Tuesday, 24 February 2026

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 08 அல்லாஹ்விற்காக பொருளாதாரத்தை தியாகம் செய்ய முன் வருவோம்!

 

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 08

அல்லாஹ்விற்காக பொருளாதாரத்தை தியாகம் செய்ய முன் வருவோம்!



அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் ஏழாவது நோன்பை நிறைவு செய்து விட்டு, எட்டாம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

இன்றைய தராவீஹ் தொழுகையில் அல் அன்ஃபால் அத்தியாயமும் அத் தவ்பா அத்தியாயத்தின் 93 வசனங்களும் ஓதப்பட்டு இன்றுடன் அல்குர்ஆனின் 3 -ல் ஒரு பகுதி 10 ஜுஸ்வுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இன்று ஓதப்பட்ட 168 வசனங்களில் அல் அன்ஃபால் அத்தவ்பா இரண்டு சூராவிலும் சேர்த்து சுமார் 6 இடங்களில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பொருளாதாரத்தை தியாகம் செய்ய அழைப்பு விடுக்கின்றான்.

அத்துடன் நில்லாது அதனால் ஏற்படும் நன்மைகளையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அறிவுறுத்துகின்றான்.

اَلَّذِیْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجٰهَدُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ اَعْظَمُ دَرَجَةً عِنْدَ اللّٰهِ وَاُولٰٓىِٕكَ هُمُ الْفَآىِٕزُوْنَ 

எவர்கள் ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள் மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.

یُبَشِّرُهُمْ رَبُّهُمْ بِرَحْمَةٍ مِّنْهُ وَرِضْوَانٍ وَّجَنّٰتٍ لَّهُمْ فِیْهَا نَعِیْمٌ مُّقِیْمٌ 

அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன்னுடைய கிருபையையும், திருப்பொருத்தத்தையும் (அளித்து) சுவனபதிகளையும் (தருவதாக) நன்மாராயம் கூறுகிறான்; அங்கு அவர்களுக்கு நிரந்தரமான பாக்கியங்களுண்டு.

خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا اِنَّ اللّٰهَ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِیْم

அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அவர்களுக்கு) மகத்தான (நற்) கூலி உண்டு. ( அல்குர்ஆன்: 9: 20-22 )

பொருளாதாரத்தை அல்லாஹ்விற்காக தியாகம் செய்வதால், அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதால், அர்ப்பணிப்பதால் ஆறு விதமான நன்மைகள் வழங்கிடுவாதாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உத்திரவாதமும் அளிக்கின்றான்.

1) அல்லாஹ்விடம் மகத்தான அந்தஸ்து கிடைக்கும்.

2) ஈருலகிலும் வெற்றியாளர்.

3) ஈருலகிலும் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும்.

4) ஈருலகிலும் அல்லாஹ்வின் திருப்தியை பெறுவார்.

5) மறுமையில் சுவனம் கிடைக்கும்.

6) மகத்தான கூலி வழங்கப்படும்.

ஒரே நேரத்தில் ஆறு விதமான நன்மைகளைப் பெற்றுத்தரும் சிறந்த காரியமாக பொருளாதார தியாகம் அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

اقترن جهاد المال بجهاد النفس في القرآن في عَشَرة مواضع، تقدَّم فيها جهاد المال على الجهاد بالنفس في تسعة مواضع، وتقدَّم جهاد النفس على جهاد المال في موضع واحد، ولذلك حِكَمٌ وأسرارٌ، وقف عليها المفسرون، رحمهم الله.

உயிராலும், பொருளாலும் அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிக்க அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் சுமார் பத்து இடங்களில் அறை கூவல் விடுகிறான்.

அதில் ஒன்பது இடங்களில் உயிரை விட பொருளாதாரத்தையே முற்படுத்தி கூறுகின்றான்.

இன்று ஓதப்பட்ட தவ்பா அத்தியாயத்தில் 5 இடங்களிலும் 20,41,44, 81, 88, அந்நிஸா 95,அல் அன்ஃபால் 72, அல் ஹுஜுராத் 15, அஸ் ஸஃப் 11, 

ஒரேயொரு இடத்தில் மட்டுமே தவ்பா 111, பொருளாதாரத்தை விட உயிரை முற்படுத்தி கூறுகின்றான்.

ஏன் அல்லாஹ் உயிரை விட பொருளாதாரத்தை முற்படுத்தி கூறுகின்றான் என்பதற்கு முஃபஸ்ஸிரீன்கள் - இறைமறை விரிவுரையாளர்கள், அறிஞர் பெருமக்கள் ஏராளமான விளக்கங்களை அள்ளித் தந்துள்ளனர்.

எனினும் அதில் இரண்டு விளக்கங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

1) மனிதன் பொருளாதாரத்தின் மீது அளவு கடந்த நேசம் வைத்தவனாக இருக்கின்றான். அவ்வளவு எளிதில் அவனால் பொருளாதாரத்தை செலவு செய்திட இயலாது.

وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّۭا جَمًّۭا

இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.

( அல்குர்ஆன்: 89: 20 )

2) பொருளாதார தேடல் என்பது முடிவற்றதாக இருக்கிறது.

اَلْهٰىكُمُ التَّكَاثُرُ

செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது.

حَتّٰی زُرْتُمُ الْمَقَابِرَ 

நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை. ( அல்குர்ஆன்: 102: 1, 2 )

3) பொருளாதாரமே அவனை நிலைத்திருக்கச் செய்கிறது என்று எண்ணுகிறான்.

ٱلَّذِى جَمَعَ مَالًۭا وَعَدَّدَهُ

(அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.

يَحْسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخْلَدَهُ

நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். ( அல்குர்ஆன்: 104: 2, 3 )

இரண்டு, ஒரு உயிர் என்பது ஒரு உயிர் தான். ஒன்று ஷஹீதின் அந்தஸ்து. அல்லது கனீமத்துடன் கூடிய வாழ்க்கக். ஆனால், அறப்போரில் பொருளாதார பங்களிப்பு என்பது போர் வீரர்களுக்கு ஆயுதம் வாங்கவும், வாகனம், உணவு இதர செலவுகள், ஷஹீதுகளின் சந்ததிகளுக்கு காப்பீடுகள் என பல்வேறு நிலைகளில் அது உதவுவதாக இருக்கிறது. ஆகவே தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உயிரை விட பொருளாதாரத்தை முற்படுத்தி கூறுகின்றான் என்று விளக்கம் தருகிறார்கள்.

அன்னை கதீஜா (ரலி) அவர்கள் இந்த உம்மத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து முதலாவதாக ஸலாம் கூறப்பட்ட பாக்கியம் பெற்றவர்கள்.

முன்மாதிரி முதல் பெண் அன்னை கதீஜா (ரலி)...

அன்னை கதீஜா (ரலி) அவர்கள் இந்த உம்மத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து முதலாவதாக சுவனத்தை கொண்டு நேரடியாக சோபனம் பெற்றவர்கள்.

அவர்கள் வாழும் காலத்தில் அவர்கள் தொழுததில்லை. காரணம் தொழுகை கடமையாக்கப்பட வில்லை.

அவர்கள் வாழும் காலத்தில் நோன்பு நோற்றதில்லை. காரணம் நோன்பு கடமையாக்கப்பட வில்லை. இதர வணக்க வழிபாடுகள் ஏதும் செய்ததில்லை.

மாறாக, இந்த தீனுக்காக, இந்த தீனின் வளர்ச்சிக்காக தங்களுடைய வாழ்வில் சம்பாதித்து சேமித்து வைத்திருந்த முழுப் பொருளாதாரத்தையும் செலவளித்தார்கள்.

அவர்களின் கடைசி காலத்தின் பெரும்பான்மையான பகுதிகள் பசியோடும் பட்டினியோடும் தான் கழிந்ததாக வரலாறு சொல்கிறது.

ஆம்! அவர்களின் உயிர் இந்த உலகை விட்டும் பிரிந்த அந்த நாட்கள் மிகவும் கடினமான நாட்கள்.

ஊர் விலக்கம் செய்யப்பட்டு மக்காவை விட்டும் தொலை தூரத்தில் அபூதாலிப் பள்ளத்தாக்கில் தனிமைப்படுத்தப்பட்டார்களே அந்த மூன்றாண்டுகளில் மூன்றாவது ஆண்டில் நிகழ்ந்தது.

ஆனாலும் அன்னை கதீஜா ரலி அவர்கள் அல்லாஹ்விற்காக அத்தனை செல்வத்தையும் அர்ப்பணம் செய்து வலி மிகுந்த அந்த நாட்களை அல்லாஹ்வின் திருப்திக்காக ஏற்றுக் கொண்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் அவர்களே முன் மொழிந்தார்கள்.

وقال الإمام أحمد أيضا : ثنا علي بن إسحاق ، أخبرنا عبد الله ، أخبرنا مجالد ، عن الشعبي ، عن مسروق ، عن عائشة ، قالت : كان النبي صلى الله عليه وسلم إذا ذكر خديجة أثنى عليها بأحسن الثناء ، قالت : فغرت يوما . فقلت : ما أكثر ما تذكرها ، حمراء الشدق ، قد أبدلك الله خيرا منها . قال : " ما أبدلني الله خيرا منها ، قد آمنت بي إذ كفر بي الناس ، وصدقتني إذ كذبني الناس ، وواستني بمالها إذ حرمني الناس ، ورزقني الله ولدها إذ حرمني أولاد النساء " . تفرد به أحمد أيضا ، وإسناده لا بأس به ، ومجالد روى له مسلم متابعة ، وفيه كلام مشهور . والله أعلم .

நபி அவர்கள் கூறினார்கள்: மக்கள் என்னை நிராகரித்த போது அவர் என்னை ஏற்றுக் கொண்டார். மக்கள் என்னைப் பொய்யாக்கிய போது அவர் என்னை உண்மைப்படுத்தினார். மக்கள் எதையுமே எனக்குத் தராமற் தடுத்துக் கொண்ட போது அவர் தமது சொத்துக்களை எல்லாம் எனக்காக அர்ப்பணித்தார்” ( நூல்: அஹ்மத் )

ஒரு முறை நபி அவர்கள் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சொன்னார்கள், “இறைவன் மீது ஆணையாக! எனக்கு கதீஜாவைத் தவிர வேறு நல்ல துணைவி கிடைக்கவில்லை. ஒட்டுமொத்தமாக மக்கள் என்னை நபியாக ஏற்க மறுத்த பொழுது என்னைக்கொண்டு ஈமான்கொண்டார்கள். மக்கள் என்னை பொய்யன் என்றபோது, என்னை வாய்மையாளன் என உண்மைப்படுத்தி வைத்தார்கள். மக்கள் எனக்குப் பொருளாதாரத் தடை விதித்தபோது தனது திரண்ட செல்வத்தை வாரிவழங்கி என்னை ஊக்குவித்தார்கள்.அன்னார் மூலமாகவே குழந்தைச் செல்வங்களை வல்ல நாயன் எனக்கருள்பாலித்தான்!“ ( நூல்: ஸுர்கானி, பாகம் – 03, பக்கம் – 24 )

عن علي قال: سمعت رسول الله صلى الله عليه وسلم، يقول: «خيرُ نسائها مريمُ بنتُ عمران، وخيرُ نسائها خديجةُ بنتُ خويلد»، وأشار وكيع إلى السماء والأرض.

அலீ ரலி அவர்கள் அறிவித்தார்கள்: இவ்வுலகிற் சிறந்த பெண் மர்யம் (அலை) ஆவார். இவ்வுலகிற் சிறந்த மற்றொரு பெண் கதீஜா (ரலி) ஆவார்நபி அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸை அறிவிக்கும் வகீஉ (ரஹ்) அவர்கள் வானமும் பூமியும் தோன்றிய காலம் முதற்கொண்டு இந்த பூமியில் தோன்றிய பெண்களிலேயே சிறந்தவர்கள் இந்த இரண்டு பெண்களும் ஆவார்கள் என்று கையால் சமிக்ஞை செய்து காட்டினார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம் )

عَنْ أَبَي هُرَيْرَةَ قَالَ أَتَى جِبْرِيلُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَذِهِ خَدِيجَةُ قَدْ أَتَتْكَ مَعَهَا إِنَاءٌ فِيهِ إِدَامٌ أَوْ طَعَامٌ أَوْ شَرَابٌ فَإِذَا هِىَ أَتَتْكَ فَاقْرَأْ عَلَيْهَا السَّلاَمَ مِنْ رَبِّهَا عَزَّ وَجَلَّ وَمِنِّى وَبَشِّرْهَا بِبَيْتٍ فِى الْجَنَّةِ مِنْ قَصَبٍ لاَ صَخَبَ فِيهِ وَلاَ نَصَبَ

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்:- ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபி அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! இதோ கதீஜா அவர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர் தன்னுடன் குழம்பு, உணவு, பானம் ஆகியவை நிறைந்த பாத்திரத்தை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவருக்கு என் சார்பாகவும் அவரின் இறைவன் சார்பாகவும் ஸலாமை எடுத்துச் சொல்லுங்கள். சொர்க்கத்தில் அவருக்கு சச்சரவு, துன்பங்கள் இல்லாத, முத்தாலான மாளிகையுண்டு என்ற நற்செய்தியையும் சொல்லுங்கள்என்று கூறினார். ( நூல்: புகாரி, முஸ்லிம் )

முன்மாதிரி முதல் ஆண் அபூபக்ர் (ரலி)...

ஆண்களில் அபூபக்ர் சித்தீக் ரலி அவர்கள் அல்லாஹ்விற்காக தமது பொருளாதாரம் முழுவதையும் அர்ப்பணித்தவர்கள்.

நபி அவர்களுக்கு நபித்துவம் வழங்கப்பட்ட சில நாட்களுக்கு பின்னால் இருந்து நபி அவர்கள் இந்த உலகை விட்டும் விடை பெற்றுச் செல்லும் நாள் வரை நபி அவர்களுடன் ஊரிலும், வெளியூரிலும், பயணத்திலும், யுத்த களத்திலும் நிழலாக தொடர்ந்தவர்கள்.

அல்லாஹ்விற்காக செலவழிக்க வேண்டும் என்றால் அப்படித்தான் செலவு செய்வார்கள்.

அல்லாஹ்விற்காக தியாகம் செய்ய வேண்டும் என்றால் அப்படித்தான் பொருளாதாரத்தை தியாகம் செய்வார்கள்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அபூபக்ர் ரலி அவர்கள் செலவினம் குறித்து முன் மொழிந்த வார்த்தை...

روى الإمام أحمد، عن أبي معاوية، عن الأعمش، عن أبي صالح، عن أبي هريرة، عن النبي - صلى الله عليه وسلم - قال: «ما نفعني مال قط ما نفعني مال أبي بكر. فبكى أبو بكر، وقال: وهل أنا ومالي إلا لك يا رسول الله»

அபூஹுரைரா ரலி அவர்கள் அறிவித்தார்கள்: அபூபக்ர் ரலி அவர்களின் பொருளாதாரம் எனக்கு பயனளித்தது போன்று வேறெந்த பொருளாதாரமும் எனக்கு பயனளிக்கவில்லை என்று நபி அவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட அபூபக்ர் ரலி அவர்கள் அழுதவர்களாக "அல்லாஹ்வின் தூதரே! என் பொருளாதாரம் என்ன என் பொருளாதாரம்? நானும் என் பொருளாதாரமும் உங்களுக்கே அர்ப்பணம் அல்லாஹ்வின் தூதரே" என்று கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )

وروى الترمذي (3661) وحسنه عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا لِأَحَدٍ عِنْدَنَا يَدٌ إِلَّا وَقَدْ كَافَأنَاهُ ، مَا خَلَا أَبَا بَكْرٍ ، فَإِنَّ لَهُ عِنْدَنَا يَدًا يُكَافِئُهُ اللَّهُ بِهِ يَوْمَ القِيَامَةِ، وَمَا نَفَعَنِي مَالُ أَحَدٍ قَطُّ مَا نَفَعَنِي مَالُ أَبِي بَكْرٍ، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلًا لَاتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلًا، أَلَا وَإِنَّ صَاحِبَكُمْ خَلِيلُ اللَّهِ وصححه الألباني في "صحيح الترمذي" .

 حديث حسن غريب

நபி அவர்கள் தங்களின் மரண நாட்களை எண்ணிக் கொண்டிருந்த அந்த தருணங்களில் தங்களின் தோழர்களை ஒன்று திரட்டி,

 

என் அருமைத் தோழர்களே! உலகில் வாழும் காலத்தில் எமக்கு யாரெல்லாம் ஆதரவாய், உபகாரியாய் இருந்தார்களோ அவர்களுக்கெல்லாம் இந்த உலகத்திலேயே, நான் உயிரோடு வாழும் காலத்திலேயே பிரதி உபகாரம் செய்து விட்டேன்! இதோ! இருக்கின்றோரே உங்களின் சகோதரர் அபூபக்ர் (ரலி) அல்லாஹ்வின் நேசர் ஆவார். அல்லாஹ்வைத் தவிர மற்றெவரையும் உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்ளக் கூடாது எனும் கட்டளை மாத்திரம் இல்லையானால், அபூபக்ர் (ரலி) அவர்களையே நான் என்னுடைய உற்ற நண்பராக தேர்ந்தெடுத்து இருப்பேன்.

அவரின் பொருளாதாரம் எனக்கு பயன் பட்டது போன்று உங்களில் வேறெவரின் பொருளாதாரமும் எனக்குப் பயன் பட்டதில்லை. அப்படிப் பட்ட அபூபக்ர் அவர்களுக்கு மட்டும் என்னால் இந்த உலகில் பிரதி உபகாரம் செய்ய எதுவும் இல்லை. ஆகையால், என் சார்பாக நாளை மறுமையில் அல்லாஹ் அவருக்கு பிரதி உபகாரம் வழங்குவான்என்று கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )

وأخرج سعيد بن الأعرابي عن ابن عمر رضي الله عنهما قال: أسلم أبو بكر رضي الله عنه يوم أسلم وفي منزله أربعون ألف درهم فخرج إلى المدينة في الهجرة وماله غير خمسة آلاف كل ذلك ينفقه في الرقاب والعون على الإسلام.

இப்னு உமர் ரலி அவர்கள் அறிவித்தார்கள்: அபூபக்ர் ரலி அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற போது அவர்களின் வீட்டில் நாற்பதாயிரம் திர்ஹம் இருந்தது. அவர்கள் மக்காவை விட்டு மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வரும் போது அவர்களின் வீட்டில் வெறும் ஐந்தாயிரம் திர்ஹம்களே இருந்தது. முப்பத்தைந்தாயிரம் திர்ஹம்களையும் அடிமைகளை உரிமை விடுவதற்கும், சன்மார்க்க காரியங்களுக்கு உதவுவதிலுமே அவர்களின் பொருளாதாரம் செலவிடப்பட்டது. ( நூல்: அஹ்மத் )

وقال يعقوب بن سليمان في تأريخه: حدثنا الحميدي، قال: حدثنا سفيان، حدثنا هشام عن أبيه: أسلم أبو بكر وله أربعون ألف درهم، فأنفقها في سبيل الله؛ أعتق بلالاً، وعامر بن فهيرة، وزنيرة، والنهدية، وابنتها، وجارية بني المؤمل، وأم عبيس.

யஅகூப் இப்னு சுலைமான் (ரஹ்) அவர்கள் தங்களது தாரீக் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்:- அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற போது அவர்களின் வீட்டில் நாற்பதாயிரம் திர்ஹம் இருந்தது. அனைத்தையும் அல்லாஹ்வின் பாதையிலேயே செலவு செய்தார்கள். அடிமைகளை விடுதலை செய்தார்கள்.

அவர்களால் உரிமை விடப்பட்டவர்களில் பிலால் ரலி, ஆமிர் இப்னு ஃபுகைரா ரலி, ஜின்னீரா (ரலி - அன்ஹா), நஹ்திய்யா (ரலி - அன்ஹா) மற்றும் அவரது மகள், பனுல் முஅம்மல் கோத்திரத்தாரிடம் பணி செய்து வந்த ஓர் அடிமைப் பெண், உம்மு ஈஸா (ரலி) போன்றோர் அடங்குவர்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக நாளொன்றுக்கு ஒரு தண்டனை எனும் விதமாக புதுப்புது தண்டனைகளை, சித்ரவதைகளை பிலால் (ரலி) அவர்களின் மீது உமைய்யா இப்னு கலஃப் கட்டவிழ்த்து விட்டிருந்தான்.

 

أن النبي صلى الله عليه وسلم قال عندما بلغه ما يلقى بلال من التعذيب: ((لو كان عندنا شيء، لابتعنا بلالاً))،.

 أن أبا بكر اشترى بلالاً وهو مدفون في الحجارة بخمس أواقٍ ذهبًا، فقالوا: لو أبيت إلا أوقية واحدة لبعناكه، فقال أبو بكر: لو أبيتم إلا مائة أوقيه لأخذته

அப்படியாக நாட்கள் கடந்து சென்று கொண்டிருந்த நேரத்தில் பெருமானார் {ஸல்} அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடத்தில் பிலால் போன்று இஸ்லாத்திற்காக சித்ரவதைகளை தாங்கிக் கொண்டிருப்பபவர்களை நம்மிடம் பணம் மட்டும் இருந்தால் எவ்விலை கொடுத்தாவது அவர்களை விலை கொடுத்து வாங்கி விடலாம்என கவலையோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் பிலால் (ரலி) அவர்களை உமைய்யா சித்ரவதை செய்து கொண்டிருக்கும் போது அங்கு சென்ற அபூபக்ர் (ரலி) அவர்கள் என் இறைவன் அல்லாஹ்! என்று சொல்லும் ஒரே காரணத்திற்காகவா இந்த அடிமையைத் துன்புறுத்துகிறீர்கள்? கொலை செய்து விட வேண்டும் என்று துடிக்கின்றீர்கள்? அவருக்கான விலையைச் சொல்லுங்கள். நான் வாங்கிக் கொள்கிறேன்என்றார்.

உமைய்யா, அபூபக்ர் (ரலி) அவர்களை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்து விட்டு ஒரு விலையைச் சொன்னான். பேரம் பேசாமல், கேட்ட தொகையை மறுக்காமல் உடனே அத்தொகையைக் கொடுத்து பிலாலை வாங்கினார் அபூபக்ர் (ரலி) அவர்கள்.

ஐந்தோ அல்லது. ஏழோ அல்லது நாற்பதோ அவாஃகின் தங்கம் விலையாகக் கொடுத்தார் என்று பல்வேறு அறிவிப்புகள் உள்ளன.

பிலாலை அழைத்துக் கொண்டு, வா போவோம்என்று நடக்க ஆரம்பித்த அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “அதிகமான விலை கொடுத்து ஏமாறி விட்டீரே. இதை விட மிகக் குறைவான ( ஒரே ஒரு காசுக்குக் ) விலைக்குக் கேட்டிருந்தாலும் பிலாலைத் தந்திருப்பேனே?” என ஏளனமாகக் கேட்டான் உமைய்யா.

நீதான் ஏமாறி விட்டாய் உமைய்யா. இதைவிட அதிகமான விலையை நீ கேட்டிருந்தாலும் கொடுப்பதற்கு நான் தயாராகவே இருந்தேன் 

இன்னொரு அறிவிப்பில் நூறு அவாக் தங்கம் கேட்டிருந்தாலும் அவருக்காக நான் கொடுத்திருப்பேன்என்று பதில் அளித்து அங்கிருந்து பிலால் (ரலி) அவர்களுடன் விடை பெற்றார் அபூபக்ர் (ரலி) அவர்கள்.

தம்மோடு அழைத்து வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் விலை கொடுத்து வாங்கி விட்டோம் என்று பிலாலைத் தம் அடிமையாக ஆக்கிக் கொள்ளவில்லை. மாறாக, பெருமானார் {ஸல்} அவர்களின் சமூகத்திற்கு அழைத்து வந்து அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியவனாக நான் பிலாலை விடுதலை செய்கின்றேன்என்று அந்த நொடிப்பொழுதே விடுதலை அளித்துவிட்டார்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள்.

 

அவர்கள் அளித்த அந்த விடுதலையை அடி, உதையிலிருந்து விடுதலை என்று வெறுமெனே சொல்லிவிட முடியாது. மாறாக, மகத்தான, மாபெரும் விடுதலை என்று தான் சொல்ல வேண்டும். ( நூல்: உஸ்துல் ஃகாபா, ரிஜாலுன் வ நிஸாவுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, ஸியரு அஃலா மின் நுபலா )

روى أبو داود (1678)، والترمذي (3675) عن عُمَرَ بْنِ الْخَطَّابِ، رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: "أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا أَنْ نَتَصَدَّقَ، فَوَافَقَ ذَلِكَ مَالًا عِنْدِي، فَقُلْتُ: الْيَوْمَ أَسْبِقُ أَبَا بَكْرٍ إِنْ سَبَقْتُهُ يَوْمًا، فَجِئْتُ بِنِصْفِ مَالِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ؟)، قُلْتُ: مِثْلَهُ، قَالَ: وَأَتَى أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ بِكُلِّ مَا عِنْدَهُ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ؟) قَالَ: أَبْقَيْتُ لَهُمُ اللَّهَ وَرَسُولَهُ، قُلْتُ: لَا أُسَابِقُكَ إِلَى شَيْءٍ أَبَدًا" والحديث حسنه الألباني في "صحيح أبي داود".

உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- நபி அவர்கள் ஒரு நாள் தர்மங்களைக் கொண்டுவந்து நீங்கள் இங்கு பள்ளியில் ஒன்று சேருங்கள் என்று எங்களுக்கு ஒரு கட்டளை கொடுத்தார்கள். அப்போது என்னிடத்தில் அதிகமாக செல்வம் இருந்தது. உடனே உமர் (ரலி) அவர்கள் முடிவு செய்தார்கள்.

இன்று நான் அபூபக்ரை முந்துவதற்கு உண்டான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று தன்னுடைய செல்வத்தில் பாதியை எடுத்துக்கொண்டு நபி அவர்களிடம் வருகிறார்கள். நபி அவர்கள் அவர்கள் கேட்டார்கள்.

உமரே! உங்களுடைய குடும்பத்திற்கு எதை வைத்து விட்டு வந்தீர்கள். அதற்கு, உமர் ரலி அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே!இங்கு கொண்டுவந்த அளவிற்கு அங்கு என் குடும்பத்திற்கு இருக்கின்றது. பாதியைக் கொண்டு வந்துவிட்டேன். பாதி குடும்பத்திற்கு வைத்து விட்டு வந்தேன். அப்போது அங்கிருந்த அபூபக்கரை பார்த்து நபி அவர்கள் கேட்டார்கள்.

 

அபூபக்ரே! உங்களது குடும்பத்தாருக்கு எதை வைத்து விட்டு வந்தீர்கள்? அதற்கு, அபூபக்ர் ரலி அவர்கள்"நான் அவர்களுக்காக அல்லாஹ்வையும், ரஸூலையும்" வைத்து விட்டு வந்தேன்.

அப்போது உமர் ரலி அவர்கள் "அபூபக்ரே! ஒருக்காலும் நான் எதிலும் உங்களை முந்தி விட முடியாது என்று. ( நூல் : அபூதாவூத் )

அல்லாஹ்விற்காக வாரி வாரி பொருளாதரத்தை வழங்கிய மேன்மக்களுக்கு அல்லாஹ் வழங்கிய மேன்மை!

وروى جبير بن نفير، عن عوف بن مالك أَنه رأَى في المنام قبة من أَدَم في مرج أَخضر، وحول القبة غَنَم رَبوض تجتر وتَبعر العجوة، قال: قلت: لمن هذه القبة ؟ قيل: هذه لعبد الرحمن بن عوف. فانتظرناه حتى خرج فقال: يا ابن عوف، هذا الذي أَعطى الله عز وجل بالقرآن، ولو أَشرفت على هذه الثنيه لرأَيت بها ما لم تر عينك، ولم تسمع أذنك، ولم يخطر على قلبك مثله، أَعد. الله لأَبي الدرداء إِنه كان يدفع الدنيا بالراحتين والصدر.

அவ்ஃப் இப்னு மாலிக் அல் அஷ்ஜயீ (ரலி) எனும் சீரிய நபித்தோழர். ஃபத்ஹ் மக்காவின் போது அஷ்ஜயீ கோத்திரத்தாரின் அணியை தலைமையேற்று வழி நடாத்தி தமது கோத்திரத்தாரின் கொடியை நபிகளாரின் ஆணைக்கிணங்க பிடித்தபடி மக்காவில் நுழையும் பாக்கியத்தைப் பெற்றவர்கள்.

ஒரு நாள் கனவொன்று கண்டார்கள். அந்தக் கனவில் பரந்து விரிந்த ஓர் சோலைவனம். நிழல் படர்ந்த அடர்த்தியான மரங்கள். அதன் நடுவே உயர்ந்த மாடங்கள் கொண்ட ஓர் அழகிய கூடாரம். முழுக்க தோலினால் ஆன அழகிய கூடாரம் அது. தம் வாழ்நாளில் அதுவரை கண்டிராத கூட்டம் கூட்டமாக செம்மறி ஆட்டின் மந்தை!

இவ்வளவு உயர்ந்த இந்த பூஞ்சோலை யாருக்குரியது?” என வினவினாராம் அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள். தூரத்தில் இருந்து இது அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களுக்குரியதுஎன்று அசரீரி வந்தது.

அசரீரியைக் கேட்டுக் கொண்டே முன்னெறிய போது கூடாரத்தின் உள்ளிருந்து வெளியேறிய அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், அவ்ஃப் இப்னு மாலிக்கிடம் சொன்னார்களாம்: அவ்ஃபே! இது அல்லாஹ் நமக்கு தருவதாக குர்ஆனில் வாக்களித்திருந்தவைகளாகும்.

அதோ தெரிகிறதே அந்த மேடான பகுதிக்குச் சென்றால் அங்கே நீர் கற்பனைக்கு எட்டாதவைகளை எல்லாம் காண்பீர்என்றார்கள்.

அப்போது அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அது யாருக்கு உரியது அபூ முஹம்மத் அவர்களே?” என்று வினவ, வல்ல ரஹ்மான் தோழர் அபூதர்தா (ரலி) அவர்களுக்காக ஆயத்தப்படுத்தி வைத்துள்ளான்.

ஏனெனில், அவர் உலகில் வாழும் போது தமது முழு ஆற்றலையும் பயன் படுத்தி உலக வளங்களை விட்டும், சுக போக வாழ்வை விட்டும் ஒதுங்கி வாழ்ந்தார். ஆதாலால் இன்று மிகப்பெரிய செல்வந்தனாக மாறிப்போனார்என்று அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் பதில் கூறினார்களாம். இதை ஜுபைர் இப்னு நஃபீர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}…., உஸ்துல் காபா )

அல்லாஹ்வின் வணிகர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி)

மக்காவில் பெரும் செல்வந்தராக வாழ்ந்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக எல்லாவற்றையும் துறந்து ஹிஜ்ரத் செய்து வந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் கையில் வைத்திருந்த இரண்டு திர்ஹம்களைக் கொண்டு மதீனாவின் புகழ்பெற்ற கடை வீதியான பனூகைனுகா கடை வீதிக்கு வழிகாட்டப்பட்டார். 

அல்லாஹ்வின் திருப்பெயரை முன் மொழிந்து கடை வீதிக்குள் நுழைந்த அவர் மாவு, நெய், பாலாடைக்கட்டி என சிறு வணிகம் செய்து லாபம் ஈட்டினார்.

 

உயர்ந்த எண்ணங்களோடும், இலட்சியத்தோடும் அவர்கள் சில திர்ஹத்தோடு வாழ்வைத் துவங்கிய போது அவர்களுக்கு வயது 37 அல்லது 40 தான். அவர்கள் இப்பூவுலகைப் பிரியும் போது 75 வயது.

சற்றேறக்குறைய 35 ஆண்டுகளில் மிகப் பெரும் செல்வந்தராக உருவெடுத்தார்கள். அல்லாஹ்வின் வணிகர் என்றும் மக்களால் அழைக்கப்பட்டு வரலாற்றில் இடம் பெற்றார்கள்.

فقال:لقد رأيتني لو رفعت حجرا لوجدت تحته فضة وذهبا.

எந்தளவு அவர்கள் உயர்ந்த இடத்திற்கு வந்தார்கள் என்றால், அவர்களே சொல்வார்களாம்: ஒரு கல்லைத் தொட்டு தூக்கினால் கூட அதன் அடியிலிருந்து தங்கத்தையோ, வெள்ளியையோ பெற்றுக் கொண்டே இருக்கின்றேன். நான் தொட்டதெல்லாம் துலங்கிற்று. என் கை பட்டதெல்லாம் பொன்னாகியதுஎன்று

ما وعده الرسول -صلى الله عليه وسلم-: عبد الرحمن بن عوف في الجنة.

எல்லாவற்றிற்கும் மேலாக அண்ணல் நபி அவர்களின் அருள் நிறைந்த வாயால் உலகிலேயே சுவனத்தைக் கொண்டு சோபனம் பெறும் பேற்றையும் பெற்றார்கள்.

ஆம் சுவனத்தைக் கொண்டு சோபனம் பெற்ற பதின்மரில் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களும் ஒருவர்.

அவர்களின் பொருளாதாரத்தை சத்திய சன்மார்க்கத்திற்காகவும், ஏழை எளியோருக்காகவும் வாரி வழங்கியதைப் பற்றிய செய்திகளைப் பார்த்தாலே அவர்கள் பெற்றிருந்த செல்வம் எவ்வளவு என்பதை வியப்பின் விளிம்பில் நின்று தான் நாம் உணர முடியும்.

وبلغ من جود عبد الرحمن بن عوف أنه قيل: أهل المدينة جميعا شركاء لابن عوف في ماله، ثُلث يقرضهم، وثُلث يقضي عنهم ديونهم، وثلث يصِلَهم ويُعطيهم.

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் செல்வத்தில் மதீனா வாசிகள் அனைவருக்கும் பங்கிருந்ததாம். ஆம்! செல்வத்தில் மூன்றில் ஒரு பங்கை மக்களுக்கு கடனாக வழங்குவார்களாம். மூன்றில் இன்னொரு பங்கை மக்கள் வாங்கிய கடனை அடைப்பதற்காக வழங்குவார்களாம். மூன்றில் இன்னொரு பங்கை அவர்களுக்கு தானமாக வழங்குவார்களாம்.

باع في يوم أرضا بأربعين ألف دينار، ثم فرّقها في أهله من بني زهرة، وعلى أمهات المؤمنين، وفقراء المسلمين. وقدّم يوما لجيوش الاسلام خمسمائة فرس، ويوما آخر الفا وخمسمائة راحلة. وعند موته، أوصى بخمسن ألف دينار في سبيل الله، وأ،صى لكل من بقي ممن شهدوا بدرا بأربعمائة دينار،

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் மரண நேரத்தில் செய்த வஸிய்யத்தில் என் செல்வத்தில் 50000, தீனாரை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்து விடுங்கள். பத்ரில் கலந்து கொண்டவர்களில் இப்போது எவரெல்லாம் உயிருடன் இருக்கின்றார்களோ அவர்களில் ஒவ்வொருவருக்கும் 400 தீனார் வீதம் கொடுத்து விடுங்கள்என்று சொல்லி இருந்தார்களாம்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஹயாத்தோடு வாழும் காலத்தில் தமது பொருளாதாரத்தில் சரிபாதியை அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்தார்கள். ஒரு போரின் போது 500 வாகனங்களையும், இன்னொரு போரின் போது 1500 வாகனங்களையும் அர்ப்பணித்தார்கள்.

மதீனாவில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான அடகு வைக்கப்பட்ட சுமார் 30000 வீடுகளை தன் சொந்தப் பணத்தில் மீட்டுக் கொடுத்தார்கள்.

ஒரு தடவை 700 ஒட்டகங்களையும், அவை சுமந்து வந்த வியாபாரப் பொருட்களையும் முஸ்லிம்களுக்கு தானமாக வழங்கினார்கள். பிரிதொரு முறை 500 குதிரைகள் சுமந்து வந்த பொருட்களை மக்களுக்கு வாரிக் கொடுத்தார்கள்.

ஒரு முறை தங்களுக்கு சொந்தமான ஒரு இடத்தை விற்று, அதன் மூலம் வந்த 40000 தீனாரை அண்ணலாரின் அருமைத் துணைவியர்களுக்கும், ஏழைகளுக்கும், அவர்களின் சொந்த உறவுகளில் பனூ ஜஹ்ரா குடும்பத்தினரில் சிரமப்படுவோருக்கும் வழங்கினார்கள். ( நூல்: இஸ்தீஆப், தபகாத் இப்னு ஸஅத், ஸியரு அஃலா மின் நுபலா, உஸ்துல் காபா, ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}.... )

அல்லாஹ்விற்காக நமது பொருளாதாரத்தை செலவு செய்ய, தியாகம் செய்ய, அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிக்க முன் வருவோம்!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் பொருளாதாரத்தை தந்து, அவனுக்காக மனமுவந்து செலவு செய்யும் மனதை தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

Monday, 23 February 2026

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 07. ஆடை... அல்லாஹ் வழங்கிய அருட்கொடை!!

 

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 07.

ஆடை... அல்லாஹ் வழங்கிய அருட்கொடை!!



அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வின் மகத்தான கருணையால் ஆறாவது நோன்பை நிறைவு செய்துள்ளோம். ஏழாவது நாள் தராவீஹ் தொழுகையை தொழுது விட்டு அமர்ந்துள்ளோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் நோன்பையும் தராவீஹ் தொழுகையையும் இதர வணக்க வழிபாடுகளையும் ஏற்றுக் கொள்வானாக!

இன்றைய தராவீஹ் தொழுகையில் 206 வசனங்கள் கொண்ட சூரா அல் அஃராஃப் முழுமையாக ஓதி முடிக்கப்பட்டது.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த உலகத்திற்கு இரண்டு படைப்புகளை, பொருட்களை வானில் இருந்து இறக்கியதாக கூறுகின்றான். ஒன்று இரும்பு.

لَقَدْ اَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَیِّنٰتِ وَاَنْزَلْنَا مَعَهُمُ الْكِتٰبَ وَالْمِیْزَانَ لِیَقُوْمَ النَّاسُ بِالْقِسْطِ وَاَنْزَلْنَا الْحَدِیْدَ فِیْهِ بَاْسٌ شَدِیْدٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَلِیَعْلَمَ اللّٰهُ مَنْ یَّنْصُرُهٗ وَرُسُلَهٗ بِالْغَیْبِ اِنَّ اللّٰهَ قَوِیٌّ عَزِیْزٌ ۟

நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்; இன்னும், இரும்பையும் நாம் இறக்கினோம்; அதில் கடினமான சக்தியும் மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன - (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாக உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன். ( அல்குர்ஆன்: 57: 25 )

மற்றொன்று இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட வசனங்களில் ஒன்றான 26 -வது வசனத்தில் கூறப்படும் ஆடையாகும்.

இதில் இருந்து இன்னொரு விஷயமும் தெளிவாகிறது. அல்லாஹ் மனிதனை பூமியில் இறக்கும் போதே அவனுக்கான ஆடையையும் சேர்த்தே இறக்கி விட்டான்.

يَا بَنِي آدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاساً يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشاً

ஆதமுடைய மக்களே! உங்களுடைய வெட்கத்தளங்களை மறைப்பதற்காகவும், உங்கள் உடலுக்கு பாதுகாப்பாகவும் அலங்காரமாகவும் இருக்கக் கூடிய ஆடைகளை நாம் உங்களுக்கு அருளியிருக்கின்றோம்’ ( அல்குர்ஆன்: 07: 26 )

ஆடை உலகோடு முடிந்து விடும் ஒன்றல்ல...

ஆடை என்பது நாளை மறுமையில் நல்லடியார்களை தொடரும் மகத்தான ஒரு அம்சமாக இடம் பெற்றுள்ளது என்று இஸ்லாம் கூறுகிறது.

حدثنا عفان ، حدثنا شعبة ، حدثنا المغيرة بن النعمان ، شيخ من النخع ، قال : سمعت سعيد بن جبير يحدث ، قال : سمعت ابن عباس ، قال : قام فينا رسول الله صلى الله عليه وسلم بموعظة ، فقال : " يا أيها الناس ، إنكم محشورون إلى الله حفاة عراة غرلا كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين [ الأنبياء : 104 ] . ألا وإن أول الخلق يكسى يوم القيامة إبراهيم ،

எங்கள் மத்தியில் நபி அவர்கள் ஒருநாள் உபதேசம் செய்ய எழுந்து நின்றார்கள். அப்போது, நிச்சயமாக நீங்கள் பாதணி (காலணி) அணியாதவர்களாகவும், நிர்வாணிகளாகவும், விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாகவும் அல்லாஹ்வின் பக்கம் மறுமையில் எழுப்பப்படுவீர்கள் எனக் குறிப்பிட்ட பின்னர், “நாம் ஆரம்பமாக படைத்ததைப் போன்றதொரு நிலைக்கு (உங்களை) மீட்டுவோம்என்ற திருமறை வசனத்தைக் கூறினார்கள். பின்னர், படைப்புக்களில் முதலாவதாக ஆடை அணிவிக்கப்படுபவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் எனக் குறிப்பிட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)

சுவனவாதிகளில் முதலாவதாக மஹ்ஷர் மன்றத்தில் ஆடை அணிவிக்கப்படும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களாகும். அவர்களைப் போன்று அனைத்து நபிமார்களும் அணிவிக்கப்படுவார்கள் என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.

அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ் நல்லடியார்களுக்கு உயர்தரமிக்க ஆடை ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளான் என்பதையும் குர்ஆன் குறிப்பிடுகிறது.

தடித்த, மென்மையான பட்டாடைகள் சுவனவாதிகளின் ஆடைகளாகக் கூறப்பட்டுள்ளன. பச்சை நிறமான பட்டுக்கள் என்று நிறம் அடையாளம் காட்டப்பட்டிருப்பதையும் பார்க்கின்றோம்.

அதில் அவர்களது ஆடை பட்டாக இருக்கும். (ஃபாதிர்: வசனம்: 33).

அவர்களின் மேல் மேனியின் மீது மென்மையான பட்டும், (வெளி உடம்பில்) தடிப்பமானதும் இருக்கும். (அத்தஹ்ர்: 21)

அவர்கள் தடித்த, மற்றும் மென்மையான பட்டுக்களை அணிந்தவர்களாக ஒருவரை ஒருவர் முன்னோக்கி இருப்பார்கள். (அத்துஹ்ஹான். வசனம்: 53),

அவர்கள் மெல்லிய, மற்றும் தடித்த பச்சை நிறப்பட்டுக்களை அணிந்து, உயர்ந்த ஆசனங்கள் மீது அமர்ந்திருப்பார்கள். (அல்கஹ்ஃப்: வசனம்: 31).

எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்களும் புரிந்தார்களோ அவர்களுக்கு சுவனச்சோலைகள் உண்டு. அதன் கீழால் நதிகள் ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்கள் தங்கத்திலான காப்புக்களும், இன்னும், முத்துக்களும் அணிவிக்கப்படுவார்கள், அதில் அவர்களது ஆடை ஹரீர் என்ற பட்டாகும் (அல்ஹஜ்: வசனம்: 22)

(நன்மை செய்தவருக்குரிய கூலி) அத்ன் என்ற சுவனச் சோலைகளாகும். அதில் அவர்கள் தங்கத்திலான காப்புக்களும், இன்னும், முத்துக்களும் அணிவிக்கப்படுவார்கள், அதில் அவர்களது ஆடை ஹரீர் என்ற பட்டாகும் (ஃபாதிர்: வசனம்: 33).

يَا بَنِي آدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاساً يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشاً

ஆதமுடைய மக்களே! உங்களுடைய வெட்கத்தளங்களை மறைப்பதற்காகவும், உங்கள் உடலுக்கு பாதுகாப்பாகவும் அலங்காரமாகவும் இருக்கக் கூடிய ஆடைகளை நாம் உங்களுக்கு அருளியிருக்கின்றோம்’ ( அல்குர்ஆன்: 07: 26 )

மேலுள்ள வசனத்தில் அல்லாஹ் மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஆடை அணிகலன்களை வழங்கியதாக கூறுகின்றான். 

01. வெட்கத்தளங்களை மறைத்தல் :

ஆடையை அல்லாஹ் அருளியதற்கு முதன்மையான நோக்கமாக வெட்கத்தளங்களை மறைப்பதனை அடையாளப்படுத்துகின்றான். ஆக இம்முதல் நிலை நோக்கத்தை நிறைவு செய்வதாக எமது ஆடை அணிகலன்கள் இருக்க வேண்டும்.

ஒரு முஸ்லிமான ஆண்; தொப்புள் முதல் முழங்கால் வரையான பகுதிகளையும் பெண் முகம், இரு கைகள் தவிர்ந்த ஏனை உறுப்புக்கள் அனைத்தையும் மறைக்கும் விதமாக ஆடைகள் இருக்க வேண்டும். (சில அறிஞர்கள் பெண்கள் உடல் முழுவதையும் மறைக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்)

02 உடலுக்கு பாதுகாப்பு :

ஒரு மனிதனின் நடத்தையினை தீர்மானிப்பதில் ஆடை என்பது பாரிய பங்கு வகிக்கின்றது. அவன் எப்படியான ஆடைகளை அணிகின்றானோ அந்த ஆடைக்கு ஏற்பவே தனது செயற்பாடுகளை அமைத்துக் கொள்கின்றான். ஆக மனிதனின் செயற்பாடுகளை தீர்மானிப்பதில் ஆடை என்பது மகத்தான பங்கு வகிக்கின்றது என்பது ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட முடிவாகும்.

ஆடை உடலுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது சூழலில் காணப்படும் அகப்புற சூழல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பதனையே குறிக்கின்றது. ஒருவர் ஆடை அணிவதன் மூலம் புறத்தாக்கங்களிலிருந்து தனது உடலை பாதுகாப்பதை அனைனவரும் எதிர்பாhப்பது போன்று அக ரீதியாகவும் ஆடை உடலில் பாதிப்பு செலுத்தவும் துர் நடத்தைகளிலிந்து எம்மை பாதுகாக்கவும் வேண்டும் எதிர்பார்ப்பதும் அவ்வாரான ஆடைகளை அணிவதும் அவசியமாகும்.

03. அலங்காரம் :

ஆடை என்பது அலங்காரம் என்பதை யாரும் மறுப்பதில்லை இறைவனே அதனை தனது திருமறையிலும் தெளிவுபடுத்தியுள்ளான். ஆனால் அந்த அலங்காரம் என்பது வரையருக்கப்பட்டதாகும். அவ்வயைரைகளை தழுவியதாய் ஆடை அணிகலன்கள் இருத்தல் வேண்டும். நபி அவர்கள் ஒரு முஸ்லிமின் ஆடையின் வரையரைகளை மிகவும் தெளிவாக கூறியுள்ளார்கள்.

ஆடை அணிகின்ற விஷயத்தில் இஸ்லாத்தில் கூறப்பட்டிருக்கின்ற முறைப்படி அணிந்தால், நாம் அணியும் ஆடையின் மூலமாக கூட அல்லாஹ்விடம் கூலியைப் பெற முடியும். மேலும் அது நன்மையான செயலாகவும் ஆகிவிடும். குறிப்பாக இந்த மூன்று வடிவங்களில் ஆண்களும், பெண்களும் ஆடை அணிய கூடாது 

1. அன்னிய மதத்தவர்கள் தங்களின் மதத்தை அடையாளம் காட்டுவதற்காக அணியும் ஆடைகளை அணியக்கூடாது.

 

وَعَنِ اِبْنِ عُمَرَ ‏-رَضِيَ اَللَّهُ عَنْهُمَا‏- قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ ‏- صلى الله عليه وسلم ‏-{ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ, فَهُوَ مِنْهُمْ } أَخْرَجَهُ أَبُو دَاوُدَ, وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.

யார் இன்னொரு கூட்டத்திற்கு ஒப்பாகின்றாரோ அவர் அவரைச்சேர்ந்தவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

2. ஆண், பெண் அணியும் ஆடையைப் போன்றோ, பெண் ஆண், அணியும் ஆடையைப் போன்றோ அணியக்கூடாது.

وعنْ أَبي هُريْرةَ قَالَ: "لَعنَ رسُولُ اللَّه ﷺ الرَّجُلَ يلْبسُ لِبْسةَ المرْأةِ، والمرْأةَ تَلْبسُ لِبْسةَ الرَّجُلِ" رواه أَبُو داود بإسنادٍ صحيحٍ.

பெண் அணியும் ஆடையைப்போன்று அணியக்கூடிய ஆணையும்,; ஆண் அணியும் ஆடையைப்போன்று அணியக்கூடிய பெண்ணையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். ( நூல் : அபூதாவூத் )

وفي روايةٍ: "لَعنَ رسُولُ اللَّهِ ﷺ المُتَشبِّهين مِن الرِّجالِ بِالنساءِ، والمُتَشبِّهَات مِن النِّسَاءِ بِالرِّجالِ" رواه البخاري.

பெண்களைப்போன்று வேஷம்போடக்கூடிய ஆண்களையும், ஆண்களைப்போன்று வேஷம்போடக்கூடிய பெண்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். ஆதாரம் : புகாரி

3. பெருமைக்காக ஆடை அணியக்கூடாது.

وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: مَنْ لَبِسَ ثَوْبَ شُهْرَةٍ فِي الدُّنْيَا أَلْبَسَهُ اللَّهُ ثَوْبَ مَذَلَّةٍ يَوْمَ الْقِيَامَةِ رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُد وَابْنُ مَاجَهْ.

யார் (இவ்வுலகில்) பெருமைக்காக ஆடை அணிகின்றாரோ அவருக்கு அல்லாஹ் மறுமையில் இழிவான ஆடையை அணிவிப்பான். பின்பு அதில் நெருப்பு பிடித்துவிடும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். ( நூல்: அபூதாவூத் )

4) மர்ம உறுப்பை மறைக்கும் படி ஆடை அணியவேண்டும்.

حدثنا عبد الله بن مسلمة، نا أبي. (ح) ونا ابن بشار، نا يحيى نحوه عن بهز بن حكيم، عن أبيه، عن جده قال: ((قلت: يا رسول الله عوراتنا ما نأتي منها، وما نذر؟ قال: احفظ عورتك إلا من زوجتك، أو ما ملكت يمينك قال: قلت: يا رسول الله إذا كان القوم بعضهم في بعض؟ قال: إن استطعت أن لا يرينها أحد فلا يرينها قال: قلت: يا رسول الله إذا كان أحدنا خاليا؟ قال: الله أحق أن يستحيى منه من الناس)))).

எங்கள் மறை உறுப்புகளில் எதை மறைக்க வேண்டும்; எவற்றை மறைக்காமல் இருக்கலாம்என்று நபி அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி அவர்கள், “உன் மனைவி, உன் அடிமைப் பெண்களிடம் தவிர மற்றவர்களிடம் உன் மறை உறுப்புகளை பாதுகாத்துக் கொள்என்று விடையளித்தார்கள். ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் இருக்கும் போது மறை உறுப்பைக் காத்து கொள்ள வேண்டுமா?” என்று கேட்டேன். அதற்கு நபி அவர்கள், “வெட்கப்படுவதற்கு அல்லாஹ் மிகத் தகுதியானவன்என்று விடையளித்தார்கள். இதை முஆவியா பின் ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்: திர்மிதி )

5) ஒரு ஆடையில் இருவர் படுக்கக் கூடாது..

ஒரு ஆண் மற்றொரு ஆணுடைய மறை உறுப்பைப் பார்க்க வேண்டாம்; ஒரு பெண் மற்றொரு பெண்ணுடைய மறை உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரு ஆண், மற்றொரு ஆணுடன் ஒரே ஆடைக்குள் படுக்க வேண்டாம்; ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு ஒரே ஆடைக்குள் படுக்க வேண்டாம்என்று நபி அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

( நூல்: திர்மிதி )

ஆண்கள் கரண்டைக்காலுக்கு கீழ் ஆடை அணியும் விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

وَلِأَحْمَدَ وَالْبُخَارِيِّ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: مَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ مِنَ الْإِزَارِ فِي النَّارِ.

கரண்டைக்கு கீழே இறங்கும் ஆடையின் பகுதி நரகத்தில் வேதனை செய்யப்படும் என்று நபி அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )

وقال ﷺ: ثلاثة لا يُكلمهم الله يوم القيامة، ولا ينظر إليهم، ولا يُزكيهم، ولهم عذاب أليم: المسبل إزاره، والمنان بما أعطى، والمنفق سلعته بالحلف الكاذب،

நபி அவர்கள் கூறினார்கள்:- நாளை மறுமையில் அல்லாஹ் மூன்று பேரோடு பேசவும்மாட்டான், இன்னும் அவர்களை பார்க்கவும் மாட்டான். அவர்களை (பாவத்திலிருந்து) தூய்மை படுத்தவும்மாட்டான். அவர்களுக்கு பெரும் வேதனையுமுண்டு என்று மூன்று தடவை நபி அவர்கள் கூறினார்கள்.(அப்போது) அபூதர் (ரலி) அவர்கள் (அப்படி) நஷ்டவாளியும் கைசேதமுள்ளவர்கள் யார்? என வினவினார்கள். அப்போது நபி அவர்கள் "கரண்டைக்கு கீழ் ஆடை அணிபவனும், கொடுத்ததை சொல்லிக்காட்டுபவனும், பொய்ச்சத்தியம் பண்ணி தன் பொருளை விற்பவனும்" என்று நபி அவர்கள் விடையளித்தார்கள். ( நூல்: முஸ்லிம் )

நபித்தோழர்களின் பேணுதலும், விழிப்புணர்வும்...

فدعا عثمان فأرسله إليهم فخرج عثمان على راحلته حتى جاء عسكر المشركين، فعتبوا به وأساءوا له القول، ثم أجاره أبان بن سعيد بن العاص ابن عمه وحمله على السرج وردفه، فلما قدم قال يا ابن عم! ما لي أراك متخشعاً أسبل، قال: وكان إزاره إلى نصف ساقيه، فقال له عثمان: هكذا إزرة صاحبنا) [رواه ابن أبي شيبة] .

ஹுதைபிய்யா உடன் படிக்கையின்போது முஸ்லிம்களின் தூதுவராக ஹள்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் மக்காவிற்கு சென்றார்கள். அங்கு தங்களின் சிறிய தந்தையின் மகன் அபான் இப்னு சயீத் வீட்டில் தங்கினார்கள். காலையில் மக்காவின் தலைவர்களை சந்திக்க கிளம்பினார்கள். அந்நேரத்தில் ஹள்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் கீழாடை இஸ்லாமிய போதனையின் படி கரண்டைக்கு மேல் இருந்தது. இதைக் கண்ட அபான் இப்னு சயீத் கூறினார். உஸ்மான் அவர்களே! அரபிகளிடம் எந்த மனிதர் எவ்வளவு கீழ்நோக்கி (கரண்டை வரை) ஆடைகளை அணிவாரோ அந்தளவு அவர் உயர்ந்தவராக கருதப்படுகிறார் என்பது உங்களுக்கு தெரியும்! தாங்கள் மக்கா தலைவர்களிடம் பேச்சுவார்த்தைக்குச் செல்கிறீர்கள். இவ்வாறு ஆடையை அணிந்து சென்றால் அவர்கள் உங்களை கண்ணியமாக பார்க்கமாட்டார்கள். பேச்சு வார்த்தை முழுமை பெறாது என்று கூறியபோது உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள். முடியாது! நீர் கூறுவதை போன்று ஒருபோதும் என்னால் அணிய முடியாது. ஏனெனில் நான் அணிந்திருப்பதைப் போன்று தான் எனது தலைவர் முஹம்மது நபி அவர்கள் அணிந்திருப்பார்கள் என்று கூறி மறுத்து விட்டார்கள். ( நூல் : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா )

وعن ابن عمر -رضي الله عنهما- قال: “مررت على رسول الله ﷺ وفي إزاري استرخاء، فقال: «يا عبد الله، ارفع إزارك» فرفعته ثم قال: «زد»، فزدت، فما زلت أتحراها بعد، فقال بعض القوم: إلى أين؟ فقال: أنصاف الساقين” [رواه مسلم].

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது எனது கீழாடை கணுக்காலுக்குக் கீழ் இருந்தது. அப்போது அவர்கள், “அப்துல்லாஹ்! உனது கீழாடையை உயர்த்திக் கட்டு!என்றார்கள். நான் உயர்த்திக் கட்டினேன். இன்னும் உயர்த்திக் கட்டுஎன்றார்கள். அவ்வாறே நான் இன்னும் உயர்த்தினேன். பின்னர் நான் அதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். (இவ்வாறு அப்துல்லாஹ் பின் உமர் கூறியதைக் கேட்ட) மக்கள் சிலர், “எதுவரை உயர்த்த வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “கணுக்கால்களின் பாதியளவுக்குஎன்று பதிலளித்தார்கள். ( நூல்: முஸ்லிம் ) 

6) எளிமையாக ஆடை அணிய வேண்டும்...

روى الترمذي (2481) وحسنه ، وأحمد (15631) ، والحاكم (7372) عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ الجُهَنِيِّ ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ( مَنْ تَرَكَ اللِّبَاسَ تَوَاضُعًا لِلَّهِ وَهُوَ يَقْدِرُ عَلَيْهِ دَعَاهُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ عَلَى رُءُوسِ الْخَلَائِقِ حَتَّى يُخَيِّرَهُ مِنْ أَيِّ حُلَلِ الإِيمَانِ شَاءَ يَلْبَسُهَا )

ஹள்ரத் முஆத் இப்னு அனஸ் (ரலி) அவர்கள் தனது தந்தை கூறியதை கூறினார்கள் : யார் வசதியிருந்தும் அல்லாஹ்விற்காக பணிவாக இருக்கவேண்டும் என்று (பெருமையான பகட்டான) ஆடைகளை அணிவதை தவிர்த்துக் கொள்கிறாரோ மறுமை நாளில் இறைவன் அனைத்து படைப்பினங்கள் முன்னிலையில் அவரை அழைத்து அவர் விரும்பும் ஆடையை அவருக்கு அணிவிப்பான்என்று நபி அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதி)

7) எளிமை என்ற பெயரில்...

 

وعن مالك بن نضلة قال: أتيت النبي صلى الله عليه وسلم في ثوب دون، فقال: «ألك مال؟» قال: نعم، قال: «من أي المال؟» قال: قد آتاني الله من الإبل والغنم والخيل والرقيق، قال: «فإذا آتاك الله مالًا، فَلْيُر أَثرُ نعمة الله عليك وكرامته»[

நான் மட்டரகமான ஆடை உடுத்திக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது 'உனக்கு வசதி (செல்வம்) இருக்கிறதா? என்று கேட்டார்கள் நான் 'ஆம்' என்றேன். 'என்னென்ன இருக்கிறது? என்று கேட்டார்கள். 'எல்லாச் செல்வமும் இருக்கிறது ஒட்டகங்கள், ஆடுமாடுகள், குதிரைகள், அடிமைகள் என எல்லாவகைச் செல்வங்களையும் அல்லாஹ் எனக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளான்' என்று நான் கூறினேன். அப்போது நபி அவர்கள் 'அல்லாஹ் உனக்கு வசதி வாய்ப்புகளை வழங்கியிருந்தால் அவன் உனக்கு அளித்துள்ள அருட்கொடையின் அடையாளம் உன் மீது தென்பட வேண்டும்' என்று கூறினார்கள் என் அபுல் அஹ்வஸ் (ரலி) தமது தந்தை மூலம் அறிவிக்கிறார்கள். ( நூல்: அஹ்மத், நஸயீ, ஷரஹுஸ் ஸுன்னா)

وعن عبدالله بن عمرو بن العاص قال: قال رسول الله صلى الله عليه وسلم: «إن الله يحب أن يرى أثر نعمته على عبده»

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தான் வழங்கிய அருட்கொடைகள் தன் அடியானிடம் வெளிப்படுவதை விரும்புகின்றான் என்று நபி அவர்கள் கூறினார்கள்.

8) சுத்தமான, அழகிய ஆடை அணிய வேண்டும்..

يرويه ابن أبي شيبة في "المصنف" (25090) ، والدولابي في "الكني" (596) عَنْ أَبِي الْأَشْهَبِ، عَنْ رَجُلٍ، مِنْ مُزَيْنَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: رَأَى عَلَى عُمَرَ ثَوْبًا غَسِيلًا، فَقَالَ: (أَجَدِيدٌ ثَوْبُكَ هَذَا؟) قَالَ: غَسِيلٌ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ( الْبَسْ جَدِيدًا، وَعِشْ حَمِيدًا، وَتَوَفَّ شَهِيدًا، يُعْطِكَ اللَّهُ قُرَّةَ عَيْنٍ فِي الدُّنْيَا، وَالْآخِرَةِ )

ஒரு நாள் வெண்ணிற ஆடை அணிந்திருந்த நிலையில் உமர் (ரலி) அவர்களை மாநபி அவர்கள் கண்டார்கள்.

உமரே! இது புத்தாடையா? அல்லது துவைத்து சுத்தம் செய்யப்பட்ட ஆடையா? என கேட்டார்கள்.

அதற்கு, உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இது துவைத்து சுத்தம் செய்யப்பட்ட ஆடைஎன்று பதிலளித்தார்கள்.

அப்போது, பூமான் நபி அவர்கள் உம் வாழ்வில் நீர் புத்தாடைகள் பல அணிவீர்! புகழக்குரிய வாழ்வை வாழ்வீர்! வீரமரணம் அடைவீர்! அல்லாஹ் உமக்கு ஈருலகத்தையும் கண்குளிர்ச்சி மிக்கதாய் அமைத்திடுவான்என சோபனமும் சொன்னார்கள். ( நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா )

 

روى مسلم (91) عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ) قَالَ رَجُلٌ: إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً، قَالَ: ( إِنَّ اللهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ، الْكِبْرُ بَطَرُ الْحَقِّ، وَغَمْطُ النَّاسِ) .

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், நபி அவர்களிடம், “ஒரு மனிதர் தன்னுடைய ஆடையும், காலணியும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். இது பெருமையா?” எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் அல்லாஹ் அழகானவன்; அவன் அழகை விரும்புகிறான்என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ( நூல்: முஸ்லிம் )

நபி அவர்கள் வெறுத்த ஆடையை தீயில் போட்ட நபித்தோழர்...

عن عمرو بن شعيب، عن أبيه، عن جده، قال: هبطنا مع رسول اللَّه ﷺ من ثنية، فالتفت إلي، وعليّ ريطةٌ مضرجة بالعصفر، فقال: «ما هذه الريطة عليك؟» فعرفت ما كره، فأتيت أهلي، وهم يسجرون تنورًا لهم، فقذفتها فيه، ثم أتيته من الغد، فقال: «يا عبد اللَّه، ما فعلت الريطة؟» فأخبرته، فقال: «ألا كسوتها بعض

أهلك، فإنه لا بأس به للنساء».

அம்ரு பின் ஷுஐப் தன் பாட்டனார் மூலம் அறிவிக்கிறார்: நாங்கள் நபி அவர்களோடு உயரமான இடத்திலிருந்து இறங்கினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள், என் மீது மிருதுவான ஆடையில் கடுமையாக குங்குமப்பூ சாயமிடப்பட்டிருப்பதைக் கண்டு, “இது என்ன? மிருதுவான ஆடையில் இவ்வளவு காவி நிறத்தால் சாயமிடப்பட்டு இருக்கிறதே?” என்று கேட்டார்கள். நபி அவர்கள் வெறுப்பதை நான் அறிந்து என்னுடைய வீட்டிற்கு வந்தேன். அங்கு அடுப்பு மூட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த அடுப்பில் தூக்கி எறிந்து விட்டு மறுநாள் காலையில் நபி அவர்களிடம் வந்தேன். அப்போது நபி அவர்கள், “அந்த சாயமிடப்பட்ட ஆடையை என்ன செய்தாய்?” என்று கேட்டார்கள். நான் விஷயத்தைக் கூறினேன் அதற்கு நபியவர்கள், “அதை உன் குடும்பத்தாருக்கு அணிவிக்கக் கொடுத்திருக்க கூடாதா? பெண்கள் அணிவது தவறில்லையேஎன்றார்கள். ( நூல்: அபூதாவூத் )

நபி அவர்கள் அணிந்த ஆடையை தமக்கு கஃபனாக வேண்டும் என்று விரும்பிய நபித்தோழர்....

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ:- جَاءَتِ امْرَأَةٌ بِبُرْدَةٍ، قَالَ سَهْلٌ: هَلْ تَدْرِي مَا البُرْدَةُ؟ قَالَ: نَعَمْ، هِيَ الشَّمْلَةُ مَنْسُوجٌ فِي حَاشِيَتِهَا، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي نَسَجْتُ هَذِهِ بِيَدِي أَكْسُوكَهَا، فَأَخَذَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْتَاجًا إِلَيْهَا، فَخَرَجَ إِلَيْنَا وَإِنَّهَا لَإِزَارُهُ،

 

فَجَسَّهَا رَجُلٌ مِنَ القَوْمِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، اكْسُنِيهَا، قَالَ: «نَعَمْ» فَجَلَسَ مَا شَاءَ اللَّهُ فِي المَجْلِسِ، ثُمَّ رَجَعَ فَطَوَاهَا، ثُمَّ أَرْسَلَ بِهَا إِلَيْهِ،

فَقَالَ لَهُ القَوْمُ: مَا أَحْسَنْتَ، سَأَلْتَهَا إِيَّاهُ، وَقَدْ عَرَفْتَ أَنَّهُ لاَ يَرُدُّ سَائِلًا، فَقَالَ الرَّجُلُ: وَاللَّهِ مَا سَأَلْتُهَا إِلَّا لِتَكُونَ كَفَنِي يَوْمَ أَمُوتُ. قَالَ سَهْلٌ: فَكَانَتْ كَفَنَهُ

ஒரு பெண்மணி புர்தா’ (சால்வை) ஒன்றைக் கொண்டு வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் இதை என் கையால் நெய்தேன். இதைத் தாங்கள் அணிவதற்காக வழங்குகிறேன்என்றார்.

இவ்வாறு ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, ‘புர்தாஎன்றால் என்ன என்று தெரியுமா? எனக் கேட்டார்கள். (அங்கிருந்தவர்கள் தெரியும்என்று சொல்ல,) ‘ஆம் அது கரை வைத்து நெய்யப்பட்ட போர்வைஎன ஸஹ்ல் (ரலி) கூறினார். (பின்னர் தொடர்ந்து அவர்கள் சொன்னார்கள்:)

இறைத்தூதர் அவர்கள் அது தமக்குத் தேவையென்று கருதி அதை வாங்கினார்கள். பிறகு, அதை கீழங்கியாக அணிந்து கொண்டு நபி அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது மக்களில் ஒருவர் அதைத் தொட்டுப் பார்த்து (அதன் அழகை ரசித்தவராக) இறைத்தூதர் அவர்களே! எனக்கு இதை அணியக் கொடுங்கள்என்று கேட்க, நபி அவர்கள், ‘சரிஎன்றார்கள்.

பிறகு நபி அவர்கள் அல்லாஹ் நாடிய (நேரம்)வரை அந்த அவையில் அமர்ந்திருந்துவிட்டு (தம் வீட்டுக்கு)த் திரும்பினார்கள். பிறகு அந்தச் சால்வையை மடித்து அந்த மனிதருக்குக் கொடுத்தனுப்பினார்கள்.

மக்கள், ‘நீ செய்தது சரியல்ல. நபி அவர்கள் தம்மிடம் கேட்பவரை (வெறுங்கையோடு) திருப்பி அனுப்புவதில்லை என்று தெரிந்துகொண்டே அவர்களிடம் (ஏன்) இதைக் கேட்டாய்என்றார்கள். அதற்கு அந்த மனிதர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இதைக் கேட்டதெல்லாம் நான் இறக்கும் நாளில் என் (உடலில் அணிவிக்கப்படும்) கஃபனாக இது இருக்கட்டும் என்பதற்காகத்தான்என்றார். அவ்வாறே அது அவருக்குக் கஃபனாக ஆயிற்று. அறிவிப்பவர்: அபூஹாஸிம் ஸலமா இப்னு தீனார், ( நூல்: புகாரி )

ஆடை அணியும் போது ஓதும் துஆ..

عن معاذ بن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: مَنْ لَبِسَ ثَوْبًا فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا الثَّوْبَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ رواه أبو داود (رقم/4023)، صححه ابن حجر في " الخصال المكفرة " (74)

நபி அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் ஆடை அணிந்தால் அல்ஹம்துலில்லாஹில்லதீ கஸானீ ஹாதா வரஷகனீஹி மின் ஙைரி ஹவ்லிம் மின்னீ வலா குவ்வா (என்னுடைய எந்த சக்தியும் எந்த முயற்சியுமின்றி எனக்கு இந்த ஆடையை வழங்கி எனக்கு இதை அணிவித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்”) என்று ஓதட்டும்அப்படி ஓதினால் அவரின் முன் பின் (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன " என்று கூறினார்கள். (நூல் : அபூதாவூத்)

புத்தாடை அணியும் போது ஓதும் துஆ:

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه قال:

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَجَدَّ ثَوْبًا سَمَّاهُ بِاسْمِهِ، إِمَّا قَمِيصًا أَوْ عِمَامَةً، ثُمَّ يَقُولُ: اللَّهُمَّ لَكَ الْحَمْدُ، أَنْتَ كَسَوْتَنِيهِ، أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ رواه أبو داود (رقم/4023)

ஹள்ரத் அபூ சயீத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி அவர்கள் புதிய தலைப்பாகையோ அல்லது புதிய ஆடையையோ அணிந்தால் அல்லாஹும்ம லகல் ஹம்து அன்த கஸவ்தனீஹீ வஅஸ்அலுக மின் கைரிஹீ வகைரி மா ஸுனிஅ லஹு - வஅஊதுபிக மின் ஜர்ரிஹு வஜர்ரி மா ஸுனிஅ லஹு (எனக்கு ஆடை அணிவித்த அல்லாஹ்வே! உனக்கே எல்லாப் புகழும்! மேலும் நான் உன்னிடம் இதன் நலவையும் இது உருவாக்கப்பட்டதின் நலவையும் வேண்டுகிறேன். மேலும் இதன் கெடுதியையும் இது உருவாக்கப்பட்டதின் கெடுதியை விட்டும் உன்னி டம் பாதுகாப்பு தேடுகிறேன்என்று ஓதும் வழமையுடையவர்களாக இருந்தார்கள். ( நூல் : திர்மிதி )

ஆடையை கழற்றும் போது ஓதும் துஆ:

عن أنس بن مالك رضي الله عنه : ولفظه : قال رسول الله صلى الله عليه وسلم : ( سِتْرُ مَا بَيْنَ أَعْيُنِ الْجِنِّ ، وَعَوْرَاتِ بَنِي آدَمَ إِذَا وَضَعُوا ثِيَابَهُمْ أَنْ يَقُولُوا : بِسْمِ اللَّهِ ) .

ஹள்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி அவர்கள் ஜின்களின் கண்களுக்கும் மனிதர்களின் மர்மஸ்தானத்திற்கும் மத்தியில் மறைவு ஏற்பட (வேண்டுமானால்) அவர் தனது ஆடையை கழற்றும் போது பிஸ்மில்லாஹ் என்று ஓதிக்கொள்ளட்டும்என்று கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )

இஸ்லாமிய கலாச்சார அடிப்படையில் ஆடைகள் அணிவோம்!