Thursday, 28 May 2026

பசியில்லா உலகு அமைப்போம்!!

 பசியில்லா உலகு அமைப்போம்!!


மனிதன் முதல் விலங்குகள் வரை பொதுவாக இருப்பது பசி. உயிர் வாழத் தேவையான உணவுகளை வயிறு நிறைய உண்டு பசியற்ற ஆரோக்கியமான வாழ்க்கை வாழவே அனைவரும் விரும்புவோம். 

ஆனால், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் உலகிலுள்ள அனைவருக்கும் பசியற்ற வாழ்க்கை அமைகிறதா என்றால் நிச்சயம் இல்லை எனும் பதிலே கிடைக்கும். பசி மனித ஆரோக்கியத்தில் பேரழிவு தரும் மௌன ஆயுதமாகிறது. இது மனிதகுலத்தை ஆதிகாலத்திலிருந்து பாதித்த ஒரு உணர்வாகிறது.

இந்த நிலையை மாற்றி பசியற்ற உலகம் காண உலக பசி தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 28-ம் தேதி உலக பட்டினி தினம் சர்வதேச அளவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

1918 இல் நிறுவப்பட்ட ஹங்கர் ப்ராஜெக்ட் என்ற சர்வதேச அமைப்பால் உலகப் பசியின் நிலையான முடிவுக்காக

உலகப் பசி தினம் முதன்முதலில் 2011 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது.

உலகில் மனிதன் உயிர்வாழ்வதற்கு தேவையான காற்று, தண்ணீர் என்பவைகளுக்கு அடுத்து உணவு வருகிறது. தேவையான அளவு உணவை கொள்வதற்கான உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது.

உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய பத்து விழுக்காட்டினர் இன்றும் பசியின் கோரப்பிடியிலேயே உள்ளனர். 

உலகெங்கிலும் 828 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அதாவது 73 கோடியே 30 இலட்சம் பேர் நீண்டகால பட்டினி மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர், வாடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆம், ஒவ்வொரு நாளும் ஐந்துக்கு ஒருவர் பசியால் உறங்கச் செல்கின்றனர். இந்த உலகில் 35 விழுக்காட்டு மக்கள், அதாவது, 280 கோடி பேர் ஆரோக்கியமான உணவைப் பெறுவதற்கான வசதியற்றவர்களாக இருக்கின்றனர். 

குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் 71.5 விழுக்காட்டு மக்கள் ஆரோக்கியமான உணவை பெறுவதற்கான வசதிகளின்றி உள்ளனர். 

அதேவேளை, வருமானம் நிரம்பிய நாடுகளிலோ 6.3 விழுக்காட்டு மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்குவதற்கான வசதிகளின்றி உள்ளனர்.

உலகில் பசிக்கொடுமைகள் பற்றி 2024 ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கை, பசியால் அதிக அளவில் வாடும் நாடுகளாக 36 நாடுகளை குறிப்பிட்டுள்ளது. அதிலும் 6 நாடுகளை, அதாவது புருண்டி, சாடு, மடகாஸ்கர், சொமாலியா, தென்சூடான், மற்றும் ஏமனை மிகவும் கடுமையான உணவுப் பற்றாக்குறை உள்ள நாடுகளாக, அதாவது பசியால் மக்கள் துயருறும் நாடாக அறிவிக்கிறது.

2019ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2024-ல் பசியால் துயருறும் மக்களின் எண்ணிக்கை 15 கோடியே 20 இலட்சம் அதிகரித்துள்ளது. உலகில் 13 இலட்சத்து 30 ஆயிரம் மக்கள் பஞ்சத்தில் அல்லது பஞ்சத்தை ஒத்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். 

ஒவ்வோர் ஆண்டும் பசி தொடர்புடையவைகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 90 இலட்சம் இதில் பெரும்பான்மையினோர் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள். ஏழ்மையும் பசியும் ஆப்பிரிக்காவில்தான் தங்கள் வசிப்பிடத்தை அதிக அளவில் கொண்டுள்ளன.

அபஸ அத்தியாயத்தின் 24 -ஆம் வசனம் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனித சமூகத்திற்கு வழங்கி இருக்கிற உன்னதமான ஒரு அருட்கொடையைப் பற்றி சிந்திக்குமாறு தூண்டுகிறது.

فَلْيَنْظُرِ الْاِنْسَانُ اِلٰى طَعَامِه

எனவே, மனிதன் தன் உணவின் பக்கம் (அது எவ்வாறு பெறப்படுகிறது என்பதை) சிந்தித்துப் பார்க்கட்டும்!".

இவ்வுலகில் படைக்கப்பட்டிருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமையாத ஒன்று உணவு. அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான உணவு வளங்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முன்னதாகவே அனைத்து உயிரினங்களுக்காக இப்பூமியில் ஏற்படுத்தி வைத்திருப்பதாக இறைவன் கூறுகிறான். 

உயிரினங்களில் எந்த உயிரினமும் தமது உணவுகளை ஏற்பாடு செய்துகொண்டு பிறப்பதில்லை என்று அல்லாஹ் கூறுகிறான்.

وَكَاَيِّنْ مِّنْ دَآبَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا اللّٰهُ يَرْزُقُهَا وَاِيَّاكُمْ‌‌ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏

எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அல்லாஹ்வே அவற்றுக்கும், உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் செவியுறுபவன்; அறிந்தவன். ( அல்குர்ஆன்: 29: 60 )

وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَ يَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا‌ كُلٌّ فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏

இன்னும், எந்த உயிரினமும் - அவற்றின் உணவு அல்லாஹ்வின் மீது (பொறுப்பாக) இருந்தேதவிர பூமியில் இல்லை; மேலும், அவை தங்கும் இடத்தையும் அவை அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான்; இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன. ( அல்குர்ஆன்: 11: 6 )

நபி ﷺ அவர்களின் பிரதானமான துஆக்களில் ஒன்றாக பின் வரும் துஆவும் இருந்தது.

عن أبي هريرة-رضي الله عنه مرفوعاً: «اللهم إني أعوذ بك من الجوع، فإنه بِئْسَ الضَّجِيعُ،

"யாஅல்லாஹ்! உன்னிடம் பசியின் கொடுமையில் இருந்து பாதுகாவல் தேடுகிறேன். ஏனெனில், அது உறக்கத்தை பாழாக்கி விடுகிறது" என்று.

பசியால் சோதிக்கப்பட்ட ஈஸா (அலை) அவர்களின் சமூகம் பசியுடன் இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஈஸா (அலை) அவர்களிடம் அல்லாஹ்விடம் இருந்து உணவுத் தட்டை பெற்றுத் தருமாறு வேண்டி நின்றனர்.

மேலும், தங்களுக்கு ஏன் உணவு தேவைப்படுகிறது? என்பதற்கான காரணத்தையும் அந்த சமூகம் முன் மொழிந்ததை அல்குர்ஆனில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குறிப்பிடுகின்றான்.

اِذْ قَالَ الْحَـوَارِيُّوْنَ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ هَلْ يَسْتَطِيْعُ رَبُّكَ اَنْ يُّنَزِّلَ عَلَيْنَا مَآٮِٕدَةً مِّنَ السَّمَآءِ‌ قَالَ اتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏

"மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக, உணவு மரவையை (ஆகாரத்தட்டை) இறக்கிவைக்க முடியுமா?" என்று சீடர்கள் கேட்டபோது அவர், "நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.

قَالُوْا نُرِيْدُ اَنْ نَّاْكُلَ مِنْهَا وَتَطْمَٮِٕنَّ قُلُوْبُنَا وَنَـعْلَمَ اَنْ قَدْ صَدَقْتَـنَا وَنَكُوْنَ عَلَيْهَا مِنَ الشّٰهِدِيْنَ‏

அதற்கவர்கள், "நாங்கள் அதிலிருந்து புசித்து எங்கள் இதயங்கள் அமைதி பெறவும், நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு உண்மையையே கூறினீர்கள் என்பதை அறிந்துகொள்ளவும், இன்னும் நாங்கள் அதைப்பற்றி சாட்சி கூறக்கூடியவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம்" என்று கூறினார்கள்.

قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ اللّٰهُمَّ رَبَّنَاۤ اَنْزِلْ عَلَيْنَا مَآٮِٕدَةً مِّنَ السَّمَآءِ تَكُوْنُ لَـنَا عِيْدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰيَةً مِّنْكَ‌ۚ وَارْزُقْنَا وَاَنْتَ خَيْرُ الرّٰزِقِيْنَ‏

மர்யமுடைய மகன் ஈஸா, "அல்லாஹ்வே! எங்கள் இறைவனே! வானத்திலிருந்து எங்கள்மீது ஓர் உணவுத் தட்டை இறக்குவாயாக! அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களுக்குப்பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்; இன்னும், எங்களுக்கு உணவளிப்பாயாக! நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்!" என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

قَالَ اللّٰهُ اِنِّىْ مُنَزِّلُهَا عَلَيْكُمْ‌ۚ فَمَنْ يَّكْفُرْ بَعْدُ مِنْكُمْ فَاِنِّىْۤ اُعَذِّبُهٗ عَذَابًا لَّاۤ اُعَذِّبُهٗۤ اَحَدًا مِّنَ الْعٰلَمِيْنَ

அதற்கு அல்லாஹ், "நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிவைக்கிறேன்; ஆனால், அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால், அகிலத்தாரில் எந்த ஒருவருக்கும் செய்திராத வேதனையைக் கொண்டு அவரை வேதனைப்படுத்துவேன்" என்று கூறினான். ( அல்குர்ஆன்: 5: 112 - 115 )

பசியின் வலி...

أَخبَرنا أَبُو يَعْلَى، حَدثنا عَبْدُ اللهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانَ، حَدثنا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أَصَابَنِي جَهْدٌ شَدِيدٌ، فَلَقِيتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ رضي الله عنه، فَاسْتَقْرَأْتُهُ آيَةً مِنْ كِتَابِ اللهِ، فَدَخَلَ دَارَهُ وَفَتَحَهَا عَلَيَّ، قَالَ: فَمَشَيْتُ غَيْرَ بَعِيدٍ، فَخَرَرْتُ لِوَجْهِي مِنَ الْجَهْدِ، فَإِذَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَائِمٌ عَلَى رَأْسِي، فَقَالَ:"يَا أَبَا هُرَيْرَةَ"، قُلْتُ: لَبَّيْكَ يَا رَسُولَ اللهِ وَسَعْدَيْكَ، قَالَ: فَأَخَذَ بِيَدِي فَأَقَامَنِي وَعَرَفَ الَّذِي بِي، فَانْطَلَقَ إِلَى رَحْلِهِ، فَأَمَرَ لِي بِعُسٍّ مِنْ لَبَنٍ، فَشَرِبْتُ.

ثُمَّ قَالَ: "عُدْ يَا أَبَا هُرَيْرَةَ" فَعُدْتُ، فَشَرِبْتُ، ثُمَّ قَالَ:"عُدْ يَا أَبَا هُرَيْرَةَ" فَعُدْتُ، فَشَرِبْتُ حَتَّى اسْتَوَى بَطْنِي وَصَارَ كَالْقِدْحِ، قَالَ: وَرَأَيْتُ عُمَرَ فَذَكَرْتُ له الَّذِي كَانَ مِنْ أَمْرِي، وَقُلْتُ لَهُ: مَنْ كَانَ أَحَقَّ بِهِ مِنْكَ يَا عُمَرُ؟ وَاللهِ لَقَدِ اسْتَقْرَأْتُكَ الآيَةَ وَلأَنَا أَقْرَأُ لَهَا مِنْكَ، قَالَ عُمَرُ: وَاللهِ لأَنْ أَكُونَ أَدْخَلْتُكَ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَكُونَ لِي حُمْرُ النَّعَمِ. [7151]

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்:- ”எனக்கு (பசியினால்) கடும் சோர்வு ஏற்பட்டது. எனவே, நான் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். அப்போது நான் அவர்களிடம், அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஏதேனும் ஒரு வசனத்தை ஓதும்படி கேட்டேன். உடனே அவர்கள் தம் வீட்டினுள் நுழைந்து குர்ஆன் வசனத்தை எனக்கு ஓதிக் காட்டினார்கள்(அங்கிருந்து வெளியேறி) சற்று தூரம்தான் நான் நடந்திருப்பேன். அதற்குள் சோர்வினாலும் பசியினாலும் நான் முகம் குப்புற விழுந்துவிட்டேன். (மூர்ச்சை தெளிந்து பார்த்தபோது) என் தலைமாட்டில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் (என்னை நோக்கி), ‘அபூ ஹுரைரா!’ என்று அழைத்தார்கள். நான், ‘இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன், இறைத்தூதர் அவர்களே; கட்டளையிடுங்கள்’ என்று பதிலளித்தேன். அவர்கள் என் கரத்தைப் பிடித்து என்னைத் தூக்கி நிறுத்தினார்கள். எனககு ஏற்பட்டிருந்த நிலையைப் புரிந்துகொண்டார்கள். என்னைத் தம்முடன் அழைத்துக்கொண்டு தம் இல்லம் சென்றார்கள். எனக்கு ஒரு பெரிய பாத்திரத்தில் பால் வழங்க உத்தரவிட்டார்கள். நான் அதிலிருந்து (பால்) அருந்தினேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் ‘இன்னும் அருந்துங்கள், அபூ ஹிர்!’ என்று கூறினார்கள். அவ்வாறே நான் மறுபடியும் அருந்தினேன். பிறகு ‘மீண்டும் (அருந்துங்கள்)’ என்றார்கள். நான் வயிறு நிரம்பும் வரை மீண்டும் அருந்தினேன். எனவே, வயிறு (உப்பி) பாத்திரத்தை போன்றாகி விட்டது. பிறகு, நான் உமர்(ரலி) அவர்களைச் சந்தித்து, அவர்களிடம் எனக்கு நடந்த நிகழ்ச்சியைத் தெரிவித்தேன். ‘(என் பசியைப் போக்கும் பொறுப்பினை) உங்களைவிட அதற்கு மிகவும் தகுதியுடையவரிடம் அல்லாஹ் ஒப்படைத்து விட்டான், உமரே! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட நான் இறைவசனத்தை நன்கு ஓதத் தெரிந்தவனாக இருந்துகொண்டே அதை எனக்கு ஓதிக் காட்டும்படி உங்களிடம் கேட்டேன்’ என்று சொன்னேன். உமர்(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (என் வீட்டிற்கு) அழைத்துச் சென்று (உங்களுக்கு உணவளித்து) இருந்தால், அதுவே எனக்கு (விலை உயர்ந்த) சிவப்பு ஒட்டகங்கள் கிடைப்பதைவிட விருப்பமானதாய் இருந்திருக்கும்’ என்று கூறினார்கள். ( நூல்: புகாரி ) 

عن أنس بن مالك – رضي الله عنه – قال : قال أبو طلحة لأم سليم : لقد سمعت صوت رسول الله ضعيفاً أعرف فيه الجوع ، فهل عندك من شيء ؟ قالت : نعم ، فأخرجت أقراصاً من شعير ثم أخرجت خماراً لها فلفت الخبز ببعضه ، ثم دسته تحت يدي ولاثتني ببعضه ، ثم أرسلتني إلى رسول الله قال : فذهبت به فوجدت رسول الله في المسجد ومعه الناس ، فقمت عليهم ، فقال لي رسول الله ” أرسلك أبو طلحة ؟” فقلت : نعم قال : ” بطعام ؟ ” قلت : نعم . فقال رسول الله لمن معه : ” قوموا ” فانطلق وانطلقت بين أيديهم حتى جئت أبا طلحة فأخبرته ، فقال أبو طلحة : يا أم سليم قد جاء رسول الله والناس وليس عندنا ما نطعمهم ، فقلت : الله ورسوله أعلم ، فانطلق أبو طلحة حتى لقي رسول الله فأقبل رسول الله وأبو طلحة معه ، فقال رسول الله: ” هلم يا أم سليم ، ما عندك ؟ ” فأتت بذلك الخبز ، فأمر به رسول الله فقُمت وعصرت أم سُليم عكة فآدمته ثم قال رسول الله فيه ماشاء الله أن يقول ، ثم قال : ” ائذن لعشرة ” فأكل القوم كلهم والقوم سبعون أو ثمانون . [حديث صحيح : اخرجه البخاري ].

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் அபூ தல்ஹா (ஸைத் அல்அன்சாரி(ரலி) தம் துணைவியார் உம்மு சுலைம்(ரலி) அவர்களிடம், ‘நான் நபி ﷺ அவர்களின் குரலைப் பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கு இருக்கும்) பசியை அறிந்துகொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதேனும் இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். எனவே, உம்மு சுலைம்(ரலி) வாற்கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்து வந்தார்கள். பிறகு, உம்மு சுலைம் அவர்கள் தங்களின் முகத்திரை ஒன்றை எடுத்து அதன் ஒரு பகுதியால் ரொட்டியைச் சுருட்டி என்னுடைய கை (அக்குளு)க்குக் கீழே மறைத்து வைத்துவிட்டு, மற்றொரு பகுதியை எனக்கு மேல்துண்டாக ஆக்கினார்கள். பிறகு என்னை இறைத்தூதர் ﷺ அவர்களிடம் அனுப்பினார்கள். நான் அதைக் கொண்டு சென்றேன். இறைத்தூதர் ﷺ அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன். அவர்களுடன் மக்களும் இருந்தனர். நான் அவர்களுக்கு முன்னால் (போய்) நின்றேன். அப்போது இறைத்தூதர் ﷺ அவர்கள் ‘உன்னை அபூ தல்ஹா அனுப்பினாரா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்று சொன்னேன். ‘உணவுடனா அனுப்பியுள்ளார்?’ என்று அவர்கள் கேட்க, நான் ‘ஆம்’ என்றேன்.

அப்போது இறைத்தூதர் ﷺ அவர்கள் தம்முடன் இருந்தவர்களிடம், ‘எழுந்திருங்கள்’ என்று சொல்லிவிட்டு நடக்கலானார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன். இறுதியில் அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம் வந்(து விவரத்தைத் தெரிவித்)தேன். உடனே அபூ தல்ஹா(ரலி) (என் தாயாரிடம்) ‘உம்மு சுலைமே! இறைத்தூதர் ﷺ அவர்கள் மக்களுடன் வந்திருக்கிறார்கள்.

ஆனால், அவர்களுக்கு உணவளிக்க நம்மிடம் உணவு இல்லையே!’ என்று கூறினார்கள். (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி), ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்’ என்று கூறினார்கள். உடனே அபூ தல்ஹா(ரலி) (தாமே நபி ﷺ அவர்களை முன்சென்று வரவேற்பதற்காகப்) போய் இறைத்தூதர் ﷺ அவர்களைச் சந்தித்தார்கள். அபூ தல்ஹா அவர்களும் இறைத்தூதர் ﷺ அவர்களும் வந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள். இறைத்தூதர் ﷺ அவர்கள் , ‘உம்மு சுலைமே! உன்னிடமிருப்பதைக் கொண்டுவா!’ என்று கூறினார்கள். உடனே உம்மு சுலைம் அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டு வந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி பணித்தார்கள். அவ்வாறே அது பிய்க்கப்பட்டது. பிறகு, உம்மு சுலைம்(ரலி) தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை உருக்கினார்கள். பிறகு இறைத்தூதர் ﷺ அவர்கள் இறைவன் நாடிய (பிஸ்மில்லாஹ் மற்றும் இதர பிரார்த்தனை வரிகள் சில)வற்றைக் கூறினார்கள். பிறகு ‘பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதியுங்கள்’ என்று (அபூ தல்ஹாவிடம்) கூறினார்கள்.

அவ்வாறே அவர்களுக்கு அபூ தல்ஹா(ரலி) அனுமதியளித்தார்கள். அப்போது அவர்கள் (பத்துப் பேரும்) வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘இன்னொரு பத்துப் பேருக்கு (உள்ளே) வர அனுமதி அளியுங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே அபூ தல்ஹா(ரலி) அனுமதியளிக்க, அவர்களும் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு, ‘மேலும் பத்துப் பேருக்கு அனுமதியுங்கள்’ என்று கூற, அபூ தல்ஹாவும் அனுமதியளித்தார்கள். அவர்களும் வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு பத்துப் பேருக்கு அபூ தல்ஹா(ரலி) அனுமதி கொடுத்தார்கள். மக்கள் அனைவரும் (இவ்வாறே) வயிறு நிரம்பும் வரை உண்டார்கள். (அப்படி உண்ட) அந்த மக்கள் எண்பது பேர் ஆவர். ( நூல்: புகாரி )

நமது நபி ﷺ அவர்கள்! பசியும்.... உணவும்...

நபி ﷺ அவர்களின் குடும்பத்தினர் நபி ﷺ அவர்கள் மரணிக்கும் வரை மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும் வயிறார உண்டதில்லை என நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர் அபூ ஹுரைரா (ரலி) கூறுகிறார். ( நூல் புகாரி )

நபி ﷺ அவர்கள் மதீனாவுக்கு வந்தது முதல் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களது குடும்பத்தினராகிய நாங்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லை என நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) கூறுகிறார். ( நூல் புகாரி )

وعن سعيدٍ المَقْبُريِّ، عَنْ أَبي هُرَيرةَ: أَنَّه مَرَّ بِقَومٍ بَيْنَ أَيْدِيهمْ شَاةٌ مَصْلِيَّةٌ، فَدَعَوْهُ، فَأَبى أَنْ يَأْكُلَ، وقال "خَرج رَسُولُ اللَّه ﷺ مِن الدُّنْيَا ولَمْ يَشْبَعْ مِنْ خُبْزِ الشَّعِيرِ" رواه البخاري

நபி ﷺ அவர்களின் நெருங்கிய தோழராக இருந்த அபூ ஹுரைரா (ரலி) ஒரு கூட்டத்தினரைக் கடந்து சென்றார். அவர்கள் முன்னே பொறிக்கப்பட்ட ஆடு வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் அபூ ஹுரைராவையும் சாப்பிட அழைத்தனர். நபி ﷺ அவர்கள் தீட்டப்படாத கோதுமை ரொட்டியையே வயிறார சாப்பிடாத போது நான் இதைச் சாப்பிட மாட்டேன் என அபூ ஹுரைரா (ரலி) மறுத்து விட்டார். ( நூல் புகாரி )

أنَّ جَارًا لِرَسولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ فَارِسِيًّا كانَ طَيِّبَ المَرَقِ، فَصَنَعَ لِرَسولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ، ثُمَّ جَاءَ يَدْعُوهُ، فَقالَ: وَهذِه؟ لِعَائِشَةَ، فَقالَ: لَا، فَقالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: لَا، فَعَادَ يَدْعُوهُ، فَقالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: وَهذِه؟ قالَ: لَا، قالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: لَا، ثُمَّ عَادَ يَدْعُوهُ، فَقالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: وَهذِه؟ قالَ: نَعَمْ، في الثَّالِثَةِ، فَقَاما يَتَدَافَعَانِ حتَّى أَتَيَا مَنْزِلَهُ.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுக்கு அண்டை வீட்டுக்காரர் ஒருவர் இருந்தார். பாரசீகரான அவர் நன்கு (மணம் கமழ) குழம்பு சமைக்கக்கூடியவராக இருந்தார். 

அவர் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுக்காக உணவு சமைத்துவிட்டு அவர்களை அழைப்பதற்காக வந்தார்.

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் (தம் அருகில் பசியோடு இருந்த தம் துணைவி) ஆயிஷா (ரலி) அவர்களை சைகை செய்து காட்டி "இவரும் (வரலாமா)?" என்று கேட்டார்கள், அவர் (உணவு குறைவாக இருந்ததால்), "இல்லை (வேண்டாம்)" என்று கூறிவிட்டார். அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் "இல்லை (அவ்வாறாயின் நானும் வரமாட்டேன்)" என்று கூறிவிட்டார்கள்.

அவர் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களை அழைப்பதற்காக மறுபடியும் வந்தார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், "இவரும் (வரலாமா)?" என்று (ஆயிஷா (ரலி) அவர்களை சைகை செய்து) கேட்டார்கள். அப்போதும் அவர் "இல்லை (வேண்டாம்)" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் "(அவ்வாறாயின் நானும்) இல்லை" என்று கூறிவிட்டார்கள்.

அவர் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களை அழைப்பதற்காக மறுபடியும் வந்தார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் "இவரும் (வரலாமா)?" என்று (ஆயிஷா (ரலி) அவர்களை சைகை செய்து) கேட்டார்கள்.     

அவர் மூன்றாவது முறை "சரி (வரலாம்)" என்றார். பின்னர் இருவரும் ஒருவரையொருவர் பின்தொடர்ந்து அவரது வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தனர். ( நூல்: அஹ்மத் )

عن أبي هريرة رضي الله عنه قال: دخلت على النبي صلى الله عليه وسلم وهو يصلي جالسا, فقلت: يا رسول الله! اراك تصلي جالسا فما أصابك؟ فقال النبي صلى الله عليه وسلم: الجوع يا أبا هريرة! فبكيت, فقال: لا تبك يا أبا هريرة, فانّ شدة الحساب يوم القيامة لا تصيب الجائع اذا احتسب في دار الدنيا.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் வீட்டிற்கு அண்ணலாரைக் காண்பதற்காகச் சென்றேன். அப்போது, அண்ணலார் ﷺ வீட்டில் உட்கார்ந்து தொழுது கொண்டிருந்தார்கள்.

நான் நபி ﷺ அவர்கள் தொழுது முடிக்கும் வரை காத்திருந்து விட்டு, தொழுது முடித்த பின் “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் உட்கார்ந்து தொழ நான் கண்டேனே! உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது?” என வினவினேன்.

அப்போது, நபி ﷺ அவர்கள் “அபூஹுரைராவே! பசி தான் காரணம்” என்றார்கள். அதைக் கேட்டதும் நான் அழுது விட்டேன். அப்போது, அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் என்னை நோக்கி “அபூஹுரைராவே! இப்போது நான் என்ன சொல்லிவிட்டேன்! என்று அழுகின்றீர்கள்?” நாளை மறுமை நாளில் கேள்வி கணக்கின் கஷ்டத்தை உணரும் பட்சத்தில் உலகில் பசியோடு இருக்கும் நிலை ஒன்றும் பெரிதாகத் தெரியாது” என்று பதில் கூறினார்கள். ( நூல்: அபூதாவூத் )

உயிரினங்களில் மனிதனைத் தவிர, வேறு எந்த உயிரினமும் உண்ண உணவில்லாமல் பசியால் இறப்பதில்லை. பறவைகளும், விலங்குகளும் தனது உணவையோ, இரையையோ வீணடிப்பதில்லை.

ஆனால், மனிதன் மட்டுமே உணவுப் பொருள்களை வீணடிக்கிறான். உலகின் உணவு உற்பத்தியில் சுமார் மூன்றில் ஒரு பங்கு உணவு, அதாவது 1.3 பில்லியன் டன் உணவு வீணாக்கப்படுகிறது. 

உலகில் 13 சதவீத உணவு, அறுவடைக்குப் பிறகும், சில்லறை விற்பனைக் கடைகளுக்குச் செல்வதற்கு முன்பும், மளிகைக்கடைகள், உணவகங்கள் மற்றும் வீடுகளுக்குச் சென்ற பிறகு 17 சதவீதம் உணவு வீணாக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் உற்பத்தியாகும் உணவு தானியங்களில் ஏறத்தாழ 40% சதவீதம் வீணாகிறது .

அதன் மதிப்பு 58000 கோடியாகும். ஒவ்வொரு நாளும் 15000 டன் வீடடிக்கப்படுகிறது என்றும் அதில் 3000 டன் உணவுப் பொருட்கள் சாப்பிடுவதற்கு தகுதியானவையாக இருக்கிறது என்றால் என்ன சொல்ல?

அமெரிக்ககள் தாங்கள் வாங்கும் உணவுப் பொருட்களில் பாதியை வீணாக்குகின்றார்கள். அதன் மதிப்பு ஆண்டுக்கு 66.10 கோடி என்கிறது ஒரு புள்ளி விவரம்.

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஒரு நபருக்கு 50 கிலோ என்ற அளவில் உணவு வீணடிக்கப்படுகிறது. இது உணவை வீணடிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இரண்டாவது இடத்தில் வைத்திருக்கிறது.

எனவே, உணவை வீணடிக்காமல், பசித்திருப்போரின், பட்டினி கிடப்போரின் தேவையறிந்து உணவை பயன்படுத்துவதில் விழிப்புணர்வுடன் செயல் படுவோம்.

وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ

உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். ( அல்குா்ஆன்: 7: 31 )

உணவை வீணடிப்பது மட்டும் விரயம் அல்ல பெருமானார் ﷺ அவர்களின் வார்த்தையில் கவனம் குவிப்போம்!

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( إِنَّ مِنْ السَّرَفِ أَنْ تَأْكُلَ كُلَّ مَا اشْتَهَيْتَ ) رواه ابن ماجه

பெருமானார் ﷺ அவர்கள் கூறினார்கள்: “நீ விரும்பிய அனைத்தையும் உண்பதுகூட விரயம்தான்”. ( நூல்: இப்னுமாஜா )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு எவ்விதச் சிரமமும் இன்றி நாம் பசித்திருக்கும் போது உணவளித்து வரும் தயாளத்தன்மைக்காக சாப்பிட்டு முடித்ததும் மாநபி ஸல் அவர்களின் வழியில் அல்லாஹ்வுக்கு அழகிய நன்றியை செலுத்துவோம்!

 كانَ رسولُ اللَّهِ صلَّى اللَّه عليه وسلم إذا رفعتِ المائدةُ من بينِ يديْهِ يقولُ الحمدُ للَّهِ حمدًا كثيرًا طيِّبًا مبارَكًا فيهِ غيرَ مودَّعٍ ولاَ مستغني عنْهُ ربُّنا . الراوي : أبو أمامة الباهلي المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 3456 | خلاصة حكم المحدث : صحيح |

நபி ﷺ அவர்கள் ( சாப்பிட்டு முடித்த பின் ) தமது உணவு விரிப்பை எடுக்கும் போது " அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்த இன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா " என்று பிரார்த்திப்பார்கள்

பொருள் ( அதிகமான தூய்மையான வளமிக்க எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது இறைவா இப்புகழ் முற்றுப் பெறாதது கைவிடப்படக் கூடாதது தவிர்க்க முடியாதது ஆகும் ) என்று அபூ உமாமா ( ரலி) அறிவிக்கிறார்கள் ( நூல் : திர்மிதீ )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் பசி பட்டினியில் இருந்தும், உணவுப் பற்றாக்குறை மற்றும் உணவுத் தேவையில் இருந்தும் பாதுகாப்பானாக! வாழும் காலமெல்லாம் தடையில்லாத ரிஜ்கைத் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!




Wednesday, 27 May 2026

 தியாகத் திருநாள் சிந்தனை - (2026) இப்ராஹீம் அலை அவர்களின் குணம் படைப்போம்!!

"ஈதுல் அள்ஹா” ஹஜ்ஜுப்பெருநாள் உலகெங்கும் வாழும் முஸ்லிம் பெருமக்களால் தியாகத் திருநாளாக நினைவு கூறப்படுகிறது.

அத்தகைய தியாகத் திருநாளில் மகிழ்ச்சியோடு நாம் பெருநாள் தொழுகைக்காக காத்திருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது இந்த மகிழ்ச்சியை நமது வாழ்வில் இறுதி வரை நிலைக்கச் செய்வானாக!

இந்த உலகில் நாம் வாழும் போதும் சரி, இந்த உலகை விட்டு விடை பெற்று நாம் சென்று விட்டாலும் சரி இந்த உலகின் இயக்கம் இயங்கும் வரை பேசப்படுகிற, பின்பற்றப்படும் வகையிலான ஒரு வாழ்க்கையை இந்த உலகில் நாம் வாழ்ந்து விட்டு செல்ல வேண்டும் என்பது தான் இன்றைய நாளின் கதாநாயகராக திகழ்கிற இப்ராஹீம் அலை அவர்களின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நபி இப்ராஹீம் அலை அவர்கள் குறித்து பல்வேறு சிறப்புகளை அல்குர்ஆனில் குறிப்பிட்டிருந்தாலும் இரண்டு இடங்களில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களின் அழகிய பண்புகளை குறிப்பிடுவதை நாம் எளிதாக கடந்து போய் விட முடியாது.

ஏகத்துவ பிரச்சாரத்தின் போது ஆக்ரோஷமான இளைஞராக அடையாளப்படுத்தும் அல்லாஹ், தம் சமூகத்தை எதிர் கொள்ளும் போது விவேகியாக அறிமுகப்படுத்தும் அல்லாஹ், தம் தந்தையை நல் வழிப்படுத்தும் முயற்சியில் சிந்தையாளராக முகவரி கொடுக்கும் அல்லாஹ், தம் அரசரை எதிர் கொள்ளும் போது தர்க்க ரீதியான ஆளுமையாக அடையாளப்படுத்தும் அல்லாஹ் தம் வாழ்க்கையின் மிகவும் முக்கியமான இரண்டு பகுதியில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அழகிய பண்பாளராக அடையாளப் படுத்துகின்றான்.

اِنَّ اِبْرٰهِیْمَ لَحَلِیْمٌ اَوَّاهٌ مُّنِیْبٌ 

நிச்சயமாக இப்ராஹீம் சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனங்கொண்டவராகவும் (எதற்கும்) இறைவன் பால் முகம் திரும்புபவராகவும் இருந்தார். ( அல்குர்ஆன்: 11: 75 )

اِنَّ اِبْرٰهِیْمَ لَاَوَّاهٌ حَلِیْمٌ 

நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார்.( அல்குர்ஆன்: 9: 114 )

ஒரு மனிதர் எவ்வளவு சிறந்தவராக வாழ்ந்த போதிலும் அவர் உச்சத்தை தொடுவது அவரின் அழகிய பண்பாடுகளால் தான் என்பதை நபி இப்ராஹீம் அலை அவர்களின் வாழ்விலிருந்து நமக்கான மகத்தான பாடமாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அமைத்துள்ளான்.

தமது தந்தை இஸ்லாமிய வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இப்ராஹீம் அலை அவர்களுக்கு அதிகமாகவே இருந்தது.

ஆதலால் இப்ராஹீம் அலை அவர்கள் தமது தந்தைக்கு ஏகத்துவ அழைப்பியலை அதன் மொத்த வடிவத்திலும் கொடுத்தார்கள்.

ஆனால், இப்ராஹீம் அலை அவர்களின் தந்தையோ ஏகத்துவ கொள்கையை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதில் முழு மூச்சாக இருந்து இப்ராஹீம் அலை அவர்களை விட்டும் ஒதுங்கியே வாழ்கிறார்.

இந்த நிலையில் தமது தந்தையின் மீதான அளவு கடந்த பாசத்தால் இப்ராஹீம் அலை அவர்கள் அல்லாஹ்விடம் தொடர்ந்து பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.

  وَاغْفِرْ لِاَبِىْۤ اِنَّهٗ كَانَ مِنَ الضَّآلِّيْنَۙ‏ 

என் தந்தையை மன்னிப்பாயாக! அவர் வழி தவறியவராக இருக்கிறார்.

وَلَا تُخْزِنِىْ يَوْمَ يُبْعَثُوْنَۙ‏ 

(மக்கள்) மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளில் என்னை இழிவுபடுத்தி விடாதே! ( அல்குர்ஆன்: 26: 86,87 )

ஒரு கட்டத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இத்தகைய பாவமன்னிப்புக் கோரலை விட்டுவிடுமாறு கட்டளை இடுகின்றான்.

உடனடியாக இப்ராஹீம் அலை அவர்கள் தமது தந்தைக்கு பாவமன்னிப்பு கோருவதை விட்டு விடுகிறார்கள்.

مَا كَانَ لِلنَّبِیِّ وَالَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْ یَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِیْنَ وَلَوْ كَانُوْۤا اُولِیْ قُرْبٰی مِن بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمْ اَنَّهُمْ اَصْحٰبُ الْجَحِیْمِ 

முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல.

وَمَا كَانَ اسْتِغْفَارُ اِبْرٰهِیْمَ لِاَبِیْهِ اِلَّا عَنْ مَّوْعِدَةٍ وَّعَدَهَاۤ اِیَّاهُ ۚ فَلَمَّا تَبَیَّنَ لَهٗۤ اَنَّهٗ عَدُوٌّ لِّلّٰهِ تَبَرَّاَ مِنْهُ اِنَّ اِبْرٰهِیْمَ لَاَوَّاهٌ حَلِیْمٌ 

இப்ராஹீம் (நபி) தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர் தம் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவேயன்றி வேறில்லை; மெய்யாகவே, அவர் (தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்பது தெளிவாகியதும் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார் - நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார்.

( அல்குர்ஆன்: 9: 113, 114 )

அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து அவர்கள் இந்த செயலை விட்ட போது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களின் அழகிய பண்புகளை கூறி "நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார்" என்று மெச்சிப் பேசுகிறான்.

தமது வயது முதிர்ந்த நேரத்தில் அல்லாஹ்விடம் தமக்காக குழந்தைப் பேற்றை தொடர்ந்து இப்ராஹீம் அலை அவர்கள் கேட்டு வந்தார்கள்.

அல்லாஹ்வும் அவர்களது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு குழந்தை பேற்றை சோபனமாக சொல்ல வானவர்களை அனுப்பிய போது, அப்போதும் இப்ராஹீம் அலை அவர்கள் அல்லாஹ்வின் ஆற்றலின் மீது அதீதமான நம்பிக்கையோடு அந்த கட்டளையை ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனாலும், சோபனம் சொல்ல வந்திருந்த வானவர்கள் லூத் அலை அவர்களின் சமூகத்தை அழிக்க வந்துள்ள செய்தியை கேட்டு, ஒரு சமூகமே அழிக்கப்பட உள்ளதா? என்று அல்லாஹ்விடம் இது குறித்து வாதிட்டார்களாம்.

தமக்கான சோபனம் மகிழ்ச்சியை தந்ததை விட ஒரு சமூகத்தின் அழிவு அவர்களுக்கு கவலையைத் தந்தது. இது அவர்களின் இளகிய மனதையும் இரக்க குணத்தையும் காட்டுவதாக அமைந்துள்ளது.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த செய்தியை பதிவு செய்து விட்டு 

"நிச்சயமாக இப்ராஹீம் சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனங்கொண்டவராகவும் (எதற்கும்) இறைவன் பால் முகம் திரும்புபவராகவும் இருந்தார்" என்று புகழ்ந்துரைக்கின்றான்.

فَلَمَّا ذَهَبَ عَنْ اِبْرٰهِیْمَ الرَّوْعُ وَجَآءَتْهُ الْبُشْرٰی یُجَادِلُنَا فِیْ قَوْمِ لُوْطٍ 

(இது கேட்டு) இப்ராஹீமை விட்டுப் பயம் நீங்கி, நன்மாராயம் அவருக்கு வந்ததும் லூத்துடைய சமூகத்தாரைப் பற்றி நம்மிடம் வாதிடலானார்.

اِنَّ اِبْرٰهِیْمَ لَحَلِیْمٌ اَوَّاهٌ مُّنِیْبٌ 

நிச்சயமாக இப்ராஹீம் சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனங்கொண்டவராகவும் (எதற்கும்) இறைவன் பால் முகம் திரும்புபவராகவும் இருந்தார். ( அல்குர்ஆன்: 11: 74, 75 )

பொறுமை, சகிப்புத்தன்மை, இளகிய மனம், இரக்க குணம், எப்போதும் எந்நிலையிலும் அல்லாஹ்வின் பால் திரும்புபவராக இருந்தார்கள் என்று அல்லாஹ் ரப்புல் 

ஆலமீன் நபி இப்ராஹீம் அலை அவர்களின் அழகிய பண்புகளை குறிப்பிடுகின்றான்.

அபூபக்ரே! நீர் இப்ராஹிம் (அலை) அவர்களைப் போன்றவராவீர்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَعلى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ: «أَرْحَمُ أُمَّتِي بِأُمَّتِي أَبُو بَكْرٍ، وَأَشَدُّهُمْ فِي أَمْرِ اللهِ عُمَرُ،

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுவதாவது: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள் : என் சமுதாயத்தில் என் சமுதாயத்தின் மீது அதிக இரக்கமுள்ளவர் அபூபக்ர் ஆவார். அல்லாஹ்வுடைய விஷயத்தில் அவர்களில் கடுமையானவர் உமராவார். ( நூல்: திர்மிதீ )

عن عمرو بن مرّة، عن أبي عبيدة، عن عبدالله قال: لما كان يوم بدر قال رسولُ الله ﷺ: ما تقولون في هؤلاء الأسارى؟ فقال أبو بكر: يا رسول الله، قومك وأهلك، استبقهم واستتبهم لعلَّ الله أن يتوبَ عليهم.

وقال عمر: يا رسول الله، كذَّبوك وأخرجوك، فقدّمهم فاضرب أعناقهم.

وقال عبدالله بن رواحة: يا رسول الله، أنت في وادٍ كثير الحطب، أضرم الوادي عليهم نارًا، ثم ألقهم فيه.

قال: فسكت رسولُ الله ﷺ فلم يردّ عليهم شيئًا، ثم قام فدخل، فقال ناسٌ: يأخذ بقول أبي بكر. وقال ناسٌ: يأخذ بقول عمر. وقال ناسٌ: يأخذ بقول عبدالله بن رواحة.

ثم خرج عليهم رسولُ الله ﷺ فقال: إنَّ الله ليلين قلوب رجالٍ حتى تكون ألين من اللَّبن، وإنَّ الله ليشدد قلوب رجالٍ فيه حتى تكون أشدّ من الحجارة، وإنَّ مثلك يا أبا بكر كمثل إبراهيم، قال: فَمَنْ تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي وَمَنْ عَصَانِي فَإِنَّكَ غَفُورٌ رَحِيمٌ [إبراهيم:36]، وإنَّ مثلك يا أبا بكر كمثل عيسى، قال: إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ [المائدة:118]، وإنَّ مثلك يا عمر كمثل موسى ، قال: رَبَّنَا اطْمِسْ عَلَى أَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلَى قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا حَتَّى يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ [يونس:88]، وإنَّ مثلك يا عمر كمثل نوحٍ ، قال: رَبِّ لَا تَذَرْ عَلَى الْأَرْضِ مِنَ الْكَافِرِينَ دَيَّارًا [نوح:26]، أنتم عالة فلا ينفكن أحدٌ منهم إلا بفداءٍ، أو ضربة عنقٍ.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுவதாவது: பத்ருப் போர் (முடிந்த போது) அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் இந்த அடிமைகள் விஷயத்தில் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? என்று (மக்களிடம்) கேட்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அல்லாஹ்வின் தூதரே (இவர்கள்) உங்கள் கூட்டத்தினர்; மற்றும் உங்கள் குடும்பத்தினர். இவர்களை விட்டுவைத்து (திருந்துவதற்கு) அவகாசம் அளியுங்கள் என்று கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே இவர்கள் உங்களை (ஊரை விட்டும்) வெளியேற்றி உங்களைப் பொய்யர் என்று கூறினார்கள். எனவே தாமதப்படுத்தாமல் அவர்கள் பிடரிகளை வெட்டி விடுங்கள் என்று கூறினார். அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே அதிகமான விறகுகளைக் கொண்ட பள்ளத்தாக்கைக் கவனித்து அதிலே அவர்களைச் செலுத்தி அவர்கள் மீது நெருப்பை மூட்டி விடுங்கள் என்று கூறினார்கள்.

அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் (அப்துல்லாஹ் பின் ரவாஹாவைப் பார்த்து) உமது உறவை நீ முறித்து விட்டாய் என்று சொன்னார்கள். சிலர் அபூபக்ர் (ரலி) அவர்களின் கூற்றையும் சிலர் உமர் (ரலி) அவர்களின் கூற்றையும் சிலர் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களின் கூற்றையும் தூக்கிப் பிடித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் இவர்களுக்கு எந்தப் பதிலும் தராமல் மக்களிடத்தில் வந்து இந்த விஷயத்தில் சிலரது உள்ளங்களை பாலை விட அல்லாஹ் மென்மையாக்கி விடுகிறான். சிலரது உள்ளங்களை கல்லை விடவும் கடினமாக்கி விடுகிறான் என்று கூறி விட்டு (பின் வருமாறு) சொன்னார்கள்.

அபூபக்ரே! நீர் இப்ராஹிமைப் போன்றவராவீர். யார் என்னைப் பின்பற்றினாரோ அவர் என்னைச் சார்ந்தவர். எனக்கு யாராவது மாறுசெய்தால் (இறைவா) நீயே (அவரை) மன்னிப்பவனாகவும் கருணையுள்ளவனாகவும் இருக்கிறாய் என்று இப்ராஹிம் கூறினார். இன்னும் உமரே! நீர் ஈஸாவைப் போன்றவராவீர். ஈஸா கூறினார். (இறைவா) அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்கள். அவர்களை நீ மன்னித்தால் நீயே மிகைத்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கிறாய்.

இன்னும் உமரே! நீர் மூஸாவைப் போன்றவராவீர். எங்கள் இறைவனே! அவர்களுடைய செல்வங்களை அழித்து, அவர்களுடைய நெஞ்சங்களையும் கடினமாக்கி விடுவாயாக! நோவினை தரும் வேதனையை அவர்கள் பார்க்காதவரையில், அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்” என்று மூஸா கூறினார். இன்னும் உமரே! நீர் நூஹைப் போன்றவராவீர்.

"என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே. என்று நூஹ் கூறினார். ( நூல்: அஹ்மத் )

إنَّ اللهَ وَعَدَني أنْ يُدخِلَ الجَنَّةَ من أُمَّتي أربعَ مئةِ ألْفٍ، فقال أبو بكرٍ: زِدْنا يا رسولَ اللهِ. قال: وهكذا وجَمَعَ كَفَّه، قال: زِدْنا يا رسولَ اللهِ. قال: وهكذا، فقال عُمَرُ: حَسْبُكَ يا أبا بكرٍ، فقال أبو بكرٍ: دَعْني يا عُمَرُ، وما عليكَ أنْ يُدخِلَنا اللهُ الجَنَّةَ كُلَّنا، فقال عُمَرُ: إنَّ اللهَ إنْ شاءَ أَدخَلَ خَلْقَه الجَنَّةَ بِكَفٍّ واحِدٍ، فقال النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّمَ: صَدَقَ عُمَرُ. خلاصة حكم المحدث : إسناده صحيح الراوي : أنس بن مالك | المحدث : شعيب الأرناؤوط | المصدر : تخريج المسند لشعيب | الصفحة أو الرقم : 12695 | التخريج : أخرجه أحمد (12695

அனஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது: எனது சமுதாயத்தில் 4 லட்சம் பேரை சொர்க்கத்தில் நுழைவிப்பதாக அல்லாஹ் எனக்கு வாக்களித்தான் என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே எங்களை (இன்னும்) அதிகப்படுத்துங்கள் என்று கூறினார்கள்.

நபி ﷺ அவர்கள் தம் கைகளை இணைத்து இவ்வளவு (பேரை அல்லாஹ் அதிகப்படுத்துவான்) என்று சொன்னார்கள். அப்போதும் அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே எங்களை அதிகப்படுத்துங்கள் என்று கூறினார்கள். அதற்கும் நபி ﷺ அவர்கள் தம் கைகளை இணைத்து இவ்வாறு (அல்லாஹ் மக்களை சுவர்க்கத்தில் அள்ளிப் போடுவான்) என்றார்கள்.

அப்போது உமர் (ரலி) அவர்கள் அபூபக்ரே போதும் (நிறுத்துங்கள்) என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் உமரே என்னை விட்டு விடுங்கள். எங்கள் அனைவரையும் அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்வதினால் உமக்கு ஒன்றுமில்லை என்று கூறினார்கள்.

அல்லாஹ் நாடினால் தன் (அனைத்து) படைப்பினங்களையும் ஒரே கையில் (எடுத்து) சொர்க்கத்தில் நுழையச் செய்து விடுவான் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். உமர் சரியாகச் சொன்னார் என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.

( நூல்: அஹ்மத் )


இந்த உலகில் வாழும் காலத்திலேயே நபி இப்ராஹீம் அலை அவர்களின் அழகிய நற்பண்புகள் பலதிற்கும் ஒப்பாக வாழ்ந்தவர்கள் அ

பூபக்ர் சித்தீக் ரலி அவர்கள் ஆவார்கள்.




Thursday, 21 May 2026

குர்பானியின் மாண்பும்... மகத்துவமும்...

 

குர்பானியின் மாண்பும்... மகத்துவமும்...



இஸ்லாம் சில இடங்களை கண்ணியப்படுத்தச் சொல்கின்றது. சில கால, நேரங்களை கண்ணியப்படுத்தச் சொல்கின்றது. சில இபாதத்களை கண்ணியப்படுத்தச் சொல்கின்றது.

கண்ணியப்படுத்த வேண்டிய இடங்கள்: ஹஜ்ஜின் கிரியைகளோடு தொடர்புள்ள மக்காவின் ஹரம் ஷரீஃப், கஅபா, மகாம் இப்ராஹீம், ஸஃபா, மர்வா மஷ்அரில் ஹராம் முஸ்தலிஃபா, மினா, அரஃபா, மதீனா ஹரம், இவைகள்.

நல்லறங்கள் நடைபெறுகிற அனைத்து இடங்கள், குறிப்பாக மூன்று மஸ்ஜிதுகள், மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன் நபவீ, பைத்துல் முகத்தஸ், மற்றும் அனைத்து மஸ்ஜித்கள் 

கண்ணியப்படுத்த வேண்டிய கால, நேரங்கள்: சங்கை மிகுந்த நான்கு மாதங்கள், ரமலான் மாதம், ஜும்ஆ தினம், லைலத்துல் கத்ர் இரவு, அதிகாலை நேரம். ரமழான் கடைசி பத்து நாட்கள், துல்ஹஜ் முதல் பத்து நாட்கள், ஆஷூரா மற்றும் அரஃபா தினம்.

கண்ணியப்படுத்த வேண்டிய இபாதத்: குர்பானி வணக்கம் குர்பானி பிராணி, குர்பானிக்காக அடையாளமிடப்பட்டவைகள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஹஜ்ஜின் கியையைகளில் இடம் பெறும் சில வழிபாடுகளையும், அது தொடர்பான இடங்களையும் தன்னுடைய அடையாளச் சின்னங்கள் என்று அல்குர்ஆனில் அடையாளப்படுத்துகின்றான்.

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ

நிச்சயமாக, ஸஃபா மர்வா என்னும் இரு மலைக்குன்றுகளும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். ஆகவே, எவர் இறை இல்லம் கஅபாவை, ஹஜ்ஜு அல்லது உம்ரா செய்வாரோ அப்பொழுது அவ்விரண்டையும் வலம் வருவது அவர் மீது குற்றமல்ல. மேலும், எவர் நன்மையை மிகுதியாகச் செய்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவனும், அவருடைய நற்செயலை மிக அறிந்தவனாகவும் இருக்கின்றான்”. ( அல்குர்ஆன்: 2: 158 )

அதே போன்று தான் குர்பானி பிராணியையும், அந்த வழிபாட்டையும் தன்னுடைய அடையாளச் சின்னம் என்று அடையாளப்படுத்துகின்றான்

பின்னர் அந்த அடையாளச் சின்னங்களை ஒரு முஃமின் எப்படி அணுக வேண்டும் என்று வழிகாட்டியும் இருக்கின்றான்.

وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُمْ مِنْ شَعَائِرِ اللَّهِ لَكُمْ فِيهَا خَيْرٌ فَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهَا صَوَافَّ فَإِذَا وَجَبَتْ جُنُوبُهَا فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ كَذَلِكَ سَخَّرْنَاهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ

ஒட்டகங்களை உங்களுக்கு அல்லாஹ்வினுடைய மார்க்க அடையாளங்களில் ஒன்றாக நாம் ஆக்கியுள்ளோம். உங்களுக்கு அவற்றின் மூலம் நன்மைகள் இருக்கின்றன. ஆகவே, (அவற்றை இடது முன்னங்காலை கட்டி) மூன்று கால்களில் நிற்கச்செய்து அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்து விடுங்கள். அவற்றின் விலாப்புறங்கள் கீழே விழுந்து உயிர் நீத்து விட்டால், அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள், தேவையிருந்தும் பிறரிடம் யாசிக்காதவர்களுக்கும், யாசித்துக் கேட்பவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள். நீங்கள் நன்றி செலுத்திடும் பொருட்டு இவ்வாறு நாம் அதை உங்களுக்கு வசப்படுத்தி தந்துள்ளோம்”. (அல்குர்ஆன் : 22: 36 )

ஒட்டகத்தை அல்லாஹ்வின் மார்க்க அடையாளங்களில் ஒன்று என்று குறிப்பிடும் அல்லாஹ் இதற்கு முந்தைய மற்றும் பிந்தைய வசனங்களில் குர்பானி குறித்து பேசுகின்றான். எனவே, குர்பானி பிராணியும், குர்பானி வணக்கமும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் கட்டுப்பட்டதாகும்.

அல் ஹஜ் அத்தியாயம் 26- ம் வசனத்தில் இருந்து ஹஜ்ஜையும், ஹஜ்ஜின் இதர கிரியைகளையும் சிறப்பித்துக் கூறி வரும் இறைவன் நடுவிலும், இறுதியாகவும் இவைகள் அல்லாஹ்வினால் புனிதமாக்கப்பட்டவைஎன்றும், ”அல்லாஹ்வின் சன்மார்க்க அடையாளங்கள்என்றும் குறிப்பிட்டு விட்டு கண்ணியப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றான்.

குர்பானி என்பது...

குர்பானி என்பது அல்லாஹ் மற்றும் அவனது திருத்தூதர் முஹம்மது அவர்களால் கட்டளையிடப்பட்ட அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களுல் ஒன்றாக இருக்கின்றது.

நபி அவர்களை நோக்கி அல்லாஹ் ஆணையிடும் இந்த இரண்டு வசனங்கள் கவனிக்கத்தக்கவையாகும்.

قُلْ اِنَّ صَلَاتِیْ وَنُسُكِیْ وَمَحْیَایَ وَمَمَاتِیْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ

நீர் கூறும்: மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். ( அல்குர்ஆன்: 6: 162 )

اِنَّاۤ اَعْطَیْنٰكَ الْكَوْثَرَ 

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ 

اِنَّ شَانِئَكَ هُوَ الْاَبْتَرُ 

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம். எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக. நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன். ( அல்குர்ஆன்: 108: 1-3 )

وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّیَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰی مَا رَزَقَهُمْ مِّنْ

 بَهِیْمَةِ الْاَنْعَامِ فَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ فَلَهٗۤ اَسْلِمُوْا وَبَشِّرِ الْمُخْبِتِیْنَ 

இன்னும் கால்நடை (ப்பிராணி) களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!” (அல்-குர்ஆன் 22:34)

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் பத்து வருடங்கள் தங்கியிருந்து, (ஒவ்வொரு ஆண்டும் பெருநாள் தினத்தில்) குர்பானி கொடுத்தார்கள்.அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி); ஆதாரம்: அஹமது, திர்மிதீ

நபி (ஸல்) அவர்கள் இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் தங்களின் பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்துக்கொண்டு அல்லாஹ்வின்பெயர் கூறி, ‘தக்பீர்’ (அல்லாஹு அக்பர் அல்லாஹ் மிகப் பெரியவன் என்று) சொல்லி அவற்றைத் தம் கையால் அறுத்ததை பார்த்தேன்அறிவிப்பவர்: அனஸ் (ரலி); ஆதாரம்: புகாரி 5558

தொழுகைக்குப் பிறகு குர்பானி கொடுத்தவர் தனது கடமைகளை (ஈத்) முடித்து முஸ்லிம்களின் வழியைப் பின்பற்றுகிறார்.அறிவிப்பவர்: பரா இப்னு ஆஸிப் (ரலி); ஆதாரம்:புகாரி

மேற்கண்ட திருமறை வசனங்கள் மற்றும் நபிமொழிகளிலிருந்து குர்பானி கொடுப்பது என்பது அல்லாஹ் மற்றும் அவனது தூதர் அவர்களால் கட்டளையிடப்பட்ட வணக்கவழிபாடுகளில் ஒன்று என்பதையும் இந்தக் குர்பானி எனும் கடமையைச் செய்தவரே முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றுபவராவார் என்பதையும் விளங்கமுடிகின்றது.

குர்பானி கொடுப்பது கட்டாயக் கடமையா? அல்லது வலியுறுத்தப்பட்ட சுன்னாவா?

இதை வரையறுப்பதில் மார்க்க அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் இருக்கிறது.

சில அறிஞர்கள் குர்பானி கட்டாயக் கடமை என்றும் இந்தக் கடமையை நிறைவேற்றாதவர்களுக்கு பாவம் வந்து சேரும் எனவும், மற்ற சில அறிஞர்கள் குர்பானி வலியுறுத்தப்பட்ட சுன்னா; இதை செய்யாமல் விடுவது விரும்பத்தக்கது அல்ல என்கின்றனர்.

உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.

قال النّووي رحمه الله في " المجموع " (8/382):" قيل سمّيت بذلك لأنّها تُفعل في الضّحى، وهو ارتفاع النّهار ".

இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் லுஹா உடைய நேரத்தில் அறுக்கப்படுவதால் அதற்கு உள்ஹிய்யா என்று பெயர் வந்ததுஎன கூறுகின்றார்கள்.

الإمام أبي حنيفة أنّها واجبة على القادر.

இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள் உள்ஹிய்யா கொடுப்பது வாஜிப் என்று கூறுகிறார்கள். பின் வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு 

ما رواه أحمد وابن ماجه وغيرهما عن أبي هريرة رضي الله عنه عن النبيّ صلّى الله عليه وسلّم قال: (( مَنْ وَجَدَ سَعَةً فَلَمْ يُضَحِّ، فَلاَ يَقْرَبَنَّ مُصَلاّنَا )) [حديث حسن].

قال السّندي رحمه الله:" ليس المراد أنّ صحة الصلاة تتوقّف على الأضحية، بل هو عقوبة له بالطّرد عن مجالس الأخيار، وهذا يفيد الوجوب، والله تعالى أعلم ".

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: யார் உள்ஹிய்யா கொடுக்கிற அளவுக்கு வசதி வாய்ப்புகள் பெற்றிருந்தும் உள்ஹிய்யா கொடுக்க வில்லையோ, அவர் நம் தொழுமிடத்துக்கு வரவேண்டாம்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஹ்மத், இப்னு மாஜா )

இந்த ஹதீஸிற்கு விளக்கம் தருகிற அஸ்ஸிந்தீ (ரஹ்) அவர்கள் உள்ஹிய்யா கொடுப்பவரின் தொழுகை தான் நிறைவேறும் என்ற பொருளில் இந்த ஹதீஸை அணுகாமல் உள்ஹிய்யா கொடுப்பவர்களோடு இவர்கள் கலந்து விடுவதிலிருந்து தனித்து விடப்படவேண்டும் என்ற பொருளிலேயே இதை அணுக வேண்டும். மேலும், இது ஒரு வகையில் அவர்களைத் தண்டிப்பது போலவும் அமைந்திருக்கின்றது, மேலும், இந்த ஹதீஸை இவ்வாறு நோக்கும் பட்சத்தில் உள்ஹிய்யா வாஜிப் எனும் அந்தஸ்தைப் பெறுகின்றது. அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்என்று கூறுகின்றார்கள். இதற்கு ஆதாரமாக இன்னொரு ஹதீஸையும் மேற்கோள் காட்டுகின்றனர்.

ما رواه أحمد وأبو داود عن مخنف بن سليم أنّ النبيّ صلّى الله عليه وسلّم قال: (( يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ عَلَى أَهْلِ كُلِّ بَيْتٍ أُضْحِيَةُ كُلَّ عَامٍ )).

மஃக்னஃப் இப்னு ஸுலைம் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: மக்களே! உங்களில் (சொந்தமாக) வீடுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டும் உள்ஹிய்யா கொடுக்க வேண்டும்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: அபூதாவூத், அஹ்மத்  

وهو قول الإمام أبي حنيفة، ورواية عن مالك وأحمد، والثّوري، والأوزاعي، وربيعة، والليث، وهو الظّاهر للأدلّة

அபூஹனீஃபா (ரஹ்) அவர்களின் இந்த கருத்தையே, மேற்கூறிய ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு இமாம் மாலிக், இமாம் அஹ்மத், இமாம் ஸுஃப்யானுஸ் ஸவ்ரீ, இமாம் அவ்ஜாயீ, இமாம் ரபீஆ, இமாம் லைஸ் (ரஹ் அலைஹிம் ) ஆகியோரும் கொண்டிருக்கின்றனர்.    

للجمهور أنّها سنّـة مؤكّدة، قال ابن قدامة في "المغني"(9/345):

" روي ذلك عن أبي بكر، وعمر، وبلال، وأبي مسعود البدري رضي الله عنهم. وبه قال سويد بن غفلة، وسعيد بن المسيب، وعلقمة، والأسود، وعطاء، والشافعي، وإسحاق، وأبو ثور، وابن المنذر " اهـ

ஆனால், ஜும்ஹூர் பெரும்பாலான அறிஞர்கள் இமாம் ஸயீத் இப்னுல் முஸய்யப், இமாம் அல்கமா, இமாம் ஸுவைத் இப்னு ஃகஃப்லா, இமாம் அதாஃ இப்னு அபீ ரபாஹ், இமாம் ஷாஃபீயீ, இமாம் இஸ்ஹாக், இமாம் அபூ ஸவ்ர், இமாம் இப்னுல் முந்திர் (ரஹ் அலைஹிம்) ஆகியோர் அபூபக்ர், உமர், பிலால், அபீ மஸ்வூத் அல்பத்ரீ (ரலி அன்ஹும்) ஆகியோர் பதிவு செய்திருக்கிற ஹதீஸ்களை மேற்கோள் காட்டி ஸுன்னத் முஅக்கதா வலியுறுத்தப்பட்ட ஸுன்னத் என்று கூறுகின்றார்கள் என்பதாக இமாம் இப்னு குதாமா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். ( நூல்: அல்முஃனீ லி இமாமி இப்னு குதாமா, பாகம்:9, பக்கம்: 345 )

முதல் இரண்டு நபிமொழிகளின் அடிப்படையில் வசதி வாய்ப்புள்ள அனைவரும் தனித்தனியாக குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.

எனவே, தனியாக ஆடு, மாடு குர்பானி கொடுக்க வசதி படைத்தவர்கள் ஆட்டையோ, மாட்டையோ வாங்கி அதை வளர்த்து, பராமரித்து அழகிய முறையில் குர்பானி கொடுக்க வேண்டும்.

இன்று சமூகத்தில் தனியாக ஆடு, மாடு குர்பானி கொடுத்துக் கொண்டிருந்த அநேகம் பேர், வசதி வாய்ப்புகள் இருந்தும் கூட்டுக்குர்பானி கொடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றார்கள். ஆனால், இது போன்றவர்களுக்கு கூட்டுக் குர்பானியை விட தனியாக குர்பானி கொடுப்பதே அதிக நன்மைக்கும், சிறப்புக்கும் உரியதாகும்.

எவைகளை உள்ஹிய்யா கொடுக்க வேண்டும்?..

رواه مسلم عَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (( لَا تَذْبَحُوا إِلَّا مُسِنَّةً، إِلَّا أَنْ يَعْسُرَ عَلَيْكُمْ فَتَذْبَحُوا جَذَعَةً مِنْ الضَّأْنِ )).

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: குர்பானி கொடுக்கப்பட வேண்டிய பிராணிகளில் ஒட்டகத்திற்கு ஐந்து வயதும், ஆடு, மாடுகளுக்கு இரண்டு வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்."முஸின்னா"வைத் தவிர வேறு எதனையும் அறுக்காதீர்கள். அது கிடைக்க வில்லையானால் ஆறுமாதக் குட்டியைக் கொடுங்கள்!என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

الثّني من الإبل: هو ما أكمل خمس سنوات، ودخل في السّادسة.

والثّني من البقر والمعز: هو ما أكمل سنتين ودخل في الثّالثة.

أمّا الضّـأن [الكبش والنّعجة] فيجزئ فيها الجَذَع: وهو ما استكمل سنةً على الصّحيح

இந்த ஹதீஸில் கூறப்பட்ட முஸின்னா என்ற வார்த்தை ஆடு, மாடு ஆகியவற்றில் இரண்டு வயதை பூர்த்தியடைந்து மூன்றாவது வயதில் நுழைந்த வைகளுக்கு பயன்படுத்தப் படுகின்றது.

ஒட்டகம் ஐந்து வயது முடிந்தவுடனும், ஆடு, மாடு இரண்டு வயது முடிந்தவுடனும் இரண்டு பற்கள் வருவதால், ஒட்டகம் ஐந்து வயது, ஆடு, மாடு இரண்டு வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டுமெனக் கூறப்படுகின்றது.

முஸின்னா கிடைக்காவிட்டால் ஆறுமாதக் குட்டியாட்டை அறுப்பது இந்த ஹதீஸில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் இன்னொரு ஹதீஸின் மூலம் அது ஒரு நபித்தோழருக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சலுகை என்பதைப் தெரிந்து கொள்ள முடிகின்றது.

حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ قَالَ حَدَّثَنَا مَنْصُورُ بْنُ الْمُعْتَمِرِ عَنِ الشَّعْبِىِّ عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يَوْمَ النَّحْرِ بَعْدَ الصَّلاَةِ فَقَالَ « مَنْ صَلَّى صَلاَتَنَا وَنَسَكَ نُسْكَنَا فَقَدْ أَصَابَ النُّسُكَ ، وَمَنْ نَسَكَ قَبْلَ الصَّلاَةِ فَتِلْكَ شَاةُ لَحْمٍ » . فَقَامَ أَبُو بُرْدَةَ بْنُ نِيَارٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ لَقَدْ نَسَكْتُ قَبْلَ أَنْ أَخْرُجَ إِلَى الصَّلاَةِ ، وَعَرَفْتُ أَنَّ الْيَوْمَ يَوْمُ أَكْلٍ وَشُرْبٍ فَتَعَجَّلْتُ وَأَكَلْتُ وَأَطْعَمْتُ أَهْلِى وَجِيرَانِى . فَقَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - « تِلْكَ شَاةُ لَحْمٍ » . قَالَ فَإِنَّ عِنْدِى عَنَاقَ جَذَعَةٍ ، هِىَ خَيْرٌ مِنْ شَاتَىْ لَحْمٍ ، فَهَلْ تَجْزِى عَنِّى قَالَ « نَعَمْ ، وَلَنْ تَجْزِىَ عَنْ أَحَدٍ بَعْدَكَ » .

பர்ரா இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச்சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்துகொள்வாரோ அவர் நமது வழியில் நடந்துகொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்தினருக்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபுர்தா இப்னு நியார் (ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்துவிட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடம்) என்னிடத்தில் முஸின்னாவை விட சிறந்த ஆறுமாதக் குட்டியுள்ளது (அதைக் குர்பானி கொடுக்கலாமா) என்றார். முன் அறுத்ததிற்கு இதைப் பகரமாக்குவீராக (அறுப்பீராக). எனினும், உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இதை (குர்பானிகொடுக்க) செய்ய அனுமதியில்லை" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )

கூட்டு குர்பானி.....

உள்ஹிய்யாவுக்காக அறுத்துப் பலியிடப்படும் பிராணி ஒட்டகம் அல்லது மாடாக இருப்பின் ஏழு நபர்கள் கூட்டாகச் சேர்ந்து கொடுக்க முடியும். என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.

رواه مسلم عن جابر رضي الله عنه قال: ( نَحَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْحُدَيْبِيَةِ الْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ، وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ ).

                               

ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: "ஹுதைபியா என்ற இடத்தில் நபி(ஸல்) அவர்களுடன் ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும் நாங்கள் அறுத்துப் பலியிட்டோம்" ( நூல்: முஸ்லிம் )

எது சிறந்தது?

தற்போது மேற்குவங்கத்தில் நிலவுகிற அரசியல் குழப்பங்கள், புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள பாஜக அரசின் மாடு அறுக்க விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும் நிபந்தனைகள் ஊடாக அங்குள்ள இமாம் ஒருவர் "மாடு குர்பானி" கொடுக்க வேண்டாம் என்று விடுத்துள்ள வேண்டுகோளை சுட்டிக் காட்டி நாமும் இது போன்று நம் பகுதியிலும் இதை நடைமுறைப்படுத்தலாமே என்று சிலர் கேட்கின்றனர்.

ஒட்டுமொத்த இந்தியாவிலும் இது போன்ற தடைகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்படுமானால் நாம் மாற்று கருத்து குறித்து யோசிக்கலாம். 

அப்போதும் கூட இந்த உம்மத்தின் உலமாக்கள் ஒன்று கூடி நமக்கான சட்ட வழிகாட்டலை வழங்குவார்கள் அப்போது அதன் படி செயல்படுவதே சாலச் சிறந்ததாகும்.

எனவே, நமது தமிழ்நாட்டில் அத்தகைய சூழல் நிலவாத போது நாம் இது போன்ற நிலைப்பாடு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

குர்பானிப் பிராணியை அறுப்பதில் எந்த பிராணியை அறுப்பது சிறந்தது? ஒட்டகமா? மாடா? ஆடா? என்பது குறித்து இமாம்கள் விளக்கும் போது சிறந்த விளக்கத்தை நமக்கு வழங்கியுள்ளனர்.

أفضل الأضاحي : البدنة (البعير) , ثم البقرة , ثم الشاة , ثم شِرْكٌ (اشتراك) في بقرة . وبهذا قال أبو حنيفة والشافعي واحمد. لقول النبي صلى الله عليه وسلم في الجمعة :عَنْ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ:- مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ ثُمَّ رَاحَ فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الْخَامِسَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً، فَإِذَا خَرَجَ الإِمَامُ حَضَرَتِ الْمَلاَئِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ رواه البخاري (881) ومسلم (850) .

ஒருவர் ஜும்ஆ நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்கு வந்து விட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கின்றார்கள்என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலி, ( நூல்: புகாரி, முஸ்லிம் )

மேற்கூறிய இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு இமாம் அபூ ஹனீஃபா ரஹ் இமாம் ஷாஃபிஈ ரஹ் ஆகியோர் முதலில் ஒட்டகம், இரண்டாவது மாடு, மூன்றாவது ஆடு என்று வரிசைப்படுத்துகின்றனர்.

ووجه الدلالة من ذلك : وجود المفاضلة في التقرب إلى الله بين الإبل والبقر والغنم ، ولا شك أن الأضحية من أعظم القرب إلى الله تعالى ، ولأن البدنة أكثر ثمناً ولحماً ونفعاً ، وبهذا قال الأئمة الثلاثة أبو حنيفة ، والشافعي ، وأحمد . وقال مالك : الأفضل الجذع من الضأن ، ثم البقرة ، ثم البدنة ؛ لأن النبي صلى الله عليه وسلم ضحى بكبشين ، وهو صلى الله عليه وسلم لا يفعل إلا الأفضل

மேலும், விலை மற்றும் அதிக இறைச்சி, அதிக பயன்பாடு ஆகியவற்றை கவனித்து பார்க்கும் போது இந்த வரிசை முறை உகந்ததாக உள்ளதால் மூன்று இமாம்களும் இந்த கருத்தை கூறியுள்ளார்கள்.

ஆனால், நபி அவர்கள் சிறந்த காரியங்களையே தேர்ந்தெடுத்து செய்வார்கள். ஆகவே, ஆடு கொடுப்பதே சிறந்தது என்று இமாம் மாலிக் ரஹ் அவர்கள் கூறுகின்றார்கள்.

والشاة أفضل من شِرْكٌ (أي : الاشتراك) في بدنة ; لأن إراقة الدم مقصودة في الأضحية , والمنفرد يتقرب بإراقته كله . والكبش أفضل الغنم ; لأنه أضحية النبي صلى الله عليه وسلم وهو أطيب لحما " انتهى من "المغني" باختصار (13/366) .

மற்ற இமாம்கள் ஆடு உள்ஹிய்யா கொடுப்பதில் எந்த ஆட்டை உள்ஹிய்யா கொடுப்பது சிறந்தது என்று கூறும் போது நபி அவர்கள் கொடுத்த செம்மறி ஆட்டை கொடுப்பது சிறந்தது என்று கூறுகின்றார்கள்.

மாட்டிறைச்சி தடை கடந்து வந்த பாதை...

26 மே 2017 அன்று, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், விலங்குகளுக்கு எதிரான கொடுமையைத் தடுக்கும் சட்டங்களின் கீழ், இந்தியா முழுவதும் உள்ள விலங்கு சந்தைகளில் இறைச்சிக்காக கால்நடைகளை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் தடை விதித்தது , இருப்பினும் இந்திய உச்ச நீதிமன்றம் ஜூலை 2017 இல் கால்நடைகள் விற்பனை மீதான தடையை நிறுத்தி வைத்தது.

அதன் பின்னர் இந்த சட்டத்தை தழுவி பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் மாட்டிறைச்சித் தடைச் சட்டத்தை நிறைவேற்றுவதிலும் தண்டனையைக் கடுமையாக்குவதிலும் பா.ஜ.க. மாநில அரசுகள் ஒன்றோடொன்று போட்டி போடுகின்றன. பாஜக ஆளும் பல மாநிலங்களில் மாட்டிறைச்சித் தடைச் சட்டம் அமலில் உள்ளது.

அந்த வரிசையில் தற்போது மேற்குவங்க பாஜக அரசும் இணைந்துள்ளது.

எந்தவொரு விலங்கும் முறையான ஆவணம் இல்லாமல் இறைச்சிக்காக வெட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் 

ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது மேற்குவங்க பாஜக அரசு.

மாட்டை வெட்டினால் மகாராஷ்டிரத்தில் 5 ஆண்டு சிறை, மத்திய பிரதேசத்தில் 7 ஆண்டுகள், அரியானாவில் 10 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை. மாட்டை விற்கும் விவசாயி தொடங்கி, வாங்குபவர், லாரி டிரைவர், வெட்டுபவர், சமைப்பவர், சாப்பிடுபவர் உள்ளிட்ட அனைவரும் இச்சட்டங்களின்படி தண்டனைக்குரிய குற்றவாளிகள். மாட்டுக்கறி வைத்திருப்பதாகவோ, சாப்பிடுவதாகவோ சந்தேகப்பட்டால் ஒரு போலீசு ஏட்டுகூட வீடு புகுந்து சோதனை செய்யலாம்.

கால்நடைச் செல்வத்தைப் பாதுகாப்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு அவசியம் என்று (மதச்சார்பற்ற மொழியில் தந்திரமாகப் பேசுகின்ற,) அரசியல் சட்டத்தின் வழிகாட்டும் கோட்பாடு பிரிவு 48-ன் கீழ்தான் இச்சட்டம் பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் மாட்டிறைச்சித் தடைச் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.

மிருகவதை தடை சட்டத்தின் 28-ம் பிரிவு மத சடங்குகளுக்காக விலங்குகளை பலியிடுவதை அனுமதிக்கிறது. ஆனால் 2017 ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் விதித்துள்ள விதிமுறைகள் பலியிடுவதை தடை செய்கிறது. இதனால் மிருகவதை தடுப்பு தொடர்பான மூல சட்டத்துக்கு எதிராக இந்த விதிமுறை அமைந்துள்ளது. என்பது கவனிக்கத்தக்கது.

இந்த அடிப்படையில் மேற்குவங்கத்தில் மாடு வாங்கி குர்பானி கொடுப்பதை தவிர்க்கும் முகமாக மாட்டை குர்பானி கொடுக்க வேண்டாம் என்று அந்த இமாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனடிப்படையில் அங்குள்ள இஸ்லாமியர்கள் மாடு வாங்குவதை தவிர்த்து வருவதால் சந்தையில் மாடுகள் விலை போகாமல் தேங்கி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், பசு பாதுகாப்பு குண்டர்களால் மாட்டிறைச்சிக்காக முஸ்லிம்கள் கொல்லப்படுவதையும் தடுக்க முடியும் என்ற வாதமும் முன் வைக்கப்படுகிறது.

பாஜக மத்தியிலும், பல மாநிலங்களிலும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பின்னர் மாட்டிறைச்சி யின் பெயரால் கும்பலாக சேர்ந்து சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் தலித்களை படுகொலை செய்வது கடந்த பதினோரு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.

வீதிகளில் மாட்டிறைச்சிக்காக மனிதர்களைக் கொல்ல அனுமதிக்கும் அதே வேளையில், உலக சந்தையில் இறைச்சியை விற்று டாலர்களை ஈட்டுவதில் இந்த பாஜக அரசு தீவிரமாக உள்ளது.

நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி ஜான் பிரிட்டாஸ் இந்தியாவில் இறைச்சி ஏற்றுமதி குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த வர்த்தக இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா, மாநிலங்கள் வாரியாக புள்ளி விவரங்கள் இல்லை எனவும், மொத்த இறைச்சி ஏற்றுமதி குறித்த பதிவுகளை மட்டுமே அரசாங்கம் பராமரிப்பதாகவும்கூறினார்.

குறிப்பிட்ட விவரங்களின் அடிப்படையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020-21 ~ 2024-25) இந்தியாவின் இறைச்சி ஏற்றுமதி 3.22 பில்லியன் டாலரிலிருந்து 4.16 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என விவரங்களை வழங்கியது. இது இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 26,726 கோடியிலிருந்து 34,528 கோடி வரை அதிகரித்துள்ளது. ( நன்றி: மக்கள் அதிகாரம், 28/03/2026 )

மாட்டிறைச்சியைப் பிரச்சனையாக்கிக் கலவரத்தைத் தூண்டுவதென்பது இது முதன்முறையல்ல.  

1870 இல் சிக் குகா எனும் நம்தாரி இனத்தவர் பசுவைக் காத்தல் எனும் பெயரால் கலவரத்தில் இறங்கினர். 1882 இல் தயானந்த சரஸ்வதி என்பவர் கோரக்‌ஷினி சபா என்ற ஒன்றை ஏற்படுத்தி மாட்டிறைச்சி சாப்பிடுவோருக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்.  1880-90 களில் இந்தியாவில் பல இனக்கலவரங்கள் நடந்துள்ளன. ஆஸம்கார் (1893), அயோத்யா (1912), ஷஹாபாத் (1917) முதலிய இடங்களில் பெரும் கலவரங்கள் நடந்திருக்கின்றன. 

ஆகவே மாட்டிறைச்சி பிரச்சனை இந்தியச் சுதந்திரத்திற்கு முன்பே இந்துத்துவத் தீவிரவாதிகளால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சுதந்திரத்திற்குப் பின்னரும் அவ்வப்போது இப்பிரச்சனை தலைதூக்க முயன்றுள்ளது. ஆனால் இப்போதோ எப்போதுமில்லாத அளவிற்குத் தலை விரித்தாடுகிறது.

எனவே, இஸ்லாமிய மார்க்க வழிகாட்டுதல் படி அவ்லவிய்யத் எதை முதன்மைப்படுத்துவது? என்ற முறைமையின் கீழ் மனித உயிர் பாதுகாக்கப்படுவது மிகவும் முக்கியம் ஆகும்.

மனித உயிருக்கு இடையூறு ஏற்படும் எனும் போது அந்த இடங்களில் மாடு குர்பானி கொடுப்பதை தவிர்த்து விட்டு ஆட்டை குர்பானி கொடுப்பதே சிறந்ததாகும்.

மனித உயிரின் மாண்பு...

خَطَبَنا النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم يَومَ النَّحرِ، قال: أتَدرونَ أيُّ يَومٍ هذا؟ قُلنا: اللهُ ورَسولُه أعلَمُ، فسَكَتَ حتَّى ظَنَنَّا أنَّه سَيُسَمِّيه بغيرِ اسمِه، قال: أليسَ يَومَ النَّحرِ؟ قُلنا: بَلى، قال: أيُّ شَهرٍ هذا؟ قُلنا: اللهُ ورَسولُه أعلَمُ، فسَكَتَ حتَّى ظَنَنَّا أنَّه سَيُسَمِّيه بغيرِ اسمِه، فقال: أليسَ ذو الحَجَّةِ؟ قُلنا: بَلى، قال: أيُّ بَلَدٍ هذا؟ قُلنا: اللهُ ورَسولُه أعلَمُ، فسَكَتَ حتَّى ظَنَنَّا أنَّه سَيُسَمِّيه بغيرِ اسمِه، قال: أليسَت بالبَلدةِ الحَرامِ؟ قُلنا: بَلى، قال: فإنَّ دِماءَكُم وأموالَكُم علَيكُم حَرامٌ كَحُرمةِ يَومِكُم هذا، في شَهرِكُم هذا، في بَلَدِكُم هذا، إلى يَومِ تَلقَونَ رَبَّكُم،

நபி அவர்கள் மினாவில் இருந்தபோது, “இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?’’ எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!’’ என்றனர். உடனே அவர்கள் இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?’’ என்று கேட்க மக்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!’’ என்றனர்.

உடனே அவர்கள் “(இது) புனிதமிக்க நகரமாகும்! இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?’’ என்றதும் மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!’’ என்றனர். பிறகு நபி அவர்கள் “(இது) புனிதமிக்க மாதமாகும்!’’ எனக் கூறிவிட்டு, “உங்களுடைய இந்த (புனித) மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போன்றே, அல்லாஹ் உங்கள் உயிர்களையும், உடைமைகளையும், உங்கள் மானம், மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!’’ எனக் கூறினார்கள். ( நூல்: புகாரி )

குர்பானி கொடுப்பதற்குப் பதிலாக அதன் பணத்தை ஏழைகளுக்கு ஸதகாவாக கொடுக்கலாமா?

இன்று நம்மில் சிலர் குர்பானி கொடுக்க செய்யும் செலவுகளை நம்மில் கஷ்டப்படும் ஏழைகளுக்கு கொடுக்கலாமே என்று கூறுகின்றார்கள்.

குர்பானி கொடுப்பதற்குப் பதிலாக அதன் விலையை (பணத்தை) ஏழைகளுக்கு ஸதகாவாக (தர்மமாக)க் கொடுப்பது கூடாது என்பதே ஷரீஆவின் நிலைப்பாடாகும்.

شرع الله الأضحية شعيرةً تُراق فيها الدماء تقرّبًا إليه، إحياءً لسنّة الخليلين إبراهيم ومحمد عليهما الصلاة والسلام. قال تعالى: « فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ »

ஏனெனில், குர்பானி என்பது இஸ்லாத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் கால்நடைகளில் (ஆடு மாடு ஒட்டகம்) ஏதேனும் ஒன்றை அறுத்து (பலி கொடுத்து) இறைவனின் நெருக்கத்தை பெறுவதற்காகவும், தன்னுடைய இரண்டு நேசர்களான நபி இப்ராஹீம் அலை மற்றும் நபி அவர்களின் சுன்னத்தை நிறைவேற்றுவதற்காகவும் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள தனிச்சிறப்பு வாய்ந்த வணக்கமாகும்.

மேலும், நபி அவர்களும் நபித்தோழர்களும் அவர்கள் எதிர் கொண்ட எல்லா கால சூழ்நிலைகளிலும் உள்ஹிய்யா கொடுத்தே வந்துள்ளார்கள் என்று வரலாறு கூறுகிறது.

ولذلك ذهب جمهور العلماء إلى أنّ الأضحية عبادةٌ مقصودةٌ بذاتها لا يقوم مقامها الدفعُ النقدي؛ فالذبح وإطعام اللحم جزءان من العبادة، بينما النقود صدقة لا تُحقّق المقصود الأصلي. ومع هذا تبقى الصدقة النقدية عملًا عظيمًا، لكنها لا تُجزئ عن الأضحية بنية السنة المؤكَّدة.

ஆதலால் தான் பெரும்பாலான மார்க்க சட்ட அறிஞர்கள் உள்ஹிய்யா என்பது குறிப்பிட்ட ஒரு வணக்கமாகும். அதற்கு பகரமாக பணத்தை ஸதகா செய்வதன் மூலம் அந்த வணக்கத்தை ஈடு செய்ய இயலாது என்றும், மேலும், உள்ஹிய்யாவில் பலிப்பிராணியை அறுப்பது அதை பிறருக் உண்ணக் கொடுப்பது என்ற இரண்டு இபாதத்கள் இருக்கிறது என்றும், எனவே, பணத்தை ஸதகா செய்வதன் மூலமாக உள்ஹிய்யா எனும் அடிப்படை வணக்கத்தை நிறைவேற்றியவராக ஆக முடியாது என்றும் கூறுகின்றனர்.

மேலும், ஸதகா என்பது பொருளாதாரத்தை செலவிடுவதன் மூலம் மகத்தான நன்மைகளை பெறக் கூடிய அமலாக இருந்தாலும் வலியுறுத்தப்பட்ட சுன்னாவான உள்ஹிய்யாவின் நிய்யத்தில் ஸதகா செய்வது உள்ஹிய்யாவின் நன்மையை பெற்றுத் தராது என்று கூறுகின்றனர்.

فالجمهور (الحنفية، المالكية، الشافعية، الحنابلة) يرى أنّ ذلك لا يجزئ؛ لأنه عدَلَ عن السنّة بغير عذرٍ شرعي. لكن لا يُحرم فاعلها الثواب؛ إذ يُكتَب له أجر صدقة، لا أجر أضحية.

الحنفية: لا تُجزئ القيمة عن الذبح لأن الذبح قربة مقصودة بذاتها

المالكية: لا تُجزئ ولو أنفع للفقراء اتباعًا لعمل السلف

الشافعية: لا يُكتفى بالقيمة مع القدرة لزوال المقصود من النسك

الحنابلة: لا تُجزئ إلا لعاجزٍ عن الذبح لمراعاة العجز والضرورة

நான்கு மத்ஹபுகளின் இமாம்களும் ஒருமித்த கருத்தாக "ஒருவர் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரணங்கள் ஏதும் இல்லாமல் உள்ஹிய்யா கொடுக்காமல் அதன் பணத்தை ஸதகா செய்வாரானால் அதற்கு ஸதகாவின் நன்மை மட்டுமே கிடைக்கும். உள்ஹிய்யா கொடுத்த நன்மை கிடைக்காது. மேலும், உள்ஹிய்யாவுக்கு ஈடாகவும் அது ஆகாது. என்று கூறுகின்றார்கள்.

وقال ابن حبيب رحمه الله: “وهي أفضل من العتق ومن عظيم الصدقة؛ لأن إحياء السنة أفضل من التطوع”.

இப்னு ஹபீப் ரஹ் அவர்கள் கூறினார்கள்: உள்ஹிய்யா கொடுப்பது அடிமையை உரிமை விடுவதை விடவும், மகத்தான ஸதகா வழங்குவதை விடவும் சிறந்ததாகும். ஏனெனில், உள்ஹிய்யா என்பது நபி அவர்களின் சுன்னாவாகும். ஸதகாவும் அடிமையை உரிமை விடுதலும் உபரியான நன்மை தரும் அமலாகும்".