ரமழானுக்குப் பின்
நான் யார்?..
ரமழானின் நிறைவுப்
பகுதியில் ரமழானின் இறுதி ஜும்ஆவில் நாம் வீற்றிருக்கின்றோம்.
ஏனெனில், அடுத்த வியாழக்கிழமை மாலை பிறை பார்க்க வேண்டிய நாள். ஒரு வேளை பிறை
தென்பட்டால் வெள்ளிக்கிழமை ஈதுடைய நாள். இல்லை என்றால் வெள்ளிக்கிழமை முப்பதாவது
நோன்பாகும்.
ரமழான் இன்னும்
ஏழு நாட்களில் விடை பெற இருக்கிறது. ஆனால் நாம் விடை கொடுக்கும் மனோ நிலையில்
இல்லை.
இந்த ரமழானில்
இருந்து அடுத்த பதினோரு மாதங்களுக்கு என்ன கொண்டு செல்ல இருக்கின்றோம். இந்த
ரமழானில் நாம் எதை எடுத்துக் கொண்டோமோ அதைத் தான் நாம் அடுத்த பதினோரு மாதங்களுக்கு
கொண்டு செல்ல முடியும்.
நம்மில் ஒருவர்
ஹஜ்ஜுக்கு சென்று திரும்பி வருவார். உம்ராவுக்கு சென்று திரும்பி வருவார்.
இது போன்று புனித
பயணங்களில் இருந்து திரும்பி வருபவரிடம் அவரின் குடும்பமும், உற்றாரும் சுற்றத்தாரும் என்ன எதிர் பார்ப்பார்களோ? அது போன்று தான் இந்த ரமழானில் இருந்து நாம் விடை பெறும் போது நம்மைச்
சுற்றியுள்ளவர்கள் நம்மிடம் புனிதமான ரமழானில் நம்மை எப்படியெல்லாம் இருக்க
கண்டார்களோ அப்படியெல்லாம் மற்ற மாதங்களில் இருக்க வேண்டும் என்று ஆசைப்
படுவார்கள்.
எனவே, ரமழானில் நாம் எதை எடுத்துக் கொண்டிருக்கின்றோம்? என்பது முக்கியத்துவம் பெறுகிறது.
ஐந்து நேரத்
தொழுகைகளை உரிய நேரத்தில் பேணுதலாக தொழுதவர்கள் பலர் உண்டு.
தராவீஹ் உட்பட
தஹஜ்ஜத் மற்றும் உபரியான முன் பின் சுன்னத்தான தொழுகைகளை நியமமாக தொழுதவர்கள் பலர்
உண்டு.
நோன்பாளிகள்
சவுகரியமாக நோன்பு திறக்க பதறாமல், முகம் சுளிக்காமல்
ஆர்வத்துடன் பணிவிடைகள் செய்தவர்கள் பலர் உண்டு.
ஸதகா, ஜகாத் மூலம் தர்ம காரியங்களில் தமது பொருளாதாரத்தை ஏழை எளிய மக்களுக்கு, வறிய மக்களுக்கு வாரி வழங்கிய பலர் உண்டு.
ஹாஃபிழ்களை, ஆலிம்களை,
முஅத்தின்களை அன்பளிப்புகளால் அரவணைத்தவர்கள் பலர் உண்டு.
வீட்டு வேலைகளை
மனைவியோடு,
தாய் சகோதரியோடு அகமகிழ்ந்து பகிர்ந்து கொண்டவர்கள் பலர்
உண்டு.
நன்மை பெற்றிடும்
நோக்கத்துடன் அரும் பணியாற்றிய பல பிரமுகர்கள், நிர்வாகிகள், தன்வந்தர்கள் பலர் உண்டு.
பிறரை ஏசாமல்
பேசாமல் தமக்கு சிரமம் கொடுத்தவருக்கு எந்த வகையிலும் பழி தீர்க்காமல் பண்போடு
கடந்து சென்றவர்கள் பலர் உண்டு.
தன்னால் முடிந்த
இபாதத்களை,
குர்ஆன் திலாவத்தை, திக்ர்களை, நபி ﷺ அவர்கள் மீது ஸலவாத் ஓதி, தான் உண்டு தன் வேலை உண்டு என நேரத்தை கச்சிதமாக பயன்படுத்திய பலர் உண்டு.
எல்லாவற்றுக்கும்
மேலாக இறைவன் மீது உள்ள பயத்தால் பாவங்களில் இருந்து விலகி, தன்னை தற்காத்துக் கொள்ள ஷைத்தானுடன் போராடிய முஜாஹித்கள் இங்கு பலர் உண்டு.
இவை எல்லாம் இந்த
ஒரு மாதத்திற்காகவா?
இல்லை, வாழ்க்கை முழுவதும்
எடுத்துச் செல்வதற்காகவா?
ரமழானில் நாம் செய்த
அனைத்து நற்காரியங்களும் வாழ்க்கை முழுவதும் எடுத்துச் செல்வதற்காக என்று
இருக்குமானால் ஒரு சபதம் எடுத்துக் கொள்வோம்.
ரமழானில் நான் எப்படி
இருந்தேனோ அது போன்றே என் வாழ்நாள் முழுவதும் நான் செயல் பட நீ அருள் புரிவாயாக!
ரப்பே!
யாஅல்லாஹ்!
ரமழானில் என்னை எப்படி நீ வழிநடத்தினாயோ அது போன்றே என் வாழ்நாள் முழுவதும் நீ
என்னை வழிநடத்துவாயாக! என்று துஆ செய்து விட்டு,
இப்போது நாம்
அல்லாஹ்வின் மீது சபதம் எடுத்துக் கொள்வோம்! யாஅல்லாஹ்!
இன்ஷா அல்லாஹ்....
முதற் கட்டமாக நான் ரமழானில் எடுத்துக் கொண்ட என் சிறந்த செயல்பாடுகளை எதிர் வரும்
ரமழான் வரை பதினோரு மாதங்களும் தவறாது கடை பிடிப்பேன்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நம்மை அவனுடைய மார்க்கத்திற்காக கபூல் செய்தருள்வானாக! ரமழானின் நிறைவை
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு நன்மையானதாக ஆக்கியருள்வானாக!
1) ரமழானின் நிறைவு நல்லதாக அமையட்டும்!!
பொதுவாக ஒரு
முஃமின் செய்கிற எந்த ஒரு காரியத்தின் இறுதியும் நல்லதாக அமைய வேண்டும். அதற்காக
நாம் அல்லாஹ்விடம் துஆச் செய்ய வேண்டும்.
மாநபி ﷺ அவர்கள் தங்களுடைய பிரார்த்தனையில்
அமல்களின் முடிவு நல்லதாக அமைய அதிகம் பிரார்த்தித்திருக்கின்றார்கள்.
اَللَّهُمَّ
إِنِّيْ أَسْأَلُكَ فَوَاتِحَ الْخَيْرِ وَخَوَاتِمَهُ وَجَوَامِعَهُ، وَأَوَّلَهُ
وَآخِرَهُ، وَظَاهِرَهُ وَبَاطِنَهُ، وَالدَّرَجَاتِ الْعُلَى مِنَ الْجَنَّةِ.
யா அல்லாஹ்!
நன்மைகளின் ஆரம்பங்களையும் முடிவுகளையும் இன்னும் எல்லா நன்மைகளையும் நிச்சயம்
நான் உன்னிடம் கேட்கின்றேன். நன்மைகளின் ஆரம்பம், முடிவு,
அதன் வெளிப்படை, அந்தரங்கம் மற்றும்
சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்துக்களையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.( நூல்:
தப்ரானி )
إِنَّ
الَّذِينَ هُمْ مِنْ خَشْيَةِ رَبِّهِمْ مُشْفِقُونَ (57) وَالَّذِينَ هُمْ
بِآيَاتِ رَبِّهِمْ يُؤْمِنُونَ (58) وَالَّذِينَ هُمْ بِرَبِّهِمْ لَا
يُشْرِكُونَ (59) وَالَّذِينَ يُؤْتُونَ مَا آتَوْا وَقُلُوبُهُمْ وَجِلَةٌ
أَنَّهُمْ إِلَى رَبِّهِمْ رَاجِعُونَ (60) أُولَئِكَ يُسَارِعُونَ فِي
الْخَيْرَاتِ وَهُمْ لَهَا سَابِقُونَ
நிச்சயமாக எவர்கள்
தங்கள் இறைவனுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களும், எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களை மெய்யாகவே நம்பிக்கை கொள்கிறார்களோ
அவர்களும்,
எவர்கள் தங்கள் இறைவனுக்கு எவரையும் இணை ஆக்காமல்
இருக்கின்றனரோ அவர்களும்,
எவர்கள் தங்களுக்குச் சாத்தியமான வரை தானம் கொடுப்பதுடன்
அவர்களுடைய உள்ளங்கள் நிச்சயமாக தங்கள் இறைவனிடம் செல்வோம் என்று பயந்து
கொண்டிருக்கின்றனவோ அவர்களும், ஆகிய இவர்கள்தான்
நன்மையான காரியங்களில் விரைந்து செல்கிறவர்கள். மேலும், அவர்கள் அவற்றை செய்வதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொள்கின்றனர். ( அல்குர்ஆன் 23 : 57-61 )
قال
الإمام أحمد : حدثنا يحيى بن آدم ، حدثنا مالك بن مغول ، حدثنا عبد الرحمن بن سعيد
بن وهب ، عن عائشة; أنها قالت : يا رسول الله ، ( والذين يؤتون ما آتوا وقلوبهم
وجلة ) ، هو الذي يسرق ويزني ويشرب الخمر ، وهو يخاف الله عز وجل؟ قال : " لا
يا بنت أبي بكر ، يا بنت الصديق ، ولكنه الذي يصلي ويصوم ويتصدق ، وهو يخاف الله
عز وجل " .وهكذا رواه الترمذي وابن أبي حاتم ، من حديث مالك بن مغول ، به بنحوه
. وقال : " لا يا بنت الصديق ، ولكنهم الذين يصلون ويصومون ويتصدقون ، وهم
يخافون ألا يقبل منهم
மேற்கூறிய
அல்முஃமினூன் அத்தியாயத்தின் 57 முதல் 61 வரையிலான வசனங்கள் இறக்கியருளப்பட்ட போது ஆயிஷா (ரலி) அவர்கள் நபி ﷺ அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! செய்வதை
செய்வார்கள்,
அவர்களுடைய உள்ளங்களோ அல்லாஹ்வின் பக்கம் தாங்கள்
திரும்பவேண்டும் என்ற பயத்தில் இருக்கும் என்று அல்லாஹ் கூறுகிறானே? இந்த செய்வதை செய்வார்கள் என்றால் பாவங்களை செய்து கொண்டு மது அருந்திக்
கொண்டு, திருடிக் கொண்டு,
விபச்சாரம் செய்து கொண்டு அல்லாஹ்வை பயப்படுவதையா? இந்த வசனம் குறிக்கிறது" என்று கேட்டார்கள்.
அதற்கு நபி ﷺ அவர்கள் இல்லை சித்தீகின் மகளே! (ஆயிஷா!) இதைப்பற்றி
அல்லாஹ் இங்கு சொல்லவில்லை. அல்லாஹ் இங்கு எதை சொல்கிறான்? ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட ஒரு முஃமின் அல்லாஹ்வை இரவெல்லாம்
வழிபட்டதற்குப் பிறகு,
அவனுடைய பாதையில் போர் செய்த பிறகு, தான தர்மங்களை வாரி வழங்கியதற்கு பிறகு, அல்லாஹ்வை பயப்படுவான்.
அல்லாஹ் இதை
ஏற்றுக் கொள்வானா?
அல்லது இதை நிராகரித்து விடுவானா?" என்று அவர்களின் உள்ளங்கள் அஞ்சிக் கொண்டு இருக்கும் என்று நபி ﷺ அவர்கள் பதில் கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )
2) நக்கலை, ஏளனத்தை புறந்தள்ள வேண்டும்!
ரமழானுக்கு
பிந்தைய நம்முடைய செயல்பாடுகள் சமூக மக்களிடையே ஒரு மாற்றத்தை பிரதிபலிக்க
வேண்டும்.
சில
போது நம்மை சமூகம் ஏற்றுக் கொள்ளவும் செய்யும் சில போது நம்மை ஏளனமாகவும் பேசும்.
என்னப்பா
ஒரு மாதத்திலேயே மாறிட்ட போல! எத்தனை நாளைக்குன்னு பார்ப்போம் என்று நக்கலாக
பேசலாம்.
ஆனால், எந்த ஒரு நல்ல அமலுக்கும் மாற்றத்திற்கான பிரதிபலிப்பு
உண்டு என்ற நம்பிக்கையை மக்களுக்கு நம் இபாதத்கள் மூலம், நம் செயல்பாடுகள் மூலம் ஏற்படுத்த வேண்டும். மேலும், நெஞ்சுரத்தோடு அதை எதிர் கொண்டு ஈமானிய வாழ்க்கையில் தொடர
வேண்டும்.
நபி
ஷுஐபு அலை அவர்களின் ஏகத்துவ பிரச்சார பணியின் முனைப்பை கண்ட அவரது சமூகத்தினர்
ஷுஐபு அலை அவர்களிடம் வியந்து கேட்டதை குர்ஆன் குறிப்பிடும் போது...
قَالُوْا
یٰشُعَیْبُ اَصَلٰوتُكَ تَاْمُرُكَ اَنْ نَّتْرُكَ مَا یَعْبُدُ اٰبَآؤُنَاۤ اَوْ
اَنْ نَّفْعَلَ فِیْۤ اَمْوَالِنَا مَا نَشٰٓؤُا اِنَّكَ لَاَنْتَ الْحَلِیْمُ
الرَّشِیْدُ
(அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படிச் செலவு செய்வதை
விட்டுவிடுமாறும் உம்முடைய தொழுகையா உம்மை ஏவுகிறது? நிச்சயமாக நீர் கிருபையுள்ளவரும் நேர்மையானவரும் தான்” என்று (ஏளனமாகக்) கூறினார்கள்.
قَالَ
یٰقَوْمِ اَرَءَیْتُمْ اِنْ كُنْتُ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّیْ وَرَزَقَنِیْ
مِنْهُ رِزْقًا حَسَنًا وَمَاۤ اُرِیْدُ اَنْ اُخَالِفَكُمْ اِلٰی مَاۤ
اَنْهٰىكُمْ عَنْهُ اِنْ اُرِیْدُ اِلَّا الْاِصْلَاحَ مَا اسْتَطَعْتُ وَمَا
تَوْفِیْقِیْۤ اِلَّا بِاللّٰهِ عَلَیْهِ تَوَكَّلْتُ وَاِلَیْهِ اُنِیْبُ
(அதற்கு) ஷுஐபு கூறினார்: “(என்னுடைய) சமூகத்தவர்களே! நான் என்னுடைய இறைவனின் தெளிவான அத்தாட்சி மீது
இருப்பதையும்,
அவன் தன்னிடமிருந்து எனக்கு அழகான ஆகார வசதிகளை அளித்து
இருப்பதையும் நீங்கள் அறிவீர்களா? (ஆகவே) நான் எதை விட்டு
உங்களை விலக்குகின்றேனோ,
(அதையே நானும் செய்து உங்கள் நலனுக்கு) மாறு செய்ய நான்
விரும்பவில்லை. என்னால் இயன்ற வரையில் (உங்களின்) சீர் திருத்தத்தையேயன்றி
வேறெதையும் நான் நாடவில்லை;
மேலும், நான் உதவி பெறுவது
அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை, அவனிடமே பொறுப்புக்
கொடுத்திருக்கிறேன்;
இன்னும் அவன் பாலே மீளுகிறேன்.
(
அல்குர்ஆன்: 11: 87, 88 )
3) அமல் செய்யாத போது நமது மனம் உறுத்த வேண்டும்!
ரமழானில் எப்படி
அமல் செய்து கொண்டு அழகிய செயல்பாடுகளோடு இறைவனை பயந்து வாழ்ந்தோமோ அது போன்றே
மற்ற பதினோரு மாதங்களும் வாழ முற்பட வேண்டும்.
ரமழானுக்கு
முந்தைய பழைய மாதிரியான வாழ்க்கை முறையே நம்மிடம் தொடருமானால் நம்முடைய மனம்
உறுத்த வேண்டும்.
عن أبي
ربعي حنظلة بن الربيع الأسيدي الكاتب- رضي الله عنه- أحد كتاب رسول الله صلى الله
عليه وسلم قال: لقيني أبو بكر رضي الله عنه فقال: كيف أنت يا حنظلة؟ قلت: نافق
حنظلة! قال: سبحان الله ما تقول؟! قلت: نكون عند رسول الله صلى الله عليه وسلم
يُذَكِّرُنَا بالجنة والنار كأنا رَأْىَ عَيْنٍ فإذا خرجنا من عند رسول الله صلى
الله عليه وسلم عَافَسْنَا الأزواج والأولاد وَالضَّيْعَاتِ نسينا كثيرا، قال أبو
بكر رضي الله عنه : فوالله إنا لنلقى مثل هذا، فانطلقت أنا وأبو بكر حتى دخلنا على
رسول الله صلى الله عليه وسلم . فقلت: نافق حنظلة يا رسول الله! فقال رسول الله
صلى الله عليه وسلم : «وما ذاك؟» قلت: يا رسول الله، نكون عندك تذكرنا بالنار
والجنة كأنا رأي العين فإذا خرجنا من عندك عافسنا الأزواج والأولاد والضيعات
نسينًا كثيرًا. فقال رسول الله صلى الله عليه وسلم : «والذي نفسي بيده، لو تدومون
على ما تكونون عندي، وفي الذِّكْر، لصافحتكم الملائكة على فرشكم وفي طُرُقِكُمْ،
لكن يا حنظلة ساعة وساعة» ثلاث مرات.
[صحيح] - [رواه مسلم]
நபி ﷺ அவரகளின் எழுத்தாளர்களில் ஒருவரான அபூரிப்ஈ என்ற ஹன்ளலா
இப்னு ரபீஉ அல் உஸைதி (ரழி) அறிவிக்கிறார்கள். ஒரு தடவை என்னை அபூபக்கர் (ரழி)
அவர்கள் சந்தித்து "ஹன்ளலா எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள் அதற்கு "ஹன்ளலா முனாபிக் ஆகிவிட்டான் என்று நான்
கூறினேன். "ஸுப்ஹானல்லாஹ் என்ன கூறுகிறீர்?" என்று கேட்டார்கள். அதற்கு நான் "நபி ﷺ அவர்களிடம் நாம் இருக்கும் போது சொர்கத்தையும், நரகத்தையும் நாம் நேரில் பார்ப்பது போலவே நினைவு கூர்கிறோம். நபி ﷺ அவர்களிடமிருந்து நாம் வெளியேறி வந்துவிட்டால் நம்
மனைவியரை,
குழந்தைகளை கவனிப்பதிலும் வாழ்க்கைத் தேவைகளுக்காக
உழைப்பதிலும் மூழ்கிவிடுகிறோம். இதனால் அதிகமானதை மறந்து விடுகிறோம்." என்று
கூறினேன்.
"அல்லாஹ்வின் மீது
சத்தியமாக நிச்சயமாக இது போன்றே நானும் உணர்கிறேன்" என்று அபூபக்கர் (ரழி)
கூறினார்கள். உடனே நானும் அபூபக்கர் அவர்களும் நபி ﷺ அவர்களிடம் வந்தோம். "இறை தூதர் அவர்களே! ஹன்ளலா
நயவஞ்சகன் ஆகிவிட்டார்." என்று கூறினேன். "என்ன கூறுகிறீர்?" என்று நபி ﷺ
அவர்கள் கேட்டார்கள். "இறைதூதர் அவர்களே! உங்களுடன் இருக்கும் போது கண்ணால் பார்ப்பது
போல் சொர்க்கத்தையும்,நரகத்தையும் நினைவு கூர்கிறோம். உங்களை விட்டும் நாங்கள் வெளியேறி விட்டால்
மனைவியர்,
குழந்தைகள், வாழ்க்கைத் தேவை என
மூழ்கி அதிகமாக மறந்துவிடுகிறோம்." என்று கூறினேன். "எனது ஆத்மாவை தன்
கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக என்னிடம் நீங்கள் இருக்கும் நிலையிலேயே
இறைவனை நினைவு கூர்வதிலேயே தொடரந்தும் இருந்தால் உங்கள் படுக்கையிலும் உங்கள்
வழிகளிலேயும் வானவர்கள் கைகொடுத்து மகிழ்வார்கள்.எனினும் ஹன்ளலாவே வணக்த்திற்கு என
ஒரு நேரம் உண்டு,
வாழ்க்கைக்கு உழைப்பதற்கு என்று ஒரு நேரம் உண்டு."
என்று மூன்று முறை கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
4) நலவுகளின், நன்மைகளின் திறவுகோலாக இருக்க வேண்டும்!
ரமழான் மாதத்தில்
நாம் நன்மைகளின் குவியல்களை கண்ணாரக் கண்டு, அல்குர்ஆன் வசனங்கள், நபி ﷺ அவர்களின் நபிமொழிகள், முன்னோர்களின் வாழ்க்கை வரலாறுகளை காதால் கேட்டு, மனமார அனுபவித்து,
உடலால் செல்வத்தால் வணக்க வழிபாடுகளில் கவனம் செலுத்தி
இஸ்லாமிய வாழ்வியல் முறைகளை கனக் கச்சிதமாக பேணி வந்தோமோ அதே முறைகளை ரமழானுக்கு
வெளியே மற்ற மாதங்களில் நாம் பேணுவதோடு நின்று விடாமல் நம் குடும்பம் நம்மைச்
சுற்றியுள்ளவர்களும் நன்மையான காரியங்களை செய்ய, செய்த நன்மையான காரியங்களை தொடர தூண்டு கோலாக இருக்க வேண்டும்.
حَدَّثَنَا
الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ الْمَرْوَزِيُّ، أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ أَبِي
عَدِيٍّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي حُمَيْدٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ
عُبَيْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ
اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِنَّ مِنَ النَّاسِ مَفَاتِيحَ
لِلْخَيْرِ مَغَالِيقَ لِلشَّرِّ وَإِنَّ مِنَ النَّاسِ مَفَاتِيحَ لِلشَّرِّ
مَغَالِيقَ لِلْخَيْرِ فَطُوبَى لِمَنْ جَعَلَ اللَّهُ مَفَاتِيحَ الْخَيْرِ عَلَى
يَدَيْهِ وَوَيْلٌ لِمَنْ جَعَلَ اللَّهُ مَفَاتِيحَ الشَّرِّ عَلَى يَدَيْهِ
" . خلاصة حكم المحدث : حسن بمجموع طرقه الراوي : أنس بن مالك | المحدث :
الألباني | المصدر : السلسلة الصحيحة الصفحة أو الرقم : 1332
“மனிதர்களில் சிலர்
நலவுக்கு திறவு கோலாகவும்,
தீமைகளுக்கு தடையாகவும் உள்ளனர், வேறு சிலர் தீமைகளுக்கு திறவு கோலாகவும் நலவுக்கு தடையாகவும் உள்ளனர், அல்லாஹ் எவரின் கரத்தினால் நலவின் வாயில்களை திறந்து விடுகிறானோ, அவருக்கு சுபசோபனம் உண்டாகட்டும், மேலும் எவன் மூலம்
தீமைகளின் வாயில்கள் திறக்கப் படுகிறதோ அவன் மீது நாசம் உண்டாகட்டும்” என்று நபி ﷺ
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), ( நூல்: இப்னு மாஜா )
மாநபி ﷺ அவர்கள் இப்படி ஒரு அறிவிப்பை செய்ததோடு நிறுத்திக்
கொள்ளாமல் அதற்கு செயல் வடிவமும் கொடுத்து நாம் எப்படி எல்லாம் நலவுகளின்
திறவுகோலாய்,
நன்மைகளின் திறவுகோலாக இருக்க வேண்டும் என்று வழிகாட்டியும்
இருக்கின்றார்கள்.
பத்ர் யுத்தத்திலே
கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதபடி மக்கா குரைஷிகளின் படை முஸ்லிம்களிடம்
தோல்வியடைந்திருந்தது.
சிறைபிடிக்கப்பட்ட
கைதிகளுள் சுஹைல் இப்னு அம்ரும் ஒருவர். அவருக்கு விலங்கிட்டு மதீனாவிற்கு
இழுத்துச் சென்றார்கள் முஸ்லிம்கள்.
عندما
وقع سهيل بن عمرو أسيرا في غزوة بدر اقترب عمر بن الخطاب من رسول الله ﷺ وقال: يا
رسول الله.. دعني أنزع ثنيتي سهيل بن عمرو حتى لا يقوم عليك خطيبا بعد اليوم”..
فأجابه الرسول: ﷺ كلا يا عمر..لا أمثل بأحد، فيمثل الله بي، وان كنت نبيا، يا
عمر..لعل سهيلا يقف موقفا يسرك غدا
“…!!
உமர் (ரலி)
அவர்கள் நபி ﷺ அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! சுஹைலின் முன் பற்களை நான் உடைத்து எடுத்து விடுகிறேன்.
அதன் பிறகு அவரது நாக்குத் துறுத்தி, எங்கும் எவர்
முன்னிலையிலும் தங்களுக்கு எதிராகப் பேச இயலாதவராக ஆகிவிடுவார்” என்று அனுமதி கேட்டார்.
அதற்கு, முஹம்மது நபி ﷺ
அவர்கள் “நான் எவருடைய அங்கத்தையும் சிதைக்க மாட்டேன். ஏனெனில், நான் அல்லாஹ்வின் தூதராகவே இருந்தபோதிலும் அல்லாஹ் என் அங்கத்தைச்
சிதைக்கக்கூடும். ஒரு காலம் வரலாம். அப்பொழுது இவர் எழுந்து நின்று பேசப்போகும்
பேச்சு நீங்கள் குறை காணமுடியாத ஒன்றாக அமையக்கூடும்” என்று பதில் அளித்து விட்டார்கள்.
ஹிஜ்ரி 8 வரை இஸ்லாத்தை எதிர்த்து நின்ற ஸுஹைல் இப்னு அம்ரு மக்கா வெற்றியின்போது தான்
இஸ்லாத்தை ஏற்றார்.
எந்தளவு இஸ்லாத்தை
எதிர்ப்பதில் அவர் உறுதியாக இருந்தாரோ அதைவிடப் பன்மடங்காக இஸ்லாமிய
மார்கத்திற்காக களமாடினார்.
இவர்களோடு
இவர்களது இரு மகன்கள் அபூஜன்தல் (ரலி) அப்துல்லாஹ் (ரலி) ஆகியோரும் இணைந்து யுத்த
களங்களில் பங்கேற்றனர்.
وعندما
حدثت فتنة الردة بعد وفاة الرسول ﷺ وقف سهيل عليهم خطيبا فقال:- يا أهل مكة ، لا
تكونوا آخر من أسلم وأول من ارتد بعد موت النبي ﷺ، فثبت الله أهل مكة بكلامه.
பெருமானார் ﷺ அவர்கள் இந்த உலகை விட்டும் விடைபெற்றுச் சென்ற அந்த
தருணம் மக்காவை உற்று நோக்கச் செய்தது.
அந்த நேரத்தில்
ஸுஹைல் இப்னு அம்ர் ரலி அவர்கள் மக்களுக்கு மத்தியில் எழுந்து நின்று நிகழ்த்திய
உரை பெருங்கொண்ட எண்ணிக்கையிலான மக்கள் மதம் மாறிப் போவதிலிருந்து, மீண்டும் நரகவாசலை சந்திப்பதில் இருந்து தடுத்து நிறுத்தியது.
ஆம்! ஸுஹைல் இப்னு
அம்ர் ரலி அவர்கள் தம் முன்பாக திரண்டிருந்த மக்களை நோக்கி "மக்காவாசிகளே!
இஸ்லாத்திற்குள் கடைசியாக நுழைந்து, நபி ﷺ அவர்களின் தூய மரணத்திற்குப் பின்னால் மதம் மாறிப்
போனவர்களில் முதலாவது நபர்களாக நீங்கள் ஆகிட வேண்டாம்!" என்று கூறினார்கள்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த
மக்களின் உள்ளத்தில் இஸ்லாத்தை நிலைபெறச் செய்தான்.
பத்து
ஆண்டுகளுக்கு முன்பு நபி ﷺ
அவர்கள் ஸுஹைல் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் விஷயத்தில் நன்மையின் திறவுகோலாய்
திகழ்ந்தார்கள். இன்று,
ஸுஹைல் இப்னு அம்ர் (ரலி) பெருங்கொண்ட எண்ணிக்கையிலான
மக்களின் நல்வாழ்வுக்கு நன்மையின் திறவுகோலாய் விளங்கினார்.
தமது ஆண்மக்கள்
இருவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை ஏற்க மறுத்த ஸுஹைல் இப்னு அம்ர் ரலி அவர்கள்
பின்னால் தமது ஆண்மக்களின் தியாகம் கண்டு அகமகிழ்ந்தார்.
وذكر
الواقدي قال : لما حج أبو بكر بالناس ، قبل حجة الوداع ، لقيه سهيل بن عمرو - رضي
الله عنه - فقال : بلغني يا أبا بكر أن رسول الله - صلى الله عليه وسلم - قال :
" يشفع الشهيد لسبعين من أهله " فأرجو أن يبدأ عبد الله بي .
அவர்களின் இளைய
மகன் அப்துல்லாஹ் இப்னு ஸுஹைல் (ரலி) முஸைலமாவுக்கு எதிரான யமாமா யுத்தத்தில்
உயிர்த்தியாகம் அடைந்தார்.
ஹஜ்ஜை நிறைவேற்றச்
சென்ற கலீஃபா அபூபக்ரு,
சுஹைல் (ரலி) அவர்களிடம் அவருடைய மகனாரின் இழப்பிற்கு
ஆறுதல் கூறினார்.
அப்போது, ஸுஹைல் (ரலி) அவர்கள், அபூபக்ர் ரலி அவர்களிடம், “இஸ்லாத்திற்காக உயிர்
நீக்கும் தியாகி,
தம் குடும்பத்தினர் எழுபது பேருக்காக மறுமையில் சிபாரிசு
அளிக்க முடியும் என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் தெரிவித்ததாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. என்
மகன் அப்துல்லாஹ் (ரலி) அந்த சிபாரிசை என்னிலிருந்து துவங்குவார் என நம்புகிறேன்” என்று சொன்னார். ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா )
மிகவும் பிந்தி
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் நன்மைகள் பலவற்றையும் இழந்து விட்டதாக கருதிய ஸுஹைல்
இப்னு அம்ர் (ரலி) அவர்கள் பெருமளவு இறைவழிபாட்டிலும் நற்காரியங்களிலும் தம்மை
ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தார்
மேலும், ஸுஹைல் இப்னு அம்ர் (ரலி)
அவர்கள் முனைப்போடு போர்க்களங்களில் பங்கேற்று ஷஹீதாக விரும்பினார்கள்.
நன்மைகளை செய்ய
முடியாது போனது குறித்து மிகவும் கவலை கொண்டார்கள். மற்றவர்களிடமும் அதை
வெளிப்படுத்தினார்கள்.
استأذنا
عمر للدخول فلم يأذن لهما، وبقيا مدة طويلة خارج الباب، فجاء بلال وصهيب بن سنان
يستأذنا أمير المؤمنين في الدخول، وهو العبد الأسود الحبشي, فقام عمر بن الخطاب
متهللاً، وأدخله قبل أبي سفيان بن حرب وسهيل بن عمرو , فغضب أبو سفيان وقال لـ
سهيل: العبد الحبشي يتقدم علينا! في الدخول.
فقال
سهيل معلماً لـأبي سفيان بحكمة قائلاً: "يا أبا سفيان، إنما القوم قد سبقوا
وتأخرنا، ودُعوا فأجابوا، وأخرنا، فإن كنت تريد هذا الأمر (المكانة العالية) فافعل
(ادخل في الإسلام مبكراً) ولكن أين؟" (إشارة إلى فوات الأوان على الأسبقية).
ஒருமுறை கலீஃபா
உமரைச் சந்திக்கக் ஸுஹைல் இப்னு அம்ரு(ரலி) அவர்களும் அபூஸுஃப்யான் இப்னுல் ஹர்பு
(ரலி) அவர்களும் வந்திருந்தனர். அது போன்று குரைஷிகளின் முன்னாள் அடிமைகளான சுஹைப், பிலால் போன்றவர்களும் காத்திருந்தனர்.
முன்னாள்
அடிமைகளுக்குத்தான் கலீஃபாவைச் சந்திக்க முதலில் அனுமதி கிடைத்தது.
இஸ்லாத்திற்குள் நுழைந்தபின் உயர்ந்தவர் – தாழ்ந்தவர் கிடையாதே!
அபூஸுஃப்யான்
ஸுஹைல் இப்னு அம்ர் ரலி அவர்களிடம் “இதைப்போல் முன்னெப்போதும்
நான் கண்டதில்லை. உமர் இவர்களை முதலில் அழைத்து, நம்மைக் காத்திருக்க வைக்கிறாரா?”
ஸுஹைல் பதில் அளித்தார்.
“மக்களே! உங்களது முகங்களுக்குப் பின்னால் உள்ளதை என்னால் புரிய முடிகிறது.
உங்களுக்குக் கோபம் ஏற்பட்டால் அதை நீங்கள் உங்கள் மீதே கொள்ளுங்கள். அன்று
இஸ்லாத்தை ஏற்க மக்களெல்லாம் அழைக்கப்பட்டனர்; நீங்களும்
அழைக்கப்பட்டீர்கள். அவர்கள் முன்சென்று ஏற்றார்கள். நீங்கள் பின்தங்கி
நின்றுவிட்டீர்கள்.
மறுமை நாளில்
அவர்கள் முதலில் அழைக்கப்பட்டு நீங்கள் பின் தங்கி நிற்கும்போது உங்களுக்கு எப்படி
இருக்கும் என நினைக்கின்றீர்கள்?” என்று கூறினார்கள். (
நூல்: ஸியரு அஃலாமின் நுபலா )
போர்க்களம் கண்டு
ஷஹீதாக வேண்டும் என்று யுத்த களங்களில் பங்காற்றிக் கொண்டிருந்த ஸுஹைல் ரலி
அவர்கள் இறுதியாக,
ஹிஜ்ரீ 18 -ஆம் ஆண்டு உமர் (ரலி)
அவர்கள் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட அமவாஸ் பேரிடரில் கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டு, நபி ﷺ அவர்கள் முன்னறிவிப்பு செய்த படி
ஷஹீத் வீரமரணம் அடைந்தார்கள். ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா ) அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் ஸுஹைல் இப்னு அம்ர் ரலி அவர்களைப் பொருந்திக் கொண்டான்.
وَقَالَ ابْنُ عَدِيٍّ: تَابَ عَلَى يَدِ ابْنِ مَسْعُوْدٍ. وَعَنْ
أَبِي هَاشِمٍ الرُّمَّانِيِّ. قَالَ: قَالَ زَاذَانُ: كُنْتُ غُلاَماً حَسَنَ
الصَّوْتِ، جَيِّدَ الضَّرْبِ بِالطُّنْبُوْرِ، فَكُنْتُ مَعَ صَاحِبٍ لِي،
وَعِنْدَنَا نَبِيْذٌ وَأَنَا أُغَنِّيْهِمْ, فَمَرَّ ابْنُ مَسْعُوْدٍ, فَدَخَلَ,
فَضَرَبَ البَاطِيَةَ, بَدَّدَهَا وَكَسَرَ الطُّنْبُوْرَ ثُمَّ قَالَ: لَوْ كَانَ
مَا يُسْمَعُ مِنْ حُسْنِ صَوْتِكَ يَا غُلاَمُ بِالقُرْآنِ، كُنْتَ أَنْتَ
أَنْتَ. ثُمَّ مَضَى, فَقُلْتُ لأَصْحَابِي: مَنْ هَذَا؟ قَالُوا: صاحب رسول الله ﷺ،
وهَذَا ابْنُ مَسْعُوْدٍ. فَأَلْقَى فِي نَفْسِي التَّوْبَةَ، فَسَعَيْتُ أَبْكِي،
وَأَخَذْتُ بِثَوْبِهِ، فَأَقْبَلَ عَلَيَّ، فَاعْتَنَقَنِي، وَبَكَى، وَقَالَ:
مَرْحَباً بِمَنْ أَحَبَّهُ اللهُ، اجْلِسْ. ثُمَّ دَخَلَ وَأَخْرَجَ لِي تَمْراً.
. ثم لازم زاذان ابن مسعود حتى تعلم القرآن .. وصار إماماً في العلم .
ஜாதான் அழகிய
குரலில் பாடும் இளைஞராக இருந்தார். ஒரு முறை நண்பர்களுடன் இசைக் கருவியை மீட்டி
பாடல் பாடிக் கொண்டிருக்கும் போது அந்த வழியாக கடந்து சென்ற இப்னு மஸ்ஊத் ரலி
அவர்கள் "இளைஞரே! எவ்வளவு அழகிய குரல் உமக்கு! இந்த குரலில் குர்ஆன் ஓதினால்
எப்படி இருக்கும்?"
என்று கூறி சென்று விட்டார்கள். அப்போது ஜாதான்
அருகிலிருந்த தமது நண்பர்களிடம் யார் இவர்? என்று கேட்டார்.
இவர் யார் என்று
தெரியாதா உனக்கு?
இவர் நபி ﷺ அவர்களின் தோழர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள்
என்று பதிலளித்தார்கள்.
இதைக் கேட்ட
மாத்திரத்திலேயே அவரது மனதிலே ஒரு மாற்றம். உடனடியாக தவ்பாச் செய்து தம் தவறுகளில்
இருந்து மீண்டு,
தன்னுடைய கடந்த கால செயல்பாடுகளில் இருந்து தன்னை
விடுவித்துக் கொண்டு நேரடியாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலி அவர்களின் சபைக்கு
வந்தார்.
ஜாதானைக் கண்டதும்
இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள் "யாரை அல்லாஹ் நேசிக்கின்றானோ அத்தகைய இளைஞரே!
வருக! உம் வருகை நல்வரவாகட்டும்!" என்று கூறி அமரச் செய்தார்கள். பின்னர்
வீட்டின் உள்ளே சென்று பேரீச்சம்பழம் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
தொடர்ந்து இப்னு
மஸ்ஊத் ரலி அவர்களிடம் பயின்ற ஜாதான் மிகப் பெரிய கல்விமான்களில் ஒருவராக, மிகப் பெரிய தாபிஈன்களில் ஒருவராக மாறினார்.
وَحَدَّثَ
عَنْ: عَلِيٍّ، وَابْنِ مَسْعُودٍ، وَسَلْمَانَ، وَحُذَيْفَةَ، وَعَائِشَةَ،
وَجَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، وَالْبَرَاءِ، وَابْنِ عُمَرَ.
رَوَى
عَنْهُ: أَبُو صَالِحٍ السَّمَّانُ، وَعَمْرُو بْنُ مُرَّةَ، وَعَطَاءُ بْنُ
السَّائِبِ، وَحَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، وَمُحَمَّدُ بْنُ سُوقَةَ،
وَالْمِنْهَالُ بْنُ عَمْرٍو، وَمُحَمَّدُ بْنُ جُحَادَةَ.
ஹழ்ரத் உமர் ரலி
அவர்கள் ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள் ஹழ்ரத் ஆயிஷா ரலி ஹழ்ரத் இப்னு உமர் ரலி
உட்பட இன்னும் ஐந்து நபித்தோழர்களிடம் இருந்து நபி மொழிகளை அறிவிக்கக்கூடிய
நம்பத்தகுந்த அறிவிப்பாளர்களில் ஒருவராக மிளிர்ந்தார்கள். இவர்களிடம் இருந்து
அறிவிக்க கூடிய அறிவிப்பாளர்களும் நம்பத்தகுந்த அறிவிப்பாளர்களில் உள்ளவர்கள்
ஆவார்கள். ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா )
இப்போது நாம்
அவர்களின் பெயரைச் சொல்லும் போது ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்றே இணைத்துச் சொல்ல
வேண்டும் என்ற உயரிய நிலைக்கு உயர்ந்து விட்டார்கள்.
لو
جمعتم كتابًا مختصرًا لصحيح سنة رسول الله صلى الله عليه وسلم" ألقاها إسحاق
بن راهويه على طلابه، فوقعت في قلب تلميذه النجيب الإمام البخاريِّ، فألَّف أصح
كتاب في الدنيا بعد كتاب الله "صحيح البخاري
ஒரு நாள் இஸ்ஹாக்
இப்னு ராஹவைஹி (ரஹ்) அவர்கள் பாடம் நடத்தும் போது தங்களது மாணவர்களிடம்
"நீங்கள் நமது நபி ﷺ
அவர்களின் ஸஹீஹான ஹதீஸ்களை சுருக்கமாக ஒன்று திரட்டினால் இந்த உம்மத்திற்கு
எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்" என்று. இந்த வார்த்தை அன்றைய வகுப்பில்
அமர்ந்திருந்த புகாரி (ரஹ்) அவர்களின் உள்ளத்தில் ஊடுருவிச் சென்று தாக்கத்தை
ஏற்படுத்தியது.
ஆதலால், தனியொரு நபராக இருந்து இறைவேதத்திற்குப் பிறகு சிறந்த நூலான ஸஹீஹுல் புகாரியை
இந்த உலகத்திற்கு அர்ப்பணிப்பு செய்தார்கள். ( நூல்: ஃபத்ஹுல் பாரி )
كان أبو
حنيفة تاجر قماش يبيع في السوق ، فمر ذات يوم بالشعبي، وهو تابعي فقيه ومحدث؛ فقال
له: إلى من تختلف؟ (يقصد من تذهب إليه؟) فقال: أختلف إلى فلان. قال: لم أعنِ إلى
السوق، عنيت الاختلاف إلى العلماء.
فقال: أنا قليل الاختلاف إليهم. فقال له الشعبي: عليك بالنظر
إلى العلم ومجالسة العلماء، فإني أرى فيك ذكاء وفطنة. قال أبو حنيفة: فوقع في قلبي
من قوله، فأخذت في العلم، فنفعني الله بقوله.
இமாமுல் அஃளம் அபூ
ஹனீஃபா (ரஹ்) அவர்கள் ஆரம்பத்தில் பெரும் வியாபாரியாக திகழ்ந்தார்கள். அவர்களின்
கால நேரம் முழுவதும் வணிகவளாகத்திலும், சந்தையிலுமே கழிந்தது.
ஒருநாள் மிகப்
பெரும் தாபிஈன்களில் ஒருவராக விளங்கிய இமாம் ஷுஅபீ (ரஹ்) அவர்கள் கடைத்தெரு வழியாக
வந்து கொண்டு இருந்தார்கள்.
அப்போது, அபூ ஹனீஃபா ரஹ் அவர்கள் இடை மறித்து எங்கே சென்று வருகின்றீர்கள்? என்று கேட்டார்கள்.
அதற்கு நான் இன்ன
மனிதரை சந்தித்து விட்டு வருகிறேன் என்று இமாம் ஷுஅபீ ரஹ் அவர்கள் பதில் கூற,
அப்போது, அபூ ஹனீஃபா ரஹ் அவர்கள் "நான் அதைக் கேட்கவில்லை. கருத்து முரண்கள்
நிறைந்த உலமாக்கள் யாரையும் சந்தித்து வருகின்றீர்களா? என்று கேட்டேன். ஏனெனில், உலமாக்களிடம் எனக்கு சில
கருத்து முரண்கள் உண்டு" என்றார்கள்.
அதற்கு, இமாம் ஷுஅபீ ரஹ் அவர்கள் "அபூ ஹனீஃபா அவர்களே! மார்க்க கல்வியோடு ஒரு
தொடர்பையும்,
மார்க்க அறிஞர்களோடு ஒரு நெருக்கத்தையும் ஏற்படுத்திக்
கொள்வீராக! ஏனெனில்,
உம்மிடம் நான் சிறந்த அறிவுத் திறனையும், ஆழ்ந்த நுண்ணறிவையும் காண்கிறேன்" என்று கூறினார்கள்.
இதன் பின்னர்
இமாம் அபூ ஹனீஃபா ரஹ் அவர்கள் கூறினார்கள் "இமாம் ஷுஅபீ ரஹ் அவர்கள் சொன்ன
இந்த வார்த்தை என் உள்ளத்தில் ஏதோ உண்டு பண்ணியது. பின்னர் நான் மார்க்கக்
கல்வித்துறையை நோக்கி நகர்ந்தேன். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இமாம் ஷுஅபீ ரஹ்
அவர்களின் வார்த்தையின் மூலம் எனக்கு பயனைத் தந்தான்" என்றார்கள். ( நூல்:
மனாகிபு அபூ ஹனீஃபா ரஹ் லிஇமாமி மக்கீ ரஹ்... )
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நம் அனைவரின் ரமழானையும் கபூல் செய்தருள்வானாக! நாம் வாழும் எல்லா
காலத்திலும் ரமழானில் நம்மை அவனுடைய பயத்தோடும், நல்ல அமல்களின் தொடர்போடும் வாழச்
செய்தது போல் வாழச் செய்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!
வஸ்ஸலாம்!!!

