக்க இயலவில்லை. அவ்விரு பெண்களிடம் நரக நெருப்புக்குள் செல்வோருடன் சேர்ந்து நீங்களும் சொல்லுங்கள் என்று சொல்லப்பட்டது
அல்-குர்ஆன்: 66:10
தன்னையே இறைவன் என்றான் ஃபிர்அவ்ன், தன் வேலையாட்களான சூனியக்காரர்கள் இஸ்லாத்தை ஏற்றபோது தன்னிடம் அனுமதி கேட்க வேண்டும் என்றான் ஃபிர் அவ்ன், அவனின் துணைவியார் ஆஸியா பின்த்மஸாஹிம் (ரலி) இதயத்தில் இஸ்லாம் குடி புகுந்த்து.
தங்களின் கண்முன்னே ஆடம்பர வாழ்வும், அரசி என்கிற பட்டமும், பணிவிடைபுரிய வரிசையில் நிற்கிற பணிப்பெண்களும், சொகுசு வாழ்க்கையும் தொடுகிற தூரத்தில் தான் இருந்த்து.
தூக்கி எறிந்தார்கள் ஆடம்பர மோகத்தை,
வாரி அணைத்துக் கொண்டார்கள் வல்ல ரஹ்மானின் நினைவோடு வாழும் வாழ்க்கையை.....
ஆம்! சாக்கடையில், ஒருபோதும் நறுமணம் கமழாது!
கணவன் – மனைவியின் உறவை அல்லாஹ் “அமைதியும், சாந்தியும் தவழும் உறவென்பான்.
இறைமறுப்பாளர்களின் கீழ் எப்படி இறை நம்பிக்கையாளர்கள் சாந்தியும் அமைதியும் பெற முடியும்.
ஆகவே, உதறித்தள்ளினார்கள் அன்னை ஆஸியா (ரலி).
உயர்த்திக் கூறினான் வல்லோன் அல்லாஹ் வான்மறையில்
இப்படி....
ஃபிர் அவ்னுடைய மனைவியை அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்களுக்கு உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றான். ஒரு சமயம் தம் இறைவனிடம் பிரார்த்த்த்தார்; என் அதிபதியே! எனக்காக உன்னிடத்தில் – சுவனத்தில் ஓர் மாளிகையை அமைத்துத் தருவாயாக! மேலும் ஃபிர் அவ்னை விட்டும் அவனுடைய செயலை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக! மேலும் கொடுமை புரியும் சமூகத்திலிருந்து எனக்கு விடுதலை அளிப்பாயாக!
அல்-குர்ஆன்: 66:10

அல்லாஹ்வின் கட்டளை மக்காவைவிட்டு மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ய வேண்டும் என்பதற்காக தமது குடும்பங்களையும் சொந்த பந்தங்களையும் உறவினர்களையும் விட்டுச் செல்ல நேர்ந்ததுபோல் பல நபித் தோழர்கள் அத்தகைய அர்ப்பணிப்பை மேற்கொண்டனர்.

அதற்குப் பிரதி பலனாக மக்கத்து முஹாஜிர்களை தம் உறவினர்களையும் விட மேலானவர்களாக மதிக்கக் கூடியவர்களாக மதீனத்து அன்ஸார்களை அல்லாஹ் உருவாக்கி கொடுத்தான்,

மேற்கூறிய இந்த ஐந்து அம்சங்களும் மனிதனால் மிகவும் மதிக்கப்படக்கூடிய உறவுகள், ஆகும்

தன் உணர்வோடும், சிந்தனையோடும் இரத்தம்போல் கலந்துவிட்ட ஒன்றாகும்.

சொல்லப்போனால், அவன் தன் வாழ்வின் பெரும் பகுதியை இவர்களுக்காகவே செலவழிக்கின்றான்.


இத்தகைய பாசப் பிணைப்புகளையும், குடும்ப்ப் பந்தயங்களையும் இறை நேசத்திற்காக, இறைத்தூதரின் மீதான காதலுக்காக அர்ப்பணிக்க முன்வருமாறு அல்லாஹ் அறை கூவல் விடுகிறான்.