Wednesday 23 September 2015

இப்ராஹீமிய குடும்பம் அமைப்போம்!!




இப்ராஹீமிய குடும்பம் அமைப்போம்!!



அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கிற பாக்கியங்களில் மிகவும் அற்புதமானது நமக்கு வழங்கியுள்ள வாழ்க்கை தான்.

அந்த வாழ்க்கையில் தாய், தந்தை, கணவன், மனைவி, சகோதரன், சகோதரி, பிள்ளைகள் என பெருங்கொண்ட இணைப்புகளை ஏற்படுத்தி குடும்பம் என்கிற அமைப்போடு வாழ வைத்திருக்கின்றான்.

நாம் வாழ்கிற சொற்பமான இந்த வாழ்க்கையை இஸ்லாமிய அடிப்படையில் அர்த்தமுள்ள வாழ்க்கையாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமைய வேண்டுமானால் அங்கே சில அற்புதமான பங்களிப்பை நாம் தந்தாக வேண்டும்.

அல்லாஹ் தந்திருக்கிற வாழ்க்கையை அவன் வடிவமைத்துத் தந்திருக்கிற குடும்ப அமைப்பை இஸ்லாமிய வாழ்வுக்காக தயார் படுத்தி சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்துகிற போது வாழும் போதும் நாம் மதிக்கப்படுவோம். வாழ்க்கைக்குப் பிறகும் நாம் கௌரவப் படுத்தப் படுவோம்.

அப்படியானதொரு வாழ்க்கையை வாழ்ந்து சென்றிருக்கிற அல்லாஹ்வின் நேசர் இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார்களின் உயரிய ஓர் பங்களிப்பை நினைவு கூறும் முகமாக தியாகத் திருநாள் எனும் இந்நன்நாளில் நம்மை எல்லாம் நினைவு கூற வைத்திருக்கின்றான் வல்ல ரஹ்மான்.

இப்ராஹீம் நபியின் வாழ்க்கைத் தருகிற மகத்தான பாடங்களில் ஒன்று ஒரு குடும்பமாக எவ்வாறு அல்லாஹ்விற்காக வாழ வேண்டும் என்பது தான்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வாழ்க்கைக்குப் பிறகு முன் மாதிரியான வாழ்க்கை அமைப்பைக் கொண்டவர்களாக இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்க்கையைத் தான் குறிப்பிடுகின்றான்.

قَدْ كَانَتْ لَكُمْ أُسْوَةٌ حَسَنَةٌ فِي إِبْرَاهِيمَ وَالَّذِينَ مَعَهُ

“உங்களுக்கு இப்ராஹீமிடத்திலும் அவருடைய தோழர்களிடத்திலும் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கின்றது”.                       ( அல்குர்ஆன்: 60:4 )

மேலும், அல்லாஹ் உலக மக்களில் அவரின் குடும்பத்தாரை சிறந்தோர்களாக ஆக்கியதாகவும் பறை சாற்றுகின்றான்.

إِنَّ اللَّهَ اصْطَفَى آدَمَ وَنُوحًا وَآلَ إِبْرَاهِيمَ وَآلَ عِمْرَانَ عَلَى الْعَالَمِينَ

”திண்ணமாக, அல்லாஹ் அகிலத்தார்களில் ஆதத்தையும், நூஹையும், இப்ராஹீமின் குடும்பத்தாரையும், இம்ரானின் குடும்பத்தாரையும் சிறந்தோர்களாக தேர்ந்தெடுத்துக் கொண்டான்”.                                  ( அல்குர்ஆன்: 3:33 )

நம் உயிரினும் மேலான பெருமாளார் (ஸல்) அவர்களைப் புகழ வேண்டும், அவர்களின் குடும்பத்தார்களுக்கு துஆ செய்ய வேண்டும் என்றால்..

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

இறைவா! நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள்  மீதும், நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார்களுக்கும் எவ்வாறு அருள்புரிந்தாயோ அது போன்று அருள்புரிவாயாக! நீயே! புகழுக்குரியோனும், மதிப்புமிக்கவனும் ஆவாய்!

இறைவா! நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள்  மீதும், நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார்களுக்கும் எவ்வாறு கருணைபுரிந்தாயோ அது போன்று கருணைபுரிவாயாக! நீயே! புகழுக்குரியோனும், மதிப்புமிக்கவனும் ஆவாய்!” என்று இப்ராஹீம் (அலை) அவர்களையும், அவர்களின் குடும்பத்தார்களையும் இணைத்துக் கூறிதான் கேட்க வேண்டும் என மார்க்கம் நமக்கு வழிகாட்டுகின்றது.

இது இந்த யுக முடிவு நாள்  வரையிலும் இன்றளவும், ஏன்? தனியாகவோ, கூட்டாகவோ, கடமையான தொழுகையிலோ, ஜனாஸா தொழுகையிலோ, மேற்கூறியவாறு தான் ஓத முடியும். இன்னும் சொல்லப் போனால் இது தான் நாம் நபி (ஸல்) அவர்களின் மீது ஓதகிற ஸலவாத்தில் மிகச் சிறந்ததும், உயர்வானதும் ஆகும்.

يقولُ
 ‏أهلُ العلمِ بالسِيَرِ أنّ إبراهيمَ لمّا أرادَ ذَبْحَ وَلَدِهِ قالَ لَهُ: ‏‏{إنْطلِقْ فَنُقَرّبْ قُرباناً إلى اللهِ عزَّ وجلَّ} فَأَخَذَ سِكّيناً ‏وحَبْلاً ثُمّ انطَلَقَ مَعَ ابْنِهِ حتّى إذا ذَهَبَا بَينَ الجبالِ قالَ لَهُ ‏إسماعيلُ: "يا أَبَتِ أينَ قُربانُكَ"

فَقَالَ: {يا بُنيَّ إنّي رأيتُ في المنامِ أنّي أذْبَحُكَ} فَقَالَ لَهُ: ‏‏"أُشْدُدْ رِباطِي حتّى لا أضّطَرِبَ واكْفُفْ عني ثِيابَكَ ‏حتّى لا يَنْتَضِحَ عليْكَ من دَمِي فَتَراهُ أُمّي فَتَحْزَنْ وأَسْرِعْ ‏مرَّ السّكِينِ على حَلْقِي لِيَكُونَ أَهْوَنَ لِلْمَوْتِ عَلَيَّ فإذا ‏أتيتَ أُمّي فاقْرَأْ عَلَيْها السّلامَ مِنّي
 فَأَقْبَلَ عَلَيْهِ إبراهيمُ ‏يُقَبّلُهُ ويبْكي ويَقُولُ: "نِعْمَ العونُ أنتَ يا بُنيّ على أمرِ اللهِ ‏عزَّ وجلَّ".

ஏனெனில், கனவில் கண்ட காட்சியை உண்மை படுத்த இப்ராஹீம் (அலை) அவர்கள் முனைந்த போது தமது மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களிடம் மகனே! நான் அல்லாஹ்விற்காக குர்பானி ஒன்றை கொடுக்கப் போகின்றேன் நீயும் என்னோடு வர வேண்டும் என்று கூறி, அவரைத் தம்மோடு அழைத்துக் கொண்டு, கையில் ஒரு கத்தியும், கயிறும் சகிதமாக அருகில் இருந்த மலைக்குன்றுக்குச் சென்றார்கள்.

மலையைக் குன்றின் உச்சியை அடைந்ததும் இஸ்மாயீல் (அலை) அவர்கள் தந்தையிடம்குர்பானி எங்கே?” என்று கேட்டார்கள்.

அப்போது, இப்ராஹீம் (அலை) அவர்கள்மகனே! கனவில் உம்மை அறுப்பது போல் கண்டேன். அது குறித்து உமது அபிப்பிராயம் தான் என்ன என்பதைச் சொல்!” என்றார்கள்.

அதற்கு, இஸ்மாயீல் (அலை) அவர்கள்என் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப்பட்டுள்ளதோ அதைச் செய்து விடுங்கள்! அல்லாஹ் நாடினால், என்னைப் பொறுமையாளர்களில் ஒருவராகக் காண்பீர்கள்என்று கூறிவிட்டு,

என் தந்தையே! நான் விரண்டோடாமல் இருக்க என்னைக் கயிற்றால் கட்டிப் போடுங்கள். என் உதிரம் உங்கள் ஆடையில் தெறிக்காமல் இருக்க உங்கள் ஆடையை உயர்த்திக் கட்டிக் கொள்ளுங்கள். உதிரம் தோய்ந்த ஆடையோடு நீங்கள் வீட்டிற்குச் சென்று அந்த ஆடையை என் தாய் பார்த்தார்கள் எனில் மனமுடைந்து போய் விடுவார். என் கழுத்தில் கத்தியை வைத்து விரைவாக அறுத்து விடுங்கள்! நீங்கள் வீட்டிற்குச் சென்றதும் என் தாயாரிடம் நான் ஸலாம் சொன்னதாக சொல்லி விடுங்கள்!” என்று கூறினார்.

இதனைக் கேட்ட இப்ராஹீம் கலீலுல்லாஹ் அவர்கள் தமதருமை மகனாரை ஆரத்தழுவி முத்தமிட்டவாரேஎன் அன்பு மகனே! அல்லாஹ்வின் கட்டளையை நான் ஏற்று நடப்பதற்கு மிக உயர்ந்த அளவிலே நீ உதவியிருக்கிறாய்!” என்று பெருமிதத்தோடு கூறினார்கள்.

இந்த நிகழ்வில் தோற்றம் தருவது இப்ராஹீம் (அலை) என்கிற தனியொரு மனிதரின் தியாகம் அல்ல. மாறாக, மூன்று நல்ல உள்ளங்களில் இருந்து வெளிப்பட்ட தியாகங்களின் சங்கமம். அம்மூவரின் தியாகத்தில் எந்த தியாகம் சிறந்தது? யாருடைய தியாகம் உயர்ந்தது? என விடை காண முடியாத புதிராகும்.

ஆம்! தள்ளாத வயதிலும் ஆசையோடு வளர்த்தெடுத்து, அன்பு காட்டிய குழந்தையை இழக்க முன்வருகிற தந்தையின் தியாகமா?

இல்லை, தன் எதிர்கால வாழ்வை நோக்காது தன்னை முழுவதுமாய் அர்ப்பணம் செய்ய முன்வந்த சின்னஞ்சிறு பாலகனின் தியாகமா?

தன் வாழ்நாளின் கடைசியில் தமக்கு ஆதரவாய், அரவணைப்பாய் இருக்க வேண்டிய ஒப்பற்ற ஓர் உறுதுணையை இழக்க முன்வந்த தாயின் தியாகமா?

                 எந்தத் தியாகம் உயர்ந்தது!!!?”

அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாரின் ஒட்டு மொத்த தியாகத்தைக் கண்டு வியந்து போனான்.

إِنَّ هَذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ (106)

திண்ணமாக, இது மகத்தான சோதனை தான்    ( அல்குர்ஆன்: 37:106 )

அவர்களின் தியாக உணர்வை ஏற்றுக் கொள்ளும் பொருட்டு, இஸ்மாயீல் (அலை) அவர்களுக்குப் பகரமாக ஓர் ஆட்டை சுவனத்திலிருந்து இறக்கியருளி அதைப் பலியிடுமாறு அல்லாஹ் ஆணையிட்டான்.

அவர்களின் தியாகத்தைப் போற்றும் பொருட்டு நமக்கும் குர்பானி கொடுப்பதை சுன்னா எனும் நபிவழியாக ஆக்கியிருக்கின்றான்.

உலகில் எல்லாமும் மாறிக் கொண்டிருக்கையில் 1400 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு மாற்றத்தையும் காணாமல், பழமை மாறாமல் அதே உணர்வுடன், வழிபாடு என்கிற எண்ணத்துடன் கோடான கோடி முஸ்லிம்களால் இன்றளவும் பின்பற்றப் படுகிற ஓர் வணக்கமாக அல்லாஹ் ஆக்கியிருக்கின்றான்.

எனவே, நாம் நம்முடைய குடும்ப அமைப்பை அல்லாஹ்விற்காக வாழ்பவர்களாக மாற்றியமைக்க முன் வரவேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் தோழர்களான சத்திய தோழர்கள் அல்லாஹ்விற்காக வாழும் குடும்ப அமைப்பை உருவாக்கும் விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார்கள். அதில் சாதித்தும் காட்டினார்கள்.

வீர மங்கை உம்மு அம்மாரா (ரலி)….

உம்மு அம்மாரா (ரலி) என்றும் உம்மு உமாரா (ரலி) என்றும் வரலாறு அறிமுகப்படுத்துகிற தியாக மங்கை நுஸைபா பிந்த் கஅபுல் மாஸினிய்யி அவர்கள் நபி {ஸல்} அவர்கள் வாழ்கிற போதும் நபி {ஸல்} அவர்கள் மரணித்த பின்னரும் அனைத்து யுத்தகளங்களிலும் மருத்துவப் பணிகளிலே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.

நபித்துவத்தின் 13 –ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது அகபாவில் கணவர் ஜைத், தங்களது இரு மகன்களான அப்துல்லாஹ் இப்னு ஜைத், ஹபீப் இப்னு ஜைத் ஆகியோருடன் குடும்பம் சகிதமாக வந்து அண்ணலாரைச் சந்தித்து தூய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டதோடு மாத்திரமல்லாமல் பிரசித்தி பெற்ற பைஅத் வாக்குப் பிரமாணத்திலும் குடும்பம் சகிதமாக கலந்து கொண்டு உறுதி பூண்ட பெருமைக்குரியவர்  உம்மு அம்மாரா (ரலி) அவர்கள்.

தாம் ஏற்றுக் கொண்ட இஸ்லாத்திற்காக தாம் எப்போதும் எதையும் குடும்பம் சகிதமாக இழக்க முன் வரும் முழு சிந்தனையோடே தங்களின் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கான தருணத்தையும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள்.


சில யுத்தகளங்களிலே வாளெடுத்து வீர தீர செயல்களிலே ஈடுபட்டு, எதிரிகளின் பல பேர்களை காயப்படுத்தியதும் உண்டு.

குறிப்பாக உஹத் மற்றும் யமாமா யுத்தகளங்களில் வீர மங்கையாக பரிணமித்து பல விழுப்புண்களை தியாகச் சுவடுகளாக தாங்கியும் இருக்கின்றார்கள்.

யமாமா யுத்தத்திலே ஒரு கையையே இழந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் எனும் வதந்தியால் உஹத் யுத்தகளத்தின் நிலைமைகள் முற்றிலுமாய் மாறிப்போயிருந்த தருணம் அது

நபித்தோழர்களில் பலர் எதிரிகளின் தாக்குதல் தாங்க முடியாமல் யுத்த களத்தின் நாலாபுறமும் சிதறி ஓடிக்கொண்டிருந்தனர்.

இந்த வதந்தியைக் கேட்ட மாத்திரத்தில் யுத்தகளத்தின் நடுப்பகுதியிலிருந்து தங்களது குடும்பம் சகிதமாக அண்ணலாரைத் தேடும் பணியில் ஈடுபட்டார்கள்.

ஆம்! உஹத் யுத்தகளத்தில் அவர்களின் கணவர் ஸைத் இப்னு ஆஸிம் (ரலி) மற்றும் அவர்களின் இரு மகன்களான ஹபீப் இப்னு ஸைத், அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலிஅன்ஹுமா) ஆகியோரோடு கலந்து கொண்டார்கள்.

இறுதியாக, அண்ணலாரின் இருப்பிடத்தைக் கண்டதும், அண்ணலார் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை அறிந்ததும் எல்லையில்லா ஆனந்தம் அடைந்தார்கள்.

ஆச்சர்ய மேலீட்டால்இதோ அண்ணலார் உயிரோடு இங்கே உயிரோடு இருக்கின்றார்கள்என்று உஹத் யுத்தகளம் முழுமையும் கேட்கும் அளவுக்கு சப்தமாகக் கூறினார்கள்.

قال ابن إسحاق فلما عرف المسلمون رسول الله صلى الله عليه وسلم نهضوا به ونهض معهم نحو الشعب معه أبو بكر الصديق وعمر بن الخطاب وعلى بن أبي طالب وطلحة بن عبيد الله والزبير بن العوام وسعد بن أبي وقاص وابو دجانة وزياد بن السكن والحارث بن الصمة وأم عمارة نسيبة بنت كعب المازنية ورهط من المسلمين رضوان الله عليهم.

இதே நேரத்தில், எதிரிகள் அண்ணலாரைத் தாக்கிட ஆயத்தமானார்கள். அப்போது அண்ணலாருக்கு அருகே நாலா புறங்களிலும் அரணாக தங்களை அமைத்து அண்ணலாரை காக்கும் பணியில் சில நபித்தோழர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அதில் தங்களையும் ஒருவராக வீர மங்கை உம்மு உமாரா (ரலி) அவர்கள் இணைத்துக் கொண்டார்கள்.

عن عمر قال سمعت رسول الله صلى الله عليه و سلم يقول ما ألتفت يوم أحد يمينا ولا شمالا إلا وأراها تقاتل دوني.

மாநபி {ஸல்} அவர்கள் தங்களைக் காக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு சுழன்று சுழன்று போராடிய உம்மு உமாரா (ரலி) அவர்களைப் பார்த்துஉஹத் யுத்தகளத்தில் என்னைச் சுற்றி வலப்புறத்திலும், இடப்புறத்திலும் உம்மு உமாரா (ரலி) அவர்கள் போராடியதைப் போன்று வேறெவரும் போராட நான் பார்க்க வில்லைஎன்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

கிட்டத்தட்ட 13 – க்கும் மேற்பட்ட காயங்களோடு அம்மையார் போராடிக் கொண்டிருக்க இப்னு கமீஆ என்பவன் வாள் கொண்டு வீசி அம்மையாரின் தோள்பட்டையை காயப்படுத்தி விட்டான்.

அந்தக் காயம் அதிக வேதனையைத் தரவே அண்ணலாரை நோக்கி மெல்ல தவழ்ந்து, தவழ்ந்து வந்தார்கள். அண்ணலாரின் அருகே வந்ததும்அல்லாஹ்வின் தூதரே! என் கணவர், இருமகன்கள், நான் உட்பட அனைவரும் நாளை மறுமையில் சுவனத்தில் உங்களோடு தோழமை பெற்றிட துஆ செய்யுங்கள்என்று வேண்டினார்கள்.

أن رسول الله صلى الله عليه وسلم قال : اللَّهُمَّ اجْعَلْهُم رُفَقَائِي فِي الجَنَّةِ  

உடனடியாக, உம்மு உமாராவுக்காக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்யாஅல்லாஹ் இவர்கள் அனைவரையும் சுவனத்தில் என்னுடன் இருப்பவர்களாய் ஆக்கியருள் புரிவாயாக!” என்று பிரார்த்தனை செய்தார்கள்.

இதனைக் கேட்ட உம்மு உமாரா (ரலி) அவர்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்தார்கள்.

( நூல்: ஸீரத் இப்னு ஹிஷாம், ஸியரு அஃலா மின் நுபலா, தபகாத் இப்னு ஸஅத் )

இதே போன்று உம்மு அம்மாரா (ரலி) அவர்களின் மகனார் ஹபீப் இப்னு ஜைத் அவர்களும் அல்லாஹ்விற்காக, சத்திய சன்மார்க்கத்திற்காக தம்மை அர்ப்பணம் செய்தவர்.

ஹபீப் இப்னு ஜைத் (ரலி) அவர்களின் தியாகம்….

ஹிஜ்ரீ 9 –ஆம் ஆண்டு நஜ்த் தேசம் இப்போது மிகவும் பரபரப்பாக பேசப்படக்கூடிய ஒரு பகுதியாக மாறிவிட்டிருந்தது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களோடு, தானும் தூதுத்துவத்தை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக முஸைலமா எனும் பொய்யன் தம்மை அறிவித்துக் கொண்டான்.

பெருங்கூட்டம் ஒன்று அவன் பின்னால் அணி சேரத்தொடங்கியது. ஆணவத்தின் உச்சத்திற்கும் அகம்பாவத்தின் விளிம்பிற்கும் வந்த அவன் மாநபி {ஸல்} அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இரு தூதுவர்களை ஏற்பாடு செய்து மதீனாவிற்குச் சென்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் {ஸல்} அவர்களிடம் கொடுத்து விட்டு, அவசியம் பதிலை வாங்கி வாருங்கள் என்று அனுப்பி வைத்தான்.

وفوجئ الرسول يوما بمبعوث بعثه مسيلمة يحمل منه كتابا يقول فيه "من مسيلمة رسول الله، الى محمد رسول الله.. سلام عليك.. أم بعد، فاني قد أشركت في الأمر معك، وان لنا نصف الأرض، ولقريش نصفها، ولكنّ قريشا قوم يعتدون"..!!!
ودعا رسول الله أحد أصحابه الكاتبين، وأملى عليه ردّه على مسيلمة:
" بسم الله الرحمن الرحيم..
من محمد رسول الله، الى مسيلمة الكذاب.
السلام على من اتبع الهدى..
أما بعد، فان الأرض لله يورثها من يشاء من عباده، والعاقبة للمتقين"..!!
وجاءت كلمات الرسول هذه كفلق الصبح. ففضحت كذاب بني حنيفة الذي ظنّ النبوّة ملكا، فراح يطالب بنصف الأرض ونصف العباد..!
وحمل مبعوث مسيلمة رد الرسول عليه السلام الى مسيلمة الذي ازداد ضلالا واضلالا..

அண்ணல் நபி {ஸல்} அவர்களின் சபை நபித்தோழர்களின் சங்கமத்தால் நிறைந்திருந்தது. முஸைலமாவின் இருதூதர்களும் அவைக்கு வருகை புரிந்து, கடிதத்தை நபிகளாரிடம் வழங்கினார்கள்.

கடிதத்தின் உள்ளேஅல்லாஹ்வின் தூதர் முஸைலமாவிடமிருந்து அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் {ஸல்} அவர்களுக்கு, ”உம்முடன் தூதுச் செய்தியில் தூதராக நானும் பங்கு தாரராக நியமிக்கப்பட்டுள்ளேன்என்பதை இதன் மூலம் அறியத்தருகின்றேன்.

எங்களுக்கு பாதி நிலமும், குறைஷியர்களாகிய உங்களுக்கு பாதி நிலமுமாக ஆட்சி புரிய வேண்டும் என்பது தான் இறைவனின் நியதி. ஆனால், குறைஷிகளான நீங்களோ வரம்பு மீறிவிட்டீர்கள்.” என்று எழுதப்பட்டிருந்தது.

அப்போது, அண்ணலார் {ஸல்} அவர்கள் தூதுவராக வந்திருந்த இருவரையும் நோக்கிமுஸைலமா குறித்து நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு, அவ்விருவரும்முஸைலமா உண்மை சொல்பவராக இருக்கிறார் என்று நாங்கள் கருதுகிறோம்என்றனர்.

அதற்கு, மாநபி {ஸல்} அவர்கள்தூதுவர்கள் கொல்லப்படக்கூடாது எனும் நடைமுறை மாத்திரம் இல்லை என்றிருப்பின் உங்கள் இருவரையும் நான் கொலை செய்யுமாறு ஏவியிருப்பேன்என்று எச்சரிக்கை செய்து விட்டு, பதில் கடிதம் ஒன்றை எழுதி கொடுத்து விடுமாறு நபித்தோழர்களுக்கு ஆணையிட்டார்கள் {ஸல்} அவர்கள்.

அதில், “அன்பாளன், அருளாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்! அல்லாஹ்வின் தூதராகிய முஹம்மத் {ஸல்} அவர்களிடமிருந்து பொய்யனான முஸைலமாவிற்கு….. “ நேரிய வழி நடப்போரின் மீதே இறைவனின் சாந்தி நிலவும்! பரந்து விரிந்த மொத்த பூமி யாவும் அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீ உணர்ந்து கொண்டாக வேண்டும். அவன், தான் நாடுபவர்களுக்கே அதை உரிமையாக்குகின்றான். மேலும், இறுதி தீர்ப்பு நாளின் நற்கூலியும் அவனை அஞ்சுபவர்களுக்கே கிடைக்கும்”. என்று எழுதச் சொன்னார்கள்.

ومضى الكذب ينشر افكه وبهتانه، وازداد أذاه للمؤمنين وتحريضه عليهم، فرأى الرسول أن يبعث اليه رسالة ينهاه فيها عن حماقاته..
ووقع اختياره على حبيب بن زيد ليحمله الرسالة مسيلمة..
وسافر حبيب يغذّ الخطى، مغتبطا بالمهمة الجليلة التي ندبه اليها رسول الله صلى الله عليه وسلم ممنّيا نفسه بأن يهتدي الى الحق، قلب مسيلمة فيذهب حبيب بعظيم الأجر والمثوبة.

இந்த கடிதத்தை பெற்றுக் கொண்ட தூதுவர்கள் இருவரும் நஜ்துக்கு சென்று முஸைலமாவிடம் கொடுத்தார்கள்.

தன் நிலையை மாற்றியமைப்பதற்குப் பதிலாக தன்னுடைய அக்கிரமத்தை அதிகரித்துக் கொண்டான்.

அவனை ஏற்றுக் கொள்ளாத முஸ்லிம்களை கொடுமை படுத்தி, கொன்றொழித்தான்.

தானும் கெட்டு, பிறரையும் வழிகேட்டில் அழைத்துச் செல்கிற முஸைலமாவின் தறி கெட்ட செயலை தடுத்து நிறுத்தும் முகமாக, எச்சரிக்கையுடன் கூடிய ஒரு கடிதத்தை அண்ணலார் {ஸல்} எழுதி, அதை கொண்டு சேர்க்கும் அரும்பணியை ஹபீப் இப்னு ஜைத் (ரலி) எனும் 20 அல்லது 21 வயது நிரம்பிய இளம் வாலிபரிடம் ஒப்படைத்து, நஜ்துக்கு அனுப்பினார்கள்.

இத்தோடு, முஸைலமாவும் அவனது ஆதரவாளர்களும் மனம் திருந்தி மீண்டும் சத்திய மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு, தங்களின் ஈமானை புதுப்பித்துக் கொள்வார்கள்எனும் ஆசையோடு பாலை, சுடுமணல், மலை, காடு என பல சிரமங்களைத் தாண்டி நஜ்தை அடைந்து பொய்யன் முஸைலமாவின் கோட்டைக்கு வந்தார்.

கடுமையான கெடுபிடிக்குப் பின்னால் அவன் முன் வந்து நின்று, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் தூதுவராக நான் வந்திருக்கின்றேன்! இதோ இந்த கடிதத்தை நபி {ஸல்} அவர்கள் தங்களிடம் தரச் சொன்னார்கள் என்று கூறியவாறே கடிதத்தை முஸைலமாவிடம் கொடுத்தார் ஹபீப் (ரலி) அவர்கள்.

جمع الكذاب مسيلمة قومه، وناداهم الى يوم من أيامه المشهودة..
وجيء بمبعوث رسول الله صلى الله عليه وسلم، حبيب بن زيد، يحمل آثار تعذيب شديد أنزله به المجرمون، مؤملين أن يسلبوا شجاعة روحه، فيبدو امام الجميع متخاذلا مستسلما، مسارعا الى الايمان بمسيلمة حين يدعى الى هذا الايمان أمام الناس.. وبهذا يحقق الكذاب الفاشل معجزة موهومة أمام المخدوعين به..

கடிதத்தைப் பிரித்துப் படித்ததும் கடும் சினம் கொண்டவனாக மாறினான். தூதுவருக்கு அளிக்க வேண்டிய மரியாதையை காற்றில் பறக்க விட்ட அவன்இவரைச் சிறையில் அடையுங்கள்! நாளைக் காலையில் இவரை நம் அவையின் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள்என்று மதம் கொண்ட யானை போல் பிளிறினான்.

கைது செய்யப்பட்ட ஹபீப் (ரலி) கலங்கிடவில்லை. மறுநாள் காலைப் பொழுது எல்லோருக்குமான காலைப் பொழுதாக விடியவில்லை. ஷஹாதத் உடைய காலைப் பொழுதாக விடிந்தது நபித்தோழர் ஹபீப் இப்னு ஜைத் (ரலி) அவர்களுக்கு.

ஆம்! பொய்யன் முஸைலமா, தமது ஆதரவாளர்களின் புடைசூழ ஆனந்தமாக அமர்ந்திருக்கும் சபைக்கு சங்கிலியோடு இழுத்து வரப்பட்டார் ஹபீப் (ரலி) அவர்கள்.

قال مسيلمة لـ حبيب:
" أتشهد أن محمدا رسول الله..؟
وقال حيب:
نعم أشهد أن محمدا رسول الله.
وكست صفرة الخزي وجه مسيلمة وعاد يسألأ:
وتشهد أني رسول الله..؟؟
وأجاب حبيب في سخرية قاتلة:
اني لا أسمع شيئا..!!

ஏளனத்தோடு, ஏறிட்டுப்பார்த்த முஸைலமா முகத்தில் எவ்வித சலனமும் இன்றி நின்றிருந்த ஹபீப் (ரலி) அவர்களை நோக்கிமுஹம்மத் யார்? அவர் அல்லாஹ்வின் தூதரா? என்று கேட்டான்.

ஆம்! முஹம்மத் {ஸல்} அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகின்றேன்!” என்று உரக்கக் கூறினார்.

முஸைலமா, கோபத்தால் முகம் சிவந்தவனாக ஹபீபை நோக்கி சுட்டெரிக்கும் பார்வையில்நான் அல்லாஹ்வின் தூதன் தான் என்பதற்கு நீ சாட்சி கூறுகின்றாயா?” என்று கேட்டான்.

நீ ஏதோ சொல்கிறாய் என்று எனக்குத் தெரிகிறது. ஆனால், நீ என்ன சொல்கிறாய் என்று என் காதில் விழவில்லைஎன்று நக்கலாக அதே நேரத்தில், முகத்தில் வெளிக்காட்டாமல் பதில் கூறினார் ஹபீப் (ரலி) அவர்கள்.

وتحوّلت صفرة الخزي على وجه مسيلمة الى سواد حاقد مخبول..
لقد فشلت خطته، ولم يجده تعذيبه، وتلقى أمام الذين جمعهم ليشهدوا معجزته.. تلقى لطمة قوية أشقطت هيبته الكاذبة في الوحل..
هنالك هاج كالثور المذبوح، ونادى جلاده الذي أقبل ينخس جسد حبيب بسنّ سيفه..
ثم راح يقطع جسده قطعة قطعة، وبضعة بضعة، وعضوا عضوا..
والبطل العظيم لا يزيد على همهمة يردد بها نشيد اسلامه:
" لا اله الا الله محمد رسول الله"..

முகம் வெளுத்தது முஸைலமாவிற்கு. சினத்தின் உச்சத்திற்கே சென்ற அவன்அவர் உடலின் ஒரு பகுதியை வெட்டி எறியுங்கள்என ஆணை பிறப்பித்தான்.

உடலின் ஒரு பகுதி வெட்டப்பட்டு, ஹபீப் அவர்களின் கண்முன்னே கிடக்கிறது. அருகில் வந்தான் முஸைலமா, என்ன ஹபீபே! இப்போதும் முஹம்மத்  அல்லாஹ்வின் தூதர் தான் என்று சாட்சி கூறுகின்றாயா?” என்று கேட்டான்.

குருதி வழிந்தோடினாலும் ஈமானிய சுருதி குறையாமல்ஆம்! முஹம்மத் {ஸல்} அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகின்றேன்!” என்று உரக்கக் கூறினார்.

மீண்டும், முஸைலமா, கோபத்தால் முகம் சிவந்தவனாக ஹபீபை நோக்கி நான் அல்லாஹ்வின் தூதன் தான் என்பதற்கு நீ சாட்சி கூறுகின்றாயா?” என்று கேட்டான்.

ஹபீப் (ரலி) அவர்கள் முன்பு போலவே, “நீ ஏதோ சொல்கிறாய் என்று எனக்குத் தெரிகிறது. ஆனால், நீ என்ன சொல்கிறாய் என்று என் காதில் விழவில்லைஎன்று உறுதி படக்கூறினார்.

ஹபீப் (ரலி) அவர்களின் உடலின் ஒவ்வொரு பகுதியும் இவ்வாறே துண்டு, துண்டாக வெட்டப்படுகின்றது.

இந்த உரையாடலும் தொடர்கின்றது. முக்கால் வாசி உடல் பாகங்கள் வெட்டப்பட்டு, ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றது.

அல்லாஹ் அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, முஹம்மத் {ஸல்} அவர்கள் அல்லாஹ்வின் தூதரென்று நான் சாட்சி கூறுகின்றேன்.” என்று கூறியவாறே அவரின் இறுதி மூச்சும் பிரிந்தது.

இன்னா லில்லாஹ்…. அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக்கொள்வானாக!

ولكن الرجل الذي شهد مع أبيه، وأمه، وخالته، وأخيه بيعة العقبة، والذي حمل منذ تلك اللحظات الحاسمة المباركة مسؤولية بيعته وايمانه كاملة غير منقوصة، ما كان له أن يوازن لحظة من نهار بين حياته ومبدئه..

இதே ஹபீப் இப்னு ஜைத் (ரலி) அவர்கள்தமது தாயார் உம்மு உமாரா (ரலி) – நுஸைபா பிந்த் கஅப், தமது தந்தை ஜைத் மற்றும் தமது சகோதரர் அப்துல்லாஹ் ஆகியோரோடு, குடும்பம் சகிதமாக  தமது 12 –ஆம் வயதில் இரண்டாம் அகபாவில் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் திருக்கரத்தில்….

( على السمع والطاعة في النشاط والكسل .
وعلى النفقة في العسر واليسر .
وعلى الأمر بالمعروف والنهي عن المنكر .
وعلى أن تقوموا في الله، لا تأخذكم في الله لومة لائم .

 இன்பத்திலும், துன்பத்திலும் நாங்கள் அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் கட்டுப்படுவோம்; வசதியிலும், வசதியின்மையிலும் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வோம்; நன்மையை ஏவுவோம், தீமையைத் தடுப்போம்; அல்லாஹ்வுக்காகவும், உங்களுக்காகவும் எப்போதும் நாங்கள் உயிரை தியாகம் செய்ய தயாராய் இருப்போம்; எவரின் பழிப்பையும் நாங்கள் பொருட்படுத்த மாட்டோம்; ஆட்சி, அதிகாரத்திற்காக நாங்கள் எவரிடமும் சண்டையிட மாட்டோம்.” என உறுதிமொழி (பைஅத் - பிரமாணம்) கொடுத்திருந்தார்கள்.

                ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, இப்னு ஹிஷாம் )

ஹபீப் (ரலி) அவர்களின் மரணச் செய்தியை நபித்தோழர்கள் உம்மு அம்மாராவிடம் சென்று சொன்ன போது, சற்றும் நிலை குலையாமல் ஆம்! அன்று, “நபியே! உங்களுக்காக உயிரையும் அர்ப்பணிப்பேன்என்று என் மகன் கூறினார் அல்லவா? இதோ அர்ப்பணித்து விட்டார் தம் உயிரை…” என்று கூறினார்கள்.

அன்று வரை இஸ்லாமிய உலகு இறை மார்க்கத்திற்காக உடலைத் தந்தவரை கண்டிருந்தது. உயிரைத் தந்தவரை கண்டிருந்தது. ஆனால், அன்று தான் முதன் முதலாக கண்ட துண்டமாய், அங்கம் அங்கமாய் உயிரைத் தந்தவரைக் கண்டது.

உம்மு அம்மாரா (ரலி) அவர்களின் இன்னொரு மகனார் அப்துல்லாஹ் இப்னு ஜைத் (ரலி) அவர்களும் உஹதிலே காயங்கள், விழுப்புண்கள் பலதை மனமுவந்து ஏற்றுக் கொண்டார்கள்.

மேலும், அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் யமாமாவில் தன்னை நபியென வாதிட்ட முஸைலமாவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போரில் கலந்து இந்த சத்திய தீனுக்காக ஷஹாதா வீர மரணம் அடைந்தார்கள்.

அல்லாஹ்விற்காகவும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் மீது கொண்டிருந்த காதலுக்காகவும் தானும் போராடி, தம் கணவரையும் கலந்து கொள்ளச் செய்து, தம் இரு மகன்களையும் வீர மரணம் அடையச் செய்து, சுவனத்தில் நபிகளாரின் அண்மையை பேற்றாக பெற்ற உயரிய குடும்பம் தான் அன்ஸாரிகளின் பனூ நஜ்ஜார் கோத்திரத்தாரின், மாஜினீ குடும்பத்தாரின் உம்மு உமாரா (ரலி) அவர்களின் குடும்பம் என்பதை நாம் உணர வேண்டும்.

ஆனால், இன்று நாமும், நம்முடைய குடும்ப அமைப்பும் எந்தளவிற்கு அல்லாஹ்விற்காக தியாகம் செய்ய முன் வந்திருக்கின்றோம் என்பதை சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கின்றோம்.

இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் இப்புனித நாளில் இப்ராஹீமிய குடும்பத்தைப் போன்று குடும்பம் அமைப்பதாக சூளுரைப்போம்!

அல்லாஹ் நம் எல்லோருடைய குடும்பத்தார்களையும் தியாகத்திற்கு முன்னோடிகளாய் விளங்கிய இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார்களைப் போலவும், வீரத்திற்கும், அர்ப்பணத்திற்கும் விளை நிலமாய் விளங்கிய உம்மு அம்மாரா (ரலி) அவர்களின் குடும்பத்தார்களைப் போலவும் அவனுக்காக வாழ்ந்து, தியாகம் செய்கிற மேன்மக்களாக வாழ்கிற நல்ல நஸீபைத் தந்தருள் புரிவானாக!

ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!