ஞாலத்தின் மாணப் பெரிய இரு ஆளுமைகள்!!!
காலம் கடந்து வாழ்ந்தவர்கள் நம் நினைவில் நிலை நிறுத்தி
எப்போதும் சீர் தூக்கிப் பார்ப்பதற்கு கடமைப் பட்டவர்கள்
என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
அவர்களின்
வாழ்க்கை போங்குகள்,
அவர்களின் தியாகங்கள் எல்லாம் நாம் அவ்வப்போது அசை போட்டு
பார்த்து நாம் பயணிக்கும் திசையை சரி பார்த்து கொள்ள உதவும் உரைகல் என்று
உணர்த்துகிறது இஸ்லாம்.
அதிலும் குறிப்பாக
துல்கர்னைன் (அலை) மற்றும் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை ஊடாக தாம் வாழும்
காலத்தில் மக்கள் சந்தித்த சோதனையான தருணங்களில் மகத்தான சேவையாற்றிய மனிதர்களாக
இருப்பின் அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு செயல் படுமாறு தூண்டுகிறது இஸ்லாம்.
எல்லாவற்றுக்கும்
மேலாக அவர்களின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வதை தவிர்த்து அவர்களின் கடந்த கால
மற்றும் மறுமை வாழ்வுக்காக இறைவனிடம் இறைஞ்சுமாறு ஆணையிடுகிறது இஸ்லாம்.
وَالَّذِیْنَ
جَآءُوْ مِنْ بَعْدِهِمْ یَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِاِخْوَانِنَا
الَّذِیْنَ سَبَقُوْنَا بِالْاِیْمَانِ وَلَا تَجْعَلْ فِیْ قُلُوْبِنَا غِلًّا
لِّلَّذِیْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِیْمٌ ۟
அவர்களுக்குப்பின்
வந்தவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில்
எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை
ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்”
என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர். ( அல்குர்ஆன்: 51: 11 )
இதையே வள்ளுவன் இப்படிக் கூறுகிறான்:-
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
பொருள்:-
தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும். ( விளக்கம்:- மு. கருணாநிதி )
இரு ஆளுமைகள்..
இஸ்லாமிய உம்மத் மறந்து போன மகத்தான இரு ஆளுமைகளில் ஒரு ஆளுமை ஜமாதில் அவ்வல்
பிறை 11 லும் இன்னொரு ஆளுமை
ஜமாதில் ஆகிர் பிறை 14 லும் இந்த உலகை
விட்டும் விடை பெற்றுச் சென்றனர்.
இமாமுல் அஃளம்
என்று அழைக்கப்படும் இமாம் அபூ ஹனீஃபா ரஹ் அவர்கள் (ஒரு கூற்றின்படி) ஜமாதில்
அவ்வல் பிறை 11
ல் இந்த உலகை விட்டும் விடை பெற்றுச் சென்றார்கள்.
இமாமுல் அஃளம்
என்று அழைக்கப்படும் அபூ ஹனீஃபா அன் நுஃமான் ரஹ் அவர்கள் அவர்கள் ஈராக்கின் கூஃபா
என்னும் நகரில் ஹிஜ்ரி 80
ஆம் ஆண்டு பிறந்தார்கள். இவர் நேர்வழி பெற்ற அந்த
நபித்தோழர்களின் இரண்டாவது சந்ததியில் பிறந்த சிறப்புக்குரியவராவார். இன்னும் அவர்
சில நபித்தோழர்களிடமும்,
இன்னும் நபித் தோழர்களுக்குப் பின் வந்த இஸ்லாமிய மார்க்க
அறிஞர்களிடமும் நேரடியாகக் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார். இன்றைக்கு
ஃபிக்ஹு என்றழைக்கக் கூடிய இஸ்லாமிய மார்க்க விளக்கச் சட்டங்களை முதன் முதலாகத்
தொகுத்தளித்த பெருமை,
இமாம் அபூ ஹனீஃபா அவர்களையே சாரும். இவற்றை அவர்கள் குர்ஆன்
மற்றும் சுன்னாவின் ஆதார ஒளியில் திரட்டினார்கள்.
காலையிலும், மாலையிலும் பள்ளிவாசலில் வைத்து மக்களுக்கு மார்க்கக் கல்வி அளித்தது, போக பகல் நேரங்களில் அவர் ஒரு வெற்றிகரமான வியாபாரியாக விளங்கினார். மார்க்கக்
கல்வியை போதிக்கும் ஆசிரியராகவும், வியாபாரியாகவும் சிறந்த
முறையில் விளங்கினார்,
அவற்றில் தனது தனி முத்திரையைப் பதித்தார்.
ஹுஜ்ஜத்துல்
இஸ்லாம் என்று அழைக்கப்படும் இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் ஜமாதில் ஆகிர் பிறை 15 ல் இந்த உலகை விட்டும் விடை பெற்றுச் சென்றார்கள்.
ஹுஜ்ஜதுல் இஸ்லாம்
அபூஹாமித் முஹம்மத் கஸாலீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவா்கள் “ஈரான்”நாட்டின் “குறாஸான்”
மாநிலத்தில் (ஹிஜ்ரி 505 – ஈஸவீ 1111) “தூஸ்”
எனும் நகரில் பிறந்தார்கள். இவா்களின் அறிவுத்திறமையால் “ஹுஜ்ஜதுல் இஸ்லாம்” இஸ்லாமின் ஆதாரம் என்ற சிறப்புப் பெயரால் பிரசித்தி பெற்றார்கள். இமாமுல்
ஹறமைன் அபுல் மஆலி அல் ஜுவைனீ றஹ் அவா்களிடம் கல்வி கற்றார்கள். பக்தாத் நகரில்
பிரசித்தி பெற்ற “நிளாமிய்யா”வில் படித்துக் கொடுத்தார்கள். அறபு மொழியில் பல நூல்கள் எழுதியுள்ளார்கள்.
சத்திய
இஸ்லாத்துக்காக சேவை ஆற்றிய மகத்தான இமாம்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இமாம்
அபூஹனீஃபா (ரஹ்) அவர்களும்,
இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்களும் ஆவார்கள்.
இந்த இரு ஆளுமைகள்
வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த போதும் இரு ஆளுமைகளுக்கும் இடையே நான்கு
நூற்றாண்டுகள் இடைவெளி இருந்த போதிலும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து
கொண்டிருந்த மக்களுக்கு பயனுள்ள வாழ்க்கையை வாழ்ந்து சென்றார்கள்.
இரண்டு
ஆளுமைகளுக்கு இடையிலும் பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதை வரலாற்றை வாசிப்பதன் ஊடாக
புரிந்து கொள்ள முடிகிறது.
இரண்டு ஆளுமைகள்
வாழ்ந்த காலங்களில் "புதிய சித்தாந்தங்களும், புதிய கொள்கைகளும்" வேர் விட்டு படர ஆரம்பித்திருந்தன. அதன் தாக்கத்தில்
இருந்து அந்த கால மக்களை காப்பாற்றும் முயற்சியில் இரு ஆளுமைகளும் ஈடுபட்டது முதல்
ஒற்றுமை.
கட்டுப்பாடுகள்
இன்றி ஆட்சி புரிந்த ஆட்சியாளர்களை நெறிப்படுத்தி அவர்களுக்குண்டான பாதையை நோக்கி
அவர்களை பயணிக்க வைத்ததில் இரு ஆளுமைகளும் போராடியது இரண்டாம் ஒற்றுமை.
கல்வியை தேடித்
தேடி கற்று அதில் ஆழம் கண்டு, அதை சமூகத்திற்கு
வடிகட்டி கொண்டு சேர்த்தததில் இரு ஆளுமைகளும் மிளிர்ந்தது மூன்றாம் ஒற்றுமை.
சமகால அறிஞர்கள்
அனைவரிடமும் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி, அவர்களின் நன்மதிப்பை பெற்றதில் இரு ஆளுமைகளும் புகழ் பெற்று விளங்கியது
நான்காம் ஒற்றுமை.
தங்களிடம் குடி
கொண்டிருந்த உயர் பண்புகளால் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து அவர்களின் இதய
சிம்மாசனத்தில் அமர்ந்து இரு ஆளுமைகளும் கோலோச்சியது ஐந்தாம் ஒற்றுமை.
இப்படியாக மகத்தான
அந்த இரு ஆளுமைகள் இடையே விளைகிற ஒற்றுமைப் பட்டியல் மிக நீண்டது.
குறிப்பாக, நவீனங்களால் கவரப்படும் காலத்தில் வாழ்கிற அறிஞர்களின் கடமைகளையும், கடப்பாடுகளையும்,
மக்களையும், ஆட்சி அதிகார
மையங்களையும் நெறிப்படுத்த வேண்டிய அவசியத்தையும் இந்த இரு ஆளுமைகளின் வாழ்வும்
உணர்த்துகிறது என்றால் அது மிகையல்ல.
கல்வியை கற்பதற்கும்
கற்ற கல்வியை உம்மத்திற்கு சொல்வதற்கும்....
ومن
العجائب التي يذكرها الغزالي أيضًا عن حادثة قطاع الطريق هذه أنه فيما هو جالس
ينظر إلى اللصوص قام أحدهم فتوضَّأ وصلى، فعجب منه أبو حامد وقال له: تُصلي وأنت
قاطع طريق المسلمين؟ فقال له: صِلة بيني وبين ربي أحافظ عليها.
وبعد
سنين عددًا حجَّ الغزالي إلى بيت الله الحرام، وفي أثناء الطواف لقي صاحبه قاطعَ
الطريق وسأله: أأنت ذلك الرجل؟ فقال: أما قلت لك: الصلاة صلة بيني وبين ربي؟ فقد
تبتُ والحمد لله!
لا تقطع الصلة التي بينك وبين الله ولو كانت شَعرة[1]
இமாம் கஸ்ஸாலி ரஹ்
அவர்கள் ஒரு பயணத்தில் இருக்கும் போது வழிப்பறி கொள்ளையர்கள் பிடிபட்ட ஒரு இடத்தை
கடக்க நேர்ந்தது. அல பலர் இருந்தனர்.
அந்த திருடர்களில்
ஒருவர் உளூ செய்து தொழுதார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த இமாம் அவர்கள் தொழுது
முடித்த அந்த திருடனிடம் "வழிப்பறியில் ஈடுபடும் நீ தொழுகின்றாயா? நீ முஸ்லிமா?"
என்று கேட்டார்கள். அதற்கு அந்த வழிப்பறி கொள்ளையன்
"இது எனக்கும் என் இறைவனுக்கும் இடையேயான தொடர்பு அதை நான் எப்போதும் பேணி
வருகிறேன்" என்றான்.
சில வருடங்களுக்கு
பிறகு ஹஜ் செய்ய இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் சென்றிருந்த போது ஹரம் ஷரீஃபில் தவாஃப்
செய்து கொண்டிருந்த போது மீண்டும் அந்த வழிப்பறி கொள்ளையனை கண்டார்கள். அப்போது
இமாம் அவர்கள் "நீ இன்ன நபர் தானே? என்று கேட்க, அதற்கவர்,
"உங்களுக்கு முன்பே சொல்லவில்லையா? எனக்கும் என் இறைவனுக்கும் இடையேயான தொடர்பை நான்
பேணுபவன் என்று?".
இப்போது நான் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடவில்லை. நான் தவ்பா
செய்து திருந்தி விட்டேன்" என்றார். இது கேட்ட இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள்
"அல்ஹம்துலில்லாஹ்! கூறி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள்.
இதன் ஊடாக இந்த
உம்மத்திற்கு ஒரு செய்தியையும் கடத்தினார்கள். உனக்கும் உன் இறைவனுக்கும் இடையேயான
தொடர்பை துண்டித்துவிடாதே! அது முடி அளவு இருப்பினும் சரியே! உன் வாழ்க்கை மாற அது
கூட காரணமாக அமையும் என்று. ( நூல்: தபகாத்துஷ் ஷாஃபிஇய்யதுல் குப்ரா )
قال ابن
الجوزي في مثير العزم الساكن إلى أشرف الأماكن: أخبرنا أبو المعمر الأنصاري،
أنبأنا جعفر بن أحمد، أنبأنا أبو محمد الخلال، أنبأنا أحمد بن محمد بن القاسم
الرازي، حدثنا أحمد بن محمد الجوهري، أنبأنا إبراهيم بن سهل المدائني، حدثني سيف
بن جابر القاضي، عن وكيع، قال: قال لي أبو حنيفة النعمان بن ثابت رضي الله عنه:
أخطأت في خمسة أبواب من المناسك، فعلمنيها حجام،
இமாம் அபூ ஹனீஃபா
ரஹ் அவர்கள் கூறியதாக அல்லாமா வகீஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:- "நான்
ஹஜ்ஜுடைய ஐந்து மஸ்அலாக்களில் தவறுதலாக செய்தேன். அதை முடி திருத்தம் செய்யும்
மருத்துவர் எனக்கு ஐந்து விஷயங்களை கற்றுத் தந்தார்.
وذلك أني حين أردت أن أحلق رأسي وقف علي حجام، فقلت له: بكم تحلق رأسي؟
فقال: أعراقي قلت: نعم.قال: النسك لا يشارط عليه، اجلس.
நான் என்
தலைமுடியை மழிப்பதற்காக நாடி அவரிடம் சென்று என் தலைமுடியை மழிப்பதற்கு எவ்வளவு
திர்ஹம் (பணம்) என்று கேட்டேன். அதற்கவர், நீர் இராக்கில் இருந்து
வருகின்றீரா?
என்று கேட்டார். நான் ஆம் என்றேன். அப்போது அவர்
"ஹஜ்ஜுடைய அமல்கள் விஷயத்தில் நிபந்தனைகள் இடப்படாது" என்றார். பின்னர்
என்னை அமரச் சொன்னார்.
فجلست
منحرفا عن القبلة، فقال لي: حول وجهك إلى القبلة. فحولته، وأردت أن أحلق من الجانب
الأيسر، فقال: أدر الشق الأيمن من رأسك، فأدرته، وجعل يحلق وأنا ساكت، فقال: كبر.
فجعلت أكبر حتى قمت لأذهب، فقال: إلى أين تريد؟ قلت: رحلي. قال: صل ركعتين، ثم امض.
நான் கிப்லா
திசையில் இருந்து திரும்பி அமர்ந்தேன். என்னை கிப்லாவை நோக்கி அமருமாறு அவர்
கூறினார். பின்னர் தலையை மழிக்க தலையின் இடது புறத்தை காண்பித்தேன். வலது புறத்தை
காண்பிக்குமாறு அவர் சொன்னார். அவர் தலைமுடியை மழிக்கும் போது அமைதியாக இருந்தேன்.
அப்போது அவர் தக்பீர் கூறுங்கள் என்றார். நான் தக்பீர் கூறினேன். எனக்கான வேலை
முடிந்ததும் செல்வதற்காக எழுந்தேன். எங்கே செல்ல விரும்புகின்றீர்? எனக் கேட்டார். நான் என் வாகனம் இருக்கும் இடத்திற்கு என்றேன். முதலில் இரண்டு
ரக்அத் தொழுது விட்டு பிறகு செல்லுங்கள்" என்றார்.
فقلت:
ما ينبغي أن يكون ما رأيت من عقل هذا الحجام. فقلت: من أين لك ما أمرتني به؟ فقال:
رأيت عطاء بن أبي رباح يفعل هذا.
நான்
ஆச்சரியத்தோடு என் மனதுக்குள் "முடி திருத்தம் செய்யும் மருத்துவர்
ஒருவருக்கு இவ்வளவு அறிவா?
என்று கேட்டுக் கொண்டேன். பின்னர் இது குறித்து அவரிடமே
கேட்கலாம் என்று முடிவு செய்து "எனக்கு நீங்கள் இன்னின்ன வாறு செய்யுங்கள்
என்று கூறினீர்களே இந்த கல்வியை எங்கிருந்து யாரிடமிருந்து கற்றுக் கொண்டீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர் "அதாவு இப்னு அபீ ரபாஹ் ரஹ் அவர்கள் இவ்வாறு
தான் செய்வார்கள்" என்று என்னிடம் கூறினார். ( நூல்: முனீரில் அஜ்மிஸ் ஸாகின்
இலல் அமாக்கின் )
ஆட்சியாளர்களை நெறிப்படுத்தியதில்....
இமாம் கஸ்ஸாலி
(ரஹ்) காலப் பிரிவில் ஸுல்தான் என அழைக்கப்பட்ட மன்னர்களின் சர்வாதிகார ஆட்சியே
நடைபெற்றது. மக்களின் பணத்தை தங்களது ஆடம்பர வாழ்விற்கும், அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கும் ஆட்சியாளர்கள் பயன்படுத்தியமை போன்ற அதிகாரத்
துஷ்பிரயோகம் பரவலாகக் காணப்பட்டது.
அரச பதவிகளை
ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் ஆட்சிக்கு எதிராகக் குழப்பம் விளைவிப்பவர்கள் எனக்
குற்றம் சாட்டப்பட்டனர்,
இவை அனைத்தையும் மிகத் தெளிவாக அவதானித்து உணர்வுபூர்வமாக
அறிந்திருந்த இமாமவர்கள் ஆட்சியார்களின் அநீதிகள், அதிகாரத் துஷ்பிரயோகம்,
பொதுப் பணத்தைக் கையாளும் அநீதியான முறைகளை மிகத்
துணிச்சலுடன் கண்டித்தார்கள்.
இமாமவர்கள்
அநீதியான ஆட்சியார்களைக் கண்டித்ததோடு் நின்று விடாமல் அவர்களுக்கு கடிதங்களையும்
அனுப்பி வைத்தார்கள்.
இது அவர்களது
ஆழமான இறை விசுவாசத்தையும்,
அநீதிக்கு எதிராக குரல் எழுப்பும் மனோ வலிமையையும், துணிச்சலையும் எடுத்துக் காட்டுகின்றது. இமாமவர்களின் காலப் பிரிவில் குராஸான்
மாகாணம் முழுவதும் ஸெல்ஜூக்கிய மன்னர் ஸன்ஜர் பின் மலிக் ஷாவின் அதிகாரத்தில்
இருந்தது. இமாமவர்கள் ஸுல்தானுக்கு பின்வரும் கடிதத்தை ஒருதடவை அனுப்பி
வைத்தார்கள்
“எவ்வளவு வேதனைக்குரியது!
உங்கள் ஆட்சியின் கீழுள்ள சாதாரண குடிமக்களின் கழுத்துக்கள் நீங்கள் விதிக்கும்
அநியாயமான வரிகளின் சுமையால் நொறுங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் உங்கள்
குதிரைகளின் கழுத்துகளையோ தங்க மாலைகள் அலங் கரிக்கின்றன.” இது போன்றே ஸுல்தான் ஸன்ஜரின் சகோதரரான முஹம்மத் பின் மலிக் ஷாவுக்கும்
அநியாயத்துக்குப் பயப்படும் படியும், அவரது பொறுப்புகளை உரிய
முறையில் நிறைவேற்றும் படியும், மக்களின் உரிமைகளை
மதிக்கும் படியும்,
இறைவனின் தண்டனைக்கு அஞ்சும் படியும் எச்சரித்துக் கடிதம்
எழுதினார்கள். இமாமவர்கள் இவ்வாறு ஆட்சியாளர்களுக்கு எழுதிய கடிதங்களில்
அறிவுரையும்,
வழிகாட்டுதலும், விமர்சனமும் இணைந்து
காணப்பட்டன.
ஸெல்ஜூக்கிய
அமைச்சர் பக்ருல் மலிக் ஒரு தடவை இமாமவர்களின் பிறப்பிடமான தூஸ் நகருக்கு வருகை
தந்தார். அப்போது அவரை நோக்கி இமாமவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
“இந்த தூஸ் நகரம்
பசியாலும்,
அநியாயத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது
தானியங்களை விற்கின்றார்கள். வரிச்சுமை அவர்களை வாட்டுகின்றது. அதிகரிக்கும்
விலைவாசிகள் அவர்களை மிகவும் பாதித்துள்ளன. உங்களுக்கு ஓர் அறிவுரை பகர்கின்றேன்.
நீங்கள் தனிமையில் இரண்டு ரக்அத் தொழுகையை நிறைவேற்றுங்கள். உங்களது ஸஜதாவில்
பச்சாதாபப்பட்டு,
இறைவனை அஞ்சிய நிலையில் பின்வருமாறு கூறுங்கள். உனது
ஆட்சியும் அதிகாரமும் உன்னைவிட்டும் என்றுமே நீங்காத ஆட்சியாளனே! தனது ஆட்சியும்
அதிகாரமும் முடிவை அடைந்து கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளனுக்கு அருள்புரிவாயாக!, அவனை அசிரத்தை,
மறதியிலிருந்து விழித்தெழச் செய்து அவனது குடிமக்களுக்கு
நன்மை புரிவதற்கு அருள்பாலிப்பாயாக! ( நூல்: றிஜாலுல் ஃபிக்ர், லிஇமாமி அபுல் ஹஸன் அலி நத்வி,, பக்கம் 236 )
ويشرح
أبو بكر الجصاص مذهب أبي حنيفة في هذا القول: "وكان مذهبه مشهورًا في قتال
الظلمة وأئمة الجور، ولذلك قال الأوزاعي احتملنا أبا حنيفة على كل شيء حتى جاءنا
بالسيف، -يعني قتال الظلمة- فلم نحتمله وكان من قوله وجوب الأمر بالمعروف والنهي
عن المنكر فرض بالقول فإن لم يؤتمر له فبالسيف
கொடுங்கோன்மையின்
உச்சத்திற்கே சென்று ஆட்சி புரிந்து கொண்டிருந்த முதலாம் அப்பாஸிய கலீஃபா அபூ
முஸ்லிம் குராஸானி அவர்களுக்கு எதிராக எத்தகைய முடிவைக் கையாள்வது என இமாம் அபூ
ஹனீஃபா (ரஹ்) அவர்களிடம் வந்து கேட்ட போது அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள் கொண்டிருந்த
நிலைப்பாடு என்ன என்பதை இமாம் அவ்ஸாயி (ரஹ்) அவர்களும், அபூ பக்கர் அல் ஜஸ்ஸாஸ் (ரஹ்) அவர்களும் பின் வருமாறு கூறினார்கள்.
ஆரம்பத்தில்
கிளர்ச்சி செய்ய வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில்
வாளோடு வந்து விட்டார்கள். (அதாவது தீயவர்களுக்கு எதிராக களமிறங்கி போராட வேண்டும்
எனக் கூறத்தொடங்கி விட்டார்கள்.)
( நூல்:அஹ்காமுல் குர்ஆன் அல் ஜஸ்ஸாஸ், பாகம்:1, பக்கம்:81)
انتفض
أهل الموصل على أبي جعفر المنصور, وقد اشترط المنصور عليهم أنهم ان انتفضوا تحل
دماؤهم له, فجمع المنصور الفقهاء وفيهم الامام أبو حنيفة.
فقال:
أليس صحيحا أنه عليه السلام قال/"المؤمنون عند شروطهم"؟ وأهل الموصل قد
شرطوا ألا يخرجوا عليّ, وقد خرجوا على عاملي وقد حلذت دماؤهم.
فقال
رجل منهم: يدك مبسوطة عليهم وقولك مقبول فيهم, فان عفوت فأنت أهل العفو وان عاقبت
فبما يستحقون.
فقال
لأبي حنيفة: ما تقول أنت يا شيخ؟ ألسنا في خلافة نبوة وبيت أمان؟.
فأجاب:
انهم شرطوا لك ما لايملكون (وهو استحلال دمائهم) وشرطت عليهم ما ليس لك, لأن دم
المسلم لا يحل الا بأحد معان ثلاث*.
*يشير الامام أبي حنيفة رحمه الله تعالى الى قوله عليه الصلاة
والسلام:" لا يحلّ دم امرىء مسلم الا باحدى ثلاث: الثيّب الزاني والنفس
بالنفس والتارك لدينه المفارق للجماعة". متفق عليه.
(المناقب لابن الجوزي ج2 ص 17)
இமாம் அபூ ஹனீஃபா
(ரஹ்) அவர்களின் காலத்தில் கலீஃபா அல் மன்சூர் ஆட்சியாளராக இருந்தார்.
மெளஸல் மாகாணத்து
மக்கள் அவ்வப்போது கிளர்ச்சி செய்து வந்தனர். இறுதியில் இனி ஆட்சிக்கு எதிராக
ஈடுபட மாட்டோம் என ஒப்பந்தமிட்டு அம்மாகாண மக்கள் கலீஃபா அல்மன்சூரிடம் தந்தனர்.
ஹிஜ்ரி 148ல் மீண்டும் அம்மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டபோது கலீஃபா நாட்டின் அனைத்து
ஃபுகஹாக்களையும் ஒன்று கூட்டினர். அபூ ஹனீஃபா (ரஹ்) உட்பட அனைவரும் ஆலோசனை
கூடத்திற்கு வந்தனர். கிளர்ச்சியில் ஈடுபடும் அம்மக்களின் உயிர்களும், உடமைகளும் தமக்கு ஹலாலா?இல்லையா? என அனைவரிடமும் கேட்டார் கலீஃபா.அனைத்து ஃபுகஹாக்களும் ஒப்பந்தத்தை மீறுவது
குற்றம். மேலும்,
இனி நாங்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டால் எங்கள் உயிர்களும், உடமைகளும் உங்களுக்குச் சொந்தம் என அம்மக்களே ஒப்பந்தம் செய்திருக்கின்றார்கள்
என்றனர். ஆக அவர்களை போர் மூலம் அடக்குவது ஆகுமானது தான் என்று ஃப்த்வா தந்தனர்.
மேலும் நீங்கள்
மன்னிக்க நினைத்தால் அது உங்கள் பெருந்தன்மையை வெளிக்காட்டும் என்றும்
கூறினார்கள். அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்கள் சட்ட மேதை இமாம் அபூ
ஹனீஃபா (ரஹ்) அவர்கள். என்ன கருதுகின்றீர்கள்?என இமாமின் மெளனத்தை
கலைத்தார் கலீஃபா.
இமாம் அவர்கள்
கூறினார்கள்: "ஆட்சியாளர் அவர்களே! நாம் நபியுடைய ஆட்சி முறையை
பின்பற்றுபவர்கள் இல்லையா?
இந்த நிலப்பரப்பு அனைவருக்கும் நம்பகமான இருப்பிடம் இல்லையா?" என்று கேட்டுவிட்டு, ‘தங்களுக்கு சொந்தமில்லாத, ஒரு விஷயத்தை
ஒப்பந்தத்தின் போது மெளஸல் நகர மக்கள் உங்களுக்கு வழங்கிருக்கின்றார்கள்.(அதாவது
அவர்களுடைய உயிர்கள்) அவ்விதமே கேட்கக் கூடாத, கேட்க தகுதியற்ற, உரிமையில்லாத நிபந்தனை ஒன்றை நீங்கள் கேட்டுப்பெற்றுள்ளீர்கள்.
ஒரு மனிதனின்
உயிர் மூன்று தருணங்களில் தான் கொல்லப்பட அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற நபிமொழியை
கலீஃபாவுக்கு நினைவு படுத்தினார்கள். (அதாவது, நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: திருமணம் செய்தவர் விபச்சாரம்
செய்தால் கல்லால் அடித்து கொல்லப்படுவதும், அநியாயமாக ஒரு உயிரை கொலை
செய்தால் கொலை செய்தவனை கிஸாஸ் அடிப்படையில் கொலை செய்வதும், மதம் மாறிப் போனவனை கொலை செய்வது ஆகிய இம்மூன்று நிலையில் தான் உயிரை
எடுப்பதற்கு ஹலால் என்று நபி ﷺ
அவர்கள் கூறிய நபிமொழியை நினைவு படுத்தினார்கள்).
فأمرهم
المنصور بالقيام فتفرقوا فدعاه وحده.
فقال:
يا شيخ, القول ما قلت. انصرف الى بلادك ولا تفت الناس بما هو شين على امامك فتبسط
أيدي الخوارج.
இதைக் கேட்ட
கலீஃபா மன்சூர் அவர்கள் சபையை கலைத்து அனைவரையும் எழுந்து போகச் சொல்லி விட்டு, இமாம் அபூ ஹனீஃபா ரஹ் அவர்களை மட்டும் அமரச் சொல்லி, "நீங்கள் சொன்னது சத்தியம் தான். நீங்கள் ஊருக்கு செல்லுங்கள்! அங்கே நீங்கள்
ஆட்சியாளருக்கு எதிராக மார்க்க தீர்ப்பு வழங்கி விடாதீர்கள்" என்று கூறி
அனுப்பி வைத்தார்.
ஆகவே, மெளஸல் மாகாணத்தின் மக்கள் மீது கை வைக்காதீர்கள்! அவர்களுடைய உயிர்களைப்
போக்குவது உங்களுக்கு ஹலால் அல்ல! என இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) திட்டவட்டமாக
தெரிவித்தார்கள்.
எனவே, அநியாயமாக உயிரையும்,
உடமைகளையும் பறிப்பது மனிதநேயமற்ற செயல் என்பதையும், தெளிவான உரிமை மீறல் என்பதையும் இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள் இங்கே
ஆட்சியாளர் முன் அஞ்சா நெஞ்சத்துடன் கூறினார்கள்.
இப்னுல் அஸீர்; பாகம் 5, பக்கம் 25,
மனாகிபு லிஇமாமி இப்னுல் ஜவ்ஸீ, பாகம்: 2,
பக்கம்: 17 )
தவறுகளை சுட்டிக்காட்டுவதில் மென்மையும்... வன்மையும்....
كان
الرجل يزعم للناس فيما يزعمه لهم أن عثمان بن عفان كان يهوديا في اصله وانه ظل على
يهوديته بعد الاسلام ايضا فلما سمع أبو حنيفة رحمه الله هذه المقالة ، فمضى إليه،
وقال له: لقد جئتك خاطباً ابنتك فلانة لأحد أصحابي، فقال: أهلاً ومرحباً بك، مثلك
يا أبا حنيفة لا ترد حاجته؛ لكن من الخاطب؟ فقال أبو حنيفة : رجل موسومٌ في قومه
بالشرف والغنى، سخي اليد، مبسوط الكف، حافظٌ لكتاب الله، يقوم الليل كله في ركعة،
كثير البكاء من خشية الله، فقال الرجل: بخٍ بخ، حسبك يا أبا حنيفة ! ان بعض ما
ذكرته من صفات الخاطب كفؤ لبنت أمير المؤمنين. فقال: لكن فيه خصلة لا بد أن أذكرها
لك، فقال: ما هي يا أبا حنيفة ؟ قال: إنه يهودي، فانتفض الرجل، وقال: يهودي؟ أزوج
ابنتي من يهودي؟! والله لا أزوجها منه ولو جمع خصال الأولين والآخرين! فقال أبو
حنيفة : تأبى أن تزوج ابنتك من يهودي، وتنكر ذلك أشد نكير، ثم تزعم للناس أن رسول
الله صلى الله عليه وسلم زوج ابنتيه كلتيهما من ذي النورين ؛ من يهودي هو عثمان
رضي الله عنه؟ فعرت الرجل رعدة، وارفض عرقه، وقال: أستغفر الله من قول سوءٍ قلته،
ومن كل فرية افتريتها
இமாம் அபூ ஹனீஃபா
(ரஹ்)அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் " உஸ்மான் (ரலி) அவர்கள் ஆரம்பத்திலேயே
யூதராகயிருந்தார் என்றும்,
இஸ்லாம் வந்த பின்பும் யூதராகவே இருந்தார்கள்"என்றும்
மக்களிடம் கூறிவந்தார்.
இதை கேள்விபட்ட
இமாமவர்கள் அவரிடம் சென்று "உம்முடைய மகளை என்
நண்பர்களில் ஒருவருக்கு திருமணம் முடிப்பதற்காக பேச வந்துள்ளேன்" என்று
கூறினார்கள்.
அம்மனிதர்:இமாவர்களை
வரவேற்று
உம்மை போன்றவரின் தேவையை மறுக்க முடியாதுதான் ஆனால் மணமகன்
யார்? என்று கேட்டார்.
இமாமவர்கள்:"அவரோ தன் மக்களிடத்தில் செல்வத்தாலும் ,சிறப்புகளாலும்
வர்ணிக்கப்படுபவராகும்,
பெரும் கொடையாளி,தாராளமாக செலவு
செய்பவராகும்,குர்ஆனை மனனம் செய்தவராகும்,இரவு முழுவதும் நின்று வணங்குபவராகும்,அல்லாஹ்வை அஞ்சி அதிகம் அழுபவராகும்". என்று கூறினார்கள்.
அம்மனிதர்:(மிகுந்த சந்தோஷத்துடன்) இமாமவர்களே (இது)போதும் போதும் நீங்கள் கூறிய மணமகனின்
சில அம்சங்கள் கலீஃபாவின் மகளையே திருமணம் முடிக்க பொருத்தமாக உள்ளது என்றார்.
இமாமவர்கள் :ஆனால்
அவரிடம் ஒரு அம்சம் உள்ளது அதை அவசியம் உம்மிடம் கூறவேண்டுமே என்றார்கள்.
அம்மனிதர்:
இமாமவர்களே அது என்ன?
என்றார். இமாவர்கள்:அவர் ஒரு யூதர்
என்றார்கள்.
அம்மனிதர்: என்ன இமாமவர்களே? அவர் யூதரா?
என்றவாறு துடிதுடித்துபோனார்,
ஒரு யூதனுக்கு என்
மகளை திருமணம் முடித்து தருவேனா ?
அல்லாஹ்மீது ஆணையாக "அவர் தன்னிடம் முன்னோர் ,பின்னோரின் அனைத்து நல்லஅம்சங்களை ஒன்று சேர்த்து வைத்திருந்தாலும் திருமணம்
முடித்து தரமாட்டேன் என்றார்.
இமாமர்கள்: நீ உன்
மகளை யூதனுக்கு திருமணம் முடித்து கொடுக்க மறுக்கிறாய்,மிக கடுமையாக அதை நிராகரிக்கிறாய்.பின்பு நபி(ஸல்)தன் இருமகள்களையும் துன்னூரான
உஸ்மான்(ரலி) அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள் என்று கூறுகிறாயே உஸ்மான் (ரலி)அவர்கள் எப்படி யூதராக இருக்க முடியும்? என்று கேட்டார்கள்.
அம்மனிதர்
கடுமையாக நடுங்கிவிட்டார்,
வேர்த்து கொட்டஆரம்பித்தது, நான் கூறிய தீய சொலிற்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்கிறேன். நான்
இட்டுக்கட்டி கூறியதற்காக தவ்பா செய்கிறேன் என்றார்.
وقد رأى
ذات يوم ثيابا رثة على أحد من جلسائه، فلما انصرف الناس و لم يبق في المجلس إلا هو
والرجل قال له: ارفع هذا المصلى وخذ ما تحته، فرفع الرجل المصلى فإذا تحته ألف
درهم، فقال له أبو حنيفة: خذها و أصلح بها من شأنك، فقال الرجل: إني موسر، و قد
أنعم الله علي، و لا حاجة لي بها، فقا له أبو حنيفة: إذا كان الله قد أنعم عليك
فاين آثار نعمته، أما بلغك أن النبي صلى الله عليه و سلم يقول
(( عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ يُحِبَّ
أَنْ يَرَى أَثَرَ نِعْمَتِهِ عَلَى عَبْدِهِ ))
[رواه الترمذي]
فينبغي
عليك أن تصلح من شأنك حتى لا تُغمَّ صديقك.
( صور من حياةالتابعين)
ஒரு நாள் அபூ
ஹனீஃபா (ரஹ்) தன்னோடு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் மட்டமான ஆடை அணிந்திருப்பதை
கண்டார்கள். மக்களெல்லாம் சென்று விட்டனர். அந்த சபையில் இமாமவர்களையும், அம்மனிதரை தவிர யாருமில்லை.
அப்போது இமாவர்கள்
அம்மனிதரிடம்"இந்த தொழுகை விரிப்பை நீக்கு, அதன் கீழ் இருப்பதை எடுத்துக்கொள்" என்றார்கள். அந்த மனிதர் தொழுகை
விரிப்பை நீக்கினார் அப்போது அதன் கீழ் ஆயிரம் திர்ஹங்கள் இருந்தன.
இமாமவர்கள் அவரிடம் "இந்த திர்ஹங்களை நீ
எடுத்துக்கொள். இதன் மூலம் உன் நிலையை சீர் செய்துக்கொள்"என்றார்கள்.
அதற்கு அம்மனிதர்
"நான் வசதியானவன்,
எனக்கு அல்லாஹ் (நிறைய) நிஃமத்துக்கள் செய்துள்ளான். எனவே
அந்த திர்ஹங்கள் எனக்கு தேவையில்லை" என்றார்.
அப்போது அவரிடம்
இமாமவர்கள்,
"உனக்கு அல்லாஹ் (நிறைய) நிஃமத்துக்கள் செய்திருந்தால் அதன்
அடையாளங்கள் எங்கே?
நபி ﷺ
அவர்களின் (இந்த) கூற்று உன்னை வந்தடையவில்லையா? "நபி ﷺ அவர்கள் கூறினார்கள் : "நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்கள்மீது தான் செய்த நிஃமத்துகளின் அடையாளத்தை
காண விரும்புகிறான்"[திர்மிதி]. எனவே உன் நண்பன் (உன்
நிலை கண்டு) வருந்தாத வண்ணம் உன் நிலையை நீர் சீர்படுத்துவது உன்மீது
கட்டாயமாகும்" என்றார்கள்.
இரண்டு ஆளுமைகளுமே அன்றைய ஆட்சியாளர்களால் நெருக்கடிகளை
சந்தித்தார்கள்.
எங்கே
நாம் தவறிழைத்து விடுவோமோ என்று ஆட்சியாளர்கள் பயந்ததன் காரணமாக, கலீஃபாக்களும், கவர்னர்களும் இமாம் அபூ ஹனீஃபா ரஹ் அவர்களை நீதிமன்ற
நீதிபதியாகவும், முக்கிய பொறுப்புக்களில் அமர்த்த முன் வந்த
பொழுதும் இமாமவர்கள் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள். இதன் காரணமாக கலீஃபா
ஜாஃபர் அல் மன்சூர் அவர்கள் இமாமவர்களை சிறையிலும் அடைத்தார். அந்தச் சிறையிலேயே
தமது 70 வயதில் ஸஜ்தா செய்த
வண்ணம் ஹிஜ்ரி 150 ல் இமாமவர்கள்
மரணமடைந்தார்கள். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இமாம் அபூ ஹனீஃபா ரஹ் அவர்களைப்
பொருந்திக் கொள்வானாக!
இமாம்
கஸ்ஸாலி ரஹ் அவர்கள் தங்களது 55 வயதில்
ஜமாதில் ஆகிர் பிறை 14 ல் திங்கட்கிழமை காலை
ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு ஹிஜ்ரி 505 ல்
இறையழைப்பை ஏற்றார்கள்.
அல்லாஹ்
ரப்புல் ஆலமீன் இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக!

