நாம் காணும் இந்த
தலைமுறையை எங்கே நாம் தவற விட்டோம்?
சமீபத்திய
நாட்களில் சமூக ஊடகங்கள் வாயிலாக நமது சமூகத்தின் பெண்மணிகள் சிலரின் வீடியோக்கள்
பார்க்க நேர்ந்தது.
ஐம்பதைக் கடந்த
ஒரு முதிர்ந்த பெண்மணி ஹிஜாப் அணிந்த தமது மகளோடு அல்லது மருமகளோடு திரைப்படம்
ஒன்றை பார்த்து விட்டு வெளியே வரும் போது யூடியூப்பர் ஒருவர் கேட்கும் கேள்விக்கு
பதில் அளிக்கும் போது "இன்று வெள்ளிக்கிழமை நான் தொழாமல் வந்து
திரைப்படம்" பார்த்தேன். அதற்கு பலனாக படம் அருமையாக உள்ளது என்கிறார்.
நாற்பதைக் கடந்த
பெண் ஒருவர் எனக்கு "என் கணவர் மற்றும் என் பிள்ளைகளை விட ஒரு நடிகர் பெயர்
சொல்லி" அவரைத் தான் "ரொம்ப பிடிக்கும்" என்கிறார்.
தமிழகத்தின் ஏதோ
ஒரு பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் "ஹிஜாப் அணிந்த இளம்
பெண்கள்" சிலர் இசைக்கருவிகளுக்கு ஏற்ப பொது இடம் என்று கூட பார்க்காமல்
குத்தாட்டம் போடுகிறார்கள்.
ஆறு மாதங்களுக்கு
முன்பு கடையநல்லூரைச் சேர்ந்த வஹிதா என்ற பெண் பதிவு செய்த ரீல்ஸ் என, இது போன்று இன்னும் நிறைய காட்சிகள் சொல்லிக் கொண்டே போகலாம்.
இதை சமூக
ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டு, பகிரப்பட்டு அதற்கு கீழே
கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் நமது சமூகத்தின் "ஊடக மார்க்க
போராளிகள்" பலர் தரம் தாழ்த்தி விமர்சனம் செய்தும், நீ நரகவாசி,
உன் பெற்றோர் சரியானவர்கள் இல்லை, உன் கணவர் ஒழுக்கமில்லாதவர் என்றெல்லாம் இன்ஸ்டன்ட் ஃபத்வா வழங்கி
புளகாங்கிதம் (பெருமகிழ்ச்சி, பரவசம்) அடைகின்றனர்.
இது போன்ற
சினிமாத் தனமான ஒரு பெண் சமூகம் உருவாக யார் காரணம் என்பதை காய்தல் உவத்தல் இன்றி
(விருப்பு வெறுப்பின்றி நடுவுநிலையோடு) சீர் தூக்கிப் பார்க்க சமூகமாக நாம்
சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்.
தற்போது
முப்பத்தைந்து வயதை கடந்தவர்களும், பத்தொன்பது மற்றும்
இருபது வயதைத் தொட்டு நிற்பவர்களுமே இது போன்ற செயலில் ஈடுபடுவதை நாம் காண
முடிகிறது.
அதாவது இரண்டு
தலைமுறையினர் இந்த தடம்புரண்ட வாழ்வில் தம்மைத் தொலைத்து இஸ்லாமிய சமூகத்தையும்
கேள்விக்குறியாக்கி உள்ளனர்.
இதைப் புரிந்து
கொள்ள வேண்டுமானால் ஒரு முப்பது, முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு
முன்பு சென்று மீளாய்வு செய்ய வேண்டும்.
இந்த மீளாய்வுக்கு
முன்பாக இதற்கு முழு முதற் குற்றவாளிகள் ஒரு சமூகமாக நாம் தான் பொறுப்பேற்றுக்
கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை பின்வரும் நபிமொழி நிறுவுவதை
அவதானிக்க முடிகிறது.
حدثنا
الْقَاسِمُ بْنُ زَكَرِيَّا ، وَأَبُو عَرُوبَةَ ، وَعَبْدَةُ ، قَالُوا حدثنا
بُنْدَارٌ ، قال حدثنا غُنْدَرٌ ، قال حدثنا شُعْبَةُ بْنُ الْحَجَّاجِ ، عَنْ
أَبِي بِشْرٍ قَالَ سَمِعْتُ عَبَّادَ بْنَ شُرَحْبِيلَ ، رَجُلٌ مِنْ بَنِي
عَسْبٍ قَالَ : أَصَابَنَا مَجَاعَةٌ ، فَأَتَيْتُ الْمَدِينَةَ ، فَدَخَلْتُ
حَائِطًا مِنْ حِيطَانِهَا ، فَأَخَذْتُ سُنْبُلًا فَفَرَكْتُهُ وَأَكَلْتُ مِنْهُ
، وَجَعَلْتُ مِنْهُ فِي ثَوْبِي قَالَ : فَجَاءَ صَاحِبُ الْحَائِطِ ،
فَضَرَبَنِي وَأَخَذَ ثَوْبِي ، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ فَأَخْبَرْتُهُ ، فَدَعَا صَاحِبَ الْحَائِطِ فَقَالَ مَا عَلَّمْتَهُ
إِذْ كَانَ جَاهِلًا ، وَلَا أَطْعَمْتَهُ إِذْ كَانَ سَاغِبًا ، أَوْ جَائِعًا
قَالَ : فَرَدَّ عَلَيَّ الثَّوْبَ ، وَأَمَرَ لِي النَّبيُّ صلَّى اللَّهُ عليهِ
وسلَّمَ بِوَسْقٍ أَوْ بِنِصْفِ وَسْقٍ
பஸராவில் ஏற்பட்ட
ஒரு பஞ்சத்தை தொடர்ந்து பனீ அஸ்ப் அல்லது பனீ غகப்ர் கோத்திரத்தைச்
சேர்ந்த அப்பாத் இப்னு ஷுரஹ்பீல் (ரலி) அவர்கள் தமது பெரிய தந்தையுடன் மதீனாவிற்கு
வந்தார்கள். அதன் பின்னர் நடந்த சம்பவத்தை அவர்களே சொல்கிறார்கள். நாங்கள் வசிக்கும்
பகுதியில் பஞ்சம் ஏற்பட்டது. நான் மதீனாவிற்கு வந்தேன். மதீனாவில் உள்ள
தோட்டங்களில் ஒரு தோட்டத்தில் நுழைந்தேன். (கோதுமை) கதிரை எடுத்து அதன் தோல்
நீக்கி சாப்பிட்டேன். பின்னர் சில கதிர்களை என் ஆடையில் போட்டுக் கொண்டேன்.
அப்போது அங்கு வந்த தோட்டத்தின் உரிமையாளர் என்னை அடித்து என் ஆடையை கழற்றி
கொண்டார். பிறகு நான் நபி ﷺ
அவர்களிடம் வந்து இது குறித்து முறையிட்டேன். தோட்டத்தின் உரிமையாளரை வரவழைத்த நபி
ﷺ அவர்கள், அவரிடம் "அவர்
(தோட்டத்தில் தானிய கதிர்களை எடுத்து சாப்பிட்டு, தன் ஆடையில் போட்டுக் கொண்டாரே அதன் விஷயத்தில்) மார்க்க சட்ட நடைமுறைகளை
தெரியாதவராக இருந்திருந்தால் அது பற்றி சொல்லி இருக்க வேண்டும். மேலும், (அவரின் நிலைகளை கேட்டறிந்து) அவருக்கு தானிய கதிர்களை உண்பதற்கு கொடுத்து
இருக்க வேண்டும்" என்று கண்டிப்புடன் கூறிவிட்டு, என் ஆடையை எனக்கு திருப்பி தருமாறும் ஒரு வஸக் அல்லது அரை வஸக் அளவுள்ள கோதுமை
தானியங்களை வழங்குமாறும் உத்தரவிட்டார்கள். ( நூல்: இப்னுமாஜா, நஸாயீ,
அஹ்மத் )
இந்த விவகாரத்தில்
நபி ﷺ அவர்கள் தவறு செய்து விட்ட அப்பாத் இப்னு ஷுரஹ்பீல்
(ரலி) அவர்களை கண்டிக்காமல் தோட்டத்தின் உரிமையாளரை அழைத்து கண்டித்ததற்கு காரணம்
இருக்கிறது.
ஏனெனில், நபி ﷺ அவர்கள் தோட்டத்தில் பசியை போக்க
பழங்களை சாப்பிட,
கால்நடைகளின் பாலை அருந்திட அனுமதி வழங்கியதோடு சில
நிபந்தனைகளை (தோட்டத்தின் உரிமையாளர் அனுமதி பெற்று, தோட்டத்தின் உரிமையாளர் தோட்டத்தில் இல்லாத போது மூன்று முறை சப்தமிட்டு
அழைத்து) கூறி அதற்கு அனுமதி வழங்கி இருந்தார்கள். பின்னர் நபி ﷺ அவர்கள் ஆடையில் எடுத்துச் செல்வதையும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் எடுத்துச் செல்வதையும், பெறுமதியான அளவுக்குள்ள தானியங்கள், பழங்களை எடுத்துச்
செல்வதை தடை செய்தார்கள்.
روى
الترمذي (1287) عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( مَنْ دَخَلَ حَائِطًا فَلْيَأْكُلْ وَلا يَتَّخِذْ
خُبْنَةً ) ورواه ابن ماجه (2301) بلفظ : ( إِذَا مَرَّ أَحَدُكُمْ بِحَائِطٍ
فَلْيَأْكُلْ وَلا يَتَّخِذْ خُبْنَةً ) والحديث صححه الألباني في صحيح الترمذي
وابن ماجه .
அப்துல்லாஹ் இப்னு
உமர் ரலி அவர்கள் அறிவித்தார்கள்:- "ஒருவர் வேறொருவர் தோட்டத்தில் நுழைந்து
அங்குள்ளதை (தானியம் பழம்) சாப்பிடலாம். ஆனால், ஆடையில் எடுத்துச் செல்ல
வேண்டாம்" என்று நபி ﷺ
அவர்கள் கூறினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு
உமர் ரலி அவர்கள் அறிவித்தார்கள்:- "உங்களில் ஒருவர் வேறொருவர் தோட்டத்தை
கடந்து சென்றால் அந்த நுழைந்து அங்குள்ளதை (தானியம் பழம்) சாப்பிடலாம். ஆனால், ஆடையில் எடுத்துச் செல்ல வேண்டாம்" என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். ( நூல்: இப்னுமாஜா )
நபி ﷺ அவர்கள் தடை செய்த இந்த விவரம் அப்பாத் இப்னு ஷுரஹ்பீல்
ரலி அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். மேலும், அவர் வெளியூர் வாசியாக
இருப்பதால் இது குறித்து அவர் அறியாமல் இருக்கலாம் எனவே, அவரின் தவறை அவருக்கு உணர்த்தி, அவரின் அறியாமையை நீக்க
தோட்டத்தின் உரிமையாளர் முயற்சி செய்திருக்க வேண்டும் என்பதை நபி ﷺ அவர்கள் மேற்கண்ட நிகழ்வின் மூலம் நமக்கு
உணர்த்துகின்றார்கள்.
இது போன்றே நமது
சமூக பெண்கள் சிலரின் தவறான நடவடிக்கைகள் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாவதை
பார்த்து பொங்கும் நாம் இந்த தவறான நடத்தைகள், செயல்பாடுகள் குறித்து
எவ்வளவு தூரம் எச்சரிக்கை செய்துள்ளோம் என்பதை சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம்.
இன்று நம் சமூகம்
சார்ந்த பல்வேறு மார்க்க நிகழ்வுகளில் அதிகமாக கலந்து கொள்பவர்கள் பெண்கள் தான்.
ஆனால், அவர்களுக்கு தேவையான மார்க்க வழிகாட்டுதலை நாம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றோமா? என்றால் மிக மிக குறைவு தான்.
பெண்கள் பயான்
என்றாலே குழந்தை வளர்ப்பு மற்றும் கணவனின் உரிமைகள் மற்றும் கடமைகள், ஹிஜாப் எனும் தலைப்பில் தான் பெரும்பாலும் உரை நிகழ்த்தப்படுகிறது.
இதைத் தாண்டி
ஹலால் ஹராம் மற்றும் பொதுத் தலைப்புகளில் அவ்வளவாக உரை நிகழ்த்தப்படுவதில்லை. இது
பயான் நடைபெறும் மஹல்லாக்களின் நிலை. தமிழ்நாட்டில் பல மஹல்லாக்களில் இன்று வரை
பெண்களுக்கென பயானே நடை பெறுவதில்லை. அங்குள்ள பெண்களின் நிலையை என்ன சொல்ல?
எனவே, பெண்களுக்கான மார்க்க வழிகாட்டுதலை நம் மஹல்லாக்களில் மேலும் நாம் தீவிரப்படுத்த
வேண்டிய சூழலில் இருக்கின்றோம்.
நாம் காணும் இந்த தலைமுறையை எங்கே நாம் தவற விட்டோம்?
நம் சமூகம் உலகக்
கல்வியில் மிகத் தீவிரமாக ஈடுபாடு கொள்ள ஆரம்பித்து ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் ஆகி
விட்டது.
முப்பது
ஆண்டுகளுக்கு முன்பு உலகக் கல்வியில் இந்த சமூகம் கவனம் செலுத்த ஆரம்பித்த போது
பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆண்டு இறுதியில் நடைபெறும் கல்ச்சுரல்ஸ் புரோகிராம் (Culturals program) கலைநிகழ்ச்சி களில் ஆங்காங்கே ஓரிருவர் ஆடல் பாடல் போன்றவைகளில் பங்கு பெற
ஆரம்பித்தனர். பின்நாளில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பெருமளவில் பங்கு பெறும்
சமூகமாக நம் சமூகத்து பிள்ளைகள் மாறிப் போனார்கள்.
சினிமா மீதான
மோகம் இந்த சமூகத்திற்கு அதிகரிக்க இதுவே அடித்தளமாக அமைந்தது என்றால் அது
மிகையல்ல.
இதில் பெரிய
கொடுமை என்னவென்றால் சில முஸ்லிம் பெயர் தாங்கி பள்ளிக்கூடங்கள் இது போன்ற கலை
நிகழ்ச்சிகளை ஆரவாரமாக நடத்தி நம் சமூகப் பிள்ளைகளை வழி கெடுத்தனர்.
முதலில் நாம் நம்
சமூகத்தின் பெண்மணிகளை இங்கே தான் தவற விட்டோம்.
பெரிய அளவில்
அவர்களைத் தடுக்க நாம் முயற்சி மேற்கொள்ள வில்லை.
இதன் விளைவாக
இன்று பொதுவெளியிலும்,
திருமண நிகழ்ச்சிகளிலும் வெட்கமில்லாமல் டான்ஸ் ஆடும்
பெண்கள் கூட்டம் இன்று பெருகி வருகிறது.
இரண்டாவதாக, மஹல்லா கட்டமைப்பில்,
வளர்ச்சியில் மஹல்லா நிர்வாகங்கள் திருமண மண்டபம்
கட்டுவதிலும்,
கடைகள் கட்டுவதிலும் காட்டிய ஆர்வத்தை ஊரின் மஹல்லாவின்
தன்வந்தர்களோடு இணைந்து ஒரு பள்ளிக்கூடம் கட்டுவதில் ஆர்வம் காட்டவில்லை.
இதைக்
குறிப்பிடுவதன் காரணம் என்னவென்றால் இன்று உலகக் கல்வியில் தரத்தை உறுதிப்படுத்த
பெற்றோர்கள் தேர்ந்தெடுப்பது மாற்றாரின் கல்விக் கூடங்களைத் தான்.
தொழ ஏவுங்கள்
என்று நபி ﷺ
அவர்கள் சொன்ன ஏழு வயதைத் தொடும் போது ஒரு குழந்தை இரண்டாம் வகுப்பு படிக்க
ஆரம்பிக்கிறது. பண்ணி ரெண்டாம் வகுப்பு படித்து முடிக்கும் போது வயது 17.
இந்த பதினோரு
ஆண்டுகளில் அவர்களில் சிலர் காலை மதரஸாவிற்கும், சிலர் மாலை மதரஸாவிற்கும் இன்னும் சிலர் மொத்தமாக மதரஸாவிற்கே முழுக்கு
போட்டுவிட்டனர்.
பதினோரு
ஆண்டுகாலம் அடிப்படை மார்க்க அறிவை பெறுவதில் இருந்து அவர்கள் தூரமாகிப்
போனார்கள்.
நாம் நம்
சமூகத்தின் பெண்மணிகளை இரண்டாவதாக இங்கே தான் தவற விட்டோம்.
அடுத்து
கல்லூரிக்காலம் 17
வயது முதல் 20 வயது வரை (மூன்று
ஆண்டுகள் கல்வி) 17
வயது முதல் 22 வயது வரை (ஐந்து
ஆண்டுகள் கல்வி)
மூன்று அல்லது
ஐந்து ஆண்டுகாலம் உயர் மார்க்க அறிவை பெறுவதில் இருந்து அவர்கள் தூரமாகிப்
போனார்கள்.
நாம் நம்
சமூகத்தின் பெண்மணிகளை மூன்றாவதாக இங்கே தான் தவற விட்டோம்.
மொத்தத்தில்
பதினான்கு ஆண்டுகளாக அல்லது பதினாறு ஆண்டுகளாக அடிப்படை மற்றும் உயர் மார்க்க
அறிவை பெறுவதில் இருந்து தூரமாகிப் போன ஒரு சமூகத்திடம் நாம் என்ன விளைவுகளை எதிர்
பார்க்க முடியும்?
இங்கே பெற்றோர்கள்
சமரசம் செய்து கொண்டார்கள். மஹல்லா நிர்வாகிகள் சமரசம் செய்து கொண்டார்கள்.
மார்க்க வழிகாட்டிகளான ஆலிம்களும் சமரசம் செய்து கொண்டார்கள். ஒரு சமூகமாக நாம்
அனைவருமே செய்து கொண்ட சமரசத்தால் இன்று நாம் இத்தகைய காட்சிகளை காண
வேண்டியுள்ளது.
எனவே, போர்க்கால அடிப்படையில் ஒரு சமூகமாக நாம் இயங்கி பெண்களிடையே பாரிய அளவிலான
மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்வோம்.
முதற் கட்டமாக பெண்களுக்கான மார்க்க அமர்வுகளை, வகுப்புகளை,
பயானோடு சுருக்கிக் கொள்ளாமல் கலந்துரையாடல் மற்றும்
கருத்தரங்குகள்,
கேள்வி & பதில் நிகழ்ச்சி என
அவர்களுக்கான தளங்களை விரிவு படுத்த சமூகமாக நாம் முன் வர வேண்டும்.
عن أبي
سعيد الخُدْرِي رضي الله عنه قال: جاءت امرأة إلى رسول الله صلى الله عليه وسلم
فقالت: يا رسول الله، ذهب الرجال بِحَدِيثِكَ، فاجْعَل لنَا من نَفْسِك يومًا
نَأتِيكَ فيه تُعَلِّمُنَا مما عَلَّمَكَ الله، قال: «اجْتَمِعْنَ يَوَم كَذَا
وكَذَا» فَاجْتَمَعْنَ، فأتَاهُنَّ النبي صلى الله عليه وسلم فَعَلَّمَهُنَّ مما
عَلَّمَهُ الله، ثم قال: «ما مِنْكُنَّ من امرأة تُقَدِّمُ ثَلاَثَة من الولد إلا
كانوا حِجَابًا من النَّارِ» فقالت امرأة: واثنين؟ فقال رسول الله صلى الله عليه
وسلم : «واثنين». [صحيح] - [متفق عليه]
அபூ ஸயீத் (ரலி)
அறிவித்தார்கள்:-(நாங்கள் உங்களை அணுகி மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்)
ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார். எனவே, தாங்களாகவே
எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்' என்று பெண்கள் நபி ﷺ அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். நபி ﷺ அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (மார்க்கக்
கட்டளைகளை) ஏவினார்கள். நபி ﷺ
அவர்கள் தங்களின் அறிவுரையில்' உங்களில் ஒரு பெண் தன்
குழந்தைகளில் மூவரை (மரணத்தின் மூலம்) இழந்துவிட்டாள் என்றால் அந்தக் குழந்தைகள்
அப்பெண்ணை நரகத்துக்குச் செல்லாமல் தடுத்துவிடக் கூடியவர்களாக இருப்பார்கள்' என்று கூறினார்கள். அப்போது ஒரு பெண், 'இரண்டு குழந்தைகளை
ஒருத்தி இழந்துவிட்டால்?'
என்று கேட்டதற்கு நபி ﷺ அவர்கள், 'இரண்டு, குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டாலும் தான்' என்று கூறினார்கள்'' ( நூல்: புகாரி )
இரண்டாவதாக, ஈமானிய வாழ்க்கையில் முழுமையாக தம்மை இணைத்துக் கொண்ட குர்ஆன் கூறும்
மங்கையர்கள்,
இஸ்லாமிய வரலாற்றில் வாகாய் வாழ்ந்த மங்கையர்களின் வாழ்க்கை
வரலாற்றை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
وَضَرَبَ
اللّٰهُ مَثَلًا لِّلَّذِیْنَ اٰمَنُوا امْرَاَتَ فِرْعَوْنَ اِذْ قَالَتْ رَبِّ
ابْنِ لِیْ عِنْدَكَ بَیْتًا فِی الْجَنَّةِ وَنَجِّنِیْ مِنْ فِرْعَوْنَ
وَعَمَلِهٖ وَنَجِّنِیْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟
மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான்.
அவர் “இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு
வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார
சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
فَجَآءَتْهُ
اِحْدٰىهُمَا تَمْشِیْ عَلَی اسْتِحْیَآءٍ ؗ قَالَتْ اِنَّ اَبِیْ یَدْعُوْكَ لِیَجْزِیَكَ اَجْرَ مَا سَقَیْتَ
لَنَا ؕ فَلَمَّا جَآءَهٗ وَقَصَّ عَلَیْهِ الْقَصَصَ ۙ قَالَ لَا تَخَفْ ۫ۥ
نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟
(சிறிது நேரத்திற்குப்)
பிறகு அவ்விரு பெண்களில் ஒருவர் நாணத்துடன் நடந்து மூஸாவின் முன் வந்து; “எங்களுக்காக நீங்கள் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக
எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்” என்று கூறினார்; இவ்வாறாக மூஸா அவரிடம் வந்தபோது தம் வரலாற்றை எடுத்துச் சொன்னார்; அதற்கவர்;
“பயப்படாதீர்! அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீர்
தப்பித்துவிட்டீர்”
என்று கூறினார். ( அல்குர்ஆன்: 28: 25 )
وَاذْكُرْ
فِی الْكِتٰبِ مَرْیَمَ اِذِ انْتَبَذَتْ مِنْ اَهْلِهَا مَكَانًا شَرْقِیًّا ۟
(நபியே!) இவ்வேதத்தில்
மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக; அவர் தம் குடும்பத்தினரை
விட்டும் நீங்கி,
கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது,
فَاتَّخَذَتْ
مِنْ دُوْنِهِمْ حِجَابًا ۪فَاَرْسَلْنَاۤ اِلَیْهَا رُوْحَنَا فَتَمَثَّلَ لَهَا
بَشَرًا سَوِیًّا
அவர் (தம்மை)
அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார். ( அல்குர்ஆன்: 19: 16, 17 )
قَدْ
سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّتِیْ تُجَادِلُكَ فِیْ زَوْجِهَا وَتَشْتَكِیْۤ اِلَی
اللّٰهِ وَاللّٰهُ یَسْمَعُ تَحَاوُرَكُمَا اِنَّ اللّٰهَ سَمِیْع بَصِیْرٌ
(நபியே!) எவள் தன் கணவனைப்
பற்றி உம்மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடமும்
முறையிட்டுக் கொண்டாளோ,
அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக்
கொண்டான் - மேலும்,
அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான்.
நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; (எல்லாவற்றையும்)
பார்ப்பவன்.
( அல்குர்ஆன்: 58:
1 )
ஒரு முஸ்லிம் உடைய
வாழ்வில் மிக பிரதானமான அம்சங்கள் இரண்டாகும். ஒன்று தீனுடைய அடிப்படையில் வாழ்கிற
வாழ்க்கை,
இரண்டாவது தீனுக்காக வாழ்கிற வாழ்க்கை.
மூன்றாவதாக, தீனுடைய அடிப்படையில் வாழ்கிற வாழ்க்கையின் மகத்துவத்தை அவர்களுக்கு உணர்த்த
வேண்டும்.
நமது நபி ﷺ அவர்களின் அன்பு மகளார் ஜைனப் (ரலி) அவர்கள் தீனுடைய
அடிப்படையில் இந்த உலகில் வாழ்ந்த வாழ்க்கை அவ்வளவு மகத்தானது.
அன்னை கதீஜா ரலி
அவர்களின் சகோதரி ஹாலா பின்த் குவைலித் அவர்களின் மகனார் அபுல் ஆஸ் அவர்களுக்கு
நபி ﷺ அவர்கள் திருமணம் செய்து வைத்தார்கள். இந்த திருமணம்
நபி ﷺ அவர்கள் நபியாக அனுப்பப்படுவதற்கு முன்பே நடத்தி
வைக்கப்பட்டது.
ஹாலா பின்த்
குவைலித் அவர்களின் மகனாரைத் தேர்ந்தெடுக்க மூன்று வலிமையான காரணங்கள் இருந்தது.
ஒன்று அவர் மிகவும் நல்லவர் நேர்மையானவர், இரண்டாவது அவர் உறவினர், மூன்றாவது அவர் நல்ல திறமையான வியாபாரி.
திருமணம் முடிந்து
சில மாதங்களுக்குப் பின்னர் அபுல் ஆஸ் வியாபார நிமித்தமாக வெளிநாடு செல்கிறார்.
இந்த இடைப்பட்ட
காலத்தில் நபி ﷺ
அவர்களுக்கு நபித்துவம் வழங்கப்படுகிறது. நபி ﷺ அவர்கள் நபியாக மக்காவில் ஏகத்துவ பிரச்சாரம் செய்து
வருகிறார்கள்.
வெளிநாட்டில்
இருந்து திரும்பி வந்த அபுல் ஆஸ் அவர்களுக்கு இந்த விபரங்கள் ஊருக்கு வரும்
வழியில் கிடைக்கிறது.
வீட்டிற்கு வந்த
அபுல் ஆஸ் அவர்களிடம் ஜைனப் ரலி அவர்கள் தம் தந்தை நபி என்றும் தம் தந்தையை நபியாக
ஏற்றுக் கொண்டு தாம் முஸ்லிமாக வாழ்வதாகவும் கூறுகின்றார்கள்.
ஊரும் சொந்த
உறவுகளும் எதிர்க்கும் ஒருவராக தமது மாமனார் நபி ﷺ அவர்கள் இருப்பதும், தமது மனைவி நபி ﷺ அவர்களை நபியாக ஏற்றுக் கொண்டு வாழ்வதும் அபுல் ஆஸ்
க்கு வியப்பை ஏற்படுத்தியது. எனினும் "நான் ஒரு பெண்ணின் சொல் கேட்டு மதம்
மாறி விட்டதாக ஊரும் உறவுகளும் பேசுவதை தாம் விரும்பவில்லை என்று கூறி நபி ﷺ அவர்களை ஈமான் கொள்ள மறுத்து விட்டார் அபுல் ஆஸ்.
இந்த நிலையில் நபி
ﷺ அவர்கள் ஹிஜ்ரத் பயணம் மேற்கொள்ள அல்லாஹ்வின் உத்தரவு
வர ஹிஜ்ரத் பயணம் மேற்கொள்ளும் ஆயத்த பணிகளில் நபி ﷺ அவர்கள் ஈடுபட்டு கொண்டிருந்த நேரத்தில் ஜைனப் ரலி
அவர்கள் நபி ﷺ அவர்களிடம் வந்து தந்தையே! நான் என்ன
செய்ய வேண்டும்?
என்று கேட்டு நின்றார்கள்.
அப்போது நபி ﷺ அவர்கள் நீ உன் கணவரோடு இங்கேயே இருந்து
விடு என்கிறார்கள் நபி ﷺ அவர்கள். அப்போது வரை திருமணம் குறித்த விரிவான
சட்டங்கள் எதுவும் நபி ﷺ அவர்களுக்கு அல்குர்ஆன் வாயிலாக வழிகாட்டப்பட வில்லை.
இதற்கிடையில்
ஜைனப் ரலி அவர்கள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்கள். அதற்கு உமாமா என்றும்
பெயரிட்டார்கள்.
ஹிஜ்ரி இரண்டாம்
ஆண்டு பத்ர் யுத்தம் நடைபெறுகிறது. அந்த யுத்தத்தில் இஸ்லாமிய அணியில் தந்தை நபி ﷺ அவர்கள், எதிரணியில் கணவர் அபுல் ஆஸ் எப்படி இருந்திருக்கும் ஜைனப் ரலி அவர்களின்
மனநிலை?.
யுத்தம் நடைபெற்று
முடிந்த போது கைதிகளில் ஒருவராக அபுல் ஆஸ் இருக்கிறார்.
கைதிகள் விடுதலை
விவகாரத்தில் நபி ﷺ அவர்கள் சிலரிடம் தண்டப்பணம் பெற்றுக் கொண்டு விடுதலை
செய்தார்கள். சிலரை மதீனா அன்ஸாரிகளின் சிறார்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த பிறகு
விடுதலை செய்தார்கள்.
حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِىُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ
عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ عَنْ يَحْيَى بْنِ عَبَّادٍ عَنْ أَبِيهِ عَبَّادِ
بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ قَالَتْ لَمَّا بَعَثَ
أَهْلُ مَكَّةَ فِى فِدَاءِ أَسْرَاهُمْ بَعَثَتْ زَيْنَبُ فِى فِدَاءِ أَبِى الْعَاصِ
بِمَالٍ وَبَعَثَتْ فِيهِ بِقِلاَدَةٍ لَهَا كَانَتْ عِنْدَ خَدِيجَةَ
أَدْخَلَتْهَا بِهَا عَلَى أَبِى الْعَاصِ. قَالَتْ فَلَمَّا رَآهَا رَسُولُ
اللَّهِ -صلى الله عليه وسلم- رَقَّ لَهَا رِقَّةً شَدِيدَةً وَقَالَ « إِنْ
رَأَيْتُمْ أَنْ تُطْلِقُوا لَهَا أَسِيرَهَا وَتَرُدُّوا عَلَيْهَا الَّذِى لَهَا
». فَقَالُوا نَعَمْ. وَكَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- أَخَذَ
عَلَيْهِ أَوْ وَعَدَهُ أَنْ يُخَلِّىَ سَبِيلَ زَيْنَبَ إِلَيْهِ وَبَعَثَ
رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- زَيْدَ بْنَ حَارِثَةَ وَرَجُلاً مِنَ
الأَنْصَارِ فَقَالَ « كُونَا بِبَطْنِ يَأْجِجَ حَتَّى تَمُرَّ بِكُمَا زَيْنَبُ
فَتَصْحَبَاهَا حَتَّى تَأْتِيَا بِهَا
இந்த தகவலை
கேட்டறிந்த ஜைனப் ரலி அவர்கள் தமது கொளுந்தனார் ஷகீக் அவர்களிடம் தங்க (ஆபரணம்)
மாலை ஒன்றை கொடுத்தனுப்பி இதை தண்டமாக கட்டி தம் கணவரை விடுதலை செய்து வருமாறு
அனுப்பி வைத்தார்.
ஜைனப் (ரலி)
அவர்களின் மாலையைப் பார்த்த நபி ﷺ அவர்களது உள்ளம் இரங்கியது. தங்களது தோழர்களிடம் அபுல்
ஆஸை ஈட்டுத் தொகையின்றி விடுதலையிட அனுமதி கேட்டார்கள். தோழர்களும் அனுமதி தர ‘‘மகள் ஜைனப் (ரலி) அவர்களை மதீனாவிற்குஅனுப்பி வைக்க வேண்டும்'' என்ற நிபந்தனையுடன் அவரை விடுதலை செய்தார்கள்.
அவர் மக்காசென்ற
பிறகு ஜைனப் (ரலி) அவர்களை மதீனா அனுப்பினார். ஜைனப் (ரலி) அவர்களைஅழைத்து வர ஜைது
இப்னு ஹாரிஸாவையும் மற்றும் ஒரு அன்சாரி தோழரையும் நபி ﷺ அனுப்பினார்கள். அவர்களிடம் நீங்கள் ‘‘பத்தன் யஃஜிஜ்" என்ற இடத்தில் தங்கியிருங்கள். ஜைனப் ரலி அந்த இடத்தை
அடைந்தவுடன் அங்கிருந்து அவரை அழைத்து வாருங்கள்'' என்று கூறினார்கள். அந்த இருவரும் அவ்வாறே சென்று ஜைனப் (ரலி)அவர்களை அழைத்து
வந்தார்கள்.
ஜைனப் (ரலி)
அவர்கள் மக்காவிலிருந்து மதீனா வந்த வரலாறு மிக துயரமான நிகழ்ச்சியாகும்.
இப்பயணத்தில் அவர்களுக்குஏற்பட்ட இன்னல் கேட்போரின் உள்ளங்களை உருக்கிவிடும்.
ஆனாலும் மிகுந்த சிரமத்திற்கு பிறகு மதீனா வந்தார்கள்.
أقام أبو العاص في مكه بعد فراق زوجته زمنا، حتى إذا كان قبيل
الفتح بقليل، خرج إلى الشام في تجارة له، فلما قفل راجعا إلى مكة و معه عيره التي
بلغت مئة بعير، و رجاله الذين نيفوا على مئة و سبعين رجلا، برزت له سرية من سرايا
الرسول صلوات الله و سلامه عليه قريبا من المدينة، فأخذت العير و أسرت الرجال، و
لكن أبا العاص أفلت منها فلم تظفر به.
فلما
أرخى الليل سدوله و استتر أبو العاص بجنح الظلام، و دخل المدينه خائفا يترقب، و
مضى حتى وصل إلى زينب، و استجار بها فأجارته...
و لما
خرج الرسول صلوات الله و سلامه عليه لصلاة الفجر، و استوى قائما في المحراب، و كبر
للإحرام و كبر الناس بتكبيره، صرخت زينب من صفة النساء و قالت:
"أيها الناس، أنا زينب بنت محمد، و قد أجرت أبا العاص فأجيروه.
فلما سلم النبي – صلى الله عليه و سلم – من الصلاة، التفت إلى الناس و قال:
(هل سمعتم ما سمعت؟!).
قالوا:
نعم يا رسول الله.
قال: (و
الذي نفسي بيده ما علمت بشيء من ذلك حتى سمعت ما سمعتموه، و إنه يجير من المسلمين
أدناهم)، ثم انصرف إلى بيته و قال لابنته:
(أكرمي مثوى أبي العاص، و اعلمي أنك لا تحلين له).
ثم دعا
رجال السرية التي أخذت العير و أسرت الرجال و قال لهم:
(إن هذا الرجل منا حيث قد علمتم، و قد أخذتم ماله، فإن تحسنوا و
تردوا عليه الذي له، كان ما نحب، و إن أبيتم فهو فيء الله الذي أفاء عليكم، و أنتم
به أحق).
فقالوا:
"بل نرد عليه ماله يا رسول الله".
مضى أبو
العاص بالعير و ما عليها إلى مكة فلما بلغها أدى لكل ذي حق حقه، ثم قال:
"يا معشر قريش هل بقي لأحد منكم عندي مال لم يأخذه؟."
قالوا:
"لا... و جزاك الله عنا خيرا، فقد وجدناك وفيا كريما."
قال:
"أما و إني قد وفيت لكم حقوقكم، فأنا أشهد أن لا إله إلا الله و أن محمدا
رسول الله...
ثم خرج
حتى قدم على رسول الله صلى الله عليه و سلم فأكرم وفادته و رد إليه زوجته،
வருடங்கள்
உருண்டோடியது. ஃபத்ஹ் மக்காவின் வெற்றிக்கு சில மாதங்களுக்கு முன்னதாக ஷாமில்
இருந்து பெரும் வியாபாரப் பொருளோடு ஊர் திரும்பிக் கொண்டிருந்த அபுல் ஆஸின்
வியாபாரக் கூட்டம் நபித்தோழர்களால் பிடிக்கப்பட்டது.
வியாபாரப்
பொருட்களை அங்கேயே விட்டு,
விட்டு மதீனாவில் தஞ்சமானார் அபுல் ஆஸ், அதுவும் அவர் அடைக்கலம் கேட்டு நின்றது ஜைனப் (ரலி) அவர்களிடம்.
அவர் அடைக்கலம்
கேட்டு நின்ற நேரம் அதிகாலை சுப்ஹுத்தொழுகையின் நேரம், மாநபி ﷺ அவர்கள் வீட்டில் இல்லை, மஸ்ஜிதுன் நபவீக்கு ஓடி வருகிறார் ஜைனப் (ரலி) அவர்கள். அப்போது, அங்கே சுப்ஹுத் தொழுகையின் ஜமாஅத் நடந்து கொண்டிருந்தது.
வந்தவர்கள்
கொஞ்சமும் தாமதிக்காமல் மஸ்ஜிதுன் நபவீயின் வாசலில் நின்றவாறு “நான் நபி ﷺ
அவர்களின் மகள் ஜைனப் ஆவேன். நான் அபுல் ஆஸ் க்கு அடைக்கலம் தந்துள்ளேன்” என்று உரக்கக் கூறி விட்டு சென்று விட்டார்கள்.
தொழுகையை முடித்த
மாநபி ﷺ அவர்கள் மக்களை நோக்கி அமர்ந்தவாறு “தொழுகையில் நிற்கும் போது நான் கேட்டவற்றை நீங்களும் கேட்டீர்களா? என்று வினவியதற்கு,
மக்கள் “ஆம்” என்றார்கள்.
பின்னர், மக்களை நோக்கி என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! இந்த
விஷயத்தை நீங்கள் எப்போது கேட்டீர்களோ அப்போது தான் நானும் கேட்டேன்” என்று கூறிவிட்டு விடைபெற்று நேராக மகள் ஜைனப் (ரலி) அவர்களின் வீட்டிற்கு
வந்தார்கள்.
வந்த பெருமானார் ﷺ அவர்கள் மகள் ஜைனப் (ரலி) அவர்களை நோக்கி “எனதருமை மகளே! அவரை (அபுல் ஆஸை) கண்ணியமான முறையில் கவனித்துக் கொள்! அவரோடு
தனிமையில் இருப்பதை நீ தவிர்த்துக் கொள்! இப்போது நீ அவருக்கு அனுமதிக்கப்பட்ட
உறவு முறையில் உள்ளவளாக இல்லை! என்று கூறினார்கள்.
அப்போது, ஜைனப் (ரலி) அவர்கள் “அபுல் ஆஸ் என்னைத் தேடி வரவில்லை, மாறாக, அவரின் பொருளைத் தேடி அவர் வந்திருக்கின்றார்” என்றார்கள்.
சிறிது நேரத்தில், அவரின் வியாபாரப் பொருட்களை பிடித்த நபித்தோழர்கள் மதீனா வந்தடைந்தனர்.
மாநபி ﷺ அவர்கள் மக்களை ஒன்று திரட்டி, மக்களின் முன்பாக அபுல் ஆஸையும், அவரின் வியாரப்
பொருட்களையும் வைத்து “இதோ! இவரை நீங்களும்,
நானும் நன்கறிவோம்! இவரின் வியாபாரப் பொருட்களை அல்லாஹ்
உங்களின் கரங்களில் தந்திருக்கின்றான். அது உங்களுக்கு உரியது. எனினும், நான் அபுல் ஆஸ் விஷயத்தில் மனித நேயத்தோடு நீங்கள் நடந்து கொள்ள வேண்டும் என
விரும்புகின்றேன்! மேலும்,
எனவே, நீங்கள் விரும்பினால்
அவரின் வியாபாரப் பொருட்களை அவரிடம் திருப்பிக் கொடுக்கலாம். நீங்கள் கொடுக்க
மறுத்தாலும் அதற்கானத் தகுதியும் உங்களுக்கு இருக்கின்றது!” என்று கூறினார்கள்.
அது கேட்ட மக்கள் “அல்லாஹ்வின் தூதர் ﷺ
அவர்களே! நாங்கள் அவரின் பொருட்களை அவரிடமே திருப்பிக் கொடுத்து விடுகின்றோம்” என்று கூறி திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.
வியாபாரப் பொருட்கள்
மீண்டும் கைக்கு கிடைத்த மகிழ்ச்சியோடு அங்கிருந்து விடைபெற்ற அபுல் ஆஸ் நேராக
மக்கா வந்து,
வியாபாரப் பொருட்களுக்கு உரிய அனைவர்களிடமும் அவர்களின்
பொருட்களை ஒப்படைத்தார்கள்.
பின்னர்
அவர்களையும்,
குறைஷிகளையும் ஓரிடத்தில் ஒன்று திரட்டி “குறைஷி குல மக்களே! என்னோடு வியாபாரத்தில் கூட்டாகியிருந்த எவருக்கும் நான்
உரிய பங்கை கொடுக்காமல் மோசடி செய்திருக்கின்றேனா? என்று கேட்டார்கள்.
அதற்கு அம்மக்கள் ”அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்கட்டும்! உம்மை நாம் விபரம் தெரிந்த நாள் முதலாக
வாய்மையாளராகவும்,
நேர்மையாளராகவும், கண்ணியமானவராகவுமே
கண்டிருக்கின்றோம்!”
என்று பதில் கூறினார்கள்.
மீண்டும் அபுல்
ஆஸ் அவர்கள் மக்களை நோக்கி “கலிமா ஷஹாதாவை மொழிந்து நான் தூய
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்!” என்று கூறி அங்கிருந்து
மதீனா வந்து மாநபி ﷺ அவர்களின் கரம் பற்றி முஸ்லிமானார்கள்.
அல்லாஹ்வின் தூதர்
ﷺ அவர்கள் அபுல் ஆஸ் (ரலி) அவர்களை தம்
மகளார் ஜைனப் (ரலி) அவர்களோடு சேர்த்து வைத்தார்கள். திருமணத்தை
புதிப்பிக்கவில்லை.
( நூல்: அல் இஸ்தீஆப் ஃபீ
மஅரிஃபத்தில் அஸ்ஹாப் லிஇமாமி இப்னு அப்துல் பர் (ரஹ்)... )
ஜைனப் ரலி
அவர்களின் நீண்ட கால கனவு நிறைவேறியது. ஆம்! கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தம்
கணவருக்கு இஸ்லாமிய அழைப்பை எடுத்தியம்ப அவர்கள் மறக்கவில்லை.
இப்போது, இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த தூய வாழ்க்கையை வாழத் துவங்கிய ஜைனப் ரலி
அவர்களின் மனம் எவ்வளவு குதூகலித்திருக்கும்?!
வாழத்துவங்கிய சில
மாதங்களிலேயே இந்த உலகை விட்டும் விடை பெற்றுச் சென்றார்கள் ஜைனப் ரலி அவர்கள்.
அவர்களின்
மரணத்திற்கு காரணமாக அமைந்தது ஹிஜ்ரத் வரும் வழியில் அவர்களுக்கு ஏற்பட்ட துயரமான
அந்த நிகழ்வு தான். அந்த நிகழ்வின் போது ஏற்பட்ட காயமும் அதன் மூலம் ஏற்பட்ட
நோயும் தான்.
ஆம்! ஹிஜ்ரி 8 ம் ஆண்டில் தமது 30
-ம் வயதில் இந்த உலகை விட்டும் விடை பெற்றுச் சென்றார்கள்.
தாம் மிகவும்
விரும்பிய கணவர் தம்மை மிக மிக விரும்பிய கணவர், தாம் மிகவும் விரும்பிய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு வாழ்வின் ஒரு புதிய
அத்தியாயத்தை துவங்கிய சில மாதங்களிலேயே மரணம் என்றால் எப்படி இருக்கும்?!.
அபுல் ஆஸ் ரலி
அவர்களும் மிகச் சரியாக தமது மனைவி விடைபெற்றுச் சென்ற நான்காவது ஆண்டில் இந்த
உலகை விட்டும் விடை பெற்றுச் சென்றார்கள்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பொருந்திக் கொள்வானாக!
முப்பது
வயதுக்குள் கணவருடனான வாழ்க்கை, கணவருடனான இஸ்லாமிய
வாழ்க்கை என தமது வாழ்க்கையில் தீனுடைய அடிப்படையில் வாழ எவ்வளவு முக்கியத்துவம்
கொடுத்தார்கள். எவ்வளவு போராட்ட குணத்தோடு வாழ்ந்தார்கள்.
ஜைனப் ரலி
அவர்களின் வாழ்க்கை வரலாற்றை "உர்ஃபுஸ் ஸர்னபு ஃபீ பயானி அஸ் ஸைய்யிதா ஜைனபு
(ரலி) என்ற பெயரில் மிக அழகிய முறையில்எழுதிய தாஜுத்தீன் அல் இஸ்ஃபராயீனீ ரஹ்
அவர்கள் "தமது கணவர் அபுல் ஆஸ் -ன் இஸ்லாத்திற்காகவே ஜைனப் ரலி அவர்கள் இந்த
உலகில் வாழ்ந்தார்கள்,
அதற்காகவே அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களை அல்லாஹ் வாழ
வைத்தான்" என்று எண்ணும் அளவுக்கு அவர்களின் வாழ்க்கை வரலாறு உள்ளது என்று
குறிப்பிடுகின்றார்கள்.
நான்காவதாக, தீனுக்காக வாழ்வதன் நன்மைகளை அவர்களின் சிந்தனைக்கு கடத்த
வேண்டும்.
قُلْ
اِنَّ صَلَاتِیْ وَنُسُكِیْ وَمَحْیَایَ وَمَمَاتِیْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ
۟
நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும்,
என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய
அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். ( அல்குர்ஆன்: 6: 162 )
ஈஸா அலை
அவர்களுக்குப் பின்னர் இந்த உலகில் தமது தாயாரின் பெயரால் தமது அடையாளத்தைப் பெற்ற
பாக்கியமான மூன்று நபித்தோழர்களின் தாயார் ஒருவர் நபி ﷺ அவர்களின் காலத்தில் தீனுக்காகவே தமது வாழ்க்கை
முழுவதையும் அமைத்துக் கொண்டார்கள்.
பத்ர் யுத்தம்
வியப்பான பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கிய ஒரு மகத்தான யுத்தம் என்றால் அது
மிகையாகாது.
தந்தை மகன்
நேரெதிராக,
மாமனார் மருமகன் நேரெதிராக, சகோதரர்கள் நேரெதிராக,
பெரிய தந்தை சிறிய தந்தை எதிராக என களம் கண்டதைப் போல ஒரு
குடும்பத்தின்,
ஒரு தாய் பெற்றெடுத்த மக்கள் எழுவர் பங்கேற்ற ஒரு யுத்தம்
பத்ர் யுத்தம். அதிலும் அந்த எழுவரில் மூவர் ஷஹீத் வீரமரணம் எனும் அந்தஸ்தை
அடைந்தார்கள் என்பது சிறப்பான விஷயம்.
அந்த மகத்தான தாய்
அஃப்ரா பின்த் உபைத் (ரலி) அவர்கள் ஆவார்கள்.
ஆகில் இப்னு அல்
புகைர் இப்னு அப்து யாலைல்,
முஆத் பின்த் அஃப்ரா (ரலி), முஅவ்வித் பின்த் அஃப்ரா ரலி பத்ரின் மூன்று ஷஹீத்கள் ஆவர்.
அவ்ஃப் பின்த்
அஃப்ரா (ரலி),
காலித் (ரலி), இயாஸ் (ரலி), ஆமிர் (ரலி) பத்ரின் மற்ற போராளிகள் ஆவர்.
முதல் கணவர் மூலம்
மூன்று ஆண்மக்கள் இரண்டாம் கணவர் மூலம் நான்கு ஆண் மக்கள்.
இவர்களின்
மகன்களில் அனைவருமே ஷஹீத்கள் ஆவர். ரஜீவு போரில் ஒருவர், பிஃரு மஊனா போரில் இருவர், யமாமா யுத்தத்தில் கலந்து
கொண்ட அவ்ஃப் இப்னு அஃப்ரா ரலி அவர்களே கடைசி ஷஹீத் ஆவார்.
அஃப்ரா ரலி
அவர்களின் ஆண்மக்கள் அனைவரும் ஏறத்தாழ முப்பத்தைந்து அல்லது முப்பத்தாறு வயதுகளில்
ஷஹீத் அந்தஸ்தை அடைந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது.
பத்ர் யுத்தத்தின்
போது மூன்று மகன்களை இழந்த சோகத்தில் இருக்கும் அஃப்ராவின் இல்லத்துக்கு
நபியவர்களின் மனைவி அன்னை ஸவ்தா (ரலி) ஆறுதல் கூறச் சென்றார்கள்.
ஆனால், உயிர்த்தியாகிகளுக்கான ஒப்பற்ற மறுமை வாழ்வைப்பற்றிக் கேட்டு உறுதி
பூண்டிருந்த அஃப்ராவுக்கு இந்த இழப்பு அளித்த தாக்கத்தைவிட, தம் மூன்று புதல்வர்கள் உயிர்த்தியாகிகளாகிப் போனது ஆறுதலாகவும் பெரும் ஆனந்தமாகவுமே
இருந்திருக்கிறது.
அப்போது வரை
அவர்களது கவலையெல்லாம் போரிலிருந்து உயிருடன் திரும்பிவிட்ட மற்ற மகன்களைப் பற்றி
என்பதுதான் பேராச்சரியம்.
فجاءت
أمهما إلى النبي صلى الله عليه واله وسلم فقالت لعوف ابنها: يا رسول الله، هذا شرّ
بني. فقال: (لا).
நபி ﷺ அவர்களைச் சந்தித்த அஃப்ரா ஒற்றைக் கேள்வி ஒன்றை
வினவினார்:- “அல்லாஹ்வின் தூதரே! உயிருடன் இருக்கும் என் மகன்கள் இறந்துபோன என்
மகன்களைவிடத் தாழ்ந்தவர்களா?” “இல்லை” என்றார்கள் நபி ﷺ
அவர்கள்.
அந்தப் பதிலில் நிம்மதிப் பெருமூச்சு விட்டார் அந்தத் தாய்!
மகன்கள் மகத்தான
வாழ்வு பெறவேண்டும்;
பெரும் பதவி அடைய வேண்டும்; செல்வந்தர்களாக வேண்டும்; அப்படி ஆக வேண்டும்; இப்படி ஆக வேண்டும் என்பது போன்ற குறுகிய நோக்கங்கள் எதற்குமே அவர்களது
அகராதியில் இடம் இருந்திருக்கவில்லை. மாறாக, இறைவனுக்காகவும் அவன்
தூதருக்காகவும்,
தீனுக்காகவும் தம் உடல், பொருள், உயிர்,
என்பதெல்லாம் மட்டுமல்லாமல் தம் பிள்ளைகளையும் அணிவகுத்து
அனுப்பி மகிழ்ந்தார்கள் அந்த ஒப்பற்ற தாய்!
அதனால்தான்
இறந்துபோன மகன்களை நினைத்துப் பெருமிதமும் உயிருடன் மீந்து நிற்கும் மகன்களை
நினைத்து வருத்தமும் அடைந்திருக்கிறார் உம்முஷ் ஷுஹதா-தியாகிகளின் வீரத்தாய்
அஃப்ரா பின்த் உபைத் (ரலி) அவர்கள்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் வீரத் தாய் அஃப்ரா பின்த் உபைத் ரலி அவர்களைப் பொருந்திக் கொள்வானாக!
