ஜகாத் வரியல்ல.... அது ஓர் உயரிய
இபாதத்!!
ZAKAT: AN ACT OF WORSHIP,
NOT A FINE & TAX
அல்லாஹ்வின்
மகத்தான கருணையால் ரமழானுடைய மத்திய பகுதியான அருளாளன் அல்லாஹ்வின் மன்னிப்பு
நிறைந்த இரண்டாவது பத்தின் ஜும்ஆ தினத்தில் நாம் அமர்ந்திருக்கின்றோம்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நம் அனைவருக்கும் மன்னிப்பை வழங்கியருள்வானாக!
இஸ்லாத்தின்
பிரதானமான ஐந்து கடமைகளில் ஒன்று ஜகாத்.
ஜகாத் கடமையின்
மீதான இஸ்லாமிய மக்களின் பார்வையில் மாற்றம் வர வேண்டும்.
ஏனெனில், ஜகாத் கடமையை நம்மில் பலரும் செல்வந்தர்கள் தம்மிடம் உள்ள செல்வத்திற்காக
செலுத்துகிற வரியாகவே கருதுகின்றார்கள்.சிலர் சுமையாகவும், சிலர் தண்டனையாகவும்,
பாரமாகவும் கருதுகின்றார்கள்.
அவர்களுக்கு நாம்
சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்று தான் முனாஃபிக் எனும் நயவஞ்சகர்களுக்கு மட்டுமே
அல்லாஹ்வின் கட்டளை, அல்லாஹ்விற்கு செய்யப்படு வணக்க வழிபாடுகள் சுமையாகவும்,
பாரமாகவும் தெரியும் என்று அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் வன்மையாக
விமர்சித்துக் கூறுகின்றான்.
ஜகாத்
செல்வந்தர்கள் செலுத்த வேண்டிய வரி என்பதாக இஸ்லாம் எங்கும் சொல்ல வில்லை.
மாறாக, ஜகாத் என்பது ஓர் இபாதத். எப்படி நாம் உடல் உறுப்புகள் மூலமாக வணக்க
வழிபாடுகள் செய்கின்றோமோ,
அது போன்று நமக்கு அல்லாஹ் வழங்கி இருக்கும் பொருளாதார
வளத்தின் மூலமாக அல்லாஹ் வழிகாட்டி இருக்கும் மக்களுக்கு அல்லாஹ்வின் கட்டளையை
நிறைவேற்றும் பொருட்டு நாம் செய்யும் ஓர் இபாதத் - வணக்க வழிபாடாகும்.
தொழுகை -உடல்
உறுப்புகள் சார்ந்த வணக்க வழிபாடு என்றால், ஜகாத் -பொருள் சார்ந்த
வணக்க வழிபாடு.
தொழுகையில் எப்படி
அல்லாஹ்வை உடல் உறுப்புக்களால், குனிந்து, நிமிர்ந்து, மொழிந்து வணங்குகின்றோமோ, அதுபோன்றுதான் கடமையாக்கப்பட்ட அளவை செல்வத்திலிருந்து, அவன் கட்டளையிட்டுள்ள பிரிவினருக்கு நாம் எடுத்துக் கொடுக்கும் பொழுது
அல்லாஹ்வை வணங்குகின்றோம்.
இஸ்லாமிய
மார்க்கத்தில் நல்அமல்கள் என்பது ஆயிரக்கணக்கில் இருக்கிறது. ஆனாலும் அல்லாஹ்
ரப்புல் ஆலமீன் நல்அமல்களில் இருந்து இரண்டு பெரும் நல்அமல்களை மட்டுமே
அல்குர்ஆனில் இணைத்துச் சொல்கின்றான்.
அல்குர்ஆனில்
நேரடியாக ஜகாத் என்ற கடமையை 30 இடங்களில் பிரயோகிக்கும்
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஜகாத்தையும், தொழுகையையும் 27 இடங்களில் இணைத்துக் கூறுகின்றான்.
இது மாத்திரமின்றி
மக்காவில் துவக்க காலத்தில் அருளப்பட்ட இறைவசனங்களில் நேரடியாக இல்லாவிட்டாலும்
ஜகாத்தோடு தொடர்புடைய ஏழைகளுக்கு உணவளித்தல், ஏழைகளுக்கு செலவு செய்தல்
போன்ற செலவுகள் தூண்டப்பட்டிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
وَأَقِيمُوا
الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ
தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள்; ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள். ( அல்குர்ஆன்: 2 : 43 )
தொழுகையோடு
ஜகாத்தையும் இணைத்து அல்லாஹ் சொல்வதிலிருந்து, தொழுகையை எப்படி ஒரு
உயர்ந்த இபாதத்தாக அங்கீகரித்து இருக்கின்றானோ அதுபோன்று ஜகாத்தையும் உயர்ந்த
இபாதத்தாக அங்கீகரித்து இருக்கின்றான். எனவே, ஜகாத் கொடுப்பவர் இபாதத்
செய்கிறார்.
இரண்டாவதாக நன்மையை ஆதரவு வைத்து செய்யப்படும்
இருபெரும் நல்அமல்களில் ஒன்றாக ஜகாத் இருக்கிறது.
إِنَّ
الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا
الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا
هُمْ يَحْزَنُونَ
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து,
தொழுகைகளை நிலைநிறுத்தி, ஸகாத் கொடுத்தார்களோ
அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் மீது பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். ( அல்குர்ஆன்: 2 : 277 )
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நல் அமல்களை பொதுவாக சொல்லிவிட்டு அந்த நல் அமல்களில் இருந்து நாம் அதிகம்
முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய இரண்டு அமல்களை குறிப்பிட்டுச் சொல்கிறான்.
எனவே, ஜகாத் வழங்கும் ஒருவர் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இம்மையிலும் மறுமையிலும் எனக்கு
நன்மைகளையும் நற்கூலி களையும் கொடுப்பான் என்று ஆதரவு வைத்து இந்த ஜகாத்தை கொடுக்க
வேண்டும். எப்படி மற்ற மற்ற இபாதத்களுக்கு நன்மைகள் கிடைக்குமோ அது போன்றே ஜகாத்
கொடுப்பதன் மூலமாக ஜகாத் கொடுக்கும் செல்வந்தர்கள் நன்மைகளை பெறுவார்கள்.
மூன்றாவதாக இந்த ஜகாத் என்பது உயரிய ஒரு
நோக்கத்துடன் கடமையாக்கப்பட்டுள்ளதாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குறிப்பிடுகின்றான்.
பொதுவாக இஸ்லாம்
ஒவ்வொரு கடமையையும் ஒரு நோக்கத்துடன் கடமையாக்கியுள்ளது போலவே ஜகாத்தின் உயர்
நோக்கமாக ‘தஜ்கியா’
எனப்படும் தூய்மைப்படுத்தலை கொண்டுள்ளது.
خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا
“நபியே அவர்களின்
செல்வங்களிலிருந்து ஸகாத்தை எடுத்து அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மைப்
படுத்துவீராக”
( அல்குர்ஆன்: 09:103 )
ஜகாத் கொடுக்கும்
செல்வந்தர் அதனைப் பெறுபவர் என இரு தரப்பாருக்கும் புறரீதியாகவும் உளரீதியாகவும்
ஏற்படுத்தும் தூய்மைப்படுத்தலே இதுவாகும்.
ஜகாத்தைப்
பெறுபவர் வறுமை,
ஏழ்மை போன்ற சிரமமான காரணிகளில் இருந்து புற ரீதியாக
விடுபடுவதும்,
ஜகாத்தை வழங்குபவர் கஞ்சத்தனம், உலோபித்தனம்,
பேராசை போன்ற உளரீதியான காரணிகளில் இருந்து விடுபடுகிறார்.
மூன்று வகையான செல்வந்தர்கள்...
இந்த உலகில் மூன்று வகையான செல்வந்தர்கள் இருப்பதாக குர்ஆன்
கூறுகிறது.
ஒறுவர்
தன்னிடம் இருக்கும் செல்வம் முழுவதும் தன்
அறிவால், தன் ஆற்றலால், தன் முயற்சியால், தன் உழைப்பால் உருவானதாக சொல்லும் செல்வந்தர்கள்.
اِنَّ
قَارُوْنَ كَانَ مِنْ قَوْمِ مُوْسٰی فَبَغٰی عَلَیْهِمْ ۪ وَاٰتَیْنٰهُ مِنَ
الْكُنُوْزِ مَاۤ اِنَّ مَفَاتِحَهٗ لَتَنُوْٓاُ بِالْعُصْبَةِ اُولِی الْقُوَّةِ
اِذْ قَالَ لَهٗ قَوْمُهٗ لَا تَفْرَحْ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْفَرِحِیْنَ
நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின்
சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: “நீ (இதனால் பெருமைகொண்டு)
ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ்,
நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்” என்று கூறினார்கள்.
وَابْتَغِ
فِیْمَاۤ اٰتٰىكَ اللّٰهُ الدَّارَ الْاٰخِرَةَ وَلَا تَنْسَ نَصِیْبَكَ مِنَ
الدُّنْیَا وَاَحْسِنْ كَمَاۤ اَحْسَنَ اللّٰهُ اِلَیْكَ وَلَا تَبْغِ الْفَسَادَ
فِی الْاَرْضِ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْمُفْسِدِیْنَ
“மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும்,
இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து
விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய
விரும்பாதே;
நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்றும் கூறினார்கள்).
قَالَ
اِنَّمَاۤ اُوْتِیْتُهٗ عَلٰی عِلْمٍ عِنْدِیْ اَوَلَمْ یَعْلَمْ اَنَّ اللّٰهَ
قَدْ اَهْلَكَ مِنْ قَبْلِهٖ مِنَ الْقُرُوْنِ مَنْ هُوَ اَشَدُّ مِنْهُ قُوَّةً
وَّاَكْثَرُ جَمْعًا وَلَا یُسْـَٔلُ عَنْ ذُنُوْبِهِمُ الْمُجْرِمُوْنَ
(அதற்கு அவன்) கூறினான்: “எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!” இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ)
தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி
கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள். ( அல்குர்ஆன்: 28: 76-78 )
இது போன்ற மனோ நிலையில் உள்ள
செல்வந்தர்கள், இவர்கள் காரூணின் வகையறாக்கள். இவர்களின் முடிவு
மோசமாகவே இருக்கும்.
இரண்டாமவர்,
وَالَّذِیْنَ
یَكْنِزُوْنَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا یُنْفِقُوْنَهَا فِیْ سَبِیْلِ اللّٰهِ
ۙ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِیْمٍ ۟ۙ
இன்னும் எவர்கள்
பொன்னையும்,
வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின்
பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!)
அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று சோபனம் கூறுவீராக!
یَّوْمَ یُحْمٰی عَلَیْهَا فِیْ نَارِ جَهَنَّمَ فَتُكْوٰی بِهَا جِبَاهُهُمْ وَجُنُوْبُهُمْ وَظُهُوْرُهُمْ ؕ هٰذَا مَا كَنَزْتُمْ لِاَنْفُسِكُمْ فَذُوْقُوْا مَا كُنْتُمْ تَكْنِزُوْنَ ۟
(நபியே! அவர்களுக்கு நீர்
அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக
நெருப்பிலிட்டுக் காய்ச்சி,
அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) “இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து
வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்). (
அல்குர்ஆன்: 9:
34,35 )
இவர்கள் செல்வத்தை
சேகரித்து வைத்திருப்பர். ஆனால், அதை அல்லாஹ் காட்டிய
அவனுடைய வழியில் செலவு செய்ய மாட்டார்கள். இவர்கள் தாங்கள் மட்டுமே சுகம்
அனுபவிக்கும் நோக்கில் செல்வத்தை சேகரித்து வைத்திருக்கும் செல்வந்தர்கள். இவர்கள்
யஹூதிகளின் வகையறாக்கள். இவர்களின் முடிவும் மிக மோசமாகவே இருக்கும்.
மூன்றாமவர், அடுத்து
அல்லாஹ் புகழ்ந்து போற்றும் நல்லடியார்களாக செல்வந்தர்கள். சுமார் 10 இடங்களில் அல்லாஹ் "நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து அவர்கள் செலவு
செய்வார்கள்" என்று கூறுகின்றான்.
الَّذِیْنَ
یُؤْمِنُوْنَ بِالْغَیْبِ وَیُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ
یُنْفِقُوْنَ
(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு
அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். ( அல்குர்ஆன்: 2: 3 )
وَالَّذِیْنَ
صَبَرُوا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِمْ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا
مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِیَةً وَّیَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ
السَّیِّئَةَ اُولٰٓىِٕكَ لَهُمْ عُقْبَی الدَّارِ
இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்; தொழுகையையும்
நிலைநிறுத்துவார்கள்;
நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய்வார்கள்; நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். இத்தகையோருக்கே மறுமையில்
(சுவனபதி யென்னும்) நல்ல வீடு இருக்கிறது. ( அல்குர்ஆன்: 13: 22 )
இவர்கள் தம்மிடம்
உள்ள செல்வத்தை,
தம் வியாபாரம் மூலம் கிடைக்கும் வருமானத்தை, தாம் சேமித்து வைத்துள்ள சேமிப்பை அல்லாஹ்வால் தமக்கு வழங்கப்பட்டுள்ள
செல்வமாகவே அவர்கள் கருதுவார்கள்.
இதில் இன்னொரு
முக்கியமான விஷயம் என்னவென்றால் இதே சொற்றொடரில் அனைந்துள்ள 10 க்கும் மேற்பட்ட வசனங்களிலும் இடம் பெற்றுள்ள "நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து
அவர்கள் செலவு செய்வார்கள்" என்ற பதத்திற்கு விளக்கம் தரும் முஃபஸ்ஸிரீன்கள்
- அருள்மறை விரிவுரையாளர்கள் "கடமையான ஜகாத், மற்றும் உபரியான ஸதகா" மற்றும் நன்மையான வழிகளில் செலவு செய்வார்கள் என்ற
விளக்கத்தை தருகின்றார்கள்.
இவர்கள் உண்மை
முஃமின்கள்,
இவர்களின் முடிவு சுகபோக வாழ்வுக்கு சொந்தமான சுவனமாகும்.
நாம் எந்த வகை
செல்வந்தர்களாக இருக்கின்றோம்? நாம் எந்த வகை
செல்வந்தர்களாக இருக்க வேண்டும்? நாம் தான் தீர்மானிக்க
வேண்டும்.
நோக்கம் உயர்வானால் இலக்கு எளிதாகும்..
ஒருவர் செல்வத்தை
திரட்டுவதற்கு உலகியல் ரீதியாக பல்வேறு காரணங்களும், நோக்கங்களும் இருந்தாலும் செல்வத்தை
திரட்டும் வழியில் ஈடுபட்டுள்ள ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுடைய பாதையில் தேவையுள்ள
அடியார்களுக்கு செலவளிப்பதற்காக இந்த செல்வத்தை சம்பாதிக்கிறேன் என்ற எண்ணம்
வைப்பாரேயானால் உண்மையில் அந்த செல்வத்தை திரட்டும் செல்வந்தரின் முயற்சி
அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய ஒரு வணக்கமாக கருதப்படும்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் இறைநம்பிக்கையாளர்கள் - முஃமின்களைப் பற்றி அவர்கள் மூன்று பிரிவுகளாக இந்த
உலகில் செயல்படுகின்றார்கள் என்று அல்குர்ஆனில் சிலாகித்துக் கூறுகின்றான்.
إِنَّ
رَبَّكَ يَعْلَمُ أَنَّكَ تَقُومُ أَدْنَى مِنْ ثُلُثَيِ اللَّيْلِ وَنِصْفَهُ
وَثُلُثَهُ وَطَائِفَةٌ مِنَ الَّذِينَ مَعَكَ وَاللَّهُ يُقَدِّرُ اللَّيْلَ
وَالنَّهَارَ عَلِمَ أَنْ لَنْ تُحْصُوهُ فَتَابَ عَلَيْكُمْ فَاقْرَءُوا مَا
تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ عَلِمَ أَنْ سَيَكُونُ مِنْكُمْ مَرْضَى وَآخَرُونَ
يَضْرِبُونَ فِي الْأَرْضِ يَبْتَغُونَ مِنْ فَضْلِ اللَّهِ وَآخَرُونَ
يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ وَأَقِيمُوا الصَّلَاةَ
وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا وَمَا تُقَدِّمُوا
لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ
أَجْرًا وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
"நிச்சயமாக உமது இறைவன் அறிவான், “நிச்சயமாக நீர்
இரவின் மூன்றில் இரண்டு பகுதிகளை விட குறைவாக, இன்னும் அதன் பாதி, இன்னும் அதன் மூன்றில் ஒரு பகுதி நின்று வணங்குகிறீர்; இன்னும்,
உம்முடன் இருப்பவர்களில் ஒரு கூட்டமும் நின்று
வணங்குகிறார்கள்.”
அல்லாஹ்தான் இரவையும் பகலையும் (அவ்விரண்டிற்குரிய நேரங்களை)
நிர்ணயிக்கிறான். நீங்கள் அதற்கு (-இரவு முழுக்க வணங்குவதற்கு) சக்திபெறவே
மாட்டீர்கள் என்று அவன் நன்கறிவான். ஆகவே, அவன் உங்களை மன்னித்தான்.
ஆக, குர்ஆனில் (உங்களுக்கு) இலகுவானதை (தொழுகையில்) ஓதுங்கள்! “உங்களில் நோயாளிகள் இருப்பார்கள்; இன்னும், மற்றும் சிலர் அல்லாஹ்வின் அருளை தேடியவர்களாக பூமியில் பயணம் செய்வார்கள்; இன்னும்,
மற்றும் சிலர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள்” என்று அல்லாஹ் அறிவான். ஆகவே, அ(ல்லாஹ்வின்
வேதத்)திலிருந்து (உங்களுக்கு) இலகுவானதை (தொழுகையில்) ஓதுங்கள்! தொழுகையை நிலை
நிறுத்துங்கள்! ஸகாத்தை கொடுங்கள்! அல்லாஹ்விற்கு அழகிய கடன் கொடுங்கள்!
உங்களுக்காக நன்மையில் எதை நீங்கள் முற்படுத்துகிறீர்களோ அதை அல்லாஹ்விடம்
(நீங்கள் செய்ததை விட) மிகச் சிறப்பாகவும் கூலியால் மிகப் பெரியதாகவும் நீங்கள்
பெறுவீர்கள். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் மகா
மன்னிப்பாளன்,
மகா கருணையாளன் ஆவான். ( அல்குர்ஆன்: 73 : 20 )
ஒரு பிரிவினர்
வணக்க வழிபாடுகளில் இரவில் நின்று கொண்டிருப்பார்கள். இரண்டாம் பிரிவினர் இந்த
பூமியில் பயணம் செய்து அல்லாஹ்வுடைய செல்வத்தை தேடி கொண்டிருப்பார்கள். மூன்றாம்
பிரிவினர் அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்து கொண்டிருப்பார்கள் என்று கூறுகிறான்.
இந்த மூன்று
பிரிவினரையும் முஃமின்கள் - இறைநம்பிக்கையாளர்களுடைய பிரிவினர் என்று அல்லாஹ்
ரப்புல் ஆலமீன் கூறுகின்றான் என்றால், அல்லாஹ்வுடைய செல்வத்தை
அவனுடைய கிருபையை அவர்கள் தேடுவார்கள் என்று சொன்னதிலிருந்து, அல்லாஹ்வுடைய அந்த செல்வத்தை அல்லாஹ் ஹலாலாக்கிய முறையிலே வழியில் தேடுவார்கள், அல்லாஹ் விரும்பக்கூடிய வழியிலேயே செலவு செய்வதற்காக தேடுவார்கள். என்று
பொருள் படும் என்று சில முஃபஸ்ஸிரீன்கள் விளக்கம் தருகிறார்கள்.
எனவே, ஜகாத் கொடுப்பதை ஏதோ நம் மீது நம்முடைய செல்வத்திற்காக கடமையாக்கப்பட்ட ஒரு
வரி என்று நினைக்காமல் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எனக்கு ஜகாத் கொடுக்கும்
பாக்கியத்தை வழங்கியுள்ளான், அல்லாஹ்வுக்கும் எனக்கும்
உண்டான தொடர்புக்கு இந்த ஜகாத்தை வழியாக அமைத்துள்ளான் என்று ஒரு செல்வந்தர்
நினைத்து வழங்க வேண்டும்.
ஜகாத் வழங்கும் செல்வந்தர்கள்
கவனத்திற்கு...
1) முதலில் குடும்ப உறவுகளில் உள்ள ஏழைகள் மற்றும்
வறியவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
அல்லாஹ்
ரப்புல் ஆலமீன் எங்கெல்லாம் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு கூறுகின்றானோ
அங்கெல்லாம் குடும்ப உறவுகளைத்தான் முதலில் குறிப்பிடுகின்றான்.
நபி
ﷺ அவர்களும் நபித்தோழர்கள் சிலர்
தங்களது செல்வத்தை, பொருளாதாரத்தை அல்லாஹ்விற்காக அறவழியில்
செலவு செய்யுமாறு தந்த போது தந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு வழங்குமாறு
பணித்தார்கள்.
لَنْ
تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ وَمَا تُنْفِقُوا مِنْ
شَيْءٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ
“உங்களுக்கு
விருப்பமானவற்றை இறைவழியில் அர்ப்பணிக்காத வரை நீங்கள் நன்மையினை அடைந்திட
முடியாது. மேலும்,
எதனை நீங்கள் அர்ப்பணித்தாலும் திண்ணமாக, அல்லாஹ் அதனை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
وقال
الإمام أحمد: حدثنا روح، حدثنا مالك، عن إسحاق بن عبد الله بن أبي طلحة، سمع أنس
بن مالك يقول: كان أبو طلحة أكثر أنصاري بالمدينة مالا وكانَ أحبَّ أمواله إليه
بيْرَحاءُ -وكانت مُسْتقْبلة المسجد، وكان النبي صلى الله عليه وسلم يدخلها ويشرب
من ماء فيها طيّب-قال أنس: فلما نزلت: { لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى
تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ } قال أبو طلحة: يا رسول الله، إن الله يقول: { لَنْ
تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ } وإن أحبَّ أموالي
إلَيَّ بيْرَحاءُ وإنها صدقة لله أرجو بِرَّها وذُخْرَها عند الله تعالى، فَضَعْها
يا رسول الله حيث أراك الله [تعالى] فقال النبي صلى الله عليه وسلم: "بَخٍ،
ذَاكَ مَالٌ رَابِحٌ، ذَاكَ مَالٌ رَابِح، وَقَدْ سَمِعْتُ، وَأَنَا أرَى أنْ
تجْعَلَهَا فِي الأقْرَبِينَ". فقال أبو طلحة: أفْعَلُ يا رسول الله.
فَقَسَمها أبو طلحة في أقاربه وبني عمه. أخرجاه
இந்த இறை வசனம்
இறங்கிய போது அபூ தல்ஹா அன்ஸாரி (ரலி) அவர்கள். தங்களுக்கு மிகவும் விருப்பமான
பைருஹா தோட்டத்தை அறமாக அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடம் தந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர்
ﷺ அவர்கள் அபூ தல்ஹா அளித்த தோட்டத்தை வறுமையில் வாடிய
அபூ தல்ஹா (ரலி) அவர்களின் தந்தையின் சகோதரர்களுடைய மக்களுக்கும் நெருங்கிய
உறவினர்களுக்கும்,
சொந்த பந்தங்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்கள். (நூல்:
தஃப்ஸீர் இப்னு கஸீர்)
2) இரண்டாவது தமது வீட்டின் அருகாமையில் உள்ளோர், தமது மஹல்லா,
தமது ஊர் மக்களில் உள்ள ஏழைகள் மற்றும் வறியவர்களுக்கு
முன்னுரிமை தர வேண்டும்.
முஆத் இப்னு ஜபல்
(ரலி) அவர்களை நபி ﷺ அவர்கள்,
யமனுக்கு ஆளுநராக நியமித்தார்கள். அவர்களை அனுப்பி வைக்கும்
போது நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.
وعن ابن
عباس قال : قال رسول الله صلى الله عليه وسلم لمعاذ بن جبل حين بعثه إلى اليمن :
"فأخبرهم أن الله قد فرض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم
நபி ﷺ அவர்கள் முஆதே (ரலி)
அங்குள்ள செல்வந்தர்களிடமிருந்து முறையாக வசூலித்து, அத்தொகையை அங்கு வாழ்ந்த ஏழைகளுக்கு வழங்குவீராக! ,
நபி ﷺ அவர்களின் கட்டளைப்படி அங்குள்ள செல்வந்தர்களிடமிருந்து முறையாக வசூலித்து, அத்தொகையை அங்கு வாழ்ந்த ஏழைகளுக்குவறியவர்களுக்கும் முறையாக
பகிர்ந்தளித்தார்கள்.
இதன் காரணமாக, ஒவ்வோர் ஆண்டும் கணிசமாக ஏழைகளின் எண்ணிக்கை குறைந்து ஜகாத் கொடுக்கும்
செல்வந்தர்களின் எண்ணிக்கை கூடியது.
3) உங்களிடம் உதவி பெறும் ஒருவர் தன்னிறைவு பெற்றவராக மாறி அடுத்த ஆண்டோ அல்லது
அதற்கடுத்த ஆண்டோ பிறருக்கு வழங்கும் நிலைக்கு, உதவும் நிலைக்கு உயர வேண்டும்.
مَرَّ
عبدالله بن عمر (رضي الله عنهما) مع أصحاب له في بعض نواحي المدينة، فوضعوا
سُفرةً، فمرَّ بهم راعي غنمٍ، فسلَّمَ، فقال ابن عمر: هَلُمَّ يا راعي، هَلُمَّ،
فأصِب من هذه السفرة، فقال: إني صائمٌ، فقال ابن عمر: أتصوم في هذا اليوم الحار
وأنت في هذه الجبال ترعى هذه الغنم؟ فقال: أي والله أُبادر أيامي الخالية، فقال له
ابن عمر - وهو يريد أن يختبر ورعه وتقواه -: بِعْنا شاةً من هذه الغنم نُعطيك
ثمنها ونعطيك من لحمها، فقال: إنها ليستْ لي، إنها غنم سيدي، فقال ابن عمر: فما
عسى سيدك فاعلًا إذا فقدها، فقلت: أكلها الذئب؟ فولَّى الراعي مدبرًا، وقد رفع
أُصبعه إلى السماء، يقول: أين الله؟ فجعل ابن عمر يرددها: أين الله؟ أين الله؟
فلما قدم ابن عمر المدينة بعث إلى مولاه - مولى الراعي - فاشترى منه الغنم واشترى
منه الراعي، فأعتق الراعي ووهب له الغنم". (رواه الاحمد فى الزهد، الداء والدواء
لابن القيم )
ஒரு நாள் இப்னு
உமர் ரலி அவர்கள் மதீனாவின் சுற்றுப் புறங்களை சுற்றிப் பார்க்க நண்பர்களுடன்
சென்றார்கள். ஒரு மர நிழலில் நண்பர்களுடன் அமர்ந்து தேநீர் பருக அமர்ந்தார்கள்.
அப்போது அங்கே ஆட்டிடையர் ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டே இவர்களின் அருகே கடந்து
சென்றார். கடந்து செல்லும் போது அமர்ந்திருக்கும் அனைவருக்கும் ஸலாம் கூறினான்.
அப்போது,
இப்னு உமர் ரலி அவர்கள் அந்த ஆட்டியரை தம்மோடு அமர்ந்து
சாப்பிட அழைத்தார்கள். அதற்கவன்"நான் நோன்பு நோற்றுள்ளேன்" என்றார்.
கடுமையான வெயில் காலத்தில்,
அதுவும் பாலைவன சுடு மணலில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும்
நீ நோன்பு நோற்றிருக்கின்றாயா? என்று ஆச்சர்யம் மேலிட
கேட்டு விட்டு,
நாங்கள் காசு தருகிறோம். உன் மந்தையில் இருக்கும் ஆட்டில்
ஒரு ஆட்டை எங்களுக்கு நீ தந்து விடு. நாங்கள் அதை அறுத்து எங்களுக்கு போக மீதமுள்ள
இறைச்சியையும் உனக்கு தந்து விடுகின்றோம்? என்ன சொல்கின்றாய்? தருகின்றாயா?
என்று இப்னு உமர் ரலி அவர்கள் கேட்டார்கள்.
அதற்கவர், இந்த ஆடுகளின் உரிமையாளர் நான் இல்லை. இது என் எஜமானின் மந்தை என்று
பதிலளித்தார்.
அப்போது, இப்னு உமர் ரலி அவர்கள் இவ்வளவு பெரிய மந்தையில் ஒரு ஆடு இல்லாமல் போனதையா உன்
எஜமான் கேட்கப் போகின்றார். அப்படியே கேட்டாலும் ஓநாய் இழுத்துச் சென்று விட்டது
என்று கூறி விடு என்று கூறினார்கள்.
அதற்கு அந்த
ஆட்டிடையர் ஏதோ சிந்தித்தவனாக வானத்தை நோக்கி தன் ஆட்காட்டி விரலை உயர்த்தி
"அப்படி என்றால் அல்லாஹ் எங்கிருக்கின்றான்? (அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இதை எல்லாம் பார்த்து கொண்டு தானே இருக்கின்றான் என்ற
கருத்து பட) என்று மூன்று முறை கேட்டார்.
அங்கிருந்து விடை
பெற்று மதீனா வந்த இப்னு உமர் (ரலி) அவர்கள் தம்முடைய பணத்தை தமது அடிமை ராஃபிஇ
அவர்களிடம் கொடுத்து அந்த மந்தையின் உரிமையாளரிடம் ஒட்டுமொத்த மந்தையையும், அந்த இடையனையும் விலைக்கு வாங்கி வருமாறு கூறினார்கள். ராஃபிஇ அவர்களும் அது
போன்றே செய்தார்.
பின்னர், அந்த இடையனை அழைத்து உரிமை விட்டு அந்த மந்தை முழுவதையும் அந்த இடையனுக்கே
அன்பளிப்பாக வழங்கினார்கள். ( நூல்: அஸ் ஸுஹ்து லிஇமாமி அஹ்மத், அத் தாவு வத் தவாஃ லிஇமாமி இப்னுல் கய்யிம் )
நேற்று வரை ஆட்டு
இடையனாக இருந்த ஒருவர் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி அவர்களின் உதவியால் அவர்
மேய்த்த ஆட்டு மந்தைக்கே உரிமையாளராக மாறிப் போனார்.
நாம் வழங்கும்
ஜகாத்தில் என்றைக்கு இந்த மாற்றம் நிகழுமோ அன்று தான் ஜகாத்தின் உண்மையான கன
பரிமாணத்தை நாம் உணர முடியும்.
4) நான்காவதாக உங்கள் ஜகாத் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட அல்லாஹ்விடம் அதிகம் துஆ
செய்யுங்கள்..
عَنْ
أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
إِذَا أَعْطَيْتُمْ الزَّكَاةَ فَلَا تَنْسَوْا ثَوَابَهَا أَنْ تَقُولُوا
اللَّهُمَّ اجْعَلْهَا مَغْنَمًا وَلَا تَجْعَلْهَا مَغْرَمًا – إبن ماجة
அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நீங்கள் ஜகாத்தை வழங்கினால் அதற்கு
இறைவன் புறத்திலிருந்து வழங்கப்படும் நன்மைகளை மறந்து விடாதீர்கள். எனவே, அதனைக் கவனத்தில் கொண்டு “அல்லாஹ்வே! நான் வழங்கிய இந்த ஜகாத்தை
பல்கிப் பெருகுவதாக ஆக்குவாயாக! நான் வழங்கிய இந்த ஜகாத்தை ஒன்றுமில்லாததாக ஆக்கி
விடாதே!”
என்று பிரார்த்தனை செய்யுங்கள்” என நபி ﷺ அவர்கள் கூறினார்கள். ( நூல்:
இப்னுமாஜா )
5) நிறைவாக, உங்களின் கூலியை பெற தயாராக இருங்கள்...
وَالْمُقِيمِينَ
الصَّلَاةَ وَالْمُؤْتُونَ الزَّكَاةَ وَالْمُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ
الْآخِرِ أُولَئِكَ سَنُؤْتِيهِمْ أَجْرًا عَظِيمًا
தொழுகையையும்
கடைப்பிடித்துத் தொழுபவர்கள்; ஜகாத்தும் கொடுத்து
வருபவர்கள்;
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்கள். ஆகிய
இவர்களுக்கு (மறுமையில்) மகத்தான கூலியை நாம் கொடுப்போம். (அல்குர்ஆன்4 : 162)
ஜகாத்
கொடுப்பவர்களுக்கு என்ன கூலி? குர்ஆனுக்கு விரிவுரை
செய்யும் மார்க்க அறிஞர்கள் சொல்கின்றார்கள், எந்த இடங்களில் அல்லாஹ்
மகத்தான கூலி என்று சொல்கிறானோ, அது அல்லாஹ்வுடைய
சுவர்க்கமாகும்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நம் பொருளாதாரத்தில் பரக்கத் செய்வானாக! அவனுடைய உயரிய இபாதத்தான ஜகாத்தை
வழங்கும் மேன்மக்களில் ஒருவராக நம்மையும் நம் சந்ததியினர் அனைவரையும்
ஆக்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

