Tuesday, 10 March 2026

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 22. அளவோடு பேசுவோம்! அல்லல் நேரிடாமல் நம்மை பாதுகாப்போம்!!

 

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 22.

அளவோடு பேசுவோம்! அல்லல் நேரிடாமல் நம்மை பாதுகாப்போம்!!



21 –ஆவது நோன்பை நிறைவு செய்து, 22 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

புனிதம் மிக்க ரமலான் மாதத்தின் நிறைவுப் பகுதியை நாம் நெருங்கிக் கொண்டிருக்கின்றோம்.

நரக விடுதலையைப் பெற்றுத் தருகிற இறுதிப்பத்தில் இருக்கின்றோம். அல்லாஹ் நம்மையும், நம் குடும்பத்தினரையும், நம் சார்ந்தவர்களையும், உலக முஸ்லிம்கள் அனைவரையும் ரமலானின் தூய பரக்கத் கொண்டு நரகத்தில் நுழைந்து விடாமல் பாதுகாத்தருள்வானாக! ஆமீன்!

மேலான லைலத்துல் கத்ர் இரவை அடைந்து, வணக்க வழிபாடுகளில் ஈடுபட்ட மேன்மக்களின் கூட்டத்தார்களில் நம் அனைவரையும் சேர்த்தருள்வானாக! ஆமீன்! ஆமீன் ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!

இன்று தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட காஃப் அத்தியாயத்தின் 17 & 18 வது வசனங்கள் நாம் எப்போதும் கவனமாகப் பேச வேண்டும் என்பதையும், பொறுப்புணர்வுடன் பேச வேண்டும் என்பதையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது.

إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ (17) مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ (18)

இரு எழுத்தர்கள் அவனுடைய வலப்புறமும், இடப்புறமும் அமர்ந்து ஒவ்வொன்றையும் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். அவன் மொழிகிற எந்த ஒரு வார்த்தையையும் அவர்கள் பதிவு செய்யாமல் இருப்பதில்லை.” ( அல்குர்ஆன்: 50: 17, 18 )

உலகிலும் சிரமம்…

இப்போது நாம் கவனமின்றி வாயில் வந்ததை எல்லாம் பேசி விட்டோம் என்றால் அதற்காக நிச்சயம் நாம் ஒரு நாள் வருத்தப் பட வேண்டி இருக்கும்.

யஅகூப் (அலை) அவர்கள் தங்களது மற்ற ஆண்மக்களை விட யூசுஃப் அலை அவர்களின் மீது பேரன்பு வைத்திருந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத மற்ற ஆண்மக்கள் யூசுஃபை ஏதாவது செய்ய வேண்டும் என்று தருணம் பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள். 

ٱقْتُلُوا۟ يُوسُفَ أَوِ ٱطْرَحُوهُ أَرْضًۭا يَخْلُ لَكُمْ وَجْهُ أَبِيكُمْ وَتَكُونُوا۟ مِنۢ بَعْدِهِۦ قَوْمًۭا صَٰلِحِينَ

 

யூஸுஃபை' கொன்றுவிடுங்கள், அல்லது அவரை (தொலைவான) ஒரு நாட்டில் எறிந்துவிடுங்கள் (அப்பொழுது) உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கமே இருக்கும்; இதன்பின் நீங்கள் நல்ல மனிதர்களாகி விடுவீர்கள்" என்று அவர்களுள் ஒருவர் சொன்னார்.

قَالَ قَآئِلٌۭ مِّنْهُمْ لَا تَقْتُلُوا۟ يُوسُفَ وَأَلْقُوهُ فِى غَيَٰبَتِ ٱلْجُبِّ يَلْتَقِطْهُ بَعْضُ ٱلسَّيَّارَةِ إِن كُنتُمْ فَٰعِلِينَ

அவர்களில் ஒருவர்; "நீங்கள் யூஸுஃபை கொலை செய்யாதீர்கள், நீங்கள் அவரை (ஏதாவது) செய்தே ஆகவேண்டுமென்றால் - அவரை ஓர் ஆழமான கிணற்றில் தள்ளிவிடுங்கள்; (அப்போது அவ்வழி செல்லும்) பிரயாணிகளில் சிலர் அவரை எடுத்துக் கொள்ளக்கூடும்" என்று கூறினார்.  அல்குர்ஆன்: 12: 9, 10 )

தம் தந்தையையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. இது குறித்த தங்களது ஆதங்கத்தை தங்களுக்குள் வெளிப்படுத்தவும் செய்தார்கள்.

إِذْ قَالُوا۟ لَيُوسُفُ وَأَخُوهُ أَحَبُّ إِلَىٰٓ أَبِينَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ إِنَّ أَبَانَا لَفِى ضَلَٰلٍۢ مُّبِينٍ

(யூஸுஃபுடைய சகோதரர்கள்) கூறினார்கள்; "யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர் - நாமோ (பலமுள்ள) கூட்டதினராக இருக்கின்றோம்; நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறிலேயே இருக்கின்றார்.  ( அல்குர்ஆன்: 12: 8 )

இப்படி அவர்கள் மூன்று வகையான திட்டங்களில் எதை செயல்படுத்துவது? எப்படி செயல்படுத்துவது? என்று பலமாக யோசித்து தீர்க்கமான ஒரு முடிவோடு தமது தந்தையை நெருங்கினார்கள்.

قَالُوا۟ يَٰٓأَبَانَا مَا لَكَ لَا تَأْمَ۫نَّا عَلَىٰ يُوسُفَ وَإِنَّا لَهُۥ لَنَٰصِحُونَ

(பிறகு தம் தந்தையிடம் வந்து,) "எங்கள் தந்தையே! யூஸுஃபுடைய விஷயத்தில் நீங்கள் ஏன் எங்களை நம்புவதில்லை? மெய்யாகவே, நாங்கள் அவருக்கு நன்மையை நாடுபவர்களாகவே இருக்கின்றோம்.

أَرْسِلْهُ مَعَنَا غَدًۭا يَرْتَعْ وَيَلْعَبْ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ

"நாளைக்கு அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள். (காட்டிலுள்ள கனிகளைப்) புசித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்பார்; நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்" என்று கூறினார்கள். ( அல்குர்ஆன்: 12: 11,12 )

இந்த நேரத்தில் யஅகூப் அலை அவர்கள் சொன்ன ஒரு சொற்றொடர் அவர்கள் திட்டத்தை செயல்படுத்த உறுதுணையாக இருந்தது. தாம் எடுத்த முடிவை செயல்படுத்தவும் செய்தனர்.

قَالَ إِنِّى لَيَحْزُنُنِىٓ أَن تَذْهَبُوا۟ بِهِۦ وَأَخَافُ أَن يَأْكُلَهُ ٱلذِّئْبُ وَأَنتُمْ عَنْهُ غَٰفِلُونَ

(அதற்கு யஃகூப்,) "நீங்கள் அவரை அழைத்துச் செல்வது, நிச்சயமாக என்னைக் கவலைக்குள் ஆக்குகிறது மேலும், நீங்கள் அவரை கவனியாது, பராமுகமாகயிருக்கும்போது அவரை ஓநாய் (பிடித்துத்) தின்றுவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்" என்று கூறினார். ( அல்குர்ஆன்: 12: 13 )

இறுதியில் யூசுஃப்பின் சகோதரர்கள் தங்களது திட்டத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு தமது தந்தையிடம் வந்து, அவர் சற்று முன் என்ன சொன்னாரோ அதையே தங்களது சதித் திட்டத்திற்கு ஆதார சுருதியாக ஆக்கினார்கள்.

ஆம்! தங்களோடு விளையாட அழைத்துச் சென்று யூசுஃபை கிணற்றில் தள்ளி விட்டு வீட்டுக்கு வந்து சேரும் போது...

قَالُوا۟ يَٰٓأَبَانَآ إِنَّا ذَهَبْنَا نَسْتَبِقُ وَتَرَكْنَا يُوسُفَ عِندَ مَتَٰعِنَا فَأَكَلَهُ ٱلذِّئْبُ وَمَآ أَنتَ بِمُؤْمِنٍۢ لَّنَا وَلَوْ كُنَّا صَٰدِقِينَ

"எங்கள் தந்தையே! நாங்கள் யூஸுஃபை எங்களுடைய சாமான்களிடத்தில் விட்டுவிட்டு, ஓடி(யாடி விளையாடிக் கொண்டே வெகுதூரம்) சென்று விட்டோம்; அப்போது ஓநாய் அவரை(ப் பிடித்துத்) தின்று விட்டது - ஆனால் நாங்கள் உண்மையே சொன்ன போதிலும், நீங்கள் எங்களை நம்பவே மாட்டீர்கள்!" என்று கூறினார்கள். ( அல்குர்ஆன்: 12: 17 )

ஒரு சொற்றொடர் தான் ஒட்டுமொத்தமாக யஅகூப் அலை அவர்கள் வாழ்வை முற்றிலும் கவலையும், கண்ணீரும், நீண்ட கால பிரிவும் நிறைந்ததாக மாற்றியது.

وَتَوَلَّىٰ عَنْهُمْ وَقَالَ يَٰٓأَسَفَىٰ عَلَىٰ يُوسُفَ وَٱبْيَضَّتْ عَيْنَاهُ مِنَ ٱلْحُزْنِ فَهُوَ كَظِيمٌۭ

பின்னர் அவர்களை விட்டுத் திரும்பி "யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) துக்கமே!" என்று (வியாகூலப்பட்டுக்) கூறினார்; துக்கத்தால் (அழுது அழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன - பிறகு அவர் (தம் துக்கத்தை) விழுங்கி அடக்கிக் கொண்டார்.

قَالُوا۟ تَٱللَّهِ تَفْتَؤُا۟ تَذْكُرُ يُوسُفَ حَتَّىٰ تَكُونَ حَرَضًا أَوْ تَكُونَ مِنَ ٱلْهَٰلِكِينَ

(இதைக் கண்ணுற்ற அவருடைய மக்கள்; தந்தையே!) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் யூஸுஃபை நினைத்து (நினைத்து அழுது, நோயுற்று,) இளைத்து மடிந்து போகும் வரை (அவர் எண்ணத்தை விட்டும்) நீங்க மாட்டீர்கள்" என்று கூறினார்கள். ( அல்குர்ஆன்: 12: 84, 85 )

இப்போது, கிணற்றில் வீசப்பட்டு சிறுவராய் அரண்மனையில் வாழ்ந்து, இளமையில் சூழ்ச்சியால் சிறைக்குள் தள்ளப்பட்ட நபி யூசுஃப் அலை அவர்களின் வாழ்க்கைக்குள் வருவோம்.

யூசுஃப் அலை அவர்களின் வாழ்க்கையிலும் அவர்களின் வாயில் இருந்து கவனமின்றி வந்த ஒரு சொற்றொடர் அவர்களின் சிறைச்சாலை வாழ்க்கையை இன்னும் சில காலம் தள்ளிப் போட காரணமாக அமைந்ததாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

தம்மோடு சிறையில் இருந்த இரண்டு இளைஞர்களில் ஒருவர் விடுதலையாகி வெளியே வரும் போது, அவரிடம் யூசுஃப் அலை அவர்கள் சொன்ன அந்த ஒற்றை சொற்றொடர்....

وَقَالَ لِلَّذِى ظَنَّ أَنَّهُۥ نَاجٍۢ مِّنْهُمَا ٱذْكُرْنِى عِندَ رَبِّكَ فَأَنسَىٰهُ ٱلشَّيْطَٰنُ ذِكْرَ رَبِّهِ فَلَبِثَ فِى ٱلسِّجْنِ بِضْعَ سِنِينَ

அவ்விருவரில் யார் விடுதலை அடைவார் என்று எண்ணினாரோ அவரிடம், "என்னைப் பற்றி உம் எஜமானனிடம் கூறுவீராக!" என்றும் சொன்னார்; ஆனால் (சிறையிலிருந்து விடுதவையாகிய) அவர் தம் எஜமானனிடம் (இதைப் பற்றிக்) கூறுவதிலிருந்து ஷைத்தான் அவரை மறக்கடித்து விட்டான்; ஆகவே அவர் சிறைக்கூடத்தில் (பின்னும்) சில ஆண்டுகள் இருக்க வேண்டியாவரானார். ( அல்குர்ஆன்: 12: 42 )

இந்த இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற அபீ அப்தில்லாஹ் முஹம்மத் அல்குர்துபீ (ரஹ்) அவர்கள் பின் வருமாறு விளக்கம் தருகின்றார்கள்.

قال عبد العزيز بن عمير الكندي: دخل جبريل على يوسف النبي عليه السلام في السجن فعرفه يوسف، فقال: يا أخا المنذرين! مالي أراك بين الخاطئين؟! فقال جبريل عليه السلام: يا طاهر ابن الطاهرين! يقرئك

السلام رب العالمين ويقول: أما استحيت إذ استغثت بالآدميين؟! وعزتي! لألبثنك في السجن بضع سنين، فقال: يا جبريل! أهو عني راض؟ قال: نعم! قال: لا أبالي الساعة. وروي أن جبريل عليه السلام جاءه فعاتبه عن الله تعالى في ذلك وطول سجنه، وقال له: يا يوسف! من خلصك من القتل من أيدي إخوتك؟! قال: الله تعالى، قال: فمن أخرجك من الجب؟ قال: الله تعالى قال: فمن عصمك من الفاحشة؟ قال: الله تعالى، قال: فمن صرف عنك كيد النساء؟ قال: الله تعالى، قال: فكيف وثقت بمخلوق وتركت ربك فلم تسأله؟! قال: يا رب كلمة زلت مني! أسألك يا إله إبراهيم وإسحاق والشيخ يعقوب عليهم السلام أن ترحمني، فقال له جبريل: فإن عقوبتك أن تلبث في السجن بضع سنين.

وقال ابن عباس: عوقب يوسف بطول الحبس بضع سنين لما قال للذي نجا منهما" اذْكُرْنِي عِنْدَ رَبِّكَ" ولو ذكر يوسف ربه لخلصه.

அந்த வாலிபரும் விடுதலையாகி வெளியே வந்து யூஸுஃப் {அலை} அவர்கள் சொன்னது போன்று அரசரின் பணியாளராக அரண்மனையில் சேர்ந்தார்.

சிறையில் இருந்த யூஸுஃப் {அலை} அவர்கள் அவ்வாலிபர் அரசரிடம் நம்மைப் பற்றி சொல்லி இருப்பார். எனவே, இன்று நாம் விடுதலையாகி விடுவோம், நாளை விடுதலையாகி விடுவோம் என்று விடுதலை அறிவிப்பு வரும் நாளை நோக்கி சிறையில் காத்திருந்தார்.

நாட்கள் உருண்டோடத் தொடங்கிற்று. ஆனால், விடுதலை அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை. தொடர்ந்து யூஸுஃப் {அலை} அவர்கள் விடுதலை குறித்த சிந்தனையிலேயே கவலையில் தோய்ந்து போயிருந்தார்கள்.

ஒரு நாள் பார்க்கின்றார்கள். எதிரே ஒரு உருவம், இதற்கு முன் எங்கோ பார்த்த ஞாபகம், ஆம் ஞாபகம் வந்து விட்டது. எதிரே நிற்பது ஜிப்ரயீல் {அலை} அவர்கள்.

இறைத்தூதர்களின் இனிய தோழரே! தவறு செய்தமைக்காக தண்டனை பெறும் சிறைச்சாலையில் உமக்கென்ன வேலை? என்று கேட்டார்கள்.

அதற்கு, தூய்மையாளர்களின் குடும்பத்தில் பிறந்த தூய்மையாளரின் மகனே! அகிலத்தின் இரட்சகன் உங்களுக்கு ஸலாம் சொல்லச் சொன்னான்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூஎன்று சொல்லி விட்டு, இன்னொரு செய்தியையும் சொல்லச் சொன்னான்.

படைத்த ரப்பிடம் கேட்காமல், மனிதர்களிடம் உதவி கேட்கும் போது நீர் வெட்கப்படவில்லையா?” என் கண்ணியத்தின் மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன்! இந்த ஒரு காரணத்திற்காகவே நாம் சிறைச்சாலையில் உம்மை இன்னும் சில ஆண்டுகள் தங்க வைத்து விடுவோம்என்று.

அப்போது, யூஸுஃப் {அலை} அவர்கள் அல்லாஹ் என் மீது திருப்தியோடு இருக்கின்றானா? என்று கேட்டார்கள். ஆம்! என்று ஜிப்ரயீல் பதில் கூறினார். அப்படியென்றால், ”நான் யுக முடிவு நாள் வரை இங்கு கிடந்தாலும் எனக்கு ஒன்றும் இல்லைஎன்று பதில் கூறினார்கள்.

மற்றொரு அறிவிப்பில்....

வருகை தந்த ஜிப்ரயீல் {அலை} அவர்கள் உம் சகோதரர்களின் சூழ்ச்சியில் இருந்து உம்மைக் காப்பாற்றியது யார்? என்று கேட்க, யூஸுஃப் {அலை} அவர்கள் அல்லாஹ்என்றார்கள்.

ஆழமான கிணற்றில் மூழ்கி இறந்து போவதில் இருந்தும் இம்மைக் காப்பாற்றியது யார்? என்று ஜிப்ரயீல் {அலை} கேட்க, “அல்லாஹ்என்று யூஸுஃப் {அலை} பதிலளித்தார்கள்.

பெண்களின் சூழ்ச்சியில் இருந்தும், ஆபாசமான அருவெருப்பான செயலில் இருந்தும் உம்மைப் பாதுகாத்தது யார்? என்று ஜிப்ரயீல் {அலை} அவர்கள் கேட்க அதற்கும் அல்லாஹ் தான் என்னைப் பாதுகாத்தான்என்று யூஸுஃப் {அலை} அவர்கள் பதில் கூறினார்கள்.

அப்போது, ஜிப்ரயீல் {அலை} அவர்கள் அப்படியானால், உம்மைப் படைத்து, படைப்பினங்களின் கெடுதியில் இருந்தும் உம்மைப் பாதுகாத்த உம் ரப்பிடம் கேட்காமல் எப்படி படைப்பினங்களிடத்தில் நீர் உதவி கேட்டீர்? என ரப்புல் ஆலமீன் உம்மிடம் கேட்கச் சொன்னான்என்றார்கள்.

உடனடியாக, யூஸுஃப் {அலை} அவர்கள் இருகைகளையும் வானை நோக்கி உயர்த்தி இறைவா! ஒரு வார்த்தை என்னை தடம் புரளச் செய்து விட்டது! என் தந்தையின் இறைவனான என் மூதாதையர்கள் இஸ்ஹாக், இப்ராஹீம் {அலைஹிமா} ஆகிய்யோரின் இறைவனான உன்னிடம் கேட்கின்றேன்! என் மீது இரக்கம் காட்டு ரஹ்மானே!என்று பிரார்த்தித்தார்கள்.

அப்போது, ஜிப்ரயீல் {அலை} அவர்கள் நீர் கேட்ட அந்த வார்த்தைக்கு உம்மை இன்னும் சில ஆண்டுகள் சிறையிலேயே தங்க வைக்கப்போவதாக அல்லாஹ் கூறச் சொன்னான்என்றார்கள்.

وروى إسماعيل بن إبراهيم عن يونس عن الحسن قال قال رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:" لولا كلمة يوسف- يعني قوله:" اذْكُرْنِي عِنْدَ رَبِّكَ"- ما لبث في السجن ما لبث" قال: ثم يبكي الحسن ويقول: نحن ينزل بنا الأمر فنشكو إلى الناس.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ் யூஸுஃப் {அலை} அவர்களுக்கு அருள் புரியட்டும்! அவர் மாத்திரம் அவரிடம் உன்னுடைய எஜமான (னாகிய எகிப்தின் அரச) னிடம் என்னைப் பற்றி எடுத்துக் கூற வேண்டும்என்று கூறி இருக்காவிட்டால் இத்தனை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து இருக்கமாட்டார்என நபி அவர்கள் கூறினார்கள்.

இந்தச் செய்தியை ஹஸன் அல் பஸரீ (ரஹ்) அவர்கள் இன்று நாம் நம்முடைய எத்தனையோ காரியங்களை மனிதர்களிடம் தானே முறையிடுகின்றோம்என அழுதவர்களாகவே கூறினார்கள். ( நூல்: தஃப்ஸீர் அல்குர்துபீ )

இத்தனைக்கும் யூசுஃப் அலை அவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் பேசுபவர்கள். விழிப்புணர்வுடன் செயல்படுபவர்கள். 

தமது ஆசைக்கு பணியுமாறு அரசி அழைத்த போது "மஆதல்லாஹ் - அல்லாஹ் இந்த இழி செயலை செய்வதை விட்டும் பாதுகாப்பானாக!" என்று சொன்னவர் யூசுஃப் அலை.

தமது ஆசைக்கு இணங்க மறுத்தால் சிறைச்சாலையில் தள்ளி சிறுமை படுத்துவேன் என்று மிரட்டிய போது..

قَالَ رَبِّ ٱلسِّجْنُ أَحَبُّ إِلَىَّ مِمَّا يَدْعُونَنِىٓ إِلَيْهِ وَإِلَّا تَصْرِفْ عَنِّى كَيْدَهُنَّ أَصْبُ إِلَيْهِنَّ وَأَكُن مِّنَ ٱلْجَٰهِلِينَ

(அதற்கு) அவர், "என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ, அ(த்தீய)தை விடச் சிறைக்கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதாகும்; இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால், நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்" என்று (பிரார்த்தித்தவராக) கூறினார். ( அல்குர்ஆன்: 12: 33 )

ஆனாலும், கவனமின்றி பேசிய ஒரு பேச்சால் அவர்களின் சிறைவாசம் நீண்டதாக நபி அவர்களும் குறிப்பிடுகின்றார்கள்.

மறுமையிலும் சிரமம்…

இந்த உலகில் கவனமற்று நாம் பேசுகிற பேச்சால் நாளை மறுமையில் நாம் அதற்காக வருந்துவோம். 

عن معاذ أن رسول الله صلى الله عليه وسلم قال له: ألا أخبرك بملاك ذلك كله، قلت بلى يا نبي الله، قال: كف عليك هذا، فقلت يا نبي الله وإنا لمؤاخذون بما نتكلم به، قال: ثكلتك أمك يا معاذ وهل يكب الناس في النار على وجوههم أو قال على مناخرهم إلا حصائد ألسنتهم.

நபி அவர்கள் நாவைப் பற்றி நபித்தோழர்களிடம் கூறியபோது, “நாங்கள் பேச ப்படுவதை கொண்டு பிடிக்கப் படுவோமா?” என நபி அவர்களிடம்,  முஆத் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள்,” நாவின் விளைச்சல்களே மக்களை நரக நெருப்பில் முகம் குப்புற  வீழ்த்துகின்றன.  என நபி அவர்கள் பதிலளித்தார்கள்.( நூல்: திர்மிதி )‌

وقال الحسن البصري وتلا هذه الآية : ( عن اليمين وعن الشمال قعيد ) : يابن آدم ، بسطت لك صحيفة ، ووكل بك ملكان كريمان أحدهما عن يمينك ، والآخر عن شمالك ، فأما الذي عن يمينك فيحفظ حسناتك ، وأما الذي عن يسارك فيحفظ سيئاتك فاعمل ما شئت ، أقلل أو أكثر حتى إذا مت طويت صحيفتك ، وجعلت في عنقك معك في قبرك ، حتى تخرج يوم القيامة ، فعند ذلك يقول : ( وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا ) [ الإسراء : 13 ، 14 ] ثم يقول : عدل - والله - فيك من جعلك حسيب نفسك .

இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்கள் மேற்கூறிய காஃப் அத்தியாயத்தின் 17 வது வசனத்திற்கு விளக்கம் தருகிற போது:- "ஆதமின் மகனே! உனக்கான ஏடுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதை எழுதுவதற்கு சங்கையான இரண்டு வானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஒருவர் உன்னுடைய வலது பக்கத்தில் இருந்து எழுதுவார். இன்னொருவர் உன்னுடைய இடது பக்கத்தில் இருந்து எழுதுவார். உன்னுடைய வலது பக்கத்தில் உள்ளவர் நன்மையானவற்றையும், உன்னுடைய இடது பக்கத்தில் உள்ளவர் தீமையானவற்றையும் எழுதுவார்கள். எனவே, நீ விரும்பிய விதத்தில் செயல் படு! நீ குறைத்துக் கொண்டாலும் சரி அல்லது அதிகப்படுத்திக் கொண்டாலும் சரி. நீ மரணமாகுற வரை இவ்வாறு அவர்கள் எழுதிக் கொண்டு இருப்பார்கள். நீ இறந்ததும் அந்த ஏட்டை சுருட்டி விடுவர். உன்னை அடக்கம் செய்ததும் அதை உன்னுடைய கழுத்தில் மாட்டி விடுவர். நாளை மறுமையில் எழுப்பப்படும் நாளில் அது உன் கழுத்திலேயே இருக்கும். என்று சொல்லி விட்டு பனீ இஸ்ராயீல் அத்தியாயத்தின் 13 மற்றும் 14 வது வசனங்களை ஓதிக் காண்பித்தார்கள்.

وَكُلَّ اِنْسَانٍ اَلْزَمْنٰهُ طٰٓىِٕرَهٗ فِیْ عُنُقِهٖ وَنُخْرِجُ لَهٗ یَوْمَ الْقِیٰمَةِ كِتٰبًا یَّلْقٰىهُ مَنْشُوْرًا 

ஒவ்வொரு மனிதனுடைய செயல் குறிப்பையும் அவனுடைய கழுத்தில் நாம் மாட்டி இருக்கிறோம்; கியாமத் நாளில் அவனுக்காக ஓர் ஏட்டை வெளிப்படுத்துவோம் - திறக்கப்பட்ட நிலையில் அதனை அவன் பெற்றுக் கொள்வான்.

 

اِقْرَاْ كِتٰبَكَ كَفٰی بِنَفْسِكَ الْیَوْمَ عَلَیْكَ حَسِیْبًا ۟

நீ உம் புத்தகத்தைப் படித்துப் பார்! இன்று உனக்கு எதிராக உன்னுடைய ஆத்மாவே கணக்கதிகாரியாக இருக்கப் போதும்” (என்று அப்போது நாம் கூறுவோம்).

பின்னர் சொன்னார்கள்:- இது தான் நீதமாகும். அல்லாஹ் உன்னிடமே உனக்கான கணக்கை அவன் வைத்துள்ளான். ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )

கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும் அந்த ஏட்டில் என்ன இருக்கும்? ஒரு மனிதன் அதைப் படித்துப் பார்த்தால் அவனுடைய ரியாக்ஷன் - பிரதிபலிப்பு எப்படி இருக்கும் என்பதை சூரா அல் கஹ்ஃபிலே தெளிவு படுத்துகின்றான்.

وَوُضِعَ الْكِتٰبُ فَتَرَی الْمُجْرِمِیْنَ مُشْفِقِیْنَ مِمَّا فِیْهِ وَیَقُوْلُوْنَ یٰوَیْلَتَنَا مَالِ هٰذَا الْكِتٰبِ لَا یُغَادِرُ صَغِیْرَةً وَّلَا كَبِیْرَةً اِلَّاۤ اَحْصٰىهَا وَوَجَدُوْا مَا عَمِلُوْا حَاضِرًا وَلَا یَظْلِمُ رَبُّكَ اَحَدًا ۟

இன்னும் (ஏடாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், “எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவில்லையே!என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்; ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான். ( அல்குர்ஆன்: 18: 49 )

எத்தகைய வழிகாட்டல்???.

இஸ்லாமிய மார்க்கம் ஒரு மனிதன் எப்படி பேச வேண்டும்? யாரிடம் என்ன பேச வேண்டும்? எப்படி பேசக் கூடாது? என்று பேசுவதற்கு வழிகாட்டியது போன்று வேறு எந்த சித்தாந்தங்களும் இந்த உலகில் வழிகாட்டியது இல்லை.

وَهُدُوْۤا اِلَی الطَّیِّبِ مِنَ الْقَوْلِ وَهُدُوْۤا اِلٰی صِرَاطِ الْحَمِیْدِ ۟

ஏனெனில், அவர்கள் பரிசுத்தமான சொல்லின் பக்கம் (இம்மையில்) வழிகாட்டப்பட்டிருந்தார்கள்; இன்னும் புகழுக்குரிய (இறை)வனின் பாதையின் பக்கமும் அவர்கள் செலுத்தப்பட்டிருந்தார்கள். ( அல்குர்ஆன்: 22: 24 )

وَقُلْ لِّعِبَادِىْ يَقُوْلُوا الَّتِىْ هِىَ اَحْسَنُ‌ؕ 

(நபியே!) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! அல்குர்ஆன்: 17: 53 )

நல்லதைப் பேசுங்கள்...

وَقُولُوا لَهُمْ قَوْلًا مَعْرُوفًا

அவர்களிடம் நல்ல வார்த்தைகளைபக் கொண்டு பேசுங்கள்.” ( அல்குர்ஆன்: 4: 5 )

நேர்மையாகப் பேசுங்கள்..

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا (70

இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்விற்கு அஞ்சுங்கள்! மேலும், நேர்மையான சொல்லை மொழியுங்கள்! (அல்குர்ஆன்:33:71)

நீதியோடு பேசுங்கள்..

وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا

இன்னும் பேசும் போது நீதியுடன் பேசுங்கள்! ( அல்குர்ஆன்: 6: 152 )

மென்மையாக பேசுங்கள்...

فَقُوْلَا لَهٗ قَوْلًا لَّیِّنًا  

நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள். ( அல்குர்ஆன்: 20: 44 )

கண்ணியமாக பேசுங்கள்....

وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِیْمًا 

இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! ( அல்குர்ஆன்: 17: 23 )

அன்பாக பேசுங்கள்....

فَقُلْ لَهُمْ قَوْلًا مَيْسُورًا

அவர்களிடம் அன்பான (இலகுவான) சொல்லையே சொல்வீராக’ ( அல்குர்ஆன்: 17: 28 )

சிறந்ததைப் பேசுங்கள்.....

حَدَّثَنِي عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:- «مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ،

நபி அவர்கள் கூறி­னார்கள்: அல்­லாஹ்­வையும் மறுமை நாளையும் நம்­பிக்கை கொண்­டவர் தம் அண்டை வீட்­டா­ருக்கு தொல்லை தர­வேண்டாம். அல்­லாஹ்­வையும் மறுமை நாளையும் நம்­பிக்கை கொண்­டவர் தம் விருந்­தா­ளியைக் கண்­ணி­யப்­ப­டுத்­தட்டும். அல்­லாஹ்­வையும் மறுமை நாளையும் நம்­பிக்கை கொண்­டவர் (ஒன்று) சிறந்ததைப் பேசட்டும். அல்­லது வாய் மூடி இருக்­கட்டும்.

அறி­விப்­பவர் : அபூ­ஹு­ரைரா (ரழி) ( நூல்: புகாரி )

கனத்தை அறிந்து பேசுங்கள்....

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «إِنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بِالكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللَّهِ، لاَ يُلْقِي لَهَا بَالًا، يَرْفَعُهُ اللَّهُ بِهَا دَرَجَاتٍ، وَإِنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بِالكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ، لاَ يُلْقِي لَهَا بَالًا، يَهْوِي بِهَا فِي جَهَنَّمَ»

நபி அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்தி விடுகிறான். ஒரு அடியார் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பின் விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ( நூல்: புகாரி ) 

عن علي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ( إِنَّ فِي الْجَنَّةِ لَغُرَفًا يُرَى ظُهُورُهَا مِنْ بُطُونِهَا وَبُطُونُهَا مِنْ ظُهُورِهَا ‏”‏ ‏.‏ فَقَامَ إِلَيْهِ أَعْرَابِيٌّ فَقَالَ لِمَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏”‏ هِيَ لِمَنْ أَطَابَ الْكَلاَمَ وَأَطْعَمَ الطَّعَامَ وَأَدَامَ الصِّيَامَ وَصَلَّى لِلَّهِ بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ) رواه الترمذي بسند حسن

அலீ ரலி அவர்கள் அறிவித்தார்கள்::- சுவனத்திலே விஷேசமான அறைகள் காணப்படுகின்றன. அவற்றின் வெளிப்பகுதியை உள்ளிருந்து பார்க்கலாம். உட்பகுதியை வெளியிருந்து பார்க்கலாம்என நபி அவர்கள் கூறியதற்கு ஒரு நாட்டுப் புற அரபி எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! அது யாருக்குரியது எனக் கேட்டார். அதற்கு, நபி அவர்கள் யார் நல்ல முறையில் தமது வார்த்தைகளை அமைத்துக் கொள்கறாரோ, மேலும், யார் பசித்தோருக்கு உணவளிக்கிறாரோ, யார் நியமமாக நோன்பு நோற்கின்றாரோ, மேலும், மக்கள் உறங்கும் நேரத்தில் இரவில் எழுந்து நின்று வணங்குகிறாரோ அவருக்குத் தான்என பதிலளித்தார்கள். ( நூல்: திர்மிதீ )

عن أبي هُرَيرةَ أنَّه قال للنبيِّ صلَّى اللهُ عليه وسلَّمَ

يا رسولَ اللهِ، إنِّي إذا رأيتُك طابَتْ نَفسي وقرَّتْ عَيني، فأَنبِئْني عن كُلِّ شَيءٍ. فقال: كُلُّ شَيءٍ خُلِقَ مِن ماءٍ. قال: قلتُ: أَنبِئْني عن أَمرٍ إذا أخَذتُ به دخَلتُ الجنَّةَ. قال: أَفشِ السَّلامَ، وأَطعِمِ الطَّعامَ، وصِلِ الأَرحامَ، وقُم باللَّيلِ والنَّاسُ نِيامٌ، ثم ادخُلِ الجنَّةَ بِسَلامٍ

خلاصة حكم المحدث : إسناده صحيح

الراوي : أبو هريرة | المحدث : شعيب الأرناؤوط | المصدر : تخريج المسند لشعيب 

நான் நபி அவர்களிடம் வந்து, ”அல்லாஹ்வின் தூதரே! உங்களை நான் கண்டால் எனது உள்ளம் மகிழ்சியடைகிறது. எனது கண் குளிர்ச்சியடைகிறது. எனக்கு அனைத்து பொருட்களைப் பற்றியும் சொல்லுங்கள்என்றேன். அதற்கு நபி அவர்கள் அனைத்துப் பொருட்களும் நீரி­ருந்தே படைக்கப்பட்டுள்ளதன!என்று கூறினார்கள். அப்போது, நான் எந்த காரியத்தை நான் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எனக்கு கற்றுக் கொடுங்கள்என்று கூறினேன். ஸலாத்தைப் பரப்புவீராக! நல்ல பேச்சைப் பேசுவீராக! உறவுகளை இணைத்து வாழ்வீராக! மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்குவீராக! சாந்தியுடன் சொர்க்கத்தில் நீ நுழைவாய்!என்று நபி கூறினார்கள். ( நூல்: முஸ்னத் லிஷுஐபுல் அர்னாவூத் ) 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் கவனத்துடன் பேசுவதற்கு அருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!