அருள் மறைச்சாரல்
- தராவீஹ் சிந்தனை:- 06.
நன்மையைச் செய்ய
ஆவல் கொள்வோம்!
ஆறாம் நாள்
தராவீஹ் தொழுகையைத் தொழுது முடித்தும், ஐந்தாம் நாள் நோன்பை
நிறைவு செய்தும் அமர்ந்திருக்கின்ற நம் அனைவரின் நோன்பையும், தராவீஹ் தொழுகையையும்,
இன்றைய நாளில் நாம் செய்த இதர வணக்க, வழிபாடுகளையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அங்கீகரித்து அளவிலா நன்மைகளை வழங்குவானாக!
ஆமீன்!
இன்றைய தொழுகையில்
சூரா அல் அன்ஆம் முழுமையாக ஓதப்பட்டுள்ளது.
165 வசனங்களைக்
கொண்டுள்ள இவ்வத்தியாயம் முழுவதும் ஹிஜ்ரத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்னர்
மக்காவில் ஒரே இரவில் அருளப்பட்டவையாகும்.
நபிமார்களின்
பெயர்கள் இடம் பெரும் அத்தியாயங்களில் இது முதல் அத்தியாயம். சுமார் 23 நபிமார்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
அல்ஹம்துலில்லாஹ்
என்பதைக் கொண்டு ஆரம்பிக்கப்படும் ஐந்து சூராக்களில் இரண்டாம் சூரா இதுவாகும்.
இன்று ஓதப்பட்ட
வசனங்களில் 160
- வது வசனம் நன்மை செய்ய ஒரு இறைநம்பிக்கையாளர் ஆசைப் பட
வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
مَنْ
جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ عَشْرُ اَمْثَالِهَا وَمَنْ جَآءَ بِالسَّیِّئَةِ
فَلَا یُجْزٰۤی اِلَّا مِثْلَهَا وَهُمْ لَا یُظْلَمُوْنَ
எவர் ஒருவர் (ஒரு)
நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே
கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.
عن ابن
عباس رضي الله عنهما:- عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا
يَرْوِي عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ قَالَ: قَالَ: «إِنَّ اللهَ كَتَبَ
الْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ، ثُمَّ بَيَّنَ ذَلِكَ، فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ
فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَإِنْ
هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللهُ لَهُ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ
إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ، إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ، وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ
فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَإِنْ
هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللهُ لَهُ سَيِّئَةً وَاحِدَةً». [صحيح]
- [متفق عليه] - [صحيح البخاري: 6491]
இப்னு அப்பாஸ்
(ரழி) கூறுகிறார்கள்: "அல்லாஹ் கூறியதாக நபி ﷺ அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹ் நன்மைகளையும்
தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை
விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனதில்) எண்ணிவிட்டாலே
அதைச் செயல்படுத்தா விட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக
அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக,
இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர்
ஒரு தீமை செய்ய எண்ணி,
(அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி
அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு தீமையையே
அல்லாஹ் எழுதுகிறான்". ( நூல்: புகாரி, முஸ்லிம் )
இந்த உலகில்
வாழும் போது நமது செயல்கள் எவ்வாறு இருந்ததோ அதன் அடிப்படையில் தான் அல்லாஹ்
மறுமையில் நமக்குத் தீர்ப்பு வழங்குவான்.
இதை நினைவில்
கொண்டு தீமையான காரியங்களை விட்டு விலகி இருப்பதோடு, முடிந்தளவுக்கு நன்மையான காரியங்களை அதிகமதிகம் செய்ய வேண்டும்.
இத்தகைய ஆர்வமும்
அக்கறையும் எப்போதும் இருக்க வேண்டுமெனில், நமது நற்காரியங்களுக்கு
அல்லாஹ் எவ்வாறெல்லாம் கூலியை வழங்குகிறான் என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.
1)
நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் - நிய்யத் இருக்க வேண்டும்.
மார்க்க
விசயத்திலோ,
உலக விசயத்திலோ ஏதேனும் ஒரு நற்காரியத்தைச் செய்ய வேண்டுமென
நினைத்தால்,
அந்த நல்ல எண்ணத்தைப் பாராட்டும் வகையில் அதற்கும் அல்லாஹ்
கூலியை வழங்குகிறான்.
وَإِذَا
أَرَادَ أَنْ يَعْمَلَ حَسَنَةً فَلَمْ يَعْمَلْهَا فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً،
فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا لَهُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ
ضِعْفٍ
“(எனது அடியான்) அவன் ஒரு
நன்மை புரிய எண்ணிவிட்டாலே அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை
எழுதுங்கள். அதை அவன் செய்துவிட்டாலோ அதை அவனுக்கு பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு
நன்மைகளாக எழுதுங்கள்”
என்று அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுவதாக இறைத்தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
(
நூல்: புகாரி: 7501 )
يقول ابن
المبارك رحمه الله:- رُبَّ عمل صغير تُعظِّمه النيّة، ورُبَّ عمل كبير تُصغِّره
النيّة،
அப்துல்லாஹ் இப்னு
முபாரக் (ரஹ்) அவர்கள் கூறுவார்கள்: “ஓர் அடியான் உயர்வாக
எண்ணி எத்தனையோ சின்னஞ்சிறிய அமல்களைச் செய்கிறான். அவைகள் அவனுக்கு
ரப்பிடமிருந்து மகத்தான கூலியைப் பெற்றுத் தந்து விடுகின்றது.
ஓர் அடியான்
எத்தனையோ பெரிய அமல்களைச் செய்கிறான். அவனுடைய துச்சமான எண்ணத்தின் காரணமாக அவைகள்
அவனுக்கு ரப்பிடமிருந்து மிகக் குறைவான கூலியையே பெற்றுத்தருகிறது”.
எனவே, நம்முடைய அமல்களில் எண்ணம் - நிய்யத்தை சரி செய்ய கடமைப்பட்டிருக்கின்றோம்.
عن أبى
الدرداء رضى الله عنه يبلغ به النبي صلي الله عليه وسلم قال: من أتى فراشه وهو
ينوي أن يقوم فيصلي من الليل فغلبته عينه حتى يصبح كتب له ما نوى، وكان نومه صدقة
عليه من ربه. رواه النسائي وابن ماجه
ஒருவர் அதிகாலை
எழுந்து தஹஜ்ஜத் தொழுகை வேண்டும் என்ற எண்ணத்துடன் படுக்கைக்கு செல்கிறார். ஆனால்
அவருக்கு தூக்கம் மிகைத்து தஹஜ்ஜத் தொழ முடியாமல் போய் விட்டால் தஹஜ்ஜத் தொழ
வேண்டும் என்று அவர் எண்ணிய அந்த எண்ணத்திற்காக தஹஜ்ஜத் தொழுததாக அவருக்கு கூலி
எழுதப்படும். அவர் உறங்கிய அந்த உறக்கம் அவருக்கு சதகாவாக ஆகி விடும். (இப்னு மாஜா
; 1344)
قال
النبي صلى الله عليه وسلم: (إن رجلاً من بني إسرائيل خرج ذات يوم فمر بكثيب أهيل
من الرمل، فقال: لو أن لي مثله سويقاً؛ فأنفقه في سبيل الله، فلما مات عرض الله
عليه صحيفة عمله، فإذا فيها كثيب أهيل من السويق متقبل عند الله، فقال: يا رب! من
أين لي هذا وما رأته عيناي قط؟ قال: إنك مررت ذات يوم بكثيب رمل، فقلت: لو أن لي
مثله سويقاً فأنفقه في سبيل الله فقد قبلته منك) الجوامع للشيخ محمد الحسن الددو
الشنقيطي
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: முன் காலத்தில் வாழ்ந்த பனீ
இஸ்ராயீல் மக்களில் ஒருவர் அடர்த்தியான மணற்பாங்கான ஓரிடத்தை கடந்து சென்ற போது
நாம் காணும் இந்த மணற் பரப்பெல்லாம் கோதுமையாக இருந்திருந்தால் இதை அல்லாஹ்வின்
பாதையில் (ஏழைகளுக்கு உண்பதற்கு) வழங்கி இருக்கலாமே?!" என்று நினைத்தவாறு அந்த இடத்தை கடந்து சென்றார்.
சிறிது காலம்
கழித்து அவர் இறந்தும் போனார். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவருக்கு அவருடைய செயல்
பதிவேட்டை அவருக்கு பிரத்யேகமாக எடுத்துக் காட்டினான். அதில் ஏராளமான கோதுமைகளை
அல்லாஹ்வின் பாதையில் ஏழைகளுக்கு உண்பதற்கு வழங்கியதாக எழுதப்பட்டிருந்தது.
அப்போது அவர்,
அல்லாஹ்விடம் யாஅல்லாஹ்! என் வாழ்நாளில் இவ்வளவு கோதுமைகளை
என் இரண்டு கண்களால் கண்டதே இல்லையே? என்றார். அதற்கு அல்லாஹ்
ஒரு முறை நீ அடர்த்தியான மணற்பாங்கான ஓரிடத்தை கடந்து சென்ற போது நாம் காணும் இந்த
மணற் பரப்பெல்லாம் கோதுமையாக இருந்திருந்தால் இதை அல்லாஹ்வின் பாதையில் (ஏழைகளுக்கு
உண்பதற்கு) வழங்கி இருக்கலாமே?!" என்று நினைத்தாய்!
உம்முடைய அந்த எண்ணத்தை நான் ஏற்றுக் கொண்டு அதற்கான கூலியை வழங்கி இருக்கிறேன்.
இதோ நீ காண்பது அந்த கூலியைத் தான்!" என்பான். ( நூல்: துரூஸு லிஷ்ஷைக் அஷ்
ஷின்கீத்தி (ரஹ்)..)
2) நன்மை செய்ய
முயற்சி மேற்கொள்ள வேண்டும்..
ஏனெனில், ஏதேனும் ஒரு நற்காரியத்தைச் செய்வதற்கு முனையும்
போது போது அதைச் செய்ய முடியாமால் போனாலும் கூட அந்த முயற்சிக்கும் அல்லாஹ் கூலி
தருகிறான்.
وَمَنْ
اَرَادَ الْاٰخِرَةَ وَسَعٰى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰۤٮِٕكَ كَانَ
سَعْيُهُمْ مَّشْكُوْرًا
”நம்பிக்கைக் கொண்ட
நிலையில் மறுமையை விரும்பி,
அதற்காக முயற்சிப்போரின் முயற்சிக்கு நன்றி செலுத்தப்படும்.” ( அல்குர்ஆன்: 17:
19 )
وَالَّذِيْنَ
جَاهَدُوْا فِيْنَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَاِنَّ اللّٰهَ لَمَعَ
الْمُحْسِنِيْنَ
நம் விஷயத்தில்
முயற்சிப்போருக்கு நமது வழிகளைக் காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ்
இருக்கிறான். ( அல்குர்ஆன்: 29: 69 )
عن أنس
رضي الله عنه قال : قال النبي ﷺ «إن بالمدينة لرجالاً ما سرتم مسيراً ولا قطعتم
وادياً إلا كانوا معكم، قالوا: وهم بالمدينة يا رسول الله؟ قال: وهم بالمدينة
حبسهم العذر». (متفق عليه
நபி ﷺ அவர்கள் ஒரு புனிதப் போரில் (தபூக் போரில்)
ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அவர்கள், ‘மதீனாவில்
(நம்முடன் வராமல் தங்கிவிட்ட) சிலர் இருக்கின்றனர். நாம் எந்த மலைக் கணவாயை, பள்ளத்தாக்கைக் கடந்தாலும் அவர்களும் நம்முடன் இருக்கும் நிலையிலேயே அதை நாம்
கடந்து வருகிறோம். அப்போது,
சில நபித்தோழர்கள் அவர்கள் மதீனாவில் தானே இருக்கின்றார்கள்? என்று கூறிய போது,
ஆம்! (ஏற்கத்தகுந்த) சில காரணங்களே (புனிதப் போரில் கலந்து
கொள்ளவிடாமல்) அவர்களைத் தடுத்து விட்டன’ என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ( நூல்: புகாரி: 2839 )
عن ابي
سعيد الخدري رضي الله عنه قال:- عن نبي الله ﷺ :- كان فيمن كان قبلكم رجل قتل تسعة
وتسعين نفسًا، فسأل عن أعلم أهل الأرض فدُل على راهب فأتاه فقال: إنه قتل تسعة
وتسعين نفسًا، فهل له من توبة؟ فقال: لا، فقتله فكمل به مائة، ثم سأل عن أعلم أهل
الأرض، فدُل على رجل عالم، فقال: إنه قتل مائة نفس، فهل له من توبة؟ فقال: نعم،
ومن يحول بينه وبين التوبة؟ انطلق إلى أرض كذا وكذا، فإن بها أناسًا يعبدون الله
تعالى فاعبد الله معهم، ولا ترجع إلى أرضك، فإنها أرض سوء، فانطلق حتى إذا نصف
الطريق أتاه الموت، فاختصمت فيه ملائكة الرحمة وملائكة العذاب، فقالت ملائكة
الرحمة: جاء تائبًا مقبلاً بقلبه إلى الله تعالى، وقالت ملائكة العذاب: إنه لم
يعمل خيرًا قط، فأتاهم ملك في صورة آدمي، فجعلوه بينهم -أي حكمًا- فقال: قيسوا ما
بين الأرضيْن، فإلى أيتهما كان أدنى فهو له، فقاسوه فوجدوه أدنى إلى الأرض التي
أراد، فقبضته ملائكة الرحمة
அபூ ஸயீதில்
குத்ரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: ‘உங்களுக்கு முன்னர் வாழ்ந்து சென்ற சமுதாயத்தில் ஒருமனிதர் இருந்தார் அவர்
தொன்னூற்றி ஒன்பது பேரைக் கொலை செய்திருந்தார்.
பிறகு அவர், இந்தப் புவிவாழ் மக்களில் அதிகம் அறிந்தவர் யார் என்று விசாரித்தான். ஒரு
துறவியின் பக்கம் அவனுக்கு வழி காட்டப்பட்டது. அவரிடம் வந்தான். நான் தொன்னூற்றி
ஒன்பது பேரைக் கொலை செய்து விட்டேன். எனக்கு மன்னிப்பு உண்டா? என்று அவரிடம் கேட்டான். அவர், கிடையாது என்று சொல்லி
விட்டார். உடனே அவரையும் கொலை செய்து அவருடன் நூறைப் பூர்த்தியாக்கினார்.
பிறகு இப்புவி
வாழ் மக்களில் அதிகம் அறிந்தவர் யார் என்று கேட்டார். கல்லி அறிவுபெற்ற இன்னொரு
மனிதரின் பக்கம் அவனுக்கு வழிகாட்டப்பட்டது. (அவரிடம் சென்று) கேட்டார்: நான் நூறு
பேரைக் கொலை செய்துள்ளேன். எனக்குப் பாவமன்னிப்பு உண்டா?
அவர் சொன்னார்:
ஆம், உண்டு! பாவமன்னிப்புப் பெறவிடாமல் உன்னை யாரால் தடுக்க முடியும்? நீ இன்ன இன்ன ஊருக்குச் செல்! அங்கு, அல்லாஹ்வை வணங்கி
வழிபட்டுக் கொண்டிருக்கும் மக்கள் உள்ளனர்., அவர்களுடன் சேர்ந்து
நீயும் அல்லாஹ்வை வணங்கு. உனது சொந்த ஊருக்கு நீ திரும்பி விடாதே! அது கெட்டதொரு
பூமியாகும்!
உடனே அவர் (அந்த
ஊரை நோக்கிப்) புறப்பட்டான். பாதி வழி வந்திருக்கும்பொழுது மரணம் அவனைத்
தழுவிக்கொண்டது! அவனைக் கைப்பற்றும் விஷயத்தில் கருணை மலக்குகளும் தண்டனை
மலக்குகளும் தர்க்கம் செய்யலானார்கள்!
கருணை மலக்குகள்
சொன்னார்கள்: இவன் பாவமீட்சி தேடியவனாக – தனது இதயத்தால்
அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கியவனாக வந்துள்ளான்,. என்று! தண்டனை மலக்குகள் சொன்னார்கள்: இவன் எந்த ஒரு நன்மையையும் செய்யவில்லை
என்று!
இந்நிலையில்
வேறொரு மலக்கு மனித வடிவத்தில் அங்கு வந்தார். அவரைத் தங்களுக்கிடையே தீர்ப்பு
வழங்கும் நடுவராக்கினார்கள், அந்த மலக்குகள். அவர்
சொன்னார்: இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட தூரத்தை அளந்து பாருங்கள். இந்த மனிதன்
எந்த ஊரின் பக்கம் நெருக்கமாக இருக்கிறானோ அந்த ஊரைச் சேர்ந்தவனாவான்! "
அவ்வாறு அளந்து
பார்த்த பொழுது அவன்,எந்த ஊரை நாடி வந்தானோ அந்த ஊரின் பக்கம் நெருக்கமானவனாக இருந்தான். உடனே
கருணை மலக்குகள் அவனைக் கைப்பற்றிக் கொண்டார்கள்!" (நூல்: புகாரி, முஸ்லிம்)
ஸஹீஹ்
(முஸ்லிமின்) ஓர் அறிவிப்பில் வந்துள்ளது: ‘அவன் நல்ல ஊரின் பக்கமே
ஒருசாண் அளவு அதிக நெருக்கமாக இருந்தான். எனவே அவ்வூர்வாசிகளுடன் சேர்க்கப்பட்டான்’
ஸஹீஹ்
(முஸ்லிமின்) வேறோர் அறிவிப்பில் உள்ளது: ‘இந்த ஊருக்கு நீ
தூரமாகிவிடு என்று அல்லாஹ் கட்டளையிட்டான். மேலும் அந்த ஊருக்கு- நீ
நெருக்கமாகிவிடு என்று கட்டளையிட்டான். மேலும் கூறினான்: (இப்பொழுது) இரு
ஊர்களுக்கும் மத்தியில் அளந்து பாருங்கள் என்று! அதன்படி அந்த மனிதன் இந்த ஊரின்
பக்கமே அதிக நெருக்கமாக இருக்கக் கண்டார்கள்!’
ஸஹீஹ்
(முஸ்லிமின்) இன்னோர் அறிவிப்பில் உள்ளது: ‘அவன் தனது இதயத்தால் அந்த
ஊரை நாடிப் புறப்பட்டான். ( நூல்: முஸ்லிம் )
أخبر
جابر رضي الله عنه أن رجلًا -قيل: اسمه عُمير بن الحُمَام وقيل: غيره- قال للنبي
صلى الله عليه وسلم يوم غزوة أحد: يا رسول الله! أرأيتَ إن قاتلتُ حتى قُتلتُ،
يعني جاهدت المشركين وقتلت في هذه الوقعة ما مصيري؟ قال: "أنت في
الجنة"، فألقى تمرات كانت معه، وقال: (إنها لحياة طويلة إن بقيت حتى آكل هذه
التمرات) ثم تقدم فقاتل حتى قتل رضي الله عنه
.
உஹது போரின்போது
நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர், (உமைர் இப்னுல் ஹுமாம் ரலி
என்றும்,
வேறொருவர் என்றும் சொல்லப்படுகிறது) இறைத் தூதர் அவர்களே
நான் கொல்லப்பட்டால் எங்கே இருப்பேன்? என்று கேட்டார்.
சொர்க்கத்தில் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே தன் கையில் உண்ணுவதற்காக
வைத்திருந்த பேரீத்தம் பழங்களை கீழே போட்டு விட்டு, பின்பு போரில் கலந்து கொண்டார். இறுதியில் கொல்லப்பட்டு விட்டார். அறி: ஜாபிர்
(ரலி), நூல்: முஸ்லிம் )
3) எந்த நன்மையான செயலை செய்தாலும் தொடர்ந்து செய்து வர
வேண்டும்...
وذكر
عبد الرزاق عن معمر عن الزهري عن عروة عن عائشة قالت قال رسول الله صلى الله عليه
وسلم: " نمت فرأيتني في الجنة فسمعت صوت قارئ فقلت من هذا قالوا صوت حارثة بن
النعمان " . فقال رسول الله صلى الله عليه وسلم: " كذلك البر كذلك البر
" . وكان أبر الناس بأمه.
ஆயிஷா (ரலி)
அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் என்னிடம் “ஆயிஷாவே! எனக்கு உறக்கத்தில்
சுவனம் காட்டப்பட்டது. அப்போது, சுவனத்தின் ஓர்
பகுதியிலிருந்து ஒருவர் அழகிய குரலில் குர்ஆனை ஓதுகிற சப்தத்தைக் கேட்டேன்.
அப்போது, நான் “யார் இவர்?
இங்கே குர்ஆன் ஓதுகின்றாரே? என்று ஆச்சர்யத்தோடு வினவினேன்.
அப்போது, என்னிடம் ”இந்த சப்தம் ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களுடையது என்று கூறப்பட்டது” என்று கூறிய அண்ணலார் தொடர்ந்து, இரண்டு முறை “ நன்மை செய்வோருக்கும் அவ்வாறே பாக்யம் கிடைக்கும்” என நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.
ஆயிஷா (ரலி)
அவர்கள் கூறுகின்றார்கள்: “ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்கள் தன் தாய்க்கு மிகவும் உபகாரம் செய்யக்
கூடியவர்களாக இருந்தார்கள்.
قال أبو عمر كان حارثة بن النعمان قد ذ هب بصره فاتخذ خيطاً من مصلاه إلى باب حجرته ووضع عنده مكتلاً فيه تمر فكان إذا جاءه المسكين يسأل أخذ من ذلك المكتل ثم بطرف الخيط حتى يناوله وكان أهله يقولون له نحن يكفيك فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: " مناولة المسكين تقي ميته السوء " .
இப்னு அப்துல் பர்
(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களின்
இறுதிகாலத்தில் கண்பார்வை இன்றி வாழ்ந்தார்கள்.
தான் தொழுகிற
இடத்திலிருந்து வீட்டின் வாசல் வரை கயிறு கட்டியிருப்பார்கள். அருகே ஒரு
பாத்திரத்தில் பேரீத்தம் பழங்களை வைத்திருப்பார்கள்.
வீட்டு வாசலில்
எவராவது வந்து யாசகம் கேட்டால், கையில் பேரீத்தம் பழங்களை
எடுத்துக் கொண்டு வாசல் வரை வந்து அந்த யாசகரின் கையில் கொடுத்து விட்டு மீண்டும்
தாங்கள் அமரும் இடத்திற்கு வந்து விடுவார்கள்.
ஒருவர் அல்ல
இருவர் அல்ல. எத்தனை பேர் யாசகம் கேட்டு வந்தாலும், கயிற்றைப் பிடித்து வருவதும் போவதுமாக இருப்பார்கள் ஹாரிஸா (ரலி) அவர்கள்.
ஹாரிஸா (ரலி)
அவர்கள் படுகிற அவஸ்தைகளையும், சிரமங்களையும் பார்த்து
விட்டு அவர்களின் குடும்பத்தினர் “ஓர் யாசகருக்கு இவ்வளவு
சிரமப்பட்டு ஏன் இவ்வாறு தர்மம் செய்கின்றீர்கள்? எங்களிடம் தந்தால் நாங்கள் கொண்டு கொடுப்போமே?” என்று கூறினார்கள்.
அதற்கு, ஹாரிஸா (ரலி) அவர்கள் “ஏழை எளியோரை தேடிச் சென்று, அவர்களின் கரங்களில்
கொண்டு தர்மப் பொருட்களைக் கொடுப்பதென்பது துர்மரணத்தைத் தடுக்கும்” என நபி ﷺ அவர்கள் கூற நான்
கேட்டிருக்கின்றேன்.
ஆதலால், தான் இவ்வளவு
சிரமத்திற்கு மத்தியிலும் நான் இவ்வாறு நடந்து கொள்கின்றேன்” என்றார்கள். ( நூல்: அல் இஸ்தீஆப் ஃபீ மஃரிஃபத்தில் அஸ்ஹாப் லி இப்னி அப்தில்
பர் )
4) எந்த நன்மையை செய்தாலும் இக்லாஸ் - மனத்தூய்மையோடு
செய்ய வேண்டும்..
يحكى
أنه كان في بني إسرائيل رجل عابد، فجاءه قومه، وقالوا له: إن هناك قومًا يعبدون
شجرة، ويشركون بالله؛ فغضب العابد غضبًا شديدًا، وأخذ فأسًا؛ ليقطع الشجرة، وفي
الطريق، قابله إبليس في صورة شيخ كبير، وقال له: إلى أين أنت ذاهب؟
فقال
العابد: أريد أن أذهب لأقطع الشجرة التي يعبدها الناس من دون الله. فقال إبليس: لن
أتركك تقطعها.
وتشاجر
إبليس مع العابد؛ فغلبه العابد، وأوقعه على الأرض. فقال إبليس: إني أعرض عليك أمرًا
هو خير لك، فأنت فقير لا مال لك، فارجع عن قطع الشجرة وسوف أعطيك عن كل يوم
دينارين، فوافق العابد.
وفي
اليوم الأول، أخذ العابد دينارين، وفي اليوم الثاني أخذ دينارين، ولكن في اليوم
الثالث لم يجد الدينارين؛ فغضب العابد، وأخذ فأسه، وقال: لابد أن أقطع الشجرة.
فقابله
إبليس في صورة الشيخ الكبير، وقال له: إلى أين أنت ذاهب؟ فقال العابد: سوف أقطع
الشجرة.
فقال
إبليس: لن تستطيع، وسأمنعك من ذلك، فتقاتلا، فغلب إبليسُ العابدَ، وألقى به على
الأرض، فقال العابد: كيف غلبتَني هذه المرة؟! وقد غلبتُك في المرة السابقة! فقال
إبليس: لأنك غضبتَ في المرة الأولى لله -تعالى-، وكان عملك خالصًا له؛ فأمَّنك
الله مني، أمَّا في هذه المرة؛ فقد غضبت لنفسك لضياع الدينارين، فهزمتُك وغلبتُك.
பனீ இஸ்ராயீல்
மக்களில் ஒரு வணக்கசாலி இருந்தார். அவரிடம் சிலர் அருகில் உள்ள ஊர் மக்கள்
குறித்து அந்த ஊர் மக்கள் மரத்தை வணங்குவதாக புகார் தந்தனர்.
அந்த வணக்கசாலி
உடனே சினந்தெழுந்து கோடாரியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். வழியில் ஷைத்தான் ஒரு
பெரியவரின் உருவில் வந்து வழிமறித்தான். எங்கே செல்கிறீர்? மரத்தை வெட்ட செல்கிறேன்'' என்றார் அந்த வணக்கசாலி.
ஷைத்தான் வெட்டக் கூடாது'' என்றான். அந்த வணக்கசாலி
வெட்டுவேன்'' என்றார்.
இருவருக்கும்
கைகலப்பு ஏற்பட்டது. வணக்கசாலி ஷைத்தானை கீழே தள்ளி மேலே ஏறி அமர்ந்தார் ஷைத்தான் சமாதானத்திற்கு வந்தான். வணக்கசாலியே ! நீர் ஒரு ஏழை. உமக்கு ஏன்
இந்த வேண்டாத வேலை?
பேசாமல் போய் உம் வணக்கத்தைத் தொடரும்; தினமும் உனக்கு இரண்டு தீனார் உன் தலையணைக்கு
கீழே நான் கொண்டு வந்து வைக்கிறேன். அல்லாஹ் அதை வெட்ட நாடியிருந்தால் அதற்கு ஒரு
தூதரை அனுப்பி இருக்கமாட்டானா? வணக்கசாலி அமைதியானார்.
திரும்பிச் சென்றார்.
அதன்பிறகு மறுநாள்
காலையில் இரண்டு
தீனாரைக் கண்டார். அடுத்த நாளும் அவ்வாறே கண்டு
எடுத்துக்கொண்டார். மூன்றாம் நாள் காலையில் ஒன்றும் காணவில்லை. உடனே கோபத்துடன்
புறப்பட்டார்.. மரத்தை வெட்ட. இந்த முறையும் ஷைத்தான் பெரியவரின் உருவில் வந்து
வழிமறித்தான். மோதினான். கைகலப்பு நடந்தது. ஆனால் இந்த முறை ஷைத்தான் வென்றான்.
அந்த வணக்கசாலி ஆச்சரியத்துடன் வினவினார்: இப்போது எப்படி என்னை வெல்ல உன்னால்
முடிந்தது?''
ஷைத்தான்
சொன்னான்: ''முன்பு ஏற்பட்ட உம் கோபம் அல்லாஹ்விற்காக இருந்தது. அல்லாஹ் உமக்கு உபகாரம்
செய்து என்னை வீழ்த்தினான். இப்போது உம் கோபம் 2 தீனாருக்காக இருக்கிறது. எனவே, என்னை வெற்றி பெறச்
செய்து உன்னை கேவலப்படுத்தி விட்டான்" என்று ஷைத்தான் கூறினான். ( நூல்:
இஹ்யா உலூமித்தீன் )
5) நமக்கு நன்மை வந்து சேரும் படியான நன்மைகளையும் நாம்
செய்ய வேண்டும்.
அப்படி செய்தால்
பிறர் செய்யும் காரியங்களுக்கும் கூட அல்லாஹ் நமக்கு நன்மைகளை, நற்கூலியை அளிக்கிறான்.
எப்போது இந்த
மாதிரி நன்மையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்குத்
தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். ஏதேனும் நற்காரியத்தைச் செய்யுமாறு பிறரிடம்
பரிந்துரையோ,
அறிவுரையோ சொல்லும் போது அதைச் செய்பவர்களுக்குக் கிடைப்பது
போன்ற நன்மை நமக்கும் கிடைக்கும்.
كَانَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَاءَهُ السَّائِلُ أَوْ
طُلِبَتْ إِلَيْهِ حَاجَةٌ قَالَ: «اشْفَعُوا تُؤْجَرُوا، وَيَقْضِي اللَّهُ عَلَى
لِسَانِ نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا شَاءَ»
நபி ﷺ அவர்களிடம் எவரேனும்
யாசித்து வந்தால் அல்லது தேவையை முறையிட்டால் உடனே அவர்கள் (பிறரிடம்), ‘(உங்களால் உதவ முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவும்படி) பரிந்துரை(யாவது)
செய்யுங்கள் (இவ்விதம் பரிந்துரைத்ததற்காக) நீங்கள் (நற்)கூலி
கொடுக்கப்படுவீர்கள். அல்லாஹ், தான் (அவருக்குக்
கொடுக்க) நாடியதை,
தன் தூதருடைய நாவினால் நிறைவேற்றித் தருவான்’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி), நூல்: புகாரி )
عَنْ
أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي أُبْدِعَ بِي فَاحْمِلْنِي، فَقَالَ:
«مَا عِنْدِي»، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ، أَنَا أَدُلُّهُ عَلَى مَنْ
يَحْمِلُهُ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ دَلَّ
عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ»
ஒரு மனிதர் நபி ﷺ அவர்களிடம் வந்து, “என் வாகனப் பிராணி
மடிந்துவிட்டது. எனவே,
நான் ஏறிச்செல்வதற்கு எனக்கு வாகனப் பிராணி தாருங்கள்” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “என்னிடம் (வாகனப்
பிராணி) இல்லை”
என்று கூறினார்கள். அப்போது மற்றொரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! இவரை வாகனத்தில் ஏற்றியனுப்பும் ஒருவரை நான் இவருக்கு
அறிவித்துக் கொடுக்கிறேன்”
என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், “நன்மைக்கு
வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்’’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் அல்அன்சாரீ
(ரலி), நூல்: முஸ்லிம் )
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்
அனைவருக்கும் நன்மையான செயல்களைச் செய்வதில் ஆர்வத்தை தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்!
யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

