Thursday 17 October 2019

திருமணம் எனும் அருட்கொடை!!!


திருமணம் எனும் அருட்கொடை!!!




சமீப காலமாக முஸ்லிம் சமூகத்தின் குடும்ப அமைப்பில் பெரிய அளவிலான சிதைவுகளும், பிரிவுகளும், பாதிப்புகளும் ஏற்பட்டு வருவதைப் பார்க்க முடிகின்றது.

சில குடும்பங்களில் சொத்துப் பிரச்சனைகள், சில குடும்பங்களில் பெற்றோர் பராமரிப்பில் பிரச்சனை, சில குடும்பங்களில் மாமனார், மாமியார் பிரச்சனை, சில குடும்பங்களில் சகோதர சகோதரிகளிடையே பிரச்சனை.

ஊர் ஜமாஅத், இயக்க அலுவலகம், கட்டப்பஞ்சாயத்து, காவல் நிலையம், நீதி மன்றம் என முஸ்லிம் சமூகம் தீர்வுகளுக்காக அலைந்து கொண்டிருக்கின்றது.

அதிலும் குறிப்பாக சமீபத்திய பத்தாண்டுகளில் கணவன்மனைவி இடையிலான பிரச்சனை பல்கிப் பெருகி இருப்பதை பார்க்க முடிகின்றது.

கணவன்மனைவி இடையிலான பிரச்சனைகள் முற்றி, பூதாகரமாக மாறி தலாக், ஃப்ஸக், ஃகுலா என்று சர்வ சாதாரணமாக முடிவடைவது அதிர்ச்சியைத் தருகின்றது.

இத்தனைக்கும் அந்தப் பிரச்சனையை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் பாரதூரமான இந்த முடிவுக்கும் அந்தப் பிரச்சனைக்கும் எவ்வித தொடர்பும் இல்லாமலிருப்பது ஆச்சர்யத்தையும் வேதனையையும் தருகின்றது.

உறவை உதறித்தள்ளுவதிலும், பிரிந்து போவதிலும் தான் இந்த உம்மத் எவ்வளவு?! அவசரம் காட்டுகிறது என எண்ணத் தோன்றுகிறது.

திருமணம் அது ஆயிரம் காலத்து பயிர் என்றும், திருமணம் அது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்றும் பெருமையோடு தமிழில் பழமொழிகள் கூறுவர்.

ஆனால், இஸ்லாமோநிரந்த சொர்க்க வாழ்வின் துணையை தேர்ந்தெடுத்து இந்த உலகில் இணைவதே திருமணம்என்று இஸ்லாம் திருமண உறவு குறித்து உயர்த்திக் கூறுகின்றது.
ادْخُلُوا الْجَنَّةَ أَنْتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ (70)

நுழைந்து விடுங்கள் சுவனத்தில் நீங்கள் உங்கள் துணைகளோடு, அங்கு நீங்கள் மகிழ்விக்கப்படுவீர்கள்!”                               ( அல்குர்ஆன்: 43: 70 )

மேலும், திருமணத்தின் மூலம் ஏற்படுகிற கணவன்மனைவி எனும் உறவு என்பது அல்லாஹ்வின் மகத்தான படைப்பாற்றலுக்கான அத்தாட்சிகளில் ஒன்றாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

ஆம்! எப்படி மலை, வானம், பூமி, ஆகாயம், வின்வெளி, காற்று, மழை, விண்மீன்கள் மற்றும் இதர படைப்பினங்களை சிந்திக்குமாறு தூண்டுகின்றானோ, அதே போன்று திருமனத்தின் மூலம் ஏற்படும் உறவு குறித்தும் சிந்திக்குமாறு தூண்டுகின்றான்.

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ (21)

மேலும், அவனுடைய சான்றுகளில் இதுவும் ஒன்றாகும். அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே உங்களின் துணைகளைப் படைத்தான்; நீங்கள் அவர்களிடம் அமைதியும், நிம்மதியும் பெறவேண்டும் என்பதற்காக! மேலும், உங்களிடையே அன்பையும் கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறையச் சான்றுகள் இருக்கின்றன”.                    ( அல்குர்ஆன்: 30: 21 )

மேற்கூறிய இறைவசனத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் துணைகள் மூலம் ஓர் ஆணுக்கு பெண் மூலமும், ஒரு பெண்ணுக்கு ஆண் மூலமும் அற்புதமான மூன்று அருட்கொடைகள் கிடைப்பதாக குறிப்பிடுகின்றான்.

1.   ஸகீனத்மனம் மற்றும் புறம் சார்ந்த அமைதி. 2. மவத்தத்நேசம், காதல், பிரியம். 3. ரஹ்மத்கிருபை, கருணை, இரக்கம்.

ஒரு ஆணுக்கு தாய், சகோதரி போன்ற ஏனைய பெண் இன உறவுகளின் மூலம் ஏற்படுகிற புற, மன அமைதிக்கும் துணைவி எனும் உறவின் மூலம் ஏற்படுகிற புற, மன அமைதிக்கும் வித்தியாசம் உண்டு. மேலும், தாய் சகோதரி போன்ற ஏனைய பெண் உறவுகளிடம் ஒரு குறிப்பிட்ட எல்லை, குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான் பேசி பழகி சிரித்து மகிழ முடியும்.

மனைவி எனும் உறவு அப்படியல்ல. அல்லாஹ்வின் நாட்டம் மற்றும் மவ்த் இந்த இரண்டையும் தவிர்த்து வாழ்வின் கடைசி நொடி வரை எந்த எல்லையும், கால வரையறையும் இல்லாமல் பேசி, பழகி சிரித்து மகிழ முடியும்.

அன்னையின் மடி, சகோதரியின் அருகாமை இப்படி பல அம்சங்களில் குறிப்பிட்ட காலவரையறை உண்டு. ஆனால், மனைவி எனும் உறவுக்கு எந்த காலவரையறை கிடையாது.

இது போன்றே உலகில் வேறெந்த பெண் உறவுகளுடனான உரையாடலிலும், அருகாமையிலும், உறவிலும் மனைவி எனும் உறவின் மூலம் அடைகிற அமைதி, நிம்மதியை அடைய முடியாது.

2.   மவத்தத் எனும் நேசமும், காதலும், பிரியமும் கூட அப்படித்தான். மனைவி அல்லாத வேறெந்த உறவை நேசித்தாலும், வேறெந்த உறவும் ஒரு ஆணை நேசித்தாலும் அது மனைவி எனும் உறவை நேசித்தது போன்று, மனைவி எனும் உறவு நேசித்தது போன்று ஆகாது.

3.   ரஹ்மத் எனும் கிருபையும், கருணையும் கூட அப்படித்தான். தாயின் கருணை, சகோதரியின் இரக்கம் உறவுகள் காட்டும் பரிவுகள் இவையனைத்துமே ஏதேனும் ஒரு முன் தொடர்பின் மூலம் ஏற்படுவதாகும்.

ஆனால், மனைவி காட்டும் கருணை, இரக்கம், பரிவு என்பது திருமணத்தின் மூலம் ஏற்படும் கணவன் - மனைவி எனும் உறவின் மூலமே.

இன்னும் சொல்லப்போனால், கணவன் எனும் உறவு ஏற்பட்ட ஒரே காரணம் மட்டுமே இவையனைத்தையும் முழுவதுமாக ஓர் ஆணுக்கு தரவும், வழங்கவும் தூண்டுகின்றது.

( இதை அப்படியே பெண்ணுக்கான உதாரணமாக மாற்றிக் கொள்ளவும் )

எனவே, கணவன்மனைவி உறவு இறை அத்தாட்சிகளில் ஒன்று என்பதும், அது குறித்த சிந்தனை இந்த உம்மத்திற்கு அவசியம் என்பதையும் மேற்கூறிய இறை வசனத்தின் மூலம் விளங்க முடிகின்றது.

இவ்வளவு மகத்துவம் வாய்ந்த திருமண உறவு சமூகத்தில் கசப்பையும், பிரிவையும், சிதவையும், பாதிப்பையும் ஏன் ஏற்படுத்துகின்றது?

அதற்கான காரணங்களை கண்டறிந்து , அவைகளை நடைமுறைப்படுத்தி குடும்ப அமைப்பை சரிசெய்ய வேண்டிய கடமையும், கடப்பாடும் இந்த சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கிறதென்றால் அது மிகையல்ல.

வாருங்கள்! காரணங்களை கண்டறிந்து நடைமுறைப்படுத்தி நிம்மதியான, நிலையான குடும்பம் அமைப்போம்.

ஷரீஆவின் ஒளியில் நாம் உற்று நோக்கினால் முஸ்லிம் சமூகம் அறிந்து கொள்ள வேண்டிய சில அம்சங்கள் இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ள முடிகின்றது.

1.   சரியான துணைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((تُنكح المرأة لأربع: لمالها، ولحسبها، وجمالها، ولدينها، فاظفر بذات الدين تربت يداك)). متفق عليه

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகின்றாள்; அவளுடைய செல்வ வளத்திற்காக, அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப்பற்றுடைய பெண்ணையே தேர்ந்தெடுத்துக் கொள்ளும்! உமக்கு நலமும், சோபனமும் உண்டாகட்டும்!”. ” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                 
                                                                                                                         ( நூல்: முஸ்லிம் )

رواه الترمذي عن أبي هريرة قال
 قال رسول الله صلى الله عليه وسلم: إذا خطب إليكم من ترضون دينه وخلقه فزوجوه، إلا تفعلوا تكن فتنة في الأرض وفساد عريض

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: எவருடைய மார்க்கப் பற்றையும், நற்குணத்தையும் நீங்கள் விரும்புகின்றீர்களோ அத்தகைய மனிதர் உங்களிடம் பெண்கேட்டு வந்தால் அவருக்கு மணமுடித்து கொடுத்து விடுங்கள். நீங்கள் இப்படிச் செய்யாவிட்டால் பூமியில் குழப்பமும் தீமையும் பெருகி விடும்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                                                                 ( நூல்: திர்மிதீ )

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ الْمُحَارِبيُّ ، وَجَعْفَرُ بْنُ عَوْنٍ ، عَنْ الْإِفْرِيقِيِّ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، قَال : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
لَا تَزَوَّجُوا النِّسَاءَ لِحُسْنِهِنَّ ، فَعَسَى حُسْنُهُنَّ أَنْ يُرْدِيَهُنَّ ، وَلَا تَزَوَّجُوهُنَّ لِأَمْوَالِهِنَّ ، فَعَسَى أَمْوَالُهُنَّ أَنْ تُطْغِيَهُنَّ ، وَلَكِنْ تَزَوَّجُوهُنَّ عَلَى الدِّينِ ، وَلَأَمَةٌ خَرْمَاءُ سَوْدَاءُ ذَاتُ دِينٍ أَفْضَلُ

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: பெண்களை அவர்களின் அழகுக்காக மட்டும் திருமணம் முடிக்காதீர்கள்; அவர்களுடைய அழகு அவர்களை அழித்து விடக்கூடும்! பெண்களை அவர்களின் செல்வ வளத்திற்காக மட்டும் திருமணம் முடிக்காதீர்கள்; அவர்களுடைய செல்வம் வரம்பு மீறுவதிலும், அடங்காத தன்மையிலும் அவர்களை ஆழ்த்தி விடக்கூடும்.

மாறாக, மார்க்கப்பற்றின் அடிப்படையில் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள். மார்க்கப்பற்று கொண்ட கருப்பு நிறஅடிமைப் பெண், அல்லாஹ்வின் பார்வையில் வெண்ணிறமுடைய மார்க்கப் பற்றில்லாக் குடும்பப் பெண்ணை விடச் சிறந்தவள் ஆவாள்”. ” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.  ( நூல்: அல் முன்தகா )


ذكره أبو داود في (المراسيل)، حدثنا عمرو بن عثمان وكثير بن عبيد قالا حدثنا بقية بن الوليد قال حدثني الزهري قال: أمر رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بني بياضة أن يزوجوا أبا هند امرأة منهم، فقالوا لرسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
نزوج بناتنا موالينا؟  فأنزل الله عز وجل:" إِنَّا خَلَقْناكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثى وَجَعَلْناكُمْ شُعُوباً" الآية. قال الزهري: نزلت في أبي هند خاصة.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்பனூ பயாளா எனும் கோத்திரத்தார்களிடம் நீங்கள் உங்கள் கோத்திரப் பெண்களில் ஒருவரை அபூ ஹிந்த் (ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுங்கள்என்று கூறினார்கள்.

அதற்கு அம்மக்கள்உயர் குலத்துப் பெண்களான எங்களின் பெண்மக்களில் ஒருவரை எங்களிடம் சேவகம் செய்யும் அடிமை குலத்து வம்சத்தைச் சார்ந்த ஒருவருக்கு நாங்கள் திருமணம் செய்து கொடுக்க வேண்டுமா?” என்று கேட்டனர்.

அப்போது தான் அல்லாஹ் ஹுஜுராத் அத்தியாயத்தின் 13 –ஆவது வசனத்தை இறக்கியருளினான்.                                                                                               ( நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ )
حَدَّثَنِي إسحاق بن منصور {بن بهرام، أبو يعقوب الكوسج نزيل نيسابور (ت: 251 هـ) وهو ثقة}، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ {بن مهدي}، عَنْ سفيان، عن أبي بكر بن أبي الجهم، قال:
 سَمِعْتُ فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ تَقُولُ:
ـ  قَالَتْ فَخَطَبَنِي خُطَّابٌ مِنْهُمْ: مُعَاوِيَةُ وَأَبُو الْجَهْمِ.
ـ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مُعَاوِيَةَ تَرِبٌ خَفِيفُ الْحَالِ وَأَبُو الْجَهْمِ مِنْهُ شِدَّةٌ عَلَى النِّسَاءِ أَوْ يَضْرِبُ النِّسَاءَ أَوْ نَحْوَ هَذَا وَلَكِنْ عَلَيْكِ بِأُسَامَةَ بْنِ زَيْدٍ .

ஃபாத்திமா பிந்த் கைஸ் (ரலி) அவர்கள் அபீ அம்ர் இப்னு ஹஃப்ஸ் இப்னு முஃகீரா (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார்கள்.

கருத்துவேறுபாடு காரணமாக அபீ அம்ர் (ரலி) அவர்கள் ஃபாத்திமா பிந்த் கைஸ் (ரலி) அவர்களை தலாக் சொல்லி விட்டார்கள்.

இத்தா (காத்திருப்பு) காலம் கழிந்து மாநபி {ஸல்} அவர்களின் சபைக்கு சமூகம் தந்த ஃபாத்திமா பிந்த் கைஸ் (ரலி) அவர்கள்என்னை பலர் பெண் கேட்டு வருகின்றார்கள். அதில் முஆவியா (ரலி) அவர்களும், அபுல் ஜஹ்ம் (ரலி) அவர்களும் அடங்குவர். அல்லாஹ்வின் தூதரே! இருவரில் நான் என் வாழ்க்கைத் துணையாக யாரைத் தேர்ந்தெடுப்பது?” என்று கேட்டார்கள்.

அப்போது, மாநபி {ஸல்} அவர்கள்முஆவியா (ரலி) அவர்கள் ஏழ்மையானவர்; அபுல் ஜஹ்ம் (ரலி) அவர்கள் பெண்களிடம் கடுமையான சுபாவம் கொண்டவர்எனவே, உமக்கு இருவரும் வேண்டாம் உமக்கு வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுக்குமாறு உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களைப் பரிந்துரைக்கின்றேன்என்றார்கள்.
قَالَتْ فَتَزَوَّجْتُهُ فَشَرَّفَنِي اللَّهُ بِأَبِي زَيْدٍ وَكَرَّمَنِي اللَّهُ بِأَبِي زَيْدٍ.

ஃபாத்திமா பிந்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “நான் மாநபி {ஸல்} அவர்களின் பரிந்துரையை ஏற்று, உஸாமா (ரலி) அவர்களை வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுத்தேன். அல்லாஹ் என்னை உஸாமா (ரலி) அவர்களின் மூலம் கண்ணியப் படுத்தினான். அல்லாஹ் என்னை உஸாமா (ரலி) அவர்களின் மூலம் மேன்மை ஆக்கினான்”.                                  ( நூல்: ஸியரு அஃலா மின் நுபலா )

இத்தனைக்கும் முஆவியா (ரலி) அவர்கள் அன்று பெருமானார் {ஸல்} அவர்களுக்கு அருளப்படும் வசனங்களை எழுதும், பாதுகாக்கும்காதிபுல் வஹீபொறுப்பில் இடம் பெற்று இருந்தார்கள்.

அபுல்ஜஹ்ம் (ரலி) அவர்கள் மார்க்கம், செல்வம், செல்வாக்கு, பாரம்பர்யம், என அத்துனை தகுதிகளும் பெற்றிருந்தார்கள்.

என்றாலும், ஃபாத்திமா பிந்த் கைஸ் (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைத்துணையாக இருப்பதற்கு தோதுவானவர்களா? என்று மாநபி {ஸல்} அவர்கள் பார்த்தார்கள்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ ، عَنْ أَبِيهِ ، قَالَ : " خَطَبَ أَبُو بَكْرٍ ، وَعُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَاطِمَةَ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( إِنَّهَا صَغِيرَةٌ ) ، فَخَطَبَهَا عَلِيٌّ ، فَزَوَّجَهَا مِنْهُ ) رواه النسائي (3221)

அப்துல்லாஹ் இப்னு புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் ஃபாத்திமா (ரலி) அவர்களை திருமணம் செய்வதற்காக பெண் கேட்டார்கள். அப்போது மாநபி {ஸல்} அவர்கள்ஃபாத்திமா (ரலி) உங்களை விட வயதில் மிகவும் சிறியவள்என்று கூறி திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டார்கள். அதன் பிறகு அலீ (ரலி) அவர்கள் பெண் கேட்க, அலீ (ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள்.                  ( நூல்: நஸாயீ )

அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் மார்க்கம், செல்வம், பாரம்பர்யம், அழகு என அத்துனை அம்சங்களிலும் முழுமை பெற்றிருந்தாலும் கூட ஃபாத்திமா (ரலி) அவர்களின் வயதைக் காட்டிலும் இருவரும் பத்து பதினைந்து வயது அதிகமுடையவர்களாக இருந்தார்கள்.

மேற்கூறிய நபிமொழிகளும், நிகழ்வுகளும் மார்க்க அறிவு, மார்க்கப்பற்று, நற்குணம், நல்லொழுக்கம், பாரம்பர்யம், வயது என அந்தந்த மணாளருக்கு தோதுவான துணைகளை தேர்ந்தெடுத்து மணமுடித்து வைக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றது.

வெறுமெனே பணம், அழகு, குடும்பப்பாரம்பர்யம் என்று பார்ப்பதில் எவ்வித பயனுமில்லை என்பதையும் உணர்த்துகின்றது.

2. நல்ல துணை அமைவது இருபாலருக்கும் இன்றியமையாத ஒன்றாகும்..

இபாதுர்ரஹ்மான்ரஹ்மானின் அடியார்களின் சிறப்புப் பண்புகளில் ஒன்றாக குர்ஆன் விமர்சிக்கும் போது

وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا ()

எங்கள் இறைவனே! எங்கள் துணைகளையும், எங்கள் குழந்தைகளையும் எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக! மேலும், எங்களை இறையச்சமுடையோருக்குத் தலைவர்களாய் திகழச் செய்வாயாக!.”                                              

                                                                                                                                                 ( அல்குர்ஆன்: 25:74 )

دعاء سيدنا داود(عليه السلام) مناجياً ربه
 اللهم إني أسألك أربعا أسألك لساناً ذاكراً
 وقلباً شاكراً وبدناً على البلاء صابراً وزوجةً تعينني على أمر ديني ودنياي

இறைத்தூதர் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது, “அல்லாஹ்வே! உன்னிடத்தில் நான்கு விஷயத்தைக் கேட்கின்றேன். அல்லாஹ்வே! உன்னை நினைவு கூர்கிற நாவையும், உனக்கு நன்றி செலுத்துகிற இதயத்தையும், சோதனைகளை தாங்குகிற உடலையும், உலக காரியங்களிலும், தீனுடைய விஷயங்களிலும் உதவியாக இருக்கும் ஸாலிஹான நல்ல மனைவியையும் உன்னிடத்தில் கேட்கின்றேன்”. (நூல்: தன்பீஹுல் ஃகாஃபிலீன்)

روى ابن حبان في صحيحه (4032) وأحمد في مسنده (1448) عن سعد بن أبي وقاص رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال : ( أربع من السعادة : المرأة الصالحة ، والمسكن الواسع ، والجار الصالح ، والمركب الهنيء

ஒரு மனிதனின் வாழ்க்கையில் நான்கு விஷயங்கள்ஸாலிஹான நல்ல மனைவி, விசாலமான வீடு, ஸாலிஹான நல்ல அண்டை வீட்டுக்காரன், நல்ல வாகனம் நல்லவைகளாக அமைந்து விட்டால் இந்தப் பூமியிலேயே அவன் தான் பாக்கியவான் ஆவான்என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.      (நூல்:பைஹகீ)

1.   ஏழ்மை வாழ்க்கையை பொருந்திக் கொண்டு, கணவனின் முடிவைப் பொருந்திக் கொள்ளும் வாழ்க்கைத் துணைவி

وفد على أمير المؤمنين بعض من يثق بهم من أهل حمص فقال لهم : اكتبوا لى أسماء فقرائكم حتى أسد حاجتهم  فرفعوا كتابا فإذا فيه : فلان وفلان وسعيد بن عامر فقال : ومن سعيد بن عامر ! فقالوا : أميرنا قال : أميركم فقير ! قالوا : نعم ووالله إنه لتمر عليه الأيام الطوال ولا يوقد فى بيته نار فبكى عمر حتى بللت دموعه لحيته ثم عمد إلى ألف دينار فجعلها فى صرة وقال : اقرؤوا عليه السلام منى وقولوا له : بعث إليك أمير المؤمنين بهذا المال لتستعين به على قضاء حاجاتك .
جاء الوفد لسعيد بالصرة فنظر إليها فإذا هى دنانير فجعل يبعدها عنه وهو يقول : إنا لله وإنا إليه راجعون كأنما نزلت به نازلة أو حل بساحته خطب فهبت زوجته مذعورة وقالت : ما شأنك يا سعيد ؟ أمات أمير المؤمنين، قال : بل أعظم من ذلك، قالت : أأصيب المسلمون فى وقعة، قال : بل أعظم من ذلك، قالت : وما أعظم من ذلك، قال : دخلت على الدنيا لتفسد آخرتى وحلت الفتنة فى بيتى قالت : تخلص منها وهى لا تدرى بأمر الدنانير شيئا، قال : أوتعينينى على ذلك قالت : نعم  فأخذ الدنانير فجعلها فى صرر ثم وزعها على فقراء المسلمين .

ஸயீத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள், நபிகளாரின் தோழர்களில் குறிப்பிடும் படியான வாழ்விற்கும், புகழுக்குரிய வாழ்விற்கும் சொந்தக்காரர் ஆவார்கள்.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்று ஒன்று மிகப் பிரபல்யமானது. ஒரு மாகாணத்தின் ஆளுநராக இருந்த போதும் மதீனாவில் தமக்கென சொந்த வீடு கூட இல்லாத நிலையில் தம் வாழ்க்கையை வாடகை வீட்டில் கழித்தவர் ஸயீத் (ரலி) அவர்கள்.

ஒரு முறை ஹிம்ஸ் ன் முக்கிய பிரதிநிதிகள் ஸயீத் (ரலி) அவர்களைச் சந்திக்க வருகை புரிந்திருந்தனர்.

வந்தவர்கள் ஒரு பணமுடிப்பை ஸயீத் (ரலி) அவர்களின் கையில் கொடுத்து இதை கலீஃபா உமர் (ரலி) அவர்கள் தங்களிடம் கொடுக்கச் சொன்னார்கள்  என்றனர்.

இதைக் கேட்டதும் ஸயீத் (ரலி) அவர்கள் இன்னா லில்லாஹி.. வஇன்னா இலைஹி ராஜிவூன்...என்றார்கள்.

இந்த வார்த்தையை உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஸயீத் (ரலி) அவர்களின் துணைவியார் இங்கே நடந்த சம்பவங்கள் தெரியாததால் என்ன கலீஃபா உமர் (ரலி) அவர்கள் இவ்வுலகை விட்டு சென்று விட்டார்களா?என்று கேட்டார்கள்.

இல்லை, இல்லை அதை விட மிகப் பெரிய சோதனை ஒன்று என்னை பீடித்துள்ளதுஎன்று ஸயீத் (ரலி) கூறினார்கள்.

யாராவது பெரும் படையுடன் முஸ்லிம்களை தாக்க வருகை தந்து விட்டார்களா?என அவர்களின் துணைவியார் கேட்க, இல்லை இல்லை அதை விட பெரும் சோதனை என்றார்கள்.

அப்படி என்னதான் பெரும் சோதனை உங்களை வந்தடைந்து விட்டது? கொஞ்சம் சொல்லுங்களேன்இது அவர்களின் துணைவியார்.

நான் உன்னிடம் சொன்னால் அந்த விஷயத்தில் எனக்கு உறுதுணையாக இருப்பாய் என்று நீ உறுதி அளித்தால் நான் உனக்கு சொல்கின்றேன்  இது ஸயீத் (ரலி) அவர்கள்.

உறுதியளித்ததும், ஸயீத் (ரலி) அவர்கள் சம்பவத்தை கூறினார்கள்.

கலீஃபா உமர் (ரலி) அவர்களைப் பார்க்க ஹிம்ஸ் மாகாணத்தின் முக்கியஸ்தர்கள் மதீனா வந்திருந்த சமயம் அது. பல்வேறு விஷயங்களை பரிமாறிய பின்னர் கலீஃபா உமர் (ரலி) அவர்கள் ஹிம்ஸ் பகுதியின் ஏழைகளின் பட்டியலை தாருங்கள் நாம் அவர்களின் துயர் துடைத்திட பண உதவி அளிக்கின்றோம்  என்றார்கள்.

அங்கேயே பட்டியலை தயார் செய்து உமர் (ரலி) அவர்களிடத்தில் ஒப்படைத்தனர் ஹிம்ஸின் பிரதிநிதிகள்.

பட்டியலின் முதல் பெயரை உமர் (ரலி) அவர்கள் வாசிக்கின்றார்கள் ஸயீத் இப்னு ஆமிர் என்றிருந்தது. யார் இந்த ஸயீத் என்று கலீஃபா வினவ, அதுவா நம்ம ஹிம்ஸின் ஆளுநர் ஸயீத் (ரலி) அவர்கள் தான்  என்று பிரதிநிதிகள் கூற உமர் (ரலி) அவர்கள் தாரை தாரையாய் கண்ணீர் வடித்தார்கள்.

பின்பு ஒரு பண முடிப்பை கொடுத்து இதை உங்கள் ஆளுநர் ஸயீத் (ரலி) அவர்களிடம் கலீஃபா உமர் தந்தார் என்று சொல்லி கொடுத்து விடுங்கள் என்றார்கள் உமர் (ரலி) அவர்கள்.

அந்த பணத்தை தான் இப்போது பெரும் சோதனை என்று சொல்லி தம் மனைவியிடம் புலம்பிக்கொண்டிருந்தார்கள்.

பின்பு ஹிம்ஸ் பகுதியின் ஏழைகளை அழைத்து அந்த பணத்தை அப்போதே பங்கு வைத்து கொடுத்து விட்டார்கள்.

கொஞ்சம் நமக்கு எடுத்து விட்டு கொடுத்திருக்கலாமே என்று அவர்களின் துணைவியார் கூறிய போது நம் தேவைகளை நிறைவேற்ற அல்லாஹ்வே எப்போதும் போதுமானவன். என்று ஸயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.   (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:156)

2.   செல்வ நிலையின் போது கணவரின் நலம் நாடும் மனைவி

عن زينب الثقفية امرأة عبد الله بن مسعود رضي الله عنهما قالت: قال: رسول الله صلى الله عليه وسلم: تصدَّقنَ يا مَعْشَرَ النساءِ، ولو من حليكنَّ. قالت: فرجعت إلى عبد الله بن مسعود فقلت: إنك رجل خفيف ذات اليد، وإن رسول الله صلى الله عليه وسلم قد أمرنا بالصدقة، فائته فاسأله فإن كان ذلك يجزئ عني وإلا صرفتها إلى غيركم؟ فقال عبد الله: بل ائته أنت، فانطلقتُ فإذا امرأة من الأنصار بباب رسول الله صلى الله عليه وسلم مثل حاجتها حاجتي، وكان رسول الله صلى الله عليه وسلم قد ألقيت عليه المهابة، فخرج علينا بلال رضي الله عنه فقلنا له: ائت رسول الله صلى الله عليه وسلم فأخبره أن امرأتين بالباب يسألانك، أتجزئ الصدقة عنهما على أزواجهما وعلى أيتام في حجورهما؟ ولا تخبره من نحن. قالت: فدخل بلال على رسول الله صلى الله عليه وسلم فسأله؟ فقال له رسول الله صلى الله عليه وسلم: من هما؟ فقال: امرأة من الأنصار، وزينب، فقال رسول الله صلى الله عليه وسلم: أي الزيانب؟ قال: امرأة عبد الله بن مسعود. فقال رسول الله صلى الله عليه وسلم: لهما أجران أجر القرابة وأجر الصدقة

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் மனைவி ஜைனப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் எங்களிடையே உரை நிகழ்த்திய பெருமானார் {ஸல்} அவர்கள்அன்ஸாரிப் பெண்களே! அல்லாஹ்வின் பாதையில் தான தர்மம் வழங்குங்கள்! உங்களின் ஆபரணங்களாக இருப்பினும் சரியே!” என்று கூறினார்கள்.

உரை முடிந்து வீட்டுக்கு வந்த நான் என் கணவரிடம் மாநபி {ஸல்} நிகழ்த்திய உரை குறித்து கூறிவிட்டு, “உங்களுக்கு நான் ஸதகாச் செய்யலாமா? என்று கேட்டு வாருங்கள். செய்யலாம் என்றால், உங்களுக்கே நான் தந்து விடுகின்றேன். செய்யக் கூடாது என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறினால் பிறருக்கு நான் அதை கொடுத்து விடுகின்றேன்என்றேன்.

இதைக் கேட்ட என் கணவர் (வெட்கத்தின் காரணமாக) மாநபி {ஸல்} அவர்களிடம் சென்று கேட்க மறுத்து, என்னைப் பார்த்து நீயே சென்று கேள்!” என்றார்கள்.

நானும் பெருமானார் {ஸல்} அவர்களைச் சந்தித்து விளக்கம் கேட்பதற்காக மாநபியின் மஸ்ஜிதுக்கு சென்றேன். அங்கு என்னைப் போன்றே விளக்கம் கேட்க அன்ஸாரிப் பெண்களில் சிலர் வந்திருந்தனர்.

அப்போது நானும் ஒரு அன்ஸாரிப் பெண்மனியும் பெருமானார் {ஸல்} அவர்களைச் சந்தித்து விளக்கம் கேட்க ஆயத்தமாகி, மேலாடையை போர்த்திக் கொண்டிருக்கும் போது உள்ளே இருந்து பிலால் (ரலி) அவர்கள் வந்தார்கள்.

பிலால் (ரலி) அவர்களிடம், நானும், அன்ஸாரிப் பெண்மனியும் வந்த விவரத்தைக் கூறி, நாங்கள் யார் என்கிற விவரத்தை மாநபி {ஸல்} அவர்களிடம் தெரிவிக்காமல் விளக்கம் கேட்டு வந்து சொல்லுமாறு கூறினோம்.

பிலால் (ரலி) அவர்கள் மாநபி {ஸல்} அவர்களிடம்அன்ஸாரிப் பெண் ஒருவரும், ஜைனப் (ரலி) அவர்களும் உங்களிடம் இன்னின்னவாறு விளக்கம் கேட்டு என்னை அனுப்பினார்கள்என்றார்கள்.

அதற்கு, பெருமானார் {ஸல்} அவர்கள் எந்த ஜைனப்? என்று கேட்க, பிலால் (ரலி) அவர்கள் என்னைப் பற்றிக் கூறினார்கள்.
அப்போது, மாநபி {ஸல்} அவர்கள் பிலாலே! அவ்விருவரிடமும் சென்று  தாராளமாக கணவருக்கு கொடுக்கலாம். மேலும், அவர்களுக்கு ஸதகாவின் கூலி, உறவை ஆதரித்த கூலி என இரண்டு வகையான கூலிகள் கிடைக்கும் என்று சொல்லி விடுங்கள்!” என கூறினார்கள்.                          ( நூல்: முஸ்லிம் )

தம் கணவரின் மீது நலம் நாடுகிற நல்ல மனைவியாக ஜைனப் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

3.   நல்ல மனைவியை பெற்றவர்கள் பாக்கியவான்களே!..

இஸ்மாயீல் {அலை} அவர்கள் பருவ வயதை அடைந்த போது, இப்ராஹீம் {அலை} அவர்கள் அருகில் இல்லாத காரணத்தால் இஸ்மாயீல் {அலை} அவர்களுக்கு பெண்பார்த்து ஹாஜார் {அலை} அவர்களே மணமுடித்து வைத்தார்கள்.

روى سعيد بن جبير عن ابن عباس رضي الله عنهما قال : لما أتى إبراهيم عليه وسلم بإسماعيل وهاجر ووضعهما بمكة ، وأتت على ذلك مدة ، ونزلها الجرهميون وتزوج إسماعيل منهم امرأة وماتت هاجر ، واستأذن إبراهيم سارة أن يأتي هاجر ، فأذنت له وشرطت عليه أن لا ينزل فقدم إبراهيم مكة ، وقد ماتت هاجر ، فذهب إلى بيت إسماعيل فقال لامرأته : أين صاحبك ؟ قال ذهب للصيد وكان إسماعيل عليه السلام يخرج من الحرم فيصيد ، فقال لها إبراهيم : هل عندك ضيافة ؟ قالت ليس عندي ضيافة ، وسألها عن عيشهم ؟ فقالت : نحن في ضيق وشدة ، فشكت إليه فقال لها : إذا جاء زوجك فأقرئيه السلام وقولي له فليغير عتبة بابه ، فذهب إبراهيم فجاء إسماعيل فوجد ريح أبيه فقال لامرأته : هل جاءك أحد ؟ قالت : جاءني شيخ صفته كذا وكذا كالمستخفة بشأنه قال فما قال لك ؟ قالت قال أقرئي زوجك السلام وقولي له فليغير عتبة بابه ، قال ذلك أبي وقد أمرني أن أفارقك الحقي بأهلك ، فطلقها وتزوج منهم أخرى ، فلبث إبراهيم ما شاء الله أن يلبث ، ثم استأذن سارة أن يزور إسماعيل فأذنت له وشرطت عليه أن لا ينزل ، فجاء إبراهيم عليه السلام حتى انتهى إلى باب إسماعيل فقال [ ص: 148 ] لامرأته أين صاحبك ؟ قالت ذهب يتصيد وهو يجيء الآن إن شاء الله ، فانزل يرحمك الله ، قال : هل عندك ضيافة ؟ قالت : نعم فجاءت باللبن واللحم ، وسألها عن عيشهم ؟ فقالت : نحن بخير وسعة ، فدعا لهما بالبركة ولو جاءت يومئذ بخبز بر أو شعير وتمر لكانت أكثر أرض الله برا أو شعيرا أو تمرا ، فقالت له : انزل حتى أغسل رأسك ، فلم ينزل فجاءته بالمقام فوضعته عن شقه الأيمن فوضع قدمه عليه فغسلت شق رأسه الأيمن ثم حولت إلى شقه الأيسر فغسلت شق رأسه الأيسر فبقي أثر قدميه عليه ، فقال لها : إذا جاء زوجك فأقرئيه السلام وقولي له قد استقامت عتبة بابك ، فلما جاء إسماعيل ، وجد ريح أبيه فقال لامرأته : هل جاءك أحد ؟ قالت : نعم شيخ أحسن الناس وجها وأطيبهم ريحا ، وقال لي كذا وكذا وقلت له كذا وكذا ، وغسلت رأسه وهذا موضع قدميه فقال : ذاك إبراهيم النبي أبي ، وأنت العتبة أمرني أن أمسكك .

குழந்தை இஸ்மாயீல் (வளர்ந்து) வாலிபரானார். ஜுர்ஹும் குலத்தாரிடம் இருந்து அவர் அரபு மொழியை கற்றுக்கொண்டார். அவர் வாலிபரான போது அவர்களுக்கு பிரியமானவராகவும் அவர்களுக்கு மிக விரும்பமானவராகவும் ஆகிவிட்டார்.

பருவ வயதை அவர் அடைந்த போது அவருக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர். இஸ்மாயீலின் தாயார் (ஹாஜர்) இறந்துவிட்டார்.

இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்துக் கொண்ட பின்பு இப்ராஹீம் (அலை) அவர்கள் தாம் விட்டுச் சென்ற (தம் மனைவி மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துக் கொள்வதற்காக (திரும்பி) வந்தார்கள்.

அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை. ஆகவே இஸ்மாயீல் மனைவியிடம் இஹ்மாயீலை குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர் எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார்.
பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள்.

அதற்கு அவர் நாஙகள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம் என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிட்டார்.

உடனே இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி சொல் என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது எவரோ வந்து சென்றிருப்பது போல் உணர்ந்தார்கள்.

ஆகவே எவரேனும் உங்களிடம் வந்தார்களா என்று கேட்டார்கள். அவருடைய மனைவி ஆம் இப்படிப்பட்ட (அடையாளஙகள் கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார் எங்களிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விவரம்) தெரிவித்தேன்.
என்னிடம் உஙகள் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் அவரிடம் நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம் என்று சொன்னேன் என்று பதிலளித்தார்.

அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா என்று கேட்க அதற்கு அவர் ஆம் உங்களுக்கு தன் சார்பாக சலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு உன் நிலைப்படியே மாற்றிவிடு என்று (உஙகளிடம் சொல்லச்) சொன்னார் என்று பதிலளித்தார்.

இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தைதான். உன்னைவிட்டு பிரிந்து விடும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார். ஆகவே நீ உன் (தாய்) வீட்டாருடன் போய் சேர்ந்துக்கொள் என்று சொல்லிவிட்டு உடனே அவரை விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார்.
பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவன் நாடிய காலம் வரை அவர்களை (ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்.

அதன் பிறகு அவர்களிடம் சென்றார். ஆனால் இஸ்மாயீல் (அலை) அவர்களை (இந்த முறையும்) அவர் (அஙகு) காணவில்லை. ஆகவே இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவர் எங்களுக்காக வருமானம் தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் நீஙகள் எப்படியிருக்கிறீர்கள் (நலம்தானா) என்று கேட்டார்கள். மேலும் அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார். அதற்கு இஸ்மாயீலின் துணைவியார் நாஙகள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமாக அல்லாஹ்வைப் புகழ்ந்தார்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் உஙகள் உணவு எது என்று கேட்க அவர் இறைச்சி என்று பதிலளித்தார். அவர்கள் உஙகள் பானம் எது என்று கேட்க தண்ணீர் என்று பதிலளித்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும் தண்ணீரிலும் பரக்கத்தை அருள் வளத்தை அளிப்பாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தாணியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் அருள் வளம் தரும்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித்திருப்பார்கள்.

ஆகவே தான் மக்காவைத் தவிர பிற இடங்களில் அவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாக பயன்படுத்தி வருபவர்களுக்கு அவை ஒத்தக்கொள்வதே இல்லை என்று சொன்னார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவன் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் உரை. அவரது (வீட்டு) நிலைப்படியை உறுதிபடுத்தி வைக்கும்படி சொல் என்று சொன்னார்கள்.

இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்த போது உங்களிடம் எவரேனும் வந்தார்களா என்று கேட்க அவருடைய மனைவி ஆம் எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார் என்று (சொல்லிவிட்டு) அவரை புகழ்ந்தார். (பிறகு தொடர்ந்து) என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் நாங்கள் நலமுடன் இருக்கிறோம் என்று தெரிவித்தேன் என்று பதில் சொன்னார்.

அவர் உனக்கு அறிவுரை ஏதேனும் சொன்னாரா என்று இஸ்மாயீல் (அலை) கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் உஙகளுக்கு சலாம் உரைக்கிறார் உஙகள் நிலைப்படியை உறுதிப்பபடித்திக் கொள்ளும்படி உஙகளுக்கு கட்டளையிடுகின்றார் என்று சொன்னார்.

இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தை நீ தான் அந்த நிலைப்படி உன்னை (விவாகரத்து செய்யாமல்) அப்படியே மணைவியாக வைத்தக் கொள்ளும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளான் என்று சொன்னார்கள்.

பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ் நாடிய காலம் வரை அவர்களை(ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்கள்.                              ( நூல்: தஃப்ஸீர் அல் பஃக்வீ, அத்தபரீ )

ஆக திருமணத்தின் மூலம் உண்டாகிற கணவன்மனைவி உறவு எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது என்பதை மேற்கூறிய இறைவசனங்கள், இறைத்தூதர் {ஸல்} அவர்களின் வாக்குகள், நிகழ்வுகள் மூலம் நன்கு உணர முடிகின்றது.

இன்றைய காலத்தில் தம்பதியராய் திருமண பந்தத்திற்குள் நுழையும் இன்றைய இளம் தலைமுறையினர் திருமண உறவின் மகத்துவத்தை உணர்ந்து தான் திருமண பந்தத்தில் இணைகிறார்களா? என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

திருமணத்திற்கு முன்பாக இல்லற வாழ்க்கை குறித்த அடிப்படை அம்சங்களை கவுன்சிலிங் என்கிற கலந்துரையாடல் மூலம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது காலத்தின் கட்டாயம் ஆகும்.

ஆகவே, தான் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை ஒவ்வொரு மஹல்லாவிலும் திருமணத்தை எதிர் நோக்கி இருக்கும் ஒவ்வொரு மணாளருக்கும் கவுன்சிலிங் அவசியம் தர வேண்டும் என்று உலமாக்கள் மற்றும் உமராக்களை வலியுறுத்தி கடந்த செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தீர்மானம் தீட்டி நடைமுறை படுத்துமாறு கேட்டிருக்கின்றது.

அதன் அடிப்படியில் திருமணத்திற்கு முன்பாக நாம் நம் இளைய தலைமுறையினருக்கு கவுன்சிலிங் வழங்கி, எதிர்கால குடும்பப் பிரச்சனைகளில் இருந்து அவர்களை பாதுகாப்போம்!

இன்ஷாஅல்லாஹ்… இதன் தொடர்ச்சி அடுத்த வாரம் பதிவு செய்யப்படும்.

என்றென்றும் உங்கள் துஆவின் ஆதரவில்…
மௌலவி, ஹாஃபிள் N. S. M பஷீர் அஹமது உஸ்மானி