Thursday, 5 March 2026

ஜகாத் வரியல்ல.... அது ஓர் உயரிய இபாதத்!! ZAKAT: AN ACT OF WORSHIP, NOT A FINE & TAX

 

ஜகாத் வரியல்ல.... அது ஓர் உயரிய இபாதத்!!

ZAKAT: AN ACT OF WORSHIP, NOT A FINE & TAX



அல்லாஹ்வின் மகத்தான கருணையால் ரமழானுடைய மத்திய பகுதியான அருளாளன் அல்லாஹ்வின் மன்னிப்பு நிறைந்த இரண்டாவது பத்தின் ஜும்ஆ தினத்தில் நாம் அமர்ந்திருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் மன்னிப்பை வழங்கியருள்வானாக!

இஸ்லாத்தின் பிரதானமான ஐந்து கடமைகளில் ஒன்று ஜகாத்.

ஜகாத் கடமையின் மீதான இஸ்லாமிய மக்களின் பார்வையில் மாற்றம் வர வேண்டும்.

ஏனெனில், ஜகாத் கடமையை நம்மில் பலரும் செல்வந்தர்கள் தம்மிடம் உள்ள செல்வத்திற்காக செலுத்துகிற வரியாகவே கருதுகின்றார்கள்.சிலர் சுமையாகவும், சிலர் தண்டனையாகவும், பாரமாகவும் கருதுகின்றார்கள்.

அவர்களுக்கு நாம் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்று தான் முனாஃபிக் எனும் நயவஞ்சகர்களுக்கு மட்டுமே அல்லாஹ்வின் கட்டளை, அல்லாஹ்விற்கு செய்யப்படு வணக்க வழிபாடுகள் சுமையாகவும், பாரமாகவும் தெரியும் என்று அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் வன்மையாக விமர்சித்துக் கூறுகின்றான். 

ஜகாத் செல்வந்தர்கள் செலுத்த வேண்டிய வரி என்பதாக இஸ்லாம் எங்கும் சொல்ல வில்லை.

மாறாக, ஜகாத் என்பது ஓர் இபாதத். எப்படி நாம் உடல் உறுப்புகள் மூலமாக வணக்க வழிபாடுகள் செய்கின்றோமோ, அது போன்று நமக்கு அல்லாஹ் வழங்கி இருக்கும் பொருளாதார வளத்தின் மூலமாக அல்லாஹ் வழிகாட்டி இருக்கும் மக்களுக்கு அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு நாம் செய்யும் ஓர் இபாதத் - வணக்க வழிபாடாகும்.

தொழுகை -உடல் உறுப்புகள் சார்ந்த வணக்க வழிபாடு என்றால், ஜகாத் -பொருள் சார்ந்த வணக்க வழிபாடு.

தொழுகையில் எப்படி அல்லாஹ்வை உடல் உறுப்புக்களால், குனிந்து, நிமிர்ந்து, மொழிந்து வணங்குகின்றோமோ, அதுபோன்றுதான் கடமையாக்கப்பட்ட அளவை செல்வத்திலிருந்து, அவன் கட்டளையிட்டுள்ள பிரிவினருக்கு நாம் எடுத்துக் கொடுக்கும் பொழுது அல்லாஹ்வை வணங்குகின்றோம்.

இஸ்லாமிய மார்க்கத்தில் நல்அமல்கள் என்பது ஆயிரக்கணக்கில் இருக்கிறது. ஆனாலும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நல்அமல்களில் இருந்து இரண்டு பெரும் நல்அமல்களை மட்டுமே அல்குர்ஆனில் இணைத்துச் சொல்கின்றான்.

அல்குர்ஆனில் நேரடியாக ஜகாத் என்ற கடமையை 30 இடங்களில் பிரயோகிக்கும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஜகாத்தையும், தொழுகையையும் 27 இடங்களில் இணைத்துக் கூறுகின்றான்.

இது மாத்திரமின்றி மக்காவில் துவக்க காலத்தில் அருளப்பட்ட இறைவசனங்களில் நேரடியாக இல்லாவிட்டாலும் ஜகாத்தோடு தொடர்புடைய ஏழைகளுக்கு உணவளித்தல், ஏழைகளுக்கு செலவு செய்தல் போன்ற செலவுகள் தூண்டப்பட்டிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ

            தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள்; ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள். ( அல்குர்ஆன்: 2 : 43 )

       தொழுகையோடு ஜகாத்தையும் இணைத்து அல்லாஹ் சொல்வதிலிருந்து, தொழுகையை எப்படி ஒரு உயர்ந்த இபாதத்தாக அங்கீகரித்து இருக்கின்றானோ அதுபோன்று ஜகாத்தையும் உயர்ந்த இபாதத்தாக அங்கீகரித்து இருக்கின்றான். எனவே, ஜகாத் கொடுப்பவர் இபாதத் செய்கிறார்.

இரண்டாவதாக நன்மையை ஆதரவு வைத்து செய்யப்படும் இருபெரும் நல்அமல்களில் ஒன்றாக ஜகாத் இருக்கிறது.

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

            நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, தொழுகைகளை நிலைநிறுத்தி, ஸகாத் கொடுத்தார்களோ அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் மீது பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். ( அல்குர்ஆன்: 2 : 277 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நல் அமல்களை பொதுவாக சொல்லிவிட்டு அந்த நல் அமல்களில் இருந்து நாம் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய இரண்டு அமல்களை குறிப்பிட்டுச் சொல்கிறான்.

எனவே, ஜகாத் வழங்கும் ஒருவர் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இம்மையிலும் மறுமையிலும் எனக்கு நன்மைகளையும் நற்கூலி களையும் கொடுப்பான் என்று ஆதரவு வைத்து இந்த ஜகாத்தை கொடுக்க வேண்டும். எப்படி மற்ற மற்ற இபாதத்களுக்கு நன்மைகள் கிடைக்குமோ அது போன்றே ஜகாத் கொடுப்பதன் மூலமாக ஜகாத் கொடுக்கும் செல்வந்தர்கள் நன்மைகளை பெறுவார்கள்.

மூன்றாவதாக இந்த ஜகாத் என்பது உயரிய ஒரு நோக்கத்துடன் கடமையாக்கப்பட்டுள்ளதாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குறிப்பிடுகின்றான்.

பொதுவாக இஸ்லாம் ஒவ்வொரு கடமையையும் ஒரு நோக்கத்துடன் கடமையாக்கியுள்ளது போலவே ஜகாத்தின் உயர் நோக்கமாக தஜ்கியாஎனப்படும் தூய்மைப்படுத்தலை கொண்டுள்ளது.

خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا

நபியே அவர்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தை எடுத்து அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மைப் படுத்துவீராக” ( அல்குர்ஆன்: 09:103 )

 

ஜகாத் கொடுக்கும் செல்வந்தர் அதனைப் பெறுபவர் என இரு தரப்பாருக்கும் புறரீதியாகவும் உளரீதியாகவும் ஏற்படுத்தும் தூய்மைப்படுத்தலே இதுவாகும்.

ஜகாத்தைப் பெறுபவர் வறுமை, ஏழ்மை போன்ற சிரமமான காரணிகளில் இருந்து புற ரீதியாக விடுபடுவதும், ஜகாத்தை வழங்குபவர் கஞ்சத்தனம், உலோபித்தனம், பேராசை போன்ற உளரீதியான காரணிகளில் இருந்து விடுபடுகிறார். 

மூன்று வகையான செல்வந்தர்கள்...

இந்த உலகில் மூன்று வகையான செல்வந்தர்கள் இருப்பதாக குர்ஆன் கூறுகிறது.

ஒறுவர் தன்னிடம் இருக்கும் செல்வம் முழுவதும் தன் அறிவால், தன் ஆற்றலால், தன் முயற்சியால், தன் உழைப்பால் உருவானதாக சொல்லும் செல்வந்தர்கள்.

اِنَّ قَارُوْنَ كَانَ مِنْ قَوْمِ مُوْسٰی فَبَغٰی عَلَیْهِمْ ۪ وَاٰتَیْنٰهُ مِنَ الْكُنُوْزِ مَاۤ اِنَّ مَفَاتِحَهٗ لَتَنُوْٓاُ بِالْعُصْبَةِ اُولِی الْقُوَّةِ اِذْ قَالَ لَهٗ قَوْمُهٗ لَا تَفْرَحْ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْفَرِحِیْنَ

நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்என்று கூறினார்கள்.

وَابْتَغِ فِیْمَاۤ اٰتٰىكَ اللّٰهُ الدَّارَ الْاٰخِرَةَ وَلَا تَنْسَ نَصِیْبَكَ مِنَ الدُّنْیَا وَاَحْسِنْ كَمَاۤ اَحْسَنَ اللّٰهُ اِلَیْكَ وَلَا تَبْغِ الْفَسَادَ فِی الْاَرْضِ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْمُفْسِدِیْنَ

மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்றும் கூறினார்கள்).

قَالَ اِنَّمَاۤ اُوْتِیْتُهٗ عَلٰی عِلْمٍ عِنْدِیْ اَوَلَمْ یَعْلَمْ اَنَّ اللّٰهَ قَدْ اَهْلَكَ مِنْ قَبْلِهٖ مِنَ الْقُرُوْنِ مَنْ هُوَ اَشَدُّ مِنْهُ قُوَّةً وَّاَكْثَرُ جَمْعًا وَلَا یُسْـَٔلُ عَنْ ذُنُوْبِهِمُ الْمُجْرِمُوْنَ 

(அதற்கு அவன்) கூறினான்: எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள். ( அல்குர்ஆன்: 28: 76-78 )

இது போன்ற மனோ நிலையில் உள்ள செல்வந்தர்கள், இவர்கள் காரூணின் வகையறாக்கள். இவர்களின் முடிவு மோசமாகவே இருக்கும்.

இரண்டாமவர்,

وَالَّذِیْنَ یَكْنِزُوْنَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا یُنْفِقُوْنَهَا فِیْ سَبِیْلِ اللّٰهِ ۙ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِیْمٍ ۟ۙ

இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று சோபனம் கூறுவீராக!

یَّوْمَ یُحْمٰی عَلَیْهَا فِیْ نَارِ جَهَنَّمَ فَتُكْوٰی بِهَا جِبَاهُهُمْ وَجُنُوْبُهُمْ وَظُهُوْرُهُمْ ؕ هٰذَا مَا كَنَزْتُمْ لِاَنْفُسِكُمْ فَذُوْقُوْا مَا كُنْتُمْ تَكْنِزُوْنَ ۟

(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்). ( அல்குர்ஆன்: 9: 34,35 )

இவர்கள் செல்வத்தை சேகரித்து வைத்திருப்பர். ஆனால், அதை அல்லாஹ் காட்டிய அவனுடைய வழியில் செலவு செய்ய மாட்டார்கள். இவர்கள் தாங்கள் மட்டுமே சுகம் அனுபவிக்கும் நோக்கில் செல்வத்தை சேகரித்து வைத்திருக்கும் செல்வந்தர்கள். இவர்கள் யஹூதிகளின் வகையறாக்கள். இவர்களின் முடிவும் மிக மோசமாகவே இருக்கும்.

மூன்றாமவர், அடுத்து அல்லாஹ் புகழ்ந்து போற்றும் நல்லடியார்களாக செல்வந்தர்கள். சுமார் 10 இடங்களில் அல்லாஹ் "நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து அவர்கள் செலவு செய்வார்கள்" என்று கூறுகின்றான்.

الَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِالْغَیْبِ وَیُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ 

(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். ( அல்குர்ஆன்: 2: 3 )

وَالَّذِیْنَ صَبَرُوا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِمْ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِیَةً وَّیَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّیِّئَةَ اُولٰٓىِٕكَ لَهُمْ عُقْبَی الدَّارِ 

இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்; தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள்; நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய்வார்கள்; நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். இத்தகையோருக்கே மறுமையில் (சுவனபதி யென்னும்) நல்ல வீடு இருக்கிறது. ( அல்குர்ஆன்: 13: 22 )

இவர்கள் தம்மிடம் உள்ள செல்வத்தை, தம் வியாபாரம் மூலம் கிடைக்கும் வருமானத்தை, தாம் சேமித்து வைத்துள்ள சேமிப்பை அல்லாஹ்வால் தமக்கு வழங்கப்பட்டுள்ள செல்வமாகவே அவர்கள் கருதுவார்கள்.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதே சொற்றொடரில் அனைந்துள்ள 10 க்கும் மேற்பட்ட வசனங்களிலும் இடம் பெற்றுள்ள "நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து அவர்கள் செலவு செய்வார்கள்" என்ற பதத்திற்கு விளக்கம் தரும் முஃபஸ்ஸிரீன்கள் - அருள்மறை விரிவுரையாளர்கள் "கடமையான ஜகாத், மற்றும் உபரியான ஸதகா" மற்றும் நன்மையான வழிகளில் செலவு செய்வார்கள் என்ற விளக்கத்தை தருகின்றார்கள்.

இவர்கள் உண்மை முஃமின்கள், இவர்களின் முடிவு சுகபோக வாழ்வுக்கு சொந்தமான சுவனமாகும்.

நாம் எந்த வகை செல்வந்தர்களாக இருக்கின்றோம்? நாம் எந்த வகை செல்வந்தர்களாக இருக்க வேண்டும்? நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

நோக்கம் உயர்வானால் இலக்கு எளிதாகும்..

ஒருவர் செல்வத்தை திரட்டுவதற்கு உலகியல் ரீதியாக பல்வேறு காரணங்களும், நோக்கங்களும் இருந்தாலும் செல்வத்தை திரட்டும் வழியில் ஈடுபட்டுள்ள ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுடைய பாதையில் தேவையுள்ள அடியார்களுக்கு செலவளிப்பதற்காக இந்த செல்வத்தை சம்பாதிக்கிறேன் என்ற எண்ணம் வைப்பாரேயானால் உண்மையில் அந்த செல்வத்தை திரட்டும் செல்வந்தரின் முயற்சி அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய ஒரு வணக்கமாக கருதப்படும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இறைநம்பிக்கையாளர்கள் - முஃமின்களைப் பற்றி அவர்கள் மூன்று பிரிவுகளாக இந்த உலகில் செயல்படுகின்றார்கள் என்று அல்குர்ஆனில் சிலாகித்துக் கூறுகின்றான். 

إِنَّ رَبَّكَ يَعْلَمُ أَنَّكَ تَقُومُ أَدْنَى مِنْ ثُلُثَيِ اللَّيْلِ وَنِصْفَهُ وَثُلُثَهُ وَطَائِفَةٌ مِنَ الَّذِينَ مَعَكَ وَاللَّهُ يُقَدِّرُ اللَّيْلَ وَالنَّهَارَ عَلِمَ أَنْ لَنْ تُحْصُوهُ فَتَابَ عَلَيْكُمْ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ عَلِمَ أَنْ سَيَكُونُ مِنْكُمْ مَرْضَى وَآخَرُونَ يَضْرِبُونَ فِي الْأَرْضِ يَبْتَغُونَ مِنْ فَضْلِ اللَّهِ وَآخَرُونَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ 

            "நிச்சயமாக உமது இறைவன் அறிவான், “நிச்சயமாக நீர் இரவின் மூன்றில் இரண்டு பகுதிகளை விட குறைவாக, இன்னும் அதன் பாதி, இன்னும் அதன் மூன்றில் ஒரு பகுதி நின்று வணங்குகிறீர்; இன்னும், உம்முடன் இருப்பவர்களில் ஒரு கூட்டமும் நின்று வணங்குகிறார்கள்.அல்லாஹ்தான் இரவையும் பகலையும் (அவ்விரண்டிற்குரிய நேரங்களை) நிர்ணயிக்கிறான். நீங்கள் அதற்கு (-இரவு முழுக்க வணங்குவதற்கு) சக்திபெறவே மாட்டீர்கள் என்று அவன் நன்கறிவான். ஆகவே, அவன் உங்களை மன்னித்தான். ஆக, குர்ஆனில் (உங்களுக்கு) இலகுவானதை (தொழுகையில்) ஓதுங்கள்! உங்களில் நோயாளிகள் இருப்பார்கள்; இன்னும், மற்றும் சிலர் அல்லாஹ்வின் அருளை தேடியவர்களாக பூமியில் பயணம் செய்வார்கள்; இன்னும், மற்றும் சிலர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள்என்று அல்லாஹ் அறிவான். ஆகவே, அ(ல்லாஹ்வின் வேதத்)திலிருந்து (உங்களுக்கு) இலகுவானதை (தொழுகையில்) ஓதுங்கள்! தொழுகையை நிலை நிறுத்துங்கள்! ஸகாத்தை கொடுங்கள்! அல்லாஹ்விற்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நன்மையில் எதை நீங்கள் முற்படுத்துகிறீர்களோ அதை அல்லாஹ்விடம் (நீங்கள் செய்ததை விட) மிகச் சிறப்பாகவும் கூலியால் மிகப் பெரியதாகவும் நீங்கள் பெறுவீர்கள். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான். ( அல்குர்ஆன்: 73 : 20 )

ஒரு பிரிவினர் வணக்க வழிபாடுகளில் இரவில் நின்று கொண்டிருப்பார்கள். இரண்டாம் பிரிவினர் இந்த பூமியில் பயணம் செய்து அல்லாஹ்வுடைய செல்வத்தை தேடி கொண்டிருப்பார்கள். மூன்றாம் பிரிவினர் அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்து கொண்டிருப்பார்கள் என்று கூறுகிறான். 

       இந்த மூன்று பிரிவினரையும் முஃமின்கள் - இறைநம்பிக்கையாளர்களுடைய பிரிவினர் என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகின்றான் என்றால், அல்லாஹ்வுடைய செல்வத்தை அவனுடைய கிருபையை அவர்கள் தேடுவார்கள் என்று சொன்னதிலிருந்து, அல்லாஹ்வுடைய அந்த செல்வத்தை அல்லாஹ் ஹலாலாக்கிய முறையிலே வழியில் தேடுவார்கள், அல்லாஹ் விரும்பக்கூடிய வழியிலேயே செலவு செய்வதற்காக தேடுவார்கள். என்று பொருள் படும் என்று சில முஃபஸ்ஸிரீன்கள் விளக்கம் தருகிறார்கள்.

எனவே, ஜகாத் கொடுப்பதை ஏதோ நம் மீது நம்முடைய செல்வத்திற்காக கடமையாக்கப்பட்ட ஒரு வரி என்று நினைக்காமல் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எனக்கு ஜகாத் கொடுக்கும் பாக்கியத்தை வழங்கியுள்ளான், அல்லாஹ்வுக்கும் எனக்கும் உண்டான தொடர்புக்கு இந்த ஜகாத்தை வழியாக அமைத்துள்ளான் என்று ஒரு செல்வந்தர் நினைத்து வழங்க வேண்டும்.

ஜகாத் வழங்கும் செல்வந்தர்கள் கவனத்திற்கு...

1) முதலில் குடும்ப உறவுகளில் உள்ள ஏழைகள் மற்றும் வறியவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எங்கெல்லாம் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு கூறுகின்றானோ அங்கெல்லாம் குடும்ப உறவுகளைத்தான் முதலில் குறிப்பிடுகின்றான்.

நபி அவர்களும் நபித்தோழர்கள் சிலர் தங்களது செல்வத்தை, பொருளாதாரத்தை அல்லாஹ்விற்காக அறவழியில் செலவு செய்யுமாறு தந்த போது தந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு வழங்குமாறு பணித்தார்கள்.

لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ وَمَا تُنْفِقُوا مِنْ شَيْءٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ

 உங்களுக்கு விருப்பமானவற்றை இறைவழியில் அர்ப்பணிக்காத வரை நீங்கள் நன்மையினை அடைந்திட முடியாது. மேலும், எதனை நீங்கள் அர்ப்பணித்தாலும் திண்ணமாக, அல்லாஹ் அதனை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.

وقال الإمام أحمد: حدثنا روح، حدثنا مالك، عن إسحاق بن عبد الله بن أبي طلحة، سمع أنس بن مالك يقول: كان أبو طلحة أكثر أنصاري بالمدينة مالا وكانَ أحبَّ أمواله إليه بيْرَحاءُ -وكانت مُسْتقْبلة المسجد، وكان النبي صلى الله عليه وسلم يدخلها ويشرب من ماء فيها طيّب-قال أنس: فلما نزلت: { لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ } قال أبو طلحة: يا رسول الله، إن الله يقول: { لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ } وإن أحبَّ أموالي إلَيَّ بيْرَحاءُ وإنها صدقة لله أرجو بِرَّها وذُخْرَها عند الله تعالى، فَضَعْها يا رسول الله حيث أراك الله [تعالى] فقال النبي صلى الله عليه وسلم: "بَخٍ، ذَاكَ مَالٌ رَابِحٌ، ذَاكَ مَالٌ رَابِح، وَقَدْ سَمِعْتُ، وَأَنَا أرَى أنْ تجْعَلَهَا فِي الأقْرَبِينَ". فقال أبو طلحة: أفْعَلُ يا رسول الله. فَقَسَمها أبو طلحة في أقاربه وبني عمه. أخرجاه

இந்த இறை வசனம் இறங்கிய போது அபூ தல்ஹா அன்ஸாரி (ரலி) அவர்கள். தங்களுக்கு மிகவும் விருப்பமான பைருஹா தோட்டத்தை அறமாக அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் தந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அபூ தல்ஹா அளித்த தோட்டத்தை வறுமையில் வாடிய அபூ தல்ஹா (ரலி) அவர்களின் தந்தையின் சகோதரர்களுடைய மக்களுக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும், சொந்த பந்தங்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்கள். (நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர்)

2) இரண்டாவது தமது வீட்டின் அருகாமையில் உள்ளோர், தமது மஹல்லா, தமது ஊர் மக்களில் உள்ள ஏழைகள் மற்றும் வறியவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.

முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை நபி அவர்கள், யமனுக்கு ஆளுநராக நியமித்தார்கள். அவர்களை அனுப்பி வைக்கும் போது நபி அவர்கள் கூறினார்கள்.

وعن ابن عباس قال : قال رسول الله صلى الله عليه وسلم لمعاذ بن جبل حين بعثه إلى اليمن : "فأخبرهم أن الله قد فرض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم

நபி அவர்கள் முஆதே (ரலி) அங்குள்ள செல்வந்தர்களிடமிருந்து முறையாக வசூலித்து, அத்தொகையை அங்கு வாழ்ந்த ஏழைகளுக்கு வழங்குவீராக! , 

நபி  அவர்களின் கட்டளைப்படி அங்குள்ள செல்வந்தர்களிடமிருந்து முறையாக வசூலித்து, அத்தொகையை அங்கு வாழ்ந்த ஏழைகளுக்குவறியவர்களுக்கும் முறையாக பகிர்ந்தளித்தார்கள்.

இதன் காரணமாக, ஒவ்வோர் ஆண்டும் கணிசமாக ஏழைகளின் எண்ணிக்கை குறைந்து ஜகாத் கொடுக்கும் செல்வந்தர்களின் எண்ணிக்கை கூடியது.

3) உங்களிடம் உதவி பெறும் ஒருவர் தன்னிறைவு பெற்றவராக மாறி அடுத்த ஆண்டோ அல்லது அதற்கடுத்த ஆண்டோ பிறருக்கு வழங்கும் நிலைக்கு, உதவும் நிலைக்கு உயர வேண்டும்.

مَرَّ عبدالله بن عمر (رضي الله عنهما) مع أصحاب له في بعض نواحي المدينة، فوضعوا سُفرةً، فمرَّ بهم راعي غنمٍ، فسلَّمَ، فقال ابن عمر: هَلُمَّ يا راعي، هَلُمَّ، فأصِب من هذه السفرة، فقال: إني صائمٌ، فقال ابن عمر: أتصوم في هذا اليوم الحار وأنت في هذه الجبال ترعى هذه الغنم؟ فقال: أي والله أُبادر أيامي الخالية، فقال له ابن عمر - وهو يريد أن يختبر ورعه وتقواه -: بِعْنا شاةً من هذه الغنم نُعطيك ثمنها ونعطيك من لحمها، فقال: إنها ليستْ لي، إنها غنم سيدي، فقال ابن عمر: فما عسى سيدك فاعلًا إذا فقدها، فقلت: أكلها الذئب؟ فولَّى الراعي مدبرًا، وقد رفع أُصبعه إلى السماء، يقول: أين الله؟ فجعل ابن عمر يرددها: أين الله؟ أين الله؟ فلما قدم ابن عمر المدينة بعث إلى مولاه - مولى الراعي - فاشترى منه الغنم واشترى منه الراعي، فأعتق الراعي ووهب له الغنم". (رواه الاحمد فى الزهد، الداء والدواء لابن القيم )

ஒரு நாள் இப்னு உமர் ரலி அவர்கள் மதீனாவின் சுற்றுப் புறங்களை சுற்றிப் பார்க்க நண்பர்களுடன் சென்றார்கள். ஒரு மர நிழலில் நண்பர்களுடன் அமர்ந்து தேநீர் பருக அமர்ந்தார்கள். அப்போது அங்கே ஆட்டிடையர் ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டே இவர்களின் அருகே கடந்து சென்றார். கடந்து செல்லும் போது அமர்ந்திருக்கும் அனைவருக்கும் ஸலாம் கூறினான். அப்போது, இப்னு உமர் ரலி அவர்கள் அந்த ஆட்டியரை தம்மோடு அமர்ந்து சாப்பிட அழைத்தார்கள். அதற்கவன்"நான் நோன்பு நோற்றுள்ளேன்" என்றார். கடுமையான வெயில் காலத்தில், அதுவும் பாலைவன சுடு மணலில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் நீ நோன்பு நோற்றிருக்கின்றாயா? என்று ஆச்சர்யம் மேலிட கேட்டு விட்டு, நாங்கள் காசு தருகிறோம். உன் மந்தையில் இருக்கும் ஆட்டில் ஒரு ஆட்டை எங்களுக்கு நீ தந்து விடு. நாங்கள் அதை அறுத்து எங்களுக்கு போக மீதமுள்ள இறைச்சியையும் உனக்கு தந்து விடுகின்றோம்? என்ன சொல்கின்றாய்? தருகின்றாயா? என்று இப்னு உமர் ரலி அவர்கள் கேட்டார்கள்.

அதற்கவர், இந்த ஆடுகளின் உரிமையாளர் நான் இல்லை. இது என் எஜமானின் மந்தை என்று பதிலளித்தார்.

அப்போது, இப்னு உமர் ரலி அவர்கள் இவ்வளவு பெரிய மந்தையில் ஒரு ஆடு இல்லாமல் போனதையா உன் எஜமான் கேட்கப் போகின்றார். அப்படியே கேட்டாலும் ஓநாய் இழுத்துச் சென்று விட்டது என்று கூறி விடு என்று கூறினார்கள்.

அதற்கு அந்த ஆட்டிடையர் ஏதோ சிந்தித்தவனாக வானத்தை நோக்கி தன் ஆட்காட்டி விரலை உயர்த்தி "அப்படி என்றால் அல்லாஹ் எங்கிருக்கின்றான்? (அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இதை எல்லாம் பார்த்து கொண்டு தானே இருக்கின்றான் என்ற கருத்து பட) என்று மூன்று முறை கேட்டார்.

 

அங்கிருந்து விடை பெற்று மதீனா வந்த இப்னு உமர் (ரலி) அவர்கள் தம்முடைய பணத்தை தமது அடிமை ராஃபிஇ அவர்களிடம் கொடுத்து அந்த மந்தையின் உரிமையாளரிடம் ஒட்டுமொத்த மந்தையையும், அந்த இடையனையும் விலைக்கு வாங்கி வருமாறு கூறினார்கள். ராஃபிஇ அவர்களும் அது போன்றே செய்தார்.

பின்னர், அந்த இடையனை அழைத்து உரிமை விட்டு அந்த மந்தை முழுவதையும் அந்த இடையனுக்கே அன்பளிப்பாக வழங்கினார்கள். ( நூல்: அஸ் ஸுஹ்து லிஇமாமி அஹ்மத், அத் தாவு வத் தவாஃ லிஇமாமி இப்னுல் கய்யிம் )

நேற்று வரை ஆட்டு இடையனாக இருந்த ஒருவர் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி அவர்களின் உதவியால் அவர் மேய்த்த ஆட்டு மந்தைக்கே உரிமையாளராக மாறிப் போனார்.

நாம் வழங்கும் ஜகாத்தில் என்றைக்கு இந்த மாற்றம் நிகழுமோ அன்று தான் ஜகாத்தின் உண்மையான கன பரிமாணத்தை நாம் உணர முடியும்.

4) நான்காவதாக உங்கள் ஜகாத் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட அல்லாஹ்விடம் அதிகம் துஆ செய்யுங்கள்..

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَعْطَيْتُمْ الزَّكَاةَ فَلَا تَنْسَوْا ثَوَابَهَا أَنْ تَقُولُوا اللَّهُمَّ اجْعَلْهَا مَغْنَمًا وَلَا تَجْعَلْهَا مَغْرَمًا – إبن ماجة

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நீங்கள் ஜகாத்தை வழங்கினால் அதற்கு இறைவன் புறத்திலிருந்து வழங்கப்படும் நன்மைகளை மறந்து விடாதீர்கள். எனவே, அதனைக் கவனத்தில் கொண்டு அல்லாஹ்வே! நான் வழங்கிய இந்த ஜகாத்தை பல்கிப் பெருகுவதாக ஆக்குவாயாக! நான் வழங்கிய இந்த ஜகாத்தை ஒன்றுமில்லாததாக ஆக்கி விடாதே!என்று பிரார்த்தனை செய்யுங்கள்என நபி அவர்கள் கூறினார்கள். ( நூல்: இப்னுமாஜா )

5) நிறைவாக, உங்களின் கூலியை பெற தயாராக இருங்கள்...

وَالْمُقِيمِينَ الصَّلَاةَ وَالْمُؤْتُونَ الزَّكَاةَ وَالْمُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أُولَئِكَ سَنُؤْتِيهِمْ أَجْرًا عَظِيمًا

தொழுகையையும் கடைப்பிடித்துத் தொழுபவர்கள்; ஜகாத்தும் கொடுத்து வருபவர்கள்; அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்கள். ஆகிய இவர்களுக்கு (மறுமையில்) மகத்தான கூலியை நாம் கொடுப்போம். (அல்குர்ஆன்4 : 162)

ஜகாத் கொடுப்பவர்களுக்கு என்ன கூலி? குர்ஆனுக்கு விரிவுரை செய்யும் மார்க்க அறிஞர்கள் சொல்கின்றார்கள், எந்த இடங்களில் அல்லாஹ் மகத்தான கூலி என்று சொல்கிறானோ, அது அல்லாஹ்வுடைய சுவர்க்கமாகும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் பொருளாதாரத்தில் பரக்கத் செய்வானாக! அவனுடைய உயரிய இபாதத்தான ஜகாத்தை வழங்கும் மேன்மக்களில் ஒருவராக நம்மையும் நம் சந்ததியினர் அனைவரையும் ஆக்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

Wednesday, 4 March 2026

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 16. சமூக அக்கறை கொள்வோம்!!!

 

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 16.

சமூக அக்கறை கொள்வோம்!!!



அல்லாஹ்வின் மகத்தான கருணையினால் 15 –வது நோன்பை நோற்று, 16 – வது தராவீஹை நிறைவு செய்து, 16 –வது நோன்பை நோற்கும் ஆவலில் எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்தருள்வானாக! எதிர் வரும் நாட்களில் நோன்பு நோற்கும் ஆற்றலையும், தராவீஹ் தொழும் பாக்கியத்தையும் நஸீபாக்குவானாக!

இன்றைய தராவீஹ் தொழுகையில் சூரா அந்நம்ல், சூரா அல் கஸஸ் நிறைவு செய்யப்பட்டு சூரா அல் அன்கபூத்தின் 44 வசனங்கள் ஓதப்பட்டுள்ளது.

இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட சூரா அந் நம்லு அத்தியாயத்தில் இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அல்லாஹ் எடுத்துரைக்கின்றான்.

அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் இடம் பெறும் பிரதானமான இரண்டு உயிரினங்களை பற்றியும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குறிப்பிடுகின்றான். ஒன்று எறும்பு. இன்னொன்று ஹுத்ஹுத் பறவை.

எறும்பு தொடர்பாக இறைவன் கூறும் தகவல் இது தான்.

حَتّٰٓى اِذَاۤ اَتَوْا عَلٰى وَادِ النَّمْلِۙ قَالَتْ نَمْلَةٌ يّٰۤاَيُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسٰكِنَكُمْ‌ۚ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمٰنُ وَجُنُوْدُهٗۙ وَهُمْ لَا يَشْعُرُوْنَ‏

فَتَبَسَّمَ ضَاحِكًا مِّنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًـا تَرْضٰٮهُ وَاَدْخِلْنِىْ بِرَحْمَتِكَ فِىْ عِبَادِكَ الصّٰلِحِيْ

அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்தபோது எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்திடக் கூடாது’’ என்று ஓர் எறும்பு கூறியது. அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார்.

என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!’’ என்றார். ( அல்குர்ஆன்: 27:18,19 )

ஹுத்ஹுத் பறவை தொடர்பாக இறைவன் கூறும் தகவல் இது தான்.

وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ (20) لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدًا أَوْ لَأَذْبَحَنَّهُ أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُبِينٍ (21) فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطْتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ (22) إِنِّي وَجَدْتُ امْرَأَةً تَمْلِكُهُمْ وَأُوتِيَتْ مِنْ كُلِّ شَيْءٍ وَلَهَا عَرْشٌ عَظِيمٌ (23) وَجَدْتُهَا وَقَوْمَهَا يَسْجُدُونَ لِلشَّمْسِ مِنْ دُونِ اللَّهِ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيلِ فَهُمْ لَا يَهْتَدُونَ (24) أَلَّا يَسْجُدُوا لِلَّهِ الَّذِي يُخْرِجُ الْخَبْءَ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُونَ وَمَا تُعْلِنُونَ (25) اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ (26)

பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத் பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா?” என்றார். அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும்” (என்றும் கூறினார்). (அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்து, ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்’’ என்று கூறியது.

நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது. அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வுக்கன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்)வழியை விட்டும் தடுத்துள்ளான்.

எனவே அவர்கள் நேர்வழி பெற மாட்டார்கள். வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தாச் செய்ய மாட்டார்களா? நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷின் அதிபதி” (என்றும் கூறியது) ( அல்குர்ஆன்: 27:20-26 )

பொதுவாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எந்த ஒன்றையும் வீணாகக் கூறுபவன் மாறாக, மனித சமூகத்திற்கு படிப்பினைக்காக இது போன்ற வரலாறுகளை கூறுகின்றான்.

لَقَدْ كَانَ فِي قَصَصِهِمْ عِبْرَةٌ لِأُولِي الْأَلْبَابِ مَا كَانَ حَدِيثًا يُفْتَرَى وَلَكِنْ تَصْدِيقَ الَّذِي بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيلَ كُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً لِقَوْمٍ يُؤْمِنُونَ

அல்லாஹ் குறிப்பிடும் அவர்களின் வரலாற்றில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது. (இது) இட்டுக்கட்டப்பட்ட செய்தி அல்ல. மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்தி, ஒவ்வொரு பொருளையும் விளக்கிக் கூறுகிறது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர்வழியாகவும், அருளாகவும் உள்ளது. ( அல்குர்ஆன்: 12: 111 )

அந்த வகையில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறும் இந்த இரண்டு நிகழ்வுகளையும் நோக்கும் போது, மனிதர்களாகிய நாம் படிப்பினை பெறத்தக்க அம்சங்கள் இதிலே அடங்கியுள்ளதை நாம் மறுக்க இயலாது.

எறும்பின் ஊடாக நாம் பெற வேண்டிய படிப்பினை:- ஓர் ஆபத்து நேரிடுகின்றது என்றால் அந்த ஆபத்திலிருந்து தன்னை மட்டும் காத்துக் கொண்டால் போதாது. தன்னுடைய குடும்பத்தையும், தன்னைச் சுற்றி வாழும் மக்களையும், தன் சமூகத்தையும் காக்க வேண்டும் என்ற பொதுநலனையும், சமூக அக்கறையையும் எறும்பின் இந்த அறைகூவல் நமக்கு உணர்த்துகிறது.

ஹுத்ஹுத் பறவையின் ஊடாக நாம் பெற வேண்டிய படிப்பினை:- தன்னுடைய நலனைத் தாண்டி, பிறருடைய நலன் குறித்தும் சிந்திக்க வேண்டும் என்கிற தூர நோக்கு சிந்தனையை பறவைக்கும் சுலைமான் அலை அவர்களுக்கும் இடையே நடைபெறும் உரையாடல் நமக்கு உணர்த்துகிறது.

எறும்புடைய சமூக அக்கறையை விளக்கும் நபிமொழி ஒன்று முஸ்னத் அஹ்மதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை ஹாக்கிம் ரஹ் அவர்கள் ஸஹீஹ் என்று கூறினார்கள்.

சுலைமான் அலை அவர்கள் உட்பட முந்தைய காலத்தில் வாழ்ந்த அத்துனை நபிமார்களுக்கும், அவர்களின் சமூக மக்களுக்கும் பஞ்ச காலத்தில் மழை வேண்டி பிரார்த்தனை செய்வது கடமையாக ஆக்கப்பட்டிருந்தது. 

وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: (خرج سليمان عليه السلام يستقي فرأى نملة مستلقية على ظهرها، رافعة قوائمها إلى السماء تقول: اللهم إنا خلق من خلقك، ليس بنا غنى عن سقياك فقال: ارجعوا؛ فقد سقيتم بدعوة غيركم) رواه أحمد، وصححه الحاكم] .

அபூஹுரைரா ரலி அவர்கள் அறிவித்தார்கள்: நபி அவர்கள் கூறினார்கள்:- "மழை தேவையான ஒரு பஞ்ச காலத்தில் நபி சுலைமான் அலை அவர்கள் தமது தோழர்களுடன் மழை வேண்டி பிரார்த்தனை செய்ய ஓரிடத்திற்கு வருகை தந்தார்கள். அப்போது முதுகுப்புறமாக படுத்தவாறு தமது கொடுக்குகளை வானை நோக்கி உயர்த்தியவாறு ஒரு எறும்பு "அல்லாஹ்வே! நாங்களும் நீ படைத்துள்ள படைப்புகளில் ஒரு படைப்பு தான். நீ வழங்கும் மழையின் பால், தண்ணீரின் பால் தேவையுடையவர்களாக நாங்களும் இருக்கின்றோம்" என்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தது. இதைக் கேட்ட சுலைமான் அலை அவர்கள் தம்முடன் வந்தவர்களைப் பார்த்து"செல்லுங்கள்! திரும்பிச் செல்லுங்கள்! மற்றவர்களின் பிரார்த்தனை மூலம் உங்களுக்கு மழை பொழிவிக்கப்படும்" என்று கூறினார்கள். ( நூல்: அஹ்மத், ஹாக்கிம்)

இன்னும் சில அறிவிப்புகளில்...

ثم يروي لنا أنها قالت: (اللهم إنا خلق من خلقك، فلا تمنع عنا بذنوبنا فضلك) ، أو (بذنوب العباد

அல்லாஹ்வே! நாங்களும் நீ படைத்துள்ள படைப்புகளில் ஒரு படைப்பு தான். எங்களுக்கு உன் அருளை அடியார்களின் பாவங்களின் காரணமாக தடை செய்து விடாதே!" என்றும்,

 

كما في رواية أحمد: (فلا تهلكنا بذنوب العباد، لا غنى لنا عن سقياك) ، وفي بعض الرويات -كما يذكرها الجاحظ: (إن لم تسقنا تهلكنا، إن لم تسقنا فأمتنا) أي: لنستريح من عذاب القحط

நீ எங்களுக்கு மழையை அருள வில்லை யானால் நாங்கள் அழிந்து போவோம்! நீ எங்களுக்கு மழையை அருள வில்லை யானால் நாங்கள் இறந்து போவோம்!" என்று பிரார்த்தனை செய்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமூக அக்கறை என்றால்...

عَنْ حُذَيْفَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لاَ تَكُونُوا إِمَّعَةً تَقُولُونَ إِنْ أَحْسَنَ النَّاسُ أَحْسَنَّا وَإِنْ ظَلَمُوا ظَلَمْنَا وَلَكِنْ وَطِّنُوا أَنْفُسَكُمْ إِنْ أَحْسَنَ النَّاسُ أَنْ تُحْسِنُوا وَإِنْ أَسَاءُوا فَلاَ تَظْلِمُوا ». (ترمذي

சு (யநலமான) கம் அனுபவிக்கும் மக்களாக இருக்காதீர்கள்! அதாவது பிற மக்கள் ஏதேனும் எங்களுக்கு நல்லது செய்தால் நாமும் அவர்களுக்கு நல்லது செய்வோம். பிற மக்கள் எங்களுக்கு தீமை செய்தால் நாங்களும் அவர்களுக்கு தீங்கு செய்வோம் என கூறும் சு (யநலமான) கம் அனுபவிக்கும் மக்களாக இருக்காதீர்கள்! மாறாக, பிற மக்கள் ஏதேனும் எங்களுக்கு நல்லது செய்தால் நாங்களும் அவர்களுக்கு நல்லது செய்வோம். பிற மக்கள் எங்களுக்கு தீமை செய்தால் அப்போது நாங்கள் அவர்களுக்கு பதிலுக்கு தீங்கு விழைவிக்க மாட்டோம்! என்று உங்களின் மனதில் நல்லெண்ணத்தையே விதையுங்கள்!" என்று நபி அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )

சில போது ஹுத்ஹுதாக வாழ வேண்டும்... வாழா விட்டால்?

இறைவனுக்கு மாறு செய்யும் சூழல் நிரம்பிய காலத்தில் வாழும் ஒரு இறைநம்பிக்கையாளர் சமூக அக்கறையும், பொதுநலனும், தூர நோக்கு சிந்தனையும் இல்லாமல் வாழ்ந்தால் எச்சரிக்கை முதலில் அந்த மக்களில் ஒருவராக, பின்னர் அந்த மக்களாகவே மாற வேண்டி இருக்கும். இறுதியில் இறைவனின் தண்டனைக்கு உள்ளாக்கப்படும் ஆபத்து நேரிடும்.

عَنْ عَبْد اللَّه قَالَ : قَالَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا وَقَعَتْ بَنُو إِسْرَائِيل فِي الْمَعَاصِي نَهَتْهُمْ عُلَمَاؤُهُمْ فَلَمْ يَنْتَهُوا فَجَالَسُوهُمْ فِي مَجَالِسهمْ قَالَ يَزِيد وَأَحْسَبُهُ قَالَ فِي أَسْوَاقهمْ وَوَاكَلُوهُمْ وَشَارَبُوهُمْ فَضَرَبَ اللَّه قُلُوب بَعْضهمْ بِبَعْضٍ وَلَعَنَهُمْ عَلَى لِسَان دَاوُدَ وَعِيسَى اِبْن مَرْيَم ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ "(تفسير ابن كثير)

நபி அவர்கள் கூறினார்கள். பனூ இஸ்ராயீல் சமூக மக்கள் பாவத்தில் ஈடுபட்ட போது ஆரம்பத்தில் அவர்களுடைய அறிஞர்கள் அந்த மக்களை தடுத்துப் பார்த்தார்கள். ஆனால், அந்த மக்கள் பாவத்தை விட்டும் விலகிக் கொள்ளாமல் பாவத்திலேயே தொடர்ந்தனர். அதற்குப் பிறகு அந்த மக்களை அந்த மக்களை திருத்தும் எண்ணமில்லாமல் அம்மக்களோடு சகஜமாக வியாபாரம் செய்தார்கள். அம்மக்களோடு சகஜமாக உணவு உண்டார்கள். கடைசியில் அல்லாஹ் அந்த அறிஞர்களின் உள்ளங்களை அந்த மக்களின் உள்ளங்களோடு ஒன்றிணைத்து விட்டான். இறுதியில் அந்த அறிஞர்களும் சேர்ந்து பாவத்தில் ஈடுபடும் நிலையை உருவாக்கி விட்டான். ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )

عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَوْحَى الله عَزَّ وَجَلَّ إِلَى جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ أَنِ اقْلِبْ مَدِينَةَ كَذَا وَكَذَا بِأَهْلِهَا، قَالَ: فَقَالَ: يَا رَبِّ إِنَّ فِيهِمْ عَبْدَكَ فُلَانًا لَمْ يَعْصِكَ طَرْفَةَ عَيْنٍ، قَالَ: فَقَالَ: اقْلِبْهَا عَلَيْهِمْ، فَإِنَّ وَجْهَهُ لَمْ يَتَمَعَّرْ فِيَّ سَاعَةً قَطُّ " (طبراني

அல்லாஹ் ஜிப்ரயீல் (அலை) அவர்களுக்கு பாவம் செய்து வாழும் மக்கள் நிரம்பிய ஒரு ஊரை அந்த மக்களோடு சேர்ந்து தலைகீழாக புறட்டுமாறு (அழிக்கச் சொல்லி) உத்தரவிட்டான். அப்போது ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் இறைவா! இவர்களுள் ஒரு மனிதர் கண் சிமிட்டும் நேரம் கூட உனக்கு மாறு செய்ததில்லை. அவரையும் சேர்த்தே தலைகீழாக புறட்டவா? அழிக்க வேண்டுமா? என்று கேட்க, அதற்கு அல்லாஹ் ஆம்! அவருடன் சேர்த்தே அந்த மக்களை அழித்து விடுவீராக! ஏனெனில் என்னுடைய விஷயத்தில் அந்த மக்கள் வரம்பு மீறியதைக் கண்டு ஒரு தடவை கூட அவர் முகத்தில் அதை வெளிப்படுத்த வில்லை என்று அல்லாஹ் அறிவித்தான். ( நூல்: தப்ரானீ )

எவ்வளவு தூர நோக்கான சிந்தனை? எவ்வளவு தூர நோக்கான சமூக அக்கறை?

நபி அவர்கள் தொழுகையின் ஸஃப்புகளை சரி செய்ய சொல்லி கொடுக்கும் போது அத்தோடு சமுக ஒற்றுமையையும் சேர்த்தே சொன்னார்கள்.

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ إِدْرِيسَ، وَأَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ التَّيْمِيِّ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ مَنَاكِبَنَا فِي الصَّلَاةِ، وَيَقُولُ: «اسْتَوُوا، وَلَا تَخْتَلِفُوا، فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ، لِيَلِنِي مِنْكُمْ أُولُو الْأَحْلَامِ وَالنُّهَى ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ» قَالَ أَبُو مَسْعُودٍ: «فَأَنْتُمُ الْيَوْمَ أَشَدُّ اخْتِلَافًا»

நபி அவர்கள் தொழுகையில் நிற்கும் போது எங்கள் தோள்புஜங்களை தொட்டு அணி வகுப்பை சரி செய்வார்கள். நேராக நில்லுங்கள்! அணிவகுப்பில் மாறி மாறி நிற்காதீர்கள். உங்களின் இதயங்களை அல்லாஹ் கருத்து முரண்கள் நிறைந்ததாக மாற்றி விடுவான். உங்களில் பருவம் அடைந்தவர்களும், அறிவில் சிறந்தவர்களும் எனக்கு அருகில் (முதல் வரிசையில்) நிற்கட்டும். பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும், பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும், பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும் நிற்கட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி), ( நூல்: முஸ்லிம் )

 

 

وَجَاءَ رَجُلٌ شَابٌّ فَقَالَ أَبْشِرْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ بِبُشْرَى اللَّهِ لَكَ مِنْ صُحْبَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدَمٍ فِي الْإِسْلَامِ مَا قَدْ عَلِمْتَ ثُمَّ وَلِيتَ فَعَدَلْتَ ثُمَّ شَهَادَةٌ قَالَ وَدِدْتُ أَنَّ ذَلِكَ كَفَافٌ لَا عَلَيَّ وَلَا لِي فَلَمَّا أَدْبَرَ إِذَا إِزَارُهُ يَمَسُّ الْأَرْضَ قَالَ رُدُّوا عَلَيَّ الْغُلَامَ قَالَ يَا ابْنَ أَخِي ارْفَعْ ثَوْبَكَ فَإِنَّهُ أَبْقَى لِثَوْبِكَ وَأَتْقَى لِرَبِّكَ

பஜ்ரு தொழுகையை இமாமாக நின்று தொழவைத்துக் கொண்டிருந்த நீதியின் திரு உருவமான ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்கள் .

அபூலுஃலுவுல் ஃபைரோஸி என்பவனால் விஷம் தேய்த்த கத்தியினால் குத்தப்பட்டு, மஸ்ஜிதின் ஓரத்தில் வேதனையின் உச்சத்திலும் மரணத்தின் விளிம்பிலும் இருந்த நிலையில்

தன்னை நலம் விசாரிக்க வந்த வாலிபரின் கீழாடை கரண்டைக்கால் கீழ் இருப்பதை கண்டு..அவர் திரும்ப செல்லும்போது அந்நேரத்திலும் சப்தமிட்டு அவரை அழைக்க முடியாமல் அருகிலுல்லவர்களின் துணை கொண்டு அழைத்து அவரிடம் சொன்னார்கள்.

قَالَ يَا ابْنَ أَخِي ارْفَعْ ثَوْبَكَ فَإِنَّهُ أَبْقَى لِثَوْبِكَ وَأَتْقَى لِرَبِّكَ

என் சகோதர மகனே! உன் ஆடையை உயர்த்திக்கொள்! அது உன் ஆடைக்கு மிகுந்த சுகாதரத்தை தருவதுடன் உன் இறைவனிடம் உனக்கு இறையச்சமிகுந்தவன் என்ற பெயரையும் பெற்றுத்தரும்!" என்றார்கள். ( நூல்: புகாரி )

இன்று நாம் ஹுத்ஹுத் பறவை போன்று சிந்தித்து தூர நோக்குடன் செயல்படுகின்றோமா? சிந்தித்து பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.

உயிருடன் இல்லாதவர்கள் மீதும் அக்கறை கொண்ட மேன்மக்கள்..

وقال الإمام أحمد: حدثنا خَلَف بن الوليد، حدثنا إسرائيل، عن أبي إسحاق، عن أبي مَيْسَرة، عن عمر بن الخطاب [رضي الله عنه] أنه قال: لما نزل تحريم الخمر قال: اللهم بَيّن لنا في الخمر بيانًا شافيًا. فنزلت هذه الآية التي في البقرة: { يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ } فَدُعي عمر فقرئت عليه، فقال: اللهم بين لنا في الخمر بيانًا شافيًا. فنزلت الآية التي في سورة النساء: { يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَقْرَبُوا الصَّلاةَ وَأَنْتُمْ سُكَارَى } فكان منادي رسول الله صلى الله عليه وسلم إذا أقام الصلاة نادى: ألا يقربن الصلاة سكران. فدعي عمر فقرئت عليه، فقال: اللهم بين لنا في الخمر بيانًا شافيًا. فنزلت الآية التي في المائدة، فدعي عمر فقرئت عليه فلما بلغ: { فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ } قال عمر: انتهينا.

وهكذا رواه أبو داود، والترمذي، والنسائي من طرق، عن إسرائيل، عن أبي إسحاق عَمْرو بن عبد الله السَّبِيعي وعن أبي ميسرة -واسمه عمرو بن شُرَحبيل الهمداني-عن عُمَر، به.

 

மது குறித்த இறைவனின் வழிகாட்டல் படிப்படியாக இறைவசனங்களாக இறக்கியருளப்பட்ட போது, அவ்வசனங்களை பெருமானார் அவர்கள் உமர் (ரலி) அவர்களை அழைத்து சத்திய ஸஹாபாக்களுக்கு ஓதிக்காட்டச் சொல்வார்களாம்.

அப்பொழுது, உமர் (ரலி) அவர்கள் பெருமானாரின் கட்டளைக்கிணங்க ஸஹாபாக்களிடையே ஓதிக்காட்டி விட்டு யா அல்லாஹ் மது சம்பந்தமாக தெளிவான போதுமான ஓர் கட்டளையை எங்களுக்கு நீ இறக்கியருள வேண்டும்என மனமுருகி பிரார்த்திப்பார்களாம்.

இறுதியாக, அல்லாஹ் மதுவை முற்றிலுமாக தடை செய்து வசனங்களை இறக்கியருளினான்.

இறைநம்பிக்கை கொண்டவர்களே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். அவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள்! அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்.

மது மற்றும் சூதாட்டத்தின் வாயிலாக உங்களுக்கிடையில் பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி அல்லாஹ்வை நினைவு கூர்வதிலிருந்தும், தொழுகையிலிருந்தும் தடுத்துவிடவே ஷைத்தான் விரும்புகின்றான். இதற்குப் பிறகாவது நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்வீர்களா?”

அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் நீங்கள் கட்டுப்படுங்கள். மாறு செய்வதிலிருந்து நீங்கள் விலகியிருங்கள். நீங்கள் புறக்கணித்து விட்டால், நமது தூதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைப்பது மட்டுமே நமது தூதர் மீது கடமையாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.” ( அல்குர்ஆன்: 5:90,91,92 )

இந்த இறைவசனத்தை ஓதியவராக ஓர் அறிவிப்பாளர் மதீனாவின் வீதி வழியாக முழங்கிக் கொண்டே செல்கின்றார்.

நபித்தோழர்களின் செவிகளில் இவ்வசனம் நுழைந்த மாத்திரத்தில் தவிர்த்துக் கொள்கின்றோம் இறைவா!” “விலகிக் கொண்டோம் இறைவா!என்ற முழக்கத்துடன் தங்களின் கரங்களிலும், தங்கள் வீடுகளில் சேமித்தும் வைத்திருந்த மதுபானங்களை கீழே ஊற்றினார்கள்.

அதற்காக பயன்படுத்திய பாத்திரங்களையும், பீப்பாய்களையும் உடைத்தெறிந்தார்கள்.

அத்தோடு அவர்கள் நிறுத்தி இருந்தால் நாம் இங்கே இந்தச் செய்தியை குறிப்பிட்டு இருக்கமாட்டோம்.

ஆனால், அடுத்து ஒரு காரியத்தைச் செய்தார்கள். அது எவ்வளவு மகத்தான சேவை தெரியுமா? எத்துனை மகத்தான தொண்டு தெரியுமா?

ஆம், அல்லாஹ்வின் தூதர் அவர்களின் அருள் நிறைந்த சபையில் நபித்தோழர்களெல்லாம் அவதானித்திருந்த ஒரு பொழுதிலே ஒட்டுமொத்தமாய் ஒரே குரலாய்....

 

وقال الناس: يا رسول الله، ناس قتلوا في سبيل الله، [وناس] ماتوا على سرفهم كانوا يشربون الخمر ويأكلون الميسر، وقد جعله الله رجسًا من عمل الشيطان؟ فأنزل الله تعالى: { لَيْسَ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوا } إلى آخر الآية، وقال النبي صلى الله عليه وسلم: "لو حرم عليهم لتركوه كما تركتم". انفرد به أحمد.

அல்லாஹ்வின் தூதரே! இதோ அல்லாஹ்வின் கட்டளை எங்களுக்கு முன்பாக இறங்கிற்று! அது ஷைத்தானியச் செயல் என்று எங்களுக்கு உணர்த்தப்பட்டு விட்டது. நாங்களும் ரப்பிற்கு கட்டுப்பட்டு அந்த இழிசெயலை முழுமையாக விட்டு விட்டோம்.

ஆனால், இந்த இறைக்கட்டளை இறக்கப்படும் முன், இது ஷைத்தானியச் செயல் என்று தெரியாமல் எத்தனையோ பேர் மது அருந்தியிருக்கின்றார்கள். சூதாடிய பணத்தில் உண்டிருக்கின்றார்கள்.

அவர்கள் பத்ரிலும், உஹதிலும் இன்னும் சில யுத்தங்களிலும் கலந்து கொண்டு ஷஹாதத் வீர மரணமும் அடைந்திருக்கின்றார்கள். அவர்களின் நிலை என்ன? அவர்களை அல்லாஹ் எவ்வாறு நடத்துவான்? “ என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மௌனமாக இருக்கின்றார்கள். சில நொடிப்பொழுதில் நபிகளாருக்கு இறைச் செய்தி வந்து கொண்டிருப்பதை நபித்தோழர்கள் உணர்கின்றார்கள்.

அப்போது நபி அவர்கள்: இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள், முன்னர் எதையும் உண்டவர்கள் பற்றி அவர்கள் மீது குற்றமில்லை. ஆனால், இனி தடுக்கப்பட்டவைகளில் இருந்து இறைநம்பிக்கையாளர்கள் விலகியிருக்க வேண்டும்.

மேலும், இறைநம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருப்பவர்களாகவும், நற்செயல் புரிபவர்களாகவும், இன்னும் எந்தெந்தப் பொருள்களை விட்டு தடுக்கப்பட்டிருக்கின்றனரோ அவற்றிலிருந்து விலகியிருப்பவர்களாகவும், மேலும், இறைக்கட்டளைகளை ஏற்று வாழ்பவர்களாகவும், இன்னும் இறையச்சத்துடன் நன்னடத்தையை மேற்கொள்பவர்களாகவும் திகழ வேண்டும். அல்லாஹ் நன்னடத்தை கொண்டோரை அதிகம் நேசிக்கின்றான்.” ( அல்குர்ஆன்: 5:93 ) எனும் இறைவசனத்தை ஓதிக்காண்பித்த பின்னர் இதே இறைக்கட்டளை அவர்கள் உயிர் வாழ்கிற போதும் இறக்கியருளப்பட்டிருக்குமேயானால் அவர்களும் உங்களைப் போன்றே நடந்து கொண்டிருப்பார்கள்என்று நபி அவர்கள் கூறினார்கள்.

( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், தஃப்ஸீர் அல்குர்துபீ, முஸ்னத் அஹ்மத் )

சமூக அக்கறை அனைவருக்கும் வேண்டும்...

ஸபா நாட்டு அரசிக்கு ஸுலைமான் (அலை) அவர்கள் இஸ்லாமிய அழைப்பை ஏந்திய கடிதத்தை ஹுத் ஹுத் பறவையிடம் கொடுத்து அனுப்பினார்கள்.

அது கொண்டு சென்று அரசியின் மாளிகையில் கொண்டு போட்டது. அதைப் பிரித்துப் படித்து விட்டு அந்த அரசி உடனடியாக தம் அரசவைக் கூட்டத்தைக் கூட்டி தம் அரசவைப் பிரதானிகளிடம் விவாதிக்க ஆரம்பித்த போது

 

قَالَتْ يَا أَيُّهَا الْمَلَأُ إِنِّي أُلْقِيَ إِلَيَّ كِتَابٌ كَرِيمٌ (29) إِنَّهُ مِنْ سُلَيْمَانَ وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ (30) أَلَّا تَعْلُوا عَلَيَّ وَأْتُونِي مُسْلِمِينَ

அரசவைப் பிரமுகர்களே! மிக முக்கியமான, கண்ணியம் நிறைந்த கடிதம் ஒன்று என்னிடம் போடப்பட்டுள்ளது. அது ஸுலைமான் என்பவரிடமிருந்து வந்துள்ளது. மேலும், அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால் அது தொடங்கப்பட்டுள்ளது. எனக்கு எதிராக நீங்கள் ஆணவத்துடன் நடந்து கொள்ளாதீர்கள். முஸ்லிம்களாய் பணிந்தவர்களாய் என்னிடம் வரவேண்டும்எனும் வாசகம் அதில் உள்ளது.

قَالَتْ يَاأَيُّهَا الْمَلَأُ أَفْتُونِي فِي أَمْرِي مَا كُنْتُ قَاطِعَةً أَمْرًا حَتَّى تَشْهَدُونِ (32)

சமுதாயத்தலைவர்களே! என்னுடைய இந்த விவகாரத்தில் நீங்கள் எனக்கு நல்லதொரு ஆலோசனையை வழங்க வேண்டும்!” (அல்குர்ஆன்:27:27-32) என்று கூறினார்.

قَالُوا نَحْنُ أُولُو قُوَّةٍ وَأُولُو بَأْسٍ شَدِيدٍ وَالْأَمْرُ إِلَيْكِ فَانْظُرِي مَاذَا تَأْمُرِينَ (33)

அப்போது அந்த அவையில் இருந்த அமைச்சர்கள் பலர் ஒன்றிணைந்து நாம் வல்லமை மிக்கவர்களாகவும், கடுமையாகப் போரிடக்கூடியவர்களாகவும் இருக்கின்றோம். இதற்கு மேல் இறுதி முடிவெடுப்பது உங்கள் பொறுப்பு. என்ன ஆணையிடுவது என்பதைத் தாங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்!என்றனர்.

இதைக் கேட்டதும் அந்த அரசியார் அவர்கள் மிகவும் சமூக அக்கறையோடு சொன்ன பதில்..

قَالَتْ إِنَّ الْمُلُوكَ إِذَا دَخَلُوا قَرْيَةً أَفْسَدُوهَا وَجَعَلُوا أَعِزَّةَ أَهْلِهَا أَذِلَّةً وَكَذَلِكَ يَفْعَلُونَ (34

அரசர்கள் ஏதேனும் ஒரு நாட்டில் புகுந்தால் அதனை அழித்து விடுவார்கள். மேலும், அங்கு கண்ணியத்துடன் வாழ்பவர்களைக் கேவலப்படுத்தி விடுவார்கள். இதைத் தான் அவர்கள் செய்கின்றார்கள். ( அல்குர்ஆன்: 27: 33, 34 

சமூக அக்கறையுடன் செயல்படுபவரின் அந்தஸ்து!

நபி அவர்கள் சில நபித்தோழர்களை அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் நான் அவர்களை சேர்ந்தவர் என்று சிறப்பு படுத்தி கூறியுள்ளார்கள். அப்படியான ஒரு அந்தஸ்தை தன் சொந்த குடும்பத்தினரோடு, கிளையாரோடு அக்கறையுடன் நடந்த கொண்ட சமூக மக்களைப் பார்த்து கூறினார்கள்.

إنَّ الأشْعَرِيِّينَ إذا أرْمَلُوا في الغَزْوِ، أوْ قَلَّ طَعامُ عِيالِهِمْ بالمَدِينَةِ، جَمَعُوا ما كانَ عِنْدَهُمْ في ثَوْبٍ واحِدٍ، ثُمَّ اقْتَسَمُوهُ بيْنَهُمْ في إناءٍ واحِدٍ، بالسَّوِيَّةِ، فَهُمْ مِنِّي وأنا منهمْ. خلاصة حكم المحدث : [صحيح]

الراوي : أبو موسى الأشعري | المحدث : مسلم | المصدر : صحيح مسلم

 

அஷ்அரீ குலத்தினர் போரின்போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்து விட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய்விட்டால் தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன் என நபி அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி, அபூமூஸா (ரலி) )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் சமூக அக்கறையுடன் வாழச் செய்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!