Saturday, 14 March 2026

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 26. கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்ப்போம்!!!

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 26.

கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்ப்போம்!!!



25 –ஆவது நோன்பை நிறைவு செய்து, 26 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் நபா அத்தியாயம் முதல் அஷ் ஷம்ஸ் வரையிலான 14 அத்தியாயங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.

நாளைய தராவீஹ் தொழுகையில் ஓத இருக்கிற அள் - ளுஹா அத்தியாயம் நபி அவர்களுக்கு இறக்கியருளப்பட்டதன் பிண்ணனி மற்றும் அதன் கருத்தாழமிக்க வசனங்கள் குறித்து இன்றைய தராவீஹ் சிந்தனையாக நாம் பேசவும் கேட்கவும் இருக்கிறோம்.

روى البخاري ومسلم من حديث جندب - رضي الله عنه - قال: اشتكى النبي - صلى الله عليه وسلم - فلم يَقُم ليلةً أو ليلتين أو ثلاثًا، فجاءت امرأة فقالت: يا محمد، إني لأرجو أن يكون شيطانك قد تركك، لم أرَه قربك منذ ليلتين أو ثلاثة، فأنزل الله - عز وجل -: {وَالضُّحَى * وَاللَّيْلِ إِذَا سَجَى * مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى} [الضحى: 1 - 3].

ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் இப்னி சுஃப்யான்(ரழி) கூறினார் ; (ஒருமுறை) நபி அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது 'ஓர்இரவு' அல்லது 'இரண்டு இரவுகள்' அவர்கள் (இரவுத் தொழுகைக்காகக் கூட) எழவில்லை. அப்போது ஒரு பெண் (அபூலஹபின் மனைவி உம்மு ஜமீல் என்று சில ரிவாயத்துகளில் சொல்லப்படுகிறது), நபி அவர்களிடம் வந்து, 'முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டுவிட்டதாகவே கருதுகிறேன். (எனவேதான் ஓரிரு இரவுகளாக உம்மை அவன் நெருங்கவில்லை)' என்று கூறினாள். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், 'முற்பகலின் மீது சத்தியமாக! மேலும், இருண்டுவிட்ட இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உங்களுடைய இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை' எனும் ( அல்குர்ஆன் 93:1-3ஆகிய) வசனங்களை அருளினான். ( நூல்: புகாரி : 4983 )

முஹம்மது நபி அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து கிடைத்த வஹீயானது இரு முறைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. 

இதற்கான முக்கியக் காரணமாக திருக்குர்ஆன் விரிவுரை அறிஞர்களும் ஆரம்பமாக இறக்கப்பட்ட அத்தியாயங்கள், வசனங்களின் கருத்துகளை ஆழ்ந்து புரிந்துகொண்டு அதற்கேற்ப அழைப்புப்பணியில் ஈடுபட நபி அவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்கும், வஹீயின் சுமையைத் தாங்கிக்கொண்டு அதைப் பரீட்சயப்படுத்திக்கொள்ள நபி அவர்களுக்கு அவகாசமளிக்கவுமாகும்எனக் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு இரண்டாவது முறையாக வஹீ அறிவிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டபோது நபி அவர்களைச் சுற்றியிருந்த இறைநிராகரிப்பாளர்களும் இணைவைப்பாளர்களும், “முஹம்மதை (நபி அவர்களை) அவரது இறைவன் கைவிட்டு விட்டான் போலும்என ஏளனமாகக் குத்திக்காட்டி நபிகளாரை மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். அவர்களின் சீண்டல்கள் எதற்கும் நபிகளார் மனம் தளறவில்லை; எனினும், அதனால் சற்று வேதனையடைந்தார்கள். ஆகவே, இறைநிராகரிப்பாளர்களும், இணைவைப்பாளர்களும் குறிப்பிட்டது போல் இறைவன் அவரை கைவிடவில்லை என அறிவிக்கவே இந்த அத்தியாயமான அள் - ளுஹா அத்தியாயம் இறக்கப்பட்டது.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முந்தைய இரண்டு வசனங்களில் தான் படைத்த படைப்புகள் மீது சத்தியம் செய்து விட்டு, அபூலஹபின் மனைவியின் குற்றச்சாட்டுக்கும், இணைவைப்பாளர்களின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் முகமாகவும், மேலும், கவலையுற்றிருந்த நபி அவர்களுக்கு ஆறுதல் தரும் முகமாகவும் மூன்றாவது வசனத்தை அருளினான். தொடர்ந்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நான்காவது வசனத்தில் 

وَلَـلْاٰخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْاُوْلٰى‏

மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும். என்று கூறுகின்றான்.

ஆரம்பத்தை விட இறுதி நிலை உமக்கு சிறந்ததாகும் என்று நபி அவர்களைப் பார்த்து அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகிறான்.

இவ்வசனத்திற்கு தஃப்ஸீர் விரிவுரையாளர்கள் இரண்டு வகையான கருத்துக்களை கூறுகிறார்கள் ;

ஆரம்ப காலத்தில் குறைஷி மக்கள் நபி அவர்களை இழிவாக நடத்தினார்கள், அவர்களுடைய தலைக்கே விலை பேசினார்கள், ஆனால் பிற்பட்ட காலத்தில் அல்லாஹ் நபி அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்து நிறைய வெற்றிகளை கொடுத்தான், இஸ்லாத்தையும் நபி அவர்களையும் மக்கள் கூட்டம் கூட்டமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தினான், இப்படியான ஆரம்பத்தை விட இறுதி சிறந்ததான நிலை என்பது ஒரு கருத்தாக கூறப்படுகிறது.

மற்றொரு கருத்து, உலகத்தைவிட மறுமை உனக்கு சிறந்தது

இது நபி அவர்களுக்கு மட்டும் அல்லாமல் உலக மக்கள் அனைவருக்குமே கூறப்படுகிற கருத்தாக இருக்கிறது.

அல்லாஹ், நபி அவர்களுக்கு இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கக் கூடிய வாய்ப்பைக் கொடுத்தான்.

خَطَبَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ فَقالَ: إنَّ اللَّهَ خَيَّرَ عَبْدًا بيْنَ الدُّنْيَا وبيْنَ ما عِنْدَهُ فَاخْتَارَ ما عِنْدَ اللَّهِ، فَبَكَى أبو بَكْرٍ الصِّدِّيقُ رَضِيَ اللَّهُ عنْه، فَقُلتُ في نَفْسِي ما يُبْكِي هذا الشَّيْخَ؟ إنْ يَكُنِ اللَّهُ خَيَّرَ عَبْدًا بيْنَ الدُّنْيَا وبيْنَ ما عِنْدَهُ، فَاخْتَارَ ما عِنْدَ اللَّهِ، فَكانَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ هو العَبْدَ، وكانَ أبو بَكْرٍ أعْلَمَنَا، خلاصة حكم المحدث : [صحيح]، الراوي : عبدالله بن مسعود | المحدث : البخاري | المصدر : صحيح البخاري

நபி () அவர்கள் ஒரு நாள் உரையாற்றும் போது கூறினார்கள்:- "ஒரு அடியானுக்கு அல்லாஹ் ஒரு பெரும் வாய்ப்பை கொடுக்கிறான், நீ விரும்பினால் இந்த உலகத்தில் அல்லாஹ் நாடுகிற காலம் முழுக்க வாழலாம், நீ விரும்பினால் மவுத் ஆகி, அல்லாஹ்விடத்தில் போய்விடலாம்" என்று அல்லாஹ் அந்த அடியாரிடம் தேர்வு சுதந்திரத்தை கொடுத்தபோது, அந்த அடியான் அல்லாஹ்விடத்தில் செல்வதை தேர்வு செய்து கொண்டார், என்று சொல்லும்போது அந்த மஜ்லிஸில் அபூபக்ர்(ரழி) அவர்கள் கடுமையாக அழ ஆரம்பித்து விட்டார்கள்.

மற்ற மக்கள் அவரைப் பார்த்து ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டபோது அபூபக்ர் (ரழி), நபி () அவர்கள் இங்கே குறிப்பிடுவது அவர்களைத்தான் என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

ஐந்தாவது வசனத்தின் ஊடாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நபி அவர்களின் மனதில் இருக்கும் ஆசைகளை மிக விரைவில் நிறைவேற்றுவதாக அறிவித்தான்.

وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضٰى‏

இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு நீர் திருப்தியடையும் படியான (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; 

لَمَّا نَزَلَتْ هَذِهِ الآية قَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذًا لاَ أَرْضَى وَوَاحِدٌ مِنْ أُمَّتِي فِي النَّارِ . وَجَاءَ فِي صَفْوَةِ التَّفَاسِيرِ فِي شَأْنِ الآيةِ الْكَرِيمَةِ ( وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى

இந்த ஆயத் இறங்கிய போது நபி அவர்கள் ஆம்! என் உம்மத்தில் ஒருவர் கூட நரகில் நுழைவதை நான் பொருந்திக் கொள்ள மாட்டேன்" என்று கூறினார்கள். ( நூல்: ஸஃப்வதுத் தஃபாஸீர் )

وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ, قَالَ رَسُولُ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ يُشفِّعُنِي اللهُ فِي أُمَّتِي حَتَّى يَقُولُ اللهُ سُبْحَانَهُ لِي رَضِيتَ يَا مُحَمَّدٌ؟ فَأَقُولُ يَا رَبِّ رَضِيتُ.

என் உம்மத்திற்கு நான் மறுமையில் பரிந்துரை செய்வேன். எதுவரை எனில் முஹம்மதே! நீர் பொருந்திக் கொண்டீரா?" என்று கேட்கும் வரை. அப்போது நான் "அல்லாஹ்வே! நான் பொருந்திக் கொண்டேன்" என்று சொல்வேன் என நபி அவர்கள் கூறினார்கள். 

அடுத்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது வசனங்களின் ஊடாக தங்களது கடந்த கால வாழ்க்கையை திரும்பிப் பார்க்குமாறு: 

اَلَمْ يَجِدْكَ يَتِيْمًا فَاٰوٰى‏ وَوَجَدَكَ ضَآ لًّا فَهَدٰى‏ وَوَجَدَكَ عَآٮِٕلًا فَاَغْنٰى‏

(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான். மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.

இன்ஷா அல்லாஹ்... அடுத்த மூன்று வசனங்கள் குறித்து இன்னொரு அமர்வில் பார்ப்போம்.

கடந்த கால வாழ்க்கையை திரும்பிப் பார்ப்பது நம் ஒவ்வொருவருக்கும் அவசியமாகும்.

பொதுவாகவே, கடந்த கால நிகழ்வுகளை நினைத்துப் பார்க்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் மீதும், குறிப்பாக ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையும், கடப்பாடும் ஆகும்.

إنَّ حسنَ العهدِ منَ الإيمانِ

خلاصة حكم المحدث : صحيح

الراوي : عائشة أم المؤمنين | المحدث : السيوطي | المصدر : الجامع الصغير | الصفحة أو الرقم : 2258

கடந்த கால வாழ்க்கையை திரும்பிப் பார்ப்பது ஈமானில் ஒரு அங்கமாகும் என்று நபி அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா ரலி அவர்கள் அறிவித்தார்கள். ( நூல்: ஜாமிஉ அஸ் ஸகீர் )

وقال ابن أبي حاتم: حدثنا أبو زُرْعَة، حدثنا أبو عُمر الحَوضي، حدثنا حماد بن زيد، حدثنا عطاء بن السائب، عن سعيد بن جبير، عن ابن عباس قال: قال رسول الله صلى الله عليه وسلم: "سألت ربي مسألة وَدَدْتُ أني لم أكن سألته، قلت: قد كانت قبلي أنبياء، منهم من سخرت له الريح ومنهم من يحيي الموتى. قال: يا محمد، ألم أجدك يتيما فآويتك؟ قلت: بلى يا رب. قال: ألم أجدك ضالا فهديتك؟ قلت: بلى يا رب. قال: ألم أجدك عائلا فاغنيتك؟ قال: قلت: بلى يا رب. قال: ألم أشرح لك صدرك؟ ألم أرفع لك ذكرك؟ قلت: بلى يا رب"

அல்லாஹ்விடம் சில தேவைகளை முறையிடுகிற போது முன் சென்ற நபிமார்களுக்கு அல்லாஹ் வழங்கிய அற்புதங்களை முன்னிறுத்தி அல்லாஹ்வே! நீ இன்ன நபிக்கு காற்றை வசப்படுத்தி கொடுத்தாய்! நீ இன்ன நபிக்கு இறந்தவர்களை உயிர்பிக்கும் ஆற்றல் வழங்கினாய்! என்று நான் அல்லாஹ்விடம் கேட்டேன்.

அப்போது, அல்லாஹ் நான் உம்மை அநாதையாய் கண்டு, புகலிடம் தரவில்லையா? என்று கேட்டான். அதற்கு நான் ஆம்! உண்மைதான் இறைவா! நீ தான் புகலிடம் தந்தாய் என்றேன்”. மீண்டும், அவன் உம்மை வழியறியாதவராய் கண்டு நேர்வழி காண்பிக்க வில்லையா? என்றான். அதற்கு, நான் ஆம்! உண்மைதான் இறைவா! நீ தான் நேர்வழி காண்பித்தாய்என்றேன். மீண்டும் அல்லாஹ் உம்மை ஏழையாய் கண்டு செல்வந்தனாக ஆக்கினேனா இல்லையா? என்றான். அதற்கு, நான் ஆம்! உண்மைதான் இறைவா! நீ தான் என்னை செல்வந்தனாக ஆக்கினாய் என்றேன்”. மீண்டும், அவன் உம்முடைய இதயத்தை உமக்காக விரிவாக்கித் தரவில்லையா? உமக்காக உம் புகழினை உயர்த்தவில்லையா? என்றான். அதற்கு, நான் ஆம்! உண்மை தான் இறைவா! என் உள்ளத்தை விரிவாக்கினாய்! என் புகழினை நீதான் உயர்த்தினாய்என்று கூறினேன்என நபி அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். 

மேலும், அல்லாஹ் அல் இன்ஷிராஹ் அத்தியாயத்தையும் இறக்கியருளினான் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள். ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )

ஏனெனில், இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் கடந்த காலம் என்று ஒன்று இருக்கும்.

அது சிலருக்கு பசுமையான நினைவுகளாகவோ, இன்னும் சிலருக்கு கசப்பான உணர்வுகளை சுமந்ததாகவோ இருக்கலாம்.

நிகழ்காலத்தில் ஒருவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், கடந்த காலத்தை திரும்பிப் பார்க்காத மனிதராக மாத்திரம் அவர் இருந்து விடக்கூடாது.

மிஸ்ர் தேசத்தின் உணவு அமைச்சராக, கருவூல மந்திரியாக இருந்த யூசுஃப் அலை அவர்களின் முன்பாக அவர்களின் சகோதரர்கள் வந்து நின்று, தம் முன்பாக அமைச்சராக அமர்ந்திருப்பது தம் சகோதரர் யூசுஃப்பாக இருக்குமோ என்பதை ஊர்ஜிதப்படுத்தும் தொனியில் "நீர் தான் யூசுஃப்போ?" என்று கேட்ட போது, 

கடந்த காலங்களில் தாங்கள் சந்தித்த சோதனைகளில் (அரசியின் ஆசைக்கு இணங்க மறுத்து) இறைவனுக்கு பயந்து நடந்து, (சிறைச்சாலையில்) பொறுமையாக இருந்த காரணத்தால் தான் இன்று அல்லாஹ் என்னை இவ்வளவு பெரிய இடத்தில் வைத்திருக்கின்றான் என்று தான் கடந்து வந்த பாதையை நினைவு கூர்ந்து அவர் தம் வார்த்தையால் வெளிப்படுத்தினார்.

قَالُوٓا۟ أَءِنَّكَ لَأَنتَ يُوسُفُ ۖ قَالَ أَنَا۠ يُوسُفُ وَهَٰذَآ أَخِى ۖ قَدْ مَنَّ ٱللَّهُ عَلَيْنَآ ۖ إِنَّهُۥ مَن يَتَّقِ وَيَصْبِرْ فَإِنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجْرَ ٱلْمُحْسِنِينَ

(அப்போது அவர்கள்) "நிச்சயமாக நீர் தாம் யூஸுஃபோ? என்று கேட்டார்கள்; (ஆம்!) நான் தாம் யூஸுஃபு (இதோ!) இவர் என்னுடைய சகோதரராவர்; நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்திருக்கின்றான்; எவர் (அவனிடம் பயபக்தியுடன் இருக்கிறார்களோ, இன்னும் பொறுமையும் மேற்கொண்டிருக்கிறாரோ (அத்ததைய) நன்மை செய்வோர் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிடமாட்டான்" என்று கூறினார். ( அல்குர்ஆன்: 12: 90 )

கடந்து வந்த பாதையை...

روى مسلم من حديث ابْنِ شِمَاسَةَ الْمَهْرِيِّ قَالَ: حَضَرْنَا عَمْرَو بْنَ الْعَاصِ وَهُوَ فِي سِيَاقَةِ الْمَوْتِ فَبَكَى طَوِيلًا وَحَوَّلَ وَجْهَهُ إِلَى الْجِدَارِ فَجَعَلَ ابْنُهُ يَقُولُ يَا أَبَتَاهُ أَمَا بَشَّرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَذَا أَمَا بَشَّرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَذَا قَالَ فَأَقْبَلَ بِوَجْهِهِ فَقَالَ إِنَّ أَفْضَلَ مَا نُعِدُّ شَهَادَةُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، إِنِّي كُنْتُ عَلَى أَطْبَاقٍ ثَلَاثٍ لَقَدْ رَأَيْتُنِي وَمَا أَحَدٌ أَشَدَّ بُغْضًا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنِّي وَلَا أَحَبَّ إِلَيَّ أَنْ أَكُونَ قَدْ اسْتَمْكَنْتُ مِنْهُ فَقَتَلْتُهُ فَلَوْ مُتُّ عَلَى تِلْكَ الْحَالِ لَكُنْتُ مِنْ أَهْلِ النَّارِ فَلَمَّا جَعَلَ اللَّهُ الْإِسْلَامَ فِي قَلْبِي أَتَيْتُ النَّبِيَّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- فَقُلْتُ ابْسُطْ يَمِينَكَ فَلْأُبَايِعْكَ فَبَسَطَ يَمِينَهُ قَالَ فَقَبَضْتُ يَدِي قَالَ مَا لَكَ يَا عَمْرُو قَالَ قُلْتُ أَرَدْتُ أَنْ أَشْتَرِطَ قَالَ تَشْتَرِطُ بِمَاذَا قُلْتُ أَنْ يُغْفَرَ لِي قَالَ أَمَا عَلِمْتَ أَنَّ الْإِسْلَامَ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ وَأَنَّ الْهِجْرَةَ تَهْدِمُ مَا كَانَ قَبْلِهَا وَأَنَّ الْحَجَّ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ وَمَا كَانَ أَحَدٌ أَحَبَّ إِلَيَّ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا أَجَلَّ فِي عَيْنِي مِنْهُ وَمَا كُنْتُ أُطِيقُ أَنْ أَمْلَأَ عَيْنَيَّ مِنْهُ إِجْلَالًا لَهُ وَلَوْ سُئِلْتُ أَنْ أَصِفَهُ مَا أَطَقْتُ لِأَنِّي لَمْ أَكُنْ أَمْلَأُ عَيْنَيَّ مِنْهُ وَلَوْ مُتُّ عَلَى تِلْكَ الْحَالِ لَرَجَوْتُ أَنْ أَكُونَ مِنْ أَهْلِ الْجَنَّةِ ثُمَّ وَلِينَا أَشْيَاءَ مَا أَدْرِي مَا حَالِي فِيهَا فَإِذَا أَنَا مُتُّ فَلَا تَصْحَبْنِي نَائِحَةٌ وَلَا نَارٌ فَإِذَا دَفَنْتُمُونِي فَشُنُّوا عَلَيَّ التُّرَابَ شَنًّا [أُهيلوا عليَّ التراب] ثُمَّ أَقِيمُوا حَوْلَ قَبْرِي قَدْرَ مَا تُنْحَرُ جَزُورٌ وَيُقْسَمُ لَحْمُهَا حَتَّى أَسْتَأْنِسَ بِكُمْ وَأَنْظُرَ مَاذَا أُرَاجِعُ بِهِ رُسُلَ رَبِّي.

அப்துர் ரஹ்மான் இப்னு ஷுமாசா அல் மஹ்ரி (ரஹ்) கூறியதாவது;

"இறக்கும் தருவாயில் இருந்த அம்ரு இப்னு அல் ஆஸ் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் நீண்ட நேரம் அழுதார்கள். பின்பு சுவற்றின் பக்கம் தமது முகத்தை திருப்பிக் கொண்டார்கள். அப்போது அவர்களின் மகன், என் தந்தையே! உங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இன்னின்ன நற்செய்திகள கூறவில்லையா? என (ஆறுதல் சொல்லும் வகையில்) கேட்டார். உடனே அம்ரு இப்னு அல்ஆஸ் (ரலி)அவர்கள் தமது முகத்தை (தம் புதல்வரை நோக்கி) திருப்பி (பின்வருமாறு) கூறினார்கள்:- "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் கூறியதே நமது சேமிப்புகளில் சிறந்ததாகும். 

நான் என் வாழ்நாளில் மூன்று கட்டங்களை கடந்து வந்துள்ளேன்.

முதலாவதுகட்டத்தில், அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மீது கடுமையான வெறுப்பு கொண்டவர் என்னைத் தவிர வேறு யாரும் இருக்கமுடியாது என்று நான் கருதினேன். என்னால் இயன்றால் அவர்களை கொன்றுவிடவேண்டும் என்பதே எனக்கு விருப்பமானதாக இருந்தது. அந்த கால கட்டத்தில் மட்டும் நான் மரணித்திருந்தால் நரகவாதிகளில் ஒருவனாக நான் ஆகியிருப்பேன்.

இராண்டாவது கால கட்டத்தில், அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை புகுத்தினான். அப்போது நான் நபி அவர்களிடம் சென்று உங்கள் வல்லக்கரத்தை நீட்டுங்கள் நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிக்கிறேன் என்றேன். நபி அவர்கள் தமது வலது கரத்தை நீட்டினார்கள். உடனே நான் எனது கரத்தை இழுத்துக் கொண்டேன். நபி அவர்கள், அம்ரே! உமக்கு என்ன ஆயிற்று என்றார்கள். நான் சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன் என்று கூறினேன். நபி அவர்கள் என்ன நிபந்தனை விதிக்கப் போகிறீர் என்று கேட்டார்கள். 

என் (முந்தைய) பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும் என்று கூறினேன். அப்போது நபி அவர்கள் உங்கள் முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும். ஹஜ்ஜும் முந்தைய பாவங்களை அழித்துவிடும் என்பது உமக்கு தெரியாதா என்றார்கள். பின்பு நான் இஸ்லாத்தை தழுவினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்களை விட மிகவும் பிரியமானவர் எவரும் எனக்கில்லை. எனது பார்வைக்கு அவர்களை விட கண்ணியமானவர்கள் எவரும் இருக்கவில்லை. அப்போது அவர்கள் மீது நான் கொண்ட மரியாதையினால் என் கண்கள் நிரம்ப, அவர்களை பார்க்கக் கூட என்னால் முடியவில்லை. அவர்களை வர்ணித்துக் கூறுமாறு என்னிடம் கேட்கப்பட்டால் அதற்கும் என்னால் இயலாது. ஏனெனில் அவர்கள் மீது நான் கொண்ட மரியாதையினால், என் கண்கள் நிரம்ப அவர்களை நான் பார்த்திருக்கவில்லை. அந்த நிலையில் நான் மரணித்திருந்தால் நான் சொர்க்கவாசிகளில் ஒருவானாக ஆகியிருப்பேன் என்றே கருதுகிறேன்.

பிறகு நான் சில பொருட்களுக்கு சொந்தக்காரனாக ஆனேன். இவைகளுக்கு மத்தியில் நான் எவ்வாறு வாழ்ந்தேன் என்று உறுதியிட்டுச் சொல்ல முடியாது.                   

இது என் வாழ்நாளின் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் மூன்றாம் கட்டமாமாகும்.” ”நான் மரணித்துவிட்டால், ஒப்பாரி வைத்துக் கூச்சலிடும் பெண்களை என் ஜனாஸாவைப் பின் தொடர அனுமதிக்காதீர்கள். (அறியாமைக் காலத்தில் செய்தது போன்று) என் ஜனாஸாவுடன் நெருப்பைச் சுமந்து வர வேண்டாம். என்னை அடக்கம் செய்ததும், கப்ரில் நன்றாக மண்ணைப் போட்டு மூடி விடுங்கள். (அடக்கம் செய்த பின்) உங்களைக் கொண்டு நான் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறேன் என்பதைத் தெரிந்து கொள்வதற்கும் என் மண்ணறையின் அருகே, ஒட்டகத்தை அறுத்து அதன் இறைச்சியைப் பங்கிடும் அளவிற்கான நேரம் நில்லுங்கள்!என்று அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். ( நூல்;முஸ்லிம் )

கடந்த கால நம்முடைய நன்மைகளை....

ஃபத்ஹ் மக்காவின் இரண்டொரு நாளிலேயே இஸ்லாத்தைத் தழுவினார்கள் ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்கள்.

عَنْ حَكِيمِ بنِ حِزامٍ رَضِيَ اللَّهُ عنْه، قالَ: قُلتُ: يا رَسولَ اللَّهِ، أرَأَيْتَ أشْياءَ كُنْتُ أتَحَنَّثُ بها في الجاهِلِيَّةِ مِن صَدَقَةٍ أوْ عَتاقَةٍ، وصِلَةِ رَحِمٍ، فَهلْ فيها مِن أجْرٍ؟ فقالَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ: أسْلَمْتَ علَى ما سَلَفَ مِن خَيْرٍ. الراوي : حكيم بن حزام | المحدث : البخاري | المصدر : صحيح البخاري

அல்லாஹ்வின் தூதர் அவர்களிடத்தில், ஹகீம் (ரலி) அவர்கள் கண்களில் ஏக்கத்தோடு இப்படிக் கேட்டார்கள்: நான் இஸ்லாத்திற்கு வரும் முன்னர் பல நல்லறங்களை செய்திருக்கின்றேன். அதன் நன்மைகள் எனக்கு கிடைக்குமா?” என்று.

أقسم حكيم أن يفعل في الإسلام مثل ما فعل في الجاهلية من صدقات، فكان يعتق في الإسلام مائة رقبة ويحمل على مائة بعير، كما فعل قبل إسلامه.

ஆம்! இஸ்லாத்திற்கு வரும் முன் நூறு அடிமைகளை விடுதலை செய்திருந்தார். (அந்த அடிமைகளில் ஒருவர் தான் ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி), அவரை அன்னை கதீஜா (ரலி) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார்கள்.) நூறு ஒட்டகைகளை அறுத்து ஏழைகளுக்கு தர்மம் செய்திருந்தார்கள். ஹகீம் இப்னு ஹிஸாம் பெரும் செல்வாக்கோடு இருக்கும் கால கட்டத்தில் மக்காவில் ஹரமிற்கு ஹஜ் செய்ய வரும் யாத்ரீகர்களுக்கு (இலவசமாக) உணவு வழங்கி வந்தார்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள், ஹகிம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்களிடம் நீர் இஸ்லாத்திற்குள் நுழையும் போதே அவையனைத்தையும் சேர்த்தே தான் வந்து விட்டீர்என பதில் கூறினார்கள். ( நூல்: புகாரி, ஃபத்ஹுல் பாரி )

கடந்த காலங்களில் நம்முடன் பயணித்த நம் ஈமானிய உறவுகளை...

أنَّ عَبْدَ الرَّحْمَنِ بنَ عَوْفٍ رَضِيَ اللَّهُ عنْه، أُتِيَ بطَعَامٍ وكانَ صَائِمًا، فَقالَ: قُتِلَ مُصْعَبُ بنُ عُمَيْرٍ وهو خَيْرٌ مِنِّي، كُفِّنَ في بُرْدَةٍ، إنْ غُطِّيَ رَأْسُهُ، بَدَتْ رِجْلَاهُ، وإنْ غُطِّيَ رِجْلَاهُ بَدَا رَأْسُهُ - وأُرَاهُ قالَ: وقُتِلَ حَمْزَةُ وهو خَيْرٌ مِنِّي - ثُمَّ بُسِطَ لَنَا مِنَ الدُّنْيَا ما بُسِطَ - أَوْ قالَ: أُعْطِينَا مِنَ الدُّنْيَا ما أُعْطِينَا - وقدْ خَشِينَا أَنْ تَكُونَ حَسَنَاتُنَا عُجِّلَتْ لَنَا، ثُمَّ جَعَلَ يَبْكِي حتَّى تَرَكَ الطَّعَامَ.

خلاصة حكم المحدث : [صحيح] الراوي : إبراهيم بن عبدالرحمن بن عوف | المحدث : البخاري

ஒருமுறை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலி அவர்கள் நோன்பு திறப்பதற்காக வேண்டி அவருக்கு முன் தட்டில் உணவு வைக்கப்பட்டது. அவர் முன் வைக்கப்பட்ட உணவுத் தட்டுக்களைப் பார்த்தவுடன், அவரது கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக ஓட ஆரம்பித்தது.

முஸ்அப் பின் உமைர் ரலி அவர்களே! நீங்கள் இவனை விடச் சிறந்தவர்கள்.. என்று தன்னைச் சுட்டிக் காட்டிக் கொண்ட அவர்கள், "நீங்கள் இறந்த பொழுது உங்களது உடலை மூடுவதற்கு சரியான அளவில் ஆடை கிடைக்கவில்லை. கிடைத்த அந்த சிறிய ஆடையைக் கொண்டு தலையை மூடினால் கால் தெரிந்தது, காலை மூடினால் தலை தெரிந்தது. அதே போன்று தான் ஹம்ஸா ரலி அவர்களே! நீங்கள் இவனை விடச் சிறந்தவர்கள்.. என்று தன்னைச் சுட்டிக் காட்டிக் கொண்ட அவர்கள், இப்போது, நாங்கள் செய்த நற்கருமங்களுக்கான பிரதிபலன் இந்த உலகிலேயே எங்களுக்கு வழங்கப்பட்டு விட்டதாக நினைத்து நாங்கள் பயப்படுகின்றோம். 

இதனை அவர் நினைத்த மாத்திரத்திலேயே வெட்கம் மேலிட பயத்தால், அழுக ஆரம்பித்து விட்டார் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள். அதன் காரணமாக தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த உணவைக் கூட அவரது கரங்கள் தீண்டாமலேயே இருந்தது. ( நூல்: புகாரி )

கடந்த காலத்தில் நமக்கு உதவியவர்களை.…

ذكر الهيثمي في "مجمع الزوائد" عن أنس بن مالك رضي الله عنه قال: لما ماتت فاطمة بنت أسد بن هاشم أم علي رضي الله عنهما، دخل عليها رسول الله صلى الله عليه وسلم فجلس عند رأسها فقال: "رحمك الله يا أمي، كنت أمي بعد أمي، تجوعين وتشبعيني، وتعرين وتكسيني، وتمنعين نفسك طيباً وتطعميني، تريدين بذلك وجه الله والدار الآخرة". ثم أمر أن تغسل ثلاثاً فلما بلغ الماء الذي فيه الكافور سكبه رسول الله صلى الله عليه وسلم بيده، ثم خلع رسول الله صلى الله عليه وسلم قميصه فألبسها إياه، وكفنها ببرد فوقه، ثم دعا رسول الله صلى الله عليه وسلم أسامة بن زيد وأبا أيوب الأنصاري وعمر بن الخطاب وغلاماً أسود يحفرون، فحفروا قبرها، فلما بلغوا اللحد حفره رسول الله صلى الله عليه وسلم بيده وأخرج ترابه بيده، فلما فرغ دخل رسول الله صلى الله عليه وسلم فاضطجع فيه فقال: "الله الذي يحيي ويميت، وهو حي لا يموت، اغفر لأمي فاطمة بنت أسد، ولقنها حجتها، ووسِّع عليها مدخلها بحق نبيك والأنبياء الذين من قبلي فإنك أرحم الراحمين". وكبر عليها أربعاً، وأدخلوها اللحد هو والعباس وأبو بكر الصديق رضي الله عنهم. (رواه الطبراني والحاكم وابن ابي خيثمة وابن حبان) وذكر السمهودي في كتابه "وفاء الوفا" أن رسول الله صلى الله عليه وسلم قد دفن فاطمة بنت أسد بن هاشم بالروحاء في المدينة المنورة.

அலீ {ரலி} அவர்களின் தாயாரும், அபூதாலிப் அவர்களின் மனைவியுமான அன்னை ஃபாத்திமா பிந்த் அஸத் {ரலி} அவர்கள் இறந்த போது, அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அலீ {ரலி} அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள்.

அன்னை ஃபாத்திமா {ரலி} அவர்களின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு அன்னையே! நீங்களும் என் அன்னையைப் போன்றவர்கள் தான்! அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக!

நீங்கள் பசித்திருந்து என் வயிற்றை நிரப்பினீர்கள்; நல்ல உணவு பதார்த்தங்களை நீங்கள் சாப்பிடாமல் எனக்கு உண்ணத்தருவீர்கள்; நீங்கள் கந்தலாடைகளை அணிந்து கொண்டு எனக்கு அழகிய ஆடைகளை அணிவித்து அழகு பார்த்தீர்கள். இவைகளையெல்லாம் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்திற்காகவும், அழிவே இல்லாத மறுமை வாழ்விற்காகவும் தான் நீங்கள் செய்தீர்கள் என்பதை நான் மிகவும் அறிவேன்என்று கூறினார்கள்.

பின்பு, கற்பூரம் கலந்து வைக்கப்பட்டிருக்கின்ற தண்ணீரில் தமது கைகளை முக்கியெடுத்து அதில் குளிப்பாட்டுமாறு ஏவினார்கள். பின்னர் தங்களது மேலாடையை கழற்றிக் கொடுத்து, அவர்களுக்கு கஃபனாக அணிவிக்குமாறு கூறினார்கள்.

பின்னர் மையவாடிக்குச் சென்று, கப்ர் குழியை மார்பளவு தோண்டினார்கள். அங்கு கிடந்த மண்ணை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் கப்ர் குழிக்குள் இறங்கி அங்கும் இங்குமாக புரண்டார்கள்.

பின்னர், ”அல்லாஹ் தான் உயிர் கொடுக்கின்றான்; அவனே மரணிக்கச் செய்கின்றான்; அவனோ மரணிக்காத நித்திய ஜீவனாக இருக்கின்றான்.என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வே! எனது அன்னை ஃபாத்திமா பிந்த் அஸத் அவர்களின் பிழைகள மன்னித்தருள்வாயாக! அவர்களின் ஆதாரத்தை உறுதிபடுத்துவாயாக! அவர்களின் மண்ணறையை உன்னுடைய இந்த தூதரின் பொருட்டாலும், எனக்கு முன் சென்ற தூய நபிமார்களின் பொருட்டாலும் விசாலமாக்கித் தருவாயாக! நீ தான் கிருபையாளர்களுக் கெல்லாம் கிருபையாளனாக இருக்கின்றாய்!என்று நபி அவர்கள் துஆச் செய்தார்கள்.

பின்னர் தொழவைத்தார்கள்; அதற்குப் பிறகு அபூபக்ர் {ரலி} அப்பாஸ் {ரலி} ஆகியோருடன் இணைந்து மண்ணறையில் இறங்கி அடக்கம் செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! இதற்கு முன் யாருடைய மண்ணறையின் முன் நீங்கள் இப்படி நடந்து கொண்டதில்லையே! தாங்கள் பிரத்தியேகமாக அன்னையவர்களின் மண்ணறையில் இப்படி நடந்து கொண்டதின் காரணம் என்னவோ?” என்று நபித்தோழர்கள் கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அபூ தாலிப் அவர்களுக்குப் பிறகு என்னிடத்தில் அன்னையைப் போன்று வேறு யாரும் உபகாரத்தோடும், அரவணைப்போடும் நடந்து கொள்ளவில்லை.

ஆதலால் தான், சுவனத்து பட்டாடைகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென ஆவலில் நான் என் ஆடையை கழற்றிக் கொடுத்தேன். கப்ரின் வேதனை இலகுவாக்கப் பட வேண்டும் என்கிற ஆசையில் நான் மண்னறையில் புரண்டு எழுந்தேன்என்று நபி அவர்கள் கூறினார்கள். ( நூல்: தப்ரானீ, ஹ.எண்.6935, இஸ்தீஆப், 3/248, உஸ்துல் ஃகாபா, ஸியர் அஃலா மின் நுபலா )

ஆகவே, வாழ்வின் உச்சத்தில் நாம் எவ்வளவு தூரம் பயணித்தாலும் நாம் கடந்து வந்த பாதையையும், நம்முடைய கடந்த கால வாழ்க்கையையும், கடந்த காலத்தில் நமக்கு செய்யப்பட்ட நலவுகளையும், நமக்கு உதவிய உறவுகளையும் ஒருக்காலும் மறந்து விடக்கூடாது.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஈமானின் அங்கமான இந்த நற்பண்பை பேணி வாழ்கிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!