வலி மிகுந்த
வாழ்க்கை எதிரிக்கும் வேண்டாம்!!!
கடந்த ஜூன் மாத
மத்தியில் இரண்டு அறிக்கைகள் வெளியாகி சர்வதேச அளவில் முஸ்லிம்கள் மனதை கனக்கச்
செய்துள்ளது.
இந்த உலகில்
எவ்வளவு கொடூரமான மனிதர்கள் எல்லாம் உள்ளனர் என்பதை இந்த உலகிற்கு பறைசாற்றும்
வகையில் அந்த அறிக்கைகள் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.
முதலாவது:-
ஃபலஸ்தீனின் கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு பிரதேசங்களில், இஸ்ரேல் நடத்திய ஈவிரக்கமற்ற தாக்குதல் தொடர்பாக இந்தியாவின் முன்னாள்
உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதர் தலைமையில் விசாரித்த ஐக்கிய நாடுகள் சபையின்
சுயேச்சையான சர்வதேச விசாரணைக் குழுவின் அறிக்கை கடந்த ஜூன்/2026 அன்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் சமர்ப்பிக்கப்பட்டது.
பாலஸ்தீனர்களின்
வம்சத்தையே அழித்து முடித்துவிட வேண்டுமென்ற நோக்கத்தில், குழந்தைகளைத் தேடித் தேடி, இஸ்ரேல் கொன்ற கொடூரத்தை
ஐ.நா. சபையின் இந்த அறிக்கை வெளிப்படுத்தி இருக்கிறது. அறிக்கை மிகக் கடுமையான முடிவை முன்வைக்கிறது.
இஸ்ரேலின் இராணுவ
நடவடிக்கைகளால் மக்கள் கொல்லப்பட்ட போது குழந்தைகளும் உயிரிழந்துவிட்டன என்று
கருதமுடியாது. மாறாக,
பாலஸ்தீனர்களின் குழந்தைகளை விட்டு வைத்தால், எதிர்காலத்தில் மீண்டும் பாலஸ்தீனர்கள் சமூகம் உயிர் வாழ்ந்துவிடும்
என்பதற்காகவே குழந்தைகளைக் குறிவைத்து திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனவே, இனப்படுகொலை (Genocide),
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் (Crimes Against
Humanity), போர்க் குற்றங்கள் (War Crimes) என்ற மூன்று சர்வதேச குற்றங்களையும் இஸ்ரேல் திட்டமிட்டுச் செய்துள்ளது என்று அறிக்கை தெரிவிக்கிறது.
குழந்தைகள் எவ்வாறு கொல்லப்பட்டனர்?
அறிக்கையில் ஆய்வு
செய்யப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில்,
20,000-க்கும் மேற்பட்ட
பாலஸ்தீனக் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
மொத்த உயிரிழப்புகளில் சுமார் 30 சதவீதம் குழந்தைகள். இடிந்த கட்டடங்களின் கீழ் இன்னும் ஆயிரக்கணக்கான குழந்தைகள்
காணாமல் போயுள்ளனர்.
இன்னும் பல
ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கை, கால்கள்
துண்டிக்கப்பட்டுள்ளன. குழந்தைகளில் பார்வையிழந்தவர்கள், தீக்காயமடைந்தவர்கள்,
மூளை மற்றும் முதுகுத்தண்டு பாதித்தவர்கள் உள்ளனர். இவர்கள்
உயிர்பிழைத்திருந்தாலும்,
தமது நோய்களாலும், உறுப்பு இழப்பாலும் நீண்ட
காலம் உயிர் வாழவோ,
இனப்பெருக்கம் செய்யவோ முடியாது. குழந்தைகள் மருத்துவமனைகள் குறிவைத்து குண்டுவீசித் தாக்கப்பட்டன.
குழந்தைகளுக்கான
தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மின்சாரம் இல்லாமல் செயலிழந்ததால். சிகிச்சையில்
இருந்த குழந்தைகளும் இறந்துவிட்டன.
இன்குபேட்டர்களில்
இருந்த குறைப் பிரசவக் குழந்தைகள் உயிரிழந்தனர். ஆம்புலன்ஸ்கள் தாக்கப்பட்டன
அல்லது தடுக்கப்பட்டன.
குழந்தைகளுக்கு
சிகிச்சையளித்த மருத்துவர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர்.
இதன் விளைவாக, மரணத்தைத் தடுக்கும் வாய்ப்பிருந்தும், ஆயிரக்கணக்கான குழந்தைகள்
மரணமடைந்தனர்.
பட்டினி போட்டே கொன்றார்கள்.. அறிக்கையின்
மிகவும் முக்கியமான பகுதிகளில் இதுவும் ஒன்று,
இஸ்ரேல் விதித்த
கட்டுப்பாடுகள் காரணமாக,
உணவு, குடிநீர், மருந்துகள்,
எரிபொருள் ஆகியவற்றை பல நாடுகள் அனுப்பியிருந்தும், அவை மக்களுக்கு சென்று சேராமல் இஸ்ரேல் ராணுவம் தடுத்துவிட்டது என்று அறிக்கை
கூறுகிறது.
இதன் விளைவாக, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் பட்டினியால்
உயிரிழத்தல்,
நீரிழப்பு, அசுத்தமான குடிநீரால்
நோய்கள் பரவுதல்போன்றவை பெருமளவில் ஏற்பட்டது. ( நன்றி: ஜனசக்தி, 16/07/2026, https://www.janasakthi.in/atrocities-against-palestinian-children-un-report/ )
இரண்டாவது:- ஃபலஸ்தீன குழந்தைகளில் 60,737 குழந்தைகள் தம் பெற்றோரில் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து இருப்பதாக
காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் 52,095 குழந்தைகள் தங்களது தந்தையையும், 5,929 குழந்தைகள் தங்களது தாயையும், 2713 குழந்தைகள் தங்களது
தந்தையையும் தாயையும் இழந்துள்ளார்கள் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ( நன்றி:
தீக்கதிர் )
ஒன்று ஃபலஸ்தீனின்
வம்சமே இருக்கக் கூடாது. அப்படியே இருந்தாலும் அவர்கள் தாய் தந்தை அற்ற அல்லது இருவரில்
ஒருவரை இழந்த வலி மிகுந்த வாழ்க்கையை வாழக்கூடியவர்களாக இருக்க வேண்டும். இது தான்
இஸ்ரேலின் கேடு கெட்ட எண்ணம்.
இதற்கு அமெரிக்கா
உள்ளிட்ட பல்வேறு நாடுகள் துணை போகிறது. ஒன்றிரண்டு இஸ்லாமிய நாடுகளைத் தவிர மற்ற
எல்லா இஸ்லாமிய நாடுகளும் கள்ள மௌனம் சாதித்து வருகின்றன.
ஐ.நா வெறும்
அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுக் கொண்டு கையாலாகாத நிலையில் உள்ளது.
இந்த உலகில் தாய்
தந்தை இல்லாத நிலையில் வாழ்வது, தாய் தந்தையரில் ஒருவரை
இழந்து வாழ்வது இதை விட வலி மிகுந்த வாழ்க்கை எதுவும் இல்லை.
நபி ﷺ அவர்களின் வாழ்க்கையில் பெரும்
பகுதியை கழித்து விட்ட தருணத்தில் அல்லாஹ் கூறும் இந்த ஆறுதலே அந்த வாழ்க்கை
எத்தகைய வலி மிகுந்தது என்பதை விளங்கிக் கொள்ள போதுமானதாகும்.
اَلَمْ
يَجِدْكَ يَتِيْمًا فَاٰوٰى
(நபியே!) அவன் உம்மை
அநாதையாகக் கண்டு,
அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா? ( அல்குர்ஆன்: 93:
6 )
நபி ﷺ அவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும்போதே அவர்களுடைய
தந்தை இறந்து நபி ﷺ
அநாதை ஆகிவிட்டார்கள்,
பிறகு பிறந்த சில ஆண்டுகளில் தாயும் மறைந்து விட்டார்கள்.
ஆனால் அல்லாஹ் அவர்களை கைவிடவில்லை.
நபி ﷺ அவர்களுடைய வாழ்க்கைக்கு ஒரு பாதுகாப்பை அல்லாஹ்
கொடுத்தான்
அவர்களுடைய
பாட்டனார் மற்றும் சிறிய தந்தையின் மூலம் கவுரமாக தான் அவர்கள்
வளர்க்கப்பட்டார்கள்,
என்பதை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
தாம் பெற்றெடுத்த
குழந்தைகள் தங்களது கண் முன்னே கொல்லப்பட்டு, துடி துடித்து இறந்து
போவது, கை கால்கள் மற்றும் இதர உறுப்புகள் இழந்து கஷ்டப்படுவதை பார்த்து வாழும்
வாழ்க்கையும் வலி மிகுந்த வாழ்க்கையாகும்.
அந்த வலியை
வார்த்தைகளால் விவரித்து விட முடியாது.
அல்லாஹ்வின்
கட்டளை திடீரென மூஸா அலை அவர்களின் தாயாருக்கு வருகிறது. அதுவும் அவனது பாதுகாப்பு
மற்றும் சிறந்த கைமாறு என்ற வாக்குறுதியின் வடிவில் வருகிறது.
வேறொன்றுமில்லை, அந்தக் குழந்தையை பேழையில் வைத்து நதி நீரில் விட்டு விட வேண்டும். சில
நாட்களுக்கு குழந்தையை காணாமல் இருக்க வேண்டும். அவ்வளவு தான்.
وَاَوْحَیْنَاۤ
اِلٰۤی اُمِّ مُوْسٰۤی اَنْ اَرْضِعِیْهِ فَاِذَا خِفْتِ عَلَیْهِ فَاَلْقِیْهِ
فِی الْیَمِّ وَلَا تَخَافِیْ وَلَا تَحْزَنِیْ اِنَّا رَآدُّوْهُ اِلَیْكِ
وَجَاعِلُوْهُ مِنَ الْمُرْسَلِیْنَ
நாம் மூஸாவின்
தாயாருக்கு: “அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக; அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை
உன்னிடம் மீள வைப்போம்;
இன்னும், அவரை (நம்) தூதர்களில்
ஒருவராக்கி வைப்போம்”
என்று வஹீ அறிவித்தோம். ( அல்குர்ஆன்: 28: 7 )
எனினும், அந்த தாயார் தமது மகனை காணாது எப்படி பரிதவித்தார் என்று அடுத்த இரண்டு
வசனங்களின் பின்னர் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் விவரிக்கின்றான்.
وَاَصْبَحَ
فُؤَادُ اُمِّ مُوْسٰی فٰرِغًا اِنْ كَادَتْ لَتُبْدِیْ بِهٖ لَوْلَاۤ اَنْ
رَّبَطْنَا عَلٰی قَلْبِهَا لِتَكُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ
மூஸாவின் தாயுடைய
இருதயம் (துக்கத்தால்) வெறுமையாகி விட்டது; முஃமின்களில்
நின்றுமுள்ளவளாய் இருப்பதற்காக நாம் அவள் உள்ளத்தை உறுதிப்படுத்தாது
இருந்திருந்தால்,
அவள் (மூஸா ஆற்றில் விடப்பட்டதை) வெளிப்படுத்த
முற்பட்டிருப்பாள்.
وَقَالَتْ
لِاُخْتِهٖ قُصِّیْهِ فَبَصُرَتْ بِهٖ عَنْ جُنُبٍ وَّهُمْ لَا یَشْعُرُوْنَ
இன்னும் மூஸாவின்
சகோதரியிடம்: “அவரை நீ பின் தொடர்ந்து செல்” என்றும் (தாய்) கூறினாள்.
(அவ்வாறே சென்று ஃபிர்அவ்னின்) ஆட்கள் காண முடியாதபடி அவள் தூரத்திலிருந்து அவரை
கவனித்து வந்தாள். (அல்குர்ஆன்: 28: 10,11 )
எந்தக் குறையும்
இல்லாமல் மீண்டும் தருவேன் என்று வாக்களிக்கப்பட்ட குழந்தையை காணாமலே மூஸாவின்
தாய் பரிதவித்தார் என்றால் பீரங்கி குண்டுகளுக்கும், துப்பாக்கி தோட்டாக்களுக்கும் இரையாகி, ஏவுகணை தாக்குதலுக்கு
இலக்காகிய கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் பிணமாகிய தங்களது குழந்தைகளை காணும்
போது அந்த தாயின் அந்த தந்தையின் வலியும் பரிதவிப்பும் எப்படி இருக்கும்?.
வலி மிகுந்த
வாழ்க்கை வாழ்வதை விட்டும் வல்ல ரஹ்மான் ஃபலஸ்தீன மக்களையும், உங்களையும், என்னையும் காத்தருள்வானாக!
இன்று இந்த
வாழ்க்கையை நாம் வாழும் இந்த நூற்றாண்டில் உலகின் ஒரு மூலையில் காஸாவின் முஸ்லிம்
சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
ஒற்றை பெற்றோர்...
குழந்தை வளர்ப்பு
என்பது இன்றைய சூழ்நிலையில் ஒரு கடினமான செயலாக மாறிவிட்டது. அதிலும் சிங்கிள்
பேரண்ட் எனும் ஒற்றைப் பெற்றோர் என்பது சவாலான காரியம்தான்.
தன் துணையின்றி
தனியாகக் குழந்தையை வளர்க்கும் ஒரு ஆணோ, பெண்ணோ குடும்பத்தில்
மட்டுமின்றி சமூகத்திலும் பல்வேறு சவால்களை சந்திக்கிறார்கள்.
கணவன் அல்லது
மனைவி இறந்துவிட்டாலோ,
இருவரது உறவு முறிந்துவிட்டாலோ ஒற்றைப் பெற்றோரால்
குழந்தைகள் வளர்க்கப்படுகின்றன.
ஆணின்றி ஒரு பெண்
மட்டும் குழந்தையை வளர்த்தால் அவள் தாயாக மட்டுமின்றி அந்த குழந்தைக்குத்
தந்தையாகவும் இருக்க வேண்டும். அதுபோலவே ஆணும், தந்தை மட்டுமின்றி
தாயாகவும் இருக்க வேண்டும்.
எப்படி
பெற்றோர்களை இழந்து வாழ்வது வலி மிகுந்த வாழ்க்கையோ, அது போன்றே ஒற்றை பெற்றோராக வாழ்வதும் வலி மிகுந்த வாழ்க்கையே.
கணவனை இழந்து மகன்
அல்லது மகளோடு வாழ்வது,
மனைவியை இழந்து மகன் அல்லது மகளோடு வாழ்வது என்பது இந்த
உலகில் சவாலான வாழ்க்கையாகும்.
alt="♦" data-emoji="♦" class=an1 aria-label="♦" draggable=false loading=lazy
v:shapes="_x0000_i1025"> சமூக தாக்கங்கள்
குழந்தைகளின்
உளவியல் சிக்கல்கள்
சுகாதாரப்
பராமரிப்பு
பெற்றோரின் மனநலன்
குழந்தைகளின்
மனநலன்
குடும்பத்தை
சமாளித்தல்
உணவு, கல்வி,
பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டி
வரும்.
இமாம் ஷாஃபிஈ
(ரஹ்) அவர்களின் தாயார் கணவரை இழந்து மகனுடன் ஒற்றை பெற்றோராய் வறுமையில் வாழ்ந்து
வந்தார்.
தன்னுடைய மகனை ஒரு
மிகப்பெரிய முஹத்திஸ் (ஹதீஸ்கலையை கற்றவர்) ஆக்க வேண்டும் என்ற பேராவல் அந்த
தாயாருக்கு இருந்தது.
இமாம் ஷாஃபிஈ
(ரஹ்) அவர்களின் தாயாரிடம் ஒரு துப்பட்டி தவிர வேறு ஒன்றும் இல்லை. அந்த துப்பட்டியை விற்றதால் நான்கு திர்ஹம் கிடைத்தன.
அந்த பணத்தை வைத்து இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்களை மார்க்க அறிவு
பெற வெளியூருக்கு அனுப்பி வைத்தார்கள்.
قال
الحميديُّ: قال محمد بن إدريس الشافعي رحمه الله: "كنت يتيمًا في حجر أمي
فدفعتني في الكتَّاب، ولم يكن عندها ما تعطي المعلمَ، فكان المعلمُ قد رضي مني أن
أخلفه إذا قام،
கற்றுக் கொடுக்கும் ஆசிரியருக்கு கொடுப்பதற்கு எந்த
வசதியும் இல்லாத சூழலில் இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் கல்வி கற்றார்கள்.
فلما ختمت القرآن دخلت المسجدَ، فكنت أجالسُ العلماءَ، وكنت أسمعُ
الحديثَ أو المسألة فأحفظها، ولم يكن عند أمي ما تعطيني أن أشتري به قراطيسَ قطُّ،
فكنت إذا رأيت عظمًا يلوح آخُذُه فأكتب فيه، فإذا امتلأ طرحته في جرة كانت لنا
قديمة"،
கற்றுக் கொள்ளும்
ஹதீஸ்களை எழுத குறிப்பெடுக்க காகித பேப்பர் வாங்க கூட இயலாத சூழ்நிலை நிலவியது.
அப்போது, இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் ஒட்டகத்தின் எழும்புகளில் எழுதிக் கொள்வார்கள்.
மகன் படும் சிரமங்களைப் பார்த்த இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்களின் தாயார் "இமாம்
ஷாஃபிஈ ரஹ் அவர்களின் கல்வித்தேவைக்காக வீதிகளில் வீசப்படும் பழைய காகிதங்களை
பொறுக்கிக் கொடுத்தார்கள்" என ஒரு வரலாறு சொல்கிறது.
ஒரு கட்டத்தில்
தனது தாயார் படும் சிரமங்கள், எழுதி வைத்த எழும்புகளை
பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய சூழல் ஆகியவை இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்களுக்கு
சங்கடங்கள் தரவே எழுதிய அனைத்தையும் மனனம் செய்து விட்டு, எழுதப்பட்ட எழும்புகளை வீசி விட்டார்கள்.
قال: "ثم قدم والٍ على اليمن، فكلَّمه لي بعضُ القرشيين أن
أصحبَه، ولم يكن عند أمِّي ما تعطيني أتحمَّل به، فرهنت دارها بستة عشر دينارًا،
فأعطتني فتحملت بها معه
யமனுக்குச் சென்று பெரும் பெரும் அறிஞர்களைச் சந்தித்து உயர் கல்வி கற்கும் ஆசையை தம் தாயிடம் தெரிவித்த போது இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்களின் தாயார் தமது வீட்டை 16 தீனார்களுக்கு அடமானம் வைத்து கொடுத்தார்கள். அந்த தீனார்களைக் கொண்டு உயர் கல்வி கற்க இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் யமன் சென்றார்கள்.
உண்மையில், ஒற்றைப் பெற்றோர் தமது மக்களுக்கு கல்வியறிவைக் கொடுக்க படாத பாடு பட வேண்டும்.
தற்போதைய காலகட்டத்தில் எவ்வளவு சிரமம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதிலும், காஸாவில் உணவு, மருத்துவம்,
கல்வி, அடிப்படை தேவைகள் ஆகியவற்றை பூர்த்தி செய்ய அந்த ஒற்றைப் பெற்றோர் எவ்வளவு பாடுபடுவார்கள்?
அநாதைகள்...
தாய், தந்தை இருவரையும் இழந்து வாழும் வாழ்க்கை இருக்கின்றதே அந்த வாழ்க்கை
மிகவும் கொடியதாகும். அப்படிப்பட்ட வலியும், ரணமும் நிறைந்த வாழ்க்கையையும் நாம் வாழும்
இந்த நூற்றாண்டில் உலகின் ஒரு மூலையில் காஸாவின் குழந்தைகள் நூறாண்டுகளுக்கும் மேலாக
வாழ்ந்து வருகின்றார்கள்.
அனாதை என்பதற்கான அரபு
வார்த்தை யதீம். தந்தை இல்லாத அல்லது தந்தை இறந்துவிட்ட அல்லது பெற்றோர்
இருவரையும் இழந்து பருவ வயதை எட்டாத எந்தவொரு குழந்தையும் (ஆண் அல்லது பெண்)
இஸ்லாமிய நீதித்துறையில் யதீம் என்று வகைப்படுத்தப்படுகிறது. நவீன மற்றும் பொதுவாக
அறியப்பட்ட வரையறையின்படி,
'அனாதை' என்ற சொல் 18 வயதை அடைவதற்குள் பெற்றோரை இழக்கும்
குழந்தைகளைக் குறிக்கிறது.
உலகில் உள்ள மொத்த
குழந்தைகளின் எண்ணிக்கையில் 6.5% அனாதைகள் என்று
மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகில் அனைத்து மதங்களும்
அநாதைகள் குறித்து பேசுகின்றன. ஆனால், அனாதைகளைப் பற்றி
விரிவாகப் பேசிய ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. 'யதீம்' என்ற வார்த்தை புகழ்பெற்ற
குர்ஆனில் 22 க்கும் மேற்பட்ட முறை குறிப்பிடப்பட்டுள்ளது,
இது சமூகத்தின் மிகவும்
ஒதுக்கப்பட்ட பிரிவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
இஸ்லாம் அனாதைகளின்
வாழ்க்கையை மேம்படுத்துவதில் மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது.
இப்போது நம்மைச் சுற்றி
வாழும் இந்த ஆன்மாக்களுக்கு உதவுவதிலும் சேவை செய்வதிலும் நாம் என்ன பங்கு வகிக்க
வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
அனாதைகளைப் பராமரித்தல்
மற்றும் பாதுகாத்தல் என்ற உன்னதச் செயலைப் பற்றி நமது சமூக மக்களுக்குக்
கற்பிப்பது வணக்க வழிபாடுகளுக்கு சமமானது என்பதை நாம் உணர வேண்டும்.
அநாதைகள் குறித்தான புள்ளி
விவரங்கள்…
"உலகின் ஒவ்வொரு போரிலும்
எஞ்சுவது நிராதரவாய் - அநாதைகளாய் நிற்கும் குழந்தைகள்தான்" என்கிறார் ஒரு
சிந்தனையாளர்.
பருவ நிலை மாற்றம், திடீர் மரணங்கள், விபத்துகள், இயற்கை பேரிடர்கள், இடம் பெயர்வு போன்றவைகளால்
அநாதைகள் உருவாக்கப்பட்டாலும், போரால் உருவாக்கப்படும் அநாதைகளே உலகில்
அதிகம் என்பது நிதர்சன உண்மையாகும்.
அநாதைகள் பற்றிய பதிவுகள்
கி.மு 400-ம் நூற்றாண்டில் ரோமானியப்
பேரரசர்கள் காலம் தொடங்கியதிலிருந்து நமக்குக் கிடைக்கின்றன. ரோமானியப் பேரரசு
காலத்திலேயே அனாதை இல்லங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
பைபிளுக்குப் பிறகு அதிகம்
அச்சிடப்பட்டு விற்கப்படும் புத்தகம், இரண்டாம் உலகப்போரால்
யாருமற்றவளாகி இறந்த சிறுமி "ஆன் ஃப்ராங்கின்" போர்க்கால
நாட்குறிப்புகள்தான்.
இரண்டாம் உலகப்போர், ஆன் ஃப்ராங்க் போன்ற ஐந்து லட்சம் அனாதைச்
சிறுவர்களை விட்டுச்சென்றுள்ளது என அன்றைய பதிவுகள் கூறுகின்றன.
தாலிபன் மற்றும் ஆஃப்கன்
மக்களிடையேயான 30 வருடப் போர், இரண்டு மில்லியன் குழந்தைகள் மற்றும் பெண்களை
அடுத்தவேளை எப்படி உயிர் வாழவைக்கப் போகிறது என்ற கேள்விக்குறியான சூழலுக்கு
உட்படுத்தியது. 6,00,000 பேருக்கு இன்றுவரை தெருக்கள்தான் வீடு.
கொள்கையிருந்தும்
மனிதநேயம் குப்பையில் என்பதற்கு உதாரணமாய் ரஷ்யாவைச் சொல்லலாம். வருடாந்திரமாக
அங்கே 6,50,000 சிறார்கள் எவருமின்றித் தனித்து அனாதைகளாக
விடப்படுகின்றனர். ஆதரவற்ற அவர்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அவர்களின் 16 வயதுவரை அரசு ஏற்கிறது. அதன்பிறகு தங்கள்
வாழ்வை அவர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், அதன்பிறகு நடப்பதோ வேறு. 10 சதவிகித பிள்ளைகள் என்ன செய்வது என்று
தெரியாமல் தற்கொலை செய்துகொள்ளும் சூழலில் 20 சதவிகிதம் பேர்
குற்றங்களில் ஈடுபடுகின்றனர். 40 சதவிகிதம் பேர் வீடற்று
அதே சூழலுக்குத் திரும்புகின்றனர்.
இந்த நூற்றாண்டின்
மிகப்பெரும் யுத்தமாகக் கருதப்படும் சிரியப் போரால் இன்றுவரையில் உறவுகளிடமிருந்து
பிரிந்து சிதறுண்ட மனிதர்களின் எண்ணிக்கை இரண்டரை மில்லியன். நடுக்கடலில்
தத்தளித்து ஒரு விடியற்காலையில் துருக்கியின் கடற்கரையோரம் ஒதுங்கிய மூன்று வயது
சிறுவன் அய்லான் குர்தியின் உடல் அதற்குச் சாட்சியம்.
2015 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகில் 14.4 கோடி அநாதைகள் இருந்தனர். இவர்களுல் ஆசியாக்
கண்டத்தில் மாத்திரம் 8.76 கோடி அநாதைகள்
வாழ்கின்றனர். ஆப்பிரிக்காவில் 52 மில்லியன், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனில் 10 மில்லியன், கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் 7.3 மில்லியன்"
அதே நேரம் ஒவ்வொரு 14 ஆவது நொடியிலும் புதிதாக ஒரு அநாதைக்
குழைந்தை உருவாகுவதாகவும் 2 நிமிடத்திற்கு ஒரு அநாதை
வீதம் பராமரிப்பின்றியும் போதிய ஊட்டச் சத்தின்றியும் இறப்பதாகவும் ஐ.நா சபையின்
கீழ் இயங்கும் சிறுவர் பாதுகாப்பு பிரிவான யுனிசெப் அறிவித்துள்ளது. ஐந்து
வயதுக்கும் குறைவான 50 லட்சம் அநாதைக் குழந்தைகள் இவ்வகையில்
இறப்பதாகவும் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சூடான், உக்ரைன், மியான்மர், பாலஸ்தீனம், போன்ற நாடுகளில் 460 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் வசிக்கின்றனர் அல்லது அங்கிருந்து தப்பிச்
செல்கின்றனர். இந்த குழந்தைகள் உடல் ரீதியான ஆபத்துகளை மட்டுமல்ல, தங்கள் குடும்பங்களை இழப்பதால் ஏற்படும்
உணர்ச்சிகரமான அதிர்ச்சியையும் எதிர்கொள்கின்றனர்" என்கிறது யுனிசெஃப். (
நன்றி: விகடன், 14/11/2016, நியூஸ் 18, 06/01/2025 )
அநாதைகள் விஷயத்தில் கவனம்
வேண்டும்....
وَيَسْأَلُونَكَ عَنِ
الْيَتَامَى قُلْ إِصْلَاحٌ لَهُمْ خَيْرٌ وَإِنْ تُخَالِطُوهُمْ فَإِخْوَانُكُمْ
وَاللَّهُ يَعْلَمُ الْمُفْسِدَ مِنَ الْمُصْلِحِ وَلَوْ شَاءَ اللَّهُ
لَأَعْنَتَكُمْ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
மேலும் …”அநாதைகள் பற்றி உம்மிடம்
கேட்கிறார்கள், அவர்களுடன் நல்ல முறையில்
நடந்து கொள்வது நலவாகும். என்று நபியே ! கூறிவிடுங்கள் மேலும் அவர்களுடன் நீங்கள்
கலந்து இருந்தால் அவர்கள் உங்கள் சகோதரர்களாவர்…( அல்குர்ஆன்: 2- 220 )
இந்த வசனம் இரண்டு
முக்கியமான விசயங்களை எடுத்துக் காட்டுகிறது. முதலாவது அநாதைகளுடன் எந்த
பாகுபாடின்றி நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். என்பதாகவும், இரண்டாவது அவர்கள் யாரும் அற்ற அநாதைகள்
என்று ஒதுக்கி விடாமல் நமது சகோதரர்களைப் போல இரண்டரக் கலந்து இருக்க வேண்டும், என்பதையும் மேற்ச் சென்ற குர்ஆன் வசனம்
நமக்கு நினைவு படுத்துகிறது.
أَرَأَيْتَ الَّذِي
يُكَذِّبُ بِالدِّينِ (1) فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ
மேலும் ” நபியே ! நீர் கவனித்தீரா ? நியாயத் தீர்ப்பு நாளை பொய்ப்பிப்பவன் தான்
அநாதைகளை விரட்டுவான். ( அல்குர்ஆன்: 107 -01 )
அநாதைகளை புறக்கணிக்கக்
கூடாது, அப்படி புறக்கணிப்பவன்
தான் பொய்யன் என்பதை மேற்ச் சென்ற குர்ஆன் வசனம் எச்சரிக்கிறது்.
كَلَّا بَلْ لَا
تُكْرِمُونَ الْيَتِيمَ
மேலும் ” நீங்கள் அநாதைகளை கண்ணியப் படுத்துவதும்
கிடையாது” (89- 17)
அநாதைகளை நாம் கண்ணியப்
படுத்த வேண்டும் என்பதை மேற்ச் சென்ற வசனம் நமக்கு ஆர்வமூட்டுகிறது. எனவே அநாதைகள்
விஷயத்தில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும்.
குடும்ப உறவுகளுக்கே முழு முதற் கடமை....
أخبرنا
محمد بن عمر حدثني بن أبي حبيبة عن داود بن الحصين عن عكرمة عن بن عباس قال: إن
عمارة بنت حمزة بن عبد المطلب وأمها سلمى بنت عميس كانت بمكة، فلما قدم رسول الله
كلم علي النبي، فقال: علام تترك ابنة عمنا يتيمة بين ظهري المشركين ، فلم ينهه
النبي عن إخراجها فخرج بها ، فتكلم زيد بن حارثة وكان وصي حمزة وكان النبي آخى
بينهما حين آخى بين المهاجرين، فقال: أنا أحق بها، ابنة أخي. فلما سمع بذلك جعفر بن
أبي طالب قال: الخالة والدة، وأنا أحق بها لمكان خالتها عندي أسماء بنت عميس. فقال
علي: ألا أراكم تختصمون في ابنة عمي وأنا أخرجتها من بين أظهر المشركين وليس لكم
إليها نسب دوني وأنا أحق بها منكم. فقال رسول الله: " أنا أحكم بينكم، أما
أنت يا زيد فمولى الله ورسوله، وأما أنت يا علي فأخي وصاحبي، وأما أنت يا جعفر
فشبيه خلقي وخلقي، وأنت يا جعفر أولى بها تحتك خالتها ولا تنكح المرأة على خالتها
ولا على عمتها"، فقضى بها لجعفر.
ஹம்ஜா (ரலி)
அவர்கள் உஹதில் ஷஹீதாக்கப்பட்டு விட்டார்கள். அவர்களின் மனைவி ஸல்மா பிந்த் உமைஸ்
(ரலி) அவர்களும்,
ஹம்ஜா (ரலி) அவர்களின் ஒரே மகளான அமாரா (ரலி) அவர்களும்
மக்காவில் வாழ்ந்து வந்தார்கள்.
அலீ (ரலி) அவர்கள்
நபி ﷺ அவர்களிடம் “ஹம்ஜா (ரலி) அவர்களின்
ஒரேயொரு மகள் இப்போது அநாதையாகி மக்கத்து இணைவைப்பாளர்கள் மண்ணில் நிற்கிறாள்.
நான் சென்று அழைத்து வரட்டுமா?” என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர்
ﷺ அனுமதி தரவே அலீ (ரலி) அவர்கள் மக்கா சென்று அமாராவை
மதீனாவிற்கு அழைத்து வந்தார்கள்.
அமாராவை யார்
பொறுப்பேற்பது?
என்று மூன்று நபித்தோழர்கள் ஒவ்வொருவரும் தாம் தான்
எடுப்பேன் என சண்டையிட்டுக் கொண்டார்கள்.
இறுதியாக, நபி ﷺ அவர்களிடம் இந்த விவகாரத்தைக் கொண்டு வந்தனர் அந்த
மூவரும்.
அலீ (ரலி) அவர்கள், ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்கள், ஜஅஃபர் இப்னு அபூதாலிப்
அவர்கள் இம்மூவரும் தான் சண்டையிட்டுக்கொண்டவர்கள்.
நபி ﷺ அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் எந்த முறையில் நீர்
அமாராவை வளர்ப்பதற்கு அனுமதி கோருகின்றீர்? என்று கேட்டார்கள்.
”அல்லாஹ்வின் தூதரே! அமாரா
என் தந்தையின் சகோதரரின் மகள் ஆகவே அதிகத் தகுதியுடையவன் நான்” என்று அலீ (ரலி) பதில் கூறினார்கள்.
நபி ﷺ அவர்கள் ஜைத் (ரலி) அவர்களிடம் எந்த முறையில் நீர்
அமாராவை வளர்ப்பதற்கு அனுமதி கோருகின்றீர்? என்று கேட்டார்கள்.
”அல்லாஹ்வின் தூதரே! ஹம்ஜா
அவர்களும் நானும் ஒரே தாயிடத்தில் பால் குடித்திருக்கின்றோம். மேலும், எனக்கும் அவருக்கும் இடையே நீங்கள் தான் சகோதரத்துவ உறவை ஏற்படுத்தி
இருக்கின்றீர்கள். ஆகவே,
இரு தகுதிகள் இருப்பதால் நானே அதிகத்தகுதியுடையவன்” என்று ஜைத் (ரலி) பதில் கூறினார்கள்.
நபி ﷺ அவர்கள் ஜஅஃபர் (ரலி) அவர்களிடம் எந்த முறையில் நீர்
அமாராவை வளர்ப்பதற்கு அனுமதி கோருகின்றீர்? என்று கேட்டார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! ஹம்ஜா
(ரலி) அவர்கள் என் தந்தையின் சகோதரர் ஆவார், மேலும், ஹம்ஜா (ரலி) மணம் முடித்திருக்கின்ற ஸல்மா பிந்த் உமைஸ் (ரலி) அவர்களின்
சகோதரி அஸ்மா பிந்த் உமைஸ் (ரலி) அவர்களை நான் மணம் முடித்திருக்கின்றேன்.
அமாராவுக்கு என் மனைவி சின்னம்மா ஆவாள். ஆகவே நானே அதிகத் தகுதியுடையவன்” என்று ஜஅஃபர் (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்.
மூவரின் உரிமை
கோரலையும் செவிமடுத்து விட்டு பெருமானர் ﷺ அவர்கள் அலீ (ரலி) அவர்களை அழைத்து ”அலீயே! நீர் என் சகோதரரும், என் சுவனத்து தோழரும்
ஆவீர்! ஜைத் (ரலி) அவர்களை அழைத்து “ஜைதே! நீர் அல்லாஹ், ரசூலின் அடிமையாவீர்!,
ஜஅஃபர் (ரலி) அவர்களை அழைத்து “ஜஅஃபரே! நீர் என்னைப் போன்றே குணத்திலும், தோற்றத்திலும் ஒத்து
இருக்கின்றீர்!”
என்று கூறி விட்டு, அமாராவின் சின்னம்மாவை
நீர் மணம் முடித்திருப்பதால் நீரே அமாராவை வளர்ப்பதற்கு தகுதியாவீர்! நீர் அமாராவை
உம் பொறுப்பில் எடுத்து வளர்த்துக் கொள்வீராக!” என்று
தீர்ப்பளித்தார்கள். ( நூல்: தபகாத் இப்னு ஸஅத் )
அநாதைக் குழந்தைகளை
அரவணைத்தால்.....
நபி (ஸல்) அவர்கள்
பிறப்பதற்கு முன்னரே தந்தை அப்துல்லாஹ் மரணித்து விட்டார்கள். நபியவர்கள் பிறந்து
சிறிது காலத்தில் தாய் ஆமினாவும் மரணித்து விட்டார்கள்.
وقالت حليمة: قدمنا مكة نلتمس
الرضعاء فما منا امرأة إلا وقد عرض عليها رسول الله -صلى الله عليه وسلم- حتى
تأباه إذا قيل لها أنه يتيم، وذلك إنا كنا نرجو الخير من أبي الصبي، فكنا نقول
«يتيم» وما عسى أن تصنع أمه وجده فكنا نكره لذلك· وتقول حليمة: فما بقيت امرأة
قدمت معي إلا أخذت رضيعا غيري، فلما أجمعنا الانطلاق قلت لزوجي والله أنني لأكره
أن أرجع من بين صواحبي ولم أخذ رضيعا والله لأذهبن إلى ذلك اليتيم لأخذه فقال لها:
لا عليك عسى الله أن يجعل لنا فيه بركة· فإذا هو -صلى الله عليه وسلم- مغطى بصوف
أبيض وتحته حريرة خضراء يغط في نومه تفوح منه رائحة المسك، فأشفقت أن أوقظه من
نومه لحسنه وجماله فوضعت يدي على صدره ففتح عينيه وتبسم ضاحكا إلىّ فخرج من عينيه
نور حتى دخل خلال السماء وأنا أنظر فقبلته بين عينيه وأخذته ورجعت به إلى رجلي،
فما وضعته في حجري حتى أقبل عليه ثدياي بما شاء من اللبن فشرب حتى شبع وشرب معه
أخوه حتى شبع ثم ناما وما كنا ننام قبل ذلك، وقام زوجي إلى الشاه التي معنا وحلب
منها وشرب وشربت معه حتى انتهينا رياً وشبعنا فبتنا بخير ليلة· وقالت حليمة: قال
لي زوجي: اعلمي يا حليمة والله لقد أخذت نسمة مباركة
அன்றைய காலத்தில் பிற
குழந்தைகளுக்கு வாடகைக்காக பால் ஊட்டுவது வழக்கம். அந்த அடிப்படையில்
நபியவர்களுக்கு அபூ லஹபின் அடிமையான ”ஸூவைபிய்யா என்ற தாயிடம் நபியவர்கள் பால் குடித்தார்கள்.
மேலும் ஹலீமா அவர்களிடமும் பால் குடித்தார்கள். ஹலீமா அவர்கள் ஆரம்பத்தில்
நபியவர்களை பால் ஊட்ட எடுப்பதற்கு பின் வங்கினார்கள். ஏன் என்றால் தந்தை இருந்தால்
தான் அதற்கான ஊழியம் கிடைக்கும். ஆனால் நபியவர்களுக்கோ தந்தை இல்லை எனவே பால்
கொடுத்தால் ஊழியம் யாரிடம் பெறுவது என்ற பிரச்சினையால் ஆரம்பத்தில் நபியவர்களுக்கு
பால் கொடுப்பதற்கு எவரும் முன்வரவில்லை. என்றாலும் வேறு குழந்தைகள்
கிடைக்காததினால் இறுதியில் நபியவர்களையே ஹலீமா அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
நபியவர்களின் சிறப்பால்
ஹலீமா அவர்களது ஒட்டகம் தாராளமாக பால் கொடுக்க ஆரம்பித்தது. அவர்கள் பயணம்
செய்யும் கழுதை வேகமாக பயணிக்க ஆரம்பித்தது. ஹலீமா அவர்களது மார்பில் தாராளமாக
பால் சுரக்க ஆரம்பித்தது. அவர்களது குடும்பத்திற்கு அல்லாஹ்வின் அருள் வளம் வர
ஆரம்பித்து. ஹலீமாவே! நீ அதிகமான பரகத்துள்ள குழந்தையை பெற்றுள்ளாய் என்று
ஹலீமாவின் கணவர் கூறினார்.
இது அநாதைக் குழந்தையின்
மூலம் அக்குடும்பத்திற்கு அல்லாஹ்வால் கொடுக்கப் படு்ம் எதிர் பாராத அருள்
வளமாகும்.
அநாதைகளை அன்பால் ஆறுதல்
படுத்துங்கள்..
عن بشير بن عقربة قال : لما قتل أبي عقربة يوم أحد
أتيت النبي صلى الله عليه وسلم ، وأنا أبكي فقال : يا حبيب ! ما يبكيك ؟ أما ترضى
أن أكون أنا أباك وعائشة أمك ؟ قلت: بلى يا رسول الله بأبي أنت وأمي ! فمسح على
رأسي فكان أثر يده من رأسي أسود وسائره أبيض ، وكانت لي رتة فتفل فيها فانحلت ،
وقال لي : ما اسمك ؟ قلت : بحير ، قال : بل أنت بشير .
நான் உமக்கு தந்தையாகவும், ஆயிஷா உங்கள் தாயாகவும் மாறினால் அது உமக்கு
மகிழ்ச்சி தருமா?' முத்து போன்ற வார்த்தைகள்
உதிர்த்தார்கள் முத்து நபி صَلَّى اللهُ عَلَيْهِ وَاٰلِهٖ وَسَلَّم அவர்கள்.
எதிரில் அழுது கொண்டிருந்த
நான்கு வயது நிரம்பிய சிறுவரை நோக்கி.
ஏன் அழுகிறாய்? என்று மாநமி ஸல் அவர்கள் வினவியதற்கு, "எனது தந்தை அக்ரிபா (ரலி) உஹதும் போரில் ஷஹீதாகி
விட்டார்" என்று அழுது கொண்டே சொன்ன அந்த சிறுவனிடம் மாநபி ஸல் அவர்கள்
உதிர்த்த வார்த்தைகள் தான் "நான் உமக்கு தந்தையாகவும், ஆயிஷா உங்கள் தாயாகவும் மாறினால் அது உமக்கு
மகிழ்ச்சி தருமா?'
என் தாயும் தந்தையும்
உங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும்! அல்லாஹ்வின் தூதரே! என்றார் மகிழ்ச்சிப்
பெருக்கோடு.
அருகில் அழைத்த மாநபி ஸல் அவர்கள்
வாஞ்சையோடு அவரின் தலையின் முன் பகுதியை வருடி விட்டார்கள். அவரிடம் காணப்பட்ட ஒரு
வடுவை தமது புனித எச்சிலை உமிழ்ந்து அந்த இடத்தில் தடவினார்கள்.
உமது பெயரென்ன? என்று அன்புடன் மாநபி ஸல் மீண்டும் கேட்க, எனது பெயர் புஹைர் என்றார் அந்த சிறுவர்.
இல்லை இன்று முதல் நீ பஷீர் என்று பெயரிட்டார்கள் மாநபி ஸல் அவர்கள்.
அவரது வயோதிக காலத்திலும்
கூட மாநபி ஸல் அவர்களின் கரம் பட்ட தலையின் முன் பகுதி முடி நரைக்காமல் கருப்பாகவே
இருந்தது. மேலும், அவரின் வடுவும் மறைந்து
போயிருந்தது.
உண்மையில், பஷீர் இப்னு அக்ரிபா (ரலி) அவர்களின்
வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் அது.
அவர் தனது வாழ்க்கையின்
அற்புதமான தொடக்கத்தைக் கொண்டிருந்தார். அனாதையாக ஒரு அதிர்ச்சிகரமான வாழ்க்கையை
வாழ வேண்டியிருந்த அவருக்கு, தலையைத் தடவி, மிகுந்த கருணை காட்டிய மாநபி ஸல் அவர்களின்
அந்த செயல் அதன் பிறகு, அவர் இனி தனிமையாகவோ, தனிமைப்படுத்தப்பட்டவராகவோ உணரவில்லை; அதற்குப் பதிலாக, உலகின் மிக அழகான குடும்பத்தைப் பெற்ற, ஒப்பற்ற செல்வத்தை பெற்ற பெருமிதம் அவருக்கு
ஏற்பட்டது..
دخل ابن سيرين في مسجد من المساجد ووجد غلاماً لا
يتجاوز عمره عشرة سنوات يقول الإمام رأيت الغلام واقفاً من شدة خشوعه كأنهُ جذعُ
نخلة يقول والله لو وقف على رأسه طيراً ما تحرك من شدة الخشوع فقال لما انتهى من
صلاته ناديتُ هذا الغلام فقلت له ابن من انتَ!
فقال ذلك الغلام أنا ولداً يتيم ليس لي أب ولا أم
فقال لهُ هذا الرجل أترضا أن أكون لك أب وأنا أقوم بشئونك وأتولاء شؤون حياتك فقال
هذا الغلام أوافق بخمسة شروط قال وماهي ! أما شرطي الاول : هل ستطعمني اذا جعت !
قال نعم أطعمك حتى تشبع
قال شرطي الثاني : هل ستسقيني اذا عطشت قال أسقيك
حتى ترتوي
قال شرطي الثالث : هل ستكسيني اذا عريت قال أكسيكَ
بأجمل الثياب
قال أما الرابع : هل ستشفيني اذا مرضت ! قال أما
المرض فأنا أقدم لك الدواء والله يتولى شفائك
قال أما شرطي الأخير : هل ستحييني اذا مت ! قال أما
هذه فلا لان الحياة والممات بيد الله الذي لا إله غيره فاسمعو ماذا قال هذا الغلام
قال ياهذا ما دمت لا تستطيع أن تشفيني اذا مرضت ولا تُحييني اذا مُت اذاً أتركني
لكن لمن !!!
﴿
الذي خلقني فهو يهدين .. والذي هو يطعمني ويسقين .. وإذا مرضت فهو يشفين ﴾ قال ذلك
الرجل لا إله الا الله توكل على الله فكفاه الله
இமாம் இப்னு சீரீன்
ரஹ்மஹுமுல்லாஹ் ஒரு மஸ்ஜிதில் நுழைகிறார் .
அங்கு ஒரு பத்து வயது கூட
நிரம்பி இருக்காத ஒரு சிறுவன் தொழுது
கொண்டிருந்தான் எப்படிஎன்றால் மிகவும்
பேணுதலுடன் , அல்லாஹ்வின்
அச்சம் மேலோங்கியவனாக பணிவோடு தொழுகையை
நிறைவேற்றுவதை கண்ட இமாம் இப்னு சீரீன் (ரஹ்) அவனை அழைத்து “ ஒ சிறுவனே நீ
யாருடைய மகன் ?” என்று கேட்க “நான் ஒரு அநாதை சிறுவன் எனக்கு தந்தையும்
இல்லை தாயும் இல்லை” என்று அந்த சிறுவன்
கூறினான் .
இமாம் அவர்களோ ஆர்வமுடன் “நான் உன்னை தத்தெடுத்து கொள்ளவா ?
உனக்கு ஒரு தந்தையாக
இருந்து உன்னுடைய தேவைகளை நிறைவேற்றுவேன் என்னோடு வர சம்மதமா ? என்றார்கள் .
அந்த பத்து வயது கூட
நிரம்பாத அச்சிறுவனோ “நான் உங்களோடு வர
ஐந்து நிபந்தனைகள் உள்ளது அதற்க்கு சரி
என்றால் நான் உங்களோடு வருகிறேன் “ என்று கூறினான் .
இமாம் ஆச்சரியமுடன் “ என்ன அந்த ஐந்து நிபந்தனைகள் என்று கேட்க
அச்சிறுவன்
பட்டியலிடுகிறான் “முதல் நிபந்தனை –எனக்கு பசிக்கும்போது உணவளிப்பீர்களா ? “என்று கேட்க இமாம் “உனக்கு போதும் என்று சொல்லுமளவிற்கு
உணவளிப்பேன் என்றார் .
மேலும் சிறுவனின் இரண்டாம்
நிபந்தனை “எனக்கு தாகம் எடுத்தால்
தாகம் தனிபீர்களா ?
இமாம் “ உனக்கு போதும் என்று சொல்லும் அளவிற்கு உன்
தாகத்தை
தணிப்பேன் “என்றார்கள்
மேலும் சிறுவனின்
மூன்றாவது நிபந்தனை “ எனக்கு ஆடையில்லை என்றால் ஆடை அணிவிபீர்களா ? “
இமாம் : உனக்கு அழகிய
ஆடைகளை அணிவிப்பேன் “ என்றார்கள்
சிறுவனின் நான்காவது நிபந்தனை “ எனக்கு நோய் ஏற்பட்டால் நிவாரணம்
அளிப்பீர்களா ?
இமாம் : நோய் ஏற்பட்டால்
சிகிச்சை அளிப்பேன் . நிவாரணம் அளிப்பது
அல்லாஹ் ஒருவனே “
சிறுவனின் ஐந்தாவது நிபந்தனை “ நான் இறந்தால் நீங்கள் எனக்கு உயிர்
கொடுப்பீர்களா ?
இமாம் : பிறப்பும்
இறப்பும் அல்லாஹ்வின் கரத்தில் அல்லவா உள்ளது “ என்றார்கள்
இமாமை மிக ஆழ்ந்து
யோசிக்கவைத்தான் சிறுவன், மேலும் அவன் இமாமை பார்த்து “ ஓ மனிதரே !! நீங்கள் எனக்கு நோய்வாய் பட்டால்
அதற்க்கு நிவாரணம் அளிக்க முடியாது !
நான் இறந்தால் என்னை
திரும்பவும் உயிர்பிக்க முடியாது ! எனவே என்னை
விட்டுவிடுங்கள் .!!என்றதும் இமாம் “உன்னை விட்டுவிட்டால் உன்னை
கவனிப்பவர் யார் ?
சிறுவனோ “ என்னை விட்டுவிடுங்கள் எவன் என்னை படைத்தானோ ,
எவன் எனக்கு நேர்வழி கொடுத்தானோ , எவன் எனக்கு உண்ணவும் , தாகம் தணிக்கவும் வைக்கிறானோ , யார் நான் நோய்வாய் பட்டால் நிவாரணம் அளிக்கிறானோ , யார் நான் இறந்தால் உயிர் கொடுபானோ அவனே
எனக்கு வாழ்வளிப்பான் ! அவனே என்னை
கவனித்துகொள்வான் !!!
இதைகேட்ட இமாம்
“ لا اله الا الله توكت علي الله كفى بالله
وسبحانه
வணக்கத்திற்குரியவன்
அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை , அவனையே முழுமையாக
நம்பிக்கை வையுங்கள் அவன் ஒருவனே நமக்கு போதுமானவன் ,மேலும் பரிசுத்தமானவன் .”என்றார்கள்.
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا
فَآوَى (6) وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى (7) وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى
நபியே) அவன் உம்மை
அனாதையாகக் கண்டு அவன் அரவணைக்கவில்லையா?’ ‘உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழிகாட்டினான்’. ‘உம்மை வறுமையில் கண்டு
தன்னிறைவு பெற்றவராக்கினான்’. ( அல்குர்ஆன்: 93: 6,7,8 )
அனாதைகளின் விஷயத்தில்
முக்கியமான மூன்று அம்சங்களை பற்றி மேற்கூறப்பட்ட திருக்குர்ஆனின் வசனம் கோடிட்டு
காட்டுகிறது. 1. அனாதைகளின் அரவணைப்பு, 2. அனாதைகளின் அறியாமையை போக்கி அவர்களை
அறிவுசார்ந்த சமூகமாக மாற்றிக் காட்டுவது, 3. அவர்களை பொருளாதாரத்தில்
தன்னிறைவு பெற்றவர்களாக ஏற்றம் காணச்செய்வது. இவை அடிப்படையான அம்சங்கள்.
பாதுகாப்பு, கல்வி, பொருளாதாரம் ஆகியவை தான்
ஒரு அனாதையை சமூகத்தில் அந்தஸ்து உடையவனாக மாற்றிக்காட்டுகிறது. இவைகள் குறித்து
இன்று தொழுகையில் ஓதப்பட்ட சூரா அந் நிஸா அத்தியாயத்தில் பல்வேறு வசனங்களின் ஊடாக
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் விரிவாக பேசுகின்றான்.
قال رسول الله صلى الله عليه وسلم عوف بن مالك الأشجعي قال
أنا وامرأة سفعاء
الخدين كهاتين يوم القيامة وأومأ
يزيد
بالوسطى والسبابة
امرأة آمت من زوجها ذات منصب وجمال حبست
نفسها على يتاماها حتى بانوا أو ماتوا
அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “நானும் கரிந்து போன முகத்துடைய பெண்ணும் மறுமை நாளில் இந்த இரு விரல்களைப் போன்று இருப்போம்”.
யஸீத் இப்னு ஸரீஉ (ரலி) அவர்கள் இந்த நபிமொழியைக் கூறிய போது தம் நடுவிரலையும், சுட்டு விரலையும் இணைத்து சுட்டிக்காட்டினார்கள்.
கரிந்து போன முகத்துடைய பெண் அதாவது, தன் கணவனை இழந்து விட்ட, குடும்பப் பாரம்பர்யமும் நல்ல அழகும் இருந்து, இறந்து விட்ட கணவனின் குழந்தைகளுக்காக அவர்கள் தன்னை விட்டுப் பிரியும் வரை அல்லது இறந்து விடும் வரை திருமணம் செய்து கொள்ளாமலிருக்கும் பெண். (நூல்: அபூதாவூத்)
من حديث سَهْل بْن سَعْدٍ عَنْ النَّبِيِّ
قَالَ: ((أَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ هَكَذَا))
وأشار
بالسبابة والوسطى وفرج بينهما شيئا.
ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்:“நானும், அநாதையைப் பராமரிப்பவனும், இன்ன பிற தேவை உடையோரைப் பராமரிப்பவனும் சுவனத்தில் இப்படி இருப்போம்” இதைச் சொல்லி விட்டு நபி {ஸல்} அவர்கள் நடுவிரலையும், சுட்டுவிரலையும் காட்டினார்கள். இரு விரல்களுக்கு இடையே சிறிது இடைவெளி விட்டிருந்தார்கள். ( நூல்: புகாரி )
வலி மிகுந்த
வாழ்க்கை வாழ்வதை விட்டும் வல்ல ரஹ்மான் ஃபலஸ்தீன மக்களையும், உங்களையும், என்னையும் காத்தருள்வானாக!
