உயர் கல்வியெனும் ஆயுதம் கையிலெடுப்போம்!!
தமிழ்நாடு பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகள் (HSE) மே 8, 2025 அன்று அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்பட்டது. அதே போன்று இன்று 16/05/2025 காலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியது. இன்று மதியம் பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கிறது.
ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நம் சமூகத்தின் மாணவ மாணவிகள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும், நமது சமூக மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதமும் நன்றாக வந்திருப்பதாக நாம் நம்புவோம்.
எனினும், தேசிய அளவில் ஒட்டுமொத்தமாக சமூகத்தின் உயர் கல்வி நிலை கவலை தரக்கூடிய அளவில் இருப்பது வருத்தத்தை தருவதாக அமைந்துள்ளது.
உயர்கல்வியில் முஸ்லிம் மாணவர்களின் பிரதிநிதித்துவம் குறைந்து வருவதை 2020-21 ஆம் ஆண்டுக்கான AISHE கணக்கெடுப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை விட முஸ்லிம் மாணவர்களின் சேர்க்கை குறைவாக இருப்பதாக அறிக்கை கண்டறிந்துள்ளது .
"இந்தியாவில் முஸ்லிம் கல்வியின் நிலை" என்ற தலைப்பிலான புதிய அறிக்கையின்படி, உயர்கல்வியில் சேரும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை (18-23 வயது) 8.5% க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது .
இந்த அறிக்கையை தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர் அருண் சி. மேத்தா எழுதியுள்ளார்.
இந்த அறிக்கை ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பு பிளஸ் (UDISE+) மற்றும் அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு (AISHE) ஆகியவற்றின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
2019-20 ஆம் ஆண்டில் 21 லட்சம் முஸ்லிம் மாணவர்கள் உயர்கல்விக்காக சேர்ந்திருந்த நிலையில், 2020-21 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 19.21 லட்சமாகக் குறைந்துள்ளது.
"2016-17 ஆம் ஆண்டில் உயர்கல்வியில் சேர்ந்த முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை 17,39,218 ஆக இருந்தது, 2020-21 ஆம் ஆண்டில் 19,21,713 ஆக அதிகரித்தது. இருப்பினும், 2019-20 ஆம் ஆண்டில் 21,00,860 மாணவர்களாக இருந்த முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை 2020-21 ஆம் ஆண்டில் 19,21,713 ஆகக் குறைந்துள்ளது, இதனால் முழுமையான அடிப்படையில் 1,79,147 மாணவர்கள் குறைந்துள்ளனர்".
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காணப்படும் ஒரு குறிப்பிடத்தக்க போக்கு, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முஸ்லிம் மாணவர்களின் சேர்க்கை சதவீதத்தில் சரிவு ஆகும். முஸ்லிம் மாணவர்களின் பிரதிநிதித்துவம் 6 ஆம் வகுப்புக்குப் பிறகு குறைந்து, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மிகக் குறைவாக உள்ளது என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது .
6-8 ஆம் வகுப்பு உயர்நிலைப் பள்ளிகளில் மொத்த மாணவர் சேர்க்கையான 6.67 கோடி மாணவர்களில் முஸ்லிம்கள் சுமார் 14.42% பேர் உள்ளனர்,
ஆனால் இரண்டாம்
நிலைப் பள்ளியில் (9-10 ஆம் வகுப்பு) இது 12.62% ஆகவும், மேல்நிலைப் பள்ளியில் (11-12 ஆம் வகுப்பு) 10.76% ஆகவும் குறைந்துள்ளது" என்று அறிக்கை
கூறுகிறது.
ஏன் உயர் கல்வி கற்க வேண்டும்?
உலகில் சுமார் 8.251 பில்லியன் மக்கள் (2025 ஆண்டு கணக்குப்படி) வசிக்கின்ற னர். இதில் கிருஸ்தவ மதத்தை பின்பற்றக்கூடியவர்கள் சுமார் 200 கோடி பேர் (இதில் மூன்று பிரிவுகள் உள்ளது) அடுத்து இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றக் கூடியவர்கள் சுமார் 180 கோடிபேர் (இதில் எண்ணிக்கையில் அடங்காத பிரிவுகள் உள்ளது) அடுத்தபடியாக யூத மார்க்கத்தை பின்பற்றக்கூடிய வர்கள் சுமார் 15 கோடி பேர் உள்ளனர். அதாவது உலக மக்கள் தொகையில் யூதர்கள் வெறும் 0.2% சதவீதம் மட்டுமே. (இதில் 2 பிரிவுகள் மட்டுமே உள்ளது)
மக்கள் தொகையில் மிக மிக குறைவாக உள்ள யூதர்கள் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளை மறைமுகமாக ஆட்சி செய்கிறார்கள். குறிப்பாக அமெரிக்காவையும் சில அரபு நாடுகளையும் கூட யூதர்களே ஆட்சி செய்கிறார்கள்.
மக்கள் தொகையில் சுமார் 0.2% சதவீதம் இவர்களால் எப்படி உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளை ஆட்சி செய்ய முடிகிறது.
அவர்கள் கல்வி அறிவில் மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். குறிப்பாக கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் அவர்களே மேலோங்கி உள்ளனர். மிகப் பெரிய கம்ப்யூட்டர் தொழில் நிறுவனங்களும் அவர்கள் கையிலே உள்ளன.
மேலும் இன்று உலகை ஆட்சி செய்யும் ஆயுதமான அனைத்து மீடியாவை(MEDIA)யும் அவர்களே தங்கள் கையில் வைத்துள்ளனர்.
கிறிஸ்தவர்களும், யூதர்களும் சுமார் 90% சதவிகிதம் கல்வியை கற்றவர்களாக இருக்கிறார்கள். அதாவது,
பல்கலைக்கழகம் வரை (UNIVERSITY) படித்தவர்கள் சுமார் 40% சதவிகிதம் உள்ளனர்.
முஸ்லிம்களில் பல்கலைக்கழகம் வரை படித்தவர்கள் சுமார் 0.1% சதவிகிதம் மட்டுமே.
தங்கள் வருவாயில் ஆராய்ச்சிக்காக சுமார் 5% சதவிகிதம் யூதர்களும், கிறிஸ்தவர்களும் செலவு செய்கிறார்கள்.
முஸ்லிம்கள் இதில்
வெறும் 0.2% சதவிகிதம் மட்டுமே செலவு செய்கிறார் கள்.
யூதர்களில் இதுவரை நோபல் பரிசு பெற்றவர்கள் 108 பேர் உள்ளனர். முஸ்லிம்களில் 3 பேர் மட்டுமே.
இந்தியாவின் பல்கலைக் கழகங்களில் (UNIVERSITY) 2 பல்கலைக்கழகம் மட்டுமே முஸ்லிம்களிடம் உள்ளது. புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் அலிகார் பல்கலைக் கழகம் மற்றும் தமிழ்நாட்டில் ஒரே ஒரு முஸ்லிம் பல்கலைக்கழகம் மட்டுமே உள்ளன.
ஒருசில தனியார் நிர்வாகத்தின் கீழ் மட்டுமே முஸ்லிம்கள் கல்லூரி நடத்தப்படுகின்றன. அவைகளில் சில New College, Jamal Mohamed College, SIET College, Khader Mohideen College, பொறியியல் கல்லூரி (Engineering College) கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி உள்ளன. இன்னும் சில ஊர்களில் கலை அறிவியல் கல்லூரிகளை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் 6, கர்நாடகாவில் 4, ஆந்திராவில் 2,தெலுங்கானாவில் 4 என எண்ணிக்கையில் மருத்துவமனைகளை முஸ்லிம்கள் நடத்துகின்றனர்.
1) நம் நிலையை மாற்ற முயற்சி செய்ய வேண்டும்....
சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான நம் சமுதாய பிள்ளைகள் படித்தவர்களும், படிக்காதவர்களும் அரபு நாடுகளுக்கு பெரும்பாலோர் கீழ்மட்ட தொழிலாளர்களாக
பணிபுரிய அனுப்பி வைத்ததால் முஸ்லிம் சமூகம் இந்திய அரசு துறையிலும், அதிகார துறையிலும் பெரும் பின்னடைவை சந்தித்தன. அதன் விளைவை இன்று நம் சமூகம் சந்தித்து வருகிறது.
வாழும் இளைய தலைமுறையும், வருங் கால தலைமுறையும் பல அவலங்களை சந்தித்து வருகிறது. இந்த அவல நிலையிலிருந்து மாறவேண்டும். இல்லையயன்றால் காலத்திற்கும் இந்திய அரசு துறை யிலும், அதிகார துறையிலும் பங்கு பெறமுடியாமல் இரண்டாம், மூன்றாம் தர குடிமக்களாகவே வாழ நேரிடும்.
இனிவரும் காலங்களில் அறிவியல், ஆராய்ச்சி உற்பத்தி தொழில் வாய்ப்புக்கள், உயர் கல்வி போன்றவற்றில் ஆளுமை செலுத்தினால்தான் சமுதாயம் முன்னேற முடியும்.
எனவே இப்போது
இருக்கும் கல்வி சதவிகிதத்தை தாண்டி எல்லா துறைகளிலும் உயர் கல்வியை பயின்று
முன்னேற வேண்டிய கடமை நமது சமூகத்திற்கு இருக்கிறது. ஏனெனில்,
إِنَّ
اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ
"எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரை அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை" ( அல்குர்ஆன்: 13: 11 )
2) நம் நிலையை நினைத்து நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்...
கலாநிதி றவூப் ஸெய்ன் அவர்கள் (2025.05.04) கூறுவது கவனிக்கத்தக்கது:-
"மனிதனின் மிகப்பெரிய எதிரி அறிவீனம் தான்
.நாம் எண்ணிக்கையில் பெரிய சமூகம். உலகளாவிய சமூகம். ஆனால்
பலயீனப்பட்டுப்போயுள்ளோம். உலக அறிவு என்று நாம் ஒதுக்கித்தள்ளியிருக்கின்ற
அறிவிலும் பின்னடைவு! மார்க்க அறிவிலும் பின்னடைவு. இஸ்லாத்தை ஒவ்வொருவரும்
அறிந்து வைத்துள்ள கதை குருடர்கள் யானை பார்த்த கதைக்கு ஒப்பானது.
அறிவை மனிதன் மூன்று மூலங்களிலிருந்து பெறுகிறான். வஹி (Revelation)புலன்கள் (senses - empirical knowledge) பகுத்தறிவு (Reason )ஆகிய முன்றிலிருந்துமே ஒரு முஸ்லிம் அறிவை பெற வேண்டும். நம்மில் சிலர் தூய பகுத்தறிவு வாதிகளாய் இருந்து வஹியை கைவிட்டார்கள். சிலர் குருடான ஆன்மீகத்தில் மூழ்கி பகுத்தறிவைப் புறந்தள்ளி விட்டார்கள். (افلا يقعلون) பலர் புலன்களிலும் காரண காரியத்திலும் நம்பிக்கை கொண்டு ஆன்மீக உள்ளூட்டத்தை இழந்துவிட்டார்கள்.
இங்கே மூன்றும் இன்றியமையாதது. முஸ்லிம் உலகின் 200 கோடி மக்களில் சுமார் 30 கோடிப்பேருக்கு எழுத்தறிவில்லை (Illiteracy).
வயது வந்தும் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் அதிகம் வாழும் நாடுகள் பெரும்பாலானவை ஆபிரிக்காவிலுள்ள முஸ்லிம் நாடுகள். பாடசாலை இடை விலகலிலும் நாம்தான் உலகளவில் முன்னணியில் இருக்கிறோம்.
100 கோடி முஸ்லிம்கள் 56 முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளிலும் ஏனைய நூறு கோடி 137 நாடுகளில் சிறுபான்மையாகவும் வாழ்கின்றனர்.
அவர்கள் அனைவருக்குமாக இஸ்லாமிய நாடுகளில் உள்ள மொத்த பல்கலைக்கழகங்களின் தொகை வெறும் 1200 தான். அதில் ஒன்றுகூட உலகத்தரம் வாய்ந்ததல்ல.
அமெரிக்காவில் 32 கோடிப்பேருக்கு 5250 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்தியாவில் 146 கோடி மக்களுக்கு 8500 பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன.
இந்த அறிவுத்துறை இடைவெளியும் ஆன்மீக முதிர்ச்சியின்மையும் அறிவியல் ஆய்வுகளில் கவனமின்மையும் ஐக்கியமின்மையும் நம்மை எதிரிகள் தாம் விரும்புவது போல் பந்தாடும் ஒரு அவலநிலையை உருவாக்கியுள்ளது.
நாம் சிந்திக்க வேண்டும் சிந்திப்பது ஒரு மார்க்கக்கடமை என்று அப்பாஸ் மஹ்மூத் அக்காத் அவர்கள் சரியாகவே சொல்லியுள்ளார். التفكير فريضة وضرورة.
3) முயற்சி செய்ய வேண்டும்...
வாழும் காலங்களில் நாம் எந்த லட்சியத்தை நோக்கி பயணப்பட்டாலும் அது கை கூடும் என்று கூறுகிறது இஸ்லாம்.
وَأَنْ لَيْسَ لِلْإِنْسَانِ إِلَّا مَا سَعَى (39) وَأَنَّ سَعْيَهُ سَوْفَ يُرَى (40
“மனிதனுக்கு தான் முயற்சி செய்ததைத்தவிர வேறெதுவும் இல்லை. இன்னும், அவனுடைய முயற்சியின் பயனை விரைவில் அவன் காண்பான்”. ( அல்குர்ஆன்:53: 39,40 )
அற்புதங்கள் நிகழ இங்கே முயற்சி அவசியம் வேண்டும்.
ஈஸா (அலை) அவர்களைக் கருவுற்று தம்மை தனிமைப் படுத்திய பிறகு மிகவும் சிரமப்பட்ட நேரத்தில் அல்லாஹ் கூறிய வழிகாட்டலைப் பாருங்கள்!
فَحَمَلَـتْهُ فَانْتَبَذَتْ بِهٖ مَكَانًا قَصِيًّا
அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.
فَاَجَآءَهَا الْمَخَاضُ اِلٰى جِذْعِ النَّخْلَةِۚ قَالَتْ يٰلَيْتَنِىْ مِتُّ قَبْلَ هٰذَا وَكُنْتُ نَسْيًا مَّنْسِيًّا
பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது: “இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா” என்று கூறி(அரற்றி)னார்.
فَنَادٰٮهَا مِنْ تَحْتِهَاۤ اَلَّا تَحْزَنِىْ قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّا
(அப்போது ஜிப்ரீல்) அவருக்குக் கீழிருந்து: “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்” என்று அழைத்து கூறினார்.
وَهُزِّىْۤ اِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسٰقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا
“இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.
فَكُلِىْ وَاشْرَبِىْ وَقَرِّىْ عَيْنًا
"ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! ( அல்குர்ஆன்: 19: 22-26 )
4) உயர்ந்த லட்சியம் இருக்க வேண்டும்...
وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ أَيْنَ مَا تَكُونُوا يَأْتِ بِكُمُ اللَّهُ جَمِيعًا إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
ஒவ்வோர் சமுதாயமும் அதன் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.(மூமின்களே!) உங்களின் இலக்கு நன்மையானவற்றில் ஒருவருக்கொருவர் முன்னேறிச் செல்லுங்கள்” ( அல்குர்ஆன்: 2: 148 )
إِنَّ اللهَ تَعَالَى يُحِبُّ مَعَالِيَ الأُمُوِر وَأَشرَافَهَا، وَيَكَرهُ سَفْسَافَهَا
ஹஸன் (ரலி) அறிவிக்கின்றார்கள்:“திண்ணமாக! அல்லாஹ் காரியங்களில், செயல்களில் மிக உயர்ந்தவற்றையும், சிறப்பானவற்றையும் பிரியப்படுகின்றான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: தப்ரானீ )
மூன்று வகையான மனிதர்கள் இந்த உலகில் வாழ்கிறார்கள். பிறந்தோம்-வாழ்ந்தோம்- இறந்தோம் என்று வாழ்பவர்கள் ஒரு வகை. பிறர் தயவில் வாழ்க்கையை ஓட்டுபவர்கள் அடுத்த வகையினர். இதில் மூன்றாவதாக உள்ளவர்கள், எதற்காகப் பிறந்தோம் என்பதை உணர்ந்து, வாழ்வின் நோக்கமும் லட்சியமும் என்ன என்பதை அறிந்து வாழும் மனிதர்கள்.
அந்த வகையில்
முஸ்லிமாக வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் ஓர் உன்னத லட்சியம் இருந்தாக வேண்டும்.
இங்கு யாரையும் இறைவன் வீணாகப் படைக்கவில்லை. ஏதோ ஒரு உன்னத நோக்கத்திற்காகவே
இறைவன் நம்மைப் படைத்துள்ளான்.
أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا
لَا تُرْجَعُونَ
இறைவன் கேட்கிறான்: "நாம் உங்களை வீணாகவே படைத்துள்ளோம் என்றும், நம்மிடம் நீங்கள் திரும்பிக் கொண்டு வரப்படவே மாட்டீர்கள் என்றும் எண்ணிக்கொண்டிருந்தீர்களா, என்ன?". ( அல்குர்ஆன்: 23: 115 )
லட்சியம்
இல்லாமல் வாழும் மனிதர்களை விலங்குகளுக்கும் கீழானவர்களாக ஒப்பாக்குகின்றான்
அல்லாஹ். காரணம், அவர்கள் எதையும் சிந்திப்பதும் இல்லை, நல்உபதேசங்களைக் கேட்பதும் இல்லை.
وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ
لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا
وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ
أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ
"மேலும் உண்மை யாதெனில், ஜின் மற்றும் மனித வர்க்கத்தில் பெரும்பாலோரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கின்றோம். அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன; ஆயினும் அவற்றால் அவர்கள் சிந்தித்து உணர்வதில்லை; அவர்களுக்கு கண்கள் இருக்கின்றன; ஆயினும் அவற்றால் அவர்கள் பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் இருக்கின்றன; ஆயினும் அவற்றால் அவர்கள் கேட்பதில்லை; அவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள்; ஏன் அவற்றை விடவும் அவர்கள் தாழ்ந்தவர்கள். அவர்கள்தாம் அலட்சியத்தில் மூழ்கியிருப்பவர்கள்". ( அல்குர்ஆன்: 7: 179 )
தமக்கும், தம் சமூகத்திற்காகவும், சக மனிதனுக்காகவும் பயனுள்ள வகையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்பவர் தான் இந்த உலகில் லட்சிய வழ்வு வாழ்கிறவர் ஆவார்.
5) தாழ்வு மனப்பான்மை அகற்றி தன்னம்பிக்கை வளர்க்க வேண்டும்...
நாம் முஸ்லிம் என்பதால் நம்மை அரசின் உயர்ந்த பொறுப்புகளுக்கு தேர்வு செய்ய மாட்டார்கள். அப்படியே தேர்வு செய்தாலும் நம்மை நமது போங்கில் பணி செய்ய விட மாட்டார்கள் என்ற தாழ்வு மனப்பான்மை நம் சமூகத்தில் உயர் கல்வி படித்த பலருக்கும் இருக்கிறது.
நாட்டில் நடைபெறும் சம்பவங்களும் அதை பிரதிபலிப்பதாய் தான் அமைந்திருக்கிறது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து "பாகிஸ்தானை கலங்கடித்த சிந்தூர் ஆப்ரேஷனை" தலைமை தாங்கி நடத்தி வைத்த சகோதரி சோஃபியா குரேஷியை பாஜகவின் ம. பி அமைச்சர் ஒருவரே விமர்சித்ததை நாம் ஊடகத்தின் வாயிலாக கண்டோம்.
நாம் படித்து விடக்கூடாது, படித்து உயர் பதவிகளுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவே சங்கிகள் இது போன்ற பயத்தை காட்டி நம் மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்த விளைகின்றார்கள் நாம் இவைகளை முறியடித்து உயர் கல்வி படித்து உயர் பதவிகளில் அமர வேண்டும். இதற்கு தன்னம்பிக்கை மிகவும் அவசியம்.
சமகால அறிவாயுதமே வெற்றிகளை வசமாக்கும்....
ஹுதைபிய்யா உடன்படிக்கை எழுத்துகளுக்கு இருக்கும் வலிமையை பறைசாற்றிய தருணம் அது.
ஒரு சில எழுத்துக்கள் சில மணித்துளிகளிலேயே கனவை நனவாக்க தடையாகியது.
கண் முன்னே கதறுபவர்களை வேறு வழியின்றி கைவிட வழிகோலியது.
எப்படியெல்லாம் எழுதி விட்டார்கள். எழுதியதை எப்படியெல்லாம் நடைமுறை படுத்தி விட்டார்கள்.
அதே எழுத்தை மாநபி ஸல் அவர்கள் ஆயுதமாக்கினார்கள். உலகின் பல பாகங்களில் வாழும் அரசர்களுக்கும், மன்னர்களுக்கும் கடிதம் மூலம் ஏகத்துவ அழைப்பை விடுத்தார்கள்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் மக்கா நகரத்தை வெற்றி கொள்ளும் போது முஸ்லிம் சமூகத்தின் எண்ணிக்கை பத்தாயிரம், அதற்கடுத்த இரண்டரை ஆண்டுகளில் ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரம் எண்ணிக்கையில் முஸ்லிம்கள்.
இதில் மிகப்பெரிய வியப்பு என்னவென்றால் ஹுதைபிய்யா உடன்படிக்கையின் மூளையாக, ஆணிவேராக இயங்கிய ஸுஹைல் இப்னு அம்ர் அவர்களையும் மாநபி ஸல் அவர்களின் "எழுத்தாயுதம்" வென்றெடுத்தது. ஆம்! மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தை தழுவிய மக்காவாசிகளில் அவரும் ஒருவர்.
நாம் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை பெரும்பாலும் நமது எதிரியே தீர்மானிக்கின்றான் என்று சொல்வார்கள்.
அந்த வகையில் மாநபி ஸல் அவர்கள் சமகால தேவையை அறிந்து செயல் பட்டு மகத்தான மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.
அஹ்ஜாப் யுத்தத்தில் தோண்டப்பட்ட அகழ் இவ்வாறே சமகால தேவையை அறிந்து ஸல்மான் ஃபார்ஸி அவர்களின் ஆலோசனையின் பேரில் நபி ஸல் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு மகத்தான வெற்றியை இந்த உம்மத்துக்கு பெற்றுத்தந்தது.
அந்த வகையில் தற்போது இந்த தேசத்தில் நாம் "அறிவாயுதத்தை" கையில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளோம்.
மலை மேல் கப்பல்? வல்லரசை வீழ்த்தியவர்.
أمر
السلطان محمد الفاتح الجيش الانكشاري برفع السفن القتالية من البسفور
ورفعها
علي جبل غلطه وانزالها إلى مضيق القرن الذهبي
.
وهو ما
سبب ذهول للرومان . لأنه لم يستطع أي جيش مهما بلغت قوته أن
يعبر
هذا المضيق بسبب سلسلة القرن الذهبي المشهورة التي تغلق المضيق
ومن ثم
يرمونها بالنار الاغريقية وبالتالي عدد السفن لا يهم أمام تلك الأسطورة
فخر
روما ..وقد استطاع محمد الفاتح بفكرته العظيمة التغلب على أمجاد
روما وتاريخ روما الذي دام 1700 عام .
حتى قال
عنه المؤرخ دوكاس وهو أحد الفرسان القسطنطينية
:
" ما رأينا ولا سمعنا من قبل بمثل هذا الشيء الخارق، مُحمَّد
الفاتح
يُحوِّلُ الأرض إلى بحارٍ وتعبرُ سُفنهُ فوق قمم الجبال بدلًا
من الأمواج.
لقد فاق مُحمَّد الثاني بهذا العمل الإسكندر الأكبر "..
لأن
السلطان علم أنه لا يستطيع فتح القسطنطينية مالم يحاصرها من كل
الجهات وقد كان في الواقع يحاصرها برياً عدا مضيق القرن الذهبي
وبعد
أداء المهمة الصعبة تمّ الحصار وكان الفتح 1453م
لتتحقق
بذلك بشارة سيد الخلق والسراج المنير محمد صلي الله عليه وسلم
في قوله:
(لَتُفْتَحَنَّ القُسطَنْطِينِيَّةُ فلنعمَ الأميرُ أميرُها ولنعمَ
الجيشُ ذلك الجيش ) ..
فلنعم
الأمير محمد
ولنعم
الجيش جيش الانكشارية .
العبرة ?
{ محمد الفاتح صاحب تلك الفكره العبقرية التي تغلب بها علي نفسه
أولاً
وعلي
القادة الذين سبقوه .. ووصل به الاصرار على هذا الفتح أنه قال:
" ايتها القسطنطينية إما أن أفتحك أو أموت دونك "
هذا
الأمير الصغير فتح القسطنطينية وعمره آنذاك 21 سنة
} ..
محمد
الفاتح في طفولته كانت والدته تأخذه عند أسوار القسطنطينية
وتقول
له: ( يامحمد .. أنت من ستفتح هذه المدينة أنت الذي مدحه
النبي صلى الله عليه )
المصدر: تاريخ الدولة العثمانية.
உஸ்மானிய கிலாஃபத்தின் கலீஃபாக்களில் ஒருவர் சுல்தான் முஹம்மத் அல் ஃபாத்திஹ் அவர்கள். இவர் சிறு பிள்ளையாக இருந்தபோதே, இவரின் தாய் இவரை காண்ஸ்டாண்டி நோபிள் எல்லை அருகே தூக்கிச் சென்று அதைக்காட்டி “முஹம்மதே நீ தான் இந்த நகரத்தை வென்றெடுக்கப் போகிறாய். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் புகழ்ந்த வெற்றியாளன் நீ தான்” என்று கூறுவார்.
இந்த முஹம்மத் அல்ஃபாத்திஹ் வளர்ந்து வாலிபராகி இருபத்து ஒன்றாவது வயதை எட்டிய சமயத்தில் கான்ஸ்டாண்டிநோபிள் என்ற நகரத்தை வென்றெடுத்தார். தன் இளம் வயதிலேயே இந்த மகத்தான வெற்றியைப் பெற்றார். கான்ஸ்டாண்டிநோபிள் எல்லையருகே நின்றுகொண்டு இவர், “ஏ…கான்ஸ்டாண்டி நோபிளே உன்னை நான் வென்றெடுப்பேன் இல்லை என்றால் வீர மரணத்தைத் தழுவுவேன்” என்று சொன்னார்.
இப்படி அவர் உறுதியோடு முழங்கிடக் காரணம் என்னவெனில், மனிதகுலத்தின் தலைவர் வழிகாட்டும் ஒளி விளக்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள், “கான்ஸ்டாண்டிநோபிளை முஸ்லிம்கள் வென்றெடுப்பார்கள். அந்த படையின் தலைவர் சிறந்த தலைவர். அந்த படை சிறந்த படை”என்று சொன்ன அந்த ஒரு சொல்தான்.
அந்த சிறந்த படைத்தலைவராக விளங்கியவர் முஹம்மது அல்ஃபாத்திஹ். அந்த சிறந்த படையாக “அல் இன்கிஷாரிய்யா” என்ற படை திகழ்ந்தது.
முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பை செயல்படுத்துவதற்காக கி.பி. 1453 ஆம் ஆண்டு முஹம்மத் அல்ஃபாத்திஹ் தயாரானார். அவருக்கு, “கான்ஸ்டான்டினோபிளை வெற்றிகரமாகப் பெற வேண்டுமானால் எல்லா திசைகளிலும் அதனை முற்றுகையிட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்” என்பது நிச்சயமாகத் தெரிந்திருந்தது.
ஏற்கனவே, தரைவழி எல்லைகளை முற்றுகையிட்டிருந்தார். ஆனால், 'அல்கர்னுத் தஹபீ' என்ற நெருக்கடி மிகுந்த நீர்வழியை முற்றுகையிட இயலவில்லை. அது மிகவும் சிரமமான பகுதி.
இதற்கு முன்னரும் எந்த இராணுவமும், எவ்வளவு முயற்சித்தும், அந்தப் பகுதியை கடந்ததில்லை. (இந்த இயற்கையான பாதுகாப்புச் சூழல் காரணமாக நம்மை யாராலும் வெல்ல முடியாது என்ற இறுமாப்பைப் பெற்றிருந்தனர் ரோமப் பைசாந்தியர்கள்) அந்த 'அல்கர்னுத் தஹபீ' பகுதியை யாரேனும் நெருங்கினால், ரோமர்கள் பெரும் சங்கிலிகளை பயன்படுத்தி அந்த வளைகுடாவையே மூடி விடுவார்கள், பின்னர் கிரேக்க நெருப்பால் எதிரிப்படையை ரோமர்கள் தாக்குவார்கள். அதனால் எந்தக் கப்பல்களும் அந்தப் பகுதியைக் கடக்க முடியாமல் இருந்தன.
ஆனால் கலீஃபா முஹம்மத் அல்ஃபாத்திஹ் அவர்கள் தனது மகத்தான போரறிவால் திட்டங்களை தீட்டினார். 1700 ஆண்டு காலமாக நீடித்த ரோமின் வரலாற்றையும் அதன் புகழையும் வீழ்த்தினார்.
அல்கர்னுத் தஹபீ
என்ற நீர்வழியாக கப்பல்களை செலுத்தாமல் ‘பாஸ்போரஸ்’லிருந்து தரைவழியாக போர்க்கப்பல்களை
ஓட்டினார். ஆம்.
இந்த செயற்கரிய செயலைச் செய்திட “அல்இன்கிஷாரிய்யா” என்ற முரட்டுப் படையினரைப் பயன்படுத்தினார்.
போர்க் கப்பல்களை ‘கலத்தா’ என்ற மலை வழியாக ஏற்றி, அல்கர்னுத் தஹபீ என்ற நெருக்கடி மிகுந்த நீர்வழிப் பாதையில் இறக்கினார். இப்படி நடக்கும் என்று ரோம பைசாந்தியர்கள் கற்பனையில் கூட நினைக்கவில்லை. அதிர்ந்தனர் ரோமர்கள்.
கான்ஸ்டாண்டிநோபிளின் குதிரைப்படை வீரர்களில் ஒருவரும் வரலாற்றாசிரியருமான டூக்காஸ் என்பவர் கூறுகிறார்: “இது போன்ற அற்புதத்தை இதற்கு முன்னர் நாங்கள் கண்டதுமில்லை. கேட்டதுமில்லை. முஹம்மத் அல்ஃபாத்திஹ், தரையைக் கூட கடலாக மாற்றுகிறார். நீரலைகளின் மேல் ஓட்டுவதற்கு பதிலாக மலைமுகட்டின் மேல் போர்க் கப்பல்களை ஓட்டுகிறார். இந்த இரண்டாம் முஹம்மத் என்ற முஹம்மத் அல்ஃபாத்திஹ் மகா அலெக்ஸாண்டையும் தன் செயல் திறத்தால் விஞ்சி விட்டார்.
( நூல்: “தாரீஹுத் தவ்லத்தில் உஸ்மானிய்யா” நன்றி: தமிழில்: மௌலானா கா. மு இல்யாஸ் ரியாஜி ஹழ்ரத் அவர்களின் முகநூல்
பக்கம் )
No comments:
Post a Comment