Thursday, 20 November 2025

டாய்லெட் (கழிவறை) பரிணாமம்:- உலக நாகரிகமும்... இஸ்லாமிய நாகரிகமும்....

டாய்லெட் (கழிவறை) பரிணாமம்:-

உலக நாகரிகமும்... இஸ்லாமிய நாகரிகமும்....

மனிதனின் அடிப்படை தேவைகளில் முக்கியமானவை உணவு, உடை, உறைவிடம். இதற்கு அடுத்தபடியாக இருப்பது சுகாதாரம். 

அந்த அளவுக்கான முக்கியத்துவத்தை அன்றாடம் பயன்படுத்தும் கழிப்பறைகளுக்கு ஏனோ பலரும் அளிப்பதில்லை. சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கழிப்பறைகளின் தேவை, அவசியத்தை உணர்ந்து சிங்கப்பூரில் ஜாக் சிம் என்பவரால் கடந்த 2001-ம் ஆண்டு முதல்முறையாக நவ.19-ம் தேதி உலக கழிப்பறை கழகம் தொடங்கப்பட்டது.

அதன்பின், 2013 முதல் நவ.19-ம் தேதியை உலக கழிப்பறை தினமாக ஐ.நா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. கழிப்பறை சுகாதாரத்தின் முக்கியத்துவத்தையும், அது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதுதான் இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

2025 -ம் ஆண்டு நவம்பர் 19 அன்று உலக கழிவறை தினம் "Sanitation in a changing world - மாற்றமடைகிற உலகில் சுகாதாரம்" என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டது.

பாதுகாப்பான கழிவறை வசதியின்றி உலகில் 3.5 மில்லியன் 340 கோடி பேர் வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய அளவில் 419 மில்லியன் மக்கள் திறந்த வெளியில் மலஜலம் கழிப்பதாகவும் இதனால் ஏற்படும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் காரணமாக ஆண்டுக்கு 4.32 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில், குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பது பல்வேறு கட்ட ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

தற்போதைய முன்னேற்ற விகிதத்தில், 2030ம் ஆண்டிலும் 3 பில்லியன் மக்கள் பாதுகாப்பான கழிப்பறைகள் இல்லாமல் வாழ்வார்கள் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ( நன்றி: கல்கி ஆன்லைன் )

டாய்லெட் (கழிவறை) பரிணாமம்:- உலக நாகரிகமும்... இஸ்லாமிய நாகரிகமும்....

கருங் கற்களாலான நீண்ட செவ்வக வடிவிலான பெஞ்ச் போன்ற அமைப்பு, அதில் நெடுகிலும் துளைகளிடப்பட்டிருக்கும், அந்த துளைகளின் மீது ரோமானியர்கள் மலங்கழித்தார்கள். அந்த கழிவு அப்படியே பெஞ்சின் கீழுள்ள கால்வாய் வழியாக நீர்நிலைகளில் போய் சேர்ந்துவிடும். கிறிஸ்துவுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் ரோமப் பேரரசில் குறைந்தது இருபதுபேர் ஒன்றாக உற்கார்ந்துகொண்டு மலம் கழிக்கும்வகையில் இப்படித்தான் கழிப்பறைகள் இருந்தன என தொல்பொருள் ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மொசபடோமிய மற்றும் சிந்துசமவெளி நாகரீகங்களின் அகழ்வாராச்சிகளின் போது கண்டெடுக்கப்பட்ட புதைபடிமங்களின் படி வீடுகளிலிருந்து கழிவுகளை அகற்றும் கழிவு வாய்க்கால்கள் பிரதான பாதையுடன் இணைக்கப்பட்டிருப்பதை காண முடிந்தது. 

சீனாவில் மலக் கழிவுகள் உடனடியாக அப்புறப்படுத்தப்படவேண்டும் என்பதற்காக பன்றிகள் மிக அதிகமாக வளர்க்கப்பட்டு அப்பன்றிகளுக்கு உணவாக மனித மலம் கொடுக்கப்பட்டதுடன், இரவு வேளைகளில் ஊர்கள் தோறும் மலத்தினை சேகரித்து அவற்றை ஊருக்கு ஒதுக்குபுறமாக குறிப்பிட்ட இடத்தில் கொட்டுவதற்க்கென்றே பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 

பாரிசில் ஜன்னல்களில் அமர்ந்தவாறு மலம் கழிக்கும் வழக்கம் இருந்ததாகவும், அதன்போது தவறி விழுந்து மரணங்கள் ஏற்படவே வீட்டில் உள்ள பானைகளில் மலம் கழிக்கப்பட்டு அவை ஜன்னல்கள் ஊடாக வெளியே வீசப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. 

பழங்காலத்து அரண்மனைகளில் அரச குடும்பத்தினர்கள் மலம் கழிக்கும்போது அவற்றுக்கு தண்ணீரை ஊற்றி கழிவிவிடுவதற்கென்றே பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனராம். எனினும் ஒழுங்கமைக்கப்படாத இந்த கழிவகற்றல்களால் vibrio cholerae , shigella , salmonella Typhi போன்ற தொற்று நோய்கள் மிக வேகமாக பரவத்தொடங்கியது. இதன் பின்னரே சிறிதுசிறிதாக இது பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பரவத்தொடங்கியது. 

அந்த காலகட்டத்தில் தான் (1860) லூயிஸ் பாஸ்டர் எனும் அறிவியல் அறிஞர் வைரஸ், பாக்டீரியா போன்ற வெறுங் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிரிகள் இயற்கையாகவே தாம் பெற்றுள்ள ஆற்றலால், மரபணு மாற்றத்தால் புதுப்புது வடிவம் எடுப்பதோடல்லாமல் ,அவை புதிய புதிய வகையில் தொற்றத் தொடங்கி கட்டுமீறிப் பரவுவதை, பெருகுவதை கண்டுபிடித்தார்.

காலப்போக்கில் இங்கிலாந்து அரண்மனையில் மூடியுடன் கூடிய மரத்திலாலான பெட்டிகள் (Chamber Pot) மலம் கழிப்பதற்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டு , பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன. 

தற்கால நவீன டாய்லெட்டுக்களின் உருவாக்கத்தில் முன்னோடியாக இருந்தவர் முதலாம் எலிசபெத்தின் கணவர் சர் ஜான் ஹாரிங்டன் (Sir John Harrington) என்பவரே. இவர் தான் தனது மனைவியான முதலாம் எலிசபெத்திற்காக உருவாக்கி பரிசாக கொடுத்த (modern flush toilet) டொய்லெட்டினை முன்மாதிரியாகக்கொண்டே பின்னாளில் வெஸ்டர்ன் டொய்லெட்டுக்கள் உருவாக்கப்பட்டது. ( நன்றி: Archive.Roar.media தமிழ் )

கழிப்பறைகளின் வகைகள்:-

கழிப்பறைகளில் உலர் கழிப்பறை, உரக்குழி கழிப்பறை, ஈரக் கழிப்பறை, குழி கழிப்பறை, பிளேர் கழிப்பறை, உறிஞ்சு குழி கழிப்பறை என பல வகைகள் உள்ளன. இதில் தற்போது பலரும் பயன்படுத்துவது, தரையில் அமைக்கப்பட்டுள்ள துளையில் கழிவுகள் சேகரமாகும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குழி கழிவறைதான். தற்போது, உறிஞ்சு குழி கழிப்பறை என்னும் வெஸ்டர்ன் கழிப்பறைகளும் அதிகளவில் புழக்கத்துக்கு வந்துள்ளன. தவிர பயோ கழிப்பறைகளும் வந்துவிட்டன. ( நன்றி: இந்து தமிழ் திசை, 19/11/2019 )

 

நபி அவர்களின் காலத்தில் மலஜலம் கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறி தூரமான வெற்றிடத்துக்குச் செல்லும் வழக்கம் ஆரம்பத்தில் இருந்தது.

حدثنا عبد الله بن مسلمة بن قعنب القعنبي حدثنا عبد العزيز يعني ابن محمد عن محمد يعني ابن عمرو عن أبي سلمة عن المغيرة بن شعبة أن النبي صلى الله عليه وسلم كان إذا ذهب المذهب أبعد

நபி அவர்கள் கழிப்பிடம் செல்வதாக இருந்தால் தூரமாகச் சென்று விடுவார்கள். அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி) ( நூல்கள் : அபூதாவூத், நஸாயீ )

நபி அவர்களின் காலத்துப் பெண்கள் மாலை இருள் படரும் வரை காத்திருந்து விட்டு மாலை இருள் படர்ந்ததும் திறந்தவெளி கழிப்பிடம் செல்வார்கள்.

இது பற்றி ஆயிஷா (ரலி) கூறும் போது

فخرجت أنا وأم مسطح قبل المناصع متبرزنا لا نخرج إلا ليلا إلى ليل وذلك قبل أن نتخذ الكنف قريبا من بيوتنا وأمرنا أمر العرب الأول في البرية أو في التنزه

நானும், உம்மு மிஸ்தஹ் (ரலி) அவர்களும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த மனாஸிஉ என்னுமிடத்தை நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வது வழக்கம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு அங்கு சென்று கொண்டிருந்தோம். (இயற்கைத் தேவைக்காக) நகருக்கு வெளியே செல்லும் முற்கால அரபுகளின் வழக்கமே அப்போது எங்களது வழக்கமாயிருந்தது. (நீண்ட ஹதீஸின் சுருக்கம் - நூல் : புகாரி ) 

حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن يحيى بن سعيد عن محمد بن يحيى بن حبان عن عمه واسع بن حبان عن عبد الله بن عمر أنه كان يقول إن ناسا يقولون إذا قعدت على حاجتك فلا تستقبل القبلة ولا بيت المقدس فقال عبد الله بن عمر لقد ارتقيت يوما على ظهر بيت لنا فرأيت رسول الله صلى الله عليه وسلم على لبنتين مستقبلا بيت المقدس لحاجته وقال لعلك من الذين يصلون على أوراكهم فقلت لا أدري والله قال مالك يعني الذي يصلي ولا يرتفع عن الأرض يسجد وهو لاصق بالأرض

நான் ஒரு நாள் என் வீட்டின் மாடியில் ஏறினேன். அப்போது நபி அவர்கள் (தமது வீட்டில்) இரண்டு செங்கற்கள் மீது பைத்துல் முகத்தஸை நோக்கி அமர்ந்து கொண்டு தமது இயற்கைத் தேவையை நிறைவேற்றிக் கொண்டிருந்ததை பார்த்தேன் என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள் ( நூல்: புகாரி )

நபி ஸல் அவர்கள் வாழும் காலத்திலேயே தத்தமது வீடுகளுக்குள் கழிப்பறை அமைத்துக் கொள்ளும் பழக்கம் ஏற்பட்டு விட்டது என்பதை ஆயிஷா ரலி மற்றும் இப்னு உமர் ரலி ஆகியோரின் அறிவிப்புகளில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

கழிவறை பயன்பாட்டின் அவசியத்தை வலியுறுத்திய நபி அவர்கள்...

கழிவறையை பயன் படுத்தி மலஜலம் கழிக்கவில்லையானால் பின் வரும் பாவத்தில் இருந்து நாம் தவிர்ந்து கொள்ள இயலாது.

حَدَّثَنَا بَهْزُ بْنُ حَكِيمٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَوْرَاتُنَا مَا نَأْتِي مِنْهَا وَمَا نَذَرُ قَالَ ‏"‏ احْفَظْ عَوْرَتَكَ إِلاَّ مِنْ زَوْجَتِكَ أَوْ مِمَّا مَلَكَتْ يَمِينُكَ ‏"‏ ‏.‏ فَقَالَ الرَّجُلُ يَكُونُ مَعَ الرَّجُلِ قَالَ ‏"‏ إِنِ اسْتَطَعْتَ أَنْ لاَ يَرَاهَا أَحَدٌ فَافْعَلْ ‏"‏ ‏.‏ قُلْتُ وَالرَّجُلُ يَكُونُ خَالِيًا ‏.‏ قَالَ ‏"‏ فَاللَّهُ أَحَقُّ أَنْ يُسْتَحْيَا مِنْهُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ ‏.‏ وَجَدُّ بَهْزٍ اسْمُهُ مُعَاوِيَةُ بْنُ حَيْدَةَ الْقُشَيْرِيُّ وَقَدْ رَوَى الْجُرَيْرِيُّ عَنْ حَكِيمِ بْنِ مُعَاوِيَةَ وَهُوَ وَالِدُ بَهْزٍ

எங்கள் மறைவான உறுப்புகளில் எதை மறைக்க வேண்டும் ? எவற்றை மறைக்காமல் இருக்கலாம் ? என்று நபி ஸல் அவர்களிடம் கேட்டேன் அதற்கு நபி ஸல் அவர்கள் உன் மனைவி உடன் அடிமை பெண்களிடம் தவிர மற்றவர்களிடம் உன் மறை உறுப்புக்களை பாதுகாத்து கொள் என்று விடையளித்தார்கள் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் இருக்கும் போது மறை உறுப்பை காத்து கொள்ள வேண்டுமா ? என்று கேட்டேன் அதற்கு நபி ஸல் அவர்கள் எவரும் பார்க்க முடியாதவாறு உம்மால் மறைத்துக் கொள்ள முடியுமானால் மறைத்துக்கொள் என்று கூறினார்கள். ஒரு மனிதர் தனிமையில் இருக்கும் போது ( மறைவுறுப்பை வெளிப்படுத்தலாமா ?) என்று கேட்டேன் . அதற்கு நபியவர்கள் அல்லாஹ் வெட்கப்படுவதற்கு மிகத் தகுதியானவர் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா ( ரழி ) ( நூல் : திர்மிதீ )

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ، قَالَ أَخْبَرَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ يَنْظُرُ الرَّجُلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ وَلاَ الْمَرْأَةُ إِلَى عَوْرَةِ الْمَرْأَةِ وَلاَ يُفْضِي الرَّجُلُ إِلَى الرَّجُلِ فِي ثَوْبٍ وَاحِدٍ وَلاَ تُفْضِي الْمَرْأَةُ إِلَى الْمَرْأَةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ ‏"‏ ‏.‏

ஒரு ஆண் மற்றொரு ஆணுடைய மறை உறுப்பை பார்க்க வேண்டாம் ஒரு பெண் மற்றொரு பெண்ணுடைய மறும உறுப்பை பார்க்க வேண்டாம் .ஒரு ஆண் மற்றொரு ஆணுடன் ஒரு ஆடைக்குள் படுக்க வேண்டாம் . ஒரு பெண் மற்றொரு ஒரு ஆடைக்குள் படுக்க வேண்டாம் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ சயீத் அல் குத்ரீ ( ரழி ) ( நூல் : முஸ்லிம் )

சிறு நீர் கழிக்கும் போது மறைக்காதவருக்கு கப்ரில் தண்டனை உண்டு

 

 

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِقَبْرَيْنِ فَقَالَ ‏"‏ إِنَّهُمَا لَيُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ أَمَّا أَحَدُهُمَا فَكَانَ لاَ يَسْتَتِرُ مِنَ الْبَوْلِ، وَأَمَّا الآخَرُ فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ ‏"‏‏.‏ ثُمَّ أَخَذَ جَرِيدَةً رَطْبَةً، فَشَقَّهَا نِصْفَيْنِ، فَغَرَزَ فِي كُلِّ قَبْرٍ وَاحِدَةً‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ، لِمَ فَعَلْتَ هَذَا قَالَ ‏"‏ لَعَلَّهُ يُخَفَّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا ‏"‏‏.‏ قَالَ ابْنُ الْمُثَنَّى وَحَدَّثَنَا وَكِيعٌ قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ قَالَ سَمِعْتُ مُجَاهِدًا مِثْلَهُ ‏"‏ يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ ‏"‏‏.‏

 நபி அவர்கள் இரு கப்ருகளைக் கடந்து சென்றார்கள். அப்போது இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக ( பாவத்திற்காக ) இவர்கள் வேதனை செய்யப்படவில்லை . அவ்விருவரில் ஒருவர் தாம் சிறு நீர் கழிக்கும் போது மறைப்பதில்லை மற்றொருவர் கோள் சொல்லித்திரிபவராக இருந்தார் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ( ரழி ) ( நூல் : புகாரி )

மேலும், நபி அவர்கள் கழிவறை கட்டப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த எச்சரிக்கையின் ஊடாக வலியுறுத்தினார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்னொரு கோணத்தில் நபி அவர்கள் முஸ்லிம்களை மனதளவில் தயார் படுத்தினார்கள்.

وعن أبي هريرة قال: أنَّ رسولَ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ قالَ : اتَّقوا اللَّاعِنَينِ ، قالوا: وما اللَّاعنانِ يا رسولَ اللَّهِ ؟ قالَ الَّذي يتخلَّى في طريقِ النَّاسِ أو ظلِّهِم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள்என்று கூறினார்கள். மக்கள், “சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள்.

அதற்கு, “மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பதுதான்என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ( நூல்: முஸ்லிம் )

கழிவுகளை அகற்றுவதும்... கருணை நபி அவர்களின் வழிகாட்டலும்...

தந்தையை விட மேலாக தங்கள் சமுதாயத்திற்கு (பிள்ளைகளுக்கு) அணு அணுவாக தேவையான அனைத்தையும் கற்றுக் கொடுத்தார்கள் கருணை நபி அவர்கள். மலம், ஜலம் கழிக்கும் முறையைக் கூட கற்றுத் தர தவறவில்லை.

عن ابي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: إنَّـما أنا لكم مِثْلُ الوالِدِ، أُعَلِّمُكم، فإذا أَتى أَحَدُكم الـخَلاءَ فلا تَسْتَقْبِلوها ولا تَسْتَدْبِروها، ولا يَسْتَنْجي بِيَمينِه، وكان يَأْمُرُ بِثَلاثةِ أَحْجارٍ، ويَنْهى عن الرَّوَثِ والرِّمَّةِ

நபி (ஸல்) அவர்கள் நான் உங்களுக்கு தந்தையைப் போன்றவன்என்று கூறிவிட்டு, உங்களுக்கு நான் கற்றுத் தருகிறேன் என்று சொல்லி "உங்களில் ஒருவர் கழிவறைக்கு வந்தால் கிப்லாவை முன்னோக்கவோ பின்னோக்கவோ வேண்டாம். மேலும், வலது கை கொண்டு சுத்தம் செய்ய வேண்டாம். மேலும், விட்டைகள் கொண்டு சுத்தம் செய்யவும் வேண்டாம்" என்று கழிவறை ஒழுங்குகளைப் பற்றி கற்றுத் தந்தார்கள். ( நூல்: அஹ்மத் )

وفي رواية مسلم: "المشركون" إلى سلمان الفارسي رضي الله عنه فقالوا: لقد عَلَّمَكُمْ نَبِيُّكُمْ كُلَّ شَيْءٍ حَتَّى الْخِرَاءَةَ فَقَالَ: أَجَلْ (لَقَدْ نَهَانَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ لِغَائِطٍ أَوْ بَوْلٍ، أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِالْيَمِينِ، أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِأَقَلَّ مِنْ ثَلَاثَةِ أَحْجَارٍ، أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِرَجِيعٍ أَوْ بِعَظْمٍ)

ஒரு முறை ஸல்மான் (ரலி) அவர்களிடம் முஷ்ரிகீன்கள் கேலி செய்த வண்ணம் என்ன? உங்கள் நபி உங்களுக்கு மலம், ஜலம் கழிக்கும் முறைகளை கூட கற்றுத் தருகிறாராமே!என்று கேட்டதற்கு ஸல்மான் (ரலி) அவர்கள் ஆம்என்று கூறி அதன் சில முறைகளையும் கூறினார்கள். ( நூல் : முஸ்லிம் )

அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்றுத் தரும் சுத்தம்....

பொதுவாக மலஜலம் கழித்த பின்னர் தண்ணீரைக் கொண்டு நாம் சுத்தம் செய்கிறோம். எனினும் கற்களைக் கொண்டும் சுத்தம் செய்யலாம். இவ்வாறு கற்களைக் கொண்டு மட்டும் சுத்தம் செய்யும் பட்சத்தில் குறைந்த பட்சம் 3 கற்களைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். 3 கற்களைக் கொண்டும் சுத்தமாகாவிட்டால் சுத்தமாகும் வரை கற்களை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். 

எனினும் கற்களைக் கொண்டு மட்டும் சுத்தம் செய்வதை விட தண்ணீரைக் கொண்டு மட்டும் சுத்தம் செய்வது சிறந்தது. 

عن مجاهد ، عن ابن عباس قال : لما نزلت هذه الآية : ( فيه رجال يحبون أن يتطهروا ) بعث رسول الله صلى الله عليه وسلم إلى عويم بن ساعدة فقال : " ما هذا الطهور الذي أثنى الله عليكم ؟ " . فقال : يا رسول الله ، ما خرج منا رجل ولا امرأة من الغائط إلا غسل فرجه - أو قال : مقعدته - فقال النبي صلى الله عليه وسلم . " هو هذا " .

மேலும் கற்களைக் கொண்டு சுத்தம் செய்வதை விட தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வது சிறந்தது. அவ்வாறு சுத்தம் செய்பவர்களை அல்லாஹ்வே புகழ்ந்து கூறியுள்ளான்.

அதிலே (குபா எனும் ஊரிலே) மிக பரிசுத்தவான்களாக இருப்பதை விரும்புபவர்களும் உள்ளனர். அல்லாஹ்வும் பரிசுத்தவான்களை விரும்புகிறான். (அல்குர்ஆன் 8:108) என்ற வசனம் இறங்கியவுடன் நபி அவர்கள் குபாவாசிகளில் உவைம் இப்னு ஸாஇதா (ரலி) அவர்களை அழைத்து அவர்களிடம் அல்லாஹ்வே உங்களின் சுத்தத்தை புகழ்ந்து கூறுமளவிற்கு நீங்கள் சுத்தம் செய்யும் முறைதான் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஆணோ பெண்ணோ நாங்கள் (மலம், ஜலம் கழித்த பின்) தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வோம். என்று பதில் கூறினார்கள். ( நூல் : இப்னு மாஜா ).

மண்ணறையில் வேதனையை பெற்றுத் தரும் சுத்தமின்மை...

عن ثابت عن النبي ﷺ، أخرجه البخاري ومسلم في الصحيحين، قال: «مر النبي ﷺ على قبرين فقال: إنهما ليعذبان، وما يعذبان في كبير، ثم قال: بلى، أما أحدهما فكان يمشي بالنميمة، وأما الآخر فكان لا يستنزه من البول

நபி (ஸல்) அவர்கள் இரண்டு கப்ருக்கு பக்கத்தில் சென்று கொண்டிருக்கும் போது அவ்விரு கப்ருகளிலுள்ளவர்களும் வேதனை செய்யப்படுகின்றார்கள், (ஆனால்) பெரும் விஷயத்தில் அவ்விருவரும் வேதனை செய்யப்படவில்லை, அதில் ஒருவர் சிறு நீர் கழித்தால் சுத்தம் செய்ய மாட்டார், மற்றவர் கோள்செல்லித் திரிபவராக இருந்தார் என நபி அவர்கள் கூறினார்கள். ( நூல்: நஸாயி )

மலஜலம் கழித்தழில் சில ஒழுங்குமுறைகள்....

கழிவறை நுழையும் முன்...

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَشْعَثِ بْنِ سُلَيْمٍ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رضي الله تعالى عنها، قَالَتْ: «كَانَ النَّبِيُّ ﷺ يُحِبُّ التَّيَمُّنَ مَا اسْتَطَاعَ فِي شَأْنِهِ كُلِّهِ، فِي طُهُورِهِ، وتَرَجُّلِهِ، وتَنَعُّلِهِ».

நபி அவர்கள் சுத்தமான இடங்களுக்குள் நுழையும் போதும் செருப்பு அணியும் போதும் தலை சீவும் போதும் வலது பக்கத்தை முற்படுத்துவதையே விரும்பி வந்தார்கள். (அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி), நூல் : இப்னுமாஜா)

قَالَ حَدَّثَتْنِي حَفْصَةُ، زَوْجُ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَجْعَلُ يَمِينَهُ لِطَعَامِهِ وَشَرَابِهِ وَثِيَابِهِ وَيَجْعَلُ شِمَالَهُ لِمَا سِوَى ذَلِكَ ‏.

அன்னை ஹஃப்ஸா ரலி அவர்கள் அறிவித்தார்கள்:- நபி அவர்கள் உணவு உண்ணும் போதும், நீர் அருந்தும் போதும், ஆடை அணியும் போதும் வலதை பயன் படுத்துவார்கள். இவையல்லாத மற்ற காரியங்களுக்கு இடதை பயன் படுத்துவார்கள். ( நூல்: அஹ்மத் )

இதனடிப்படையில் மலம் ஜலம் கழிக்க கழிப்பிடம் நுழையும் பொழுது இடது காலை முதலில் வைத்தும் வெளியேறும் பொழுது வலது காலையும் முதலில் வைத்தும் வெளியேற வேண்டும்.

இரண்டு துஆக்கள்....

عن علي بن أبي طالبٍ أن النبي ﷺ قال: سَتْرُ ما بين الجن وعورات بني آدم إذا دخل أحدُهم الخلاء أن يقول: بسم الله، أخرجه الترمذي وابن ماجه

 

நபி அவர்கள் அருளினார்கள் : ஜின்களின் கண்களுக்கும் மனிதர்களின் மர்மஸ்தலங்களுக்கும் மத்தியில் மறைப்பு ஏற்பட (வேண்டுமானால்) அவர்கள் கழிப்பிடம் செல்லும் முன் பிஸ்மில்லாஹ்என்று ஓதிக் கொள்ளட்டும். (அறிவிப்பாளர்: ஹள்ரத் அலி (ரலி), நூல்: திர்மிதி)

وفي "الصحيحين" عن أنسٍ قال: كان النبي ﷺ إذا دخل الخلاء قال: اللهُم إني أعوذ بك من الخُبُث والخبائث

நபி அவர்கள் கழிவறை செல்ல நாடினால் அல்லாஹும்ம இன்னி அஊதுபிக்க மினல் குப்ஸி வல் கபாயிஸி” (இறைவா! நிச்சயமாக நான் கெட்ட ஆண் ஜின்கள், பெண் ஜின்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.) என்ற துஆவை ஓதுவார்கள். (அறிவிப்பாளர் : ஹள்ரத் அனஸ் (ரலி), நூல் : புகாரி)

தலையை மறைத்தலும், செருப்பு அணிதலும்...

وروى البيهقي (465) عَنْ حَبِيبِ بْنِ صَالِحٍ قَالَ : ( كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ الْخَلاَءَ لَبِسَ حِذَاءَهُ وَغَطَّى رَأْسَهُ ) .

நபி அவர்கள் கழிப்பிடம் செல்லும் போது தலையை மறைத்து, கால்களுக்கு செருப்பு அணிந்தவர்களாக செல்வார்கள்.(அறிவிப்பாளர் : ஹள்ரத் ஹபீப் இப்னு ஸாலிஹ் (ரலி), நூல் : ஸுனனுல் குப்ரா)

فعن عُرْوَة ، عَنْ أَبِيهِ : " أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ ، قَالَ ، وَهُوَ يَخْطُبُ النَّاسَ : " يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ ، اسْتَحْيُوا مِنَ اللهِ ، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إنِّي لأظل حِين أَذْهَبُ إلَى الْغَائِطِ فِي الْفَضَاءِ ، مُغَطّيًا رَأْسِي اسْتِحْيَاءً مِنْ رَبِّي "

رواه ابن المبارك في " الزهد " (1/107) ، وابن أبي شيبة في "المصنف" (1/105) .

وإسناده صحيح .

அபூபக்ர் ரலி அவர்கள் ஆட்சி காலத்தில் ஒரு முறை மக்களுக்கு பிரசங்கம் செய்யும் போது "முஸ்லிம்களே! அல்லாஹ்வின் விஷயத்தில் வெட்கப்படுங்கள்! என் உயிர் எவன் வசம் இருக்கிறதோ அந்த இறைவன் மீது ஆணையாக! நான் மலஜலம் கழிக்க கழிவறையின் பக்கம் ஒதுங்கும் போது அல்லாஹ்வின் மீது எனக்கு வெளிப்படும் வெட்கத்தின் காரணமாக என் தலையை மறைத்தவனாகவே செல்கிறேன்" என்று கூறினார்கள். ( நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா )

நின்று கொண்டு சிறு நீர் கழிக்கத் தடையும்... அனுமதியும்....

عَنْ عَائِشَةَ، قَالَتْ مَنْ حَدَّثَكُمْ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَبُولُ قَائِمًا فَلاَ تُصَدِّقُوهُ مَا كَانَ يَبُولُ إِلاَّ قَاعِدًا

நபி ஸல் அவர்கள் நின்று கொண்டு சிறு நீர் கழித்ததாக உங்களுக்கு எவர் சொன்னாலும் அதனை நீங்கள் நம்பாதீர்கள்.அவர்கள் உட்கார்ந்தவர்களாகவே தவிர சிறு நீர் கழித்ததில்லை. அறிவிப்பவர் ; ஆயிஷா ( ரழி ) ( நூல் : திர்மிதீ )

 

روى مسلم : عَنْ أَبِي وَائِلٍ قَالَ: كَانَ أَبُو مُوسَى يُشَدِّدُ فِي الْبَوْلِ، وَيَبُولُ فِي قَارُورَةٍ [خوفًا من أن يصيبه شيء من رشاشه]، وَيَقُولُ: إِنَّ بَنِي إِسْرَائِيلَ كَانَ إِذَا أَصَابَ جِلْدَ أَحَدِهِمْ بَوْلٌ قَرَضَهُ بِالْمَقَارِيضِ. فَقَالَ حُذَيْفَةُ: لَوَدِدْتُ أَنَّ صَاحِبَكُمْ لَا يُشَدِّدُ هَذَا التَّشْدِيدَ، فَلَقَدْ رَأَيْتُنِي أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَتَمَاشَى ، فَأَتَى سُبَاطَةً خَلْفَ حَائِطٍ ، فَقَامَ كَمَا يَقُومُ أَحَدُكُمْ فَبَالَ ، فَانْتَبَذْتُ مِنْهُ ، فَأَشَارَ إِلَيَّ فَجِئْتُ فَقُمْتُ عِنْدَ عَقِبِهِ حَتَّى فَرَغَ .

அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் சிறுநீர் (துளிகள் தெறிக்கும்) விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவராய் இருந்தார்கள். (மேனியில் சிறுநீர் தெறித்துவிடக் கூடாது என்பதற்காக) அவர்கள் கண்ணாடிக் குடுவையில் சிறுநீர் கழிப்பார்கள். மேலும், இஸ்ரவேலர்களில் ஒருவரது சருமத்தில் சிறுநீர் பட்டுவிட்டால் அந்த இடத்தைக் கத்தரிக்கோலால் கத்தரித்து விடக் கூடியவராக அவர் இருந்தார் என்று கூறுவார்கள்.

(இதை அறிந்த) ஹுதைஃபா பின் அல் யமான் (ரலி) அவர்கள், உங்கள் தோழர் (அபூ மூசா) இந்த அளவு கண்டிப்பானவராய் இருக்க வேண்டியதில்லை என்றே நான் விரும்புகிறேன். (ஒரு முறை) நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சுவருக்குப் பின்னாலிருந்த குப்பைக் குழிக்குச் சென்று உங்களில் ஒருவர் நிற்பதைப் போன்று (சாதாரணமாக) நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள். உடனே நான் அவர்களைவிட்டும் சற்று ஒதுங்கிச் சென்றேன். அப்போது அவர்கள் என்னை நோக்கி (தம் அருகில் வருமாறு) சைகை செய்தார்கள். நான் அவர்களிடம் சென்று அவர்கள் தமது தேவையை முடித்துக் கொள்ளும்வரை அவர்களுக்குப் பின்பக்கம் நின்று (மறைத்துக்) கொண்டிருந்தேன். ( நூல்: முஸ்லிம் )

عَنْ حُذَيْفَةَ، قَالَ أَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا، ثُمَّ دَعَا بِمَاءٍ، فَجِئْتُهُ بِمَاءٍ فَتَوَضَّأَ‏

'நபி (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழிக்கு வந்து (அங்கு) நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள். பிறகு தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். நான் அவர்களுக்குத் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபி (ஸல்) அவர்கள் உளூ செய்தார்கள். ( நூல் : புகாரி )

பொதுவாக சிறுநீர் கழிக்கும் போது உட்கார்ந்து தான் சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதையும், நின்று கொண்டு கழிக்க வேண்டிய இக்கட்டான ஓரிரு சந்தர்ப்பங்கள் வந்துவிட்டால் நின்று கொண்டு கழிக்கலாம் என்பதையும் மேற்கூறிய நபிமொழிகள் உணர்த்துகின்றன.

சிறுநீர் கழிக்கும் போது, சிறுநீர் துளிகள் நமது மேனியில் படாத அளவிற்கு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் மேற்கூறிய நபிமொழி நமக்கு உணர்த்துகிறது.

வலது கரத்தால் மர்ம உறுப்பை பிடிக்கக் கூடாது...

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ إِذَا بَالَ أَحَدُكُمْ فَلاَ يَأْخُذَنَّ ذَكَرَهُ بِيَمِينِهِ، وَلاَ يَسْتَنْجِي بِيَمِينِهِ، وَلاَ يَتَنَفَّسْ فِي الإِنَاءِ

உங்களில் ஒருவர் சிறுநீர் கழித்தால் அவர் தன்னுடைய வலக்கரத்தால் மறைவு உறுப்பைத் தொடவேண்டாம். இன்னும் வலக்கரத்தால் சுத்தம் செய்யவும் வேண்டாம். பாத்திரத்தில் மூச்சு விடவும் வேண்டாம்" என்று நபி அவர்கள் கூறினார்கள் அபூ கதாதா தன்னுடைய தந்தையின் வாயிலாக அறிவித்தார்கள். ( நூல் : புகாரி )

நீரில் சிறு நீர் கழிக்கத் தடை...

وَبِإِسْنَادِهِ قَالَ ‏ "‏ لاَ يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ الَّذِي لاَ يَجْرِي، ثُمَّ يَغْتَسِلُ فِيهِ ‏"‏‏.‏

ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி ) ( நூல் : புகாரி )

கழிவறைப் பயன்பாட்டில் இஸ்லாமிய நாகரிகம் பேணுவோம்! சுகாதார மேம்பாட்டில் இஸ்லாம் செய்த புரட்சியை உலகுக்கு அறிவிப்போம்!!

  

Tuesday, 4 November 2025

அழிவில் ஆழ்த்தக்கூடிய மூன்று இழி குணங்கள்!!!

 

அழிவில் ஆழ்த்தக்கூடிய மூன்று இழி குணங்கள்!!!



உலகில் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் செய்யும் செயல்களை மிகவும் கவனமாக செய்ய கடமைப் பட்டுள்ளோம்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் மிகச் சரியானதாக இருக்கிறதா? அல்லது தவறான, பாவமான செயலாக இருக்கிறதா? என சீர் தூக்கிப் பார்த்து செய்ய வேண்டும்.

ஏனெனில், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் சிலர்கள் இந்த உலகில் செய்து வந்த செயல்கள் குறித்து விமர்சனம் செய்யும் போது அவர்கள் செய்த பல செயல்கள் தவறானதும் பாவமானதுமாகும் ஆனால், அவர்களோ அதை நல்ல செயல்களாகவே எண்ணி செய்தார்கள் என்று விமர்சிப்பதோடு அவர்களின் நிலையை இறைவனை நிராகரிப்போர்களின் செயல்களோடு இணைத்துப் பேசுகின்றான்.

قُلْ هَلْ نُنَبِّئُكُم بِٱلْأَخْسَرِينَ أَعْمَٰلًا

"(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக.

 

ٱلَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا

யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். ( அல்குர்ஆன்: 18: 103, 104 )

எனவே, மனிதனை மாபெரும் அழிவில் ஆழ்த்தக் கூடிய செயல்களைச் செய்வதில் இருந்து மனித சமூகம் விழிப்புணர்வுடன் செயல் பட வேண்டும்.

இதையே வள்ளுவன் இப்படிக் கூறுகிறான்:-

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல்.   (குறள்: 461) 

எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும் மு. கருணாநிதி

மனிதனை ஈடேற்றம் அடைய வைக்கும் காரியங்களை அடையாளப்படுத்திய மாநபி அவர்கள், மனிதன் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாய் அமையும் அமல்களை வரிசை படுத்திய வள்ளல் நபி அவர்கள், மனிதனுக்கு மறுமையில் அந்தஸ்துகளை அதிகரிக்கும் பண்பாடுகளை பட்டியலிட்ட பாச நபி அவர்கள், அதன் வரிசையில் மனிதனை அழிவில் ஆழ்த்தக் கூடிய பாவமான தீய குணங்களையும் எச்சரிக்கை செய்தார்கள்.

தப்ரானீ, பைஹகீ, பஸ்ஸார் போன்ற நபிமொழி தொகுப்புகளில் பல்வேறு அறிவிப்பாளர்கள் ஊடாக பதிவு செய்யப்பட்டிருக்கும் நீண்ட ஹதீஸின் ஒரு பகுதியாக பின் வரும் எச்சரிக்கையை இந்த உம்மத்தின் ஈமானிய மக்களுக்கு வழங்கியுள்ளதை பார்க்க முடிகின்றது.

 

عَنْ عبدالله بن عمر عَنِ النَّبِيِّ ﷺ اَنَّهُ قَالَ: وَاَمَّا الْمُهْلِكَاتُ: فَشُحٌّ مُطَاعٌ، وَهَوًي مُتَّبَعٌ، وَاِعْجَابُ الْمَرْءِ بِنَفْسِهِ. ورواه الطبراني.

வழிபடக்கூடிய கருமித்தனம், பின்பற்றப்படக்கூடிய மனோஇச்சை, தன்னைத்தானே சிறந்தவனாகக் கருதுதல் ஆகிய மூன்று காரியங்களும் மனிதனை அழிவில் ஆழ்த்தக் கூடியவையாகும்என நபி அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி அவர்கள் அறிவித்தார்கள்.  ( நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி, நூல்:  தப்ரானீ, ஸஹீஹுல் ஜாமிஉ )

1) முதல் தீய குணம்:-

 عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رضي الله عنهما أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اتَّقُوا الظُّلْمَ، فَإِنَّ الظُّلْمَ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ، وَاتَّقُوا الشُّحَّ، فَإِنَّ الشُّحَّ أَهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ، حَمَلَهُمْ عَلَى أَنْ سَفَكُوا دِمَاءَهُمْ وَاسْتَحَلُّوا مَحَارِمَهُمْ».  صحيح مسلم

கஞ்த்தனத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில், கஞ்சத்தனமானது திண்ணமாக, உங்களுக்கு முன்னிருந்தவர்களை அழித்தது. இரத்தங்களை பூமியில் ஓட்டுவதற்கும் இறைவனால் அவர்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவையாக மாற்றிக் கொள்வதற்கும் அவர்களைத் தூண்டியது" என நபி அவர்கள் கூறினார்கள் என்று ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். ( நூல்: முஸ்லிம் )

وعن أبي سعيد الخدري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ( خصلتان لا يجتمعان في مؤمنٍ: البخل وسوء الخلق ) أخرجه الترمذي 

கஞ்சத்தனமும் தீய பண்பும் ஓர் இறைநம்பிக்கையாளரிடம் ஒருசேர இடம் பெறக்கூடாத இரு பண்புகளாகும்" என நபி அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். ( நூல்:- திர்மிதீ )

ஒரு மனிதனிடம் இருந்து வெளிப்படும் கஞ்சத்தனம் என்பது பல்வேறு வகைகளாக உள்ளது.

சிலர் தனக்கு அவசியமானதில் கூட கஞ்சத்தனம் செய்வார்கள். சிலர் குடும்பத்தினருக்கு செலவு செய்வதில் கஞ்சத்தனம் செய்வார்கள். சிலர் மார்க்கப் பணிகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யவும் கஞ்சத்தனம் செய்வார்கள். சிலர் ஜகாத் கொடுக்கமால் கஞ்சத்தனம் செய்வார்கள். எந்த வகையான கஞ்சத்தனமாக இருந்தாலும் அது சம்பந்தப்பட்ட மனிதனை பேரழிவில் ஆழ்த்திவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  وَالَّذِيْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ يُسْرِفُوْا وَلَمْ يَقْتُرُوْا وَكَانَ بَيْنَ ذٰلِكَ قَوَامًا‏ 

அவர்கள் செலவிடும்போது விரயம் செய்ய மாட்டார்கள். கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். அதற்கு இடைப்பட்ட நிலையாகவே அது இருக்கும். ( அல்குர்ஆன்: 25: 67 )

 

وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَىٰ عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ ٱلْبَسْطِ فَتَقْعُدَ مَلُومًۭا مَّحْسُورًا

(கஞ்சனைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப்பட்டதாக்கிக் கொள்ளாதீர்; அன்றியும், (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், (கையில் எதுவுமில்லாது) துக்கப்பட்டவராகவும் அமைந்து விடுவீர். ( அல்குர்ஆன்: 17: 29 )

1) தனக்கு அவசியமானதில் கஞ்சத்தனம்...

. عن أبي الأحوص أن أباه أتى النبي ﷺ وهو أشعث سيئ الهيئة فقال له رسول الله ﷺ: أما لك مال؟ قال: من كل المال قد آتاني الله

، فقال

فإن الله إذا أنعم على عبد نعمة أحب أن تُرى عليه أخرجه أحمد والنسائي وإسناده قوي

அபுல் அஹ்வஸ் (ரலி) அவர்கள் தனது தந்தை கூறியதாக கூறுகிறார்கள் : நான் நபி அவர்களிடம் சென்றேன். அப்பொழுது நான் பழைய ஆடை அணிந்திருந்தேன். அதைக் கண்ட நபி அவர்கள் உமக்கு வசதி உள்ளதா? என்றார்கள். அதற்கு நான் ஆம்! இறைவன் எனக்களித்த ஒட்டகங்கள், அடிமைகள், ஆடுகளிலிருந்தும் எனக்கு வசதி உள்ளது" என்று கூறினேன். அதற்கு நபி அவர்கள் "உமக்கு இறைவன் கொடுத்த வசதியை (நிஃமத்தை) உன் மீது பார்க்கப்பட வேண்டும்" என்று கூறினார்கள்.   ( நூல் : முஸ்னத் அஹ்மத் )

2) குடும்பத்திற்கு செலவு செய்வதில் கஞ்சத்தனம்...

عَنْ ثَوْبَانَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:-«أَفْضَلُ دِينَارٍ يُنْفِقُهُ الرَّجُلُ، دِينَارٌ يُنْفِقُهُ عَلَى عِيَالِهِ، وَدِينَارٌ يُنْفِقُهُ الرَّجُلُ عَلَى دَابَّتِهِ فِي سَبِيلِ اللهِ، وَدِينَارٌ يُنْفِقُهُ عَلَى أَصْحَابِهِ فِي سَبِيلِ اللهِ»  [رواه مسلم] -

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: "ஒரு மனிதர் தம் குடும்பத் தாருக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசும் (தீனார்), அல்லாஹ்வின் பாதையில் தமது வாகனத்திற்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசும், அல்லாஹ்வின் பாதையில் தம் நண்பர்களுக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசுமே அவர் செலவிடுகின்ற பொற்காசுகளிலேயே சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி), ( நூல்: முஸ்லிம் )

عَنْ عَائِشَةَ رضي الله عنها: " أَنَّ هِنْدَ بِنْتَ عُتْبَةَ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ، وَلَيْسَ يُعْطِينِي مَا يَكْفِينِي وَوَلَدِي، إِلَّا مَا أَخَذْتُ مِنْهُ وَهُوَ لاَ يَعْلَمُ، فَقَالَ: (خُذِي مَا يَكْفِيكِ وَوَلَدَكِ، بِالْمَعْرُوفِ) رواه البخاري (5364)، ومسلم (1714).

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: (ஒருமுறை) ஹின்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் நபி அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூசுப்யான் கருமியான மனிதராக இருக்கின்றார். எனக்கும், என் குழந்தைக்கும் செலவுக்கு போதிய பணத்தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டதைத்தவிர (போதுமான பணத்தை அவர் தர மாட்டார்) என்று கூறினார். அதற்கு அண்ணலார் "உனக்கும், உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக் கொள்!" என்று கூறினார்கள்.   ( நூல்: புகாரி )

3) அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதில் கஞ்சத்தனம்...

وَلَا يَحْسَبَنَّ ٱلَّذِينَ يَبْخَلُونَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضْلِهِ هُوَ خَيْرًۭا لَّهُم بَلْ هُوَ شَرٌّۭ لَّهُمْ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا۟ بِه يَوْمَ ٱلْقِيَٰمَةِ وَلِلَّهِ مِيرَٰثُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌۭ

அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் கஞ்சத்தனம் செய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் - அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்;. அவர்கள் கஞ்சத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்;. வானங்கள், பூமி ஆகியவற்றில் (இருக்கும் அனைத்துக்கும்) அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அறிகிறான். ( அல்குர்ஆன்: 3: 180 )

قال العلاّمة المفسّر عبدالرحمن بن ناصر السعدي رحمه الله تعالى:- « أي: ولا يظنّ الّذين يبخلون، أي: يمنعون ما عندهم ممّا آتاهم الله من فضله من المال والجاه والعلم، وغير ذلك ممّا منحهم الله، وأحسن إليهم به، وأمرهم ببذل ما لا يضرّهم منه لعباده فبخلوا بذلك، وأمسكوه، وضنوا به على عباد الله، وظنّوا أنه خير لهم، بل هو شرّ لّهم في دينهم ودنياهم، وعاجلهم وآجلهم.

« سيطوّقون ما بخلوا به يوم القيامة »: أي: يجعل ما بخلوا به طوقا في أعناقهم، يعذّبون به كما ورد في الحديث الصحيح: *« إن البخيل يمثّل له ماله يوم القيامة شجاعا أقرع، له زبيبتان، يأخذ بلهزمتيه يقول: أنا مالك، أنا كنزك »*، وتلا رسول الله صلّى الله عليه وسلم مصداق ذلك هذه الآية. فهؤلاء حسبوا أن بخلهم نافعهم، ومجد عليهم، فانقلب عليهم الأمر وصار من أعظم مضارّهم وسبب عقابهم ». [ المصدر: ' تيسير الكريم الرحمن في تفسير كلام المنّان' للسّعدي، ص - ١٤١ ]

அல்குர்ஆன் விரிவுரையாளர் அல்லாமா அப்துர்ரஹ்மான் இப்னு நாஸிர் அஸ்ஸஃதீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:- அல்லாஹ்  வழங்கியிருக்கும் சொத்து செல்வம், பட்டம் பதவி, கல்வி ஆகியவற்றையும், அவன் வழங்கிய,  உபகாரமாகக் கொடுத்த ஏனையவற்றையும்   (நல்வழியில் செலவளிக்காது) தம்மிடம் தடுத்து வைத்துக்கொண்டு கஞ்சத்தனம் செய்வோர் இதை தமக்கு நல்லது என எண்ணிக்கொள்ள வேண்டாம் என்று அல்லாஹ் இங்கு குறிப்பிடுகிறான். மேலும், தான் அவர்களுக்கு வழங்கியதில் தன் அடியார்களுக்குத் தீங்கு ஏற்படாத வண்ணம் கொடுத்துதவுமாறும் அவர்களுக்கு அவன் ஏவுகிறான். ஆனால், அவர்களோ இதைக் கொண்டு கஞ்சத்தனப்பட்டு விட்டார்கள்; கொடுக்காமல் அதைப் பிடித்து வைத்துக்கொண்டார்கள்; இதன்மூலம் அல்லாஹ்வின் அடியார்களிடம் கஞ்சத்தனம் காட்டினார்கள்; இப்படியெல்லாம் செய்துவிட்டு தமக்கு இது நல்லது என்றும் எண்ணிக்கொண்டார்கள்.

எனினும் இது அவர்களுக்கு அவர்களுடைய மார்க்கத்திலும், அவர்களுடைய உலக விவகாரங்களிலும், அவர்களுடைய இம்மை - மறுமை விடயத்திலும் தீங்காகவே இருக்கிறது. "எதை அவர்கள் கஞ்சத்தனம் செய்கிறார்களோ அவை அவர்களுக்கு மறுமை நாளில் கழுத்தில் வளையங்களாக மாட்டப்படும்அதாவது, (நல்வழியில் செலவழிக்காமல்) எதை அவர்கள் கஞ்சத்தனம் காட்டிார்களோ அது வளையமாக அவர்களின் கழுத்துகளில் மாட்டப்பட்டு அதைக்கொண்டு அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள். ஆதாரபூர்வமான நபிமொழியில் இவ்வாறு வந்திருக்கிறது: *கஞ்சனின் சொத்து செல்வம் மறுமை நாளில் வழுக்கைத் தலைப் பாம்பின் உருவமாக மாற்றப்படும். அதன் கண்கள் இரண்டிற்கும் மேலால் பார்க்கப் பயங்கரமான மாதிரி இரு கறுப்பு நிற அடையாளங்கள் இருக்கும். தனது இரு கடவாய்களாலும் அவனை அது பிடித்துக்கொண்டு, "நான்தான் உனது சொத்து செல்வம்; நான்தான் உனது புதையல்!' என்று கூறிக்கொண்டிருக்கும்"  இதை உண்மைப்படுத்தும் முகமாக மேலே உள்ள (03:180) வசனத்தை நபி அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.

தமது கஞ்சத்தனம் தமக்குப் பயனளிக்கும் என்றும், தமக்கு அது புகழாக இருக்கும் என்றும் அவர்கள் எண்ணிக்கொண்டார்கள். ஆனால், விடயம் அவர்கள் மீது தலைகீழாக மாறியது. அத்தோடு அது அவர்களுக்கு மிகப்பெரும் தீங்காகவும், அவர்களின் தண்டனைக்குரிய காரணியாகவும் மாறியது”. ( நூல்: தய்சீருல் கரீமிர் ரஹ்மான்,  லிஇமாம் அஸ்ஸஃதீ (ரஹ்), பக்கம்:141 )

4) ஜகாத் வழங்குவதில் கஞ்சத்தனம்...

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ كَثِيرًا مِّنَ الْأَحْبَارِ وَالرُّهْبَانِ لَيَأْكُلُونَ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ ۗ وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ

இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக! ( அல்குர்ஆன்: 9: 34 )

கஞ்சத்தனம் செய்வதால் யாருக்கு இழப்பு?

هَا أَنتُمْ هَٰؤُلَاءِ تُدْعَوْنَ لِتُنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ فَمِنكُم مَّن يَبْخَلُ وَمَن يَبْخَلْ فَإِنَّمَا يَبْخَلُ عَن نَّفْسِهِ وَاللَّهُ الْغَنِيُّ وَأَنتُمُ الْفُقَرَاءُ وَإِن تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُم

அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள். ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், நீங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தை அவன் பகரமாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். ( அல்குர்ஆன்: 47: 38 )

عن أبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عنْه قال:-  ضَرَبَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ مَثَلَ البَخِيلِ والْمُتَصَدِّقِ، كَمَثَلِ رَجُلَيْنِ عليهما جُنَّتانِ مِن حَدِيدٍ، قَدِ اضْطُرَّتْ أيْدِيهِما إلى ثُدِيِّهِما وتَراقِيهِما، فَجَعَلَ المُتَصَدِّقُ كُلَّما تَصَدَّقَ بصَدَقَةٍ انْبَسَطَتْ عنْه، حتَّى تُغَشِّيَ أنامِلَهُ وتَعْفُوَ أثَرَهُ، وجَعَلَ البَخِيلُ كُلَّما هَمَّ بصَدَقَةٍ قَلَصَتْ، وأَخَذَتْ كُلُّ حَلْقَةٍ مَكانَها. قالَ: فأنا رَأَيْتُ رَسولَ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ يقولُ: بإصْبَعِهِ في جَيْبِهِ فلوْ رَأَيْتَهُ يُوَسِّعُها ولا تَوَسَّعُ.

நபி   அவர்கள் கூறினார்கள்:- கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்துவரை இரும்பாலான அங்கிகளணிந்த இரண்டு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர், தர்மம் செய்யும்பொழுதெல்லாம் அவரின் அங்கி விரிந்து, விரல்களை மறைத்துக் கால்களை மூடித் தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக்கூடாது என்று எண்ணும்போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது.என அபூ ஹுரைரா (ரலி)அவர்கள் அறிவித்தார்கள்.( நூல் புகாரி )

2) இரண்டாவது தீய குணம்...

 وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ (40) فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ

எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் மனோ இச்சைகளை விட்டும் தன்னை விலக்கிக் கொண்டானோ, நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும். ( அல்குர்ஆன் 79: 40, 41 )

عَنْ اَبِيْ بَرْزَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اِنَّمَا اَخْشَي عَلَيْكُمْ شَهَوَاتِ الْغَيِّ فِيْ بُطُوْنِكُمْ وَفُرُوْجِكُمْ وَمُضِلاَّتِ الْهَوَي. رواه احمد

உங்கள் வயிறுகள், மர்மஸ்தானங்கள் சம்பந்தப்பட்ட (ஹராமைச் சாப்பிடுதல், விபச்சாரம் போன்ற) மனோ இச்சைகளில் நீங்கள் மூழ்கிவிடுவதையும், (உங்களை சத்தியப் பாதையிலிருந்து வழி தவறி) வழிகேட்டின் பக்கம் இழுத்துச் செல்லும் மனோ இச்சைகளில் நீங்கள் மூழ்கிவிடுவதையும் நான் மிகவும் அஞ்சுகிறேன்என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறியதாக அபூபர்ஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்: முஸ்னத் அஹ்மத் )

عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: اَلْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ، وَالْعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا وَتَمَنَّي عَلَي اللّٰهِ. رواه الترمذي

எவர் தன்னைக் கொண்டு மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்விற்காக அமல் செய்கிறாரோ அவர் தான் புத்திசாலி எவர் தன் மனோ இச்சைப்படி வாழ்ந்து, (அல்லாஹ் என்னை மன்னித்து விடுவான் என்று) அல்லாஹ்வின் மீது மேலெண்ணம் கொண்டவராக வாழ்கிறாரோ அவர் அறிவற்றவர் ஆவார்என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறியதாக ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ( நூல்: இப்னுமாஜா ) 

மனோ இச்சையில் கவனம் வேண்டும்...

அற்பமான சிறிய விஷயங்களின் ஊடாக கூட நாம் மனோ இச்சையின் கட்டுப்பாட்டில் வந்து விடுவோம். இறுதியில் அதுக்கு கட்டுப்பட்டு நடந்து வாழ்வின் உயர்ந்த இலட்சியங்களைக் கூட எட்ட முடியாத நிலைக்கு வந்து விடுவோம். 

அல்லாஹ்வின் மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காக நடைபெற்ற ஒரு யுத்தத்தில் மாநபி அவர்களுடன் பங்கேற்ற ஒரு நபித்தோழர் அற்பமான ஒரு விஷயத்தின் ஊடாக மனோ இச்சையினால் கவரப்பட்டு இறுதியில் ஒரு முஸ்லிமின் உயரிய இலக்கான சொர்க்கப் பேற்றினையே இழக்கும் அபாயம் ஏற்பட்டதாக பின் வரும் வரலாற்று நிகழ்வு சான்றளிக்கின்றது.

خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى خَيْبَرَ، فَفَتَحَ اللهُ عَلَيْنَا فَلَمْ نَغْنَمْ ذَهَبًا وَلَا وَرِقًا، غَنِمْنَا الْمَتَاعَ وَالطَّعَامَ وَالثِّيَابَ، ثُمَّ انْطَلَقْنَا إِلَى الْوَادِي، وَمَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدٌ لَهُ، وَهَبَهُ لَهُ رَجُلٌ مِنْ جُذَامٍ يُدْعَى رِفَاعَةَ بْنَ زَيْدٍ مِنْ بَنِي الضُّبَيْبِ، فَلَمَّا نَزَلْنَا الْوَادِيَ، قَامَ عَبْدُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحُلُّ رَحْلَهُ، فَرُمِيَ بِسَهْمٍ، فَكَانَ فِيهِ حَتْفُهُ، فَقُلْنَا: هَنِيئًا لَهُ الشَّهَادَةُ يَا رَسُولَ اللهِ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَلَّا وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، إِنَّ الشِّمْلَةَ لَتَلْتَهِبُ عَلَيْهِ نَارًا أَخَذَهَا مِنَ الْغَنَائِمِ يَوْمَ خَيْبَرَ لَمْ تُصِبْهَا الْمَقَاسِمُ»، قَالَ: فَفَزِعَ النَّاسُ، فَجَاءَ رَجُلٌ بِشِرَاكٍ أَوْ شِرَاكَيْنِ فَقَالَ: يَا رَسُولَ اللهِ، أَصَبْتُ يَوْمَ خَيْبَرَ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «شِرَاكٌ مِنْ نَارٍ أَوْ شِرَاكَانِ مِنْ نَارٍ»

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: "நாங்கள் (வாதில் குரா) பள்ளத்தாக்கில் இறங்கியபோது அல்லாஹ்வின் தூதர் அவர்களின் அந்த அடிமை எழுந்து அவர்களது ஒட்டகத்திலிருந்து இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது (எங்கிருந்தோ வந்த) ஓர் அம்பால் அவர் தாக்கப்பட்டார். அதுவே அவரது இறப்புக்குக் காரணமாக அமைந்தது. அப்போது நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு இறைவழியில் உயிர்த் தியாகம் செய்யும் பேறு கிடைத்துவிட்டது" என்று வாழ்த்து கூறினோம்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள், “இல்லை, என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! கைபர் போரில் கிடைத்த போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும் முன்பே அவர் எடுத்துக்கொண்ட போர்வை அவருக்கு நரக நெருப்பாக எரிந்துகொண்டிருக்கிறது’’ என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) மக்கள் திடுக்குற்றனர்.

அப்போது ஒரு மனிதர் ஒரு செருப்பு வாரைஅல்லது இரண்டு செருப்பு வார்களைக் கொண்டு வந்து “(இதை) நான் கைபர் போரின்போது எடுத்துக் கொண்டேன்’’ என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள், “(இது சாதாரண செருப்பு வார் அன்று; இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால் இதுவே) நரகத்தின் செருப்பு வார்அல்லது நரகத்தின் இரு செருப்பு வார்கள்ஆகும்’’ என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

மனோ இச்சை மிகவும் கொடியது...

அல்லாஹ்வின் தூதர் அவர்களை அரணாக இருந்து மக்காவின் எதிரிகளிடமிருந்து காத்தவர்களில் முதன்மையானவர்கள் அபூதாலிப் அவர்கள்.

அபூதாலிப் அவர்கள் தனது பாரம்பரியம், தனது செல்வாக்கு, தனது அறிவாற்றல், தனது அதிகாரம் என அத்தனையையும் கொண்டு அல்லாஹ்வின் தூதர் அவர்களை பாதுகாத்து இந்த தீன் மக்காவில் வளர காரணமாக இருந்தார்கள்.

எனினும், அவர்களுக்கு சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையேயான வேற்றுமையை விளங்கிக் கொள்ள அல்லாஹ் ஒரு வாய்ப்பை வழங்குகிறான். ஆனால், மனோ இச்சையின் கட்டுப்பாட்டில் தன்னை முழுமையாக ஒப்படைத்து விட்டதால் விளங்கிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தும் அதை தவற விட்ட மனிதர்களில் ஒருவராகிப் போனார் அபூதாலிப்.

أَنَّهُ لَمَّا حَضَرَتْ أَبَا طَالِبٍ الوَفَاةُ جَاءَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَجَدَ عِنْدَهُ أَبَا جَهْلِ بْنَ هِشَامٍ، وَعَبْدَ اللَّهِ بْنَ أَبِي أُمَيَّةَ بْنِ المُغِيرَةِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي طَالِبٍ: ” يَا عَمِّ، قُلْ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، كَلِمَةً أَشْهَدُ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ ” فَقَالَ أَبُو جَهْلٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ: يَا أَبَا طَالِبٍ أَتَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ المُطَّلِبِ؟ فَلَمْ يَزَلْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْرِضُهَا عَلَيْهِ، وَيَعُودَانِ بِتِلْكَ المَقَالَةِ حَتَّى قَالَ أَبُو طَالِبٍ آخِرَ مَا كَلَّمَهُمْ: هُوَ عَلَى مِلَّةِ عَبْدِ المُطَّلِبِ، وَأَبَى أَنْ يَقُولَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا وَاللَّهِ لَأَسْتَغْفِرَنَّ لَكَ مَا لَمْ أُنْهَ عَنْكَ» فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى فِيهِ: {مَا كَانَ لِلنَّبِيِّ} [التوبة: 113] الآيَةَ

முசய்யிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: "(நபியவர்களின் பெரிய தந்தை) அபூதாலிபுக்கு மரணம் நெருங்கியபோது நபி அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூஜஹ்ல் பின் ஹிஷாம், அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி அவர்கள் அபூதாலிபிடம், “எனது பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) எனச் சொல்லி விடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சியம் கூறுவேன்’’ எனக் கூறினார்கள்.

அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், “அபூதாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக்கப் போகின்றீரா?’’ எனக் கேட்டனர். இவ்வாறு நபி அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமுமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூதாலிப் கடைசியாக, “நான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே (மரணிக்கின்றேன்)’’என்று கூறியதோடு லாஇலாஹ இல்லல்லாஹ்எனக் கூறவும் மறுத்துவிட்டார்.

அப்போது நபி அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும்வரை உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவேன்’’ என்று கூறினார்கள். அப்போது இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதன்று’’ எனும் (அல்குர்ஆன்: 9:13) ஆவது வசனத்தை அல்லாஹ் அருளினான். ( நூல்: புகாரி )

3) மூன்றாவது தீய குணம்....

புகழின் உச்சியில் இருந்த போதும் கூட தம்மை உயர்ந்தவராக மாநபி அவர்கள் கருதிய தில்லை.

أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَكَلَّمَهُ، فَجَعَلَ تُرْعَدُ فَرَائِصُهُ، فَقَالَ لَهُ: «هَوِّنْ عَلَيْكَ، فَإِنِّي لَسْتُ بِمَلِكٍ، إِنَّمَا أَنَا ابْنُ امْرَأَةٍ تَأْكُلُ الْقَدِيدَ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:  ஒரு மனிதர் முதன் முதலாக நபி அவர்களைச் சந்திக்க வந்தார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டு தான் மக்கள் நிற்பார்கள். நபி அவர்களையும் அது போல் கருதிக்கொண்டு உடல் நடுங்கிட வந்தார். சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்என்று அவரிடம் கூறி அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள்" நபி அவர்கள்.  ( நூல்: இப்னுமாஜா )

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقْبِلُ وَمَا عَلَى الْأَرْضِ شَخْصٌ أَحَبَّ إِلَيْنَا مِنْهُ، فَمَا نَقُومُ لَهُ لِمَا نَعْلَمُ مِنْ كَرَاهِيَتِهِ لِذَلِكَ

உலகத்தில் நபி அவர்களை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம். நபி அவர்களுக்கு பத்தாண்டுகள் பணிவிடை செய்த அனஸ் (ரலி) அவர்கள் இதை அறிவிக்கிறார். ( நூல்: அஹ்மத் )

புகழின் உச்சத்தில் இருந்த போதும் தங்களை உயர்வாக எண்ணிக் கொள்ளாத மேன்மக்கள்....

1) உமர் ரலி அவர்கள்...

قال عمر بن الخطاب رضي الله عنه لو نادى مناد من السماء : ياأيها الناس انكم داخلون الجنة كلكم إلا رجلا واحدا لخفت أن أكون أنا هو

(الكتاب:  التخويف من النار لإبن رجب صفحة:  ١٧)

உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: "வானத்திலிருந்து ஒரு அறிவிப்பாளர்  "மக்களே! நிச்சயமாக, நீங்கள் அனைவரும் சுவர்க்கம் செல்லக்கூடியவர்களாகயிருக்கும். ஒரே ஒரு மனிதரை தவிர!" என்று அறிவிப்பு செய்தால் அந்த ஒருவர் நானாக இருப்பேனோ?என்று நான் அஞ்சுகிறேன்". ( நூல்: அத் - தக்வீஃபு மினன் நார் லிஇமாமி இப்னு ரஜப் ஹம்பலி (ரஹ்)...)

عَنْ قَتَادَةَ ، قَالَ : خَرَجَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ مِنَ الْمَسْجِدِ ، وَمَعَهُ الْجَارُودُ الْعَبْدِيُّ ، فَإِذَا بِامْرَأَةٍ بَرِزَةٍ عَلَى ظَهْرِ الطَّرِيقِ ، فَسَلَّمَ عَلَيْهَا ، فَرَدَّتْ عَلَيْهِ السَّلَامَ ، وَقَالَتْ : إِيهًا يَا عُمَرُ ، عَهِدْتُكَ وَأَنْتَ تُسَمَّى عُمَيْرًا فِي سُوقِ عُكَاظٍ ، تَرْعَى الصِّبْيَانَ بِعَصَاكَ ، فَلَمْ تَذْهَبِ الأَيَّامُ ، حَتَّى سُمِّيتَ عُمَرًا ، ثُمَّ لَمْ تَذْهَبِ الأَيَّامُ حَتَّى سُمِّيتَ أَمِيرَ الْمُؤْمِنِينَ ، فَاتَّقِ اللَّهَ فِي الرَّعِيَّةِ ، وَاعْلَمْ أَنَّهُ مَنْ خَافَ الْوَعِيدَ قَرُبَ عَلَيْهِ الْبَعِيدُ ، وَمَنْ خَافَ الْمَوْتَ خَشِيَ الْفَوْتَ ، فَقَالَ الْجَارُودُ : أَكْثَرْتِ أَيَّتُهَا الْمَرْأَةُ عَلَى أَمِيرِ الْمُؤْمِنِينَ ، فَقَالَ عُمَرُ : دَعْهَا ، أَمَا تَعْرِفُهَا ؟ هَذِهِ خَوْلَةُ بِنْتُ حَكِيمٍ الَّتِي سَمِعَ اللَّهُ قَوْلَهَا مِنْ فَوْقِ سَبْعِ سَمَاوَاتٍ ، فَعُمَرُ أَحَقُّ أَنْ يَسْمَعَ لَهَا .

( الكتاب:  موطأ مالك)

ஒரு நாள் உமர் (ரலி) அவர்கள்  ஜாரூது (ரலி) என்ற நபித்தோழருடன்  கடைவீதிக்கு சென்றார்கள். அப்போது அந்த பாதையில் வயதான பெண்மணி ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவருக்கு உமர் (ரலி) அவர்கள் ஸலாம் கூறினார்கள். அந்த வயதான பெண்மணியும் பதில் கூறினார்கள். 

பின்னர்"உமரே நில்லுங்கள் நீங்கள் (மக்கத்து கடைவீதியான)  ஸூவ்க் உக்காழில் உமைர் அழைக்கப்பட்டபோதும் சரி, நீங்கள் சிறுவர்களுடன் மல்யுத்தம் செய்தபோதும் சரி,  (அந்த நாள் முதல்)  உம்மை நான் அறிவேன்.    (சில) காலங்கள் கூட செல்லவில்லை அதற்குள் உமர் என்று கேள்விப்பட்டேன். பின்பு சில காலங்களுக்குள் கலீபா என்று கேள்விப்படுகிறேன்.

நீங்கள் குடிமக்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அறிந்து கொள்ளுங்கள்! யார் மரணத்தை அஞ்சுகிறாரோ அவர் தான் (நல்ல அமலுக்கான) வாய்ப்பு தவறிப்போவதை அஞ்சுவார்"  என்று அந்த வயதான பெண்மணி கூறினார். இதைக்கேட்டு உமர் (ரலி) அவர்கள் அழுதுவிட்டார்கள்.

ஜாரூது (ரலி) அவர்கள்  அந்த வயதான பெண்மணியை பார்த்து "கலீபாவிடம்  துணிச்சலாக நடந்து இப்படி அழவைத்து விட்டீர்களே!"  என்று கூறினார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள் அந்த வயதான பெண்மணியை விட்டு விடும்படி சைக்கினை செய்தார்கள். 

ஜாரூது ( ரலி) அவர்கள்  பேச்சை நிறுத்தியதும் உமர் (ரலி) அவர்கள் அவர்களிடம் இந்த பெண்மணியைப் பற்றி அறிவீரா? என்று வினவ, அவர்கள் தெரியாது என்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள் " இந்த பெண்மணி ஃகவ்லா பின்த் ஹகீம் (ரலி) ஆவார்கள். இவர்கள் எத்தகைய பெண்மணி என்றால் இந்த பெண்மணியின் வார்த்தையை அல்லாஹ்வே செவிமடுத்துள்ளான்.  எனவே இந்த பெண்மணியின் வார்த்தையை செவிமடுக்க  உமர் தகுதியுள்ளவர்தான்" என்று கூறி பின்வரும் வசனத்தை ( அல்குர்ஆன்: 58: 1 ) சுட்டி காட்டினார்கள்:- "(நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் - மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; (எல்லாவற்றையும்) பார்ப்பவன். ( நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ )

2) இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹ் அவர்கள்...

قال يحيى بن معين: ما رأيت مثل أحمد بن حنبل؛ صحبناه خمسين سنة ما افتخر علينا بشيء مما كان فيه من الصلاح والخير، وكان رحمه الله يقول: نحن قوم مساكين!!

யஹ்யா இப்னு முயீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "அஹ்மத் இப்னு ஹன்பல் போன்ற ஒருவரை நான் கண்டதில்லை. ஐம்பது வருடங்கள் அவருடன் நாங்கள் பழகினோம். ஆனால் அவர் கொண்டிருந்த நல்லொழுக்கம் மற்றும் நன்மைகளில் எதனையும் வைத்து அவர் எங்களிடம் பெருமை பாராட்டவில்லை, மேலும் நாங்கள் எளிய மக்கள், என்று தன்னைப் பற்றி அடிக்கடி கூறி கொள்வார்கள்.

 وقد رأينا الإمام أحمد نزل إلى سوق بغداد، فاشترى حزمةً من الحطب، وجعلها على كتفه، فلما عرفه الناس، ترك أهل المتاجر متاجرهم، واهل الدكاكين دكاكينهم، وتوقف المارة في طرقهم، يسلمون عليه، ويقولون: نحمل عنك الحطب. فهز يده، واحمر وجهه، ودمعت عيناه. وقال: نحن قوم مساكين ، لولا ستر الله لافتضحنا! (حلية الأولياء:١٨١ / ٩ ).

ஒரு தடவை இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் பக்தாத் நகரச் சந்தைக்குச் சென்று, ஒரு விறகுக்கட்டை வாங்கித் தமது தோளில் சுமந்துகொண்டு வருவதைக் கண்டோம். அப்போது அவரைக் கண்ட வியாபாரிகள், அங்காடிகளில் இருந்தவர்கள், வீதிகளில் போய்க் கொண்டிருந்தவர்கள் என அனைவரும் தமது வேலைகளை விட்டுவிட்டு ஆங்காங்கே நின்றவாறு இமாம் அவர்களுக்கு சலாம் கூறி, விறகை நாங்கள் சுமக்கிறோம்' என்று முண்டியடித்துக் கொண்டு வந்தார்கள்.

ஆனால் இமாம் அவர்கள் தமது கையால் அவர்களைத் தடுத்து, முகம் சிவந்து, கண்கள் கலங்கி, கூறினார்கள்: 'நாங்கள் எளிய மக்கள். அல்லாஹ்வின் பாதுகாப்பு மட்டும் இல்லாவிட்டால், நாங்கள் அவமானப்பட்டிருப்போம், என்று கூறி விலகிச் சென்றார்கள். ( நூல்: ஹுல்யத்துல் அவ்லியா, பாகம்: 9, பக்கம்: 181 )

இமாம் அஹ்மத் அவர்களைப் புகழ வந்த ஒரு மனிதரிடம், இமாம் அவர்கள் கூறினார்கள்: "இந்தக் கூற்றினால் நான் உன்னை வெறுக்கிறேன் என்று அல்லாஹ்வுக்குச் சாட்சி கூறுகிறேன். என் மீதிருக்கும் பாவங்களையும் குற்றங்களையும் நீ அறிந்திருந்தால், என் தலையின் மீது மண்ணைத் தூவியிருப்பாய்."

قال المروذي : قال لي أحمد : قل لعبد الوهاب : أخمل ذكرك ، فإني أنا قد بليت بالشهرة ما أبالي أن لا يراني أحدٌ ولا أراه, وإن كنتُ لأشتهي

இமாம் அவர்கள் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களிடம் கூறினார்கள்: "நான் புகழை அறியாமல் இருந்திருக்கலாமே! மக்கா மலைப் பாதைகளில் ஒன்றில் நான் மறைந்திருக்கலாமே, மக்களுக்கு என்னைத் தெரியாமல் போயிருக்குமே என்பார்கள். ( நூல்: மனாகிபு இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹ்.... )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் அழிவில் ஆழ்த்துகின்ற இந்த மூன்று தீய குணங்களில் இருந்து பாதுகாப்பானாக! ஆமீன்! ஆமீன்!ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!