Thursday 23 July 2015

படைத்தவனுக்கு பணிந்து வாழ்!! படைப்புகளுக்கு ஈந்து வாழ்!!!



படைத்தவனுக்கு பணிந்து வாழ்!! படைப்புகளுக்கு ஈந்து வாழ்!!!




இஸ்லாத்தின் அனைத்து கடமைகளும்படைத்தவனுக்கு எல்லா காலங்களிலும், எல்லா நிலைகளிலும் பணிந்து வாழுங்கள்: படைப்புகளுக்கு எல்லா காலங்களிலும், எல்லா நிலைகளிலும் ஈந்து வாழுங்கள்எனும் உயரிய தத்துவத்தை போதிக்கும் முகமாகவே அமைந்திருக்கின்றன.

ரமலான் முடிந்தது படைத்தவனுக்கு பணிந்து வாழ்வதும் முடிந்து விட்டது, ஈத் முடிந்தது படைப்புகளுக்கு ஈந்து வாழ்வதும் முடிந்து விட்டது எனும் முடிவுக்கு ஓர் இறைநம்பிக்கையாளன் வந்து விடக்கூடாது.

அல்லாஹ் மனித வாழ்வை இரண்டு கடமைகளை செய்யும் முகமாகவே அமைத்திருக்கின்றான். ஒன்று இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள், மற்றொன்று இறையடியார்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்.

இரண்டும் இரு கண்களைப் போன்றதாகும். ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றதாகும். இரண்டில் எது இல்லையானாலும் நஷ்டம் மனிதனுக்குத்தான்.

இந்த இரண்டு கடமைகளையும் மனிதனின் உயிர் பிரியும் வரையிலும் பேணப்பட வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ ()

”( நபியே! ) மேலும், கட்டாயம் வரக்கூடிய அந்தக் கடைசி நேரம் வரை உம் இறைவனுக்கு அடி பணிந்து வாழ்வீராக!”   ( அல்குர்ஆன்: 15:99 )

وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ () وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ ()

உங்களில் எவருக்கேனும் மரண நேரம் வரும் முன்பாக நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யுங்கள். மேலும், அந்த நேரத்தில் அவர் கூறுவார்: “என் அதிபதியே! நீ எனக்கு இன்னும் சிறிது காலம் அவகாசம் அளிக்கக் கூடாதா? நான் தான தர்மம் செய்வேனே! நல்லோர்களில் ஒருவனாகி விடுவேனே!” ஆனால், ஒருவருக்கு அவர் செயல்படுவதற்கான அவகாசம் முடிவடையும் நேரம் வந்து விட்டாலோ எந்த மனிதனுக்கும் மேலும் கால அவகாசத்தை அல்லாஹ் கண்டிப்பாக அளிப்பதில்லை”.                                ( அல்குர்ஆன்: 63:10,11 )

படைத்தவனுக்கு பணிந்து வாழ்வதும், படைப்புகளுக்கு ஈந்து வாழ்வதும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அது மரணம் வரை பேணப்பட வேண்டும் என்பதையும் மேற்கூறிய இறைவசனங்கள் உணர்த்துகின்றது.

படைப்பினங்களுக்கு ஈந்து வாழ்வது…..

ஏற்றத்தாழ்வுகள் அது மனித வாழ்வில் இடம் பெற்றிருக்கின்ற இன்றியமையாத ஓர் அம்சமாகும்.

சிலரை விட அல்லாஹ் சிலரை சில விஷயங்களின் மூலம் மேன்மை படுத்தி இருக்கின்றான். சிலருக்கு அளப்பரிய ஆற்றலை அல்லாஹ் வழங்கியிருக்கின்றான். இன்னும் சிலருக்கு கல்வியறிவு, இன்னும் சிலருக்கு செல்வம், இன்னும் சிலருக்கு கௌரவம், அந்தஸ்து இன்னும் சிலருக்கு ஆட்சி, அதிகாரம் என்று.

அப்படி மேன்மை படுத்தப்பட்டவர்கள் தம்மிடம் இருக்கும் அந்தச் சிலவற்றை இல்லாதவர்களுக்கும் பகிர்ந்தளித்திட வேண்டும் இதுவே இறைவன் வகுத்திருக்கிற இயற்கை நியதியாகும்.

மனித உறவுகளில் இறைநம்பிக்கையாளர்களின் உறவுகள் மிகவும் போற்றுதலுக்கும் பேணுதலுக்கும் உரிய உறவாகும்.

إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ ()

இறைநம்பிக்கையாளர்கள் ஒருவர் மற்றவருக்குச் சகோதரர் ஆவார்கள். எனவே, உங்கள் சகோதரர்களுக்கிடையே தொடர்புகளைச் சீர்படுத்துங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் மீது அல்லாஹ் கருணை பொழியப்படக்கூடும்”.

சாதாரண மனிதர்களோடு பகிர்ந்து கொள்கிற நிலையை விட இறைநம்பிக்கையாளர்களிடையே பகிர்ந்து கொள்கிற எந்த ஒரு நிலையும் வல்ல ரஹ்மான் இடத்தில் உயர் அந்தஸ்துக்குரியதாகும்.

தன்னிடம் இருப்பதைக் கொண்டு ஆனந்தம் அடைபவர்களை ஒரு போதும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

إِذْ قَالَ لَهُ قَوْمُهُ لَا تَفْرَحْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ ()

காரூணிடம் அவனுடைய சமூகத்தார் கூறினார்கள்: “உன்னிடம் உள்ள செல்வ வளத்தைக் கொண்டு நீ பூரித்து விடாதே! ஏனெனில், பூரித்திருப்பவர்களை அல்லாஹ் ஒரு போதும் நேசிப்பதில்லை”.                                ( அல்குர்ஆன்: 28:76 )

இதைப் போன்று நான், எனது, என்னுடையது என பேசியவர்கள் எவரின் முடிவையும் அல்லாஹ் அழகானதாய் அமைத்திடவில்லை.

قَالَ أَنَا خَيْرٌ مِنْهُ خَلَقْتَنِي مِنْ نَارٍ وَخَلَقْتَهُ مِنْ طِينٍ ()

ஆதமை விட நான் தான் சிறந்தவன்; என்னை நீ நெருப்பால் படைத்தாய்; அவரை நீ களிமண்ணால் படைத்தாய்என்று கூறிய ஷைத்தானின் முடிவை அல்லாஹ் மோசமாய் அமைத்தான்.

وَنَادَى فِرْعَوْنُ فِي قَوْمِهِ قَالَ يَا قَوْمِ أَلَيْسَ لِي مُلْكُ مِصْرَ وَهَذِهِ الْأَنْهَارُ تَجْرِي مِنْ تَحْتِي أَفَلَا تُبْصِرُونَ () أَمْ أَنَا خَيْرٌ مِنْ هَذَا الَّذِي هُوَ مَهِينٌ وَلَا يَكَادُ يُبِينُ () فَلَوْلَا أُلْقِيَ عَلَيْهِ أَسْوِرَةٌ مِنْ ذَهَبٍ أَوْ جَاءَ مَعَهُ الْمَلَائِكَةُ مُقْتَرِنِينَ ()

ஃபிர்அவ்ன் தன் சமூகத்தினரை நோக்கிக் கூறினான்: “என் மக்களே! எகிப்தின் அரசாட்சி என்னுடையதல்லவா? இந்த ஆறுகள் எனக்கு கீழேயல்லவா ஓடிக்கொண்டிருக்கின்றன? என்ன, உங்களுக்குத் தெரியவில்லையா? நான் சிறந்தவனா? அல்லது கேவலமானவரும் (தன்னுடைய கருத்தை) தெளிவாக எடுத்துக் கூறவும் இயலாதவருமான இந்த ( மூஸா {அலை}… ) சிறந்தவரா? இவருக்கு தங்கக் காப்புகள் ஏன் இறக்கித் தரப்படவில்லை? அல்லது வானவர்களின் குழு ஒன்று ஏன் இவருடன் வரவில்லை”. ( அல்குர்ஆன்: 43:51 – 53 ) என்று கூறிய ஃபிர்அவ்னின் முடிவை கேவலமாய் அமைத்தான்.

قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ عِنْدِي

காரூண் தன் சமூகத்தாரை நோக்கிக் கூறினான்: “எனக்கு கிடைத்திருக்கின்ற செல்வ வளங்கள் அனைத்தும் என்னிடமுள்ள அறிவினால் தான் எனக்குக் கிடைத்திருக்கின்றன!” ( அல்குர்ஆன்: 28:78 ) என்று கூறிய காரூணின் முடிவை பரிதாபகரமாய் அமைத்தான்.

தன்னிடம் இருப்பதே இல்லாதவர்களுக்கு ஈந்தளிப்பதற்காகத்தான் என்று ஈகையை வெளிப்படுத்துபவர்களுக்கு அல்லாஹ் நிறைவாக வழங்காமல் இருப்பதில்லை.

وَتَصَدَّقْ عَلَيْنَا إِنَّ اللَّهَ يَجْزِي الْمُتَصَدِّقِينَ ()

திண்ணமாக, அல்லாஹ் ஈந்தளிப்பவர்களுக்கு நிறைவான கூலி வழங்குகின்றான்                                           ( அல்குர்ஆன்: 12:88 )

ஆனந்தம் அடைபவர்களை அல்லாஹ் எப்படி அதிக காலம் மகிழ்ச்சியோடு வைப்பதில்லையோ அது போன்று ஈகையோடு வாழ்பவர்களை அல்லாஹ் எக்காலத்திலும் ( இம்மைமறுமை ) ஒரு போதும் கை விடுவதும் இல்லை.

الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَعَلَانِيَةً فَلَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ()

எவர்கள் தங்களுடைய பொருள்களை இரவிலும், பகலிலும் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் ஈந்தளிக்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களின் அதிபதியிடம் உயரிய கூலி இருக்கின்றது. மேலும், அவர்களுக்கு இவ்வுலகில் எவ்வித அச்சமும் இல்லை; மறுமையில் அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்”.    ( அல்குர்ஆன்: 2:274 )

இல்லாதோருக்கு கொடுத்து வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகிற இஸ்லாம் அதை எப்படி, எப்போது கொடுக்க வேண்டும்? என்பதையும் கூறியிருக்கின்றது.

இதை உணராமல் இந்த முஸ்லிம் சமூகம் குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட மாதத்தில் மட்டும் ஈகையை வெளிப்படுத்தி வந்து கொண்டிருக்கின்றது.

ஆதலால் தான் ஒரு ஊரில் உள்ளவர் இன்னொரு ஊரிலும், ஒரு மாவட்டத்தில் உள்ளவர் இன்னொரு மாவட்டத்திலும், ஒரு மாநிலத்தில் உள்ளவர் இன்னொரு மாநிலத்திலும் ஒரு நாட்டில் உள்ளவர் இன்னொரு நாட்டிலும் நின்று கையேந்தி யாசித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஈகையின் மூலம் எந்த மறுமலர்ச்சியை இஸ்லாம் விரும்புகின்றதோ அது இன்றளவும் ஏற்படாமலேயே இருக்கின்றது.

ஈந்தளிப்பவரின் நிலையில் அல்லாஹ் ஏற்படுத்தும் மாற்றம்….

عن أبي مسعود قال: ( كان رسول الله يأمرنا بالصدقة، فما يجد أحدنا شيئاً يتصدق به؛ حتى ينطلق إلى السوق، فيحمل على ظهره، فيجيء بالمدّ، فيعطيه رسول الله ، إني لأعرف اليوم رجلاً له مائة ألف، ما كان له يومئذ درهم! ) رواه النسائي/ صحيح النسائي:2528

அபூ மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் எங்களிடையே நபி {ஸல்} அவர்கள் அமர்ந்திருந்த போது எங்களிடம் தர்மம் செய்யுமாறு கூறினார்கள்.

 அப்போது எங்களில் எவரிடமும் தர்மம் செய்யும் அளவுக்கு எதுவும் இல்லை. எங்களில் ஒருவர் கடை வீதிக்குச் சென்று உழைத்து, அதன் மூலம் கிடைத்த கூலியை ஒரு முத்து அளவிற்கு பெருமானார் {ஸல்} அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தார்.

இப்போது நான் அவரின் வாழ்க்கைத் தரத்தைப் பார்க்கின்றேன். அவரிடம் ஒரு லட்சம் திர்ஹம் இருக்கின்றது. ஆனால், அண்ணலாரிடம் அவர் வந்து கொடுக்கும் முன்பு வரை அவரிடம் ஒரு திர்ஹம் கூட இல்லை”.         ( நூல்: நஸாயி )

யாருக்கு கொடுக்க வேண்டும்? எப்படிக் கொடுக்க வேண்டும்?

இது மிகவும் அவசியம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அம்சமாகும்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சபையில் யார் வந்து யாசித்தாலும், அல்லது பெருமானார் {ஸல்} அவர்களிடம் யார் வந்து முறையிட்டாலும், அல்லது யாராவது தாமாக முன் வந்து ஈந்தளித்தாலும் அதை நபி {ஸல்} அவர்கள் மிகக் கவனமாக பகிர்ந்தளிப்பார்கள்.

அவரவர்களின் தேவையை, தகுதியை பரிசீலித்து உதவி செய்வார்கள்.

உதவி தேடி வந்தவருக்கு உழைப்பை பரிசளித்த அண்ணலார் {ஸல்}…

ஒரு முறை ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். தமக்கு ஏதாவது தருமாறு யாசகம் கேட்டார்.

இது கேட்ட நபி (ஸல்) அவர்கள் உங்களுடைய வீட்டில் ஏதாவது இருக்கின்றதா?” எனக் கேட்டார்கள்.  ஒரு போர்வையும் ஒரு பாத்திரமும் இருப்பதாக அவர் பதிலளித்தார். வற்றைக் கொண்டு வருமாறு நபி (ஸல்) அவர்கள் பணித்தார்கள்.

அவ்விரு பொருள்களும் கொண்டு வரப்பட்டன. நபி (ஸல்) அவர்கள் அவற்றை ஏலத்தில் விற்றார்கள். அதற்கு இரண்டு திர்ஹம்கள் கிடைத்தன.

இதில் ஒரு திர்ஹத்திற்கு உணவு வாங்கி குடும்பத்துக்கு கொடுக்குமாறும் அடுத்த திர்ஹத்துக்கு ஒரு கோடாரி வாங்கி வாருங்கள் என்றும் கூறி அவரை அனுப்பி வைத்தார்கள்.

கோடாரி வாங்கி வரப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட நபி (ஸல்) அவர்கள் அதற்கொரு பிடியைப் பொருத்தி யாசித்த அந்த மனிதரிடம் ஒப்படைத்தார்கள்.

நீங்கள் விறகு வெட்டி விற்பனை செய்யுங்கள். பதினைந்து நாட்களுக்குப் பின் எம்மை வந்து நீர் சந்திக்க வேண்டும்என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

 அவர் நபி (ஸல்) அவர்கள் கூறியபடி விறகு வெட்டி விற்பனை செய்து வந்தார்.

பதினைந்து நாட்களுக்குப் பின் நபி (ஸல்) அவர்களைச் சத்தித்து தனது வருமானத்தைப் பற்றிக் கூறித் திருப்தியடைந்து மகிழ்ந்த முகத்தோடு இதற்காக நன்றி கூறினார்.

அப்போது இறுதி நாளில் முகத்தில் கறுத்த குறிகளுடன் வருவதைவிட இத் தொழில் உமக்கு மிகவும் சிறந்ததாகும்என்று கூறி நபி (ஸல்) அவர்கள் அவரை அனுப்பி வைத்தார்கள்.                                                                                                               ( நூல்: திர்மிதீ )

உறவுகளுக்கும், இரத்தபந்தங்களுக்கும் முதலிடம்….

لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ وَمَا تُنْفِقُوا مِنْ شَيْءٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ

உங்களுக்கு விருப்பமானவற்றை இறைவழியில் அர்ப்பணிக்காத வரை நீங்கள் நன்மையினை அடைந்திட முடியாது. மேலும், எதனை நீங்கள் அர்ப்பணித்தாலும் திண்ணமாக, அல்லாஹ் அதனை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.”
இந்த இறை வசனம் இறங்கிய போது....

وكذلك فعل زيد ابن حارثة، عمد مما يحب إلى فرس يقال له (سبل) وقال: اللهم إنك تعلم أنه ليس لي مال أحب إلي من فرسي هذه، فجاء بها إلى  النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فقال: هذا في سبيل الله. فقال لأسامة بن زيد (اقبضه). فكأن زيدا وجد من ذلك في نفسه. فقال رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إن الله قد قبلها منك). ذكره أسد بن موسى.

ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்கள்தங்களது வீட்டில் இருந்து அழுது புலம்பியவர்களாக யாஅல்லாஹ்! என்னிடத்திலே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பணம் ஒன்றும் இல்லை. என்னிடம் நான் மிகவும் நேசிக்கின்ற ஒன்றாக இதோ இந்த ஸுபுல் என்கிற குதிரை மட்டும் தான் இருக்கின்றது. இதோ அதையும் உனக்காக அர்ப்பணித்து விடுகின்றேன்என்று சொல்லியவராக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்து குதிரையை கொடுத்து விட்டுச் சென்றார்கள்.

அதைப் பெற்றுக் கொண்ட நபி {ஸல்} அவர்கள் ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்களின் மகன் உஸாமா (ரலி) அவர்களை அழைத்து அந்தக் குதிரையை அவரிடம் வழங்கினார்கள்.

பின்பு, ஜைத் (ரலி) அவர்களிடம் ”அல்லாஹ் உம்மிடம் இருந்து உம் ஈகையை ஏற்றுக் கொண்டான்” என்று சோபனம் கூறினார்கள்.

لما نزلت: { مَنْ ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ } قال أبو الدحداح الأنصاري: يا رسول الله وإن الله ليريد منا القرض؟ قال: "نعم يا أبا الدحداح" قال: أرني يدك يا رسول الله. قال: فناوله يده قال: فإني قد أقرضت ربي حائطي. قال: وحائط له فيه ستمائة نخلة وأم الدحداح فيه وعيالها. قال: فجاء أبو الدحداح فناداها: يا أم الدحداح. قالت: لبيك قال: اخرجي فقد أقرضته ربي عز وجل. وقد رواه ابن مردويه من حديث عبد الرحمن بن زيد بن أسلم عن أبيه عن عمر مرفوعًا بنحوه

அபுத்தஹ்தாஹ் (ரலி) தமது 600 பேரீத்தம் மரங்கள் கொண்ட தோட்டத்தை அல்குர்ஆன்: 2 –ஆம் அத்தியாயம் 245 –ஆம் வசனம் இறக்கியருளப்பட்ட போது இதை நான் அல்லாஹ்விற்காக அழகிய கடனாகக் கொடுத்து விட்டேன்” என்று கூறி நபி {ஸல்} அவர்களின் கரம் பற்றி ஒப்படைத்தார்கள்.

நபி {ஸல்} அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டு அபுத்தஹ்தா (ரலி) அவர்களின் நெருங்கிய உறவினர்களில் ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தார்கள். ( நூல்: இப்னு கஸீர் )


وقال الإمام أحمد: حدثنا روح، حدثنا مالك، عن إسحاق بن عبد الله بن أبي طلحة، سمع أنس بن مالك يقول: كان أبو طلحة أكثر أنصاري  بالمدينة مالا وكانَ أحبَّ أمواله إليه بيْرَحاءُ -وكانت مُسْتقْبلة المسجد، وكان النبي صلى الله عليه وسلم يدخلها ويشرب من ماء فيها طيّب-قال أنس: فلما نزلت: { لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ } قال أبو طلحة: يا رسول الله، إن الله يقول: { لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ } وإن أحبَّ أموالي إلَيَّ بيْرَحاءُ وإنها صدقة لله أرجو بِرَّها وذُخْرَها عند الله تعالى، فَضَعْها يا رسول الله حيث أراك الله تعالى فقال النبي صلى الله عليه وسلم: "بَخٍ، ذَاكَ مَالٌ رَابِحٌ، ذَاكَ مَالٌ رَابِح، وَقَدْ سَمِعْتُ، وَأَنَا أرَى أنْ تجْعَلَهَا فِي الأقْرَبِينَ". فقال أبو طلحة: أفْعَلُ يا رسول الله. فَقَسَمها أبو طلحة في أقاربه وبني عمه.

இதே போன்று அபூதல்ஹா (ரலி) அவர்களும் 3 –ஆம் அத்தியாயம் 92 –ஆம் இறைவசனம் இறக்கியருளப்பட்ட போது தங்களுக்கு மிகவும் பிரியமான பைருஹா தோட்டத்தை நபி {ஸல்} அவர்களிடம் வழங்கினார்கள்.

அப்போது நபி {ஸல்} அவர்கள் அபூதல்ஹாவிடம் “அபூதல்ஹாவே! ஏழ்மையில் உழலும் உமது இரத்த உறவுகளுக்கும், நெருங்கிய உறவுகளுக்கும் அத்தோட்டத்தை பகிர்ந்தளித்து விடுவீராக!” என்று கூறினார்கள்.

அபூதல்ஹா (ரலி) அவர்களும் அண்ணலார் கூறியது போன்றே தங்களது சிறிய தந்தையின் மக்களுக்கும், நெருங்கிய உறவுகளுக்கும் பகிர்ந்தளித்தார்கள்.

இதே போன்று ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் தங்களின் சொத்தில் மூன்றில் ஒரு பதியை தானமாக வழங்க முன் வந்த போதும், உமர் (ரலி) அவர்கள் தங்களின் கைபர் பங்கை தர்மமாக வழங்க முன் வந்த போதும் உறவினர்களில் ஏழ்மையில் உழல்பவர்களை கை தூக்கி நிமிர்த்திட, வாழ்வளித்திட பகிர்ந்தளிக்குமாறு நபி {ஸல்} உத்தரவிட்டார்கள்.          ( நூல்: இப்னு கஸீர் )

அடுத்த கட்டமாக நபி {ஸல்} அவர்கள் அண்டை அயலார், பணியாளர்கள், அனுதினமும் சந்திக்கும் சக முஸ்லிம் சகோதரர்களின் துயர் துடைத்திடுமாறு ஆணையிட்டார்கள்.

حديث مرفوع ثنا ثَابِتُ بْنُ نُعَيْمٍ الْهَوْجِيُّ ، ثنا آدَمُ بْنُ أَبِي إِيَاسَ الْعَسْقَلانِيُّ ، ثنا أَبُو الأَشْهَبِ ، عَنْ أَبِي نَضْرَةَ ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ : بَيْنَمَا نَحْنُ فِي سَفَرٍ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَ رَجُلٌ عَلَى رَاحِلَةٍ عَجْفَاءَ ، فَجَعَلَ يَصْرِفُ يَمِينًا وَشِمَالا ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ كَانَ مَعَهُ فَضْلُ ظَهْرٍ فَلْيَعُدْ بِهِ عَلَى مَنْ لا ظَهْرَ لَهُ ، وَمَنْ كَانَ مَعَهُ فَضْلُ زَادٍ فَلْيَعُدْ بِهِ عَلَى مَنْ لا زَادَ لَهُ " ، حَتَّى ذَكَرَ أَصْنَافَ الْمَالِ ، حَتَّى رَؤيْنَا أَنَّهُ لا حَقَّ لأَحَدٍ مِنَّا فِي فَضْلٍ .
அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் ஒரு பிரயாணத்தில் இருந்தோம். அப்போது எங்களிடம் நபி {ஸல்} அவர்கள் உங்களில் வாகனம் விசாலமாக கொடுக்கப்பட்டவர்கள் வாகனம் இல்லாதவருக்கு வசதி செய்து கொடுங்கள். உணவு விசாலமாக உள்ளவர்கள் உணவு இல்லாதவர்களுக்கு வழங்குங்கள்” என்று கூறினார்கள்.                                 ( நூல்: தப்ரானீ )

மஃரூர் இப்னு ஸவீத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் ஒரு முறை அபூதர் (ரலி) அவர்களை அவர்களின் பணியாளர் ஒருவரோடு சந்தித்தோம். அப்போது, அபூதர் (ரலி) அவர்கள் என்ன அணிந்திருந்தார்களோ அதே ஆபரணத்தை அவரின் பணியாளரும் அணிந்திருந்தார்.

ஆச்சர்யம் மேலிட நாங்கள் அது குறித்து வினவிய போது, அபூதர் (ரலி) அவர்கள் “நான் ஒரு முறை ஒருவரை அவரின் தாய் குறித்து விமர்சனம் செய்து திட்டி விட்டேன். அவர் அன்னைப் பற்றி நபி {ஸல்} அவர்களிடம் முறையிட்டார்.

நபி {ஸல்} அவர்கள் என்னை அழைத்து “உங்கள் பணியாளர்கள் உங்கள் சகோதரர்களே! உங்களின் ஆதிக்கத்தின் கீழ் அல்லாஹ் அவர்களை தந்திருக்கின்றான். எனவே, உங்களின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளவர்களுக்கு நீங்கள் உண்ணுவது போல் அவர்களுக்கும் உண்ணக்கொடுங்கள்.  நீங்கள் உடுத்துவது போல் அவர்களுக்கும் உடுத்தக் கொடுங்கள். அதிக வேலை கொடுத்து அவர்களை சிரமப் படுத்தாதீர்கள். அவர்களின் வேலைகளில் அவர்களுக்கு உதவியாய் இருங்கள் என்று என்னிடம் கூறினார்கள்” என்று கூறினார்.                         ( நூல்: தப்ரானீ )

”நீங்கள் இறைச்சி சமைத்தால் உங்கள் இறைச்சிக் குழம்பில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்தி அதன் குழம்பை அண்டை அயலார் வீட்டுக்கும் நீங்கள் கொடுங்கள்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

பக்கத்து ஊரில் இருக்கும் ஏழைகள் வாழ்வு மலர ஈந்தளிக்க வேண்டும்…

கடன் வாங்கி ஈந்தளித்த பெருமானார் {ஸல்}…..

لقيتُ بلالًا مؤذِّنَ رسولِ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ بحلبَ فقلتُ: يا بلالُ حدِّثني كيفَ كانت نفقةُ رسولِ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ؟
 قالَ: ما كانَ لَهُ شيءٌ، كنتُ أَنا الَّذي ألي ذلِكَ منهُ منذُ بعثَهُ اللَّهُ إلى أن توُفِّيَ، وَكانَ إذا أتاهُ الإنسانُ مُسلمًا فرآهُ عاريًا، يأمرُني فأنطلقُ فأستقرِضُ فأشتري لَهُ البردةَ فأَكْسوهُ وأطعمُهُ حتَّى اعتَرضَني رجلٌ منَ المشرِكينَ،
 فقالَ: يا بلالُ، إنَّ عندي سَعةً، فلا تستقرِضْ من أحدٍ إلَّا منِّي، ففعلتُ فلمَّا أن كانَ ذاتَ يومٍ توضَّأتُ، ثمَّ قمتُ لأؤذِّنَ بالصَّلاةِ، فإذا المشرِكُ قد أقبَلَ في عصابةٍ منَ التُّجَّارِ، فلمَّا أن رآني، قالَ: يا حبشيُّ، قلتُ: يا لبَّاهُ فتجَهَّمَني، وقالَ لي قولًا غليظًا، وقالَ لي: أتدري كم بينَكَ وبينَ الشَّهرِ؟ قالَ: قُلتُ قريبٌ، قالَ: إنَّما بينَكَ وبينَهُ أربعٌ، فآخذُكَ بالَّذي عليكَ، فأردُّكَ تَرعى الغنمَ، كما كنتَ قبلَ ذلِكَ فأخذَ في نَفسي ما يأخذُ في أنفسِ النَّاسِ، حتَّى إذا صلَّيتُ العتَمةَ،
 رجعَ رسولُ اللَّهِ صلّى اللَّه عليه وسلَّمَ إلى أَهْلِهِ، فاستأذنتُ علَيهِ فأذنَ لي، فقلتُ: يا رسولَ اللَّهِ، بأبي أنتَ وأمِّي، إنَّ المُشْرِكَ الَّذي كنتُ أتديَّنُ منهُ، قالَ لي كذا وَكَذا، وليسَ عندَكَ ما تَقضي عنِّي، ولا عندي، وَهوَ فاضحي، فأذن لي أن آبَقَ إلى بعضِ هؤلاءِ الأحياءِ الَّذينَ قد أسلَموا، حتَّى يرزُقَ اللَّهُ رسولَهُ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ ما يَقضي عنِّي، فخرجتُ حتَّى إذا أتيتُ منزلي، فجعَلتُ سيفي وجرابي ونَعلي ومجنِّي عندَ رأسي، حتَّى إذا انشقَّ عمودُ الصُّبحِ الأوَّلِ أردتُ أن أنطلِقَ،
 فإذا إنسانٌ يسعَى يدعو: يا بلالُ أجب رسولَ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ، فانطلقتُ حتَّى أتيتُهُ، فإذا أربعُ رَكائبَ مُناخاتٌ عليهنَّ أحمالُهُنَّ، فاستأذنتُ، فقالَ لي رسولُ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ: أبشِر فقد جاءَكَ اللَّهُ بقضائِكَ ثمَّ قالَ: ألم ترَ الرَّكائبَ المُناخاتِ الأربَع فقلتُ: بلى، فقالَ: إنَّ لَكَ رقابَهُنَّ وما عليهنَّ، فإنَّ عليهنَّ كسوةً وطعامًا أَهْداهنَّ إليَّ عظيمُ فدَكَ فاقبِضهنَّ، واقضِ دَينَكَ ففعلتُ،
 فذَكَرَ الحديثَ، ثمَّ انطلقتُ إلى المسجدِ، فإذا رسولُ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ قاعدٌ في المسجدِ فسلَّمتُ علَيهِ، فقالَ: ما فعلَ ما قِبلَكَ؟ قلتُ: قد قضى اللَّهُ كلَّ شيءٍ كانَ على رسولِ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ، فلم يبقَ شيءٌ،
 قالَ: أفضَلَ شيءٌ؟ قلتُ: نعَم، قالَ: انظُر أن تريحَني منهُ، فإنِّي لستُ بداخلٍ على أحدٍ من أَهْلي حتَّى تريحَني منه فلمَّا صلَّى رسولُ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ العتمةَ دعاني، فقالَ: ما فعلَ الَّذي قبلَكَ؟ قالَ: قلتُ: هوَ معي لم يأتِنا أحدٌ،
 فباتَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ، في المسجدِ، وقصَّ الحديثَ حتَّى إذا صلَّى العتَمةَ يعني منَ الغدِ دعاني، قالَ: ما فعلَ الَّذي قبلَكَ؟ قالَ: قلتُ: قد أراحَكَ اللَّهُ منهُ يا رسولَ اللَّهِ، فَكَبَّرَ وحمدَ اللَّهَ شفَقًا من أن يُدْرِكَهُ الموتُ، وعندَهُ ذلِكَ، ثمَّ اتَّبعتُهُ، حتَّى إذا جاءَ أزواجَهُ فسلَّمَ على امرأةٍ، امرأةٍ حتَّى أتى مَبيتَهُ فَهَذا الَّذي سألتَني عنهُ
الراوي: عبدالله الهوزني المحدث: الألباني - المصدر: صحيح أبي داود - الصفحة أو الرقم: 3055, إسناده صحيح
     
 அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த பின்னர், முஸ்லிம் ஏழைகள் விஷயத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எவ்வாறு செலவுகள் செய்யப்பட்டன?” என்று பிலால் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது

பிலால் (ரலி) அவர்கள் இப்படிக் கூறினார்கள்: “எங்களிடையே ஏழைகளும், வழிப்போக்கர்களும் உதவி தேடி வருவர். அதுபோது எங்களிடம் எது இருக்குமோ அதைக் கொடுப்போம். எதுவும் இல்லாத போது நபி {ஸல்} அவர்கள் என்னிடத்தில் அந்த ஏழைகளுக்கு ஏதாவது உதவி செய்திடுமாறு கூறுவார்கள்.

நானும் யாரிடமாவது கடன் வாங்கி அவர்களுக்கு உதவிகள் செய்வேன். பின்னர் நபி {ஸல்} அவர்களுக்கு தர்மப்பொருளோ, அல்லது அன்பளிப்புகளோ வருமானால் அதைக் கொண்டு கடனை அடைத்து விடுவேன். இது தான் வழக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில், மக்காவின் இணைவைப்பாளரான பெரிய செல்வந்தர் ஒருவர் என்னை ஒருபோது சந்தித்து உங்களின் விவகாரம் குறித்து நான் கேள்விபட்டேன்.

இனிமேல் நீங்கள் வேறுயாரிடமும் சென்று கடன் வாங்கவேண்டாம். என்னிடமே பெற்றுக் கொள்ளுங்கள். சொல்கிற தவணையில் சரியாகக் கொடுத்தால் போதும் என்றான்.

அவ்வாறே நானும் ஒரு சந்தர்ப்பத்தில் தவணையின் அடிப்படையில் கடன் பெற்றிருந்தேன்.

ஒரு நாள் பாங்கு சொல்வதற்காக உளூ செய்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் எனக்கு கடன் கொடுத்த அந்த முஷ்ரிக் சில நபர்களை அழைத்துக் கொண்டு என்னை நோக்கி கறுப்பு அடிமையே!” என்று சப்தமிட்டான். அந்த சப்தத்தைக் கேட்டு நான் நடுங்கிப்போனேன்.

அந்த முஷ்ரிக்கை நோக்கி கொழுத்தவனே! என்னைப் பயமுறுத்தி விட்டாயே! என்று கேட்டேன்.

அதற்கு, அந்த முஷ்ரிக் ! கறுப்பு அடிமையே! நான் உம்மீது இரக்கப்பட்டு கடனுதவி வழங்கினேன் என்று எண்ணிக் கொண்டாயா? ஒரு போதும் இல்லை. உமக்கு நான் கடன் தர வேண்டும். நீ அதைத் தர முடியாமல் தவிக்க வேண்டும். உன்னை நான் முன்பு போல அடிமைப் படுத்தி, ஒட்டகம் மேய்க்க விடவேண்டும்என்று நினைத்தல்லவா? உமக்கு கடன் தந்தேன்என்றான்.

அதற்கு நான்தவணை முடிய இன்னும் நான்கு நாட்கள் இருக்கத்தானே செய்கிறது?” அதற்கு முன் ஏன் இப்படி வந்து மிரட்டுகின்றாய்என்று கூறினேன். அதனைக் கேட்ட அவன் நான்கு நாட்கள் கழித்து வருவதாக சொல்லி விட்டுச் சென்றான்.

எனக்கு என் முந்தைய அடிமை வாழ்க்கையும், அவனுடைய மிரட்டலும் கண் முன் வரவே பயந்து போய் நபிகளாரின் சபைக்கு ஓடோடி வந்து நடந்தவற்றை நபி {ஸல்} அவர்களிடம் விளக்கிக் கூறி விட்டு, அல்லாஹ்வின் தூதரே! நான் நான்கு நாட்கள் முஸ்லிம்கள் நிறைந்து வாழ்கிற எங்காவது தலைமறைவாக இருக்க விரும்புகின்றேன்.

உங்களிடம் தர்மப்பொருளோ, அல்லது அன்பளிப்புகளோ வந்து விட்டதென்றால் நான் வந்து அதைக் கொண்டு போய் அவனிடம் கொடுத்து விடுகின்றேன்என்றேன்.

அதுகேட்ட அண்ணலார், மிகவும் மௌனமாக இருந்தார்கள். அங்கிருந்து உடனடியாக வீட்டுக்கு வந்த நான் வெளியூர் செல்வதற்கு தயாரானேன்.

அப்போது, என்னிடம் ஒருவர் வந்து பிலால் அவர்களே உங்களை நபி {ஸல்} அவர்கள் வரச் சொன்னார்கள். உடனடியாக செல்லுங்கள் என்றார்.

நானும் உடனடியாக நபிகளாரைக் காண மஸ்ஜிதுன் நபவீக்கு வந்தேன். பள்ளிக்கு வெளியே நான்கு ஒட்டகங்களும் அதன் மீது சாதனங்கள் அடங்கிய மூட்டைகளும் இருக்கக் கண்டேன்.

அப்போது நபி {ஸல்} அவர்கள் முகம் மலர்ந்தவர்களாக இருக்கக் கண்டேன்.

என்னைப் பார்த்ததும் நபி {ஸல்} அவர்கள்பிலாலே சோபனத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்! பள்ளிக்கு வெளியே நான்கு ஒட்டகைகளைப் பார்த்தீர்களா?” இப்போதே அதை ஓட்டிச் சென்று யார் யாருக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதை கொடுத்து விட்டு எனக்கு மன நிம்மதியை ஏற்படுத்துங்கள்என்றார்கள்.

நானும் மகிழ்ச்சியோடு வெளியே வந்துயார் யாருக்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சார்பாக கடன் பெறப்பட்டுள்ளதோ அவர்கள் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்என்று பொது அறிவிப்புச் செய்தேன்.

பின்னர் அந்த முஷ்ரிக்கிடம் சென்று அவனுக்கு தரவேண்டிய கடனையும் கொடுத்து விட்டு பள்ளிக்கு வந்தேன்.

என்னைப் பார்த்த நபிகளார் என்ன பிலாலே எல்லா சாதனங்களும் தீர்ந்து விட்டதா? நான் மன நிம்மதி பெற்று விடுவேனா?” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! இன்னும் கொஞ்சம் பொருட்கள் இருக்கின்றனஎன்றேன். அப்படியானால் சீக்கிரம் கொண்டு கொடுத்து விட்டு வாருங்கள்என்றார்கள் நபி {ஸல்} அவர்கள்.

இப்படியாக இரண்டு நாட்கள் நபி {ஸல்} அவர்கள் வீட்டிற்கே செல்லவில்லை. பள்ளியிலேயே இருந்து விட்டார்கள். நானும் கொஞ்சம் கொஞ்சமாக தேவையுடையோர்களைத் தேடிப் பிடித்துச் சென்று உதவிகளைச் செய்தேன்.

மூன்றாவது நாள் இரவு நேரமும் வந்தது. அண்ணலார் முன்பு போலவே என்னிடம் கேட்டார்கள். வெளியே செல்லுங்கள் பிலாலே! வெளியில் தேவையுடையோர் யாராவது தென்பட்டால் அவர்களிடம் கொடுத்து விட்டு என் சுமையைக் கொஞ்சம் குறையுங்கள்என்றார்கள்.

இறுதியாக, ஒரு பிரயாணக்குழுவொன்று வந்தது. அவர்களில் தேவையுடையோருக்கு உண்வும், ஆடையும் கொடுத்த பின் என்னிடம் இருந்த எல்லா பொருட்களும் தீர்ந்து போயின.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் சென்று நான் சொன்னேன். அதைக் கேட்டதும் அண்ணல் {ஸல்} அவர்கள் தக்பீர் கூறியவர்களாக, அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாக பள்ளியை விட்டு எழுந்து சென்றார்கள்.

தங்களின் மனைவியர்களின் வீடுகளின் முன்பு நின்று ஸலாம் கூறி இன்று யார் வீட்டில் தங்கும் முறை என்று கேட்டு விட்டு, அந்த வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மூன்று இரவு மற்றும் மூன்று பகலாக எந்த மனைவியரின் வீட்டிற்கும் செல்லவில்லை. பள்ளியிலேயே தங்கியிருந்தார்கள்.                                            ( நூல்; அபூதாவூத் )

عن أبي عمرو جرير بن عبد الله رضي الله عنه قال كنا في صدر النهار عند رسول الله صلى الله عليه وسلم فجاءه قوم عراة مجتابي النمار أو العباء متقلدي السيوف عامتهم بل كلهم من مضر فتمعر وجه رسول الله صلى الله عليه وسلم لما رأى بهم من الفاقة فدخل ثم خرج فأمر بلال فأذن وأقام ثم صلى ثم خطب فقال: { يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ } إلى آخر الآية { إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا } والآية الأخرى التي في آخر الحشر { يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ } تصدق رجل من ديناره من درهمه من ثوبه من صاع بره من صاع تمره حتى قال ولو بشق تمرة فجاء رجل من الأنصار بصرة كادت كفه تعجز عنها بل قد عجزت ثم تتابع الناس حتى رأيت كومين من طعام وثياب حتى رأيت وجه رسول الله صلى الله عليه وسلم يتهلل كأنه مذهبة فقال رسول الله صلى الله عليه وسلم: من سن في الإسلام سنة حسنة فله أجرها وأجر من عمل بها من بعده من غير أن ينقص من أجورهم شيء ومن سن في الإسلام سنة سيئة كان عليه وزرها ووزر من عمل بها من بعده من غير أن ينقص من أوزارهم شيء رواه مسلم

ஒரு நாள் அதிகாலைப் பொழுது நபிகளாரைச் சந்திக்க குழு ஒன்று வந்திருந்தது. அண்ணலாரின் சபைக்குள் வந்த போது அவர்களின் தோற்றத்தைக் கண்டதும் அண்ணலாரின் முகம் செந்நிறமாக மாறியது.

வந்திருந்த அக்குழுவினர் முளர் கோத்திரத்தினர். கந்தலாடை, ஒட்டிய வயிறு, உலர்ந்த முகம், பிதுங்கிய விழிகள், எலும்பும் தோலுமாக அவர்களின் முழுத்தோற்றமும் அவர்களின் ஏழ்மையையும், வறுமையையும் பறை சாற்றியது.

அண்ணல் நபிகளாரின் முகம் வாடியது. அவர்களை பள்ளியில் அமர வைத்தார்கள். பிலால் (ரலி) அவர்களை பாங்கு சொல்லச் சொன்னார்கள்.

தொழுகை முடிந்ததும், மக்களை நோக்கி உரை ஒன்றை நிகழ்த்தினார்கள். அந்த உரையில் “அந்நிஸா அத்தியாயத்தின் முதல் வசனத்தையும், அல் ஹஷ்ர் அத்தியாயத்தின் 58 மற்றும் 59 –ஆம் வசனத்தை ஓதிக்காண்பித்து விட்டு வந்திருந்த வறியோருக்கு உதவுமாறு வலியுறுத்தினார்கள்.

”ஒரு சிறிய துண்டு ஈத்தம் பழத்தை தான் தர முடியும் என்றால் கூட அவர் அதைக் கொண்டு வந்து தரட்டும்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அப்போது, அன்ஸாரித்தோழர்களில் ஒருவர் தன் கைகளால் சுமக்க முடியாத அளவுக்கு ஒரு பை நிறைய வெள்ளியை எடுத்து வந்தார். அவரைத் தொடர்ந்து மக்கள் ஒருவர் பின் ஒருவராக கொண்டு வரத்தொடங்கினர்.

ஏராளமான உடைகளும், உணவுப் பொருட்களும் குவிந்த வண்ணம் இருந்தன. அண்ணலாரின் அழகிய முகம் மலர்ந்து இலங்கியது.

குவிந்த குவியலை இன்முகத்துடன் வழங்கி முளர் கோத்திரத்தார்களை வழியனுப்பும் போது பெருமானார் {ஸல்} அவர்கள் “எவரேனும் மார்க்கத்தில் நல்லதோர் முன்மாதிரியை ஏற்படுத்துவாரேயானால் அதற்குரிய பிரதிபலன் அவருக்கு கிடைக்கும். அத்தோடு, அதனை அடிப்படையாகக் கொண்டு அதனைப் பின்பற்றுவோரின் பிரதிபலனும் அவருக்கு கிடைக்கும். பின்பற்றுவோரின் நன்மையில் இம்மியளவும் குறையாது.

மேலும், எவரேனும் மார்க்கத்தில் ஓர் அநாச்சாரத்தை உண்டு பண்ணினால் அதற்குண்டான தீமை அவருக்கு கிடைக்கும். அத்தோடு, அதனை அடிப்படையாகக் கொண்டு அதனைப் பின்பற்றுவோரின் பாவமும் அவருக்கு கிடைக்கும். பின்பற்றுவோரின் பாவத்தில் இம்மியளவும் குறையாது.” என்று கூறினார்கள்.

                                  ( நூல்: ரியாளுஸ்ஸாலிஹீன், முஸ்லிம் )

ஈகையில் மிகச்சிறந்த ஈகை…

யா அல்லாஹ்! ஹகீம் இப்னு ஹிஷாமுக்கு ஹிதாயத்தை வழங்குவாயாக! ஒரு போது அண்ணலார் இப்படி இறைவனிடம் இறைஞ்சினார்கள்.

”நீங்கள் யுத்தகளத்தில் அபுல் புஃக்தரியைக் கண்டால் அவரைக் கொலை செய்திட வேண்டாம்” பத்ர் யுத்தத்தின் அணிவகுப்பில் நபி {ஸல்} அவர்கள் படை வீரர்களுக்கு இட்ட ஆணை!

”இப்போது மட்டும் முத்இம் இப்னு அதீ உயிரோடு இருந்தால் பத்ரில் பிடிக்கப்பட்ட அனைத்து கைதிகளையும் எந்த ஈட்டையும் பெற்றுக் கொள்ளாமல் விடுவித்து இருப்பேன்” பத்ர் கைதிகள் விடுதலை சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்த வந்த மக்காவின் பிரதிநிதிகளிடம் அண்ணலார் கூறியது.

ஏன் காலம் கடந்த பின்னரும் அண்ணலார் அவர்கள் இவ்வாறு சிலரின் பெயர்களை நினைவில் வைத்து நன்றியுணர்வோடு நடந்து கொண்டார்கள்.

ஒரு மனிதனுக்கு பசித்த நேரத்தில் உணவளிப்பதைக் காட்டிலும், ஆடை இல்லாத போது அணிய ஆடைக் கொடுப்பதைக் காட்டிலும், விழி பிதுங்கிய நேரத்தில் வாழ வழிகாட்டுவதைக் காட்டிலும் வாழ்க்கையை கொடுப்பவர்கள் எக்காலத்திலும் மறந்திட இயலாதவர்கள்.

ஆம்! மேற்கூறிய மூவரும் இன்னும் சிலரும் ( ஜுஹைர் இப்னு அபூ உமைய்யா, ஹிஷாம் இப்னு அம்ர், ஸம்ஆ ) தான் ”கணவாய் அபூதாலிப்” ஊர் விலக்கம் செய்யப்பட்ட அண்ணலாருக்கும், நபித்தோழருக்கும் ஆதரவாக செயல் பட்டவர்கள்.

”கஅபாவில் தொங்க விடப்பட்ட தீர்மானத்தை கிழித்தெரிந்தே தீர்வோம்! அதுவரை ஓய மாட்டோம்!” மக்காவின் தலைவர்களான அபூஜஹ்ல், அபூசுஃப்யான் ஆகியோரிடம் மல்லுக்கு நின்றனர்.

وغدا زهير عليه حلة، فطاف بالبيت سبعًا، ثم أقبل على الناس، فقال : يا أهل مكة، أنأكل الطعام ونلبس الثياب وبنو هاشم هلكى، لا يباع ولا يبتاع منهم ؟ والله لا أقعد حتى تشق هذه الصحيفة القاطعة الظالمة .
قال أبو جهل ـ وكان في ناحية المسجد : كذبت، والله لا تشق .
فقال زمعة بن الأسود : أنت والله أكذب، مارضينا كتابتها حيث كتبت .
قال أبو البخترى : صدق زمعة، لا نرضى ما كتب فيها، ولا نقر به .
قال المطعم بن عدى : صدقتما، وكذب من قال غير ذلك، نبرأ إلى الله منها ومما كتب فيها .
وقال هشام بن عمرو نحوًا من ذلك .
قام المطعم إلى الصحيفة ليشقها، فوجد الأرضة قد أكلتها إلا ( باسمك اللهم ) ، وما كان فيها من اسم الله فإنها لم تأكله .
ثم نقض الصحيفة

ஒரு நாள் கஅபாவின் அருகே அபூஜஹ்ல் மற்றும் மக்காவின் பிரமுகர்கள் குழுமியிருக்கும் போது, ஜுஹைர் இப்னு அபூ உமைய்யா தலைமையில் மேற்கூறிய அருவரும் வந்திருந்தனர்.

கஅபாவை ஏழு முறை வலம் வந்த பின் ஜுஹைர் பேச்சைத் துவக்கினார்: “மக்களே! நாம் சாப்பிடுகின்றோம். ஆடைகளை அணிந்து கொள்கின்றோம். ஆனால், ஹாஷிமின் குடும்பமோ அங்கே அழிந்து கொண்டிருக்கின்றது. அவர்களிடம் எவ்வித கொடுக்கல் வாங்கலும் தொடர்பில் இல்லை. இது ஆகுமான செயலா?

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உறவை துண்டிக்கும் படியான, அநியாயமான இந்த ஒப்பந்தப் பத்திரம் கிழித்தெறியப்படும் வரை நான் உட்கார மாட்டேன்!” என்று சூளுரைத்தார்.

இது கேட்ட அபூஜஹ்ல் பொங்கியெழுந்தான். “நீ பொய்யுரைக்கின்றாய்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது கிழிக்கப்படாது” என்றான்.

இது கேட்ட ஸம்ஆ “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ தான் மிகப் பெரும் பொய்யன். நீ இதை எழுதும் போதே அதில் எங்களுக்கு விருப்பம் இல்லை” என்றார்.

பின்னர், அபுல் புஃக்தரீ, ஹிஷாம், முத்இம் ஆகியோரும் ஒருவர் பின் ஒருவராக எழுந்து இதே முழக்கத்தை முன் வைத்தனர்.

இறுதியாக, முத்இம் இப்னு அதீ அவர்கள் அந்த தீர்மானத்தை கிழித்தெறிந்தார்.

கிழித்தெறிந்த கையோடு, இந்த அருவரும் சேர்ந்து கணவாய் அபூதலிபிலிருந்து உருவிய வாள்களை கையில் ஏந்தி வழி நெடுக காவல் புரிந்து மக்காவில் கொண்டு வந்து விட்டனர்.

மீண்டும் அண்ணலார் மக்காவில் முஸ்லிம்களோடு புதிய உத்வேகத்தோடு பிரவேசித்தார்கள்.

இந்த உத்வேகமும், புதிய பிரவேசமும் சாத்தியமாகிட ஒரு வகையில் துணை நின்றவர்கள் இந்த அருவர்கள். ஆகவே தான் அண்ணலார் {ஸல்} அவர்கள் காலம் கடந்தும் கூட அவர்களின் பெயர்களை நினைவில் வைத்து மொழிந்தார்கள்.

அறியாமை, மௌட்டீகம், மடமைத்தனம், பழிக்குப்பழி, கொலைவெறி என வாழ்ந்து வந்த அம்மக்களில் மனித நேயமும் நியாய உணர்வும் மேலோங்கிய சிலர் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

வாழ்க்கையை தொலைத்த, வாழ்க்கையை தொடர முடியாமல் தவித்த முஸ்லிம்களுக்கு வாழ்க்கையின் புதிய அத்தியாயத்திற்கு வித்திட்டவர்கள் இந்த அருவரே.

புதியதோர் வாழ்க்கைக்கு வித்திட்ட அவர்களின் ஈகை உண்மையில் மிகப் பெரும் ஈகையே.

ஈகையில் மிகச்சிறந்த ஈகை வாழ்க்கையைக் கொடுப்பது தான் என்பதை மேற்கூறிய வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.

விபத்துகள், நோய் நொடிகள், வறுமை, ஏழ்மை, கடன் தொல்லை, இயற்கைச் சீற்றங்கள், கலவரங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று நமது குடும்பத்தில் துவங்கி உலகின் மூலை முடுக்கெங்கும் நிரம்பி இருக்கின்றனர்.

அத்தகையோரை அடையாளம் கண்டு அவர்களின் துயரை துடைப்பதில் உளப்பூர்வமாக ஈந்தளித்து இஸ்லாம் விரும்புகிற ஓர் உயரிய சமூகத்தை உருவாக்கிட ஒன்றிணைவோம்!

உயிர் உள்ளவரை படைப்பினங்களுக்கு ஈந்தளித்து இறை உவப்பைப் பெறுவோம்!

சீஸன் மழை போல் அல்லாமல், சீஸன் காற்று போல் அல்லாமல் எல்லா காலங்களிலும், எல்லா நிலைகளிலும் ஈந்தளிப்போம்!

  வல்ல ரஹ்மான் துணை நிற்பானாக! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!
                  வஸ்ஸலாம்!!!

இன்ஷா அல்லாஹ்… அடுத்த வாரம்… படைத்தவனுக்குப் பணிந்து வாழ்!!!