திருமணம்... வேண்டும் எச்சரிக்கை!
திருமணத்தின்
மூலம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் உறவு குறித்து அல்குர்ஆனில்
அல்லாஹ் பயன் படுத்தும் வார்த்தைகளில் ஆறு வார்த்தைகள் மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்தது.
1) ஒரு ஆணுக்கான துணை என்பது அவனிடத்தில்
இருந்தே படைக்கப்பட்டுள்ளது.
یٰۤاَیُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِیْ خَلَقَكُمْ
مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا
மனிதர்களே!
உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள்
யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே
அவர் மனைவியையும் படைத்தான். ( அல்குர்ஆன்: 04: 01 )
2) ஒருவர் மற்றவரின் பாதுகாப்பு கவசம்.
هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَاَنْتُمْ لِبَاسٌ لَّهُنَّ
அவர்கள்
உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும்
இருக்கின்றீர்கள். ( அல்குர்ஆன்: 2: 187 )
3) ஒருவர் மற்றவரின் கண்குளிர்ச்சி.
وَالَّذِیْنَ یَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا
وَذُرِّیّٰتِنَا قُرَّةَ اَعْیُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِیْنَ اِمَامًا
மேலும் அவர்கள்:
“எங்கள் இறைவா! எங்கள் துணைகளிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை
அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக)
ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள். ( அல்குர்ஆன்: 25: 74 )
4, 5, 6) ஒருவர் மற்றவரின் மன அமைதியும், அன்புக்கு உரித்தானவரும்,
கருணைகாட்டுபவரும்
ஆவார்.
وَمِنْ اٰیٰتِهٖۤ اَنْ خَلَقَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ
اَزْوَاجًا لِّتَسْكُنُوْۤا اِلَیْهَا وَجَعَلَ بَیْنَكُمْ مَّوَدَّةً وَّرَحْمَةً
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ
இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே
உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே
உவப்பையும், கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய
அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
( அல்குர்ஆன்: 30: 21 )
இத்தகைய
மாண்புயர் தம்பதியர்கள் வசிக்கும் இல்லமே மன அமைதி தவழும் இல்லம் என்று அல்லாஹ்
வர்ணித்து கூறும் இறைவசனமும் நாம் நமது சிந்தனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய
ஒன்றாகும்.
وَاللّٰهُ جَعَلَ لَكُمْ مِّنْ بُیُوْتِكُمْ سَكَنًا
அல்லாஹ்
உங்களுக்கு உங்கள் இல்லங்களை அமைதித்தளமாக ஏற்படுத்தியுள்ளான். ( அல்குர்ஆன்: 16: 80 )
ஆனால், இத்துனை மகத்துவமும் மகிமையும் வாய்ந்த இந்த பந்தம் இந்த உறவு நாம் வாழும்
இன்றைய நவீன உலகில் எப்படி இருக்கிறது? இனி வரும்
காலங்களில் இந்த உறவின் நிலை என்ன? எவ்வாறு
இருக்கப் போகிறது? என்ற அச்சம் சமீப காலமாக சமூகத்தில் நிலவும்
சில பிரச்சினைகளால் எழுவதை தவிர்க்கவோ, தடுக்கவோ
இயலவில்லை.
சமீப காலமாக
முஸ்லிம் சமூகம் உட்பட இந்தியாவின் அனைத்து சமூக மக்களும் எதிர் கொள்கிற இரண்டு
பிரச்சினைகள் ஒன்று திருமண வயதைத் தாண்டியும் திருமணம் செய்ய மறுக்கும் அல்லது
தள்ளிப்போடும் இளம் பெண்கள் எண்ணிக்கை பெருகி வருகிறது என்கிறது புள்ளி விவரங்கள்.
இன்னொன்று
தன்பாலின ஈர்ப்பால் கவரப்பட்டு அதில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்று தெரிந்தும்
தன் மகனுக்கு அல்லது தன் சகோதரனுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்து
பின்னர் விவாகரத்து வரை கொண்டு வந்து நிறுத்தி ஏதும் அறியா பெண்களின் வாழ்க்கையை
நாசப்படுத்தும் அவலங்கள் அதிகரித்து வருகிறது என்கிறது பல மஹல்லா ஜமாஅத் துகளின்
தலாக் பஞ்சாயத்து விவகாரங்கள் தரும் புள்ளிவிவரங்கள் ஆகும்.
இந்த இரண்டு
பிரச்சினைகளின் தீமைகளில் இருந்தும் நமது சமூகத்தை காப்பாற்ற வேண்டிய கடமையும்
பொறுப்பும் நமக்கு இருக்கின்றது.
மார்கன் ஸ்டேன்லி (Morgan
Stanley) என்ற நிறுவனத்தால் மிக விரிவாகச் செய்யப்பட்ட ஆய்வின் அடிப்படையில் மராட்டிய
செய்தித்தாளான லோக்மத் (Lokmat)
தனது 01-05-2026 பதிப்பில் அடுத்த ஆறு ஆண்டுகளில், 2030 - ல் இப்புவியில் சுமார் 45
விழுக்காட்டுப்
பெண்கள் கல்யாணம் செய்து கொள்ளாமலே வாழ்வார்கள் என்ற கவலையான செய்தியை அது
பதிவிட்டுள்ளது.
ஆய்வின்
கண்டறிதல்களாக கீழ்க்கண்டவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளது.
1. தற்காலப் பெண்கள் அதிகம் படித்தவர்களாகவும், பணியாற்றுவதற்கே முன்னுரிமை அளிப்பவர்களாகவும் உள்ளனர்.
2. பொருளாதாரத் தன்னிறைவெய்தி, நிதித் தேவைகளை அவர்களாகவே பூர்த்தி செய்து கொள்வதையும், அடுத்தவரை எதற்கும் அண்டி வாழாத நிலையையுமே அவர்கள் பெரிதும்
விரும்புகின்றனர்.
3. சுதந்திர வாழ்வை நேசிக்கும் அவர்கள், வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை அவர்களாகவே எடுப்பதையே விரும்புகிறார்கள்.
அவர்கள் வாழ்வை அடுத்தவர்கள் நிர்ணயிப்பதை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை.
4. திருமணம், மகப்பேறு, குடும்பப் பொறுப்புகள் ஆகிய அனைத்துமே, அவர்களின்
வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்பதாகவே உணர்கிறார்கள்.
5. இதே நிலை நீடிக்குமாயின், பாரம்பரிய குடும்ப அமைப்புகளும், சமூகக்
கட்டமைப்புகளும் நிலைகுலைந்து போகும்.
6. மக்கள் தொகை குறையும்; திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை கூடும்; வயதான காலத்தில்
தனிமையில் உழலும் சங்கடங்கள் அதிகரிக்கும்.
இதில் ஒரு
மனவியல் கூரும் அடக்கம். யாருமே இல்லாத போது, அதிக காலம் ஏன்
வாழ வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கி,
வாழ வேண்டுமென்ற
விருப்பமே மழுங்கிவிடும். பணம்,
பொருள் சேர்த்து
என்ன செய்யப் போகிறோம் என்ற ஏக்கம் மனதை வாட்டும்.
8. பெண்களின் பெற்றோர் மணமகன் பார்ப்பதில்
சுறுசுறுப்பு காட்டினாலும், மணம் செய்து கொள்ள வேண்டிய பெண்கள் அதில்
அதிக ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள்.
9. எப்படி மாப்பிள்ளை பார்த்தாலும், ஏதாவது குறை கண்டு தட்டிக் கழிப்பதிலேயே குறியாக பெண்கள் இருப்பதால்
ப்ரொபோசல்கள் தோல்வியடைகின்றன.( நன்றி: கல்கி, 09/07/2026 )
பொதுவாக பெண்கள்
20 வயதில் கல்யாணம் செய்து கொண்டால், ஒரு நூற்றாண்டில் 5 தலைமுறைகள் உருவாகும்.
அதே 25 ல் திருமணம் செய்து கொண்டால்,
அது நான்காகக்
குறையும்.
அதுவே 30 ல் திருமணம் என்றால் 3 தலைமுறைதான்!
அடுத்த
நூற்றாண்டில் நமது மனித சமுதாயம் இன்றைக்கு இருப்பது போல் குதூகலமாக இருக்குமா? என்பது மில்லியன் டாலர் பெருங் கேள்வியாகும்.
தள்ளிப்போடும்
கலாச்சாரம் ஆபத்தானது....
قال الإمام أحمد: "من دعاك إلى
غير التزويج فقد دعاك إلى غير الإسلام"
திருமணம் வேண்டாம்
என்றும், திருமணம் செய்ய வேண்டாம் என்றும் குடும்ப
உறவை விட்டும் உன்னை தூரமாக்கி தனிமனித வாழ்வின் பக்கம் உன்னை ஒருவன் அழைக்கிறான்
என்றால் உன்னை இஸ்லாத்தை விட்டே தூரமாக்க நினைக்கிறான் என்று நீ அறிந்து கொள் என
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: அல் முغக்னீ )
இஸ்லாமிய மார்க்க
வழிகாட்டுதல் அடிப்படையில் கால தாமதமின்றி மிகவும் விரைவாக செய்ய வேண்டிய
காரியங்களில் திருமண வயதை அடைந்த உடன் திருமணம் செய்து வைப்பதாகும்.
ஒருவரை திருமணம்
செய்து கொள்ள இஸ்லாம் எப்படி வலியுறுத்துகிறதோ அதே போன்று திருமணம் செய்து
வைப்பதையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
وَاَنْكِحُوا الْاَیَامٰی مِنْكُمْ
وَالصّٰلِحِیْنَ مِنْ عِبَادِكُمْ وَاِمَآىِٕكُمْ اِنْ یَّكُوْنُوْا فُقَرَآءَ
یُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟
இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவரு (ஆண்,
பெண்)க்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்;
அவர்கள் ஏழைகளாக
இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச்
சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன்.
(யாவற்றையும்) நன்கறிந்தவன்.
( அல்குர்ஆன்: 24: 32 )
رواه الترمذي (1085)، وأبو داود في
"المراسيل" (224)، وغيرهما: عن حَاتِم بْن إِسْمَاعِيلَ، عَنْ عَبْدِ
اللهِ بْنِ هُرْمُزَ، عَنْ مُحَمَّدٍ وَسَعِيدٍ ابْنَيْ عُبَيْدٍ، عَنْ أَبِي
حَاتِمٍ الْمُزَنِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: إِذَا
جَاءَكُمْ مَنْ تَرْضَوْنَ دِينَهُ وَخُلُقَهُ فَأَنْكِحُوهُ، إِلَّا تَفْعَلُوا
تَكُنْ فِتْنَةٌ فِي الْأَرْضِ وَفَسَادٌ، قَالُوا: يَا رَسُولَ اللهِ، وَإِنْ
كَانَ فِيهِ؟ قَالَ: إِذَا جَاءَكُمْ مَنْ تَرْضَوْنَ دِينَهُ وَخُلُقَهُ
فَأَنْكِحُوهُ - ثَلَاثَ مَرَّاتٍ.
எவருடைய
மார்க்கத்தையும் குணத்தையும் நீங்கள் பொருந்திக் கொள்வீர்களோ, அத்தகைய நபர் உங்களிடம் (பெண் கேட்டு) வந்தால் அவருக்கு (உங்கள் பெண்ணை)
மணமுடித்துவையுங்கள்! அவ்வாறு செய்ய வில்லையெனில் பூமியில் சோதனையும், குழப்பமும் நிகழும்" என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். ( நூல்:
திர்மிதி )
حدثنا قتيبة، قال: حدثنا عبد الله بن
وهب، عن سعيد بن عبد الله الجهني، عن محمد بن عمر بن علي بن أبي طالب، عن أبيه، عن
علي بن أبي طالب، أن النبي صلى الله عليه وسلم قال له: «يا علي، ثلاث لا تؤخرها:
الصلاة إذا آنت، والجنازة إذا حضرت، والأيم إذا وجدت لها كفئا».سنن الترمذي.
நபி ﷺ அவர்கள் அலி (ரலி)
அவர்களை அழைத்துக் கூறினார்கள்:- "அலீயே! மூன்று விஷயங்களை நீர் அதற்கான
நேரம் வந்து விடுமேயானால் பிற்படுத்த வேண்டாம்! 1,
நேரம் வந்து
விட்டால் தொழுகையை பிற்படுத்த வேண்டாம். 2,
ஒருவர் மரணித்து
விட்டால் அடக்கம் செய்வதை பிற்படுத்த வேண்டாம். 3,
ஒரு பெண்ணிற்கு
பொருத்தமான ஜோடி அமைந்து விட்டால் மணமுடிப்பதை பிற்படுத்த வேண்டாம்!". (
நூல்: திர்மிதி )
திருமணம் செய்யும்
வயது வந்தும் திருமணம் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்களை குடும்ப உறவுகளும், சமூகமும் இணைந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது கடமையாகும்.
وسلَخوا وطبخُوا
ஒரு நாள் நபி ﷺ அவர்கள் தமது
பணியாளர்களில் ஒருவரான ரபீஆ (ரலி) அவர்களிடம் "உமக்குத் திருமணம் புரிந்து
கொள்ள ஆசை இல்லையா?" என்று கேட்டார்கள். அதற்கவர்
"தங்களுக்கு சேவை செய்வதிலிருந்து எனது கவனத்தைத் திருப்பும் எதையும் நான்
விரும்பவில்லை அல்லாஹ்வின் தூதரே! என்று கூறிவிட்டு,
தவிர ஒரு
மணப்பெண்ணுக்கு மணக்கொடை அளிக்க, அவளை வாழவைக்க என்று என்னிடம்
எந்தப்பணமும் இல்லை" என்று பதிலளித்தார் ரபீஆ.
நபி ﷺ அவர்கள் அமைதியாக
இருந்து விட்டார்கள்.சில நாட்கள் கழிந்தன. மீண்டும் நபி ﷺ அவர்கள் அவரிடம்
கேட்டார்கள். "உனக்குத் திருமணம் புரிந்து கொள்ளும் ஆசை இல்லையா, ரபீஆவே?"
ரபீஆவும் அதே
பதிலை மீண்டும் கூறிவிட்டார். ஆனால் பின்னர் தனிமையில் இருக்கும் போதுதான்
இவ்விதம் நபி ﷺ
அவர்களிடம் மறுதலித்துப் பேசியிருக்கக் கூடாதோ என்று ரபீஆவிற்கு மன உளைச்சல்
ஏற்பட்டது. அது அவருக்கு மிகுந்த வெட்கத்தையும் அளித்தது. மனதுடன் அவருக்கு
வாக்குவாதம் ஏற்பட்டது.
"ரபீஆவே! உமது ஆன்மீகத்திற்கும்
இவ்வுலகிற்கும் மறுமைக்கும் எது சிறந்தது என்று நபியவர்கள் உன்னைவிடச் சிறப்பாய்
அறிய மாட்டார்களா? உன்னுடைய ஏழ்மையும் பொருளாதார
நிலைமையும்கூட அவர்கள் அறிந்ததுதானே. ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! மீண்டும்
ஒருமுறை நபியவர்கள் என்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி பரிந்துரைத்தால் நிச்சயம்
கட்டுப்படுவேன்" என்று இறுதியில் அவரது மனம் சமரச உடன்படிக்கை செய்து கொண்டது.
மீண்டும் சில
நாட்கள் கழிந்தன. மீண்டும் நபி ﷺ அவர்கள் ரபீஆவிடம் கேட்டார்கள்:
"உமக்குத் திருமணம் புரிந்து கொள்ள ஆசை இல்லையா, ரபீஆவே?" என. "நிச்சயமாய் திருமணம் செய்து
கொள்கிறேன் அல்லாஹ்வின் தூதரே! ஆனால்,
நான் இன்று
இருக்கும் நிலையில் யார் எனக்குப் பெண் தருவார்கள்?"
என்று கவலை
தெரிவித்தார் ரபீஆ.
மதீனாவில்
வசிக்கும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சொல்லி,
அவ்வீட்டிலுள்ள
ஒரு குறிப்பிட்ட பெண்ணைச் சொல்லி, "அவர்கள் வீட்டிற்குப் போ. அல்லாஹ்வின்
தூதர் ﷺ அவர்கள் உங்களின்
இந்தப் பெண்ணை எனக்குத் திருமணம் செய்து தரும்படி கட்டளையிட்டார் என்று கூறு"
என்று தெரிவித்தார்கள் நபி ﷺ அவர்கள்.
மிகவும் கூச்சமாய்
இருந்தது ரபீஆவிற்கு. மெதுவாய் அவர்களின் வீட்டிற்குச் சென்றார். தயக்கமாய்த்
தெரிவித்தார். "அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் என்னை அனுப்பி வைத்தார்கள்.
உங்களின் இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்துத் தருவீர்களாம்" என்று அந்தக்
குறிப்பிட்ட பெண்ணின் பெயரைத் தெரிவித்தார்."அந்தப் பெண்ணையா!?" என்று அவர்கள் ஆச்சரியமாகக் கேட்க, "ஆம்" என்றார் ரபீஆ."அல்லாஹ்வின் தூதர் எங்களது
வீட்டில் சிறப்பு விருந்தினராய் வரவேற்கப்படுபவர். அதேபோல்தான் அல்லாஹ்வின்
தூதரின் தூதரும். அல்லாஹ்வின் மீது ஆணையாக,
இந்தத் தூதர்
ஏமாற்றத்துடன் திருப்பி அனுப்பப்பட மாட்டார்”
என்று
உற்சாகப்பட்ட அந்தக் குடும்பத்தினர் உடனே அந்தக் குறிப்பிட்ட பெண்ணை இவரது
மனைவியாக்கி, திருமண உடன்படிக்கை எழுதிவிட்டனர்.
இருந்தாலும் மனைவியாகி வரும் பெண்ணுக்கு எப்படி உணவளிப்பது என்றுதான்
கவலைப்படுகிறார்.
வேகமாக
நபியவர்களிடம் திரும்பிய ரபீஆ, "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மிகச் சிறந்த
குடும்பத்தைக் கண்டுவிட்டுத் திரும்பி வந்திருக்கிறேன். என்னை நம்பினார்கள், அன்பொழுக வரவேற்றார்கள், அவர்கள் வீட்டுப் பெண்ணை எனக்கு
மணமுடிக்க உடனே திருமண உடன்படிக்கையும் எழுதித் தந்து விட்டார்கள். நான் இப்பொழுது
மணக்கொடை பணத்திற்கு என்ன செய்வேன்?"
என்றார்.
புரைதா இப்னுல்
ஹஸிப் ரலி அவர்கள் ரபீஆவின் பனூ அஸ்லம் எனும் கோத்திரத்தின் தலைவர். அந்த புரைதாவை
வரவழைத்தார்கள் நபி ﷺ
அவர்கள். அவர் வந்து சேர்ந்தார்."புரைதா! ரபீஆவிற்குத் திருமணம் செய்ய
வேண்டும். ஒரு பேரீச்சம்பழ விதை அளவிற்கான தங்கம் ஏற்பாடு செய்து
கொடுப்பீராக!" என்று தெரிவித்தார்கள்.அப்படியே ஆகட்டும்! என்று சொல்லி, அவரும் ஏற்பாடு செய்து கொண்டு வந்து கொடுத்தார்.
நபி ﷺ அவர்கள் அதை
ரபீஆவிடம் கொடுத்து, "இதை அவர்களிடம் எடுத்துச் செல்.
அவர்களின் மகளுக்கு இது நீ தரும் மஹர்-மணக்கொடை என்று ஒப்படை".வாங்கிக்
கொண்டு அவர்களிடம் சென்றார் ரபீஆ.
அந்தப்
பேரீச்சம்பழ விதை அளவிற்கான தங்கத்தைக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட அவர்களோ
அகமகிழ்ந்தார்கள். "இருந்தாலும் ரொம்ப அதிகம் இது. தவிரவும் தரமான
தங்கமாகவும் தோன்றுகிறதே" என்று வியப்புடன் கூறினர்.
நபி ﷺ அவர்களிடம்
திரும்பி வந்த ரபீஆ கூறினார். "இத்தகைய பெருந்தன்மையான குடும்பத்தை நான்
சந்தித்ததே இல்லை. ஏதோ தேற்றி எடுத்துப் போய்க் கொடுத்த அந்த மிகச் சிறிய அளவு
தங்கத்தை அவர்கள் அப்படி சிலாகிக்கிறார்கள். மிகவும் அதிகமான அதிலும் தரமான தங்கம்
என்று சொல்கிறார்கள். எப்படி நான் திருமண விருந்து அளிக்கப் போகிறேன் அல்லாஹ்வின்
தூதரே?" என்று வினவினார் ரபீஆ ரலி அவர்கள்.
மீண்டும்
புரைதாவிடம் பேசினார்கள் நபியவர்கள். பணம் ஏற்பாடு செய்தார் புரைதா. பிறகு அதைக்
கொண்டு ஒரு நல்ல கொழுத்த செம்மறியாடு ஒன்றை வாங்கி வந்தார் ரபீஆ. பிறகு நபி ﷺ அவர்கள் அவரிடம்
கூறினார்கள்: "ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று வீட்டில் எவ்வளவு வாற்கோதுமை
இருக்கிறதோ கேட்டு வாங்கி வாருங்கள் ரபீஆ" என்று அனுப்பினார்கள்.
அதன்படி ரபீஆ ரலி
அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டுக்குச் செல்ல,
அவர்கள், "அந்தக் கூடையில் ஏழு சாஉ(படி) வாற்கோதுமை இருக்கிறது, எடுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக, இதைத் தவிர உமக்கு அளிக்கும் வகையில் வீட்டில் வேறு எதுவும் உணவு இல்லை"
என்றார்கள்.
ரபீஆவும் அவர்
கோத்திரத்தின் உறவினர்கள் சிலரும் சென்று ஆட்டை அறுத்து, இறைச்சி சமைத்து எடுத்துவர, வலீமா விருந்தும் இனிதே நிறைவுற்றது. (
நூல்: முஸ்தத்ரக் ஹாகிம் )
திருமணம் செய்து வைக்காதீர்கள்...
தன்பாலின
ஈர்ப்பால் கவரப்பட்டு அதில் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பவர்களைஅதில் இருந்து
அவர்கள் மீண்டு வராமல் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது அபத்தம் ஆகும்.
மேலும், அவர்கள் செய்வது மானக்கேடான மற்றும் அல்லாஹ்வின் சாபத்தையும் கோபத்தையும்
பெற்றுத் தரும் செயல் என்பதை அவர்களுக்கு வன்மையாக எச்சரிக்கை செய்ய வேண்டும்.
எந்த
விஷயங்களெல்லாம் நம்மை மானக்கேடான வழிகளின் பால் அழைத்துச் செல்லுமோ, இம்மையிலும், மறுமையிலும் நம்மை அழிவில் ஆழ்த்தி விடுமோ
அந்த விஷயங்களில் மிகக் கவனமாக நடந்து கொள்ளுமாறு இஸ்லாம் நம்மை எச்சரிக்கின்றது.
وَذَرُوا ظَاهِرَ الْإِثْمِ وَبَاطِنَهُ إِنَّ الَّذِينَ
يَكْسِبُونَ الْإِثْمَ سَيُجْزَوْنَ بِمَا كَانُوا يَقْتَرِفُونَ
“வெளிப்படையான, மறைவான பாவங்கள்
அனைத்தையும் நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள்! எவர்கள் பாவத்தைச்
சம்பாதிக்கின்றார்களோ அவர்களுக்கு அவர்கள் சம்பாதித்தவற்றின் கூலி அதிவிரைவில்
வழங்கப்படும்”. ( அல்குர்ஆன்: 6: 120 )
قُلْ لَا يَسْتَوِي الْخَبِيثُ وَالطَّيِّبُ وَلَوْ أَعْجَبَكَ
كَثْرَةُ الْخَبِيثِ فَاتَّقُوا اللَّهَ يَاأُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ
تُفْلِحُونَ
“( நபியே! ) நீர் அவர்களிடம் கூறிவிடுவீராக! “தூய்மையானவையும், அருவருப்பானவையும் ஒரு போதும் சமமாக ஆகாது.
அருவருப்பானவை பெருகிக் கிடப்பது உம்மை வியப்பில் ஆழ்த்தினாலும் சரியே! எனவே, அறிவுடைய மக்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதை விட்டு விலகியே
வாழுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்!!”. ( அல்குர்ஆன்: 5: 100 )
عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:- إِنَّ اللَّهَ لا يَمْحُو
السَّيِّئَ بِالسَّيِّئِ وَلَكِنْ يَمْحُو السَّيِّئَ بِالْحَسَنِ ، وَأَنَّ
الْخَبِيثَ لا يَمْحُو الْخَبِيثَ
அப்துல்லாஹ்
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் “திண்ணமாக, அல்லாஹ் தீமையை தீமையைக் கொண்டு அழிப்பதில்லை. எனினும், நல்லவற்றைக் கொண்டே தீமையை அழிக்கின்றான்!” அருவருப்பான
ஒன்று அருவருப்பான இன்னொன்றை அழித்திடாது” என நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.
( நூல்: மிஷ்காத்துல் மஸாபீஹ்,
பாபு கஸ்புல்
ஹலாலி, வ தலபுல் ஹலாலி )
இதையும் மீறி
ஒருவர் தமது குடும்பத்தில் உள்ள ஒருவரின் இது போன்ற அருவெறுப்பான செயல் குறித்து
கண்டும் காணாமல் அல்லது அதை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டு வாழ்வாரேயானால் அவர் தான்
படைப்புகளிலேயே மகா கெட்டவர் ஆவார்.
தன்பாலின
விவகாரம் மாநபி ﷺ அவர்களின் வழிகாட்டலும், மார்க்கச் சட்ட
வல்லுனர்களின் தீர்ப்பும்...
إنَّ أخوَفَ ما أخافُ على أمتي عملُ قومِ لوطٍ
الراوي : جابر بن عبدالله | المحدث : الألباني | المصدر : صحيح
الترمذي الصفحة أو الرقم: 1457 | خلاصة حكم المحدث : حسن
என் சமூகத்தார்
விடயத்தில் நான் அதிகம் பயப்படுவது ஓரினச் சேர்க்கையைத்தான்!” என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்கள்: இப்னு மாஜா (திர்மிதி)
*இப்பாதக செயலில் விரும்பி ஈடுபடும் இருவருக்குமான
தண்டனையை நபி ﷺ அவர்களின் பின்வரும் பொன்மொழிகள் தெளிவுபடுத்துகின்றன.
وعن جابر بن عبد الله أن رسول الله صلى الله عليه وسلم قال: “من
عَمِل عَمَلَ قوم لوط فاقتلوه”.
“லூத் நபியின் சமூகத்தார் செயலில் (ஓரினச்
சேர்க்கையில்) ஈடுபடும் இருவரையும் கொன்றுவிடுங்கள்” (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: அபூதாவூத்
(4462), திர்மிதி(1456), இப்னுமாஜா(2561)
وعن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم في الذي يعمل عمل قوم
لوط، قال: “ارجموا الأعلى والأسفل، ارجموهما جميعاً”
“ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் இருவரையும்
கல்லெறிந்து கொல்லுங்கள்”
(அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி), நூல்: இப்னுமாஜா)
عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( مَنْ وَجَدْتُمُوهُ يَعْمَلُ عَمَلَ قَوْمِ
لُوطٍ فَاقْتُلُوا الْفَاعِلَ وَالْمَفْعُولَ بِهِ ) وصححه الألباني في صحيح
الترمذي .
நபி ﷺ அவர்கள் கூறியதாக
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
உங்களில்
எவரேனும் நபி லூத் (அலை) அவர்களுடைய சமுதாயத்தினர் செயலைக் கண்டால் செய்பவனையும், செய்யப்படுபவனையும் கொன்றுவிடுங்கள். மற்றும் நீங்கள் யாராவது விலங்குகளுடன்
புணர்வதை கண்டால், அவனையும் அந்த விலங்கையும் கொன்று விடுங்கள்.
புலூகுல்
மராமில் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹிமஹுழ்ழாஹு அவர்கள் பதிந்துள்ளார்கள். இது
முஸ்னத் அஹ்மத் இல் இடம்பெற்ற ஹதீஸ் ஆகும். இலக்கம் : 1216
இஸ்லாமிய சட்ட
வல்லுனர்கள் இக்குற்றச் செயலில் ஈடுபட்டவர் மற்றும் ஈடுபடுத்தப்பட்ட இருவரையும்
கொலை செய்து தீயிட்டு எரிக்க வேண்டும் என சட்டமியற்றியுள்ளனர்.
*ஓரினச்சேர்க்கை என்ற குற்றச்செயலில்
ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டுமென்பது, அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் மற்றும் பெரும்பாலான ஸஹாபாக்களினதும் ஏகோபித்த
முடிவாகும். ஆனால், தண்டனை வழங்கப்படும் முறைகளில் வேறுபட்ட
கருத்துக்களை உடையவர்களாக உள்ளனர்.
وقد أجمع الصحابة على قتل اللوطي ، لكن اختلفوا في طريقة قتله ،
فمنهم من ذهب إلى أن يحرق بالنار ، وهذا قول علي رضي الله عنه ، وبه أخذ أبو بكر
رضي الله عنه
அலி ரழியல்லாஹு
அன்ஹு மற்றும் அபூ பக்ர் ரழியல்லாஹு அன்ஹு போன்ற சில ஸஹாபாக்களின் கருத்து படி, இவர்கள் உயிருடன் எரிக்கப்படவேண்டும் என்கின்றனர். மற்றும் இவ்வாறான ஒரு
தண்டனை அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் நிறைவேற்றப்பட்டும் உள்ளது.
அந்த நிகழ்வு பின்னால் கூறப்படும்..
وعن بعضهم : أنه يرفع على أعلى جدار في القرية ، ويرمى منه ، ويتبع
بالحجارة ، كما فعل الله بقوم لوط وهذه رواية عن ابن عباس ، والرواية الأخرى قال :
يرجم ، وعلى هذا أكثر السلف ، قالوا : لأن الله رجم قوم لوط ، وشرع رجم الزاني
تشبيها برجم لوط ، فيرجم الاثنان ، سواء كانا حرين أو مملوكين ، أو كان أحدهما
مملوك الآخر ، إذا كانا بالغين ، فإن كان أحدهما غير بالغ عوقب بما دون القتل ،
ولا يرجم إلا البالغ " انتهى من "السياسة الشرعية" ص 138.
மற்றும் இப்னு
அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் போன்ற சில ஸஹாபாக்களின் கருத்து படி இவர்கள்
உயரமான இடமொன்றில் இருந்து வீசப்பட வேண்டும் பிறகு கற்களால் அடித்து கொல்லப்பட
வேண்டும் என்பதாகும். மற்றும் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு மற்றும் அலி
ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இருவரினதும் இன்னொரு கருத்து படி இறக்கும் வரை கற்களால்
அடித்தல்
*“உங்களில் ஒருவர் இல்லறத்தில் ஈடுபடுவதும்
தர்மம் (நன்மையளிக்கக்கூடிய காரியம்) ஆகும். என்று நபியவர்கள் கூறியபோது
ஸஹாபாக்கள், ''அல்லாஹ்வின் தூதரே! தன் இச்சையைத்
தணித்துக் கொள்வதற்காக ஒருவர் இதைச் செய்கிறார். அதற்கு கூலி உண்டா?'' என்றார்கள். அப்போது நபியவர்கள் ''தன்னுடைய இச்சையைத்
தவறான (ஹராமான) வழியில் தணித்துக் கொண்டால் அவனுக்குத் தண்டனை உண்டல்லவா? எனக் கேட்டுவிட்டு அதுபோல் ஹலாலான வழியில் தீர்த்துக் கொள்பவனுக்கு
கூலியும் உண்டு எனப் பகர்ந்தார்கள்” (அறிவிப்பவர்:
அபூதர் (ரலி), நூல்: முஸ்லிம்)
عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( لَعَنَ اللَّهُ مَنْ عَمِلَ عَمَلَ قَوْمِ
لُوطٍ ، لَعَنَ اللَّهُ مَنْ عَمِلَ عَمَلَ قَوْمِ لُوطٍ ، ثَلاثًا ) وحسنه شعيب
الأرنؤوط في تحقيق المسند
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.
“லூத் நபியின் சமூகத்தார் செயலில் (ஓரினச்
சேர்க்கையில்) ஈடுபடுபவன் சபிக்கப்பட்டவனாவான். லூத் நபியின் சமூகத்தார்
செயலில்...... ஈடுபடுபவன் சபிக்கப்பட்டவனாவான். லூத் நபியின் சமூகத்தார்
செயலில்...... ஈடுபடுபவன் சபிக்கப்பட்டவனாவான். என்று 3 தடவைகள் கூறுகிறார்கள். மேலும் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுபவனும்
மிருகங்களுடன் புணர்ச்சியில் ஈடுபடுபவர்களும் சபிக்கப்பட்டவர்களாவர்” அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: தப்ரானீ
அத்தர்கீப் வத்தர்ஹீப் இதே ஹதீஸை இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்
அறிவிக்கிறார்கள். இது முஸ்னத் அஹ்மத்தில் 2915 ஆவது ஹதீஸ் ஆக
பதிந்துள்ளார்கள். இந்த ஹதீஸ் ஹஸன் தரத்தை உடையது என்று சுஐப் அல்-அர்னஊத்
என்பவரால் தஹ்கீக் அல்-முஸ்னத் இல் பதிவுசெய்யப்பட்டு உள்ளது.
*நபி ﷺ அவர்களின் போதனைகளைப்
பொருட்படுத்தாது ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக லூத் நபியின்
சமூகம் கொடூரமான முறையில் அழிக்கப்பட்டது. ஏனெனில், இது இறை சாபத்தைப் பெற்றுத் தரும் ஒரு கொடிய செயல்.
*அல்லாஹ்வின் அருள், கருணை, அன்பு போன்றவற்றை இல்லாதொழிக்கும் சாபக்கேடு
இதிலிருக்கும் காரணத்தால் பெரும் பாவங்களில் ஒன்றாகவும் இஸ்லாம் இதைக் கணிக்கின்றது.
*ஆண், பெண்ணுடைய
பின் துவாரங்களில் புணர்ச்சியில் ஈடுபடுபவனை அல்லாஹ் கருணைக் கண் கொண்டு
பார்க்கமாட்டான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:
இப்னு அப்பாஸ், நூல்கள்: திர்மிதி, நஸஈ, இப்னு ஹிப்பான்)
நஸஈ, இப்னு ஹிப்பான்)
மறுமையில் அல்லாஹ்வின்
பார்வை கிடைப்பது நிச்சயம் பாக்கியம் நிறைந்ததாகவே இருக்கும். இப்பாக்கியம்
கிடைக்காதோர் துரதிஷ்டவாதிகளே! இப்பாக்கியத்தை இழக்கச் செய்யும் இச்
செயல் மிகவும் பாரதூரமான ஒன்று என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.
وقد ثبت عن خالد بن الوليد أنه وجد في بعض نواحي العرب رجلا ينكح
كما تنكح المرأة ، فكتب إلى أبي بكر الصديق رضي الله عنه ، فاستشار أبو بكر الصديق
الصحابة رضي الله عنهم ، فكان على بن أبي طالب أشدهم قولا فيه ، فقال : ما فعل هذا
إلا أمة من الأمم واحدة وقد علمتم ما فعل الله بها . أرى أن يحرق بالنار ، فكتب
أبو بكر إلى خالد فحرقه .
அபூபக்ர்
ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கலீபாவாக உள்ள போது,
அவரும் தமது
ஆலோசகர்களும் ஒன்றுகூடி , ஆசனவாய் வழியாக புணர்ச்சி செய்த ஒரு பாவி
தொடர்பான வழக்கில் கொடுக்க வேண்டிய தண்டனை பற்றி ஆலோசனை செய்தார்கள். அப்போது அலி
ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள், இது இதற்கு
முன்பு ஒரே ஒரு சமுதாயத்தை தவிர வேறு எந்த சமுதாயமும் செய்திராத ஒரு பாவமாகும்.
மற்றும் அவர்களை அல்லாஹ் எவ்வாறு தீர்த்தான் என்பதை நீர் அறிவீரா? நான் அவனை உயிரோடு எரிக்க வேண்டும் என்று கருதுகிறேன் என்றார்கள்.பின்னர்
ஸஹாபாக்கள் ( ரழியல்லாஹு அன்ஹும் வரளு அன்ஹும்) அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய
கருத்தை ஏற்றுக் கொண்டனர். பிறகு அபூ பக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் காலித் இப்னு
வலீத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு , அவனை உயிருடன்
எரிக்குமாறு கட்டளை இட்டு கடிதம் எழுதினார்.
( நூல்: பைஹகீ )
அல் முன்திரீ
ரஹிமஹுல்லாஹு அவர்கள் கூறுகிறார்கள்:
" ஆசனவாய் வழியாக புணர்ச்சி செய்பவர்களை
உயிருடன் எரித்து தண்டனை வழங்கிய 4 கலீபாக்கள்
உள்ளனர், அவர்கள்;
1) அபூ பக்ர் அஸ்-ஸித்தீக் ரழியல்லாஹு அன்ஹு
2) அலி இப்னு அபீதாலிப் ரழியல்லாஹு அன்ஹு
3) அப்துல்லாஹ் இப்னு அஸ்-ஸுபைர்
4) ஹிஷாம் இப்னு அப்தில்மலிக் ஆவார்கள். (
அத்-தர்கீப் வத்-தர்ஹீப் )
ومنهم من قال : يرجم بالحجارة حتى يموت ، وهذا مروي عن علي وابن
عباس أيضاً .
ثم اختلف الفقهاء بعد الصحابة ، فمنهم من قال يقتل على أي حال كان
، محصنا أو غير محصن .
ومنهم من قال : بل يعاقب عقوبة الزاني ، فيرجم إن كان محصنا ،
ويجلد إن كان غير محصن.
ومنهم من قال : يعزر التعزير البليغ الذي يراه الحاكم
.
ஸஹாபாக்களுக்கு
பிறகு வந்த புகஹாக்களும் இதற்கு தண்டனை கொடுக்கும் முறைகளில் கருத்து
வேறுபட்டுள்ளனர்.
சில ஃபுகஹாக்கள், அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்கின்றனர், அவர்களின்
நிலையை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை, அதாவது அவர்கள்
திருமணம் முடித்தவர்களா? அல்லது முடிக்காதவர்களா? என்று பார்க்கவே தேவையில்லை,
அவர்கள்
கொல்லப்பட வேண்டும் என்கின்றனர்.
சில ஃபுகஹாக்கள், இதற்கு விபச்சார குற்றத்திற்கு தண்டனை கொடுப்பது போல் கொடுக்கப்பட வேண்டும்
என்கின்றனர். அதாவது, திருமணம் முடித்தவராக இருந்தால், கற்களால் அடித்து கொல்லப்பட வேண்டும் . திருமணம் முடிக்காதவராக இருந்தால், கசையடி கொடுக்கப்பட வேண்டும் என்கின்றனர்.
