நெற்றிக்கண் திறப்பினும்…
இந்திய
திருநாட்டில் நீதிமன்றங்கள் மீதும் நீதிபதிகள் மீதும் விமர்சனங்கள் எழுவது ஒன்றும்
புதிதல்ல.
கடந்த காலங்களில்
பல்வேறு நீதிபதிகள் மீதும்,
நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளின் மீதும் பல்வேறு
விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆனால், தற்போது நாட்டில் இருவேறு மாநிலங்களில் (தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம்)
எழுந்துள்ள விமர்சனங்கள் என்பது கூடுதல் கவனத்தையும் நாட்டின் உயர்ந்த அதிகார
பீடமான நீதித்துறை மற்றும் நீதி பரிபாலனம் மீது மக்களுக்கு நம்பிக்கையின்மையை
ஏற்படுத்தும் அளவுக்கு அமைந்ருக்கிறது என்றால் அது மிகையல்ல.
சென்னை
உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சாதி –
மத பாகுபாடுகளுடன் நடந்துகொள்கிறார் என சமூக
செயற்பட்டாளரும்,
வழக்கறிஞருமான வாஞ்சிநாதன், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில் நீதிபதி
ஜி.ஆர்.சுவாமிநாதன் எந்தெந்த வழக்குகளில் எல்லாம் ஜாதி, மத அடிப்படையில் அவர் தீர்ப்பளித்திருக்கிறார் என்கிற விவரங்களையும் இணைத்து
அனுப்பியிருந்தார்.
நீதிபதி சுவாமி
நாதன் அவர்கள் உயர்நீதிமன்ற "நீதிபதியாக பதவியேற்ற 7 வருடங்களில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்ப்பு
வழங்கியுள்ளார்" என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியப் பிரதேச
நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த, கர்ப்பிணியான அதிதி
குமார் சர்மா உள்பட 6
பெண் நீதிபதிகள் பணி நீக்கம் செய்து கடந்த 2023ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. தகுதிகாண் காலத்தின் போது நீதிபதிகளின்
செயல்பாடு திருப்திகரமாக இல்லை எனக் கூறி மாநில சட்டத் துறை அவர்களின் சேவைகளை
நிறுத்துவதற்கான உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த உத்தரவுக்குப் பிறகு அதிதி குமார்
சர்மாவுக்கு கரு கலைந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்த விவகாரத்தை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம்
தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்துகொண்டது.
மத்தியப் பிரதேச
உயர்நீதிமன்றத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட 6 பெண் நீதிபதிகளின் வழக்கு
தொடர்பான விசாரித்த உச்சநீதிமன்றம், நான்கு பேரை மட்டும் மீண்டும்
பணியில் அமர வைக்கப்பட்டனர். ஆனால், அதிதி குமார் சர்மா
மற்றும் சரிதா செளத்ரி ஆகியோ விலக்கப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம் பணிநீக்க முடிவு சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது
என்று கூறி அதிதி குமார் சர்மா மற்றும் சரிதா செளத்ரியை மீண்டும் பணியில் அமர்த்த
உத்தரவிட்டது. அதன்படி,
ஷாதோல் மாவட்ட ஜூனியர் பிரிவு சிவில் நீதிபதியாக அதிதி
குமார் சர்மா பணியாற்றி வந்தார். இதனிடையே, மாவட்ட நீதிபதி ராஜேஷ்
குமார் குப்தா தன்னை துன்புறுத்தியதாக அதிதி குமார் சர்மா தொடர்ந்து குற்றம் சாட்டி
வந்தார். இதனிடையே,
ராஜேஷ் குமார் குப்தாவுக்கு, மத்திய உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு கிடைத்தது.
இந்த நிலையில், கடந்த 28ஆம் தேதி நீதிபதி அதிதி குமார் சர்மா தனது பதவியை திடீரென ராஜினாமா
செய்துள்ளார். இது தொடர்பாக மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு
எழுதிய கடிதத்தில்,
‘நான் நீதித்துறைப் பணியிலிருந்து ராஜினாமா செய்கிறேன்.
நீதித்துறை தோல்வியடைந்ததால் ராஜினாமா செய்யவில்லை, நீதித்துறை என்னை தோல்வியடைய செய்துவிட்டது என்பதால் ராஜினாமா செய்கிறேன்.
அளவு கடந்த அதிகாரம் கொண்ட மூத்த நீதிபதிக்கு எதிராக நான் பேசியதால் பல ஆண்டுகளாக
தொடர் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டேன். நீதி கிடைக்காவிட்டாலும், குறைந்தபட்சம் ஒரு விசாரணையாவது நடத்தப்படும் என்ற நம்பிக்கையில் அனைத்து
நியாயமான வழிகளையும் பின்பற்றினேன். ஆனால், எனது துன்பத்திற்கு
காரணமானவர் விசாரிக்கப்படவில்லை. மாறாக அவருக்கு வெகுமதி அளிக்கப்பட்டு பதவி
உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சம்மனுக்கு பதிலாக கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச
உயர்நீதிமன்றத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட 6 பெண் நீதிபதிகளின் வழக்கு
தொடர்பான விசாரித்த உச்சநீதிமன்றம், நான்கு பேரை மட்டும்
மீண்டும் பணியில் அமர வைக்கப்பட்டனர். ஆனால், அதிதி குமார் சர்மா
மற்றும் சரிதா செளத்ரி ஆகியோ விலக்கப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம் பணிநீக்க முடிவு சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது
என்று கூறி அதிதி குமார் சர்மா மற்றும் சரிதா செளத்ரியை மீண்டும் பணியில் அமர்த்த
உத்தரவிட்டது. அதன்படி,
ஷாதோல் மாவட்ட ஜூனியர் பிரிவு சிவில் நீதிபதியாக அதிதி
குமார் சர்மா பணியாற்றி வந்தார். இதனிடையே, மாவட்ட நீதிபதி ராஜேஷ்
குமார் குப்தா தன்னை துன்புறுத்தியதாக அதிதி குமார் சர்மா தொடர்ந்து குற்றம்
சாட்டி வந்தார். இதனிடையே,
ராஜேஷ் குமார் குப்தாவுக்கு, மத்திய உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு கிடைத்தது.
இந்த நிலையில், கடந்த 28ஆம் தேதி நீதிபதி அதிதி குமார் சர்மா தனது பதவியை திடீரென ராஜினாமா
செய்துள்ளார். இது தொடர்பாக மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு
எழுதிய கடிதத்தில்,
‘நான் நீதித்துறைப் பணியிலிருந்து ராஜினாமா செய்கிறேன்.
நீதித்துறை தோல்வியடைந்ததால் ராஜினாமா செய்யவில்லை, நீதித்துறை என்னை தோல்வியடைய செய்துவிட்டது என்பதால் ராஜினாமா செய்கிறேன்.
அளவு கடந்த அதிகாரம் கொண்ட மூத்த நீதிபதிக்கு எதிராக நான் பேசியதால் பல ஆண்டுகளாக
தொடர் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டேன். நீதி கிடைக்காவிட்டாலும், குறைந்தபட்சம் ஒரு விசாரணையாவது நடத்தப்படும் என்ற நம்பிக்கையில் அனைத்து
நியாயமான வழிகளையும் பின்பற்றினேன். ஆனால், எனது துன்பத்திற்கு காரணமானவர்
விசாரிக்கப்படவில்லை. மாறாக அவருக்கு வெகுமதி அளிக்கப்பட்டு பதவி உயர்வு
வழங்கப்பட்டுள்ளது. சம்மனுக்கு பதிலாக கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது. ( நன்றி:
நக்கீரன்,
31/07/2025 )
இரண்டு
வழக்குகளிலும் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு எதிராகவே விசாரணை அமைப்புக்கள் செயல்பட்டிருப்பது
வெட்ட வெளிச்சமாகி இருக்கும் அதே வேளை குற்றம் சாட்டப்பட்ட நீதிபதிகள் குறைந்த
பட்ச விசாரணை வளையத்திற்குள் கூட கொண்டு வரப்படவில்லை என்பது தான் கவலை தரக்கூடிய
அம்சமாக உள்ளது.
நீதிமன்ற தீர்ப்புகளும், நீதிபதிகளும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா? என்றால் இல்லை என்றுதான் பதில் இருக்கிறது.
மறைந்த முன்னாள் முதல்வர்
ஜெயலலிதாவை நிரபராதி என்று விடுதலை செய்கிறேன். சசிகலா, சுதாகரன்,
இளவரசி ஆகியோருக்கு இந்த வழக்கில் பெரிய பங்கு இல்லை
என்பதால், அவர்களையும் விடுதலை செய்கிறேன்” என்று கர்நாடக உயர்
நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, மே 11, 2015 அன்று,
தீர்ப்பை வாசித்ததும், இணையதளம், ஃபேஸ்புக்,
ட்விட்டர், வாட்ஸ்அப் என தொலைத்
தொடர்பு சாதனங்கள் அனைத்தும் ‘நெட் டிராஃபிக்’ பிரச்னையில் சிக்கித் திணறின. அடுத்த சில நொடிகளில், சமூக வலைத்தளங்களின் ‘டிரெண்ட்’டில்,
டாப்பில் இருந்தவர்கள், ஜெயலலிதாவும் நீதிபதி
குமாரசாமியும்தான்.
அந்த சமயத்தில், சர்ச்சைக்குரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டார், தமிழ்நாடு –
பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர் செல்வம். அதில், ‘நீதிபதி குமாரசாமியையையும் அவருடைய தீர்ப்பையும் உள்நோக்கத்துடன் விமர்சனம்
செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்திருந்தார். அந்த அறிக்கையும் சமூக வலைத்தளங்களில் கடுமையான
விமர்சனத்துக்கு உள்ளானது.
பார் கவுன்சில்
தலைவர் செல்வத்தின் அறிக்கைக்குப் பதில் அளிக்கும் விதமாக, தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டது. அதில், ‘‘செல்வத்தின் இந்தக் கருத்து தவறானது. ஜனநாயக அமைப்பில், நீதிமன்றத் தீர்ப்பை யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். தமிழ்நாடு – பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர் நடுநிலைமையோடு நடந்து கொள்ள வேண்டும்” என்று சொல்லப்பட்டு இருந்தது.
நீதிபதிகள்
விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா? நீதிமன்றத் தீர்ப்புகளை
விமர்சிக்கக் கூடாதா?என்ற கேள்விகளை,
மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் முன்பாக
வைத்தோம். அவர்களின் கருத்துகள்…
‘‘அப்படியானால் மேல்முறையீடு செய்வதே தவறா?”
மூத்த வழக்கறிஞர்
துரைசாமி: “நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என்றால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாதே. மேல்முறையீட்டு வழக்கை
நடத்தும் வழக்கறிஞர்,
‘கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது. பொருத்தமில்லாதது.
நீதிபதி இந்த வழக்குக்குப் பொருந்தாத வகையில் தீர்ப்பளித்துள்ளார்’ என்று சொல்லித்தான் மனுச் செய்கிறார். அதை ஏற்றுக்கொண்டுதான் அந்த மனுவையே
விசாரணைக்கு எடுக்கிறது,
மேல் நீதிமன்றம்.
கீழ்
நீதிமன்றத்தில் நீதிபதி அளித்த தீர்ப்பு தவறானது என்று மேல் நீதிமன்றத்தில்
குறிப்பிடப்படுவதற்கு என்ன அர்த்தம்? அங்கு நீதிபதியும்
விமர்சிக்கப்படுகிறார் என்றுதான் அர்த்தம். அதேசமயம், நீதிபதிகளின் மீதான விமர்சனம், அவர் வழங்கிய தீர்ப்பின்
அடிப்படையில் இருக்கலாமே தவிர, தனிப்பட்ட முறையில்
இருக்கக் கூடாது. உதாரணத்துக்கு, ஜெயலலிதா வழக்கில்
கணக்கைக் தவறாகப் போட்டுக் காட்டி, ஜெயலலிதாவை விடுதலை
செய்துள்ள நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை விமர்சிக்கலாம். குமாரசாமி
தனக்கிருக்கும் அறிவை சரியாகப் பயன்படுத்தாமல் அல்லது முழுமையாகப் பயன்படுத்தாமல், தீர்ப்பை வழங்குவதில் தவறு செய்துள்ளார் என்று குறிப்பிட்டால் அது தவறில்லை.
அதாவது, விமர்சனம் தவறில்லை. ஆனால், உள்நோக்கம் கற்பிப்பது
தவறு. ஒரு நீதிபதி உள்நோக்கத்துடன் இந்தத் தீர்ப்பை எழுதி உள்ளார், ஆதாயம் அடைந்துள்ளார்,
பணம் வாங்கி உள்ளார் என்று விமர்சித்தால், அது உள்நோக்கம் கொண்ட விமர்சனம். அது தவறு.
1956-ம் ஆண்டு, திருச்சி மாவட்ட கலெக்டராக இருந்தவர் மலையப்பன். அவர் பிறப்பித்த மாவட்ட
உத்தரவு ஒன்றை எதிர்த்து,
அந்தப் பகுதி நிலச்சுவான்தார்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில்,
வழக்குக்கும் தீர்ப்புக்கும் சம்பந்தம் இல்லாத வகையில், தனிப்பட்ட முறையில் கலெக்டர் மலையப்பனைக் கடுமையாகச் சாடி இருந்தனர். அத்துடன், மலையப்பனுக்கு பதவி உயர்வு கொடுக்கக் கூடாது என்றெல்லாம் குறிப்பிட்டு
தீர்ப்பெழுதி இருந்தனர். இதையடுத்து, டிவிஷன் பெஞ்ச்
நீதிபதிகளின் தீர்ப்பில் உள்நோக்கம் உள்ளது என்று சொல்லி அந்தத் தீர்ப்பை பெரியார்
தீயிட்டுக் கொளுத்தினார். பெரியார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத்
தொடுக்கப்பட்டது.
அந்த வழக்கை
விசாரித்த நீதிபதிகள் வி.வி.ராஜமன்னார், பஞ்சாபசேச அய்யர் ஆகியோர்
முன்பாக,
பெரியார் 75 பக்கத்தில் தனது பதிலைக்
கொடுத்தார். அதில்,
மலையப்பன் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்
என்பதால்தான்,
டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அவரை இப்படிச் சாடி உள்ளனர்
என்று குற்றம்சாட்டினார் பெரியார். இதையடுத்து நீதிபதிகள், ‘தீர்ப்பை பெரியார் விமர்சனம் செய்தது தவறில்லை. ஆனால், தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளின் சாதியைக் குறிப்பிட்டு பெரியார் உள்நோக்கம் கற்பித்தது தவறு’ என்று சொல்லி அவருக்கு
நூறு ரூபாய் அபராதம் விதித்தனர். ஒரு தீர்ப்பைப் பற்றிய விமர்சனத்துக்கும்
உள்நோக்கத்தோடு விமர்சிப்பதுக்கும் உள்ள வித்தியாசத்துக்கு இந்த வழக்குதான் சிறந்த
உதாரணம்.”
ஆரோக்கியமான விமர்சனங்களுக்குத் தடையில்லை!
ஓய்வுபெற்ற உயர்
நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு: “தீர்ப்புகளை ஆரோக்கியமாக விமர்சனம்
செய்வதற்கு சட்டத்தில் தடையில்லை. 1971-ம் வருட நீதிமன்ற
அவமதிப்பு சட்டத்தின்
ஐந்தாவது பிரிவில், ‘ஒரு வழக்கு
விசாரிக்கப்பட்டு,
இறுதியாகத் தீர்ப்பு வழங்கியபின் அதன்மீது வைக்கப்படும்
நியாயமான விமர்சனம் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படாது’ என்று கூறப்பட்டுள்ளது. 1993-ல் உச்ச நீதிமன்றம் ரோஷன்லால்
அகுஜா என்ற வழக்கில் கொடுத்த தீர்ப்பில், ‘நீதிபதிகளும், நீதிமன்றங்களும் முறையான, நியாயமான விமர்சனங்களைப்
பார்த்து உணர்ச்சிவசப்படாமலும், பாதிக்கப்படாமலும்
இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று மற்ற
நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சமீபகாலங்களில், இந்தியாவில் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில்
பொதுவெளியில் கவனத்தைப் பெறுவதுடன் விமர்சனத்துக்கும் உள்ளாக்கப்படுகின்றன.
ஒரு வகையில், இந்தப் போக்கு வரவேற்கத்தக்கது. அதேசமயத்தில், மக்கள் தாங்கள் விரும்பும் தலைவர்கள் மற்றும் கலைஞர்கள் குற்றத்துக்கு உள்ளாகி
தண்டனை பெறும்போது உணர்ச்சிவசப்பட்டு சட்டத்தின் வரையறை புரியாமல் எதிர்ப்பு
தெரிவிக்க முயலுவது வருந்தத்தக்கது. சட்டத்தின் மாட்சியை அது அவமானத்துக்கு
உள்ளாக்குகிறது. இப்படிப்பட்ட சூழலில் அட்வகேட் ஜெனரல் அல்லது அவருடைய அனுமதியைப்
பெற்ற தனிநபர் மட்டுமே அவதூறு வழக்குத் தொடரலாம். நினைத்தவர்கள் எல்லாம் வழக்குத்
தொடங்க முடியாது.
குற்றம்
நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதம் சிறை அல்லது 2,000 ரூபாய் அபராதம்
அல்லது இரண்டும் வழங்கப்படும். இப்படி நீதிமன்றங்களை முறைகேடாக விமர்சனம் செய்து
தண்டனை பெற்றவர்கள் ஏராளம்!”. ( நன்றி: செந்தில்வயல்.வேர்ட்ப்ரஸ்.காம், 20/05/2015 )
இஸ்லாத்தின் நிலைப்பாடு…
உயர்
பொறுப்பில் இரூப்பவர்கள் மீது விமர்சனங்களே எழுப்பக்கூடாது, அவர்களை விசாரணை வளையத்திற்குள்ளேயே கொண்டு வரக் கூடாது
என்ற எந்த சட்டமும் இந்த உலகில் இல்லை.
இஸ்லாமிய
வரலாற்றில் உயர் பொறுப்பில் வாகாய் சிறந்து விளங்கிய பல்வேறு சிறந்த மனிதர்கள் மீது
இது போன்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. வழக்குகள் தொடரப்பட்டு அவர்களும் விசாரணை
வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு நீதியும் நியாயமும் நிலைநாட்டப்பட்டுள்ள பல்வேறு
நிகழ்வுகளை குறிப்பிடலாம்.
இஸ்லாம்
மனித சமூகத்தை அவர்களின் அனைத்து தளங்களிலும் நீதி செலுத்தி வாழுமாறு பணிக்கிறது.
வலியுறுத்துகிறது.
நீதி
செலுத்தும் அதிகாரம் படைத்தவர்களிடத்தில் நீதியே முதன்மையாக இடம் பெற்றிருக்க
வேண்டும் என்று ஆணையிடுகிறது.
இஸ்லாத்தில்
“அல் – அத்ல்”
எனும் நீதிக்கு வழங்கப்படும் முக்கியத்துவம்…
இஸ்லாத்தில் அல்
– அத்ல் நீதி மற்றும்
நீதிபரிபாலனம் பற்றிய வரையறை
மிக உயர்ந்த பண்பாடாக
அடையாளப்படுத்தப்படுகின்றது.
நீதி பரிபாலனம்
என்பது நபித்துவப் பணிகளில்
ஒன்றாக அல்குர்ஆனின் பல
வசனங்கள் பறை சாற்றுகின்றது.
இன்னும் சொல்லப்போனால்
நீதி பரிபாலனம் என்பது
வணக்க வழிபாடுகளில் ஒன்றாக
கருதப்படுகின்றது.
மனித சமூகங்களுக்காக அனுப்பப்பட்ட அனைத்து
நபிமார்களும், இறைதூதுவர்களாக வாழ்ந்து
வந்த அதே வேளையில்
நீதியை நிலை நாட்டும்
நீதிபதிகளாகவும் செயல்பட்டார்கள் என அல்குர்ஆன்
குறிப்பிடுகின்றது.
لَقَدْ أَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنَاتِ وَأَنْزَلْنَا مَعَهُمُ
الْكِتَابَ وَالْمِيزَانَ لِيَقُومَ النَّاسُ بِالْقِسْطِ
“நமது தூதர்களைத்
தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம்.
அவர்களுடன் வேதத்தையும் மக்களுக்கு
நீதியினை நிலை நாட்ட
தராசையும் நாம் அருளினோம்”.
( அல்குர்ஆன்:
57: 25 )
இறுதியாக வந்த
இறைத்தூதர் முஹம்மது {ஸல்}
அவர்களுக்கு வழங்கப்பட்ட பணிகளில்
நீதித்துறையும் இருந்ததாக குர்ஆன்
குறிப்பிடுகின்றது.
فَاحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ
“அல்லாஹ் அருளியதன்
அடிப்படையில் அவர்களிடையே (நபியே!)
நீர் தீர்ப்பளிப்பீராக!” (
அல்குர்ஆன்: 5: 48 )
இது தவிர்த்து
அல்குர்ஆனின் பல இடங்களில்
நீதிபரிபாலனம் குறித்து மிகத்
தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.
நீதி பரிபாலனம்,
நீதி, நீதமான நடத்தை
ஆகியவைகள் இஸ்லாமிய வாழ்வியல்
கோட்பாட்டில் தவிர்க்க முடியாத
அடிப்படை என்பதே அல்குர்ஆனின்
அநேக வசனங்களின் கருத்துமாகும்.
وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ
“மக்களுக்கு மத்தியில்
தீர்ப்பளிக்கும் போது
நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க
வேண்டும் எனவும் அல்லாஹ்
உங்களுக்கு கட்டளையிடுகின்றான்”. (அல்குஆன்:4:
58 )
“எனது அடியார்களே!
நிச்சயமாக, என் மீது
நானே அநீதியைத் தடை
செய்துள்ளேன். அது போன்றே
உங்கள் மீதும் அதனைத்
தடை செய்துள்ளேன். எனவே,
நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதி
இழைக்க வேண்டாம்” என்கிற
இந்த வார்த்தை அல்லாஹ்வின்
கலாமைச் சுமந்து நிற்கிற
ஹதீஸ் குத்ஸியாகும்.
இறைத்தூதுத்துவத்தின் இலட்சியமும்,
இலக்கும் மனிதர்களிடையே அநீதியை
ஒழித்து நீதியை நிலைநாட்டுவது
என்கிற இந்த அடிப்படை
கோட்பாடே “நீதிக்கான இஸ்லாத்தின்
நிலைப்பாட்டை” தெரிவிக்க போதுமானதாகும்.
நீதி வழங்கும்
ஒருவர் ஒரு வழக்கில்
தனக்கு எப்படி தீர்ப்பு
வழங்கப்பட்ட வேண்டுமென்று அவர்
எதிர் பார்க்கின்றாரோ அவ்வாறே
தன்னிடம் நீதி கேட்டு
வந்து நிற்பவர்களுக்கும் தீர்ப்பு
வழங்க வேண்டும் என்று
சர்வதேச சட்டம் கூறுகின்றது.
ஆனால், இஸ்லாமிய
மார்க்கம் அதையும் தாண்டி
“நீங்கள் வழங்கும் தீர்ப்பு
உங்களுக்கே விரோதமாக இருந்தாலும்
கூட நீதி தவறாதீர்கள்”
என்கிறது.
يَاأَيُّهَا
الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ وَلَا
يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ
لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ (8)
“இறைநம்பிக்கை கொண்டவர்களே!
நீங்கள் அல்லாஹ்வுக்காக வாய்மையில்
நிலைத்திருப்போராகவும், நீதிக்கு சான்று
வழங்குவோராகவும் திகழுங்கள்!
எந்த ஒரு கூடத்தார்
மீதும் நீங்கள் கொண்டுள்ள
பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்து
விடக்கூடாது. நீங்கள் நீதி
செலுத்துங்கள்! இதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானதாகும்.
அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்! நீங்கள்
செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவனாக
இருக்கின்றான்”. ( அல்குர்ஆன்:
5: 8 )
يَاأَيُّهَا
الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ
عَلَى أَنْفُسِكُمْ أَوِ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ إِنْ يَكُنْ غَنِيًّا
أَوْ فَقِيرًا فَاللَّهُ أَوْلَى بِهِمَا فَلَا تَتَّبِعُوا الْهَوَى أَنْ
تَعْدِلُوا وَإِنْ تَلْوُوا أَوْ تُعْرِضُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا
تَعْمَلُونَ خَبِيرًا (135)
“இறைநம்பிக்கை கொண்டவர்களே!
நீங்கள் நீதியைக் கடைப்பிடிப்போராகவும்,
அல்லாஹ்வுக்காக சான்று வழங்குவோராகவும் திகழுங்கள்! நீங்கள்
செலுத்தும் நீதியும், வழங்குகின்ற
சான்றும் உங்களுக்கோ, உங்கள்
பெற்றோருக்கோ, நெருங்கிய உறவினருக்கோ
பாதகமாக இருந்தாலும் சரியே!
நீங்கள் யாருக்காக நீதியும்,
சான்றும் வழங்குகின்றீர்களோ அவர்
செல்வந்தராகவோ, ஏழையாகவோ இருந்தாலும்
சரியே! அல்லாஹ் அவர்களின்
நலனில் உங்களை விட
அதிக அக்கறை உள்ளவனாக
இருக்கின்றான்.
எனவே, மன
இச்சையைப் பின்பற்றி நீதி
தவறி விடாதீர்கள். நீங்கள்
உண்மைக்குப் புறம்பாக சான்று
வழங்கினாலோ, சான்றளிக்காமல் விலகிச்
சென்றாலோ திண்ணமாக! அல்லாஹ்
நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கறிந்தவனாக
இருக்கின்றான்”. ( அல்குர்ஆன்:
4: 135 )
நீதி
செலுத்துவதில்…
அல்லாஹ்
அல்குர்ஆனின் மூலம் பல இடங்களில் சக மனிதர்களுடனான விவகாரங்களில் நீதி வழுவாமல்
வாழுமாறு ஏவுகிறான்.
வாழ்க்கையின் முழு பகுதியிலும் நீதி…
إِنَّ
اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى
“திண்ணமாக, அல்லாஹ் நீதி செலுத்தி வாழும் படியும், பிறருக்கு நலன் செய்து
வாழும் படியும்,
உறவினர்களுக்கு ஈந்து வாழும் படியும் உங்களுக்கு ஏவுகிறான்.” (அல்குர் ஆன்:16:90)
பேசுவதில் நீதி…
وَإِذَا
قُلْتُمْ فَاعْدِلُوا
”இன்னும் பேசும் போது
நீதியுடன் பேசுங்கள்! (அல்குர்ஆன்:6:152)
அளவை,
நிறுவையில் நீதி…
وَأَوْفُوا
الْكَيْلَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ
”மேலும், அளவையிலும்,
நிறுவையிலும் நீதியைக் கடைப்பிடியுங்கள்!” (அல்குர்ஆன்: 6:152)
திருமண உறவில் நீதி…
فَانْكِحُوا
مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ
أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى
أَلَّا تَعُولُوا
“உங்களுக்கு விருப்பமான
பெண்களை இரண்டிரண்டாக,
மும்மூன்றாக, நான்கு நான்காக
மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால், அவர்களிடையே நீதமாக
நடந்திட இயலாது என நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக்
கொள்ளுங்கள்;
அல்லது உங்கள் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே
மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமல் வாழ்வதற்கு இதுவே மிக நெருக்கமானதாகும்.” (அல்குர்ஆன்:4:3)
எழுத்தில் நீதி…
يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُسَمًّى
فَاكْتُبُوهُ وَلْيَكْتُبْ بَيْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ
இறை
நம்பிக்கையாளர்களே! ஒரு குறிப்பிட்ட தவணையை நிர்ணயித்து நீங்கள் உங்களுக்குள் கடன்
கொடுக்கல்,
வாங்கல் மேற்கொண்டால், அதை எழுதி வைத்துக்
கொள்ளுங்கள். உங்களுக்கிடையே ஓர் எழுத்தாளர் நீதியோடு எழுத வேண்டும்.” (அல்குர்ஆன்:2:282)
சமாதானத்தில் நீதி..
فَإِنْ
فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ
الْمُقْسِطِينَ
அவர்கள்
சமாதானத்தின் பால் திரும்பி விட்டால், அவர்களிடையே நீதியுடன்
சமாதானம் செய்து வையுங்கள்! இன்னும், நீதி செலுத்துங்கள்! அல்லாஹ்
நீதி செலுத்துபவர்களை நேசிக்கிறான்.” (அல்குர்ஆன்:49:9)
தீர்ப்பில் நீதி…
إِنَّ
اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا وَإِذَا
حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ
(முஸ்லிம்களே!) அல்லாஹ்
உங்களுக்கு கட்டளையிடுகின்றான். அமானிதம் – அடைக்கலப் பொருள்களை
அவற்றிற்குரியவர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடுங்கள்; நீங்கள் மக்களின் விவகாரங்களில் தீர்ப்பு வழங்கினால் நீதத்துடன் தீர்ப்பு
வழங்குங்கள்!”
(அல்குர்ஆன்:4:58)
ஆக,வாழ்வில் நீதி என்பது எந்த அளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை மேற்கூறிய
இறைவசனங்களின் மூலம் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.
1) வழக்கு விசாரணைக்காக அழைக்கட்ட “தலைமை நீதிபதி”…
أن عمر
لقي العباس يوماً, فقال له: يا عباس لقد سمعت رسول الله صلَّى الله عليه وسلَّم
قبل موته يريد أن يزيد في المسجد، وإن دارك قريبة من المسجد، فاعطنا إيّاها نزدها
فيه، وأقطع لك أوسع منها مع التعويض،
فقال له
العباس: لا أفعل، قال عمر: إذاً أغلبك عليها ، أنا صاحب السلطة ، فأصدر لها أمرَ
استملاك، فأجابه العباس: ليس ذلك لك، فاجعل بيني وبينك من يقضي بالحق، فقال عمر:
من تختار؟, قال العباس: حذيفة بن اليمان،
وبدلاً
أن يستدعي سيدنا عمر حذيفة إلى مجلسه، انتقل عمر والعباس إليه، لماذا؟ لأن القاضي
يؤتى ولا يأتي، والعلم يؤتى ولا يأتي، هكذا الأدب،
حذيفة
الآن يمثل القضاء، وأحد الخصوم سيدنا عمر، خليفة المسلمين، وأمام حذيفة جلس عمر
والعباس، وقصا عليه الخلاف الذي بينهما،
فقال
حذيفة: سمعت أن نبي الله داود عليه السلام أراد أن يزيد في بيت المقدس، فوجد بيتاً
قريبـاً من المسجد، وكان هذا البيت ليتيم، فطلبه منه فأبى، فأراد داود أن يأخذه
قهراً، فأوحى الله إليه أن أنزه البيوت عن الظلم هو بيتي، فعدل داود، وتركه لصاحبه
، فالعباس نظر إلى عمر، وقال: ألا تزال تريد أن
تغلبني على ذلك؟، فقال له عمر: لا والله,
فقال العباس: ومع هذا, فقد أعطيتك الدار تزيدها
في مسجد رسول الله عليه الصلاة والسلام، أنا سوف أعطيها لك من عندي تبرعاً، أما أن
تغلبني عليها فلا تستطيع، وحذيفة هو القاضي بيننا .
உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஒரு நாள்
உமர் (ரலி) அவர்கள்,
அப்பாஸ் (ரலி) அவர்களை சந்திக்க அவர்களின் வீட்டிற்குச்
சென்றார்கள்
உரையாடலின் போது உமர் (ரலி) அவர்கள்,
அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நபி {ஸல்} அவர்கள் தாங்கள் உயிரோடு இருக்கும் போதே
மஸ்ஜிதுன் நபவீயை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று என்னிடம் விருப்பம்
தெரிவித்தார்கள்.
ஆனால், அந்த விருப்பத்தை நிறைவு செய்யும்
முன்னதாகவே அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களை மரணம் தழுவிக் கொண்டது.
ஆகவே, நான் நபி
{ஸல்} அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றலாம் என நினைக்கிறேன்” என்று கூறினார்கள்.
அது கேட்ட அப்பாஸ் (ரலி) அவர்கள்
”ஓ தாராளமாக
நிறைவேற்றுங்கள்! இதையெல்லாமா என்னிடம் நீங்கள்
கேட்பீர்கள்?” என்றார்கள்.
அதற்கு, உமர் (ரலி) அவர்கள் விஷயம் அதுவல்ல! மஸ்ஜிதுன் நபவீயை விரிவாக்கம் செய்ய வேண்டுமானால் அதற்கு சுற்றியுள்ள இடங்கள்
தேவைப்படுகிறது.
மஸ்ஜிதுன் நபவீயை ஒட்டினாற்போல் உங்களின் வீடும் இருக்கிறது; விரிவாக்கம் செய்வதற்கு உங்களின் வீட்டை விட்டுக் கொடுத்தீர்களானால், அதற்கு சிறந்த, தகுதியான பகரத்தை உங்களுக்குத் தருவதாக
நான் உறுதியளிக்கின்றேன்” என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட அப்பாஸ் (ரலி) அவர்கள்
“இல்லை, என்னால் தர இயலாது” என்று கூறி விட்டார்கள்.
இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள்
“ஒன்றும்
பிரச்சனையில்லை, நீங்கள் தர மறுக்கிற போது
ஆட்சியதிகாரத்தை வைத்து உமது நிலத்தை கையகப்படுத்த எமக்கு முழு சுதந்திரம்
இருக்கிறது” என்று கூறினார்.
அதற்கு, அப்பாஸ்
(ரலி) அவர்கள் “உம்முடைய அதிகாரத்திற்கு அதற்கான
சுதந்திரம் வழங்கப்பட வில்லை, உம்முடைய அதிகாரத்திற்கு அது அழகும் இல்லை” என்று கூறி விட்டு, என்னுடைய உரிமையை பறிக்கிற உம்
அதிகாரத்திற்கெதிராக நான் வழக்கு தொடுக்கப் போகின்றேன்” என்றார்கள்.
”ஆட்சியாளர் நான் இருக்க எனக்கு எதிராக
யாரிடம் வழக்கு தொடுப்பீர்? யார் எம்மை அழைத்து விசாரிக்கத் தைரியம்
படைத்தவர்கள்?” என்று கோபாவேசத்தோடு சீறவில்லை உமர் (ரலி) அவர்கள்.
அமைதியான குரலில் உமர் (ரலி) அவர்கள்
“சரி! இந்த விவகாரத்தில் நீர் யாரை நீதிபதியாக தேர்ந்தெடுக்கின்றீரோ அவர் வழங்கும்
நீதிக்கு இந்த உமர் கட்டுப்படுவார்” என்று கூறினார்கள்.
அதற்கு, அப்பாஸ்
(ரலி) அவர்கள் இந்த விவகாரத்தில் தீர்ப்பு வழங்க நபித்தோழர் ஹுதைஃபா இப்னு அல் யமான் (ரலி) அவர்களிடம் நாம் இருவரும் செல்வோம்” என்றார்கள்.
ஹுதைஃபா (ரலி) அவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். மஸ்ஜிதுன் நபவீ முழுவதிலும் நபித்தோழர்கள் நிறைந்து காணப்பட்டனர்.
பின்னர் அப்பாஸ் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அழைக்கப்பட்டு அவர்களின் வாதப்
பிரதிவாதங்களை கேட்டறிந்தார்கள் இடைக்கால சிறப்பு நீதிபதி ஹுதைஃபா (ரலி) அவர்கள்.
ஏனென்றால், ஃகலீஃபா அவர்கள் தான் இஸ்லாமிய தேசத்தின்
பிரதான நீதிபதி, அதற்கு அடுத்து அந்தந்த மாகாண ஆளுநர்கள்
நீதிபதியாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.
இப்போது, பிரதான நீதிபதி ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்களின் மீது தான் அப்பாஸ் (ரலி) அதிகார துஷ்பிரயோக வழக்கு
தொடர்ந்திருந்தார்கள்.
முதலில் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஹுதைஃபா (ரலி) அவர்கள் வழக்கு குறித்து விசாரித்தார்கள்.
பின்னர், இந்தக் குற்றச்சாட்டு குறித்து உமர்
அவர்களே! உங்களின் நிலைப் பாடு என்ன? என்று ஹுதைஃபா (ரலி) அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு, உமர் (ரலி) அவர்கள்
“நீதிபதி அவர்களே! நான் என் சொந்த காரியத்திற்காக நிலம் கையகப்படுத்த என் அதிகாரத்தைப் பயன்
படுத்துவேன்! என்று கூறவில்லை.
மாறாக, முஃமின்களோடு தொடர்புடைய ஒரு
விவகாரத்தில், அல்லாஹ்வின் இல்லம் சம்பத்தப்பட்ட ஓர்
விஷயத்தில் அதுவும் முதலில் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அந்த இடத்திற்கு ஈடாக சிறந்த
பகரம் செய்யப்படும் என்று வாக்குறுதி தந்தேன். அவர் மறுக்கவே, எனக்கு வழங்கப்பட்டிருக்கிற ஆட்சியதிகாரத்தின் துணை கொண்டு நான் உம் நிலத்தை
கையகப் படுத்துவேன்” என்று கூறினேன்.
எனவே, நான் எப்படி குற்றமிழைத்தவனாக
கருதப்படுவேன்!” என்று உமர் (ரலி) அவர்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களைப் பார்த்துக் கேட்டார்கள்.
அதற்கு, ஹுதைஃபா
(ரலி) அவர்கள் “உமர் அவர்களே! நபி {ஸல்} அவர்கள் கூற நான் செவியேற்றிருக்கின்றேன் “அல்லாஹ்வின் தூதர் தாவூத் {அலை} அவர்கள் பைத்துல் முகத்தஸ் பள்ளியை
நிர்மாணிக்க ஆயத்தமான போது, இட விசாலத்திற்காக அருகே இருந்த ஓர்
அநாதைச் சிறுவனுக்குச் சொந்தமான இடத்தை அவனின் அனுமதி பெறாமலே பள்ளியின் ஒரு
பகுதியாகச் சேர்த்த போது அல்லாஹ் தம் தூதர் தாவூத்
{அலை} அவர்களை அழைத்துச் சொன்னானாம் “ஓ தாவூதே!
அநியாயமாக
அபகரிக்கப்பட்ட இடத்தை விட்டும் தூய்மையானதாக என்னை வணங்கும் இடம் அமைந்திருக்க
வேண்டுமென்று” அதற்குப் பின்னர் அந்த இடத்தை விட்டு
விட்டு தாவூத் {அலை} அவர்கள் பைத்துல் முகத்தஸை கட்டினார்கள்.”
உமரே! உம் நோக்கம் உயர்வாக இருப்பினும் அதைக்
கையாண்ட விதம் தவறானது! என்று கூறினார்கள்.
அப்போது, அப்பாஸ்
(ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடம் ”இதற்கு மேலும் எம்மிடம் இருந்து நீர் வலுக்கட்டாயமாக எம் வீட்டை பறித்துக்
கொள்வீரா?” என்று கேட்டார்கள்.
அதற்கு, உமர் (ரலி) அவர்கள்
“அல்லாஹ்வின்
மீது சத்தியமாக! ஒரு போதும் நான் உம்மிடம் அப்படி நடந்து
கொள்ள மாட்டேன்” என உறுதி கூறினார்கள்.
அதற்குப் பிறகு, அப்பாஸ்
(ரலி) அவர்கள் ”தங்களுடைய வீட்டை எந்தப் பிரதிபலனும்
வேண்டாம்” என்று கூறி ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். அதன் பின்னர் மஸ்ஜிதுன் நபவீ விரிவாக்கம் செய்யப்பட்டது. ( நூல்: ஃகுலஃபாவுர் ரஸூல் {ஸல்}, பக்கம்:147
)
இங்கே, நாட்டின்
ஆட்சியாளர், தலைமை நீதிபதி உமர் (ரலி)
அவர்கள் குற்றவாளிக் கூண்டில்
நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். ஆனால், நீதியின் அடிப்படையில் அவர்களுக்கு
எதிராகத் தான் தீர்ப்பு வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்ட போது, தமக்கு முன்னால்
இருக்கிற அழுத்தம், கால நிர்பந்தம் எதையும் கவனத்தில் கொள்ளாமல் ஹுதைஃபா (ரலி)
அவர்கள் தீர்ப்பு வழங்கினார்கள்.
2)
நாட்டின் உச்சபட்ச Superior நீதிபதியின்
குடும்ப சாட்சியம் செல்லாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி....
هَذِهِ
دِرْعِي سَقَطَتْ عَنْ جَمَلٍ لِي فِي لَيْلَةِ كَذَا وَفِى
مَكَانِ
كَذَا بَلْ هِيَ دِرْعِي وَفِى يَدِي يَا أَمِيرَ الْمُؤْمِنِين
إِنَّمَا
هِيَ دِرْعِي ، لَمْ أَبِعْهَا مِنْ اَحْدٍ وَلَمْ أَهَبْهَا لِأَحَدٍ حَتَّى
تَصِيرَ إِلَيْكَ بَيْنِي وَبَيْنَكَ قَاضَى الْمُسْلِمِينَ
نَعَمْ
مَوْلَايَ قَنْبَرٌ وَوَلَدِي الْحَسَنُ يَشْهَدَانِ لِي
يَا
سُبْحَانَ اللَّهِ ! رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ لَا تَجُوزُ شَهَادَتُهُ ؟ !
أَمَا سَمِعْتَ إِنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَى وَسَلَّمَ - قَالَ :
" اَلْحَسَنُ وَالْحُسَيْنُ سَيِّدَا شَبَابِ أَهْلِ الْجَنَّةِ
بَلَى
يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ ، غَيْرَ أَنِّى لَا أُجِيزُ شَهَادَةَ الْوَلَدِ
لِوَالِدِهِ خُذْهَا فَلَيْسَ عِنْدِي شَاهِدٌ غَيْرُهُمَا
)
ஒருநாள் ஜனாதிபதி
அலீ (ரலி) அவர்களின் கவச ஆடை ஒன்று காணாமல் போய்விட்டது. அந்த கவச ஆடையை (இஸ்லாமிய
அரசிடம் வரி செலுத்தி வாழ்கின்ற சகோதர சமயத்தவர் எனும்) திம்மி காஃபிர் ஒருவர்
கூஃபா நகரத்தின் சந்தையில் விற்றுக் கொண்டிருந்தார். இதை அடையாளம் கண்ட அலீ (ரலி)
அவர்கள் அந்த திம்மி காஃபிரிடம், “இது என்னுடைய கவச ஆடை.
இன்ன இடத்தில் இன்ன இரவில் எனது ஒட்டகத்திலிருந்து இது கீழே விழுந்து
தவறிவிட்டது" என்று கூறி, கேட்டார்கள்.
திம்மி காஃபிர், ( ஜனாதிபதி அவர்களே! அந்த கவச ஆடை என்னுடையதுதான். இதோ என் கையில் இருக்கிறது
பாருங்கள்" என்று கூறினார்.
அலீ (ரலி) அவர்கள், "நிச்சயமாக இந்த கவச ஆடை என்னுடையது தான். இதை நான் யாரிடத்திலும் விற்கவும்
இல்லை; யாருக்கும் அன்பளிப்பாகவும் வழங்கவும் இல்லை; எப்படியோ இது உன்னிடம் வந்து சேர்ந்துவிட்டது. (எனவே, அதை என்னிடம் தந்துவிடுவீராக)" என்று கூறினார்கள்.
திம்மி காஃபிர்,"உங்களுக்கும் எனக்கும் இடையே (அழகிய முறையில்) தீர்ப்பளிக்கக்கூடிய ஓர்
முஸ்லிம் நீதிபதியிடம் செல்லுவோம் வாருங்கள்" என்று கூறினார்.
இருவரும் நீதிபதி
ஷுரைஹ் (ரஹ்) அவர்களிடம் சென்று தத்தமது வாதத்தை முன் வைத்தனர். விவரத்தை
கேட்டறிந்த நீதிபதி ஷுரைஹ் (ரஹ்) அவர்கள், "ஜனாதிபதி அவர்களே! இந்த கவச ஆடை உங்களுடையது என்பதற்கு இரண்டு சாட்சிகள்
வேண்டும் இருக்கிறதா?"
என்று கேட்டார்.
அலீ (ரலி) அவர்கள், "ஆம்! என்னுடைய அடிமை கன்பர் மற்றும் என்னுடைய மகன் ஹசன் ஆகிய இருவரும்
எனக்குரிய சாட்சியாளர்கள் ஆகும்" என்றார்கள்.
நீதிபதி ஷுரைஹ்
(ரஹ்) அவர்கள்,
ஜனாதிபதி அவர்களே! தந்தைக்கு ஆதரவாக மகனுடைய சாட்சியம்
ஏற்கப்பட மாட்டாது" என்று கூறினார்கள்.
அலீ (ரலி) அவர்கள், “சுப்ஹானல்லாஹ்! சொர்க்கவாசிகளில் ஒருவரை சாட்சியாக ஏற்றுக்கொள்ள முடியாதா? ஹசன் ஹுசைன் ஆகிய இருவரும் சொர்க்கவாசிகளில் உள்ள வாலிபர்களின் தலைவர்கள்
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை நீங்கள்
கேள்விபட்டதில்லையா?" என்றார்கள்.
நீதிபதி ஷுரைஹ்
(ரஹ்) அவர்கள்,
“ஆம் அறிவேன். இருந்தாலும், தந்தைக்கு ஆதரவாக மகனின் சாட்சியை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
அலீ (ரலி) அவர்கள், திம்மி காஃபிரை நோக்கி!
"இந்த கவச ஆடையை நீயே எடுத்துக்கொள். இந்த இரண்டு பேரை
தவிர்த்து என்னிடம் வேறு சாட்சியாளர்கள் இல்லை" என்று கூறினார்கள்.
وَلَكِنِّي اَشْهَدُ بِأَنَّ الدِّرْعَ لَكَ يَا أَمِيرَ
الْمُؤْمِنِينَ
يَا
اللَّهُ أَمِيرَ الْمُؤْمِنِينَ يُقَاضِينِي أَمَامَ قَاضِيهِ وَقَاضِيهِ يَقْضَى
لِي عَلَيْهِ اَشْهَدُ أَنَّ الدِّينَ الَّذِي يَأْمُرُ بِهَذَا لَحَقٌّ اعْلَمْ
أَيُّهَا الْقَاضِي أَنَّ الدِّرْعَ دِرْعُ أَمِيرِ الْمُؤْمِنِينَ ، وَاَنَّنِى
اتَّبَعْتُ الْجَيْشَ وَهُوَ مُنْطَلِقٌ إِلَى " صِفِّينَ " فَسَقَطَتِ
الدِّرْعُ عَنْ جَمَلِهِ فَأَخَذْتُهَا أَمَا وَانَّكَ قَدْ أَسْلَمْتَ فَأَنَّى
وَهَبْتُهَا لَكَ وَوَهَبْتُ لَكَ مَعَهَا هَذَا الْفَرَسَ أَيْضًا
திம்மி காஃபிர், "ஜனாதிபதி அவர்களே! இந்த கவச ஆடை உங்களுடையதுதான் என்று நான் சாட்சி
சொல்லுகிறேன். ( இறைவா! முஸ்லிம்களின் தலைவர் (ஜனாதிபதி அவர்கள்) என்னை குறித்து நீதிபதியிடம்
தீர்ப்புக் கேட்கிறார். நீதிபதியோ ஜனாதிபதிக்கு எதிராக தீர்ப்பளிக்கிறார். இந்த சத்தியத்தைத் தான், இந்த மார்க்கம்
எடுத்துரைக்கிறது என்று நான் சாட்சியம் பகிருகிறேன்" என்று கூறினார். பிறகு
ஷஹாதத் கலிமா கூறி இஸ்லாமானார்.
பிறகு திம்மி
காஃபிர், “நீதிபதி அவர்களே அறிந்து கொள்ளுங்கள்! இந்த கவச ஆடை ஜனாதிபதி
அவர்களுடையதுதான். ஜனாதிபதி அவர்கள் ஸிஃப்பீன் போருக்கு சென்றபோது நான் அந்தப்
படையினரைப் பின்தொடர்ந்தேன். அப்போது அவர்களின் ஒட்டகத்திலிருந்து இந்த கவச ஆடை
கீழே விழுந்துவிட்டது. அதை நான் எடுத்துக் கொண்டேன்” என்று கூறினார்.
அலீ (ரலி) அவர்கள்
அவரிடம், "இப்போது நீர் முஸ்லிமாகிவிட்டீர். எனவே, அந்த கவச ஆடையை உனக்கே
நான் அன்பளிப்பு செய்துவிட்டேன். மேலும், இதோ இந்தக் குதிரையையும்
உனக்கு நான் அன்பளிப்பு செய்கின்றேன்" என்று கூறி அவரிடம் கொடுத்தார்கள்.
இமாம் ஷஅபீ (ரஹ்)
அவர்கள் கூறுகிறார்கள். அதன் பிறகு அந்த மனிதர் (பெரும் குழப்பவாதிகளான)
ஹவாரிஜியாக்களுக்கு எதிராக நடைபெற்ற 'நஹ்ரவான்' போரில் அலீ (ரலி) அவர்களுடன் கலந்து கொண்டு கொல்லப்பட்டு உயிர்த்தியாகி ஆனார்.
( நூல்:- ஸுவரும் மின் ஹயாத்துத் தாபிஈன் )
3)
சாமானியரின் முறையீடும், நீதிபதியின் மீதான விசாரணையும்...
أن عمرو
بن العاص رضى الله عنه، عندما كان واليًّا على مصر فى خلافة أمير المؤمنين عمر بن
الخطاب رضى الله عنه، اشترك ابنٌ لعمرو بن العاص مع غلام من الأقباط فى سباق
للخيول، فضرب ابن الأمير الغلام القبطى اعتمادًا على سلطان أبيه، وأن الآخر لا
يمكنه الانتقام منه؛ فقام والد الغلام القبطى المضروب بالسفر بصحبة ابنه إلى
المدينة المنورة، فلما أتى أمير المؤمنين عمر رضى الله عنه، بَيَّن له ما وقع،
فكتب أمير المؤمنين إلى عمرو بن العاص أن يحضر إلى المدينة المنورة صحبة ابنه،
فلما حضر الجميع عند أمير المؤمنين عمر، ناول عمر الغلام القبطى سوطًا وأمره أن
يقتص لنفسه من ابن عمرو بن العاص، فضربه حتى رأى أنه قد استوفى حقه وشفا ما فى
نفسه. ثم قال له أمير المؤمنين: لو ضربت عمرو بن العاص ما منعتك؛ لأن الغلام إنما
ضربك لسطان أبيه، ثم التفت إلى عمرو بن العاص قائلاً: متى استعبدتم الناس وقد ولدتهم
أمهاتهم أحرارا؟.
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் காலத்தில் எகிப்தின் ஆளுநராக அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒரு முறை எகிப்தில் ஒட்டகப் பந்தயம் நடந்தது. அதில் கவர்னர் அம்ரின் மகன் முஹம்மதுவும் கலந்து கொண்டார்.
அவரது ஒட்டகை முதலில் ஒடிக் கொண்டிருந்தது. திடீரென எகிப்தை பூர்வீகமாக கொண்ட ஒரு கிப்தி இன இளைஞன் அவரை முந்திச் சென்றான். அப்படி முந்திச் செல்லும் போது அவனது வாயிலிருந்து ஒரு ஆவேச வாக்கியம் வெளிப்பட்டது.
அது முஹம்மதை கோபப்படுத்தி விட்டது. அவர் அந்த இளைஞரை நோக்கி இந்தா பிடி! நான் பிரமுகரின் மகனாக்கும்! (குத்ஹா! வ அன இப்னுல் முக்ரமீன்) என்று சொல்லி ஓங்கி ஒரு குத்து விட்டார். கவர்னரின் மகன் தன்னை தாக்கியிருப்தால் அந்த எகிப்திய இளைஞர் நேரே மதீனாவுக்கு வந்து ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் முறையிட்டார்.
உடனடியாக உமர் (ரலி) அவர்கள் ஆளுநர் அம்ரையும் அவரது மகனையும் தலைநகருக்கு வரும்படி உத்தரவிட்டார்கள். அவர்கள் வந்ததும், அரசாங்க மண்டபத்தில் வைத்து விசாரித்துவிட்டு எகிப்திய இளைஞரின் கையில் சவுக்கை கொடுத்து உம்மை தாக்கிய முஹம்மதை அடி என்றார்கள். அவ்விளைஞர் அப்படியே செய்தார். அவர் இப்னு அம்ர அவர்களை அடித்து முடித்ததும் ஆளுநர் அம்ரை சுட்டிக்காட்டி இவரையும் அடி என்றார்கள். அந்த இளைஞர் அதிர்ந்து போனார். இவர் என்னை ஒன்றும் செய்ய வில்லையே என்று கூறினார்.
அப்போது, உமர் (ரலி) அவர்கள் அவருடைய மகன் உன்னை அடிப்பதற்கு அவரது தந்தை ஆளுநர் என்ற எண்ணம்தான் காரணம். ( இன்னமா லரபக இப்னுஹு பி ஸுல்தானி அபீஹி ).
அத்தகைய எண்ணத்தை மகனுக்கு கெடுத்தததற்கு இவரையும் நீ அடிக்கலாம் என்றார்கள். அந்த வாலிபர் ஆளுநரை அடிக்கத் தயங்கினார்.
அப்படியானால், அது உம் இஷ்டம் என்று கூறிய உமர் (ரலி) அவர்கள் ஆளுநர் அம்ர் (ரலி) அவர்களைப் பார்த்து ( மதா தஅப்பத்துமுன்னாஸ வகத் வலதத்ஹும் உம்முஹாத்துஹும் அஹ்ராரா )
எப்போதிருந்து நீங்கள் மக்களை அடிமைகளாக கருத ஆரம்பித்தீர்கள். அவர்கiளுடைய தாய்மர்கள் அவர்களை சுதந்திர மனிதர்களாக பெற்றெடுத் திருக்கிறார்கள் என்று கேட்டார்கள். ( நூல்: குலஃபாவுர் ரஸூல் {ஸல்}... )
நீதிபதிகளும், நீதிமன்றங்களும் விமர்சனங்களுக்கு உட்படாதவாறு தங்களது
செயல்பாடுகளை அமைத்துக் கொள்வது நாட்டுக்கு நன்மை பயக்கும்!!