Tuesday, 3 March 2026

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 15. இபாதுர் ரஹ்மான்களின் குணம் பெறுவோம்!!!

 

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 15.

இபாதுர் ரஹ்மான்களின் குணம் பெறுவோம்!!!



14 –ஆவது நோன்பை நிறைவு செய்து, 15 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு அடுத்த நோன்பு நோற்பதற்கான ஆயத்தப்பணிகளில் நாம் ஈடுபட்டு இருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் அந்நூர், அல் ஃபுர்கான், அஷ் ஷுஅரா ஆகிய சூராக்கள் ஓதப்பட்டுள்ளன.

இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட சூரா அல்ஃபுர்கானின் 63 வது ஆயத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இபாதுர் ரஹ்மான் எனப்படும் தனது விசேஷமான அடியார்களிடம் காணப்படும் சில பண்புகளை சிலாகித்து கூறுகிறான். 

63 முதல் 75 வரையிலான 13 வசனங்கள் ஊடாக சுமார் 13 பண்புகளை பட்டியல் இடுகின்றான். அதில் ஒன்று அவர்கள் செலவினங்களில் நடுத்தரமாக சிக்கனமாக செயல்படுவார்கள்.

وَالَّذِينَ إِذَا أَنْفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَامًا

அவர்கள் (தர்மம்) அல்லது செலவு செய்தால் அளவு கடந்துவிட மாட்டார்கள்; கஞ்சத்தனமும் செய்யமாட்டார்கள். இதற்கு மத்திய தரத்தில் செய்வார்கள். ( அல்குர்ஆன்: 25 : 67 )

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களின் ஸுஹ்து நூலில் இருந்து இமாம் ஹசன் பஸரி ரஹ் அவர்களின் கூற்றை பதிவு செய்துள்ளார்கள்.

حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنِي هَارُونُ، حَدَّثَنَا سَيَّارٌ، حَدَّثَنَا جَعْفَرٌ، حَدَّثَنَا الْمُعَلَّى بْنُ زِيَادٍ قَالَ: سَمِعْتُ الْحَسَنَ، «يَحْلِفُ بِاللهِ مَا عَالَ مُقْتَصِدٌ قَطُّ

இமாம் ஹஸன் பஸரி ரஹ் அவர்கள் சொன்னார்கள்:- சிக்கனமாக செலவு செய்கிறவர் ஒருபோதும் பிறரிடம் தேவையாக மாட்டார் என்று.

செல்வத்தின் ஆரம்ப நிலையில் இருப்பவர்களும் செல்வத்தின் மத்திய நிலையில் இருப்பவர்களும் செல்வத்தின் உச்சத்தில் இருப்பவர்களும் கால சூழ்நிலைகள் மாறக்கூடியவை என்பதை மறந்து விடக்கூடாது.

ஒருவர் ஏழ்மையான சூழலில் வாழ்வதால் அவர் வாழ்நாள் எல்லாம் ஏழையாக இருப்பார் என்றோ அர்த்தமல்ல. ஒருவர் செல்வச் செழிப்பான சூழலில் வாழ்வதால் அவர் வாழ்நாள் எல்லாம் செல்வந்தராக இருப்பார் என்றோ கருதி விடக் கூடாது.

மாறாக, ஏழையை செல்வந்தனாக ஆக்குவதும் செல்வந்தனை ஏழையாக்குவதும் அல்லாஹ் தனது ஞானத்தின் படி செய்து முடிக்கிறான். எல்லாம் இந்த உலகத்தில் ஒரு சோதனைதான். 

ஆகவே, பணம் இல்லாத போது பரிதவிப்பதும், நெருக்கடியான சூழலில் நிலை குலைந்து போவதும், பணம் வரும் போது பந்தா பண்ணுவதும் தவிர்க்க வேண்டும்.

தனது வருங்கால தேவைகளை கவனத்தில் வைக்க வேண்டும். தனது குடும்பம், தனது பிள்ளைகளின் எதிர்கால கல்வி, மருத்துவம் திருமணம் போன்ற பல தேவைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஓரளவிற்கு நல்ல சேமிப்பு இருப்பதை மார்க்கம் குறை சொல்லவில்லை. ஸகாத்தை நாம் சரியாக கொடுத்துவிட்டால் நாம் செல்வத்தை சேமிப்பதில் மார்க்கம் நம்மை குற்றம் பிடிக்காது.

இந்த இறைவசனத்தில் இரண்டு தீய பண்புகளை விட்டும் அவர்கள் தவிர்ந்து வாழ்வார்கள் என்று அல்லாஹ் அடையாளப் படுத்துகின்றான்.

1) வீண் விரயம் செய்யாமல் வாழ்வார்கள். 2) கருமித்தனம் செய்யாமல் வாழ்வார்கள்.

இதற்கான காரணங்களை அல்லாஹ் இன்னொரு வசனத்தில் குறிப்பிடுவான்.

وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُومًا مَحْسُورًا

(உமது பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது) உமது கைகளைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர்! (உம்மிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து) உமது கையை முற்றிலும் விரித்து விடாதீர்! அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும் முடைப்பட்டவராகவும் தங்கிவிடுவீர். ( அல்குர்ஆன்: 17 : 29 )

கருமித்தனம் செய்யும் போது பிறரால் நிந்திக்கப்படும் சூழலையும், வீண் விரயம் செய்யும் போது ஒன்றுமில்லாம் பரிதவிப்புக்கு ஆளாகும் சூழலையும் வாழ்க்கையில் எதிர் கொள்ள வேண்டி வரும்.

عبدالملك بن مروان عندما أراد أن يزوِّج ابنته فاطمةَ لعمرَ بنِ عبدالعزيز، امتحنه، وسأله هذا السؤال؛ ليعرف ميزانه في الحياة وكيفية عيشه؛ فقال له: يا عمر ما نفقتك؟ (أي: كيف تنفق مالك؟) فقال عمر بن عبدالعزيز: يا أمير المؤمنين، نفقتي حسنة بين سيئتين؛ ثم تلا هذه الآية: ﴿ وَالَّذِينَ إِذَا أَنْفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَامًا ﴾ [الفرقان: 67]؛ فالسيئة الأولى هي الإسراف، والسيئة الثانية هي الإقتار؛ وهو البخل، والحسنة التي بينهما: الوسطية والاعتدال في النفقة، فعلِمَ عبدالملك أهلية عمر للزواج بابنته فاطمة، فزوَّجها له.

கலீஃபா அப்துல் மலிக் இப்னு மர்வான் (ரஹ்) அவர்கள் தமது மகள் ஃபாத்திமாவை உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களுக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்பினார்கள். தமக்கு மருமகனாக வரப்போகிற அவருடைய Lifestyle - வாழ்க்கைப் போங்கு எப்படி இருக்கிறது? என்பதை பரிசோதிக்க விரும்பினார்கள். அதற்காக ஒரு முறை அவர்களை சந்தித்து உரையாடி விட்டு, உரையாடல் இடையே உமரே! உம்முடைய செலவு செய்யும் முறை என்னவோ? எப்படி செலவு செய்கிறீர்? என்று கேட்டார்கள்.

அதற்கு உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் "அமீருல் முஃமினீன் அவர்களே! இரண்டு தீமைகளுக்கு மத்தியில் அழகிய முறையில் அமைந்த செலவு செய்கிறேன்" என்று கூறி மேற்கூறிய இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள். தொடர்ந்து உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் முதலாவது தீமை வீண் விரயம் இரண்டாவது தீமை கஞ்சத்தனம், அழகிய முறையில் அமைந்த செலவு என்பது செலவு செய்வதிலே நடுநிலை மற்றும் மற்றும் மத்தியஸ்தமான நிலையாகும் என்று கூறி முடித்தார்கள்.

இதன் பின்னர் இது குறித்து தமது குடும்பத்தினருடன் பேசி தமது மகளுக்கு பொருத்தமான கணவர் இவர் தான் என்று முடிவெடுத்து உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்களுக்கே தமது மகள் ஃபாத்திமாவை திருமணம் செய்து கொடுத்தார்கள்.

நமது பயன்பாட்டின் தேவைக்கு ஏற்ப நாம் செலவிட வேண்டும்..

இன்று நம்மிடையே நுகர்வுக் கலாச்சாரம் பெருகி விட்டது. நமது வீட்டில் நாம் பயன்படுத்தும் எந்தப் பொருளும் அடுத்த முறை தொடர்ந்து பயன் படுத்தும் பொருட்கள் அல்ல. மாறாக, பொருட்களை மாற்றிக் கொண்டே இருக்கின்றோம்.

அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து, பைக், கார், மொபைல், கம்யூட்டர், லேப்டாப் என மின்னனு சாதனங்கள் வரை இந்த நுகர்வு கலாச்சாரம் பெருகி விட்டது.

நபி அவர்களின் வீட்டில் அவர்கள் பயன்படுத்தும் அன்றாடத் தேவைகளுக்கான சாதனங்கள் எவ்வாறு இருந்தது என்பதை எடுத்துக் கூறும் இரண்டு வரலாற்று நிகழ்வுகள்....

وفي صَحيحِ البخاريِّ أنَّ عُمرَ بنَ الخطَّابِ دخَل عليه صلَّى الله عليه وسلَّم وهو في مَشرُبَتِه، فوَجَده نائمًا على حَصيرٍ ما بَيْنَه وبَيْنَه شَيءٌ، وتَحْتَ رَأْسِه وِسادَةٌ مِنْ أَدَمٍ حَشْوُها لِيفٌ، وقال عُمرُ: "فرَأيتُ أثَرَ الحَصيرِ في جَنْبِه، فبَكَيْتُ، فقال: ما يُبْكيكَ؟ فقُلْتُ: يا رسولَ اللهِ، إنَّ كِسْرى وقَيْصَرَ فيما هُما فيه وأَنتَ رَسولُ اللهِ. فقال: أمَا تَرضَى أن تَكونَ لهمُ الدُّنيا ولَنَا الآخِرَةُ؟"،

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:- நான் அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் சென்றேன். அவர்கள் ஒரு பாயில் சாய்ந்து படுத்திருந்தார்கள். நான் அமர்ந்ததும் அவர்கள் தமது வேஷ்டியை தம் மீது நீட்டி (ஒழுங்குபடுத்தி)ப்போட்டுக்கொண்டார்கள். அப்போது அவர்கள் உடலில் அந்த ஆடையைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அந்தப் பாய் அவர்களது விலாப் புறத்தில் அடையாளம் பதித்திருந்தது. அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் அவர்களது கருவூல அறையை நோட்டமிட்டேன். அங்கு ஒரு "ஸாஉ" அளவு வாற்கோதுமையும், அறையின் ஒரு மூலையில் அதே அளவு கருவேல இலையும் இருந்தன. நன்கு பதனிடப்படாத ஒரு தோல் அங்கு தொங்கவிடப்பட்டிருந்தது. 

(இதைக் கண்ட) என் கண்கள் (என்னையும் அறியாமல்) கண்ணீர் சொரிந்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள், "கத்தாபின் புதல்வரே! ஏன் அழுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் நபியே! என்னால் எவ்வாறு அழாமலிருக்க முடியும்? இந்தப் பாய் உங்களது விலாப் புறத்தில் அடையாளப்படுத்தியுள்ளதே. (இதோ) இதுதான் உங்களது கருவூல அறை; இதில் நான் காணுகின்ற (விலை மலிவான) சில பொருட்களைத் தவிர வேறெதையும் நான் காணவில்லை. அந்த (பாரசீகம் மற்றும் இத்தாலி அரசர்களான) குஸ்ருவும் சீசரும் கனி வர்க்கங்களிலும் நதிகளிலும் (உல்லாசமாக) இருக்கின்றனர். நீங்களோ அல்லாஹ்வின் தூதரும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவீர்கள். ஆனால், உங்களது கருவூல அறை இவ்வாறு இருக்கிறதே!" என்றேன். 

அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள், "கத்தாபின் புதல்வரே! நமக்கு மறுமையும் அவர்களுக்கு இம்மையும் இருப்பது உங்களுக்குத் திருப்தி இல்லையா?" என்று கேட்டார்கள். நான் "ஆம் (திருப்திதான்)" என்றேன். ( நூல்: புகாரி )

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ حَدَّثَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ الْمُهَلَّبِيُّ، عَنْ مُجَالِدِ بْنِ سَعِيدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: دَخَلَتْ عَلَيَّ امْرَأَةٌ مِنَ الْأَنْصَارِ، فَرَأَتْ فِرَاشَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبَاءَةً ثَنِيَّةً، فَانْطَلَقَتْ، فَبَعَثَتْ إِلَيَّ بِفِرَاشٍ حَشْوُهُ الصُّوفُ، فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَا هَذَا يَا عَائِشَةُ؟» ، قَالَتْ

 فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ فُلَانَةُ الْأَنْصَارِيَّةُ دَخَلَتْ عَلَيَّ، فَرَأَتْ فِرَاشَكَ، فَذَهَبَتْ، فَبَعَثَتْ إِلَيَّ بِهَذَا، فَقَالَ: «رُدِّيهِ يَا عَائِشَةُ» ، قَالَتْ: فَلَمْ أَرُدَّهُ، وَأَعْجَبَنِي أَنْ يَكُونَ فِي بَيْتِي، حَتَّى قَالَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ، قَالَتْ: فَقَالَ: «رُدِّيهِ يَا عَائِشَةُ فَوَاللَّهِ لَوْ

شِئْتُ لَأَجْرَى اللَّهُ عَزَّ وَجَلَّ مَعِيَ جِبَالَ الذَّهَبِ وَالْفِضَّةِ

ஒரு நாள் வெளியில் சென்றிருந்த மாநபி {ஸல்} அவர்கள் வீட்டிற்குள் நுழைகின்றார்கள். நபிகளாரின் புருவம் வியப்பால் உயர்கிறது. ஆம்! தாம் அமரும் இடத்தைப் பார்க்கின்றார்கள். அங்கே அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய புத்தம் புதிய விரிப்பொன்று விரிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறார்கள்.

இப்போது, நபி {ஸல்} அவர்கள் வீட்டின் இன்னொரு புறத்தில் அமர்ந்திருந்த தமது அருமைத்துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி ஆயிஷாவே! நான் காணும் இந்த விரிப்பு என்ன? எங்கிருந்து வந்தது? யார் தந்தது?” என அன்பொழுக வினவினார்கள்.

அதற்கு, அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அன்ஸாரிப் பெண்மணி ஒருவர் வந்தார். என்னோடு அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது உங்களுடைய விரிப்பைப் பார்த்து இது யாருடையது? எனக் கேட்டார். நான் அல்லாஹ்வின் தூதருடையது என்றேன். அதற்கு, அந்தப் பெண்மணி இந்த இத்துப்போன, கிழிசல் உடைய பழைய விரிப்பிலேயா அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அமர்வார்கள்? உறங்குவார்கள்?” என்று கேட்டு விட்டு நேராக வீட்டிற்குச் சென்றார். பின்னர், நீங்கள் காணும் இந்த அழகிய விரிப்பைக் கொடுத்தனுப்பினார்என்று பதில் கூறினார்கள்.

இது கேட்டதும் அண்ணலாரின் முகம் மாறிப்போனது. ஆயிஷாவே! இதை அந்த அன்ஸாரிப் பெண்மணியிடம் சென்று திருப்பிக் கொடுத்து விட்டு வாருங்கள்!என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அதற்கு, ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! விரிப்பு பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கின்றதே! அவசியம் திருப்பிக் கொடுக்க வேண்டுமா?” என்று கேட்டார்கள்.

அப்போது, அண்ணலார் ஆயிஷாவே! இதை அந்த அன்ஸாரிப் பெண்மணியிடம் சென்று திருப்பிக் கொடுத்து விட்டு வாருங்கள்!என்று நபி {ஸல்} அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.

பின்னர், ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி ஆயிஷாவே! நான் விரும்பி கேட்டால் இதோ இருக்கிற இந்த மலைகளை ( அருகில் தெரிந்த மலைகளை காட்டி) தங்கமாகவும், வெள்ளியாகவும் அல்லாஹ் மாற்றித் தந்து விடுவான்என்று கூறினார்கள்.

பொதுவாகவே நபி {ஸல்} அவர்கள் அன்பளிப்புகளை யார் கொடுத்தாலும் அக மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்களாகவே இருந்தார்கள். இருந்தும் இங்கே அந்த அன்ஸாரிப் பெண்மணியிடம் திருப்பிக் கொடுக்கச் சொல்கின்றார்கள் என்றால்…? வேறொன்றுமில்லை, அந்தப் பெண்மணி அண்ணலாரின் மீது அனுதாபப்பட்டு அந்த விரிப்பைக் கொடுத்தார்கள்.

كان النبيُّ صلى الله عليه وسلم يسأل الله ويقول: {اللهم أسألك خشيتك في الغيب والشهادة. وأسألك كلمة الإخلاص في الغضب والرضى. وأسألك القصج في الفقر والغنى} رواه النسائي والحاكم. والقصد هنا هو: الإقتصاد والإعتدال.

நபி அவர்கள் "அல்லாஹ்வே! உன்னிடம் மறைவிலும், வெளிப்படையிலும் உன்னுடைய பயத்தை எனக்கு தர வேண்டும் என கேட்கிறேன். நல்ல திருப்தியான நிலையிலும், கோபமான நிலையிலும் தூய்மையான வார்த்தைகள் என் நாவில் இருந்து வெளிப்பட வேண்டும் என கேட்கிறேன். ஏழ்மையான சூழலிலும், செல்வச் செழிப்பான சூழலிலும் நடுவு நிலைமையை எனக்கு தர வேண்டும் என கேட்கிறேன்" என்று நபி அவர்கள் துஆச் செய்தார்கள். ( நூல்: நஸாயி )

வீண் விரய செலவுகளை தவிர்க்க வேண்டும்..

عن أنس رضي الله عنه قال: ((أتى رجل من بني تميم رسولَ الله صلى الله عليه وسلم، فقال: يا رسول الله، إني ذو مال كثير، وذو أهل وولد وحاضرة، فأخبرني كيف أنفق؟ وكيف أصنع؟ فقال رسول الله صلى الله عليه وسلم: تُخرِج الزكاة من مالك؛ فإنها طُهرة تطهرك، وتصل أقرباءك، وتعرف حق السائل والجار والمسكين، فقال: يا رسول الله، أقْلِلْ لي، قال: ﴿ وَآتِ ذَا الْقُرْبَى حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا ﴾ [الإسراء: 26]

அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:- பனூ தமீம் கிளையாரைச் சேர்ந்த ஒருவர் நபி அவர்களைச் சந்தித்து "அல்லாஹ்வின் தூதரே! நான் பெரிய குடும்பத்தில் பிறந்தவன். எனக்கு பெருமளவில் பொருளாதாரம் இருக்கிறது. நான் எப்படி செலவு செய்ய வேண்டும்? என்று கேட்டார். உம் செல்வத்துக்கான ஜகாத்தை வழங்கி வருவீராக! அது உம்மையும் உமது செல்வத்தையும் தூய்மையாக்கும்! மேலும், அந்த செல்வத்தின் மூலமாக உமது இரத்த உறவுகளை அரவணைத்து செல்வீராக! மேலும், ஏழைகள், அண்டை அயலார், பாத சாரிகள் மற்றும் யாசிப்போர் ஆகியோரை இனம் கண்டு அவர்களுக்கும் உமது செல்வத்தில் இருந்து செலவு செய்து வருவீராக! என்று நபி அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்"அல்லாஹ்வின் தூதரே! சற்று குறைத்துச் சொல்லுங்கள்!" என்றார். அதற்கு, நபி அவர்கள் அல்குர்ஆனின் சூரா இஸ்ராவின் 26 -வது வசனத்தை "இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக; மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரையஞ் செய்யாதீர்" ஓதிக் காண்பித்தார்கள். ( நூல்: அஹ்மத் )

கஞ்சத்தனம் தவிர்க்க வேண்டும்...

عَنْ أَبِي الهَيَّاجِ الأَسَدِيِّ رحمه الله قَالَ: (كُنْتُ أَطُوفُ بِالبَيْتِ، فَرَأَيْتُ رَجُلًا يَقُولُ: "اللَّهُمَّ قِنِي شُحَّ نَفْسِي". لَا يَزِيدُ عَلَى ذَلِكَ، فَقُلْتُ لَهُ، فَقَالَ: "إِنِّي إِذَا وُقِيتُ شُحَّ نَفْسِي؛ لَمْ أَسْرِقْ، وَلَمْ أَزْنِ، وَلَمْ أَفْعَلْ". وَإِذَا الرَّجُلُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رضي الله عنه

அபில் ஹய்யாஜில் அஸதி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நான் கஅபா ஆலயத்தை (தவாஃப்) வலம் வந்துகொண்டிருந்தேன். அப்போது, "அல்லாஹ்வே! என்னுடைய மனதை கருமித்தனத்தில் இருந்து காப்பாற்றுவாயாக! என்று ஒரு மனிதர் பிரார்த்தனை செய்வதைப் பார்த்தேன். அதைவிட அதிகமாக அவர் எதுவும் கூறவில்லை. அதைப்பற்றி நான் அவரிடம் கேட்டேன். அவர், என் மனதின் கருமித்தனத்திலிருந்து நான் காப்பாற்றப்பட்டால், நான் திருடாமலும் விபச்சாரம் போன்ற தீமைகளைச் செய்யாமலும் வேறு எந்தத் தவறுகளையும் செய்யாமலும் இருப்பேன்" என்றார். பிறகு (அவர் யாரென உற்று) பார்த்தபோது அந்த மனிதர் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள்தாம்" என்றார்கள். ( நூல்: நிதாஆத்திர் ரஹ்மான் லிஅபீபக்ரில் ஜஸாயிரீ )

عَنْ ثَوْبَانَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:-«أَفْضَلُ دِينَارٍ يُنْفِقُهُ الرَّجُلُ، دِينَارٌ يُنْفِقُهُ عَلَى عِيَالِهِ، وَدِينَارٌ يُنْفِقُهُ الرَّجُلُ عَلَى دَابَّتِهِ فِي سَبِيلِ اللهِ، وَدِينَارٌ يُنْفِقُهُ عَلَى أَصْحَابِهِ فِي سَبِيلِ اللهِ» [رواه مسلم] -

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: "ஒரு மனிதர் தம் குடும்பத் தாருக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசும் (தீனார்), அல்லாஹ்வின் பாதையில் தமது வாகனத்திற்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசும், அல்லாஹ்வின் பாதையில் தம் நண்பர்களுக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசுமே அவர் செலவிடுகின்ற பொற்காசுகளிலேயே சிறந்ததாகும். அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி), ( நூல்: முஸ்லிம் )

عَنْ عَائِشَةَ رضي الله عنها: " أَنَّ هِنْدَ بِنْتَ عُتْبَةَ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ، وَلَيْسَ يُعْطِينِي مَا يَكْفِينِي وَوَلَدِي، إِلَّا مَا أَخَذْتُ مِنْهُ وَهُوَ لاَ يَعْلَمُ، فَقَالَ: (خُذِي مَا يَكْفِيكِ وَوَلَدَكِ، بِالْمَعْرُوفِ) رواه البخاري (5364)، ومسلم (1714).

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: (ஒருமுறை) ஹின்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் நபி அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூசுப்யான் கருமியான மனிதராக இருக்கின்றார். எனக்கும், என் குழந்தைக்கும் செலவுக்கு போதிய பணத்தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டதைத்தவிர (போதுமான பணத்தை அவர் தர மாட்டார்) என்று கூறினார். அதற்கு அண்ணலார் "உனக்கும், உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக் கொள்!" என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

சேமிப்பு இருந்தால் தான் அல்லாஹ்விற்கு பிடித்தமான வழியில் செலவு செய்ய முடியும்...

வாழ்க்கையில் சிக்கனமாக செலவு செய்தால் தான் செல்வத்தை சேமிக்க முடியும். சேமிக்கும் செல்வத்தைக் கொண்டு ஈருலகத்தின் நலவான காரியங்களுக்கு திறம்பட செலவு செய்யவும் முடியும்.

مَرَّ عبدالله بن عمر (رضي الله عنهما) مع أصحاب له في بعض نواحي المدينة، فوضعوا سُفرةً، فمرَّ بهم راعي غنمٍ، فسلَّمَ، فقال ابن عمر: هَلُمَّ يا راعي، هَلُمَّ، فأصِب من هذه السفرة، فقال: إني صائمٌ، فقال ابن عمر: أتصوم في هذا اليوم الحار وأنت في هذه الجبال ترعى هذه الغنم؟ فقال: أي والله أُبادر أيامي الخالية، فقال له ابن عمر - وهو يريد أن يختبر ورعه وتقواه -: بِعْنا شاةً من هذه الغنم نُعطيك ثمنها ونعطيك من لحمها، فقال: إنها ليستْ لي، إنها غنم سيدي، فقال ابن عمر: فما عسى سيدك فاعلًا إذا فقدها، فقلت: أكلها الذئب؟ فولَّى الراعي مدبرًا، وقد رفع أُصبعه إلى السماء، يقول: أين الله؟ فجعل ابن عمر يرددها: أين الله؟ أين الله؟ فلما قدم ابن عمر المدينة بعث إلى مولاه - مولى الراعي - فاشترى منه الغنم واشترى منه الراعي، فأعتق الراعي ووهب له الغنم". (رواه الاحمد فى الزهد، الداء والدواء لابن القيم )

 

ஒரு நாள் இப்னு உமர் ரலி அவர்கள் மதீனாவின் சுற்றுப் புறங்களை சுற்றிப் பார்க்க நண்பர்களுடன் சென்றார்கள். ஒரு மர நிழலில் நண்பர்களுடன் அமர்ந்து தேநீர் பருக அமர்ந்தார்கள். அப்போது அங்கே ஆட்டிடையன் ஒருவன் ஆடு மேய்த்துக் கொண்டே இவர்களின் அருகே கடந்து சென்றான். கடந்து செல்லும் போது அமர்ந்திருக்கும் அனைவருக்கும் ஸலாம் கூறினான். அப்போது, இப்னு உமர் ரலி அவர்கள் அந்த ஆட்டியனை தம்மோடு அமர்ந்து சாப்பிட அழைத்தார்கள். அதற்கவன்"நான் நோன்பு நோற்றுள்ளேன்" என்றான். கடுமையான வெயில் காலத்தில், அதுவும் பாலைவன சுடு மணலில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் நீ நோன்பு நோற்றிருக்கின்றாயா? என்று ஆச்சர்யம் மேலிட கேட்டு விட்டு, நாங்கள் காசு தருகிறோம். உன் மந்தையில் இருக்கும் ஆட்டில் ஒரு ஆட்டை எங்களுக்கு நீ தந்து விடு. நாங்கள் அதை அறுத்து எங்களுக்கு போக மீதமுள்ள இறைச்சியையும் உனக்கு தந்து விடுகின்றோம்? என்ன சொல்கின்றாய்? தருகின்றாயா? என்று இப்னு உமர் ரலி அவர்கள் கேட்டார்கள்.

அதற்கவன், இந்த ஆடுகளின் உரிமையாளர் நான் இல்லை. இது என் எஜமானின் மந்தை என்று பதிலளித்தான்.

அப்போது, இப்னு உமர் ரலி அவர்கள் இவ்வளவு பெரிய மந்தையில் ஒரு ஆடு இல்லாமல் போனதையா உன் எஜமான் கேட்கப் போகின்றார். அப்படியே கேட்டாலும் ஓநாய் இழுத்துச் சென்று விட்டது என்று கூறி விடு என்று கூறினார்கள்.

அதற்கு அந்த ஆட்டிடையன் ஏதோ சிந்தித்தவனாக வானத்தை நோக்கி தன் ஆட்காட்டி விரலை உயர்த்தி "அப்படி என்றால் அல்லாஹ் எங்கிருக்கின்றான்? (அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இதை எல்லாம் பார்த்து கொண்டு தானே இருக்கின்றான் என்ற கருத்து பட) என்று மூன்று முறை கேட்டான்.

அங்கிருந்து விடை பெற்று மதீனா வந்த இப்னு உமர் (ரலி) அவர்கள் தாம் சேமித்து வைத்திருந்த பணத்தை தமது அடிமை ராஃபிஉ அவர்களிடம் கொடுத்து அந்த மந்தையின் உரிமையாளரிடம் ஒட்டுமொத்த மந்தையையும், அந்த இடையனையும் விலைக்கு வாங்கி வருமாறு கூறினார்கள். ராஃபிஉ அவர்களும் அது போன்றே செய்தார்.

பின்னர், அந்த இடையனை உரிமை விட்டு அந்த மந்தை முழுவதையும் அந்த இடையனுக்கே அன்பளிப்பாக வழங்கினார்கள். ( நூல்: அஸ் ஸுஹ்து லிஇமாமி அஹ்மத், அத் தாவு வத் தவாஃ லிஇமாமி இப்னுல் கய்யிம் )

சில நேரங்களில் நமது மனம் அல்லாஹ்விற்கு விருப்பமான அமல் ஒன்றைச் செய்ய விரும்பும். அப்போது அதற்கான செல்வம் நம்மிடம் இல்லை என்றால் அதை நாம் செய்ய முடியாமல் போய் விடும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி அவர்களைப் போலவே மிகவும் எளிமையாக வாழ்பவர், மிகவும் பேணுதலான வாழ்க்கைக்கு சொந்தக்காரர் எனினும் சிக்கனமாக செலவு செய்து சேமிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். ஆகவே தான் அவர்களால் அல்லாஹ் விரும்பும் உயரிய ஒரு அமலை செய்ய முடிந்தது.

عَنْ أَبِي هُرَيْرَةَ

 قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: أَيُّمَا امْرِئٍ مُسْلِمٍ أَعْتَقَ امْرَأً مُسْلِمًا، اسْتَنْقَذَ اللَّهُ بِكُلِّ عُضْوٍ مِنْهُ عُضْوًا مِنْهُ مِنَ النَّارِ. مُتَّفَقٌ عَلَيْهِ.

நபி அவர்கள் கூறினார்கள்: எவர் முஸ்லிமான அடிமை ஒருவரை விடுதலை செய்வாரோ அல்லாஹ் ரப்புல் ஆலமீன் விடுதலை செய்யப்பட்டவரின் ஒவ்வொரு உறுப்புக்கும் பகரமாக விடுதலை செய்தவரின் உறுப்புகளை நரகில் இருந்து விடுதலை செய்கின்றான். ( நூல்: புகாரி, முஸ்லிம் )

சேமிப்பு இருந்தால் தான் சந்ததிகளை கௌரவமாக வாழ வைக்க முடியும்..

ஒரு மனிதர் நபிகளாரின் அவையில் வந்து அல்லாஹ்வின் தூதரே! இரு தந்தையர்களில் யார் சிறந்தவர்? ஒருவர் மார்க்க விழுமியங்களோடு வாழ்கிறார், அத்தோடு தமது சந்ததியினருக்கு விசாலமான பொருளாதாரத்தையும் விட்டுச் செல்கின்றார்.

இன்னொருவர், மார்க்க விழுமியத்தோடு வாழ்கிறார். ஆனால் தமது சந்ததியினருக்கு தேவையான அளவுக்கு பொருளாதார வசதியை ஏற்படுத்தாமல் சென்று விடுகின்றார்என்று.

அதற்கு, “இருவரில் முதலாமவரே சிறந்த தந்தையாவார்என மாநபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். ( நூல்: தர்ஃகீப் அத் தர்ஹீப் )

عن الزّهري عن عامر بن سعد بن أبيه أنّ رسول الله صلّى الله عليه وسلّم جاء يعوده عام حجّة الوداع من وجعٍ اشتدّ به، فقلت: (يا رسول الله، إنّي ذو مال ولا يرثني إلّا ابنة، أفأتصدّق بثلثي مالي؟

 فقال صلّى الله عليه وسلم: لا، قلت: فالشّطر يا رسول الله؟ قال رسول الله عليه الصلاة والسلام: لا، 

قلت: فالثّلث؟ 

فأجاب رسول الله صلّى الله عليه وسلم: الثّلث والثّلث كثير، إنّك إن تذر ورثتك أغنياء خيرٌ من أن تذرهم عالة يتكفّفون النّاس،

ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: இறுதி ஹஜ்ஜின் போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி அவர்கள் இருந்தார்கள்.

அப்போது நான் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் மரணத் தருவாயை அடைந்து விட்டேன் எனக் கருதுகின்றேன். நான் செல்வந்தன்; என்னுடைய ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுக்காரர்களில்லை.

எனவே, என்னுடைய பொருளில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்து விடட்டுமா?' எனக் கேட்டேன். அதற்கு நபி அவர்கள் வேண்டாம்" என்றார்கள்.

 

பின்னர் நான் பாதியைக் கொடுக்கட்டுமா?” எனக் கேட்டேன். அதற்கும் நபி அவர்கள் வேண்டாம்என்று கூறிவிட்டு, வேண்டுமானால் மூன்றில் ஒரு பங்கை தர்மம் செய்துவிடுங்கள். அதுவும் அதிகம்தான்.

ஏனெனில், உம்முடைய வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாகவிட்டுச் செல்வதைவிட பிறரிடம் தேவையற்றவர்களாகவிட்டுச் செல்வதே சிறந்ததாகும்!என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இபாதுர் ரஹ்மான் எனும் அவனுடைய விசேஷமான அடியார்களின் நற்பண்புகளுடன் நம் அனைவரையும் வாழச் செய்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

Monday, 2 March 2026

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை: 14. யாஅல்லாஹ் எங்களை நீ இழிவு படுத்தி விடாதே!

 

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை: 14.

யாஅல்லாஹ் எங்களை நீ இழிவு படுத்தி விடாதே!



13 –ஆவது நோன்பை நிறைவு செய்து, 14 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு அடுத்த நோன்பு நோற்பதற்கான ஆயத்தப்பணிகளில் நாம் ஈடுபட்டு இருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் நேற்று துவங்கப்பட்ட சூரா அல் அன்பியாவின் தொடர்ச்சி முடிக்கப்பட்டு, சூரா அல் ஹஜ், சூரா அல் முஃமினூன் நிறைவு செய்யப்பட்டு 24 வது சூராவான அந் நூரில் சில வசனங்கள் ஓதப்பட்டுள்ளது.

சூரா ஹஜ்ஜில் ஓதப்பட்ட ஒரு இறைவசனத்தின் ஒரு சொற்றொடர் நம் இதயத்தை கனமாக்கி இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

وَمَنْ یُّهِنِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ مُّكْرِمٍ اِنَّ اللّٰهَ یَفْعَلُ مَا یَشَآءُ ۟

எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவன் எவனுமில்லை; நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான். ( அல்குர்ஆன்: 22: 18 )

நபி ﷺ அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடி பிரார்த்தித்த பிரார்த்தனைகளில் இந்த இழிவும் ஒன்று.

وعند أحمد من حديث عمر أن النبي -صلى الله عليه وسلم- كان يدعو فيقول: "اللهم زدنا ولا تنقصنا، وأعطنا ولا تحرمنا، وأكرمنا ولا تهنا، وآثرنا ولا تؤثر علينا، وارض عنا وأرضنا"

"அல்லாஹ்வே! உனது அருளை அதிகமாக தருவாயாக! அதில் குறைவு செய்து விடாதே! மேலும், உனது அருளை வழங்கிக் கொண்டே இருப்பாயாக! தடுத்து விடாதே! அல்லாஹ்வே! எங்களை கண்ணியப்படுத்துவாயாக! கேவலப்படுத்தி விடாதே!" என்று நபி அவர்கள் துஆக் கேட்பவர்களாக இருந்தார்கள். ( நூல்: அஹ்மத் )

روى أبو داود في سُننه مِن حديث أبي هريرة رضي الله عنه؛ أن النبي صلى الله عليه وسلم كان يقول: الَّلهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ وَاْلقِلِّةِ وَالذِّلَّةِ

நபி அவர்கள் "அல்லாஹ்வே! வறுமை ஏற்படுவதை விட்டும், என் வாழ்வில் உனது அருள் குறைந்து போவதை விட்டும், கேவலம் ஏற்படுவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று துஆ கேட்பார்கள். ( நூல்: அபூதாவூத் )

وكان مِن دعاء احمد بن حنبل: (اللَّهُمَّ أَعِزَّنا بطاعتِك، ولا تُذِلَّنا بمعصيتك)[الجواب الكافي].

அல்லாஹ்வே! உனக்கு வழிபடுவதன் ஊடாக எங்களுக்கு கண்ணியத்தை வழங்குவாயாக! உனக்கு மாறுபடுவதின் காரணமாக எங்களை கேவலப்படுத்தி விடாதே! என்று இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( நூல்: அல் ஜவாபுல் காஃபி )

இழிவும் கேவலமும் எதனால்...?

அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் அவர்களும் ஈருலகிலும் இழிவையும் கேவலத்தையும் பெற்றுத் தரும் மட்டமான, பாவகரமான செயல்களை நமக்கு அறிவிக்காமல் இருக்கவில்லை.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் இந்த உலகிலும் நாளை மறுமையிலும் இழிவையும், கேவலத்தையும் சந்திப்பவர்கள் குறித்து நீண்ட பட்டியல் இடுகின்றான்.

இணைவைப்பாளர்கள் இழிவையும் கேவலத்தையும் சந்திப்பவர்கள் என்று அல் அஃராஃப் அத்தியாயத்தின் 152 வது வசனத்திலும், அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர்கள் இழிவையும் கேவலத்தையும் சந்திப்பவர்கள் என்று அல் முஜாதலா அத்தியாயத்தின் 20 வது வசனத்திலும், நயவஞ்சகர்களின் பண்புகளைக் கொண்டவர்கள் இழிவையும் கேவலத்தையும் சந்திப்பவர்கள் என்று அல் முனாஃபிக்கூன் அத்தியாயத்தின் 08 வது வசனத்திலும், பாவத்திலேயே உழல்பவர்கள், தவ்பாவைத் தள்ளிப் போடுபவர்கள் இழிவையும் கேவலத்தையும் சந்திப்பவர்கள் என்று ஆலு இம்ரான் அத்தியாயத்தின் 112 வது வசனத்திலும், இறைமறுப்பாளர்களை, யூத நஸராக்களை, உற்றநேசர்களாக எடுத்துக் கொண்டவர்கள் இழிவையும் கேவலத்தையும் சந்திப்பவர்கள் என்று அந் நிஸா அத்தியாயத்தின் 139 வது வசனத்திலும், அல் மாயிதா அத்தியாயத்தின் 51 வது வசனத்திலும் குறிப்பிடுகின்றான். இன்னும் பட்டியல் இருக்கிறது மனோஇச்சையை பின்பற்றுபவர்கள், பிரிவினையை தூண்டுபவர்கள், முஸ்லிம் ஐக்கியத்தை விட்டும் விலகி வாழ்பவர்கள் என்று நீண்ட பட்டியல் இருக்கிறது.

 

وجُعِلَ الذُّلُّ والصَّغارُ على مَن خالَفَ أَمْري، ومَنْ تشبَّهَ بقومٍ فهُوَ مِنْهُمْ. خلاصة حكم المحدث : إسناده صالح الراوي : عبدالله بن عمر | المحدث : شعيب الأرناؤوط | المصدر : تخريج سير أعلام النبلاء الصفحة أ

அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி அவர்கள் அறிவித்தார்கள்: இழிவும் சிறுமைபடுத்தப்படுவதும் என் வழிமுறைக்கு மாறுபடும் போது நிகழும். எவர் பிற சமூக மக்களுக்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர் தான்" என்று நபி அவர்கள் கூறினார்கள். 

தொழாதவர்களுக்கும், இஃக்லாஸாக தொழாதவர்களுக்கும் மறுமையில் ஏற்படும் இழிவு..

இந்த உலக வாழ்க்கையில் ஒரு மனிதன் இபாதத்கள் இல்லாமல் வாழ்ந்து விட்டால், அல்லாஹ்வை வணங்குவதற்காக அதற்குரிய வாய்ப்பை அவன் சேராமல் அவன் வாழ்ந்து விட்டால், அல்லாஹ்விற்கு முன்னால் ஸுஜூது செய்வதற்குரிய வாய்ப்பை பெறாமல் அவன் வாழ்ந்து விட்டால், நாளை மறுமையில் அவன் அடையக்கூடிய கேவலம் இன்னல்கள் துன்பங்கள் இந்த உலகத்தில் மனிதனால் சொல்லி முடிக்க முடியாது. 

يَوْمَ يُكْشَفُ عَنْ سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى السُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَ (42) خَاشِعَةً أَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ وَقَدْ كَانُوا يُدْعَوْنَ إِلَى السُّجُودِ وَهُمْ سَالِمُونَ

கெண்டைக்காலை விட்டும் திரை அகற்றப்படும் நாளை (பயந்து கொள்ளுங்கள்). அன்றைய தினம், சிரம் பணிந்து வணங்கும்படி அவர்கள் அழைக்கப்படுவார்கள். (அவர்களின் பாவச்சுமை அவர்களை அழுத்திக் கொண்டிருப்பதனால் அவ்வாறு செய்ய) அவர்களால் இயலாமல் போய்விடும்.

       அவர்களுடைய பார்வையெல்லாம் கீழ்நோக்கி நிற்கும். இழிவு அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். (இம்மையில்) சுகமா(ன தேகத்தை உடையவர்களா)க இருந்த சமயத்தில், சிரம் பணிந்து வணங்க நிச்சயமாக அழைக்கப்பட்டனர். (எனினும், தங்கள் கர்வத்தால் அதை நிராகரித்து விட்டனர்.) (அல்குர்ஆன் 68 : 42,43)

       வசனத்தின் கருத்து : நாளை மறுமையில் மஹ்ஷருடைய ஒரு காட்சியை அல்லாஹு தஆலா நமக்கு விவரித்துச் சொல்கிறான். அல்லாஹு ரப்புல் ஆலமீன் நாளை மஹ்ஷரில் அவனுடைய அடியார்களுக்கு முன்பாக ஒரு காட்சி தருவான். தன்னுடைய கண்ணியத்திற்குரிய உருவத்தை தனது அடியார்களுக்கு காட்டுவான்.

       அப்பொழுது அந்த அடியார்களைப் பார்த்து கேட்பான்; நான் தான் உங்களுடைய இறைவன் என்பதாக. அப்பொழுது அந்த அடியார்கள் சொல்வார்கள்; எங்களுக்கும் எங்களுடைய இறைவனுக்கும் இடையில் அல்குர்ஆனில் வர்ணிக்கப்பட்ட ஒரு அடையாளம் இருக்கிறது.

       அந்த அடையாளத்தைக் கொண்டு நாங்கள் எங்கள் இறைவனை அறிந்து கொள்வோம், என்று சொல்லும்பொழுது, ஸஹீஹ் புகாரியில் வரக்கூடிய அறிவிப்பு இந்த ஹதீஸ் நீண்ட விவரத்தோடு வருவதை காணலாம்.

 «يَكْشِفُ رَبُّنَا عَنْ سَاقِهِ، فَيَسْجُدُ لَهُ كُلُّ مُؤْمِنٍ وَمُؤْمِنَةٍ، فَيَبْقَى كُلُّ مَنْ كَانَ يَسْجُدُ فِي الدُّنْيَا رِيَاءً وَسُمْعَةً، فَيَذْهَبُ لِيَسْجُدَ، فَيَعُودُ ظَهْرُهُ طَبَقًا وَاحِدًا»

            அப்போது அல்லாஹ் சொல்வான், ஆம்! அந்த அடையாளத்தை நான் உங்களுக்கு காட்டப் போகிறேன் என்று தனது காலில் பிற்பகுதியில் இருந்து கெண்டைக்காலில் இருந்து தனது ஒளியின் திரையை அகற்றுவான். 

       அல்லாஹ்வுடைய கெண்டைக்காலில் இருந்து அந்த திரையை அகற்றும் பொழுது வரக்கூடிய அந்த ஒளிக்கு முன்னால் யாரெல்லாம் ஈமானோடு இக்லாஸோடு இந்த துனியாவில் வணங்கிக் கொண்டிருந்தார்களோ அல்லாஹ்வை இபாதத் செய்து கொண்டிருந்தார்களோ அவர்கள் எல்லாம் அப்படியே அல்லாஹ்விற்கு முன்னால் சுஜூதில் விழுந்து விடுவார்கள்.

       அந்த ஒளி வெளிப்படுத்தப்படும் பொழுது, உங்கள் இறைவனுக்கு சஜ்தா செய்யுங்கள் என்று அழைப்பு விடுக்கப்படும். 

       அப்பொழுது யாரெல்லாம், இந்த துன்யாவில் அல்லாஹ்வை மனத்தூய்மையோடு ஈமான் கொண்டு, இக்லாஸோடு இபாதத்கள் செய்து கொண்டிருந்தார்களோ, அவர்கள் எல்லாம் சுஜூதில் விழுந்து விடுவார்கள்.

       அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்; யாரெல்லாம் இந்த துனியாவில் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்வதற்கு அழைக்கப்பட்ட பொழுது, ஸுஜூது செய்யாமல் இருந்தார்களோ அல்லது சுஜூது செய்தார்கள்; ஆனால் முகஸ்துதிக்காக பெயருக்காக புகழுக்காக இபாதத் செய்து கொண்டிருந்தவர்கள், பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காக வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள், இவர்களெல்லாம் ஸுஜூது செய்வதற்கு முயற்சிப்பார்கள்.

       அவர்களால் சுஜூது செய்ய முடியாது. அவர்கள் கீழே குனிவதற்கு முன் பக்கமாக முயற்சிக்கும் பொழுது அவர்கள் பின்பக்கமாக விழுவார்கள். அவர்களுடைய பார்வைகள்எல்லாம் அந்நாளில் கேவலப்படும். அவர்களை கேவலமும் அவமானமும் சூழ்ந்துகொள்ளும். (அல்குர்ஆன் 68 : 42,43) அறிவிப்பாளர் : அபூ சயீத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4919. )

قال الرَّسولُ صلَّى اللهُ عليه وسلَّم: ((يحشَرُ المتكَبِّرون يومَ القيامةِ أمثالَ الذَّرِّ في صورةِ الرِّجالِ، يغشاهم الذُّلُّ من كُلِّ مكانٍ

நபி அவர்கள் கூறினார்கள்: இந்த உலகில் பெருமையோடு நடந்து கொண்டவர்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அளவில் சிறிய உருவத்துடன் மனித தோற்றத்தில் எழுப்புவான். நாளை மறுமையில் அவனை நாலாபுறங்களிலும் இழிவும் கேவலமும் சூழ்ந்து கொள்ளும்!" ( நூல்: திர்மிதீ )

وَعَنِ اِبْنِ عُمَرَ ‏-رَضِيَ اَللَّهُ عَنْهُمَا‏- [قَالَ]: سَمِعْتُ رَسُولَ اَللَّهِ ‏- صلى الله عليه وسلم ‏-يَقُولُ: { إِذَا تَبَايَعْتُمْ بِالْعِينَةِ, وَأَخَذْتُمْ أَذْنَابَ اَلْبَقَرِ, وَرَضِيتُمْ بِالزَّرْعِ, وَتَرَكْتُمْ اَلْجِهَادَ, سَلَّطَ اَللَّهُ عَلَيْكُمْ ذُلًّا لَا يَنْزِعُهُ حَتَّى تَرْجِعُوا إِلَى دِينِكُمْ } رَوَاهُ أَبُو دَاوُدَ مِنْ رِوَايَةِ نَافِعٍ عَنْهُ, وَفِي إِسْنَادِهِ مَقَالٌ.‏ 

இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூற நான் கேட்டேன்: "நீங்கள் ஈனாமுறையில் வியாபாரம் செய்து, மாடுகளின் வால்களைப் பிடித்துக்கொண்டு (அதாவது, விவசாயம் மற்றும் உலகாதாய காரியங்களில் மூழ்கி), விவசாயத்தில் திருப்தி அடைந்து, ஜிஹாதைக் கைவிட்டால் - அல்லாஹ் உங்கள் மீது இழிவைச் சாட்டுவான். நீங்கள் உங்கள் மார்க்கத்திற்குத் திரும்பும் வரை அதை அவன் நீக்கமாட்டான்." ( நூல்: அபூதாவூத் )

وعن جابر بن عبد الله وأبي أيوب رضي الله عنهما قالا: قال رسول الله صلى الله عليه وسلم: «ما من امرئ يخذل امرأ مسلماً في موضع تنتهك فيه حرمته، وينتقص فيه من عرضه، إلا خذله الله في موطن يحب فيه نصرته، وما من امرئ ينصر مسلماً في موضع ينتقص فيه من عرضه، وينتهك فيه من حرمته إلا نصره الله عز وجل في موطن يحب فيه نصرته»

நபி அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமை கேவலப் படுத்துகிறார்கள்; அவனுடைய கண்ணியத்தைத் தாக்குகிறார்கள்; அந்த இடத்தில் ஒருவன் அந்த முஸ்லிமைக் காப்பாற்றவில்லை என்றால் அல்லாஹ்வுடைய உதவி அவனுக்குத் தேவைப்படும் ஒரு இக்கட்டான தருணத்தில் அல்லாஹ் அவனை கைவிட்டு விடுவான். 

ஒரு முஸ்லிம் கேவலப்படுத்தப்படும்போது, அவனுடைய கண்ணியம் தாக்கப்படும் போது யாராவது அவனுக்கு உதவி செய்தால் அவன் அல்லாஹ்வுடைய உதவி கிடைக்காதா?’ என்று ஏங்கும் தருணத்தில் அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான்.” ( நூல்: ஸுனன் அபூதாவூத் )

وعن سهل بن حنيف، عن النبي صلى الله عليه وسلم أنه قال: «من أُذل عنده مؤمن فلم ينصره وهو يقدر على أن ينصره؛ أذله الله عز وجل على رؤوس الخلائق يوم القيامة»[6]

கேவலத்தை சந்தித்த ஒரு முஸ்லிமுக்கு அவருக்கு உதவி செய்யும் சக்தி இருந்தும் ஒருவர் அவருக்கு உதவி செய்ய வில்லை என்றால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நாளை மறுமையில் அனைத்து படைப்பினங்கள் முன்னிலையில் கேவலப்படுத்துவான்" என நபி அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )

قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

"அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்’’ என்று கூறுவீராக! ( அல்குர்ஆன்: 3: 26 )

முஸ்லிமாக வாழ்வதில் தான் கண்ணியம் இருக்கிறது….

عن تَميم الداري رضي الله عنه، قال: سمعتُ رسول الله صلى الله عليه وسلم يقول: «‌لَيَبْلُغَنَّ ‌هَذَا الأَمْرُ مَا بَلَغَ اللَّيْلُ وَالنَّهَارُ، وَلَا يَتْرُكُ اللهُ بَيْتَ مَدَرٍ وَلَا وَبَرٍ إِلَّا أَدْخَلَهُ اللهُ هَذَا الدِّينَ، بِعِزِّ عَزِيزٍ أَوْ بِذُلِّ ذَلِيلٍ، عِزًّا يُعِزُّ اللهُ بِهِ الإِسْلَامَ، وَذُلًّا يُذِلُّ اللهُ بِهِ الكُفْرَ» وَكَانَ تَمِيمٌ الدَّارِيُّ يَقُولُ: قَدْ عَرَفْتُ ذَلِكَ فِي أَهْلِ بَيْتِي، لَقَدْ أَصَابَ مَنْ أَسْلَمَ مِنْهُمُ الْخَيْرُ وَالشَّرَفُ وَالْعِزُّ، وَلَقَدْ أَصَابَ مَنْ كَانَ مِنْهُمْ كَافِرًا الذُّلُّ وَالصَّغَارُ وَالْجِزْيَةُ.  

[صحيح] - [رواه أحمد] - [مسند أحمد: 16957]

 

நபி அவர்கள் கூறுவதைக் தான் கேட்டதாக தமீமுத்தாரி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'இந்த மார்க்கம் இரவு பகல் சென்றடையும் இடமெல்லாம் சென்றடையும்;. அல்லாஹ் இந்த மார்க்கத்தை நகரத்தில் மற்றும் கிராமத்தில் உள்ள எந்த வீட்டையும் சென்றடையாது விட்டுவிட மாட்டான்.ஆகவே இந்த மார்க்த்தை ஏற்றுக்கொன்றவனை கௌரவப்படுத்துவான் அல்லது இதனை ஏற்றுக்கொள்ளாதவனை இழிவுபடுத்துவான் . அதாவது இஸ்லாத்தின் மூலம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவனை கண்ணியப்படுத்துவான், இஸ்லாத்தை நிராகரித்தவனை இழிவு படுத்துவான். இது குறித்து தமீமுத்தாரி அவர்கள் குறிப்பிடுகையில் நான் இதனை எனது குடும்பத்தவரில் கண்டேன். யார் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனரோ அவர்களுக்கு பாக்கியமும் கௌரவமும் கண்ணியமும் கிடைத்தது. யார் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவர்களுக்கு அவமானமும் இழிவும் ஏற்பட்டது. அவர்கள் ஜிஸ்யா செலுத்துவோராக இருந்தனர்.' ( நூல்: அஹ்மத் )

أخرج الحاكم في "المستدرك" (1/61 ـ 62)عن طارق بن شهاب قال:خرج عمر بن الخطاب إلى الشام، ومعنا أبو عبيدة بن الجراح، فأتوا على مخاضة وعمر على ناقة، فنزل عنها وخلع خفيه فوضعهما على عاتقه، وأخذ بزمام ناقته فخاض بها المخاضة، فقال أبو عبيدة: يا أمير المؤمنين، أأنت تفعل هذا؟! تخلع خفيك وتضعهما على عاتقيك، وتأخذ بزمام ناقتك وتخوض بها المخاضة؟! ما يسرني أن أهل البلد استشرفوك! فقال عمر: أوه لو يقل ذا غيرك يا أبا عبيدة جعلته نكالاً لأمة محمد !

إنا كنا أذل قوم فأعزنا الله بالإسلام، فمهما نطلب العز بغير ما أعزنا الله به أذلنا الله.

ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் சிரியாவுக்கு புறப்பட்டார்கள்.அவர்களுடன் அபூ உபைதா ரலி அவர்களும் சென்றார்கள்.செல்லும் வழியில் ஒரு நீர் தடாகத்தை கடந்து செல்லவேண்டியதிருந்தது.அப்போது ஜனாதிபதி உமர் ரலி அவர்கள் தங்களின் ஒட்டகத்திலிருந்து கீழே இறங்கி,தங்களின் இரு காலுறையையும் கழட்டி தங்களின் தோழ்புஜத்தில் வைத்துக்  கொண்டு,ஒட்டகத்தின் கயிற்றை பிடித்துக்கொண்டு தண்ணீரில் இறங்கி னார்கள்.

இந்த காட்சியை பார்த்த அபூஉபைதா ரலி அவர்கள்-முஃமின்களின் தலைவரே!நீங்களா இவ்வாறு செய்கிறீர்கள்?நீங்கள் ஏன் ஒட்டகத்திலி ருந்து இறங்கினீர்?அது உங்களின் மரியாதைக்கு சரியில்லையே என்றார்.மேலும் நாட்டு மக்களெல்லாம் உங்களை காண ஆவலாக இருக்கின்றனர்.என்றார்கள்.

அதை செவியுற்ற ஜனாதிபதி உமர் ரலி அவர்கள்-கடும் கோபமுற்று உம்மை தவிர வேறுயாரும் இதை சொல்லியிருந்தால் கடுமையாக தண்டித்திருப்பேன். கண்ணியத்தை மக்களிடமா எதிர்ப்பார்ப்பது?

நாம் இழிவாக இருந்தோம், அல்லாஹ் இஸ்லாத்தைக்கொண்டு நம்மை கண்ணியப்படுத்திவிட்டான்.எனவே அல்லாஹ் கண்ணியம் செய்த இஸ்லாத்தை தவிர்த்து வேறு ஒரு கண்ணியத்தை தேடினால் அது இழிவையே தரும் என்றார்கள். ( அல் இஸ்திஆப் )

கப்ரஸ் இது சிரியாவின் மேற்கே அமைந்திருந்த ஓர் அழகிய தீவு. ஆனால், இப்போது இஸ்லாமியர்களுக்கெதிரான அபாயகரமான தீவாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

ஆம்! ரோமர்கள் முஸ்லிம்களுடன் தோற்றுப் போய் ஓடி ஒளிந்து அங்கு தான் தஞ்சம் புகுந்திருந்தனர். இப்போதோ அவர்கள் பெருமளவில் ஆயுதங்களைத் திரட்டி வலுவான கப்பற்படையை உருவாக்கி முன்னர் அடைந்த தோல்விக்கு பலி வாங்கும் முகமாக தயாராகி முஸ்லிம்களை அழிக்க நாள் குறித்துக் கொண்டிருந்தனர்.

இந்த தீவின் மீது படையெடுத்து அங்கேயும் ரோமர்களை வெற்றி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் முஆவியா (ரலி) அவர்களுக்கு இருந்தது. ஆயினும், உமர் (ரலி) அவர்கள் அதற்குள் ஷஹாதா வீரமரணம் அடைந்து விட்டார்கள்.

இதே கருத்தை உஸ்மான் (ரலி) அவர்களிடம் முஆவியா (ரலி) அவர்கள் தெரிவித்த போது உஸ்மான் (ரலி) அவர்கள் அதற்கு ஒப்புதல் தந்தார்கள்.

இதற்கு முன்னர் நடந்த போர்கள் அனைத்தும் நிலங்களிலும், பாலைவனங்களிலும் நடைபெற்றது. ஆனால், இது முற்றிலும் வேறுபட்டு கடல் மார்க்கமாக நடைபெறும் போராகும். ஆகவே, எந்த ஒரு முஸ்லிமையும் நிர்பந்திக்காமல், வற்புறுத்தாமல் படை வீரர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடு சைப்ரஸ் மீது போர் தொடுக்க அனுமதி வழங்கினார்கள்.

அல்லாஹ்வின் மார்க்கத்தை மேலோங்கச் செய்ய அல்லவா போர் நடத்தப் படுகின்றது. ஆர்வமாக பலர் வந்து இணைந்து கொள்கின்றார்கள். அந்தப் படையில் அபூதர் அல் ஃகிஃபாரீ (ரலி), ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி) உப்பாதா இப்னு ஸாமித் (ரலி) அவரின் மனைவி உம்மு ஹராம் பிந்த் மில்ஹான் (ரலி), அபூதர்தா (ரலி) ஆகிய மூத்த நபித்தோழர்களும் தங்களை இணைத்துக் கொண்டனர்.

 

அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) அவர்களின் தலைமையில் படை கடல் மார்க்கமாக புறப்பட்டுச் சென்றது.

அல்லாஹ் அந்தப் போரை வெற்றிகரமாக முடித்து வைத்தான். இந்தப் போர் ஹிஜ்ரி 28 மற்றும் 29 –இல் நடைபெற்றது.

ஏராளமான பொருட்செல்வங்கள் ஃகனீமத்தாக வந்து சேர்ந்தன. அந்தச் செல்வங்களை எல்லாம் முஸ்லிம் வீரர்கள் பெருமிதத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

كانت الدنيا كلها في عين أبي الدرداء مجرّد عارية..

عندما فتحت قبرص وحملت غنائم الحرب الى المدينة رأى الناس أبا الدرداء يبكي... واقتربوا دهشين يسألونه، وتولى توجيه السؤال اليه:" جبير بن نفير":

قال له:

" يا أبا الدرداء، ما يبكيك في يوم أعز الله فيه الاسلام وأهله"..؟؟

فأجاب أبو الدرداء في حكمة بالغة وفهم عميق:

ويحك يا جبير..

ما أهون الخلق على الله اذا هم تركوا أمره..

بينما هي أمة، ظاهرة، قاهرة، لها الملك، تركت أمر الله، فصارت الى ما ترى"..!

أجل..

அதையெல்லாம் கண்ட அபூதர்தா (ரலி) அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள். அருகில் இருந்த ஜுபைர் இப்னு நஃபீர் (ரலி) அவர்கள் அபூதர்தா அவர்களே! அல்லாஹ் சத்திய சன்மார்க்கத்திற்கு வலுவையும், வெற்றியையும் தந்திருக்கும் இந்த தருணத்தை மகிழ்ச்சியோடும், ஆனந்தத்தோடும் வரவேற்காமல் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கின்றீர்களே?” ஏன் என்ன காரணத்திற்காக அழுகின்றீர்கள்?”.

அபூதர்தா (ரலி) அவர்கள் வினா தொடுத்த ஜுபைரை நோக்கி ஜுபைரே! அல்லாஹ்வோ வெற்றிக்கு மேல் வெற்றியாக வழங்கிக்கொண்டிருக்கின்றான். வெற்றியும் ஆட்சியும், நிலப்பரப்பும் விரிவடைந்து, அதனால் கிடைக்கும் வெகுமதியில் மனம் மயங்கி, இறைவனுக்குரிய வணக்க வழிபாடுகள் விஷயத்தில் முஸ்லிம்கள் பொடுபோக்காக இருந்து விட்டால் எத்தகைய கேவலமானவர்களாக அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் காட்சி தருவார்கள்?”

ஜுபைரே! இதோ, நம் கண் முன்னே வீழ்ந்து கிடப்பவர்களும், கைதியாய் நிற்பவர்களும் யார் தெரியுமா? நேற்று வரை இந்தப் பூமியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள். ஆனால், எல்லாம் வல்ல அல்லாஹ்வை மறந்து, அகங்காரத்தோடும், ஆணவத்தோடும் இருந்ததால், இன்று நம்மிடம் தோற்றுப் போய் இருக்கின்றார்கள்.

இதைப் போன்ற ஓர் மனோநிலை இந்த பொருட்செல்வங்களையும், வெகுமதிகளையும் கண்டு பிரமித்து நிற்கிற முஸ்லிம்களுக்கு ஏற்படுமானால், இன்றைய இந்த வெற்றி நாளை என்னவாகும்?” இவர்களுக்கு ஏற்பட்ட இந்த இழிவும், கேவலமும்  நாளை நமக்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லையே?” என்று நினைத்து தான் நான் அழுகின்றேன்என்றார்கள் அபூதர்தா (ரலி) அவர்கள். ( நூல்: தபகாத்து இப்னு ஸஅத் )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் ஈருலகின் அனைத்து இழிவுகளில் இருந்தும், கேவலத்தில் இருந்தும் பாதுகாப்பானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!