Wednesday 18 June 2014

ரமழான் அல்லாஹ் எதிர் பார்ப்பது என்ன?

                                   ரமழான் அல்லாஹ் எதிர் பார்ப்பது என்ன?
 



ஏகத்துவத்தை ஏற்று பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கண்ட ஓர் சமூகம், இறை வழிபாட்டில் ஒரு புது வித இன்பத்தை சுவைத்துக் கொண்டிருந்த இனிய தருணம், அச்சுறுத்தல், அடி உதை, பெரும் காயம் உயிரிழப்பு ஊர் விலக்கம் என பல்வேறு அபாயகரமான கட்டங்களைத்தாண்டி வெற்றியின் சுகந்தத்தை நுகர ஆரம்பித்திருந்த இனிய பொழுது,

வருகிறது படைத்தோனாம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஓர் இறைக் கட்டளை, ஆம்! நபித்துவத்தின் 15 –ஆம் ஆண்டு,  மதீனாவில் அடியெடுத்து வைத்திருந்த 2 –ஆம் வருடத்தின் ஒரு நாள் பொழுதின் உதய நேரத்தில்..

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் மீது ஏனைய சமூக மக்களின் மீது கடமையாக்கப்பட்டது போன்று நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. நீங்கள் இறையச்சம் உள்ளவர்களாக மாற்றம் பெரும் பொருட்டு

அது வரை வல்லோனின் தூதை செவியேற்று இன்பமடைந்திருந்த அம் மேன்மக்கள் அப்போது தான் வல்லோனின் கட்டளைக்கு உருவாக்கம் கொடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

புதியதொரு கட்டளை, எத்தனை ஆண்டுகளோ, எத்தனை நாட்களோ இதை செய்ய ரஹ்மான் கட்டளையிடுகின்றானோ எனும் பதை பதைப்பு அம்மக்களின் இதயங்களில் ஊடுருவும் முன் அடுத்து அல்லாஹ்வே அதற்கான தெளிவையும் பிறப்பித்தான்.

أَيَّامًا مَعْدُودَاتٍ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَهُ وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ

எண்ணப்படுகின்ற குறிப்பிட்ட நாட்கள்.

அடுத்து அந்த நாட்களின் மகோன்னதம் குறித்து அல்லாஹ் சிலாகித்துக் கூறினான்.

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ

ரமழான் மாதம், அது எத்தகையதென்றால் மக்களுக்கு நேர்வழியையும், தெளிவையும் பிரித்துக் கூறுகின்ற குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதம்.

பிறகென்ன அம்மேன்மக்களின் வாழ்க்கையில் இறையச்சம் பிரவாக மெடுத்து ஓடியதை இன்ன பிற இறைக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்ட போது பார்க்க முடிந்தது.

அல்லாஹ் அந்த ஒற்றைக் கட்டளையின் மூலம் எது உருவாகும் என்று சொன்னானோ, அதை பரிசோதிக்க திடீரென அடுத்த சோதனையாக, அதே ஆண்டில், அதே மாதத்தில், சில தினங்களில் பத்ரின் வடிவத்தில்.

பத்ருக்கான தயாரிப்பில் அம்மேன்மக்கள் முன் மொழிந்த வீர வார்த்தைகளை வரலாறு பதிந்து வைத்திருக்கிறது.

அல்லாஹ்வின் கட்டளையை அம்மக்கள் அணுகிய விதம் அல்லாஹ்வை ஆனந்தப்படுத்தியது. அல்லாஹ்வும் அம்மக்களை வெற்றியை கையில் வழங்கி ஆனந்தப்படுத்தினான். ஆம்! பத்ரில் மாபெரும் வெற்றி.

அது மாத்திரமல்ல அடுத்த 6 ஆண்டுகளில் இன்னொருமொரு மாபெரும் வெற்றிஃபத்ஹ் மக்காஅதுவும் ரமலானில் தான் அல்லாஹ் அவர்களை கௌரவப் படுத்தினான்.

அல்லாஹ்வின் இன்ன பிற ஏவல், விலக்கல்கள் அதன் பின்னரே அந்த சமூகத்தை வந்தடைந்தது.

நோன்பின் மூலமாக அச்சமூகம் அடைந்த இறையச்சம் அம்மேன்மக்களை பல்வேறு புகழாரங்களுக்கு சொந்தக்காரர்களாக மாற்றியது.

فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا

அல்லாஹ் இப்படிக் கூறினான்: “நீங்கள் ஈமான் கொண்டால் அவர்களைப் போன்று ஈமான் கொள்ளுங்கள். அப்பொழுது தான் நீங்கள் நேர்வழியில் நிலைத்திருக்க முடியும்.”

எவ்வளவு உயர்ந்த ஒரு புகழாரம்!

நாமும் தான் எத்தனையோ ரமழானைக் கடந்திருக்கின்றோம். அல்லாஹ் ரமழானின் மூலம் அடியார்களிடம் எதிர்பார்க்கும் அந்த இறையச்சம் நம்மிடம் வந்திருக்கின்றதா?

வரவில்லை என்றால் ஏன்? என்று நாம் எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா?

ஒரு இறைக்கட்டளை நம்மிடம் மாற்றம் ஏற்படுத்திட வேண்டுமானால் அம்மேன்மக்களிடம் காணப்பட்ட பல குணாதிசயங்களை கொண்டவர்களாக நாம் உருவாகிட வேண்டும்.

ஆர்வம் வேண்டும்.

ஃகப்பாப் இப்னு அல் அரத் (ரலி) அவர்கள். மக்காவின் சந்தையில் அடிமையாய் இருந்து, பின்னர் உம்மு அன்மார் எனும் பெண்மணியால் விலைக்கு வாங்கப்பட்டு அடிமை ஊழியம் புரிந்தார்கள்.

இஸ்லாம் அவர்களின் இதயத்திலும் இடம் பெற்றது. அக்கிரமத்திற்கு ஆளானவர்களின் பட்டியலின் வரலாற்றில் அவர்களும் இடம் பெற்றார்கள்.

ஆம்! சொல்லெனா துயரத்திற்கும், கடும் சித்ரவதைக்கும் உள்ளாக்கப் பட்டார்கள்.

وكان رسول الله صلى الله عليه وسلم يألفه ويأتيه، فأخبرت مولاته بذلك، فكانت تأخذ الحديدة المحماة فتضعها على رأسه، فشكا ذلك إلى رسول الله صلى الله عليه وسلم فقال: " اللهم انصر خباباً " ، فاشتكت مولاته أم أنمار رأسها، فكانت تعوي مثل الكلاب، فقيل لها: اكتوى، فكان خباب يأخذ الحديدة المحماة فيكوي بها رأسها.
وشهد بدراً وأحداً والمشاهد كلها مع رسول الله صلى الله عليه وسلم.


நீண்ட இரும்புக் கம்பியை நெருப்பில் போட்டு சூடு காட்டி, பழுக்க காய்ச்சி அவரின் முன் நெற்றியில் சூடு போடுவாளாம் அவரின் எஜமானி உம்மு அன்மார். எப்போதாவது அல்ல, தினந்தோரும். அதை தினசரி செய்யும் காலைக் கடமையாகவே கொண்டிருந்தாளாம்.

வரலாற்றின் போக்கில் வசந்தம் வீசியது. ஆம் ஹிஜ்ரத் கடமையாக்கப்பட்டு மதீனா வந்தாகி விட்டது.

இரண்டே ஆண்டுகளில் பத்ர், அடுத்த ஆண்டு உஹத் அத்தணை போர்களிலும் முன் வரிசையில் முதல் நபராய் உருவிய வாளோடு நின்றார்கள்.

(நூல்: உஸ்துல் ஃகாபா)

கொஞ்சம் நிதானமாகவே சிந்தித்துப் பார்ப்போம். லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்கி விட்டு ஸஹர் வைப்பவர்கள் நம்மில் எத்துணை பேர்? சுபுஹ் தொழுகையை ஜமாஅத்தோடு தொழுபவர் எத்துணை பேர்?

அல்லாஹ்வின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டதற்காக நாம் ஏற்கனவே போதுமான அளவிற்கு சித்ரவதைகளை அனுபவித்து விட்டோம். இனி நாம் ஏன் போரில் கலந்து கொள்ள வேண்டும்? என ஆலோசித்துக் கொண்டிருக்க வில்லை நபித்தோழர் ஃகப்பாப் (ரலி) அவர்கள்.

ஆர்வத்தோடு அல்லாஹ்வின் கட்டளைக்கு செவி சாய்த்தார்கள். முன் வரிசையில் முதல் நபராக நின்றார்கள்.

உக்காஷா இப்னு மிஹ்ஸன் (ரலி) அவர்கள் நபிகளாரின் அவையிலே அமர்ந்திருந்தார்கள்.

அண்ணலார் {ஸல்} அவர்கள் மஹ்ஷரின் நிலைமைகளை விவரித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது நபி {ஸல்} அவர்கள்எவ்வித விசாரணையும் இன்றி 70000 நபர்கள் என் உம்மத்தவர்கள் சுவனம் நுழைவார்கள்என்று கூறினார்கள்.

சுற்றியிருந்த நபித்தோழர்கள் அவர்கள் எத்தகைய அமல் செய்தவர்கள்? என வினவ, நபிகளார் அதற்கான பதிலை விவரித்தார்கள்.

சற்றும் தாமதிக்காமல் உக்காஷா (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! அந்த எழுபதினாயிரம் நபர்களில் நானும் ஒருவனாக இருக்க விரும்புகின்றேன்! எனக்காக துஆ செய்யுங்கள்என்றார்கள்.

وبشره رسول الله صلى الله عليه وسلم أنه ممن يدخل الجنة بغير حساب.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்அல்லாஹ் உம்மையும் அவர்களில் ஒருவனாக ஆக்கட்டும்!” என்று துஆ செய்தார்கள்.

கன நேர ஆர்வம் சுவன வாசிகளில் ஒருவராக, விசாரணையின்றி சுவனம் செல்லும் பேறுபெற்றவராக மாற்றியது.

(நூல்: இஸ்தீஆப்)

 عن ابن إسحاق قال: حدثني عاصم بن عمر بن قتادة أن رسول الله صلى الله عليه وسلم قال: " إن صاحبكم لتغسله الملائكة " ، يعني حنظلة، فسألوا أهله: ما شأنه؟ فسئلت صاحبته فقالت: خرج وهو جنب حين سمع الهائعة فقال رسول الله صلى الله عليه وسلم: " لذلك غسلته الملائكة، وكفى بهذا شرفاً ومنزلةً عند الله تعالى " .


ஹன்ளலா (ரலி) அவர்கள். உஹத் நடை பெரும் அன்றைய முதல் நாளில் திருமணம் செய்கின்றார்கள்.

புதுமாப்பிள்ளை, பல ஆயிரம் கனவுகள் சூழ இல் வாழ்க்கையில் இணைகின்றார்கள்.

மறு நாள் விடிகின்றது. உஹதில் முஸ்லிம்கள் தோல்வியுற்று விட்டனர். பெருமானார் {ஸல்} அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். எனும் செய்தி காட்டுத்தீயாய் மதினா நகரெங்கும் பரவி விரவியது.

கடமையான குளிப்பிற்காக வீட்டின் முற்றத்தில் கையில் தண்ணீர் குவளையுடன் நின்று கொண்டிருந்த ஹன்ளலா (ரலி) அவர்களின் காதிலும் இந்தச் செய்தி விழுகின்றது.

தன் நிலை மறந்தார். உருவிய வாளுடன் போர்க்களம் சென்றார். தம்மால் இயன்ற வரை போராடினார். இறுதியில் இறைவழியில் அல்லாஹ்வின் சத்திய தீனுக்காக உயிரையும் நீத்தார்.

அவரின் ஆர்வம் அவரை ஷஹீத் எனும் அந்தஸ்திற்கு அழைத்துச் சென்றதோடு மாத்திரம் அல்லாமல்கஸீலுல் மலாயிக்காஎனும் சிறப்பு அந்தஸ்திற்கும் அழைத்துச் சென்றது.

(நூல்: இஸ்தீஆப்)

விழிப்புணர்வு வேண்டும்

சில போது நமக்கேற்படும் அசௌகர்யங்கள் மனிதர்கள் எனும் அடிப்படையில் மேன்மக்களான ஸஹாபாக்களுக்கும் ஏற்பட்டது. அதை தவறென உணர்த்திய போது மீண்டும் அது போன்ற செயல்கள் ஏற்படாமல் இருப்பதில் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட்டார்கள்.

அதை ஈடு செய்யும் எல்லா விதமான முயற்சிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

அல்லாமா குஷைரீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஒரு செய்தி: “ஒரு நாள் மக்ரிப் தொழுகையின் நேரம், மஸ்ஜிதுன் நபவீயில் பாங்கொலி சப்தம் கேட்டு சாரை சாரையாய் மக்கள் பள்ளிக்கு விரைந்து வந்து கொண்டிருந்தார்கள்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களும் பள்ளிக்குள் வருகை தருகின்றார்கள்.

அதே நேரத்தில், ஷாமிற்கு வியாபாரப் பொருட்களோடு சென்ற அவரின் வணிகக் கூட்டத்தினரும் அங்கே வருகை தருகின்றார்கள்.

அவர்களோடு பேசிவிட்டு, அவர்கள் கொண்டு வந்த லாபத்தைப் பெற்றுக் கொண்டு இருக்கும் போது இகாமத் சொல்லப்படுகின்றது.

அதற்குள் தக்பீர் தஹ்ரீமா அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களுக்கு தப்பி விடுகின்றது.

தொழுகையில் நபி {ஸல்} அவர்கள் வல் அஸ்ர் சூராவை ஓதினார்கள். தொழுகை முடிந்து வெளியே வந்த அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் தம்முடைய லாபம் அனைத்தையும் தர்மம் செய்து விட்டார்கள்.

தூரத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்த அண்ணலார் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களை அழைத்து காரணம் வினவிய போது,

நடந்தவற்றைக் கூறி விட்டு, நீங்கள் தொழுகையில்இன்னல் இன்ஸான லஃபீ ஃகுஸ்ர்என்று ஓதும் போது சிறு லாபத்திற்காக பெரும் நன்மையை (தக்பீர் தஹ்ரீமாவின்) நன்மையை இழந்து விட்டோமே! பெருத்த நஷ்டமல்லவா?” என்று உணர்ந்தேன்.

ஆதலால் தான் அந்த லாபமனைத்தையும் தர்மம் செய்து விட்டேன் என்று கூறினார்கள்.

இது கேட்ட நபிகளார் உண்மையில் உம்முடைய தர்மம் சிறந்ததே! என்றாலும் நீர் இழந்த அந்த தக்பீர் தஹ்ரீமாவின் நன்மையை இதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியாதுஎன்று கூறினார்கள்.

இதன் பின்னர் ஜமாஅத்தோடு, அவ்வல் தக்பீரோடு தொழுவதை அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் பிரயாணத்திலும் சரி, ஊரில் இருக்கும் போதும் சரி ஒரு போதும் விட்டதில்லை.

இதற்குப் பின் முன்பை விட அவர்கள் தன தர்மம் செய்வதை அதிகப் படுத்திக்கொண்டார்கள்.

عَنْ جَعْفَرِ بنِ أترقان، قَالَ:
بَلَغَنِي أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بنَ عَوْفٍ أَعْتَقَ ثَلاَثِيْنَ أَلْفَ بَيْتٍ

எந்த அளவுக்கென்றால், கடனின் பெயரால் அடமானத்திற்கு வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் முப்பதாயிரம் வீடுகளை தன் சொந்த பணத்தைக் கொண்டு மீட்டுக் கொடுத்தார்கள்.

(நூல்: அல் உஸுஸில் அக்லாகிய்யா ஃபீ ளவ்யி ஸீரத்துஸ் ஸஹாபா, ஸியர் அஃலா மின் நுபலா)

இறைவன் மீது வலுவான நம்பிக்கை வேண்டும்.

زِنِّيْرَةُ الرومية
زنيرة الرومية. كانت من السابقات إلى الإسلام، أسلمت في أول الإسلام، وعذبها المشركون. قيل: كانت مولاة بني مخزوم، فكان أبو جهل يعذبها. وقيل: كانت مولاة بني عَبْد الدار، فلما أسلمت عَمِيت، فقال المشركون: أعمتها اللات والعزى لكفرها بهما! فقالت: وما يدري اللات والعزى من يعَبْدهما، إنما هذا من السماء، وربي قادر على رد بصري، فأصبحت من الغد ورد الله بصرها، فقالت قريش: هذا من سحر مُحَمَّد. ولما رأى أبو بكر رضي الله عنه ما ينالها من العذاب، اشتراها فأعتقها، وهي أحد السبعة الذين أعتقهم أبو بكر.

ஸின்னீரா (ரலி) அவர்கள், ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்மணிகளில் ஒருவர்.

பனூ மக்ஸூமீ அல்லது பனூ அப்துத் தார் கோத்திரத்தார்களிடையே அடிமை ஊழியம் செய்து வந்தார்கள்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக கடும் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். விரும்பிய போதெல்லாம் அபூ ஜஹ்ல் கொடுமை செய்து வந்தான்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிற போது அவர்களுக்கு கண் பார்வை இல்லாமல் இருந்தது.

அப்போது மக்கா முஷ்ரிக்குகள் ஸின்னீரா (ரலி) அவர்களிடம் வந்து, ”நீ லாத் உஸ்ஸாவை நிராகரித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் தான் லாத்தும் உஸ்ஸாவும் உம் கண்களை குருடாக்கி விட்டனர்என்றார்கள்.

அது கேட்ட ஸின்னீரா (ரலி) அவர்கள், “எனக்கு ஏற்பட்ட இந்த திடீர் பாதிப்பு வானில் உள்ளோனின் நாட்டமாகும். என் பார்வை மீண்டும் திருப்பித் தருவதற்கு என் இறைவன் மிகவும் ஆற்றல் உடையவன் ஆவான்என்றார்கள்.

மறுநாளே அவர்களுக்கு கண் பார்வை கிடைத்து விட்டது. இந்தச் செய்தியை கேள்வி பட்டு, பார்த்துச் சென்ற மக்கா முஷ்ரிக்குகள்சத்தியமாக! இது முஹம்மதின் {ஸல்} சூனியம் தான் என்று கூறினார்கள்.

இறுதியில் அபூ பக்ர் (ரலி) அவர்கள் விலைக்கு வாங்கி உரிமை விட்டார்கள்.

                                                   (நூல்: உஸ்துல் காபா)

ஆசை வேண்டும்.

روى عطاء بن أبي رباح قال: قال لي ابن عباس: ألا أريك امْرَأَة من أهل الجنة؟ قلت: بلى. قال: هذه المرأة السوداء، أتت رسول الله صلّى الله عليه وسلّم فقالت: إن أُصرَع وإني أنكشف، فادع الله عَزَّ وجَلّ. قال: " إن شئتِ صبرتِ ولك الجنة، وإن شئت دعوت الله أن يعافيك " . فقالت: أصبر. قالت: فإني أنكشف، فادع الله أن لا أنكشف. فدعا لها.


அதாஃ இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “ஒரு நாள் நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தேன். என்னிடம் சுவர்க்கத்துப் பெண்மணியை உமக்கு நான் அடையாளம் காட்டட்டுமா? எனக் கேட்டார்கள்.

அப்போது நான், பேறு பெற்ற அப் பெண்மணி யார் என்று வினவினேன். அப்போது அங்கே வந்து கொண்டிருந்த ஒரு பெண்மணியை சுட்டிக் காட்டி, இதோ! இந்த கருப்பு நிற பெண் தான் அந்தப் பெண்மணி என்று கூறி விட்டு, என்னிடம் தொடர்ந்து கூறினார்கள்.

ஒரு நாள் நாங்கள் நபிகளாரோடு அமர்ந்திருந்தோம். அப்போது உம்மு ஸுஃபர் (ரலி) அவர்கள் நபிகளாரின் சபைக்கு வருகை தந்தார்கள். வந்தவர், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு வலிப்பு நோய் இருக்கின்றது.

திடீரென அது வரும் போது என் ஆடைகள் அகன்று விலகி விடுகின்றது, அதனால் நான் பல சங்கடங்களுக்கு ஆளாகின்றேன். என்னால் எங்கேயும் செல்ல முடிவதில்லை. ஆகவே, என் வலிப்பு நோய் நீங்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!” என்றார்கள்.

அது கேட்ட அண்ணலார், நீ விரும்பிய வாரே நான் துஆ செய்கின்றேன். என்றாலும் நீ பொறுமையை மேற்கொண்டால் உமக்கு கேள்வி கணக்கின்றி சுவனம் செல்லும் நஸீப் பாக்கியம் கிடைக்கப் பெறுவாய்! இதில் எதை நீ விரும்புகின்றாய்! என்று நபிகளார் {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு அப்பெண்மணி நான் அல்லாஹ்விற்காக பொறுத்துக் கொள்கின்றேன். ஆனாலும் வலிப்பு வருகிற போது என் ஆடை விலகாமல் இருக்க நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்என்று கூறி சென்று விட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்பெண்மணிக்காக துஆ செய்தார்கள்.

                                         (நூல்: இஸ்தீஆப், உஸ்துல் ஃகாபா)

ஆக எந்த ஒரு இறைக் கட்டளையும் நம்மிடம் மாற்றம் ஏற்படுத்திட வேண்டுமானால் இது போன்ற குணாதிசயங்களை கொண்டவர்களாக நாம் நம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

எனவே, எதிர் வருகிற ரமழானை முழுமையாக பயன் படுத்தி அல்லாஹ் எதிர் பார்க்கும் மாற்றத்தைப் பெற்றவர்களாக ஆக முயற்சிக்க வேண்டும்.

ரமழானை வரவேற்பதில் முன்னோர்களின் ஆர்வம்.

قال معلى ابن الفضل : كانوا يدعون الله ستة أشهر أن يبلغهم رمضان ، ثم يدعونه ستة أشهر أن يتتقبل منهم رمضان .
وقال يحيى ابن كثير كان من دعائهم : اللهم سلمني إلى رمضان ، وسلم لي رمضان ، وتسلمه مني متقبلاً يا رب الأنام .

முஅல்லா இப்னு அல் ஃபள்ல் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

நல்லோர்களான முன்னோர்கள் ஆறு மாத காலத்திற்கு முன்னரே ரமழானை அடைந்திட அல்லாஹ்விடம் துஆ செய்வார்கள்.

பிந்திய ஆறு மாத காலம் அந்த ரமழானில் செய்த இபாதத்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென அல்லாஹ்விடம் துஆ செய்வார்கள்.

யஹ்யா இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

முன்னோர்களான சீதேவிகள் ரமழான் என்னை சாந்தியோடு சந்திக்கவும், ரமழானை நான் சாந்தியோடு சந்திக்கவும் இறைவா நீ அருள் புரிவாயாக! மேலும், ரமலானில் நான் செய்கிற வணக்கங்களை பூரணமாக ஏற்றுக் கொள்வாயாக!” என்று துஆ செய்வார்கள்.

நபி {ஸல்} அவர்கள் நபித்தோழர்களை ஆர்வமூட்டுதல்.
عند أحمد والنسائي من حديث أبو هريرة : كان رسول الله صلى الله عليه وسلم يبشر أصحابه بقدوم رمضان فكان يقول لهم : ( قد جاءكم شهر رمضان ، شهر مبارك ، افترض الله عليكم صيامه ، يفتح فيه أبواب الجنة ، ويغلق فيه أبواب الجحيم ، وتُغل فيه الشيطان ، فيه ليلة خير من ألف شهر ، من حُرم خير تلك الليلة فقد حُرم الخير ) عند أحمد والنسائي من حديث أبي هريرة .
قال ابن رجب هذا الحديث أصل في تهنئة الناس بعضهم بعضاً بشهر رمضان ..

      அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ரமழானை முன்னோக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் நபித்தோழர்களை நோக்கி மேற்கூறியவாறு ஆர்வமூட்டுவார்கள்.

இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “இந்த ஹதீஸ் ரமழான் வருகையைக் கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்வதை அங்கீகரிக்கின்றது.

 நோன்பின் சிறப்பு.

عن رجاء بن حيوه عن أبي أمامة : أنشأ رسول الله صلى الله عليه وسلم جيشاً فأتيته فقلت يا رسول الله :ادعو الله لي بالشهادة ، فقال : ( اللهم سلمهم وغنمهم ) فغزونا فسلمنا وغنمنا .. حتى ذكر ذلك ثلاثة مرات ، قال ثم أتيته فقلت : يا رسول الله : إني أتيتك تترى - يعني ثلاث مرات - أسألك أن تدعو لي بالشهادة فقلت : ( اللهم سلمهم وغنمهم ) فسلمنا وغنمنا .. يا رسول الله فمرني بعمل أدخل به الجنة .. مرني بعمل أدخل به الجنة، فقال (عليك بالصوم فإنه لامثل له ) ، قال فكان أبو أمامة لا يُرى في بيته الدخان نهاراً إلا إذا نزل بهم ضيف ، فإذا رأوا الدخان نهاراً عرف الناس أنهم قد اعتراهم الضيوف ..


 நபி {ஸல்} அவர்கள் ஒரு படைப் பிரிவை ஓரிடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். படை புறப்படும் முன் அப்படைப்பிரிவில் இடம் பெற்றிருந்த அபூ உமாமா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஷஹாதத் கிடைத்திட துஆ செய்யுங்கள்! என வேண்டி நின்றார்கள்.

அப்போது அண்ணலார் யா அல்லாஹ் இந்தப் படையில் எவ்வித உயிரிழப்பும் இன்றி மிகுதமான கனீமத்தோடு அனைவரும் திரும்பி வர நீ அருள் புரிந்திடு! என்று துஆ செய்தார்கள்.

அது போன்றே நடந்தது. இது போன்று இன்னும் இரண்டு முறை படையை அனுப்பும் போது அபூ உமாமா வேண்டிக்கொண்ட போதும் நபிகளார் {ஸல்} அவர்கள் முன்பு போலவே துஆ செய்தார்கள்.

பிறகு ஒரு நாள் அபூ உமாமா (ரலி) அவர்கள் நபி {ஸல்} அவர்களைச் சந்தித்து அல்லாஹ்வின் தூதரே! என்னை சுவனத்தில் நுழைய வைத்திடும் ஓர் அமலை எனக்கு அறிவித்துத் தாருங்கள்! என்று கேட்டார்கள்.

அப்போது மாநபி {ஸல்} நோன்பு பிடிப்பதை பற்றிப்பிடித்து வாருங்கள்! அதற்கு நிகரான எந்த ஒரு வணக்கமும் இல்லை” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸை அறிவிக்கும் ராவி கூறுகின்றார்கள்: “இதற்குப் பின்னர் எந்தக் காலத்திலும் அவர் வீட்டில் பகல் காலங்களில் அடுப்பெறிய நாங்கள் கண்டதில்லை.

அப்படியே அடுப்பெரிந்தாலும் அங்கு சென்று பார்த்தால் அங்கே விருந்தாளிகள் வந்திருப்பார்கள்.

நோன்பு வைப்பதில் ஆர்வம்.

عن أبي الدرداء رضي الله عنه قال : خرجنا مع النبي صلى الله عليه وسلم في بعض أسفارنا في يوم حار حتى يضع الرجل يده على رأسه من شدة الحرارة وما فينا صائم إلا نبينا صلى الله عليه وسلم وابن رواحة ..


நாங்கள் கோடை காலத்தில் நடை பெற்ற போர்க்களங்களங்களுக்கு பயணமாகிற போது எங்களில் நபி {ஸல்} அவர்களும், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களும் (இருவர் மாத்திரமே) நோன்பிருக்க கண்டோம்” என அபுத் தர்தா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

أما أبو طلحة الأنصاري الذي قال عنه رسول الله صلى الله عليه وسلم : ( لصوت أبي طلحة في الجيش خير من ألف رجل ) ..عن أنس رضي الله عنه قال : كان أبو طلحة لا يصوم على عهد النبي صلى الله عليه وسلم من أجل الغزو .. فلما قُبض النبي صلى الله عليه وسلم لم أره يفطر إلا يوم أضحى أو يوم فطر .
( أما حكيم الأمة وسيد والقراء أبا الدرداء فقد قال : لقد كنت تاجراً قبل أن يبعث محمد صلى الله عليه وسلم ، فلما بُعث زاولت العبادة والتجارة فلم يجتمعا فأخذت بالعبادة وتركت التجارة.. تقول عنه زوجه : لم تكن له حاجة في الدنيا ، يقوم الليل ويصوم النهار ما يفتر..
لله درهم..
( أما من خبر الإمام القدوة المتعبد المتهجد عبد الله بن عمر فيكفيه قول النبي صلى الله عليه وسلم : ( نعمَ العبد عبد الله ) .. قال عنه نافع : كان ابن عمر لا يصوم في السفر ولا يكاد يفطر في الحضر .

عن ابن عمر رضي الله عنهما قال: ما مات عمر حتى سرد الصوم .
( أما أمير البررة وقتيل الفجرة عثمان .. قال أبو نُعيم عنه : حظه من النهار الجود والصيام ، ومن الليل السجود والقيام ..

عن عبد الرحمن بن قاسم أن عائشة كانت تصوم الدهر ..
وعن عروة أنَّ عائشة كانت تسرد الصيام ..
قال القاسم : كانت تصوم الدهر لا تفطر إلا يوم أضحى أو يوم فطر ..
بعث لها معاوية مرة بمائة ألف درهم فقسّمتها ولم تترك منها شيئاً ، فقالت بريرة : أنت صائمة فهلا ابتعت لنا منها بدرهم لحماً ، فقالت : لا تعنفيني ، لو كنت أذكرتني لفعلت ..
إنها الصديقة بنت الصديق ، العتيقة بنت العتيق ، حبيبة الحبيب ، وأليفة القريب ، المبرأة من العيوب رضي الله عنها وأرضاها ...

நபித்தோழர்களில் உமர் (ரலி), உஸ்மான் (ரலி), ஆயிஷா (ரலி), அபூ தல்ஹா (ரலி), இப்னு உமர் (ரலி) அபுத் தர்தா (ரலி – அன்ஹும்) போன்றோர் பெரும் பாலான நாட்கள் நோன்பிருக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள்.

ரமழானில் ஸாலிஹீன்களின் இபாதத்.

كان العلماء من السلف وهم الذين أناروا للأمة طريقها بسنة رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وببيان الأحكام، وهم الذين قاموا مقام الأنبياء، وورثوا ميراث النبوة، { وإن الأنبياء لم يورثوا ديناراً ولا درهماً وإنما ورثوا العلم }.
فهؤلاء العلماء كانوا إذا جاء شهر رمضان، يتركون العلم، ويتفرغون لقراءة القرآن، حتى قال بعضهم: [[إنما هما شيئان: القرآن والصدقة ]].
وكان الإمام الزهري رحمه الله تعالى كذلك.
وكذلك كان الإمام مالك ، وهو ممن تعلمون منزلته وقيمته واهتمامه بحديث رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وتعظيمه له، حتى إنه كان لا يحدثهم إلا وهو على وضوء ويبكي ويتخشع، وكان يقدِّر ويُجل حديث رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؛ ومع ذلك كان إذا دخل رمضان، لم يشتغل بالحديث بل يترك الحديث ويقبل على القرآن.
وكذلك كان سفيان الثوري رضي الله عنه، وغيرهم من السلف كثير، ممن كانوا ينظرون إلى أن هذا هو موسم الخير تترك فيه الأعمال الفاضلة إلى ما هو أفضل منها، فهذا حالهم وهذا شأنهم.


இமாம் மாலிக் (ரஹ்), சுஃப்யான் அஸ் ஸவ்ரீ (ரஹ்), ஸுஹ்ரீ (ரஹ்) ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) போன்றோர் ரமழானில் முழுக்க முழுக்க குர்ஆன் ஓதுவதிலேயே நேரத்தை கழிப்பார்கள்.

இப்ராஹீம் இப்னு ஹாத்தப் (ரஹ்) அவர்கள் தங்களின் தந்தை வாயிலாக அறிவிக்கின்றார்கள்: என் தந்தை ஒரு நாள் நபிகளாரின் பள்ளிவாசலுக்கு ஸஹர் நேரத்திலே போனார்களாம். அப்போது பள்ளியின் ஓரத்தில் இருந்து ஒருவர் அழுது அழுது துஆ கேட்டுக்கொண்டிருந்தார்.

அருகே சென்ற போது அவர் அல்லாஹ்விடம் இப்படிக் கேட்டுக் கொண்டிருந்தாராம் “யா அல்லாஹ் நீ ஏவியதற்கு நான் கட்டுப்பட்டு உன்னிடம் மன்னிப்பை கேட்கின்றேன் நீ என்னை மன்னித்து விடு! ஏனெனில் நீ ஸஹர் நேரத்தில் மன்னிப்பு கேட்க சொல்லி இருக்கின்றாய்! இது ஸஹர் நேரமாகும்!

அது யார் என்று பார்த்த போது, அங்கே இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களாக இருந்தார்கள்.

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “நாங்கள் ஸஹர் நேரத்தில் தொழுகைக்குப் பிறகு ஸஹரின் கடைசி நேரத்தில் 70 முறை இஸ்திக்ஃபார் கேட்பதற்கு நபிகளாரால் ஏவப்பட்டிருந்தோம்”.

ஆகவே, எதிர்வருகிற ரமழானை முந்தைய ரமழான் போல் ஆக்கி விடாமல் நம் வாழ்க்கையை அல்லாஹ் எதிர் பார்த்திடும் படியாக மாற்றிடும் ரமழானாக ஆக்கிட முயற்சி செய்வோம்.

பின் வரும் துஆவை ரமழான் வரும் வரை தினந்தோரும் அல்லாஹ்விடம் மன்றாடிக் கேட்போம்!

اللهم بلغنا رمضان .. اللهم بلغنا رمضان ..اللهم بلغنا رمضان ..
وارزقنا صيامه وقيامه إيماناً واحتساباً يا ذا الجلال والإكرام ..
اللهم وفقنا فيه لفعل الطاعات..
ووفقنا فيه لترك المعاصي والمنكرات ..
اجمع فيه شملنا .. ووحد فيه صفنا ..
وأصلح فيه ولاة أمورنا ..
وانصر فيه المجاهدين..
وسدد فيه الدعاة والعلماء الربانيين ..
وفق فيه الشباب ووالشيب .. والنساء والإماء..
لتوبة نصوح واستقامة وثبات حتى الممات يا رب العالمين ..

அல்லாஹ் பூரணமான உடல் நலத்துடன், எந்த விதமான கேடுகள் முஸீபத்கள் இல்லாமல் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு மற்றும் இதர உபரியான இபாதத்கள் செய்திடும் நல்ல நஸீபை உங்களுக்கும் எனக்கும் தந்தருள் பாளிப்பானாக!

                 ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!

                            வஸ்ஸலாம்!!!








Wednesday 11 June 2014

தேய்ந்து வரும் அறச்சிந்தனையும், அர்ப்பணிப்பு உணர்வும்…

     தேய்ந்து வரும் அறச்சிந்தனையும், அர்ப்பணிப்பு உணர்வும்

      இன்று சமூகத்திலே எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் அதில் உலகாதாய நோக்கம் பிரதானமாக பார்க்கப்படுகின்றது.

எந்தத் துறையாக இருப்பினும் உலக நன்மைக்கே முன்னுரிமை தரப்படுகின்றது.

அர்ப்பணிப்பு உணர்வுகளும், அறச் சிந்தனைகளும் உயர் பண்புகளும் இன்று கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமலாகிக் கொண்டிருக்கின்றது.

முழுக்க முழுக்க தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும், தன்னைச் சார்ந்தவர்களுக்காகவும் வாழ்கிற சுயநலச் சிந்தனை பெருகி, பொது நலமும், பிறர் நலனின் மீதான அக்கறையும் அருகிப் போய் விட்டது.

وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ وَلَا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ

அல்லாஹ் கூறுகின்றான்: “அல்லாஹ் உனக்கு வழங்கியுள்ள செல்வத்தின் மூலம் மறுமையின் வீட்டைப் பெற அக்கறை கொள்; மேலும் இம்மையிலும் உனது பங்கை மறந்து விடாதே! மேலும், அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்திருப்பதைப் போன்று நீயும் பிறருக்கு உபகாரம் செய்.”

பொதுவாக அறச்சிந்தனை என்பது வசதி வாய்ப்புகள் உள்ளவர்களிடமும், அர்ப்பணிப்பு உணர்வு என்பது எல்லா வகையிலும் அல்லாஹ் சிறப்பு படுத்தி வைத்திருப்பவர்களிடமிருந்தும் வெளிப்பட வேண்டும்.

அறச்சிந்தனை இல்லையாயின் அழிவு நிச்சயம்.

إِنَّا بَلَوْنَاهُمْ كَمَا بَلَوْنَا أَصْحَابَ الْجَنَّةِ إِذْ أَقْسَمُوا لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَ (17) وَلَا يَسْتَثْنُونَ (18) فَطَافَ عَلَيْهَا طَائِفٌ مِنْ رَبِّكَ وَهُمْ نَائِمُونَ (19) فَأَصْبَحَتْ كَالصَّرِيمِ (20) فَتَنَادَوْا مُصْبِحِينَ (21) أَنِ اغْدُوا عَلَى حَرْثِكُمْ إِنْ كُنْتُمْ صَارِمِينَ (22) فَانْطَلَقُوا وَهُمْ يَتَخَافَتُونَ (23) أَنْ لَا يَدْخُلَنَّهَا الْيَوْمَ عَلَيْكُمْ مِسْكِينٌ (24) وَغَدَوْا عَلَى حَرْدٍ قَادِرِينَ (25) فَلَمَّا رَأَوْهَا قَالُوا إِنَّا لَضَالُّونَ (26) بَلْ نَحْنُ مَحْرُومُونَ (27) قَالَ أَوْسَطُهُمْ أَلَمْ أَقُلْ لَكُمْ لَوْلَا تُسَبِّحُونَ (28) قَالُوا سُبْحَانَ رَبِّنَا إِنَّا كُنَّا ظَالِمِينَ (29) فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَلَاوَمُونَ (30) قَالُوا يَا وَيْلَنَا إِنَّا كُنَّا طَاغِينَ (31) عَسَى رَبُّنَا أَنْ يُبْدِلَنَا خَيْرًا مِنْهَا إِنَّا إِلَى رَبِّنَا رَاغِبُونَ (32) كَذَلِكَ الْعَذَابُ وَلَعَذَابُ الْآخِرَةِ أَكْبَرُ لَوْ كَانُوا يَعْلَمُونَ

அல்லாஹ் அல்குர்ஆனின் அல் கலம் அத்தியாயத்தின் 17 –ஆம் வசனத்தில் இருந்து 33 –ஆம் வசனம் வரை இரு பிரிவினரின் இரகசிய உரையாடல் குறித்து விவரிக்கின்றான்.

அதில் அறச் சிந்தனை முற்றிலும் இல்லாமல் போன ஒரு பிரிவினரின் தோட்டம் முழுவதும் இல்லாமல், அல்லாஹ்வின் தண்டனைக்கு உள்ளாகி இருப்பதைக் கண்ணுற்றார்கள் என்று குர்ஆன் விவரிக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மதீனாவிற்கு வந்த உடன் முதன் முதலில் அந்த மக்களுக்கு அறச் சிந்தனையையும், அர்ப்பணிப்பு உணர்வையும் ஏவினார்கள், தூண்டினார்கள்.

அதன் விளைவாக மார்க்கமும் மேலோங்கியது. சமுதாய மக்களின் வாழ்க்கையின் தரமும் உயர்ந்தது.

அந்த மக்கள் எல்லா நிலைகளிலும் இந்த இரண்டு அம்சங்களையும் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தார்கள் என வரலாறு பதிவு செய்திருக்கின்றது.

ஸஹாபாக்களும்.. அறச்சிந்தனையும்…

அல்லாஹ்வின் ஒரேயொரு கட்டளை அந்த பெருமக்களின் வாழ்க்கையை முற்றிலுமாய் மாற்றிப்போட்டது.

எந்த அளவுக்கெனில், இருக்கும் போதும் அள்ளிக் கொடுத்தார்கள். இல்லாத போதும் கொடுக்க முடியாமல் போனது குறித்து ஏங்கினார்கள்.

அடியோடு மாற்றிய அந்த இறைக்கட்டளை.

لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ وَمَا تُنْفِقُوا مِنْ شَيْءٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ

அல்லாஹ் கூறுகின்றான்: “உங்களுக்கு விருப்பமானவற்றை இறைவழியில் அர்ப்பணிக்காத வரை நீங்கள் நன்மையினை அடைந்திட முடியாது. மேலும், எதனை நீங்கள் அர்ப்பணித்தாலும் திண்ணமாக, அல்லாஹ் அதனை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.”

இந்த இறை வசனம் இறங்கிய பின்னர் தான் ஒவ்வொரு நபித்தோழர்களும் அறத்திலும், அர்ப்பணிப்பிலும் தங்களை ஈடுபடுத்தினார்கள்.

وقال الإمام أحمد: حدثنا روح، حدثنا مالك، عن إسحاق بن عبد الله بن أبي طلحة، سمع أنس بن مالك يقول: كان أبو طلحة أكثر أنصاري (2) بالمدينة مالا وكانَ أحبَّ أمواله إليه بيْرَحاءُ -وكانت مُسْتقْبلة المسجد، وكان النبي صلى الله عليه وسلم يدخلها ويشرب من ماء فيها طيّب-قال أنس: فلما نزلت: { لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ } قال أبو طلحة: يا رسول الله، إن الله يقول: { لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ } وإن أحبَّ أموالي إلَيَّ بيْرَحاءُ وإنها صدقة لله أرجو بِرَّها وذُخْرَها عند الله تعالى، فَضَعْها يا رسول الله حيث أراك الله [تعالى] (3) فقال النبي صلى الله عليه وسلم: "بَخٍ، ذَاكَ مَالٌ رَابِحٌ، ذَاكَ مَالٌ رَابِح، وَقَدْ سَمِعْتُ، وَأَنَا أرَى أنْ تجْعَلَهَا فِي الأقْرَبِينَ". فقال أبو طلحة: أفْعَلُ يا رسول الله. فَقَسَمها أبو طلحة في أقاربه وبني عمه. أخرجاه

முதன் முதலாக இதைத் துவக்கிவைத்தவர்கள் அபூ தல்ஹா அன்ஸாரி (ரலி) அவர்கள். தங்களுக்கு மிகவும் விருப்பமான பைருஹா தோட்டத்தை அறமாக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் தந்தார்கள்.

                                               (நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர்)

இதைக் கொண்டு தான் மாநபி {ஸல்} இஸ்லாத்தின் முதல் அறக்கட்டளையை நிறுவினார்கள்.

وكذلك فعل زيد ابن حارثة، عمد مما يحب إلى فرس يقال له (سبل) وقال: اللهم إنك تعلم أنه ليس لي مال أحب إلي من فرسي هذه، فجاء بها [إلى ] «2» النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فقال: هذا في سبيل الله. فقال لأسامة بن زيد (اقبضه). فكأن زيدا وجد من ذلك في نفسه. فقال رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إن الله قد قبلها منك). ذكره أسد بن موسى. وأعتق ابن عمر نافعا مولاه، وكان أعطاه فيه عبد الله بن جعفر ألف دينار. قالت صفية بنت أبي عبيد: أظنه تأول قول الله عز وجل:" لَنْ تَنالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ".

அடுத்து ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்கள் ”தங்களது வீட்டில் இருந்து அழுது புலம்பியவர்களாக யாஅல்லாஹ்! என்னிடத்திலே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பணம் ஒன்றும் இல்லை. என்னிடம் நான் மிகவும் நேசிக்கின்ற ஒன்றாக இதோ இந்த குதிரை மட்டும் தான் இருக்கின்றது. இதோ அதையும் உனக்காக அர்ப்பணித்து விடுகின்றேன்” என்று சொல்லியவராக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்து குதிரையை கொடுத்து விட்டுச் சென்றார்கள்.


அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் (ரலி) அவர்கள் 1000 தீனாரை எடுத்துக் கொண்டு வந்து நபி {ஸல்} அவர்களிடம் கொடுத்தார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் தங்களின் அடிமையான நாஃபிஉ (ரலி) அவர்களை விடுதலை செய்தார்கள்.

                                             (நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ)

عن ابن عمر رضي الله عنهما أن عمر تصدق بمال له على عهد رسول الله ? وكان يقال له: ثمغ، وكان به نخل، فقال عمر: يا رسول الله إني استفدت مالاً، وهو عندي نفيس، فأردت أن أتصدق به، فقال النبي ?: تصدق بأصله، لا يباع ولا يوهب، ولا يورث، ولكن ينفق ثمر. فتصدق به عمر، فصدقته تلك في سبيل الله، وفي الرقاب، والمساكين، والضيف وابن السبيل، ولذوي القربى، ولا جناح على من وليه أن يأكل بالمعروف، أو يؤكل صديقه غير متمولٍ به(251)، وفي رواية: أصاب عمر بخيبر أرضاً، فأتى النبي ? فقال: أصبت أرضاً لم أصب مالاً قط. أنفس منه، كيف تأمرني به؟ قال:إن شئت حبست أصلها وتصدقت بها، فتصدق عمر: أنه لا يباع أصلها، ولا يوهب، ولا يورث، في الفقراء وذوي القربى، والرقاب، وفي سبيل الله، والضيف، وابن السبيل، لا جناح على من وليها أن يأكل منها بالمعروف، أويطعم صديقاً غير متموِّل فيه(252)، فهذا الموقف العمري فيه فضيلة ظاهرة للفاروق رضي الله عنه ورغبته في المسارعة للخيرات، وإيثاره الحياة الآخرة على الحياة الفانية.

உமர் (ரலி) அவர்கள் நபிகளாரின் சமூகத்திற்கு வருகை தந்தார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! எனக்கு கைபரில் கிடைத்த ஒரு பங்கு நிலமான “ஸமஃக்” உள்ளது.

அதை விடவும் சிறந்த மதிப்புமிக்க வேறொரு பொருள் என்னிடம் இல்லை; நான் அதனை அல்லாஹ்விற்காக அர்ப்பணிக்க விரும்புகின்றேன். அதற்காக நான் என்ன செய்ய வேண்டும்? அன்பு கூர்ந்து எனக்கு ஆலோசனை நல்குங்கள்” என்று பணிவுடன் வேண்டி நின்றார்கள்

அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “உமரே! நீர் விரும்பினால் அதன் அசலை வக்ஃப் செய்து விடுங்கள்! அதில் இருந்து கிடைக்கும் லாபத்தை தர்மம் செய்து விடுங்கள்.” என்று கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நல்கிய ஆலோசனையின் படி தங்களின் நிலத்தை அர்ப்பணிப்புச் செய்தார்கள்.

அதாவது, அந்த நிலம் விற்கவோ, அன்பளிப்புச் செய்யவோ பட மாட்டாது. அதற்கு யாரும் வாரிசு ஆகவும் முடியாது. அதன் முழு வருமானமும் ஏழை, எளியோர், வறியோர், வறுமையில் வாடும் உமர் (ரலி) அவர்களின் உறவினர்கள், விருந்தாளிகள், பிரயாணிகள் ஆகியோருக்கு செலவழிக்கப்படும்.

மேலும், அடிமையை விடுதலை செய்யவும், சன்மார்க்கப் போருக்காக செலவழிக்கவும் அதில் இருந்து பயன் படுத்தலாம். மேலும், இந்தச் சொத்தைக் கண்காணித்துப் பாதுகாப்பவர் என்கிற முறையில் அவரும் நியாயமான முறையில் சிறிது எடுத்துக் கொள்ளலாம். அல்லது அவரின் நண்பர்களுக்கும் அதிலிருந்து தர்மமாக வழங்கிக் கொள்ளலாம். ஆனால்,ஒரு போதும் அதிலிருந்து சொத்தாக எதையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

(நூல்: ஃப்ஸ்லுல் கிதாப் ஃபீ ஸீரதி இப்னுல் கத்தாப் லில் இமாமிஸ் ஸுல்லாபி)

பிரிதொரு சந்தர்ப்பத்தில், அண்ணல் நபி {ஸல்} அவர்கள் “மனிதன் இறந்த பிறகு அவனுடைய பணிகள் இவ்வுலகத்தை விட்டும் நின்று விடுகின்றன; ஆனால், மூன்று பணிகளைத் தவிர! அவை அவனைத் தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றது; அவற்றின் நன்மையும் அவனுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கின்றன! நீடித்த தர்மம், பயன் தரும் கல்வி, அவனுக்காக பிரார்த்தனை புரியும் அவனுடைய நல்ல சந்ததிகள்.” என்று கூறினார்கள்.

இந்த அறிவிப்பிற்கு பிறகு, முன்பை விட நபித்தோழர்களிடையே அறச்சிந்தனையும், அர்ப்பணிப்பு உணர்வும் மிகுதியாகி காணப்பட்டது.

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “உமர் (ரலி) அவர்களைத் தொடர்ந்து உஸ்மான் (ரலி) அவர்களும், அலீ (ரலி) அவர்களும், ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி) அவர்களும் தாங்கள் அதிகம் விரும்பிய, நேசித்த பெரும் நிலங்களை அறப்பணிகளுக்கு ஈடுபடுத்திட அர்ப்பணிப்பு உணர்வுடன் முன் வந்தார்கள்.

எந்த அளவுக்கென்றால், ஓரளவு வசதியுள்ள எந்தவொரு நபித்தோழரும் அர்ப்பணிப்புச் செய்யாமல் இல்லை என்று சொல்லும் அளவிற்கு தங்கள் சொத்துக்களை அல்லாஹ்வின் பாதையில் அள்ளித் தந்து சமுதாய முன்னேற்றத்தில் மிகப் பெரும் பங்காற்றினார்கள்” என்பதை நான் அறிவேன்.

வரலாற்றில் கல் மனதை கரைத்திடும் வல்லமை கொண்ட இப்படியும் ஒரு செய்தி உண்டு…

روى عنه الحسن بن أَبي الحسن وقتادة أَنه قال: اللهم، إِني تصدقت بعرضي على عبادك. روى ابن عيينة، عن عمرو بن دينار، عن أَبي صالح، عن أَبي هرَيرة أَن رجلاً من المسلمين قال: اللهم، إِنه ليس لي مال أَتصدق به، وإني قد جعلت عرضي صدقَةً لله، من أَصاب منه شيئاً من المسلمين. قال: فأوجب النبي صلى الله عليه وسلم أَنه قد غُفِر له، أَظنه أَبا ضمضم.
وروى من حديث ثابت، عن أَنس أَن رسول الله صلى الله عليه وسلم قال: " ألا تحبون أن تكونوا كأبي ضمضم " ؟ قالوا: يا رسول الله، ومن أَبو ضمضم؟ قال: " إِن أَبا ضمضَم كَانَ إِذَا أصبَحَ قَالَ: " اللهم إني قد تصدقت بعرضي على من ظلمني " .
أَخرجه أَبو عمر.


அனஸ் (ரலி) அவர்கள் மற்றும் அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள்:

ஒரு நாள் அண்ணல் நபி {ஸல்} அவர்கள் “தோழர்களே! நீங்கள் அபூ ளம்ளமை (ரலி) ப்போல ஆகிட பிரியப்படுகின்றீர்களா? என்று கேட்டார்கள்.

அதற்கு ஸஹாபாக்கள் ”அல்லாஹ்வின் தூதரே! யார் அந்த அபூ ளம்ளம்? என வினவினார்கள்.

அதற்கு, அண்ணலார் “ஒவ்வொரு நாள் விடியும் போதும் அவர் அல்லாஹ்விடம் இப்படி மன்றாடுகின்றார் “ யாஅல்லாஹ்! உன் பாதையில் அர்ப்பணித்திட என்னிடம் பொருளாதார வளம் இல்லை. என் உடல் ஊனத்தால் என்னால் அதை ஈட்டிட முடியவில்லை. ஆகவே, என்னை யாராவது குறை படுத்தி, ஏசிப் பேசி இருந்து, அதை உனக்காக நான் பொருந்திக் கொண்டிருப்பேன்.

அந்த பொறுமைக்கு நீ ஏதாவது கூலி வழங்கலாம் என நினைத்திருப்பாய், அப்படி நீ வழங்கும் அந்த கூலியை நான் உன்னுடைய பாதையில் அர்ப்பணிக்கின்றேன்! என்று..

இதைக் கூறிய அண்ணலார் {ஸல்} அவர்கள் “அவரின் பிழைகளை மன்னிப்பதை அல்லாஹ் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்” இன்னொரு அறிவிப்பில், ”அல்லாஹ் அவருக்கு தர்மம் வழங்கிய நன்மையை கொடுப்பதை தன் மீது கடமையாக்கிக் கொண்டான்” என்று கூறினார்கள்.

         (நூல்: அல் இஸ்தீஆப் ஃபீ மஃரிஃபத்தில் அஸ்ஹாப், உஸ்துல் ஃகாபா)

உலகில் வேறெந்த மதமும் வழங்கிடாத மகத்தான வழிகாட்டலை இந்த மனித சமூகத்திற்கு இஸ்லாம் வழங்கியது.

இஸ்லாமியம் இந்த உலகில் கோலோச்சிய கால கட்டத்தில் மேற்கூறிய அறச் சிந்தனையின், அர்ப்பணிப்பு உணர்வின் உந்துதலால் தான் வறுமை, அடிமைத்தனம், ஏழ்மை, பசி, நோய், பஞ்சம், தீண்டாமை, அறியாமை, கல்லாமை, இல்லாமை போன்ற மனிதனை அழிக்க வல்ல பல தீய இடர்களிலிருந்து மனித சமூகத்தை மிகக் கவனமாக பாதுகாக்க முடிந்தது.

ஒரு படி மேலாகச் சொல்ல வேண்டுமானால், ஆசிரியர், மு. குலாம் முஹம்மத் அவர்கள் தங்களது “இஸ்லாமிய நாகரிகம்” எனும் நூலில் “முஸ்லிம் தனவந்தர்கள் சிலர் சில அறக்கட்டளைகளை உருவாக்கினார்கள். இவை அதிசயமான அறக்கட்டளைகள். இவற்றில் சில நிலப்பரப்புகளைத் தானமாகத் தந்தார்கள்.

இந்த நிலப்பரப்புகள் வயது வந்த மிருகங்களின் உணவாகப் பயன்படும் தழைகளையும், செடிகளையும் வளர்க்கப் பயன்படுத்தப் படவேண்டும் என உயில் எழுதித் தந்தார்கள்.

இப்படி உருவாகிய அறக்கட்டளைகளில் ஒன்று மாராஜ் – இ – அக்ஸர். இது டமஸ்கஸில் இருக்கின்றது. இதிலுள்ள மேய்ச்சல் பகுதிகள், தங்கள் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட குதிரைகளின் உணவறைகளாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்தக் குதிரைகள் இவற்றில் தங்கள் ஆயுள் உள்ளவரைக்கும் அக்குதிரைகள் மேய்ந்தன.

டமஸ்கஸில் உள்ள இன்னொரு அறக்கட்டளை பூனைகளுக்காகவே உருவாக்கப்பட்டது. பூனைகளுக்கு இங்கே உணவும் உறைவிடமும் அளிக்கப்பட்டன.

அவற்றுக்காக கட்டப்பட்ட வீடுகளில் நூற்றுக்கணக்கான பூனைகள் வாழ்ந்தன. இங்கே பூனைகளுக்கு உணவும், உறைவிடமும் கிடைத்ததால் அவை அங்கிருந்து வெளியே சென்றிட வில்லை. அவை வெளியே சென்றதெல்லாம் விளையாடவும், குதூகலித்திருக்கவுமே!

இஸ்லாமிய நாகரிகத்திற்கென தனியானதோர் வரலாறு உண்டு. வேறெந்த நாகரிகமும் இப்படியொரு பெருமையை பெற்றிட முடியாது.

    (நூல்: இஸ்லாமிய நாகரிகம், மிருகங்களிடம் அன்பும் பரிவும் எனும் பகுதி)

மனிதர்களுக்கு மட்டுமல்ல மிருகங்களுக்கும் முஸ்லிம்களின் அறச்சிந்தனையால் பயன்பாடுகள் கிடைத்திருக்கின்றன.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் காலத்தோடு நின்று விட வில்லை. நபித்தோழர்களின் அர்ப்பணிப்பு உணர்வுகள்.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் அது பல்கிப் பெருகி இருந்தது. வரலாற்று ஆசிரியர் காலித் முஹம்மத் காலித் (ரஹ்) அவர்கள் தங்களது ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்} எனும் நூலில் பதிவு செய்திருக்கும் ஒரு செய்தி இதோ..

ஃகப்பாப் இப்னு அல் அரத் (ரலி) அவர்கள் நாயகத்தோழர்களில் நபிகளாருக்கு மிகவும் பிடித்தமானவர்கள்.

சன்மார்க்கத்திற்காக ஆரம்ப காலத்தில் உடலால் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஒரு நாள் உமர் (ரலி) அவர்களை ஃகாப்பாப் (ரலி) அவர்கள் சந்திக்க வருகின்றார்கள்.

வந்தவர்களை முகமுன் கூறி வரவேற்ற உமர் (ரலி) அவர்கள் தாங்கள் அமர்கிற ஆசனத்தில் ஃகப்பாப் (ரலி) அவர்களை அமர வைத்து விட்டு, இந்த இடத்தில் அமர்வதற்கு உங்களுக்கும் பிலால் (ரலி) அவர்களுக்கும் மட்டுமே தகுதி இருப்பதாக நான் கருதுகின்றேன்” என்றார்கள்.

அது கேட்ட ஃகப்பாப் (ரலி) அவர்கள், அப்படியேல்லாம் சொல்லி விடாதீர்கள். பிலால் கொடுமைப் படுத்தப் படுகிற போது அவரின் மீது இரக்கம் கொள்ள அன்றைக்கு அபூ பக்ர் (ரலி) போன்ற சில நல்லவர்கள் இருந்தார்கள்.

ஆனால், உம்மு அன்மார் வீட்டில் அடிமையாக இருந்த போது தான் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். எனக்கிழைத்த கொடுமை போல் வேறெவருக்கும் கொடுமை இழைக்கப்படவில்லை.

அக்கொடுமையில் இருந்து என்னை சிறிது நேரம் நிறுத்தி வைப்பதற்கு கூட ஒரு ஆள் கிடையாது.
அவர்கள் விரும்பிய போதெல்லாம் என்னை கொடுமையில் வாட்டி எடுத்தார்கள் என்று கூறியவர்களாக தன் மேல் போர்த்தியிருந்த மேல் துண்டை எடுத்து தங்களின் முதுகுப் புறத்தைக் காட்டினார்கள்.

கன நேரம் தான் உமர் பார்த்திருப்பார்கள். சட்டென முகத்தை திருப்பியவர்களாக அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! என் வாழ்நாளில் இப்படியொரு முதுகை நான் கண்டதே இல்லை! ஃகப்பாப் அவர்களே! என்று கூறி கதறி அழுதார்கள் உமர் (ரலி) அவர்கள்.

ஃகப்பாப் (ரலி) அவர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட சித்ரவதையை உமர் (ரலி) அவர்களிடம் தொடர்ந்து கூறினார்கள்.

”நெருப்பை மூட்டி என்னை அதில் தள்ளுவார்கள். என் நெஞ்சின் மீது இரு கால்களையும் வைத்து அழுத்தியவாறு ஒருவன் நிற்பான். ஆனால், என் முதுகந்தண்டின் கொழுப்பு உருகி அத்தீயை அணைத்து விடும். இப்படியே பல நாட்கள் பல தடவை என்னை கொடுமை படுத்தி இருக்கின்றார்கள் இதனால் பல நேரங்களில் நெருப்புக் கங்குகளோடு என் முதுகு பல நேரங்களில் ஒட்டி விடும். அதன் வடுவைத்தான் இன்று நீங்கள் பார்க்கின்றீர்கள்.”

                                                 (நூல்: அல் இஸ்தீஆப்)

இந்த உரையாடல் நடைபெறுகிற போது ஃகப்பாப் அவர்களுக்கு 65 வயது. உமர் (ரலி) அவர்களுடன் சந்திப்பு நடைபெற வில்லையாயின் ஃகப்பாப் அவர்களின் தியாகம் இஸ்லாமிய உலகிற்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இதற்குப் பின்னர் உமர் (ரலி) அவர்கள் ஏராளமான அன்பளிப்புகளையும், அரசின் மான்யங்களையும் ஃகப்பாப் (ரலி) அவர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார்கள். உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்திலும் இது தொடர்ந்தது.

وقد أتاح هذا الدخل الوفير لخبّاب أن يبتني له دارا بالكوفة، وكان يضع أمواله في مكان ما من الدار يعرفه أصحابه وروّاده.. وكل من وقعت عليه حاجة، يذهب فيأخذ من المال حاجته..
ومع هذا فقد كان خبّاب لا يرقأ له جفن، ولا تجف له دمعة كلما ذكر الرسول عليه الصلاة والسلام وأصحابه الذين بذلوا حياهم للله، ثم ظفروا بلقائه قبل أن تفتح الدنيا على المسلمين، وتكثر في أيديهم الأموال.

இராக்கின் கூஃபாவிற்கருகே எளிய ஓர் வீட்டில் தங்களின் வாழ்க்கையை கழித்து வந்த அவர்கள் “தங்களுக்கு வருகின்ற மானியங்களையும், பணம் காசுகளையும் வீட்டின் நடுவே கொட்டிவைத்து” யார் யாருக்கு தேவைப்படுகின்றதோ அவர்கள் வந்து தங்களின் தேவைக் கேற்ப எடுத்துச் செல்லலாம்” எனும் பொது அறிவிப்பை அறிவித்து இருந்தார்கள்.

எந்நேரமும் அவர்களின் இல்லம் திறந்தே இருக்கும். சதா எப்போதும் யாராவது வந்து தங்களுக்கான பொருட்களை எடுத்துச் சென்று கொண்டே இருப்பார்கள்.

سمعوه وهو يتحدث االى عوّاده الذين ذهبوا يعودونه وهو رضي الله عنه في مرض موته.
قالوا له:
أبشر يا أبا عبدالله، فانك ملاق اخواتك غدا..
فأجابهم وهو يبكي:
" أما انه ليس بي جزع .. ولكنكم ذكّرتموني أقواما، واخوانا، مضوا بأجورهم كلها ام ينالوا من الدنيا شيئا..
وانّا بقينا بعدهم حتى نلنا من الدنيا ما لم نجد له موضعا الا التراب"..
وأشار الى داره المتواضعة التي بناها.
ثم أشار مرة أخرى الى المكان الذي فيه أمواله وقال:
" والله ما شددت عليها من خيط، ولا منعتها من سائل"..!
ثم التفت الى كنفه الذي كان قد أعدّ له، وكان يراه ترفا واسرافا وقال ودموعه تسيل:
" أنظروا هذا كفني..
لكنّ حمزة عم الرسول صلى الله عليه وسلم لم يوجد له كفن يوم استشهد الا بردة ملحاء.... اذا جعلت على رأسه قلصت عن قدميه، واذا جعلت على قدميه قلصت عن رأسه"..!


ஃகப்பாப் அவர்கள் நோய்வாய்ப் பட்டு மரணப்படுக்கையில் வீழ்ந்து கிடக்கின்றார்கள். அழுது கொண்டே இருப்பார்களாம். வீட்டிற்கு நலம் விசாரிக்கச் செல்லும் நபித்தோழர்களில் சிலர் “அழாதீர்கள்! உங்களின் பழைய இஸ்லாமிய நண்பர்களையல்லவா நீங்கள் சந்திக்க இருக்கின்றீர்கள்! மகிழ்ச்சியோடு இருங்கள்! என்று கூறுவார்களாம்.

அதைக் கேட்கிற போது, ஃகப்பாப் (ரலி) அவர்கள் “என் உயிரோடும் உணர்வோடும் ஒன்றித்து விட்ட அந்த உத்தமர்களை நான் நினைக்கும் போதெல்லாம் என் உள்ளம் கசிந்து விடுகின்றது.

அவர்கள் அல்லாஹ்விற்காகவே வாழ்ந்தார்கள். அவனுக்காகவே இறந்தும் போனார்கள். அவர்கள் தங்களின் நல்லறங்களுக்கான கூலியை முழுமையாகப் பெற்ற வண்ணமல்லவா இவ்வுலகை விட்டுச் சென்றார்கள்.

ஆனால், நானோ அவர்களுக்குப் பின்னரும் கூட உயிர் வாழ்கின்றேனே? உலகத்தின் சுக போகங்களை அனுபவிக்க வேண்டியதாயிற்றே? சத்தியமாகச் சொல்கின்றேன்! ஒரு நூலிழையைக் கொண்டு கூட இந்தச் சொத்துக்களை நான் கட்டிக்காத்திட வில்லை. மாறாக, தேவையுள்ளவர்களுக்காக என் வீட்டின் கதவுகளை நான் திறந்தே வைத்து விட்டேன்!

சொல்லிக் கொண்டே, தனக்காக தயாராய் வைத்திருந்த கஃபன் துணியைச் சுட்டிக் காட்டி “தோழர்களே! ஹம்ஸா (ரலி) அவர்களும், முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்களும் உஹதிலே ஷஹீத் ஆனார்கள். ஆனால், அவர்களின் தலையை மூடினால் காலும், கால்களை மூடினால் தலையும் தெரியும் அளவிற்கு தானே இருந்தது. ஆனால், என்னுடைய கஃபன் அவர்களுக்குரியதை போன்றா இருக்கின்றது?” என்று கூறி தேம்பித் தேம்பி அழுதார்களாம்.

இறுதியாக, ஹிஜ்ரி 37 –ஆம் ஆண்டில் தங்களது 73 –வது வயதில் மறுமை வாழ்க்கைக்குப் பயணமானார்கள்.    

                                  (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்} )

ஸஹாபாக்களைப் பொருத்த வரையில் அவர்கள் எல்லா நிலைகளிலும் அறச்சிந்தனையோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள்.

ஆனால், இன்றைக்கு சமூகத்திலே தனவந்தர்களும் வசதிபடைத்தவர்களும் தங்களின் பொருளாதாரத்தை எங்கு முடக்கினால் நாம் இறந்த பின்னரும் நம் சந்தததிகள் லாபம் அடைவார்கள் என்று ரியல் எஸ்டேட்டிலும், தங்கத்திலும் கொண்டு முடக்கி பொருளாதாரத்தையும் உலக மோகத்தையும் நோக்கமாக கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

முன் சென்ற ஒரு சமூக மக்களின் வாழ்க்கை நமக்கு இன்றளவும் திறந்த புத்தகமாய் இருந்து கொண்டிருக்கின்றது.

அருகிப் போயிருக்கும் அறச்சிந்தனையையும், அர்ப்பணிப்பு உணர்வையும் பெருகச் செய்திட முயற்சிப்போம்!

அல்லாஹ்வின் அருள் இந்த உம்மத்திற்கு தட்டில்லாமல் கிடைத்திட மனம் உருகி பிரார்த்திப்போம்!

வல்ல ரஹ்மான் அத்தகைய ஈகையை நம் செல்வந்தர்களுக்கும், செல்வந்தர்களாகி ஈந்தளிக்கும் அந்தப் பாக்கியத்தை நமக்கும் தந்தருள் பாளிப்பானாக!

                ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!

                           வஸ்ஸலாம்!!!