Thursday, 29 July 2021

 இறை உதவியைச் சமீபமாக்கும்

 மூன்று அடிப்படை அம்சங்கள்!!!

 

 


 

மனித வாழ்க்கையின் எல்லா காலத்திலும், எல்லா நிலைகளிலும் இறைவனின் உதவி என்பது இன்றியமையாத ஒன்றாகும்.

இறைவனின் உதவி இன்றி இந்த உலகத்தில் மட்டுமல்ல, மண்ணறையிலும், மறுமையிலும் ஈடேற்றம் பெற முடியாது.

மனித சமூகம் வாழத்துவங்கிய நாள் முதற்கொண்டு எல்லா காலத்திலும் வாழ்ந்த அனைத்து இறைத்தூதர்களும், அவர் தம் சமூக மக்களும் இறை உதவியை எதிர் பார்த்து வாழ்ந்ததாகவும், இறைவனின் புறத்திலிருந்து அவர்களுக்கு உதவி செய்யப்பட்டதாகவும் வான்மறையில் வல்லோன் அல்லாஹ் பல இடங்களில் குறிப்பிடுகின்றான்.

இதைப் பின் வரும் வசனங்களின் மூலம் அல்லாஹ் உணர்த்துகின்றான்.

 

أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ (214)

உங்களுக்கு முன் சென்றுவிட்ட (இறை நம்பிக்கையுடைய) வர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற நிலை உங்களுக்கு வராமலேயே நீங்கள் சுவனத்தில் நுழைந்து விடலாமென்று எண்ணிக் கொண்டிருக்கின்றீர்களா? இன்னல்களும், இடுக்கண்களும் அவர்களை அலைக்கழித்தன.

அன்றைய காலத்தில் அவர்களுடன் வாழ்ந்த இறைத்தூதர்களும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் அல்லாஹ்வுடைய உதவி எப்போது வரும்?” என்று ( அழுது புலம்பிக் ) கேட்கும் வரை அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்.

அப்பொழுது அவர்களுக்கு இவ்வாறு ஆறுதல் கூறப்பட்டது! இதோ! அல்லாஹ்வின் உதவி மிக அண்மையில் இருக்கின்றது என்று”. ( அல்குர்ஆன்: 2:214 )

யுத்தகளத்தின் நடுவே இறை உதவியை கேட்டு அனுபவித்த சமூகம்...

மூஸா (அலை) அவர்களுக்குப் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சி இது. இஸ்ரவேல் சமூகம் அநீதத்திற்கு உள்ளாக்கப்பட்ட காலகட்டம். அவர்கள் தம்மை ஊரை விட்டும் விரட்டியவர்களுக்கு எதிராகப் போராட ஒரு தலைமையை எதிர்பார்த்தனர். அவர்கள் தமது நபியிடம் இதனைக் கேட்டனர். பின்னர், அல்லாஹ் தாலூத் என்பவர் தலைவராக இருந்து வழிநடத்துவார் என்று நபியின் மூலம் பிரகடனப்படுத்தினான்.

فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِالْجُنُودِ قَالَ إِنَّ اللَّهَ مُبْتَلِيكُمْ بِنَهَرٍ فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّي وَمَنْ لَمْ يَطْعَمْهُ فَإِنَّهُ مِنِّي إِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِيَدِهِ فَشَرِبُوا مِنْهُ إِلَّا قَلِيلًا مِنْهُمْ فَلَمَّا جَاوَزَهُ هُوَ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ قَالُوا لَا طَاقَةَ لَنَا الْيَوْمَ بِجَالُوتَ وَجُنُودِهِ قَالَ الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو اللَّهِ كَمْ مِنْ فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ اللَّهِ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ (249) وَلَمَّا بَرَزُوا لِجَالُوتَ وَجُنُودِهِ قَالُوا رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ (250) فَهَزَمُوهُمْ بِإِذْنِ اللَّهِ وَقَتَلَ دَاوُودُ جَالُوتَ وَآتَاهُ اللَّهُ الْمُلْكَ وَالْحِكْمَةَ وَعَلَّمَهُ مِمَّا يَشَاءُ وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَفَسَدَتِ الْأَرْضُ وَلَكِنَّ اللَّهَ ذُو فَضْلٍ عَلَى الْعَالَمِينَ

பின்னர் தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது நிச்சயமாக அல்லாஹ் உங்களை ஓர் ஆற்றின் மூலம் சோதிப்பான். எவரேனும் அதில் அருந்தினால் அவர் என்னைச் சார்ந்தவரல்லர். யார் அதில் அருந்தவில்லையோ அவர் என்னைச் சார்ந்தவராவார். எனினும் தன் கையளவு அள்ளி (அருந்தி)யவரைத் தவிர என்று கூறினார். அவர்களில் சொற்பமானவர் களைத் தவிர (மற்ற) அனைவரும் அதிலிருந்து அருந்தினர். பின்னர் அவரும் அவருடன் நம்பிக்கை கொண்டோரும் அதைக் கடந்து சென்ற போது, ‘ஜாலூத்துடனும் அவரது படையுடனும் (போராட) இன்று எமக்கு எந்த வலிமையும் இல்லைஎன்று (அவர்களில் சிலர்) கூறினர். நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதியாக நம்பிக்கை கொண்டோர், ‘எத்தனையோ சிறு படைகள் பெரும் படைகளை அல்லாஹ்வின் உதவியினால்; வெற்றி கொண்டுள்ளனவே!எனக் கூறினர். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.

படைகளை நோக்கி முன்னேறும்போது எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக. எங்களை உறுதியாக்குவாயாக. இக்கொடிய மக்களை எதிர்கொள்ளும் சக்தியை எங்களுக்குத் தந்தருள்வாயாக. எங்களுக்கு வெற்றியை நல்கி உதவி புரிவாயாகஎனக் கூறி தாலூத் பிரார்த்தித்தார்.   

மோதல் ஆரம்பமானது. படையோடு படையாகப் போரிடாமல் வலுவானவர் முன் வந்து எதிரிப் படையில் இருக்கும் வலுவானவரோடு போராட வேண்டும் என்று முடிவானது. இப்படியே மோதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, ஜாலூத் படைகளுக்கு முன்னால் தோன்றி என்னை எதிர்கொள்ளும் வலிமையும் துணிவும் உங்களில் யாருக்கு உள்ளதுஎன்று ஆணவத்துடன் கேட்டான்.

அவன் உருவத்தைக் கண்டவுடன் எல்லோருமே பின்வாங்கினார்கள். ஆனால் மிகச் சிறிய உருவமான தாவூத் (அலை) அரசர் தாலூத்திடம் அனுமதி பெற்று முன்வந்தார்கள் நான் இருக்கிறேன் உன்னை வீழ்த்தஎன்று நம்பிக்கையுடன் முழங்கினார்கள்.

தாவூத் (அலை) அவர்களைக் கண்ட ஜாலூத் உரக்கச்சிரித்தான் நீ என்னை வீழ்த்துவதா? போய் உன் வீட்டின் பெரியவர்களை வரச்சொல்என்றான். தாவூத் (அலை) மனம் தளராமல் உனக்கு என்னைக் கண்டு பயமா?” என்று கேட்டார்கள்.

கோபம் தலைக்கேறிய ஜாலூத் காளையைப் போல் சீறிப் பாய்ந்து வந்தான்.

ذكروا في الإسرائيليات: أنه قتله بمقلاع كان في يده رماه به فأصابه فقتله

பழங்களையும் சிறு விலங்குகளையும் அடித்து உண்ணப் பயன்படுத்தும் உண்டிகோலை சிறப்பாகப் பயன்படுத்தத் தெரிந்த தாவூத் (அலை), ஜாலூத்தின் நெற்றிப்பொட்டை சரியாகக் குறி பார்த்து ஓங்கி அடித்தார்கள். அதைச் சிறிதும் எதிர்பாராத ஜாலூத்தின் தலையில் கல் மோதி அவன் உயிரற்றுக் கீழே சாய்ந்தான்.

இதைக் கண்ட அவனது படையினர் பயந்து ஓடலானார்கள். இஸ்ராயீலர்கள் அந்தப் படையை மிகச் சுலபமாக வென்றுவிட்டார்கள். ( அல்குர்ஆன்: 2: 249-251 )

மரணத்தின் விளிம்பில் இறை உதவியை கேட்டு அனுபவித்த சமூகம்

இறைத்தூதர்கள் அனுப்பப்படும்போது அவர்களை ஏற்றுக் கொள்ளாத சமுதாயத்தினர், போதுமான அவகாசம் கொடுக்கப்பட்ட பின் அழிக்கப்பட்டனர்.

தண்டனையின் அறிகுறிகளைக் கண்ட கடைசி நேரத்தில் கூட எந்தச் சமுதாயமும் திருந்தி நல்வழிக்கு வரவில்லை. விதிவிலக்காக யூனுஸ் நபியின் சமுதாயம் (லட்சத்திற்கும் மேற்பட்டோர்) இறைவனின் தண்டனைக்கான அறிகுறிகளைக் கண்டபோது, தமது தவறைத் திருத்திக் கொண்டு (தௌபா) பாவமன்னிப்புக் கேட்டதால் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டனர்.

இது போல் தண்டனைக்கான அறிகுறி வந்தபோது மற்ற சமுதாயமும் மன்னிப்புக் கேட்டு தப்பித்திருக்க வேண்டாமா? என்று இறைவன் யூனுஸ் (10 -ம்) அத்தியாயத்தின் 96 முதல் 100 வரையிலான வசனங்களின் ஊடாக கேட்கிறான்.

இது தவிர பெருமானார் {ஸல்} அவர்கள் வாழும் காலத்திலும் இந்த உம்மத்திற்கு பல்வேறு உதவிகளை இறைவன் செய்ததாக குறிப்பிடுகின்றான்.

பத்ர், அஹ்ஸாப், ஹுனைன் போன்ற யுத்தங்களில் அல்லாஹ் இந்த உம்மத்திற்கு செய்த உதவிகளை நினைவு கூர்ந்து பார்க்குமாறு வலியுறுத்துகிற இறைவசனங்களும் குர்ஆனில் உண்டு.

ஆகவே, இறைவனின் உதவி என்பது இறைவனை நம்பிக்கை கொள்கிற அனைவருக்கும் கிடைக்கும் என்றே இறைமறை மேற்கூறிய வரலாறுகளின் மூலம் உணர்த்துகின்றது.

نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ

அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் இதோ! மிகச் சமீபமாகவே இருக்கின்றது”.                                               ( அல்குர்ஆன்: 61: 13 )

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ (7)

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிந்தால் அவன் உங்களுக்கு உதவி வழங்குவான். மேலும், உங்களின் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான்.                                                                                       ( அல்குர்ஆன்: 47: 7 )

இறை உதவி மொழிவதற்கு இலகுவாக இருந்தாலும், அனுபவிப்பதற்கு அழகாக இருந்தாலும் அதை அடைவதற்கான வழிகள் என்பது ஒன்றும் அவ்வளவு இலகுவான ஒன்றல்ல.

சில போது இறை உதவி துவக்கத்திலேயே கிடைத்து விடும். இன்னும் சில போது தோல்வியின் விளிம்பில் இருக்கும் போது கிடைக்கும். இன்னும் சில போது இனி வழியே இல்லை என்று எல்லாவற்றையும் இழந்து நிற்கிற போது கிடைக்கும்.

அல்லாஹ்வின் உதவியை எதிர் பார்த்து நம்பிக்கையோடு காத்து நின்றவர்களுக்கு அல்லாஹ் உதவி செய்தான். சில போது இயற்கையின் விதிகளை மாற்றியமைத்து 

பிரம்மிக்கத்தக்க உதவிகளை வழங்கினான். இன்னும் சில போது தனக்கான 

விதிகளையே மாற்றியமைத்து வியக்கத்தக்க உதவிகளை வழங்கினான்.

அல்லாஹ்வும் அல்குர்ஆனில் இறைவனின் உதவியைப் பெற்றவர்கள் குறித்து பல்வேறு வசனங்களில், பல்வேறு இடங்களில், பல்வேறு கோணத்தில் கூறுகின்றான்.

இறைவனின் உதவியைச் சமீபாக்கும் மிக முக்கியமான மூன்று காரணிகளை, அடிப்படை அம்சங்களை அல்லாஹ் அல்குர்ஆனில் அல் அன்பியா அத்தியாயத்தில் விவரிக்கின்றான்.

அல் அன்பியா அத்தியாயம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களை அகிலத்தின் அருட்கொடை என்று அடையாளப்படுத்தும் அத்தியாயம். 112 இறைவசனங்களைக் கொண்ட இந்த அத்தியாயம் மக்காவில் நபி {ஸல்} வாழும் போது மத்திய கால கட்டங்களில் இறக்கியருளப்பட்டது.

இந்த அத்தியாயயத்தில் பல்வேறு செய்திகளை கூறும் அல்லாஹ், அநேக நபிமார்களின் பெயர்களைக் குறிப்பிடுகின்றான்.

மிகவும் இக்கட்டான, நெருக்கடியான, சோதனையான கால கட்டத்தில் வாழ்ந்த தம்முடைய இறைத்தூதர்கள் பலருக்கு தான் புரிந்த வியப்பான பல உதவிகளை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

குறிப்பாக, இப்ராஹீம் (அலை), நூஹ் (அலை), லூத் (அலை), அய்யூப் (அலை), யூனுஸ் (அலை), ஜகரிய்யா (அலை) ஆகியோருக்கு செய்த உதவிகளை அல்லாஹ் தொடர்ந்து பட்டியலிட்டு கூறிய பிறகு அவர்கள் அனைவருக்கும் இறை உதவிகள் வந்ததற்கான பிரதான மூன்று அடிப்படைகளை குறிப்பிடுகின்றான்.

إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا وَكَانُوا لَنَا خَاشِعِينَ

“இவர்கள் யாவரும் நற்பணி (நல்லறங்) களில் முனைந்து செயற்படுவோராகவும், பேரார்வத்துடனும், அச்சத்துடனும் நம்மிடம் இறைஞ்சக் கூடியவர்களாகவும், நம் முன் பணிந்தவர்களாகவும் விளங்கினார்கள்”. (அல்குர்ஆன்: 21: 90 )

ஆகவே, இந்த மூன்று அடிப்படை அம்சங்களை நம் வாழ்க்கையில் கொண்டு வந்து இறை உதவியைப் பெற முயற்சி செய்வோம்.

1.   நற்பணி (நல்லறங்) களில் முனைந்து செயல்படுவது

நபி {ஸல்} அவர்கள் நபித்தோழர்களுக்கு உபதேசம் செய்வதை தடுக்கும் நோக்கோடும், நபி {ஸல்} அவர்களுக்கு நோவினை கொடுக்கும் நோக்கோடும் நபி {ஸல்} அவர்களின் பெரும்பாலான நேரங்களை நயவஞ்சகர்கள் இரகசியம் பேச வேண்டும் என்ற கோரிக்கையோடு மாநபி {ஸல்} அவர்களிடம் அனுமதி கோரி அடிக்கடி சந்தித்து நீண்ட நேரம் தேவையில்லாத ஏதாவது விஷயங்களை பேசிக்கொண்டிருப்பார்கள்.

மாநபி {ஸல்} அவர்களுக்கு இது சிரமமாக இருந்த போதும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இன்முகத்தோடு அவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

அதே நேரத்தில் நபித்தோழர்கள் பலருக்கு மிக முக்கியமான தேவைகள் ஏற்படும் போது அண்ணலாரை அணுகுவதற்கு மிகவும் சிரமமாகவும் இருந்தது.

இந்த தருணத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல் முஜாதலா (58- ம்) அத்தியாயத்தின் 12- ஆம் இறைவசனத்தை இறக்கியருளினான்.

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இறைத்தூதருடன் தனிமையில் பேச வேண்டுமாயின், அவ்வாறு பேசுவதற்கு முன்பாக தான தர்மம் செய்யுங்கள். இது உங்களுக்கு நன்மையானதும், மிகத்தூய்மையானதும் ஆகும்ஆனால், தர்மம் செய்வதற்கு எதுவும் இல்லை என்றால் திண்ணமாக, அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணை மிக்கவனாகவும் இருக்கின்றான்”. (அல்குர்ஆன்: 58: 12 )

இந்த இறைவசனம் இறங்கியதன் பின்னர் நபி {ஸல்} அவர்களைத் தொந்தரவு செய்து எந்த நயவஞ்சகர்களும் நெருங்கவில்லை. அதே நேரத்தில் நபித்தோழர்கள் அன்று குறைந்த பொருளாதாரத்தோடு இருந்தமையால் தர்மம் செய்து விட்டு தனிமையில் இரகசியம் பேசும் வாய்ப்பை பெற முடியாமல் போனது.

وقال ليث بن أبي سليم، عن مجاهد، قال علي، رضي الله عنه: آية في كتاب الله، عز وجل لم يعمل بها أحد قبلي، ولا يعمل بها أحد بعدي، كان عندي دينار فصرفته بعشرة دراهم، فكنت إذا ناجيت  رسول الله صلى الله عليه وسلم تصدقت بدرهم، فنسخت ولم يعمل بها أحد قبلي، ولا يعمل بها أحد بعدي، ثم تلا هذه الآية: { يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نَاجَيْتُمُ الرَّسُولَ فَقَدِّمُوا بَيْنَ يَدَيْ نَجْوَاكُمْ صَدَقَةً } الآية.

அலீ இப்னு அபீ தாலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அருள்மறையின் ஒரு வசனம் எனக்கு முன்பாக யாரும் அமல் செய்தது கிடையாது, எனக்குப் பின்பும் யாரும் அமல் செய்ய முடியாது. என்னிடம் ஒரு தீனார் இருந்தது நான் பத்து திர்ஹம்களாக மாற்றி வைத்துக் கொண்டேன். எப்போதெல்லாம் நான் நபி {ஸல்} அவர்களிடம் இரகசியம் பேச வேண்டும் என்று விரும்பினேனோ அப்போதெல்லாம் ஒரு திர்ஹத்தை தர்மம் செய்து விட்டு நபி {ஸல்} அவர்களிடம் சென்று பேசினேன். பின்பு இந்த சட்டம் மாற்றப்பட்டது. என்று கூறி மேற்கூறிய இறைவசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.

இமாம் முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “அலீ (ரலி) அவர்கள் நபி {ஸல்} அவர்களிடம் பத்தி சிறப்பு பண்புகள் குறித்து கேட்டார்கள் 

பிரபல விரிவுரையாளர் இமாம் முகாத்தில் இப்னு ஹய்யான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “இந்த சட்டம் பத்து நாட்கள் அமலில் இருந்தது. பின்னர் 13 –ஆம் வசனம் இறக்கியருளப்பட்டு இந்த சட்டம் மாற்றப்பட்டது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்: அலீ (ரலி) அவர்களிடத்தில் இருந்த மூன்று அம்சங்கள் ஏதாவது ஒன்று என்னிடம் இருப்பதை நான் செந்நிற ஒட்டகைகள் கிடைப்பதை விட உயர்ந்ததாக எண்ணிணேன் 

1,இந்த இறைவசனத்தின் அமல். 2.கைபர் யுத்தத்தில் நபி {ஸல்} அவர்கள் அலீ (ரலி) அவர்களை “நாளை ஒருவரிடம் நான் இஸ்லாமியக் கொடியை வழங்குவேன். அவரை அல்லாஹ்வும், அவனது தூதரும் நேசிக்கின்றார்கள். அவரும் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நேசிக்கின்றார்” என்று புகழ்ந்து கூறியது. 3.அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்களை திருமணம் செய்திருந்தது.

அலீ (ரலி) அவர்கள் நன்மையான காரியங்களை விரைந்து செய்வதிலே எவ்வளவு ஆர்வமாக இருந்தார்கள் என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது.

2.பேரார்வத்தோடும், அச்சத்தோடும் துஆ செய்வது…

நபித்தோழர்களில் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்கள். ஹிஜ்ரி 6-ல் கைபர் போருக்குப் பின்னர் இஸ்லாத்தைத் தழுவி மாநபி {ஸல்} அவர்களோடு ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகள் அருகாமையைப் பெற்று, இந்த தீனுக்கும், உம்மத்துக்கும் மகத்தான பங்களிப்பைச் செய்தவர்கள்.

ஆம்! நபி {ஸல்} அவர்களிடம் இருந்து 5374 ஹதீஸ்களை இந்த உம்மத்திற்கு கொடையாக வழங்கியவர்கள்.

 أَنَّ رَجُلا جَاءَ زَيْدَ بْنَ ثَابِتٍ ، فَسَأَلَهُ عَنْ شَيْءٍ ، فَقَالَ لَهُ 

 عَلَيْكَ أَبَا هُرَيْرَةَ ، " فَإِنِّي بَيْنَمَا أنا وَأَبُو هُرَيْرَةَ وَفُلانٌ فِي الْمَسْجِدِ ذَاتَ يَوْمٍ نَدْعُو اللَّهَ ، وَنَذْكُرُ رَبَّنَا ، خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى جَلَسَ إِلَيْنَا ، فَسَكَتْنَا ، فَقَالَ عُودُوا لِلَّذِي كُنْتُمْ فِيهِ ، قَالَ زَيْدٌ : فَدَعَوْتُ أَنَا وَصَاحِبَيَّ قَبْلَ أَبِي هُرَيْرَةَ ، وَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤَمِّنُ عَلَى دُعَائِنَا ، ثُمَّ دَعَا أَبُو هُرَيْرَةَ ، فَقَالَ : اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِثْلَ مَا سَأَلَكَ صَاحِبَايَ هَذَانِ ، وَأَسْأَلُكَ عِلْمًا لا يُنْسَى ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : آمِينَ ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، وَنَحْنُ نَسْأَلُ اللَّهَ عِلْمًا لا يُنْسَى ، فَقَالَ : سَبَقَكُمْ بِهَا الْغُلامُ الدَّوْسِيُّ "

ஒரு நாள் ஜைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்களிடம் ஒருவர் ஏதோ ஒன்றை கேட்க வந்தார். அப்போது இது குறித்து நீங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் போய் கேளுங்கள் என்று அங்கிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்களை காட்டினார்கள்.  பின்னர், ஒரு நாள் நானும்,பெயர் அறியப்படாத ஒரு நபித்தோழரும், அபூஹுரைரா ஆகியோர் மஸ்ஜிதுன் நபவீயில் அமர்ந்திருந்தோம்.

அப்போது, எங்களில் ஒவ்வொருவரும் துஆக் கேட்க வேண்டும் என்றும், ஒருவர் துஆக் கேட்குக்ம் போது மற்ற இருவரும் ஆமீன் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

அப்போது அங்கே நபி {ஸல்} அவர்கள் வருகை தந்து மூவரும் கூடி அமர்ந்திருப்பதன் நோக்கம் குறித்து கேட்டறிந்து, எங்கள் துஆவுக்கு ஆமீன் சொன்னார்கள்.

இறுதியாக, அபூஹுரைரா (ரலி) அவர்கள்: “அல்லாஹ்வே! உன்னிடம் நான் மறந்து போகாத கல்வியறிவைக் கேட்கின்றேன். மேலும், என்னுடைய இரு நணபர்களும் உன்னிடம் எதைக் கேட்டார்களோ அதையும் உன்னிடம் நான் கேட்கின்றேன்” என்று துஆக் கேட்க அதற்கு நபி {ஸல்} அவர்கள் ஆமீன் என்று கூறினார்கள்.

அப்போது மற்ற இரு நபித்தோழர்களும் நாங்கள் இருவரும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கேட்ட துஆவின் பலன் எங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று துஆ கேட்கின்றோம் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் ஆமீன் சொல்லுங்கள் என்று கோரினார்கள்.

அதற்கு நபி {ஸல்} அவர்கள் “தவ்ஸ் குலத்தைச் சார்ந்த இந்த சிறியவர் இது விஷயத்தில் உங்கள் இருவரையும் முந்தி விட்டார்” என்று கூறினார்கள்.

இந்த நிகழ்வின் ஊடாக அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு துஆக் கேட்பதில் இருந்த பேரார்வம் நமக்கு புலப்படுகின்றது.

3.   இறைவனுக்கு முன்னால், இறைக்கட்டளைகளுக்கு முன்னால் பணிந்து, பயந்து நடப்பது…

أنَّهُ ذَكَرَ رَجُلًا فِيمَن سَلَفَ - أوْ فِيمَن كانَ قَبْلَكُمْ، قالَ: كَلِمَةً: يَعْنِي - أعْطاهُ اللَّهُ مالًا ووَلَدًا، فَلَمَّا حَضَرَتِ الوَفاةُ، قالَ لِبَنِيهِ: أيَّ أبٍ كُنْتُ لَكُمْ؟ قالوا: خَيْرَ أبٍ، قالَ: فإنَّه لَمْ يَبْتَئِرْ - أوْ لَمْ يَبْتَئِزْ - عِنْدَ اللَّهِ خَيْرًا، وإنْ يَقْدِرِ اللَّهُ عليه يُعَذِّبْهُ، فانْظُرُوا إذا مُتُّ فأحْرِقُونِي حتَّى إذا صِرْتُ فَحْمًا فاسْحَقُونِي - أوْ قالَ: فاسْحَكُونِي -، فإذا كانَ يَوْمُ رِيحٍ عاصِفٍ فأذْرُونِي فيها، فقالَ: نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ: فأخَذَ مَواثِيقَهُمْ علَى ذلكَ ورَبِّي، فَفَعَلُوا، ثُمَّ أذْرَوْهُ في يَومٍ عاصِفٍ، فقالَ اللَّهُ عزَّ وجلَّ: كُنْ، فإذا هو رَجُلٌ قائِمٌ، قالَ اللَّهُ: أيْ عَبْدِي ما حَمَلَكَ علَى أنْ فَعَلْتَ ما فَعَلْتَ؟ قالَ: مَخافَتُكَ، - أوْ فَرَقٌ مِنْكَ -، قالَ: فَما تَلافاهُ أنْ رَحِمَهُ عِنْدَها وقالَ مَرَّةً أُخْرَى: فَما تَلافاهُ غَيْرُها، فَحَدَّثْتُ به أبا عُثْمانَ، فقالَ: سَمِعْتُ هذا مِن سَلْمانَ غيرَ أنَّه زادَ فِيهِ: أذْرُونِي في البَحْرِ، أوْ كما حَدَّثَ.

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் `முன் சென்ற` அல்லது `உங்களுக்கு முன் வாழ்ந்த` ஒரு மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அல்லாஹ் அவருக்குச் செல்வத்தையும் குழந்தைகளையும் வழங்கியிருந்தான். அவருக்கு இறப்பு நெருங்கியபோது அவர் தம் மக்களிடம் `உங்களுக்கு நான் எப்படிப்பட்ட தந்தையாக இருந்தேன்?` என்று கேட்டார். அவர்கள் `சிறந்த தந்தையாக இருந்தீர்கள்` என்று பதில் கூறினர். அவர் தமக்காக அல்லாஹ்விடம் எந்த நன்மையும் சேமித்திருக்கவில்லை. அல்லாஹ்வின் முன்னிலையில் தாம் சென்றால் தம்மை அவன் வேதனை செய்துவிடுவான் என அவர் அஞ்சினார். எனவே, (அவர் தம் மக்களிடம் `நன்றாகக் கவனியுங்கள். நான் இறந்துவிட்டால் என்னைப் பொசுக்கிவிடுங்கள். நான் (வெந்து) கரியாக மாறிவிட்டால் என்னைப் `பொடிப் பொடியாக்கிவிடுங்கள்`. அல்லது `துகள் துகளாக்கிவிடுங்கள்`. பிறகு சூறாவளிக் காற்று வீசும் நாளில் காற்றில் என்னைத் தூவிவிடுங்கள்` என்று கூறிதாம் கூறியபடி செய்ய வேண்டுமென அவர்களிடம் அவர் உறுதிமொழியும் வாங்கினார்.
என் இறைவன் மீதானையாக அவ்வாறே அவர்களும் செய்தனர். அப்போது அல்லாஹ் `(பழையபடி முழு மனிதனாக) ஆகிவிடு!` என்று கூறினான்.

உடனே (அந்த) மனிதர் (உயிர்பெற்று) எழுந்தார். (அவரிடம்) அல்லாஹ் `என் அடியானே! இவ்வாறு நீ செய்யக் காரணமென்ன?` என்று கேட்டான். அந்த மனிதர் உன்னைக் குறித்த அச்சமே என்னை இவ்வாறு செய்யத் தூண்டியது` என்று பதிலளித்தார். (இறுதியில்) அவர் அடைந்தது இறையருளைத்தான்.
அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:

நான் அபூ உஸ்மான்(ரஹ்) அவர்களிடம் இதை அறிவித்தேன். அப்போது அவர்கள் `சல்மான் ஃபார்சி(ரலி) அவர்கள் இதைப் போன்றே கூற கேட்டேன். ஆனால் (காற்றில்) என்னைத் தூவிவிடுங்கள் எனுமிடத்தில்) `கடலில் என்னைத் தூவிவிடுங்கள்` என்றோ, வேறுவிதமாகவோ கூடுதலாக அறிவித்தார்கள்` என்று கூறினார்கள்.

انَ رَجُلٌ مِمَّنْ كانَ قَبْلَكُمْ يُسِيءُ الظَّنَّ بعَمَلِهِ، فقالَ لأهْلِهِ: إذا أنا مُتُّ فَخُذُونِي فَذَرُّونِي في البَحْرِ في يَومٍ صائِفٍ، فَفَعَلُوا به، فَجَمعهُ اللَّهُ ثُمَّ قالَ: ما حَمَلَكَ علَى الذي صَنَعْتَ؟ قالَ: ما حَمَلَنِي إلَّا مَخافَتُكَ، فَغَفَرَ له.

இன்னொரு அறிவிப்பில்...

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்` உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயீல் மக்களில்) ஒருவர் தம் செய்து வந்த (குற்றச்) செயல் குறித்து அஞ்சியவராக இறந்துவிட்டால் என்னை(க் கரித்துச் சாம்பலை) எடுத்து சூறாவளிக் காற்று வீசும் காலத்தில் கடலில் தூவிவிடுங்கள்` என்று கூறினார். (அவர் இறந்தவுடன்) அவரை அவ்வாறே அவரின் வீட்டாரும் செய்தனர். அல்லாஹ் (காற்றோடு கலந்துவிட்ட) அவரின் உடலை ஒன்று திரட்டிய பின் `நீ இவ்வாறு செய்யததற்குக் காரணம் என்ன?` என்று கேட்டான். அவர் `உன்னைப் பற்றிய அச்சமே என்னை இவ்வாறு செய்யத் தூண்டியது` என்று பதிலளித்தார். எனவே, அல்லாஹ் அவரை மன்னித்துவிட்டான்.
என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.

ورد لفظ (خشع) في القرآن سبع عشرة مرة، جاء في خمسة عشر موضعًا بصيغة الاسم، من ذلك قوله عز من قائل: {قد أفلح المؤمنون * الذين هم في صلاتهم خاشعون} (المؤمنون:2) وجاء في موضعين بصيغة الفعل، الأول: قوله عز وجل: {وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا} (طه:108) الثاني: قوله تعالى: {ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله} (الحديد:16).
ولفظ (خشع) ورد في القرآن على أربعة معان:
الأول: بمعنى التصديق والتسليم، ومنه قوله تعالى: {واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين} (البقرة:25) قال الطبري: "يعني بقوله: {إلا على الخاشعين} أي: إلا على الخاضعين لطاعته، الخائفين سطواته، المصدقين بوعده ووعيده".

الثاني: التواضع والخضوع، ومنه قوله سبحانه: {إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين} (الأنبياء:90) أي: متواضعين خاضعين. ومنه أيضاً قوله تعالى: {خاشعة أبصارهم} (القلم:43) أي: خاضعة أبصارهم للذي هم فيه من الخزي والهوان.

الثالث: بمعنى التذلل، ومنه قوله عز وجل: {الذين هم في صلاتهم خاشعون} (المؤمنون:2) قال الطبري: "خشوعهم فيها تذللهم لله فيها بطاعته، وقيامهم فيها بما أمرهم بالقيام به فيها". وبحسب هذا المعنى أيضاً قوله تعالى: {وجوه يومئذ خاشعة} (الغاشية:2) أي: ذليلة. ومن هذا القبيل كذلك قوله عز من قائل: {خشعا أبصارهم} (القمر:7) يقول: ذليلة أبصارهم خاشعة.

الرابع: بمعنى سكون الجوارح، ومنه قوله عز وجل: {وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا} (طه:108) أي: سكنت أصوات الخلائق للرحمن. روى الطبري عن ابن عباس رضي الله عنهما، قوله: {وخشعت الأصوات للرحمن} يقول: سكنت.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் “ஃகுஷூஃ” என்ற வார்த்தையை “இஸ்ம்” உடைய அமைப்பில் 17 இடங்களிலும், “ஃபிஅல்” உடைய அமைப்பில் 2 இடங்களிலும் மொத்தம் 19 இடங்களில் குறிப்பிடுகின்றான்.

மேலும், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் 4 பொருள்களில் “ஃகுஷூஃ” என்ற வார்த்தையைப் பயன் படுத்துகின்றான்.

1. அல்லாஹ்விற்கு கட்டுப்படுவது மற்றும் அல்லாஹ்வின் வார்த்தைகளை நம்புவது, உண்மைபடுத்துவது.

2. அல்லாஹ்வின் கட்டளை விஷயத்தில் பணிவோடும், தன்னடக்கத்தோடும் நடந்து கொள்வது.

3. இறைக்கட்டளைக்கு முன்பாக தன்னை முற்றிலும் தாழ்த்திக் கொள்வது.

4. உடலுறுப்புக்களை இறைகட்டளைகள் மற்றும் வழிபாடுகளின் போது சாந்தமாக, அமைதியாக வைத்திருப்பது.

பெருமானார் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “இந்த உலகத்தில் இந்த உம்மத்திடம் இருந்து முதலில் உயர்த்தப்படுவது இறையச்சத்தால் பணிந்து நடக்கும் தன்மை தான். எதுவரை இது நடக்கும் என்றால் எவரையும் நீங்கள் இறையச்சத்தால் பணிந்து நடப்பவராக பார்க்கமாட்டீர்கள்”.

قال حذيفة رضي الله عنه: أول ما تفقدون من دينكم الخشوع، ويوشك أن تدخل مسجد الجماعة، فلا ترى فيهم خاشعًا.

ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “உங்கள் மார்க்க விஷயத்தில் முதலில் நீங்கள் இழப்பது இறையச்சத்தால் பணிந்து நடக்கும் தன்மையைத் தான். அப்போது, நீங்கள் பெருங்கூட்டத்தால் நிரம்பியிருக்கிற ஒரு மஸ்ஜிதுக்குள் நீங்கள் நுழைவீர்கள். ஆனால், இறையச்சத்தால் பணிந்து நடக்கும் தன்மை கொண்ட ஒருவரையும் நீங்கள் பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்.

استعيذوا بالله من خشوع النفاق»، قالوا: وما خشوع النفاق؟ قال:" أن ترى الجسد خاشعا والقلب ليس بخاشع".

அபூதர் (ரலி) அவர்கள் “நீங்கள் நயவஞ்சகமான “ஃகுஷூஃ –லிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள்” என ஒரு சபையில் கூறினார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் நயவஞ்சகமான “ஃகுஷூஃ” என்றால் என்ன? என்று வினவினர். அதற்கு, அபூதர் (ரலி) அவர்கள் “உடல் மொழியில் “ஃகுஷூஃ” இருக்கும். ஆனால், உள்ளத்தில் “ஃகுஷூஃ” இருக்காது” என்று பதில் கூறினார்கள்.

ஆகவே, இறைவனின் உதவியைச் சமீபாக்கி நம் வாழ்வை வளமாக்கும் இந்த மூன்று அடிப்படை அம்சங்களை நம் வாழ்க்கையில் நாம் கடைபிடித்து வாழ்வோம்! அல்லாஹ்வின் மகத்தான உதவியைப் பெறுவோம்!!

Thursday, 22 July 2021

உளப்பூர்வமாக அமல்கள் செய்வோம்! உயரிய நன்மைகளை பெறுவோம்!!!

 

உளப்பூர்வமாக அமல்கள் செய்வோம்!

உயரிய நன்மைகளை பெறுவோம்!!!

 

தியாகத்திருநாள் நிகழ்வின் நாயகரான இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தைப் போற்றிப் புகழ்ந்து, குர்பானிக்கடமையை இனிதே நிறைவு செய்து, இனியும் நிறைவேற்றக் காத்திருக்கும் நாம் அய்யாமுத்தஷ்ரீக் உடைய புனிதம் நிறைந்த நாட்களில், ஜும்ஆ உடைய நாளில் வீற்றிருக்கின்றோம்.

தியாகத்திருநாள் மூலம் நாம் பெற்ற மகத்தான சிந்தனைகளை, நம் வாழ்வில் எல்லா காலத்திலும் கடைபிடிக்க வேண்டிய கடமையும், கடப்பாடும் நமக்கு இருக்கிறது. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கடைபிடித்து வாழும் நல்ல தௌஃபீக்கை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!

முதலாவதாக, தொழுகையோ, குர்பானியோ, வாழ்வதோ, இறப்பதோ எதுவாக இருந்தாலும் படைத்த ரப்புல் ஆலமீனுக்காக இருக்க வேண்டும் என்கிற மகத்தான சிந்தனையை நாம் பெற்றிருக்கின்றோம்.

قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

நிச்சயமாக! என்னுடைய தொழுகையும், என்னுடைய (சகல) வணக்கமும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்விற்கே உரியனவாகும் என்று நீர் கூறுவீராக!”.       ( அல்குர்ஆன்: 6: 162 )

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ

“(நபியே!) உமது ரப்பிற்காக தொழுது, அவனுக்காக குர்பானி பிராணியை அறுப்பீராக!”.                                                 ( அல்குர்ஆன்: 108: 2 )

இரண்டாவதாக, தன்னிடம் இருப்பதை கொடுப்பது தர்மம், தனக்கு மிஞ்சியதை கொடுப்பது தானம், தனக்கு உரியதை கொடுப்பது தயாளம், தன்னையே கொடுப்பது தியாகம்.

அந்த தியாகத்தை மேற்கொள்ள ஒரு இறைநம்பிக்கையாளன் எப்போதும் முன்னணியில் இருக்க வேண்டும். எது இடையில் வந்து நின்றாலும் அதை புறந்தள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும் என்கிற மகத்தான சிந்தனையை நாம் பெற்றிருக்கின்றோம்.

قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ

“(நபியே!) நீர் கூறுவீராக உங்களுடைய பெற்றோரும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய துணைகளும், உங்களுடைய குடும்பத்தினரும், நீங்கள் சம்பாதித்து (சேமித்து) வைத்திருக்கும் செல்வமும், எதனுடைய நஷ்டத்தை நீங்கள் அஞ்சுகின்றீர்களோ, அத்தகைய (உங்கள்) வியாபாரமும், எதனை நீங்கள் திருப்தி கொள்கின்றீர்களோ அத்தகைய (உங்களுடைய) வீடுகளும் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், அவனது வழியில் தியாகம் செய்வதையும் விட உங்களுக்கு மிக்க விருப்பமானதாக இருந்தால் அல்லாஹ் அவனுடைய வேதனையைக் கொண்டு வருவதை எதிர்பார்த்து இருங்கள். அல்லாஹ் பாவிகளான கூட்டத்தினரை நேர்வழியில் செலுத்த மாட்டான்”. ( அல் குர்ஆன்: 9: 24 )

மூன்றாவதாக, எந்த தியாகம் செய்தாலும் உளப்பூர்வமாக, உண்மையாக செய்ய வேண்டும் என்கிற மகத்தான சிந்தனையையும் நாம் பெற்றிருக்கின்றோம்.

وَجَاهِدُوا فِي اللَّهِ حَقَّ جِهَادِهِ

“(இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் (தியாகம்) அறப்போர் செய்ய வேண்டிய முறைப்படி (தியாகம்) அறப்போர் செய்யுங்கள்”. (அல் குர்ஆன்: 22: 78 )

பொதுவாக, இறைநம்பிக்கை கொண்டு எந்த நல்லறங்கள் செய்தாலும் அதற்கான பிரதிபலனை, நன்மைகளை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நல்லறங்களை செய்த அந்த நல்லடியாருக்கு வழங்குவாதாக வாக்களிக்கின்றான்.

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ إِنَّا لَا نُضِيعُ أَجْرَ مَنْ أَحْسَنَ عَمَلًا

 “நிச்சயமாக! எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிகின்றார்களோ நிச்சயமாக, நாம் அத்தகையோரின் நற்கூலியை நாம் வீணாக்க மாட்டோம்”.                                                 ( அல்குர்ஆன்: 18: 30 )

நல்லறங்களைப் பொறுத்து அதற்கு வழங்கப்படுகிற நன்மைகளும், கூலியும் வேறு படும் என்றும் இஸ்லாம் கூறுகின்றது 

சில அமல்கள் அல்லாஹ்விடத்தில்அஃளமு தரஜா” – மகத்தான அந்தஸ்தைப் பெற்றதாக, சில அமல்களுக்குஅல்லாஹ்வே நேரடியாக அந்தஸ்துகளைவழங்குவதாக, சில அமல்களுக்குஅல்லாஹ்வே கூலியாவான்என்றும், சில அமல்களுக்குபாவங்கள் கூட நன்மைகளாக மாற்றப்படும்என்றும், இன்னும் சில அமல்களுக்குகணக்கின்றி கூலி வழங்கப்படும்என்றும் அல்குர்ஆன் வாயிலாகவும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் அமுத மொழியினாலும் சோபனங்கள் பல கூறப்பட்டுள்ளன.

فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ

ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும், அவர் அதன் பயனை கண்டு கொள்வார்”.                                  ( அல்குர்ஆன்: 99: 7 )

مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا

எவர் ஒரு நன்மையான செயலைக் கொண்டு வருவாரோ அவருக்கு அது போன்று பத்து மடங்கு (நன்மைகளின்) பயன் உண்டு”.          ( அல்குர்ஆன்: 6: 160 )

وَمَا تُنْفِقُونَ إِلَّا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنْتُمْ لَا تُظْلَمُونَ

மேலும், நீங்கள் அல்லாஹ்வின் விருப்பத்தை ஆதரவு வைத்தே அன்றி எந்த செலவையும் செய்யாதீர்கள். மேலும், நீங்கள் எந்த நற்பொருளைச் செலவு செய்தாலும் அதன் கூலியை நிறைவாக உங்களுக்கு கொடுக்கப்படும். இன்னும், நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்”.                      ( அல்குர்ஆன்: 2: 272 )

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

 ابْنِ عَبّاسٍ  عَنْ

فَمَنْ هَمّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا الله عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً وَإِنْ هَمّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا الله عَزّ وَجَلّ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ

ஒருவர் ஒரு நல்லறத்தை செய்ய நாடினார் ஆனால், அவரால் அந்த நல்லறத்தை செய்ய முடியாமல் போனது. அல்லாஹ் அவருக்கு முழுமையான ஒரு நன்மையை எழுதுகின்றான். ஒருவர் ஒரு நல்லறத்தை செய்ய நாடி, அவர் அந்த நல்லறத்தை செய்து முடிக்கின்றார் என்றால் பத்து நன்மைகளையோ அல்லது எழுநூறு மடங்கு நன்மைகளையோ அல்லது அதை விட பன்மடங்கு நன்மைகளையோ அவருக்கு வழங்குகின்றான்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                            ( நூல்: புகாரி, முஸ்லிம் )

ஆகவே தான் அண்ணல் நபி {ஸல்} அவர்களின் அருமைத் தோழர்களான ஸஹாபா பெருமக்களின் கேள்விகள் இப்படி அமைந்தன.

"أي الإسلام أفضل؟". 
"أي العمل أفضل"؟
"أي العمل أحب إلى الله؟"
"أي الصدقة أعظم أجراً؟"
"أي الأعمال أقرب للجنة؟"

இஸ்லாத்தில் மிகச் சிறந்த அமல் எது?”, “எந்த அமல் மிகச் சிறந்தது?”, “அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான அமல் எது?”, “எந்த தர்மம் மகத்தான கூலிக்குரியது?”, “எந்த அமல் சுவனத்திற்கு சமீபமாக்கும்?”, என்று மகத்தான கூலியைப் பெற்றுத் தருகிற அமல்களைச் செய்ய ஆர்வத்தோடு நபி {ஸல்} அவர்களை நபித்தோழர்கள் அணுகியதை வரலாறு நெடுக காண முடிகின்றது.

எந்த அமலாக இருந்தாலும் அதற்கான நியதியும், நிபந்தனையும் ஒன்றே ஒன்று தான். அந்த அமல் உளப்பூர்வமானதாக இருக்க வேண்டும், இறைவனின் திருப்தியை பெறும் நோக்கத்தில் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

وَمَنْ يَفْعَلْ ذَلِكَ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا

எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் தேடி நல்லறங்களைச் செய்கின்றாரோ, அவருக்கு மகத்தான கூலியை நாம் கொடுப்போம்” ( அல்குர்ஆன்: 4: 114 )

ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

وعَنْ سهل بن حُنَيْفٍ 

 أنَّ رَسُول اللَّهِ ﷺ قَالَ

 مَنْ سأَلَ اللَّه تَعَالَى الشَّهَادةَ بِصِدْقٍ بلَّغهُ اللهُ منَازِلَ الشُّهَداءِ وإنْ ماتَ على فِراشِهِ

 رواه مسلم.

அல்லாஹ்விடத்தில் ஒருவர் உண்மையான இதயத்தோடு ஷஹாதாவீரமரணத்தை வேண்டுகிறார். அவர் தன் படுக்கையில் மரணித்தாலும் அவருக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வீரமரணம் அடைந்தவர்களின் அந்தஸ்தை வழங்கி கௌரவிக்கின்றான்என மாநபி {ஸல்} அவர்கள் அருளினார்கள். ( நூல்: முஸ்லிம்  

மேலும், எந்த ஒரு அமலானாலும் கூலியும், நன்மையும், பிரதிபலனும் வழங்கப்பட வேண்டுமானால் அந்த அமல் அல்லாஹ்விடத்தில்கபூலிய்யத்தைபெற வேண்டும். அல்லாஹ்விடம் அந்த அமல் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற நியதியும், நிபந்தனையும் இருக்கின்றது. மேலும், அந்த அமல் இறையச்சத்தோடு செய்கின்றவர்களிடத்தில் இருந்து தான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது என்றும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ

“(நபியே!) ஆதமுடைய இரு புதல்வர்கள் ( ஹாபீல், காபீல் ) உடைய வரலாற்றுச் செய்தியை நீர் அம்மக்களுக்கு ஓதிக் காண்பிப்பீராக! “குர்பானியைஅல்லாஹ்விற்காக அவ்விருவரும் கொடுத்த பொழுது அவ்விருவருள் ஒருவருடைய (ஹாபீலுடைய) து ஏற்கப்பட்டது. மற்றவருடைய (காபீலுடைய) து ஏற்கப்படவில்லை. (அப்பொழுது காபீல், ஹாபீலை நோக்கி) நிச்சயமாக, நான் உன்னை கொன்று விடுவேன் என்று கூறினான். (அதற்கு ஹாபீல்) “அல்லாஹ் ஏற்றுக் கொள்வதெல்லாம் இறையச்சமுடையவர்களிடமிருந்து தான்என்று கூறினார்”.     ( அல்குர்ஆன்: 5: 27 )

அந்த வகையில் நாம் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, குர்பானி வழிபாட்டை பூர்த்தி செய்தும், இன்னும் சிலர் பூர்த்தி செய்யவும் காத்திருக்கின்றோம்.

குர்பானி வழிபாட்டிற்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வழங்குவதாக வாக்களித்திருக்கும் மகத்தான கூலி என்ன 

( ما عمل ابن آدم يوم النحر عملا أحب إلى الله عزوجل من إهراق الدم و إنها لتأتي يوم القيامة بقرونها و أشعارها و أظلافها و أن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا )).

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:“ஆதமுடைய மகன் நஹ்ருடைய 

நாளில் செய்யும் செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானது உள்ஹிய்யா  பிராணியின் இரத்தத்தை ஓட்டுவது தான். நாளை மறுமையில் அது அதன் முழு உருவில் வரும்.(அதன் கொம்புடனும், அதன் முடிகளுடனும், அதன் சதைகளோடும் வரும்)  திண்ணமாக, இந்தப் பூமியில் அதன் உதிரம் சேரும் முன்னரே அல்லாஹ்விடம் அது  போய் சேர்ந்து விடுகின்றது. ஆகவே, நீங்கள் தூய மனதோடு உள்ஹிய்யாக் கொடுங்கள் என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

يا رسول الله صلى الله علي وسلم ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم

قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسن 

நபித்தோழர்களில் சிலர் நபி {ஸல்} அவர்களிடம் இந்த உள்ஹிய்யாவினால்  என்ன கிடைக்கும்? இதன் தாத்பரியம் என்னவென்று வினவினர். அப்போது நபி {ஸல்}  அவர்கள் இது உங்களின் தந்தையான இப்ராஹீம் (அலை) அவர்களின் அழகிய  நடைமுறையாகும். இந்த உள்ஹிய்யா பிராணியின் ஒவ்வொரு முடிக்குப் பகரமாக  ஒவ்வொரு நன்மைகள் கிடைக்கும் என்று நபி {ஸல்} அவர்கள் பதிலளித்தார்கள்.

وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَىٰ رَبِّي سَيَهْدِينِ (99) رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ (100) فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ (101) فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَىٰ ۚ قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ (102) فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ (103) وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ (104) قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا ۚ إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ (105) إِنَّ هَٰذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ (106) وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ (107) وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ (108) سَلَامٌ عَلَىٰ إِبْرَاهِيمَ (109) كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ (110) إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ (111) وَبَشَّرْنَاهُ بِإِسْحَاقَ نَبِيًّا مِّنَ الصَّالِحِينَ (112) وَبَارَكْنَا عَلَيْهِ وَعَلَىٰ إِسْحَاقَ ۚ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَظَالِمٌ لِّنَفْسِهِ مُبِينٌ (113)}

என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையோரில் ஒருவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.) அவருக்கு சகிப்புத் தன்மை மிக்க ஆண் குழந்தை (இஸ்மாயீல்) பற்றி நற்செய்தி கூறினோம்.

அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்தபோது "என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு'' என்று (இப்ராஹீம்) கேட்டார். "என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்'' என்று (இஸ்மாயீல்) பதிலளித்தார்.

இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்தியபோது, "இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்'' என்று அவரை அழைத்துக் கூறினோம்.

இது தான் மகத்தான சோதனை.  பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்.

இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.

அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.

நபியும், நல்லவருமான இஸ்ஹாக்கைப் பற்றி அவருக்கு நற்செய்தி கூறினோம். அவர் மீதும், இஸ்ஹாக் மீதும் பாக்கியம் செய்தோம். அவ்விருவரின் வழித்தோன்றல்களில் நல்லோரும் உள்ளனர். தெளிவாக தமக்கே தீங்கிழைத்தோரும் உள்ளனர்.                                                    ( அல்குர்ஆன்: 5: 27 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இப்ராஹீம் (அலை) அவர்கள் தியாகம் செய்ய முன்வந்த செய்தியை குறிப்பிட்ட பிறகு ஆட்டை பலியிடச் செய்தோம் என்ற தகவலைப் பதிவிட்ட பிறகு"இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்'' என்று அவரை அழைத்துக் கூறினோம்.” என்று கூறுகின்றான்.

அடுத்தடுத்த இறைவசனங்களில் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு வழங்கிய கூலியைப்பற்றி அல்லாஹ் நபியும், நல்லவருமான இஸ்ஹாக்கைப் பற்றி அவருக்கு நற்செய்தி கூறினோம். அவர் மீதும், இஸ்ஹாக் மீதும் பாக்கியம் செய்தோம்.” என்று கூறுகின்றான் 

இந்த இறைவசனத்தின் ஊடாக நாம் “நிச்சயமாக நாம் நம்முடைய குர்பானிக்காக அல்லாஹ்வால் கூலி வழங்கப்படுவோம். அதில் ஒன்று குர்பானி கொடுத்தவருக்கும் அவருடைய சந்ததிக்கும் அல்லாஹ் பரக்கத்தை நஸீபாக ஆக்குகின்றான்” என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

உளப்பூர்வமாக செய்யப்படும் அமல்களுக்கான அங்கீகாரம்...

ஒரு அமலை நாம் உளப்பூர்வமாக செய்கிறோம் என்றால் அல்லாஹ் ரப்பூல் ஆலமீன் அந்த அமலை கபூல் செவதோடு, கூலிகளை வழங்குவதோடு அதன் மூலம் பல்வேறு அஸராத்துகளை – நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றான்.

عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم : "قال رجل: لأتصدقن الليلة بصدقة، فخرج بصدقته فوضعها في يد زانية، فأصبح الناس يتحدثون: تُصُدقَ على زانية! فقال: اللهم لك الحمد على زانية، لأتصدقن الليلة بصدقة، فخرج بصدقته فوضعها في يد غني، فأصبحوا يتحدثون: تُصُدق الليلة على غَني! فقال: اللهم لك الحمد على غني، لأتصدقن الليلة بصدقة، فخرج بصدقته فوضعها في يد سارق، فأصبحوا يتحدثون: تُصدق الليلة على سارق! فقال: اللهم لك الحمد على زانية، وعلى غني، وعلى سارق، فأتي فقيل له: أما صدقتك فقد قبلت؛ وأما الزانية فلعلها أن تستعف بها عن زناها، ولعل الغني يعتبر فينفق مما أعطاه الله، ولعل السارق أن يستعف بها عن سرقته"

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “உங்களுக்கு முன் சென்ற 

காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதர் இன்று இரவு நான் (யாருக்கும் தெரியாமல்) இரசியமாக  தர்மம் செய்வேன் என உறுதி பூண்டார். சொன்னது போன்றே இரவில் தர்மப் பொருளை  ஒருவரின் கையில் கொடுத்து விட்டு வந்தார். மறுநாள் காலை  மக்கள் ஒரு விபச்சாரிக்கு  யாரோ வாரிக் கொடுத்திருக்கிறார் என பேசிக்கொண்டனர்.

அன்று இரவும் அவர் தன் தர்மப் பொருளை கொண்டு சென்று ஒருவரிடம் கொடுத்து விட்டு வந்தார். மறுநாள் காலை மக்கள்  ஒரு செல்வந்தர் கையில் யாரோ   வாரிக்  கொடுத்திருக்கிறார்கள் என பேசிக் கொண்டனர்.

அன்று இரவும் அவர் தன் தர்மப்பொருளை கொண்டு சென்று ஒருவரிடம் கொடுத்துவிட்டு வந்தார்.மறுநாள் காலை மக்கள் ஒரு திருடன் கையில் யாரோ வாரிக் கொடுத்திருக்கிறார் என பேசிக் கொண்டனர்.

ஒவ்வொரு முறையும் இன்னொருவருடைய கையில் நான் கொடுத்துவிட்டேன்.   அல்லாஹ்வே உனக்கு புகழ் அனைத்தும்! என்று கூறினார்.அவரிடம் உம்முடைய தர்மம்   ற்றுக்கொள்ளப்பட்டது என அசரீரி மூலம் சொல்லப்பட்டது.

மேலும், அல்லாஹ் அந்த விபச்சாரியை நல்லவளாகவும், செல்வந்தரை  அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் கொடையாளியாகவும், திருடனை உழைத்து சாப்பிடும் மனிதனாகவும் மாற்றினான்என அல்லாஹ்வின்  தூதர்  (ஸல்) அவர்கள்  கூறினார்கள்  ( நூல்: இப்னு கஸீர்: பாகம் : 1, பக்கம் : 423 )

இங்கே, அவர்  அந்த அமலை உளப்பூர்வமாக செய்ததால் அல்லாஹ்  அந்த அமலை ஏற்றுக் கொண்டதோடு சம்பந்தப்பட்ட நபர்களின் வாழ்க்கை தரத்தையும்  உயர்த்தி வாழ்க்கை பாதையையும் மாற்றி அமைத்தான்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக நாளொன்றுக்கு ஒரு தண்டனை எனும் விதமாக புதுப்புது தண்டனைகளை, சித்ரவதைகளை பிலால் (ரலி) அவர்களின் மீது உமைய்யா இப்னு கலஃப் கட்டவிழ்த்து விட்டிருந்தான்.

أن النبي صلى الله عليه وسلم قال عندما بلغه ما يلقى بلال من التعذيب: ((لو كان عندنا شيء، لابتعنا بلالاً))،.

 أن أبا بكر اشترى بلالاً وهو مدفون في الحجارة بخمس أواقٍ ذهبًا، فقالوا: لو أبيت إلا أوقية واحدة لبعناكه، فقال أبو بكر: لو أبيتم إلا مائة أوقيه لأخذته

அப்படியாக நாட்கள் கடந்து சென்று கொண்டிருந்த நேரத்தில் பெருமானார் {ஸல்} அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடத்தில் பிலால் போன்று இஸ்லாத்திற்காக சித்ரவதைகளை தாங்கிக் கொண்டிருப்பபவர்களை நம்மிடம் பணம் மட்டும் இருந்தால் எவ்விலை கொடுத்தாவது அவர்களை விலை கொடுத்து வாங்கி விடலாம்என கவலையோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் பிலால் (ரலி) அவர்களை உமைய்யா சித்ரவதை செய்து கொண்டிருக்கும் போது அங்கு சென்ற அபூபக்ர் (ரலி) அவர்கள் “என் இறைவன் அல்லாஹ்! என்று சொல்லும் ஒரே காரணத்திற்காகவா இந்த அடிமையைத் துன்புறுத்துகிறீர்கள்? கொலை செய்து விட வேண்டும் என்று துடிக்கின்றீர்கள்? அவருக்கான விலையைச் சொல்லுங்கள். நான் வாங்கிக் கொள்கிறேன்என்றார்.

உமைய்யா, அபூபக்ர் (ரலி) அவர்களை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்து விட்டு ஒரு விலையைச் சொன்னான். பேரம் பேசாமல், கேட்ட தொகையை மறுக்காமல் உடனே அத்தொகையைக் கொடுத்து பிலாலை வாங்கினார் அபூபக்ர் (ரலி) அவர்கள்.

ஐந்தோ அல்லது. ஏழோ அல்லது நாற்பதோ அவாஃகின் தங்கம் விலையாகக் கொடுத்தார் என்று பல்வேறு அறிவிப்புகள் உள்ளன.

பிலாலை அழித்துக் கொண்டு, வா போவோம்என்று நடக்க ஆரம்பித்த அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “அதிகமான விலை கொடுத்து ஏமாறி விட்டீரே. இதை விட மிகக் குறைவான ( ஒரே ஒரு காசுக்குக் ) விலைக்குக் கேட்டிருந்தாலும் பிலாலைத் தந்திருப்பேனே?என ஏளனமாகக் கேட்டான் உமைய்யா.

நீதான் ஏமாறி விட்டாய் உமைய்யா. இதைவிட அதிகமான விலையை நீ கேட்டிருந்தாலும் கொடுப்பதற்கு நான் தயாராகவே இருந்தேன்இன்னொரு அறிவிப்பில் நூறு அவாக் தங்கம் கேட்டிருந்தாலும் அவருக்காக நான் கொடுத்திருப்பேன்என்று பதில் அளித்து அங்கிருந்து பிலால் (ரலி) அவர்களுடன் விடை பெற்றார் அபூபக்ர் (ரலி) அவர்கள்.

தம்மோடு அழைத்து வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் விலை கொடுத்து வாங்கி விட்டோம் என்று பிலாலைத் தம் அடிமையாக ஆக்கிக் கொள்ளவில்லை. மாறாக, பெருமானார் {ஸல்} அவர்களின் சமூகத்திற்கு அழைத்து வந்து அல்லாஹ்வின் தூதரே! “அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியவனாக நான் பிலாலை விடுதலை செய்கின்றேன்” என்று அந்த நொடிப்பொழுதே விடுதலை அளித்துவிட்டார்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள்.

அவர்கள் அளித்த அந்த விடுதலையை அடி, உதையிலிருந்து விடுதலை என்று வெறுமெனே சொல்லிவிட முடியாது. மாறாக, மகத்தான, மாபெரும் விடுதலை என்று தான் சொல்ல வேண்டும். ( நூல்: உஸ்துல் ஃகாபா, ரிஜாலுன் வ நிஸாவுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, ஸியரு அஃலா மின் நுபலா )

அன்றிலிருந்து பிலால் (ரலி) அவர்களின் வாழ்க்கை அடியோடு மாறிப்போனது. அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் அண்மையைப் பெற்ற நெருங்கிய தோழர், மெய்க்காப்பாளர், இஸ்லாத்தின் முதல் (பாங்கொலி) முதல் அழைப்பாளர், இஸ்லாமிய கஜானாவின் பொறுப்புதாரி, நபி {ஸல்} அவர்களின் பயணத்தோழர், என்று பிலால் (ரலி) அவர்களின் வாழ்க்கை பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக ஏற்றம் கண்டது.

முத்தாய்ப்பாக பெருமானார் {ஸல்} அவர்களின் அமுத வாயால் சுவனத்தைக் கொண்டு சோபனம் பெற்றவர்களில் ஒருவராகவும் பிலால் (ரலி) அவர்கள் பரிணமித்தார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் பிலால் (ரலி) அவர்களை “அடிமைத்தளையில் இருந்து விடுதலை செய்தது” அந்த காரியத்தை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி, உளப்பூர்வமாக செய்தது. அதனால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஏற்படுத்திய மகத்தான விளைவுகள் தான் பிலால் (ரலி) அவர்களின் பரிமாணங்கள் நிறைந்த இந்த வாழ்க்கை என்றால் அது மிகையல்ல.

ஆகவே, உளப்பூர்வமாக அமல்கள் செய்து உயரிய நன்மைகளைப் பெறுவோம்!!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உளப்பூர்வமாக அமல்கள் செய்கிற நற்பேற்றை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!