Thursday, 23 October 2025

எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் நரகத்தில் சேர்த்து விடும்!!!

 

எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள்

நரகத்தில் சேர்த்து விடும்!!!

மனித வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் ஒரு இறைநம்பிக்கையாளன் சிறந்து விளங்கும் வகையிலான வாழ்க்கையை வாழ்ந்திட அல்லாஹ்வும், மாநபி அவர்களும் மிகச் சிறந்த வழிகாட்டலை வழங்கி இருக்கிறார்கள்.

மேலும், அல்லாஹ்வும், மாநபி அவர்கள் கூறும் வாழ்வியல் முறை என்பது இறைவனின் நெருக்கத்தைப் பெற்றுத்தரவல்லதாகவும், அதன் மூலம் நாளை மறுமையில் சொர்க்கப் பிரவேசத்தை பரிசில் பெறுவதாகவும்,இறைவனின் கோபத்தை விட்டும் தூரமாக்கி வைக்கக் கூடியதாகவும் இருக்கும் என்ற அடிப்படை விதியைக் கொண்டதாக அமைந்திருக்கும்.

அதே போன்று அல்லாஹ்வும், மாநபி அவர்களும் ஒரு இறைநம்பிக்கையாளன் தம்முடைய வாழ்க்கையில் அவனுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்குகிற, இறைக் கோபத்தைப் பெற்றுத்தருகிற, நரகத்தை பரிசளிக்கிற செயல்பாடுகள் குறித்தும் எச்சரித்து இருக்கின்றார்கள்.

قُلْ نَارُ جَهَنَّمَ أَشَدُّ حَرًّا لَوْ كَانُوا يَفْقَهُونَ

(நபியே! அவர்களிடம்) "நரகத்தின் நெருப்பு கொடிய உஷ்ணமானது" என்று நீங்கள் கூறுங்கள். (இதை) அவர்கள் புரிந்திருக்க வேண்டுமே! ( அல்குர்ஆன்: 9: 81 )

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ قُوٓا۟ أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًۭا وَقُودُهَا ٱلنَّاسُ وَٱلْحِجَارَةُ عَلَيْهَا مَلَٰٓئِكَةٌ غِلَاظٌۭ شِدَادٌۭ لَّا يَعْصُونَ ٱللَّهَ مَآ أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர், அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். ( அல்குர்ஆன்: 66: 6 )

"ما تركت شيأ يقربكم الي الله إلا وقد أمرتكم به وما تركت شيأ يبعدكم عن الله إلا وقد نهيتكم عنه"

(رواه الدارمي)

" அல்லாஹ்வின் பக்கம் உங்களை நெருக்கமாக்கி வைக்கும் எந்த விஷயத்தையும் நான் உங்களுக்கு கூறாமல் விட்டதில்லை. அல்லாஹ்வின் நெருக்கத்தை விட்டும் உங்களை தூரமாக்கும் எந்த விஷயத்தையும் நான் உங்களுக்கு தடுக்காமல் விட்டதில்லை " என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள். ( நூல்: தாரமீ )

 

 حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ ، قَالَ : حَدَّثَنِي مَالِكٌ ، عَنْ أَبِي الزِّنَادِ ، عَنِ الأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ:- نَارُكُمْ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنْ نَارِ جَهَنَّمَ قِيلَ يَا رَسُولَ اللهِ إِنْ كَانَتْ لَكَافِيَةً قَالَ فُضِّلَتْ عَلَيْهِنَّ بِتِسْعَةٍ وَسِتِّينَ جُزْءًا كُلُّهُنَّ مِثْلُ حَرِّهَا

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் அவர்கள், ‘‘உஙகள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்’’ என்று கூறினார்கள்.

உடனே, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த (உலக) நெருப்பே போதுமானதாயிற்றே!’’ என்று கேட்கப்பட்டது.

அதற்கு நபி அவர்கள், ‘‘உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப் பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்’’ என்று கூறினார்கள். ( நூல்கள்: புகாரி, முஸ்லிம் )

அந்த வகையில் கொடிய நரகத்தில் கொண்டு போய் சேர்க்கிற ஐந்து தீய குணங்களை இனம் கண்டு நாம் அவைகளில் இருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.

قال النبي ﷺ: (وَأَهْلُ النَّارِ خَمْسَةٌ: الضَّعِيفُ الذي لا زَبْرَ له؛ الَّذِينَ هُمْ فِيكُمْ تَبَعًا، لا يَبْتَغُونَ أَهْلًا وَلَا مَالًا، وَالْخَائِنُ الَّذي لا يَخْفَى له طَمَعٌ، وإنْ دَقَّ إلَّا خَانَهُ، وَرَجُلٌ لا يُصْبِحُ وَلَا يُمْسِي إلَّا وَهو يُخَادِعُكَ عن أَهْلِكَ وَمَالِكَ، وَذَكَرَ البُخْلَ أَوِ الكَذِبَ، وَالشَّنْظِيرُ الْفَحَّاشُ) [مسلم]

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:- ஐந்து வகையினர் நரகவாசிகள் ஆவார்கள். 

1) அறிவீனனான, பலகீனமான ஒருவன். அவன் தன் குடும்பத்தாருக்கோ, தன் பொருளாதாரத்திற்கோ வலு சேர்ப்பவனாக இருக்க மாட்டான். மனோ இச்சையின் அடிப்படையில் நடந்து கொள்வான்.

2) நம்பிக்கைத் துரோகம் -மோசடி செய்வதில் ஆசை அடங்காதவன். அற்பமான, சிறிய விஷயங்களில் கூட நம்பிக்கைத் துரோகம் - மோசடி செய்வான்.

3) பிறரின் பொருளை, பிறரின் குடும்பத்தை எப்படி ஏமாற்றுவது என்றே காலையும் மாலையும் இயங்கிக் கொண்டிருப்பான்.

4) கஞ்சத்தனம் செய்பவன் அல்லது பொய் பேசுபவன்.

5) மானங்கெட்ட செயலை செய்பவன். ( நூல்: முஸ்லிம் )

1) முதல் வகையினர்....

قال القرطبي: "ضعفاء العقول، لا يسعون في تحصيل مصلحة دنيوية ولا فضيلة دينية، يهملون أنفسهم إهمال الأنعام، لا يبالون بما يثبون عليه من الحرمان". فغاية أمرهم اتباع شهواتهم.

இந்த நபிமொழியின் முதல் வகையினர் குறித்து இமாம் குர்துபீ (ரஹ்) அவர்கள் விளக்கமளிக்கையில் "இவர்கள் அறிவில் பலகீனமானவர்கள். தங்களின் உலக வாழ்வு சீராகுவதற்கும், மார்க்க வாழ்வு சிறந்து விளங்குவதற்கும் எந்த முயற்சியையும் மேற்கொள்ள மாட்டார்கள். கிட்டத்தட்ட கால்நடைகளைப் போல வாழ்வார்கள். தங்களின் வாழ்க்கையில் நலவுகளும், நன்மைகளும் தடைபடுவது குறித்து எவ்வித கவலையும் அடைய மாட்டார்கள். இவர்களின் முடிவு மனோ இச்சையின் அடிப்படையில் வாழ்வதாய் அமைந்திருக்கும்.

சுருக்கமாக சொன்னால் இவர்கள் தங்களுடைய உலக வாழ்வுக்காகவும் பாடுபடாமல் தங்களது மறுமை வாழ்வுக்காகவும் பாடுபடாமல் ஊதாரிகளாக, வெட்டியாக ஊரைச் சுற்றி வருபவர்கள். இத்தகைய தன்மை நரகத்தில் சேர்த்து விடும் என்று நபி ஸல் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

இப்படி வாழக்கூடாது என்று குர்ஆன் எச்சரிக்கை செய்கிறது.

وَابْتَغِ فِیْمَاۤ اٰتٰىكَ اللّٰهُ الدَّارَ الْاٰخِرَةَ وَلَا تَنْسَ نَصِیْبَكَ مِنَ الدُّنْیَا 

மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்ததிலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! ( அல்குர்ஆன்: 28: 77 )

وقال " ابن مسعود " رضي الله عنه : " إني لأكره أن أرى الرجل فارغا لا في أمر دنياه ولا في أمر آخرته " .

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "தன் மறுமை வாழ்வுக்காகவும், தன் உலக வாழ்வுக்காகவும் பாடுபடாமல் (சும்மாவே வெட்டியாக) இருக்கும் ஒரு மனிதனை நான் வெறுக்கின்றேன்". 

يروى أن سيدنا عمر بن الخطاب - رضى الله عنه – "رأى بعض الناس فى المسجد بعد صلاة الجمعة فسألهم: من أنتم ؟ قال: متوكلون، قال: بل أنتم متواكلون.. لا يقعدن أحدكم عن طلب الرزق، ويقول: اللهم ارزقنى، وقد علم أن السماء لا تمطر ذهبًا ولا فضة، إنما يرزق الله الناس بعضهم من بعض، أما سمعتم قول الله تعالى: ( فإذا قضيت الصلاة فانتشروا فى الأرض وابتغوا من فضل الله) "الجمعة: 10"، وعلاهم بدرته وأخرجهم من المسجد"،

உமர் (ரலி) அவர்கள் ஒரு ஜும்ஆ தொழுகைக்குப் பின்னால் பள்ளிவாசலில் சிலர் அமர்ந்திருக்க கண்டார்கள். அவர்களிடம் சென்று "நீங்கள் யார்? ஏன் இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள்" என்று கேட்க, அதற்கவர்கள் "நாங்கள் இறைவனின் மீது தவக்குல் - நம்பிக்கை வைத்து எங்கள் காரியங்களை பொறுப்பு சாட்டியவர்கள்" என்றார்கள். அப்போது, உமர் ரலி அவர்கள் நீங்கள் இறைவனின் மீது தவக்குல் - நம்பிக்கை வைத்து உங்கள் காரியங்களை பொறுப்பு சாட்டியவர்கள் அல்லர்" என்றார்கள். மேலும், அவர்களை நோக்கி தனது சாட்டையை உயர்த்தி கலீபா உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: உழைக்காமல், வருமானத்தைத் தேடி வெளியே செல்லாமல் உங்களில் எவரும் இருக்கக்கூடாது.

அல்லாஹ்வே எனக்கு உணவை வழங்கு என பிரார்த்தனை செய்தால் மட்டும் போதாது. வானம் தங்கத்தையோ, வெள்ளியையோ மழையில் பொழிவதில்லை’. நீங்கள் ஜும்ஆ சூராவின் 10 -ம் வசனத்தை ஓத வில்லையா?" என்று கேட்டு விட்டு அவர்களை பள்ளியை விட்டும் வெளியேற்றினார்கள். ( நூல்: மனாகிபு உமர் )

وقيل : " لأحمد بن حنبل " رضي الله عنه : ما تقول فيمن جلس في بيته أو مسجده وقال : لا أعمل شيئا حتى يأتيني رزقي " ؟ فقال : " أحمد " : هذا رجل جهل العلم أما سمع قول النبي صلى الله عليه وسلم : إن الله جعل رزقي تحت ظل رمحي .

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களிடம் "நான் எந்த வேலையும் செய்ய மாட்டேன். ஆனால், அல்லாஹ் என் ரிஜ்கை எனக்கு தருவான்" என்று எங்கும் செல்லாமல் வீட்டிலும், பள்ளியிலும் இருந்து கொண்டு கூறும் ஒரு மனிதனை பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?" என்று வினவப்பட்டது. அதற்கு இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் "அவன் ஒரு அறிவு கெட்ட மனிதன் ஆவான்" என்று கூறி விட்டு, "என் ரிஜ்கை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் என் ஈட்டியின் நிழலில் வைத்துள்ளான்" என்று மாநபி (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள்" என்றார்களாம். ( நூல்: மவ்இளத்துல் முஃமினீன் மின் இஹ்யா உலூமுத்தீன் லிஇமாமி முஹம்மது ஜமாலுத்தீன் அல் காஸிமி )

2) இரண்டாம் வகையினர்....

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ' أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا، وَمَنْ كَانَتْ فِيهِ خَلَّةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَلَّةٌ مِنْ نِفَاقٍ حَتَّى يَدَعَهَا: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا خَاصَمَ فَجَرَ ' غَيْرَ أَنَّ فِي حَدِيثِ سُفْيَانَ: «وَإِنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ»

நான்கு குணங்கள் ஒருவனிடத்தில் இருந்தால் அவன் தெளிவான நயவஞ்சகன். இவற்றில் ஒரு குணம் இருந்தால் அதை அவன் விடும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பகுதி அவனிடம் தங்கி விடும். (அந்நான்கு குணங்களாவன) 1.பேசினால் பொய் பேசுவான். 2. ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வான் 3. வாக்களித்தால் மாறு செய்வான். 4. வழக்காடினால் குற்றமிழைப்பான். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர். அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி), ( நூல்: புகாரி முஸ்லிம் )

நம்பிக்கை துரோகம் - மோசடி என்பது பல்வேறு வகைகளில் நிகழ்கிறது.

1) பொறுப்புகள் மற்றும் கடமைகளில் நம்பிக்கை துரோகம் - மோசடி...

إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَا مِنْ عَبْدٍ يَسْتَرْعِيهِ اللهُ رَعِيَّةً، يَمُوتُ يَوْمَ يَمُوتُ وَهُوَ غَاشٌّ لِرَعِيَّتِهِ، إِلَّا حَرَّمَ اللهُ عَلَيْهِ الْجَنَّةَ»

அல்லாஹ் ஒருவருக்கு பொறுப்பை வழங்கி அவர் தன் பொறுப்பில் மோசடி செய்தவராக மரணிப்பாரானால் அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை தடை செய்து விடுவான் என நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: மஅகல் இப்னு யஸார் (ரலி), நூல்: புகாரி முஸ்லிம் )

عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ' إِذَا جَمَعَ اللهُ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ يَوْمَ الْقِيَامَةِ، يُرْفَعُ لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ، فَقِيلَ: هَذِهِ غَدْرَةُ فُلَانِ بْنِ فُلَانٍ '،

ஆரம்பமானவர்கள், இறுதியானவர்கள் (என்று) அனைவரையும் அல்லாஹ் மறுமையில் ஒன்று திரட்டுவான். (அப்போது) மோசடி செய்த ஒவ்வொருவருக்கும் ஒரு கொடி உயர்த்தப்படும். இது இன்னாரின் மோசடியாகும். என்று கூறப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), (நூல்: புகாரி முஸ்லிம்)

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَامَ فِينَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ، فَذَكَرَ الْغُلُولَ، فَعَظَّمَهُ وَعَظَّمَ أَمْرَهُ، ثُمَّ قَالَ: ' لَا أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ بَعِيرٌ لَهُ رُغَاءٌ، يَقُولُ: يَا رَسُولَ اللهِ، أَغِثْنِي، فَأَقُولُ: لَا أَمْلِكُ لَكَ شَيْئًا، قَدْ أَبْلَغْتُكَ، لَا أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ فَرَسٌ لَهُ حَمْحَمَةٌ، فَيَقُولُ: يَا رَسُولَ اللهِ، أَغِثْنِي، فَأَقُولُ: لَا أَمْلِكُ لَكَ شَيْئًا، قَدْ أَبْلَغْتُكَ، لَا أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ شَاةٌ لَهَا ثُغَاءٌ، يَقُولُ: يَا رَسُولَ اللهِ، أَغِثْنِي، فَأَقُولُ: لَا أَمْلِكُ لَكَ شَيْئًا، قَدْ أَبْلَغْتُكَ، لَا أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ نَفْسٌ لَهَا صِيَاحٌ، فَيَقُولُ: يَا رَسُولَ اللهِ، أَغِثْنِي، فَأَقُولُ: لَا أَمْلِكُ لَكَ شَيْئًا، قَدْ أَبْلَغْتُكَ، لَا أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ رِقَاعٌ تَخْفِقُ، فَيَقُولُ: يَا رَسُولَ اللهِ، أَغِثْنِي، فَأَقُولُ: لَا أَمْلِكُ لَكَ شَيْئًا، قَدْ أَبْلَغْتُكَ، لَا أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ صَامِتٌ، فَيَقُولُ: يَا رَسُولَ اللهِ، أَغِثْنِي، فَأَقُولُ: لَا أَمْلِكُ لَكَ شَيْئًا، قَدْ أَبْلَغْتُكَ '،

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களி டையே எழுந்து நின்று போர்ச் செல்வங்களை மோசடி செய்வது தொடர்பாக பேசினார்கள். அது கடுமையான குற்றம் என்பதையும் அதன் நிலை மிக மோசமானது என்பதையும் எடுத்துரைத்தார்கள். பின்னர் பின்வருமாறு கூறினார்கள்.

மறுமை நாளில் தமது கழுத்தில் கத்திக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைச் சுமந்து கொண்டு வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்என்று அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். அப்போது நான், உனக்கு அல்லாஹ்விடமிருந்து எந்த உதவியும் என்னால் பெற்றுத் தர முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகில் சொல்லி விட்டேன் என்று கூறிவிடுவேன்.

 

அவ்வாறே மறுமை நாளில் தமது கழுத்தில் கனைத்துக் கொண்டிருக்கும் குதிரையைக் கொண்டு வந்து அல்லாஹ் வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். அப்போது நான், உனக்கு அல்லாஹ்விடமிருந்து எந்த உதவியும் என்னால் பெற்றுத்தர முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகில் சொல்லி விட்டேன் என்று கூறிவிடுவேன்.

அதே போன்று மறுமைநாளில் தமது கழுத்தில் வெள்ளி யையும் தங்கத்தையும் சுமந்து கொண்டு வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். அப்போது நான், உனக்கு அல்லாஹ்விடமிருந்து எந்த உதவியும் என்னால் பெற்றுத் தர முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகில் சொல்லி விட்டேன் என்று கூறிவிடுவேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்)

عَنْ عُرْوَةَ، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ، قَالَ: اسْتَعْمَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مِنَ الْأَسْدِ، يُقَالُ لَهُ: ابْنُ اللُّتْبِيَّةِ - قَالَ عَمْرٌو: وَابْنُ أَبِي عُمَرَ - عَلَى الصَّدَقَةِ، فَلَمَّا قَدِمَ قَالَ: هَذَا لَكُمْ، وَهَذَا لِي، أُهْدِيَ لِي، قَالَ: فَقَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ، فَحَمِدَ اللهَ، وَأَثْنَى عَلَيْهِ، وَقَالَ: ' مَا بَالُ عَامِلٍ أَبْعَثُهُ، فَيَقُولُ: هَذَا لَكُمْ، وَهَذَا أُهْدِيَ لِي، أَفَلَا قَعَدَ فِي بَيْتِ أَبِيهِ، أَوْ فِي بَيْتِ أُمِّهِ، حَتَّى يَنْظُرَ أَيُهْدَى إِلَيْهِ أَمْ لَا؟ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَا يَنَالُ أَحَدٌ مِنْكُمْ مِنْهَا شَيْئًا إِلَّا جَاءَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ يَحْمِلُهُ عَلَى عُنُقِهِ بَعِيرٌ لَهُ رُغَاءٌ، أَوْ بَقَرَةٌ لَهَا خُوَارٌ، أَوْ شَاةٌ تَيْعِرُ '، ثُمَّ رَفَعَ يَدَيْهِ حَتَّى رَأَيْنَا عُفْرَتَيْ إِبْطَيْهِ، ثُمَّ قَالَ: «اللهُمَّ، هَلْ بَلَّغْتُ؟» مَرَّتَيْنِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்த் குலத்தைச் சேர்ந்த இப்னுல் லுத்தபிய்யா என்றழைக்கப்பட்ட ஒருவரை ஸகாத் பொருட்களை வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் (ஸகாத் பொருட்களை யெல்லாம் வசூலித்துக் கொண்டு) வந்து இவை உங்களுக்குரியவை. இவை எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டவை என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை மீது நின்று கொண்டு ஒரு வேலை நிமித்தம் நாம் அனுப்பி வைக்கின்ற அதிகாரியின் நிலை என்ன? (என்று பார்த்தீர்களா? அவர் பணியை முடித்து விட்டு திரும்பி வந்து) இவை உங்களுக்கு ரியவை இவை எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டவை என்று கூறுகிறாரே. அவர் (மட்டும் எங்கும் செல்லாமல்) தம் தந்தை அல்லது தாயின் வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு தமக்கு அன்பளிப்பு வழங்கப் படுகிறதா இல்லையா என்று பார்க்கட்டும்.

முஹம்மதின் உயிர் யாருடைய கையில் உள்ளதோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களில் ஒருவர் அந்தப் பொருட்களிலிருந்து எதை எடுத்துக் கொண்டு வந்தாலும் மறுமை நாளில் அதைத் தமது கழுத்தில் சுமந்தவாறு தான் வருவார். ஒரு ஒட்டகமாக இருந்தால் கத்திக் கொண்டி ருக்கும். அது மாடாகவோ ஆடாகவோ இருந்தாலும் கத்திக் கொண்டிருக்கும் என்று கூறினார்கள். பின்னர் அன்னாருடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவிற்குத் தம்முடைய கைகள் இரண்டையும் உயர்த்தி, யா அல்லாஹ்! நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? என்று மூன்று முறை கூறினார்கள். (அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரழி), நூல்: முஸ்லிம், அபூதாவூத்)

3) மூன்றாவது வகையினர்...

عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَلْمُؤْمِنُ غِرٌّ كَرِيْمٌ، وَالْفَاجِرُ خَبٌّ لَئِيْمٌ. رواه ابوداؤد،

ஒரு முஃமின் கள்ளம் கபடமற்றவராகவும், கண்ணியமானவராகவும் இருப்பார், பாவியோ, ஏமாற்றுபவனாகவும், கீழ்த்தரமானவனாகவும் இருப்பான்என நபி அவர்கள் கூறினார்கள். ( நூல்: அபூதாவூத் )

 عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ مَلْعُونٌ مَنْ ضَارَّ مُؤْمِنًا أَوْ مَكَرَ بِهِ ‏”‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ ‏

எவர் ஒரு இறைநம்பிக்கையாளருக்குத் தீங்கு விளைவிக்கிறாரோ அல்லது இறைநம்பிக்கையாளரை ஏமாற்றுகிறாரோ அவர் அல்லாஹ்வுடைய சாபத்திற்கு ஆளானவர் ஆவார்என் நபி அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதி )

وَعَنْ أَبِي بَكْرٍ اَلصِّدِّيقِ ‏- رضى الله عنه ‏- قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ ‏- صلى الله عليه وسلم ‏-{ لَا يَدْخُلُ اَلْجَنَّةَ خِبٌّ, وَلَا بَخِيلٌ, وَلَا سَيِّئُ اَلْمَلَكَةِ أَخْرَجَهُ اَلتِّرْمِذِيُّ.

ஏமாற்றுபவர், கருமித் தனம் உள்ளவர், உபகாரம் செய்த பின் சொல்லிக்காட்டுபவர் ஆகியோர் சுவனம் செல்லமாட்டார்கள்என நபி அவர்கள் கூறினார்கள்.( நூல்: திர்மிதி )

عَنْ حُذَيْفَة قَالَ: حَدَّثَنَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم حَدِيثَيْنِ: رَأَيْتُ أَحَدَهُمَا وَأَنَا أَنْتَظِرُ الْآخَرَ: حَدَّثَنَا: أَنَّ ‌الْأَمَانَةَ ‌نَزَلَتْ فِي جَذْرِ قُلُوبِ الرِّجَالِ، ثُمَّ عَلِمُوا مِنَ الْقُرْآنِ، ثُمَّ عَلِمُوا مِنَ السُّنَّةِ.

وَحَدَّثَنَا عَنْ رَفْعِهَا قَالَ: يَنَامُ الرَّجُلُ النَّوْمَةَ فَتُقْبَضُ الْأَمَانَةُ مِنْ قَلْبِهِ، فَيَظَلُّ أَثَرُهَا مِثْلَ أَثَرِ الْوَكْتِ، ثُمَّ يَنَامُ النَّوْمَةَ فَتُقْبَضُ فَيَبْقَى أَثَرُهَا مِثْلَ الْمَجْلِ، كَجَمْرٍ دَحْرَجْتَهُ عَلَى رِجْلِكَ فَنَفِطَ فَتَرَاهُ مُنْتَبِرًا وَلَيْسَ فِيهِ شَيْءٌ، فَيُصْبِحُ النَّاسُ يَتَبَايَعُونَ فَلَا يَكَادُ أَحَدٌ يُؤَدِّي الْأَمَانَةَ، فَيُقَالُ: إِنَّ فِي بَنِي فُلَانٍ رَجُلًا أَمِينًا، وَيُقَالُ لِلرَّجُلِ: مَا أَعْقَلَهُ وَمَا أَظْرَفَهُ وَمَا أَجْلَدَهُ، وَمَا فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةِ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ.

"وَلَقَدْ أَتَى عَلَيَّ زَمَانٌ وَمَا أُبَالِي أَيَّكُمْ بَايَعْتُ، لَئِنْ كَانَ مُسْلِمًا رَدَّهُ الْإِسْلَامُ، وَإِنْ كَانَ نَصْرَانِيًّا رَدَّهُ عَلَيَّ سَاعِيهِ، فَأَمَّا الْيَوْمَ فَمَا كُنْتُ أُبَايِعُ إِلَّا فُلَانًا وَفُلَانًا" رواه البخاري (6497)، ومسلم (143

ஹுதைஃபா இப்னு அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (நம்பகத்தன்மை தொடர்பாக) இரு செய்திகளைக் கூறினார்கள். அவற்றில் ஒன்றை நான் (என் வாழ்நாளிலேயே) பார்த்து விட்டேன். மற்றொன்றை எதிர்பார்த்(துக் காத்)திருக்கிறேன்.

ஒரு செய்தி யாதெனில், (இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ்மனத்தில் ("அமானத்" எனும்) நம்பகத் தன்மை இடம்பிடித்தது. பிறகு குர்ஆன் அருளப்பெற்றபோது குர்ஆனிலிருந்தும் (அதை) அறிந்துகொண்டார்கள்; (எனது வழியான) "சுன்னா"விலிருந்தும் அறிந்துகொண்டார்கள். (நபியவர்கள் கூறிய இதை நான் பார்த்துவிட்டேன்.)

இரண்டாவது செய்தி, நம்பகத்தன்மை அகற்றப்படுவது தொடர்பானதாகும். மனிதன் ஒரு முறை உறங்குவான். (உறக்கத்திலேயே) அவனது உள்ளத்திலிருந்து நம்பகத்தன்மை (சிறிது) கைப்பற்றப்படும். அதையடுத்து அ(து அகற்றப்பட்ட)தன் அடையாளம் சிறு (கரும்)புள்ளி அளவுக்கு (அவனில்) தங்கிவிடும். பிறகு மீண்டும் ஒரு முறை அவன் உறங்குவான். அப்போது (மறுபடியும்) அது கைப்பற்றப்படும். இம்முறை அ(து கைப்பற்றப்பட்ட)தன் அடையாளம் (கடின உழைப்பால் கையில் ஏற்படும்) காய்ப்பு அளவுக்கு அவனில் நிலைத்துவிடும். (இவ்வாறு முதலில் "நம்பகத்தன்மை" எனும் ஒளி உள்ளத்தில் ஏற்றப்பட்டுப் பிறகு சிறிது சிறிதாக அது அணைக்கப்படுவதானது,) காலில் தீக்கங்கை உருட்டிவிட்டு, அதனால் கால் கொப்புளித்து உப்பிவிடுவதைப் போன்றதாகும். பார்வையில் அது உப்பிப் பெரியதாகத் தெரியுமே தவிர, அதனுள் ஒன்றும் இருக்காது. -பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறு கற்களை எடுத்துத் தமது காலால் அதை உருட்டிக் காட்டினார்கள்.-

பின்னர் காலையில் மக்கள் தங்களிடையே கொடுக்கல் வாங்கல் செய்துகொள்வார்கள். (ஆனால், அவர்களில்) யாருமே நம்பிக்கையைக் காப்பாற்ற முனையமாட்டார்கள். இன்னாருடைய மக்களில் நம்பிக்கையாளரான ஒருவர் இருக்கிறார் என்று (தேடிக் கண்டுபிடித்து) சொல்லப்படும் (அளவுக்கு நம்பிக்கையாளர்கள் அரிதாகிவிடுவார்கள்). மேலும், ஒருவரைப் பற்றி "அவருடைய வீரம்தான் என்ன? அவருடைய விவேகம்தான் என்ன? அவருடைய அறிவுதான் என்ன?" என்று (சிலாகித்து) கூறப்படும். ஆனால், அந்த மனிதருடைய இதயத்தில் கடுகளவுகூட இறைநம்பிக்கை இருக்காது.

(அறிவிப்பாளர் ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:)

என்மீது ஒரு காலம் வந்திருந்தது. அக்காலத்தில் நான் உங்களில் யாரிடம் கொடுக்கல் வாங்கல் செய்கிறேன் என்று பொருட்படுத்தியதில்லை. (ஏனெனில்,) முஸ்லிமாக இருந்தால், இஸ்லாம் (எனது பொருளை) அவரிடமிருந்து மீட்டுத் தந்துவிடும். கிறிஸ்தவராகவோ யூதராகவோ இருந்தால் அவருக்கான அதிகாரி (எனது பொருளை) அவரிடமிருந்து மீட்டுத் தந்துவிடுவார். ஆனால், இன்றோ நான் இன்னார், இன்னாரிடம் மட்டுமே கொடுக்கல் வாங்கல் செய்யத் தயாராக இருக்கிறேன்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. 

4) நான்காம் வகையினர் (1)....

 

عَنْ سُفْيَانَ بْنِ اَسِيْدِ نِ الْحَضْرَمِيِّؓ قَالَ:سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ:كَبُرَتْ خِيَانَةً اَنْ تُحَدِّثَ اَخَاكَ حَدِيْثًا هُوَ لَكَ بِهِ مُصَدِّقٌ وَاَنْتَ لَهُ بِهِ كَاذِبٌ. رواه ابو 

நீங்கள் உங்கள் சகோதரனிடம் ஏதேனுமொரு பொய்யான செய்தியைச் சொல்ல, அதை அவர் உண்மை என்று நம்புகிறார், இது மிகப்பெரும் மோசடியாகும்” ( நூல்: அபூதாவூத் )

كَفَى بِالْمَرْءِ إِثْمًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ

ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம். ( நூல்: அபூதாவூத் )

நிச்சயமாக உண்மை என்பது புண்ணியச் செயலுக்கு வழி காட்டுகிறது. புண்ணியச் செயல் சுவர்க்கம் செல்ல வழி காட்டுகிறது. திண்ணமாக ஒரு மனிதன் உண்மையையே பேசிக் கொண்டி ருக்கிறான். இறுதியில் அவன் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான்.

عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏“‏ إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ، وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ، وَإِنَّ الرَّجُلَلَيَصْدُقُ حَتَّى يَكُونَ صِدِّيقًا، وَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ، وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ، حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا

 

உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும. ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் வாய்மையாளர்’ (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆம்விடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யர்எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். ( நூல்: புகாரி )

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ، أَنَّهُ قَالَ: دَعَتْنِي أُمِّي يَوْمًا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ فِي بَيْتِنَا، فَقَالَتْ: هَا تَعَالَ أُعْطِيكَ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا أَرَدْتِ أَنْ تُعْطِيهِ؟» قَالَتْ: أُعْطِيهِ تَمْرًا، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا إِنَّكِ لَوْ لَمْ تُعْطِهِ شَيْئًا كُتِبَتْ عَلَيْكِ كِذْبَةٌ

அப்துல்லாஹ் இப்னு ஆமிர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டில் அமர்திருக்கும் போது என் அன்னை இங்கே வாநான் உனக்கு ஒன்று தருகிறேன் என்று என்னை அழைத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவருக்கு என்ன தரப்போகிறாய் என்று (என் தாயிடம்) வினவினார்கள். (அதற்கு என் தாய்) நான் அவருக்கு ஒரு பேரிச்சம் பழம் கொடுப்பேன் என்று கூறினார்கள். (அதற்கு) நபி (ஸல்) அவர்கள் நீங்கள் அவருக்கு ஒன்றும் தராமல் இருந்தால் நீங்கள் பொய் கூறியவராகியிருப்பீர்கள் என்று கூறினார்கள். ( நூல்: அபூதாவூத் )

وَيْلٌ لِلَّذِي يُحَدِّثُ بِالحَدِيثِ لِيُضْحِكَ بِهِ القَوْمَ فَيَكْذِبُ، وَيْلٌ لَهُ وَيْلٌ لَهُ

மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசி, பொய் சொல்பவனுக்கு கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். அறி : முஆவியா இப்னு ஹைதா (ரலி), ( நூல்: திர்மிதி, அபூதாவூத் )

ففي حديث سمرة بن جندب رضي الله عنه عن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال: (فَانْطَلَقْنَا فَأَتَيْنَا عَلَى رَجُلٍ مُسْتَلْقٍ لِقَفَاهُ، وَإِذَا آخَرُ قَائِمٌ عَلَيْهِ بِكَلُّوبٍ مِنْ حَدِيدٍ، وَإِذَا هُوَ يَأْتِي أَحَدَ شِقَّيْ وَجْهِهِ فَيُشَرْشِرُ شِدْقَهُ إِلَى قَفَاهُ، وَمَنْخِرَهُ إِلَى قَفَاهُ، وَعَيْنَهُ إِلَى قَفَاهُ، قَالَ: ثُمَّ يَتَحَوَّلُ إِلَى الْجَانِبِ الآخَرِ فَيَفْعَلُ بِهِ مِثْلَ مَا فَعَلَ بِالْجَانِبِ الأَوَّلِ، فَمَا يَفْرُغُ مِنْ ذَلِكَ الْجَانِبِ حَتَّى يَصِحَّ ذَلِكَ الْجَانِبُ كَمَا كَانَ ثُمَّ يَعُودُ عَلَيْهِ فَيَفْعَلُ مِثْلَ مَا فَعَلَ الْمَرَّةَ الأُولَى. قَالَ: قُلْتُ: سُبْحَانَ اللَّهِ! مَا هَذَانِ؟

ثم قال عن هذا المعذب في آخر الحديث: (إنه الرجل يغدو من بيته، فيكذب الكذبة تبلغ الآفاق ..) رواه البخاري.

ஸமுரா இப்னு ஜுன்தப் (ரலி) அறிவித்தார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?’ என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு (நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:

இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, ‘நடங்கள்என்றனர். நான், அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். அல்லது பிளந்தார்.

பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், ‘அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?’ என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்என்றனர்.

 

நான் அவ்விருவரிடமும், “நேற்றிரவு முதல் நான், பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?’ என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், (நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம். தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும். அறிவிப்பாளர் : சமுரா இப்னு ஜுன்தப் (ரலி), ( நூல்: புகாரி: நீண்ட ஹதீஸின் சுருக்கம் )

4) நான்காம் வகையினர் (2)...

கஞ்சத்தனம் செய்பவருக்கும், செய்யத் தூண்டுபவருக்கும் கேடு....

الَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ النَّاسَ بِالْبُخْلِ وَيَكْتُمُونَ مَا آتَاهُمُ اللَّهُ مِن فَضْلِهِ ۗ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُّهِينًا

அத்தகையோர் கஞ்சத்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படித் தூண்டி, அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக்கொள்கிறார்கள். அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். (அல்குர்ஆன்: 4: 37 )

الَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ النَّاسَ بِالْبُخْلِ وَمَن يَتَوَلَّ فَإِنَّ اللَّهَ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ

எவர்கள் கஞ்சத்தனம்; செய்து கஞ்சத்தனம்; செய்யுமாறு மனிதர்களையும் ஏவுகிறார்களோ! எவர் (அல்லாஹ்வின் கட்டளைகளைப்) புறக்கணிக்கிறார்களோ! – (இவர்களே நட்டவாளிகள்.) நிச்சயமாக அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன். புகழ் மிக்கவன் . (அல்குர்ஆன்: 57: 24 )

கஞ்சத்தனத்தில் இருந்து பாதுகாக்குமாறு துஆ...

இறைவா! நான் உன்னிடம் கஞ்சத்தனத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும், மண்ணறையின் (கப்ரின்) வேதனையிலிருந்தும், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும், வாழ்வு மற்றும் மரண வேளையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்து வந்தார்கள். (நூல் புகாரி 4707)

கஞ்சத்தனத்தை அஞ்சிய மேன்மக்கள்...

عَنْ أَبِي الهَيَّاجِ الأَسَدِيِّ رحمه الله قَالَ: (كُنْتُ أَطُوفُ بِالبَيْتِ، فَرَأَيْتُ رَجُلًا يَقُولُ: "اللَّهُمَّ قِنِي شُحَّ نَفْسِي". لَا يَزِيدُ عَلَى ذَلِكَ، فَقُلْتُ لَهُ، فَقَالَ: "إِنِّي إِذَا وُقِيتُ شُحَّ نَفْسِي؛ لَمْ أَسْرِقْ، وَلَمْ أَزْنِ، وَلَمْ أَفْعَلْ". وَإِذَا الرَّجُلُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رضي الله عنه

அபில் ஹய்யாஜில் அஸதி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நான் கஅபா ஆலயத்தை (தவாஃப்) வலம் வந்துகொண்டிருந்தேன். அப்போது,

"அல்லாஹ்வே! என்னுடைய மனதை கருமித்தனத்தில் இருந்து காப்பாற்றுவாயாக! என்று ஒரு மனிதர் பிரார்த்தனை செய்வதைப் பார்த்தேன். அதைவிட அதிகமாக அவர் எதுவும் கூறவில்லை. அதைப்பற்றி நான் அவரிடம் கேட்டேன். அவர், என் மனதின் கருமித்தனத்திலிருந்து நான் காப்பாற்றப்பட்டால், நான் திருடாமலும் விபச்சாரம் போன்ற தீமைகளைச் செய்யாமலும் வேறு எந்தத் தவறுகளையும் செய்யாமலும் இருப்பேன்" என்றார். பிறகு (அவர் யாரென உற்று) பார்த்தபோது அந்த மனிதர் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள்தாம்" என்றார்கள். ( நூல்: நிதாஆத்திர் ரஹ்மான் லிஅபீபக்ரில் ஜஸாயிரீ )

قالَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ: لو قدْ جَاءَنِي مَالُ البَحْرَيْنِ لقَدْ أَعْطَيْتُكَ هَكَذَا وهَكَذَا وهَكَذَا، فَلَمْ يَجِئْ حتَّى قُبِضَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ، فَلَمَّا جَاءَ مَالُ البَحْرَيْنِ، أَمَرَ أَبُو بَكْرٍ مُنَادِيًا فَنَادَى: مَن كانَ له عِنْدَ رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ دَيْنٌ أَوْ عِدَةٌ فَلْيَأْتِنَا، فأتَيْتُهُ فَقُلتُ: إنَّ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ قالَ لي كَذَا وكَذَا، فَحَثَا لي ثَلَاثًا، - وجَعَلَ سُفْيَانُ يَحْثُو بكَفَّيْهِ جَمِيعًا، ثُمَّ قالَ لَنَا: هَكَذَا قالَ لَنَا ابنُ المُنْكَدِرِ -، وقالَ مَرَّةً فأتَيْتُ أَبَا بَكْرٍ، فَسَأَلْتُ، فَلَمْ يُعْطِنِي، ثُمَّ أَتَيْتُهُ فَلَمْ يُعْطِنِي، ثُمَّ أَتَيْتُهُ الثَّالِثَةَ فَقُلتُ: سَأَلْتُكَ فَلَمْ تُعْطِنِي، ثُمَّ سَأَلْتُكَ فَلَمْ تُعْطِنِي، ثُمَّ سَأَلْتُكَ فَلَمْ تُعْطِنِي، فَإِمَّا أَنْ تُعْطِيَنِي، وإمَّا أَنْ تَبْخَلَ عَنِّي قالَ: قُلْتَ: تَبْخَلُ عَنِّي؟ ما مَنَعْتُكَ مِن مَرَّةٍ إلَّا وأَنَا أُرِيدُ أَنْ أُعْطِيَكَ، قالَ سُفْيَانُ، وحَدَّثَنَا عَمْرٌو، عن مُحَمَّدِ بنِ عَلِيٍّ، عن جَابِرٍ، فَحَثَا لي حَثْيَةً وقالَ: عُدَّهَا فَوَجَدْتُهَا خَمْسَ مِئَةٍ، قالَ: فَخُذْ مِثْلَهَا مَرَّتَيْنِ، وقالَ يَعْنِي ابْنَ المُنْكَدِرِ: وأَيُّ دَاءٍ أَدْوَأُ مِنَ البُخْلِ

ஜாபிர்(ரலி) கூறினார்கள்நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சென்று கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுக்கவில்லை. மீண்டும் நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் எனக்குக் கொடுக்கவில்லை. பிறகு மூன்றாம் முறையாக நான் அவர்களிடம் சென்று, ‘உங்களிடம் நான் (முதல் முறையாகக்) கேட்டும் நீங்கள் எனக்குத் தரவில்லை. பிறகு மீண்டும் உங்களிடம் கேட்டேன். நீங்கள் எனக்குத் தரவில்லை. ஒன்று, நீங்கள் எனக்குத் தரவேண்டும்; இல்லையெனில், என்னிடம் நீங்கள் கஞ்சத்தனம் காட்டுவதாகப் பொருள்என்று கூறினேன்.

அதற்கு அவர்கள், ‘நான் உங்களிடம் கஞ்சத்தனம் காட்டுகிறேன் என்றா சொன்னீர்கள்? நான் உங்களுக்குத் தராமலிருந்துவிட்ட ஒவ்வொரு முறையும் உங்களுக்குத் தர விரும்பிய நிலையில் தான் (இருந்தேன்; இருப்பினும் தவிர்க்க முடியாத காரணத்தாலேயே) அப்படிச் செய்தேன்என்று கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில், ‘எனக்கு அபூ பக்ர்(ரலி) கைகள் நிறைய ஒரு முறை அள்ளித் தந்துவிட்டு, ‘இதை எண்ணிக் கொள்என்று கூறினார்கள். நான் (எண்ணிப் பார்த்த போது) அது ஐந்நூறு(திர்ஹம்) இருக்கக் கண்டேன். அபூ பக்ர்(ரலி), ‘இது போன்றதை இரண்டு முறை எடுத்துக் கொள்என்றார்கள்என்று ஜாபிர்(ரலி) கூறினார்கள். அறிவிப்பாளர் முஹம்மத் இப்னு முன்கதிர்(ரஹ்)அவர்கள், ‘கருமித் தனத்தை விட மோசமான நோய் உண்டா?’ என்றார்கள். ( நூல்: புகாரி )

5) ஐந்தாம் வகையினர்.....

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ وَلاَ اللَّعَّانِ وَلاَ الْفَاحِشِ وَلاَ الْبَذِيءِ ‏”‏ ‏.

குறைசொல்பவனாக, சபிப்பவனாக, கெட்ட செயல் செய்பவனாக, கெட்ட வார்த்தைகள் பேசுபவனாக இறைநம்பிக்கையாளன் இருக்க மாட்டான். ( நூல்: திர்மிதி )

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ

لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاحِشًا وَلاَ مُتَفَحِّشًا، وَكَانَ يَقُولُ: «إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنَكُمْ أَخْلاَقًا»

நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே!என்று அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), ( நூல்: புகாரி )

மக்களில் தீயவர்

أَنَّ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا أَخْبَرَتْهُ قَالَتْ

اسْتَأْذَنَ رَجُلٌ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «ائْذَنُوا لَهُ، بِئْسَ أَخُو العَشِيرَةِ، أَوِ ابْنُ العَشِيرَةِ» فَلَمَّا دَخَلَ أَلاَنَ لَهُ الكَلاَمَ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، قُلْتَ الَّذِي قُلْتَ، ثُمَّ أَلَنْتَ لَهُ الكَلاَمَ؟ قَالَ: «أَيْ عَائِشَةُ، إِنَّ شَرَّ النَّاسِ مَنْ تَرَكَهُ النَّاسُ، أَوْ وَدَعَهُ النَّاسُ، اتِّقَاءَ فُحْشِهِ»

ஒரு மனிதர் (எங்கள் வீட்டுக்குள் வர) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”அவரை உள்ளே வரச் சொல்லுங்கள். அந்தக் கூட்டத்தாரிலேயே (இவர்) மோசமானவர்என்று சொன்னார்கள். உள்ளே அவர் வந்த போது (எல்லோரிடமும் பேசுவது போல்) அவரிடம் கனிவாகவே பேசினார்கள். (அவர் பேசி விட்டு எழுந்து சென்றதும்) நான், ”அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (அவரைக் கண்டதும்) ஒன்று சொன்னீர்கள்.

பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே!என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ”ஆயிஷா! யாருடைய அருவருப்பான பேச்சுகளிருந்து (தங்களைத்) தற்காத்துக் கொள்ள அவரை விட்டு மக்கள் ஒதுங்குகிறார்களோ அவரே மக்களில் தீயவர் ஆவார்” (அருவருப்பான பேச்சுகள் பேசும் அவர் குறித்து எச்சரிக்கை செய்யவே அவரைப் பற்றி அவ்வாறு சொன்னேன்) என்றார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ( நூல்: புகாரி )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நரகில் கொண்டு போய் சேர்க்கிற இந்த ஐந்து தீய குணங்களை விட்டும் பாதுகாப்பானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!