Thursday, 12 March 2026

ரமழானுக்குப் பின் நான் யார்?..

 

ரமழானுக்குப் பின் நான் யார்?..



ரமழானின் நிறைவுப் பகுதியில் ரமழானின் இறுதி ஜும்ஆவில் நாம் வீற்றிருக்கின்றோம்.

ஏனெனில், அடுத்த வியாழக்கிழமை மாலை பிறை பார்க்க வேண்டிய நாள். ஒரு வேளை பிறை தென்பட்டால் வெள்ளிக்கிழமை ஈதுடைய நாள். இல்லை என்றால் வெள்ளிக்கிழமை முப்பதாவது நோன்பாகும்.

ரமழான் இன்னும் ஏழு நாட்களில் விடை பெற இருக்கிறது. ஆனால் நாம் விடை கொடுக்கும் மனோ நிலையில் இல்லை.

இந்த ரமழானில் இருந்து அடுத்த பதினோரு மாதங்களுக்கு என்ன கொண்டு செல்ல இருக்கின்றோம். இந்த ரமழானில் நாம் எதை எடுத்துக் கொண்டோமோ அதைத் தான் நாம் அடுத்த பதினோரு மாதங்களுக்கு கொண்டு செல்ல முடியும்.

நம்மில் ஒருவர் ஹஜ்ஜுக்கு சென்று திரும்பி வருவார். உம்ராவுக்கு சென்று திரும்பி வருவார். 

இது போன்று புனித பயணங்களில் இருந்து திரும்பி வருபவரிடம் அவரின் குடும்பமும், உற்றாரும் சுற்றத்தாரும் என்ன எதிர் பார்ப்பார்களோ? அது போன்று தான் இந்த ரமழானில் இருந்து நாம் விடை பெறும் போது நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம்மிடம் புனிதமான ரமழானில் நம்மை எப்படியெல்லாம் இருக்க கண்டார்களோ அப்படியெல்லாம் மற்ற மாதங்களில் இருக்க வேண்டும் என்று ஆசைப் படுவார்கள்.

எனவே, ரமழானில் நாம் எதை எடுத்துக் கொண்டிருக்கின்றோம்? என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

ஐந்து நேரத் தொழுகைகளை உரிய நேரத்தில் பேணுதலாக தொழுதவர்கள் பலர் உண்டு.

தராவீஹ் உட்பட தஹஜ்ஜத் மற்றும் உபரியான முன் பின் சுன்னத்தான தொழுகைகளை நியமமாக தொழுதவர்கள் பலர் உண்டு.

நோன்பாளிகள் சவுகரியமாக நோன்பு திறக்க பதறாமல், முகம் சுளிக்காமல் ஆர்வத்துடன் பணிவிடைகள் செய்தவர்கள் பலர் உண்டு.

ஸதகா, ஜகாத் மூலம் தர்ம காரியங்களில் தமது பொருளாதாரத்தை ஏழை எளிய மக்களுக்கு, வறிய மக்களுக்கு வாரி வழங்கிய பலர் உண்டு.

ஹாஃபிழ்களை, ஆலிம்களை, முஅத்தின்களை அன்பளிப்புகளால் அரவணைத்தவர்கள் பலர் உண்டு.

வீட்டு வேலைகளை மனைவியோடு, தாய் சகோதரியோடு அகமகிழ்ந்து பகிர்ந்து கொண்டவர்கள் பலர் உண்டு.

நன்மை பெற்றிடும் நோக்கத்துடன் அரும் பணியாற்றிய பல பிரமுகர்கள், நிர்வாகிகள், தன்வந்தர்கள் பலர் உண்டு.

பிறரை ஏசாமல் பேசாமல் தமக்கு சிரமம் கொடுத்தவருக்கு எந்த வகையிலும் பழி தீர்க்காமல் பண்போடு கடந்து சென்றவர்கள் பலர் உண்டு.

 தன்னால் முடிந்த இபாதத்களை, குர்ஆன் திலாவத்தை, திக்ர்களை, நபி அவர்கள் மீது ஸலவாத் ஓதி, தான் உண்டு தன் வேலை உண்டு என நேரத்தை கச்சிதமாக பயன்படுத்திய பலர் உண்டு.

எல்லாவற்றுக்கும் மேலாக இறைவன் மீது உள்ள பயத்தால் பாவங்களில் இருந்து விலகி, தன்னை தற்காத்துக் கொள்ள ஷைத்தானுடன் போராடிய முஜாஹித்கள் இங்கு பலர் உண்டு.

இவை எல்லாம் இந்த ஒரு மாதத்திற்காகவா? இல்லை, வாழ்க்கை முழுவதும் எடுத்துச் செல்வதற்காகவா?

ரமழானில் நாம் செய்த அனைத்து நற்காரியங்களும் வாழ்க்கை முழுவதும் எடுத்துச் செல்வதற்காக என்று இருக்குமானால் ஒரு சபதம் எடுத்துக் கொள்வோம்.

 ரமழானில் நான் எப்படி இருந்தேனோ அது போன்றே என் வாழ்நாள் முழுவதும் நான் செயல் பட நீ அருள் புரிவாயாக! ரப்பே! 

யாஅல்லாஹ்! ரமழானில் என்னை எப்படி நீ வழிநடத்தினாயோ அது போன்றே என் வாழ்நாள் முழுவதும் நீ என்னை வழிநடத்துவாயாக! என்று துஆ செய்து விட்டு,

இப்போது நாம் அல்லாஹ்வின் மீது சபதம் எடுத்துக் கொள்வோம்! யாஅல்லாஹ்!

இன்ஷா அல்லாஹ்.... முதற் கட்டமாக நான் ரமழானில் எடுத்துக் கொண்ட என் சிறந்த செயல்பாடுகளை எதிர் வரும் ரமழான் வரை பதினோரு மாதங்களும் தவறாது கடை பிடிப்பேன்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை அவனுடைய மார்க்கத்திற்காக கபூல் செய்தருள்வானாக! ரமழானின் நிறைவை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு நன்மையானதாக ஆக்கியருள்வானாக!

1) ரமழானின் நிறைவு நல்லதாக அமையட்டும்!!

பொதுவாக ஒரு முஃமின் செய்கிற எந்த ஒரு காரியத்தின் இறுதியும் நல்லதாக அமைய வேண்டும். அதற்காக நாம் அல்லாஹ்விடம் துஆச் செய்ய வேண்டும்.

மாநபி அவர்கள் தங்களுடைய பிரார்த்தனையில் அமல்களின் முடிவு நல்லதாக அமைய அதிகம் பிரார்த்தித்திருக்கின்றார்கள்.

اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ فَوَاتِحَ الْخَيْرِ وَخَوَاتِمَهُ وَجَوَامِعَهُ، وَأَوَّلَهُ وَآخِرَهُ، وَظَاهِرَهُ وَبَاطِنَهُ، وَالدَّرَجَاتِ الْعُلَى مِنَ الْجَنَّةِ.

யா அல்லாஹ்! நன்மைகளின் ஆரம்பங்களையும் முடிவுகளையும் இன்னும் எல்லா நன்மைகளையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். நன்மைகளின் ஆரம்பம், முடிவு, அதன் வெளிப்படை, அந்தரங்கம் மற்றும் சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்துக்களையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.( நூல்: தப்ரானி )

إِنَّ الَّذِينَ هُمْ مِنْ خَشْيَةِ رَبِّهِمْ مُشْفِقُونَ (57) وَالَّذِينَ هُمْ بِآيَاتِ رَبِّهِمْ يُؤْمِنُونَ (58) وَالَّذِينَ هُمْ بِرَبِّهِمْ لَا يُشْرِكُونَ (59) وَالَّذِينَ يُؤْتُونَ مَا آتَوْا وَقُلُوبُهُمْ وَجِلَةٌ أَنَّهُمْ إِلَى رَبِّهِمْ رَاجِعُونَ (60) أُولَئِكَ يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَهُمْ لَهَا سَابِقُونَ

நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களும், எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களை மெய்யாகவே நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களும், எவர்கள் தங்கள் இறைவனுக்கு எவரையும் இணை ஆக்காமல் இருக்கின்றனரோ அவர்களும், எவர்கள் தங்களுக்குச் சாத்தியமான வரை தானம் கொடுப்பதுடன் அவர்களுடைய உள்ளங்கள் நிச்சயமாக தங்கள் இறைவனிடம் செல்வோம் என்று பயந்து கொண்டிருக்கின்றனவோ அவர்களும், ஆகிய இவர்கள்தான் நன்மையான காரியங்களில் விரைந்து செல்கிறவர்கள். மேலும், அவர்கள் அவற்றை செய்வதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொள்கின்றனர். ( அல்குர்ஆன் 23 : 57-61 )

قال الإمام أحمد : حدثنا يحيى بن آدم ، حدثنا مالك بن مغول ، حدثنا عبد الرحمن بن سعيد بن وهب ، عن عائشة; أنها قالت : يا رسول الله ، ( والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة ) ، هو الذي يسرق ويزني ويشرب الخمر ، وهو يخاف الله عز وجل؟ قال : " لا يا بنت أبي بكر ، يا بنت الصديق ، ولكنه الذي يصلي ويصوم ويتصدق ، وهو يخاف الله عز وجل " .وهكذا رواه الترمذي وابن أبي حاتم ، من حديث مالك بن مغول ، به بنحوه . وقال : " لا يا بنت الصديق ، ولكنهم الذين يصلون ويصومون ويتصدقون ، وهم يخافون ألا يقبل منهم

மேற்கூறிய அல்முஃமினூன் அத்தியாயத்தின் 57 முதல் 61 வரையிலான வசனங்கள் இறக்கியருளப்பட்ட போது ஆயிஷா (ரலி) அவர்கள் நபி அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! செய்வதை செய்வார்கள், அவர்களுடைய உள்ளங்களோ அல்லாஹ்வின் பக்கம் தாங்கள் திரும்பவேண்டும் என்ற பயத்தில் இருக்கும் என்று அல்லாஹ் கூறுகிறானே? இந்த செய்வதை செய்வார்கள் என்றால் பாவங்களை செய்து கொண்டு மது அருந்திக் கொண்டு, திருடிக் கொண்டு, விபச்சாரம் செய்து கொண்டு அல்லாஹ்வை பயப்படுவதையா? இந்த வசனம் குறிக்கிறது" என்று கேட்டார்கள்.

அதற்கு நபி அவர்கள் இல்லை சித்தீகின் மகளே! (ஆயிஷா!) இதைப்பற்றி அல்லாஹ் இங்கு சொல்லவில்லை. அல்லாஹ் இங்கு எதை சொல்கிறான்? ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட ஒரு முஃமின் அல்லாஹ்வை இரவெல்லாம் வழிபட்டதற்குப் பிறகு, அவனுடைய பாதையில் போர் செய்த பிறகு, தான தர்மங்களை வாரி வழங்கியதற்கு பிறகு, அல்லாஹ்வை பயப்படுவான்.

அல்லாஹ் இதை ஏற்றுக் கொள்வானா? அல்லது இதை நிராகரித்து விடுவானா?" என்று அவர்களின் உள்ளங்கள் அஞ்சிக் கொண்டு இருக்கும் என்று நபி அவர்கள் பதில் கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )

2) நக்கலை, ஏளனத்தை புறந்தள்ள வேண்டும்!

ரமழானுக்கு பிந்தைய நம்முடைய செயல்பாடுகள் சமூக மக்களிடையே ஒரு மாற்றத்தை பிரதிபலிக்க வேண்டும். 

சில போது நம்மை சமூகம் ஏற்றுக் கொள்ளவும் செய்யும் சில போது நம்மை ஏளனமாகவும் பேசும்.

என்னப்பா ஒரு மாதத்திலேயே மாறிட்ட போல! எத்தனை நாளைக்குன்னு பார்ப்போம் என்று நக்கலாக பேசலாம்.

ஆனால், எந்த ஒரு நல்ல அமலுக்கும் மாற்றத்திற்கான பிரதிபலிப்பு உண்டு என்ற நம்பிக்கையை மக்களுக்கு நம் இபாதத்கள் மூலம், நம் செயல்பாடுகள் மூலம் ஏற்படுத்த வேண்டும். மேலும், நெஞ்சுரத்தோடு அதை எதிர் கொண்டு ஈமானிய வாழ்க்கையில் தொடர வேண்டும்.

நபி ஷுஐபு அலை அவர்களின் ஏகத்துவ பிரச்சார பணியின் முனைப்பை கண்ட அவரது சமூகத்தினர் ஷுஐபு அலை அவர்களிடம் வியந்து கேட்டதை குர்ஆன் குறிப்பிடும் போது...

قَالُوْا یٰشُعَیْبُ اَصَلٰوتُكَ تَاْمُرُكَ اَنْ نَّتْرُكَ مَا یَعْبُدُ اٰبَآؤُنَاۤ اَوْ اَنْ نَّفْعَلَ فِیْۤ اَمْوَالِنَا مَا نَشٰٓؤُا اِنَّكَ لَاَنْتَ الْحَلِیْمُ الرَّشِیْدُ 

(அதற்கு) அவர்கள் ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படிச் செலவு செய்வதை விட்டுவிடுமாறும் உம்முடைய தொழுகையா உம்மை ஏவுகிறது? நிச்சயமாக நீர் கிருபையுள்ளவரும் நேர்மையானவரும் தான்என்று (ஏளனமாகக்) கூறினார்கள்.

قَالَ یٰقَوْمِ اَرَءَیْتُمْ اِنْ كُنْتُ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّیْ وَرَزَقَنِیْ مِنْهُ رِزْقًا حَسَنًا وَمَاۤ اُرِیْدُ اَنْ اُخَالِفَكُمْ اِلٰی مَاۤ اَنْهٰىكُمْ عَنْهُ اِنْ اُرِیْدُ اِلَّا الْاِصْلَاحَ مَا اسْتَطَعْتُ وَمَا تَوْفِیْقِیْۤ اِلَّا بِاللّٰهِ عَلَیْهِ تَوَكَّلْتُ وَاِلَیْهِ اُنِیْبُ 

(அதற்கு) ஷுஐபு கூறினார்: “(என்னுடைய) சமூகத்தவர்களே! நான் என்னுடைய இறைவனின் தெளிவான அத்தாட்சி மீது இருப்பதையும், அவன் தன்னிடமிருந்து எனக்கு அழகான ஆகார வசதிகளை அளித்து இருப்பதையும் நீங்கள் அறிவீர்களா? (ஆகவே) நான் எதை விட்டு உங்களை விலக்குகின்றேனோ, (அதையே நானும் செய்து உங்கள் நலனுக்கு) மாறு செய்ய நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற வரையில் (உங்களின்) சீர் திருத்தத்தையேயன்றி வேறெதையும் நான் நாடவில்லை; மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை, அவனிடமே பொறுப்புக் கொடுத்திருக்கிறேன்; இன்னும் அவன் பாலே மீளுகிறேன்.

( அல்குர்ஆன்: 11: 87, 88 )

3) அமல் செய்யாத போது நமது மனம் உறுத்த வேண்டும்!

ரமழானில் எப்படி அமல் செய்து கொண்டு அழகிய செயல்பாடுகளோடு இறைவனை பயந்து வாழ்ந்தோமோ அது போன்றே மற்ற பதினோரு மாதங்களும் வாழ முற்பட வேண்டும். 

ரமழானுக்கு முந்தைய பழைய மாதிரியான வாழ்க்கை முறையே நம்மிடம் தொடருமானால் நம்முடைய மனம் உறுத்த வேண்டும்.

 

عن أبي ربعي حنظلة بن الربيع الأسيدي الكاتب- رضي الله عنه- أحد كتاب رسول الله صلى الله عليه وسلم قال: لقيني أبو بكر رضي الله عنه فقال: كيف أنت يا حنظلة؟ قلت: نافق حنظلة! قال: سبحان الله ما تقول؟! قلت: نكون عند رسول الله صلى الله عليه وسلم يُذَكِّرُنَا بالجنة والنار كأنا رَأْىَ عَيْنٍ فإذا خرجنا من عند رسول الله صلى الله عليه وسلم عَافَسْنَا الأزواج والأولاد وَالضَّيْعَاتِ نسينا كثيرا، قال أبو بكر رضي الله عنه : فوالله إنا لنلقى مثل هذا، فانطلقت أنا وأبو بكر حتى دخلنا على رسول الله صلى الله عليه وسلم . فقلت: نافق حنظلة يا رسول الله! فقال رسول الله صلى الله عليه وسلم : «وما ذاك؟» قلت: يا رسول الله، نكون عندك تذكرنا بالنار والجنة كأنا رأي العين فإذا خرجنا من عندك عافسنا الأزواج والأولاد والضيعات نسينًا كثيرًا. فقال رسول الله صلى الله عليه وسلم : «والذي نفسي بيده، لو تدومون على ما تكونون عندي، وفي الذِّكْر، لصافحتكم الملائكة على فرشكم وفي طُرُقِكُمْ، لكن يا حنظلة ساعة وساعة» ثلاث مرات.  

[صحيح] - [رواه مسلم]

நபி அவரகளின் எழுத்தாளர்களில் ஒருவரான அபூரிப்ஈ என்ற ஹன்ளலா இப்னு ரபீஉ அல் உஸைதி (ரழி) அறிவிக்கிறார்கள். ஒரு தடவை என்னை அபூபக்கர் (ரழி) அவர்கள் சந்தித்து "ஹன்ளலா எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள் அதற்கு "ஹன்ளலா முனாபிக் ஆகிவிட்டான் என்று நான் கூறினேன். "ஸுப்ஹானல்லாஹ் என்ன கூறுகிறீர்?" என்று கேட்டார்கள். அதற்கு நான் "நபி அவர்களிடம் நாம் இருக்கும் போது சொர்கத்தையும், நரகத்தையும் நாம் நேரில் பார்ப்பது போலவே நினைவு கூர்கிறோம். நபி அவர்களிடமிருந்து நாம் வெளியேறி வந்துவிட்டால் நம் மனைவியரை, குழந்தைகளை கவனிப்பதிலும் வாழ்க்கைத் தேவைகளுக்காக உழைப்பதிலும் மூழ்கிவிடுகிறோம். இதனால் அதிகமானதை மறந்து விடுகிறோம்." என்று கூறினேன்.

"அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக இது போன்றே நானும் உணர்கிறேன்" என்று அபூபக்கர் (ரழி) கூறினார்கள். உடனே நானும் அபூபக்கர் அவர்களும் நபி அவர்களிடம் வந்தோம். "இறை தூதர் அவர்களே! ஹன்ளலா நயவஞ்சகன் ஆகிவிட்டார்." என்று கூறினேன். "என்ன கூறுகிறீர்?" என்று நபி அவர்கள் கேட்டார்கள். "இறைதூதர் அவர்களே! உங்களுடன் இருக்கும் போது கண்ணால் பார்ப்பது போல் சொர்க்கத்தையும்,நரகத்தையும் நினைவு கூர்கிறோம். உங்களை விட்டும் நாங்கள் வெளியேறி விட்டால் மனைவியர், குழந்தைகள், வாழ்க்கைத் தேவை என மூழ்கி அதிகமாக மறந்துவிடுகிறோம்." என்று கூறினேன். "எனது ஆத்மாவை தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக என்னிடம் நீங்கள் இருக்கும் நிலையிலேயே இறைவனை நினைவு கூர்வதிலேயே தொடரந்தும் இருந்தால் உங்கள் படுக்கையிலும் உங்கள் வழிகளிலேயும் வானவர்கள் கைகொடுத்து மகிழ்வார்கள்.எனினும் ஹன்ளலாவே வணக்த்திற்கு என ஒரு நேரம் உண்டு, வாழ்க்கைக்கு உழைப்பதற்கு என்று ஒரு நேரம் உண்டு." என்று மூன்று முறை கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

4) நலவுகளின், நன்மைகளின் திறவுகோலாக இருக்க வேண்டும்!

ரமழான் மாதத்தில் நாம் நன்மைகளின் குவியல்களை கண்ணாரக் கண்டு, அல்குர்ஆன் வசனங்கள், நபி அவர்களின் நபிமொழிகள், முன்னோர்களின் வாழ்க்கை வரலாறுகளை காதால் கேட்டு, மனமார அனுபவித்து, உடலால் செல்வத்தால் வணக்க வழிபாடுகளில் கவனம் செலுத்தி இஸ்லாமிய வாழ்வியல் முறைகளை கனக் கச்சிதமாக பேணி வந்தோமோ அதே முறைகளை ரமழானுக்கு வெளியே மற்ற மாதங்களில் நாம் பேணுவதோடு நின்று விடாமல் நம் குடும்பம் நம்மைச் சுற்றியுள்ளவர்களும் நன்மையான காரியங்களை செய்ய, செய்த நன்மையான காரியங்களை தொடர தூண்டு கோலாக இருக்க வேண்டும்.

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ الْمَرْوَزِيُّ، أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي حُمَيْدٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ مِنَ النَّاسِ مَفَاتِيحَ لِلْخَيْرِ مَغَالِيقَ لِلشَّرِّ وَإِنَّ مِنَ النَّاسِ مَفَاتِيحَ لِلشَّرِّ مَغَالِيقَ لِلْخَيْرِ فَطُوبَى لِمَنْ جَعَلَ اللَّهُ مَفَاتِيحَ الْخَيْرِ عَلَى يَدَيْهِ وَوَيْلٌ لِمَنْ جَعَلَ اللَّهُ مَفَاتِيحَ الشَّرِّ عَلَى يَدَيْهِ ‏"‏ ‏.‏ خلاصة حكم المحدث : حسن بمجموع طرقه الراوي : أنس بن مالك | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة الصفحة أو الرقم : 1332

மனிதர்களில் சிலர் நலவுக்கு திறவு கோலாகவும், தீமைகளுக்கு தடையாகவும் உள்ளனர், வேறு சிலர் தீமைகளுக்கு திறவு கோலாகவும் நலவுக்கு தடையாகவும் உள்ளனர், அல்லாஹ் எவரின் கரத்தினால் நலவின் வாயில்களை திறந்து விடுகிறானோ, அவருக்கு சுபசோபனம் உண்டாகட்டும், மேலும் எவன் மூலம் தீமைகளின் வாயில்கள் திறக்கப் படுகிறதோ அவன் மீது நாசம் உண்டாகட்டும்என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), ( நூல்: இப்னு மாஜா )

மாநபி அவர்கள் இப்படி ஒரு அறிவிப்பை செய்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் அதற்கு செயல் வடிவமும் கொடுத்து நாம் எப்படி எல்லாம் நலவுகளின் திறவுகோலாய், நன்மைகளின் திறவுகோலாக இருக்க வேண்டும் என்று வழிகாட்டியும் இருக்கின்றார்கள்.

பத்ர் யுத்தத்திலே கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதபடி மக்கா குரைஷிகளின் படை முஸ்லிம்களிடம் தோல்வியடைந்திருந்தது.

சிறைபிடிக்கப்பட்ட கைதிகளுள் சுஹைல் இப்னு அம்ரும் ஒருவர். அவருக்கு விலங்கிட்டு மதீனாவிற்கு இழுத்துச் சென்றார்கள் முஸ்லிம்கள்.

 

عندما وقع سهيل بن عمرو أسيرا في غزوة بدر اقترب عمر بن الخطاب من رسول الله ﷺ وقال: يا رسول الله.. دعني أنزع ثنيتي سهيل بن عمرو حتى لا يقوم عليك خطيبا بعد اليوم”.. فأجابه الرسول: ﷺ كلا يا عمر..لا أمثل بأحد، فيمثل الله بي، وان كنت نبيا، يا عمر..لعل سهيلا يقف موقفا يسرك غدا “…!!

உமர் (ரலி) அவர்கள் நபி அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! சுஹைலின் முன் பற்களை நான் உடைத்து எடுத்து விடுகிறேன். அதன் பிறகு அவரது நாக்குத் துறுத்தி, எங்கும் எவர் முன்னிலையிலும் தங்களுக்கு எதிராகப் பேச இயலாதவராக ஆகிவிடுவார்என்று அனுமதி கேட்டார்.

அதற்கு, முஹம்மது நபி அவர்கள் நான் எவருடைய அங்கத்தையும் சிதைக்க மாட்டேன். ஏனெனில், நான் அல்லாஹ்வின் தூதராகவே இருந்தபோதிலும் அல்லாஹ் என் அங்கத்தைச் சிதைக்கக்கூடும். ஒரு காலம் வரலாம். அப்பொழுது இவர் எழுந்து நின்று பேசப்போகும் பேச்சு நீங்கள் குறை காணமுடியாத ஒன்றாக அமையக்கூடும்என்று பதில் அளித்து விட்டார்கள். 

ஹிஜ்ரி 8 வரை இஸ்லாத்தை எதிர்த்து நின்ற ஸுஹைல் இப்னு அம்ரு மக்கா வெற்றியின்போது தான் இஸ்லாத்தை ஏற்றார். 

எந்தளவு இஸ்லாத்தை எதிர்ப்பதில் அவர் உறுதியாக இருந்தாரோ அதைவிடப் பன்மடங்காக இஸ்லாமிய மார்கத்திற்காக களமாடினார்.

இவர்களோடு இவர்களது இரு மகன்கள் அபூஜன்தல் (ரலி) அப்துல்லாஹ் (ரலி) ஆகியோரும் இணைந்து யுத்த களங்களில் பங்கேற்றனர்.

وعندما حدثت فتنة الردة بعد وفاة الرسول ﷺ وقف سهيل عليهم خطيبا فقال:- يا أهل مكة ، لا تكونوا آخر من أسلم وأول من ارتد بعد موت النبي ﷺ، فثبت الله أهل مكة بكلامه.

பெருமானார் அவர்கள் இந்த உலகை விட்டும் விடைபெற்றுச் சென்ற அந்த தருணம் மக்காவை உற்று நோக்கச் செய்தது.

அந்த நேரத்தில் ஸுஹைல் இப்னு அம்ர் ரலி அவர்கள் மக்களுக்கு மத்தியில் எழுந்து நின்று நிகழ்த்திய உரை பெருங்கொண்ட எண்ணிக்கையிலான மக்கள் மதம் மாறிப் போவதிலிருந்து, மீண்டும் நரகவாசலை சந்திப்பதில் இருந்து தடுத்து நிறுத்தியது.

ஆம்! ஸுஹைல் இப்னு அம்ர் ரலி அவர்கள் தம் முன்பாக திரண்டிருந்த மக்களை நோக்கி "மக்காவாசிகளே! இஸ்லாத்திற்குள் கடைசியாக நுழைந்து, நபி அவர்களின் தூய மரணத்திற்குப் பின்னால் மதம் மாறிப் போனவர்களில் முதலாவது நபர்களாக நீங்கள் ஆகிட வேண்டாம்!" என்று கூறினார்கள். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த மக்களின் உள்ளத்தில் இஸ்லாத்தை நிலைபெறச் செய்தான்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு நபி அவர்கள் ஸுஹைல் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் விஷயத்தில் நன்மையின் திறவுகோலாய் திகழ்ந்தார்கள். இன்று, ஸுஹைல் இப்னு அம்ர் (ரலி) பெருங்கொண்ட எண்ணிக்கையிலான மக்களின் நல்வாழ்வுக்கு நன்மையின் திறவுகோலாய் விளங்கினார்.

தமது ஆண்மக்கள் இருவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை ஏற்க மறுத்த ஸுஹைல் இப்னு அம்ர் ரலி அவர்கள் பின்னால் தமது ஆண்மக்களின் தியாகம் கண்டு அகமகிழ்ந்தார்.

وذكر الواقدي قال : لما حج أبو بكر بالناس ، قبل حجة الوداع ، لقيه سهيل بن عمرو - رضي الله عنه - فقال : بلغني يا أبا بكر أن رسول الله - صلى الله عليه وسلم - قال : " يشفع الشهيد لسبعين من أهله " فأرجو أن يبدأ عبد الله بي .

அவர்களின் இளைய மகன் அப்துல்லாஹ் இப்னு ஸுஹைல் (ரலி) முஸைலமாவுக்கு எதிரான யமாமா யுத்தத்தில் உயிர்த்தியாகம் அடைந்தார்.

ஹஜ்ஜை நிறைவேற்றச் சென்ற கலீஃபா அபூபக்ரு, சுஹைல் (ரலி) அவர்களிடம் அவருடைய மகனாரின் இழப்பிற்கு ஆறுதல் கூறினார்.  

அப்போது, ஸுஹைல் (ரலி) அவர்கள், அபூபக்ர் ரலி அவர்களிடம், “இஸ்லாத்திற்காக உயிர் நீக்கும் தியாகி, தம் குடும்பத்தினர் எழுபது பேருக்காக மறுமையில் சிபாரிசு அளிக்க முடியும் என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தெரிவித்ததாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. என் மகன் அப்துல்லாஹ் (ரலி) அந்த சிபாரிசை என்னிலிருந்து துவங்குவார் என நம்புகிறேன்என்று சொன்னார். ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா )

மிகவும் பிந்தி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் நன்மைகள் பலவற்றையும் இழந்து விட்டதாக கருதிய ஸுஹைல் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் பெருமளவு இறைவழிபாட்டிலும் நற்காரியங்களிலும் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தார்

மேலும், ஸுஹைல் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் முனைப்போடு போர்க்களங்களில் பங்கேற்று ஷஹீதாக விரும்பினார்கள்.

நன்மைகளை செய்ய முடியாது போனது குறித்து மிகவும் கவலை கொண்டார்கள். மற்றவர்களிடமும் அதை வெளிப்படுத்தினார்கள்.

استأذنا عمر للدخول فلم يأذن لهما، وبقيا مدة طويلة خارج الباب، فجاء بلال وصهيب بن سنان يستأذنا أمير المؤمنين في الدخول، وهو العبد الأسود الحبشي, فقام عمر بن الخطاب متهللاً، وأدخله قبل أبي سفيان بن حرب وسهيل بن عمرو , فغضب أبو سفيان وقال لـ سهيل: العبد الحبشي يتقدم علينا! في الدخول.

 

فقال سهيل معلماً لـأبي سفيان بحكمة قائلاً: "يا أبا سفيان، إنما القوم قد سبقوا وتأخرنا، ودُعوا فأجابوا، وأخرنا، فإن كنت تريد هذا الأمر (المكانة العالية) فافعل (ادخل في الإسلام مبكراً) ولكن أين؟" (إشارة إلى فوات الأوان على الأسبقية).

ஒருமுறை கலீஃபா உமரைச் சந்திக்கக் ஸுஹைல் இப்னு அம்ரு(ரலி) அவர்களும் அபூஸுஃப்யான் இப்னுல் ஹர்பு (ரலி) அவர்களும் வந்திருந்தனர். அது போன்று குரைஷிகளின் முன்னாள் அடிமைகளான சுஹைப், பிலால் போன்றவர்களும் காத்திருந்தனர். 

முன்னாள் அடிமைகளுக்குத்தான் கலீஃபாவைச் சந்திக்க முதலில் அனுமதி கிடைத்தது. இஸ்லாத்திற்குள் நுழைந்தபின் உயர்ந்தவர் தாழ்ந்தவர் கிடையாதே!

அபூஸுஃப்யான் ஸுஹைல் இப்னு அம்ர் ரலி அவர்களிடம் இதைப்போல் முன்னெப்போதும் நான் கண்டதில்லை. உமர் இவர்களை முதலில் அழைத்து, நம்மைக் காத்திருக்க வைக்கிறாரா?”

ஸுஹைல் பதில் அளித்தார். மக்களே! உங்களது முகங்களுக்குப் பின்னால் உள்ளதை என்னால் புரிய முடிகிறது. உங்களுக்குக் கோபம் ஏற்பட்டால் அதை நீங்கள் உங்கள் மீதே கொள்ளுங்கள். அன்று இஸ்லாத்தை ஏற்க மக்களெல்லாம் அழைக்கப்பட்டனர்; நீங்களும் அழைக்கப்பட்டீர்கள். அவர்கள் முன்சென்று ஏற்றார்கள். நீங்கள் பின்தங்கி நின்றுவிட்டீர்கள். 

மறுமை நாளில் அவர்கள் முதலில் அழைக்கப்பட்டு நீங்கள் பின் தங்கி நிற்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கும் என நினைக்கின்றீர்கள்?” என்று கூறினார்கள். ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா )

போர்க்களம் கண்டு ஷஹீதாக வேண்டும் என்று யுத்த களங்களில் பங்காற்றிக் கொண்டிருந்த ஸுஹைல் ரலி அவர்கள் இறுதியாக, ஹிஜ்ரீ 18 -ஆம் ஆண்டு உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட அமவாஸ் பேரிடரில் கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டு, நபி அவர்கள் முன்னறிவிப்பு செய்த படி ஷஹீத் வீரமரணம் அடைந்தார்கள். ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா ) அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஸுஹைல் இப்னு அம்ர் ரலி அவர்களைப் பொருந்திக் கொண்டான்.

وَقَالَ ابْنُ عَدِيٍّ: تَابَ عَلَى يَدِ ابْنِ مَسْعُوْدٍ. وَعَنْ أَبِي هَاشِمٍ الرُّمَّانِيِّ. قَالَ: قَالَ زَاذَانُ: كُنْتُ غُلاَماً حَسَنَ الصَّوْتِ، جَيِّدَ الضَّرْبِ بِالطُّنْبُوْرِ، فَكُنْتُ مَعَ صَاحِبٍ لِي، وَعِنْدَنَا نَبِيْذٌ وَأَنَا أُغَنِّيْهِمْ, فَمَرَّ ابْنُ مَسْعُوْدٍ, فَدَخَلَ, فَضَرَبَ البَاطِيَةَ, بَدَّدَهَا وَكَسَرَ الطُّنْبُوْرَ ثُمَّ قَالَ: لَوْ كَانَ مَا يُسْمَعُ مِنْ حُسْنِ صَوْتِكَ يَا غُلاَمُ بِالقُرْآنِ، كُنْتَ أَنْتَ أَنْتَ. ثُمَّ مَضَى, فَقُلْتُ لأَصْحَابِي: مَنْ هَذَا؟ قَالُوا: صاحب رسول الله ﷺ، وهَذَا ابْنُ مَسْعُوْدٍ. فَأَلْقَى فِي نَفْسِي التَّوْبَةَ، فَسَعَيْتُ أَبْكِي، وَأَخَذْتُ بِثَوْبِهِ، فَأَقْبَلَ عَلَيَّ، فَاعْتَنَقَنِي، وَبَكَى، وَقَالَ: مَرْحَباً بِمَنْ أَحَبَّهُ اللهُ، اجْلِسْ. ثُمَّ دَخَلَ وَأَخْرَجَ لِي تَمْراً. . ثم لازم زاذان ابن مسعود حتى تعلم القرآن .. وصار إماماً في العلم

ஜாதான் அழகிய குரலில் பாடும் இளைஞராக இருந்தார். ஒரு முறை நண்பர்களுடன் இசைக் கருவியை மீட்டி பாடல் பாடிக் கொண்டிருக்கும் போது அந்த வழியாக கடந்து சென்ற இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள் "இளைஞரே! எவ்வளவு அழகிய குரல் உமக்கு! இந்த குரலில் குர்ஆன் ஓதினால் எப்படி இருக்கும்?" என்று கூறி சென்று விட்டார்கள். அப்போது ஜாதான் அருகிலிருந்த தமது நண்பர்களிடம் யார் இவர்? என்று கேட்டார்.

இவர் யார் என்று தெரியாதா உனக்கு? இவர் நபி அவர்களின் தோழர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள் என்று பதிலளித்தார்கள்.

இதைக் கேட்ட மாத்திரத்திலேயே அவரது மனதிலே ஒரு மாற்றம். உடனடியாக தவ்பாச் செய்து தம் தவறுகளில் இருந்து மீண்டு, தன்னுடைய கடந்த கால செயல்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு நேரடியாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலி அவர்களின் சபைக்கு வந்தார்.

ஜாதானைக் கண்டதும் இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள் "யாரை அல்லாஹ் நேசிக்கின்றானோ அத்தகைய இளைஞரே! வருக! உம் வருகை நல்வரவாகட்டும்!" என்று கூறி அமரச் செய்தார்கள். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பேரீச்சம்பழம் கொண்டு வந்து கொடுத்தார்கள். 

தொடர்ந்து இப்னு மஸ்ஊத் ரலி அவர்களிடம் பயின்ற ஜாதான் மிகப் பெரிய கல்விமான்களில் ஒருவராக, மிகப் பெரிய தாபிஈன்களில் ஒருவராக மாறினார்.

وَحَدَّثَ عَنْ: عَلِيٍّ، وَابْنِ مَسْعُودٍ، وَسَلْمَانَ، وَحُذَيْفَةَ، وَعَائِشَةَ، وَجَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، وَالْبَرَاءِ، وَابْنِ عُمَرَ.

رَوَى عَنْهُ: أَبُو صَالِحٍ السَّمَّانُ، وَعَمْرُو بْنُ مُرَّةَ، وَعَطَاءُ بْنُ السَّائِبِ، وَحَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، وَمُحَمَّدُ بْنُ سُوقَةَ، وَالْمِنْهَالُ بْنُ عَمْرٍو، وَمُحَمَّدُ بْنُ جُحَادَةَ.

ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள் ஹழ்ரத் ஆயிஷா ரலி ஹழ்ரத் இப்னு உமர் ரலி உட்பட இன்னும் ஐந்து நபித்தோழர்களிடம் இருந்து நபி மொழிகளை அறிவிக்கக்கூடிய நம்பத்தகுந்த அறிவிப்பாளர்களில் ஒருவராக மிளிர்ந்தார்கள். இவர்களிடம் இருந்து அறிவிக்க கூடிய அறிவிப்பாளர்களும் நம்பத்தகுந்த அறிவிப்பாளர்களில் உள்ளவர்கள் ஆவார்கள். ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா )

இப்போது நாம் அவர்களின் பெயரைச் சொல்லும் போது ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்றே இணைத்துச் சொல்ல வேண்டும் என்ற உயரிய நிலைக்கு உயர்ந்து விட்டார்கள்.

لو جمعتم كتابًا مختصرًا لصحيح سنة رسول الله صلى الله عليه وسلم" ألقاها إسحاق بن راهويه على طلابه، فوقعت في قلب تلميذه النجيب الإمام البخاريِّ، فألَّف أصح كتاب في الدنيا بعد كتاب الله "صحيح البخاري

ஒரு நாள் இஸ்ஹாக் இப்னு ராஹவைஹி (ரஹ்) அவர்கள் பாடம் நடத்தும் போது தங்களது மாணவர்களிடம் "நீங்கள் நமது நபி அவர்களின் ஸஹீஹான ஹதீஸ்களை சுருக்கமாக ஒன்று திரட்டினால் இந்த உம்மத்திற்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்" என்று. இந்த வார்த்தை அன்றைய வகுப்பில் அமர்ந்திருந்த புகாரி (ரஹ்) அவர்களின் உள்ளத்தில் ஊடுருவிச் சென்று தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆதலால், தனியொரு நபராக இருந்து இறைவேதத்திற்குப் பிறகு சிறந்த நூலான ஸஹீஹுல் புகாரியை இந்த உலகத்திற்கு அர்ப்பணிப்பு செய்தார்கள். ( நூல்: ஃபத்ஹுல் பாரி )

كان أبو حنيفة تاجر قماش يبيع في السوق ، فمر ذات يوم بالشعبي، وهو تابعي فقيه ومحدث؛ فقال له: إلى من تختلف؟ (يقصد من تذهب إليه؟) فقال: أختلف إلى فلان. قال: لم أعنِ إلى السوق، عنيت الاختلاف إلى العلماء.

 فقال: أنا قليل الاختلاف إليهم. فقال له الشعبي: عليك بالنظر إلى العلم ومجالسة العلماء، فإني أرى فيك ذكاء وفطنة. قال أبو حنيفة: فوقع في قلبي من قوله، فأخذت في العلم، فنفعني الله بقوله.

இமாமுல் அஃளம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள் ஆரம்பத்தில் பெரும் வியாபாரியாக திகழ்ந்தார்கள். அவர்களின் கால நேரம் முழுவதும் வணிகவளாகத்திலும், சந்தையிலுமே கழிந்தது. 

ஒருநாள் மிகப் பெரும் தாபிஈன்களில் ஒருவராக விளங்கிய இமாம் ஷுஅபீ (ரஹ்) அவர்கள் கடைத்தெரு வழியாக வந்து கொண்டு இருந்தார்கள்.

அப்போது, அபூ ஹனீஃபா ரஹ் அவர்கள் இடை மறித்து எங்கே சென்று வருகின்றீர்கள்? என்று கேட்டார்கள்.

அதற்கு நான் இன்ன மனிதரை சந்தித்து விட்டு வருகிறேன் என்று இமாம் ஷுஅபீ ரஹ் அவர்கள் பதில் கூற,

அப்போது, அபூ ஹனீஃபா ரஹ் அவர்கள் "நான் அதைக் கேட்கவில்லை. கருத்து முரண்கள் நிறைந்த உலமாக்கள் யாரையும் சந்தித்து வருகின்றீர்களா? என்று கேட்டேன். ஏனெனில், உலமாக்களிடம் எனக்கு சில கருத்து முரண்கள் உண்டு" என்றார்கள். 

அதற்கு, இமாம் ஷுஅபீ ரஹ் அவர்கள் "அபூ ஹனீஃபா அவர்களே! மார்க்க கல்வியோடு ஒரு தொடர்பையும், மார்க்க அறிஞர்களோடு ஒரு நெருக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வீராக! ஏனெனில், உம்மிடம் நான் சிறந்த அறிவுத் திறனையும், ஆழ்ந்த நுண்ணறிவையும் காண்கிறேன்" என்று கூறினார்கள்.

இதன் பின்னர் இமாம் அபூ ஹனீஃபா ரஹ் அவர்கள் கூறினார்கள் "இமாம் ஷுஅபீ ரஹ் அவர்கள் சொன்ன இந்த வார்த்தை என் உள்ளத்தில் ஏதோ உண்டு பண்ணியது. பின்னர் நான் மார்க்கக் கல்வித்துறையை நோக்கி நகர்ந்தேன். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இமாம் ஷுஅபீ ரஹ் அவர்களின் வார்த்தையின் மூலம் எனக்கு பயனைத் தந்தான்" என்றார்கள். ( நூல்: மனாகிபு அபூ ஹனீஃபா ரஹ் லிஇமாமி மக்கீ ரஹ்... )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரின் ரமழானையும் கபூல் செய்தருள்வானாக! நாம் வாழும் எல்லா காலத்திலும் ரமழானில் நம்மை அவனுடைய பயத்தோடும், நல்ல அமல்களின் தொடர்போடும் வாழச் செய்தது போல் வாழச் செய்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

Wednesday, 11 March 2026

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 23. நமது சபைகளை நபி ﷺ அவர்களின் சபை போல் அமைப்போம்!!!

 

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 23.

நமது சபைகளை நபி அவர்களின் சபை போல் அமைப்போம்!!!



22 –ஆவது நோன்பை நிறைவு செய்து, 23 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் அல் வாகிஆ, அல் ஹதீத், அல் முஜாதலா, அல் ஹஷ்ர் ஆகிய நான்கு சூராக்கள் ஓதப்பட்டிருக்கின்றது.

இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட அல் முஜாதலா சூராவின் 11 வது வசனத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சபை நாகரிகம் பேணுவதன் அவசியம் குறித்து பேசுகின்றான்.

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا قِیْلَ لَكُمْ تَفَسَّحُوْا فِی الْمَجٰلِسِ فَافْسَحُوْا یَفْسَحِ اللّٰهُ لَكُمْ وَاِذَا قِیْلَ انْشُزُوْا فَانْشُزُوْا یَرْفَعِ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَالَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ

இறைநம்பிக்கை கொண்டவர்களே! சபைகளில் நகர்ந்து இடங்கொடுங்கள்என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால் நகர்ந்து இடம் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடங்கொடுப்பான்; தவிர, ‘எழுந்திருங்கள்என்று கூறப்பட்டால் உடனே எழுந்திருங்கள்; அன்றியும், உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 58: 11 )

இஸ்லாமிய மார்க்கம் மற்ற மதங்களை விடவும், மற்ற சித்தாந்தங்களை விடவும் பல வகைகளில் சிறந்து விளங்கிறது. 

இஸ்லாம் சிறந்து விளங்குவதற்கான பிரதான காரணங்களில் ஒன்று, அதன் கொள்கைகள், இரண்டாவது மனித வாழ்க்கைக்குத் தேவையான சிறந்த வழிகாட்டல்களும் நல்ல அறிவுரைகளும்தான். 

அந்த வகையில் இரண்டு பேரோ அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களோ சேர்ந்து ஒன்றாக ஓரிடத்தில் அமர்ந்து பேசவும் கேட்கவும் செய்தால் அதற்கு சபை என்று பெயர்.

அந்த சபையில் அமர்ந்திருக்கும் நபர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகளை இஸ்லாம் நேர்த்தியான முறையில் வழிகாட்டி இருக்கிறது. அழகிய அறிவுரைகளால் செம்மை படுத்துகிறது.

எந்த சபையாக இருந்தாலும் ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரையில் அவனுக்கு அந்த சபை இம்மைக்கும் மறுமைக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

இன்றைய நமது சபைகளை நாம் நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும். நாலு பேர் சேர்ந்து அமர்ந்தாலே கேலியும் கிண்டலும் பிறரைப் பற்றிய புறமும் அடுத்தவரை அவமதிப்பு செய்வதும் என பல பாவங்கள் கரை புரண்டோடுகிற இடமாக காட்சி தருகிறது.

 یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا یَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسٰۤی اَنْ یَّكُوْنُوْا خَیْرًا مِّنْهُمْ وَلَا نِسَآءٌ مِّنْ نِّسَآءٍ عَسٰۤی اَنْ یَّكُنَّ خَیْرًا مِّنْهُنَّ وَلَا تَلْمِزُوْۤا اَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوْا بِالْاَلْقَابِ بِئْسَ الِاسْمُ الْفُسُوْقُ بَعْدَ الْاِیْمَانِ وَمَنْ لَّمْ یَتُبْ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ

இறைநம்பிக்கையாளர்களே! எந்த ஒரு பிரிவினரும் மற்றெந்த பிறிவினரையும் பரிகாசம் செய்யவேண்டாம், ஒரு வேளை அவர்கள் இவர்களை விடச் சிறந்தவர்களாயிருக்கலாம், எந்தப்பெண்களும் மற்றெந்த பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒரு வேளை அவர்கள் இவர்களை விட சிறந்தவர்களாகயிருக்கலாம் ஒருவரையொருவர் குறித்துப் பேச வேண்டாம், ஒருக்கொருவர் மோசமான பட்டப்பெயர்களைச்சூட்டி அழைக்கவேண்டாம்.இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமான பெயர் சூட்டுவது மிகவும் கெட்ட விஷயமாகும்.எவர்கள் இந்த நடவடிக்கையைக் கைவிடவில்லையோ அவர்கள் தான் கொடுமைக்காரர்கள்.” ( அல்குர்ஆன்: 49: 11 )

 فقال ابن عباس : نزلت في ثابت بن قيس بن شماس كان في أذنه وقر ، فإذا سبقوه إلى مجلس النبي - صلى الله عليه وسلم - أوسعوا له إذا أتى حتى يجلس إلى جنبه ليسمع ما يقول ، فأقبل ذات يوم وقد فاتته من صلاة الفجر ركعة مع النبي - صلى الله عليه وسلم - ، فلما انصرف النبي - صلى الله عليه وسلم - أخذ أصحابه مجالسهم منه ، فربض كل رجل منهم بمجلسه ، وعضوا فيه فلا يكاد يوسع أحد لأحد حتى يظل الرجل لا يجد مجلسا فيظل قائما ، فلما انصرف ثابت من الصلاة تخطى رقاب الناس ويقول : تفسحوا تفسحوا ، ففسحوا له حتى انتهى إلى النبي - صلى الله عليه وسلم - وبينه وبينه رجل فقال له : تفسح . فقال له الرجل : قد وجدت مجلسا فاجلس! فجلس ثابت من خلفه مغضبا ، ثم قال : من هذا ؟ قالوا فلان ، فقال ثابت : ابن فلانة! يعيره بها ، يعني أما له في الجاهلية ، فاستحيا الرجل ، فنزلت

ஸாபித் இப்னு கைஸ் (ரலி) என்கிற நபிதோழர், அவரின் காதில் அடைப்பு ஏற்பட்டு செவித்திறன் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.எனவே, பள்ளியில் அவர் நுழைந்தால் நபி அவர்களின் உரையாடலை நபி அவர்களின் அருகில் அமர்ந்து கேட்கும் விதமாக நபித் தோழர்கள் அவருக்கு வசதி செய்து கொடுப்பார்கள். ஒரு நாள் அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்கு தாமதமாக வந்தார்கள். தொழுது முடித்ததும் நபித்தோழர்கள் தத்தமது இடங்களில் அமர்ந்து கொண்டார்கள்,

அவர்களுக்கு பின்னால் இருந்து வழிவிடுங்கள், வழிவிடுங்கள், என்று சொல்லிக் கொண்டெ முன்னால் ஒவ்வொருவராகத் தாண்டி அமர்ந்திருந்த ஒருவரிடம் வந்து விட்டார்கள். முன்னால் அமர்ந்திருந்த அவரிடம் ஸாபித் (ரலி) வழி விடுங்கள், என்றார்கள். அதற்கவர் இடம் தான் கிடைத்து விட்டதே! கிடைத்த இடத்தில் உட்காருங்கள். என்று கூறிவிட்டார்

கோபத்துடன் அவ்விடத்தில் அமர்ந்துகொண்டார்கள் ஸாபித் (ரலி) அதிகாலை நேரத்தின் இருள் விலகி வெளிச்சம் பரவத் தொடங்கியதும், முன்னால் அமர்ந்திருவர் யார்? என அக்கம் பக்கத்திலிருந்த்வர்களிடம் விசாரித்துவிட்டு, ஓ! நீ இன்னாருடைய மகனா?அறியாமை காலத்தில் அம்மனிதரின் தாயார் இருந்த நிலையைச் சுட்டிக்காட்டி கொஞ்சம் சப்தமாக கேட்டு விட்டார்கள். அந்த சபையினர் அனைவரும் அம்மனிதரை நோக்க அம்மனிதர் வெட்கத்தாலும், அவமானத்தாலும் தன் தலையை தாழ்த்திக்கொண்டார். அப்போது, தான் மேற்கண்ட 49: 11 வசனம் இறங்கியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் பின்னர் ஸாபித் (ரலி) அவர்கள் இனி எப்போதும் நான் யாரையும் அவமதிப்பு செய்யமாட்டேன்! என்று உறுதி பூண்டார்கள். ( நூல்: திர்மிதி )

தம் இயலாமையை புரிந்து கொள்ளாத ஒருவரை, உணர்ச்சி வசப்பட்டு சபையில் இடம் தர மறுத்தவரை, தகாத வார்த்தைகளால் பேசியதற்காக, பேசிய அந்த மனிதரை நெறிப்படுத்தும் முகமாக அல்லாஹ் உடனடியாக அந்த சபையிலேயே வசனத்தை இறக்கியருளி வழிகாட்டினான் என்றால் நான்கு பேர் அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் கூடுகிற ஒரு சபை எவ்வளவு நாகரிகத்தோடு இருக்க வேண்டும் என்பதை அல்லாஹ் உணர்த்துகிறான் என்று நாம் புரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

நமது சபைகளும்... நமது நபி அவர்களின் சபைகளும்...

ஒரு சபைக்கு வரும் நபர் ஒருவர் ஒரு கவலையுடன் வருவார். வேறொருவர் நிம்மதி தேடி வருவார். இன்னொருவர் ஏதேனும் ஒன்றை புதிதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று வருவார். இப்படியாக இருவருக்கும் மேல் அமர்கிற ஒரு சபையில் வரும் ஒவ்வொருவரும் ஒரு நோக்கம் இருக்கும். நம் சபைகளில் வந்து அமர்கிற எல்லோருக்கும் அவர்களின் நோக்கம் நிறைவேறுகிறதா? என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனெனில், நாம் சபையாக கூடி அமர்வதன் நோக்கமே தவறாக இருக்கிறது. அல்லது எந்த நோக்கமும் இல்லாத வெட்டிச் சபையாக இருக்கிறது.

நாம் நமக்கு முன்மாதிரியான நமது நபி அவர்களின் சபை போன்று நம் சபைகளை அமைத்துக் கொண்டோம் என்றால் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும்.

ஒரு சபை என்றால் அந்த சபை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நபி அவர்களின் சபையே நமக்கு முன்மாதிரி ஆகும்.

அங்கே மகிழ்ச்சி நிலவும். அங்கே அன்பு ததும்பும். அங்கே நிம்மதி தழுவும். அங்கே அறிவு கிடைக்கும். அங்கே சஞ்சலம் தீரும். அங்கே நன்மைகள் கிடைக்கும். அங்கே ஒழுக்கம் ஓங்கும். அங்கே மனித வாழ்க்கைக்குத் தேவையான எல்லா மனிதவள மேம்பாடுகளும் கிடைத்தன. அதைப் பெற்றுக் கொண்ட நபித்தோழர்கள் வாழும் காலமெல்லாம் தம் நெஞ்சங்களில் மாநபி அவர்களின் சபையை நினைவு கூறிக் கொண்டே இருந்தார்கள்.

தீர்வும், விடியலும் கிடைக்கும் சபையாக....

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنِ الزُّهْرِىِّ قَالَ أَخْبَرَنِى حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ - رضى الله عنه - قَالَ بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ النَّبِىِّ - صلى الله عليه وسلم - إِذْ جَاءَهُ رَجُلٌ ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكْتُ . قَالَ « مَا لَكَ » . قَالَ وَقَعْتُ عَلَى امْرَأَتِى وَأَنَا صَائِمٌ . فَقَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - « هَلْ تَجِدُ رَقَبَةً تُعْتِقُهَا » . قَالَ لاَ . قَالَ « فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ » . قَالَ لاَ . فَقَالَ « فَهَلْ تَجِدُ إِطْعَامَ سِتِّينَ مِسْكِينًا » . قَالَ لاَ . قَالَ فَمَكَثَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - ، فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ أُتِىَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - بِعَرَقٍ فِيهَا تَمْرٌ - وَالْعَرَقُ الْمِكْتَلُ - قَالَ « أَيْنَ السَّائِلُ » . فَقَالَ أَنَا . قَالَ « خُذْهَا فَتَصَدَّقْ بِهِ » . فَقَالَ الرَّجُلُ أَعَلَى أَفْقَرَ مِنِّى يَا رَسُولَ اللَّهِ فَوَاللَّهِ مَا بَيْنَ لاَبَتَيْهَا - يُرِيدُ الْحَرَّتَيْنِ - أَهْلُ بَيْتٍ أَفْقَرُ مِنْ أَهْلِ بَيْتِى ، فَضَحِكَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - حَتَّى بَدَتْ أَنْيَابُهُ ثُمَّ قَالَ « أَطْعِمْهُ أَهْلَكَ » .

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நாங்கள் நபி அவர்களுடன் அமர்ந்திருந்த சபைக்கு ஸுலைமான் இப்னு ஸஃக்ர் அல்பயாளீ (ரலி) எனும் நபித்தோழர் வந்தார். வந்தவர் அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்என்றார்.

அல்லாஹ்வின் தூதர்  அவர்கள் உமக்கு என்ன நேர்ந்தது?” என்று வினவினார்கள். நான் ரமழானில் நோன்பு நோற்றுக் கொண்டு என் மனைவியுடன் பகலில் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்என்று ஸுலைமான் (ரலி) பதில் கூறினார்கள்.

அப்போது, மாநபி அவர்கள் இதற்குப் பரிகாரமாக ஓர் அடிமையை விடுதலை செய்ய உம்மால் இயலுமா?” என்று கேட்டார்கள். அதற்கவர் என்னால் இயலாதுஎன்றார்.

அப்படியானால், ”இரண்டு மாதங்கள் தொடர்படியாக நோன்பு நோற்க வேண்டும் உம்மால் இயலுமா?” என்று நபி அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் என்னால் இயலாதுஎன்று கூறிவிட்டார்.

அப்படியென்றால், அதற்குப் பரிகாரமாக அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். உம்மால் இயலுமா?” என்று நபி அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் என்னால் இயலாதுஎன்று கூறி விட்டார்.

அப்போது, அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கொஞ்ச நேரம் அப்படியே எங்களுடனே அமர்ந்திருந்தார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதர் அவர்களின் முன்பாக பேரீத்தம் பழங்கள் நிறைந்த அரக்எனும் பெரிய கூடை ஒன்று கொண்டு வரப்பட்டது.

அப்போது, நபி அவர்கள் கேள்வி கேட்டவர் எங்கே?” என்றார்கள். இதோ நான் இங்கிருக்கின்றேன்என்று கூறி ஓரிடத்திலிருந்து எழுந்து நபி அவர்களின் அருகே வந்தார்.

பேரீத்தம் பழக்கூடையை நீர் எடுத்துச் சென்று உம்முடைய அந்தச் செயலுக்குப் பரிகாரமாக ஏழைகளுக்குத் தர்மம் செய்வீராக!என்று நபி அவர்கள் கூறினார்கள்.

அப்போது, அவர் அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்குத் தானே நான் தர்மம் செய்ய வேண்டும்?” அப்படியானால், இதோ தெரிகிற மதீனாவின் இரு கரும்பாறைகளுக்கு மலைகளுக்கு இடையே வசிப்போரில் என் குடும்பத்தாரை விடப் பரம ஏழை யாருமில்லைஎன்று கூறினார்.

இதைக் கேட்ட நபி அவர்கள் தங்களது கடவாய்ப் பற்கள் தெரியும் அளவிற்குச் சிரித்தார்கள்; பிறகு, “இதை உம் குடும்படத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!என்று கூறினார்கள்.  ( நூல்: புகாரீ, முஸ்லிம் )

தவறை மென்மையாக சுட்டிக் காட்டும் சபையாக....

عن معاوية بن الحكم السُّلمي، قال: بينا أنا أُصلِّي مع رسول الله - صلَّى الله عليه وسلَّم - إذ عَطَس رجلٌ من القوم، فقلتُ: يرحمك الله، فرماني القومُ بأبصارهم، فقلت: واثُكل أُمِّياه! ما شأنكم تنظرون إليَّ؟! فجعلوا يضربون بأيديهم على أفخاذهم، فلمَّا رأيتهم يُصمِّتونني، لكنِّي سكت، فلمَّا صلَّى رسول الله - صلَّى الله عليه وسلَّم - فبأبي هو وأمي، ما رأيتُ معلِّمًا قبلَه ولا بعدَه أحسنَ تعليمًا منه، فوالله ما كَهَرني ولا ضَرَبني ولا شتمني، قال: ((إنَّ هذه الصَّلاةَ لا يصلح فيها شيءٌ من كلام الناس، إنَّما هو التسبيحُ والتكبير، وقراءة القرآن))، أو كما قال رسول الله - صلَّى الله عليه وسلَّم - قلت: يا رسول الله، إنِّي حديثُ عهد بجاهلية، وقد جاء الله بالإسلام، وإنَّ منَّا رجالًا يأتون الكُهَّان؟ قال: ((فلا تأْتِهم))، قال: ومنَّا رجال يتطيَّرون؟ قال: ((ذاك شيءٌ يجدونه في صدورهم، فلا يَصدنَّكم))، قال قلت: ومنَّا رجال يخطُّون؟ قال: ((كان نبيٌّ من الأنبياء يخطُّ، فمَن وافق خطَّه فذاك))، قال: وكانت لي جاريةٌ ترعى غنمًا لي قِبل أُحد والجوانية، فاطلعتُ ذات يوم، فإذا الذِّئبُ قد ذهب بشاة من غنمها، وأنا رجلٌ من بني آدم، آسَفُ كما يأسفون، لكنِّي صككتُها صكَّة، فأتيتُ رسولَ الله - صلَّى الله عليه وسلَّم - فعظَّم ذلك عليَّ، قلت: يا رسولَ الله، أفلا أعتقها؟ قال: ((ائتني بها))، فأتيتُه بها، فقال لها: ((أينَ الله؟)) قالت: في السَّماء، قال: ((مَن أنا؟)) قالت: أنت رسول الله، قال: ((أعْتِقْها، فإنَّها مؤمنة))

முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது (தொழுதுகொண்டிருந்த) மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான் யர்ஹமுக் கல்லாஹ்” (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என்று (மறுமொழி) கூறினேன்.

உடனே மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான் என்னை என் தாய் இழக்கட்டும்! நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?” என்று கேட்டேன். மக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்துகொண்டு அமைதியாகி விட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தொழுது முடித்ததும் என் தந்தையும் என் தாயும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்- (பின்வருமாறு அறிவுரை) கூறினார்கள்.

அவர்களுக்கு முன்னரோ, பின்னரோ அவர்களை விட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை.

அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை, அடிக்கவுமில்லை, திட்டவுமில்லை (மாறாக,) அவர்கள்,“இந்தத் தொழுகையானது, மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று” “தொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும் பெருமைப்படுத்துவதும் குர்ஆன் ஓதுவதுமாகும்என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்திற்கு நெருக்கமானவன். அல்லாஹ் இந்த இஸ்லாத்தை வழங்கினான். எங்களில் சிலர் சோதிடர்களிடம் செல்கிறார்களே?” என்றேன். அதற்கு அவர்கள் சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள்என்றார்கள்.

நான் எங்களில் இன்னும் சிலர் பறவையை வைத்துக் குறி பார்க்கிறார்களே?” என்றேன். அதற்கு நபியவர்கள் இது, மக்கள் தம் உள்ளங்களில் காணும் (ஐதீகம் சார்ந்த) விஷயமாகும். ஆனால், இது அவர்களைஅல்லதுஉங்களை” (செயலாற்றுவதிலிருந்து) தடுத்திட வேண்டாம்என்று கூறினார்கள்.

நான், “எங்களில் இன்னும் சிலர் (நற்குறி அறிய மணலில்) கோடு வரை(யும் பழங்கால கணிப்பு முறையை மேற்கொள்)கின்றனர்என்றேன். அதற்கு அவர்கள், “நபிமார்களில் ஒருவர் இவ்வாறு கோடு வரைந்துவந்தார். யார் அவரைப் போன்று கோடு வரைகிறாரோ அது (சாத்தியம்)தான்என்றார்கள்.

அடுத்து என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்தாள். அவள் என் ஆட்டு மந்தையை (மதீனாவிற்கு அருகிலுள்ள) உஹுத் மலை மற்றும் (அதையொட்டி அமைந்துள்ள) ஜவ்வானிய்யாப் பகுதியில் மேய்த்து வந்தாள்.

ஒரு நாள் நான் சென்று பார்த்தபோது ஓநாய் ஒன்று அவளிடமிருந்த ஆடுகளில் ஒன்றைக் கொண்டு சென்றுவிட்டது. (சராசரி) மனிதன் கோபப்படுவதைப் போன்று நானும் கோபப்பட்டேன். ஆயினும், அவளை நான் அறைந்துவிட்டேன். நான் அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் சென்றபோது அது குறித்து அவர்கள் என்னைக் கடுமையாகக் கண்டித்தார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் அவளை விடுதலை செய்து விடட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அந்தப் பெண்ணை என்னிடம் அழைத்துவாருங்கள்!என்று சொன்னார்கள்.

நான் அவளை அழைத்துச் சென்றபோது அவளிடம், “அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?” என்று நபியவர்கள் கேட்டார்கள்.

அவள், “வானத்தில்என்று பதிலளித்தாள். .நபி அவர்கள், “நான் யார்?” என்று கேட்டார்கள். அவள், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர்என்றாள்.

அவர்கள் (என்னிடம்), “அவளை விடுதலை செய்துவிடுங்கள்! ஏனெனில், அவள் இறைநம்பிக்கையுடைய (முஃமினான) பெண் ஆவாள்என்றார்கள். ( நூல்: முஸ்லிம் )

தெளிவும் அறிவும் கிடைக்கும் சபையாக....

جلسَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليْهِ وسلَّمَ على المنبرِ وجلَسنا حولَهُ فقالَ إنَّما أخافُ عليْكم من بعدي ما يُفتَحُ لَكم من زَهرةٍ وذَكرَ الدُّنيا وزينتَها فقالَ رجلٌ أوَ يأتي الخيرُ بالشَّرِّ فسَكتَ عنْهُ رسولُ اللَّهِ فقيلَ لَهُ ما شأنُكَ تُكلِّمُ رسولَ اللَّهِ ولا يُكلِّمُكَ قالَ ورأينا أن يُنَزَّلُ عليْهِ فأفاقَ يمسحُ الرُّحَضاءَ وقالَ أشاهدٌ السَّائلُ أنَّهُ لا يأتي الخيرُ بالشَّرِّ وإنَّ مِمَّا يُنبتُ الرَّبيعُ يقتُلُ أو يُلِمُّ إلَّا أكلةُ الخَضِرِ فإنَّها أَكلت حتَّى إذا امتدَّت خاصرتَها استقبلتَ عينَ الشَّمسِ فثلِطت ثمَّ بالت ثمَّ رتَعت وإنَّ هذا المالَ خضِرةٌ حُلوةٌ ونِعمَ صاحبُ المسلمِ هوَ إن أعطى منْهُ اليتيمَ والمسْكينَ وابنَ السَّبيلِ وإنَّ الَّذي يأخذُهُ بغيرِ حقِّهِ كالَّذي يأْكلُ ولا يشبعُ ويَكونُ عليْهِ شَهيدًا يومَ القيامةِ

خلاصة حكم المحدث : صحيح

الراوي : أبو سعيد الخدري | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 2580

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் அவர்கள், சொற்பொழிவு மேடைமீது அமர்ந்தார்கள். அவர்களைச் சுற்றி நாங்களும் அமர்ந்தோம். அப்போது அவர்கள் "எனக்குப் பின், உங்களிடையே இவ்வுலகின் கவர்ச்சியும், அதன் அலங்காரங்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதானது, உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகின்றவற்றில் ஒன்றாகும்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் எனும்) நன்மை, தீமையை உருவாக்குமா?" என்று கேட்டார். அதற்கு (பதிலளிக்காமல்) அல்லாஹ்வின் தூதர் அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாக இருந்தார்கள். 

அப்போது அந்த மனிதரிடம் "உமக்கு என்ன ஆயிற்று? நீர் அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் பேச்சுக் கொடுக்கிறீர். ஆனால், அல்லாஹ்வின் தூதர் அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே!" என்று கேட்கப்பட்டது.

 அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மௌனம் தொடருவதைக் கண்ட நாங்கள் அவர்களுக்கு இறைஅறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறது என்று கருதினோம். பிறகு அவர்கள் இயல்பு நிலைக்கு வந்து தம்மீதிருந்த வியர்வைத் துளிகளைத் துடைத்துவிட்டு, "இந்தக் கேள்வி கேட்டவர் (எங்கே?)" என்று (அவரைப் பாராட்டுவதைப் போல) கேட்டார்கள். 

பின்னர், ""நன்மையால் நன்மையே விளையும். வசந்த காலத்தில் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை), வயிறு புடைக்கத் தின்ன வைத்துக் கொன்று விடுகின்றன; அல்லது கொல்லும் அளவிற்குச் சென்று விடுகின்றன. பச்சைப் புற்களைத் தின்னும் கால்நடையைத் தவிர. (அது மடிவதில்லை. ஏனெனில்,) அது (பச்சைப் புற்களைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது, சூரியனை நேராக நோக்கி(ப் படுத்துக்கொண்டு அசை போடுகின்றது); சாணமிட்டு சிறுநீரும் கழிக்கின்றது. பின்னர் (வயிறு காலியானவுடன் மீண்டும் சென்று) மேய்கிறது.

இந்த (உலகின்) செல்வம் இனிமையும், பசுமையும் உடையதாகும். ஒரு முஸ்லிம் தமது செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அ(வரது செல்வமான)து அவருக்குச் சிறந்த தோழனாகும்.-(இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்) அல்லது அவர்கள் கூறியதைப் போன்று.- யார் முறையற்ற வழிகளில் செல்வத்தை எடுத்துக் கொள்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார். மேலும், மறுமை நாளில் அந்தச் செல்வம் அவருக்கு எதிரான சாட்சியாக அமையும்" என்று நபி கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் ) 

நல்லதை அறிவுறுத்தும் சபையாக...

وعن ابن عمر رضي الله عنه قال: بينما أنا جالسٌ عند النبي صلى الله عليه وسلم، إذ أتاه رجل فسلَّم عليه، ثم ولَّى عنه، قلت: يا رسول الله، إني لأُحب هذا في الله، قال: ((فهل أعلمتَه ذاك؟))، قلتُ: لا، قال: ((فأعلِمْ ذاك أخاك))، فاتَّبَعْتُه فأدركتُه، فأخذتُ بِمَنْكِبه، فسلَّمتُ عليه، وقلتُ: والله إني لأُحبك لله، قال هو: والله إني لأُحبك لله، قلت: لولا أن النبي صلى الله عليه وسلم أمرَني أن أُعْلِمك، لم أفعَل؛ [أخرجه ابن حبان].

இப்னு உமர் ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி அவர்களின் சபையில் அமர்ந்திருந்த ஒரு நாள் ஒருவர் வந்தார். நபி அவர்களுக்கு ஸலாம் கூறி விட்டு வெளியே சென்றார். அவர் சென்றதும் நான் அல்லாஹ்வின் தூதரே! இந்த மனிதரை அல்லாஹ்விற்காக நேசிக்கின்றேன்என்றேன். அப்போது நபி அவர்கள் இதை அவரிடம் தெரிவித்து விட்டீரா? என்று கேட்டார்கள். அதற்கு நான் இல்லைஎன்றேன். அப்போது நபி அவர்கள் அப்படியானால் அவரிடம் இதை தெரிவித்து விடுங்கள்என்றார்கள். நான் அவர் போன திசையில் சென்றேன். சிறிது தூரத்தில் அவரைக் கண்டு கொண்டேன். அவரின் புஜத்தை பிடித்து அவருக்கு ஸலாம் சொல்லி அல்லாஹ்வுக்காக உம்மை நேசிக்கின்றேன்என்றேன். அவரும் நானும் அல்லாஹ்வுக்காக உம்மை நேசிக்கின்றேன்என்று கூறினார். பின்பு நான் அவரிடம் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மாத்திரம் உம்மிடம் வந்து இவ்வாறு தெரிவிக்குமாறு கூறியிருக்கவில்லை என்றால் நான் ஒரு போதும் கூறியிருக்க மாட்டேன்என்றேன். ( நூல்: இப்னு ஹிப்பான்)

வாழ்வை வளப்படுத்த வழிகூறும் சபையாக...

 

عن أبي مسعود قال: ( كان رسول الله يأمرنا بالصدقة، فما يجد أحدنا شيئاً يتصدق به؛ حتى ينطلق إلى السوق، فيحمل على ظهره، فيجيء بالمدّ، فيعطيه رسول الله ، إني لأعرف اليوم رجلاً له مائة ألف، ما كان له يومئذ درهم! ) رواه النسائي/ صحيح النسائي:2528

அபூ மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு நாள் எங்களிடையே நபி அவர்கள் அமர்ந்திருந்த போது எங்களிடம் தர்மம் செய்யுமாறு கூறினார்கள்.

 அப்போது எங்களில் எவரிடமும் தர்மம் செய்யும் அளவுக்கு எதுவும் இல்லை. எங்களில் ஒருவர் கடை வீதிக்குச் சென்று உழைத்து, அதன் மூலம் கிடைத்த கூலியை ஒரு முத்து அளவிற்கு பெருமானார் {ஸல்} அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தார். 

இப்போது நான் அவரின் வாழ்க்கைத் தரத்தைப் பார்க்கின்றேன். அவரிடம் ஒரு லட்சம் திர்ஹம் இருக்கின்றது. ஆனால், அண்ணலாரிடம் அவர் வந்து கொடுக்கும் முன்பு வரை அவரிடம் ஒரு திர்ஹம் கூட இல்லை”. ( நூல்: நஸாயி ) 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது சபையின் தவறுகளை மன்னித்து, நம் அனைவருக்கும் அருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!