Saturday, 28 February 2026

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை: 12. பாதுகாப்பு அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடை!

 

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை: 12.

பாதுகாப்பு அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடை!



பதினொன்றாம் நோன்பை நிறைவு செய்து, 12 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு அடுத்த நோன்பு நோற்பதற்கான ஆயத்தப்பணிகளில் நாம் ஈடுபட்டு இருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் அல் இஸ்ராஃ, அத்தியாயம் நிறைவு செய்யப்பட்டு, அல் கஹ்ஃப் அத்தியாயத்தின் பெரும் பகுதி ஓதப்பட்டிருக்கின்றது.

இரண்டு அத்தியாயங்களிலும் பல இடங்களில் மனித குலத்திற்கு தேவையான அற்புதமான வழிகாட்டல்கள், இம்மை, மறுமை சார்ந்த பல்வேறு கட்டளைகள் என அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பேசுவான்.

அல் இஸ்ரா சூராவின் 45 வது வசனத்தின் ஊடாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எதிரிகளிடம் இருந்து இறைநம்பிக்கை கொண்டவர்களை பாதுகாப்பதையும், அல் கஹ்ஃப் அத்தியாயத்தின் 11 முதல் 22 வரையிலான வசனங்கள் ஊடாக இறைநம்பிக்கைக்கு பாதகம் ஏற்படும் சூழலில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பாதுகாப்பதையும், 32 முதல் 44 வரையிலான வசனங்கள் ஊடாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனிடமே முழுமையாக தன்னை ஒப்படைப்பார்களின் பொருளாதார வளத்தை பாதுகாப்பதையும் குறிப்பிடுகின்றான்.

இந்த மூன்று இடங்களில் கூறப்பட்டுள்ள வசனங்களின் மூலமாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எவ்வளவு மகத்தான பாதுகாவலன் என்பதை நமக்கு உணர்த்துவதை நாம் புரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

اِذْ اَوَی الْفِتْیَةُ اِلَی الْكَهْفِ فَقَالُوْا رَبَّنَاۤ اٰتِنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً وَّهَیِّئْ لَنَا مِنْ اَمْرِنَا رَشَدًا 

அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!என்று கூறினார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களின் இந்த பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு கொடுங்கோன்மை புரிந்த அரசனிடம் இருந்து பாதுகாத்தான்.

وَلَبِثُوْا فِیْ كَهْفِهِمْ ثَلٰثَ مِائَةٍ سِنِیْنَ وَازْدَادُوْا تِسْعًا 

அவர்கள் தங்கள் குகையில் முன்னூறு வருடங்களுடன் மேலும் ஒன்பது அதிகமாக்கி (முன்னூற்றி ஒன்பது வருடங்கள்) தங்கினார்கள்.

இன்றைய உலகமும், உலக மாந்தர்களும் பசுமைக்காக ஏங்குவதைப் போன்று, நீருக்காக வாடுவதைப் போன்று பாதுகாப்பான வாழ்க்கைக்காக பரிதவித்துக்கொண்டிருக்கின்றது என்பதை நாம் நிதர்சனமாக கண்டு வருகிறோம்.

உண்மையில் பாதுகாப்பு என்பது அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடைகளில் ஒன்றாகும்.இதை நாம் இன்னும் சரி வர உணராமலேயே இருக்கின்றோம்.

தற்போது மத்திய கிழக்குப்பகுதியில் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்ற சூழ்நிலைகளை நேற்றிலிருந்தே நாம் அறிந்து வருகின்றோம். முற்றிலும் பாதுகாப்பற்ற, அச்சமான ஒரு சூழ்நிலை அங்கே நிலவி வருகிறது. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அனைத்து மக்களையும் பாதுகாத்து அருள்வானாக!

கலீலுல்லாஹ் (அலை) அவர்களின் துஆவும், ஹபீபுல்லாஹ் அவர்களின் துஆவும்....

وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ 

இறைவா இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக ( அல்குர்ஆன்: 2:126 )

மக்கமாநகரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குமாறு அல்லாஹ்விடம் பிராத்தித்த இப்றாஹீம் (அலை) அவர்கள், அதற்கடுத்தபடியாகத்தான் அந்த நகரத்தில் வாழும் மக்களுக்கு (உணவை) கனிவர்கங்களை வழங்குமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள். இதிலிருந்து மனித வாழ்வுக்குப் பாதுகாப்பான சூழலின் அவசியத்தை அல்குர்ஆன் கூறவருவதைப் புரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பாதுகாப்பின்மை குறித்து அச்சம் தெரிவித்துள்ளார்கள். பாதுகாப்பான சூழல் வேண்டி அல்லாஹ்விடம் துஆச் செய்துள்ளார்கள்.

عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ: كَانَ مِنْ دُعَاءِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ». [صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2739]

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி அவர்கள் பின்வருமாறு துஆக் கேட்பவர்களாக இருந்துள்ளார்கள்:- யா அல்லாஹ்! உனது அருட்கொடைகள் நீங்குவதை விட்டும், உனது பாதுகாப்பு மாறிவிடுவதை விட்டும், உனது சோதனைகள் திடீரென வருவதை விட்டும், உனது அனைத்துக் கோபங்களை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன். ( நூல்: முஸ்லிம் )

பாதுகாப்பான வாழ்க்கையை பெற்றவரே உலகின் பாக்கியமான மனிதர்...

عَنْ سَلَمَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ مِحْصَنٍ الخَطْمِيِّ، عَنْ أَبِيهِ، وَكَانَتْ لَهُ صُحْبَةٌ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَصْبَحَ مِنْكُمْ آمِنًا فِي سِرْبِهِ مُعَافًى فِي جَسَدِهِ عِنْدَهُ قُوتُ يَوْمِهِ فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا. رواه سنن الترمذي

"தனது வீட்டில் பாதுகாப்பாக இருந்த நிலையிலும், தனது உடல் ஆரோக்கியத்துடன் இருந்த நிலையிலும், அன்றைய நாளுக்குப் போதுமான உணவைப் பெற்றிருந்த நிலையிலும் யார் ஒரு காலைப் பொழுதை அடைகின்றாரோ, அவர் உலகையே பெற்றவர் போன்றவர் ஆவார்" என்று நபி அவர்கள் கூறினார்கள் என்று ஸலமா இப்னு உபைதில்லாஹ் இப்னு மிஹ்ஸனில் ஹளமிய்யி (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். ( நூல்: திர்மிதி )

ஏன் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்?

அல்லாஹ்வை மட்டுமே ஏன் மனிதர்கள் வணங்கவேண்டும்? என்பதற்கான காரணங்களை அல்லாஹ் அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் கூறுகின்றான்.

அப்படி அவன் குறிப்பிடும் காரணங்களில் ஒன்றாக ”பாதுகாப்பாக, அச்சமற்ற சூழலில் வாழ வைத்ததற்காக” அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றான்.

لِإِيلَافِ قُرَيْشٍ ، إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ ، فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ ، الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ ، (سورة قريش)

குறைஷிகளை மகிழ்வித்ததற்காகவும், குளிர் மற்றும் கோடை காலப் பயணங்களில் அவர்களை மகிழ்வித்ததற்காகவும் இந்த ஆலயத்தின் இறைவனை அவர்கள் வணங்கட்டும். பசியின் போது அவர்களுக்கு உணவளித்தான். பயத்திலிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து அபயமளித்தான்‘ ( அல்குர்ஆன்: 106: 1-4 )

நன்றி மறந்து வாழ்பவர்களுக்கு அல்லாஹ் தன் பாதுகாப்பை விலக்கிக் கொள்கின்றான்..

وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِأَنْعُمِ اللَّهِ فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْجُوعِ وَالْخَوْفِ بِمَا كَانُوا يَصْنَعُونَ (النحل 112)

ஓர் ஊரை அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகின்றான். அது நிம்மதியுடனும், அமைதியுடனும் இருந்தது. ஓவ்வொரு இடத்திலிருந்தும் அவ்வூருக்குரிய உணவு தாரளமாக வந்து சேர்ந்தது. ஆனால் அவ்வூர் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்தது. எனவே அவர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக பசி மற்றும் பயம் எனும் ஆடையை அல்லாஹ் அவ்வூராருக்கு அணிவித்தான்‘. ( அல்குர்ஆன்: 16: 112 )

அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெறும் தகுதியுடையவர்கள் யார்?

1) இணைவைக்காத தூய முஃமின்!

الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ أُولَئِكَ لَهُمُ الْأَمْنُ وَهُمْ مُهْتَدُونَ (الأنعام – 82)

 

நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர்வழி பெற்றோர். ( அல்குர்ஆன்: 6: 82 )

மேலுள்ள அல்குர்ஆன் வசனத்தில் அநீதியைக் கலந்து விடாமல் இருப்பவர்களுக்கே அச்சமற்ற நிலை பாதுகாப்பான வாழ்க்கை உள்ளதுஎனக் கூறப்பட்டுள்ளது. இங்கு அநீதி என்ற வார்த்தைக்கு, அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது தான் என்று நபி அவர்கள் ஹதீஸில் விளக்கியிருக்கிறார்கள். ஆகவே அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பது மிகப்பெரும் பாவமாக இருக்கின்ற அதேவேளை, அதனால் ஏற்படும் மோசமான விளைவுகளில் பாதுகாப்பின்மையும் ஒன்றென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

      2) ஃபஜ்ர் தொழும் பாக்கியமான முஃமின்!

عن جُندب بن عبد الله القَسْرِِي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «مَنْ صَلَّى صَلَاةَ الصُّبْحِ فَهُوَ فِي ذِمَّةِ اللهِ، فَلَا يَطْلُبَنَّكُمُ اللهُ مِنْ ذِمَّتِهِ بِشَيْءٍ، فَإِنَّهُ مَنْ يَطْلُبْهُ مِنْ ذِمَّتِهِ بِشَيْءٍ يُدْرِكْهُ، ثُمَّ يَكُبَّهُ عَلَى وَجْهِهِ فِي نَارِ جَهَنَّمَ». [صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 657]

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறியதாக ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் அல் கஸ்ரி (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : 'ஸுப்ஹ் தொழுகையைத் தொழுதவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். இவ்வாறு அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள ஒன்றைக் குறித்து அவன் உங்களிடம் விசாரணை செய்யும் நிலையை நீங்கள் ஏற்படுத்திட வேண்டாம். ஏனெனில், அவன் தன் பொறுப்பிலுள்ள ஒன்றைக் குறித்து ஒருவரிடம் விசாரிக்கத் தொடங்கினால், அதைக் கண்டுபிடித்தே தீருவான். பின்னர் (வரம்பு மீறி நடந்துகொண்ட) அவனை நரக நெருப்பில் அல்லாஹ் முகங்குப்புறத் தள்ளிவிடுவான்'.   ( நூல்: முஸ்லிம் )

இந்த ஹதீஸிற்கு இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் விளக்கம் கூறும் போது: யார் ஸுப்ஹ் தொழுகையை தொழுகிறாரோ அவருக்கு அல்லாஹ்வின் பிரத்தியேகமான பாதுகாப்பும், புகழிடமும் உண்டு, எனவே அவனை பாதுகாத்து அவனுக்கு உதவிபுரிகிறான் என நபி அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இவ்வாறான பாதுகாப்பை, பொறுப்பை பஜ்ர் தொழுகையை விட்டுவிடுவதன் மூலமோ, அல்லது தொழுகின்றவருக்கு இடையூறு செய்து வரம்பு மீறுதல் மூலமோ இதனை முறித்து விடவேண்டாம் என நபி அவர்கள் எச்சரிக்கிறார்கள். இவ்வாறு செய்பவர் அல்லாஹ்வின் பாதுகாப்பை முறித்து விட்டவராவர். யார் இவ்வாறு செய்வதற்கு எத்தனிக்கிறாரோ அவர் இந்த விஷயத்தை தட்டிக் கழித்தவராவார். அவரை அல்லாஹ் நரகில் முகம்குப்புற வீசிவிடுவான்.  ( ஷரஹ் முஸ்லிம் )

அல்லாஹ்வே பாதுகாப்பவர்களில் மிக்க மேலானவன்!

நபி யஅகூப் அலை அவர்கள் தமது மகன் யூசுஃப் அலை அவர்களை ஏற்கனவே இழந்து பிரிந்து வாழும் நிலையில் தற்போது புன்யாமீனையும் இழந்து பிரிந்து வாழும் நிலை ஏற்பட்ட போது அவர்கள் உள்ளத்தில் இருந்து உதிர்த்த வார்த்தைகள் இது.

قَالَ هَلْ ءَامَنُكُمْ عَلَيْهِ إِلَّا كَمَآ أَمِنتُكُمْ عَلَىٰٓ أَخِيهِ مِن قَبْلُ فَٱللَّهُ خَيْرٌ حَٰفِظًۭا وَهُوَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ

அதற்கு (யஃகூப்; "இதற்கு) முன்னர் இவருடைய சகோதரர் விஷயத்தில் உங்களை நம்பியது போன்று, இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (அது முடியாது.) பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன்; கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிக்க கிருபையாளனாவான்" என்று கூறிவிட்டார். ( அல்குர்ஆன்: 12: 64 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களின் நம்பிக்கையை வீணாக்க வில்லை. நபி யூசுஃப் அலை அவர்களையும், புன்யாமீனையும் பத்திரமாக பாதுகாப்பாக மீண்டும் அவர்களின் வசம் ஒப்படைத்தான்.

இரண்டு தாபிஈன்களின் வாழ்விலிருந்து...

عندما ذهب هذا القائد العظيم عقبة بن نافع رضي الله عنه لفتح شمال إفريقيا. أصدر أوامره إلى كتيبة من الجيش لتقوم ببناء مدينة القيروان في تونس؛ لتكون قاعدة حربية للجيش، فذهبت الكتيبة لتنفيذ أوامر القائد عقبة، فوجدت المكان الذي ستبني فيه المدينة هو عبارة عن أحراش عالية، وأودية واسعة، تسكنها الأسود والذئاب، والثعابين والضباع، فرجعوا إلى القائد عقبة، وقالوا له: "إنك أمرتنا بالبناء في شعاب ومستنقعات لا تُرام، فيها السباع والذئاب والحيات، ونحن نخاف من السباع والحيات وغير ذلك من دواب الأرض"، فقام رضي الله عنه على الفور ليصلي لله ركعتين. التوجه إلـى الله عند هؤلاء سريع. الالتجاء إلـى مفرج الكربات، وقاضي الحاجات عند هؤلاء العظماء لا يتأخر. رفع ملف القضايا الشائكة إلـى ملك الملوك عند هؤلاء الربانيين لا يؤجل.

قام القائد عقبة فصلى ركعتين، وكان في عسكره خمسة عشر رجلًا من أصحاب الرسول صلى الله عليه وسلم، فجمعهم وقال لهم: "إني داعٍ فأمِّنوا"، فقام ودعا الله عز وجل طويلًا، والصحابة والناس من خلفه يؤمِّنُون.   

உக்பா இப்னு நாஃபிஈ (ரஹ்) அவர்கள் ஒரு தாபிஈ ஆவார்கள். முஹம்மது நபி அவர்களின் ஹிஜ்ரத்தின் எட்டாவது ஆண்டில் பிறந்தார்கள், மிகவும் பேணுதலான வாழ்க்கைக்கு சொந்தக்காரராகவும், இரவிலே நின்று வணங்கக் கூடிய வணக்கசாலியாகவும் இருந்தார்கள். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலி அவர்களிடம் கல்வி பயின்ற மாணவராகவும் இருந்தார்கள். மேலும், குதிரைப்படை வீரராகவும் இருந்தார்கள். இவர்களின் தலைமையில் ஒரு படைப்பிரிவு ஆப்ரிக்க பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது.

 

இவர்களின் படைப்பிரிவு தூணுஸ் என்ற இடத்தின் அருகில் இருக்கும் கைரு(ர)வான் பகுதியில் இறங்கியது. அந்த இடம் ஆள் அரவமற்ற பெரிய வனப்பகுதியாகும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காடுகளாகவே காட்சியளித்தது.

தளபதி உக்பா இப்னு நாஃபிஈ ரஹ் அவர்கள் படைவீரர்களை அழைத்து இந்த பகுதியை பெரும் நகரமாக கட்டி எழுப்புங்கள் என்று கட்டளை பிறப்பித்தார்.

ஏனெனில், இந்த இடத்தை இராணுவ தலைமையிடமாக ஏற்படுத்தி இங்கிருந்து ஆப்ரிக்காவின் பல பகுதிகளுக்கும் படையை அனுப்புவதோடு, எதிர் காலத்தில் குடியிருப்பு பகுதியாகவும் அமைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தார்கள்.

படைவீரர்கள் தங்களுடன் சில தளவாடங்களை எடுத்துக் கொண்டு அடர்ந்த அந்த காட்டுப் பகுதிகளுக்குள் நுழைந்தனர்.

உள்ளே நுழைந்த அவர்களால் கொஞ்ச தூரம் கூட செல்ல முடியவில்லை.

காட்டுக்குள் ஓநாய்களும், விஷ ஜந்துக்களும், பாம்புகளும், வனவிலங்குகளும் பெரும் கூட்டமாக வாழ்ந்து வருவதைப் பார்த்து திரும்பி வந்து விட்டார்கள்.

வந்தவர்கள், தளபதி உக்பா இப்னு நாஃபிஈ ரஹ் அவர்களிடம் நீங்கள் சொன்னது போல இங்கு எந்த நகரத்தையும் உருவாக்க முடியாது. அப்படி உருவாக்க முனைந்தால் இங்கே நாம் பல மனித உயிர்களை பலி கொடுக்க வேண்டி வரும். காரணம், இந்த அடர்ந்த காட்டில் விலங்குகளும், விஷ ஜந்துக்களும் பாம்புகளும், தேள்களும், கருப்பு நாய்களும், குள்ளநரிகளும் இன்னும் பல உயிரினங்களும் வசித்து வருகின்றன. அவற்றை முழுமையாக அழிப்பது சாத்தியமற்றது என்று கூறினார்கள்.

இது கேட்ட உக்பா இப்னு நாஃபிஈ ரஹ் அவர்கள் எழுந்து, உடனடியாக இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அந்த படைப்பிரிவில் பங்கேற்று இருந்த 15 நபித்தோழர்களை அழைத்து நான் துஆச் செய்கிறேன் நீங்கள் ஆமீன் சொல்லுங்கள் என்று கூறி துஆச் செய்தார்கள். நீண்ட நேரம் துஆச் செய்தார்கள். நபித்தோழர்களும் அங்கிருந்த மற்றவர்களும் ஆமீன் சொன்னார்கள்.

ثم خرج رضي الله عنه مترجلًا حتى صعد على صخرة في وسط الغابة، وقام ينادي سكان الوادي بصوت عالٍ مرتفع جهور: "أيتها الأسود، أيتها السباع، أيتها الحيات، أيتها الضباع، أيتها العقارب، أيتها الذئاب، نحن أصحاب محمد ﷺ، جئنا نفتح الدنيا بلا إله إلا الله، محمد رسول الله، فارتحلي عنا واخرجي سالمة، فإنا نازلون، ومن وجدناه بعد ذلك، فلا لوم علينا إذا قتلناه".

وقف الجيش كله يتعجب أشد العجب من كلمات ونداءات القائد عقبة بن نافع للحيوانات، متسائلين: أيخاطب أسودًا؟ أينادي ذئابًا؟ أيحدث ضباعًا؟ أيناشد ثعابين وأفاعي؟ لكن عقبة رجل عظيم وقائد ملهم، حفظ الله في كل شيء، وانظروا كيف حفظه الله، وكيف سخر الله له كل شيء.

 

பின்னர் காலில் செருப்பணிந்து அந்த அடர்ந்த காட்டுப் பகுதியின் மேடான ஒரு இடத்திற்கு வந்து அங்கு நின்றவர்களாக உரத்த குரலில் "ஓ! இந்த வனத்தில் வசிக்கும் உயிரினங்களே! என்றழைத்து ஒவ்வொரு உயிரினங்களையும் தனித்தனியாக பெயர் குறிப்பிட்டு "இதோ! இங்கே நிற்கும் நாங்கள் நபி அவர்களின் தோழர்கள், நபி அவர்களின் உம்மத்துகள், நாங்கள் கலிமா ஷஹாதாவைக் கொண்டு இந்த உலகை வெற்றி வாகை சூட வந்திருக்கின்றோம்! எங்களை வெற்றி நோக்கி பயணிக்க விடுங்கள்! அமைதியான முறையில் இங்கிருந்து நீங்கள் வெளியேறி விடுங்கள்! இங்கு தான் நாங்கள் தங்கப் போகிறோம்! இதற்குப் பின்னரும் உங்களில் யாரேனும் எங்களிடம் அகப்படுவீர்களேயானால் நாங்கள் அந்த உயிரினங்களை கொல்வோம்!" என்று அறிவித்தார்கள்.

சுற்றி நின்ற படைவீரர்களுக்கு ஒரே ஆச்சர்யமாக போய்விட்டது. நம் தளபதி யாரிடம் பேசுகிறார்? இந்த பாம்புகளிடமும், தேள்களிடமும், நரிகளிடமும், நாய்களிடமும், ஓநாய்களிடமுமா? அவைகள் எல்லாம் நம் தளபதி சொல்வதை கேட்குமா? இங்கிருந்து சென்று விடுமா? என்று ஆச்சர்யம் மேலிட உயர்த்திய புருவத்தை இறக்காமல், கண்களை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், உக்பா இப்னு நாஃபிஈ ரஹ் அவர்களோ ஈமானில் மிக உறுதியானவர்கள். சற்று நேரத்தில் எல்லாம் அந்த விலங்குகளும், விஷ ஜந்துக்களும் அங்கிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறியதை அங்கிருந்த படை வீரர்கள் அனைவரும் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த தீனை பாதுகாக்க புறப்பட்ட உயர்வான அந்த மக்களை கொடிய விலங்குகள் மற்றும் விஷ ஜந்துக்களின் தீங்குகளில் இருந்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பாதுகாத்தான்.

சில ஆண்டு உழைப்புக்குப் பின்னர் கைருவான் நகரம் அங்கே உருவானது. துவக்கமாக அங்கே ஒரு மஸ்ஜிதும் எழுப்பப்பட்டது. அல்லாஹ்வின் மகத்தான கருணையால் உக்பா இப்னு நாஃபிஈ (ரஹ்) அவர்களின் தலைமையில் முழு ஆஃப்ரிக்க பகுதிகளும் வெற்றி கொள்ளப்பட்டு இஸ்லாமிய ஆளுகையின் கீழ் வந்தது. இன்று ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவின் பிஸ்கரா பகுதியில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றது. இன்றைக்கும் கூட பழமை மாறாமல் உக்பா இப்னு நாஃபிஈ (ரஹ் அவர்கள் அந்த மஸ்ஜித் கட்டுமானத்திற்கு பயன்படுத்திய சில பொருட்களும், சில பகுதிகளும் பாதுகாக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டில் இருக்கின்றன. மேற்கத்திய இஸ்லாமிய நிலப்பரப்பின் மிகப்பிரம்மாண்டமான முதல் மஸ்ஜிதும் இது தான் அந்த மஸ்ஜிதின் புகைப்படம் தான் இன்றைய தலைப்புக்கு முகப்பாக மஸாபீஹுல் மிஹ்ராப் அலங்கரித்துள்ளது.

المجاهد صلة بن أشيم الذي كان يغزو مع قتيبة بن مسلم. كان هذا الرجل من بعد صلاة العشاء حتى الفجر، وهو في ذكر ودعاء، وصلاة ومناجاة.

فقل لأهل اللهو والطرب، قل لأهل الغنا واللعب، قل لمجالس الغيبة والنميمة، قل لعشاق الشبكات ومنصات التواصل الاجتماعي.

صلة بن أشيم من بعد العشاء حتى الفجر وهو مع الله في صلاة وقيام وعبادة.

قلت لليل: هل بجوفك سر عامر بالحديث والأسرار؟ قال: لم ألقَ في حياتي حديثًا كحديث الأحباب في الأسحار؛ يقول عنه قتيبة بن مسلم: "الحمد لله الذي جعل في جيشي من أمثالك يا صلة".

كان إذا قام يصلي يشتري بردةً بألف دينار، ثم يطيبها ويعطرها، ويقول: اللهــم إنك جميل تحب الجمال ما لبستها إلا لك، فإذا جاء النهار خلعها.

 

ஸிலா இப்னு அஷ்யம் (ரஹ்) அவர்கள் மிகப் பெரிய தாபிஈன்களில் ஒருவர். பெரிய முஜாஹித் - மார்க்கப் போரில் பங்கேற்கும் வீரரும் கூட.

ஒரு படைப்பிரிவில் குதைபா இப்னு முஸ்லிம் (ரஹ்) அவர்களுடன் பங்கேற்றார்கள்.

இஷாவிற்கு பின்னிருந்து சுபுஹ் வரை தொழுகையிலும், திக்ரிலும், துஆவிலும் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்ததை கண்ட குதைபா இப்னு முஸ்லிம் ரஹ் அவர்கள் "உங்களுக்கு என்று இரவில் பேசுவதற்கு ஏதேனும் பேச்சுக்களோ, பகிர்ந்து கொள்ள ரகசியங்களோ கிடையாதா? இப்படி இரவு முழுவதும் வணக்க வழிபாடுகளிலேயே முழுமையாக உங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றீர்களே? என்று கேட்டார்கள். அதற்கு ஸிலா இப்னு அஷ்யம் ரஹ் அவர்கள் "எனக்கென்று ரகசியம் எதுவும் இல்லை. மேலும், இதுவரை என் இரவு நேரத்தில் எவரிடமும் பேசியதும் இல்லை" என்று கூறினார்கள். இதைக் கேட்ட குதைபா இப்னு முஸ்லிம் ரஹ் அவர்கள் "உங்களைப் போன்ற மேன்மக்களை என் தலைமையில் அமைந்த படைப் பிரிவில் வீரராக தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" என்று கூறினார்கள்.

ஆயிரம் தீனாருக்கு அழகிய ஆடை வாங்கி அதிலே உயர் தர அத்தர் பூசி அதை அணிந்து தொழுவார்கள். தொழுது முடித்ததும் அல்லாஹ்வே! நீ அழகானவன்! நீ அழகையே விரும்புகின்றாய்!" இந்த ஆடையை உனக்காகவே அணிந்தேன்" என்று கூறுவார்கள். தொழுது முடித்ததும் அதை கழற்றி வைத்துவிடுவார்கள். அதை பகலில் அணியவும் மாட்டார்கள்.

وفي إحدى الليالي، وبينما الجيش يعسكر في إحدى جبهات الجهاد، وقد نام الجميع، يخرج صلة بن أشيم إلى الغابة سرًّا، وقام هناك يصلي ويتنفل، ويركع ويدعو ويبكي، وبينما هو كذلك إذا جاءه الليث، والليث من هو؟ إنه حيدرة، الهزبر، الذي كانت تسميه العرب ملك الحيوانات، لا يستطيع أحد أن يواجهه أو يصارعه، كان إذا زأر في أحد الوديان تتنقل العرب خوفًا من صوته.

فلما جاء الليثُ صلةَ وهو يصلي، أخذ يلف ويدور ويتحرك حول صلة، وهو ثابت ثبوت الجبال، ما خاف، وما ارتعدت أوصاله، ولا فر هاربًا؛ لأنه كان متصلًّا بالملك العلام الحافظ سبحانه. ولما أكمل صلةُ ركعتين وسلم، التفت إلــى الأسد وقال له: يا ليث، يا حيدرة، إن كنت أُمرت بقتلي وأكلي، فاقتلني وكلني؛ فليس معي حماية إلا حماية ورعاية وحفظ المولى سبحانه، وإن كنت ما أمرت بقتلي ولا بأكلي ولم تسلط عليَّ، فاتركني مع ربي. فما كان من الأسد إلا أن حرك ذيله، كأنه جرو الكلب، ثم انصرف وغادر.

ஹம்மாத் இப்னு ஜஅஃபர் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்:- ஒரு யுத்தத்தில் பங்கேற்க நாங்கள் சென்றோம். இரவு நேரத்தில் ஓரிடத்தில் நாங்கள் தங்கினோம். எல்லோரும் உறங்கிப் போனார்கள். வழக்கம் போல ஸிலா இப்னு அஷ்யம் ரஹ் அவர்கள் இரவு வணக்கத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது ஒரு சிங்கம் திடீரென அங்கே வந்து, தொழுது கொண்டிருந்த அவரை சுற்றி சுற்றி வருவதும், நுகர்வதுமாய் இருந்தது. ஆனால், ஸிலா இப்னு அஷ்யம் ரஹ் அவர்களோ எவ்வித அசைவுகளும் இன்றி தொழுது கொண்டிருந்தார்கள். தொழுது முடித்ததும் அந்த சிங்கம் அவர்களின் முகத்திற்கு முன்பாக வந்து நின்றது.

அப்போது, அந்த சிங்கத்திடம் "என்னைக் கொன்று என்னை சாப்பிடுமாறு நீ ஏவப்பட்டிருந்தால் நீ என்னை கொன்று என்னை சாப்பிடு! ஏனெனில், இங்கே உன்னிடம் இருந்து என்னை பாதுகாத்துக் கொள்ள என் இறைவனான அல்லாஹ்வின் பாதுகாப்பை தவிர வேறு யாரும் என்னுடன் இல்லை. மாறாக, என்னை கொல்லவோ, என்னை சாப்பிடவோ நீ ஏவப்பட வில்லை என்றால் தயவு செய்து இங்கிருந்து நீ சென்று விடு! என் இறைவனோடு (உரையாடிட) என்னை விட்டு விடு!" என்று கூறினார்கள். அப்போது அந்த சிங்கத்தை நான் பார்த்தேன். அது பழக்கப்பட்டவர்களிடம் நாய் வாலாட்டுவது போன்று தன்னுடைய வாலை ஆட்டிக் கொண்டே காட்டுக்குள் சென்றது. ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா, ஸிஃபதுஸ் ஸஃப்வா )

போர் மேகம் சூழ்ந்து காணப்படுகிற ஈரான் மற்றும் அருகில் வாழும் இஸ்லாமிய நாடுகளின் மக்களையும், போர் அச்சத்தால் பீதியில் வாழும் மத்திய கிழக்கு நாடுகளின் மக்களையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பாதுகாத்து அருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!