திருக்குர்ஆன் தீவிரவாதத்தை தூண்டுகின்றதா?
الحمد لله الذي أنزل
الفرقان على محمد ليكون للعالمين نذيرا معجزا للإنس والجن ولو كان بعضهم لبعض
ظهيرا نحمده على تفضله علينا بكتابه فضلا كبيرا ومن يؤت الحكمة فقد أوتى خيرا
كثيرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب الأرباب الذي عنت لقيوميته
الوجوه وخضعت لعظمته الرقاب
وأشهد أن سيدنا محمدا عبده ورسوله المبعوث من
أكرم الشعوب وأشرف الشعاب إلى خير أمة بأفضل كتاب الأنجاب صلاة وسلاما دائمين إلى
يوم المآب
ونصلي ونسلم على المبعوث بشيرا ونذيرا وداعيا
إلى الله بإذنه وسراجا منيرا صلاة دائمة وسلاما دائمين إلى يوم المآب
تتصل ولا تنقطع بكرة وهجيرا وبعد
ஜூலை 30/7/2016 சனிக்கிழமை
தந்தி தொலைக்காட்சி சேனலில்
கேள்விக்கென்ன பதில்? எனும்
நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர்
ரங்கராஜ் பாண்டே நிகழ்ச்சியில்
பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்
ஆடிட்டர் குருமூர்த்தியிடம் கருத்துச்
சுதந்திரம் தொடர்பான கேள்வி
ஒன்றில் “ஜூலை 23 மற்றும்
24 –ஆம் தேதியில் உங்களின்
டுவீட்டில் ”இந்த உலகில்
தீவிரவாதத்தை தூண்டுவதற்கு ஐஎஸ்
ஐஎஸ் இயக்கமோ, அல்
கொய்தாவோ, லஸ்கர் இதொய்பாவோ
தேவையில்லை. திருக்குர்ஆன் உடைய
வசனங்களே போதும்” என்று
பதிவிட்டு இருக்கின்றீர்களே!?” இன்னொரு
மதத்தையும், அந்த மதத்தைச்
சார்ந்தவர்களின் மனங்களையும்
புண்படுத்துவது தான் உங்கள்
பார்வையில் கருத்துச் சுதந்திரமா?
என்று கேட்டார்.
நேரடியாக கேள்விக்கு
பதிலளிக்காத ஆடிட்டர் குருமூர்த்தி
“இப்னு தைமிய்யா எனும்
அறிஞர் முஹம்மது நபியே
அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாற்றமாக
நடந்தார்” என்று புளுகு
மூட்டைகளை அவிழ்த்து விட்டதோடு
தான் செய்த டுவீட்
சரி தான் என
திருக்குர்ஆன் குறித்து உண்மைக்குப்
புறம்பான பொய்யான நச்சுக்
கருத்தை தெரிவித்தார்.
ஆடிட்டர் குருமூர்த்தி
ஒன்றும் சொல்லிக் கொள்ளும்
அளவுக்கு அறிவு ஜீவியோ,
அல்லது ஆய்வாளரோ கிடையாது.
இவர் ஆர். எஸ்.
எஸ் எனும் பல்லக்கை
தூக்கும் ஒரு சுமை
தூக்கியே!
இவரின் இந்த
நச்சுக் கருத்தை வன்மையாக
கண்டிக்கும் அதே நேரத்தில்
இது போன்ற விமர்சனங்களை
இஸ்லாத்தின் மீதும், அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள்
மீதும் திருக்குர்ஆனின் மீதும்,
முஸ்லிம்கள் மீதும் ஏன்
தொடுக்கின்றார்கள் என்று
ஆராய்ந்து பார்த்தால்….
பல்வேறு பட்ட
காரணங்களை நம்மால் சங்கிலித்
தொடர் போல் கூற
முடியும். அதில் சிலவற்றை
இங்கே காண்போம்.
1. உலகில் வேதங்களாக
அறியப்பட்ட அனைத்துமே அதன்
தொடக்க காலத்திலேயே திரிபுகளுக்கும்,
இடைச் செறுகல்களுக்கும் பழையது,
புதியது எனும் சொல்லாடல்களுக்கும் உள்ளாகி மாசு
படுத்தப்பட்டுள்ள நிலையில்
அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆன்
மட்டும் அது இறக்கியருளப்பட்ட நாள் முதற்கொண்டு
இது வரை ( இன்ஷா
அல்லாஹ்… உலகம் உள்ள
வரை
) எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாமல்
நிலைத்து நின்று, ஒரு
குறிப்ப்ட்ட சமூகம் தாண்டி
உலகம் முழுவதிலும் உள்ள
அறிஞர்களால் புகழ்ந்துரைக்கப்படுவதை ஏற்றுக்
கொள்ள முடியாமை.
2. வேதங்களின் இறுதியாக
இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன்
14 நூற்றாண்டு களுக்கும் மேலாக
அது முன் வைத்திருக்கிற
சவாலை முறியடிக்க அனைத்து
நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த
எந்த ஒரு அறிவு
ஜீவியாலும் முடிய வில்லையே?
அல்லது முன் வர
முடிய வில்லையே? என்கிற
இயலாமை.
3. உலகில் கண்டு
பிடிக்கப்படும் எந்த கண்டு
பிடிப்பும், அல்லது எந்த
ஒரு ஆய்வின் முடிவும்
பெரும்பாலும் திருக்குர்ஆன் கூறும்
கருத்துக்களுக்கு ஒத்துப்
போகிறதே என்கிற பொறாமை.
4. விமர்சனங்களைத் தாண்டி இஸ்லாம்
அபார எழுச்சியையும், உலக
நாடுகளில் அதன் அசுர
வளர்ச்சியையும் கொண்டு வீறு
நடை போடுகின்றதே என்கிற
ஆற்றாமை.
5. தீவிரவாதிகள் என்று
உலக ஊடகங்களின் முன்பாக
நின்று என்ன தான்
முக்கி, முக்கி முழங்கினாலும்
இந்த முஸ்லிம் சமூகம்
தங்களின் இஸ்லாமிய மயமாக்கப்பட்ட
வாழ்விலிருந்து பின்வாங்காமல் வாழ்ந்து
வருகின்றதே என்கிற பிரமை.
இத்தகைய
காரணங்களின் மூலமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் ஏகாதிபத்திய, ஃபாசிஸ இத்யாதி
இஸவாதிகளின்
காழ்ப்புணர்ச்சி தான்
இந்த விமர்சனங்களின்
பிண்ணனியில் இருக்கின்றது என்பதை எளிதாகப்
புரிந்து கொள்ள முடியும்.
வாருங்கள்! இன்ஷா
அல்லாஹ்… ஒவ்வொரு விமர்சனத்திற்குமான விளக்கங்களை இஸ்லாத்தின்
ஒளியில் பார்த்து விட்டு
உலக ஊமை ஊடகங்களுக்கும்,
ஊளையிடும் குள்ள நரிகளுக்கும்
பதில் தருவோம்!!!
இன்றைய
நவீன அறிவியல்,
விஞ்ஞானம் ஆகியவற்றின் ஆய்வு முடிவுகளும்,
திருக்குர்ஆனின் வசனங்களும்…..
1. வானம்
விரிவடைந்து கொண்டே
செல்தல்…
وَالسَّمَاءَ
بَنَيْنَاهَا بِأَيْدٍ وَإِنَّا لَمُوسِعُونَ ()
(நமது) வலிமையால் வானத்தைப்படைத்தோம்.
மேலும் (அதை) நாமே விரிவு
படுத்துவோம். ( அல்குர்ஆன்: 51:47 )
படுத்துவோம். ( அல்குர்ஆன்: 51:47 )
இவ்வசனத்தில் வானத்தை நாம் படைத்து அதை விரிவுபடுத்துகிறோம் என அல்லாஹ் கூறுகின்றான்.
நாம் வாழ்கின்ற
பிரபஞ்சம் அது தொடர்ச்சியாக விரிவடைந்து கொண்டே
செல்கிறது என்று விஞ்ஞானிகள் 20 –ஆம் நூற்றாண்டில்
கண்டறிந்துள்ளனர்.
திருக்குர்ஆன்
கூறும் இந்த உண்மையை 20
ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ரஷ்ய அறிஞர் அலெக்ஸாண்டர் ஃப்ரைட்மன்என்பவரும், பெல்ஜியம் அறிஞர் ஜார்ஜியஸ்
லமைட்ரெ என்பவரும்கண்டறிந்தனர்.
லமைட்ரெ என்பவரும்கண்டறிந்தனர்.
1929 ஆம் ஆண்டு
தொலைநோக்கியின் மூலம் எட்வின் ஹப்பிள் என்பவர் பிரபஞ்சம் விரிவதைக் கண்டுபிடித்துள்ளார்.
எட்வின் ஹப்பிள் மற்றும்
அவரது தொலைநோக்கி ”பெருவெடிப்புக் கொள்கையின் போது விரிய ஆரம்பித்த பிரபஞ்சம்
இன்று வரை
விரிந்து கொண்டே செல்கிறது” என்கிற பேருண்மையை உலகிற்கு
உணர்த்தியது.
உதாரணமாக, சூரியன் சுழல்வதுடன் மணிக்கு ஒன்பது லட்சம் கி.மீ. வேகத்தில் ஓடுகின்றது. நாளொன்றுக்கு இரண்டு கோடி
கி.மீ. தூரத்தைக் கடந்து ஓடுகின்றது.
அதற்கேற்ப இப்பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கின்றது.
அது படைக்கப்பட்ட
காலம் முதல் இன்று வரை தினமும் 2 கோடி கி.மீ. தொலைவுக்கு ஓடுவதிலிருந்து இப்பிரபஞ்சம் ஒவ்வொரு வினாடியும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்பதை எளிதாக விளங்க முடிகின்றது.
இனிமேலும், இது
போல் விரிவடைந்து கொண்டே இருக்கும் என்ற பேருண்மையை எடுத்துச் சொல்லி, தன்னைத் தானே இறைவேதம் என திருக்குர்ஆன் நிரூபிக்கின்றது.
பூமியைப் போன்ற இன்னொரு உயிர்க்கோளம் சாத்தியமா?
பிரபஞ்சத்தில்
எத்தனையோ கோள்கள் இருக்கின்றன. ஆனால், பூமியைத் தவிர வேறெங்கும் உயிர்கள் இதுவரை
இருப்பதாகத் தெரியவில்லை.
இதுவரை 1.75
மில்லியன் உயிரினங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்து பெயரிட்டிருக்கின்றார்கள். மனிதன்
பார்க்காத, பெயரிடப்படாத உயிரினங்களை 12 மில்லியன் இருக்கலாம் என விஞ்ஞானிகள்
சொல்கின்றார்கள்.
இத்தனை
ஜீவராசிகளோடு மனிதனும் இந்த பூமியில் ஜீவித்து இருக்கின்றான். எல்லா வகை
உயிர்களையும் ஜீவித்திருக்க வைக்கும் சூழ்நிலை பூமியில் மட்டுமே இருக்கிறது என்பது
உறுதியாக நம்பப்படும் ஒரு விஷயம்.
மனிதன்
செவ்வாயிலோ, நிலவிலோ போய் வசிக்கலாமா எனும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிற
இந்த தருணத்தில் இந்த பூமி போன்ற ஒரு பூமியை மினியேச்சர் அளவில் செயற்கையாக
உருவாக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் குழு ஒன்று ஈடுபட்டது.
ஆம்! இன்னொரு பூமி
சாத்தியமா? எனும் கேள்வியோடு தொடங்கப்பட்ட முயற்சிக்கு ( Bio – Sphere -2 ) இரண்டாம் உயிர்க்கோளம் என்று பெயரிட்டார்கள்.
அமெரிக்காவின் டெக்சாஸ்
மாகாணத்தைச் சார்ந்த எட்வர்ட் பாஸ் என்பவர் இதை உருவாக்க ஆசைப்பட்டார். எண்ணெய் கிணறு அதிபரான இவர் இதற்காக 900 கோடி ரூபாய் முதலீடு செய்தார்.
இலண்டனைச் சேர்ந்த “சூழ்நிலை தொழில்நுட்ப நிறுவனம்” ஹார்வார்டைச்
சேர்ந்த உலோகவியல் விஞ்ஞானியான ஜான் ஆலன் என்பவரோடு இணைந்து உருவாக்கும், வடிவமைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது.
அமெரிக்காவின் அரிசோனா
மாநிலத்தின் ஆரக்கிள் நகரை ஒட்டிய சாண்டா கேடலினா எனும் அழகிய மலையடிவாரத்தில் இடம்
பார்த்து மாதிரி பூமியை உருவாக்கினர்.
3.14 ஏக்கர்
பரப்பில் அடித்தளம் இரும்பாலும், சுற்றுப்புறம் கடினமான கண்ணாடியாலும்
செய்யப்பட்ட ஒரு பெரிய குடுவையாக இந்த உயிர்க்கோளம் வடிவமைக்கப்பட்டது.
36 மீட்டர்
உயரம், 5 அடுக்குகள் கொண்ட இந்தக்குடுவை 100 ஆண்டுகள் தாக்குப் பிடிக்க வல்லவை என்று கூறப்பட்டது.
இந்த மினி உயிர்க்கோளத்தில்
ஒரு சிறிய கடல், அதாவது நிஜமான கடலில் காண்பது போன்றே அலைகள்
5 மீட்டர் உயரத்தில் மேலெழும்பி வந்து கரையைத் தொடும். 9 இலட்சம் காலன் தண்ணீரைக் கொண்டு இந்தக் கடல் உருவாக்கப்பட்டது.
கடலை அடுத்து ஒரு சதுப்பு
நிலப்பகுதி, அதைத் தாண்டி விளைச்சல் நிலம், பக்கத்திலேயே அழகிய புல்வெளி, இன்னொரு புறத்தில் சிறிய
பாலைவனம், அதன் அருகே முட்புதர் காடு, இறுதியாக
அழகிய மரங்கள், செடி கொடிகள் அடங்கிய பசுமைக் காடு, குளித்து மகிழ நீர் வீழ்ச்சியும் உண்டு.
இயற்கையாக பூமியில்
காணப்படும் 5 வகை நிலங்களும், 300 வகை செடி கொடிகளும், 1400 விலங்கினங்கள், 30 வகை பூச்சிகள் இயற்கையான பூமியில் கழிவுகளைச் சிதைக்கும் வேளையில் ஈடுபடும்
பாக்டீரியாக்கள் போல செயற்கை பூமியிலும் வேண்டும் என்பதற்காக 30 ஆயிரம் டன் மண்ணை அதில் நிரப்பினார்கள்.
பல்வேறு துறைகளைச்
சேர்ந்த சுமார் 200 நிபுணர்கள் இதில் பயன் படுத்தப் பட்டனர்.
இயற்கையைப் பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் மிகக் கவனத்தோடு செய்தோம்
என்றார் “டோனி பர்ஜெஸ்” என்ற நிபுணர்.
மருத்துவர்கள், வேளாண் விஞ்ஞானி, விலங்கியல் மருத்துவர்,
பொறியாளர் என நான்கு பேர் ஆண்கள், நான்கு பேர்
பெண்கள் என எட்டு பேர் கொண்ட குழு வெளியுலக தொடர்பே இல்லாமல் இரண்டு ஆண்டுகள் இந்த
சின்ன செயற்கை உயிர்க்கோளத்தில் தங்க வைக்க வேண்டும் என்ற ஆரம்ப இலக்கோடு
1991 –ஆம் ஆண்டு செப்டம்பர் 26 –ஆம் தேதி உள்ளே
அனுப்பப்பட்டது.
அத்தோடு, அவர்களின் எந்தத் தேவைக்கும் அவர்கள் வெளியே வரக்கூடாது என்பதற்காக
காய்கறி முதல் கம்ப்யூட்டர் வரை, பால் முதல் தொலைபேசி வரை இப்படி
எல்லாவற்றையும் அந்த மினி செயற்கை பூமியில் அடைத்து வைத்தார்கள்.
பல்வேறு சிரமங்களுக்கு
மத்தியில் 2 ஆண்டுகள் உள்ளே இருந்து விட்டு
1993 செப்டம்பர் 26 –ஆம் தேதி அவர்கள் வெளியே வந்தனர்.
சோதனை வெற்றி என்றும் ஆரவாராமாகச் சொல்லப்பட்டது.
ஆனால், உள்ளே போய் வந்த டேபர் மெக்கல்லம் என்பவரிடம் மேற்கொண்ட விசாரணையில்
பல விஷயங்களை வெளிப்படையாகக் கூறினார்.
சாதாரணமாக நாம் சுவாசிக்கும்
காற்றில் 21 சதவீதம் காற்று இருக்கிறது. ஆனால், உள்ளே சில சமயம் 14. 5 சதவீதக்
காற்றே எங்களுக்கு கிடைத்தது. இதை விடவும் குறைந்திருந்தால் நாங்கள்
செத்தே போய் இருப்போம்.
இயல்புக்கு முரணான
இந்தக் காற்றை நாங்கள் சுவாசித்ததால் நாங்கள் எடை குறைந்து மெலிந்து விட்டோம். கொழுப்புச் சத்து,
இரத்த அழுத்தம் எல்லாம் குறைந்து விட்டது. எல்லோருமே சோம்பலாக இருப்பது போன்று
உணர்ந்தோம்.
தேவையில்லாமல் ஒருவர்
மீது ஒருவர் எரிச்சல் பட்டு அடிக்கடி நாங்கள் சண்டையிட்டுக் கொண்டோம்.
ஒருமுறை பராமரிப்பு
எனும் பெயரில் வெளியில் இருந்து காற்றை அனுப்பினார்கள். உள்ளே இருந்த பூக்கள் அழிந்தன. உணவுக்காக
பயிரிடப்பட்ட பயிர்கள் பொய்த்தன. உள்ளே விடப்பட்ட 25 வகை சிறிய விலங்கினங்களில் 19 வகை அழிந்து போயின.
இப்படி, பல திடுக்கிடும் தகவல்களைக் கூறி இரண்டாம் உயிர்க்கோளம் எனும்
முயற்சியில் தோற்றுப் போனதை ஒப்புக் கொண்டார்.
அரிசோனா பாலைவனத்தில்
கேலிப்பொருளாக காட்சியளிக்கும் அந்தக் குடுவையை 1996 –ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கொலம்பியா பல்கலைக் கழகம் இதை சுற்றுச் சூழல்
சீர்கேடு காரணமாக பூமியின் சூழல் மாறினால் என்னவாகும்? என்பது
தொடர்பான ஆராய்ச்சிகள் செய்யும் ஆய்வுக் கூடமாக இதை பயன் படுத்திக் கொண்டிருக்கின்றது.
இரண்டாவது உயிர்க்கோளம்
எனும் இந்த முயற்சி நிறைய பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது. எது எப்படியானாலும் “இறைவன் ஏற்படுத்திய
இயற்கையை மனிதனால் வெல்ல முடியாது. நாம் தோற்று விட்டோம்.
பூமிக்கு மாற்று என்று எதுவும் கிடையாது. எத்தனையோ
ஆச்சர்யங்களையும் ஆபத்துகளையும் தன்னுள் புதைத்து வைத்து அவ்வப்போது பயமுறுத்தினாலும்
பூமி மட்டுமே உயிர்களை வாழ வைக்கிறது” என்கிறார் நியூயார்க்கின்
ராக் ஃபெல்லர் பல்கலைகழகப்பேராசிரியர் ஜான் கோஹன் என்பவர்.
( ரஹ்மத் ராஜ
குமாரன் அவர்கள் எழுதிய அல்குர்ஆனின் அறிவியல் அத்தாட்சிகள் எனும் நூலிலிருந்து
)
அல்லாஹ் ஆதி மனிதர்
ஆதம் {அலை} அவர்களை சுவனத்திலிருந்து
வெளியேற்றும் போது…
وَقُلْنَا
اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ
وَمَتَاعٌ إِلَى حِينٍ ()
”நீங்கள் எல்லோரும்
இங்கிருந்து இறங்கி விடுங்கள்; நீங்கள் ஒருவருக் கொருவர் பகைவர்களாவீர்கள்.
இன்னும், உங்களுக்காக குறிப்பிட்ட காலம் வரை பூமியில்
தங்குமிடம் இருக்கின்றது. மேலும், அங்கே
வாழ்வதற்கான வசதிகளும் இருக்கின்றது” ( அல்குர்ஆன்:
2: 36 ) என்றான்.
உலக மக்களை ஏகத்துவத்தின்
பால் அழைக்கும் இறைவன் ஏன் அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பதற்கு பிரதானமான காரணங்களில்
ஒன்றாக பூமியை வசிப்பிடமாக ஆக்கியதை குறிப்பிடுகின்றான்.
يَا
أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ
الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ()
الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنْزَلَ مِنَ
السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ فَلَا
تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ ()
“மனிதர்களே!
உங்களையும், உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த
இறைவனையே நீங்கள் வணங்குங்கள்! அவ்வாறு செய்வதால் மட்டுமே உங்களை
நீங்கள் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
அவனே உங்களுக்காகப்
பூமியை வாழுமிடமாக (விரிப்பாக) வானத்தை முகடாக
ஆக்கினான். அவனே மேலிருந்து மழையைப் பொழியச் செய்து உங்கள் உணவுக்காக
விளை பொருள்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகின்றான். மேலும்,
இவற்றையெல்லாம் அறிந்து கொண்டே நீங்கள் அல்லாஹ்விற்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்”. (அல்குர்ஆன்: 2:21,22 )
மிகப் பெரும் முயற்சி, வெறும் எட்டு பேர்களை இரண்டு ஆண்டுகள் வாழ வைக்க 900 கோடி முதலீடு என்றால் இன்று உலகில் வாழும் 650 கோடிக்கும்
மேலானவர்களுக்கு பூமியில் வாழ இடம் கொடுத்துக் கொண்டிருக்கும், பல்லாயிரம் கோடி மனிதர்களுக்கு இந்த பூமியில் வாழ இடம் கொடுத்த இறைவனையும்,
இறைவனின் ஆற்றலையும் என்றாவது நாம் சிந்தித்துப் பார்த்ததுண்டா?
இரண்டாம் உயிர்க்கோளம்
தோற்றுப் போனதும் அறிவியல், விஞ்ஞான உலகம் “இறைவன்
ஏற்படுத்திய இயற்கையை மனிதனால் வெல்ல முடியாது. நாம் தோற்று விட்டோம்.
பூமிக்கு மாற்று என்று எதுவும் கிடையாது. எத்தனையோ
ஆச்சர்யங்களையும் ஆபத்துகளையும் தன்னுள் புதைத்து வைத்து அவ்வப்போது பயமுறுத்தினாலும்
பூமி மட்டுமே உயிர்களை வாழ வைக்கிறது” இப்படிக் கூறியதை
14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் அல்குர்ஆன் மனிதன் வாழ்வதற்கான,
உயிர்கள் வாழ்வதற்கான ஒரே உயிர்க்கோளம் பூமிதான் என்று.
நூஹ் நபியின் கப்பல்…
وَقِيلَ
يَا أَرْضُ ابْلَعِي مَاءَكِ وَيَا سَمَاءُ أَقْلِعِي وَغِيضَ الْمَاءُ وَقُضِيَ
الْأَمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُودِيِّ وَقِيلَ بُعْدًا لِلْقَوْمِ
الظَّالِمِينَ ()
“பூமியே! உனது நீர்
முழுவதையும் உறிஞ்சிக் கொள்! வானமே, நீ நிறுத்திக்
கொள்!’ என்று (இறைவனால்) கூறப்பட்டது. அவ்வாறே! தண்ணீர் வற்றியது. கட்டளை நிறை வேற்றப்பட்டது; அந்தக் கப்பல் ஜூதி மலை மீது நிலை கொண்டது.
பின்னர்
”அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்” எனவும் கூறப்பட்டது”.
( அல்குர்ஆன்: 11:44
)
فَأَنْجَيْنَاهُ
وَأَصْحَابَ السَّفِينَةِ وَجَعَلْنَاهَا آيَةً لِلْعَالَمِينَ ()
“அவரையும், கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். அதனை உலகத்தார் அனைவருக்கும் ஓர்
படிப்பினைக்குரிய சான்றாக்கி விட்டோம்” ( அல்குர்ஆன்: 29:15
)
وَحَمَلْنَاهُ
عَلَى ذَاتِ أَلْوَاحٍ وَدُسُرٍ () تَجْرِي بِأَعْيُنِنَا جَزَاءً لِمَنْ كَانَ
كُفِرَ () وَلَقَدْ تَرَكْنَاهَا آيَةً فَهَلْ مِنْ مُدَّكِرٍ ()
“மரப்பலகைகளால்
செய்யப்பட்டு ஆணிகள் அறையப்பட்ட (கப்பல்) ஒன்றில் அவரை ( நூஹை ) ஏற்றினோம். அது
நமது கண்காணிப்பில் சென்று கொண்டிருந்தது.
இது (தன் சமுதாயத்தால்) மறுக்கப் பட்டவருக்கு (நூஹுக்கு) நாம் செய்த பிரதிபலனாகும்.
அந்தக் கப்பலை நாம் ஒரு சான்றாக விட்டு வைத்தோம். இதைக் கொண்டு அறிவுரை பெறுபவர்
எவரேனும் இருக்கின்றார்களா?” (அல்குர்ஆன்: 54: 13-15)
மேற்கூறிய இவ்வசனங்களில்
நூஹ் நபியின் கப்பலை அத்தாட்சியாக மலையின் மேல் விட்டு வைத்திருப்பதாக
திருக்குர்ஆன் கூறுகின்றது.
இந்த மலை எது? அது
எங்கிருக்கின்றது? எனும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் இறுதியாக துருக்கி நாட்டின் எல்லையில் அமைந்துள்ள
போதான் மாவட்டத்திலுள்ள அரராத் என்ற மலை தான் ஜூதி மலை என்று கண்டுபிடித்து உள்ளனர்.
மலை போன்ற உயரத்திற்கு வெள்ளம் வந்ததால் ஜூதி மலைக்கு மேல்
கப்பல் நிலை கொண்டது என்றும் ஆய்வின் முடிவில் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு மலையேறும் குழு அம்மலையை ஆய்வு செய்து பனிப்பாறைகளுக்கு அடியில் கப்பல் துண்டுகள் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளது.
1959
ஆம் ஆண்டு
ஆகஸ்ட் மாதம், 2 ஆம் தேதியன்று கிழக்குத் துருக்கியின் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள அரராத் மலைத் தொடரில் ஒரு கப்பலின் சில மரப்பகுதிகளை அந்த ஆராய்ச்சிக்குழு கண்டுபிடித்தது.
இம்மலைத் தொடரின் மேற்குப்பகுதியில், 16,000 அடி உயரத்தில் பனியால் மூடப்பட்ட பாறைகளுக்கிடையே 20 மீட்டர் ஆழத்தில், அக்கப்பலின் மரப் பலகைகள் புதைந்து கிடந்தன.
16 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் ஒரு கப்பல் நிலை கொண்டுள்ளது என்றால் அந்த அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அதன் காரணமாக அந்த மலைக்கும் மேலே கப்பல் மிதந்து கொண்டு இருக்கும் போது வெள்ளம் வடிந்திருக்க வேண்டும்.
இதனால் அந்தக் கப்பல் மலையின் மீது நிலை கொண்டிருக்க
வேண்டும் என்று ஆய்வாளர்கள் ஊகித்துச் சொல்கின்றார்கள்.
மலையின் மேலே கப்பலைக் கொண்டு போய் நிலை கொள்ளச் செய்தது யார்? என்ற அவர்களின் கேள்விக்கும் ஊகத்திற்கும் திருக்குர்ஆன் மட்டுமே தக்க விடை
தருகிறது என்றால் அது மிகையல்ல.
சமீபத்தில் 59 ஆண்டுகளுக்கு முன்பாக கண்டுபிடிக்கப்பட்ட
இந்த உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் முன்னறிவிப்பு செய்துள்ளது.
புகழ்பெற்ற இயற்பியலாளரும், நோபல் பரிசு பெற்றவருமான
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இவ்வாறு கூறுவார்: “Science Without religion is lame. Religion without
science is blind” ”மதம் இல்லாத
அறிவியல் முடமானது. அறிவியல் இல்லாத மதம் குருடானது”
எனவே, திருக்குர்ஆன் என்பது அறிவியல் நூல் என்ற முடிவுக்கு
வந்து விடக் கூடாது. ஏனெனில், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அறிவியல் அந்தர் பல்டி
அடித்து விடும் என்பதை நாம் அறிவோம்.
திருக்குர்ஆன் என்பது ஆயாத் எனப்படும் அத்தாட்சிகள்
கொண்டதாகும். அல்குர்ஆனில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அத்தாட்சிகள் நிரம்பிக்
கிடக்கின்றன. அவற்றில் 750 வசனங்கள் அறிவியல் குறித்து விவாதிக்கின்றன.
ஆகவே, தான் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை ஆதாரங்களாக
நான் இங்கே இணைத்துள்ளேன்.
இது போன்ற எண்ணற்ற அறிவியல் மற்றும் விஞ்ஞான முடிவுகளின்
போது திருக்குர்ஆன் உண்மை படுத்தப்படுகின்ற போதெல்லாம் இஸ்லாத்தின் மீதான பொறாமையை
விமர்சனக்கணைகளை வீசுவதன் மூலம் திருப்தி அடைந்து கொள்கின்றனர் குறைமதியாளர்கள்.
2. திருக்குர்ஆன் விடும் சவால்….
திருக்குர்ஆன் தனக்கு நிகரில்லாத,
ஓர் ஒப்பற்ற உயர்ந்த தனி இலக்கிய நயத்தோடு அரபி மொழியில் திகழ்ந்து வருகின்றது.
ஒட்டு மொத்த மனித இனத்தை நோக்கி
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் திருக்குர்ஆனுக்கு நிகராக, இணையாக ஒரு நூலை கொண்டு வருமாறு
அறைகூவல் சவால் விடுகின்றான்.
قُلْ
لَئِنِ اجْتَمَعَتِ الْإِنْسُ وَالْجِنُّ عَلَى أَنْ يَأْتُوا بِمِثْلِ هَذَا
الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا ()
”நபியே! நீர் அம்மக்களை அழைத்துக்
கூறும்! மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தக் குர்ஆனைப் போன்று
ஒன்றைக் கொண்டு வர இயன்றாலும் இதைப் போன்று அவர்களால் கொண்டு வர இயலாது; அவர்கள் ஒருவர்
மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே!” ( அல்குர்ஆன்: 17: 88 )
أَمْ
يَقُولُونَ افْتَرَاهُ قُلْ فَأْتُوا بِعَشْرِ سُوَرٍ مِثْلِهِ مُفْتَرَيَاتٍ
وَادْعُوا مَنِ اسْتَطَعْتُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (13)
“இவர் தான் இவ்வேதத்தைப் புனைந்து
கூறுகிறார்” என்று வாதிடுகின்றார்களா? நபியே! நீர் அம்மக்களை நோக்கி நீர் கூறும்! அவ்வாறாயின்
இது போன்ற பத்து அத்தியாயங்களை நீங்கள் இயற்றிக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத்தவிர
யார், யார் இருக்கின்றார்களோ அவர்களையும் முடிந்தால் உதவிக்கு அழைத்துக் கொள்ளுங்கள்!
நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்!” ( அல்குர்ஆன்: 11: 13 )
وَإِنْ
كُنْتُمْ فِي رَيْبٍ مِمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِنْ
مِثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ ()
“நாம் நம் அடியார்க்கு இறக்கியருளியுள்ள
இவ்வேதம் குறித்து நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் இதைப் போன்ற ஒரேயொரு அத்தியாயத்தையேனும்
உருவாக்கிக் கொண்டு வாருங்கள்!
இதற்காக அல்லாஹ்வைத் தவிர
உங்களுக்கு துணை புரிபவர்கள் அனைவரையும் அழைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கூற்றில் நீங்கள்
உண்மையாளர்களாக இருப்பின் இதனைச் செய்து காட்டுங்கள்!” ( அல்குர்ஆன்: 2: 23 )
أَمْ
يَقُولُونَ تَقَوَّلَهُ بَلْ لَا يُؤْمِنُونَ () فَلْيَأْتُوا بِحَدِيثٍ مِثْلِهِ
إِنْ كَانُوا صَادِقِينَ ()
“இந்த மனிதர் இந்தக் குர்ஆனை
சுயமாகப் புணைகிறார்” என்று இவர்கள் கூறுகின்றார்களா? உண்மை யாதெனில், இவர்கள் நம்பிக்கை
கொள்ள விரும்ப வில்லை,.
மாறாக, இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதே போன்ற மகத்துவமிக்க
ஒரு வாக்கை இவர்கள் இயற்றிக் கொண்டு வரட்டும்! ( அல்குர்ஆன்: 52: 33, 34 )
فَإِنْ لَمْ تَفْعَلُوا
وَلَنْ تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ
وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ ()
”நீங்கள் அப்படிச் செய்யாவிட்டால்,
நிச்சயமாக ஒரு போதும் உங்களால் செய்ய முடியாது; மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக்
கொண்டதும், சத்தியத்தை நிராகரிப்பவர்களுக்காகத் தயார் செய்யப்பட்டதுமான நரக நெருப்புக்கு
நீங்கள் அஞ்சுங்கள்!” ( அல்குர்ஆன்: 2:
24 )
திருக்குர்ஆனைப் போன்றோ அல்லது
திருக்குர்ஆனில் உள்ள அத்தியாயங்களைப் போன்ற 10 அத்தியாயங்களையோ, அல்லது ஒரு அத்தியாயத்தையோ,
அல்லது குர்ஆனில் இடம் பெற்றுள்ள வாக்கியங்களைப் போன்ற ஒரேயொரு வாக்கியத்தையோ கொண்டு
வரட்டும் என்ற திருக்குர்ஆனின் இந்த சவால் இன்றைய நாள் வரை நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.
மேலும், இந்தக் குர்ஆனில்
இடைச் செறுகலையோ, திரிபுகளையோ கொண்டு வர எவ்வளவோ எத்தனித்தும் இன்று வரை அது இயலாமலே
போனது.
இடைச் செறுகல் இல்லாதது, திரிபுகளற்றது
என்று உலகத்தின் அத்துனை அறிஞர்களாலும் புகழப்பட்டு, வானாளாவி நிற்கிற திருக்குர்ஆனின்
புகழாரத்தை ஏற்க முடியாமை, மற்றும் சவாலை முறியடிக்க இயலாமை ஆகியவற்றால் பெரிதும் புழுங்கிக்
கொண்டிருக்கும் மத துவேஷிகள் தான் அவ்வப்போது இவ்வாறான விமர்சனங்களைத் தொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
4, 5 இஸ்லாம் தீவிரவாதத்தைத்
தாங்கி நிற்கிற ஒரு மார்க்கம் என்றும், முஸ்லிம்கள் அதைத் தூக்கி நிறுத்துகிற தீவிரவாதிகள்
என்றும் உலக ஊமை ஊடகங்களாளும்,
அறிவு ஜீவிகள் எனும் போர்வையில் ஊளையிடும் குள்ள
நரிகளாளும் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் இஸ்லாம் வளர்ந்து
கொண்டே போகின்றது. முஸ்லிம்கள் சமீப காலமாக எல்லாத்துறைகளிலும் மேலோங்க ஆரம்பித்து
இருக்கின்றார்கள்.
இஸ்லாத்தின்
வளர்ச்சி அது அல்லாஹ்வால் உறுதி செய்யப்பட்டு விட்ட இறுதியான ஒன்றாகும்.
يُرِيدُونَ
لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ
كَرِهَ الْكَافِرُونَ
அல்லாஹ் கூறுகின்றான்: “இவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களால் ஊதி அணைத்து விட விரும்புகின்றார்கள்.
ஆனால், அல்லாஹ்வின் முடிவு என்னவெனில் தன் ஒளியை
முழுமையாகப் பரப்பியே தீர்வது என்பதாகும். இறை நிராகரிப்பாளர்களுக்கு
அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!”.
( அல்குர்ஆன்: 61: 8 )
முஸ்லிம்களின் உயர்வும் அல்லாஹ்வால்
உறுதி செய்யப்பட்டு விட்ட இறுதியான ஒன்றாகும்.
وَلَا
تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ ()
“நீங்கள் மனம் தளர்ந்து விடாதீர்கள்!
கவலையும் கொள்ளாதீர்கள்! நீங்கள் இறைநம்பிக்கையுடையோராய் வாழும் காலமெல்லாம் நீங்களே
மேலோங்குவீர்கள்”.
( அல்குர்ஆன்: 3: 139 )
இஸ்லாம் என்பது
அல்லாஹ்வின் வார்த்தை. முஸ்லிம்
என்பது அல்லாஹ் இஸ்லாமிய
மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக
ஏற்றுக் கொண்டவர்களுக்கு அவனே
சூட்டி அழகு பார்க்கும்
பெயர்.
إِنَّ
الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ
“திண்ணமாக, இஸ்லாம்
மட்டுமே அல்லாஹ்விடம் ஒப்புக்
கொள்ளப்பட்ட வாழ்க்கை நெறி
( மார்க்கம் – தீன் ) ஆகும்”.
( அல்குர்ஆன்: 3: 19 )
هُوَ
اجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ مِلَّةَ أَبِيكُمْ
إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ مِنْ قَبْلُ وَفِي هَذَا
“மேலும், அவன்
தனது பணிக்காக உங்களைத்
தேர்ந்தெடுத்திருக்கின்றான். மேலும்,
அவன் வழங்கிய மார்க்கத்தில்
( இஸ்லாத்தில் ) உங்களுக்கு எவ்வித
சிரமத்தையும் வைத்திடவில்லை.
உங்கள் தந்தை
இப்ராஹீமின் மார்க்கத்தில் நிலைத்திருங்கள்.
அல்லாஹ் தான் இதற்கு
முன்பும், இப்போதும் உங்களுக்கு
முஸ்லிம்கள் என்று பெயர்
சூட்டியுள்ளான். தூதர் உங்கள்
மீது சான்று வழங்குபவராகவும்,
நீங்கள் மக்கள் மீது
சான்று வழங்குபவர்களாகவும் திகழ
வேண்டும் என்பதற்காக!”. ( அல்குர்ஆன்:
22: 78 )
ஆக இஸ்லாம்
என்பது அல்லாஹ் மொழிந்த
வார்த்தை எனவே, இஸ்லாத்தை
ஒரு போதும் மாற்ற
இயலாது. இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக கொண்டிருக்கும் எந்தவொரு முஸ்லிமையும் துற்பிரச்சரத்தின்
மூலமாகவோ, விமர்சனத்தின் மூலமாகவோ இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறிக்கு
மாறாக வாழ வைக்க எவராலும் ஒரு போதும்
இயலாது.
ஏனெனில், இவர்களின் தொடர் பிரச்சாரமும், விமர்சனங்களும்
ஒரு கட்டத்தில் நாம் இவ்வளவு நல்லவர்களாக இருந்தும் இப்படிப் பொய் பிரச்சாரம் செய்கிறார்களே
என்று சகிப்புத்தன்மையை இழந்து கைககளில் ஆயுதம் ஏந்தி தீவிரவாதச் செயல்களில் பெரும்பாலான
முஸ்லிம்களை ஈடுபடச் செய்து உலக அரங்கின் முன் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்ட வேண்டும்
என்ற முனைப்போடு இஸ்லாத்திற்கெதிரான எதிரிகள்
செயல்பட்டு வருகின்றார்கள்.
இந்தச் சமூகம் எப்படி வார்த்தெடுக்கப்பட்டிருக்கின்றது?....
இஸ்லாம் அமைதியையும்
சாந்தியையும் சமாதானத்தையும் போதிக்கின்ற, பின்பற்றுமாறு கூறுகின்ற மார்க்கமாகும்.
எனவே இஸ்லாமானது தீவிரவாதத்தை ஆதரிப்பதுமில்லை அவற்றை ஊக்கப்படுத்துவதுமில்லை.
ஏனெனில்,
அல்லாஹ்வும் சாந்தி சமாதானத்தின் பக்கமே மனித சமூகத்தை அழைக்கின்றான்.
وَاللَّهُ
يَدْعُو إِلَى دَارِ السَّلَامِ
”அல்லாஹ் அமைதி இல்லத்தின் பக்கம் அழைக்கிறான்” ( அல்
குர்ஆன்:10: 25 )
இந்த அழைப்பை ஏற்று இஸ்லாம் எனும் அமைதி இல்லத்தில்
நுழைந்தவர்களை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எப்படி வார்த்தெடுத்தார்கள்
என்றால் இஸ்லாமிய வரலாற்றை வாசித்து உணர்ந்தவர்களுக்குத் தெரியும்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வாழ்ந்த காலத்திலும் சரி,
அவர்களின் மறைவுக்குப் பின்னரும் சரி இஸ்லாம் கூறுகிற சாந்தியையும்,
சமாதானத்தையும் நிலைநாட்டி அனைத்து தரப்பு மக்களுக்கும் அச்சமற்று வாழும் ஓர்
உன்னத நிலையைக் கொடுத்தார்கள்.
ومَن ينظر بعمق في تاريخ
الإسلام ودعوته وانتشاره: يجد أن البلاد التي فتحها المسلمون، لم ينتشر فيها
الإسلام إلا بعد مدة من الزمن
وانظر إلى بلد كمصر، وقد
فُتحت في عهد أمير المؤمنين الفاروق عمر بن الخطاب، ولكن ظلَّ الناس على دينهم
النصراني عشرات السنين، لا يدخل فيه إلا الواحد بعد الواحد
கலாநிதி யூஸுஃப் அல் கர்ளாவி அவர்கள் குறிப்பிடும் போது “இஸ்லாமிய
வரலாற்றை ஆய்வு செய்யும்போது ”முஸ்லிம்கள் வெற்றி கொண்ட நாடுகளில் கூட மிக நீண்ட
காலத்திற்குப் பின்னரே இஸ்லாம் அங்கு பரவியது என்றும், மிஸ்ர் போன்ற நாடுகள் உமர் ரலி அவர்களின் ஆட்சியில் வெற்றிக்கொள்ளப்பட்டாலும்
அங்குள்ள மக்கள் பல வருடங்கள் தங்களின் கிருஸ்துவத்தில் தான் தொடர்ந்து
இருந்தனர்.இஸ்லாத்தின் நேர்மையான சமத்துவமான சட்டங்களுமே அங்குள்ள மக்கள் ஒருவர்
பின் ஒருவராக இஸ்லாத்தை தழுவ காரணமாக அமைந்தது” என்று.
எப்படிப்பட்ட முஸ்லிம் சமூகம் இது!
தீவிரவாதச் செயல்களில் முஸ்லிம்கள் ஈடுபடுவார்களா?
قال رسول الله
: الإيمان بضع وسبعون شعبة ، أفضلها
قول : لا إله
إلا الله وأدناها إماطة الأذى عن الطريق
)
رواه مسلم .
அல்லாஹ்வின் தூதர்
{ஸல்} அவர்கள் கூறினார்கள்: “இறைநம்பிக்கை என்பது "எழுபதுக்கும் அதிகமான' அல்லது
"அறுபதுக்கும் அதிகமான' கிளைகள் கொண்டதாகும்.
அவற்றில்
உயர்ந்தது "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளைதான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்: முஸ்லிம் )
قال رسول الله : لقد رأيت رجلاً يتقلب في
الجنة
في شجرة قطعها من ظهر طريق كانت تؤذي
المسلمين ) رواه مسلم
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை அகற்றி (எறிந்து) விட்டார். அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு ( அவர் செய்த பாவங்களிலிருந்து ) மன்னிப்பு வழங்கி, சுவனத்தை நல்கினான்”. ( நூல்: புகாரி )
ஒரு முஸ்லிமின் செயல்பாடு பிறருக்கு உதவியாகத் தான் இருக்க வேண்டுமே தவிர ஒருபோதும் உபத்திரமாக,
ஊறு விளைவிப்பதாக இருக்கக் கூடாது என்பதை மேற்கண்ட இரு நபிமொழிகளின் வாயிலாக நாம் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், மக்களுக்கு ஊறு விளைவிக்கின்ற பொருட்களைப் பாதையிலிருந்து அகற்றுவதும் அந்த இறை நம்பிக்கையின் ஒரு கிளை என்றும், இப்படிப் பாதையிலிருந்து கற்கள்,
முற்களை அகற்றுவதற்காக ஒரு முஸ்லிமுக்கு இறைவன் மன்னிப்பை பரிசாக வழங்குகின்றான் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
ஒரு பாதையில் முஸ்லிம்கள் மட்டும் நடக்க மாட்டார்கள். அனைத்து மதத்தினரும் தான் நடப்பார்கள். அவர்களுடைய கால்களைப் பதம் பார்த்து, புண்ணாக்கி,
காயப்படுத்தி விடுகிற கல், முள்
போன்றவற்றைக் கூட பாதையிலிருந்து அகற்றுவது முஸ்லிம்களின்
இறை நம்பிக்கையின்
முக்கியமான அம்சம், இறைவனின்
மன்னிப்பைப் பெற்றுத் தரும் உவப்பான செயல் என்று கூறுகின்ற இஸ்லாம் ஆளையே கொல்லுகின்ற குண்டுகளை வைக்கச் சொல்லுமா?
பேருந்துகள், இரயில்கள்,
விமானம் போன்ற போக்குவரத்துக்களிலும் அவை வந்து நிற்கும்
நிலையங்களிலும்,
மக்கள் ஒன்று கூடுகின்ற வணிக வளாகங்களிலும், அவர்கள் பயணிக்கின்ற பாதைகளிலும் குண்டு வைத்துக் குலை
நடுங்கச் செய்யும் ஒருவனுக்கு இந்தக் கருணைமிகு இறைவன் என்ன தண்டனை வழங்குவான்?
நிச்சயமாக
நரகத்தைத் தான் தண்டனையாக வழங்குவான் என்பதில்
மாற்றுக் கருத்தில்லை. இது தான் முஸ்லிம்களின் சரியான நிலைப்பாடும் கூட.
நடுநிலையாளர்கள்
சிந்திக்க
வேண்டும்.
அபூமூசா (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: மக்கள், "இஸ்லாத்தில் சிறந்தது எது, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கின்றார்களோ அவரே (சிறந்தவர்; அவரது
செயலே சிறந்தது)'' என்று
பதிலளித்தார்கள். ( நூல்: புகாரி )
இறைத்தூதர் (ஸல்)
அவர்கள் அளித்த பதில் ”முஸ்லிம்கள் வாழ்கின்ற பகுதியில் இதைக் கூறுவதால் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குத் துன்பம் தரக் கூடாது என்ற கருத்தை கூறுகின்றார்கள்.
ஆனால், அதே
நேரத்தில் பிற மதத்தவருடன் கலந்து வாழ்கின்ற பகுதிகளில் யாருக்கும் துன்பம் தரக்கூடாது என்றும் கூறியிருக்கின்றார்கள்.
"முஃமின் - இறை நம்பிக்கையாளர் யாரெனில் தங்கள் உயிர்கள் மற்றும் உடமைகள் விஷயத்தில் மனிதர்கள் யார் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவர் தான்” என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதி )
இந்த அளவுக்கு இஸ்லாம் மிகத் தெளிவாகக் கூறியிருந்தும், இதற்கு நேர்மாற்றமாக முஸ்லிம், முஸ்லிமல்லாதோர் எனப் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் எதிராக, பொது இடங்களிலும் மக்கள் கூடும் சந்தைகளிலும் குண்டு வைப்பவன் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்? அத்தகையோர் இஸ்லாத்தின்
பார்வையில் ஒருபோதும் முஸ்லிம்கள் அல்லர்.
அவர்களுக்கும், இஸ்லாத்திற்கும்,
திருக்குர்ஆனுக்கும், மாநபி {ஸல்} அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எவ்வித
தொடர்பும் இல்லை.
ஆகவே, முஸ்லிம்கள் யாவரும் அன்பையும், சாந்தியையும், சமாதானத்தையும், கருணையையும், மன்னித்தலையும் கற்றுக் கொடுக்கின்ற ஒரு மார்க்கத்தைப் பின்பற்றி வருபவர்கள் ஆவார்கள் என்றும்,
இன்று ஒரு சில முஸ்லிம்கள் செய்யும் தவறுகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது.
தனிப்பட்ட வகையில் ஒரு முஸ்லிம் தீவிரவாதத்துடன் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்வாரேயானால், அவர் இஸ்லாத்தின் பார்வையில், இஸ்லாமியச் சட்டங்களைப் புறந்தள்ளிய குற்றத்திற்கும், அதை மீறிய குற்றத்திற்கும் ஆளான குற்றவாளியாவார் என்றும் பிற மதத்தவர்களுக்கும்,
விமர்சிப்பவர்களுக்கும் எடுத்துக்கூறுவோம். இன்ஷா அல்லாஹ்….
விளக்கத்தை கொடுப்பதற்கு
அல்லாஹ் போதுமானவன்!!!