Showing posts with label ramalan. Show all posts
Showing posts with label ramalan. Show all posts

Thursday 8 April 2021

ரமலானில் திட்டமிட்டு அமல் செய்வோம்!!

 ரமலானில் திட்டமிட்டு அமல் செய்வோம்!!

 



ரமலான் மாதம் என்பது நன்மை தரும் காரியங்களில் முன்னேறிச் செல்வதையும், வணக்க வழிபாடுகளில் மூழ்கிப்போவதையும் உணர்த்துகிற மாதமாகும்.

ஏனெனில், மற்றெல்லா மாதங்களை விடவும் பல்வேறு தனிச் சிறப்புக்களை ரமலான் மாதம் பெற்றுள்ளது.

ரமலான் குர்ஆனின் மாதமாகும், அருள் சூழ்ந்து இறங்கும் மாதமாகும், பாவ மீட்சியின் மாதமாகும், மன்னிப்பின் மாதமாகும், பொறுமையின் மாதமாகும்.

தீமைகளுக்கு எதிராக போராடுகிற, பாவங்களுக்கு எதிராக போரிடுகிற மாதமாகும்.

பன்மடங்கு நன்மைகளையும், கணக்கிலடங்கா கூலிகளையும் பெற்றுத் தருகிற மாதமாகும். நரக விடுதலையையும், ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலத்துல் கத்ரையும் சுமந்திருக்கிற மாதமாகும்.

ஆகவே ரமலான் மாதத்தின் பாக்கியங்களை மனதில் கொண்டு அமல்களால் ரமலானை அலங்கரிப்போம்.

ஒரு முஃமின் வணக்க வழிபாடுகளில் எதைச் செய்தாலும் மிக நேர்த்தியாகவும், ஒழுங்குமுறைகளைப் பேணியும் செய்யவேண்டும். அந்த இபாதத்தே மிக அழகிய முறையில் அமைந்த இபாதத் ஆகும். அந்த இபாதத்தையே அல்லாஹ் ரப்புல் ஆலமீனும் விரும்புகின்றான்.

عن عائشة رضي الله تعالى عنها قالت

قال رسول الله صلى الله عليه وسلم 

 إن الله يحب إذا عمل أحدكم عملاً أن يتقنه " الصحيحة

நிச்சயமாக! அல்லாஹ் உங்களில் ஒருவர் அமல் செய்தால் மிக நேர்த்தியாகவும், ஒழுங்கு முறைகளோடும் செய்யப்படுவதையே விரும்புகின்றான்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: பைஹகீ )

 

ரமலானின் அமல்கள் முக்கியத்துவம் வாய்ந்தது

 

روى ابن ماجه بسند صحيح عن طلحة بن عبيد الله أن رجلين قَدِما على رسول الله صلى الله عليه وسلم، وكان إسلامهما جميعاًفكان أحدهما أشد اجتهاداً من الآخر, فغزا المجتهد منهما فاستشهد, ثم مكث الآخر بعده سنة ثم توفي, قال طلحةفرأيت في المنام بينا أنا عند باب الجنة إذا أنا بهما, فخرج خارج من الجنة فأذن للذي توفي الآخِر منهما, ثم خرج فأذن للذي استشهد, ثم رجع إلي فقال: ارجع فإنك لم يأْنِ لك بعد, فأصبح طلحة يحدث به الناس, فعجبوا لذلك, فبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم, وحدثوه الحديث, فقال: (مِن أي ذلك تعجبون؟), فقالوا: يا رسول الله! هذا كان أشد الرجلين اجتهاداً، ثم استشهد, ودخل هذا الآخر الجنة قبله, فقال رسول الله صلى الله عليه وسلم: (أليس قد مكث هذا بعده سنة). قالوا: بلى, قال: (وأدرك رمضان، فصام، وصلى كذا، وكذا من سجدة في السنة)، قالوا: بلى, قال رسول الله صلى الله عليه وسلم: (فما بينهما أبعد مما بين السماء والأرض)

 

தல்ஹா இப்னு உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அந்தலூஸ்  ஸ்பெயினிலிருந்து இரண்டு மனிதர்கள் நபி {ஸல்} அவர்களிடம் வந்தார்கள். இருவரும் ஒரே சமயம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

 

அவ்விருவரில் ஒருவர் மற்றவரை விட அல்லாஹ்வின் வழிபாடு விஷயத்தில்  கடுமையாக முயற்சிக்கக்கூடியவர். அவ்விருவரில், முயற்சி செய்பவர் அறப்போரில்  கலந்து கொண்டு உயிர்த்தியாகம் செய்து ஷஹீத் ஆக்கப்பட்டார். மற்றொருவர்,  அவருக்குப் பிறகு ஒரு வருடம் வாழ்ந்தார். பின்னர் மரணித்தார்.

 

நான் கனவில் என்னை சொர்க்கத்தின் வாசல் அருகிலே அவ்விருவருடனும்  இருந்ததைப் பார்த்தேன். அப்போது சொர்க்கத்திலிருந்து ஒருவர் வெளியே வந்து  அவ்விருவரில் இறுதியாக மரணித்தவருக்கு சொர்க்கத்தின் உள்ளே செல்ல அனுமதி  அளித்தார்.

 

பின்னர், மீண்டும் வெளியே வந்து உயிர்த்தியாகம் செய்து ஷஹீதான  முதலாமவருக்கு சொர்க்கத்தின் உள்ளே செல்ல அனுமதி வழங்கினார்.

 

பிறகு, அவர் என்னிடம் வந்தார். மேலும், என்னைப் பார்த்து நீங்கள் திரும்பிச்  செல்லுங்கள்; உங்களுக்கு உள்ளே செல்வதற்கான நேரம் வரவில்லை என்று கூறினார்.

 

இதை நான் காலையில் மக்களிடம் கூறினேன். மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.  இந்தச் செய்தி மாநபி {ஸல்} அவர்களுக்கும் தெரிய வந்தது. மக்களும் நபி {ஸல்}  அவர்களிடம் சென்று தங்களின் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினார்கள்.

 

அதற்கு, நபி {ஸல்} அவர்கள் எது குறித்து நீங்கள் ஆச்சர்யம் அடைகின்றீர்கள்?”  என்று மக்களை நோக்கி வினவினார்கள். அப்போது, மக்கள் அல்லாஹ்வின் தூதரே!  முதலாமவர் கடுமையாக முயற்சி செய்தார்; அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்து  ஷஹீதும் ஆனார். ஆனால், மற்றவரோ இவருக்கு முன்னால் சுவனத்தில் நுழைந்து  விட்டாரே!?” என்று தங்களின் ஆச்சர்யத்திற்கான காரணத்தை வெளிப்படுத்தினார்கள்.

 

அதற்கு, நபி {ஸல்} அவர்கள் இவர் அவருக்குப் பின்னால் ஒரு வருடம் வாழ  வில்லையா?” என மக்களிடம் கேட்டார்கள். அதற்கு மக்களும் ஆம், வாழ்ந்தார் என்று  ஆமோதித்தனர்.

 

அப்போது, நபி {ஸல்} அவர்கள் அவர் ரமலானை அடைந்திருப்பார்; நோன்பு  நோற்றிருப்பார்; உபரியான தொழுகைகளை அதிகமதிகம் தொழுதிருப்பார் இல்லையா?” எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள் ஆமாம் என்று பதில் கூறினார்கள்.

 

ஆகவே தான் அவ்விருவருக்கும் இடையே வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள மிகப்பெரிய தூரத்தைப் போன்று இடைவெளி உள்ளது என்று கூறினார்கள்.  ( நூல்: இப்னு மாஜா, இப்னு குஸைமா, பஸ்ஸார், இப்னு ஹிப்பான் )

 

நோன்பு நோற்பது

 

ரமலான் மாதத்தின் பிரதானமான அமல் நோன்பு நோற்பதாகும். மார்க்கம் விலக்கு அளித்துள்ளவர்களைத் தவிர மற்ற அனைவரும் கண்டிப்பாக நோன்பு நோற்க வேண்டும்.

 

ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் இன்னும் சத்தியத்தையும்அசத்தியத்தையும் பிரித்தறிவிக்கக்கூடியதிலிருந்தும், தெளிவாக்கக்கூடிய சான்றுகளைக் கொண்ட ஃபுர்கான் எனும் குர்ஆன் இறக்கியருளப்பட்டது. எனவே, உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகின்றாரோ அவர் நோன்பு நோற்பாராக!        ( அல்குர்ஆன்: 2: 185 )

يقولُ أبو أُمامةَ رَضِي اللهُ عَنه: "أنشَأ رسولُ اللهِ صلَّى اللهُ علَيه وسلَّم غَزْوًا، فأتَيْتُه، فقُلْتُ: يا رسولَ اللهِ، ادعُ اللهَ لي بالشَّهادةِ، قال: "اللَّهمَّ سلِّمْهم وغنِّمْهم"، فغزَوْنا فسَلِمْنا وغَنِمْنا، ثمَّ أنشَأ غَزْوًا آخَرَ، فأتَيْتُه فقُلْتُ: يا رَسولَ اللهِ، ادعُ اللهَ لي بالشَّهادةِ، قال: "اللَّهمَّ سلِّمْهم وغنِّمْهم"، فغزَوْنا فسَلِمْنا وغَنِمْنا، ثمَّ أنشَأ غَزْوًا آخَرَ فأتَيْتُه، فقُلْتُ: يا رسولَ اللهِ، أتَيْتُك تَتْرَى ثلاثًا أسأَلُك أن تدعوَ اللهَ لي بالشَّهادةِ، فقُلْتَ: "اللَّهمَّ سلِّمْهم وغنِّمْهم"، فغزَوْنا فسَلِمْنا وغَنِمْنا، فمُرْني يا رسولَ اللهِ بأمرٍ يَنفَعُني اللهُ به، قال: "عليكَ بالصَّومِ؛ فإنَّه لا مِثْلَ له"، قال الرَّاوي: وكان أبو أُمامةَ لا يَكادُ يُرى في بيتِه الدُّخَانُ بالنَّهارِ، فإذا رُئِيَ الدُّخَانُ بالنَّهارِ، عرَفوا أنَّ ضَيفًا اعتَرَاهم، وهذا كنايةٌ عن كَثرةِ صِيامِه هو وأهلُه،

அபூ உமாமா பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு யுத்தத்திற்கான அழைப்பின் பேரின் நான் யுத்தகளத்திற்கு செனிருந்தேன். அப்போது, நபி {ஸல்} அவர்களிடம்எனக்கு ஷஹாதா வீரமரணம் கிடைத்திட துஆச் செய்யுங்கள்என்று கூறினேன். அதற்கு, நபி {ஸல்} அவர்கள்அல்லாஹ்வே! இந்த படையினருக்கு எவ்வித சேதாரங்களும் இல்லாமல் வெற்றியையும், ஏராளமான ஃகனீமத்தையும் வழங்குவாயாக!” என்று துஆச் செய்தார்கள். அது போன்றே வெற்றியோடும் ஏராளமான ஃகனீமத்தோடும் திரும்பினோம்.

 

அதன் பின்னர், இது போன்றே இரண்டு யுத்தங்களுக்கான அழைப்பில் நான் பெங்கேற்று முன்பு போன்று துஆச் செய்யுமாறு கோரிக்கை வைப்பதும் நபி {ஸல்} அவர்கள் முன்பு போன்றே துஆச் செய்வதும் இஸ்லாமியப்படைகள் வெற்றி பெறுவதுமாகத் தொடர்ந்தது.

 

நான்காவது முறையாக போருக்கு அழைப்பு வந்ததும், நான் நபி (ஸல்} அவர்களிடம் வந்துஅல்லாஹ்வின் தூதரே! இதற்கு முன்பாக உங்களிடம் மூன்று முறை எனக்கு ஷஹாதா வேண்டும் என்று ஆர்வத்தோடு துஆச் செய்ய கோரினேன். ஆனால், நீங்களோ இன்னின்னவாறு துஆச் செய்தீர்கள்.

 

எனவே, இம்முறை நீங்கள் எனக்கு ஈருலகிலும் பயன் தருகிற ஒரு அமலைச் செய்யுமாறு கூற வேண்டும்என்றேன்.

 

அப்போது நபி {ஸல்} அவர்கள்நோன்பு நோற்பதைக் கடைபிடித்து வருவீராக! அதற்கு நிகரான அமல் ஏதும் இல்லைஎன்று கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )

 

இந்த நபிமொழியை அறிவிக்கும் அறிவிப்பாளர் கூறுகின்றார்: “அபூ உமாமா (ரலி) அவர்களின் வீட்டில் பகல் நேரத்தில் அடுப்பு எரியும் அந்த அடையாளத்தையும் நான் கண்டதில்லை. அப்படி பகல் நேரத்தில் அடுப்பெரிந்தது என்றால் யாராவது விருந்தாளி வந்திருப்பார்கள் என்று நான் விளங்கிக் கொள்வேன். அந்த அளவிற்கு அவரும் அவரின் வீட்டார்களும் அதிகமாக நோன்பு நோற்கக்கூடியவர்களாக இருந்தனர்.

حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ ، قَالَ : حَدَّثَنِي أَبُو حَازِمٍ عَنْ سَهْلٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :

إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَيَقُومُون لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ فَإِذَا دَخَلُوا أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ.

சொர்க்கத்தில் ரய்யான் என்று அழைக்கப்படும் ஒரு வாசல் இருக்கின்றது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு யாரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே? என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூற்கள்: புகாரி 1896, 1897, முஸ்லிம் 1947

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ ، عَنْ مَالِكٍ ، عَنْ أَبِي الزِّنَادِ ، عَنِ الأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ :

الصِّيَامُ جُنَّةٌ فَلاَ يَرْفُثْ ، وَلاَ يَجْهَلْ وَإِنِ امْرُؤٌ قَاتَلَهُ ، أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللهِ تَعَالَى مِنْ رِيحِ الْمِسْكِ يَتْرُكُ طَعَامَهُ وَشَرَابَهُ وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي الصِّيَامُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا.

நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும். எனவே நோன்பாளி கெட்ட பேச்சுக்களைப் பேச வேண்டாம். முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால், நான் நோன்பாளி என்று இரு முறை கூறட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1894

وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللهِ تَعَالَى مِنْ رِيحِ الْمِسْكِ يَتْرُكُ طَعَامَهُ وَشَرَابَهُ وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي الصِّيَامُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மேல் ஆணையாக, நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும். எனக்காக நோன்பாளி தனது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டு விடுகின்றார். நோன்பு எனக்கு உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்காகும்” (என்று அல்லாஹ் கூறுகின்றான்)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1894

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ ، عَنِ ابْنِ جُرَيْجٍ ، قَالَ : أَخْبَرَنِي عَطَاءٌ ، عَنْ أَبِي صَالِحٍ الزَّيَّاتِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، يَقُولُ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم :

قَالَ : اللَّهُ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلاَّ الصِّيَامَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالصِّيَامُ جُنَّةٌ ، وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلاَ يَرْفُثْ ، وَلاَ يَصْخَبْ فَإِنْ سَابَّهُ أَحَدٌ ، أَوْ قَاتَلَهُ فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللهِ مِنْ رِيحِ الْمِسْكِ لِلصَّائِمِ فَرْحَتَانِ يَفْرَحُهُمَا إِذَا أَفْطَرَ فَرِحَ ، وَإِذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ.

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1904

قَالَ : اللَّهُ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلاَّ الصِّيَامَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ

நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும். நிச்சயமாக நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன். என்று அல்லாஹ் கூறுகின்றான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1904

حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مُوسَى الْقَزَّازُ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا عَلِىُّ بْنُ زَيْدٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-

« إِنَّ رَبَّكُمْ يَقُولُ كُلُّ حَسَنَةٍ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ وَالصَّوْمُ لِى وَأَنَا أَجْزِى بِهِ الصَّوْمُ جُنَّةٌ مِنَ النَّارِ وَلَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ وَإِنْ جَهِلَ عَلَى أَحَدِكُمْ جَاهِلٌ وَهُوَ صَائِمٌ فَلْيَقُلْ إِنِّى صَائِمٌ ». وَفِى الْبَابِ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ وَسَهْلِ بْنِ سَعْدٍ وَكَعْبِ بْنِ عُجْرَةَ وَسَلاَمَةَ بْنِ قَيْصَرٍ وَبَشِيرِ ابْنِ الْخَصَاصِيَةِ. وَاسْمُ بَشِيرٍ زَحْمُ بْنُ مَعْبَدٍ وَالْخَصَاصِيَةُ هِىَ أُمُّهُ. قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ أَبِى هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ.

ஒவ்வொரு நன்மையும் அதுபோன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதீ 695

 

38- حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ قَالَ : أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم :

مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ.

யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 38

حَدَّثَنِى أَبُو الطَّاهِرِ وَهَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِىُّ قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ عَنْ أَبِى صَخْرٍ أَنَّ عُمَرَ بْنَ إِسْحَاقَ مَوْلَى زَائِدَةَ حَدَّثَهُ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- كَانَ يَقُولُ

« الصَّلَوَاتُ الْخَمْسُ وَالْجُمُعَةُ إِلَى الْجُمُعَةِ وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ مُكَفِّرَاتٌ مَا بَيْنَهُنَّ إِذَا اجْتَنَبَ الْكَبَائِرَ ».

ஐந்து நேரத் தொழுகைகள், ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ, (தொழுது) ஒரு ரமளானிலிருந்து மறு ரமளான் (வரை நோன்பு நோற்று) பெரும் பாவங்களை விட்டு விலகியிருந்தார் எனில் அவற்றுக்கிடையில் ஏற்பட்ட பாவங்களுக்கு அவை பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 344

 

திருக்குர்ஆன் ஓதுவது

 

ரமலான் மாதத்தின் சிறப்புக்களில் மிகப் பிரதானமானது திருக்குர்ஆன் ஆகும். ஏனெனில், ரமலான் மாதத்தில் தான் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டதாக அல்லாஹ் கூறுகின்றான்.

 

குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு ஒரு குர்ஆன் வீதம் 30 நாட்களில் மூன்று குர்ஆன் ஓத வேண்டும்.

கூடுதலாக எத்தனை குர்ஆன் வேண்டுமானாலும் ஓதலாம். என்றாலும் ஒரு இலக்கை நிர்ணயித்து குர்ஆனை ஓத வேண்டும்.

 

ஸலஃபுகளான முன்னோர்கள் ரமலானில் அதிக குர்ஆன் ஓதுவதை விரும்பியிருக்கின்றார்கள்.

 

குர்ஆன் ஓதத் தெரியாதவர்கள், உடல் சுகவீனம், பார்வைக் குறைபாடு, வயது முதிர்வு ஆகியவற்றால் குர்ஆன் ஓத இயலாதவர்கள் தங்களுக்கு தெரிந்த சூராக்களையோ அல்லது குறிப்பிட்ட சில சூராக்களையோ குறிப்பிட்ட எண்ணிக்கையில் 30 நாட்களும் ஓதி வர வேண்டும்.

فعن أَبي أُمَامَةَ رضي الله عنه ، قَالَ : سَمِعْتُ رسولَ اللهِ صلى الله عليه وسلم يقول : «اقْرَؤُوا القُرْآنَ ؛ فَإنَّهُ يَأتِي يَوْمَ القِيَامَةِ شَفِيعاً لأَصْحَابِهِ» رواه مسلم .

நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு பரிந்துரைசெய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

عن النَّوَّاسِ بنِ سَمْعَانَ رضي الله عنه قَالَ : سَمِعْتُ رسولَ الله صلى الله عليه وسلم يقولُ : «يُؤْتَى يَوْمَ القِيَامَةِ بِالقُرْآنِ وَأهْلِهِ الذينَ كَانُوا يَعْمَلُونَ بِهِ في الدُّنْيَا تَقْدُمُه سورَةُ البَقَرَةِ وَآلِ عِمْرَانَ ، تُحَاجَّانِ عَنْ صَاحِبِهِمَا» رواه مسلم .

 

குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆலு இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

 

உங்களில் சிறந்தவர், குர்ஆனைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுத்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )

 

குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம் )

فعن ابن مسعودٍ - رضي الله عنه - ، قَالَ : قَالَ رسولُ اللهِ - صلى الله عليه وسلم - : « مَنْ قَرَأ حَرْفاً مِنْ كِتَابِ اللهِ فَلَهُ حَسَنَةٌ ، وَالحَسَنَةُ بِعَشْرِ أمْثَالِهَا ، لاَ أقول : {ألم} حَرفٌ ، وَلكِنْ : ألِفٌ حَرْفٌ ، وَلاَمٌ حَرْفٌ ، وَمِيمٌ حَرْفٌ» رواه الترمذي .

அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதி )

 

சில சூராக்களும், சில வசனங்களும்.. அதன் சிறப்பும்….

 

قال صلى الله عليه وسلم

من قرأ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ حتى يختمها عشر مرات بني الله له قصرًا في الجنة
فقال عمر رضي الله عنه: إذن نستكثر قصورًا يا رسول الله، فقال: الله أكثر وأطيب

.السلسلة الصحيحة 1/589

 

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் அல் இக்லாஸ் அத்தியாயத்தை தினமும் பத்து தடவை ஓதுகின்றாரோ, அவருக்காக அல்லாஹ் சுவனத்தில் ஓர் மாளிகையை கட்டித்தருகின்றான். அப்போது, உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! அப்படியென்றால், நாங்கள் எங்களுக்காக அதிகமாக கோட்டைகளை கட்டிக்கொள்கிறோம் என்றார்கள். அதற்கு, நபி {ஸல்} அவர்கள் அல்லாஹ் அதிகரித்துத் தர காத்திருக்கின்றான். மேலும், அவன் தூய்மையானவன் என்று பதில் கூறினார்கள்.  ( நூல்: அஸ்ஸில்ஸிலா அஸ்ஸஹீஹா லில் அல்பானீ )

 

قال صلى الله عليه وسلم

                       من قرأ سورة الكهف في الجمعة، أضاء له من النور ما بين

 الجمعتين

صحيح الجامع

 

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்:“எவர் ஜும்ஆ நாளில் அல்கஹ்ஃப் அத்தியாயம் ஓதுகின்றாரோ அடுத்த ஜும்ஆ நாள் வரை அல்லாஹ் அவரை ஒளியால் அரவணைத்துக் கொள்கின்றான்”.          ( நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉ )

 

قال صلى الله عليه وسلم

من حفظ عشر آيات من أول سورة الكهف عُصم من فتنة الدجال

صحيح الجامع

 

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்:“எவர் அல்கஹ்ஃப் அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்களை மனனமிட்டு இருக்கின்றாரோ அவரை அல்லாஹ் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து பாதுகாப்பான்”.                    ( நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉ )

 

قال صلى الله عليه وسلم

من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة، لم يمنعه من دخول الجنة إلا أن يموت

صحيح الجامع

 

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் ஆயத்துல் குர்ஸீயை கடமையான  ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் ஓதுவாரோ, அவர் சுவனத்தில் நுழைவதற்கு  மரணத்தைத் தவிர வேறெதுவும் தடையாக இருக்காது”. ( நூல்: ஸஹீஹுல் ஜாமிஉ )

 

قال صلى الله عليه وسلم

إذا أخذت مضجعك من الليل، فاقرأ (قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ) , ثم نم على خاتمتها فإنها براءة من الشرك

.صحيح الجامع

 

நபி {ஸல்} அவர்கள் ஒரு நபித்தோழரிடம்  நீர் உறங்குவதற்காக உம் படுக்கைக்குச் செல்வீரேயானால் அல் காஃபிரூன் அத்தியாயத்தை ஓதிய நிலையில் உறங்குவீராக!  ஏனெனில், இணைவைப்பிலிருந்து உம்மை அது பாதுகாக்கும் என்று கூறினார்கள்.                                      ( நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉ )

 

விஷேசமாக குர்ஆன் இறங்கிய இந்த ரமலான் மாதத்தில் அதிகமாக ஓதுங்கள். ஒரு எழுத்தை ஓதினால் குறைந்தது பத்து நன்மை கிடைக்கின்றது. ஒரு நாளில் எத்தனையோ எழுத்துக்களை ஓதுவதற்கு நமக்கு வாய்ப்பிருக்கின்றது. சந்தர்ப்பத்தை தவற விடவேண்டாம். 

 

நஃபிலான தொழுகைகளை தொழுவது

 

வழக்கமாக ஒவ்வொரு ஃபர்ள் தொழுகைக்கு முன்னருரும் பின்னரும் தொழுகிற ஸுன்னத் மற்றும் நஃபில் தொழுகைகள் அல்லாமல் பிரத்யேகமான நஃபில் தொழுகைகளை தொழ நாம் நம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

 

முதல் நோன்பில் தஹஜ்ஜத் நேரத்தில் எழுந்து தஹஜ்ஜத் தொழுது விட்டு ஸஹர் சாப்பிட்டு விட்டு பள்ளிவாசலுக்கு வந்து உளூ செய்து விட்டு தஹிய்யத்துல் உளூ, தஹிய்யத்துல் மஸ்ஜித், ஃபஜ்ரின் முன் ஸுன்னத், ஃபர்ள் பின்னர் திலாவத், திக்ர் பிறகு இஷ்ராக் தொழுது விட்டு வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுத்து விட்டு பின்னர் லுஹா தொழுகையோடு நம்முடைய பணியை ஆரம்பிக்க வேண்டும்.  

 

தஹிய்யத்துல் உளூ

 

தஹிய்யத்துல் உளூ (உளூவிற்கான காணிக்கைத் தொழுகை) இரண்டு ரக்அத்துகளாகும். உளுவிற்கு பிறகு தொழவேண்டும். ஹதீஸ்களில் இது குறித்து ஏராளமான சிறப்புகள் வந்துள்ளது.

 

عن أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ : " أَنَّ النَّب

ِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِبِلاَلٍ عِنْدَ صَلاَةِ الفَجْرِ  يَا بِلاَلُ حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ فِي الإِسْلاَمِ ، فَإِنِّي سَمِعْتُ دَفَّ نَعْلَيْكَ بَيْنَ يَدَيَّ فِي الجَنَّةِ  قَالَ: " مَا عَمِلْتُ عَمَلًا أَرْجَى عِنْدِي : أَنِّي لَمْ أَتَطَهَّرْ طَهُورًا ، فِي سَاعَةِ لَيْلٍ أَوْ نَهَارٍ، إِلَّا صَلَّيْتُ بِذَلِكَ الطُّهُورِ مَا كُتِبَ لِي أَنْ أُصَلِّيَ " .

دف نعليك : يعني حركة نعليك وصوتهما في الأرض .

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு நாள் பஜ்ருத் தொழுகை நேரத்தில் நபி {ஸல்} அவர்கள் ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களிடம், பிலால்! நீர் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து அதிகமான நன்மை கிடைக்குமென எந்த அமலின் மீது ஆதரவு வைக்கிறீர்? ஏனேனில், சுவர்க்கத்தில் எனக்கு முன்னால் உமது பாத அணிகலன்களின் சப்தத்தை நேற்றிரவு கனவில் நான் கேட்டேன்'' என்று கேட்டதற்கு எனது அமல்களில் அதிக நன்மைகளுக்குரியது என நான் ஆதரவு வைப்பது, இரவிலோ, பகலிலோ எப்பொழுது உளூச் செய்தாலும், அந்த உளூவைக் கொண்டு அந்த நேரத்தில் அல்லாஹ் நல்லுதவி செய்யுமளவு தவறாமல் தஹியத்துல் உளூ இரண்டு ரக்அத் தொழுதுவிடுவேன் இதுதான் என்னுடைய அமல்களில் அதிக ஆதரவு கொள்ளத் தக்கது'', என்று ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம் )

 

عن عقبة بن عامر رضي الله عنه قال قال رسول الله ﷺ  مامن مسلم يتوضا فيحسن وضوءه ثم يقوم فيصلی ركعتين مقبل عليهما بقلبه و وجهه الا وجبت له الجنة

 

உக்பதுப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ ஒரு முஸ்லிம் நல்லமுறையில் உளூச்செய்து அகத்தையும்,முகத்தையும் ஒருமுகப்படுத்தி, முழுமையான கவனத்துடன் இரண்டு ரக்அத் தொழுவாரானால் அவருக்கு சுவனம் கட்டாயம் கிடைக்கும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.     ( நூல்: முஸ்லிம் )

 

عن زيد بن خالد الجهنيّ رضي الله عنه ان النبي ﷺ قال من توضا فاحسن وضوءه ثم صلی ركعتين لا يسهو فيهما غفر له ما تقدم من ذنبه

 

ஜைத் இப்னு காலிதில் ஜுஹனி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ யார் அழகிய முறையில் உளூச்செய்து பிறகு கவனக்குறைவின்றி இரண்டு ரக்அத் தொழுகின்றாரோ அவரின் முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றது” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                       ( ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் )

 

தஹிய்யத்துல் மஸ்ஜித்

 

ஒரு முஸ்லிம் மஸ்ஜிதில் நுழைந்தால் அமர்வதற்கு முன்பாக இரண்டு ரக்அத் தொழுவது விரும்பத்தக்கது.எனினும், மக்ரூஹான நேரமாக இருக்ககூடாது.

 

عن ابي قتادة السلمي رضي الله عنه انّ رسول الله ﷺ قال اذا دخل احدكم المسجد فليركع ركعتين قبل ان يجلس

 

அபூகதாதா அஸ்ஸுலமி (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “உங்களில் ஒருவர் மஸ்ஜிதில் நுழைந்தால் அவர் அமர்வதற்கு முன்பாக இரண்டு ரக்அத் தொழுது கொள்ளட்டும்” என   ( நூல்: புகாரி, முஸ்லிம் )

இஷ்ராக் தொழுகை

 

இஷ்ராக் தொழுகையின் நேரம் சூரியன் உதயமாகி பதினைந்து அல்லது இருபது நிமிடம் கழிந்த பிறகு ஆரம்பமாகும். குறைந்தது இரண்டு அல்லது நான்கு ரக்அத் தொழ வேண்டும். இந்த தொழுகையை தொழுவதால் கிடைக்கும் நன்மை ஒரு ஹஜ் உம்ராவிற்கு சமமானதாகும்.

 

عن انس رضي الله عنه قال قال رسول الله ﷺ من صلی الفجر فی جماعة ثم قعد يذكر الله حتی تطلع الشمس ثم صلی ركعتين كانت له كاَجر حجة و عمرة قال قال رسول الله ﷺ تامّة تامة تامة

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “எவர் பஜ்ரு தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் தொழுத பிறகு அல்லாஹ்வை திக்ரு செய்தவாறு சூரியன் உதயமாகும் வரை அதே இடத்தில் அமர்ந்து, பிறகு இரண்டு ரக்அத் தொழுகிறாரோ அவருக்கு ஒரு ஹஜ், உம்ராவின் நன்மைக்கு நிகரானவை உண்டு. என கூறிவிட்டு நபி {ஸல்} அவர்கள் 'பூர்த்தியான' என்ற வார்த்தையை மூன்று தடவை கூறினார்கள்.

( நூல்: திர்மிதி )

عن حسن بن عليّ رضي الله عنه قال قال رسول الله ﷺ من صلّی الفجر ثم قعد فی مجلسه يذكر الله عز وجلّ حتّی تطلع الشمس ثم قال فصلّی ركعتين حرّم الله علی النَّار ان تلحفه او تطعمه

ஹஸன் இப்னு அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “எவர் பஜ்ரு தொழுது விட்டு, தனது இடத்தில் சூரியன் உதயமாகும் வரை அமர்ந்து அல்லாஹ்வை திக்ரு செய்து, பிறகு அவர் இரண்டு ரக்அத் தொழுகிறாரோ நரக நெருப்பு அவரை கரிப்பதை அல்லாஹ் தடைசெய்துவிட்டான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: பைஹகீ )

 

அபூ உமாமா (ரலி) அவர்கள் இதே கருத்தில் அறிவித்து விட்டு கூடுதலாக
 ثم صلى  ركعتين و اربع ركعات

பிறகு அவர் இரண்டு ரக்அத் அல்லது நான்கு ரக்அத் தொழுதார்” என்று அறிவிக்கின்றார்கள். ( நூல்: தர்ஃகீப் வத் தர்ஹீப் )

 

லுஹாத் தொழுகை....

சூரியன் உதயமாகி ஒரு ஈட்டியின்  அளவு உயர்ந்தது முதல் லுஹா தொழலாம். எனினும், சிறந்தது பகல் பொழுதின் நான்கில் ஒரு பகுதி (மூன்றுமணி நேரம்) சென்ற பிறகு தொழுவது சிறந்ததாகும். .இவ்வாறுதான் ஜைத் இப்னு அர்கம் (ரலி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்ட்டுள்ளது.

 

صلوة الاوّابين حين ترمض الفصال

ஜைத் இப்னு அர்கம் (ரலி) அவர்கள் “லுஹா தொழுது கொண்டிருந்த ஒரு கூட்டாத்தாரைக் கண்டார்கள். அப்போது இந்தத் தொழுகையை இந்நேரத்தில் அல்லாமல் வேறு நேரத்தில் தொழுவது சிறந்தது என இவர்கள் அறியவேண்டாமா?” என்று கூறிவிட்டுநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுடுமணலில் ஒட்டகக்குட்டியின் கால் குழம்புகள் கரிந்துவிடும் நேரமே அவ்வாபீன் தொழுகையின் நேரமாகும்” எனக் கூறியதாக கூறினார்கள்.                      ( நூல்: முஸ்லிம் )

 

عن ابی الدرداء رضي الله عنه قال  قال رسول الله ﷺ من صلی الضحٰی ركعتين لم يكتب من الغافلين و من صلی اربعا كتب من العابدين و من صلی ستا كفي  ذلك اليوم و من صلی ثمانيا كتبه الله من القانتين و من صلی ثنتي عشرة بنی الله له بيتا فی الجنة

 

அபுத்தர்தா (ரலி) கூறுகிறார்கள்: “லுஹா தொழுகை இரண்டு ரக்அத்தை ஒருவர் தொழுதால், அவரின் பெயர் மறதியாளர்களில் எழுதப்படாது. ஒருவர் நான்கு ரக்அத் தொழுதால், அவரின் பெயர் வணக்கசாலியில் எழுதப்படும். ஒருவர் ஆறு ரக்அத் தொழுதால், அன்றைய நாள் அவருக்கு போதுமாக்கப்படும். ஒருவர் எட்டுரக்அத் தொழுதால், வழிப்படுபவர்களில் அவரை அல்லாஹ் எழுதுகிறான். ஒருவர் பன்னிரெண்டு ரக்அத் தொழுதால் அல்லாஹ் அவருக்கு சுவனத்தில் வீட்டை கட்டுகிறான்” என நபி {ஸல்} அவர்கள் கூறீனார்கள். ( நூல்: மஜ்மவுஸ் ஸவாயித் )

عن بريدة رضي  الله عنه قال انّ  رسول الله ﷺ يَقُولُ: فِي اْلإِنْسَانِ ثَلثُمِائَةٍ وَسِتُّونَ مَفْصِلاً، فَعَلَيْهِ أَنْ يَتَصَدَّقَ عَنْ كُلِّ مَفْصِلٍ مِنْهُ بِصَدَقَةٍ قَالُوا: وَمَنْ يُطِيقُ ذلِكَ يَانَبِيَّ اللهِ؟ قَالَ: النُّخَاعَةُ فِي الْمَسْجِدِ تَدْفِنُهَا، وَالشَّيْءُ تُنَحِّيهِ عَنِ الطَّرِيقِ، فَإِنْ لَمْ تَجِدْ فَرَكْعَتَا الضُّحَي تُجْزِئُكَ.

மனிதனுடைய உடம்பில் முந்நூற்று அறுபது இணைப்புகள் உள்ளன, ஒவ்வோர் இணைப்பும் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு நன்றி செலுத்தும் முகமாக ஒரு தருமம் செய்வது அவன் மீது கடமை'' என்று மாநபி {ஸல்} அவர்கள் சொன்னபோது, அல்லாஹ்வின் தூதரே! இவ்வளவு தர்மம் யாரால் செய்ய இயலும்?' என்று ஆச்சர்யம் விலகாமல் ஸஹாபாக்கள் வினவினர். அதற்கு, பள்ளிவாசலில் எச்சில் இருக்கக் கண்டால், அதை மண்ணில் புதைப்பது தர்மம். இடர் தரும் பொருட்களை வழியிலிருந்து அகற்றுவதும் தர்மம். இந்த காரியங்களைச் செய்யச் சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால், ளுஹாவுடைய இரண்டு ரக்அத் தொழுவது இந்த தர்மங்கள் யாவற்றுக்கும் பகரமாக உமக்குப் போதுமாகிவிடும்'' என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்: அபூதாவூத் )

 

அவ்வாபீன் தொழுகை

 

மஃரிப் தொழுகைக்கு பிறகு ஆறுரக்அத் தொழுவதற்கு அவ்வாபீன் என்று சொல்லப்படும். இந்த தொழுகையை தொழுபவருக்கு அளப்பரிய நன்மைகள் கிடைக்கும் என ஹதீஸ்களில் வந்துள்ளது.

 

عن عبد الله بن عمر رضي الله عنه قال صلاة الاوابين ما بين ان ينكفت اهل المغرب الی ان يثوب الی العشاء

عن ابن عباس رضي الله عنه قال انَّ الملائكة لتحف بالذين يصلون بين المغرب الی العشاء و هي صلوة الاوبين

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது;

ஸலாதுல் அவ்வாபீன் நேரமானது மஃரிப் தொழுகையை முடித்த பிறகு இஷா வரையிலாகும்.

 

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்: மஃரிப் இஷாவிற்கு மத்தியில் தொழுபவர்களை வானவர்கள் சூழ்ந்து கொள்கின்றார்கள். இது ஸலாதுல் அவ்வாபீன் ஆகும்.

 

عن ابي هريرة رضي الله عنه قال قال رسول اللهﷺ من صلی بعد المغرب ست ركعات لم يتكلم فيما فيهنَّ بسوء عدلن له بعبادة ثنتي عشرة سنة

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”எவர் மஃரிப் தொழுகைக்கு பிறகு ஆறு ரக்அத் தொழுது அதற்கு மத்தியில் எந்த ஒரு தீமையை செய்யவில்லையோ அவருக்கு பன்னிரெண்டு வருடங்களின் வணக்கத்தின் நன்மை கிடைக்கும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.    ( நூல்: இப்னுமாஜா, திர்மிதீ )

رايت حبيب رسول الله ﷺ يصلی بعد المغرب ست ركعات و قال من صلی بعد المغرب ست ركعات غفرت له ذنوبه و ان كان مثل زبد البحر

அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நான் எனது ஹபீப் நபி {ஸல்} அவர்களை பார்த்தேன். மஃரிப் தொழுகைக்கு பிறகு ஆறு ரக்அத்துகள் தொழுவார்கள். மேலும், “யார் மஃரிப் தொழுகைக்கு பிறகு ஆறு ரக்அத்துகள் தொழுகிறாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும்” எனவும் கூறினார்கள்.

 

திக்ர் செய்வது

 

திக்ரு என்பது இறைவனை நினைவு கூறுவதாகும். மனிதன் இறைவனின் நினைவுகளோடு இவ்வுலகில் வாழ வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு. இது மனிதனை வெற்றிக்கு இட்டுச் செல்லும் வழியாகும். ஐவேளை தொழுகை கூட இறைவனை நினைவு கூறக்கூடியதாகவே அமைந்துள்ளது. தொழுகை நேரம் போக அன்றாட வாழ்க்கையின் மற்ற நேரங்களிலும் இறைவனை நினைவு கூறுவதற்கு சில திக்ருகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அதற்கு முன் திக்ரு செய்வதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.

فَاذْكُرُونِي اَذْكُرُكُمْ

'என்னை நீங்கள் நினைவு கூறுங்கள், நானும் உங்களை நினைவு கூறுவேன்' (அல்குர்ஆன் 2:152)

 

நாம் அல்லாஹ்வை திக்ரு செய்தால் அல்லாஹ் நம்மை நினைவு கூறுகிறான். இது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

وَاذْكُرْ رَبَّكَ فِيْ نَفْسِكَ تَضَرُّعًا وَخِيْفَةً وَدُوْنَ الجَهْرِ مِنَ القَوْلِ بِالْغُدُوِّ وَالآصَالِ وَلاَ تَكُنْ مِنَ الغَافِلِيْنَ

'(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும் மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்' (அல்குர்ஆன் 7:205)

 

திக்ரு எவ்வாறு செய்ய வேண்டும் என்ற முறையை இறைவன் இங்கே நமக்கு கற்றுத் தருகிறான்.

يَأيُّهَا الَّذِينَ ءَامَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا ، وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا

'ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு செய்யுங்கள். இன்னும் காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்' (அல்குர்ஆன் 33:41,42)

 

அல்லாஹ்வை அதிகமதிகம் திக்ருச் செய்ய வேண்டும், காலையிலும் மாலையிலும் அதிகமதிகம் செய்ய வேண்டும் என்பது இதன் பொருளாகும். காலையிலும் மாலையிலும் மட்டும் திக்ருச் செய்தால் போதும் என்பது இதன் பொருள் அல்ல.

لاَيَقْعُدُ قَوْمٌ يَذْكُرُوْنَ اللهَ عَزَّ وَجَلَّ إِلاَّ حَفَّتْهُمُ المَلاَئِكَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِيْنَةُ ، وَذَكَرَهُمُ اللهُ فِيْمَنْ عِنْدَهُ (رواه مسلم)

அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாக அமரும் கூட்டத்தினரை மலக்குகள் சூழ்ந்தும், ரஹ்மத் (இறையருள்) அவர்களை மூடியும் 'ஸகீனா' என்னும் நிம்மதி அவர்கள் மீது இறங்கியுமே தவிர வேறில்லை. அல்லாஹ் தன்னிடமுள்ளவர்களிடம் (மலக்குகளிடம்) அவர்களைப் பற்றி (புகழ்ந்து) கூறுகிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.   (அறிவிப்பாளர்கள்: அபூஹுரைரா (ரலி), அபூ ஸயீது (ரலி) நூல்: முஸ்லிம்)

 


قال صلى الله عليه وسلم من قال

سبحان الله العظيم وبحمده، غُرست له نخلة في الجنة

.صحيح الجامع الصغير وزيادته

 

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “سبحان الله العظيم وبحمده، என்று சொல்வாரோ சுவனத்தில் ஒரு மரம் நடப்படுகின்றது”.

 

                              ( நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉஸ்ஸஃகீர் )

 

قال صلى الله عليه وسلم

إنَّ الله تعالى اصطفى من الكلام أربعًا: سبحان الله، والحمد لله، ولا إله إلا الله، والله أكبر، فمن قال: سبحان الله كتبت له عشرون حسنة، وحطت عنه عشرون سيئة، ومن قال: الله أكبر مثل ذلك. ومن قال: لا إله إلا الله مثل ذلك. ومن قال: الحمد لله رب العالمين، من قبل نفسه كتبت له ثلاثون حسنة وحطَّت عنه ثلاثون خطيئة

.صحيح الجامع الصغير وزيادته

 

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் நான்கு வார்த்தைகளைத்  தேர்ந்தெடுத்துள்ளான். அவை ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹுஅக்பர், லாஇலாஹ இல்லல்லாஹு ஆகியவை ஆகும். யார்  سبحان الله என்று கூறுவாரோ அவருக்கு பத்து நன்மைகள் எழுதப்படுகின்றது. பத்து பாவங்கள் அழிக்கப்படுகின்றது. இது போன்றே الله أكبر கூறினாலும், இது போன்றே لا إله إلا الله கூறினாலும் வழங்கப்படுகின்றது.

 

எவர் الحمد لله رب العالمين என்று கூறுவாரோ முப்பது நன்மைகள் எழுதப் படுகின்றது. முப்பது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன”.     ( ஸஹீஹ் அல் ஜாமிஉ )

 

قال صلى الله عليه وسلم

من صلَّى عليَّ حين يُصبح عشرًا، وحين يُمسي عشرًا، أدركته شفاعتي يوم القيامة

.صحيح الجامع الصغير وزيادته

 

நபி {ஸல்} அவர்கள் கூறுகின்றார்கள்: “எவர் தினமும் காலை, மற்றும் மாலை  நேரங்களில் என் மீது பத்து முறை ஸலவாத் கூறுகின்றாரோ அவர் என் ஷஃபாஅத்தைப் பெற்றுக் கொள்வார்”.                ( நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉ )

 

قال صلى الله عليه وسلم

من قال رضيت بالله رباً وبالإسلام دينًا، وبمحمد نبيًا، وجبت له الجنة

.صحيح الجامع الصغير وزيادته

 

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் தினமும் رضيت بالله رباً وبالإسلام دينًا، وبمحمد نبيًا சொல்கின்றாரோ அவருக்கு சுவனம் கடமையாகிவிட்டது”.

 

لاَإِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

என்று பத்துத் தடவை கூறுபவர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியரில் (அடிமையாகியுள்ள) நான்கு அடிமைகளை உரிமை விட்டவரைப் போன்றவராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(
அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல்அன்ஸாரி(ரலி), நூல்கள்: புஹாரி, முஸ்லிம்)


سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ

இந்த இரண்டு வார்த்தைகளும் சொல்வதற்கு மிக எளிதானவை. இறைவனின் தராசில் மிக கனமானவை. இறைவனிடம் மிக விருப்பத்திற்குரியவை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்கள்: புஹாரி, முஸ்லிம்)


سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ ، وَلاَ إِلَهَ إِلاَّ اللهُ، وَاللهُ أَكْبَرُ

என்று நான் கூறுவது சூரியன் உதயமாகும் இவ்வுலகத்தை விட எனக்கு மிகவும் பிரியமானதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

 


நாங்கள் நபி(ஸல்) அவர்களோடு அமர்ந்திருந்தபோது, உங்களில் எவரேனும் ஒருநாளில் ஆயிரம் நன்மைகள் சம்பாதிக்க முடியுமா? என்று கேட்டார்கள். ஆயிரம் நன்மைகள் எப்படி சம்பாதிக்க முடியும்? என்று ஒரு தோழர் கேட்க, நூறு தடவை தஸ்பீஹ் செய்யுங்கள். ஆயிரம் நன்மைகள் எழுதப்படும் அல்லது ஆயிரம் தீமைகள் அழிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(
அறிவிப்பவர்: ஸஃது(ரலி), நூல்:முஸ்லிம்)


سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ وَبِحَمْدِهِ

என்று கூறினால் சொர்க்கத்தில் ஒரு பேரீத்த மரம் நாட்டப்படுகிறது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: திர்மிதி)

 


அப்துல்லாஹ் இப்னு கைஸே! உனக்கு சொர்க்கத்துப் பொக்கிஷம் ஒன்றை அறிவிக்கட்டுமா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள் என்றார்.

لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ

என்று கூறுவீராக! என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் கைஸ்(ரலி), நூல்: புஹாரி, முஸ்லிம்)

 

இரவுத் தொழுகை (தஹஜ்ஜத்) தொழுவது...

 

இபாதத்களில் முதலிடம் வகிப்பது அன்றாடம் நிறைவேற்றப்படும் ஐங்காலத்  தொழுகைகளாகும்.

 

அதற்கு அடுத்த அந்தஸ்தைப் பெறுவது இரவு நேரங்களில் நிறைவேற்றப் படும்  இனிய இபாதத்களாகும்.

 

ஆம்! மற்றெந்த இபாதத்களின் மூலமும் கிடைத்திடாத எல்லாப் பேறுகளையும்,  இறை நெருக்கத்தையும் ஓர் முஃமின் இரவு வணக்கங்களின் மூலம் அடைந்து  கொள்கின்றான்.

 

இரவும் பகலும்

 

وَمِنْ رَحْمَتِهِ جَعَلَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوا فِيهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ ()

 

அவன் தன்னுடைய கருணையினால் தான் உங்களுக்காக பகலையும், இரவையும் படைத்திருக்கின்றான். இரவில் நீங்கள் அமைதி பெற வேண்டும். மேலும், பகலில் அவனுடைய அருட்கொடையை நீங்கள் தேட வேண்டும்; அதனால் நீங்கள் படைத்த இறைவனுக்கு நன்றியுடையோராய் திகழக்கூடும் என்பதற்காக!”                     ( அல்குர்ஆன்:28:73 )

 

وَهُوَ الَّذِي جَعَلَ لَكُمُ اللَّيْلَ لِبَاسًا وَالنَّوْمَ سُبَاتًا وَجَعَلَ النَّهَارَ نُشُورًا ()

 

மேலும், அவனே உங்களுக்கு இரவை ஆடையாகவும், உறக்கத்தை அமைதியாகவும் பகலை உயிர்த்தெழும் வேளையாகவும் ஆக்கினான்”.                              ( அல்குர்ஆன்:25:47 )

 

ஆக இரவென்பது அல்லாஹ் இந்த மனித சமூகத்திற்கு வழங்கிய மாபெரும்  அருட்கொடையாகும்.

 

ஆனால், பெரும்பாலான மனிதர்கள் இரவை மிகச் சரியான நோக்கத்திற்காகவோ, படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவோ பயன் படுத்துவதில்லை.

 

பொதுவாக இரவு தான் இறைவனுக்கும் அடியானுக்கும் இடையேயான தொடர்பை துரிதப்படுத்துகின்றது.

 

அல்லாஹ்வோடு நெருக்கத்தை ஏற்படுத்துகின்றது. படிப்பினைகளையும், நன்றியுணர்வையும் ஏற்படுத்துகின்றது.

 

 ஆனால், மனித சமூகமோ இரவை ஓய்வெடுக்கும் ஒரு சாதனமாகவே, தூங்குவதற்கென்றே படைக்கப்பட்ட ஓர் கொடையாகவே இது வரை கருதி வந்திருக்கின்றது.

 

ஆனால், நல்லோர்களும் இறையடியார்களும் இரவை எப்படிக் கருதுவார்கள் என்று அல்லாஹ் அல்குர்ஆனில் விவரிக்கும் போது...

 

وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِمَنْ أَرَادَ أَنْ يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًا ()

 

அல்லாஹ் கூறுகின்றான்: இரவையும் பகலையும் ஒன்று மற்றொன்றைத் தொடர்ந்து வரக்கூடியதாக அமைத்தான் படிப்பினை பெற நாடும் அல்லது நன்றி உடையோராக இருக்க விரும்பும் ஒவ்வொரு மனிதருக்காகவும்!

 

ஆகவே, அல்லாஹ்வின் அருளும் வளமும், சாந்தியும் தவழ்கிற இரவு நேரங்களை முழுமையாக பயன் படுத்திட அல்லாஹ் நம் அனைவருக்கும் தௌஃபீக் செய்வானாக! ஆமீன்!!

 

இரவில் தொழுவதின் சிறப்பு...

 

فعن أبي هُرَيرةَ - رضي الله عنه - قال: قال رسولُ الله - صلَّى الله عليه وسلَّم -: ((أفضلُ الصيام بعدَ رمضان شهر الله المُحرَّم، وأفضلُ الصلاةِ بعدَ الفريضة صلاةُ اللَّيْل)؛ رواه مسلم

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: ரமழானுடைய நோன்புக்குப் பின்னால் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தின் (ஆஷூரா) நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின்னால் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்”. என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                           ( நூல்:முஸ்லிம் )

 

1. முஃமினின் சிறப்பு.

وعن سَهْل بن سعد - رضي الله عنه - قال جاءَ جبريلُ إلى النبيِّ  - صلَّى الله عليه وسلَّم - فقال يا مُحمَّد، عِشْ ما شِئتَ فإنَّك ميِّت، واعملْ ما شئتَ فإنَّك مَجْزيٌّ به، وأحْبِبْ مَن شئتَ فإنَّك مُفارقُه، واعلمْ أنَّ شرفَ المؤمن قيامُ الليل، وعِزَّه استغناؤُه عن الناس))؛

(4278) “الترغيب والترهيب وحسَّن إسنادَه المنذريُّ في

 رواه الطبراني

ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவிக்கிறார்கள்: ஒரு நாள் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வருகை தந்து....

 

முஹம்மது {ஸல்} அவர்களே! நீங்கள் விரும்பியவாறு வாழ்ந்து கொள்ளுங்கள்! ஏனெனில், நீங்கள் ஒரு நாள் இறந்து விடுவீர்கள்.

 

நீங்கள் விரும்பியவாறு அமல் செய்து கொள்ளுங்கள்! ஏனெனில், நீங்கள் அமல் செய்த அள்விற்கு அல்லாஹ்விடம் கூலி கொடுக்கப்படுவீர்கள்.

 

நீங்கள் யாரை விரும்புகின்றீர்களோ அவர்களின் மீது நேசம் கொள்ளுங்கள்! ஏனெனில், ஒரு நாள் நிச்சயம் அவர்களை விட்டும் நீங்கள் பிரிந்து விடுவீர்கள்.

 

முஹம்மத் {ஸல்} அவர்களே! திண்ணமாக, அறிந்து கொள்ளுங்கள்! ஓர் இறை நம்பிக்கையாளனின் சிறப்பு என்பது இரவிலே நின்று வணங்குவதின் மூலம் தான் கிடைக்கிறது. ஓர் இறைநம்பிக்கையாளனின் கண்ணியம் என்பது பிற மனிதர்களிடம் இருந்தும் தேவையற்றவனாக வாழ்ந்திடும் போது தான் வழங்கப்படுகின்றது”. என்று கூறியதாக, அண்ணல் நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

                                ( நூல்: தபரானீ, அத் தர்ஃகீப் வத் தர்ஹீப் )

 

2. நிம்மதியுடன் சுவனத்தில் நுழைதல்.

 

وعن عبدِالله بن سَلاَم - رضي الله عنه

 قال: لمَّا قَدِم رسولُ الله - صلَّى الله عليه وسلَّم - المدينةَ، انجفَل الناسُ إليه، فجئتُ في الناس لأنظرَ إليه، فلمَّا استثبتُّ وجهَ رسولِ الله صلَّى الله عليه وسلَّم - عَرَفْتُ أنَّ وجهه ليس بوجْهِ كذَّاب، وكان أوَّل شيءٍ تَكلَّم به أن قال: ((أيُّها الناس، أفْشُوا السلام، وأطْعِموا الطعام، وصَلُّوا والناس نِيام، تَدْخلوا الجَنَّةَ بسلام))؛ رواه الترمذي وصحَّحه

அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி {ஸல்} அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா நகருக்குள் நுழைந்த போது மக்களெல்லாம் நபிகளாரைத் தரிசிக்க சாரை சாரையாய் சென்ற வண்ணம் இருந்தனர்.

 

நானும், அவர்களில் ஒருவனாக இருந்தேன். அப்போது முதன் முதலாக நான் நபி {ஸல்} அவர்களைக் கண்ணுற்றேன். அவர்களின் முகம் ஒளியால் இலங்கிற்று. அப்போது நான் நன்றாக விளங்கிக் கொண்டேன். பொய்யர்களின் முகம் ஒரு போதும் ஒளிக்கற்றை போல் இலங்காது. (ஆகையால் முஹம்மத் {ஸல்} அவர்கள் பொய்யர் இல்லை. அவர் உண்மையான நபி தான் என்று)

 

நபி {ஸல்} அவர்கள் தன் முன் தோன்றியிருந்த மக்கள் திரள் நோக்கி முதன் முதலாகச் சொன்ன திருவாக்கியம் எது தெரியுமா? “மக்களே! அல்லாஹ்வின் சாந்தியை தரக்கூடிய ஸலாத்தைப் பரப்புங்கள்! பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்! மக்களெல்லாம் உறங்கும் போது கண்விழித்து எழுந்து படைத்த ரப்பை தொழுங்கள்! நீங்களெல்லாம் நிம்மதியுடன் சுவனத்தில் நுழைவீர்கள்!என்று தான் நபி {ஸல்} கூறினார்கள்.                                                   ( நூல்: திர்மிதீ )

 

3. முத்தான மூன்று சோபனங்கள்.

فعَن أبي أُمامة الباهِليِّ - رضي الله عنه - عن رسولِ الله  - صلَّى الله عليه وسلَّم - قال: ((عليكم بقيامِ اللَّيل، فإنَّه دأبُ الصالحين قبْلَكم، وهو قُرْبة لكم إلى ربِّكم، ومكفرة للسيِّئات، ومنهاةٌ عن الإثم)) رواه ابنُ خزيمة

அபூ உமாமா அல் பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: இரவில் நின்று வணங்குவதை நீங்கள் கடைபிடித்து வாருங்கள்! ஏனெனில், அது உங்களுக்கு முன் வாழ்ந்த நல்லோர்கள் பலரின் சிறந்த நடைமுறையாகும்.

 

அதன் மூலம் நீங்கள் அல்லாஹ்வின் நெருக்கத்தையும், பாவங்களுக்குப் பரிகாரத்தையும், தீய செயல்கள் செய்வதிலிருந்து பாதுகாப்பையும் பெறுவீர்கள்”. என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: இப்னு ஃகுஸைமா )

 

4. சுவனத்து அழகிய மாளிகையின் பிரவேசம்.

وقال النبي : { في الجنة غرفة يرى ظاهرها من باطنها، وباطنها من ظاهرها } فقيل: لمن يا رسول الله؟ قال: { لمن أطاب الكلام، وأطعم الطعام، وبات قائماً والناس نيام } [رواه الطبراني والحاكم وصححه الألباني].

அபூமாலிக் அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: சுவனத்தில் ஒரு மாளிகை உண்டு. அதன் சிறப்பம்சம் என்னவெனில், உள்ளே உள்ளவை வெளியேயும், வெளியில் உள்ளவை உள்ளேயும் காட்சியளிக்கும்என்று நபிகளார் கூறியபோது...

 

நபித்தோழர்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இத்தகைய சிறப்பு வாய்ந்த மாளிகையை அல்லாஹ் யாருக்கு வழங்குவான்என வினவினார்கள்.

 

அதற்கு நபி {ஸல்} அவர்கள் இந்த மாளிகையை மக்களுக்கு மத்தியில் தூய்மையோடு பேசியும், பசித்தவர்களுக்கு உணவளித்தும், மக்களெல்லாம் உறங்கும் நேரத்தில் விழித்தெழுந்து தொழுதும் வந்தவர்களுக்காக அல்லாஹ் தயாரித்து வைத்துள்ளான்என்று பதிலளித்தார்கள். ( நூல்: ஹாக்கிம் )

 

5. சிறப்பானவர்களின் பட்டியலில் பெயர் இடம் பெறுதல்.

 

وقال : { من قام بعشر آيات لم يُكتب من الغافلين، ومن قام بمائة آية كتب من القانتين، ومن قام بألف آية كتب من المقنطرين } [رواه أبو داود وصححه الألباني]. والمقنطرون هم الذين لهم قنطار من الأجر.

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: எவர் இரவில் தொழுகையில் ஈடுபட்டு பத்து ஆயத்துகள் ஓதுவாரோ, அவர் அவ்விரவில் (அல்லாஹ்வை மறந்த) மறதியாளர்களில் எழுதப்படமாட்டார்.

 

எவர் நூறு ஆயத்துகளை ஓதுவாரோ, அவர் வணக்கசாலிகளின் பட்டியலில் இடம் பெறுவார். எவர் ஆயிரம் ஆயத்துகளை ஓதுவாரோ அவர் (கின்தார்) குவியலுக்குச் சமமான நன்மையைப் பெற்றவர்களின் பட்டியலில் இடம் பெறுவார்”. என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                ( நூல்: இப்னு ஃகுஸைமா )

6. இரு வகையான நற்பேறுகள்.

تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ () فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ ()

அல்லாஹ் கூறுகின்றான்: மேலும், (நம்முடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொள்பவர்கள் யாரெனில்,) அவர்களுடைய விலாப்புறங்கள் படுக்கைகளை விட்டும் (இறை வணக்கத்திற்காக) எழுந்து விடுகின்றன. அச்சத்துடனும், ஆவலுடனும் தங்கள் இறைவனை அழைத்துப் பிரார்த்திக்கின்றனர்.

 

மேலும், அவர்களுக்கு நாம் வழங்கியிருப்பதிலிருந்து தாராளமாக செலவும் செய்கின்றனர். அவர்களின் செயல்களின் கூலியாக கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறிய மாட்டார்கள்.”                               ( அல்குர்ஆன்:32:16,17 )

 

7. முகப் பொழிவு கிடைத்தல்.

حدثنا أبو الفضل العباس بن يوسف الشكلي قال حدثنا أيوب بن سليمان الصغدي قال حدثنا ثابت بن موسى قال حدثنا شريك بن عبد الله عن الأعمش عن أبي سفيان عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم من كثرت صلاته بالليل حسن وجهه بالنهار.

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “எவர் இரவிலே அதிகமாக நின்று தொழுவாரோ பகலிலே அவரின் முகத்தை அல்லாஹ் பொழிவுடன் இலங்கச் செய்கின்றான்”. என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

 

8. அல்லாஹ்வை மகிழ்வுறச் செய்யும் பாக்கியம் கிடைத்தல்.

أخبرنا أبو بكر جعفر بن محمد الفريابي قال حدثنا أبو كريب محمد بن العلاء الهمداني قال حدثنا يحيى بن آدم قال حدثنا إسرائيل عن أبي إسحاق عن أبي عبيدة وأبي الكنود عن عبد الله بن مسعود قال يضحك الله عز وجل إلى رجلين رجل قام في جوف الليل وأهله نياما فتطهر ثم قام يصلي فيضحك الله إليه ورجل لقي العدو فانهزم أصحابه وثبت حتى رزقه الله عز وجل الشهادة.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “அல்லாஹ் இரு மனிதர்களின் செயல் கண்டு மகிழ்கின்றான். ஒருவர், நடுநிசி நேரத்தில் வீட்டில் உள்ளவர்களெல்லாம் உறங்கிய பின்னர் எழுந்து அல்லாஹ்வை வணங்குபவர். மற்றொருவர், போர்க்களத்தில் எதிரிகளின் பலமான தாக்குதலைக் கண்டு தம்மோடு வந்தவர்கள் புறமுதுகிட்டி ஓடியும், அஞ்சா நெஞ்சத்துடன் போராடி அல்லாஹ்விற்காக தம் இன்னுயிரைத் தந்தவர்”. என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

9. கோடைகாலமும் வசந்தமாகுதல்.

حدثنا أبو عبد الله أحمد بن الحسن بن عبد الجبار الصوفي قال حدثنا هارون بن معروف قال حدثنا عبد الله بن وهب عن عمرو الحارث عن دراج عن أبي الهيثم عن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم الشتاء ربيع المؤمن قصر نهاره فصامه وطال ليله فقامه.

அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “கோடைகாலம் கூட ஓர் இறைநம்பிக்கையாளனுக்கு வசந்தகாலம் தான். ஓர் முஃமின் தன் பகலை நோன்பு வைப்பதன் மூலம் சுறுக்கி, இரவில் வணக்க வழிபாடுகளால் நீட்டுகிற போது”. என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

10. மறுமையில் சீமானாக

وأخبرنا حامد بن شعيب البلخي قال حدثنا أبو عمر المقري قال حدثنا سنيد بن داود عن يوسف بن محمد بن المنكدر عن أبيه عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم قالت أم سليمان بن داود يا بني لا تكثر النوم بالليل فإن كثرة النوم بالليل يترك الرجل فقيرا يوم القيامة.

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயர் தம் மகனார் சுலைமான் (அலை) அவர்களுக்கு உபதேசம் செய்கிற போது மகனே! இரவில் அதிக நேரம் உறங்காதே! இறைவழிபாட்டில் கழிக்காமல் நீ உறங்குவது நாளை மறுமையில் அனைவரின் முன்பாக உன்னை வறியவனாக ஆக்கிவிடும்”. என்று கூறியதாக நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

 

ஆகவே ரமலானுடைய ஒவ்வொரு மணித்துளிகளையும் பாக்கியமாகக் கருதி மிக அழகாக திட்டமிட்டு அமல்கள் செய்வதில் ஈடுபடுவோம்! அல்லாஹ்வின் அருளையும், மன்னிப்பையும், நரக விடுதலையையும் பெறுவோம்!!