Wednesday 22 April 2015

விழுதுகளை விருட்சமாக்குவோம்!



விழுதுகளை விருட்சமாக்குவோம்!



சிறந்த தலைமுறையை கொண்டிருக்கிற ஓர் சமூகமே உயர்ந்த சமூகமாக இவ்வுலகில் பரிணமிக்க முடியும்.

இன்றைய நவீன உலகில் வாழும் மனித சமூகத்திற்கு முன்னால் இருக்கிற மிகப்பெரும் சவாலே இது தான்.

குறிப்பாக இஸ்லாமிய சமூகம் நல்லதோர் தலைமுறையை உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஏனெனில், கலை, கலாச்சாரம், கல்வி, பண்பாடு, சூழல், ஒழுக்கம் என அனைத்தும் மாசுபட்டு இருக்கிற காலச்சூழ்நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

அநாகரீகம் நாகரீகமாகவும், பாவம் நன்மையாகவும், அலட்சியம் ஆரோக்கியமாகவும், ஒழுக்கச்சீரழிவுகள் உயர்பண்பாடாகவும், கலாச்சார சிதறல்கள் மதிப்பின் அடையாளமாகவும் கருதப்படுகிற ஓர் அபாயகரமான பாதையில் எம் சமூகத்தின் தலைமுறையினர் பயணிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

இஸ்லாத்தின் போதனைகளை, வழிகாட்டும் நெறிமுறைகளை வணக்க வழிபாடுகளோடு நிறுத்திக்கொண்டதன் விளைவாக, நடைமுறை வாழ்க்கைக்கும், யதார்த்தமான உலகிற்குமான பண்பியல்களை அறியாத ஓர் மலட்டுச் சமூகத்தை சமீப காலமாக இஸ்லாமிய உலகு கண்டுகொண்டிருக்கிறது.

எனவே, இனிவரும் காலங்களில் இது போன்ற மலட்டுச் சமூகம் உருவாகாமல் பாதுகாக்கவும், உருவாகியிருக்கிற மலட்டுச் சமூகத்தை செப்பனிடவும் தீவிர நடவடிக்கைகளில் இஸ்லாமிய சமூகம் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய பொன்னான தருணம் இது.

ஒரு தலைசிறந்த சமூகத்தின் உருவாக்கம் என்பதும், ஒரு தலைசிறந்த மனிதனின் உருவாக்கம் என்பதும் சிறுபிராயத்திலிருந்தே, குழந்தைப் பருவத்திலிருந்தே துவங்கப்பட வேண்டும்.

இதோ கோடை விடுமுறை வந்து விட்டது. நம் வீட்டு குழந்தைகள், சிறார்கள் இது நாள் வரை பள்ளிக்கூடம், டியூஷன், ஸ்பெஷல் கிளாஸ், எக்ஸ்ட்ரா கிளாஸ் என ஒரு நீண்ட கல்விச் சூழலில் பயணித்து வந்திருக்கின்றார்கள்.

இப்போது, கிடைத்திருக்கிற விடுமுறை எனும் அரிய வாய்ப்பை பயன்படுத்தி அவர்களை செப்பனிடும் வகையிலே இஸ்லாமியமயமாக்கும் முயற்சியிலே பெற்றோர்களும் சமூகமும் ஈடுபட முன்வர வேண்டும்.

எப்படி நாம் ரமழானை தக்வாவின் பயிற்சிக் கூடமாக பயன் படுத்துகிறோமோ அது போன்று இந்த விடுமுறை நாளை சிறந்த தலைமுறையை உருவாக்கும் பயிற்சிப் பட்டறையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ ()

சுவையாக உண்ணுங்கள்; பருகுங்கள்! ஓய்வு நாட்களில் நீங்கள் ஆற்றிய நற்காரியங்களுக்குப் பகரமாக!”                           ( அல்குர்ஆன்: 69:24 )

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை, ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழிக்கு ஏற்ப இன்று உருவாக்கப்படும் சிறந்த குழந்தைகளே நாளைய சிறந்த தலைமுறையினர்! இன்று நன்கு கவனிக்கப்படும் விழுதுகளேவேர்களே, நாளைய விருட்சங்கள்பயன்கள் பல தரும் மரங்கள்! என்பதை மறந்து விடக்கூடாது.

எனவே, நாம் நம்முடைய குழந்தைகளை, சிறார்களை இஸ்லாமிய ஒளியில் வார்த்தெடுப்போம்.

குழந்தைகளை நல்வழிப்படுத்தும் பணி எப்போது துவங்கப்பட வேண்டும்?

பெரும்பாலான பெற்றோர்களுக்கு தங்களின் குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் அவர்களின் 15 வயதிலிருந்து 25 வயதுக்கிடையில் தான் ஏற்படுகிறது.

இது முற்றிலும் தவறான ஒன்றாகும். ஏனெனில், இஸ்லாம் புதுமணத் தம்பதியர்களாக இணையும் அந்த தருணத்திலேயே துவங்கிவிடுவதாகக் கூறுகின்றது.

ஆரம்பமாக, அவர்கள் நல்ல குழந்தைகளை, பேறுபெற்ற நன்மக்களை பெற்றெடுக்க வேண்டும் என ஆசிக்குமாறும், அதையே பிரார்த்தனையாக வல்ல ரஹ்மானிடம் கேட்குமாறும் தூண்டுகிறது.

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ ()

இறைவா! எனக்கு சந்ததியை வழங்குவாயாக! அந்த சந்ததி உத்தமர்களில் ஒருவராக இருக்கவேண்டும்.”                                ( அல்குர்ஆன்: 37:100 )

இபாதுர்ரஹ்மான்ரஹ்மானின் அடியார்களின் சிறப்புப் பண்புகளில் ஒன்றாக குர்ஆன் விமர்சிக்கும் போது

وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا ()

எங்கள் இறைவனே! எங்கள் துணைகளையும், எங்கள் குழந்தைகளையும் எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக! மேலும், எங்களை இறையச்சமுடையோருக்குத் தலைவர்களாய் திகழச் செய்வாயாக!.”                                                ( அல்குர்ஆன்: 25:74 )

திருமணத்தன்றைய முதலிரவில் இருந்து எப்பொழுதெல்லாம் குழந்தை ஆசையோடு இல்லற வாழ்க்கைக்குள் தம்பதியர்கள் நுழைகின்றார்களோ அப்பொழுதெல்லாம் இப்படியான ஒரு பிரார்த்தனையைச் செய்யுமாறு ஏவுகிறது.


அல்லாஹ்வின் பெயரால் தொடங்குகின்றேன். இறைவா! எங்களை விட்டு ஷைத்தானை விலக்குவாயாக! எங்களுக்கு நீ வழங்கப்போகும் குழந்தைச் செல்வத்தை விட்டும் ஷைத்தானை விலக்குவாயாக!” இந்த துஆவைக் கொண்டு துவங்கப்பட்ட உறவின் மூலம் குழந்தை பாக்கியம் உண்டாகுமானால் ஒருக்காலமும் ஷைத்தான் அந்த குழந்தையை நெருங்கமாட்டான்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அடுத்து குழந்தை பிறந்து பேச ஆரம்பித்ததிலிருந்து 7 –வயது வரை உள்ள பருவம். ஏழு வயதிற்குள் அல்லாஹ்வைப் பற்றியுண்டான அறிவிலிருந்து துவங்கி, ஷரீஆவின் ஏவல், விலக்கல், ஹராம், ஹலால் வரை உண்டான அனைத்து விஷயங்களையும் அந்த குழந்தைக்கு ஓர் பெற்றோர் புகட்டி விட வேண்டும்.


ஏனெனில், நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் இயற்கை மார்க்கத்தின் மீதே பிறக்கின்றன. எனினும், அவர்களின் பெற்றோர்களே அந்தக் குழந்தைகளை யூதனாகவோ, மஜூஸியாகவோ, கிறிஸ்துவனாகவோ மாற்றிவிடுகின்றார்கள்.”              ( நூல்: இப்னு கஸீர் )

உங்கள் குழந்தைகள் ஏழுவயதை அடைந்து விட்டால் தொழுமாறு ஏவுங்கள்; அவர்கள் பத்து வயதை அடைந்து விட்டால் தொழுகைக்காக அடியுங்கள்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

ஏழு வயதானவுடன் தொழு என்று ஏவ வேண்டுமானால் தொழுகையைப் பற்றி அந்தக் குழந்தை தெரிந்திருக்க வேண்டும். அத்தோடு ஏன் தொழுகிறோம் என்கிற அறிவும் அந்தக் குழந்தைக்கு சொல்லித் தரப்பட வேண்டும்.

ஆக, குழந்தை பேச ஆரம்பித்ததிலிருந்து ஏழு வயதுக்குள் ஒரு குறிப்பிட்ட அளவிலான ஷரீஆவின் அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.

மர்யம் (அலை) அவர்களின் விவகாரம் குறித்த நீண்ட விளக்கத்தில் மர்யம் அத்தியாயத்தில் அல்லாஹ் குறிப்பிடும் போது, அந்தச் சமூகம் ஏதேனும் கேள்வி கேட்டால் தொட்டிலில் கிடக்கும் குழந்தையை கைகாட்டுமாறு அல்லாஹ் மர்யம் (அலை) அவர்களுக்கு ஆணை பிறப்பித்தான்.

அது போன்றே அவர்களின் சமூகம் வினா எழுப்ப, மர்யம் (அலை) அவர்கள் தொட்டிலில் கிடந்த குழந்தையான ஈஸா (அலை) அவர்களை நோக்கி கையை காண்பித்தார்கள்.

அப்போது, ஈஸா (அலை) அவர்கள்….

قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيًّا () وَجَعَلَنِي مُبَارَكًا أَيْنَ مَا كُنْتُ وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا () وَبَرًّا بِوَالِدَتِي وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا () وَالسَّلَامُ عَلَيَّ يَوْمَ وُلِدْتُ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّا ()

நான் அல்லாஹ்வின் அடிமை ஆவேன். அவன் எனக்கு வேதம் அருளினான். என்னைத் தூதராகவும் ஆக்கினான்; பெரும் பாக்கியமுடையவனாகவும் ஆக்கினான் நான் எங்கிருந்தாலும் சரியே!

தொழுகை மற்றும் ஜகாத்தை நிறைவேற்றுமாறும் அவன் எனக்கு கட்டளை பிறப்பித்துள்ளான், நான் உயிரோடு இருக்கும் காலம் வரை!

மேலும், என் தாயின் கடமையை நிறைவேற்றுபவனாகவும் என்னை ஆக்கியுள்ளான். மேலும், முரடனாகவும், துர்பாக்கியமுள்ளவனாகவும் என்னை அவன் ஆக்கவில்லை”.  ( அல்குர்ஆன்: 19: 29- 32 )

எப்படிப்பட்ட சூழ்நிலையில் ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ் பேச வைத்தான் என்பதை இதற்கு முன்னுள்ள வசனங்கள் குறிப்பிடுகின்றன.

ஆனாலும், அவர்கள் அந்தச் சூழ்நிலையையோ, அல்லது தங்களின் அற்புதப் பிறப்பு குறித்தோ அவர்கள் பேசவில்லை.

அல்லாஹ் இங்கே மறைமுகமாக ஒன்றைச் சுட்டிக்காட்டுகின்றான்ஒரு குழந்தை பேச ஆரம்பித்தவுடன் தான் அல்லாஹ்வின் அடிமை என்பதில் துவங்கி இஸ்லாத்தின் உயர் கடமைகள், பெற்றோர் நலன் பேணுதல் ஆகியவை குறித்து நன்றாக போதிக்கப்பட வேண்டும்என்று.

ஃபிர்அவ்ன் உடைய மகளுக்கும், மனைவிக்கும் சிகை அலங்கார பணி செய்த மாஷிதா (ரலி) அவர்கள் வரலாறு வனப்பானதோர் எடுத்துக்காட்டாகும்.

அவர்கள் பெயர் அறியப்படாவிட்டாலும் அவர்கள் செய்த பணியின் பெயராலேயே அவர்கள் வரலாற்றில் அறியப்படுகின்றார்கள்.

عن ابن عباس قال: قال رسول الله صلى الله عليه وسلم: "لما أسري بي، مرت بي رائحة طيبة، فقلت: ما هذه الرائحة؟ قالوا: ماشطة بنت فرعون وأولادها،

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்நான் மிஃராஜ் விண்ணுலகப் பயணத்திற்காக அழைத்துச் செல்லப் பட்ட போது பைத்துல்முகத்தஸின் அருகே நறுமணம் கமழ்வதை உணர்ந்தேன். அப்போது இங்கே நறுமணம் கமழ்வது ஏன்? என ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் வினவினேன்.

அதற்கு, ஜிப்ரயீல் (அலை) அவர்கள்இந்த நறுமணம் ஃபிர்அவ்னுடைய அரண்மனையில், ஃபிர்அவ்னுடைய மகளுக்கும், மனைவிக்கும் சிகை அலங்காரம் செய்யும் பணிப்பெண்ணாக வேலை செய்த மாஷிதா அவர்களின் கப்ரிலிருந்தும், அவர்களின் குழந்தைகளின் கப்ருகளில் இருந்தும் வருகின்றது.

சத்திய சன்மார்க்கத்திற்காக பல்வேறு சித்ரவதைகளையும், கொடுமையையும் ஃபிர்அவ்ன் அப்பெண்மணிக்கு இழைத்தான். அப்பெண்மணி பொறுமையை மேற்கொண்டு சத்திய தீனில் உறுதியாகவும் இருந்த காரணத்திற்காக அல்லாஹ் இத்தகையப் பேற்றை வழங்கியிருக்கிறான்” என்று பதிலளித்தார்கள்.

                                                      ( நூல்: இப்னு கஸீர் )

وقال أبو جعفر الرازي، عن الربيع بن أنس، عن أبي العالية قال: كان إيمانُ امرأة فرعونَ من قبل إيمان امرأة خازن فرعون، وذلك أنها جلست تمشط ابنة فرعون، فوقع المشط من يدها، فقالت تعس من كفر بالله؟ فقالت لها ابنة فرعون: ولك رب غير أبي؟ قالت: ربي ورب أبيك ورب كل شيء اللهُ. فلطمتها بنتُ فرعونَ وضربتها، وأخبرت أباها، فأرسل إليها فرعون فقال: تعبدين ربا غيري؟ قالت: نعم، ربي وربك ورب كل شيء الله. وإياه أعبد فعذبها فرعون وأوتد لها أوتادًا فشد رجليها ويديها وأرسل عليها الحيات، وكانت كذلك، فأتى عليها يومًا فقال لها: ما أنت منتهية؟ فقالت له: ربي وربك وربُ كل شيء الله. فقال لها: إني ذابح ابنك في فيك إن لم تفعلي. فقالت له: اقض ما أنت قاض. فذبح ابنها في فيها، وإن روح ابنها بشرها، فقال لها: أبشري يا أمه، فإن لك عند الله من الثواب كذا وكذا. فصبرت ثم أتى [عليها] فرعون يومًا آخر فقال لهامثل ذلك، فقالت له، مثل ذلك، فذبح ابنها الآخر في فيها، فبشرها روحه أيضًا، وقال لها. اصبري يا أمه فإن لك عند الله من الثواب كذا وكذا. قال: وسمعت امرأة فرعون كلامَ روح ابنها الأكبر ثم الأصغر، فآمنت امرأةُ فرعونَ، وقبض الله روح امرأة خازن فرعون، وكشف الغطاء عن ثوبها ومنزلتها وكرامتها في الجنة لامرأة فرعون حتى رأت فازدادت إيمانًا ويقينًا وتصديقًا، فاطَّلع فرعون على إيمانها، فقال للملأ ما تعلمون من آسية بنت مزاحم؟ فأثنوا عليها، فقال لهم: إنها تعبد غيري. فقالوا له: اقتلها. فأوتد لها أوتادًا فشد يديها ورجليها، فدعت آسية ربها فقالت: { رَبِّ ابْنِ لِي عِنْدَكَ بَيْتًا فِي الْجَنَّةِ } فوافق ذلك أن حضرها، فرعون فضحكت حين رأت بيتها في الجنة، فقال فرعون: ألا تعجبون من جنونها، إنا نعذبها وهي تضحك، فقبض الله روحها، رضي الله عنها  .

இமாம் அபூ ஜஅஃபர் அர்ராஸி (ரஹ்) அவர்கள் அபுல் ஆலியா (ரஹ்) அவர்களின் வாயிலாக அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் ஃபிர்அவ்னுடைய மகளுக்கு சிகை அலங்காரம் செய்து கொண்டிருந்த போது கையில் இருந்து தவறி சீப்பு கீழே விழுந்தது. அதை மாஷிதா (ரலி) அவர்கள்பிஸ்மில்லாஹ்கூறி எடுத்தார்கள்.

இதைக்கவனித்த ஃபிர்அவ்னுடைய மகள்பிஸ்மில்லாஹ்வின் பொருள் குறித்து விளக்கம் கேட்ட போது, ஏகத்துவ விளக்கத்தையும், தான் மூஸா (அலை) அவர்களின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டிருப்பதையும் விவரமாகக் கூறினார்கள்.

ஆணவம் பிடித்தவனின் மகளல்லவா? ஓங்கி ஓர் அடி அடித்து விட்டு, தம் தந்தையிடம் வந்துதந்தையே! நம் அரண்மனையிலேயே உம்மை இறைவனாக ஏற்றுக்கொள்ளாத ஒரு பெண்மணி இருக்கிறாள்என்று கூறி நடந்த சம்பவத்தைக் கூறினாள்.

இது கேட்டு வெகுண்டெழுந்த ஃபிர்அவ்ன், மாஷிதா (ரலி) அவர்களை அழைத்துஎன் அல்லாத வேறொரு கடவுள் இருக்கின்றானாமே? அவனைத்தான் நீ வணங்குகின்றாயாமே? இது உண்மையா?” என்று கேட்டான்.

அதற்கு, மாஷிதா (ரலி) அவர்கள்ஆம்! என்னுடைய, உம்முடைய, இந்த பேரண்டம் முழுவதிலுமுள்ள அனைத்தினுடைய ஏக இறைவனாக அல்லாஹ் ஒருவனே இருக்கின்றான். அவனையே நான் வணங்குகின்றேன்! இனிமேலும் நான் வணங்குவேன்!” என்று பதிலளித்தார்கள்.

இது கேட்டு ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ஃபிர்அவ்ன் கயிற்றாலும், சங்கிலியாலும் கட்டிப்போட்டு கடும் சித்ரவதைகளைச் செய்தான். இனிமேலும், உன் மார்க்கத்திலும் கொள்கையிலும் நீ உறுதியோடு இருந்தால் நிறைய இழப்புக்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தான்.

இறைநம்பிக்கையும், ஏகத்துவ எழுச்சியும் இதயத்தில் நங்கூரமாய் பாய்ந்திருந்த காரணத்தால் மாஷிதா (ரலி) அவர்கள் அந்த சித்ரவதைகளைத் தாங்கிக் கொண்டார்கள்.

ஒரு கட்டத்தில் மாஷிதா (ரலி) அவர்களின் இரண்டு ஆண்குழந்தைகளில் மூத்த ஆண்குழந்தையை அவர்களின் கண்முன்னே போட்டு கொடூரமாக அறுத்தான்.

தன் குழந்தை தன் கண்முன்னால் அறுக்கப்படுவதைப் பார்த்த மாஷிதா (ரலி) அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த போது அறுக்கப்படும் அந்த சிறுவயது பாலகன்உம்மாவே! அல்லாஹ்விடத்தில் உமக்கு பெரும் கூலி இருக்கின்றது என்பதை சோபனமாகப் பெற்றுக் கொள்!” என்று கூறினான்.

அடுத்த நாள் அவர்களின் கண்முன்னால் இரண்டாவது பாலகனும், அறுபடவே முன்பு போலவே இந்தப் பாலகனும் தன் தாய்க்கு சோபனம் கூறினான்.

உம்மாவே! பொறுமையை மேற்கொள்ளுங்கள்! அல்லாஹ்விடத்தில் இன்னின்ன அளவு உங்களுக்கு நற்கூலி வழங்கப்படும்என்று.

இறுதியாக, ஃபிர்அவ்ன் மாஷிதா (ரலி) அவர்களை கொடூரமான முறையில் கொலை செய்தான்.

சத்திய சன்மார்க்கத்தில் நிலைத்திருப்பதற்காக மாஷிதா (ரலி) அவர்கள் வீர மரணத்தை விரும்பி தழுவினார்கள்.

மாஷிதா (ரலி) அவர்களின் நிலைகுலையாமை, மற்றும் இஸ்திகாமத் அங்கு நடந்த கொடுமைகளைப் பார்த்துக் கொண்டிருந்த ஃபிர்அவ்னின் மனைவியான ஆசியா அவர்களின் மனதில் ஏகத்துவ சிறகை முளைக்கச் செய்தது.

அன்னை ஆசியா (ரலி) அவர்கள் ஒரு நாள் உறக்கத்தில் கனவில் மாஷிதா (ரலி) அவர்கள் சுவனத்தில் வீற்றிருக்கக் கண்டார்கள்.

இந்தக் காட்சி அவர்களின் ஈமானை இன்னும் உறுதிப்படுத்தியது. இவர்கள் ஈமான் கொண்டிருக்கிற விஷயமும் ஃபிர்அவ்னுக்குத் தெரிய வரவே சித்ரவதைகளையும், கொடுங்கோன்மைகளையும் அரங்கேற்றினான்.

கொஞ்சம் கூட இசைந்து கொடுக்காமல், சத்திய சன்மார்க்கத்திலேயே நிலைத்து நின்றார்கள்.

ஒரு கட்டத்தில் கொடுமைகள் அதிகரிக்கவே, அல்லாஹ்விடம் கையேந்திஇறைவா! எனக்காக உன்னிடத்தில்சுவனத்தில் ஓர் இல்லத்தை அமைத்துத் தருவாயாக! மேலும், ஃபிர்அவ்னை விட்டும், அவனுடைய கொடுமையை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக! மேலும், கொடுமை புரியும் சமூகத்திலிருந்து எனக்கு விடுதலை அளிப்பாயாக!” என்று இறைஞ்சினார்கள்.

இறுதியாக, அன்னை ஆஸியா (ரலி) அவர்களும் ஷஹீத் வீரமரணத்தைத் தழுவினார்கள். அவர்களின் உயிர் பிரியும் போது அவர்களுக்காக அல்லாஹ் கட்டி வைத்திருக்கிற சுவனத்து மாளிகையைக் கண்டு ஆனந்தப்பட்டவர்களாக, சிரித்த நிலையிலேய உயிரைத் துறந்தார்கள்.

                                                     ( நூல்: இப்னு கஸீர் )

தன் தாய் தான் அறுபடுகிற போது சஞ்சலப்பட்டு இஸ்லாத்தை விட்டு விடக்கூடாது என்பதற்காக அந்த இரு குழந்தைகளும் தன் தாய்க்கு சோபனம் சொன்னார்கள் என்றால் அந்தத் தாய் அந்தக் குழந்தைகளுக்கு எந்த அளவு அந்த சிறு வயதிலேயே இறைநம்பிக்கையை ஊட்டியிருக்க வேண்டும் என்பதை இந்த வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.

அடுத்து ஏழு வயதிலிருந்து பதினைந்து வரையிலான பருவம். குழந்தைகள் விஷயத்தில் கண்டிப்பும் கவனமும், விழிப்புணர்வும் கொண்டிருக்க வேண்டிய மிக முக்கியமான பருவமும் கூட.

இங்கு நாம் சரியாக அவர்களை கண்காணிக்கவில்லை, கண்டிக்கவில்லை என்றால் இனி ஒரு போதும் அவர்களைச் சரி செய்யவோ, நல்வழிப்படுத்தவோ முடியாது.

நபித்தோழர்களில் பலர் இந்த வயதில் தான் பல துறைகளில் சாதனை படைத்து சிறந்த முன் மாதிரியை விட்டுச் சென்றிருக்கின்றனர்.

இன்றைய காலத்து நமது சிறார்கள் விளையாட்டுக்காகவும், வேடிக்கைக்காகவும் புறப்பட்டுச் செல்கிற இதே பருவத்தில் வாளேந்தி யுத்தகளத்திற்குச் செல்லவும் தயங்கவில்லை நபிகளார் காலத்து சிறார்கள்.

இமாம் புகாரி (ரஹ்), இமாம் ஷாஃபிஈ (ரஹ்), இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) ஆகியோர் தங்களின் பதினைந்து வயதுகளில் ஹதீஸ்கலையில் பிரபல்யமானவர்களாக மதிக்கப்பட்டனர்.

அம்ர் இப்னு ஹஸ்ம் (ரலி) அவர்களை நஜ்ரான் வாசிகளுக்கு மார்க்கப் போதனைகளுக்காகவும், இமாமத்திற்காகவும் நபி {ஸல்} அவர்கள் தேர்ந்தெடுத்த போது அவர்களின் வயது 11.

ஹஸன், ஹுஸைன் (ரலி – அன்ஹுமா) இருவரும் ஒருமுறை நபி {ஸல்} அவர்கள் சபையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அண்ணலாரிடத்தில் ஸதகாவாக சிறிதளவு பேரீத்தம் பழம் கொண்டுவரப்பட்டது.

அதில் ஒன்றை எடுத்து இருவரில் ஒருவர் வாயில் போட்டு விடவே, அண்ணலார் வாயில் கைவிட்டு அதை வெளியே எடுத்து வீசிவிட்டு தர்மப்பொருள் நம் குடும்பத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. அது ஹராமாகும்” என்று கூறினார்கள்.

இதன் விளைவாக இருவரும் புடம் போட்ட தங்கமாக வாழ்வில் ஜொலித்ததை வரலாறு பதிவு செய்திருக்கின்றது.

ஒரு நாள் மதிய நேரம், லுஹர் தொழுகைக்குப் பின்னர் நபி {ஸல்} அவர்கள் தனதருமை மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் வீட்டிற்கு பேரக்குழந்தைகளைக் காணச் சென்றிருந்தார்கள்.

இருவரும் இல்லை. மகளிடம் விசாரிக்கின்றார்கள். எங்காவது விளையாடச் சென்றிருப்பார்கள். இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவார்கள் என்று ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நீண்ட நேரமாகியும் இருவரும் வீட்டிற்கு வராததால் கலக்கமடைந்த நபி {ஸல்} அவர்கள் பேரக்குழந்தைகளைத் தேடி புறப்பட்டார்கள். மதீனாவின் எந்த ஒரு பகுதியிலும் இருவரையும் காணவில்லை.

மதீனாவிற்கு வெளியே பாலைவனத்தை நோக்கி நபி {ஸல்} அவர்கள் ஒரு வித பதற்றத்தோடு அங்கு வருவோர் போவோரிடம் விசாரித்த வண்ணம் சென்றார்கள்.

ஓரிடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் நபி {ஸல்} அவர்களின் முகத்தில் இருந்த பதற்றத்தைக் கண்டு அருகில் வந்து என்ன ஏது? என்று விசாரித்தார். நபி {ஸல்} அவர்கள் விஷயத்தைக் கூறினார்கள்.

அப்போது, நாயகமே! கவலைப்பட வேண்டாம், இதோ இங்கு எங்காவது தான் அவர்கள் இருவரும் இருப்பார்கள். சற்று முன்னர் தான் இங்கு அவர்களை நான் கண்டேன்” என்று கூறிய அவர் அல்லாஹ்வின் தூதரே! ஒரு விஷத்தை நான் உங்களிடம் நான் சொல்லலாமா” என வேண்டினார்.

நபி {ஸல்} அவர்கள் அனுமதி தரவே, அவர் கூறினார் “அல்லாஹ்வின் தூதரே! சற்று முன்னர் தான் இருவரும் இங்கே வந்தனர். அவர்கள் முகத்தில் நான் பசியின் ரேகை படர்ந்திருந்ததை பார்த்து விட்டு, என் ஆட்டிலிருந்து பால் கறந்து தரவா? என்று இருவரிடமும் கேட்டேன்.

அப்போது, அவர்கள் இருவரும் ”நீங்கள் இந்த மந்தையின் உரிமையாளரா?” என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன். அப்படியென்றால் உங்கள் உரிமையில் இல்லாத இந்த மந்தையில் உள்ள ஆட்டில் இருந்து பால் அருந்துவது எங்களுக்கு ஹலால் அல்ல” என்று கூறி மறுத்து விட்டு, அதோ அங்கிருக்கிற பேரீத்தம் மரம் நிறைந்த தோட்டத்தை நோக்கி இருவரும் சென்றார்கள்” என்றார் அந்த இடையர்.

நபி {ஸல்} அவர்கள் அந்த தோடத்திற்கு வந்து பார்க்கின்றார்கள். அங்கே ஓர் மரத்தின் நிழலில் இருவரும் பசிமயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இருவரையும் எழுப்பி, வாரி அணைத்து முத்தமிட்டு இருதோள்புஜங்களிலும் இருவரையும் சுமந்தவர்களாக தங்களது மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்து “ஃபாத்திமாவே! உம் தந்தை முஹம்மதை விட மிக அழகிய முறையில் குழந்தைகளை உருவாக்கியிருக்கின்றாய்! என ஆனந்தக் கண்ணீரோடு கூறினார்கள்.   ( நூல்: துர்ரியத்துத் தாஹிரா )

அடுத்து, இந்தப் பருவத்திலேயே நற்பண்புகளையும், நல்லொழுக்கத்தையும் கற்றுத்தந்திட வேண்டும். பெற்றோர், உறவினர், சகோதரன், சகோதரி, சகமுஸ்லிம்கள் ஆகியோரின் உரிமைகள் என்ன? யார் யாரிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ ثَلَاثَ مَرَّاتٍ مِنْ قَبْلِ صَلَاةِ الْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُمْ مِنَ الظَّهِيرَةِ وَمِنْ بَعْدِ صَلَاةِ الْعِشَاءِ ثَلَاثُ عَوْرَاتٍ لَكُمْ
“இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுடைய அடிமைகளான ஆண்களும், பெண்களும் பருவ வயதை அடையாத உங்கள் சிறார்களும் மூன்று நேரங்களில் உங்களிடையே வருவதற்கு அனுமதி பெற்றுக் கொள்ளவேண்டும்.

அதிகாலைத் தொழுகைக்கு முன்னர்; மதிய வேளையில் உங்கள் ஆடைகளின் மீது நீங்கள் கவனம் இல்லாமல் இருக்கும் போது; இஷா தொழுகைக்குப் பின்னர். இம்மூன்று நேரங்களும் நீங்கள் மறைவாக இருக்க வேண்டிய நேரங்களாகும்.
                                                       ( அல்குர்ஆன்: 24:58 )
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) நபி {ஸல்} அவர்களின் தனிப்பெரும் நேசத்திற்குரிய இளம் நபித்தோழர்களில் ஒருவர்.

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், ஜாபிர் (ரலி) அவர்களும் உரையாடிய நெகிழ்ச்சியான சம்பவம்…

عن جابر بن عبد الله قال: خرجت مع رسول الله صلى الله عليه وسلم إلى غزوة ذات الرقاع من نخل على جمل لي حفيف فلما قفل رسول الله صلى الله عليه وسلم قال: جعلت الرفاق تمضي وجعلت أتخلف حتى أدركني رسول الله صلى الله عليه وسلم فقال: ما لك يا جابر؟ قال: قلت: يا رسول الله أبطأ بي جملي هذا قال: أنخه قال: فأنخته وأناخ رسول الله صلى الله عليه وسلم ثم قال: أعطني هذه العصا من يدك أو اقطع لي عصا من شجرة قال: ففعلت قال: فأخذها رسول الله صلى الله عليه وسلم فنخسه بها نخسات ثم قال: اركب فركبت فخرج والذي بعثه بالحق يواهق ناقته مواهقة.
قال: وتحدثت مع رسول الله صلى الله عليه وسلم فقال لي: أتبيعني جملك هذا يا جابر؟ قال: قلت: يا رسول بل أهبه لك قال: لا ولكن بعنيه قال: قلت: فسمنيه يا رسول الله قال: قد أخذته بدرهم قال: قلت: لا إذن تغبنني يا رسول الله! قال: فبدرهمين قال: قلت: لا قال: فلم يزل يرفع لي رسول الله صلى الله عليه وسلم في ثمنه حتى بلغ الأوقية قال: فقلت: أفقد رضيت يا رسول الله؟ قال: نعم قلت: فهو لك قال: قد أخذته قال: ثم قال يا جابر هل تزوجت بعد؟ قال: قلت: نعم يا رسول الله قال: أثيباً أم بكراً؟ قال: قلت: لا بل ثيباً قال: أفلا جارية تلاعبها وتلاعبك! قال: قلت: يا رسول الله إن أبي أصيب يوم أحد وترك بنات له سبعاً فنكحت امرأة جامعة تجمع رءوسهن وتقوم عليهن

தாதுர் ரிகாஃ ஹிஜ்ரி நான்கில் பனூ ஃகத்ஃபான் கிளையாரை எதிர்த்துப் போரிட மாநபி {ஸல்} அவர்களின் தலைமையில் நபித்தோழர்கள் சென்றனர்.                                                                                                                                                                  
பெரிய அளவில் போரெல்லாம் நடைபெறவில்லை. முஸ்லிம்கள் வெற்றியோடு திரும்பினார்கள். போர் முடிந்து எல்லோரும் கிளம்பிச் சென்று கொண்டிருந்தனர்.                                                                                                                                              
இறுதியாக, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் ஜாபிர் {ரலி} அவர்களும் எஞ்சியிருந்தனர்.                                                                                                        

மெதுவாகப் பேச்சை துவக்கினார்கள் பெருமானார் {ஸல்} அவர்கள் என்ன ஜாபிர்? ஏன் இவ்வளவு தாமதம்?” அதுவா? அல்லாஹ்வின் தூதரே!? கிழட்டு ஒட்டகம் ஆதலால் தான் தாமதம் என்றார்கள் ஜாபிர் {ரலி}.                                                                                                                                   
கீழிறங்கி என்னிடம் தாருங்கள் என்று ஜாபிரிடம் கூறிவிட்டு, அதை வாங்கிய அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஒட்டகத்தின் மீதேறி, பிஸ்மில்லாஹ் கூறி தடவிக்கொடுத்தார்கள்.                                                    

ஒட்டகம் வேகமாகச் செல்ல ஆரம்பிக்கின்றது. அதன் பின்னர் அல்லாஹ்வின் ரஸூல் ஜாபிர் அவர்களிடம் ஒட்டகத்தைக் கொடுத்தார்கள்.                                                                                                                                                          
அதன் மீதேறி அமர்ந்த ஜாபிர் {ரலி} ஒட்டகம் வேகமாகச் செல்வதைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.                                                           
                                                               
மீண்டும் பேச்சைத் தொடர்கின்றார்கள் நபி {ஸல்} அவர்கள் ஜாபிர் திருமணம் முடித்து விட்டீர்களா?”                                                                                                
                                                                                               
ஆம்! என்றார் ஜாபிர் {ரலி}. ”கன்னிப் பெண்ணா? விதவைப் பெண்ணா?”  என்று நபிகளார் கேட்டார்கள்.  அதற்கவர் விதவைப் பெண்ணை திருமணம் செய்திருக்கின்றேன்என்றார்கள்.                                                           
               
ஏன் ஒரு கன்னிப் பெண்ணை திருமணம் செய்திருக்கலாமே? மண வாழ்வு மகிழ்ச்சி மிக்கதாய் அமைந்திருக்குமே? “ என்று மாநபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.                                                                                                                                                                                                             
ஜாபிர் {ரலி} சொன்னார்கள் இல்லை அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனக்கு ஒன்பது சகோதரிகள். தந்தை உஹதில் ஷஹீதாகி விட்டார். கடனும் ஏராளமாய் இருக்கின்றது.                                                                          
               
இந் நிலையில் நான் என் என் சகோதரிகளின் ஒத்த வயதினில் உள்ள ஒரு கன்னிப் பெண்ணை  திருமணம் செய்தேனென்றால் அது நன்றாக இருக்காது, மேலும், என் சகோதரிகள் விஷயத்தில் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் விதவைப் பெண்னை மணம் முடித்திருகின்றேன்”. என்று கூறினார்கள்.

                                    ( நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம் )

எவ்வளவு பொறுப்பான ஓர் பதிலை ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

ஆகவே, அந்தந்தப் பருவங்களில் எப்படி குழந்தைகள் வளர்க்கப்பட  வேண்டுமோ அப்படி வளர்க்கப்பட்டு விட்டால் நல்லதோர் தலைமுறை இந்த சமூகத்தில் உருவாக்கம் பெறுவார்கள்.

இந்த உலகும், இஸ்லாகிய சமூகமும் உயர்ந்த ஓர் பண்பட்ட சமூகத்தை உருவாக்கிட எல்லாம் வல்ல இறைவன் நல் அருள் பாளிப்பானாக! ஆமீன்!