Thursday, 9 July 2026

மஹர் - மணக்கொடையை மனமுவந்து வழங்குவோம்!!!

 

மஹர் - மணக்கொடையை மனமுவந்து வழங்குவோம்!!!



முஸ்லிம் சமூகத்தில் சமீபத்திய காலங்களில் வரதட்சணை வாங்கும்/கொடுக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து மணமகளுக்கு மஹர் - மணக்கொடை கொடுத்து திருமணம் முடிக்கும் பழக்கம் பெருகி வருகிறது.

அதிலும் கடந்த காலங்களில் ஐநூற்றி ஒரு ரூபாய், ஆயிரத்து ஒரு ரூபாய் என்று மஹர் கொடுத்து வந்த பழக்கம் மாறிப் போய் 4 கிராமுக்கும் குறையாமல் 100 கிராம் வரை அவரவர் தகுதிக்கும் வசதிக்கும் ஏற்ப தங்க ஆபரணங்கள் மஹராக வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டாவில் பார்த்த ஒரு தகவல் அடுத்த தலைமுறையினரின் மஹர் வாங்கும் மற்றும் கொடுக்கும் பழக்கம் என்பது இன்னொரு தளத்திற்கு இஸ்லாத்தின் தத்துவங்களை எடுத்துச் செல்வதாய் அமைந்திருந்ததை அவதானிக்க முடிகின்றது.

ஈரானைச் சார்ந்த ஒரு மருத்துவம் படித்த மணமகள் ஒருவர் தமக்கு நிச்சயம் செய்த மருத்துவர் (அறுவை சிகிச்சை நிபுணர்) மணமகனிடம் 313 ஏழைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்வதை மஹராக கேட்டுள்ளார். என்ற இந்த தகவல் உள்ளபடியே மகளிர்க்கு இஸ்லாம் வழங்கியுள்ள மஹரின் வலிமையை உணர்த்துவதாய் அமைந்ததை உணர முடிந்தது.

இந்த தகவலோடு வேறேதும் வித்தியாசமான மஹர் பெறப்பட்டுள்ளதா? என்று கூகுள் தேடுபொறியில் தேடும் போது கேரளாவைச் சேர்ந்த ஒரு மணமகன் தனது கையால் எழுதிய குர்ஆன் பிரதியை தமது மனைவிக்கு மஹராக கொடுத்த தகவலை பார்க்க நேர்ந்தது.

நியூஸ் 18 தமிழ், ஏபிபி நெட்வொர்க் மற்றும் கலைஞர் தொலைக்காட்சி போன்ற முன்னணி செய்தி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ள தற்போது, சன் தொலைக்காட்சியில் (Sun News) செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வருகிற சலினா ஹஸ்மா என்ற மணாளி தமது திருமணத்தின் போது தமக்கு மஹராக - மணக்கொடையாக சில நூல்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை தமக்கு மணமகனாக (மணமகள் தேர்வு) நிச்சயம் செய்யப்பட்ட ஊடகவியலாளரும், சென்னை ஐஐடியில் ஆய்வுக்கல்வி மேற்கொண்டு வருபவருமான இல்யாஸ் முஹம்மது மணாளரிடம் வழங்க, அவரும் திருமணத்தன்று 57 நூல்களை மஹராக கொடுத்து (இல்யாஸ் வழங்கிய மஹரில் திருக்குர்ஆன் தொடர்பான புத்தகங்கள், தந்தை பெரியார் தொடர்பான புத்தகங்கள், கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட புத்தகங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்பி சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாறி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் எழுதிய அமைப்பாய்த் திரள்வோம் என 57 புத்தகங்கள் இடம்பெற்று இருந்தது) திருமணம் செய்தார்" என்ற தகவலையும் காண முடிந்தது.

பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளில் மகத்தான உரிமை மஹர் பெறுகிற உரிமையாகும்.

மணப் பெண்ணே மஹர் பெறுவதற்கு தகுதியானவர் ஆகிறார். அவரின் அனுமதி இல்லாமல் அதை யாரும் பெற்றுக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதில் இருந்து மஹரின் மகத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

மஹர் வழங்குவது அவசியம் ஆகும்...

மஹர் வழங்குவதை நேரடியாக பேசுகிற வசனங்கள் மூன்று.

وَالْمُحْصَنَاتُ مِنَ النِّسَاءِ إِلَّا مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ كِتَابَ اللَّهِ عَلَيْكُمْ وَأُحِلَّ لَكُمْ مَا وَرَاءَ ذَلِكُمْ أَنْ تَبْتَغُوا بِأَمْوَالِكُمْ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ فَمَا اسْتَمْتَعْتُمْ بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا تَرَاضَيْتُمْ بِهِ مِنْ بَعْدِ الْفَرِيضَةِ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا

உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். ( அல்குர்ஆன்: 4: 24 )

ஏதேனும் பொருட்களைக் கொடுத்து திருமணம் முடிக்க வேண்டும் என்றும், மணக் கொடைகளை அவசியம் வழங்க வேண்டும் என்றும் இறைவன் கட்டளையிடுகின்றான்.

الْيَوْمَ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ وَطَعَامُ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ حِلٌّ لَكُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَهُمْ وَالْمُحْصَنَاتُ مِنَ الْمُؤْمِنَاتِ وَالْمُحْصَنَاتُ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ وَلَا مُتَّخِذِي أَخْدَانٍ وَمَنْ يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ

நம்பிக்கை கொண்ட கணவனில்லாத பெண்களையும், உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்ட கணவனில்லாத பெண்களையும் வைப்பாட்டிகளாக்கிக் கொள்ளாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்புநெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக்கொடைகளை வழங்கி மணமுடிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

( அல்குர்ஆன்: 5: 5 )

கணவனில்லாத/விவாகரத்தான பெண்களை மணக்கும் போதும் கூட மஹர் தொகையை வழங்கியே திருமணம் முடிக்க வேண்டும் என்று மேற்கூறிய வசனம் பாடம் குறிப்பிடுகின்றது.

وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَرِيئًا

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை (அவசியமாகக்) கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! ( அல்குர்ஆன்: 4: 4 )

மஹர் வழங்கி திருமணம் செய்வதே மரபு என்று சான்று பகரும் வசனமும் அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.

 

அல்குர்ஆனின் நீண்ட, அழகிய வரலாற்றுக்குச் சொந்தக்காரரான நபி மூஸா (அலை) அவர்களைப் பற்றியும், அவர்கள் திருமணம் முடிக்கின்ற நேரத்தில் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது பற்றியும் திருக்குர்ஆன் படம் பிடித்துக் காட்டுகின்றது.

நபி ஷுஐப் அலை அவர்கள் தங்களது மகள்கள் இருவரில் ஒருவரை நபி மூஸா அலை அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து திருமணம் தொடர்புடைய பேச்சை துவக்கும் போதே முதலில் மஹரைப் பற்றித் தான் பேசினார்கள்.

       மூஸா (அலை) அவர்களின் மண நிகழ்வைப் பற்றித் திருக்குர்ஆன் கூறும்போது,

قَالَ إِنِّي أُرِيدُ أَنْ أُنْكِحَكَ إِحْدَى ابْنَتَيَّ هَاتَيْنِ عَلَى أَنْ تَأْجُرَنِي ثَمَانِيَ حِجَجٍ فَإِنْ أَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ وَمَا أُرِيدُ أَنْ أَشُقَّ عَلَيْكَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّالِحِينَ (27) قَالَ ذَلِكَ بَيْنِي وَبَيْنَكَ أَيَّمَا الْأَجَلَيْنِ قَضَيْتُ فَلَا عُدْوَانَ عَلَيَّ وَاللَّهُ عَلَى مَا نَقُولُ وَكِيلٌ

எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மணமுடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்’’ என்று அவர் கூறினார். இதுவே எனக்கும், உமக்கும் இடையே உள்ள ஒப்பந்தம். இரண்டு காலக் கெடுகளில் எதை நான் நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை. நாம் பேசிக் கொண்டதற்கு அல்லாஹ்வே பொறுப்பாளன்’’ என்று (மூஸா) கூறினார். ( அல்குர்ஆன்: 28: 27, 28.)

இறுதியாக மூஸா (அலை) அவர்கள் செய்த ஒப்பந்தத்தை நிறைவு செய்து விட்டு, நபி ஷுஐப் அலை அவர்களின் மகளை திருமணம் செய்து அழைத்துச் சென்றார்கள்.

மஹர் என்பது எந்த அளவுக்கு மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதற்கு நபி அவர்கள் காலத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று சான்றாகும்.

لَمَّا قدِمنا المَدينةَ آخى رَسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم بَيني وبينَ سَعدِ بنِ الرَّبيعِ، فقال سَعدُ بنُ الرَّبيعِ: إنِّي أكثَرُ الأنصارِ مالًا، فأَقسِمُ لك نِصفَ مالي، وانظُرْ أيَّ زَوجَتَيَّ هَوِيتَ نَزَلتُ لك عَنها، فإذا حَلَّت تَزَوَّجتَها. قال: فقال له عبدُ الرَّحمَنِ: لا حاجةَ لي في ذلك، هل مِن سوقٍ فيه تِجارةٌ؟ قال: سوقُ قَينُقاعٍ. قال: فغَدا إليه عبدُ الرَّحمَنِ، فأتى بأقِطٍ وسَمنٍ، قال: ثُمَّ تابَعَ الغُدوَّ، فما لَبِثَ أن جاءَ عبدُ الرَّحمَنِ عليه أثَرُ صُفرةٍ، فقال رَسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم: تَزَوَّجتَ؟ قال: نَعَم، قال: ومَن؟ قال: امرَأةً مِنَ الأنصارِ، قال: كَم سُقتَ؟ قال: زِنةَ نَواةٍ مِن ذَهَبٍ -أو نَواةً مِن ذَهَبٍ- فقال له النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم: أولِمْ ولو بشاةٍ.

خلاصة حكم المحدث : [صحيح]

الراوي : عبدالرحمن بن عوف | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 2048

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி அவர்கள் என்னையும் சஅத் இப்னு ரபீஉ (ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சஅத் (ரலி), அவர்கள் ஒருநாள் என்னிடம் நான் அன்ஸாரிகளில் அதிகச் செல்வமுடையவன்; எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன். என் இரு மனைவியரில் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும்! அவரை உமக்காக விவாகரத்துச் செய்கிறேன். அவரது இத்தா முடிந்ததும் அவரை உமக்கு மணம் முடித்துத் தருகிறேன்!’’ எனக் கூறினார்.

அப்போது நான், “இது எனக்குத் தேவையில்லை! வியாபாரம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதும் (இங்கு) இருக்கிறதா?’’ எனக் கேட்டேன். அவர், “கைனுகா எனும் கடைவீதி இருக்கிறது!’’ என்றார். நான் அங்கே சென்று பாலாடைக் கட்டியையும் நெய்யையும் (லாபமாகக்) கொண்டு வந்தேன். மறுநாளும் தொடர்ந்து சென்றேன். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் (நான் வருவதைப் பார்த்த) நபி அவர்கள், “நீ மண முடித்து விட்டாயா?’’ என்று கேட்டார்கள்.

நான் ஆம்!’’ என்றேன். யாரை?’’ என்றார்கள். ஓர் அன்ஸாரிப் பெண்ணை!’’ என்றேன். எவ்வளவு மஹ்ர் (மணக்கொடை) கொடுத்தாய்?’’ என்று கேட்டார்கள். ஒரு பேரீச்சங்கொட்டை எடைக்குத் தங்கம்!’’ என்றேன். அப்போது நபி அவர்கள் ஓர் ஆட்டையேனும் (அறுத்து வலிமா-) மணவிருந்தாக அளிப்பாயாக!’’ என்றார்கள். (புகாரி:

இந்தச் செய்தியில் நபி அவர்கள் திருமணம் முடித்தாயா? என்று கேட்டதன் பின்னர், அவர் ஆம் என்றதும் அடுத்த கேள்வியே மஹர் எவ்வளவு? என்றுதான். 

இதிலிருந்து ஒரு ஆண் ஒரு பெண்ணைத் திருமணம் முடிப்பதாக இருப்பின் பெண்ணுக்குக் அவசியம் மஹரைக் கொடுத்துவிட வேண்டும் என்று தெரிகிறது.

அல்குர்ஆன் சூராக்களை கற்றுக் கொடுத்தலே மஹராக...

 قال الرسول - صلى الله عليه وسلم - للصحابي الذي لم يكن لديه شيءٌ، ولا خاتم من حديد: ((ماذا معك من القرآن؟))، فقال: معي سورة كذا وسورة كذا، لسور يعددها، فقال النبي - صلى الله عليه وسلم -: ((أَمْلَكْنَاكَهَا بما معك من القرآن))

மஹராக வழங்க தன்னிடம் எதுவும் இல்லை என்று சொன்ன நபித்தோழர் ஒருவரிடம் நபி அவர்கள் "நீர் ஏதேனும் சூராக்களை மனனமிட்டுள்ளீரா? என்று கேட்க, அவர் இன்னின்ன சூராக்கள் மனனமிட்டுள்ளேன் என்று கூற, அப்படி என்றால் அதை உமது மனைவிக்கு கற்றுக் கொடுத்து அதை மஹராக வழங்குவீராக! என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

 

وعن النبي - صلى الله عليه وسلم - قال لرجل من أصحابه: ((يا فلان، هل تزوجتَ؟))، قال: لا، وليس عندي ما أتزوج، قال: ((أليس معك: ﴿ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ﴾؟))، قال: بلى، قال: ((ربع القرآن، أليس معك: ﴿ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ﴾؟))، قال: بلى، قال: ((ربع القرآن، قال: أليس معك ﴿ إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ ﴾؟))، قال: بلى، قال: ((ربع القرآن، تزوَّجْ تزوَّج تزوج))

ஒரு நபித்தோழரிடம் நபி அவர்கள் நீர் மணம் முடித்து விட்டீரா? என்று கேட்க, அவரோ அல்லாஹ்வின் தூதரே! திருமணம் முடிக்க என்னிடம் எதுவும் இல்லை என்று கூற, உமக்கு சூரா இக்லாஸ் மனனமாக தெரியுமா? என்று கேட்க, அவர் ஆம் என்றார். அப்படி எனில், அது குர்ஆனின் நான்கில் ஒரு பகுதியாகும்" என்று கூறினார்கள். பின்னர் சூரா காஃபிரூன் மனனமாக தெரியுமா? என்று கேட்க, அவர் ஆம் என்றார். அப்படி எனில், அது குர்ஆனின் நான்கில் ஒரு பகுதியாகும்" என்று கூறினார்கள்.

பின்னர் சூரா அஸ் ஸில்ஸால் மனனமாக தெரியுமா? என்று கேட்க, அவர் ஆம் என்றார். அப்படி எனில், அது குர்ஆனின் நான்கில் ஒரு பகுதியாகும்" என்று கூறிவிட்டு, அதையே மணமகளுக்கு மஹராக வழங்குவீராக! என்று நபி அவர்கள் கூறினார்கள். ( நூல்: பைஹகீ )

ஒரு தடவை நபி அவர்களிடம் வந்து ஒரு இளைஞர் "நான் மணம் செய்யப்போகின்றேன்.ஆனால் என்னிடம் மஹராக கொடுக்க எதுவுமே இல்லை.நான் அணிந்திருக்கும் இந்த ஒரே ஒரு வேட்டியத்தவிர.அதனால் இந்த வேட்டியை கிழித்து ஒரு பகுதியை என் மனைவிக்கு மஹராக கொடுக்கவா" என்றார்.

இதனைக்கேட்ட நபி அவர்கள் "வேண்டாம் கிழித்தீர்களானால் இருவருமே உபயோகிக்க முடியாததாகி விடும்.நான் ஒன்று சொல்கின்றேன்.உமக்கு குர் ஆன் ஷரீபில் எந்த சூராவாவது மனனம் செய்துவைத்திருக்கின்றீரா?"என்று கேட்டதும் அவ்விளைஞர் "ஆம்" என்றார்.

உடனே நபி அவர்கள் "சரி நீர் மனனம் செய்த சூராக்களை உமது மனைவிக்கும் கற்றுக்கொடும்.நீர்கற்றுக்கொடுத்து, கற்றுக்கொடுத்ததை மஹராக்கிக்கொள்ளும் "என்று கூறி அனுப்பிவைத்தார்கள்.

500 திர்ஹம்கள் மஹராக...

اثنتا عشْرةَ أوقية، وهو ما يعادل خمسمائة درهم، وهو أعلى ما وصل إليه مهر زوجاتِ وبنات النبي - صلى الله عليه وسلم - فعن عائشةَ - رضي الله عنها - قالت: "كان صداقُه لأزواجه ثنتي عشْرة أوقية ونشًّا، قالت: أتدري ما النَّشُّ؟ قال: قلت: نصف أوقية، فتلك خمسمائة درهم"

நபி அவர்கள் தமது மனைவிமார்களுக்கு 500 திர்ஹம்களுக்கு ஈடான பன்னிரெண்டரை ஊக்கியா வை மஹராக வழங்கினார்கள் என்று அன்னை ஆயிஷா ரலி அவர்கள் அறிவித்தார்கள். ( நூல்: புகாரி ) ( ஒரு ஊக்கியா என்பது 40 திர்ஹம்களுக்கு ஈடாகும்)

பேரீத்தம் பழ கொட்டை அளவு தங்கம் மஹராக....

 

عن أنس بن مالك:أن النبيَّ - صلى الله عليه وسلم - رأى على عبدِالرحمن بن عوف أثَرَ صُفرةٍ، فقال: ((ما هذا؟))، قال: يا رسول الله، إني تزوَّجْتُ امرأةً على وزن نواة من ذهب، قال: ((فبارَك الله لك، أولِمْ ولو بشاةٍ)) 

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலி அவர்களிடம் நபி அவர்கள் திருமணம் செய்து விட்டீர்களா என்று கேட்டு விட்டு, எவ்வளவு மஹர் கொடுத்தீர்கள் என்று கேட்ட போது தங்கத்தின் சிறிய அளவு மஹராக கொடுத்தேன் என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

 160 திர்ஹம்கள் மஹராக....

 ففي الحديث: ((على كم تزوَّجْتَها؟))، قال: على أربع أواق، فقال له النبي - صلى الله عليه وسلم -: ((على أربع أواق؟! كأنما تنحتون الفضة من عُرْضِ هذا الجبل)) ، وهذا دليل على معاتبة النبي - صلى الله عليه وسلم - من دفَع من المهر فوق طاقته

நடுத்தர வசதியுள்ள ஒரு நபித்தோழரிடம் நபி அவர்கள் எவ்வளவு மஹர் கொடுத்தீர்கள் என்று கேட்ட போது, அவர் நான்கு ஊக்கியா என்று கூற, அருகில் உள்ள மலையை சுட்டி காட்டி இது அளவு வெள்ளியை வழங்க வேண்டியது தானே என்று கண்டிப்புடன் கூறினார்கள். அதாவது அவர் சக்திக்கு மீறி மஹர் வழங்கினார். ( நூல்: முஸ்லிம் )

இரும்பு மோதிரம் மஹராக....

: عندما جاءت امرأةٌ إلى النبي - صلى الله عليه وسلم - تعرض عليه النكاح، قام أحد الصحابة يُريدُ نكاحًا، فقال له: ((التمس ولو خاتمًا من حديد))

நபி அவர்களிடம் ஒரு பெண் தம்மை நபி அவர்களை திருமணம் செய்து கொள்ளுமாறு சொன்ன போது சபையில் இருந்த ஒரு நபித்தோழர் தாம் அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக கூறிய போது நபி அவர்கள் ஒரு இரும்பு மோதிரம் மஹராக வழங்கியாவது திருமணம் செய்து கொள்வீராக! என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

       காலணிகள் மஹராக....

روى عامر بن ربيعة - رضي الله عنه - عن أبيه أن امرأةً من بني فزارة تزوَّجَت على نعلين، فجيء بها إلى النبيِّ - صلى الله عليه وسلم - فقال لها: ((أرضيتِ من نفسك ومالك بنعلينِ؟))، فقالت: نعم، فأجازه النبيُ - صلى الله عليه وسلم 

பனீ ஃபஸாரா குலத்தை சேர்ந்த ஒரு பெண்மணி மணமகன் தமக்கு ஒரு ஜோடி செருப்பை மஹராக வழங்கி திருமணம் செய்ததாக கூறிய போது நபி அவர்கள் உமக்கு இந்த மஹர் திருப்தி தானா? என்று கேட்க, அந்த பெண்மணி ஆம் என்று கூறிடவே, நபி அவர்கள் அந்த மஹரை அங்கீகரித்தார்கள். ( நூல்: திர்மிதீ )

அடிமையை உரிமை விடுதலே மஹராக....

كان أنسُ بن مالك - رضي الله عنه - يقول: "سبى النبيُّ - صلى الله عليه وسلم - صفيَّةَ، فأعتقها، وتزوجها، فقال ثابت لأنس: ما أصدَقَها؟ قال: أصدقها نفسها، فأعتقها"، وذكر ابن حجر: أن صفية - رضي الله عنها - قالت: "أعتقني النبي - صلى الله عليه وسلم - وجعَل عِتقي صداقي"، قال ابن الصلاح: معناه أن العتق يحل محل الصداق، وإن لم يكن صداقًا، وقال ابن الجوزي: فإن قيل: ثواب العتق عظيم، فكيف فَوَّتَهُ حيث جعله مهرًا، وكان يمكن جعل المهر غيره؟ فالجواب: أن صفيةَ بنتُ ملِكٍ، ومثلها لا يقنع إلا بالمهر الكثير، ولم يكن عنده - صلى الله عليه وسلم - إذ ذاك ما يُرضيها به، ولم يُرِدْ أن يقصر فجعل صداقها نفسها، وذلك عندها أشرفُ من المال الكثير

நபி அவர்கள் ஸஃபிய்யா ரலி அவர்களை ஒரு போரின் போது கைதியாக பெற்றுக் கொண்டார்கள். ஸ்ஃபிய்யா ரலி அவர்களை உரிமை விட்டு, அந்த உரிமையை மஹராக வழங்கி திருமணம் செய்து கொண்டார்கள். ( நூல்: புகாரி )

 இஸ்லாமே மஹராக.....

عن أنس - رضي الله عنه - قال: "خطب أبو طلحةَ أمَّ سُليم، فقالت: والله ما مِثلك يا أبا طلحة يُرَد، ولكنك رجل كافر، وأنا امرأة مسلمة، ولا يحل لي أن أتزوَّجك، فإن تُسلم، فذاك مهري، وما أسأَلُك غيره، فأسلَم، فكان ذلك مهرَها"

அபூதல்ஹா ரலி அவர்கள் உம்மு ஸுலைம் ரலி அவர்களை திருமணம் செய்ய கோரிய போது நீர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அதையே நான் மஹராக ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறினார்கள். ( நூல்: நஸாயீ )

 போர்த் தளவாடங்களே மஹராக....

لما تزوج عليٌّ - رضي الله عنه - فاطمة - رضي الله عنها - قال له رسول الله - صلى الله عليه وسلم -: ((أعطِها شيئًا))، قال: ما عندي، قال: ((فأين دِرْعُك الحُطَمِيَّة؟))

அலீ ரலி அவர்கள் ஃபாத்திமா ரலி அவர்களை திருமணம் செய்த போது கேடயத்தையோ அல்லது கவச ஆடையையோ மஹராக வழங்கி திருமணம் செய்து கொண்டார்கள். ( நூல்: நஸாயீ )

இரண்டு திர்ஹம் மஹராக...

قال عبد الله بن سليمان : وكانت بنت سعيد بن المسيب خطبها عبد الملك بن مروان لابنه الوليد بن عبد الملك حين ولاه العهد فأبى سعيد أن يزوجه فلم يزل عبد الملك يحتال على سعيد حتى ضربه مائة سوط في يوم بارد وصب عليه جرة ماء وألبسه جبة صوف .

 قال عبد الله : وهي التي خطبها الخليفة عبدالملك بن مروان لابنه الوليد فأبى أن يزوجها والدها وقال: لا أفسد عليها دينها.... ثم زوجها لأحد طلابه اسمه ابو وداعة.

ஸயீதுப்னுல் முஸைய்யப் ரஹ் அவர்களின் மகளை அப்துல் மலிக் இப்னு மர்வான் தமது மகன் வலீத் இப்னு அப்துல் மலிக்கை அரியணையில் அமர வைத்த பிறகு பெண் கேட்டார்கள். ஸயீதுப்னுல் முஸைய்யப் ரஹ் அவர்கள் பெண் கொடுக்க மறுத்து விட்டார்கள். பெண் தர மறுக்கும் காரணத்தை அப்துல் மலிக் இப்னு மர்வான் கேட்ட போது எனது மகளின் தீன் பாழாய் போவதை தவிர்க்கவே உமது மகனுக்கு பெண் தர மறுப்பதாக ஸயீதுப்னுல் முஸைய்யப் ரஹ் அவர்கள் கூறினார்கள். இதன் பின்னரும் தொடர்ந்து தமது மகனுக்கு பெண் கேட்ட அப்துல் மலிக் இப்னு மர்வான் ஒரு கட்டத்தில் ஸயீதுப்னுல் முஸைய்யப் ரஹ் அவர்களின் மறுப்பு அதிகரிக்கவே நூறு சவுக்கடி தண்டனை வழங்கினார். பின்னர் தமது மகளை தமது மாணவர் அபீ வதாஆ அவர்களுக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள்.

عن ابن أبي وداعة ، قال : كنت أجالس سعيد بن المسيب ففقدني أياما فلما جئته قال : أين كنت ؟ قال : توفيت أهلي فاشتغلت بها ، فقال : ألا أخبرتنا فشهدناها ، قال : ثم أردت أن أقوم فقال : هل استحدثت امرأة ، فقلت : يرحمك الله ومن يزوجني وما أملك إلا درهمين أو ثلاثة 

ஸயீதுப்னுல் முஸைய்யப் ரஹ் அவர்கள் தங்களது மகளை தமக்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வை அபீ வதாஆ அவர்களே கூறும் செய்தி பல்வேறு வரலாற்று நூல்களில் பதிவாகி உள்ளது.

அபீ வதாஆ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:- நான் ஸயீதுப்னுல் முஸைய்யப் ரஹ் அவர்களின் சபைக்கு சென்று பயிலும் மாணவர்களில் ஒருவராக இருந்தேன். தினமும் அவர்களின் வகுப்புக்கு சென்று வருவேன். எனது மனைவி இறந்து போனதன் காரணமாக சில நாட்கள் என்னால் வகுப்புக்கு செல்ல முடியவில்லை.

மீண்டும் வகுப்புக்கு சென்ற போது, வகுப்புக்கு வராததன் காரணம் குறித்து என்னிடம் வினவ, நான் காரணத்தை கூறினேன். அப்போது அவர்கள் "நீ எனக்கு தகவல் தந்திருந்தால் நானும் ஜனாஸா நல்லடக்கத்தில் பங்கேற்றிருப்பேனே?" என்று கூறினார்கள். சில நாட்கள் கழித்து மீண்டும் என்னிடம் "அபீ வதாஆவே! மறுமணம் செய்ய பெண் ஏதும் பார்த்துக் கொண்டுள்ளீரா?" என்று கேட்க, இனி எனக்கேது திருமணம்? எனக்கு யார் பெண் தருவார்? நானே இரண்டு அல்லது மூன்று திர்ஹம்களின் சொந்தக்காரனாக உள்ளேன்" என்றேன்.

، فقال : أنا ، فقلت : أوتفعل ، قال : نعم ، ثم حمد الله تعالى وصلى على النبي - صلى الله عليه وسلم - وزوجني على درهمين أو قال : ثلاثة قال : فقمت ولا أدري ما أصنع من الفرح ، فصرت إلى منزلي وجعلت أتفكر ممن آخذ وممن أستدين ، فصليت المغرب وانصرفت إلى منزلي واسترحت وكنت وحدي صائما ، فقدمت عشائي أفطر كان خبزا وزيتا ، فإذا بآت يقرع ، فقلت : من هذا ؟ قال : سعيد ، قال : فتفكرت في كل إنسان اسمه سعيد إلا سعيد بن المسيب ، فإنه لم ير أربعين سنة إلا بين بيته والمسجد فقمت فخرجت فإذا سعيد بن المسيب فظننت أنه بدا له ، فقلت : يا أبا محمد ألا أرسلت إلي فآتيك ،

அப்போது, இரண்டு அல்லது மூன்று திர்ஹம்களை மஹராகப் பெற்று நான் உமக்கு எனது மகளை திருமணம் செய்து தருகிறேன். என்று கூறினார்கள். அதற்கு நான் உண்மையாகவே திருமணம் செய்து தருவீர்களா? என்று கேட்டேன். ஆம் என்று கூறி, அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி அவர்களின் மீது ஸலவாத் சொல்லி இரண்டு அல்லது மூன்று திர்ஹம்களை மஹராகப் பெற்று எனக்கு திருமணம் செய்து தந்தார்கள். எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியால் அந்த தருணத்தில் நான் என்ன செய்தேன் என்றே எனக்குத் தெரியவில்லை. பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு வந்தேன். பிறகு மக்ரிப் மற்றும் இஷா தொழுதேன். அன்று நான் நோன்பு நோற்றிருந்தேன். எனவே, வீட்டுக்கு வந்து இரவு உணவு சாப்பிட ஆயத்தமாகி ரொட்டி மற்றும் ஜைத்தூன் எண்ணையை எடுத்து உணவு உண்ண அமர்ந்தேன். சாப்பிட்டு முடித்ததும் இரவு தூங்க தயாரானேன். வீட்டின் கதவை தட்டும் சப்தம் கேட்கவே, யார் என்று கேட்டேன். நான் தான் ஸயீத் என்று கதவுக்கு அந்தப் பக்கம் இருந்து சப்தம் வரவே, எனக்குத் தெரிந்து எனது ஆசிரியரைத் தவிர ஸயீத் எனும் பெயரில் வேறு யாரும் இல்லை. ஆகவே, கதவைத் திறந்தேன். அங்கே எனது ஆசிரியர் ஸயீதுப்னுல் முஸைய்யப் ரஹ் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது நான் நீங்கள் ஆளனுப்பி என்னை அழைத்திருந்தால் நானே வந்திருப்பேனே என்று கூறினேன். 

قال : لأنت أحق أن يؤتى ، قال : قلت : فما تأمر ، قال : إنك كنت رجلا عزبا فتزوجت فكرهت أن تبيت الليلة وحدك وهذه امرأتك فإذا هي قائمة من خلفه في طوله ، ثم أخذها بيدها فدفعها بالباب ورد الباب ، فسقطت المرأة من الحياء فاستوثقت من الباب ثم قدمتها إلى القصعة التي فيها الزيت والخبز ، فوضعتها في ظل السراج لكي لا تراه ثم صعدت إلى السطح فرميت الجيران ، فجاءوني فقالوا : ما شأنك ؟ قلت : ويحكم زوجني سعيد بن المسيب ابنته اليوم وقد جاء بها علي غفلة ، فقالوا : سعيد بن المسيب زوجك ؟ قلت : نعم ، وها هي في الدار ، قال : فنزلوا هم إليها وبلغ أمي فجاءت ، وقالت : وجهي من وجهك حرام إن مسستها قبل أن أصلحها إلى ثلاثة أيام ،

அதற்கு, எனது ஆசிரியர் உம்மைத் தேடி வரும் அளவுக்கு நீரும் தகுதியானவர் தான். என்று கூறினார்கள். அப்போது, நான் சொல்லுங்கள் ஆசிரியரே! நீங்கள் என்ன செய்யுமாறு சொல்கின்றீர்களோ நான் செய்கிறேன் என்றேன். அப்போது, என் ஆசிரியர் "நீர் புதுமாப்பிள்ளை உமக்கு எனது மகளை நான் திருமணம் செய்து தந்து விட்டேன். இனி நீர் தனியாக வீட்டில் தங்குவதை நான் விரும்பவில்லை. இதோ! என் மகளை (உமது மனைவியை) உடன் அழைத்து வந்துள்ளேன் என்று கூறி, அவர்களது மகளை என் வீட்டிற்குள் அனுப்பினார்கள். வீட்டின் உள்ளே நுழைந்த எனது ஆசிரியரின் மகள் வெட்கத்துடன் தலை குனிந்த படி நுழைந்தார். உள்ளே வரும் போது வாசலில் கால் இடரி கீழே விழப்போக நான் கீழே விழுந்து விடாமல் தாங்கினேன்.

வீட்டுக்கு வந்ததும் எனது மனைவிக்கு உண்பதற்காக ரொட்டியும் ஜைத்தூன் எண்ணையையும் எடுத்து கொண்டு வந்து சாப்பிட கொடுத்தேன். பின்னர் எனது மனைவி என் வீட்டின் மாடிப்பகுதிக்கு சென்று விட்டார்.

நான் வீட்டை விட்டு வெளியே வந்து அக்கம் பக்கத்து வீட்டார்களிடம் எனக்கு ஸயீதுப்னுல் முஸைய்யப் ரஹ் அவர்கள் தங்களது மகளை திருமணம் செய்து தந்துள்ளார்கள் என்று சப்தமாக கூறினேன். அவர்கள் ஆச்சரியம் மேலிட கேட்டு விட்டு எனது மனைவியை பார்க்க ஆவலுற்று எனது வீட்டிற்கு வந்து எனது மனைவியை பார்த்தனர்.

இதற்குள் எனது தாயும் இந்த செய்தியை கேள்விப்பட்டு என் வீட்டிற்குள் வந்து "அவர்களிடம் சொல்லாமல் திருமணம் செய்து கொண்டதற்காக கோபித்துக் கொண்டு எனது மனைவியை மூன்று நாட்களுக்கு நெருங்கவே கூடாது என்று கூறினார்கள்.

قال : فأقمت ثلاثة أيام ثم دخلت بها فإذا هي من أجمل الناس ، وإذا هي من أحفظ الناس لكتاب الله وأعلمهم لسنة رسول الله - صلى الله عليه وسلم - وأعرفهم بحق الزوج ، قال : فمكثت شهرا لا يأتيني سعيد ولا آتيه ، فلما كان قرب الشهر أتيت سعيدا وهو في حلقته فسلمت عليه فرد علي السلام ولم يكلمني حتى تقوض أهل المجلس فلما لم يبق غيري ، قال : ما حال ذلك الإنسان ، قلت : خيرا يا أبا محمد على ما يحب الصديق ويكره العدو ، قال : إن رابك شيء فالعصا ، فانصرفت إلى منزلي فوجه إلي بعشرين ألف درهم ،

எனது தாயார் சமாதானம் ஆன பிறகு மூன்று நாட்கள் கழித்து எனது மனைவியுடன் இல்லற வாழ்க்கையில் இணைய எனது வீட்டில் தனிமையில் சந்தித்தேன். மக்களிடையே மிகவும் அழகான பெண்ணாக, மக்களிலேயே அல்குர்ஆனை மனனம் செய்த அழகிய ஹாஃபிழாக, மக்களிலேயே நபி அவர்களின் சுன்னத்தை மிகவும் அறிந்தவராக என் மனைவியை நான் கண்டேன். மேலும், கணவனின் உரிமைகளை, கடமைகளை மிகவும் தெரிந்தவராக நான் கண்டேன்.

இல்லற வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பித்து ஒரு மாத காலமாக நான் என் ஆசிரியரை சந்திக்க வகுப்புக்கு செல்லவும் இல்லை. என் ஆசிரியரும் என்னை சந்திக்க அவர்களது மகளை சந்திக்க வரவும் இல்லை.

பின்னர், நான் என் ஆசிரியரை சந்திக்க வகுப்புக்கு சென்றேன். ஸலாம் சொன்னேன். பதில் ஸலாம் கூறினார்கள். வகுப்பு முடிந்து எல்லோரும் செல்லும் வரை என்னிடம் எதுவும் பேச வில்லை. சபையில் இருந்து மாணவர்கள் அனைவரும் சென்ற பிறகு என்னை அழைத்து நலம் விசாரித்தார்கள். பின்னர் என்னிடம் 20 ஆயிரம் திர்ஹம்களை கொடுத்து குடும்ப செலவினங்களுக்கு பயன்படுத்துமாறு கூறி அனுப்பி வைத்தார்கள். ( நூல்: ஹில்யா லி இமாமி அபூ நுஅய்ம், ஸியரு அஃலாமின் நுபலா )

தோட்டமே மஹராக....

عن ابن عباس رضي الله عنهما أن امرأة ثابت بن قيس أتت النبي صلى الله عليه وسلم، فقالت: يا رسول الله، ثابت بن قيس ما أعيب في خُلُق ولا دِين، ولكني أكره الكفر في الإسلام، فقال رسول الله صلى الله عليه وسلم: أتردِّين عليه حديقته؟ فقالت: نعم، فقال رسول الله صلى الله عليه وسلم: اقبل الحديقة وطلِّقها تطليقة؛ رواه البخاري،

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்:- ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ்(ரலி) அவர்களின் துணைவியர் நபி அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) ஸாபித் இப்னு கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறைகூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்துகொண்டே இறைநிராகரிப்புக்குரிய செயல்களைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்' என்று கூறினார். அப்போது, 'இறைத்தூதர் அவர்கள் , 'ஸாபித் உனக்கு (மணக்கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?' என்று கேட்டார்கள் அவர், 'ஆம் (தந்து விடுகிறேன்)' என்று கூறினார். இறைத்தூதர் அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), 'தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்!' என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

நான்காயிரம் திர்ஹம் மஹராக....

كانت زوجة لعبيد الله بن جحش وهاجرت معه إلى الحبشة، وهناك ارتدّ زوجها عن الإسلام واعتنق النصرانية ومات عليها، بينما ثبتت هي على دين الإسلام. ولما بلغ النبي ﷺ حالها وهي في أرض الغربة، أرسل إلى النجاشي (ملك الحبشة) ليخطبها له في السنة السابعة للهجرة. قام النجاشي بتزويجها للنبي وأصدقها مهرًا من عنده مقداره أربعة آلاف درهم (وفي رواية: أرباعمائة دينار)، وجهّزها من ماله الخاص، ثم أرسلها إلى المدينة المنورة مع شرحبيل بن حسنة.

உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் தங்களது கணவர் உபைதுல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் ரலி அவர்களுடன் அபீசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள்.

அங்கே சென்ற உபைதுல்லாஹ் கிருஸ்துவராக மதம் மாறி அங்கேயே இறந்து போனார். நபி அவர்களுக்கு இந்த செய்தி கிடைத்த போது, தமக்காக அவர்களை பெண் பேசுமாறு நபி அவர்கள் தகவல் அனுப்பினார்கள். அது போன்றே பெண் பேசி தமது சார்பாக, தமது சொந்த பணத்தில் இருந்து நான்காயிரம் திர்ஹம் மஹராக கொடுத்தனுப்பி ஷுர்ஹபீல் இப்னு ஹஸனா ரலி அவர்களுடன் ஹிஜ்ரி ஏழில் நஜ்ஜாஷி மன்னர் மதீனா நகருக்கு அனுப்பி வைத்தார்கள். ( நூல்: தஹ்தீபுல் கமால் )

மஹரை மனமுவந்து வழங்கி மணாளியைக் கரம் பிடிப்போம்!

Wednesday, 10 June 2026

பாலைவனம்... தாகம்... தண்ணீர்... மரணம்!!!

 

பாலைவனம்... தாகம்... தண்ணீர்... மரணம்!!!



கடந்த 04/06/2026 அன்று வட ஆப்பிரிக்க நாடான நைஜரில் அரங்கேறியுள்ள சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

அதாவது, மாலி நாட்டில் நடைபெற்ற பக்ரீத் பண்டிகையில் பங்கேற்றவர்கள், விழாவை முடித்துவிட்டு தாயகம் திரும்பினர். நைஜர்-அல்ஜீரியா எல்லைக்கு அருகே உள்ள அசமகா பகுதியில் வந்தபோது அவர்கள் வந்துகொண்டிருந்த வாகனம் (லாரி) சஹாரா பாலைவனத்தின் தொலைதூரப் பகுதியில் பழுதாகி நின்றது. 

தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத இடத்தில் அந்த வாகனம் பாலைவன மணலில் சிக்கிக்கொண்டது. ஓட்டுநர் மற்றும் பயணிகள் நீண்ட நேரம் போராடியும் வாகனத்தை மீட்க முடியவில்லை. 

இதனிடையே, அவர்களிடம் இருந்த தண்ணீர் மற்றும் உணவுகள் தீர்ந்துபோனது. இதனால், கடும் வெப்ப அலை வீசும் அந்த பாலை வனப்பகுதியில் குடிக்கத் தண்ணீர் கூட இல்லாமல் அவர்கள் தாகத்தால் துடிதுடித்து இறந்து போயினர். இதில், கிட்டதட்ட 49 பேர் உயிர் இழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

இதில், இரண்டு நபர்கள் மட்டும் தாகத்தைத் தாக்குப் பிடித்து சுமார் 50 கி.மீ. தூரம் பாலைவன மணலில் நடந்து சென்று நீர் நிலையைக் கண்டுபிடித்து தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். பின்பு, அவர்கள் இது குறித்த தகவலை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து, மீட்கப்பட்ட 49 பேரின் உடல்களும் அங்குள்ள பொது புதைகுழியில் அடக்கம் செய்யப்பட்டதாக நைஜர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தாகத்தால் துடிதுடித்து 49 பேர் உயிர் இழந்த இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ( நன்றி: நக்கீரன், 06/06/2026 )

இந்த சம்பவத்தின் ஊடாக நாம் தண்ணீரின் அருமையையும், மனித உடலமைப்பின் யதார்த்தமான சூழலையும், பாலைவனம் என்ற இறைவனின் அற்புதப் படைப்பையும் புரிந்து கொள்ள கடமைப் பட்டுள்ளோம்.

தண்ணீரின் அருமை...

மனித உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்வதற்கு தண்ணீர் அவசியமாகிறது.

நம் உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது தண்ணீர் தான். 5 முதல் 10 சதவீதம் வரை உடலில் இருந்து தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில் 15 முதல் 20 சதவீதம் வரை தண்ணீர் இழப்பு ஏற்படும் பட்சத்தில் அது ஏறக்குறைய மரணத்தில் சென்று முடியலாம்.

உடலில் உள்ள திசுக்களுக்கு ஒரு பாதுகாப்பு போர்வை அல்லது மெத்தை போன்று தண்ணீர் செயலாற்றுகிறது. உடலின் அனைத்து திசுக்களுக்கும், ரத்தத்தின் அடிப்படைக்கும், மூட்டு இணைப்புகளில் உள்ள திரவம், கண்ணீர், கோழை வடிதல் போன்றவற்றுக்கும் தண்ணீரே காரணமாகத் திகழ்கிறது. உடல் உறுப்புகள் முறைப்படி செயல்படுவதற்கு உராய்வு எண்ணெய் போன்று தண்ணீர் செயலாற்றுகிறது.

நம்முடைய தோலினை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக் கொள்வதற்கும் உடலில் உள்ள தண்ணீரே பங்காற்றுகிறது. வயது முதிர்வடையும் போது தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கும் உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறைவதே காரணம். ஆகவேதான் பிறக்கும் குழந்தைகளின் உடல்களில் சுமார் 75 முதல் 80 சதவீதம் அளவிற்கு தண்ணீர் இருப்பதால் அவர்களின் தோல் மென்மையானதாகக் காணப்படுகிறது. அதுவே 65- 70 வயதான முதியோருக்கு உடலில் தண்ணீர் 50 சதவீதமாகக் குறைவதால் சுருக்கங்கள் காணப்படுகிறது. தண்ணீர் குறைவின் காரணமாகவே எலும்பு இணைப்புகளில் பாதிப்பு ஏற்படுவதும் முதுமையில் நிகழ்கிறது.

மனித உடலுக்கு அன்றாடம் சராசரியாக 6 முதல் 8 டம்ளர் வரையிலான தண்ணீர் தேவையாகிறது. ( நன்றி: கீற்று, 19/01/2010 )

பாலைவனம்...

பூமியின் பரப்பளவில் ஐந்தில் ஒரு பகுதி பாலைவனங்கள் தாம். உலகின் பாலைவனங்களை மூன்றாகப் பிரிக்கலாம்.

கோடைக்காலத்தில் கடுமையாக வெயில் அடிக்கிற பாலைவனங்கள் ஒரு வகை. கடும் குளிர் வீசுகின்ற பாலைவனங்கள் இரண்டாவது வகை. பனி படர்ந்த பனி பொழிகிற துருவ பாலைவனங்கள் மூன்றாம் வகை.

சகாரா பாலைவனம், அரேபிய பாலைவனம், ஆப்பிரிக்காவில் உள்ள கலஹாரி பாலைவனம், அமெரிக்காவில் உள்ள மொகாவி பாலைவனம், இந்தியாவில் உள்ள தார் பாலைவனம் முதலியவை வெயில் வீசும் பாலைவனங்கள். 

சகாராவில் 1922 -ம் ஆண்டில் லிபியா நாட்டில் உள்ள அசிசியா என்னுமிடத்தில் கோடைக்காலத்தில் அதிகபட்சமாக 58 டிகிரி வெப்பம் பதிவானது.

தென் அமெரிக்காவில் உள்ள அடகாமா பாலைவனம், ஆப்பிரிக்காவில் உள்ள நமீப் பாலைவனம், சீனாவில் உள்ள தக்கலாமக்கான் பாலைவனம், சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கோபி பாலைவனம் முதலியவை கடும் குளிர் வீசுகிற பாலைவனங்கள். ஆனாலும் இவற்றில் கோபி, தக்கலாமக்கான் ஆகியவற்றில் கோடையில் வெயில் உண்டு.

மூன்றாவது வகை, துருவப் பாலைவனங்கள் ஆகும். அண்டார்டிகா, யூரேஷ்யா, வட அமெரிக்காவின் வட பகுதி, க்ரீன் லாந்து போன்ற இடங்களில் உள்ள பனி நிறைந்த பாலைவனங்கள் இந்த இனத்தை சேர்ந்தவையாகும். இந்த பாலைவனங்களும் வருடத்திற்கு 38 செ.மீ.க்கும் குறைவான மழையையே பெறுகிறது. இதுவும் கூட பனிப்பொழிவு போலத்தான் இருக்கும்.

வெப்ப பாலைவனங்களைப் போல இதில் மணற்பரப்பு அதிகமாக காணப்படாவிட்டாலும் பாறைகள் அதிகமாக இருக்கும். குறைவான அளவிலே உயிரினங்கள் இங்கு வாழும். உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரா பாலைவனத்தை விட மிகவும் வறண்ட பகுதியே அண்டார்டிகா.

பாலைவனத்தில் பார்க்குமிடமெல்லாம் மருந்துக்குக்கூட தண்ணீர்கிடைக்காது. ஆனால் இந்த இடத்திலும் பல உயிரினங்கள் வாழ்கின்றன. தாவரங்கள் முளைக்கின்றன.

பாலைவனத்தில் நத்தைகள் ஏராளமாக இருக்கும் அமெரிக்க பாலைவனங்களில் "பேக் ரேட்" என்ற ஒருவகை எலிகள் உண்டு. வட ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் உள்ள பாலைவனங்களில் "ஜெர்போவா" என்ற விலங்குகள் உண்டு. இவை பார்ப்பதற்கு கிட்டத்தட்ட கங்காருவைப்போல நீளமான பின்னங்கால்களை கொண்டிருக்கும். அரேபிய, ஆப்பிரிக்க பாலைவனங்களில் ஓநாய் வகையைச் சேர்ந்த ஒருவகை விலங்கு காணப்படுகிறது.

பலவிதமான பல்லிகள், ஆந்தைகள், புழு, பூச்சிகள், கொடிய விஷமுடய பாம்புகளை பாலைவனங்களில் அதிகம் காணலாம். இவை உயிர்வாழ நீர் அதிகம் தேவையில்லை. வியர்வை, சிறுநீர் கூட மிகமிகக் குறைந்த அளவிலேயே வெளிப்படும். சிறு அளவில் வெளியிடப்படும் இவற்றின் சிறுநீரில் யூரியாவும், யூரிக் அமிலமும் அதிகம்.

பாலைவன மிருகங்களில் மிக முக்கியமானது ஒட்டகமாகும். இதை பாலைவனக் கப்பல் என்கிறார்கள். உலர்ந்த புல்லும், முட்செடிகளும் இதன் உணவு. அதன் மூக்கு, காது, கண் முதலிவை மணலால் பாதிக்கப்படாடதபடி அமைந்துள்ளது.

பாலைவனத்தில் புதர்செடிகளும், சப்பாத்திக்கள்ளி வகையைச் சேர்ந்த செடிகளும் காணப்படுகின்றன. புதர் செடிகளில் இலைகளை விட முட்கள்தான் அதிகம். இலைகள் குறைந்திருப்பதால் நீர் ஆவியாதல் குறைவாகவே இருக்கும். சப்பாத்திக் கள்ளியின் தண்டுப்பகுதி தடித்து சதைப்பற்றுள்ளதாக அமைந்திருக்கிறது. இதிலும் முள் மட்டுமே உண்டு. இலைகள் கிடையாது.

 சகாரா பாலைவனம்...

ஆப்பிரிக்கக் கண்டத்தின் வட பகுதியில் கிழக்கிலிருந்து மேற்குவரை அமைந்திருக்கிறது. சகாரா பாலைவனத்தில் 11 நாடுகள் அமைந்துள்ளன. லிபியா, எகிப்து ஆகிய நாடுகளின் பெரும் பகுதி பாலைவனமே.

சகாரா பாலைவனம் பல லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்தப் பாலைவனம் முழுவதிலும் ஒரே மணலாக இருக்கும் என்று நினைத்தால் அது தவறு. 

30 சத விகிதப் பரப்பில் மட்டுமே மணல். மீதிப் பகுதியானது முட்புதர், பாறைகள் முதலியவற்றால் ஆனது. இத்துடன் ஒப்பிட்டால் அரேபியப் பாலவனத்தின் பெரும் பகுதி மணல்தான்.

பாலைவனங்கள் மாயமாக மறைந்துவிட்டால்

பாலைவனங்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது வறண்ட நிலம், கொளுத்தும் வெயில் மற்றும் ஆள் அரவமற்ற மணல் மேடுகள் தான். இந்த இடமெல்லாம் எதற்கு? என்று என்றாவது நாம் சிந்தித்து இருக்கின்றோமா? மாறாக, நாம் எளிதாகக் கடந்து போகிறோம்.

பூமியிலிருந்து அனைத்துப் பாலைவனங்களும் ஒருநாள் மாயமாக மறைந்துவிட்டால், அது ஒரு பசுமையான மாற்றமாக இருக்கும் என்று நாம் நினைத்தால், அதுதான் மிகப்பெரிய தவறு.

பூமியின் பரப்பளவில் ஐந்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ள இந்தப் பாலைவனங்கள், நமது கிரகத்தின் மிக முக்கியமான 'சுற்றுச்சூழல் காவலர்கள்' என்கிறார்கள் சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள்.

பூமியின் வெப்பநிலையைச் சமநிலைப்படுத்துவதில் 'ஹாட்லி செல்' (Hadley cell) எனப்படும் வளிமண்டல சுழற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. பாலைவனங்கள் மறைந்தால், இந்தச் சுழற்சி முறை மாறி, உலகெங்கிலும் வீசும் 'வர்த்தகக் காற்றுகளின்' (Trade Winds) திசை மாறும். இது நாம் இதுவரை பார்த்திராத மோசமான வானிலை மாற்றங்களை உருவாக்கும்.

சஹாரா பாலைவனத்திலிருந்து பறக்கும் தூசுகள், அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகும் புயல்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. பாலைவனங்கள் இல்லையென்றால், புயல்களைத் தடுக்க ஆளின்றி, அவை பெரும் சீற்றத்துடன் நிலப்பகுதிகளைத் தாக்கும். பாலைவனத்தை மட்டுமே நம்பி வாழும் பல உயிரினங்கள் திக்கற்றுப் போகும். உலகில் தற்போது 250-க்கும் குறைவாகவே உள்ள சஹாரா சிறுத்தைகள் பாலைவனம் மறைந்தால் வரலாற்றில் இருந்து மறைந்துவிடும். மிக அரிதான டாமா மான் (Dama Gazelle) இனம் ஏற்கனவே அழியும் நிலையில் உள்ளது, பாலைவனங்களின் மறைவு இதை கடைசி நிலைக்குத் தள்ளும். நீரைச் சேமித்து வைக்கும் கற்றாழை (Cactus) 'உயிர் பிழைப்பாளர்கள்' இல்லையென்றால், அந்தச் சூழலியல் சமநிலை முற்றிலும் சீர்குலையும்.

பாலைவனங்கள் என்பவை வெறும் வெற்று நிலங்கள் அல்ல; அவை பூமியின் வெப்பநிலையைச் சீராக வைக்கும் 'தெர்மோஸ்டாட்' போன்றவை. அழகுக்கும் ஆபத்துக்கும் பெயர்போன இந்தப் பாலைவனங்கள் மறைவது, நமது பூமியின் நுரையீரலில் ஒரு பகுதியை இழப்பதற்குச் சமம். ( நன்றி: தி இண்டியன் எக்ஸ்பிரஸ், 23/02/2026 )

இறைவனின் ஒவ்வொரு படைப்பிற்கும் ஒரு நோக்கம் உண்டு - பாலைவனங்கள் அது படைக்கப்பட்டதன் நோக்கம் ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.

وَمَا خَلَقْنَا السَّمَآءَ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا لٰعِبِیْنَ 

வானத்தையும் பூமியையையும் அவ்விரண்டின் மத்தியில் உள்ளவையையும் விளையாட்டாக (வீண் விளையாட்டிற்காக ) நாம் படைக்க வில்லை. ( அல்குர்ஆன்: 21: 16 )

وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا لٰعِبِیْنَ 

مَا خَلَقْنٰهُمَاۤ اِلَّا بِالْحَقِّ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ 

வானத்தையும் பூமியையையும் அவ்விரண்டின் மத்தியில் உள்ளவையையும் விளையாட்டாக நாம் படைக்க வில்லை நிச்சயமாக அவ்விரண்டையும் உண்மையை கொண்டே தவிர அதை படைக்கவில்லை எனினும் பெரும்பாலானோர் அதை அறிய மாட்டார்கள். ( அல்குர்ஆன்: 44: 38,39 )

சஹாரா பாலைவனத்தில் தண்ணீர் தீர்வுக்கு வழி என்ன?

இஸ்லாம் மூன்று விதமான திட்டங்களை முன் வைக்கிறது. முதலாவது, அரசே நீர் நிலைகளை அமைத்துக் கொடுப்பது. இரண்டாவது சமூகத்தின் தன்வந்தர்கள் கொடைத் தன்மையோடு நீர் நிலைகளை அமைத்துக் கொடுப்பது. மூன்றாவது ஸதகத்துன் ஜாரியாவாக சமூகம் நீர் நிலைகளை உருவாக்குவது.

ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தின் எல்லையில் அமைந்துள்ள சஹேல் பகுதி, குறைந்த மழைப்பொழிவு கொண்ட வறண்ட நிலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் இப்பகுதியின் பல இடங்கள் பசுமையாக மாறி வருகின்றன. இதன் இன்னொரு பகுதியான சாட் (Chad) முதல் நைஜர் (Niger) வரையிலான நாடுகளில் தாவரங்களின் பரப்பளவு அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. இது குறிப்பிட்ட சில மாதங்களில் அந்த நிலப்பரப்பிற்கு வியக்கத்தக்க பசுமையான தோற்றத்தைத் தருகிறது. 

சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் ஒரு நீர் நிலை இருப்பதை அறிய முடிகிறது. அந்த நீர் நிலையில் தண்ணீர் அருந்தி தான் இரண்டு பேர் உயிர் தப்பியுள்ளனர்.

எனவே, அந்த நீர் நிலை மற்றும் சஹாரா எல்லையில் உள்ள சஹேல் நீர் நிலை, சாட் பகுதியில் உள்ள நீர் நிலை இந்த மூன்று நீர்நிலைகளை ஒன்றிணைத்து கால்வாயாகவோ அல்லது வடிகால் போன்றோ பாலைவனத்தில் அமைத்து இது போன்ற கோர மரணங்களை தடுக்க வேண்டும்.

இந்த திட்டத்தை செயல்படுத்த பலகோடி ரூபாய் செலவாகும் என்பது திண்ணம். ஆகவே, உலக வங்கியில் கடன் கத்தார் சவூதி பஹ்ரைன் போன்ற இஸ்லாமிய நாடுகளின் உதவியுடன் நைஜர் அரசு செயல் படுத்த வேண்டும்.

இஸ்லாமிய வரலாற்றில் மக்களின் தாகம் தீர்க்க பாலைவனத்தில், கரடு முரடான மலைக் குன்றுகளின் வழியாக கால்வாய் கட்டி நீண்ட தூரத்திற்கு தண்ணீரை மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கிய ஓர் இஸ்லாமியப் பேரரசின் முன்மாதிரி இருக்கிறது.

1) முதலாவது, அரசே நீர் நிலைகளை அமைத்துக் கொடுப்பது.

ஹிஜ்ரீ 2 ம் நூற்றாண்டின் இறுதி கட்டத்தில் இஸ்லாமிய பேரரசை பக்தாதிலிருந்து ஆட்சி செய்து கொண்டிருந்தார் அப்பாஸிய மன்னரான கலீபா ஹாரூன் ரஷீது ரஹ் அவர்கள்.

அவரது மனைவி அமத்துல் அஜீஸ் என்ற இயற் பெயரும் சுபைதா ரஹ் அவர்கள் என்ற புகழ்பெயரும் கொண்டவர்.  

அவர் ஹிஜ்ரீ 186 ம் ஆண்டு பக்தாதில் இருந்து ஹஜ்ஜுக்கு வந்த போது வருகிற வழியில் மக்காவிற்கு தண்ணீர் கொண்டுவருவதற்காக மிகப்பெரும் சிரமம் எடுத்துக் கொள்ளப்படுவதையும் இந்தப் பணியில் பலர் இறந்து போவதையும் அவர் கண்டார். இதில் அவர் மிகவும் வருத்த முற்றார்.

 

இந்தப்பிரச்சனை தீர தான் ஏதாவது செய்தாக வேண்டும் என்று முடிவெடுத்தார். தீர்க்க குணம் கொண்ட அவர் அருகில் தண்ணீர் அதிகமாக கிடைக்கிற இடம் எது என விசாரித்தார். தாயிபுக்கு செல்லும் வழியுல் உள்ள வாதி நுஃமான் என்ற இடத்தில் மலைப்பாறைகளுக்கு நடுவே அருமையாக ஓடிக் கொண்டிருக்கிற ஓடையைப் பற்றி அவருக்கு சொல்லப் பட்டது. உடனடியாக அரசு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். 

அங்கிருந்து மக்காவிற்கும் மக்காலிருந்து 20 கீமி தொலைவிலிருக்கிற அரபாவிற்கும் ஒரு வாய்க்கால் வெட்டி நீரை கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.

பாலைவனத்தில் ஒரு கால்வாய். அதுவும் செயற்கை கால்வாய். பெரிதாக இருபுறம் சுவர் எழுப்பி ஒரு மேம்பாலம் போல கட்டி சுவர்களுக்கு நடுவே ஒரு பள்ளம் அமைத்து ஒரு கால்வாய் கட்டப்பட்டது.

وقد أنفقت زبيدة الكثير من أموالها وجواهرها لتوفر للحجاج المياه العذبة والراحة و تحميهم من كارثة الموت. و بعد أن أمرت خازن أموالها بتكليف أمهر المهندسين والعمال لإنشاء هذه العين؛ أسرّ لها خازن أموالها بعظم التكاليف التي سوف يكلفها هذا المشروع، فقالت له: "اعمل ولو كلفتك ضربة الفأس دينارًا"،

இதற்கான பணிகளில் அதிக தொகை செலவான போது அரசாங்க கஜானாவில் ஒற்றை நாணயம் மிச்சமிருக்கிற வரை பணி தடை படக் கூடாது என்று உத்தரவிட்டார்.

அப்போது அவர் உத்தரவிட்ட வார்த்தை வைர வரிகளுக்கு சொந்தமானது. கோடாரியின் ஒரு அடிக்கு ஒரு தங்க நாணயம் கொடுக்க வேண்டியிருந்தாலும். கொடுங்கள்!" என்று கருவூலக் காப்பாளருக்கு உத்தரவிட்டார்.

ولما تمّ عملها اجتمع العمال لديها، وأخرجوا دفاترهم ليؤدوا حساب ما صرفوه، وليبرّئوا ذممهم من أمانة ما تسلموه من خزائن الأموال، وكانت السيدة "زبيدة" في قصر مطلٍّ على دجلة، فأخذت الدفاتر ورمتها في النهر، قائلة: "تركنا الحساب ليوم الحساب؛ فمن بقي عنده شيء من المال فهو له، ومن بقي له شيء عندنا أعطيناه

சுமார் பதினாறு கிலோ மீட்டர் நீளம் கொண்ட அந்த கால்வாய் கட்ட ஆறாயிரம் கிலோ தங்கம் அளவுக்கு செலவானது. வேலையை முடித்த பிறகு அது குறித்த செலவுப் பட்டியல் அடங்கிய ஒரு புத்தகத்தை அதிகாரிகள் சுபைதா அம்மையாரிடம் கொடுத்த போது திஜ்லா நதிக்கரையில் அமைந்த தனது அரண்மனையில் பால்கனியின் மேலிருந்த அந்த அம்மையார் அந்த செலவுப் புத்தகத்தை திஜ்லா நதியில் வீசி எறிந்து விட்டு சொன்னார்.  

"கணக்குப் பார்க்கப்படும் ஒரு நாளுக் (மறுமை நாளுக்) காக இதில் நான் கணக்குப் பார்க்க போவதில்லை" என்று கூறி, இனி யாருக்கேனும் பாக்கி வர வேண்டியிருக்குமானால் என்னிடம் அதைப் பெற்றூக் கொள்ளலாம் என்றார். மட்டுமல்ல அந்த அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் சிறப்பு ஆடைகளை அன்பளிப்பாக வழங்கினார்.

கி.பி 8 ம் நூற்றாண்டில் கட்டப் பட்ட இந்தக் கால்வாய் சுமார் 8 நூற்றாண்டுகள் மக்களுக்கு பயன்பட்டது. அவ்வப் போது இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அதை மராமத்து செய்து பாதுகாத்து வந்தனர். 

கி.பி 16 ம் நூற்றாண்டில் இஸ்லாமிய உலகை ஆண்ட துருக்கி சுல்தான் சுலைமான் ( தி கிரேட் சுலைமான் ) காலத்தில் இந்த கால் வாய் பல இடங்களிலும் உடைந்து போனது. அதன் பின்னர் மக்கள் பயன்பாட்டில் இருந்து காணாமல் போனது.

இதில் ஒரு ஆச்சரியம் என்ன வென்றால் சுபைதா அம்மையாரின் கால்வாய் காலப் போக்கில் உடைந்து போனாலும் அரபாவில் தங்கும் ஹாஜிகளுக்கு பெரும் பிரச்சனையாக இருந்த தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அதற்குப் பின்னர் வந்த மன்னர்கள் இதை முன்மாதிரியாக வைத்து தனிக் கவனம் செலுத்தினார்கள். இதற்காக நிறைய செலவழித்தார்கள்.

وفي العهد السعودي أي في عهد الملك عبد العزيز أُنشئت إدارة خاصة لإدارة العين سُمّيت (عين زبيدة) تشرف إشرافًا كاملاً على العين والآبار الخاصة بها وترميمها

அரபு நாட்டில் சவூதி அரசாங்கம் அமைந்த போது மன்னர் அப்துல் அஜீஸ் காலத்தில் அரபாவிலிருக்கும் ஹாஜிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்திற்கு அய்னு சுபைதா என்று பெயரிடப்பட்டது. நீர்நிலைகளை கவனிக்கும் நிறுவனம் கூட அய்னு சுபைதா என பெயரிடப் பட்ட்து.

சுபைதா கால்வாய் இப்போது இடிந்து போன சுவர்களாக காட்சியளித்தாலும் நீர் வழங்கும் திட்டம் அவர் பெயரால் நிரந்தரமாக இருக்கிறது. ( நன்றி: அப்துல் அஜீஸ் பாகவி அவர்களின் வெள்ளி மேடை, இந்த சம்பவம் மட்டும் அவர்களின் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது )

2) இரண்டாவது சமூகத்தின் தன்வந்தர்கள் கொடைத் தன்மையோடு நீர் நிலைகளை அமைத்துக் கொடுப்பது.

நபி அவர்களும், மக்காவின் நபித்தோழர்களும் ஹிஜ்ரத் செய்து வந்ததன் பின்னர் மதீனாவில் ஜனத்தொகை அதிகமாகியது. மக்களின் தண்ணீர் பயன்பாடுகள் அதிகமாகவும், தண்ணீரைப் பெற்றுக் கொள்ளும் வழிகள் குறைவாகவும் இருந்தது. மேலும், அன்று தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலையே இருந்தது. ஏழ்மையில் இருந்த பல நபித்தோழர்களால் வாங்க முடியாத சூழலும், தண்ணீர் தட்டுப்பாடும் ஒரு சேர பிரச்சினையாக எழவே நபி அவர்கள் பின் வரும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள்.

قال رسول الله صلى الله عيه وسلم من يشتري بئر رومة فيجعلها للمسلمين يضرب بدلوه فى دلائهم وله بها مشرب فى الجنة فساومه فيها عثمان فأبى أن يبيعها كلها فاشترى نصفها باثنى عشر ألف درهم وجعل ذلك للمسلمين وجعل له يوما ولليهودى يوما فإذا كان يوم عثمان استقى المسلمون ما يكفيهم يومين فلما رأى اليهودى ذلك قال لعثمان أفسدت على ركيتى فاشترى النصف الآخر بثمانية آلاف (سيرة الحلبية

பிஃரு- ரூமா மதீனாவில் மிகவும் சுவையான நீரைத் தரும் கிணறாக இது இருந்தது.  

ஒரு முறை நபி யார் இதை அந்த யூதனிடமிருந்து வாங்கி மக்களுக்கு வக்ஃப் செய்வார்களோ அவருக்கு சுவனத்தில் அதுபோன்றக நீர் நிலை உண்டு என்றவுடன் உஸ்மான் ரழி போட்டி போட்டுக் கொண்டு அதை வாங்க யூதனிடம் சென்ற போது அதை அவன் விட்டுக் கொடுக்க மறுத்தான் எப்படியோ சம்மதிக்க வைத்து 12 ஆயிரம் திர்ஹம் தந்து ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற அடிப்படையில் அந்தக் கிணற்றின் உரிமையை பெற்றார்கள்.

தனக்கான அந்த நாளில் அனைத்து மக்களுக்கும் தண்ணீரை இலவசமாக சப்ளை செய்தார்கள். ஆனால் அந்த யூதன் காசுக்கு மட்டுமே விற்றான். நாளடைவில் அவனிடம் காசு கொடுத்து யாரும் வாங்காத ஒரு நிலை ஏற்பட்டது. ஏனெனில், உஸ்மான் ரழி தனக்கான அந்த நாளில் அனைத்து மக்களுக்கும் தண்ணீரை இலவசமாக சப்ளை செய்ததால் அவனிடம் யாரும் வாங்கவில்லை. கடைசியில் வேறு வழியில்லாமல் அவன் மீதி உரிமையையும் விட்டுத் தந்தான். மொத்தம் 20 ஆயிரம் திர்ஹம் தந்து விலைக்கு வாங்கி மக்களின் தண்ணீர் கஷ்டத்தைப் போக்கினார்கள். ( நூல்: ஃபிக்ஹுஸ் ஸுன்னா )     

3) முஸ்லிம் சமூகம் ஸதகத்துன் ஜாரியாவாக நீர் நிலைகளை உருவாக்குவது.

முஸ்லிம் சமூகம் அதிகம் கண்டு கொள்ளாத லட்சியமே செய்யாத நபிமொழிகள் பல இருக்கின்றன.

அவைகளில் ஒன்று பின் வரும் நபிமொழிகளில் இடம் பெற்றுள்ள மூன்று முக்கியமான விஷயங்களாகும்.

மனிதன் இறந்த பிறகு அவனுக்கு நிரந்தரமாக நன்மைகளை அள்ளித் தருகிற அம்சங்களை முஸ்லிம் சமூகத்திற்கு அழகாக அடையாளப்படுத்தினார்கள் மாநபி அவர்கள்.

أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: (( سبع يجري للعبد أجرهن وهو في قبره بعد موته :من عَلّم علماً, أو أجرى نهراً , أو حفر بئراً , أو غرس نخلاً , أو بنى مسجداً , أو ورّث مصحفاً , أو ترك ولداً يستغفر له بعد موته )) حسنه الألباني رحمه الله في صحيح الجامع برقم :3596].

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி அவர்கள் கூறினார்கள்:- ஏழு அம்சங்கள் ஒரு மனிதனின் மரரணத்திற்குப் பிறகு அவனுடைய மண்ணறைக்கு நன்மைகளை வழங்கிக் கொண்டே இருக்கும்.

 

1.கற்றுக் கொடுத்த கல்வி, 2.மக்கள் பயன்பாட்டிற்கு நதிகளை (ஆறுகளை) அமைத்தல், 3.மக்கள் பயன்பாட்டிற்கு கிணறுகளை அமைத்தல், 4.மரங்களை நடுதல், 5.பள்ளிவாசல்களை கட்டுதல், 6.குர்ஆனை வழங்குதல், 7.ஸாலிஹான சந்ததிகளை உருவாக்குதல்.

இதில் கிட்டத்தட்ட 4 அம்சங்களை முஸ்லிம் சமூகம் ஓரளவு செய்து வருகின்றது.

பிராதான மூன்று விஷயங்கள் மரம் நடுதல், ஆறு, கிணறுகளை (நீர் நிலைகளை) அமைத்தல் ஆகியவைகளில் முஸ்லிம் சமூகம் கவனம் செலுத்த தவறி விட்டது என்றே சொல்லலாம்.

நீரோடும் ஆற்றை அமைப்பது, கிணறுகளை அமைப்பது தற்போதைய சூழ்நிலையில் நாம் வசிக்கும் பகுதியில் சாத்தியமில்லை.

ஆனால், உலகில் வாழும் கோடீஸ்வர முஸ்லிம்கள் ஆப்ரிக்க முஸ்லிம் நாடுகளில் ஒன்றான நைஜர் பகுதியில் நீர்நிலைகளை உருவாக்கி இது போன்ற துர் மரணங்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.

வளமான வாழ்வு உண்டு...

தண்ணீர் தேவையை நிறைவேற்றுபவருக்கு வளமான வாழ்வு உண்டு என்பதாக அல்குர்ஆன் கூறுகிறது.

நபி மூஸா அலை அவர்கள் ஃபிர்அவ்ன் மற்றும் அவனது காவல்துறையின் தேடுதல் வேட்டையில் இருந்து தப்பிக்க மத்யனுக்கு சென்றதாக கூறும் அல்குர்ஆன். அங்கே நீர் எடுக்க முடியாமல் கிணற்றின் அருகே தவித்துக் கொண்டிருந்த இரு பெண்களுக்கும், அவர்களின் கால்நடைகளுக்கும் நீர் புகட்டி உதவி செய்து அனுப்பி வைத்தார்கள்.

وَلَمَّا وَرَدَ مَآءَ مَدْیَنَ وَجَدَ عَلَیْهِ اُمَّةً مِّنَ النَّاسِ یَسْقُوْنَ وَوَجَدَ مِنْ دُوْنِهِمُ امْرَاَتَیْنِ تَذُوْدٰنِ قَالَ مَا خَطْبُكُمَا قَالَتَا لَا نَسْقِیْ حَتّٰی یُصْدِرَ الرِّعَآءُ وَاَبُوْنَا شَیْخٌ كَبِیْرٌ 

இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த் துறையின்) அருகே வந்தபோது, அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர, பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதைக் கண்டார்; “உங்களிருவரின் விஷயம் என்ன?” என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்; அதற்கு: இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிக் விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது - மேலும் எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்என்று அவ்விருவரும் கூறினார்கள். 

فَسَقٰی لَهُمَا ثُمَّ تَوَلّٰۤی اِلَی الظِّلِّ فَقَالَ رَبِّ اِنِّیْ لِمَاۤ اَنْزَلْتَ اِلَیَّ مِنْ خَیْرٍ فَقِیْرٌ 

ஆகையால், அவ்விருவருக்குமாக அவர் (ஆட்டு மந்தைக்குத்) தண்ணீர் புகட்டினார்; பிறகு அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி: என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்என்று கூறினார்.( அல்குர்ஆன்: 28: 23, 24 )

இந்த நிகழ்வின் பின்னிருந்து மூஸா அலை அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாறியதாக அல்குர்ஆன் அடையாளப் படுத்துகிறது.

قَالَ اِنِّیْۤ اُرِیْدُ اَنْ اُنْكِحَكَ اِحْدَی ابْنَتَیَّ هٰتَیْنِ عَلٰۤی اَنْ تَاْجُرَنِیْ ثَمٰنِیَ حِجَجٍ فَاِنْ اَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ وَمَاۤ اُرِیْدُ اَنْ اَشُقَّ عَلَیْكَ سَتَجِدُنِیْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰلِحِیْنَ 

(அப்போது அவர் மூஸாவிடம்) கூறினார்: நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன் - ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உம் விருப்பம்; நான் உமக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ், என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்.” ( அல்குர்ஆன்: 28: 27 )

ஆம்! மத்யனில் இருந்து சொந்த தாயகம் திரும்பும் போது திருமணம் முடிந்து, இறைத்தூதர் மூஸாவாக ஏற்றம் பெற்று தாயகம் திரும்பியதாக அல்குர்ஆன் கூறுகிறது.

اِذْ قَالَ مُوْسٰی لِاَهْلِهٖۤ اِنِّیْۤ اٰنَسْتُ نَارًا سَاٰتِیْكُمْ مِّنْهَا بِخَبَرٍ اَوْ اٰتِیْكُمْ بِشِهَابٍ قَبَسٍ لَّعَلَّكُمْ تَصْطَلُوْنَ 

மூஸா தம் குடும்பத்தாரை நோக்கி: நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன்; உங்களுக்கு நான் அதிலிருந்து (நாம் செல்ல வேண்டிய வழி பற்றிய) செய்தியைக் கொண்டு வருகிறேன், அல்லது நீங்கள் குளிர்காயும் பொருட்டு (உங்களுக்கு அதிலிருந்து) நெருப்புக் கங்கைக் கொண்டு வருகிறேன்என்று கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக!

فَلَمَّا جَآءَهَا نُوْدِیَ اَن بُوْرِكَ مَنْ فِی النَّارِ وَمَنْ حَوْلَهَا وَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ 

அவர் அதனிடம் வந்த போது: நெருப்பில் இருப்பவர் மீதும், அதனைச் சூழ்ந்திருப்பவர் மீதும் பெரும் பாக்கியம் அளிக்கப் பெற்றுள்ளது; மேலும் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்என்று அழைக்கப்பட்டார்.

یٰمُوْسٰۤی اِنَّهٗۤ اَنَا اللّٰهُ الْعَزِیْزُ الْحَكِیْمُ 

மூஸாவே! நிச்சயமாக நானே அல்லாஹ்! (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.

وَاَلْقِ عَصَاكَ فَلَمَّا رَاٰهَا تَهْتَزُّ كَاَنَّهَا جَآنٌّ وَّلّٰی مُدْبِرًا وَّلَمْ یُعَقِّبْ یٰمُوْسٰی لَا تَخَفْ اِنِّیْ لَا یَخَافُ لَدَیَّ الْمُرْسَلُوْنَ 

உம் கைத்தடியைக் கீழே எறியும்;” (அவ்வாறே அவர் அதை எறியவும்) அது பாம்புபோல் நெளிந்ததை அவர் கண்ட பொழுது, திரும்பிப் பார்க்காது (அதனை விட்டு) ஓடலானார்; “மூஸாவே! பயப்படாதீர்! நிச்சயமாக (என்) தூதர்கள் என்னிடத்தில் பயப்பட மாட்டார்கள்.” ( அல்குர்ஆன்: 27: 7- 11 )

நம் நாட்டின் தண்ணீர் பிரச்சினைக்கும் தீர்வு உண்டு இஸ்லாத்தில்...

 

இன்றைக்குத் தண்ணீரை மையப்படுத்தி ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் இடையே தண்ணீரை பங்கிடுவதில் பகிர்ந்து கொள்வதில் சர்ச்சைகள் நிலவுகின்றன. 

பாகிஸ்தான் - இந்தியா இடையே சிந்து நதி தண்ணீரை பங்கிடுவதில் சிக்கல் நிலவுகிறது.

ஒரு நாட்டில் உள்ள மாநிலங்களுக்கிடையே கூட தண்ணீரைப் பங்கிடுவதில் சண்டை சச்சரவுகள் அனைத்தும் சூழ்ந்துள்ளது. அருகருகே அமைந்திருந்தும் கூட கேரளம் தமிழத்திற்குத் தண்ணீர் தர மறுக்கிறது. கர்நாடகமும் தன் பயன்பாட்டுக்குப் போக மேலதிக தண்ணீரை தன் அண்டை மாநிலமான தமிழகத்திற்குத் தராமல் மல்லுக்கட்டுகிறது. 

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குத் தண்ணீர் வழங்க மனிதாபிமானம் இருந்தாலே போதும். நதிநீர் பகிர்வு திட்டம் என்ற ஒன்று இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.

இன்றைக்கு தண்ணீர் மக்கள் தாகம் தீர்க்கும் குடிபானம் என்பது மாறி அரசியல்வாதிகளின் வெறி தீர்க்கும் அரசியல் பொருளாக மாறிப்போயுள்ளது.

ஒரு அரசு இயந்திரத்தை மீறி தன் அண்டை மாநிலத்திற்குத் தண்ணீர் தர மறுக்கும் மாநில அரசுகளை மத்திய அரசு கண்டு கொள்ளாததன் பின்னணியில் பல அரசியல் உள்ளது.

இந்தப் பிரச்சனைக்கு நபி தீர்வளிக்கின்றார்கள். தண்ணீரைப் பங்கிடுவது பற்றி நபி அவர்கள் முன்வைக்கும் முத்தான அறிவுரைகள் இரண்டு உள்ளது.

தேவை போகவுள்ள தண்ணீரை விற்காதே! தேவை போகவுள்ள தண்ணீரை தடுக்காதே!

இவையிரண்டும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படத் தகுந்த, எக்காலத்திலும் மனித சமுதாயத்திற்குத் தேவையான அறிவுரையாகும்.

لا تَبيعوا فضلَ الماءِ؛ فإن النبيَّ صلى الله عليه وسلم نهى عن بيعِ فضلِ الماءِ. خلاصة حكم المحدث : صحيح، الراوي : إياس بن عبدالله المزني | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 4677، | التخريج : أخرجه أبو داود (3478)، والترمذي (1271)، والنسائي (4663) واللفظ له، وابن ماجه (2476)، وأحمد (15444)

தேவைக்கு மிஞ்சிய தண்ணீரை விற்பது கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: இயாஸ் இப்னு அப்துல்லாஹ் (ரலி), ( நூல்: அபூதாவூத் )

وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر: «لاَ يُمْنَعُ فَضْلُ الْمَاءِ» (رواه البخاري ومسلم)، قال ابن بطال في شرحه لصحيح البخاري: «نهى أن يُمنع الماء».

தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பிறர் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டாம் என நபி அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ( நூல்: புகாரி: 2353, 2354, 6962 )

தனிநபரோ, குழுவோ யாராக இருந்தாலும் தனக்குத் தேவையான தண்ணீரை எடுத்துக் கொண்டு மிதமிஞ்சிய தண்ணீரை யாருக்கும் விற்கக் கூடாது, அதாவது இலவசமாக வழங்கி விட வேண்டும். அதேவேளை மேலதிகத் தண்ணீரை உனக்குத் தரமாட்டேன் என்று யாருக்கும் தண்ணீரைச் செல்லவிடாமல் தடுக்கக் கூடாது. தன் பயன்பாட்டுக்குப் போகவுள்ளதை பிறர் பயன்பாட்டுக்குச் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இது நபி அவர்கள் முன்வைக்கும் நீர் மேலாண்மை பங்கீட்டு திட்டமாகும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கெட்ட முடிவுகளில் இருந்தும், தீய மரணங்களில் இருந்தும் நம் அனைவரையும் காத்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!