Thursday 14 April 2016

வீழ்ச்சியின் விளிம்பில் முஸ்லிம் சமூகம்!!!



வீழ்ச்சியின் விளிம்பில் முஸ்லிம் சமூகம்!!!



உலக வரலாறு பல்வேறு காலங்களை, அந்தந்த காலங்களில் வாழ்ந்த பல்வேறுபட்ட சமூக மக்களின் வாழ்க்கை முறைகளை, பலவிதமான ஏற்ற, இறக்கங்களை தன்னகத்தே புதைத்து வைத்துள்ளது.

பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மதரீதியாகவும், மூடநம்பிக்கையாலும் சிக்கித் தவித்து, தங்களுக்குள் நீண்ட நெடும் ஆண்டுகளாக மோதிக்கொண்டும், உயிரை மாய்த்துக் கொண்டிருந்த ஐரோப்பியர்கள்இன்று, உலகின் அசைவுகள் அனைத்தையும் இருந்த இடத்தில் இருந்து கொண்டு இயக்கும், நிர்ணயிக்கும் ஆற்றல் கொண்டவர்களாய் மாறிப்போயிருக்கின்றனர்.

அதே போல, வரலாறு நெடுகிலும் சென்ற இடங்களிலெல்லாம் வேட்டையாடப் பட்ட, வாழ்விடம் இல்லாமல் நாடோடிகளாய் வலம் வந்து கொண்டிருந்த யூதர்கள்இன்று, உலகின் அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை தங்களின் கட்டுப் பாட்டில் வைத்து இயக்கும் அளவுக்கு உயர்ந்து விட்டார்கள்.

அதே போல ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், தீண்டாமையின் பெயரால் அடிமைகளாகவும், மிருகங்களை விடவும் கேவலமாக நடத்தப்பட்ட தலித் சமூகம்இன்று, சுதந்திரக் காற்றை சுவாசித்த இந்தியாவின் 68 ஆண்டுகளுக்குள் இந்திய அரசின் அத்துனை துறைகளின், அனைத்துப் பொறுப்புகளிலும் இடம் பெற்று உயர்ந்தோர்களாய்த் திகழ்கின்றனர்.

ஆனால், வரலாறு முழுவதும் வீறு கொண்டு எழுந்து, பீடு நடை போட்டு, வாழ்வாங்கு வாழ்ந்து உலகில் அறியப்படுகிற அத்துனை திசைகளிலும் ஆளுமை செலுத்தி ஆண்ட முஸ்லிம் சமூகம் – 1857 க்குப் பிறகான ஏகாதிபத்திய ஆங்கிலேயர் ஆட்சியிலும், 1947 க்குப் பிறகான சுதந்திர இந்தியாவிலும், தொடர்ந்து இன்று வரை புறந்தள்ளப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களாக மாறிப்போய் விட்டனர்.

இந்த பின்னடைவில் இருந்து மீள்வதற்கு எந்த விதமான திட்டத்தையும் வகுக்காமல், வாழ்வை மேம்படுத்திடும் எந்த ஒரு காரியத்திலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாமல் முஸ்லிம் சமூகம் இருட்டறையில் எவராவது வெளிச்சத்தைக் காட்டிவிட மாட்டார்களா? என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றது.

வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வெற்றி பெறுவதற்குத் தேவையான எல்லா வழிகாட்டுதலையும் பெற்றிருக்கிற ஓர் ஒப்பற்ற சமூகம் ஏன் இந்த இழி நிலைக்கு, கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டது?.

வாருங்கள்! இஸ்லாம் கூறும் வழிகாட்டலின் படி காரணத்தைக் கண்டறிவோம்! மீள் திட்டங்களை வகுத்து, வாழ்வை மேம்படுத்திடும் காரியங்களில் ஈடுபட்டு, மீண்டும் வரலாற்றுப் பக்கங்களில் முஸ்லிம் சமூகத்தின் மாண்புகளை பதிவு செய்வோம்!!!

மாற்றம் முன்னேற்றத்திற்கான அடையாளம்….

 إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ

அல்லாஹ் கூறுகின்றான்: ”எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ்வும் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை”.                                           ( அல்குர்ஆன்: 13: 11 )

மேற்கூறப்பட்ட ஐரோப்பியர்கள், யூதர்கள், தலித் சமூகத்தினர் ஒரு கட்டத்தில் விழித்துக் கொண்டு தங்களின் போக்கையே மாற்றிக் கொண்டனர்.

இதற்கு, அவர்களின் அறிவு படைத்தவர்களும், சமுதாயத்தலைவர்களும், புரட்சியாளர்களும் அவர்களுக்கு வழிகாட்டினர். வாழ்வில் உயர உறுதுணையாக இருந்து ஊக்கப்படுத்தினர்.

இதன் விளைவாக இன்று அவர்கள்உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர்.

வீழ்ச்சியின் விளிம்பில் பயணித்துக் கொண்டிருக்கிற முஸ்லிம் சமூகம் முன்னேற்றத்தை நோக்கி விரைய வேண்டுமானால் மாற்றம் மிக அவசியமாகும்.

அந்த மாற்றம் இப்படி இருக்க வேண்டும்.

1. சமூகத்தை உயர்த்த கல்வி மற்றும் அறிவாற்றலுடன் களமிறங்க வேண்டும்.
2. அறிவு படைத்த அறிஞர்கள் சமூகத்திற்கு தேவையான காலத்தில் தேவையான வழிகாட்டலை வழங்கவேண்டும்.
3. வசதி படைத்தவர்கள், அதிகார வரம்பு கொண்டவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
4. வாய்ப்புகளை மிகச் சரியாக பயன் படுத்தி முன்னேற வேண்டும்.

மேற்கூறிய அடிப்படையில் மாற்றத்திற்கான முயற்சிகள் நடைபெறுமானால் இன்ஷா அல்லாஹ் இந்த உலகில், குறிப்பாக இந்த தேசத்தில் 2050 –இல் எல்லாத் துறைகளிலும் முன்னேறி உயர்ந்தவர்களாக வரலாற்றில் மீண்டும் வலம் வர முடியும்.

1. கல்வி மற்றும் அறிவாற்றலின் துணை கொண்டு களமிறங்குவோம்!!

இந்தியாவில் வாழ்கின்ற மலைவாழ் மக்கள், பழங்குடியின மக்கள் ஏனைய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை விட, இந்த சிறுபான்மை முஸ்லிம் சமூகம் கல்வியைப் பெற்றுக்கொள்வதில் மிகவும் பின் தங்கி இருப்பதாக ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ராஜீந்தர் சஜ்ஜார் தலைமையில் அடங்கிய ஏழு பேர் கொண்ட { Dr. T.K. Ooman, M.A. Basith, Dr. Akthar Majeed, Dr. Abu Saleh Shariff, and Dr. Rakesh Basant, Dr. Syed Zafar Mahmood } கமிட்டி 403 பக்க அறிக்கையை இந்திய பாராளுமன்றத்தில் 30.11.2006 அன்று ஒப்படைத்து முஸ்லிம்களின் அறியாமையை உலகிற்கு உணர்த்தியது.

நீதிபதி சஜ்ஜார் அவர்களின் அறிக்கையை கையில் எடுத்துக் கொண்டு இந்த தேசத்தின் மூலைகளிலெல்லாம் முழங்கியதன் விளைவாக தற்போது இந்த முஸ்லிம் சமூகம் கல்வியின் மீது ஆசை கொண்டு கவனம் செலுத்தி வருகிறது.

எனினும், எக்காலத்திற்கும் தோதுவான, அல்லது அந்தந்த காலத்திற்கு தோதுவான கல்வியைத் தேர்ந்தெடுப்பதில் முஸ்லிம் சமூகம் மிகவும் விழிப்புணர்வு இன்றி இருக்கின்றது.

பத்ரின் வெற்றி முஸ்லிம்களின் ஈமானிய உணர்வை உலகிற்கு வெளிப்படுத்திய அதே நேரத்தில் முஸ்லிம்களின் இராணுவ வலிமையையும் வெளிப்படுத்தியது.

என்ற போதிலும், முஸ்லிம்கள் இன்னும் சகல துறைகளிலும் மிளிர வேண்டும் என பெருமானார் {ஸல்} அவர்கள் விரும்பினார்கள்.

அதற்காக, மாநபி {ஸல்} அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி ஆச்சர்யம் தர வல்லது. ஆம்! பத்ர் யுத்தம் நடைபெற்று முடிந்து இறைமறுப்பாளர்கள் கைதிகளாய் பிடிக்கப்பட்டு மஸ்ஜிதுந் நபவீயின் முன்னர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

கைதிகள் தங்களை விடுவிப்பதற்காக மேற்கொள்ள வேண்டியவைகளின் ஒன்றாக கைதிகள் தாங்கள் கற்றறிந்து வைத்திருப்பதை முஸ்லிம்களுக்கு கற்றுக் கொடுத்துவிட்டு தம்மை விடுவித்துக் கொள்ளலாம் என்று மாநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

முஸ்லிம்களுக்கு கற்றுக்கொடுக்க அவர்கள் வேண்டுமானால் மார்க்க அறிஞர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், உலக நாடுகள் அனைத்திற்கும் பயணம் செய்யும் பெரும் வியாபாரிகளாக இருந்தனர்.

அன்றைய உலக நடப்பு, பயண விபரம், உலக நாடுகள் ஒவ்வொன்றின் சீதோஷ்ண நிலை, வானிலை மாற்றம், நாணய மதிப்பு, சந்தை மதிப்பு இன்னும் இது சார்ந்த அநேக விஷயங்களை முஸ்லிம்கள் அறிய வேண்டும் என பெருமானார் {ஸல்} அவர்கள் விரும்பினார்கள்.

நபி {ஸல்} அவர்கள் மதீனா வந்த பின்னர் முஸ்லிம்கள் விஷயத்தில் முன்னெடுத்த காரியங்களில் இது மிகவும் பயன் தருபவையாக அமைந்ததை வரலாற்றின் போங்கில் இருந்து விளங்கிக் கொள்ளலாம்.

ஆக, உலக அறிவை, காலத்திற்கு தோதுவான கல்வியறிவை முஸ்லிம்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள் என்பதை இச்சம்பவத்தின் மூலம் அறிய முடிகிறது.

இன்று உலகத்தரம் வாய்ந்த கல்வியாளர்கள் முஸ்லிம் சமூகத்தில் இல்லை. விஞ்ஞானிகள், வரலாற்று ஆய்வாளர்கள், மருத்துவ நிபுணர்கள், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் கண்டுபிடிப்பாளர்கள் என ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது.

முஸ்லிம்கள் விஞ்ஞானிகள் ஆவதை இஸ்லாம் தடுக்கின்றதா?

எகிப்தில் இயங்கி வரும் உலகப் புகழ்பெற்ற பல்கலைகழகமான அல் - ஜாமிவுல் அஸ்ஹர் யுனிவர்சிட்டியில் இருந்து வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில்..

விஞ்ஞான ஆய்வுகள் சம்பந்தமாக அல்குர் ஆனில் 750 இடங்களிலும்
இல்ம் - கல்வி சம்பந்தமாக அல்குர் ஆனில் 80 இடங்களிலும்
ஹிக்மத் - நுண்ணறிவு சம்பந்தமாக அல்குர் ஆனில் 20 இடங்களிலும்
இன்னும் அக்ல் - அறிவு, ஃபிக்ஹ் - மார்க்கச் சட்ட அறிவு, பிஃக்ர் - சிந்தனை அறிவு ஆகியவை சம்பந்தமாக அல்குர் ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்லாஹ் அல்குர்ஆனில் விஞ்ஞானத்தை, அறிவியலை ஊக்குவிக்கும் முகமாக பல இடங்களில் பேசுகின்றான்.

GEOGRAPHY - புவியியல்,         CHEMISTRY - வேதியியல்,
GENETICS -மரபியியல்              BIOLEGY - உயிரியல்,      
PHYSICS - இயற்பியல்               BOTANY - தாவரவியல்
FORESTRY - வனவியல்            GARDENING - தோட்டவியல் 
CYTOLOGY - உயிரணுவியல்  LOGIC - தர்க்கவியல்

அல்லாஹ் பல இடங்களில் இப்படிப்புகளை மேற்கொள்ளுமாறு ஏவுகிறான்.
புவியியலைப்பற்றி         அல்குர் ஆன்: 27:60 ம்      
வேதியியலைப்பற்றி அல்குர் ஆன்: 67:30 ம் 
மரபியலைப்பற்றி   அல்குர் ஆன்: 80:24-31 ம்
உயிரியலைப்பற்றி அல்குர் ஆன்: 40:67 ம்
தாவரவியலைப்பற்றி அல்குர் ஆன்: 27:60 ம்
தர்க்கவியலைப்பற்றி அல்குர் ஆன்: 22:8, 3:190, 22:54 ம்
பேசுவதைப் பார்க்கின்றோம்.

இன்னும் வானவியல், சந்திர மண்டலம் என பல்வேறு விஞ்ஞான கல்விமுறைப்பற்றியும் அல்குர்ஆன் பல இடங்களில் பேசுவதைக் காண முடிகிறது.

ஆனால், இன்று உலகில் எவராவது அரும்பாடு பட்டு, அயராது உழைத்து ஏதாவது ஒன்றை கண்டு பிடித்து உலகிற்கு அறிமுகம் செய்தால் இது பற்றி 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அல்குர்ஆன் கூறிவிட்டது. நபி {ஸல்} அவர்கள் கூறி விட்டார்கள் என்று கூறி முஸ்லிம் சமூகம் தங்களை பெருமையாக பேசி ஆசுவாசப் படுத்திக் கொள்கிறது.

யுத்தகளத்தில் கூட ஆயுத பலத்தை பயன் படுத்தாமல் அறிவை பயன் படுத்திய இறைத்தூதர் {ஸல்} அவர்கள்…..

அணுவையும், ஆயுதங்களையும் பயன்படுத்தி பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் என்று பாராமல் காக்கை, குருவியை சுட்டு வீழ்த்துவதைப் போன்று உலக நாடுகள் இன்று யுத்தத்தின் பெயரால் மனித உயிர்களை வேட்டையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது.

1914 முதலாம் உலகப்போர் மிகப் பெரும் உதாரணமாகும். முதலாம் உலகப் போரில் மட்டும், ரஷ்யாவில் 17 லட்சம், ஜெர்மனியில் 16 லட்சம், ஃபிரான்சில் 13 லட்சத்து 70,000, இத்தாலியில் 4 லட்சத்து 60,000, பிரிட்டனில் 7 லட்சத்து 6000 என மொத்தம் 78 லட்சத்து 38,000 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டன.

இது தவிர்த்து உள்நாட்டு போர்கள், தீவிரவாத எதிர்ப்புப் போர்கள் என்ற பெயரில் நடத்தப்பட்ட போர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணக்கீடுகள் வேறு.

ஆனால், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கடைசி 9 ஆண்டுகளில் 82 அல்லது 84 யுத்தங்களில் கலந்து கொண்டிருக்கின்றார்கள்.

எதிரிகளில் 759 நபர்கள் உட்பட இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 1018. இதில், பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் ஒருவர் கூட கிடையாது.

மேலும், எதிரிகள் 6564 நபர்கள் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு 6347 நபர்கள் விடுவிக்கப் பட்டிருக்கின்றனர்.

                  ( நூல்: கிதாபுல் மஃகாஸீ லி இமாமி அல் வாக்கிதீ ரஹ்….. )

உலக வரலாற்று ஆய்வாளர்கள் மாநபி {ஸல்} அவர்கள் யுத்த காலங்களின் போது நடந்து கொண்ட விதம் குறித்து வியந்து  

யுத்தகளம் என்பது உடல் பலத்தையும் ஆயுத பலத்தையும் நிரூபிக்கும் இடம் அல்ல. மாறாக, மனிதத்தன்மையை அதன் புனிதம் கெடாமல் பாதுகாக்கும் ஓர் உயரிய இடமாகக் கருதினார்கள் பெருமானார் {ஸல்} அவர்கள்.

பெருமானார் {ஸல்} அவர்கள் அன்றைய நவீன அறிவியல் மற்றும் யுத்த கால நுட்ப அறிவை பயன் படுத்தியதால் தான் மனித உயிர்களை பேரழிவுகளில் இருந்து காத்திட முடிந்தது.

மதீனாவை போர் மேகம் சூழ்ந்திருந்த தருணம் அது. எதிரிகள் மதீனாவிற்குள் நுழைந்து விட்டால் உயிழப்புகளும், சேதங்களும் பன்மடங்கு பெருகி விடும் அபாயகரமான சூழ்நிலை.

ஆம்! ஹிஜ்ரி 5 –ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் 10000 பேர் கொண்ட பெரும் படை ஒன்று மதீனாவைத் தாக்கி முஸ்லிம்களை கொன்று குவிக்க வேண்டும் என்கிற முனைப்போடு வருகின்றார்கள் என்கிற செய்தி தான் இதற்கு காரணம்.

இதுவரை இல்லாத ஒரு வித பதற்றமும், அச்ச உணர்வும் முஸ்லிம்களை ஆட்கொண்டிருந்தது. ஏனெனில், இதுவரை எதிரிகள் வெளியே இருந்து வந்தனர். ஆனால், இப்போதோ எதிரிகளோடு கைகோர்த்திருப்பவர்கள் மதீனாவின் பூகோளத்தை முழுவதுமாக அறிந்து வைத்திருந்த மதீனாவின் யூதர்கள்.

என்ன செய்வது? எப்படி போர்முனையை சமாளிப்பது? பெரும் சேதத்தை எப்படி தவிர்ப்பது? இப்படி நிறைய எப்படி பெருமானார் {ஸல்} அவர்களின் மின் கேள்விகள் தொக்கி நின்றது.

அல்லாஹ்வும் இப்படி பதிவு செய்திருப்பான்:

هُنَالِكَ ابْتُلِيَ الْمُؤْمِنُونَ وَزُلْزِلُوا زِلْزَالًا شَدِيدًا ()

அந்தக் கடினமான நேரத்தில் இறைநம்பிக்கையாளர்கள் நன்கு சோதிக்கப் பட்டார்கள். மேலும், கடுமையாக அலைக்கழிக்கப்பட்டார்கள்”. ( அல்குர்ஆன்: 33: 11 )

ولو بلغت هذه الأحزاب والمحزبة والجنود المجندة إلى أسوار المدينة بغتة لكانت أعظم خطراً على كيان المسلمين مما يقاس، وربما تبلغ إلى استئصال الشأفة وإبادة الخضراء، ولكن قيادة المدينة كانت قيادة متيقظة، لم تزل واضعة أناملها على العروق النابضة، تتجسس الظروف، وتقدر ما يتمخض عن مجراها، فلم تكد تتحرك هذه الجيوش عن مواضعها حتى نقلت استخبارات المدينة إلى قيادتها فيها بهذا الزحف الخطير .
وسارع رسول الله صلى الله عليه وسلم إلى عقد مجلس استشاري أعلي، تناول فيه موضوع خطة الدفاع عن كيان المدينة، وبعد مناقشات جرت بين القادة وأهل الشوري اتفقوا على قرار قدمه الصحابي النبيل سلمان الفارسي ضي الله عنه .
قال سلمان : يا رسول الله، إنا كنا بأرض فارس إذا حوصرنا خَنْدَقْنَا علينا . وكانت خطة حكيمة لم تكن تعرفها العرب قبل ذلك .
وأسرع رسول الله صلى الله عليه وسلم إلى تنفيذ هذه الحظة، فوكل إلى كل عشرة رجال أن يحفروا من الخندق أربعين ذراعاً، وقام المسلمون بجد ونشاط يحفرون الخندق، ورسول الله صلى الله عليه وسلم يحثهم ويساهمهم في عملهم هذا .

பரபரப்பான சூழ்நிலையில் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்தோழர்களில் முக்கியமானவர்களை உடனடியாக மஸ்ஜிதுன் நபவீயில் ஒன்று கூடுமாறு ஆணை பிறப்பித்தார்கள்.

மஸ்ஜிதுன் நபவீ அப்படியொரு அமைதியை அன்று வரை சந்தித்தது இல்லை. அமைதி என்றால் அப்படியொரு அமைதி. முக்கிய நபித்தோழர்களெல்லாம் அண்ணலாரை சூழ்ந்து அமர்ந்திருந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நிலவிய அமைதிக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாகதோழர்களே! நிலைமையை நீங்கள் மிகவும் அறிந்திருப்பீர்கள் என நான் கருதுகின்றேன்! நல்லதொரு ஆலோசனையை நல்குங்கள்!” என்று பேச்சை ஆரம்பித்தார்கள்.

நபித்தோழர்கள் ஒருவர் பின் ஒருவராக தங்களின் அறிவினிற் சிறந்த ஆலோசனைகளை பெருமானார் {ஸல்} அவர்களிடம் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். மாநபி {ஸல்} அவர்களும் மிகவும் உன்னிப்பாக அவைகளை கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ஸல்மான் ஃபார்ஸி (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பாரசீக நாட்டில் இருந்த போது எங்களை எதிரிகள் தாக்க வரும் போது எங்களைச் சுற்றி அகழ் தோண்டிக் கொள்வோம். அவ்வாறே இங்கும் செய்யலாம்என்று கூறினார்கள்.

இது நாள் வரை இப்படியானதொரு திட்டத்தை அறிந்தவர்களாக அரேபியர்கள் இல்லாததன் காரணமாக மாநபி {ஸல்} அவர்கள் அகழ் குறித்து முழுமையாகக் கேட்டு அறிந்து கொண்டு, அதை அங்கீகரித்து அதை நிறைவேற்ற 40 முழம் அகழ் தோண்ட 10 பேர் கொண்ட ஒரு குழுவாக பல குழுக்களை நபி {ஸல்} அவர்கள் நியமித்து தாங்களும் பங்கேற்றார்கள்.

இறுதியாக, அல்லாஹ் மபெரும் வெற்றியை முஸ்லிம்களுக்கு வழங்கினான். பெரும் அழிவிலிருந்து, மிகப் பெரிய சேதாரத்திலிருந்து முஸ்லிம்கள் தங்களைக் காத்துக் கொள்ள அகழ் பெரிதும் உதவியது.

وهذه الغزوة في الحقيقة امتداد لغزوة حنين، وذلك أن معظم فلول هَوَازن وثَقِيف دخلوا الطائف مع القائد العام ـ مالك بن عوف النَّصْرِي ـ وتحصنوا بها، فسار إليهم رسول الله صلى الله عليه وسلم بعد فراغه من حنين وجمع الغنائم بالجعرانة، في الشهر نفسه ـ شوال سنة 8 هـ .
وقدم خالد بن الوليد على مقدمته طليعة في ألف رجل، ثم سلك رسول اللهصلى الله عليه وسلم إلى الطائف، فمر في طريقه على نخلة اليمانية، ثم على قَرْنِ المنازل، ثم على لِيَّةَ، وكان هناك حصن لمالك بن عوف فأمر بهدمه، ثم واصل سيره حتى انتهي إلى الطائف فنزل قريباً من حصنه، وعسكر هناك، وفرض الحصار على أهل الحصن .

ஹுனைன் யுத்தம் வெற்றியோடு முடிக்கப்பட்டு எதிரிகள் புறமுதுகிட்டு ஓடிய தருணம் அது. போரில் தோல்வி கண்ட எதிரிகள் மூன்று பிரிவினர்களாக ஓடினர்.

ஒவ்வொரு பிரிவினரையும் பிடிக்க அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி வைத்தார்கள்.

அவ்தாஸை நோக்கி ஓடிய எதிரிகளைப் பிடிக்க அபூ ஆமிர் அஷ்அரீ (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு படைப்பிரிவையும், தாயிஃபை நோக்கி ஓடிய எதிரிகளைப் பிடிக்க காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் 1000 பேர் கொண்ட ஒரு படைப்பிரிவையும் அனுப்பி வைத்தார்கள்.

தாயிஃபை நோக்கி ஓடிய எதிரிகள் அங்கிருந்த பெரும் கோட்டை ஒன்றில் அடைக்கலமானார்கள். ஒரு வார காலமாகியும் எதிரிகள் வெளியே வராததால் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் அந்தப் படைப்பிரிவோடு தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

وشاور رسول الله «صلى الله عليه وآله» أصحابه في أمر حصن الطائف، فقال له سلمان الفارسي: يا رسول الله، أرى أن تنصب المنجنينق على حصنهم، فإنَّا كنَّا بأرض فارس ننصب المنجنيقات على الحصون. وتنصب علينا، فنصيب من عدونا ويصيب منا بالمنجنيق، وإن لم يكن منجنيق طال الثواء.
فأمره رسول الله «صلى الله عليه وآله»، فعمل منجنيقاً بيده، فنصبه على حصن الطائف. وهو أول منجنيق رمي به في الإسلام
وعن مكحول: إن رسول الله «صلى الله عليه وآله» نصب المنجنيق على أهل الطائف أربعين يوماً
سبل الهدى والرشاد ج5 ص385 عن الواقدي، تاريخ الخميس ج2 ص110

பின்னர், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்எதிரிகளை எப்படி வெளியே கொண்டு வருவது? என்பது குறித்து நபித்தோழர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்கள்.

அப்போது அங்கிருந்த ஸல்மான் ஃபார்ஸி (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! எங்கள் நாட்டில் இது போன்ற தருணங்களில் எதிரிகளின் நிலை மீது கற்களை வீசித்தாக்கும் மின்ஞனீக் எனும் கருவியைப் பயன்படுத்தி எதிரிகளை நிலை குலையச் செய்து கோட்டைகளை விட்டும் வெளியேற்றுவோம்என்று ஆலோசனை வழங்கினார்கள்.

அத்தோடு அதை உருவாக்கியும் கொடுத்தார்கள். சுமார் நாற்பது நாட்கள் முற்றுகைக்குப் பிறகு கோட்டையின் உள்ளே பதுங்கியிருந்த ஹவாஸின் மற்றும் ஸகீஃப் கோத்திரத்தார்கள் வெளியே வந்து சரணடைந்தனர்.

( ஸுபுலுல் ஹுதா வர் ரஷாத் லி இமாமி அல் வாகிதீ, தாரீகில் ஃகமீஸ் )

ஆக சமகால அறிவும், கல்வியும், நுட்பமும் அறிந்து வைத்திருப்பது முஸ்லிம் சமூகத்திற்கு மிக அவசியமானது என்பதை மேற்கூறிய இரு நிகழ்வுகளும் நமக்கு உணர்த்துகின்றன.

எனவே, முஸ்லிம் சமூகம் கல்வியின், அறிவாற்றலின் முக்கியத்துவம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஏனெனில், மனிதனை உலகில் படைத்ததின் நோக்கம் படைத்த இறைவனை வணங்குவதற்காகத் தான் என்று பேசுகிற அல்குர் ஆனின் முதல் கட்டளை வணக்க வழிபாடு குறித்து பேசவில்லை. மாறாக
اقرأ باسم ربك الذي خلق

”( நபியே! ) நீர் உம்மை படைத்த இறைவனின் பெயர்கொண்டு (ஓதுவீராக!) படிப்பீராக!” என்று கல்வியறிவுகுறித்து தான் பேசுகிறது.    (அல்குர்ஆன்: 90: 1,2,3 )

முதல் மனிதர் ஆதம் நபியிடம் அல்லாஹ் வணக்க வழிபாடுகள் குறித்து கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக, அல்லாஹ் படைப்பினங்கள் அனைத்தின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான் என்று கூறி விஞ்ஞான அறிவின் அவசியத்தை உணர்த்துகின்றான்.

 وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين

ஆக, அல்குர் ஆனின் முதல் கட்டளைகளையும், முதல் மனிதருக்கு முதலோனாம் அல்லாஹ் கற்றுக் கொடுத்த முதல் படிப்பும், கல்வியின் அவசியத்தை இந்த உம்மத்திற்கு உணர்த்திகிறது.

இன்ஷா அல்லாஹ்… ப்ளஸ் டூ தேர்வு முடிந்து உயர் படிப்பிற்காக எந்த படிப்பைத் தேர்ந்தெடுப்பது என பெற்றோர்களும், இளைய தலைமுறையினரும் உயர் கல்வி குறித்து ஆலோசித்து வரும் நிலையில் “உயர் கல்வியும்.. முஸ்லிம் சமூகத்தின் தவறான சிந்தனையும்” எனும் தலைப்பில் அடுத்த வாரமும் வீழ்ச்சியின் விளிம்பில் பயணிக்கும் முஸ்லிம் சமூகத்தை மீட்கும் பணி தொடரும்….