ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் சிந்தனை:- (2026)
ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றுவோம்!!!
இஸ்லாமியப்
பார்வையில் ஈதுப் பெருநாட்கள் மிக உயர்ந்த லட்சியத்தையும்,மகத்தான நோக்கத்தையும் அடிப்படையாக கொண்ட பண்டிகை நாட்களாகும்.
ஒவ்வொரு
முஸ்லிமும் தன் சந்தோஷத்தை மட்டுமே பிரதான நோக்கமாக கொள்ளாமல், தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்ச்சிப்படுத்தி "மகிழ்வித்து மகிழ்"
எனும் பின்னணியை அடிப்படையாக கொண்ட நாட்களாகும்.
இஸ்லாமிய
பண்டிகைகளில் ஆட்டம் பாட்டத்திற்கோ,வீண் கேளிக்கை மற்றும்
விரயங்களுக்கோ சற்றும் இடமில்லை.
இஸ்லாம் நமக்கு
வழங்கியுள்ள இரு ஈதுப்பெருநாட்களும் கடமையான வணக்கத்தின் முடிவில்
அமைக்கப்பட்டிருப்பதே அதற்கு சான்றாகும்.
ஆம்! நாம் நோன்பை
நிறைவு செய்கிறபோது ஈதுல் ஃபித்ரையும், ஹஜ்ஜை நிறைவு செய்கிறபோது
ஈதுல் அள்ஹாவையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த உம்மத்துக்கு தந்துள்ளான்.
புத்தாடைகள்
அணிவதோடு, நறுமணங்களை பூசிக் கொள்வதோடு நின்று விடாமல் கந்தலாடைகள் அணிந்த, கலங்கிய உள்ளத்துடன் கண்ணீருடன் வாழும் ஏழை எளிய மக்களின் துயர் துடைத்து
படைத்தவனையும்,
படைப்புக்களையும் சந்தோஷப்படுத்துவதே இரு ஈதுகளின்
நோக்கமாகும்.
இதோ ஈதுல் ஃபித்ர்
நோன்புப் பெருநாள் தினத்தில் நாம் வீற்றிருக்கின்றோம்.
இன்றைய நாளின்
நமது முதல் செயலாக ஃபித்ராவை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி விட்டு, ஈது தொழுகையின் மூலம் படைத்தவனை மகிழ்ச்சிப் படுத்த ஒன்று கூடி உள்ளோம்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நம் அனைவரையும் கபூல் செய்தருள்வானாக!
இன்றைய நாளின்
மகிழ்ச்சியை நம் வாழ்நாளெல்லாம் நீடித்து தந்தருள்வானாக!!
ஈதுல் பித்ர்
என்பது ஏழைகளின் கண்ணீரை துடைப்பதற்கு அல்லாஹ் நமக்கு வழங்கிய மகத்தான நாளாகும்.
இந்த ஒரு நாளில்
மட்டும் ஏழைகளை சந்தோசப்படுத்தி விட்டு மற்ற நாட்களில் அவர்களை நாம் கண்டு கொள்ளாமல் இருந்து விடக்கூடாது.
ரமழானின் கடைசி
நாட்களில் நமது மனதை கனக்கச் செய்த ஓர் செய்தி நமது தமிழகத்தின் பத்திரிகை மற்றும்
ஊடகம் வாயிலாக நாம் பார்த்து, படித்த ஓர் செய்தி.
சென்னை, நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த முஹம்மது ரபி என்பவர் தமது மனைவி மற்றும் தாம்
பெற்றெடுத்த இரு மக்களோடு தமது காரில் பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்து தற்கொலை செய்து
கொண்ட செய்தி,
எலும்புக்கூடாக திசையன்விளை காட்டுப்பகுதியில் காட்சியளித்த
அந்த செய்தி நம் நெஞ்சங்களில் இருந்து மறையாமல் இன்றும் சஞ்சலத்தை ஏற்படுத்திக்
கொண்டே இருக்கிறது.
அவரின் கடன் சுமை
அவரை அல்லாஹ்வும்,
அவனது தூதரும் ﷺ தடுத்துள்ள, சொர்க்கத்தை ஹராமாக்கும்
ஒரு செயலைச் செய்ய தூண்டியுள்ளது என்றால் ஒரு சமூகமாக நாம் இதில் இருந்து
பாடங்களும்,
படிப்பினைகளும் பெற கடமைப் பட்டுள்ளோம்.
ஒன்று தம்மை
அழுத்தும் அளவுக்கு ஒருவர் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இரண்டு, எந்த ஒரு கவலைக்கும்,
பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. தம் பிரச்சினைகளை
தீர்க்க வழிகள் உள்ளன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மூன்று, இது போன்று கடன் சுமையுடன் வாழும் நமது குடும்ப உறவுகளை, மஹல்லா மற்றும் தெருவில் வசிப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவ
வேண்டும்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் ஜகாத் பெறத் தகுதியானவர்கள் பட்டியலில் கடனாளிகளையும் இணைத்துள்ளான் என்பதை
நாம் மறந்து விடக் கூடாது.
ஆகவே தான் நபி ﷺ அவர்கள் கடனாளிகள் விஷயத்தில் தனிக் கவனம்
செலுத்தினார்கள் என்பதையும் அவர்களின் கடனை அடைக்கும் விஷயத்தில் சமூகத்தில்
கூட்டு முயற்சியை வலியுறுத்தினார்கள் என்பதையும் வரலாறு நெடுகிலும் காண முடிகிறது.
காட்சிப் பிழைகளை களைவோம்!!
ஏழைகள் இன்னின்ன
அடையாளங்களுடன் தான் இருப்பார்கள் என்ற நம் சமூகத்தின் நம்பிக்கை தவறானது.
ஏழைகளை, தேவையுள்ளவர்களை தீர்மானிக்கும் விஷயங்களில் நம் சமூகத்தின் பார்வைகள்
முற்றிலும் பிழையானதாக இருக்கிறது.
மேலும், நம்மிடம் வந்து தங்கள் தேவைகளை சொல்லி நம்மிடம் உதவி கோரினால் மட்டுமே நாம்
உதவ வேண்டும் என்ற நம் சமூகத்தின் கொள்கையும் தவறானது.
செல்வத்தை
அடிப்படையாகக் கொண்டு மக்கள் நான்கு வகையினராவார்கள்.
1) பொருளாதாரத்தின்
பக்கம் எந்த தேவையும் ஆகாத செல்வந்தர்கள்.
2) எப்போதும் தேவைகள்
இருந்து கொண்டே இருக்கும் நடுத்தர வர்க்கத்தினர்.
3) அடிப்படை
தேவைகளைக் கூட நிறைவேற்ற இயலாமல் அல்லாடும் மிஸ்கீன் - ஏழைகள்.
4) அன்றன்றைக்கு
உண்ணும் உணவுகளுக்குக் கூட திண்டாடும் ஃபகீர் - ஏழைகள்.
இந்த நடுத்தர
வர்க்கம்,
மிஸ்கீன், மற்றும் ஃபகீர் ஆகிய
வர்க்கத்தினரில் கூட ஒரு வகை மக்கள் இருப்பதாக இஸ்லாம் அடையாளப்படுத்துகிறது.
لِلْفُقَرَآءِ
الَّذِیْنَ اُحْصِرُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ لَا یَسْتَطِیْعُوْنَ ضَرْبًا فِی
الْاَرْضِ یَحْسَبُهُمُ الْجَاهِلُ اَغْنِیَآءَ مِنَ التَّعَفُّفِ تَعْرِفُهُمْ
بِسِيْمٰهُمْۚ لَا یَسْـَٔلُوْنَ النَّاسَ اِلْحَافًا وَمَا تُنْفِقُوْا مِنْ
خَیْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِیْمٌ
பூமியில்
நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு
அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய
தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்.( அல்குர்ஆன்: 2: 273 )
حَدَّثَنَا
يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ ابْنُ
أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي
شَرِيكٌ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ مَوْلَى مَيْمُونَةَ عَنْ
أَبِي هُرَيْرَةَ : أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ لَيْسَ الْمِسْكِينُ بِالَّذِي تَرُدُّهُ التَّمْرَةُ
وَالتَّمْرَتَانِ وَلَا اللُّقْمَةُ وَاللُّقْمَتَانِ إِنَّمَا الْمِسْكِينُ
الْمُتَعَفِّفُ اقْرَءُوا إِنْ شِئْتُمْ ” لَا يَسْأَلُونَ النَّاسَ
إِلْحَافًا “ و حَدَّثَنِيهِ أَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ حَدَّثَنَا
ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي
شَرِيكٌ أَخْبَرَنِي عَطَاءُ بْنُ يَسَارٍ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ
أَبِي عَمْرَةَ أَنَّهُمَا سَمِعَا أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِ حَدِيثِ
إِسْمَعِيلَ
“ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக அலைபவன் ஏழையல்லன். ஏழை என்பவன் (தன்
தேவைகளைப் நிறைவேற்றிக் கொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு) தன்மானத்துடன்
நடந்து கொள்பவனே ஆவான். நீங்கள் (உறுதி கொள்ள) விரும்பினால், “அவர்கள் மனிதர்களிடம் இரந்து நிற்கமாட்டார்கள்” (2:273) எனும் இறை வசனத்தை ஓதி(உணர்ந்து)க்கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ
கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), ( நூல்: புகாரி )
حَدَّثَنَا
قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا الْمُغِيرَةُ يَعْنِي الْحِزَامِيَّ
عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ
: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
لَيْسَ الْمِسْكِينُ بِهَذَا الطَّوَّافِ الَّذِي يَطُوفُ عَلَى النَّاسِ
فَتَرُدُّهُ اللُّقْمَةُ وَاللُّقْمَتَانِ وَالتَّمْرَةُ وَالتَّمْرَتَانِ قَالُوا
فَمَا الْمِسْكِينُ يَا رَسُولَ اللَّهِ قَالَ الَّذِي لَا يَجِدُ غِنًى يُغْنِيهِ
وَلَا يُفْطَنُ لَهُ فَيُتَصَدَّقَ عَلَيْهِ وَلَا يَسْأَلُ النَّاسَ شَيْئًا
“ஓரிரு கவளம் உணவை, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களைப் பெறுவதற்காக மக்களைச் சுற்றி வருபவன்
ஏழையல்லன்”
என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ கூறினார்கள். மக்கள், “அப்படியானால் ஏழை என்றால் யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு, “(அடிப்படைத்) தேவைகளை
நிறைவேற்றிக் கொள்ளப் பொருளாதாரம் அற்றவனாக இருப்பான்; அவனது நிலையறிந்து தர்மம் வழங்கப்படுவதில்லை. தானும் வலியச் சென்று மக்களிடம்
கேட்கமாட்டான் (அவனே உண்மையான ஏழை)” என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ விடையளித்தார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), ( நூல்: புகாரி )
மூன்று படிநிலைகள்....
ஏழைகளுக்கு
உதவுவதில் மூன்று படிநிலைகள் உள்ளன. ஒன்று, ஏழைகளின் துயர் துடைக்க
பாடுபடுவது,
இரண்டு, ஏழைகளுக்கு உதவுவது, மூன்று,
ஏழைகள் நல் வாழ்விற்கு பொறுப்பேற்றுக் கொள்வது.
இம் மூன்றும்
தனித்துவமான நன்மைகளையும் அபரிமிதமான கூலிகளையும் பெற்றுத் தரும் காரியமாகும்.
عَنْ
أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«السَّاعِي عَلَى الأَرْمَلَةِ وَالمِسْكِينِ، كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ
اللَّهِ، أَوِ القَائِمِ اللَّيْلَ الصَّائِمِ النَّهَارَ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 5661]
நபி ﷺ அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள்
அறிவிக்கிறார்கள் :'(கணவனை இழந்த) விதவைக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், 'இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்' அல்லது 'இரவில் நின்று வணங்கிப் பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார்'. ( நூல்: புகாரி )
நீங்கள் உதவி செய்வது யாருக்கு?
மனிதர்களுக்கு
நாம் உதவி செய்வதை இறைவனுக்கு உதவி செய்வதைப் போன்றும் மனிதனுக்கு நாம் இரக்கம்
காட்டாவிட்டால் இறைவனை வெறுத்துத் தள்ளியதைப் போன்றும் இறைவன் எடுத்துக்
கொள்கிறான்.
إنَّ
اللهَ عزَّ وجلَّ يقولُ يَومَ القيامةِ: يا ابنَ آدَمَ، مَرِضتُ فلَم تَعُدْني،
قال: يا رَبِّ، كيفَ أعودُك وأنتَ رَبُّ العالَمينَ؟! قال: أما عَلِمتَ أنَّ عَبدي
فُلانًا مَرِضَ فلَم تَعُدْه؟ أما عَلِمتَ أنَّك لو عُدتَه لَوجَدتَني عِندَه؟ يا
ابنَ آدَمَ، استَطعَمتُك فلَم تُطعِمْني، قال: يا رَبِّ، وكيفَ أُطعِمُك وأنتَ
رَبُّ العالَمينَ؟! قال: أما عَلِمتَ أنَّه استَطعَمَك عَبدي فُلانٌ، فلَم
تُطعِمْه؟ أما عَلِمتَ أنَّك لو أطعَمتَه لَوجَدتَ ذلك عِندي، يا ابنَ آدَمَ،
استَسقَيتُك فلَم تَسقِني، قال: يا رَبِّ، كيفَ أسقيك وأنتَ رَبُّ العالَمينَ؟!
قال: استَسقاك عَبدي فُلانٌ فلَم تَسقِه، أمَا إنَّك لو سَقَيتَه وجَدتَ ذلك
عِندي. الراوي : أبو هريرة | المحدث : مسلم | المصدر : صحيح مسلم، الصفحة أو
الرقم: 2569 | خلاصة حكم المحدث : [صحيح]، التخريج : من أفراد مسلم على البخاري.
அல்லாஹ்வின் தூதர்
ﷺ அவர்கள் கூறினார்கள்:- "கண்ணியமும் மகத்துவமும்
மிக்க அல்லாஹ் மறுமை நாளில், ஆதமுடைய மகனே! நான்
நோய்வாய்ப்பட்டிருந்தேன் ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை” என்று கூறுவான் அதற்கு அவன், ‘இறைவா! நீ அகிலத்தின்
இறைவன் உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும் என்று கேட்பான் அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான் ஆனால் நீ அவனை நலம்
விசாரிக்கச் செல்லவில்லை அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக்
கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?
ஆதமுடைய மகனே!
நான் உள்ளிடத்தில் உணவு வேண்டினேன் ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை என்று
கூறுவான் அதற்கு அவன்,
“என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி
என்னால் உணவளிக்க முடியும்?
என்று கேட்பான். அதற்கு அல்லாஹ். “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வத்தான். ஆனால் அவனுக்கு நீ
உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளிததிருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக்
கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?
ஆதமுடைய மகனே! தன்
உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை” என்று கூறுவான். அதற்கு அவன், “என் இறைவா! நியோ
அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான்,
அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த
அடியான் உள்னிடத்தில் தண்ணீர் கேட்டேன் ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர்
கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ
கண்டிருப்பாய்”
என்று கூறுவான்.அறிவிப்பவர்: அபூஹீரைரா (ரலி),
(
நூல்: முஸ்லிம் )
சக முஸ்லிம்
ஒருவரின்,
சக தேவையுள்ள முஸ்லிம் ஒருவரின் தேவையை அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் தனது தேவையாகவும்,
அவருக்கு உதவுவதை தனக்கு உதவுவது போன்றது என்று கூறும் இந்த
வார்த்தைகள் "ஏழை எளிய மக்களின் துயர் துடைப்பதன்" கனத்தை நமக்கு
உணர்த்துவதை அவதானிக்க முடிகிறது.
பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்!
குடும்ப உறவுகளின், மஹல்லா மற்றும் தெருவில் வசித்துவரும் ஒரு ஏழையை அல்லது ஒரு கடனாளியை
பொறுப்பேற்றுக் கொள்ள குடும்பத்தில் உள்ள, மஹல்லா மற்றும் தெருவில்
உள்ள ஒரு செல்வந்தர் முன் வர வேண்டும்.
இம் மூன்று
படிநிலைகளையும் மாநபி ﷺ
அவர்கள் செயல் படுத்தி முன் மாதிரி மனிதராக திகழ்கின்றார்கள்.
ஜாபிர் இப்னு
அப்துல்லாஹ் (ரலி) மதீனாவில் மாநபி ﷺ அவர்களின் அண்டை வீட்டார் ஆவார்.
முதன் முதலாக
மாநபி ﷺ அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களை மனமுடைந்தவராக, கடனாளியாக கண்டார்கள்.
அவர்களுக்கு
ஆறுதல் வார்த்தைகள் கூறிய அண்ணலார் அவரின் தந்தைக்கு கடன் தந்தவர்களிடம் ஆளனுப்பி
சென்று தவணை கேட்டு சிபாரிசு செய்தார்கள்.
அவர்கள் மறுக்கவே
வல்லோன் அல்லாஹ்விடம் ஜாபிர் (ரலி) அவர்களின் மகசூல் செய்யப்பட்ட பேரீத்தம் பழக்
கூடைக்கு "பரக்கத்" அருள் வளம் வேண்டி துஆ செய்தார்கள்.
حَدَّثَنَا
عَبْدَانُ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا يُونُسُ عَنْ الزُّهْرِيِّ
قَالَ حَدَّثَنِي ابْنُ كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ
رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ قُتِلَ يَوْمَ أُحُدٍ شَهِيدًا
وَعَلَيْهِ دَيْنٌ فَاشْتَدَّ الْغُرَمَاءُ فِي حُقُوقِهِمْ فَأَتَيْتُ النَّبِيَّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُمْ أَنْ يَقْبَلُوا تَمْرَ حَائِطِي
وَيُحَلِّلُوا أَبِي فَأَبَوْا فَلَمْ يُعْطِهِمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ حَائِطِي وَقَالَ سَنَغْدُو عَلَيْكَ فَغَدَا عَلَيْنَا حِينَ
أَصْبَحَ فَطَافَ فِي النَّخْلِ وَدَعَا فِي ثَمَرِهَا بِالْبَرَكَةِ
فَجَدَدْتُهَا فَقَضَيْتُهُمْ وَبَقِيَ لَنَا مِنْ تَمْرِهَا
ஜாபிர் பின்
அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது :என் தந்தையார் உஹுதுப் போரின்போது, அவர் மீது கடன் இருந்த நிலையில் கொல்லப்பட்டு விட்டார்கள். கடன் கொடுத்தவர்கள்
தம் உரிமைகளைக் கேட்டுக் கடுமை காட்டினார்கள். உடனே, நான் நபி ﷺ
அவர்களிடம் சென்றேன். (விஷயத்தைக் கூறினேன்.) நபி ﷺ அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின்
பேரீச்சம் பழங்களை (கடனுக்குப் பகரமாக) ஏற்றுக் கொண்டு என் தந்தையை மன்னித்து
(மீதிக் கடனைத்) தள்ளுபடி செய்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள். (அவ்வாறு செய்ய)
அவர்கள் மறுத்து விட்டனர். ஆகவே, அவர்களுக்கு அந்தப்
பேரீச்சம் பழங்களை நபி ﷺ
அவர்கள் கொடுக்கவில்லை. மாறாக, நாம் உன்னிடம் காலையில்
வருவோம்!என்று என்னிடம் கூறினார்கள். பிறகு காலையில் என்னிடம் வந்தார்கள். பேரீச்ச
மரங்களிடையே சுற்றி வந்து,
அவற்றின் கனிகளில் பரக்கத்துக்காக (அருள் வளத்திற்காக) துஆ
செய்தார்கள். பிறகு,
நான் அவற்றைப் பறித்துக் கடன் கொடுத்தவர்களின்
கடன்களையெல்லாம் திருப்பிச் செலுத்தினேன். (முழுக் கடனையும் தீர்த்த பின்பும்)
அதன் கனிகள் எங்களுக்கு மீதமாக இருந்தன. ( நூல்: புகாரி )
பிரத்யேகமான
முறையில் அவரின் ஒட்டகத்தை விலை பேசி அவருக்கு அதன் விலையை கொடுத்து அந்த
ஒட்டகத்தையும் அன்பளிப்பாக வழங்கி அவரின் வாழ்க்கை மேலோங்கிட கரம் கொடுத்தார்கள்.
حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ، حَدَّثَنَا عُبَيْدُ
اللَّهِ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ
اللَّهُ عَنْهُمَا، قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
فِي غَزَاةٍ، فَأَبْطَأَ بِي جَمَلِي وَأَعْيَا، فَأَتَى عَلَيَّ النَّبِيُّ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ جَابِرٌ : فَقُلْتُ: نَعَمْ، قَالَ: مَا
شَأْنُكَ؟ قُلْتُ: أَبْطَأَ عَلَيَّ جَمَلِي وَأَعْيَا، فَتَخَلَّفْتُ، فَنَزَلَ
يَحْجُنُهُ بِمِحْجَنِهِ ثُمَّ قَالَ: ارْكَبْ ، فَرَكِبْتُ، فَلَقَدْ رَأَيْتُهُ
أَكُفُّهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
تَزَوَّجْتَ قُلْتُ: نَعَمْ، قَالَ: بِكْرًا أَمْ ثَيِّبًا قُلْتُ: بَلْ ثَيِّبًا،
قَالَ: أَفَلاَ جَارِيَةً تُلاَعِبُهَا وَتُلاَعِبُكَ قُلْتُ: إِنَّ لِي
أَخَوَاتٍ، فَأَحْبَبْتُ أَنْ أَتَزَوَّجَ امْرَأَةً تَجْمَعُهُنَّ،
وَتَمْشُطُهُنَّ، وَتَقُومُ عَلَيْهِنَّ، قَالَ: أَمَّا إِنَّكَ قَادِمٌ، فَإِذَا
قَدِمْتَ، فَالكَيْسَ الكَيْسَ ، ثُمَّ قَالَ: أَتَبِيعُ جَمَلَكَ قُلْتُ: نَعَمْ،
فَاشْتَرَاهُ مِنِّي بِأُوقِيَّةٍ، ثُمَّ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَبْلِي، وَقَدِمْتُ بِالْغَدَاةِ، فَجِئْنَا إِلَى المَسْجِدِ
فَوَجَدْتُهُ عَلَى بَابِ المَسْجِدِ، قَالَ: آلْآنَ قَدِمْتَ قُلْتُ: نَعَمْ،
قَالَ: فَدَعْ جَمَلَكَ، فَادْخُلْ، فَصَلِّ رَكْعَتَيْنِ ، فَدَخَلْتُ
فَصَلَّيْتُ، فَأَمَرَ بِلاَلًا أَنْ يَزِنَ لَهُ أُوقِيَّةً، فَوَزَنَ لِي
بِلاَلٌ، فَأَرْجَحَ لِي فِي المِيزَانِ، فَانْطَلَقْتُ حَتَّى وَلَّيْتُ،
فَقَالَ: ادْعُ لِي جَابِرًا قُلْتُ: الآنَ يَرُدُّ عَلَيَّ الجَمَلَ، وَلَمْ
يَكُنْ شَيْءٌ أَبْغَضَ إِلَيَّ مِنْهُ، قَالَ: خُذْ جَمَلَكَ وَلَكَ ثَمَنُهُ
நான் நபி ﷺ அவர்களுடன் ஒரு போரில் (பங்கு கொண்டு விட்டுத் திரும்பி
வந்து கொண்டு) இருந்தேன். அப்போது எனது ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப்
பின்தங்க வைத்துவிட்டது. நபி ﷺ அவர்கள் என்னிடம் வந்து, ஜாபிரா? என்று கேட்டார்கள். நான், ஆம்! என்றேன். என்ன
விஷயம் (ஏன் பின்தங்கி விட்டீர்)? என்று கேட்டார்கள். என்
ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கி விட்டேன் என்றேன். நபி ﷺ அவர்கள் கீழே இறங்கி தலைப்பகுதி வளைந்த ஒரு கைத்தடியால்
எனது ஒட்டகத்தைத் தட்டி(எழுப்பி)னார்கள். பிறகு (உமது வாகனத்தில்) ஏறுவீராக!
என்றார்கள்.
நான் (வாகனத்தில்)
ஏறினேன். நபி ﷺ
அவர்களை விட எனது ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபி ﷺ அவர்கள், நீர் மணமுடித்து விட்டீரா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். கன்னியையா? கன்னிகழிந்த பெண்ணையா?
என்று கேட்டார்கள். கன்னிகழிந்த பெண்ணைத்தான் என்று நான்
கூறினேன். நபி ﷺ
அவர்கள்,
கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் கூடிக்குலாவி மகிழலாமே! என்று கூறினார்கள்.
நான், எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர்! அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி,
அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும்
என்று விரும்பினேன் என்றேன்.
நபி ﷺ அவர்கள், இப்போது ஊருக்கு
செல்லப்போகிறீர்! ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்து கொள்வீராக! நிதானத்துடன்
நடந்து கொள்வீராக என்று கூறிவிட்டு பின்னர், உமது ஒட்டகத்தை எனக்கு
விற்று விடுகிறீரா?
என்று கேட்டார்கள். நான், சரி (விற்று விடுகிறேன்) என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஒரு ஊக்கியா எடை (தங்கத்து)க்குப் பகரமாக அதை வாங்கிக் கொண்டார்கள். பிறகு, எனக்கு முன்பே நபி ﷺ
அவர்கள் (மதீனாவுக்கு) சென்று விட்டார்கள்.
நான் மறுநாள்
சென்றடைந்தேன். நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் நபி ﷺ அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். இப்போதுதான்
வருகிறீரா?
என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் ஆம்!
என்றேன். உமது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!
என்று சொன்னார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று
தொழுதேன். நபி ﷺ
அவர்கள் எனக்காக ஒரு ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
எனக்காக பிலால் (ரலி) அவர்கள் எடைபோட்டு சற்று தாராளமாகவே நிறுத்தார்கள். பிறகு
நான் திரும்பிச் சென்று விட்டேன்.
அப்போது நபி ﷺ அவர்கள், ஜாபிரை என்னிடம் அழைத்து
வாரும்! என்றார்கள். நான் (மனதிற்குள்) இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டுவிடும்; அதை விட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை என்று கூறிக் கொண்டேன். நபி ﷺ அவர்கள், உமது ஒட்டகத்தை எடுத்துக்
கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக! என்று சொன்னார்கள். (
நூல் : புகாரி )
இன்னொரு
அறிவிப்பில்...
حَدَّثَنَا
ثَابِتٌ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ مُحَارِبٍ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ
عَنْهُ، أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي المَسْجِدِ،
فَقَضَانِي وَزَادَنِي
பள்ளிவாசலில்
இருந்த நபி ﷺ அவர்களிடம் நான் சென்றேன். எனக்கு
(என்னிடம் வாங்கிய ஒட்டகத்தின் விலையைச்) செலுத்தி எனக்கு அதிகமாகவும் தந்தார்கள்.
( நூல் : புகாரி )
சற்றேறக்குறைய
நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் ஜாபிர் (ரலி) அவர்களின் வாழ்க்கைத்தரம்
உயர்ந்ததோடு அவரின் பங்களிப்பை சமூகம் "முஃஜிஸாவின் - பேரற்புதத்தின்"
துணையோடு அனுபவித்ததை வரலாறு வாகாய் பதிவு செய்துள்ளது.
இஸ்லாமிய
வரலாற்றில் அகழ்ப்போர் மிகவும் நெருக்கடியான கால சூழலில் நடைபெற்ற ஒரு போராகும்.
மாநபி ﷺ அவர்கள் உட்பட மாநபித் தோழர்கள் அனைவரும் நாட்கணக்கில்
பசியோடு இருந்த கால கட்டமாகும்.
கையிருப்பில்
இருந்த உணவு கூட உண்பதற்கு தகுதியில்லாத கெட்டுப் போன உணவுகளாகும். ஆனாலும், பசிக் கொடுமையால் அதை சகித்துக் கொண்டு சாப்பிட்டதாக வரலாறு
சான்றுரைக்கின்றது.
فكانوا
يُؤْتَوْنَ بِمِلْءِ كَفِّي مِنْ الشَّعِيرِ فَيُصْنَعُ لَهُمْ بِإِهَالَةٍ
سَنِخَةٍ تُوضَعُ بَيْنَ يَدَيْ الْقَوْمِ، وَالْقَوْمُ جِيَاعٌ، وَهِيَ بَشِعَةٌ
فِي الْحَلْقِ وَلَهَا رِيحٌ مُنْتِنٌ !!" البخاري
அனஸ் (ரழி)
கூறுகிறார்கள்: (அகழ் தோண்டிக் கொண்டிருக்கும்) அவர்களுக்கு எனது ஒரு கையளவு
வாற்கோதுமை கொண்டு வரப்பட்டு, கெட்டுப் போன கொழுப்புடன்
சேர்த்துச் சமைக்கப்பட்டு அந்த மக்களுக்கு முன் வைக்கப்படும். அப்போது அவர்கள்
எல்லாரும் பசியுடன் இருப்பார்கள். அந்தக் கெட்டுப்போன கொழுப்பு நாற்றமடித்தபடி
தொண்டையிலேயே சிக்கிக் கொள்ளும். ( நூல் : புகாரி )
عن أبي
طلحة قال : شكونا إلى رسول الله صلى الله عليه وسلم الجوع ورفعنا عن بطوننا عن حجر
حجر ; فرفع رسول الله صلى الله عليه وسلم عن حجرين . خرجه أبو عيسى الترمذي
அபூ தல்ஹா (ரழி)
அறிவிக்கிறார்கள் : எங்களின் பசியைப் பற்றி நாங்கள் நபி ﷺ அவர்களிடம் முறையிட்டோம். எங்களது வயிற்றில் ஒரு
கல்லைக் கட்டி இருந்ததைக் காட்டினோம். நபி ﷺ அவர்களோ தங்களது வயிற்றில் இரண்டு கற்கள் கட்டி
இருந்ததைக் காட்டினார்கள். ( நூல் : திர்மிதீ )
أن جابر
بن عبد الله رضي الله عنهما يحدثنا فيقول: (لما حفر الخندق رأيت بالنبي صلى الله
عليه وسلم خمصا (جوعا) شديدا، فانكفأت (رجعت) إلى امرأتي، فقلت: هل عندك شيء؟ فإني
رأيت برسول الله صلى الله عليه وسلم خمصا شديدا، فأخرجت إلي جرابا فيه صاع من شعير
ولنا بهيمة داجن (شاة في البيت) فذبحتها، وطحنت الشعير، ففرغت إلى فراغي وقطعتها
في برمتها، ثم وليت إلى رسول الله صلى الله عليه وسلم، فقالت: لا تفضحني برسول
الله صلى الله عليه وسلم وبمن معه. فجئته فساررته (كلمته سرا بصوت منخفض)، فقلت:
يا رسول الله ذبحنا بهيمة لنا، وطحنا صاعا من شعير كان عندنا، فتعال أنت ونفر معك،
فصاح النبي صلى الله عليه وسلم وقال: يا أهل الخندق! إن جابرا قد صنع لكم سؤرا
(بقية طعام) فحيهلا بكم (هلموا مسرعين)، وقال رسول الله صلى الله عليه وسلم: لا
تنزلن برمتكم (قدركم)، ولا تخبزن عجينتكم حتى أجيء، فجئت وجاء رسول الله صلى الله
عليه وسلم يقدم الناس حتى جئت امرأتي، فقالت: بك وبك (أي عتبت عليه)، فقلت: قد
فعلت الذي قلت لي.. فأخرجت له عجينتنا فبصق فيه وبارك، ثم عمد إلى برمتنا فبصق
فيها وبارك، ثم قال: ادعي خابزة فلتخبز معك، واقدحي (اغرفي) من برمتكم ولا
تنزلوها، وهم ألف .. فأقسم بالله لقد أكلوا حتى تركوه وانحرفوا (شبعوا وانصرفوا)،
وإن برمتنا لتغط (تغلي وتفور من الامتلاء) كما هي، وإن عجيننا ليخبز كما هو) رواه
البخاري.
ஜாபிர் பின்
அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :(போருக்காக) அகழ் தோண்டப்பட்டுக்
கொண்டிருந்த போது நபி ﷺ
அவர்களின் வயிறு (பசியினால்) மிகவும் ஒட்டியிருப்பதைக் கண்டேன். உடனே நான்
திரும்பி என் மனைவியிடம் வந்து, நபி ﷺ அவர்களின் வயிறு மிகவும் ஒட்டிப் போயிருப்பதைக்
கண்டேன். உன்னிடம் ஏதேனும் (உண்ண) இருக்கிறதா? என்று கேட்டேன். உடனே
என்னிடம் என் மனைவி ஒரு பையைக் கொண்டு வந்தாள். அதில் ஒரு ஸாவு' அளவு வாற்கோதுமையிருந்தது. வீட்டில் வளரும் ஆட்டுக் குட்டி ஒன்றும் எங்களிடம்
இருந்தது. அதை நான் அறுத்தேன். என் மனைவி அந்தக் கோதுமையை அரைத்தாள். நான்
(அறுத்து) முடிக்கும் போது அவளும் (அரைத்து) முடித்து விட்டாள். மேலும் அதனைத்
துண்டுகளாக்கி அதற்கான சட்டியிலிட்டேன்.
அல்லாஹ்வின் தூதர்
ﷺ அவர்களிடம் திரும்பி வந்தேன். (நான் புறப்படும் போது
என் மனைவி,)
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் முன்னால்
என்னை நீங்கள் கேவலப் படுத்திவிட வேண்டாம். (உணவு கொஞ்சம் தானிருக்கிறது' என்று கூறிவிடுங்கள்) என்று சொன்னாள். நான் நபி ﷺ அவர்களிடம் வந்து இரகசியமாக, அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குச் சொந்தமான ஆட்டுக் குட்டியொன்றை
அறுத்து,
எங்களிடம் இருந்த ஒரு ஸாவு' அளவு வாற்கோதுமையை அரைத்தும் வைத்துள்ளோம். எனவே, தாங்களும் தங்களுடன் ஒரு சிலரும் (என் இல்லத்திற்கு) வாருங்கள் என்று
அழைத்தேன்.
அப்போது நபி ﷺ அவர்கள் உரத்த குரலில், அகழ்வாசிகளே! ஜாபிர் உங்களுக்காக உணவு தயாரித்துள்ளார். எனவே, விரைந்து வாருங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் (ஜாபிர் -ரலி- அவர்களிடம்), நான் வரும் வரை நீங்கள் சட்டியை (அடுப்பிலிருந்து) இறக்க வேண்டாம். உங்கள்
குழைத்த மாவில் ரொட்டி சுடவும் வேண்டாம் என்று கூறினார்கள். நான் திரும்பி
வந்தேன். அல்லாஹ்வின் தூதர் ﷺ
அவர்கள் (மக்களை அழைத்துக் கொண்டு) அவர்களுக்கு முன்னால் வந்து கொண்டிருந்தார்கள்.
நான் மனைவியிடம் வந்து சேர்ந்தேன். (நபி ﷺ- அவர்கள் தோழர்கள் பலருடன் வருவதைப் பார்த்து என் மனைவி
கோபமுற்று) என்னைக் கடிந்து கொண்டாள். உடனே நான், நீ நபி ﷺ அவர்களிடம் சொல்லச் சொன்ன விஷயத்தை
நான் (அவர்களிடம்) சொல்லிவிட்டேன் என்று கூறினேன்.
பிறகு நபி ﷺ அவர்களிடம் என் மனைவி குழைத்த மாவைக் கொடுத்தாள். நபி ﷺ அவர்கள் அதில் (தமது திரு வாயினால்) ஊதினார்கள். மேலும், மாவில் பரக்கத் - பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு, எங்கள் இறைச்சிச் சட்டியை நோக்கி வந்தார்கள்.
பிறகு அதில்
வாயால் ஊதி பரக்கத் - பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு நபி ﷺ அவர்கள், (என் மனைவியை
நோக்கி),
ரொட்டி சுடுபவள் ஒருத்தியை (உதவிக்கு) அழை. அவள் என்னோடு
ரொட்டி சுடட்டும். உங்களுடைய பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக் கொடுத்துக் கொண்டிரு.
பாத்திரத்தை இறக்கி வைத்து விடாதே என்று கூறினார்கள் அங்கு (வந்தவர்கள்) ஆயிரம்
பேர் இருந்தனர்.
ஜாபிர் (பின்
அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள்
அனைவரும் சாப்பிட்டுவிட்டு,
அந்த உணவை விட்டுத் திரும்பிச் சென்றனர். அப்போது எங்கள்
சட்டி நிறைந்து சப்த மெழுப்பியவாறு கொதித்துக் கொண்டிருந்தது. அது (கொஞ்சமும்
குறையாமல்) முன்பிருந்தது போலவே இருந்தது. மேலும், எங்கள் குழைத்த மாவும் (கொஞ்சமும் குறைந்து விடாமல்) முன்பு போலவே ரொட்டியாகச்
சுடப்பட்டுக் கொண்டிருந்தது. ( நூல்: புகாரி )
அடுத்த மூன்று
ஆண்டுகளில் செல்வம் கொழிக்கும் செல்வந்தராக மாறிப் போனார் ஜாபிர் இப்னு
அப்துல்லாஹ் ரலி அவர்கள்.
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا هِشَامٌ، - يَعْنِي الدَّسْتَوَائِيَّ - عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ اشْتَكَيْتُ وَعِنْدِي سَبْعُ أَخَوَاتٍ فَدَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَنَفَخَ فِي وَجْهِي فَأَفَقْتُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَلاَ أُوصِي لأَخَوَاتِي بِالثُّلُثِ قَالَ " أَحْسِنْ " . قُلْتُ الشَّطْرَ قَالَ " أَحْسِنْ " . ثُمَّ خَرَجَ وَتَرَكَنِي فَقَالَ " يَا جَابِرُ لاَ أُرَاكَ مَيِّتًا مِنْ وَجَعِكَ هَذَا وَإِنَّ اللَّهَ قَدْ أَنْزَلَ فَبَيَّنَ الَّذِي لأَخَوَاتِكَ فَجَعَلَ لَهُنَّ الثُّلُثَيْنِ " . قَالَ فَكَانَ جَابِرٌ يَقُولُ أُنْزِلَتْ هَذِهِ الآيَةُ فِيَّ { يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلاَلَةِ } .
ஜாபிர் (ரழி)
அவர்கள் அறிவித்தார்கள்: "நான் நோய்வாய்ப்பட்டேன்; என்னிடம் ஏழு சகோதரிகள் இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் என்னிடம் வந்து என் முகத்தில் ஊதினார்கள் (தமது
அருள்மிகு உமிழ்நீருடன்). அதனால் நான் சுயநினைவு பெற்றேன் (அல்லது குணமடைந்தேன்).
நான்,
"அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரிகளுக்கு (என் சொத்தில்)
மூன்றில் ஒரு பங்கை நான் வஸிய்யத் செய்யலாமா?" என்று கேட்டேன். நபி ﷺ
அவர்கள்,
"நன்மை செய்யுங்கள் (அதாவது, நல்லதைச் செய்யுங்கள் அல்லது பொறுத்திருங்கள்)" என்று கூறினார்கள். நான், "பாதியை?"
என்று கேட்டேன். நபி ﷺ அவர்கள், "நன்மை செய்யுங்கள் (அதாவது, நல்லதைச் செய்யுங்கள்
அல்லது பொறுத்திருங்கள்)" என்று கூறினார்கள். பின்னர் நபி ﷺ அவர்கள் என்னை விட்டுச் சென்றபோது கூறினார்கள்:
"ஜாபிரே! உமது இந்த நோயால் நீர் இறப்பீர் என்று நான் கருதவில்லை. நிச்சயமாக
அல்லாஹ் (இறை வெளிப்பாட்டை) அருளி, உமது சகோதரிகளின்
(அவர்களின் பங்கை) தெளிவுபடுத்திவிட்டான். அவர்களுக்கு (வாரிசுரிமையாக) மூன்றில்
இரண்டு பங்கை அவன் ஆக்கியுள்ளான்."
ஜாபிர் (ரழி)
அவர்கள் கூறுவார்கள்: "{யஸ்தஃப்தூனக்க குலில்லாஹு
யுஃப்தீக்கும் ஃபில் கலாலா}
(அவர்கள் உம்மிடம் தீர்ப்பு கேட்கிறார்கள். நீர் கூறும்:
அல்லாஹ் கலாலா (உறவினர்கள்) விஷயத்தில் உங்களுக்குத் தீர்ப்பளிக்கிறான்.)"
எனும் இவ்வசனம் என் விஷயத்தில்தான் அருளப்பெற்றது. ( நூல்: சுனன் அபூதாவூத் )
حَدَّثَنَا
إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا عِيسَى، – وَهُوَ ابْنُ
يُونُسَ – حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ :
أَنَّ آخِرَ سُورَةٍ أُنْزِلَتْ تَامَّةً سُورَةُ التَّوْبَةِ وَأَنَّ آخِرَ آيَةٍ
أُنْزِلَتْ آيَةُ الْكَلاَلَةِ
நபி ﷺ அவர்களுக்கு இறுதியாக அருளப் பெற்ற (குர்ஆன்)
அத்தியாயம் பாரஅத் எனும் (9ஆவது) அத்தியாயமாகும். (பாகப் பிரிவினை தொடர்பாக) இறுதியாக இறங்கிய வசனம்
(நபியே) உங்களிடம் மக்கள் தீர்ப்புக் கேட்கிறார்கள் எனும் (இந்த 4 :176 ஆவது) வசனமாகும்" என்று பர்ராவு இப்னு ஆஸிப் ரலி அவர்கள்
அறிவித்தார்கள். ( நூல்: புகாரி )
கடைநிலையில்
உள்ளவர்களை பொறுப்பேற்றுக் கொண்டு அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர இக்லாஸாக நாம்
செய்யும் உதவிகளுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வழங்கும் பிரதிபலன் வார்த்தையால்
விவரிக்க முடியாததாகும்.
கடனாளியாக இருந்த
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரலி அவர்கள் செல்வந்தரானார். தமது சொத்துக்களை எப்படி
பங்கீடு செய்வது?
என்று வினா எழுப்பி இறை வசனம் இறக்கியருளி விளக்கம் தரும்
அளவுக்கு தன்வந்தர்களில் ஒருவரானார்.
இந்த ஈத் பெருநாள்
சிந்தனையாக நாம் இந்த மகத்தான சிந்தனையை இங்கிருந்து எடுத்துச் செல்வோம்! ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர பொறுப்பேற்றுக் கொள்வோம்!! வல்ல ரஹ்மான் நமது
வாழ்வில் பல ஈதுகளைத் தந்து குடும்பம் சகிதமாக மகிழ்ச்சியுடன் வாழ அருள்
புரிவானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
