Wednesday, 25 February 2026

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 09. உண்மை பேசுவோம்! உண்மையாளர்களுடன் தோழமை கொள்வோம்!!

 

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 09.

உண்மை பேசுவோம்! உண்மையாளர்களுடன் தோழமை கொள்வோம்!!



அல்ஹம்துலில்லாஹ்!! நாம் நோற்ற 8 –வது நோன்பை சிறப்பாக நிறைவு செய்து, 9 – வது நாள் தராவீஹ் தொழுகையை தொழுது விட்டு இறைமறையின் வசனத்தின் விளக்கத்தைப் பெறும் பொருட்டு அமர்ந்திருக்கின்றோம். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அமர்வை அருள் செய்யப்பட்ட அமர்வாக ஆக்கியருள்வானாக! ஆமீன்! நம் அமர்வை பாவங்களை விட்டும் பாதுகாக்கப்பட்ட அமர்வாக ஆக்கியருள்வானாக!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய தராவீஹ் தொழுகையில் அத்தவ்பா அத்தியாயத்தின் சில வசங்களும், சூரா யூனுஸ் முழுமையாக ஓதி நிறைவு செய்யப்பட்டு, சூரா ஹூதின் 49 வசனங்கள் ஓதப்பட்டுள்ளது.

இன்று ஓதப்பட்ட அத்தவ்பா அத்தியாயத்தின் 119 வது வசனத்தின் ஊடாக நல்ல வாய்மையான மனிதர்களோடு, உண்மையாளர்களோடு, சேர்ந்து இருங்கள் என்று இறைநம்பிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றான். 

இந்த வசனத்தின் முந்தைய வசனத்தில் உண்மை பேசி அல்லாஹ்விடம் தவ்பாச் செய்து பாவமன்னிப்பைப் பெற்ற மூன்று நபித்தோழர்களின் வாழ்வை நினைவு படுத்தி கூறிவிட்டு இந்த அழைப்பை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு விடுக்கிறான்.

قَالَ: سَمِعْتُ كعْبَ بنَ مَالكٍ رضِي الله عنه يُحَدِّثُ بِحدِيِثِهِ حِين تخَلَّف عَنْ رسولِ اللهِ ﷺ، في غزوةِ تبُوكَ. قَال كعْبٌ: لمْ أَتخلَّفْ عَنْ رسولِ الله ﷺ، في غَزْوَةٍ غَزَاها قط إِلاَّ في غزْوَةِ تَبُوكَ، غَيْر أَنِّي قدْ تخلَّفْتُ في غَزْوةِ بَدْرٍ، ولَمْ يُعَاتَبْ أَحد تَخلَّف عنْهُ، إِنَّما خَرَجَ رسولُ الله ﷺ والمُسْلِمُونَ يُريُدونَ عِيرَ قُريْش حتَّى جَمعَ الله تعالَى بيْنهُم وبيْن عَدُوِّهِمْ عَلَى غيْرِ ميعادٍ. وَلَقَدْ شهدْتُ مَعَ رسولِ اللَّهِ ﷺ ليْلَةَ العَقبَةِ حِينَ تَوَاثَقْنَا عَلَى الإِسْلامِ، ومَا أُحِبُّ أَنَّ لِي بِهَا مَشهَدَ بَدْرٍ، وإِن كَانتْ بدْرٌ أَذْكَرَ في النَّاسِ مِنهَا، وكانَ مِنْ خَبَري حِينَ تخلَّفْتُ عَنْ رسولِ اللهِ ﷺ، في غَزْوَةِ تبُوك أَنِّي لَمْ أَكُنْ قَطُّ أَقْوَى ولا أَيْسَرَ مِنِّي حِينَ تَخلَّفْتُ عَنْهُ في تِلْكَ الْغَزْوَة، واللَّهِ ما جَمعْتُ قبْلها رَاحِلتيْنِ قطُّ حتَّى جَمَعْتُهُما في تِلْكَ الْغَزوَةِ، ولَمْ يكُن رسولُ الله ﷺ يُريدُ غَزْوةً إِلاَّ ورَّى بغَيْرِهَا حتَّى كَانَتْ تِلكَ الْغَزْوةُ، فغَزَاها رسولُ الله ﷺ في حَرٍّ شَديدٍ، وَاسْتَقْبَلَ سَفراً بَعِيداً وَمَفَازاً. وَاسْتَقْبَلَ عَدداً كَثيراً، فجَلَّى للْمُسْلمِينَ أَمْرَهُمْ ليَتَأَهَّبوا أُهْبَةَ غَزْوِهِمْ فَأَخْبَرَهُمْ بوَجْهِهِمُ الَّذي يُريدُ، وَالْمُسْلِمُون مَع رسولِ الله كثِيرٌ وَلاَ يَجْمَعُهُمْ كِتَابٌ حَافِظٌ" يُريدُ بذلكَ الدِّيَوان" قَالَ كَعْبٌ: فقلَّ رَجُلٌ يُريدُ أَنْ يَتَغَيَّبَ إِلاَّ ظَنَّ أَنَّ ذلكَ سَيَخْفى بِهِ مَا لَمْ يَنْزِلْ فيهِ وَحْىٌ مِن اللَّهِ، وغَزَا رَسُول الله ﷺ تلكَ الغزوةَ حِينَ طَابت الثِّمَارُ والظِّلالُ، فَأَنا إِلَيْهَا أَصْعرُ، فتجهَّز رسولُ الله ﷺ وَالْمُسْلِمُون معهُ، وطفِقْت أَغدو لِكىْ أَتَجَهَّزَ معهُ فأَرْجعُ ولمْ أَقْض شَيْئاً، وأَقُولُ في نَفْسى: أَنا قَادِرٌ علَى ذلِكَ إِذا أَرَدْتُ، فلمْ يَزلْ يَتَمادى بي حتَّى اسْتمَرَّ بالنَّاسِ الْجِدُّ، فأَصْبَحَ رسولُ الله ﷺ غَادياً والْمُسْلِمُونَ معَهُ، وَلَمْ أَقْضِ مِنْ جِهَازي شيْئاً، ثُمَّ غَدَوْتُ فَرَجَعْتُ وَلَم أَقْض شَيْئاً، فَلَمْ يزَلْ يَتَمادَى بِي حَتَّى أَسْرعُوا وتَفَارَط الْغَزْوُ، فَهَمَمْتُ أَنْ أَرْتَحِل فأَدْركَهُمْ، فَيَاليْتَني فَعلْتُ، ثُمَّ لَمْ يُقَدَّرْ ذلِكَ لي، فَطفقتُ إِذَا خَرَجْتُ في النَّاسِ بَعْد خُرُوجِ رسُول اللهِ ﷺ يُحْزُنُنِي أَنِّي لا أَرَى لِي أُسْوَةً، إِلاَّ رَجُلاً مَغْمُوصاً عَلَيْه في النِّفاقِ، أَوْ رَجُلاً مِمَّنْ عَذَرَ اللَّهُ تعالَى مِن الضُّعَفَاءِ، ولَمْ يَذكُرني رَسُولُ اللهِ ﷺ حتَّى بَلَغ تَبُوكَ، فقالَ وَهُوَ جَالِسٌ في القوْمِ بتَبُوك: ما فَعَلَ كعْبُ بْنُ مَالكٍ؟ فقالَ رَجُلٌ مِن بَنِي سلمِة: يا رَسُولَ اللهِ حَبَسَهُ بُرْدَاهُ، وَالنَّظرُ في عِطْفيْه. فَقال لَهُ مُعَاذُ بْنُ جَبَلٍ tبِئس مَا قُلْتَ، وَاللَّهِ يا رَسُولَ اللهِ مَا عَلِمْنَا علَيْهِ إِلاَّ خَيْراً، فَسكَت رَسُولُ اللهِ ﷺ. فبَيْنَا هُوَ علَى ذَلِكَ رَأَى رَجُلاً مُبْيِضاً يَزُولُ بِهِ السَّرَابُ، فقالَ رسولُ اللهِ ﷺ: كُنْ أَبَا خَيْثمَةَ، فَإِذا هوَ أَبُو خَيْثَمَةَ الأَنْصَاريُّ وَهُوَ الَّذي تَصَدَّقَ بِصَاعِ التَّمْر حِيْنَ لمَزَهُ المنافقون.
قَالَ كَعْبٌ: فَلَّما بَلَغني أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَدْ توَجَّهَ قَافلا منْ تَبُوكَ حَضَرَني بَثِّي، فطفقتُ أَتذكَّرُ الكذِبَ وَأَقُولُ: بِمَ أَخْرُجُ مِنْ سَخطه غَداً وَأَسْتَعينُ عَلَى ذلكَ بِكُلِّ ذِي رَأْي مِنْ أَهْلي، فَلَمَّا قِيلَ: إِنَّ رَسُولَ اللهِ ﷺ قدْ أَظِلَّ قَادِمَاً زاحَ عَنِّي الْبَاطِلُ حَتَّى عَرَفتُ أَنِّي لم أَنج مِنْهُ بِشَيءٍ أَبَداً ذَلك جَاءَهُ الْمُخلَّفُونَ يعْتذرُون إِليْه وَيَحْلفُون لَهُ، وَكَانُوا بِضْعاً وثمَانين رَجُلا فَقَبِلَ منْهُمْ عَلانيَتهُمْ وَبَايَعَهُمْ وَاسْتغفَر لهُمْ وَوَكلَ سَرَائرَهُمْ إِلى الله تعَالىحتَّى جئْتُ، فلمَّا سَلَمْتُ تبسَّم تبَسُّم الْمُغْضب ثمَّ قَالَ
تَعَالَ فجئتُ أَمْشي حَتى جَلَسْتُ بيْن يَدَيْهِ، فقالَ لِيمَا خَلَّفَكَ؟ أَلَمْ تكُنْ قَدِ ابْتَعْتَ ظَهْرَك، قَالَ قُلْتُ: يَا رَسُولَ الله إِنِّي واللَّه لَوْ جلسْتُ عنْد غيْركَ منْ أَهْلِ الدُّنْيَا لَرَأَيْتُ أَني سَأَخْرُج منْ سَخَطه بعُذْرٍ، لقدْ أُعْطيتُ جَدَلا، وَلَكنَّني وَاللَّه لقدْ عَلمْتُ لَئن حَدَّثْتُكَ الْيَوْمَ حَدِيثَ كَذبٍ ترْضى به عنِّي لَيُوشكَنَّ اللَّهُ يُسْخطك عليَّ، وإنْ حَدَّثْتُكَ حَديث صدْقٍ تجدُ علَيَّ فِيهِ إِنِّي لأَرْجُو فِيه عُقْبَى الله U، واللَّه ما كَانَ لِي مِنْ عُذْرٍ، واللَّهِ مَا كُنْتُ قَطُّ أَقْوَى وَلا أَيْسر مِنِّي حِينَ تَخلفْتُ عَنك.
قَالَ: فقالَ رسولُ الله ﷺ
أَمَّا هذَا فقَدْ صَدَقَ، فَقُمْ حَتَّى يَقْضيَ اللَّهُ فيكَ وسَارَ رِجَالٌ مِنْ بَنِي سَلمة فاتَّبعُوني، فقالُوا لِي: واللَّهِ مَا عَلِمْنَاكَ أَذنْبتَ ذَنْباً قبْل هذَا، لقَدْ عَجَزتَ في أنْ لا تَكُون اعتذَرْت إِلَى رَسُول الله ﷺ بمَا اعْتَذَرَ إِلَيهِ الْمُخَلَّفُون فقَدْ كَانَ كافِيَكَ ذنْبكَ اسْتِغفارُ رَسُول الله ﷺ لَك. قَالَ: فَوالله ما زَالُوا يُؤنِّبُوننِي حتَّى أَرَدْت أَنْ أَرْجِعَ إِلى رسولِ الله ﷺ فأَكْذِب نفسْي، ثُمَّ قُلتُ لهُم: هَلْ لَقِيَ هَذا معِي مِنْ أَحدٍ؟ قَالُوا: نَعَمْ لقِيَهُ مَعَكَ رَجُلان قَالا مِثْلَ مَا قُلْتَ، وَقيلَ لَهمَا مِثْلُ مَا قِيلَ لكَ، قَال قُلْتُ: مَن هُمَا؟ قالُوا: مُرارةُ بْنُ الرَّبِيع الْعَمْرِيُّ، وهِلال ابْن أُميَّةَ الْوَاقِفِيُّ؟ قَالَفَذكَروا لِي رَجُلَيْنِ صَالِحَيْن قدْ شَهِدا بدْراً فِيهِمَا أُسْوَةٌقَالَ: فَمَضيْت حِينَ ذَكَروهُمَا لِي. وَنهَى رَسُول الله ﷺ عَنْ كَلامِنَا أَيُّهَا الثلاثَةُ مِن بَين من تَخَلَّف عَنهُ، قالَفاجْتَنبَنا النَّاس أَوْ قَالَ: تَغَيَّرُوا لَنَا حَتَّى تَنَكَّرت لِي في نَفْسي الأَرْضُ، فَمَا هيَ بالأَرْضِ الَّتي أَعْرِفُ، فَلَبثْنَا عَلَى ذَلكَ خمْسِينَ ليْلَةً. فأَمَّا صَاحبايَ فَاستَكَانَا وَقَعَدَا في بُيُوتهمَا يَبْكيَانِ وأَمَّا أَنَا فَكُنتُ أَشَبَّ الْقَوْمِ وَأَجْلَدَهُمْ، فَكُنتُ أَخْرُج فَأَشهَدُ الصَّلاة مَعَ الْمُسْلِمِينَ، وَأَطُوفُ في الأَسْوَاقِ وَلا يُكَلِّمُنِي أَحدٌ، وآتِي رسولَ الله ﷺ فأُسَلِّمُ عَلَيْهِ، وَهُو في مجْلِسِهِ بعدَ الصَّلاةِ، فَأَقُولُ في نفسِي: هَل حَرَّكَ شفتَيهِ بردِّ السَّلامِ أَم لاَ؟ ثُمَّ أُصلِّي قَريباً مِنهُ وأُسَارِقُهُ النَّظَرَ، فَإِذَا أَقبَلتُ عَلَى صلاتِي نَظر إِلَيَّ، وإِذَا الْتَفَتُّ نَحْوَهُ أَعْرَضَ عَنِّي، حَتى إِذا طَال ذلكَ عَلَيَّ مِن جَفْوَةِ الْمُسْلمينَ مشَيْت حَتَّى تَسوَّرْت  جدارَ حَائط أبي قَتَادَةَ وَهُوَا ابْن عَمِّي وأَحبُّ النَّاسَ إِلَيَّ، فَسلَّمْتُ عَلَيْهِ فَواللَّهِ مَا رَدَّ عَلَيَّ السَّلامَ، فَقُلْت لَهيَا أَبَا قتادَة أَنْشُدكَ باللَّه هَلْ تَعْلَمُني أُحبُّ الله وَرَسُولَه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم؟ فَسَكَتَ، فَعُدت فَنَاشَدتُه فَسكَتَ، فَعُدْت فَنَاشَدْته فَقَالَ: اللهُ ورَسُولُهُ أَعْلَمُفَفَاضَتْ عَيْنَايَ، وَتَوَلَّيْتُ حَتَّى تَسَوَّرتُ الْجدَارَ فبَيْنَا أَنَا أَمْشي في سُوقِ المدينةِ إِذَا نَبَطيُّ منْ نبطِ أَهْلِ الشَّام مِمَّنْ قَدِمَ بالطَّعَامِ يبيعُهُ بالمدينةِ يَقُولُ: مَنْ يَدُلُّ عَلَى كعْبِ بْنِ مَالكٍ؟ فَطَفقَ النَّاسُ يُشِيرُونَ لَهُ إِلَى حَتَّى جَاءَني فَدَفَعَ إِلى كتَاباً منْ مَلِكِ غَسَّانَ، وكُنْتُ كَاتِباًفَقَرَأْتُهُ فَإِذَا فيهِ: أَمَّا بَعْدُ فَإِنَّهُ قَدْ بلَغَنَا أَن صاحِبَكَ قدْ جَفاكَ، ولمْ يجْعلْك اللَّهُ بدَارِ هَوَانٍ وَلا مَضْيعَةٍ، فَالْحقْ بِنا نُوَاسِك، فَقلْت حِين قرأْتُهَا: وَهَذِهِ أَيْضاً مِنَ الْبَلاءِ فَتَيمَّمْتُ بِهَا التَّنُّور فَسَجرْتُهَا حَتَّى إِذَا مَضَتْ أَرْبَعُون مِن الْخَمْسِينَ وَاسْتَلْبَثِ الْوَحْىُ إِذَا رسولِ رسولِ الله ﷺ يَأْتِينِي، فَقَالَ: إِنَّ رسولَ الله ﷺ يَأَمُرُكَ أَنْ تَعْتزِلَ امْرأَتكَ، فقُلْتُ: أُطَلِّقُهَا، أَمْ مَاذا أَفعْلُ؟ قَالَ: لاَ بَلْ اعتْزِلْهَا فَلاَ تقربَنَّهَا، وَأَرْسلَ إِلى صَاحِبيَّ بِمِثْلِ ذلِكَفَقُلْتُ لامْرَأَتِي: الْحقِي بِأَهْلكِ فَكُونِي عِنْدَهُمْ حَتَّى يَقْضِيَ اللُّهُ في هذَا الأَمر، فَجَاءَت امْرأَةُ هِلالِ بْنِ أُمَيَّةَ رسولَ الله ﷺ فقالتْ لَهُ: يَا رَسُولَ الله إِنَّ هِلالَ بْنَ أُميَّةَ شَيْخٌ ضَائعٌ ليْسَ لَهُ خادِمٌ، فهلْ تَكْرهُ أَنْ أَخْدُمهُ؟ قَالَ: "لاَ، وَلَكِنْ لاَ يَقْربَنَّك"فَقَالَتْ: إِنَّهُ وَاللَّه مَا بِهِ مِنْ حَركةٍ إِلَى شَيءٍ، وَوَاللَّه مَا زَالَ يَبْكِي مُنْذُ كَانَ مِنْ أَمْرِهِ مَا كَانَ إِلَى يَوْمِهِ هَذَا. فَقَال لِي بعْضُ أَهْلِي: لَو اسْتأَذنْت رسولِ اللهِ ﷺ في امْرَأَتِك، فقَدْ أَذن لامْرأَةِ هِلالِ بْنِ أُمَيَّةَ أَنْ تَخْدُمَهُ؟ فقُلْتُ: لاَ أَسْتَأْذِنُ فِيهَا رسولَ الله ﷺ، ومَا يُدْريني مَاذا يَقُولُ رسولُ الله ﷺ إِذَا اسْتَأْذَنْتُهُ فِيهَا وَأَنَا رَجُلٌ شَابٌّ فلَبِثْتُ بِذلك عشْر ليالٍ، فَكَمُلَ لَنا خمْسُونَ لَيْلَةً مِنْ حينَ نُهي عَنْ كَلامنا.
ثُمَّ صَلَّيْتُ صَلاَةَ الْفَجْرِ صباحَ خمْسينَ لَيْلَةً عَلَى ظهْرِ بَيْتٍ مِنْ بُيُوتِنَا، فَبينَا أَنَا جَالسٌ عَلَى الْحال الَّتي ذكَر اللَّهُ تعالَى مِنَّا، قَدْ ضَاقَتْ عَلَيَّ نَفْسِى وَضَاقَتْ عَليَّ الأَرضُ بمَا رَحُبَتْ، سَمعْتُ صَوْتَ صَارِخٍ أوفَى عَلَى سَلْعٍ يَقُولُ بأَعْلَى صَوْتِهِ: يَا كَعْبُ بْنَ مَالِكٍ أَبْشِرْ، فخرَرْتُ سَاجِداً، وَعَرَفْتُ أَنَّهُ قَدْ جَاءَ فَرَجٌ فَآذَنَ رسولُ الله ﷺ النَّاس بِتوْبَةِ الله عَزَّ وَجَلَّ عَلَيْنَا حِين صَلَّى صَلاة الْفجْرِ فذهَبَ النَّاسُ يُبَشِّرُوننا، فذهَبَ قِبَلَ صَاحِبَيَّ مُبَشِّرُونَ، وَرَكَضَ رَجُلٌ إِليَّ فرَساً وَسَعَى ساعٍ مِنْ أَسْلَمَ قِبَلِي وَأَوْفَى عَلَى الْجَبلِ، وكَان الصَّوْتُ أَسْرَعَ مِنَ الْفَرَسِ، فلمَّا جَاءَنِي الَّذي سمِعْتُ صوْتَهُ يُبَشِّرُنِي نَزَعْتُ لَهُ ثَوْبَيَّ فَكَسَوْتُهُمَا إِيَّاهُ ببشارَته واللَّه مَا أَمْلِكُ غَيْرَهُمَا يوْمَئذٍ، وَاسْتَعَرْتُ ثَوْبَيْنِ فَلَبسْتُهُمَا وانْطَلَقتُ أَتَأَمَّمُ رسولَ الله صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يَتَلَقَّانِي النَّاسُ فَوْجاً فَوْجاً يُهَنِّئُونني بِالتَّوْبَةِ وَيَقُولُون لِيلِتَهْنِكَ تَوْبَةُ الله عَلَيْكَ، حتَّى دَخَلْتُ الْمَسْجِدَ فَإِذَا رسولُ الله ﷺ جَالِسٌ حَوْلَهُ النَّاسُ، فَقَامَ طلْحَةُ بْنُ عُبَيْداللهِ رضي الله عنه يُهَرْوِل حَتَّى صَافَحَنِي وهَنَّأَنِي، واللَّه مَا قَامَ رَجُلٌ مِنَ الْمُهاجِرِينَ غَيْرُهُ، فَكَان كَعْبٌ لاَ يَنْساهَا لِطَلحَة.
قَالَ كَعْبٌ: فَلَمَّا سَلَّمْتُ عَلَى رَسُولِ الله ﷺ، قَالَ: وَهوَ يَبْرُقُ وَجْهُهُ مِنَ السُّرُور "أَبْشِرْ بِخَيْرِ يَوْمٍ مَرَّ عَلَيْكَ، مُذْ ولَدَتْكَ أُمُّكَ" فقُلْتُ: أمِنْ عِنْدِكَ يَا رَسُول اللَّهِ أَم مِنْ عِنْد الله؟ قَالَ
لاَ بَلْ مِنْ عِنْد الله U، وكانَ رسولُ الله ﷺ إِذَا سُرَّ اسْتَنارَ وَجْهُهُ حتَّى كَأنَّ وجْهَهُ قِطْعَةُ قَمر، وكُنَّا نعْرِفُ ذلِكَ مِنْهُ، فلَمَّا جلَسْتُ بَيْنَ يدَيْهِ قُلتُ: يَا رسولَ اللَّهِ إِنَّ مِنْ تَوْبَتِي أَنْ أَنْخَلِعَ مِن مَالي صدَقَةً إِلَى اللَّهِ وإِلَى رَسُولِهِ.
فَقَالَ رَسُول الله ﷺ
أَمْسِكْ عَلَيْكَ بَعْضَ مَالِكَ فَهُوَ خَيْر لَكَ، "فَقُلْتُ إِنِّي أُمْسِكُ سَهْمِي الَّذي بِخيْبَر. وَقُلْتُ: يَا رَسُولَ الله إِن الله تَعَالىَ إِنَّما أَنْجَانِي بالصِّدْقِ، وَإِنْ مِنْ تَوْبَتي أَن لا أُحدِّثَ إِلاَّ صِدْقاً ما بَقِيتُ، فوالله مَا علِمْتُ أَحَداً مِنَ المسلمِين أَبْلاْهُ اللَّهُ تَعَالَى في صدْق الْحَديث مُنذُ ذَكَرْتُ ذَلكَ لرِسُولِ الله ﷺ أَحْسَنَ مِمَّا أَبْلاَنِي اللَّهُ تَعَالَى، وَاللَّهِ مَا تَعمّدْت كِذْبَةً مُنْذُ قُلْت ذَلِكَ لرَسُولِ اللَّهِ ﷺ إِلَى يَوْمِي هَذَا، وَإِنِّي لأَرْجُو أَنْ يَحْفظني اللَّهُ تَعَالى فِيمَا بَقِي، قَالَ: فَأَنْزَلَ اللَّهُ تَعَالَىلَقَدْ تَابَ اللَّهُ عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ وَالأَنْصَارِ الَّذِينَ اتَّبَعُوهُ فِي سَاعَةِ الْعُسْرَةِ حَتَّى بَلَغَإِنَّهُ بِهِمْ رَؤُوفٌ رَحِيمٌ، وَعَلَى الثَّلاثَةِ الَّذِينَ خُلِّفُوا حَتَّى إِذَا ضَاقَتْ عَلَيْهِمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ حَتَّى بَلَغَاتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ [التوبة:117-119].

நபி  அவர்கள் முஸ்லிம்களைத் தபூக் போருக்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த போது, புறப்படத் தயாராக வேண்டியது தான் என்று நானும் எண்ணினேன். ஆனால் சோம்பல்பட்டுக் கொண்டிருந்தேன். இதற்குள் என்ன அவசரம்? நேரம் நெருங்கும் பொழுது தயாராகிக் கொள்வோம். அதற்கு வெகு நேரமா பிடிக்கப் போகின்றது? என்று எண்ணினேன். இப்படியே புறப்படுவதற்குத் தாமதமாகிக் கொண்டு போயிற்று. இறுதியில் புறப்படும் நேரம் வந்து விட்டது. ஆனால் நான் இன்னும் தயாராகி இருக்கவில்லை. நான் என் மனதிற்குள் சேனை புறப்பட்டுச் செல்லட்டும். நான் ஓரிரண்டு நாட்களுக்குப் பிறகு புறப்பட்டாலும் பரவாயில்லை, சேனையுடன் போய்ச் சேர்ந்து கொள்ளலாம் என்று கூறிக் கொண்டேன்.

ஆக, இந்தச் சோம்பலிலேயே காலம் கடந்து விட்டது. என்னால் போக முடியவில்லை. நான் எவருடன் பின் தங்கிவிட்டிருந்தேனோ அவர்கள் ஒன்று நயவஞ்சகர்களாக இருந்தார்கள் அல்லது அல்லாஹ்வே சலுகை அளித்த பலவீனர்களாகவும், இயலாதவர்களாகவும் இருந்தனர். நானோ இந்த இரு நிலைகளிலும் இல்லையே! இதனைக் கண்டு என் உள்ளம் மிகவும் குமையலாயிற்று. மேலும், எனக்கே என் நிலை குறித்து வருத்தம் ஏற்படலாயிற்று.

அண்ணலார்    அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி வந்த போது வழக்கப்படி முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்துக்கள் தொழுகை நிறைவேற்றினார்கள். பின்னர் மக்களைச் சந்திப்பதற்காக அமர்ந்தார்கள். இப்போது நயவஞ்சகர்கள் ஒருவருக்குப்பின் ஒருவராக வந்து அண்ணலாரிடம் தங்கள் சாக்குப் போக்குகளைச் சமர்ப்பிக்கலானார்கள்.

சத்தியம் செய்து இந்தக் காரணங்களால் தான் தாங்கள் போரில் கலந்து கொள்ள இயலவில்லை என்று நம்பும் வகையில் கூறலாயினர். இத்தகைய பேர்வழிகள் எண்பது பேருக்கு சற்று அதிகமாக இருந்தனர். அண்ணலார்    அவர்கள், அவர்களுடைய செயற்கையான பேச்சுக்களையும் புனைந்துரைகளையும் புளுகுகளையும் கேட்டார்கள். அவர்கள் வெளிப்படையில் கூறிய அக்காரணங்களை ஏற்றுக் கொண்டு அவர்களுடைய உண்மை நிலையை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டு அவர்களை மன்னித்து விட்டார்கள்.

இப்போது என் முறை வந்தது. நானோ முன் சென்று ஸலாம் உரைத்தேன். அண்ணலார்  அவர்கள் என்னை நோக்கிப் புன்னகைத்து விட்டு, உங்களைப் போரில் கலந்து கொள்ள விடாமல் தடுத்தது எது என்று கூறுங்கள் என வினவினார்கள். நான் கூறினேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் எவரேனும் ஒரு உலகாதாயவாதியின் முன்னால் வந்திருந்தால், ஏதாவதொரு கட்டுக் கதையைக் கூறி அவரைத் திருப்திப் படுத்தியிருப்பேன். ஆனால் உங்களைப் பற்றி என் நம்பிக்கை என்னவெனில், உங்களிடம் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி உங்களைச் சமாதானப்படுத்தி விட்டாலும் கூட, அல்லாஹ் நிச்சயம்  என்னைப் பற்றி அதிருப்தி கொள்ளச் செய்து விடுவான்.

ஆனால் உண்மையைக் கூறி விட்டால், நீங்கள் கோபமடைந்தாலும் சரி, அல்லாஹ் எனக்கு மன்னிப்பு பெறுவதற்கான வழி எதனையாவது தோற்றுவித்து விடுவான் என்று நான் நம்புகிறேன். உண்மை என்னவெனில், என்னிடம் உங்கள் முன் சமர்ப்பித்திட உண்மையான காரணம் எதுவுமில்லை. நான் போருக்குச் செல்ல சக்தியனைத்தையும் பெற்றிருந்தேன். இதனைக் கேட்ட அண்ணலார்  அவர்கள் உண்மையைச் சொன்னவர் இவர் தான்: எழுந்திருங்கள். அல்லாஹ் உங்கள் விவகாரத்தில் தீர்ப்பு எதுவும் வழங்கும் வரை காத்திருங்கள் என்று கூறினார்கள். நான் எழுந்தேன். பின்னர் என் கோத்திரத்தாரிடம் சென்று அமர்ந்தேன். என்னைப் போன்றே இன்னுமிருவரும் (மிராரா பின் ருயாய்ஆ, ஹிலால் பின் உமய்யா) நான் கூறிய அதே உண்மையான பதிலைக் கூறினார்கள்.

இதன் பின் அண்ணலார்  அவர்கள் எங்கள் மூவருடனும் யாரும் பேசக் கூடாது என்று கட்டளையிட்டார்கள். அவர்கள் இருவரும் வீட்டிலேயே அமர்ந்து விட்டார்கள். ஆனால் நான் வெளியே சென்று வந்தேன். ஜமாத்துடன் தொழுகையை நிறைவேற்றி வந்தேன். கடைவீதிகளில்; சுற்றித் திரிந்து வந்தேன். ஆனால் எவரும் என்னுடன் பேசுவதில்லை. இந்த பூமியே மாறி விட்டது போன்றும் இங்கு நான் அந்நியனாய் இருப்பது போன்றும் இங்கு என்னை அறிந்தவர் எவருமேயில்லை என்பது போலவும் எனக்குத் தோன்றியது.

தொழுகைக்காக பள்ளிவாசல் சென்று அண்ணலார்  அவர்களுக்காக ஸலாம் கூறி, அண்ணலார்  அவர்களின் மலரிதழ்கள் பதில் தர அசைகின்றனவா? இல்லையா? என்று பதில் எதிர்பார்த்துக் கொண்டு இருந்து விடுவேன். நான் தனியாகத் தொழுகையை நிறைவேற்றும் போது அண்ணல் நபி  அவர்கள் என்னை எப்படிப் பார்க்கின்றார்கள் என்றறிய தொழுகையில் மறைமுகமாக கண்ணை உயர்த்தி அண்ணலாரைப் பார்ப்பேன். ஆனால் அண்ணல் நபி  அவர்களோ நான் தொழுது கொண்டிருக்கும் போது என்னைப் பார்ப்பார்கள். நான் ஸலாம் சொல்லி முடித்தவுடன் என்னை விட்டு பார்வையைத் திருப்பிக் கொள்வார்கள்!

 

ஓரு நாள் நான் மிகவும் பயந்து போய் என் ஒன்று விட்ட சகோதரரும் என் பால்ய நண்பருமான அபூகதாதா (ரலி)  அவர்களிடம் சென்றேன். அவர்களுடைய தோட்டச் சுவரின் மீது ஏறி நின்று கொண்டு அவர்களுக்குச் ஸலாம் கூறினேன். ஆனால் அவரோ ஸலாமுக்குப் பதில் கூடக் கூறவில்லை.

நான் மனவேதனையுடன் கேட்டேன்: அபூகதாதாவே! இறைவன் மீது ஆணையிட்டு நான் கேட்கின்றேன். நான் இறைவன் மீதும் இறைத்தூதர் மீதும் அன்பு வைத்திருக்கவில்லையா? அவர் மௌனமாயிருந்து விட்டார். நான் மீண்டும் வினவினேன். அவர் மீண்டும் மௌனமாகவே இருந்தார். மூன்றாவது முறை கேட்ட போது, அல்லாஹ்வும் அவனது திருத்தூதருமே நன்கறிவார்கள் என்று மட்டுமே கூறினார். இதனைக் கேட்டு என் கண்களில் கண்ணீர் பீறிட்டுக் கிளம்பியது. நான் சுவரிலிருந்து கீழிறங்கி விட்டேன்.

இந்த நாட்களில் நான் ஒரு முறை கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தேன். சிரியா நாட்டு ஒற்றன் ஒருவன் மன்னர் கஸான் எழுதியனுப்பிய பட்டு உறையிலிட்ட கடிதம் ஒன்றை என்னிடத்தில் கொடுத்தான். நான் அதனைத் திறந்து படித்தேன். அதில்  உமது தலைவர் உம்மீது கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றார் என்று கேள்விப்பட்டேன். நீர் இழிவான மனிதரல்லர். நீர் விணாக்கப்பட வேண்டியவரல்லர். என்னிடம் வந்து விடுங்கள். நான் உங்களைக் கண்ணியப்படுத்துவேன் என்று எழுதப்பட்டிருந்தது. நான் இன்னொரு சோதனை வந்திருக்கின்றதே! என்று கூறி அப்பொழுதே அந்தக் கடிதத்தை அடுப்பில் எரித்து விட்டேன்.

நாற்பது நாட்கள் இதே நிலையில் உருண்டோடின. அதற்குள் அண்ணலார்    அவர்கள் உமது மனைவியை விட்டு விலகியிருங்கள் என்று ஆணையிட்டார்கள். நான் அவளைத் தலாக் தந்து விடவா? என்று வினவினேன். அதற்கு, இல்லை, நீர் உமது மனைவியை விட்டு ஒதுங்கியருந்தால் போதும்| என்ற கட்டளையை அனுப்பி வைத்தார்கள்.

நான் என் மனைவியை அவளது தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டேன். அல்லாஹ் இந்த விவகாரத்தில் தீர்ப்பு அளிக்கும் வரை காத்திரு! என்று கூறினேன்.

 

ஐம்பதாவது நாள் வைகறைத் தொழுகைக்குப் பின் என் வீட்டுக் கூரை மீது அமர்ந்திருந்தேன். என் வாழ்வைக் குறித்து எனக்குள் நானே சலித்துக் கொண்டிருந்தேன். அதற்குள் ஒருவர்,  உமக்கு என் வாழ்த்துக்கள், கஅப் பின் மாலிக்கே! என்று கூறினார். இதனைக் கேட்டவுடன் சஜ்தாவில் (இறைவனுக்குச் சிரம் தாழ்த்தி) விழுந்து விட்டேன்! என்னை மன்னிக்கும்படி கட்டளை வந்து விட்டது என்று அறிந்து கொண்டேன். மக்கள் திரள் திரளாக ஓடி வந்த வண்ணமிருந்தார்கள். ஒவ்வொருவரும் மற்றவரை முந்திக் கொண்டு வந்து என்னை வாழ்த்திய வண்ணம் இருந்தார்கள். வாழ்த்துக்கள்! உம்முடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான் என்று வாழ்த்திய வண்ணம் இருந்தார்கள்.

 

நான் எழுந்து நேராக மஸ்ஜித் நபவியை நோக்கிச் சென்றேன். அண்ணலார்  அவர்களின் முகம் மகிழ்ச்சியில் மின்னிக் கொண்டிருப்பதைக் கண்டேன். நான் ஸலாம் கூறியவுடன், உமக்கு என் வாழ்த்துக்கள்! இது உம் வாழ்நாளிலேயே மிகச் சிறந்த நாள் என்று கூறினார்கள். நான். இந்த மன்னிப்பு அண்ணலார்  அவர்களின் தரப்பிலிருந்தா? அல்லது இறைவனின் தரப்பிலிருந்தா? என்று வினவினேன்.

அண்ணலார்  அவர்கள், இது அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட மன்னிப்பு| என்று கூறி இந்த பாவ மன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாகக் கூறும் திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

நான் அல்லாஹ்வின் தூதரே! நான் மன்னிப்புக் கோரும் போது என் செல்வம் முழுவதையும் இறைவழியில் செலவிடுவதாக நேர்ச்சை செய்திருந்தேன்! என்று பணிந்து கூறினேன். அண்ணலார்    அவர்கள் சிறிது மீதப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லதாகும் என்று கூறினார்கள். நான் அண்ணலார்   அவர்களின் இந்த ஆலோசனைப்படி கைபர் போரில் எனக்குக் கிடைத்த பங்கை மட்டும் எனக்காக வைத்துக் கொண்டு எஞ்சியிருந்த அனைத்தையும் இறைப்பாதையில் செலவழித்து விட்டேன். பின்னர், எந்த உண்மைக்குக் கூலியாக என்னை அல்லாஹ் மன்னித்தானோ, அந்த உண்மையின் மீது என் இறுதி மூச்சு வரை நிலைத்திருப்பேன்! என்று இறைவனிடம் உறுதி மொழிந்தேன்.

ஆகவே இன்று வரை நான் அறிந்தும் புரிந்தும் உண்மைக்கு மாறானது எதையும் கூறியதில்லை. இனி வருங்காலத்திலும் அல்லாஹ் என்னைப் பொய்யிலிருந்து காப்பாற்றுவான் என்று நம்புகிறேன். ( நூல்: புகாரி, முஸ்லிம் )

உண்மை அல்லாஹ்வின் பண்பு!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த உண்மையை தன்னுடைய பண்பாக சொல்கிறான் :

وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ قِيلًا

அல்லாஹ்வை விட உண்மை பேசுபவர் யார்? ( அல்குர்ஆன்: 4: 122 )

وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ حَدِيثًا

அல்லாஹ்வை விட பேச்சால் உண்மையானவர் யார்? (அல்குர்ஆன் 4 : 87)

உண்மை நபிமார்கள் மற்றும் நமது நபி அவர்களின் பண்பு!

உலகத்தில் தோன்றிய மிகச்சிறந்த மனிதர்களாகிய நபிமார்களின் அடிப்படை பண்பாக உண்மை இருந்தது. அல்குர்ஆனில் பல இடங்களில் இது குறித்து அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

முஹம்மத் அவர்கள் நுபுவத் கிடைப்பதற்கு முன்பே (அஸ் ஸாதிக்) உண்மையாளன் எனும் பட்டப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டார்கள். அவரிடம் காணப்பட்ட இவ்வுயரிய பண்பு நுபுவத் கிடைப்பதற்கு முன்பே அவரது சமூகத்தில் மிகப்பெரும் நன்மதிப்பை பெற்றுக் கொடுத்திருந்தது. அன்றைய அறியாமை சமூகம் கூட அவரோடு ஈர்ப்புக் கொண்டு அன்பாக நடப்பதற்கும், அவர் வார்த்தைகளை செவிமடுத்துக் கேட்பதற்கும் காரணமாக அமைந்தது.

وفي القرطبي عند تفسير قول الله تعالى: وختم على سمعه وقلبه: قال مقاتل: نزلت في أبي جهل، وذلك أنه طاف بالبيت ذات ليلة ومعه الوليد بن المغيرة، فتحدثا في شأن النبي صلى الله عليه وسلم، فقال أبو جهل: والله إني لأعلم أنه لصادق! فقال له: مه! وما دلك على ذلك! قال: يا أبا عبد شمس، كنا نسميه في صباه الصادق الأمين، فلما تم عقله وكمل رشده، نسميه الكذاب الخائن! والله إني لأعلم أنه لصادق! قال: فما يمنعك أن تصدقه وتؤمن به! قال: تتحدث عني بنات قريش أني قد اتبعت يتيم أبي طالب من أجل كسرة، واللات والعزى إن اتبعته أبدا فنزلت: وختم على سمعه وقلبه.

இமாம் குர்துபீ (ரஹ்) அல் ஜாஸியா சூராவின் 23 வது வசனம் இறக்கியருளப்பட்டதன் வரலாற்றுப் பிண்ணனியை விவரிக்கும் போது ஒரு முறை அபூஜஹ்ல் கஅபாவை தவாஃப் செய்து கொண்டிருந்த தருணத்தில் வலீத் இப்னு முகீரா சந்தித்து நீ முஹம்மது குறித்து என்ன கருதுகிறாய்? என்று கேட்டதற்கு அவர் உண்மையிலேயே பேசுபவர். அவர் நம்பிக்கையாளர் என்று கூறினான். பின்னர் ஏன் நீ முஹம்மதின் மார்க்கத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றாய்? என்று கேட்டதற்கு மக்காவின் குறைஷி குலப் பெண்கள் அபூதாலிப் வளர்த்த ஒரு அநாதையை இந்த அபுல் ஹிகம் பின்பற்றி சென்று விட்டான்" என்று பேசுவதை நான் விரும்பவில்லை. என்றான்.

அல்லாஹு தஆலா தன்னைப் புகழக்கூடிய அந்த குணம், தன் தூதர்களிடம் இடம் பெற்றுள்ள குணம், தன் ஹபீப் நபி அவர்களிடம் இடம் பெற்றுள்ள குணம் தன்னுடைய அடியாரிடத்திலும் இருக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான்.

قَالَ اللَّهُ هَذَا يَوْمُ يَنْفَعُ الصَّادِقِينَ صِدْقُهُمْ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

உண்மை சொல்லும் சத்தியவான்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கக்கூடிய நாள் இதுதான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களும் அவர்களுக்கு உண்டு. அதில் அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள்'' என்று கூறுவான். (அந்நாளில்) அவர்களைப் பற்றி அல்லாஹ்வும் மகிழ்ச்சியடைவான். அவர்களும் அவனைப் பற்றி மகிழ்ச்சியடைவார்கள். இது மிக்க மகத்தான பெரும் பாக்கியம் ஆகும். ( அல்குர்ஆன்: 5 : 119 )

உண்மை நன்மைகளின் பக்கம் மட்டுமே வழிகாட்டும்!

عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ “” إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ، وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ، وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يَكُونَ صِدِّيقًا، وَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ، وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ، حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا “”.

உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும. ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் வாய்மையாளர்’ (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆம்விடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யர்எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். ( நூல்: புகாரி ) 

«اضمَنوا لي ستًّا من أنفسِكم أضمنْ لكم الجنةَ: اصدُقُوا إذا حَدَّثتُم، وأوفوا إذا وَعَدتُّم، وأدُّوا إذا اؤتُمنتُم، واحفظوا فروجَكم، وغضُّوا أبصارَكم، وكفُّوا أيديَكُم».

رواه أحمد برقم: (22757)، وابن حبان برقم: (271)، والحاكم برقم: (8066)، من حديث عُبادة بن الصامت -رضي الله عنه-.صحيح الجامع برقم: (1018)، صحيح الترغيب والترهيب برقم: (1901).

நபி அவர்கள் "எனக்காக நீங்கள் ஆறு விஷயங்களில் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்காக நான் சொர்க்கத்தை பெற்றுத்தருவதில் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’. என்று கூறினார்கள்,

1.   நீங்கள் பேசினால் உண்மையே பேசுங்கள், 2. நீங்கள் வாக்குறுதி கொடுத்தால் முழுமையாக நிறைவேற்றுங்கள், 3. உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்து விடுங்கள், 4. உங்களின் கற்புகளை பேணிக் காத்துக்கொள்ளுங்கள், 5. உங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள், 6. உங்களின் கைகளை போர் செய்யாமல் தடுத்துக் கொள்ளுங்கள். ( நூல்: அஹ்மத் )

பொய்யான பாவனை தவிர்க்கப் பட வேண்டும்...

عن عَبْدُ الله بنُ عامِرٍ رَضِيَ اللهُ عَنْه: “دَعَتْني أُمِّي يومًا”، أي: نادَتْني أُمِّي ذاتَ يومٍ، وذلك وهو صغيرٌ، “ورسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم قاعِدٌ في بَيتِنا، فقالت: ها”، أي: تُنادي عليهِ، “تَعالَ أُعْطيكَ”، أي: أَقْبِلْ عِنْدي لأُعْطيَك شيئًا، ولم تُسمِّ هذا الشَّيءَ، فقال لها رسولُ الله صلَّى اللهُ عليه وسلَّم: “وما أَرَدْتِ أنْ تُعْطيهِ؟”، أي: اسْتَوقَفَها النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم مُسْتَبينًا عن صِدْقِ وَعْدِها لابنِها ومُحايَلتِها لَه، قالت: “أُعْطيه تَمْرًا”، أي: أَرادَتْ أنْ تُعطيَه تَمْرًا، فقال لها رسولُ الله صلَّى اللهُ عليه وسلَّم: “أمَا إنَّكِ لو لَمْ تُعطيه شيئًا كُتِبَتْ عليكِ كَذِبةً،.

என்னுடைய தாய் எனக்கு ஒன்று தறுவதாக கூறி என்னை அழைத்தார்கள் அந்த சமயம் நபியவர்களும் எங்களுடைய வீட்டில்தான் இருந்தார்கள் இதைக்கேட்ட நபி அவர்கள் நீ உன்மகனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நாடித்தான் அழைத்தீரா? என்றார்கள் ஆம் ஒரு பேரித்தம்பழம் கொடுக்க நாடியுள்ளேன் என்று என் தாய் கூறியதும் (அப்படியானால் சரி) நீ எதையும் கொடுக்கவில்லையானால் பொய் சொன்ன குற்றம் உமக்கு வந்து சேரும் என்றார்கள். ( நூல்: அபூதாவூத் )

பொய்யான நடவடிக்கைகள் நமது அமலின் கபூலிய்யத்துக்கு தடையாக நிற்கும்...

عَنْ أبي هُريْرة رضي اللَّهُ عنه قَالَ: قَالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم: "غَزَا نَبِيٌّ مِنَ الأَنْبِياءِ صلواتُ اللَّه وسلامُهُ علَيهِمْ فَقَالَ لقوْمِهِ: لا يتْبعْني رَجُلٌ ملَكَ بُضْعَ امْرَأَةٍ. وَهُوَ يُرِيدُ أَن يَبْنِيَ بِهَا وَلَمَّا يَبْنِ بِها، وَلا أَحدٌ بنَى بيُوتاً لَمْ يرفَع سُقوفَهَا، وَلا أَحَدٌ اشْتَرى غَنَماً أَوْ خَلَفَاتٍ وهُو يَنْتَظرُ أوْلادَهَا. فَغزَا فَدنَا مِنَ الْقَرْيةِ صلاةَ الْعصْرِ أَوْ قَريباً مِنْ ذلكَ، فَقَال للشَّمس: إِنَّكِ مَأمُورةٌ وأَنا مأمُورٌ، اللهمَّ احْبسْهَا علَينا، فَحُبستْ حَتَّى فَتَحَ اللَّهُ عليْهِ، فَجَمَعَ الْغَنَائِم، فَجاءَتْ يَعْنِي النَّارَ لتَأكُلهَا فَلَمْ تطْعمْهَا، فَقَالَ: إِنَّ فِيكُمْ غُلُولاً، فليبايعنِي منْ كُلِّ قبِيلَةٍ رجُلٌ، فلِزقتْ يدُ رَجُلٍ بِيدِهِ فَقَالَ: فِيكُم الْغُلولُ، فليبايعنِي قبيلَتُك، فلزقَتْ يدُ رجُليْنِ أو ثلاثَةٍ بِيَدِهِ فقَالَ: فِيكُمُ الْغُلُولُ، فَجاءوا برَأْسٍ مِثْلِ رَأْس بَقَرَةٍ مِنْ الذَّهبِ، فوضَعها فَجَاءَت النَّارُ فَأَكَلَتها، فلمْ تَحل الْغَنَائِمُ لأحدٍ قَبلَنَا، ثُمَّ أَحَلَّ اللَّهُ لَنا الغَنَائِمَ لمَّا رأَى ضَعفَنَا وعجزنَا فأحلَّها لنَا" متفقٌ عَلَيهِ.

"الخلفاتُ"بفتحِ الخاءِ المعجمة وكسرِ اللامِ: جمْعُ خَلِفَةٍ، وهِي النَّاقَةُ الحاملُ.

இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்களில் ஒருவர் புனிதப் போருக்குச் சென்றார். அப்போது அவர் தம் சமுதாயத்தாரிடம், 'ஒரு பெண்ணிடம் இல்லற உரிமையைப் பெற்றவன் அவளுடன் வீடு கூட விரும்பி இன்னும் கூடாமல் இருப்பானாயின் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். வீடு கட்டி முடித்து, அதன் முகட்டை (இன்னும்) உயர்த்தாமலிருப்பவனும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். ஆட்டையோ, பெண் ஒட்டகங்களையோ வாங்கிவிட்டு, அவை குட்டிகள் போடுவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவனும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வரவேண்டாம்' என்று கூறிவிட்டுப் போருக்குச் சென்றார். ஓர் ஊரை (ஜெரிக்கோ நகரை வெள்ளிக்கிழமை) அஸர் தொழுகையின் நேரத்தில் அல்லது சற்றேறக் குறைய அந்த வேளையில் அவர் நெருங்கினார். (சற்று நேரத்தில் சூரியன் மறையத் தொடங்க, சனிக் கிழமை போரிடுவது அவர்களுக்கு தடை செய்யப்பட்டிருந்த காரணத்தால் தோற்றுப் போக நேரிடுமே என்றஞ்சி) சூரியனை நோக்கி, 'நீ இறைவனின் கட்டளைப்படி இயங்குகிறாய். நானும் இறை கட்டளைப்படி நடக்க வேண்டியவன் ஆவேன்' என்று கூறிவிட்டு, 'இறைவா! சூரியனை (உடனே மறைய விடாமல்) தடுத்து விடு'என்று பிரார்த்தித்தார்.

எனவே, அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை வழங்கும் வரை அது தடுத்து நிறுத்தப்பட்டது. (வெற்றி பெற்ற) பிறகு அந்த இறைத்தூதர் போரில் கிடைத்த பொருட்களை ஒன்றாகச் சேகரித்தார். அப்போது அதை (எரித்துக் கருக்கி) உண்பதற்கு (வானிலிருந்து) நெருப்பு வந்தது. ஆனால்,அவற்றை அது உண்ணவில்லை. எனவே, அந்த இறைத்தூதர் 'உங்களிடையே (இந்தப் பொருட்களிலிருந்து) திருட்டுப் பொருள் ஏதோ ஒன்று உள்ளது. எனவே, ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒருவர் என்னிடம் உறுதி மொழி கொடுக்கட்டும்' என்று கூறினார். (உறுதி மொழி கொடுத்துக் கொண்டிருந்த போது) ஒரு மனிதனின் கை இறைத் தூதரின் கையோடு ஒட்டிக்கொண்டது.

அப்போது இறைத்தூதர், 'உங்களிடையே தான் திருடப்பட்ட பொருள் உள்ளது. எனவே, உன்னுடைய குலத்தார் என்னிடம் உறுதிமொழி கொடுக்கட்டும்' என்று கூறினார். (அவ்வாறே அவர்கள் கொடுக்க) இரண்டு மனிதர்களின் கை அல்லது மூவருடைய கை அவரின் கையுடன் ஒட்டிக் கொண்டது. அப்போது அவர், 'உங்களிடையே தான் திருடப்பட்ட பொருள் உள்ளது' என்றார். எனவே, அம்மக்கள் தங்கத்தாலான பசுமாட்டுத் தலை ஒன்றைக் கொண்டு வந்து அதை வைத்தனர். நெருப்பு வந்து அதைத் தின்றுவிட்டது.

பிறகு அல்லாஹ், போரில் கிடைக்கும் பொருட்களை (எடுத்துக் கொண்டு பயன்படுத்த) நமக்கு அனுமதியளித்தான். நம்முடைய பலவீனத்தையும் இயலாமையையும் கண்டு அதை நமக்கு அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான். என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.( நூல்: புகாரி, முஸ்லிம் )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உண்மை பேசி உண்மையாய் வாழும் நல்லோர்களில் ஒருவராக நம்மையும் ஆக்கியருள்வானாக! உண்மையாளர்களோடு சேர்ந்து வாழும் நஸீபை நமெக்கெல்லாம் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!