Thursday 23 August 2018

மனித நேய உதவிகள் வழங்கி மனிதம் காப்போம் !!

மனித நேய உதவிகள் வழங்கி மனிதம் காப்போம் !!


ஒவ்வொரு நூற்றாண்டுகளும் ஒரு சமூகத்தைக் கடந்து செல்கிற போது மகத்தான தாக்கங்களை ஏற்படுத்தியே செல்கின்றது.

அதுவகையில், தற்போது கேரளாவில் 1924 ஆம் ஆண்டுக்கு பிறகு, 96 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளா எதிர்கொள்ளும் இரண்டாவது மிகப்பெரிய வெள்ள பேரிடர் இது.

தமிழகத்தில் கடந்த முறை ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை விட 6 ஆறு மடங்கு கூடுதல் பாதிப்பை சந்தித்துள்ளது கேரளா.

கடந்த 96 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது. மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

கேரளாவில் 10 நாட்களாக தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக மாநில அரசின் வருவாய்த் துறை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

பேரிடர் காரணமாக சுமார் 2 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
பலர் காணாமல் போயுள்ளதாகவும், அதிகமானோர் காயம் அடைந்திருப்பதாகவும் ஊடகங்களின் வாயிலாக அறிய முடிகின்றது.

இடுக்கியை தவிர்த்து எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் வயநாடு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இயற்கை பேரிடரால் ஏற்பட்டுள்ள சேதத்தை கணக்கிட்டதில் சுமார் 20,000 கோடி ரூபாய் என கண்டறியப்பட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கான வீடுகளும், பொதுப்பணித்துறையின் கீழ் போடப்பட்ட 10 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகளும் சேதம் அடைந்துள்ளதாகவும் கேரள முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், மாநிலத்தின் 39 அணைகளிளும் நீர் நிரம்பியுள்ளதால் 35 அணைகளில் நீர்  திறக்கப்பட்டிருப்பதாகவும் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் "மாநிலம் முழுக்க 1067 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு அங்கு இரண்டு லட்சம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களிலும் ஏற்கனவே விடப்பட்டிருந்த வெள்ள அபாய சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) வாபஸ் (திரும்பப்) பெறப்பட்டுள்ளது.

வரலாறு காணாத கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும் பேரழிவை சந்தித்திருக்கிறது கேரள மாநிலம். மீட்புப்பணிகள் துரித கதியில் நடந்து கொண்டிருக்க வெள்ளம், நிலச்சரிவு போன்ற மழை தொடர்பான விபத்து சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 370 ஆகும்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு கூடுதல் உதவிகளை செய்யும்படி கேரள அரசு கோரிக்கையை விடுத்தது வருகிறது. ஆனால், மத்திய அரசோ இடைக்கால நிதியாக முதலில் 100 கோடியும், பின்னர் 500 கோடியும் வழங்கியுள்ளது.

தற்போது இன்று ( 23/08/2018 ) முதல்வர் பிரணயி விஜயன் அவர்கள் மத்திய அரசுக்கு சிறப்பு நிதியாக 2600 ரூபாயை உடனடியாக மறுசீரமைப்புக்காக ஒதுக்க வேண்டும் என்றும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தருவதாக சொன்ன 700 கோடி ரூபாயை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ( நன்றி: தமிழ்முரசு 23/08/2018, நாகர்கோவில் பதிப்பு )

கேரளாவில் மீட்புப் பணிக்காக ராணுவ வீரர்கள் உட்பட முப்படை வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களும், தன்னார்வலர்களும், மீனவர்களும், அரசியல் மற்றும் இயக்கங்கள் மற்றும் அமைப்புகளைச் சார்ந்தவர்களும் தங்களின் உயிரைப் பணயம் வைத்து ஈடுபட்டு வருகின்றார்கள்.

கேரள மக்களுக்காக தனி நபர் முதற்கொண்டு பெருவாரியான மக்கள் உதவிக் கரங்களை நீட்டி வருகின்றனர்.
முதன் முதலில் நாகர்கோவிலைச் சார்ந்த ஆஸிம் என்பவரின் மகள் தான் சைக்கிள் எடுப்பதற்காக சேமித்து வைத்திருக்கிற உண்டியலை உடைத்து அதில் சேமித்து வைத்திருந்த 600 ரூபாயை வெள்ள நிவாரண நிதியாக கொடுத்தார்.

அவரின் தந்தை அதை முகநூலில் பதிவு செய்திருந்தார். அது 5000 பேரால் ஷேர் செய்யப்பட்டு, அதன் பின்னர் நாடெங்கும் பல சிறுமிகள் தாங்கள் சேமித்து வைத்த உண்டியல் பணங்களை நிவாரண நிதியாக வழங்குவதற்கு காரணமாக அமைந்தது.

இந்த செய்தியை அறிந்த ஹெர்குலிஸ் சைக்கிளின் நாகர் கோவில் டீலர் ஹெர்குலிஸ் நிறுவனத்தின் சார்பில் இலவசமாக சைக்கிளை வழங்கினார்.

கத்தார், தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளும் தங்களின் பங்குக்கு நிதியுதவி வழங்குவதாக அறிவித்தன.

மிக உச்சபட்சமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 700 கோடி தருவதாக அறிவித்து, இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருந்தது. எனினும் மோடியின் தலைமையிலான மத்திய அரசு வெளிநாட்டு உதவிகள் தேவை இல்லை என்று நிராகரித்து விட்டது.

எனினும், தற்போது வெள்ளம் வடிந்து ஒரு சில இடங்களில் முகாம்களில் இருந்து மக்கள் தங்களின் இருப்பிடம் நோக்கி திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

இயல்பு நிலைக்கும், இயல்பு வாழ்வுக்கும் வர அவர்களுக்கு இன்னும் பல மாதங்கள் ஆகும்.

எனவே, இனி தான் நாம் செய்கிற உதவி அவர்களுக்கு உண்மையான உபயோகத்தை, பிரயோஜனத்தைப் பெற்றுத்தரும்.

இஸ்லாமியப் பார்வையில்…..

இது போன்று ஏற்படுகிற பேரிடர்களை இயற்கைச் சீற்றங்களாகவும், இயக்கங்களில் ஏற்படுகிற மாற்றங்களாகவும் மட்டுமே மனித சமூகம் பார்த்துக் கொண்டு வருகிறது.

ஆனால், இஸ்லாமோ இப்படி அபத்தமான சாயங்கள் பூசப்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில், உலகில் ஏற்படும் எந்த ஒரு அசைவானாலும் அது தானாக ஏற்படுவதில்லை. படைத்த இறைவனாகிய அல்லாஹ் தான் அண்ட சராசரங்கள் அனைத்தையும் இயக்கிக் கொண்டிருக்கின்றான் என்று உறுதியிட்டுக் கூறுகின்றது.

மேலும், அந்த அல்லாஹ் தான் இத்தகைய வெள்ளப் பெருக்குகளையும், புயல் காற்றுகளையும்,  பூகம்பங்களையும், நிலநடுக்கங்களையும், சுனாமிகளையும் ஏற்படுத்துகின்றான்.

உலகில் முதன் முதலாக ஏற்பட்ட மிகப்பெரும் பேரிடராக நபி நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரளயத்தை தற்காலப் பாஷையில் சொல்வதானால் சுனாமியை அல்குர்ஆன் ஹூத் அத்தியாயத்தில் 36 முதல் 49 வரையிலான வசனங்களில் குறிப்பிடுகின்றது.

இந்த மானுட சமூகம் தீய வழிகளிலிருந்து விலகி நேர்வழியில் தொடர்ந்து பயணிக்க வேண்டும், பாவங்களில் இருந்து தம்மை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும், இறைவன் வகுத்த வரம்புகளில், எல்லைகளில் கவனத்தோடு செயல்பட வேண்டும் என்பன போன்ற பல பாடங்களையும், படிப்பினைகளையும் பெற வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறான பேரிடர்களையும், பேரிழப்புக்களையும் அல்லாஹ் ஏற்படுத்துகின்றான்.

أَأَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ () أَمْ أَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا فَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ ()

வானத்திலிருப்பவன் உங்களைப் பூமியினுள் ஆழ்த்தி விடுவதையும், அப்போது உடனே பூமி அதிரத்தொடங்குவதையும் குறித்து நீங்கள் அச்சமின்றி இருக்கின்றீர்களா? அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கற்களைப் பொழியும் காற்றை அனுப்புவது குறித்து நீங்கள் அச்சமின்றி இருக்கின்றீர்களா? இவைகள் வந்து விட்டால் பிறகு உங்களுக்கு தெரிந்து விடும் எனது எச்சரிக்கை எப்படி இருக்கின்றது என்று!                                                    ( அல்குர்ஆன்: 67:16,17 )

ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ ()
மனிதர்களின் கரங்கள் செய்த தீய வினைகளினால் அம்மனிதர்கள் படிப்பினைப் பெற்று திருந்தி திரும்ப வேண்டும் என்பதற்காக அத்தீய வினைகள் சிலதின் பிரதிபலனை தண்டனையை அவர்களுக்கு அல்லாஹ் உணரச்செய்வதற்காக கடலிலும், கரையிலும் பெரும் ஆபத்துக்களை விளைவிக்கின்றான்”.
                                                          (அல்குர்ஆன்:30:41)

وَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ (21)

மேலும், அந்த நாளில் பெரும் வேதனை வரும் முன் இவ்வுலகில் ஏதேனும் ஒரு சிறு வேதனையை சுவைக்கக் கொடுப்போம். இவர்கள் தங்களது பாவமான போக்கை விட்டு விலகி விடக்கூடும் என்பதற்காக!.”           ( அல்குர்ஆன்: 32: 21 )


என் சமூகத்தினர் பதினைந்து வகையான பாவங்களை மிகச் சாதாரணமாகக் கருதி செய்ய ஆரம்பித்து விட்டால் அவர்களின் மீது சோதனைகளும் வேதனைகளும் இறங்கிவிடும்என நபி {ஸல்} அவர்கள் கூறியபோது

அல்லாஹ்வின் தூதரே! அவைகள் என்ன? என்று நபித்தோழர்கள் வினவ, அப்போது நபி {ஸல்} அவர்கள் ஃகனீமத் சொந்தப்பொருளாகவும், அமானிதம் ஃகனீமத் பொருளாகவும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டால், ஜகாத்தை கடன் சுமை போன்று கருத ஆரம்பித்து விட்டால், கணவன் மனைவிக்கு அடிபணிபவனாக ஆகிவிட்டால், தன் தாய்க்கு நோவினை கொடுத்து, தன் நண்பனுக்கு முன்னுரிமை அளித்து, தந்தைக்கு அநீதம் இழைத்தால், ஒரு மனிதனுக்கு அவனுடைய தீங்கை நினைத்து கண்ணியம் கொடுக்கப்பட்டால், சமுதாயத் தலைவர்கள் கீழ்த்தரமானவர்களாக மாறி விட்டால், மஸ்ஜித்களில் உலகப்பேச்சு பெருகி விட்டால், மது பகிரங்கமாக அருந்தப்பட்டால், பட்டாடைகள் அணியப்பட்டால், பாடகிகளையும், இசைக் கருவிகளையும் பிரதானமாகக் கருத ஆரம்பித்தால், இந்த உம்மத்தின் மேன்மக்களான முன்னோர்கள் பின்னோர்களால் தூற்றப்பட்டால்  நீங்கள் கொடுங்காற்றையும், பூமியில் புதையுண்டு போவதையும், உருமாற்றம் செய்யப்படுவதையும் எதிர் பாருங்கள்என நவின்றார்கள்.                                     ( நூல்: திர்மிதீ )

ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்தோழர்களோடு அமர்ந்திருக்கும் ஓர் சபையில் நில நடுக்கத்தின் பிரதிபலிப்பை மக்களோடு அண்ணலாரும் உணர்ந்த போது தோழர்களை நோக்கிய நபிகளார் மக்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு தண்டனை கொடுக்க நாடுகின்றான். எனவே, நீங்கள் அவனிடம் பாவமன்னிப்புக் கோரி தண்டனையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்என்று கூறினார்கள்.                                   ( நூல்: இப்னு அபீ ஷைபா )

எனவே, நம்மைச் சுற்றி அன்றாடம் நடக்கிற நிகழ்வுகளில் இருந்தும், எப்போதாவது, என்றைக்காவது நடக்கிற நிகழ்வுகளில் இருந்தும் தீர்க்கமான பாடத்தையும், தெளிவான படிப்பினையையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதிலும் குறிப்பாக இரத்தத்தை உறைய வைக்கிற, உள்ளத்தை பதற வைக்கிற கோரமான பேரிடர்களில் இருந்து நிறைவான பாடத்தைப் பெற வேண்டும்.

அப்போது தான் இந்த உலக வாழ்க்கை மன நிறைவாகவும், மறு உலக வாழ்க்கை சோபனம் நிறைந்ததாகவும் ஆகும்.
மழை நீர் என்பது...

தண்ணீர் மனிதனுக்கு மாத்திரமல்ல உயிரினங்கள், தாவரங்கள், விலங்கினங்கள் என படைப்பினங்கள் அனைத்திற்கும் இன்றியமையாத ஒன்றாகும்.

அந்த தண்ணீரை மழை நீர் எனும் நன்னீர் மூலம் அல்லாஹ் வழங்கி உயிரினங்களை வாழ வைக்கின்றான்.

இன்னும் ஒரு படி மேலே போய் சொல்ல வேண்டுமானால் உயிரினங்கள் அனைத்தும் தண்ணீரை அடிப்படையாகக் கொண்டே படைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது இஸ்லாம்.

وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ

உயிரினங்கள் அனைத்தையும் நாம் தண்ணீரைக் கொண்டே உருவாக்கினோம்”. (அல்குர்ஆன்: 21: 30 )

وَاللَّهُ خَلَقَ كُلَّ دَابَّةٍ مِنْ مَاءٍ فَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى بَطْنِهِ وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى رِجْلَيْنِ وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى أَرْبَعٍ يَخْلُقُ اللَّهُ مَا يَشَاءُ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

அல்லாஹ் அனைத்துப் பிராணிகளையும் தண்ணீரிலிருந்தே படைத்தான்”. ( அல்குர்ஆன்: 24: 45 )

மழையை பரக்கத் அபிவிருத்தி என்கிறது அல்குர்ஆன்….

وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبَارَكًا فَأَنْبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيدِ () وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَهَا طَلْعٌ نَضِيدٌ () رِزْقًا لِلْعِبَادِ وَأَحْيَيْنَا بِهِ بَلْدَةً مَيْتًا كَذَلِكَ الْخُرُوجُ ()

மேலும், நாம் வானத்திலிருந்து அபிவிருத்திகள் நிறைந்த மழை நீரை இறக்கினோம். பின்னர், அதன் மூலம் தோட்டங்களையும், அறுவடைத் தானியங்களையும், கனிகள் நிறைந்து, குலைகள் அடுக்கடுக்காய் தொங்குகின்ற நீண்ட நெடிய பேரீச்சை மரங்களையும் முளைக்கச் செய்தோம். இது மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதற்கான அழகிய ஏற்பாடாகும். இறந்து கிடக்கும் ஒரு பூமிக்கு நாம் இந்த நீரினால் உயிரூட்டுகின்றோம். இறந்து விட்ட மனிதர்கள் பூமியிலிருந்து வெளிப்படுவதும் இவ்விதமேயாகும்”.        ( அல்குர்ஆன்: 50: 9 – 11 )

மழையை ரஹ்மத் - அருள்வளம் என்கிறது அல்குர்ஆன்…..

وَهُوَ الَّذِي يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ حَتَّى إِذَا أَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنَاهُ لِبَلَدٍ مَيِّتٍ فَأَنْزَلْنَا بِهِ الْمَاءَ فَأَخْرَجْنَا بِهِ مِنْ كُلِّ الثَّمَرَاتِ كَذَلِكَ نُخْرِجُ الْمَوْتَى لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ()

மேலும், அவனே தன்னுடைய அருள்வளத்திற்கு ( மழைக்கு ) முன்பாக நற்செய்திகளைக் கொண்ட காற்றுகளை அனுப்புகின்றான்”.      ( அல்குர்ஆன்: 7: 57 )

மழையை தஹூர் - தூய்மை என்கிறது அல்குர்ஆன்….

وَأَنْزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً طَهُورًا

மேலும், வானிலிருந்து தூய்மையான ( மழை ) நீரை நாம் இறக்கி வைக்கின்றோம்”.                                            ( அல்குர்ஆன்: 25: 48 )

மழை ரிபாத்துல் குலூப் - இதயங்களை வலுப்படுத்தும் உயரிய அம்சம் என்கிறது அல்குர்ஆன்….

إِذْ يُغَشِّيكُمُ النُّعَاسَ أَمَنَةً مِنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِنَ السَّمَاءِ مَاءً لِيُطَهِّرَكُمْ بِهِ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطَانِ وَلِيَرْبِطَ عَلَى قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامَ

இதையும் நினைத்துப் பாருங்கள்! அல்லாஹ் உங்களைச் சிற்றுறக்கம் கொள்ளச் செய்து தன் சார்பிலிருந்து உங்களுக்கு மன நிம்மதியையும், அச்சமின்மையையும் ஏற்படுத்தினான். மேலும், உங்களைத் தூய்மைப் படுத்துவதற்காகவும், ஷைத்தான் ஏற்படுத்திய அசுத்தங்களை உங்களை விட்டு அகற்றுவதற்காகவும், உங்கள் இதயங்களை வலுப்படுத்துவதற்காகவும், அதன் மூலம் உங்கள் பாதங்களை நிலைப்படுத்துவதற்காகவும் வானத்திலிருந்து உங்கள் மீது மழையையும் பொழியச் செய்தான்”.                           ( அல்குர்ஆன்: 8: 11 )

பத்ரில் அல்லாஹ் முஃமின்களுக்கு மட்டும் வழங்கிய பிரத்யேகமான மழையை நினைவு கூறச் சொல்கின்றான்.

மழை வாழ்க்கைக்கான சாதனங்களை வழங்கும் மாபெரும் கொடை என்கிறது அல்குர்ஆன்….

يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا (11) وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا (12)

உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள்! சந்தேகமின்றி அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான். அவன் உங்கள் மீது வானத்திலிருந்து நிறைய மழையைப் பொழியச் செய்வான். செல்வத்தையும் சந்ததிகளையும் உங்களுக்கு வழங்குவான். உங்களுக்காக தோட்டங்களை உருவாக்குவான். உங்களுக்காக ஆறுகளையும் ஓடச்செய்வான்”.                          ( அல்குர்ஆன்: 71: 10 – 12 )

மழைநீர் உலகத்தோடு முடிந்து விடும் ஒன்றல்ல....

قال رسول الله
صلى الله عليه و سلم أن جسد الأنسان يبلى كله فيما عدا "عجب الذنب" فإذا أراد الله تعالى بعث الناس أنزل مطراً من السماء فينبت كل فرد من عجب ذنبه كما تنبت البقلة من بذرتها رواه مسلم كتاب الفتن و أشراط الساعة

மஹ்ஷர் மைதானம் அமையப் பெற்ற பிறகு அல்லாஹ் வானத்திலிருந்து ஒரு மழையை பொழியச் செய்வான். உடனே இறந்தவர்கள் பச்சைப்புற்பூண்டுகள் முளைப்பதைப் போன்று மண்ணறையிலிருந்து உயிர்த்தெழுவார்கள். ஆதமுடைய மகனின் உடலிலுள்ள அனைத்துப் பகுதிகளையும் மண் தின்று விடும். அவனுடைய முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும் குத எழும்பின் நுனியைத்தவிர, அதை வைத்தே அல்லாஹ் மீண்டும் மனித சமூகத்தை உயிர்த்தெழுப்புவான்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                   ( நூல்: முஸ்லிம் )


அல்லாஹ் மழையை இவ்வளவு மாண்பாக வர்ணித்துக்  கூறும் போது ஏன் இவ்வளவு பெரிய இழப்புகளை நாம் சந்திக்க நேரிடுகின்றது.

அல்லாஹ் மனிதனுக்கு வழங்குகின்ற அனைத்து விஷயங்களையும் ஒரு குறிப்பிட்ட நிர்ணயத்தின், நியதியின் அடிப்படையில் தான் வழங்குகின்றான்.


إنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ

அல்லாஹ் கூறுகின்றான்: ”நிச்சயமாக! நாம் ஒவ்வொரு பொருட்களையும் ஒரு குறிப்பிட்ட விதிமுறையின் படி இயங்குவதாகவே படைத்திருக்கின்றோம்.”

மழையும் அப்படித்தான்..

وَالَّذِي نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ

எனினும், அவன் வானத்திலிருந்து அளவுடன் தான் தண்ணீரை ( மழையை ) இறக்கி வைக்கின்றான்”. ( அல்குர்ஆன்: 43: 11 )

ஒரு முஸ்லிமாக நாம் என்ன செய்ய வேண்டும்?...

உலகில் யார் பாதிக்கப்பட்டாலும் முதல் ஆளாக ஓடிச் சென்று அரவணைக்கவும், உதவிக்கரம் நீட்டவும் இஸ்லாம் ஆணையிட்டுள்ளது.

நீங்கள் உண்மையான மனித நேய மாண்பாளரா?

وذكر أهل التاريخ أنه في عهد الخليفة أبي بكر الصديق - رضي الله عنه - أصاب الناس جفاف وجوع شديدان، فلمّا ضاق بهم الأمر ذهبوا إلى الخليفة أبي بكر - رضي الله عنه - وقالوا: يا خليفة رسول الله، إنّ السّماء لم تمطر، والأرض لم تنبت، وقد أدرك الناس الهلاك فماذا نفعل؟ قال أبو بكر - رضي الله عنه -: انصرفوا، واصبروا، فإني أرجو ألاّ يأتي المساء حتّى يفرج الله عنكم. وفي آخر النهار جاء الخبر بأنّ قافلة جمالٍ لعثمان بن عفّان - رضي الله عنه - قد أتت من الشّام إلى المدينة. فلمّا وصلت خرج النّاس يستقبلونها، فإذا هي ألف جمل محملة سمناً وزيتاً ودقيقاً، وتوقّفت عند باب عثمان - رضي الله عنه - فلمّا أنزلت أحمالها في داره جاء التجار. قال لهم عثمان - رضي الله عنه - ماذا تريدون؟ أجاب التجار: إنّك تعلم ما نريد، بعنا من هذا الذي وصل إليك فإنّك تعرف حاجة النّاس إليه. قال عثمان: كم أربح على الثّمن الذي اشتريت به؟ قالوا: الدّرهم درهمين. قال: أعطاني غيركم زيادة على هذا. قالوا: أربعة! قال عثمان - رضي الله عنه -: أعطاني غيركم أكثر. قال التّجار: نربحك خمسة. قال عثمان: أعطاني غيركم أكثر. فقالوا: ليس في المدينة تجار غيرنا، ولم يسبقنا أحد إليك، فمن الذي أعطاك أكثر مما أعطينا؟! قال عثمان - رضي الله عنه -:إن الله قد أعطاني بكل درهم عشرة، الحسنة بعشرة أمثالها، فهل عندكم زيادة؟ قالوا: لا. قال عثمان: فإني أشهد الله أني جعلت ما جاءت به هذه الجمال صدقة للمساكين وفقراء المسلمين. ثم أخذ عثمان بن عفان يوزّع بضاعته، فما بقي من فقراء المدينة واحد إلاّ أخذ ما يكفيه ويكفي أهله.

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம், பஞ்சம் எனும் பேரிடர் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

கடும் பஞ்சத்தால் மக்கள் உண்ண உண்வின்றி, குடிக்க நீரின்றி கடும் சோதனைக்கு உள்ளாகினர். அனுதினமும் ஆட்சியாளரின் வீட்டு வாசலின் முன்பாக ஆயிரமாயிரம் மக்கள் வருவதும், போவதுமாக தங்களின் சிரமங்களை முறையிட்டவர்களாக இருந்ததை தவிர்க்க முடியவில்லை.

“அல்லாஹ்வால் எங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிற ஆட்சியாளரே! வானம் பொய்த்து விட்டது! பூமி மலடாகி காய்ந்து விட்டது! நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம். நாங்கள் என்ன செய்வது?” என்று கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி கேட்டனர்.

கண்ணீர் மல்க, கலீஃபா அபூபக்ர் (ரலி) கூறினார்கள் “மக்களே! உங்களின் இல்லங்களுக்கு திரும்பிச் செல்லுங்கள்! பொறுமை காத்திடுங்கள்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உங்களின் கஷ்டங்களை எல்லாம் மிக விரைவில் நீக்கி, சுகத்தோடு வாழ வைப்பான்” என ஆதரவு வைக்கின்றேன்” என்று.

இப்படியாக நாட்கள் பல உருண்டோடியது. திடீரென ஒரு நாள் மதீனா நகரெங்கும் புளுதிப் படலம், மக்கள் என்னவோ ஏதோவென்று பதறியடித்தவாறு வீட்டை விட்டு வெளியேறி மதீனாவின் முக்கிய வீதியில் ஒன்று கூடி தூரத்தில் தெரிந்த புளுதி கொஞ்சம், கொஞ்சமாக மதீனா நகரை நெருங்கி வருவது குறித்து ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.

இப்போது புளுதி சிறிது விலகி ஓர் ஒட்டகக் கூட்டம் தங்களின் அருகே வருவதை உணர்ந்தனர்.

அவர்களின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி! அந்த ஒட்டகக் கூட்டத்தினரைக் கண்டு…

ஆம்! அந்த ஒட்டகக்கூட்டம் உஸ்மான் (ரலி) அவர்களின் வியாபாரக் கூட்டம். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஷாமுக்கு சென்றிருந்த வியாபாரக் கூட்டம். பெருமளவு தானியங்களோடும், ஜைத்தூன் எண்ணெய் பீப்பாய்களோடும், கொழுப்புகளோடும் ஆயிரம் ஒட்டகைகளில் வந்து உஸ்மான் (ரலி) அவர்களின் வீட்டின் முன்பாக நின்றது.

வரலாற்று ஆசிரியர்கள் இப்படிக் கூட கூறுவார்கள் “முதல் ஒட்டகம் உஸ்மான் (ரலி) அவர்களின் வீட்டின் முன் நின்றது என்றால் ஆயிரமாவது கடைசி ஒட்டகம் ஷாமின் எல்லையில் நின்றது” என்று.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட மதீனா மற்றும் அதன் சுற்று வட்டார வியாபாரிகள் அனைவரும் உஸ்மான் (ரலி) அவர்களின் வீட்டின் முன்பாக கூடிவிட்டனர்.

உஸ்மான் (ரலி) அவர்கள் வியாபாரிகளின் முற்றுகையையும், மக்களின் முகத்தில் தெரிந்த சோக ரேகைகளின் பிண்ணனியையும் ஒரே நேரத்தில் புரிந்து கொண்டார்கள்.

ஏனெனில், வருகிற வழியிலேயே மதீனாவில் நிகழ்கிற பேரிடர், அதனால் ஏற்பட்டிருக்கிற பசி, பஞ்சம் ஆகியவற்றைக் கேட்டு தெரிந்து வைத்திருந்தார்கள்.

உள்ளூர் மற்றும் சுற்று வட்டார வியாபாரிகளின் சார்பாக ஒருவர் முன் வந்து “மக்களின் தேவைகளை நீங்கள் நன்கு அறிவீர்கள்! எனவே, மொத்த சரக்குகளையும் உள்ளூர் மற்றும் சுற்று வட்டார வியாபாரிகளாகிய எங்களிடமே நீங்கள் விலைக்கு தர வேண்டும். வெளியூர் வியாபாரிகளுக்கு நீங்கள் விற்பனை செய்யக் கூடாது” என்று கோரிக்கை வைத்தார்.

அது கேட்ட உஸ்மான் (ரலி) அவர்கள் “என்னிடம் இருந்து நீங்கள் வாங்கும் பொருளுக்கு எவ்வளவு லாபம் தருவீர்கள்? என்று கேட்டார்கள்.

அதற்கு, வியாபாரிகள் “ஒரு திர்ஹம் மதிப்புள்ள பொருளுக்கு இரண்டு திர்ஹம்கள் தருகின்றோம்” என்றார்கள். அதற்கு, உஸ்மான் (ரலி) அவர்கள் “வெறொருவர் உங்களை விட கூடுதலாக தருகின்றேன் என்று கூறிவிட்டார்” என்று கூறினார்கள்.

அதற்கு, வியாபாரிகள் “இரண்டுக்கு மூன்று திர்ஹம்” என்றார்கள். அதற்கு  , உஸ்மான் (ரலி) அவர்கள் “வெறொருவர் உங்களை விட கூடுதலாக தருகின்றேன் என்று கூறிவிட்டார்” என்று கூறினார்கள்.

அதற்கு, வியாபாரிகள் “மூன்றுக்கு நான்கு திர்ஹம்” என்றார்கள். அப்போதும் முன்பு போன்றே உஸ்மான் (ரலி) அவர்கள் கூற, இப்போது வியாபாரிகள் கடைசியாக நான்குக்கு ஐந்து திர்ஹம் தருகின்றோம்” என்றார்கள்.

அதற்கு, உஸ்மான் (ரலி) அவர்கள் “வெறொருவர் உங்களை விட கூடுதலாக தருகின்றேன் என்று கூறிவிட்டார்” என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட வியாபாரிகள் “எங்களுக்குத் தெரிந்து உள்ளூரின், சுற்றுபுறத்தின் அனைத்து வியாபாரிகளும் இங்கே தான் குழுமியிருக்கின்றோம். அத்தோடு இதுவரை உங்களிடம் தான் நாங்கள் கொடுக்கல் வாங்கலும் வைத்திருக்கின்றோம், எங்களை விட கூடுதல் விலைக்கு, கூடுதல் லாபத்திற்கு வியாபாரம் பேசிய அந்த வியாபாரி யார்? இப்பொழுதே எங்களுக்குத் தெரிய வேண்டும்? என்று கேட்டனர்.

அது கேட்ட உஸ்மான் (ரலி) அப்படியே மௌனித்து நிற்கின்றார்கள். மக்கள் ஏக்கத்தோடு நிற்கின்றார்கள். வியாபாரிகள் புருவத்தை உயர்த்தி யாராக இருக்கும் என்ற சிந்தனையோடு நின்று கொண்டிருக்கின்றார்கள்.

நீண்ட மௌனத்திற்குப் பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் “அல்லாஹ்விடம் நான் வியாபாரம் பேசியுள்ளேன்” அவன் தான் உங்களை விட அதிக விலைக்கு, லாபத்திற்கு வியாபாரம் பேசிய வியாபாரியாவான்” என்று கூறி மௌனத்தைக் கலைத்தார்கள்.

“அல்லாஹ் ஒவ்வொரு திர்ஹத்திற்கும் பத்து திர்ஹம் தருவதாக திருக் குர்ஆன் மூலம் வாக்களித்திருக்கின்றான். “எவர் அழகிய ஒன்றை நம்மிடம் கொண்டு வருகின்றாரோ அது போன்று அவருக்கு பத்து நன்மைகளை வழங்குவோம்” அல்அன்ஆம் அத்தியாயத்தின் 160 –ஆவது வசனத்தை ஓதிக் காண்பித்து விட்டு, இதை விட கூடுதலாக நீங்கள் யாரும் தருவீர்களா? இறைவனை விட கூடுதலாக வழங்க யாருக்குத் தான் இயலும்? என்று கேட்டார்கள்.

அதற்கு, வியாபாரிகள் “எங்களால் ஒருபோதும் அப்படித் தர இயலாது” என்று கூறினார்கள்.

அப்போது, உஸ்மான் (ரலி) அவர்கள் “என் ஒட்டகைகள் ஆயிரமும் சுமந்து வந்த அத்துனை பொருட்களையும் வறட்சியாலும், பசி பஞ்சத்தாலும் வாடி வதங்கிக் கொண்டிருக்கிற இந்த மக்களுக்கும், ஏழைகளுக்கும் வழங்குகின்றேன்! அல்லாஹ்வே இதற்கு உன்னையே சாட்சியாகவும் ஆக்குகின்றேன்” என்று கூறினார்கள்.

மதீனாவில் இருக்கிற எல்லா குடும்பத்தினர்களும் அவரவர்களின் தேவைக்கு ஏற்ப அதில் இருந்து எடுத்துக் கொண்டார்கள். இறுதியில் எதுவும் மிஞ்சவில்லை”.
 
 ( நூல்: ஃபிக்ஹுத் தாஜிருல் முஸ்லிம் )


1. சேவையும் இறைவழிபாடுதான்

அல்குர்ஆன் இறைவனுக்கு வழிபடுவதை மனித வாழ்க்கையின் லட்சியம் எனக் குறிப்பிடுகிறது.

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ ()

நான் ஜின்களையும், மனிதர்களையும் எனக்கு வழிபட வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறு எதற்காகவும் படைக்கவில்லை”.  ( அல்குர்ஆன்: 51: 56 )

அல்குர்ஆன் அல்லாஹ்வின் படைப்பினங்களுக்கு, சக மனிதர்களுக்கு சேவை செய்வதை வாழ்க்கையின் குறிக்கோள் என வலியுறுத்துகிறது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ()

இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ருகூவும், ஸுஜூதும் செய்யுங்கள். மேலும், உங்கள் இறைவனுக்கு வழிபடுங்கள். மேலும், சேவையாற்றுங்கள். நீங்கள் வெற்றியடையக் கூடும்!”.                                    ( அல்குர்ஆன்: 22: 77 )

ஒரு மனிதன் வழிபாடுகளின் மூலம் இறை உவப்பையும், இறை நெருக்கத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என இஸ்லாம் தூண்டும் அதே வேளையில் அந்த வழிபாட்டை இரு கூறுகளாக பிரித்திருக்கின்றது.

ஒன்று உடல் ரீதியிலானது. இன்னொன்று உடமை மற்றும் பொருள் ரீதியிலானது.

இறைவனின் நெருக்கத்தை, பொருத்த்தத்தைப் பெறுவதற்காக எவ்வாறு உடல் ரீதியான வழிபாடு முக்கியம் என்று குர்ஆன் வலியுறுத்துகிறதோ அதே போன்று உடமை மற்றும் பொருள் ரீதியான வழிபாடும் முக்கியம் என வலியுறுத்துகிறது.

ஆகவே தான் குர்ஆனில் அல்லாஹ் தொழுகையையும் ஜகாத்தையும் பல இடங்களில் ஒன்றிணைத்தே வலியுறுத்திக் கூறுகின்றான்.

இறைவனின் முன் பக்திப் பரவசத்துடன் தலை தாழ்த்துவது மட்டுமல்ல வழிபாடு என்பது.

மாறாக, தான் சம்பாதித்து சேர்த்து வைத்திருக்கிற செல்வத்தில் சக மனிதர்களுக்கும் உரிமை உள்ளது என்ற உணர்வுடன் சேவையாற்றுவதும், உதவிக்கரம் நீட்டுவதும் வழிபாடு தான் என்பதை உணர்த்துவதற்காகத் தான் உடல் ரீதியான தொழுகையையும், பொருள் ரீதியான ஜகாத்தையும் இணைத்தே அல்லாஹ் கூறியிருக்கின்றான்.

وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ

அல்லாஹ் உமக்கு உபகாரம் செய்திருப்பதைப் போன்று நீயும் சக மனிதர்களுக்கு உபகாரம் செய்”.                              ( அல்குர்ஆன்: 28: 77 )

2. மனித நேயப்பண்பு முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய உயர் பண்பாகும்..

أصابت خيل رسـول اللـه -صلى اللـه عليه وسلم- ابنة حاتم الطائي في سبايا
طيّ فقدمتْ بها على رسـول الله -صلى الله عليه وسلم-فجُعِلَتْ في حظيرة بباب
المسجد فمرّ بها رسول الله -صلى الله عليه وسلم- فقامت إليه وكانت امرأة جزلة ، فقالت يا رسول الله هَلَكَ الوالِد وغابَ الوافد،فقال ومَنْ وَافِدُك ؟، قالت عدي بن حاتم ، قال الفارُّ من الله ورسوله ؟، ومضى حتى مرّ ثلاثاً ، فقامت وقالت يا رسول الله هَلَكَ الوالِد وغابَالوافد فامْنُن عليّ مَنّ الله عليك قال قَدْ فعلت ،

ஹாத்திம் தாயி என்பவருடைய மகள் ஸஃபானாவும், அவரின் கோத்திரத்தாரும் கைதியாக பிடிக்கப்பட்டு மதீனாவின் மஸ்ஜித்துன் நபவீயின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தருணம் அது..

நிலைமையை உணர்ந்து கொண்ட ஸஃபானா தழுதழுத்த குரலில் நபி {ஸல்} அவர்களிடம்அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய தந்தையோ இறந்து விட்டார். என்னை ஆதரிக்க வேண்டிய என் சகோதரன் அதீயோ என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டு ஓடிவிட்டார். என் மீது கருணை காட்டுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்!” என்றார்.

இந்த அபயக்குரல் மூன்று நாட்களாக மாநபி {ஸல்} அவர்களின் காதுகளில் பள்ளிவாசலைக் கடந்து வீட்டிற்கும், வீட்டைக் கடந்து பள்ளிவாசலுக்கும் செல்கிற போது ஒலித்துக் கொண்டே இருந்தது.

மூன்றாம் நாள் ஸஃபானாவின் அருகே சென்ற பெருமானார் {ஸல்} அவர்கள் அன்பு கூர்ந்து நோக்கிஸஃபானாவே! உம்முடைய கோரிக்கை தான் என்ன?” ஆதரவுடன் கேட்டார்கள்.

وفي رواية أخرى أن سُفانة قد قالتلرسول الله -صلى الله عليه وسلم- يا مُحَمّد ! إن رأيتَ أن تخلّي عنّي فلاتشمِّت بي أحياء العرب ؟! فإنّي ابنة سيّد قومي ، وإنّ أبي كان يفُكّ العاني ،ويحمي الذّمار ، ويُقْري الضيف ، ويُشبع الجائع ، ويُفرّج عن المكروب ، ويفشيالسلام ويُطعم الطعام ، ولم يردّ طالب حاجة قط ، أنا ابنة حاتم الطائي )قالالنبي -صلى الله عليه وسلم- يا جارية ، هذه صفة المؤمن حقاً ، لو كان أبوكإسلامياً لترحّمنا عليه خلّوا عنها فإن أباها كان يُحِبّ مكارم الأخلاق ، والله يحب مكارم الأخلاق

அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை வறியோருக்கும், எளியோருக்கும், வாழ வழியில்லாதோருக்கும் கலங்கரை விளக்கமாய் இருந்தவர். உயிருடன் வாழும் காலம் வரைக்கும் ஈந்து கொடுப்பதை வழக்கமாய் கொண்டிருந்த மாமனிதர் அவர். ஆனால், நானும், என் சமூகமும் இன்று இப்படி நிராயுதபாணிகளாய் நின்று கொண்டிருக்கின்றோம். எங்கள் மீது கருணை காட்டுங்கள்! உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவான்!” என்றார்.

قال
رسـول الله صلى الله عليه وسلم
(( ارحموا عزيز قوم ذلّ ، وغنياً افتقر ، وعالماً ضاع بين جهّال ))
[ ذكر هذه  ابن هشام في سيرته ، والطبري في تاريخه ]

நீண்ட உரையாடலுக்குப் பின்னர் அண்ணலார் ஸஃபானாவின் தந்தையை வாழ்த்தி விட்டு, விடுதலை அளிப்பதாக கூறிவிட்டு அணிய ஆடையும், உண்ண உணவும், செலவுக்கு பணமும் கொடுத்து விட்டு சுற்றியிருந்த தோழர்களை நோக்கி கண்ணியமானவர்கள் இழிவடைந்த நிலையில் இருப்பதைக் கண்டாலோ, வசதி படைத்தவர்கள் வறுமையில் மாட்டிக் கொண்டாலோ, அறிவுபடைத்தவர்கள் முட்டாள்களிடத்தில் சிக்கிக் கொண்டாலோ உடனடியாக அவர்களுக்கு உதவுங்கள்என கூறினார்கள்.

பின்னர், தகுந்த பாதுகாப்போடு ஸஃபானாவை அவரின் சொந்த ஊரான ஷாமுக்கு அனுப்பி வைத்தார்கள். ( நூல்: இப்னு ஹிஷாம், அத்தாரிக் லித் தபரீ )                     

எனவே, அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் வலியுறுத்திய கடமையைத் தான் செய்கின்றோம் என்பதை மனதில் நிறுத்த வேண்டும்.

முஸ்லிம் சமூகம் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரை தொடர்ந்து உதவிக்கரம் நீட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

நம்மை நோக்கி வருகிற பிற சமூக மக்களின் வாழ்த்துக்களை, பாராட்டுக்களை எண்ணி, அகமகிழ்ந்து போகிறோம் எனில் இஸ்லாம் மனித நேயப் பணிகளுக்கு வழங்குகிற அபரிமிதமான நன்மைகளை இழக்கும் அபாயம் நேரிடும்.

3. எல்லா காலங்களிலும் மனித நேயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ (8)

தீன் (இறைமார்க்கம்) தொடர்பான விஷயங்களில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்ற வில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும், நீதியுடனும் நடப்பதிலிருந்து அல்லாஹ் உங்களைத் தடுப்பதில்லை. திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான்”.                                               ( அல்குர்ஆன்: 60:8 )

4. அனைத்து உயிரினங்களோடும் மனித நேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும்..

وعَنْ أَبِي هُرَيْرَةَ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :¬«بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ إِذْ اشْتَدَّ عَلَيْهِ الْعَطَشُ، فَوَجَدَ بِئْرًا، فَنَزَلَ فِيهَا فَشَرِبَ، وَخَرَجَ، فَإِذَا كَلْبٌ يَلْهَثُ يَأْكُلُ الثَّرَى مِنْ الْعَطَشِ، فَقَالَ الرَّجُلُ: لَقَدْ بَلَغَ هَذَا الْكَلْبَ مِنْ الْعَطَشِ مِثْلُ الَّذِي بَلَغَ مِنِّي، فَنَزَلَ الْبِئْرَ، فَمَلَأَ خُفَّهُ، ثُمَّ أَمْسَكَهُ بِفِيهِ، حَتَّى رَقِيَ، فَسَقَى الْكَلْبَ، فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ». فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَإِنَّ لَنَا فِي الْبَهَائِمِ لَأَجْرًا؟ فَقَالَ: «فِي كُلِّ ذِي كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ»[البخاري ومسلم].

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு மனிதன் காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தான். அவனுக்குக் கடுமையாக தாகம் ஏற்பட்டது. அருகில் இருந்த கிணற்றுக்குள் இறங்கி நீர் அருந்தினான். தாகம் தீர நீர் அருந்திய பின்னர் மேலே வந்தான். அங்கே நாயொன்று தாகத்தின் கொடுமையால் தரையை நக்கிக் கொண்டிருந்தது.

அப்போது அந்த மனிதன் நாம் எவ்வாறு தாகத்தால் துடித்துக் கொண்டிருந்தோமோ அவ்வாறு தானே இந்த நாயும் தாகத்தால் துடித்துக் கொண்டிருக்கின்றதுஎன்று தன் மனதினுள் எண்ணினான்.

உடனே, கிணற்றுக்குள் இறங்கி தனது காலுறைக்குள் தண்ணீர் நிரப்பிக் கொண்டு வெளியே வந்து அந்த நாய்க்குத் தண்ணீர் புகட்டினான். அல்லாஹ் அவனது இந்தச் செயலை மிகவும் மதித்தான். அதன் விளைவாக அவனது பாவங்களை மன்னித்தான்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அப்போது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! பிராணிகளுக்குச் சேவை செய்தாலும் நன்மை கிடைக்குமா?” என்று கேட்டார்கள்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள் ஈரமான ஈரலுடைய எந்த ஒன்றுக்கும் அதாவது எந்த ஓர் உயிர் பிராணிக்கும் சேவை செய்தாலும் நன்மை கிடைக்கும் என்று பதில் கூறினார்கள்.                                        ( நூல்: புகாரி )

5. மனிதனுக்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்யும் சேவையே!..

وعن أبي هريرة رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يقول يوم القيامة يا ابن آدم مرضت فلم تعدني قال يا رب كيف أعودك وأنت رب العالمين قال أما علمت أن عبدي فلانا مرض فلم تعده أما علمت أنك لو عدته لوجدتني عنده يا ابن آدم استطعمتك فلم تطعمني قال يا رب كيف أطعمك وأنت رب العالمين قال أما علمت أنه استطعمك عبدي فلان فلم تطعمه أما علمت أنك لو أطعمته لوجدت ذلك عندي يا ابن آدم استسقيتك فلم تسقني قال يا رب كيف أسقيك وأنت رب العالمين قال استسقاك عبدي فلان فلم تسقه أما علمت أنك لو سقيته لوجدت ذلك عندي رواه مسلم

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எங்களை நோக்கி மறுமை நாளில் அல்லாஹ் மனிதனிடம் மனிதனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். நீயோ என்னை நலம் விசாரிக்க வரவில்லையே!” என்று கேட்பான்.

மனிதன் பதைபதைப்போடு என் இறைவனே! நீ தானே அனைத்துலகையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கின்றாய்! உன்னை எப்படி நான் வந்து நலம் விசாரிப்பதுஎன்று கேட்பான்.

அப்போது, அல்லாஹ் இன்ன மனிதன் நோயுற்றிருந்ததை நீ அறிந்திருந்தாய் தானே! ஆனால், அவனது உடல் நலம் பற்றி நீ விசாரிக்கச் செல்லவில்லையே! நீ அவனை நலம் விசாரிக்கச் சென்றிருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்!” என்று கூறுவான்.

மீண்டும், அல்லாஹ் மனிதா! உன்னிடம் நான் உணவு கேட்டேனே? நீ ஏன் எனக்கு உணவு அளிக்கவில்லை?” என்று கேட்பான்.

அதற்கு, மனிதன் அகில உலகங்களின் இரட்சகன் நீ! எப்போது நீ பசியோடு இருந்தாய்? நான் உனக்கு எப்படி உணவளிப்பது?” என்று கேட்பான்.

அப்போது, அல்லாஹ் ““இன்ன மனிதன் பசியோடு இருந்ததை நீ அறிந்திருந்தாய் தானே! ஆனால், அவனது பசியை போக்கிட உணவு கொடுக்க வில்லையே! நீ அவனுக்கு உணவு கொடுத்திருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்!” நீ அவனது தேவையை நிறைவேற்றி இருந்தால் அதற்கான நற்கூலியை இப்போது இங்கு பெற்றிருப்பாய்!” என்று கூறுவான்.

மீண்டும், அல்லாஹ் மனிதா! நான் தாகித்த நிலையில் உன்னிடம் வந்து தண்ணீர் கேட்டேனே? ஏன் எனக்கு நீ குடிக்கத் தண்ணீர் தரவில்லை?” என்று கேட்பான்.

அதற்கு, மனிதன் அகில உலகங்களின் அதிபதி நீ! எப்போது தாகித்திருந்தாய்? உனக்கு எவ்வாறு நான் தண்ணீர் புகட்டுவது?” என்று கேட்பான்.

அப்போது, அல்லாஹ் ““இன்ன மனிதன் தாகத்தோடு இருந்ததை நீ அறிந்திருந்தாய் தானே! ஆனால், அவனது தாகத்தைப் போக்கிட நீ தண்ணீர் கொடுக்க வில்லையே! நீ அவனுக்கு தண்ணீர் கொடுத்து தாகத்தை தீர்த்திருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்!” நீ அவனது தேவையை நிறைவேற்றி இருந்தால் அதற்கான நற்கூலியை இப்போது இங்கு பெற்றிருப்பாய்!” என்று கூறுவான்.
                                                        ( நூல்: முஸ்லிம் )

மனித குலத்திற்கு செய்யும் சேவையை இறைவன் தனக்கு செய்யும் சேவைக்கு ஒப்பாக்கி கூறுவதில் இருந்து மனிதகுல சேவையின் முக்கியத்துவத்தை உணர முடிகின்றது.

6. ஓர் உயிரை வாழ வைப்பதென்பது

وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا

எவர் ஓர் உயிரை வாழ வைக்கின்றாரோ அவர் ஒட்டு மொத்த மனித சமூகத்தையும் வாழ வைத்தவரைப் போன்றவராவார்”.          ( அல்குர்ஆன்: 5: 32 )


                               


மனித நேய மாண்பாளர்களுக்கும், மனித குலத்திற்கு சேவை செய்வோருக்கும் இஸ்லாம் கூறும் சோபனங்கள்

பசித்தவருக்கு உணவளிப்பது, தாகிப்பவருக்கு தண்ணீர் அளிப்பது, ஆடையில்லாதோருக்கு ஆடை கொடுப்பது, உணவு சமைப்பதற்கு உபகரணங்கள் வழங்குவது, இதர இன்றியமையாதத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது மிகச் சிறந்த செயல் எனக் கூறிடும் இஸ்லாம் அதற்காக அபரிமிதமான நன்மைகளை வாரி வழங்குகின்றது.

وعن البراء بن عازب رضي الله عنه قال :جاء أعرابي إلى رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله، علمني عملا يدخلني الجنة. قال :«أعتق النسمة وفك الرقبة، فإن لم تطق ذلك
فأطعم الجائع واسق الظمآن


பர்ரா இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:ஒரு கிராமவாசி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! சுவனத்தில் நுழையச் செய்திடும் ஓர் அமலை எனக்கு அறிவித்துத் தாருங்கள்!என்றார்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள் அடிமையை விடுவிப்பீராக! ஆபத்தில் மாட்டிக் கொண்டிருப்போரை காப்பாற்றுவாயாக! அல்லது அகதிகளை ஆதரிப்பீராக! இவற்றைச் செய்திட உம்மால் இயலவில்லை எனில் பசித்தவருக்கு உணவளிப்பீராக! அல்லது தாகித்தவருக்கு தண்ணீர் வழங்குவீராக!என்று கூறினார்கள். (நூல்:இப்னு ஹிப்பான்) 

وروى أحمد في المسند، والترمذي في السنن عن أبي سعيد الخدري قال: قال رسول الله صلى الله عليه وسلم
 أيما مؤمن أطعم مؤمنا على جوع أطعمه الله يوم القيامة من ثمار الجنة، وأيما مؤمن سقى مؤمنا على ظمأ سقاه الله يوم القيامة من الرحيق المختوم، وأيما مؤمن كسا مؤمن على عري كساه الله من خضر الجنة

அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:எந்த ஒரு இறை நம்பிக்கையாளர் பசித்திருக்கும் ஓர் இறை நம்பிக்கையாளருக்கு உணவளிக்கின்றாரோ, அல்லாஹ் அவருக்கு சுவனத்து கனிகளை மறுமையில் வழங்குவான்.

எந்த ஒரு இறை நம்பிக்கையாளர் தாகித்திருக்கும் ஓர் இறை நம்பிக்கையாளருக்கு தண்ணீர் கொடுக்கின்றாரோ, அல்லாஹ் அவருக்கு ரஹீக்கில் மஃதூமின் நீரை  மறுமையில் புகட்டுவான்.


எந்த ஒரு இறை நம்பிக்கையாளர் ஆடையில்லாதிருந்த ஓர் இறை நம்பிக்கையாளருக்கு அணிய ஆடை கொடுக்கின்றாரோ, அல்லாஹ் அவருக்கு சுவனத்து பட்டாடையை மறுமையில் அணிவிப்பான்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                  ( நூல்: திர்மிதீ )

وروى أحمد في الزهد عن عبد الله بن عبيد بن عمير، قال
 يحشر الناس يوم القيامة أجوع ما كانوا وأعطش ما كانوا وأعرى ما كانوا ، فمن أطعم لله عز وجل أطعمه الله عز وجل ، ومن كسا لله عز وجل كساه الله عز وجل ، ومن سقى لله عز وجل سقاه الله عز وجل ،

அப்துல்லாஹ் இப்னு உபைத் இப்னு அம்ர் (ரலி) அறிவிக்கிற இன்னொரு அறிவிப்பில்இறை நம்பிக்கையாளர் என்ற வார்த்தை இடம் பெறாமல் பொதுவாக அல்லாஹ்விற்காக யார் மேற்கூரிய நற்பணிகளை செய்கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் மேற்கூரிய சோபனங்களை வழங்குவதாக முஸ்னத் அஹ்மதில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

ஆகவே, உலக மாந்தருக்கு சேவை செய்தல், மனித நேயத்தோடும், மனிதாபிமானத்தோடும் நடத்தல் என்கிற மகத்தான பணியை இஸ்லாம் வழிபாடாகவே கருதுகின்றது.

அதற்கென எல்லையில்லா பல நன்மைகளை வாரி வழங்குவதை மேற்கூரிய நபிமொழிகள், மற்றும் வரலாறுகள், திருமறை வசனங்கள் உணர்த்துவதை நம்மால் உணர முடிகின்றது.

எனவே, எல்லா காலத்திலும், எல்லா மனிதர்களிடத்திலும் மனித நேயத்தோடு நடந்து மானுடம் தழைக்க உதவியாளர்களாய் இருப்போம்!

வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் பூமியில் உள்ள எல்லா உயிரினங்களோடும் இரக்கத்தோடும், சேவை உணர்வோடும் நடந்து கொள்ளும் அழகிய பண்பைத் தந்தருள் புரிவானாக!

எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கேரள மக்களை மழை, வெள்ளத்திலிருந்தும், நிலச்சரிவு மற்றும் இதர ஆபத்துகளில் இருந்தும் முழுமையாக பாதுகாப்பானாக!

ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!! வஸ்ஸலாம்!!!