Thursday, 10 September 2026

பயணங்கள் வாழ்க்கையை முடிப்பதற்கல்ல!!

 

பயணங்கள் வாழ்க்கையை முடிப்பதற்கல்ல!!



திண்டுக்கல் PSNA கல்லூரியில் இறுதியாண்டு பொறியியல் படித்து வந்த 8 மாணவர்கள், அவர்களில் ஒருவரின் புதிய காருக்கு விருந்து கொடுக்கும் விதமாக நண்பர்களுடன் கேரள மாநிலத்திற்கு சுற்றுலா சென்றனர்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 4, 2026 வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 11:42 மணியளவில் கேரள மாநிலம் திருச்சூர் அருகே கைபமங்கலம் (Kaipamangalam) அருகில் உள்ள பனம்பிக்குன்னு (Panampikkunnu) பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் அந்த இடத்திலேயே எட்டு பேரும் உயிரிழந்தனர்.

விபத்துக்கான காரணம்: சாலைப் பணிகள் நடக்கும் diversion பகுதியில், வெளிச்சம் மற்றும் எச்சரிக்கைப் பலகைகள் இன்றி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறம் இவர்கள் வந்த கார் அதிவேகமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் முற்றிலும் நொறுங்கி லாரியின் அடியில் சிக்கிக் கொண்டது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்தப் பயணம் குறித்து அந்த மாணவர்கள் தங்களது குடும்பத்தினருக்கு கூட தகவல் தெரிவிக்கவில்லை.

எனவே, பிள்ளைகளை வெளியூரில் படிக்க அனுப்பி வைத்தால் மட்டும் போதாது. தினசரி அவர்களின் நடவடிக்கைகள் நட்பு வட்டாரங்கள் ஆகியவற்றை கூர்ந்து அன்புடன் கவனித்து வர வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும் என்பதை இந்த துயரச் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

மகன் கேட்கிறான் என்று புதிய பைக்கோ காரோ வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்கள் தங்களது மகனுடைய பயண விவரங்கள் மற்றும் பயணம் செய்யும் முறை குறித்து அறிந்து வைத்துள்ளனரா? என்றால் எவருக்கும் தெரியாது என்பதே உண்மை.

இந்தியாவில் சாலை விபத்துகள்...

இந்தியாவில் சாலை விபத்துகள் பெரும் பிரச்னையாக தொடர்கிறது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக தகவலின்படி, நிகழாண்டு ஜூலை மாதம் வரை நாட்டில் 2.96 லட்சம் சாலை விபத்துகளும், அவற்றால் 1.01 லட்சம் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

இவற்றில் அதிக விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்பது வருத்தத்துக்குரியது. நிகழாண்டு ஜூலை மாதம் வரை தமிழகத்தில் 39,666 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

சாலை விபத்து மரணங்கள் பட்டியலில் 10,298 உயிரிழப்புகளுடன் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. 

சாலை விபத்துகளில் பெரும்பாலானவை விரைவுச் சாலைகளை உள்ளடக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில்தான் நிகழ்ந்துள்ளன.

இந்தியாவில் நிகழாண்டில் சராசரியாக தினமும் 480 நபர்கள் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். ஒவ்வொரு மூன்று நிமிஷத்துக்கும் ஓர் உயிர் என்ற விகிதத்தில் விபத்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மோட்டார் வாகனச் சட்டத்தின்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கான தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியாவில் பஞ்சமில்லை. நெடுஞ்சாலைகளைத் தொடர்ந்து, நகரங்களிலும் சாலை விபத்து உயிரிழப்புகளும், காயங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.( நன்றி: தினமணி, 10/09/2026 )

2025 ஆம் ஆண்டின் (இந்தியா) மொத்த சாலை விபத்துகள் புள்ளிவிவரங்கள்:- 5,13,563 (2024 ஆம் ஆண்டை விட 5.3% அதிகம்).மொத்த உயிரிழப்புகள்: 1,83,382 (2024 ஆம் ஆண்டை விட 3.5% அதிகம்)

தினசரி மற்றும் மணிநேர சராசரி: இந்தியாவில் சராசரியாக ஒரு நாளைக்கு 502 பேர் விபத்துகளால் உயிரிழக்கின்றனர். அதாவது, ஒரு மணி நேரத்திற்கு 21 நபர்கள் சாலை விபத்துகளில் மரணமடைகின்றனர்.

விபத்தின் தீவிரம்: பதிவாகும் ஒவ்வொரு 100 சாலை விபத்துகளிலும் சுமார் 35 உயிரிழப்புகள் நிகழ்கின்றன. 

தேசிய அளவில் விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2025 ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 71,387 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன (அவற்றில் 18,505 பேர் உயிரிழந்துள்ளனர்). 

அதிக உயிரிழப்புகள் நடக்கும் மாநிலம்: சாலை விபத்து மரணங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 2025 இல் அங்கு 27,550 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

விபத்துகளுக்கான முதன்மைக் காரணங்கள்:-

அரசின் ஆய்வுகளின்படி, பெரும்பாலான வாகன விபத்துகளுக்கு பின்வரும் காரணங்களே அடிப்படையாக அமைகின்றன.

1) ஒட்டுமொத்த சாலை விபத்து மரணங்களில் 70%-க்கும் அதிகமானவை அதிவேகமாக வாகனம் ஓட்டுவதனாலேயே ஏற்படுகின்றன. 

2) பாதுகாப்புக் கருவிகளைப் பயன்படுத்தாமை: இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமலும், கார்களில் சீட் பெல்ட் அணியாமலும் பயணிப்பது மரணங்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது. 

3) மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் (Drunk Driving): இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துகளுக்கு இது முக்கியக் காரணியாக இருக்கிறது. 

4) கவனச்சிதறல்: வாகனம் ஓட்டும்போது கைபேசி (Mobile Phone) பயன்படுத்துவது. அல்லது பேசிக் கொண்டோ அல்லது விளையாடிக் கொண்டோ வாகனத்தை ஓட்டுவது.

5) சாலைக் கட்டமைப்பு மற்றும் பிளாக்ஸ்பாட்கள்: தேசிய நெடுஞ்சாலைகளில் (NH - National Highways) உள்ள சுமார் 6,358 ஆபத்தான விபத்துப் பகுதிகள் (Blackspots) மற்றும் மோசமான சாலை வடிவமைப்பு ஆகிய காரணிகள் ஆகும். ( நன்றி: தமிழ் முரசு, The Times of India, தினகரன், மாலை மலர், 24/07/2025 )

நாடு முழுவதும் 40 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றை தனித்தனியே கண்காணிப்பது என்பது இயலாத காரியம் எனவே, நாம் தான் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும்.

விபத்து மூலம் ஏற்படும் இழப்புகள் சாதாரணமானது அல்ல. ஒருவர் விபத்துக்குள்ளாகிறார் என்றால் அவரால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மிக அதிகம் என்கிறது ஆய்வறிக்கைகள்.

சில போது ஏற்படுகிற விபத்துகளில் ஒருவர் இறந்துபோகிறார் என்றால், அவரின் உயிரிழப்புக்குப் பின்னால் அவரின் குடும்பம், அவரின் நிறுவனம், அவர் வேலை பார்த்த நிறுவனம் அல்லது கடை, அல்லது அவர் பார்த்த பணியின் மூலம் பயனடைந்தவர்கள் என ஏராளமானவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.

ஆனால், உயிரிழப்புக்கு பதிலாக அவர் காயமடைகிறார், உடல் உறுப்புக்கள் சேதமடைகிறது அல்லது உருக்குலைந்து போகிறது என்றால் அவர் வாழும் காலமெல்லாம் அவஸ்தைப் படுவதோடு தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் அவஸ்தையில் ஆழ்த்தி விடுகின்றார்.

உயிரிழப்பு, காயங்கள் என இதைத் தாண்டி அவர் குடும்பம் பொருளாதாரத்தை இழக்கிறது. அவர் நிறுவனம் ஒரு நல்ல தலைவனை இழக்கிறது. நாடு நல்ல மனிதரை இழக்கிறது என இறந்து போன காயம் பட்டவர் எப்படிப்பட்டவர் என்பதைப் பொறுத்து இழப்பு என்பது ஈடு செய்ய முடியாதது.

பயணம் என்பது....

பொதுவாக பயணங்கள் என்பது சோர்வும், களைப்பும் வேதனையும் நிறைந்தது தான்.

கிள்ர் (அலை) அவர்களைச் சந்திக்க மூஸா அலை அவர்களும் அவர்களுடன் சென்ற பணியாளர் யூஷஃ இப்னு நூன் (அலை) ஆகியோரின் பயணம் குறித்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குறிப்பிடும் போது...

 فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِن سَفَرِنَا هَٰذَا نَصَبًا

[ سورة الكهف: 62] 

அவ்விருவரும், அப்புறம் அந்த இடத்தைக் கடந்த போது, தம் பணியாளை நோக்கி, “நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா; இந்த நம் பிரயாணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம்என்று (மூஸா) கூறினார். ( அல்குர்ஆன்: 18: 62 )

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ ، حَدَّثَنَا مَالِكٌ ، عَنْ سُمَيٍّ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ السَّفَرُ قِطْعَةٌ مِنَ الْعَذَابِ يَمْنَعُ أَحَدَكُمْ طَعَامَهُ وَشَرَابَهُ وَنَوْمَهُ فَإِذَا قَضَى نَهْمَتَهُ فَلْيُعَجِّلْ إِلَى أَهْلِهِ

பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும். அது ஒருவரது உணவை யும், பாணத்தையும், உறக்கத்தையும் தடுத்து விடுகிறது. எனவே ஒருவர் தம் தேவையை முடித்ததும் விரைந்து தம் குடும்பத்தாரிடம் செல்லட்டும். ( அறி : அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி )

பயணம் என்பது எந்தளவிற்கு வேதனையானது என்பதை நபிகளாரின் மேற்கண்ட பொன்மொழியை சிந்தித்துப் பார்த்தால் நன்கு விளங்கும். 

ஆகவே தான் குறிப்பிட்ட காரியம் முடிந்தவுடன் தாமதிக்காமல் ஊர் திரும்ப வேண்டும் என்றும் நபி அவர்கள் அறிவுறுத்துகின்றார்கள்.

எனவே, பயணங்களை பாதுகாப்பானதாகவும், அழகானதாகவும் இஸ்லாமியமயப்படுத்தியும் நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் பயணம் மேற்கொள்பவர்கள் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை இஸ்லாம் அறிவுறுத்துகிறது.

1) பயணம் செல்லும் தூரம், இடம், கால நேரம், சூழ்நிலை குறித்தான தெளிவு அவசியம் இருக்க வேண்டும்.

لَمْ يكُن رسولُ الله ﷺ يُريدُ غَزْوةً إِلاَّ ورَّى بغَيْرِهَا حتَّى كَانَتْ تِلكَ الْغَزْوةُ، فغَزَاها رسولُ الله ﷺ في حَرٍّ شَديدٍ، وَاسْتَقْبَلَ سَفراً بَعِيداً وَمَفَازاً. وَاسْتَقْبَلَ عَدداً كَثيراً، فجَلَّى للْمُسْلمِينَ أَمْرَهُمْ ليَتَأَهَّبوا أُهْبَةَ غَزْوِهِمْ فَأَخْبَرَهُمْ بوَجْهِهِمُ الَّذي يُريدُ،

கஅப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி அவர்கள் எந்தப் போருக்கு புறப்பட்டாலும் அதைச் சாடைமாடையாக மறைத்தே கூறுவார்கள். ஆனால், தபூக் யுத்தத்திற்கு புறப்படும் முன்பாக யதார்த்த நிலையை, பயணத்தில் இருக்கும் சிரமங்களை வெளிப்படையாகவே கூறினார்கள்.

2) சாலை மற்றும் பாதைகளின் ஒழுங்குகளைப் பின்பற்ற வேண்டும்.

عن أبي سعيد الخدري رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم قال: «إياكم والجلوس على الطرقات»: قالوا: ما لنا بدٌّ، إنما هي مجالسنا نتحدث فيها، قال: «فإذا أبيتم إلا المجالس، فأعطوا الطريق حقها» قالوا: وما حق الطريق؟ قال: «غض البصر، وكف الأذى، ورد السلام، وأمر بالمعروف، ونهي عن المنكر»

وزاد في رواية عن عمر بن الخطاب: «وتغيثوا الملهوف، وتهدوا الضال»

அபூஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: பாதைகளில் அமர்வதன் விஷயத்தில் உங்களை நான் எச்சரிக்கின்றேன்என நபி அவர்கள் எங்களோடு அமர்ந்திருந்த சபை ஒன்றில் கூறினார்கள். அப்போது நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! இது நாள் வரை அப்படி அமர்ந்து தானே நாங்கள் பேசி வருகின்றோம்! ஏன் அப்படிக் கூறுகின்றீர்கள்?” என்று கேட்டோம்.

இனி நீங்கள் பேசினால் அதற்கான இடங்களில் அமர்ந்து பேசுங்கள்! பாதையின் கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுங்கள்என்றார்கள். அப்போது நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! பாதையின் கடமைகள் என்ன? என்றுகேட்டோம்.

அதற்கு, நபி அவர்கள் பார்வையை தாழ்த்திக் கொள்வதும், நோவினை தருபவைகளை அகற்றுவதும், ஸலாம் உரைத்தால் பதில் சொல்வதும், நன்மையை ஏவுவதும், தீமையைத் தடுப்பதும், (உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிற அறிவிப்பில் கூடுதலாக) அபயக்குரல் எழுப்புவோருக்கு உதவி செய்வதும், வழி தவறியவர்களுக்கு வழிகாட்டுவதும்தான் பாதையின் கடமைகள் என்றார்கள். ( நூல்: புகாரி,அபூதாவூத் )

 

الطريق في اللغة: من طَرق، وهو المطروق، والممر الواسع الممتد من أوسط الشارع"(المعجم الوسيط، تأليف إبراهيم مصطفى وآخرون- 1/655).

  وفي الاصطلاح: جاء تعريفه في نظام المرور بالمملكة العربية السعودية

بأن كل سبيل مفتوحة لسير وسائط النقل والبحر والمشاة والحيوانات"(أحكام حوادث المرور في الشريعة الإسلامية أ/ محمد علي شبيب القحطاني: ص24).

  وعرفه الشيرازي بقوله: سبيل مفتوح للمرور العام من مشاة وحيوانات ومركبات، بما في ذلك الشوارع والساحات والجسور أو ما يشاهبها"(فقه المرور، محمد الشيرازي: ص 53).

  تعريف آداب الطريق بوجه عام: هي الأدبيات والأنظمة المتعلقة بحفظ الطريق بما فيه من ممتلكات عامة، ومشاة، وركبان، ودواب، ومركبات، ويضمن بها حفظ الأرواح والأموال والأعراض"(آداب الطريق: بدر سالم).

  للطرق أمساء ذكرها الفقهاء منها: السبيل، والشارع وهو الطريق الأعظم الذي يسلكه الناس عامة، والفج وجمعه فجاج، وهو الطريق الواسع بني جبلين، والممر موضع المرور، والمسلك، والدرب ونحوه"(أحكام حوادث المرورية في الشريعة الإسلامية، ص9-22).

பாதை என்பதை குறிக்க அரபியில் தரீக்என்கிற வார்த்தை பயன்படுத்தப் படுகிறது.

இதை வெறும் மனிதர்கள் நடந்து செல்லும் பாதையாக கவனிக்காமல் மனிதர்கள் நடந்து செல்ல, வாகனிக்க, பயணிக்க பயன்படும் அனைத்தையும் எடுத்துக் கொள்ளும் என சமகால அறிஞர்கள் தெரிவிக்கின்றார்கள்.

மேற்கூறிய நபிமொழி இஸ்லாமிய வழிகாட்டுதலை தந்தாலும், பொதுவாக நாம் பயன்படுத்துகிற பாதைகள், சாலைகள் ஆகியவற்றின் விதிமுறைகளை அறிந்து வைத்திருப்பதன் அவசியத்தையும், அதை அவசியம் கடைபிடிப்பதையும் உணர்த்துகின்றது.

3) நடுநிலை பேணுதல், பெருமையை தவிர்த்தல்....

وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا

மேலும், ரஹ்மானின் (உண்மையான) அடியார்கள் எத்தகையவர்களெனில் அவர்கள் பூமியில் பணிவோடு நடப்பார்கள்”. (அல்குர்ஆன்: 25: 63)

இபாதுர் ரஹ்மான் - ரஹ்மானின் (உண்மையான) அடியார்கள் எனும் சிறப்பு பெற்ற மனிதர்களின் பல்வேறு பண்புகளை பட்டியலிடும் அல்லாஹ் துவக்கமாக அவர்களின் நடை குறித்து குறிப்பிடுகின்றான்.

وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ (18) وَاقْصِدْ فِي مَشْيِكَ

 

மேலும், பூமியில் செருக்காய் நடக்காதே! அகந்தையும், ஆணவமும் கொண்ட எவனையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. உனது நடையில் மிதமான நிலையை மேற்கொள்வாயாக!என்று லுக்மான் {அலை} தமது மகனுக்கு உபதேசம் செய்தார் என அல்லாஹ் குறிப்பிடுகின்றான். (அல்குர்ஆன்: 31: 18, 19)

வீதிகளில் நாம் நடந்து செல்லும் போது அடக்கமாகவும், பணிவாகவும், மிதமான நிலையை கையாண்டும் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது.

மாறாக நான் செல்வந்தன், நான் அரசியல்வாதி, நான் பதவி. பட்டம்,அதிகாரம் உடையவன், என்று ஆணவத்தோடு நடந்து சென்றால் அதுவே அவரின் அழிவுக்கு காரணமாகிவிடும்.

மேலும் நபி அவர்கள் கூறினார்கள்: “(முற்காலத்தில்) ஒரு மனிதன் (தனக்குப் பிடித்த) ஓர் ஆடையை அணிந்துகொண்டு நன்கு தலைவாரிக் கொண்டு தற்பெருமையுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென அவனை அல்லாஹ் பூமிக்குள் புதையச் செய்துவிட்டான். அவன் மறுமை நாள் வரை (அவ்வாறே பூமிக்குள்) குலுங்கிய படி அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான். (நூல்: முஸ்லிம் 5789)

இந்த இறைவசனங்களும், நபிமொழியும் வாகனத்தில் செல்வதையும் எடுத்துக் கொள்ளும்.

சமூகத்தில் இன்று தங்களது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ளும் அடையாளமாகவே விலை உயர்ந்த, ஆடம்பர இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வாங்கும் போக்கு அதிகரித்து இருக்கின்றது.

பல நேரங்களில் விலை உயர்ந்த என் வாகனத்தை விட சாதாரண பைக் முந்துவதா? ஓட்டை கார் முந்துவதா? டப்பா பஸ் முந்துவதா? என்கிற செருக்கும், பெருமையும் அதிவேகமாக வாகனத்தைச் செலுத்த தூண்டுகின்றது.

4) பிறருக்கு அச்சமேற்படும் வகையில் வாகனத்தை ஓட்டுதல் (அ) அதிக ஒலி எழுப்புதல்….

عن أم هانئ بنت أبي طالب -رضي الله عنها- عن النبيِّ صلى الله عليه وسلم في قولِه تعالى: (وَتَأْتُونَ فِي نَادِيكُمُ المُنْكَرَ) قال: "كانوا يَخْذِفُونَ أهلَ الأرضِ ويَسْخَرُونَ منهم"(رواه الترمذي:٣١٩٠، وحسنه) وفي رواية: أنَّها سألت رسولَ اللهِ صلى الله عليه وسلم قالت: قلتُ: يا رسولَ اللهِ ! أرأيتَ قولَ اللهِ -عزَّ وجلَّ-: (وَتَأْتُونَ فِي نَادِيكُمُ الْمُنْكَرَ) ما ذلك المنكرُ الَّذي كانوا يأتون في ناديهم؟ قال: "كانوا يسخرون بأهلِ الطَّريقِ ويُخوِّفونهم"(رواه البيهقي في شعب الإيمان:٥-٢٣٠٣، وقال: له متابعة).

உம்மு ஹானீ (ரலி) அவர்கள் அல்லாஹ் உங்களின் சபைகளில் வைத்தே தீயசெயல்களில் ஈடுபடுகின்றீர்கள்என்று லூத் {அலை} அவர்களின் சமூகம் குறித்து விமர்சிக்கின்றானே, அப்படி அவர்கள் என்ன செய்தார்கள்? என்று வினவினார்கள்.

அதற்கு மாநபி அவர்கள், “பாதையில் செல்பவர்களை, சாலையில் பயணிப்பவர்களை அவர்கள் பயமுறுத்தினார்கள்என்று பதிலளித்தார்கள்.

இன்றைக்கு நடைபெறும் பெரும்பாலான விபத்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹார்ன், அதிக ஒளி உமிழும் எல்.இ.டி விளக்குகள், அதிக சப்தத்தை எழுப்பும் சைலன்ஸர்கள் பொருத்திய கார்கள் மற்றும் பைக்குகள் முக்கிய காரணங்களாக இடம் பெறுகின்றன.

5) பிறருக்கு இடையூறு தராதவாறு நடந்து கொள்பவருக்கு சோபனம்...

روى البخاري ومسلم في صحيحيهما من حديث أبي هريرة رضي الله عنه: أن النبي صلى الله عليه وسلم قال: «بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ، وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ، فَأَخَذَهُ فَشَكَرَ اللَّهُ لَهُ، فَغَفَرَ لَهُ»

ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையை விட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான்”. இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

இந்த நபிமொழி பாதையில் இடையூறு ஏற்படுத்துபவற்றை அகற்றுபவருக்கான பிரதிபலன் குறித்து பேசுகின்றது. வாகனம் ஓட்டும் ஒருவர் எவருக்கும் இடையூறு ஏற்படா வண்ணம் ஓட்டுகின்றார் என்றால் அவருக்கும் இது பொருந்தும்.

6) பிரார்த்தனையுடன் பயணத்தை துவங்க வேண்டும்...

அந்த வகையில் பயணம் மேற்கொள்பவர்கள் துவக்கமாக செய்ய வேண்டிய காரியங்களில் ஒன்றாக துஆ ஒன்றைக் கற்றுத் தந்திருக்கிறது நம் இஸ்லாமிய மார்க்கம்.

அந்த துஆவில் இடம் பெறும் ஒரு பகுதி 25 ம் ஜுஸ்வின் (43) அஸ் ஸுஃக்ருஃப் அத்தியாயத்தின் 13 மற்றும் 14 வது வசனங்கள் ஆகும்.

حَدَّثَنِى هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِى أَبُو الزُّبَيْرِ أَنَّ عَلِيًّا الأَزْدِىَّ أَخْبَرَهُ

أَنَّ ابْنَ عُمَرَ عَلَّمَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- كَانَ إِذَا اسْتَوَى عَلَى بَعِيرِهِ خَارِجًا إِلَى سَفَرٍ كَبَّرَ ثَلاَثًا ثُمَّ قَالَ « سُبْحَانَ الَّذِى سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِى سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِى السَّفَرِ وَالْخَلِيفَةُ فِى الأَهْلِ اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِى الْمَالِ وَالأَهْلِ ». وَإِذَا رَجَعَ قَالَهُنَّ. وَزَادَ فِيهِنَّ « آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ

 

அலீ பின் அப்தில்லாஹ் அல்அஸ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:- இப்னு உமர் (ரலி) அவர்கள் மக்களுக்கு (பின்வரும் பிரார்த்தனையை)க் கற்றுத் தந்தார்கள்: "அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எங்கேனும் பயணம் புறப்பட் டால், தமது ஒட்டகத்தில் ஏறி அமர்ந்தவுடன் மூன்றுமுறை தக்பீர் (அல்லாஹு அக்பர்’) கூறுவார்கள். பிறகு சுப்ஹானல்லதீ சக்கர லனா ஹாதா, வ மா குன்னா லஹு முக்ரினீன, வ இன்னா இலா ரப்பினா ல முன்கலிபூன். அல்லாஹும்ம, இன்னா நஸ்அலுக ஃபீ சஃபரினா ஹாதல்பிர்ர வத்தக்வா, வ மினல் அமலீலி மா தர்ளா. அல்லாஹும்ம, ஹவ்வின் அலைனா சஃபரனா ஹாதா. வத்வி அன்னா புஅதஹ். அல்லா ஹும்ம அன்த்தஸ் ஸாஹிபு ஃபிஸ்ஸஃபரி, வல்ஃகலீஃபத்து ஃபில்அஹ்ல். அல்லாஹும்ம, இன்னீ அஊது பிக்க மின் வஃஸாயிஸ் ஸஃபரி, வகஆபத்தில் மன்ழரி, வ சூயில் முன்கலபி ஃபில்மாலிலி வல்அஹ்ல்என்று கூறுவார்கள்.

(பொருள்: நாங்கள் இ(ந்த வாகனத்)தைக் கையாளும் திறன் பெற்றிராத நிலை யில், எங்களுக்கு இதைப் பணியவைத்த (இறை)வன் தூயவன். நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்லக்கூடியவர்களாய் உள்ளோம். இறைவா, இப்பய ணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ திருப்தியடையக்கூடிய (நற்)செயல் களையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா, இப்பயணத்தை எங்களுக்கு எளிதாக்குவாயாக! இப்பயணத்தின் தூரத்தைச் சுருக்குவாயாக! இறைவா, நீயே என் பயணத் தோழனாகவும் என் குடும்பத்தின் பிரதிநிதியாகவும் இருப்பாயாக! இறைவா, பயணத்தின் சிரமங்களிலிருந்தும், நிலைகுலையச் செய்யும் துயரக் காட்சி யிலிருந்தும், செல்வத்திலும் குடும்பத்திலும் நிகழ்ந்துவிடும் தீய மாற்றங்களி லிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)

திரும்பி வரும்போதும் இவ்வாறே பிரார்த்திப்பார்கள். ஆனால், அவற் றுடன் பின்வரும் வரிகளையும் கூடுதலாக ஓதுவார்கள்: ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன லி ரப்பினா ஹாமிதூன்” (பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், எங்கள் இறைவனை வழிபட்டவர்களாகவும் அவ னையே போற்றிப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகிறோம்). ( நூல்: முஸ்லிம் )

எனவே, சாலைகளில், பாதைகளில் நமக்கான பொறுப்புணர்வை உணர்வோம்! விபத்தில் சிக்காத, விபத்தை ஏற்படுத்தாத பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வோம்!

வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் காத்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

பெற்றோரின் அனுமதி...

எட்டு மாணவர்கள் விபத்துக்குள்ளாகி இறந்து போன இந்த நிகழ்வில் தங்கள் பயணம் குறித்து யாரும் தமது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

எனவே,பிள்ளைகள் வெளியூருக்கு பயணம் செய்வதாக இருந்தால் பெற்றோர்களிடம் அனுமதி கேட்க வேண்டுமா? இஸ்லாமிய மார்க்கத்தின் வழிகாட்டுதல் என்ன?

 

وهذا التقسيم ذكره جمع من العلماء كابن حجر والقرافي والطرطوشي وابن علان وابن الشاط

இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி, இமாம் கராஃபீ, இமாம் தர்தூஸீ, இமாம் இப்னு அலான், இமாம் இப்னுஷ் ஷாத் (ரஹிமஹுமுல்லாஹு அலைஹிம்) ஆகியோரும் இன்னும் பல அறிஞர் பெருமக்களும் பயணங்கள் மேற்கொள்ளும் முன்பாக பெற்றோர்களிடம் அனுமதி பெறுவது குறித்து வலியுறுத்தி கூறியிருக்கின்றார்கள். 

பொதுவாக, பயணங்களை இரண்டு வகையாக பிரித்து அதில் பெற்றோர்களிடம் அனுமதி பெற்று செல்கிற பயணம் என்று சிலவற்றையும், பெற்றோர்கள் அனுமதி மறுக்கும் போது அனுமதி இன்றி செல்வதற்கு சில பயணங்களையும் வகைப்படுத்தி உள்ளனர்.

இன்னும் சில அறிஞர் பெருமக்கள் பொதுவாக அனைத்து விஷயங்களையும் பெற்றோர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதே சாலச் சிறந்தது என்று கூறுவதோடு, பெற்றோர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பிள்ளைகளால் பணிவிடை மற்றும் இதர பயன் பாடுகள் இருப்பின் அனுமதி பெற்று செல்வதையே ஆமோதிக்கின்றனர்.

حالات لا يشترط فيها إذن الوالدين:السفر الواجب (كحج الفريضة أو طلب العلم الواجب عيناً): لا طاعة لمخلوق في معصية الخالق، فإذا تعين السفر لأداء فرض عين فلا يُشترط الإذن.السفر

அந்த வகையில் இமாம்கள் அவசியமற்ற பயணம் என்று ஒரு வகையையும், கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய பயணம் என்று ஒரு வகையையும் பிரித்து, ஹஜ் உம்ரா செய்ய பயணம் மேற்கொள்வது, கல்வி கற்க பயணம் மேற்கொள்வது, மிக இக்கட்டான நிலையில் மார்க்கத்திற்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில் ஜிஹாத் செய்ய பயணம் மேற்கொள்வது இவை யாவும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய பயணம் ஆகும். இது போன்ற பயணங்களில் பெற்றோர்களிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுவதோடு, 

حاجة الوالدين للابن: إذا كان الأبوان أو أحدهما بحاجة ماسة لخدمة الولد أو تمريضه، ولا يوجد من يقوم مقامه، فيحرم السفر دون إذنهما لأن برهما فرض عين

அந்த பிள்ளைகள் மூலம் பெற்றோர்களில் இருவருக்கோ அல்லது ஒருவருக்கோ பணிவிடை மற்றும் இதர தேவைகளை நிறைவேற்ற மாற்று ஏற்பாடுகள் செய்ய இயலாதிருப்பின் பெற்றோர்கள் அனுமதி இன்றி பயணம் மேற்கொள்வது ஹராம் ஆகும். ஏனெனில், அவர்களுக்கு பணிவிடை செய்வது கட்டாயக் கடமையாகும்.

 

حالات يجب فيها إذن الوالدين:السفر غير الواجب (السياحة، النزهة، التجارة أو الدراسة غير المتعيّنة): يشترط فيه إذن الوالدين إذا كان سفراً تشتد فيه المخاطر أو يتأذى الوالدان بسببه من شدة الخوف والقلق

ஆனால், சுற்றுலா செல்ல, வியாபார நிமித்தம் பயணம் செல்ல, முக்கியத்துவம் இல்லாத ஏதேனும் ஒரு காரியத்திற்காக பயணம் மேற்கொள்வது குறித்து பெற்றோர்களிடம் அனுமதி பெறுவது கட்டாயம் ஆகும். இதிலும் பெற்றோர்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றே அறிஞர்கள் கருத்து கூறுகின்றனர்.

ஆகவே, நமது பயணங்கள் பாதுகாப்பாக அமைய பெற்றோர்களிடம் அனுமதி பெற்று செல்வோம்.

பெற்றோரின் பணிவிடைக்காக நபி அவர்களைச் சந்திக்க பயணம்மேற்கொள்ளாமல் இருந்த தலைசிறந்த தாபிஈ....

உவைஸ் அல்கரனி (ரஹ்) அவர்கள் தாபீயீன்களில் முதன்மையானவர் ஆவார். நபி அவர்கள் காலத்தில் இவர் வாழ்ந்தபோதும் நபி அவர்களை சந்தித்ததில்லை. உவைஸ் அல்கரனி (ரஹ்) அவர்கள் தாயாருக்கு பணிவிடை செய்வதில் மிகவும் போற்றத்தக்கவகையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதால் நபி அவர்களை சந்திக்க இயலவில்லை. 

உவைஸ் அல்கரனி (ரஹ்) அவர்களுக்கு கிடைத்த மாபெரும் சிறப்பு அந்தஸ்திற்கான காரணம், தாயாருக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டதாகும் என்பதாக அறிஞர்கள் விளக்கமளித்துள்ளார்கள். 

وعن أُسَيْرِ بْنِ عَمْرٍو -ويُقَالُ: ابْنُ جابِر- قَالَ: كَانَ عُمَرُ بْنُ الخَطَّابِ 

 إِذا أَتَى عَلَيْهِ أَمْدَادُ أَهْلِ الْيَمنِ سأَلَهُمْ: "أَفِيكُمْ أُوَيْسُ بْنُ عَامِرٍ؟" حتَّى أَتَى عَلَى أُوَيْسٍ 

، فَقَالَ لَهُ: "أَنْتَ أُوَيْس بْنُ عامِرٍ؟" قَالَ: نَعَمْ، قَالَ: "مِنْ مُرَادٍ، ثُمَّ مِنْ قَرَنٍ؟" قَالَ: نعَمْ، قَالَ: "فكَانَ بِكَ بَرَصٌ فَبَرِئْتَ مِنْهُ إِلَّا مَوْضِعَ دِرْهَمٍ؟" قَالَ: نَعَمْ، قَالَ: "لَكَ والِدَةٌ؟" قَالَ: نَعَمْ، قَالَ: "سَمِعْتُ رَسُولَ اللَّه ﷺ يقول: يَأْتِي علَيْكُمْ أُوَيْسُ بْنُ عَامِرٍ مَعَ أَمْدَادِ أَهْلِ الْيَمَنِ، مِنْ مُرَادٍ، ثُمَّ مِنْ قَرَنٍ، كَانَ بِهِ بَرَصٌ فَبَرَأَ مِنْهُ إِلَّا مَوْضِعَ دِرْهَمٍ، لَهُ وَالِدَةٌ هُو بِها بَرٌّ، لَوْ أَقْسَمَ عَلَى اللَّه لأَبَرَّهُ، فَإِنِ اسْتَطَعْتَ أَنْ يَسْتَغْفِرَ لَكَ فَافْعَلْ، فَاسْتَغْفِرْ لي"، فَاسْتَغْفَرَ لَهُ، فَقَالَ لَهُ عُمَرُ: "أَيْنَ تُرِيدُ؟" قَالَ: الْكُوفَةَ، قَالَ: "أَلا أَكْتُبُ لَكَ إِلى عَامِلهَا؟" قَالَ: أَكُونُ في غَبْراءِ النَّاسِ أَحبُّ إِلَيَّ, فَلَمَّا كَانَ مِنَ العَامِ المُقبل حجَّ رجلٌ من أشرافهم، فوافى عُمَرَ, فَسَألَهُ عَنْ أُوَيْسٍ, فَقَالَ: تَرَكْتُهُ رَثَّ البيت، قليل المتاع, قالَ: "سَمِعتُ رَسُولَ اللهِ ﷺ يقول: يَأْتِي عَلَيْكُمْ أُوَيْسُ بْنُ عَامِرٍ مَعَ أَمْدَادٍ مِنْ أهْلِ اليَمَنِ، مِنْ مُرَادٍ, ثُمَّ مِنْ قَرَنٍ, كَانَ بِهِ بَرَصٌ فَبَرَأَ مِنْهُ إلَّا مَوْضِعَ دِرْهَمٍ, لَهُ وَالِدةٌ هُوَ بِهَا بَرٌّ، لَوْ أقْسَمَ عَلَى الله لأَبَرَّهُ, فَإنِ اسْتَطَعْتَ أَنْ يَسْتَغْفِرَ لَكَ فَافْعَلْ"، فَأتَى أُوَيْسًا فَقَالَ: اسْتَغْفِرْ لِي, قَالَ: أنْتَ أَحْدَثُ عَهْدًا بسَفَرٍ صَالِحٍ فَاسْتَغْفِرْ لي, قَالَ: لَقِيتَ عُمَرَ؟ قَالَ: نَعَمْ، فاسْتَغْفَرَ لَهُ, فَفَطِنَ لَهُ النَّاسُ, فَانْطَلَقَ عَلَى وَجْهِهِ. رواه مسلم.t إِذا أَتَى عَلَيْهِ أَمْدَادُ أَهْلِ الْيَمنِ سأَلَهُمْ: "أَفِيكُمْ أُوَيْسُ بْنُ عَامِرٍ؟" حتَّى أَتَى عَلَى أُوَيْسٍ وعن أُسَيْرِ بْنِ عَمْرٍو -ويُقَالُ: ابْنُ جابِر- قَالَ: كَانَ عُمَرُ بْنُ الخَطَّابِ

கலீஃபா உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களிடம் யமன்வாசிகளின் உதவிப்படைகள் வந்தால், அவர்களிடம் உங்களிடையே உவைஸ் இப்னு ஆமிர் இருக்கிறாரா? என்று கேட்பார்கள். 

இந்நிலையில் ஒருமுறை (யமன்வாசிகளின் உதவிப்படைகளுடன் உவைஸ் இப்னு ஆமிர் (ரஹ்) வந்தபோது) நீர்தான் உவைஸ் இப்னு ஆமிரா என்று கேட்டார்கள்; அதற்கு உவைஸ் அல்கர்னி (ரஹ்) அவர்கள் ஆம்என்றார்கள். 

உமர்(ரலி) அவர்கள் அவரிடம் முராத்கோத்திரத்தையும் கரன்கிளையையும் சேர்ந்தவரா? என்று கேட்டார்கள்; அதற்கு உவைஸ் அல்கரனி(ரஹ்) அவர்கள் ஆம் என்றார்கள்.

உமர்(ரலி) அவர்கள், உங்களுக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு அதில் ஒரு திர்ஹம் அளவு (அடையாளம்) தவிர மற்றவை குணமாகிவிட்டதா என்று கேட்டார்கள்; அதற்கு உவைஸ் அல்கரனி(ரஹ்) அவர்கள் ஆம்என்றார்கள். 

உமக்கு தாயார் இருக்கிறாரா என்று கேட்டார்கள்; அதற்கு உவைஸ் அல்கரனி(ரஹ்) அவர்கள் ஆம்என்று பதிலளித்தார்கள். 

உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்:- அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறியிருக்கிறார்கள்:  யமன்வாசிகளின் உதவிப்படையினருடன் முராத்கோத்திரத்தையும் கரன்கிளையையும் சார்ந்த உவைஸ் இப்னு ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார்; அவருக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு பின்னர் ஒரு திர்ஹம் அளவு (அடையாளம்) தவிர மற்றவை குணமாயிருக்கும்; அவருக்கு தாயார் ஒருவர் இருப்பார்; அவருக்கு உவைஸ் ஊழியம் புரிபவராக இருப்பார்; அவர் அல்லாஹ்வின்மீது சத்தியமிட்டால், அல்லாஹ் அதை நிறைவேற்றி வைப்பான். (உமரே!) அவர் உமக்காக பாவமன்னிப்புக் கோரி பிரார்த்திக்க வாய்ப்பு கிட்டினால் அவரை பிரார்த்திக்க சொல்லுங்கள்! (அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறியுள்ளபடி) எனக்காக பாவமன்னிப்பு வேண்டி பிரார்த்தியுங்கள் என்றார்கள்! அவ்வாறே உவைஸ் (ரஹ்) அவர்களும் உமர்(ரலி) அவர்களுக்காக பிரார்த்தித்தார்கள்.

 பிறகு உமர்(ரலி) அவர்கள், நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்று வினவினார்கள்; அதற்கு உவைஸ் (ரஹ்) அவர்கள் கூஃபாவிற்குஎன்று பதிலளித்தார்கள். கூஃபாவின் ஆமிலிடம் (அதிகாரி) உமக்காக (பரிந்துரைத்து) கடிதம் எழுதட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அல்கரனி(ரஹ்) அவர்கள், ”சாதாரன மக்களில் ஒருவனாக நான் இருப்பதே எனக்கு விருப்பமானதாகும்என்று கூறிவிட்டார்கள். 

அடுத்த ஆண்டில் கரன் கிளைய சார்ந்த பிரமுகர் ஒருவர் ஹஜ்ஜுக்காக சென்றிருந்தபோது உமர்(ரலி) அவர்களை தற்செயலாக சந்தித்தார். அப்போது உமர்(ரலி) அவர்கள், உவைஸ்(ரஹ்) அவர்களைப் பற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர், “மிக எளிய குடிலில் (நெருக்கடியான வாழ்விலும்) மிகக் குறைவான வாழ்க்கை சாதனங்களிலுமே அவரை விட்டும் வந்துள்ளேன் என்று கூறினார். 

அப்போது உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறியிருக்கிறார்கள்: யமன்வாசிகளின் உதவிப்படையினருடன் முராத்கோத்திரத்தையும் கரன்கிளையையும் சார்ந்த உவைஸ் இப்னு ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார்; அவருக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு பின்னர் ஒரு திர்ஹம் அளவு (அடையாளம்) தவிர மற்றவை குணமாயிருக்கும்;அவருக்கு தாயார் ஒருவர் இருப்பார்; அவருக்கு உவைஸ் ஊழியம் புரிபவராக இருப்பார்; அவர் அல்லாஹ்வின்மீது சத்தியமிட்டால், அல்லாஹ் அதை நிறைவேற்றிவைப்பான். (உமரே!) அவர் உமக்காக பாவமன்னிப்புக் கோரி பிரார்த்திக்க வாய்ப்பு கிட்டினால் அவரை பிரார்த்திக்க சொல்லுங்கள்! என்று உமர்(ரலி) அவரிடம் சொன்னார்கள். 

ஆகவே அப்பிரமுகர் உவைஸ் அல்கரனி (ரஹ்) அவர்களிடம் சென்று எனக்காக பாவமன்னிப்பு வேண்டி பிரார்த்தியுங்கள் என்று கோரினார். அப்போது உவைஸ் அவர்கள் நீர்தான் இப்போது ஹஜ் கடமையை நிறைவேற்றி வந்துள்ளீர்! ஆகவே நீர்தான் எனக்காக பாவமன்னிப்பு கோர வேண்டும்; “நீர் உமர்(ரலி) அவர்களை சந்தித்தீரா? என்று கேட்டார்கள். ஆம்என்று அவர் பதிலளித்தார். உவைஸ் (ரஹ்) அவர்கள் அவருக்காக பாவமன்னிப்பு கோரி பிரார்த்தித்தார்கள்.

அப்போதுதான் மக்களும் உவைஸ் அல்கரனி (ரஹ்) அவர்களை அறிந்துகொண்டனர். பிறகு உவைஸ் (ரஹ்) அவர்கள் தமது திசையில் நடக்கலானார்கள்.

 தொடர்ந்து (உஸைர் பின் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் உவைஸ் (ரஹ்) அவர்களுக்கு (நல்ல) போர்வையொன்றை அணியக் கொடுத்தேன்; அவரை யாரேனும் ஒருவர் காணும்போதெல்லாம் உவைஸ் அவர்களுக்கு இந்த போர்வை எப்படி கிடைத்தது என்று கேட்பார்கள். ( அறிவிப்பாளர்: உஸைர் இப்னு ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் )

எனவே நாமும் பெற்றோருக்கு செய்யவேண்டிய கட்டாயக் கடமைகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு வெறுமனே ஒதுங்கிவிடாமல், அதற்கும் மேலான உபரியான பணிவிடைகளையும் செய்து, அவர்களின் கண்குளிர்ச்சியில் நாமும் பங்குபெற்று அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய முயற்சிப்போமாக!.