Thursday 12 October 2017

நோபல் விருது பெறும் தகுதி முஸ்லிம் சமூகத்திற்கு இல்லையா?



நோபல் விருது பெறும் தகுதி முஸ்லிம் சமூகத்திற்கு இல்லையா?



கடந்த சில தினங்களாக உலகின் உயரிய விருதானநோபல்விருதுக்கான அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருப்பதை ஊடகத்தின் வாயிலாக நாம் அறிந்து வருகின்றோம்.

ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 10 –ஆம் தேதி நோபல் விருது அறக்கட்டளையை நிறுவியவரான ஆல்பிரைட் நோபல் என்பவரின் நினைவு தினத்தில் இந்த விருது வழங்கப்படுகின்றது.

உலகின் அனைத்து நாடுகளும் மானுட சமூகத்திற்கு பயன் தருபவர்களை, சேவையாற்றுபவர்களை கண்டுபிடித்து பல உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்து வருகின்றன.

நமது தேசத்திலும் கூட பாரதரத்னா, பத்மவிபூஷன், பத்மபூஷன், போன்ற பல உயரிய விருதுகள் வழங்கப்படுவதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்.

என்றாலும் கூட ஒட்டு மொத்த உலகும் ஒரு விருதை உயர்ந்ததாகவும் அல்லது சிறந்த அங்கீகாரமாகவும் கருதுகிறது என்றால் அது நோபல் விருதாகத்தான் இருக்கமுடியும்.

ஏனெனில், நோபல் விருதை விஞ்சும் அளவுக்கு உலகில் வேறெந்த விருதுகளும் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு கடந்த 115 ஆண்டுகளாக உலகில் புகழும், செல்வாக்கும் பெற்று இன்று வரை நிலைத்திருக்கின்றது.

உலகில் அறியப்படுகின்ற பெரும்பாலான நாடுகளில் ( பெரும்பான்மையாகவோ அல்லது சிறுபான்மையாகவோ ) முஸ்லிம் சமூகம் வாழ்ந்து வருகிற போதும் அந்தந்த நாடுகளால் வழங்கப்படுகிற உயரிய விருதுகளைப் பெற்றவர்களின் பட்டியலில் ஒன்று முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர்கள் முழுமையாக இடம் பெறவில்லை அல்லது மிக, மிகச் சொற்பமானவர்களே இடம் பெற்றிருக்கின்றார்கள் என்பது கவலை தருகிற அம்சமாகும்.

அந்த சோகம் உலகின் உயரிய விருதானநோபல்விருதிலும் தொடர்கின்றது.

1901 –ஆம் ஆண்டிலிருந்து கடந்த 2016 –ஆம் ஆண்டு வரை சுமார் 115 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசை இதுவரை 862 ஆண்களும், 49 பெண்களும் 23 அமைப்புகளும் பெற்றிருக்கின்றனர்.

இதில் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் ( தனி நபர் பிரிவில் ) மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும், அமைப்பு ரீதியாக இரண்டு ஆண்களும், பலபேர் கொண்ட அமைப்பாக ஓர் அமைப்பினரும் பெற்றிருக்கின்றனர்.

முஸ்லிம் பெயர் தாங்கிகளான ஷியாப் பிரிவைச் சார்ந்த ஒரு பெண்மணியும், அஹ்மதிய்யா ஜமாஅத்காதியானி பிரிவைச் சார்ந்த ஓர் ஆணும் நோபல் விருது பெற்றிருக்கின்றனர்.

முஸ்லிம் பெயர் தாங்கிகளை நீக்கி விட்டுப் பார்த்தால் 5 ஆண்களும், இரண்டு பெண்களும், 3 அமைப்பும் நோபல் விருதைப் பெற்றிருக்கின்றது.

அமைதி, இயற்பியல், வேதியியல், மருத்துவம் மற்றும் உடலியங்கியல், பொருளாதாரம் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டு வரும் நோபல் விருதை இது வரை இயற்பியல், மருத்துவம் மற்றும் உடலியங்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகள் ரீதியாக ஒரு முஸ்லிம் கூட பெற்றதில்லை.

1978, அன்வர் சாதாத் ( ஏமன் ), 1994, யாஸிர் அரஃபாத் ( ஃபலஸ்தீன் ), 2011, தவக்குல் கார்மோன் ( பெண்ஏமன் ), 2014, யூஸுஃப் சாய் மலாலா ( பெண் - பாகிஸ்தான் ), 2005, முஹம்மது அல் பராதீ ( பன்னாட்டு அணுசக்தி மையம்அமைப்பு ), 2006, முஹம்மது யூனுஸ் ( கிராமின் வங்கி அமைப்புபங்களாதேஷ் ) ஆகிய அனைவரும் அமைதிக்கான நோபல் விருதைப் பெற்றவர்கள்.

1999, அஹ்மத் ஹஸன் ஜிவைல் ( எகிப்து ) வேதியியல் துறைக்காக நோபல் விருது பெற்றார்.

முஸ்லிம் பெயர் தாங்கிகளான இருவரும் 1979, அப்துஸ்ஸலாம் ( பாகிஸ்தான் ), 2003, ஷீரின் இபாதி ( பெண்ஈரான் ) அமைதிக்கான நோபல் விருதைப் பெற்றவர்கள்.

ஆக மிக, மிகக் குறைவான முஸ்லிம்களே நோபல் விருதைப் பெற்றிருக்கின்றனர்.

ஏன்? உயரிய விருதுகளைப் பெறுகின்ற அளவிளான புத்திசாலிகள், அறிவு ஜீவிகள், துறைசார்ந்த சாதனையாளார்கள் யாரும் முஸ்லிம் சமூகத்திலே கிடையாதா? இல்லை,

உயரிய விருதுகளைப் பெறுவதற்கு முஸ்லிம் சமூகத்திற்கு தகுதி இல்லை என உலக நாடுகளும், அதன் ஆட்சியாளர்களும் கருதுகின்றார்களா?

வாருங்கள்! விடை தேடிப் புறப்படுவோம்! வரலாறு நெடுகிலும் பயணித்து அதற்கு தகுதியானவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள் என்று உலகிற்கு உரக்கச் சொல்வோம்!

நோபல் விருதின் மதிப்பு?...

ஒரு தங்கப்பதக்கம் மற்றும் ஒரு கல்விப்பட்டயம் அத்தோடு ஸ்வீடன் நாட்டு குடியுரிமை மேலும் இந்திய ரூபாய் மதிப்பில் 9.79 கோடி ரூபாய் வழங்கப்படும்.

நோபல் உருவான வரலாறு….

அழிவு சக்தியை உருவாக்கி, அதனால் மனம் நொந்து போன ஒரு விஞ்ஞானி தன் மரணத்திற்கு பின்னர் தனக்கு ஏற்படப்போகும் களங்கத்தை துடைத்துக் கொள்ள உருவாக்கியது தான் நோபல் விருது.

ஆம்! அந்த அழிவுசக்திடைனமைட்எனும் வெடிமருந்து அதைக் கண்டு பிடித்த விஞ்ஞானி ஆல்ப்ரட் நோபல்.

1833 –ஆம் ஆண்டு அக்டோபர் 21 –ஆம் தேதி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கொம் எனும் நகரில் பிறந்தார் ஆல்ப்ரட் நோபல். இவர் தந்தை மேனுவல் நோபல் புகழ்பெற்ற பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர்.

பெரும், பெரும் பாலங்கள், கட்டிடங்கள் கட்டுவதிலும், பிரம்மாண்ட கட்டிடங்களை உடைப்பதிலும் மிகச் சிறந்தவர். ஆல்ப்ரட் நோபல் பிறந்த சமயம் தந்தையின் நிறுவனம் கடும் நஷ்டத்தைச் சந்தித்தது.

பிழைப்பைத் தேடி ரஷ்யா சென்ற மேனுவல் நோபல் தனது நான்கு மக்களுக்கும் சிறந்த கல்வி கிடைக்க வழி செய்தார். அதனடிப்படையில் ஆல்ப்ரட் நோபலை வேதியியல் துறையில் பொரியாளராக ஆக்க விரும்பிய மேனுவல் மேற்படிப்புக்காக பாரீஸுக்கு அனுப்பி வைத்தார்.

பாரீஸில் ஆல்ப்ரட் நோபலுடன் படித்த அஸ்ட்ரானியோ ஸ்ப்ராரோ என்ற இத்தாலியர் நைட்ரோ கிளிசரின் என்ற ரசாயனத்தை கண்டுபிடித்தார். அது வெடிக்கும் தன்மை கொண்டதாக இருந்ததாலும், ஆபத்தானது என்பதாலும் அதை அப்படியே விட்டு விட்டார்.

ஆனால், ஆல்ப்ரட் அதை மேலும் ஆராய விரும்பினார். படிப்பு முடிந்து ரஷ்யா திரும்பியதும் தந்தை மேனுவலுடன் இணைந்து நைட்ரோ கிளிசரினை எப்படி கட்டுமான துறைக்குப் பயன்படுத்தலாம்? என ஆராயத் தொடங்கினார்.

இந்த நிலையில் மீண்டும் தந்தை மேனுவலின் தொழில் நலிவடைந்தது. மீண்டும் குடும்பத்தோடு ஸ்வீடன் கிளம்பினார் மேனுவல் நோபல்.

நைட்ரோ கிளிசரினை வெடிமருந்தாக உருவாக்குவதில் வெற்றி கண்ட ஆல்ப்ரட் நோபல் அதனை பாதுகாப்பானதாக மாற்றினால் நல்ல காரியங்களுக்காக பயன் படுத்த முடியும் என்ற கருத்தில் உறுதியாக இருந்ததால் பல்வேறு கட்ட சோதனைகளில் ஈடுபட்டு பல்வேறு உயிரிழப்புக்களைச் சந்தித்து அவர் நினைத்த மாதிரி பாதுகாப்பானதாக மாற்றினார்.

ஆனால், அதைப் பயன்படுத்த ஸ்வீடன் அரசு தடைவிதித்தது. ஏனெனில், அவருடைய பரிசோதனையின் போது சிலமுறை பயங்கர வெடி விபத்துகள் ஏற்பட்டு, அவரது தொழிற்சாலைகள் தரைமட்டமாயின. பணியாளர்கள் சிலர் உயிரிழந்தனர். அவரின் இளைய சகோதரர் இமில் என்பவரும் உயிரிழந்தார்.

எனினும், தொடர்ந்து பல்வேறு பொருட்களோடு நைட்ரோ கிளிசரினைக் கலந்து பரிசோதனையில் ஈடுபடுத்திய நோபல் இறுதியாக கிஸல் எனும் களிமண்ணுடன் கலந்து பரிசோதித்ததில் மிக பாதுகாப்பான வெடிமருந்து கிடைத்ததை கண்டு பிடித்தார்.

அந்த கண்டுபிடிப்புக்குடைனமைட்என்று பெயரிட்டார்.  டைனமைட் என்றால் கிரேக்க மொழியில் சக்தி என்று பொருள். இதை இவர் 1866 –ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.

இதன் பின்னர் இந்த கண்டுபிடிப்பால் புகழின் உச்சத்திற்கு ஆல்ப்ரட் நோபல் சென்றார்.

காடுமேடுகளை அழிக்க, மலைகளை குடைந்து பாதை அமைக்க, பழைய பாலங்களை, பழைய கட்டிடங்களை சில நிமிடங்களில் தகர்க்க என்று பல தொழில்களுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்தது.

இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் 90 க்கும் அதிகமான டைனமைட் தொழிற்சாலைகளை உருவாக்கினார். கோடிகள் புரள ஆரம்பித்தது. உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவராக உருவெடுத்தார்.

ஆக்க சக்தியாக அவர் உருவாக்கிய டைனமைட்டை சிலர் அழிவு சக்தியாக பயன்படுத்தியதைக் கண்டு மனம் பதைத்தார் ஆல்ப்ரட் நோபல்.

இந்த நிலையில், 1888 –ஆம் ஆண்டு அவரின் சகோதரர் லுட்விக் காலமானார். ஆனால், ஆல்ப்ரட் நோபல் இறந்து போனதாக தவறாக புரிந்து கொண்ட அன்றைய ஊடகங்கள் அழிவு சக்தியை உருவாக்கி ஆல்ப்ரட் நோபல் காலமானார்என்று செய்தி வெளியிட்டன.

அதனைப் படித்து பதறிப்போன நோபல், தனது உண்மையான மரணத்துக்குப் பின உலகம் தன்னை பழிக்கப் போகிறது என்று எண்ணி கலங்கினார்.

அந்த களங்கத்தை அகற்ற வழிதேடினார். அப்போது தான், உலகின் சிறந்த கண்டுபிடிப்பாளர்களுக்கும், சிறந்த மனிதர்களுக்கும் பரிசு வழங்கி கவுரவிக்கும் எண்ணம் பிறந்தது.

உடனே, 1890 ஆண்டில் நோபல் என்ற பெயரில் அறக்கட்டளையையை நிறுவிய ஆல்ப்ரட் நோபல், தான் எழுதிய உயிலில் 9 மில்லியன் டாலரை அந்த அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார். அந்தத் தொகையில் இருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு அமைதி, இலக்கியம், இயற்பியல், உடலியங்கியல் மற்றும் மருத்துவம், வேதியியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்க முடிவெடுத்தார்.

அந்தப் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு இருந்த தருணத்தில் 1896 –ஆம் ஆண்டு டிசம்பர் 10 –ஆம் தேதி இறந்து போனார் ஆல்ப்ரட்.
அவர் மறைந்த ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1901 –ஆம் ஆண்டு முதல் அவர் விருப்பப்படியே ஐந்து துறைகளுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படத் தொடங்கின.

அந்து துறைகளுக்கு வழங்கப்பட்டு வந்த நோபல் விருதுகள் 1969 –ஆம் ஆண்டு முதல்பொருளாதாரம்எனும் புதிய பிரிவையும் இணைத்துக் கொண்டது. அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து அவ்வாறே வழங்கப்பட்டும் வருகின்றது.

தன்னை அழிவு சக்தியை கண்டுபிடித்த நோபல் என்று அழைக்காமல் அறிவாளிகளை கவுரவிக்கும் நோபல் என்று உலகம் அழைக்க வேண்டும் என்று ஆல்ப்ரட் நோபல் விரும்பினார் அது போன்றே உலகம் இன்று நோபலைக் கொண்டாடுகின்றது.


           ( விக்கிபீடியா மற்றும் தினத்தந்தி 6/10/2017 வெள்ளிமலர் பக்கம்: 2 )

இன்றைய தினத்தில் சர்வதேச அளவில், இந்தியாவின், தமிழகத்தின் பல்வேறு பல்கலைகழகங்களிலும் கல்லூரிகளிலும் தங்களின் அற்புதமான ஆராய்சிகள் மூலம் உலக ஆராய்சியாளர்களை திரும்பிப் பார்க்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
காஷ்மீர் மாநிலம் சுகாமா என்ற இடத்தில் உள்ள ஷெர்-காஷ்மீர் வேளாண்மை விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ரியாஸ் அகமது ஷா தலைமையிலான குழுவினர் குளோனிங் மூலம் பஷ்மினா வகை வெள்ளாடு குட்டியை உருவாக்கி உள்ளனர்.

நூரி என்ற பெயருடனும், 1.3 கிலோ எடையுடனும் காணப்படுகிறது.

மண்புழு என்ற அற்பஉயிரியை அற்புத உயிரியாக்கி இயற்கை உரம் உருவாக்கி வரும் டாக்டர். சுல்தான்அஹமது இஸ்மாயில் ’(சென்னை புதுக்கல்லூரி

 பாசுமதி அரிசி மூலம் இந்தியாவின் அன்னிய செலவானியை உயர்த்திய அரிசி விஞ்ஞானி பத்மஸ்ரீ சித்தீக்’  (இளையான்குடி),.

புற்றுநோய் ஆராய்சியில் திருப்புமுனை கண்டஅக்பாஷா’ (பாரதிதாசன் பல்கலைக்கழகம்-திருச்சி)

நுண்ணுயிரி ஆராய்சியில் புதுமைபடைத்த தாஜூதீன’; (பாரதிதாசன் பல்கலைக்கழகம்,-திருச்சி)

 ஆழ்கடல் மீன்களில் அற்புதங்களை அள்ளித்தரும் அஜ்மல்கான்’(அண்ணாமலை பல்கலைக்கழகம்-)
 
சதுப்பு நில ஆராய்சியில் ஆச்சரியங்கள் படைத்த அப்துல் ரகுமான் (பூண்டி புஸ்பம் கல்லூரி தஞ்சாவூர்)

 பாக்டீரியாக்களில் மரபணுமாற்றத்தை கண்டறிந்தஹூசைன் முனைவர்’ (மதுரை காமராஜர் பல்கலைகழகம்)

மாசுக்கட்டுப்பாட்டு ஆராய்சியில் புதுமை செய்த அப்பாஸி’    (பாண்டிச்சேரி பல்கலைகழகம்)

  மீன் இன ஆராய்சியில் புது வகை மருத்துவங்கள் கண்டறிந்த முகமது அனீபா’ (புனித சேவியர் கல்லூரி பாளையங்கோட்டை)  உள்ளிட்ட இவர்களும் இன்னும் பல்வேறு அறிவியல் விஞ்ஞானிகளும் பல பொருளாதார நிபுணர்களும் இலக்கிய அறிஞர்களும் வெளிச்சத்திற்கு வராமலேயே உள்ளனர்.

இஸ்லாமிய உலகின் மக்கட்தொகையில் பெரும்பாலானவர்கள் பெண்களே (~51%).

முஸ்லிம் பெண்கள் என்றாலே அவர்கள் அணியும் உடைக்கு தான் ஐரோப்பிய பார்வையாளர்கள் முக்கியத்துவம் கொடுப்பதாகவும், ஆனால், இஸ்லாமிய உலகின் பெண்களின் நிலையானது இந்த தலைப்புச்செய்திகள் சித்தரிப்பதை காட்டிலும் வித்தியாசமானது என்று குறிப்பிடுகின்றது இராயல் கழகம். இதற்கு காரணங்கள் இல்லாமலில்லை.

இஸ்லாமிய உலகின் 13 நாடுகளின் பெண் அறிவியல் பட்டதாரிகளின் சராசரி, அமெரிக்க சராசரியை (41%) விட மிக அதிகம்.    அல்ஜீரியாவின் அறிவியல் பட்டதாரிகளில் 71% பேர் பெண்கள். அதுபோல பஹ்ரைனில் 73%-மும், பாலஸ்தீனில் 49%-மும் பெண்கள்.

ஈரானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களில் 70% பேர் பெண்கள். சவூதி அரேபியாவின் மாணவர்களில் 58% பேர் பெண்கள்.

கல்வியில் மகத்தான முன்னேற்றம் அடைந்துவரும் நிலையில், அறிவியல் சார்ந்த பணிகளில் பெண்களின் நிலை என்ன என்பது குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆய்வுகள் நடத்தப்பட்ட இஸ்லாமிய உலகின் 24 நாடுகளில், எட்டில் மட்டுமே பெண் ஆய்வாளர்களின் எண்ணிக்கை உலக சராசரியை விட அதிகமாக இருக்கின்றது. அதுபோல, சவூதி அரேபியாவின் பணியிடங்களில் 16% மட்டுமே பெண்கள்.

இதுப்போன்ற நிகழ்வுகளை எதிர்க்கொள்ளவும், பெண் ஆய்வாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் "இஸ்லாமிய பெண் விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு (Islamic network of women scientists)" நிறுவப்பட்டுள்ளது. ஈரானில் நடைப்பெற்ற முதலாவது இஸ்லாமிய பெண் ஆய்வாளர்களின் கருத்தரங்கில் (27th January 2010), 37 நாடுகளில் இருந்து பெண் விஞ்ஞானிகள் கலந்துக்கொண்டனர்.

ஈரான் மற்றும் துருக்கி:

அறிவியல் வளர்ச்சியில் சிறந்து விளங்கும் நாடுகளாக மத்திய கிழக்கு நாடுகள் இருக்கின்றன (குறிப்பாக துருக்கி மற்றும் ஈரான்). இந்த நாடுகளின் வளர்ச்சி விகிதம், உலக சராசரியை விட நான்கு மடங்கு அதிகமாகும்.

அறிவியல் வளர்ச்சியில், உலகின் வேறெந்த நாட்டை விடவும் ஈரான் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது. உலக சராசரியை விட பதினொரு மடங்கு அதிகமாக அது பயனித்துக் கொண்டிருக்கின்றது. கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும், ஈரான், அறிவியலின் பல்வேறு துறைகளில் சுமார் 54,000 ஆய்வு கட்டுரைகளை சமர்பித்துள்ளது/வெளியிட்டுள்ளது.

தனித்துவமான பல்வேறு கண்டுபிடிப்புகளை ஈரான் நிகழ்த்தியிருக்கின்றது. அணு அறிவியல், வான் வெளி அறிவியல் (Aerospace), மருத்துவம், விவசாயம், நேனோ தொழில்நுட்பம் (Nanotechnology), ஸ்டெம் செல் ஆய்வு போன்றவற்றில் ஈரானின் அபாரமான வளர்ச்சி பிரம்பிக்க வைக்கின்றது.

உலக சராசரியை விட 5.5 மடங்கு அதிகமாக அறிவியல் வளர்ச்சியை பெற்றுள்ள துருக்கியை பொருத்தவரை, 1990-2007 இடையேயான காலக்கட்டத்தில், அறிவியல் ஆய்வுகளுக்கான முதலீடு மட்டும் சுமார் 566% அதிகரித்துள்ளது. இது டென்மார்க், நார்வே மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளின் முதலீட்டை விட அதிகம். இதே காலக்கட்டத்தில், துருக்கியில் உள்ள ஆய்வாளர்களின் எண்ணிக்கை சுமார் 43% அதிகரித்துள்ளது.

துருக்கியில் இருந்து வெளிவரும் ஆய்வு கட்டுரைகளின் எண்ணிக்கை, கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 2008-ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆய்வு கட்டுரைகள் பிரசுரிப்பதில் எட்டாவது "மிகவும் முன்னேறிய" நாடு என்ற அந்தஸ்த்தை துருக்கி பெற்றது. 

அறிவியல் வளர்ச்சியில் முன்னணியில் இருந்தாலும், பரிணாம கோட்பாடு குறித்த துருக்கியின் நிலைப்பாடு தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. 2009-ஆம் ஆண்டு, டார்வினின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட இருந்த ஆய்விதழை, துருக்கியின் அறிவியல் ஆய்வு கவுன்சில் ரத்து செய்து பெரிய சர்ச்சையை உண்டாக்கிய செய்தி இங்கு கவனிக்கத்தக்கது.

சவூதி அரேபியா:

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாலைவனமாக காட்சியளித்த துவல் என்ற இடம், இன்று, உலகின் மிகச் சிறந்த கட்டமைப்பை பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான "மன்னர் அப்துல்லாஹ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழக (KAUST)" கட்டிடங்களால் நிரப்பப்பட்டிருக்கின்றது.

சுமார் இருபது பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் உருவாகியுள்ள இந்த பல்கலைக்கழகம், உலகின் டாப்-10 சூப்பர் கம்ப்யூட்டர்களில் ஒன்றை தன்னிடத்தே கொண்டிருக்கின்றது.


உலகிலேயே மிகப்பெரிய "பெண்கள் மட்டும்" பயிலும் பல்கலைக்கழகத்தையும் சென்ற ஆண்டு சவுதி அரேபியா திறந்துள்ளது. இங்கே சுமார் 50,000 மாணவிகள் வரை பயிலலாம். ஐந்து பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் உருவாகியுள்ள இந்த பல்கலைக்கழகம், சுமார் 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையையும் தன்னிடத்தே கொண்டுள்ளது.

இவை மட்டுமல்லாமல் மேலும் பல அறிவியல் மையங்களை உருவாக்குவதில் சவூதி அரசாங்கம் முனைப்புடன் செயல்படுகின்றது.

உலகிலேயே, கல்விக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் வரிசையில் சவூதி அரேபியாவிற்கு ஐந்தாவது இடம்.

சவூதி அரேபியாவின் இத்தகைய நடவடிக்கைகள் உலகளவில் மாணவர்களை கவர்ந்து இழுப்பதாக குறிப்பிடும் இராயல் கழகம், ஒரு மிகச் சிறப்பான எதிர்காலத்திற்கு சவூதி அரேபியா தயாராகிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றது.

மலேசியா:

ஆசியாவின் அதிநவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாம்பியன்களில் ஒன்றாக மலேசியா திகழ்கின்றது. அறிவியல் ஆய்வுகளுக்கு செய்யப்பட்ட முதலீடுகள் சாதகமான முடிவுகளை தர ஆரம்பித்திருக்கின்றன. 2004-ஆம் ஆண்டு வாக்கில், மலேசியாவின் ஆய்வாளர்களின் எண்ணிக்கை 31,000-த்தை தொட்டது. இது 1998-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 270% அதிகம். அதுபோல, புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை கோரிக்கைகளும் மலேசியாவில் இருந்து அதிகம் வருகின்றன. OIC உறுப்பு நாடுகளிலேயே, அதிக காப்புரிமை கோரிக்கை வைக்கும் நாடுகளின் வரிசையில் மலேசியாவிற்கு முதல் இடம்.

கத்தார்:

மிகச் சிறிய நாடாக இருந்தாலும், கத்தாரின் அறிவு சார்ந்த பொருளாதாரத்தின் வளர்ச்சி ஆச்சர்யப்பட வைக்கின்றது. கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சிக்காக, சவூதி அரேபியாவிற்கு நிகரான முதலீட்டை கத்தார் செய்கின்றது. 1990-ஆம் ஆண்டிலிருந்து மட்டும் கல்வி, ஆராய்ச்சி மற்றும் கட்டமைப்பிற்காக சுமார் 133 பில்லியன் டாலர்களை அது செலவிட்டுள்ளது.

கத்தாரின் அறிவியல் மகுடத்தில் ஒரு இரத்தினகல்லாக "கல்வி நகரம் (Education City)" இருப்பதாக கூறுகின்றது இராயல் கழகம். சுமார் 2500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நகரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவையும் தன்னிடத்தே கொண்டுள்ளது. கத்தாரின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம், சுமார் எட்டு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சிட்ரா மருத்துவ ஆய்வுக் கழகம்.

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்:

இந்த இரண்டு நாடுகள் குறித்த சில வித்தியாசமான செய்திகள் கவனத்தை ஈர்த்தன.

சில நேரங்களில், புதுமையான முயற்சிகள் உலகளாவிய ஆய்விதழ்களில் வராமலேயே போய்விடுகின்றன என்று குறிப்பிடும் இராயல் கழகம், இதற்கு உதாரணமாக பங்களாதேஷையும், பாகிஸ்தானையும் சுட்டிக்காட்டுகின்றது.

பங்களாதேஷின் ஆய்வாளர்கள், குடிதண்ணீரில் இருந்து அர்சனிக் என்னும் நச்சுபொருளை நீக்கும் புதுமையான வழிமுறையை கண்டுபிடித்துள்ளனர். இந்த யுக்தியை கொண்டு, நாட்டின் மூன்று நகராட்சிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளனர். பங்களாதேஷ் பற்றி பேசும் போது, அந்நாடு, மைக்ரோ-பைனான்ஸ் துறையில் முன்னோடியாக விளங்குவதையும் குறிப்பிட மறக்கவில்லை இராயல் கழகம்.

அது போல, சேரிகள் சார்ந்த நகராட்சிகளை மேம்படுத்த பாகிஸ்தான் மேற்கொள்ளும் இயக்கமுறைகளையும் புதுமையான முயற்சி என்று வர்ணிக்கின்றது அந்த அறிக்கை.

உள்நாட்டு பிரச்சனைகளால் பெரிதும் பாதிப்படைந்திருந்தாலும், 2000-ஆம் ஆண்டிலிருந்து ஒரு உறுதியான முன்னேற்றத்தை சந்தித்து வருகின்றது பாகிஸ்தான். 2001-2003 இடையேயான காலக்கட்டத்தில் மட்டும் அறிவியல் ஆய்வுகளுக்கான பட்ஜெட் 6000% உயர்ந்துள்ளது. உயர் கல்விக்கான பட்ஜெட், 2004-2008 இடையேயான காலக்கட்டத்தில் 2400% உயர்ந்துள்ளது.

2002-2008
இடையேயான காலக்கட்டத்தில், சுமார் ஐம்பது புதிய பல்கலைக்கழகங்கள் துவக்கப்பட்டிருக்கின்றன. மாணவர்களின் எண்ணிக்கை 1,35,000-திலிருந்து 3,65,000-மாக உயர்ந்துள்ளது. டிஜிட்டல் நூலகங்கள் மற்றும் ஆய்விதழ்களில் அதிக முதலீடு, ஆய்வு கட்டுரைகள் அதிகமாக வெளிவர புதிய முயற்சிகள் என்று பாகிஸ்தான் சிறப்பாக செயல்படுகின்றது.

இத்தகைய முயற்சிகளாலேயே, ஐ.நாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழு, "சிறந்த முன்மாதிரி வளரும் நாடு (best practice example for developing countries)" என்று பாகிஸ்தானுக்கு புகழாரம் சூட்டியது.

மேலும்:

நாம் மேலே பார்த்த தகவல்கள் மட்டுமல்லாமல், இராயல் கழகத்தின் அறிக்கை மேலும் பல நாடுகளின் புதுமையான முயற்சிகளை பட்டியலிடுகின்றது.

அறிவியல் வளர்ச்சியில், உலக சராசரியை விட 2.5 மடங்கு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் UAE-யின் சுத்தமான சுற்றுசூழலை கொண்டுவர முயற்சிக்கும் மஸ்டர் நகரம் (Masdar City), காற்றாற்றலை (Wind Energy) உருவாக்குவதில் முன்னணியில் இருக்கும் எகிப்து என்று அந்த பட்டியல் நீளுகின்றது.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

One can download the royal society's entire report from:
1. A new golden age? The prospects for science and innovation in the Islamic world - The Royal Society. 
link

My sincere thanks to:
1. The Royal Society.
2. New Scientist Website

References:
1. A new golden age? The prospects for science and innovation in the Islamic world - The Royal Society. 
link
2. The Mathematical Legacy of Islam - Mathematical Association of America. 
link
3. Science and Islam: The Language of Science - BBC. 
link
4. A rebirth of science in Islamic countries? - Research Trends. 
link
5. Islamic science: The revival begins here - New Scientist. 
link
6. Iran's science progress fastest in world: Canadian report - Press tv. 
link
7. Saudi Arabia opens largest women’s university in the world - Al Arabiya News. 
link
8. Iran showing fastest scientific growth of any country - New Scientist. 
link
9. Science and technology in Iran - wikipedia. 
link
10. Royal Society - wikipedia. link
11. Science Metrix - 30 years in Science. link
12. Conference of Women Scientists of Islamic World - themuslim.org. 
link

ஜசாகல்லாஹ் : ஆஷிக் அஹமது -எதிர்குரல்.காம் 


ஆக இந்த நூற்றாண்டில் நோபல் விருது வழங்கி கௌரவிக்க எண்ணற்ற முஸ்லிம் கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், இலக்கியவாதிகள், கண்டுபிடிப்பாளர்கள், மருத்துவ சாதனையாளர்கள் இருக்கின்றார்கள்.

ஆனால், நோபல் அமைப்பு விரும்பும் ஆய்வாளர்களாக, விஞ்ஞானிகளாக, சாதனையாளர்களாக இவர்கள் இல்லை.

இன்னொரு காரணமும் உண்டு ஆம்! முஸ்லிம்கள் என்கிற இந்த தகுதிதான் நோபல் விருது கொடுப்பதற்கு தடையாக இருக்கின்றது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

1. உலகமே ஒன்று சேர்ந்தாலும் முஸ்லிம் உம்மத்தின் உயர்வை ஒரு போதும் தடுக்க முடியாது!

عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ كُنْتُ رَدِيفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ
يَا غُلَامُ أَوْ يَا غُلَيِّمُ أَلَا أُعَلِّمُكَ كَلِمَاتٍ يَنْفَعُكَ اللَّهُ بِهِنَّ فَقُلْتُ بَلَى فَقَالَ احْفَظْ اللَّهَ يَحْفَظْكَ احْفَظْ اللَّهَ تَجِدْهُ أَمَامَكَ تَعَرَّفْ إِلَيْهِ فِي الرَّخَاءِ يَعْرِفْكَ فِي الشِّدَّةِ وَإِذَا سَأَلْتَ فَاسْأَلْ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ قَدْ جَفَّ الْقَلَمُ بِمَا هُوَ كَائِنٌ فَلَوْ أَنَّ الْخَلْقَ كُلَّهُمْ جَمِيعًا أَرَادُوا أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَكْتُبْهُ اللَّهُ عَلَيْكَ لَمْ يَقْدِرُوا عَلَيْهِ وَإِنْ أَرَادُوا أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَكْتُبْهُ اللَّهُ عَلَيْكَ لَمْ يَقْدِرُوا عَلَيْهِ وَاعْلَمْ أَنَّ فِي الصَّبْرِ عَلَى مَا تَكْرَهُ خَيْرًا كَثِيرًا وَأَنَّ النَّصْرَ مَعَ الصَّبْرِ وَأَنَّ الْفَرَجَ مَعَ الْكَرْبِ وَأَنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு நாள் நான் நபியவர்களின் பின்னால் வாகனத்தில் அமர்ந்திருந்தேன்.

அப்போது நபியவர்கள் என்னைப் பார்த்து சிறுவனே! நான் உனக்கு சில வார்த்தைகளை கற்றுத் தரட்டுமா?! அல்லாஹ் அதன் மூலம் உனக்கு நற்பயனை வழங்குவான்!என்று கேட்டார்கள். நான், “ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அவசியம் கற்றுத்தாருங்கள்! என்றேன். அப்போது மாநபி {ஸல்} அவர்கள்

1. அல்லாஹ்வை நீ பேணிக்கொள்! (பயந்து கொள்). அவன் உன்னை பாதுகாப்பான். 2. அல்லாஹ்வை நீ பேணிக்கொள்! (பயந்து கொள்) உனக்கு முன்னால் அவனை நீ காண்பாய். 3. நீ ஆரோக்கியமாகவும், செழுமையாகவும் வாழும் காலத்தில் அல்லாஹ்வை நினைத்து வாழ்! உன்னுடைய கஷ்டமான காலத்தில் அல்லாஹ்வும் உன்னை நினைவில் வைத்திருப்பான்.

4. நீ ஏதாவது கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! 5. நீ உதவி தேடினால் அல்லாஹ்வைக் கொண்டே உதவி தேடு! ஏனெனில், எழுது கோள்கள் உயர்த்தப்பட்டுவிட்டன! எவைகள் எல்லாம் உண்டாக வேண்டும் என அவன் தீர்மானித்தானோ அவைகள் எல்லாம் உண்டாகி விட்டன.

 6. அறிந்து கொள்! முழு மனித சமூகமும் ஒன்று சேர்ந்து உனக்கொரு நன்மையான காரியத்தை செய்ய நாடினாலும் அதனை அல்லாஹ் உனக்கு விதித்திருந்தால் தவிர அவர்களால் எதுவும் செய்ய முடியாது!

 7. அவ்வாறு தான் முழு மனித சமூகமும் ஒன்றிணைந்து உனக்கொரு தீங்கை விளைவிக்க முற்பட்டாலும் அல்லாஹ் உனக்கு அந்த தீமையை விதித்திருந்தாலே தவிர அவர்களால் அதனை செய்ய முடியாது!

8. அறிந்துகொள் சிறுவனே! நீ வெறுக்கின்ற பல காரியங்களில் பொறுமை மேற்கொண்டால் பல நல்ல விளைவுகளைக் காண்பாய்!

9. திண்ணமாக! அல்லாஹ்வின் உதவி என்பது பொறுமை கொள்வதில் தான் இருக்கின்றது!, திண்ணமாக, மகிழ்ச்சி என்பது சிரமத்தை ஏற்றுக் கொள்வதில் தான் இருக்கின்றது! திண்ணமாக, இலகு என்பது கஷ்டத்தைத் தாங்கிக் கொள்வதில் தான் இருக்கின்றது!என்று கூறினார்கள்.                              ( நூல்: திர்மிதீ )

2. அல்லாஹ்வே முஸ்லிம் உம்மாவிற்கு போதுமானவன்...

يَا أَيُّهَا النَّبِيُّ حَسْبُكَ اللَّهُ وَمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ ()

”நபியே! உமக்கும், இறைநம்பிக்கையாளர்களில் உம்மைப் பின்பற்றியவர்களுக்கும் அல்லாஹ் போதுமானவன்”.          ( அல்குர்ஆன்: 8: 64 )


3. அல்லாஹ் முஸ்லிம் உம்மாவிற்கு கண்ணியம் அளிப்பான்..

وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ

“நபியே! நீர் கூறுவீராக! கண்ணியம் என்பது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், இறைநம்பிக்கையாளர்களுக்கும் உரியதாகும்”.    ( அல்குர்ஆன்: 63: 8 )

நோபல் விருதை மறுப்பதற்கு காரணம் இது தான்...

وَلَنْ تَرْضَى عَنْكَ الْيَهُودُ وَلَا النَّصَارَى حَتَّى تَتَّبِعَ مِلَّتَهُمْ قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَى

“நபியே! யூதர்களும், கிறிஸ்துவர்களும் நீர் அவர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றும் வரை உம்மைப்பற்றி அவர்கள் திருப்தி அடையவே மாட்டார்கள். ஆகவே, அவர்களிடம் அல்லாஹ்வின் நேர்வழியாகிய இஸ்லாம் தான் நிச்சயமாக நேர்வழி! அதனையே நான் பின்பற்றுவேன் என்று கூறிவிடுவீராக!”    ( அல்குர்ஆன்: 2: 120 )

அல்லாஹ் இந்த உம்மத்தின் செயல்பாடுகளை அங்கீகரித்து, இந்த உம்மத்தின் கல்வியாளர்களின் ஆய்வுகளை ஏற்றுக் கொண்டு மேலான அவனுடைய திருப்தியை வழங்குவதோடு உயரிய அந்தஸ்துகளோடு சுவனத்தை நஸீபாக்குவானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!