மனமகிழ்
தீர்ப்பு!!
தூத்துக்குடி
மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸும்
கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி கொரோனா காலகட்டத்தில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டனர். இதற்குப் பிறகு இவர்கள் இருவரும் ஜூன் 21-ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜூன் 22-ஆம் தேதி இரவு ஒன்பது மணியளவில் பென்னிக்ஸ் உயிரிழந்தார். அவரது தந்தை ஜெயராஜ்
அடுத்த நாள் அதிகாலையில் உயிரிழந்தார்.
இந்த விவகாரம்
மிகப் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன்,
காவலர்கள் சாமிதுரை, முத்துராஜா, செல்லதுரை,
தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, பால்துரை ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் பால்துரை 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். மீதமிருந்தவர்கள்
மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடைபெற்றது.
மதுரை கூடுதல்
அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் மார்ச் 23-ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனை விவரங்கள்
ஏப்ரல் 6-ஆம் தேதி மாலையில் அறிவிக்கப்பட்டன. அதன்படி, குற்றவாளிகள் அனைவருக்கும் இரண்டு மரண தண்டனையும் கடுமையான அபராதங்களும்
விதிக்கப்பட்டிருக்கின்றன. ( நன்றி: பிபிசி தமிழ், 7 ஏப்ரல் 2026
)
சாத்தான்குளம்
காவல் நிலைய மரண வழக்கில்,
குற்றவாளிகள் 9 பேருக்கும் இரட்டை மரண
தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு மனிதருக்கு ஒருமுறைதான் மரண தண்டனையை கொடுக்க
முடியும். அப்படி இருக்கையில் எப்படி இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
ஒருவர் செய்த
குற்றத்திற்காக அவருக்கு இரண்டு முறை மரண தண்டனை விதிக்கப்படுவதே 'இரட்டை மரண தண்டனை'
எனப்படும். சாத்தான்குளம் வழக்கில் தந்தை ஜெயராஜ் மற்றும்
மகன் பென்னிக்ஸ் என இருவர் கொல்லப்பட்டதால், ஒவ்வொரு கொலைக்கும்
தனித்தனியாக ஒரு மரண தண்டனை என மொத்தம் இரண்டு மரண தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில்
தந்தை மற்றும் மகன் என இரண்டு உயிர்கள் பறிக்கப்பட்டதால், இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி (IPC/BNS) இரண்டு கொலைக் குற்றங்களுக்காக இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நடைமுறையில் ஒரு
மனிதருக்கு ஒருமுறைதான் மரண தண்டனையை நிறைவேற்ற முடியும், தூக்கிலிட முடியும். ஆனால், சட்டப்பூர்வமாக ஒரு மரண
தண்டனை மன்னிப்பு அல்லது மேல்முறையீடு என ஏதேனும் ஒரு காரணத்திற்காக ரத்து
செய்யப்பட்டலாம் அல்லது குறைக்கப்படலாம். அப்படி செய்தால் மற்றொரு மரண தண்டனை
அமலில் இருக்கும். இது குற்றவாளிக்கு சலுகை கிடைப்பதைத் தடுத்து, அவர் செய்த ஒவ்வொரு உயிரிழப்புக்கும் உரிய தண்டனையை உறுதி செய்கிறது. எனவேதான்
இரட்டை மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ( நன்றி: ஒன் இந்தியா, Monday, April 6,
2026, )
இந்த வழக்கில்
மிகவும் நேர்மையாக சாட்சியம் வழங்கிய காவலர் ரேவதி அவர்களும், நீதமான முறையில் தீர்ப்பு வழங்கிய மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துகுமரன்
அவர்களும் மனம் நிறைந்த பாராட்டுக்களுக்கு உரித்தானவர்கள்.
இந்தியாவில் மரண தண்டனை வரலாறு:-
இந்திய அரசியல்
சாசன சட்டத்தின் 21-வது பிரிவு “சட்டம் அனுமதிக்கும் வழிகளில் அல்லாது – எந்த ஒரு மனிதனின்
வாழ்வுரிமையும் பறிக்கப்படக் கூடாது” என்று கூறுகிறது.
பிரிட்டனின் காலனி
நாடாக இந்தியா இருந்த காலத்தில் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 1860-வது பிரிவின்படி,
மரண தண்டனையும் தண்டனைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்
பட்டிருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் மரண தண்டனை இந்திய சட்டப்
புத்தகத்தில் அப்படியே இடம்பெற்றது.
மரண தண்டனைக்கு
எதிரான தீவிரமான போராட்டங்களாலும் இயக்கங்களாலும் இந்தியா 1983-ல்,(rarest
of the rare) ‘மிகவும் அரிதினும் அரிதான' குற்ற வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்கும் முடிவை எடுத்தது.
இப்படி ஒரு முடிவை
எடுத்தபின் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய எண்ணிக்கையிலேயே இந்தியா மரண தண்டனையை
நிறைவேற்றியிருக்கிறது என்றாலும், மரண தண்டனையை முற்றிலுமாக
ஒழிக்கும் சர்வதேச முயற்சிக்கு இன்னும் இந்தியா முட்டுக்கட்டையாகவே நிற்கிறது. மரண
தண்டனைகளை நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் 2007, 2012-ம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.
எப்போதும் மரண தண்டனை ஒழிப்புக்கு எதிராகவே இந்தியா நிற்கிறது. ( நன்றி: இந்து
தமிழ் திசை,
06 Jun 2017, 7:44 pm )
இதுவரை மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?
1947-ல் நாடு சுதந்திரம்
அடைந்தது முதல் இதுவரையில் எத்தனை பேர் மரண தண்டனைக்கு
உட்படுத்தப்பட்டிருப்பார்கள் என்பதில் இன்னமும் சர்ச்சை நிலவுகிறது. 1947 - 2017 வரை அரசு தரும் அதிகாரபூர்வத் தகவல் 52 பேர் மட்டுமே மரண
தண்டனைக்கு உள்ளானதாகத் தெரிவிக்கிறது.
டெல்லி நிர்பயா
வழக்கு குற்றவாளிகள் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா மற்றும் அக்ஷய் தாகூர் ஆகியோர் மார்ச் 20, 2020 அன்று தூக்கிலிடப்பட்டனர். இந்த நால்வரையும் சேர்த்து மொத்தம் 56 பேர் ஆவர்.
ஆனால், 1953 முதல் 1963
வரையிலான பத்தாண்டு காலத்திலேயே 16 இந்திய மாநிலங்களில் மொத்தம் 1,422 பேர் மரண
தண்டனைக்கு ஆளானதாக 1967-ல் வெளியான இந்திய சட்ட ஆணையத்தின் 34-வது இணைப்பு
அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று மக்கள் சிவில் உரிமைக் கழகம்
(பி.யு.சி.எல்.) தெரிவிக்கிறது. ( நன்றி: இந்து தமிழ் திசை, 06 Jun 2017, 7:44
pm )
எனவே, இந்த எண்ணிக்கையில் குழப்பம் நிலவுவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் 2024 இறுதி நிலவரப்படி,
564-க்கும் அதிகமான கைதிகள் மரண தண்டனைக்காகச் சிறைகளில்
காத்திருக்கின்றனர்,
இது கடந்த இரண்டு தசாப்தங்களில் மிக அதிகமான
எண்ணிக்கையாகும்.
டெல்லி தேசிய
சட்டப் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் நீதி ஆராய்ச்சிக் குழுவான 'புராஜெக்ட் 39A'
தொகுத்த தரவுகளில் 2016 முதல் 2024 வரை,
இந்தியா முழுவதும் உள்ள விசாரணை நீதிமன்றங்கள் 1,180 மரண தண்டனைகளை வழங்கின . மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் இறுதியில் அவற்றில் 95-ஐ மட்டுமே உறுதி செய்தன. மீதமுள்ளவை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டன அல்லது
குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டன. சமீபத்திய ஆண்டுகளில்
இந்தப் போக்கு மேலும் தீவிரமடைந்துள்ளது.
2025-ஆம் ஆண்டின் முதல்
ஏழு மாதங்களில்,
மரண தண்டனைகள் தொடர்பான 14 மேல்முறையீடுகளை உச்ச நீதிமன்றம் விசாரித்தது . அவற்றில் பாதி வழக்குகளான
ஏழில், அது முழுமையான விடுதலையை உத்தரவிட்டது. சமீபத்திய வரலாற்றில், ஒரே ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட மரண தண்டனை விடுதலைகளின் மிக உயர்ந்த விகிதம்
இதுவாகும். மீதமுள்ள வழக்குகளில், நான்கு மரண தண்டனைகள்
ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டன.
உச்ச நீதிமன்றம்
இந்த ஆண்டு விசாரித்த வழக்குகளில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று வழக்குகளில் மரண
தண்டனையை ரத்து செய்துள்ளது. ( நன்றி: 101 reporter.com, 24/01/2026 )
இந்தியாவில் எந்தெந்தக் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது?
இந்திய குற்றவியல்
நடைமுறைச் சட்டத்தின்படி,
சுமார் 24 குற்றச் செயல்களில்
ஈடுபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
கிரிமினல்
சதிச்செயலில் ஈடுபட்டால்;
இந்திய அரசுக்கு எதிராக போர் தொடுப்பது, போர் தொடுக்க முயற்சிப்பது, போரைத் தொடுப்பவர்களுக்கு
உதவுவது போன்றவற்றில் ஈடுபட்டால், அரசுக்கு எதிராகக்
கலவரத்தைத் தூண்டினால்,
பொய் சாட்சி கூறி அப்பாவியின் மரண தண்டனைக்குக் காரணமாக
இருந்தால்,
கொலை செய்தால், பணத்துக்காக ஆள்களைக்
கடத்தினால்,
கொள்ளை, கொலை ஆகியவற்றை ஒருசேரச்
செய்தால்,
ஐந்து பேரோ அல்லது அதற்கும் மேற்பட்டவர்களோ கொள்ளை
அடிக்கும்போது கொலை செய்திருந்தால் - அந்த கும்பலிலிருந்த ஒவ்வொருவருக்கும், பாலியல் வல்லுறவு அல்லது பாலியல் வல்லுறவில் ஈடுபட்டால் அல்லது அப்போது
பெண்ணைத் தாக்கிச் செயலிழக்கச் செய்தால் அல்லது கொன்றால், சாதி –
மத வெறியில் காதலர்களைக் கொன்றால் மரண தண்டனை
விதிக்கப்படலாம்.
இன்னும், உயிரிழந்த கணவனுடன் மனைவியையும் சிதையில் ஏற்றி உயிரோடு கொளுத்தும் ‘சதி'
என்னும் கொடூரத்தை அரங்கேற்றுவோருக்கு, பழங்குடிகள்,
பட்டியல் இனத்தவருக்கு எதிரான வழக்கில் பொய் சாட்சியம் சொல்லி
அவர்களுக்கு மரண தண்டனை பெற்றுத்தருகிறவருக்கு, போதைப்பொருள் கடத்தலில்
தொடர்ந்து ஈடுபடுவோருக்கு,
பொது இடங்களில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பயங்கர வாதச்
செயல்களில் ஈடுபடுவோருக்கும் மரண தண்டனை விதிக்கப்படலாம்.
காவல் துறையினர்
விசாரணைக்காகப் பிடித்துவருகிறவர்களிடம் மிகக் கொடூரமாக நடந்துகொள்ளுவது, ‘போலி மோதல்'
களில் மக்களைச் சுட்டுக்கொல்வது போன்றவற்றில் ஈடுபட்டாலும், மரண தண்டனை விதிக்கப்படலாம். ( நன்றி: இந்து தமிழ் திசை, 06 Jun 2017, 7:44
pm )
இந்தியாவில் மரண தண்டனை குறித்த நிலைப்பாட்டில் ஏன் இரட்டை நிலைமை?
இந்திய சட்ட
ஆணையம் 1962
-இல் அளித்த அறிக் கையில் மரண தண்டனை நீடிக்க வேண்டும் என்று
கருத்துரைத்தது. “பச்சன்சிங் எதிர் பஞ்சாப் மாநில அரசு” வழக்கில், உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதி களைக் கொண்ட அரசமைப்பு ஆணையம் அளித்த
தீர்ப்பில்,
‘அரிதினும் அரிதான’ (rarest of the rare) குற்ற வழக்குகளில் மட்டும் மரண தண்டனை விதிக்கலாம் என்று கூறப்பட்டது.
‘அரிதினும் அரிதான’ என்பதற்கு இன்றுவரை,
திட்டவட்டமான - தெளிவான வரையறை வகுக்கப்படவில்லை. அதே
தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ள படி, “நீதிபதி அளிக்கும்
விளக்கத்தையும்,
அவருடைய மனப்போக்கையும்” சார்ந்ததாகவே மரண
தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.
கடந்த 2015 -இல் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில், “இந்தியாவில் மரண தண்டனை தேவையா? இல்லையா?” என்பது குறித்து ஆராய,
மீண்டும் சட்ட ஆணையம், ஏ.பி. ஷா தலைமையில்
ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்தது.
30.8.2015 அன்று,
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், இந்தியச் சட்ட ஆணையத்தின் தலைவராகவும் உள்ள அஜித் பிரகாஷ் ஷா (ஏ.பி. ஷா)
தலைமையிலான குழு,
நடுவண் அரசிடம் அளித்துள்ள அறிக்கை அமைந்துள்ளது.
30.8.15 அன்று சட்ட ஆணையம் அளித்துள்ள அறிக்கையில், விசாரணை நீதிமன்றங்கள்
விதித்த மரண தண்டனைகளில் 4.3
விழுக்காடு அளவிலான மரண தண்டனைகள் மட்டுமே உச்சநீதி
மன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளன; மற்றவைகளில் குற்றவாளிகள்
நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டுள்ள னர்; அல்லது வாழ்நாள்
தண்டனையாகவோ,
அதற் கும் குறைவான தண்டனையாகவோ குறைக்கப்பட் டுள்ளது என்று
விளக்கப்பட்டுள்ளது.
நடுவண் அரசிடம்
சட்ட ஆணையம் 30.8.2015
அளித்த அறிக்கையில் உள்ள முதன்மையான பரிந் துரைகள் :
1. பயங்கரவாதம்
தொடர்பான மற்றும் நாட்டுக்கு எதிரான போர் போன்ற குற்றச் செயல்கள் தவிர, மற்ற வகையான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக் கக் கூடாது; 2. மரண தண்டனை,
மற்றவர்களைக் கொடிய குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்கும்
என்பது ஒரு மாயை;
3. தண்டித்தல் என்பது பழிவாங்குதல் என்ற நிலைக்குத்
தரந்தாழ்ந்துவிட இடந்தரக்கூடாது; 4. இந்தியக் குற்றவியல்
சட்டத்தில் பல குறைபாடுகள் இருப்பதால் பல தவறான தீர்ப்புகள் வழங்கப்படு கின்றன; 5. தண்டனை என்பது குற்றவாளி மனந் திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பைத் தருவதாக இருக்க
வேண்டும்;
6. மரண தண்டனையை முற்றிலுமாக
ஒழிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உள்ளது.
எனினும் அந்த
ஆணையத்தில் உறுப்பினர்களாக இருந்த நீதிபதி உஷா மெஹ்ரா, சட்டத்துறையின் முன்னாள் மூத்த அதிகாரிகள் பி.கே.மல்ஹோத்ரா மற்றும்
டாக்டர்.சஞ்சய் சிங் ஆகியோர் இந்த அறிக்கையில் கையெழுத்திடவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்திய தேசிய சட்ட
ஆணையத்தின் இந்த அறிக்கை பரிந்துரை ரீதியிலானது மட்டுமே. அதை அரசு ஏற்றுக்கொள்ள
வேண்டும் எனும் கடப்பாடு இல்லை. ( நன்றி: கீற்று, 07 மார்ச் 2016,
பிபிசி தமிழ், 31 ஆகஸ்ட் 2015)
2000 முதல் 2015 வரையிலான காலத்தில்,
கீழ்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட மரண தண்டனைத்
தீர்ப்புகளில் 95.7
விழுக்காடும், உச்ச நீதிமன்றத்தின் மரண
தண்டனைத் தீர்ப்புகளில் 23.2
விழுக்காடும் பிழையானவை என்று உச்ச நீதிமன்றமே ஒத்துக்
கொண்டுள்ளது. (The
Hindu, 1-9-15).( நன்றி: கீற்று, 07 மார்ச் 2016 )
இது போன்ற
காரணங்களால் மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் வலுவடைந்து வருகிறது. எனினும்,
மரண தண்டனை ஒழிப்புக்கு எதிராகவே இந்தியா நிற்கிறது.
மரண தண்டனையால் ஏற்படும் விளைவுகள்
நன்மையே!
இன்று
பரவலாக மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் உலகின் பல பாகங்களிலும் ஒலிக்கத் தொடங்கி
இருக்கிறது.
மரண
தண்டனை ஒன்றே குற்றங்களை குறைக்காது, அது மனித நேயமற்ற செயல், மனித உரிமை மீறல் என்றெல்லாம் அதற்கு அவர்கள் காரணங்களை
அடுக்கிக் கொண்டே செல்கின்றார்கள்.
ஒரு
கொலையாளியைக் கொலை செய்வதால் எதிர்காலத்தில் அவனாலோ அல்லது வேறு சிலராலோ கொலைகள்
இடம் பெறமாட்டாது.
எனவே, ‘பழிக்குப் பழிவாங்குவதில் வாழ்வுண்டு’ என்று குர்ஆன் கூறியதில் பல்வேறு அர்த்தங்கள் உண்டு.
وَلَكُمْ
فِی الْقِصَاصِ حَیٰوةٌ یّٰۤاُولِی الْاَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ
நல்லறிவாளர்களே!
கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய
குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்.( அல்குர்ஆன்: 2:
179 )
எதிர்காலத்தில்
பலருக்கு வாழ்வுண்டு. அதாவது, வழங்கப்படும்
இத்தண்டனைகள் எதிர்காலத்தில் பல கொலைகள் இடம் பெறாது தடுக்கும் என்பதே இங்கு
கவனிக்கத்தக்கதாகும்.
எந்த நிமிடமும்
எதுவும் நிகழலாம் என்ற அச்ச உணர்வு மனித மனங்களில் பயங்கர உணர்வு அலைகளைத் தோற்றுவிக்கும்.
மாறாக, பாதுகாப்பான சமூக அமைப்பைத் உத்திரவாதப் படுத்த கடுமையான தண்டனையும் ஒரு
கருவியாக அமைந்திருக்கின்றது.
கொலை செய்வது மாபாதகச் செயலாகும்..
அல்லாஹ் தனது
வேதத்தில் பல இடங்களில் ஷிர்க்குடனும் (இணைவைப்பு) சேர்த்தே இக்கொலையைக்
குறிப்பிட்டுள்ளான். உதாரணமாக சூரத்துல் ஃபுர்கானில் அல்லாஹ் கூறினான்:-
وَالَّذِينَ
لاَ يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَـهَا ءَاخَرَ وَلاَ يَقْتُلُونَ النَّفْسَ الَّتِى
حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ
(இன்னும் அவர்கள்
அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளையும் அழைக்க மாட்டார்கள்; மேலும் அல்லாஹ் தடை செய்துள்ள எந்த ஓர் உயிரையும் தகுந்த காரணமின்றி அவர்கள்
கொல்ல மாட்டார்கள்). அல்லாஹ் மேலும் கூறினான்:
قُلْ
تَعَالَوْا اَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَیْكُمْ اَلَّا تُشْرِكُوْا بِهٖ
شَیْـًٔا وَّبِالْوَالِدَیْنِ اِحْسَانًا وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ مِّنْ
اِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُكُمْ وَاِیَّاهُمْ وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا
ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِیْ حَرَّمَ اللّٰهُ
اِلَّا بِالْحَقِّ ذٰلِكُمْ وَصّٰىكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ
“வாருங்கள்! உங்கள் இறைவன்
உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக்
காண்பிக்கிறேன்;
எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து
உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான
மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை
செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு
(இவ்வாறு) போதிக்கின்றான். ( அல்குர்ஆன்: 6: 151 )
கொலையைத்
தடுத்திடும் முகமாகஇன்னும் பல வசனங்களும் ஹதீஸ்களும் உள்ளன. ஸஹீஹைனில் இப்னு
மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது:
«أوَّلُ ما يُقضى بينَ النَّاسِ يَومَ القيامةِ في الدِّماءِ. [وفي روايةٍ]: يُحكَمُ بينَ النَّاسِ. خلاصة حكم المحدث : [صحيح] الراوي : عبدالله بن مسعود | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 1678»
(மறுமை நாளில் மக்களிடையே
முதன்முதலில் தீர்ப்பளிக்கப்படுவது இரத்தக் குற்றங்கள் குறித்தே ஆகும்.) அபூ
தாவூத் பதிவு செய்துள்ள ஹதீஸில் உபாதா பின் அஸ்-ஸாமித் (ரழி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்:
«لَا يَزَالُ الْمُؤْمِنُ مُعْنِقًا صَالِحًا، مَا لَمْ يُصِبْ دَمًا حَرَامًا، فَإِذَا أَصَابَ دَمًا حَرَامًا بَلَّح»
(தடுக்கப்பட்ட இரத்தத்தைச்
சிந்தாத வரை ஒரு நம்பிக்கையாளர் நற்செயல்கள் செய்பவராகவும் சுமையற்றவராகவும்
இருப்பார். எப்போது அவர் தடுக்கப்பட்ட இரத்தத்தைச் சிந்துகிறாரோ, அப்போது அவர் பெரும் சுமைக்குள்ளாவார்.) மற்றொரு ஹதீஸ் கூறுகிறது:
«لَزَوَالُ الدُّنْيَا أَهْوَنُ عِنْدَ اللهِ مِنْ قَتْلِ رَجُلٍ مُسْلِم»
(ஒரு முஸ்லிம் ஆணைக்
(அல்லது பெண்ணைக்) கொல்வதை விட, ஒட்டுமொத்த உலகமும்
அழிவது அல்லாஹ்வின் பார்வையில் மிக இலகுவானதாகும்.)
குறிப்பு:- இது
ஹதீஸ் அல்ல அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலி அவர்களின் வார்த்தைகள் தான் என்றும் சிலர்
கூறுகின்றனர்.
இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் குறித்த சமூகப் பார்வை...
இஸ்லாமியத் தண்டனைகள்
காட்டுமிராண்டித்தனமானவை என்றும் நாகரிக உலகுக்குப் பொருத்தமற்றவை என்றும்
முஸ்லிம் அல்லாதவர்களும் ஏன் முஸ்லிம்களிற் சிலரும் கூட எழுதவும் பேசவும்
தலைப்பட்டு விட்ட சூழலில் நம் நாட்டில் படுமோசமாக நிகழும் பாலியல் குற்றங்கள், கொலைகள்,
கொள்ளைகள் போன்றவற்றுக்கு அரபு நாட்டுப்பாணியிலான தண்டனை
அவசியம் என முஸ்லிம் அல்லாத மக்களில் பெரும்பாலானோர் கடந்த காலங்களில் பேசி
வருகின்றார்கள்.
அத்தகைய தண்டணைகளை
அமுலாக்குவதன் மூலமாக மட்டுமே பொதுச் சமுதாயத்தைப் பாதுகாக்க முடியும் என்பது
அவர்களது கருத்தாகும்.
ஆனால், இஸ்லாம் கூறும் குற்றவியல் சட்டங்கள் (Criminal Laws) நிலையானவை என்றும்,
எக்காலத்துக்கும் பொருத்தமானவை என்றும், எல்லாவித நலன்களையும் ஈட்டித்தருபவை என்றும் நம்புவது ஒரு முஸ்லிமின் தலையாய
கடமையாகும். அதை சந்தேகிப்பது மிகப் பெரிய பாவம் மாத்திரமின்றி இறை நிராகரிப்புமாகும்.
குர்ஆனின்
சட்டங்களை வைத்து ஆட்சி செய்யாதவர்களும் அவற்றை விட்டுவிட்டு வேறு சட்டங்களை
நாடுவோரும் விசுவாசிகள் அல்லர் என்பது குர்ஆனின் ஆணித்தரமான கருத்தாகும்.
فَلَا
تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ وَلَا تَشْتَرُوْا بِاٰیٰتِیْ ثَمَنًا قَلِیْلًا ؕ
وَمَنْ لَّمْ یَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓىِٕكَ هُمُ الْكٰفِرُوْنَ
۟
(முஃமின்களே!) நீங்கள்
மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்.
என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம். ( அல்குர்ஆன்: 5: 44 )
குற்றவியல் தண்டனைச் சட்டம் குறித்த இஸ்லாமிய பார்வை...
இஸ்லாம் மிகவும்
விரிவாகவும் தெளிவாகவும் பேசியிருக்கிற விஷயங்களில் "குற்றவியல் தண்டனைச்
சட்டம்" குறித்த பார்வை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
குற்றங்களுக்கான
தண்டனைகளை (Criminal
Laws) இஸ்லாம் மூன்று விதமாக கையாள்கிறது.”ஜராஇமுல் ஹுதூத்”,
”ஜராஇமுல் கிஸாஸ்”, ”ஜராஇமுஸ் தஃஸீர்” என்ற மூன்று பிரிவுகளாகும்.
أولاً:
جرائم الحدود (حقوق الله)
وهي
الجرائم التي حدد الله عقوباتها في القرآن والسنة، ولا يجوز فيها التنازل أو
الشفاعة إذا وصلت للحاكم:
الزنا:
عقوبته الرجم للمحصن والجلد لغير المحصن.
القذف:
اتهام العفيفات بالزنا، وعقوبته ثمانون جلدة.
السرقة:
أخذ مال الغير خفية، وعقوبتها قطع اليد بشروط.
الحرابة
(قطع الطريق): الإفساد في الأرض بالسلاح، وعقوبتها القتل أو الصلب أو قطع اليد
والرجل من خلاف.
شرب
الخمر: عقوبتها الجلد.
الردة:
ترك الإسلام.
البغي:
الخروج على الإمام العادل.
முதல்வகைக்
குற்றங்களாக விபச்சாரம்,
அபாண்டம், மது அருந்தல், களவு,
அரசுக்கெதிரான புரட்சி, வழிப்பறிக் கொள்ளை, மதம் மாறிச் செல்லுதல் போன்றன அடங்கும்.
அவை
ஒவ்வொன்றுக்குமான தண்டனைகள் பற்றி குர்ஆன், சுன்னாவில் தெளிவான பல
முடிவுகள் தரப்பட்டிருக்கின்றன.
இந்த குற்றங்கள்
நிரூபிக்கப்பட்டால் மன்னிப்புமில்லை. நிர்ணயிக்கப்பட்ட தண்டனைக்கு பதிலாக வேறு
தண்டனைகளை வழங்கவும் முடியாது. தண்டப்பணம் (ஈட்டுத்தொகை)பெறவும் முடியாது.
இவை அனைத்தும்
"ஹுகூகுல்லாஹ்" (அல்லாஹ்வின் உரிமைகள்) என்ற பிரிவில்
வகைப்படுத்தப்படுகிறது.
ثانياً:
جرائم القصاص (حقوق العباد)
وهي
العقوبات المماثلة للجناية (السن بالسن، العين بالعين، القتل بالقتل).
القتل
العمد: القصاص هو الأصل (الإعدام)، مع حق أولياء الدم في العفو أو قبول الدية.
ما دون
النفس: الجروح والاعتداءات الجسدية المماثلة.
أحكام
وقواعد عامة:
الشبهة:
تُدرأ الحدود بالشبهات (قاعدة: الحدود تدرأ بالشبهات).
التنازل:
لا يجوز في الحدود، ويجوز في القصاص (العفو).
التطبيق:
تتطلب شروطاً صارمة في الإثبات (شهود، إقرار).
"ஜராஇமுல்
கிஸாஸ்" (பழிக்குப்பழி வழங்க முடியுமான குற்றங்கள்) எனப்படும்.
அதாவது மனிதனின்
உயிர் மீதோ,
உடலின் மீதோ செய்யப்படும் அனைத்து வித அத்துமீறல்கள் பற்றியும்
இப்பிரிவு பேசுகின்றது. கொலை செய்வது, காயப்படுத்துவது, அடிப்பது,
உறுப்புக்களை நீக்கி விடுவது போன்றவற்றுக்கான தண்டனைகள்
பற்றி இங்கு பேசப்படுகிறது. இது "ஹுகூகுல் இபாத்" (அடியார்களின்
உரிமைகள்) என்ற பிரிவில் வகைப்படுத்தப்படுகிறது.
கொலையைப்
பொறுத்தவரை 1.வேண்டுமென்று செய்யப்பட்ட கொலை, 2.வேண்டுமென்று
செய்யப்பட்டது போன்ற கொலை (வேண்டுமென்று செய்யப்பட்டது போன்ற கொலை (Premeditated Murder) என்பது,
ஒருவர் மற்றொருவரைக் கொல்வதற்கு முன்பே திட்டமிட்டு, அதற்கான ஆயத்தங்களைச் செய்து, நோக்கத்துடன் (Intent) நிறைவேற்றும் திட்டமிட்ட குற்றமாகும்.), 3.கைமோசக் கொலை
(தீங்கு விளைவிக்கும் நோக்கம் (Intent) இல்லாவிட்டாலும், பொறுப்பற்ற செயலால் ஒருவர் உயிரிழந்தால் அதுவும் கைமோசக்கொலையாகும்) என 3 பிரிவாக அமையும்.
முதலாவதுநிலையில் ,அதாவது,வேண்டுமென்றே கொலை செய்யப்பட்டால், இறந்தவருடைய பொறுப்புதாரிகளான
உறவினர்களுக்கு கொலை செய்தவரை பழிக்குப்பழியாக கொலை செய்வதற்கு உரிமையுண்டு.
அல்லது
பொறுப்புதாரிகளில் ஒருவர் மன்னிக்கும் பட்சத்தில் கொலைத்தண்டனை ரத்து செய்யப்பட்டு
தண்டப் பணம்;
செலுத்துதல் என்ற நிலைக்கு அது மாறிவிடும். தண்டப்பணமும் தேவையில்லை என்ற முடிவுக்கு வருவதற்கும் பொறுப்புதாரிகளுக்கு
உரிமை உண்டு. இது விஷயத்தில் ஆட்சியாளர்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது.
அதாவது தண்டனையைத்
தீர்மானிக்கும் பூரண உரிமை அல்லது மன்னிக்கும் உரிமை பொறுப்புதாரிகளுக்குப்
பூரணமாக வழங்கப்பட்டுள்ளது.
கொலை செய்தவனைக்
கொல்ல முடியும். அதற்கான உரிமை கொல்லப்பட்டவரது பொறுப்பாளருக்குண்டு.
وَلَا
تَقْتُلُوا النَّفْسَ الَّتِیْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَقِّ وَمَنْ قُتِلَ
مَظْلُوْمًا فَقَدْ جَعَلْنَا لِوَلِیِّهٖ سُلْطٰنًا فَلَا یُسْرِفْ فِّی
الْقَتْلِ اِنَّهٗ كَانَ مَنْصُوْرًا
(கொலையை) அல்லாஹ்
விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து
விடாதீர்கள்;
எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிஸுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம்
அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம்
பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது; நிச்சயமாக கொலையுண்டவரின்
வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார்.( அல்குர்ஆன்: 17: 33 )
ஆனால், தண்டிக்காமல் பெருந்தன்மையோடு மன்னிக்கலாம். மன்னிப்புக்கான அனுமதியானது அல்லாஹ்வின்
அருளால் வழங்கப்படும் சலுகையாகும்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَیْكُمُ الْقِصَاصُ فِی الْقَتْلٰی اَلْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالْاُنثى بِالْاُنثى فَمَنْ عُفِیَ لَهٗ مِنْ اَخِیْهِ شَیْءٌ فَاتِّبَاع بِالْمَعْرُوْفِ وَاَدَآءٌ اِلَیْهِ بِاِحْسَانٍ ذٰلِكَ تَخْفِیْفٌ مِّنْ رَّبِّكُمْ وَرَحْمَةٌ فَمَنِ اعْتَدٰی بَعْدَ ذٰلِكَ فَلَهٗ عَذَابٌ اَلِیْمٌ
ஈமான் கொண்டோரே!
கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது-
சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்)
சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை
செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும்
செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்;
ஆகவே, இதன் பிறகு (உங்களில்)
யார் வரம்பு மீறுகிறாரோ,
அவருக்குக் கடுமையான வேதனையுண்டு. ( அல்குர்ஆன்: 2: 178 )
தவறுதலாக கொலை
நிகழ்ந்து விடும்பட்சத்தில் அதற்கான பரிகாரம் என்ன என்றும் அல்லாஹ் தெளிவு
படுத்துகின்றான்.
وَمَا
كَانَ لِمُؤْمِنٍ اَنْ یَّقْتُلَ مُؤْمِنًا اِلَّا خَطَـًٔا وَمَنْ قَتَلَ
مُؤْمِنًا خَطَـًٔا فَتَحْرِیْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ وَّدِیَةٌ مُّسَلَّمَةٌ
اِلٰۤی اَهْلِهٖۤ اِلَّاۤ اَنْ یَّصَّدَّقُوْا فَاِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ
لَّكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِیْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ وَاِنْ كَانَ مِنْ
قَوْمٍۭ بَیْنَكُمْ وَبَیْنَهُمْ مِّیْثَاقٌ فَدِیَةٌ مُّسَلَّمَةٌ اِلٰۤی
اَهْلِهٖ وَتَحْرِیْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ فَمَنْ لَّمْ یَجِدْ فَصِیَامُ شَهْرَیْنِ
مُتَتَابِعَیْنِ تَوْبَةً مِّنَ اللّٰهِ وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا
தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல; உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் - அவனுடைய குடும்பத்தார்
(நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலொழிய; கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக (ஆனால்) முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை; இறந்த) அவன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச்
சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்; இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு
வைக்க வேண்டும் - அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும், பூரண ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.
وَمَنْ
یَّقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَآؤُهٗ جَهَنَّمُ خٰلِدًا فِیْهَا وَغَضِبَ
اللّٰهُ عَلَیْهِ وَلَعَنَهٗ وَاَعَدَّ لَهٗ عَذَابًا عَظِیْمًا
எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே
ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்)
தயாரித்திருக்கிறான்.(
அல்குர்ஆன்: 4: 92,93 )
العقوبات
المقرَّرة لجرائم الحدود والقصاص هي عقوبات مقدَّرة معينة، فهي عقوبات لازمة، ليس
للقاضي أنْ يستبدلَ بها غيرها، وليس له أنْ ينقص منها أو يزيد فيها. التشريع الجنائي
مقارنًا بالقانون الوضعيِّ؛ عبدالقادر عودة 1/ 687.
”ஜராஇமுல் ஹுதூத்”, ”ஜராஇமுல் கிஸாஸ்”,
இந்த இரண்டு வகை குற்றவியல் தண்டனைச் சட்டத்தைப் பொறுத்தவரை
இதற்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைகள் குர்ஆன் மற்றும் சுன்னாவால் நிர்ணயிக்கப்பட்ட
ஒன்றாகும். அதை நடைமுறைப் படுத்தல் அவசியமாகும். மேலும், தண்டனைகளை குறைப்பதற்கோ, கூட்டுவதற்கோ அதில்
மாற்றங்கள் செய்வதற்கோ நீதிமன்றங்களுக்கும் நீதிபதிக்கும் எவ்வித அனுமதியும்
இல்லை. ( நூல்: அத் தஷ்ரீஇல் ஜினாஈ மகாரினம் பில் கானூனில் வள்இய்யி, லிஇமாமி அப்துல் காதிர் வூதா ஹஃபிழஹுல்லாஹ், பாகம்: 1,
பக்கம்: 687 )
கொலை செய்தால் மரண தண்டனை தான்!
أنَّ
يَهوديًّا رَضَّ رَأسَ جاريةٍ بينَ حَجَرَينِ، قيلَ: مَن فعَلَ هذا بكِ، أفُلانٌ،
أفُلانٌ؟ حتَّى سُمِّيَ اليَهوديُّ، فأومَأت برَأسِها، فأُخِذَ اليَهوديُّ،
فاعتَرَفَ، فأمَرَ به النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم فرُضَّ رَأسُه بينَ
حَجَرَينِ. خلاصة حكم المحدث : [صحيح] الراوي : أنس بن مالك | المحدث : البخاري |
المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 2413 | التخريج : أخرجه مسلم (1672)
باختلاف يسير
அனஸ் இப்னு மாலிக்
( ரலி ) அறிவித்தார் . ஒரு யூதன் ஒரு சிறுமியின் வெள்ளி நகைக்காக அந்தச்
சிறுமியைக் கல்லால் ( நசுக்கிக் ) தாக்கினான் . அவளுடைய உயிர் ஊசலாடிக்
கொண்டிருந்த நிலையில் நபி ﷺ
அவர்களிடம் அச்சிறுமி கொண்டு வரப்பட்டாள் . அப்போது ( அவளிடம் ) நபி ( ஸல் )
அவர்கள் ,
' இன்னாரா உன்னைத் தாக்கினார் ? ' என்று கேட்டார்கள் . அவள் ' இல்லை ' என்று தலையால் சைகை செய்தாள் . பிறகு இரண்டாவது முறை ( வேறொரு நபர் குறித்து )
நபி ( ஸல் ) அவர்கள் கேட்டபோது அப்போதும் ' இல்லை ' என்று தலையால் சைகை செய்தாள் . மூன்றாம் முறை நபி ﷺ அவர்கள் ( கொலையாளியின்
பெயர் கூறி ) அவளிடம் கேட்டபோது அவள் ' ஆம் ' என்று தலையால் சைகை செய்தாள் . எனவே , இரண்டு கற்களுக்கிடையில் ( அவன் தலையை வைத்து நசுக்கி ) அவனைக் கொல்லுமாறு நபி ﷺ அவர்கள் உத்தரவிட்டார்கள். ( நூல்: புகாரி )
தவறுதலாக செய்த கொலை...
من حديث
عائشة قالت: "لما كان يوم أحد هزم المسلمون، فصرخ إبليس لعنة الله عليه: أي
عباد الله، أخراكم، فرجعت أولاهم فاجتلدت هي وأخراهم، فبصر حذيفة فإذا هو بأبيه
اليمان فقال: أي عباد الله أبي أبي. قال: قالت: فوالله ما احتجزوا حتى قتلوه، فقال
حذيفة: يغفر الله لكم، قال عروة: فوالله ما زالت في حذيفة بقية خير حتى لحق بالله"
ஆயிஷா ( ரலி )
அறிவித்தார்கள்:- உஹுதுப் போரின் ( தொடக்கத்தின் போது இணைவைப்பாளர்கள்
தோற்கடிக்கப்பட்டார்கள் . பின்னர் மக்களிடையே இப்லீஸ் புகுந்து ) அல்லாஹ்வின்
அடியார்களே ! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்' என்று கூவினான். எனவே,
முஸ்லிம்களில் முன் அணியினர் பின் அணியினரை நோக்கித்
திரும்பி ( அவர்களைத் தாக்கத் தொடங்கினர். அப்போது முஸ்லிம்கள் அல்யமான் ( ரலி )
அவர்களைக் கொன்றுவிட்டனர். ( அவரின் புதல்வர் ) ஹுதைஃபா ( ரலி ) அவர்கள் 'என் தந்தை என் தந்தை'
என்று கூறினார் .
(
ஆயினும் எதிரி என்று நினைத்து ) அவரின் தந்தையை மக்கள்
கொன்றுவிட்டனர். அப்போது ஹுதைஃபா ( ரலி ) அவர்கள்,' அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!' என்று ( கொலை செய்தவர்களை
நோக்கிக் கூறினார்கள். ( நூல்: புகாரி )
وقد جاء
زيادة عند ابن هشام عن ابن إسحاق قال حدثني عاصم بن عمر بن قتادة عن محمود بن لبيد
فقال حذيفة: (قتلتم أبي! قتلتم أبي! قالوا: والله ما عرفناه وصدقوا، فقال حذيفة:
يغفر الله لكم فأراد رسول الله ﷺ أن يديه، فتصدق حذيفة بديته على المسلمين، فزاده
ذلك عند رسول الله ﷺ خيرًا)
இன்னொரு
அறிவிப்பில்... நபி ﷺ
அவர்கள் கொலை செய்தவர்களிடம் இருந்து ஈட்டுத் தொகை பெற்று ஹுதைஃபா ரலி அவர்களுக்கு
வழங்கினார்கள். ஆனால்,
அந்த ஈட்டுத்தொகையை ஹுதைஃபா ரலி அவர்கள் மதீனாவின் ஏழை
முஸ்லிம்களுக்கு வழங்கி விட்டார்கள். இந்த ஹதீஸை அறிவிக்கும் உர்வா ரலி அவர்கள்
கூறினார்கள்:- இந்த உலகை விட்டு விடைபெற்று செல்லும் வரை ஹுதைஃபா ரலி அவர்களின்
மன்னிக்கும் அந்த மனப்பான்மைக்காக சிறப்பான வாழ்வையே அவர்கள் வாழ்ந்தார்கள்.
حَدَّثَنَا
أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ خِرَاشٍ حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ
حَدَّثَنَا مُعْتَمِرٌ قَالَ سَمِعْتُ أَبِي يُحَدِّثُ أَنَّ خَالِدًا
الْأَثْبَجَ ابْنَ أَخِي صَفْوَانَ بْنِ مُحْرِزٍ حَدَّثَ عَنْ
صَفْوَانَ بْنِ مُحْرِزٍ أَنَّهُ حَدَّثَ : أَنَّ جُنْدَبَ بْنَ عَبْدِ
اللَّهِ الْبَجَلِيَّ بَعَثَ إِلَى عَسْعَسِ بْنِ سَلَامَةَ زَمَنَ
فِتْنَةِ ابْنِ الزُّبَيْرِ فَقَالَ اجْمَعْ لِي نَفَرًا مِنْ إِخْوَانِكَ
حَتَّى أُحَدِّثَهُمْ فَبَعَثَ رَسُولًا إِلَيْهِمْ فَلَمَّا اجْتَمَعُوا جَاءَ
جُنْدَبٌ وَعَلَيْهِ بُرْنُسٌ أَصْفَرُ فَقَالَ تَحَدَّثُوا بِمَا كُنْتُمْ
تَحَدَّثُونَ بِهِ حَتَّى دَارَ الْحَدِيثُ فَلَمَّا دَارَ الْحَدِيثُ إِلَيْهِ
حَسَرَ الْبُرْنُسَ عَنْ رَأْسِهِ فَقَالَ إِنِّي أَتَيْتُكُمْ وَلَا أُرِيدُ أَنْ
أُخْبِرَكُمْ عَنْ نَبِيِّكُمْ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ بَعَثَ بَعْثًا مِنْ الْمُسْلِمِينَ إِلَى قَوْمٍ مِنْ الْمُشْرِكِينَ
وَإِنَّهُمْ الْتَقَوْا فَكَانَ رَجُلٌ مِنْ الْمُشْرِكِينَ إِذَا شَاءَ أَنْ
يَقْصِدَ إِلَى رَجُلٍ مِنْ الْمُسْلِمِينَ قَصَدَ لَهُ فَقَتَلَهُ وَإِنَّ
رَجُلًا مِنْ الْمُسْلِمِينَ قَصَدَ غَفْلَتَهُ قَالَ وَكُنَّا نُحَدَّثُ أَنَّهُ
أُسَامَةُ بْنُ زَيْدٍ فَلَمَّا رَفَعَ عَلَيْهِ السَّيْفَ قَالَ لَا إِلَهَ
إِلَّا اللَّهُ فَقَتَلَهُ فَجَاءَ الْبَشِيرُ إِلَى النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ فَأَخْبَرَهُ حَتَّى أَخْبَرَهُ خَبَرَ
الرَّجُلِ كَيْفَ صَنَعَ فَدَعَاهُ فَسَأَلَهُ فَقَالَ لِمَ قَتَلْتَهُ قَالَ
يَا رَسُولَ اللَّهِ أَوْجَعَ فِي الْمُسْلِمِينَ وَقَتَلَ فُلَانًا وَفُلَانًا
وَسَمَّى لَهُ نَفَرًا وَإِنِّي حَمَلْتُ عَلَيْهِ فَلَمَّا رَأَى السَّيْفَ قَالَ
لَا إِلَهَ إِلَّا اللَّهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ أَقَتَلْتَهُ قَالَ نَعَمْ قَالَ فَكَيْفَ تَصْنَعُ بِلَا إِلَهَ
إِلَّا اللَّهُ إِذَا جَاءَتْ يَوْمَ الْقِيَامَةِ قَالَ يَا رَسُولَ اللَّهِ
اسْتَغْفِرْ لِي قَالَ وَكَيْفَ تَصْنَعُ بِلَا إِلَهَ إِلَّا اللَّهُ إِذَا
جَاءَتْ يَوْمَ الْقِيَامَةِ قَالَ فَجَعَلَ لَا يَزِيدُهُ عَلَى أَنْ يَقُولَ
كَيْفَ تَصْنَعُ بِلَا إِلَهَ إِلَّا اللَّهُ إِذَا جَاءَتْ يَوْمَ
الْقِيَامَةِ
ஜுன்தப் பின்
அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி),
அஸ்அஸ் பின் ஸலமா (ரஹ்) அவர்களிடம், “உங்களுடைய சகோதரர்களைச் சார்ந்தோரை எனக்காக ஒன்று திரட்டுங்கள்; அவர்களிடம் நான் பேசவேண்டும்” என்று சொல்லி
அனுப்பினார்கள். இது,
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது காலத்தில் நடந்த
ஒரு சண்டையின் போது நடந்தது. அஸ்அஸ் ஒரு தூதுவரை (தம் சகோதரர்களை அழைத்து வருமாறு)
அவர்களிடம் அனுப்பி வைத்தார். அவ்வாறே அவர்கள் ஒன்று கூடியதும் ஒரு மஞ்சள் நிறத்
தலைத்துணியை (முக்காடிட்டு) அணிந்தவர்களாக ஜுன்தப் (ரலி) (அவர்களிடம்) வந்து, “நீங்கள் பேசிக் கொண்டிருந்ததை(த் தொடர்ந்து)ப் பேசுங்கள்” என்று சொன்னார்கள். அதையடுத்து கூடியிருந்தோரின் பேச்சு ஒரு சுற்று வந்தது.
ஜுன்தப் (ரலி) பேச வேண்டிய முறை வந்தபோது, அவர்கள் தமது
தலையிலிருந்த முக்காட்டை விலக்கிவிட்டு, “நான் உங்களிடம்
வரும்போது உங்களுக்கு உங்களுடைய நபிச்செய்தி ஒன்றை அறிவிக்க வேண்டும் என்ற
நினைப்புடன் வரவில்லை. (ஆனால், இப்போது கேளுங்கள்:)
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) இணைவைப்பாளர்களில் ஒரு கூட்டத்தாரை நோக்கி முஸ்லிம்களின் படைப்பிரிவொன்றை
அனுப்பி வைத்தார்கள். அவர்கள் (அக்கூட்டத்தாரிடம் சென்று) அவர்களை(ப்
போர்க்களத்தில்) சந்தித்தனர். அப்போது இணைவைப்பாளர்களில் ஒருவர், முஸ்லிம்களில் பலரை நினைத்த மாத்திரத்தில் தாக்கிக் கொன்று போட்டுக்
கொண்டிருந்தார். அந்த இக்கட்டான சூழலில், முஸ்லிம் வீரர்களில்
ஒருவர் –
அவர் உஸாமா பின் ஸைத் என்று நாங்கள் சொல்வோம் – அந்த எதிரி அயரும் வேளை காத்திருந்து, அவர் மீது வாளை
உயர்த்தியபோது அவர்,
‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று (ஏகத்துவ
உறுதிமொழியைக்) கூறினார். ஆனால் (அதைப் பொருட்படுத்தாமல்) உஸாமா (ரலி) அவரைக்
கொன்று விட்டார். (அந்தப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர்) அந்த வெற்றியை
அறிவிப்பதற்காக நபி (ஸல்) அவர்களிடம் வந்தவரிடம் நபி (ஸல்) அந்தப் போரின் நிலவரம்
குறித்து விசாரித்தார்கள். அப்போது நடந்த நிகழ்ச்சிகளையும் (கொல்லப்பட்ட) அந்த
மனிதர் நடந்து கொண்ட விதம் பற்றியும் தெரிவித்தார். ஆகவே, நபி(ஸல்) அவர்கள் உஸாமா (ரலி) அவர்களை வரவழைத்து “நீ ஏன் அவரைக் கொன்றாய்?” என்று கேட்டார்கள். உஸாமா
(ரலி), “அல்லாஹ்வின் தூதரே! அம்மனிதர் முஸ்லிம்களுக்குப் பெருத்த சேதத்தை
ஏற்படுத்தினார். (சில முஸ்லிம் வீரர்களது பெயரைக் குறிப்பிட்டு) இன்னார் இன்னாரை
அவர் கொன்று விட்டார். ஆகவே அவரை நான் தாக்கினேன். அவர் வாளைக் கண்டதும் (பயந்து
போய்) ‘லா இலாஹ இல்லல்லாஹ்’
என்று கூறினார்” என்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) “அவரை நீ கொன்றுவிட்டாயா?” என்று கேட்டார்கள்.
உஸாமா(ரலி) அவர்கள் “ஆம்”
என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “(அவர் ஏற்றுக் கொண்ட ஏகத்துவ உறுதிமொழியான) லா இலாஹ இல்லல்லாஹ் மறுமை நாளில்
(உனக்கெதிரான சாட்சியாக) வரும்போது நீ என்ன செய்வாய்?” என்று திரும்பத் திரும்பக் என்னைக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி), ( நூல்: முஸ்லிம் )
இன்னொரு அறிவிப்பில்... தமக்காக உஸாமா ரலி அவர்கள் நபி ﷺ அவர்களிடம் பாவமன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்திய போது அவர்களின் இந்த செயலுக்காக நபி ﷺ அவர்கள் பாவமன்னிப்பு கோரிட மறுத்து விட்டார்கள் என இமாம் நவவீ ரஹ் அவர்கள் கூறினார்கள்.
