Wednesday, 28 January 2026

தனிமை தனித்துவமாய் மலரட்டும்!!!

 

தனிமை தனித்துவமாய் மலரட்டும்!!!

கடந்த ஒரு வார காலமாக சமூக ஊடகங்களில் கூட்டத்தை விட்டும் தனித்து பயணித்த பென்குயின் பற்றிய பதிவுகளை அதிகம் பார்க்க முடிகிறது. அந்தக் காணொளியில் இருந்த பின்னணிக் குரல் தரும் செய்தியும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

"அந்த கூட்டத்தில் ஒன்று மட்டும் எங்களின் கவனத்தை ஈர்த்தது. நடுவில் இருந்த அந்த பென்குயின், பனியின் எல்லையில் உள்ள அதன் உணவருந்தும் பகுதிக்கும் செல்லவில்லை, அதன் காலனிக்கும் திரும்பிச் செல்லவில்லை. சிறிது நேரம் கழித்து அங்கிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தது."

சமூக ஊடகங்களில் வைரலாக உள்ள பென்குயின் காணொளியில் பின்னணியில் ஒலிக்கும் குரல் இது தான்.

கடந்த ஒரு வாரமாக சோஷியல் மீடியாவை திறந்தாலே பென்குயினின் வீடியோ தான் முதலில் வந்து நிற்கிறது. 

நிறைய பேர் ஒற்றை பென்குயின் மலையை நோக்கி செல்லும் புகைப்படத்தை தங்களது செல்போன் வால்பேப்பரில் வைத்து வருகின்றனர். 

இன்னும் சொல்லப்போனால், அமெரிக்க அதிபர் டிரம்ப், பென்குயினுடன் நடந்து செல்லும் எடிட் புகைப்படத்தை வெள்ளை மாளிகை பதிவிட, பென்குயினாக இருந்து விடலாம் உலக பணக்காரரான எலன் மஸ்க்கும் கருத்து தெரிவித்திருந்தார்.

இதேபோல, தமிழக எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி, அந்த பென்குயினை அழைத்துக்கொண்டு தலைமை செயலகத்தை நோக்கி செல்வது போல புகைப்படத்தை பதிவிட்ட ADMK IT WING, PENGUIN NEEDS PEACE என பதிவிட்டது. அதோடு, விஜய்யின் த.வெ.க. ஆதரவு அக்கவுண்டுகளில் பென்குயினுடன் விஜய்யை ஒப்பிட்டு வீடியோ பதிவிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது. 

இப்படி, சாதாரண சமூக வலைதளவாசி தொடங்கி உலக தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், உள்ளூர் தலைவர்கள் வரை எல்லோரும் பென்குயினை புகழ்ந்து வீடியோ, புகைப்படங்களை பதிவிட காரணம் அந்த பென்குயினின் செயல் தான்.

காணொளியின் உண்மை நிலை என்ன?

வெர்னர் ஹெர்சாக் (Werner Herzog) என்ற ஜெர்மன் இயக்குநர், அண்டார்டிகா பனி பிரதேசத்தில் வாழும் உயிரினங்கள் குறித்து ஆவணப் படத்தை இயக்கினார். Encounters at the End of the World என்ற ஆவணப் படத்தை எடுக்க 2007ஆம் ஆண்டு அண்டார்டிகா பனி பிரதேசத்தின் கடல் பகுதிக்கு சென்றிருந்தார் வெர்னர்.

அப்போது, அந்த இடத்தில் பென்குயின் கூட்டம் விளையாடிக் கொண்டிருந்துள்ளது. எல்லா பென்குயின்களும் கடற்கரையை நோக்கி செல்ல, கூட்டத்தில் இருந்த ஒரு பென்குயின் மட்டும் சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மலையை நோக்கி சென்றிருக்கிறது. 

 

பொதுவாக, பென்குயின்கள் கூட்டத்தோடு கூட்டமாக தான் வாழும். ஒரு பென்குயின் சென்றால் எல்லா பென்குயினும் பின்னாடியே செல்லும். ஆனால், ஒரு பென்குயின் மட்டும் தனியாக சென்றதை பார்த்த அந்த இயக்குநர் வெர்னர், தனியாக சென்ற பென்குயினை பலமுறை தூக்கி வந்து கூட்டத்தோடு சேர்த்திருக்கிறார். ஆனாலும், அந்த பென்குயின் மீண்டும் மீண்டும் தனியாக மலையை நோக்கியே நடந்து சென்றிருக்கிறது.

என்ன தான் ஆச்சு பென்குயினுக்கு?

இணையவாசிகள் இதை "நிஹிலிஸ்ட் பென்குயின்" என்று பெயரிட்டுள்ளனர். இது ஆழ்ந்த சிந்தனை, அமைதியான புரட்சி மற்றும் மனச்சோர்வின் சின்னமாக மாறியுள்ளது. ஆனால் உண்மையில் அந்த காணொளியில் என்ன நடக்கிறது? பென்குயின் நெருக்கடியில் உள்ளதா? அல்லது அறிவியல் ஏதேனும் விளக்கத்தை அளிக்கிறதா?

இந்த காணொளி உலகெங்கும் டிரெண்ட் ஆன நிலையில் இது தொடர்பாக ஆவணப்படத்தின் இயக்குநர் வெர்னர் காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அதில், "20 ஆண்டுகளுக்கு முன்பு நான் படம்பிடித்த பென்குயின் ஒன்று இன்றும் பலரின் கற்பனைகளைத் தூண்டுவதைப் பார்க்கையில் ஆச்சரியமாக உள்ளது. இதற்குப் பின்னால் ஒரு கதை உள்ளது. அந்த பென்குயின் தனது மரணத்தை நோக்கி கண்டத்தின் உள்பகுதியில் உள்ள மலைகளை நோக்கி நடக்கத் தொடங்கும். பென்குயின் பற்றி ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் அவற்றின் விநோதத்தன்மை பற்றி என்னிடம் பேசியுள்ளனர்." எனத் தெரிவித்துள்ளார்.

இதே காணொளியில் கடல் சூழலியலாளர் டேவிட் ஐன்லியிடம் பென்குயின்கள் விநோதமாக நடந்து கொள்ளுமா எனக் கேள்வி முன்வைக்கப்பட்ட போது, "அவை சில நேரங்களில் திசைமாறிப் போய் கடலுக்கு மிகத் தொலைவில் சென்றுவிடும்." என்றார்.

அந்த பென்குயினை மீட்டு மீண்டும் அதன் காலனிக்கு அழைத்து வந்தாலும் அது மீண்டும் மலையை நோக்கியே செல்லும் என்றும் அந்த ஆவணப்படத்தில் அவர் குறிப்பிட்டார்.

தனித்த பாதையில் பயணிக்கும் உயிரினங்கள்...

தனித்து வாழ்வது அல்லது தனித்துச் செல்வது என்பது பல உயிரினங்களிலும் காணப்படுகிறது. 

உணவு, வாழ்விடம், இனப்பெருக்கம், உடல்நிலை என்று பல்வேறு காரணங்களுக்காக விலங்குகளும் பறவைகளும் தனித்துச் செல்கின்றன. இவ்வாறு விலங்குகள் தனித்துச் செல்வது குறுகிய காலத்திற்கோ அல்லது நிரந்தரமாகவோ இருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கை முறை அவை வாழும் சூழலுக்கு ஏற்ப மாறுபடும் என்கிறார் உலக காட்டுயிர் நிதியத்தின் இணை இயக்குநரான வினோத் மலயிலேது.

 

"கடல் உயிரினங்களைப் பொருத்தவரை வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள சேர்ந்து வாழும். முட்டையிடுவதற்கும், இரை தேடியும் தான் அவை வேறு இடங்களுக்கு தனித்துச் செல்கின்றன. சில உயிரினங்கள் அடிப்படையில் சேர்ந்து வாழக்கூடியவை, ஆனால் சில உயிரினங்கள் பல்வேறு காரணங்களால் தனித்துச் செல்லும்," என்றார்.

நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கான யானையும் இதற்கு விதிவிலக்கல்ல. குழுக்களாக வாழும் 'சமூக விலங்காக' அறியப்படும் யானையும் சில சந்தர்ப்பங்களில் தனித்துச் செல்லும் என்கிறார் ஊட்டி அரசு கல்லூரி வனவிலங்கு உயிரியல் துறையின் தலைவரும் பேராசிரியருமான ராமகிருஷ்ணன். இவர் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச கூட்டமைப்பில் ஆசிய யானைகளுக்கான சிறப்புக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

14, 15 வயது ஆன உடன் தனித்து விடப்படும் ஆண் யானைகள் 25 வயதாகிற போது தனது இணையை தேர்ந்தெடுத்து தனது கூட்டத்துடன் இணைந்து கொள்ளும்.

இவ்வாறு குழுவிலிருந்து தனித்துச் செல்லும் தன்மை பறவைகளிடமும் காணப்படுவதாகக் குறிப்பிடுகிறார் பிபிசி தமிழிடம் பேசிய பறவைகள் ஆய்வாளரும் மெட்ராஸ் நேச்சுரலிஸ்டிக் சோசைடியின் உறுப்பினருமான சாந்தராம்.

"பறவையினங்கள் மத்தியிலும் இந்த பழக்கம் பரவலாகவே இருந்து வருகிறது. ஒரு குறிப்பிடட பறவை மட்டும் இவ்வாறு நடந்து கொள்ளும் எனக் கூறிவிட முடியாது. கூட்டமாக வாழும் பறவைகள் உணவு, கூடு அமைப்பது மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் வழிதவறிச் செல்வது போன்ற காரணங்களால் தனித்துச் செல்கின்றன." என்று தெரிவித்தார்.

"உணவு கிடைக்கவில்லை என்றாலும் கூடு அமைப்பதற்கு இடம் கிடைக்கவில்லை என்றாலும் பறவைகள் தனித்துச் செல்லும். பெரும்பாலும் சிறிய பறவைகள் தான் வழிதவறிச் செல்கின்றன. குழுக்களாகவே வாழும் பறவைகள் கூட இனப்பெருக்க காலத்தில் தனித்துச் செல்கின்றன," என்றார்.

விலங்குகள் தனிமைப்படுத்திக் கொள்வது அவற்றின் பரிணாம வளர்ச்சியின் மீது தாக்கம் செலுத்துவதாக 2018-ஆம் ஆண்டு புனித ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐரோப்பாவில் பாறை எறும்புகள் (டெம்னோதோராக்ஸ் யூனிஃபாசியேட்டஸ் - Temnothorax unifasciatus) என அறியப்படும் எறும்புகள் பூச்சிக் கொல்லி மருந்துகளால் தாக்கப்பட்டால் உயிரிழக்கின்ற வரை தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

"தனது கூட்டில் வாழும் மற்ற எறும்புகளிடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் தொற்று பரவுவதில் இருந்து காத்து மற்ற எறும்புகள் பாதிக்கப்படுவதை தவிர்க்கிறது," என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் காணப்படும் தேரை இனம் புதிய வாழ்விடத்தை தேடி தனித்துச் செல்லும் வழக்கம் கொண்டுள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

 

வன உயிரினங்கள் மத்தியிலும் தனித்துச் செல்லும் வழக்கம் இருப்பதாகக் கூறுகிறார் மூத்த விஞ்ஞானியும் வன உயிர் ஆய்வாளருமான ஒய்.வி.ஜாலா. இதற்கு உளவியல் என்பதைவிடவும் பரிணாம வளர்ச்சியே காரணம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்,

பூனை குடும்பத்தின் கீழ் வரும் உயிரினங்கள் தனித்து வாழப் பழகி இருந்தாலும் சூழலுக்கு ஏற்ப அவை சேர்ந்தும் வாழ்வதாகக் குறிப்பிடுகிறார். அவர்களின் வாழ்விடத்தை யார் கட்டுப்படுத்துவது என்பதைப் பொருத்தே இவை தீர்மானிக்கப்படுகின்றன என்றார்.

பெண் சிங்கங்கள் குட்டிகளுடனும், பெண் புலிகள் குட்டிகளுடனும் சேர்ந்தே வாழும். ஆண் சிங்கங்கள் மற்றும் ஆண் புலிகள் தனித்தே வாழும்.

இதில் விதிவிலக்காக இரை உபரியாக கிடைக்கும் இடங்களில் ஆண் புலிகள் சேர்ந்திருக்கக் கூடும். ( நன்றி: பிபிசி தமிழ், 28/01/2026, சமயம், 24/01/2026, ஒன் இந்தியா, 24/01/2026 )

பென்குயின் பறவை....

பென்குயின், இது ஒரு பறக்காத பறவை. நீரில் இவை பிரமிக்கத்தக்க வகையில் விரைவாகவும், இலகுவாகவும் நீந்தும். மணிக்கு சுமார் 25 கி.மீ., வேகத்தில் நீந்தும். வாழ்நாளில் 75 சதவீதத்தை நீருக்கடியில் உணவு தேடுவதற்கே செலவழிக்கிறது. இது நீந்துவதே பறப்பதை போல தோன்றும். இவை தென்அரைக்கோளத்தில் குறிப்பாக மனிதனே வசிக்க இயலாத அன்டார்டிகாவில் அதிகளவில் வாழ்கின்றன. கடும் குளிர், பனிப்பாறைகள் நிறைந்த, ஆள் நடமாட்டமே இல்லாத தீவுப் பகுதிகள் இவை வாழ்வதற்கு ஏற்ற இடங்கள்.

ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் அமெரிக்கா மற்றும் கலாபகோஸ் தீவுகளின் கடற்கரைகளிலும், சுமார் 45°-60° S அட்சரேகைகளுக்கு இடைப்பட்ட கடற்பகுதிகளிலும் இவை பரவலாக காணப்படுகின்றன. ( நன்றி: 02/10/2016, விக்கிப்பீடியா )

கிங், ராக்ஹாப்பர், மகெல்லானிக் மற்றும் மகரோனி, எம்பெரர் (Emperor), அடேலி (Adélie), சின்ஸ்ட்ராப் (Chinstrap), ஜென்டூ (Gentoo) என பென்குயின் இனங்களின் பட்டியல் மிக நீண்டது.

சுமார் 16 க்கும் மேற்பட்ட பென்குயின் இனங்கள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாகவே நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அதில் நமக்கான படிப்பினையும், பாடமும் இருக்கிறதா? என்று ஆய்வுக்கண் கொண்டு பார்க்குமாறு இஸ்லாம் தூண்டுவதை மறுக்க இயலாது.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «قَرَصَتْ نَمْلَةٌ نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ، فَأَمَرَ بِقَرْيَةِ النَّمْلِ فَأُحْرِقَتْ فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ: أَنْ قَرَصَتْكَ نَمْلَةٌ؛ أَحْرَقْتَ أُمَّةً مِنَ الْأُمَمِ تُسَبِّحُ!» رَوَاهُ الْبُخَارِيُّ.

 

இறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டுவிட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், ‘ஓர் எறும்பு உங்களைக் கடித்துவிட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீங்கள் எரித்து விட்டீர்களேஎன்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான். ( நூல்: புகாரி )

عن عبدالله بن مسعود أنه قال: كُنَّا مَعَ رَسُولِ اَللهِ فِي سَفَرٍ فَانْطَلَقَ لِحَاجَتِهِ، فَرَأَيْنَا حُمْرَةً مَعَهَا فَرْخَيْنِ فَأَخَذْنَا فَرْخَيْهَا، فَجَاءَتِ الْحُمْرَةُ تَفْرِشُ، فَجَاءَ النَّبِيُّ فَقَالَ: «مَنْ فَجَعَ هَذِهِ بِوَلَدِهَا؟ رُدُّوا وَلَدَهَا إِلَيْهَا»[

நாங்கள் நபி அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது நபி அவர்கள் சுய தேவையை நிறைவேற்ற சென்றார்கள். அந்த நேரத்தில் நாங்கள் ஒரு தாய்ப்பறவையையும் அதன் இரண்டு குஞ்சுகளையும் பார்த்தோம். அப்போது சில நபித்தோழர்கள் அந்த குஞ்சுகளை எடுத்து வந்து விட்டார்கள். அத்தாய்ப்பறவை சிறகுகளை வேக, வேகமாக அடித்துக் கொண்டு எங்களை சுற்றி சுற்றி வட்டமடித்து இறக்கைகளை வேகமாக அடித்தவாறு பறந்தது.

நபி அவர்கள் அதைப் பார்த்த போது, ‘யார் அதன் குஞ்சுகளின் காரணமாக இதை வருத்தத்திற்குள்ளாக்கியது? உடனே அதன் குஞ்சுகளைத் திரும்பக் கொடுங்கள்.என்று கூறினார்கள். ( நூல்: அபுதாவூது )

மேற்கூறிய இரண்டு நிகழ்வுகள் ஊடாக நமக்கு சொல்லப்படும் செய்தி என்ன?

அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் அவர்களும் வெறுமெனே அந்தச் செயலை கண்டித்து விட்டு விட வில்லை. மாறாக, முதல் நிகழ்வில் அல்லாஹ் அந்த எறும்பின் சிறப்புத் தன்மையை அந்த நபிக்கு உணர்த்தினான். இரண்டாவது நிகழ்வில் நபித்தோழர்களுக்கு நபி அவர்கள் அந்த பறவையின் தாய்ப் பாசத்தை உணர்த்தினார்கள்.

எனவே, தான் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அதில் நமக்கான படிப்பினையும், பாடமும் இருக்கிறதா? என்று ஆய்வுக்கண் கொண்டு பார்க்குமாறு இஸ்லாம் தூண்டுவதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பறவையினம் குறித்து அல்குர்ஆன்!

பறவைகள் குறித்து அல்குர்ஆனில் சுமார் 29 இடங்களில் அல்லாஹ் பேசுகிறான். நேரடியாக அத் தைர் - பறவை என்ற வார்த்தையை 21 இடங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். 

அப்படிப் பேசும், குறிப்பிடும் வசனங்களில் பின் வரும் வசனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பறவைகளை நம்மைப் போன்ற ஒரு இனம், ஒரு சமூகம் என்று குறிப்பிடுகின்றான்.

 

وَمَا مِنْ دَآبَّةٍ فِی الْاَرْضِ وَلَا طٰٓىِٕرٍ یَّطِیْرُ بِجَنَاحَیْهِ اِلَّاۤ اُمَمٌ اَمْثَالُكُمْ مَا فَرَّطْنَا فِی الْكِتٰبِ مِنْ شَیْءٍ ثُمَّ اِلٰی رَبِّهِمْ یُحْشَرُوْنَ 

பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும். ( அல்குர்ஆன்: 6: 38 )

பறவைகளுக்கும் அறிவாற்றல் இருக்கிறது...

 

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ یُسَبِّحُ لَهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالطَّیْرُ صٰٓفّٰتٍ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهٗ وَتَسْبِیْحَهٗ وَاللّٰهُ عَلِیْمٌ بِمَا یَفْعَلُوْنَ 

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன; ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது - அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான். ( அல்குர்ஆன்: 24: 41 )

அல்லாஹ்வின் ஆற்றலை அறிய விரும்பிய தன் நேசர் இப்ராஹீம் அலை அவர்களுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நான்கு பறவைகளின் மூலம் உணர்த்தினான்.

وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِ الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا وَاعْلَمْ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ

இப்ராஹீம்(அலை) இறைவனிடம், ’இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கின்றாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!' எனக் கேட்டபோது, அப்படியானால் நீர் நான்கு பறவைகளைப் பிடித்து அவற்றை (நன்கு பழக்கி) உம்முடன் இணங்கி இருக்கச் செய்யும். பின்னர் (அவற்றைத் துண்டுகளாக்கி) அவற்றின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு மலையில் வைத்துவிடும்; பிறகு அவற்றை நீர் கூப்பிடும்! அவை உம்மிடம் விரைந்து வந்துவிடும்.' ( அல்குர்ஆன்: 2: 260 )

மனித சமுகத்தின் முதல் பிரதிநிதியான ஆதம் அலை அவர்களின் இரு புதல்வர்களுக்கு காகத்தின் மூலம் அல்லாஹ் பாடம் நடத்தினான்.

فَطَوَّعَتْ لَهٗ نَفْسُهٗ قَتْلَ اَخِیْهِ فَقَتَلَهٗ فَاَصْبَحَ مِنَ الْخٰسِرِیْنَ ۟

(இதன் பின்னரும்) அவருடைய மனம் தம் சகோதரரைக் கொன்றுவிடுமாறு தூண்டிற்று; ஆகவே அவர் (தம்) சகோதரரைக் கொலை செய்துவிட்டார்; அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் ஒருவர் ஆகிவிட்டார்.

فَبَعَثَ اللّٰهُ غُرَابًا یَّبْحَثُ فِی الْاَرْضِ لِیُرِیَهٗ كَیْفَ یُوَارِیْ سَوْءَةَ اَخِیْهِ قَالَ یٰوَیْلَتٰۤی اَعَجَزْتُ اَنْ اَكُوْنَ مِثْلَ هٰذَا الْغُرَابِ فَاوَارِیَ سَوْءَةَ اَخِیْ فَاَصْبَحَ مِنَ النّٰدِمِیْنَ 

பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார். ( அல்குர்ஆன்: 5: 30,31 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தனது ஆலயமான கஅபாவை அப்ரஹாவின் யானைப்படையிடம் இருந்து பாதுகாத்திட பறவைகளின் பெரும் கூட்டத்தையே அனுப்பினான்.

وَّاَرْسَلَ عَلَیْهِمْ طَیْرًا اَبَابِیْلَ 

மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.

 

تَرْمِیْهِمْ بِحِجَارَةٍ مِّنْ سِجِّیْلٍ 

சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.

 

فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّاْكُوْلٍ 

அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். ( அல்குர்ஆன்: 103: 3-5 )

ஒரு நாட்டின் அரசிக்கும், அந்த நாட்டின் மக்களுக்கும் நேர்வழியை வழங்கிட ஒரேயொரு ஒற்றைப் பறவையையே அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்.

وَاللَّهُ يَدْعُو إِلَى دَارِ السَّلَامِ وَيَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ

தாருஸ் ஸலா(ம் எனும் சுவர்க்க)த்தின்பால் அல்லாஹ் அழைக்கின்றான். மேலும், தான் நாடுவோரை நேரான வழியில் அவன் செலுத்துகின்றான்” (அல்குர்ஆன், 10: 25) 

قال العلّامة عبدالمحسن بن حمد العباد البدر حفظه الله:- والهداية هدايتان: هداية الدلالة والإرشاد، وهذه حاصلة لكل أحد. وهداية التوفيق، وهي حاصلة لمن شاء الله هدايته.

ومن أدلة الهداية الأولى قول الله عزّ وجلّ لنبيّه صلّى الله عليه وسلم: « وإنك لتهدي إلى صراط مستقيم ». (سورة الشورى، الآية - ٥٢) أي: أنك تدعو كل أحد إلى الصراط المستقيم.

ومن أدلة الهداية الثانية قول الله عزّ وجلّ: « إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء ». (سورة القصص، الآية - ٥٦)

وقد جمع الله بين الهدايتين في قوله: « والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم ». (سورة يونس ، الآية - ٢٥) { قطف الجني الداني، ص - ١٠٢ }

அல்லாமா அப்துல் முஹ்சின் பின் ஹம்த் அல்அப்பாத் அல்பத்ர் (ஹஃபிழஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:- நேர்வழி என்பது இரண்டு வகைப்படும். 

01) ஹிதாயதுத் அத்தலாலதி வல்இர்ஷாத்: 'நேர்வழி இதுதான் என்ற வழியைக் காட்டி, அதன்பால் அழைத்தல்'. இந்த வகை ஹிதாயத், எல்லோருக்கும் கிடைக்கும். 

02) ஹிதாயதுத் தவ்fபீக்: 'நேர்வழியில் செல்வதற்கு அருள்புரியப்பட்ட ஹிதாயத்'. இது, நேர்வழியில் செல்ல யாரை அல்லாஹ் நாடி விட்டானோ அவர்களுக்குத்தான் கிடைக்கும். 

(நபியே!) நிச்சயமாக நீர் நேரான பாதையின்பால் வழிகாட்டுகின்றீர்”* (அல்குர்ஆன், 42: 52) என அல்லாஹ் தனது நபிக்குக் கூறும் இக்கூற்று, முதல் வகை ஹிதாயத்திற்கான ஆதாரமாகும். 'அதாவது, நேரான வழியின்பால் ஒவ்வொருவருவரையும் (நபியே) நீர் அழைக்கின்றீர்' என்பதே இதன் பொருளாகும்.

“(நபியே) நீர் விரும்புபவரை நேர்வழியில் செலுத்த நிச்சயமாக உம்மால் முடியாது. எனினும், தான் நாடுவோரையே அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்” (அல்குர்ஆன், 28: 56) என்ற அல்லாஹ்வின் இக்கூற்று, இரண்டாம் வகை ஹிதாயத்திற்கான ஆதாரமாகும்.

இத்தகைய இரண்டாம் வகையான ஹிதாயத்திற்கு ஹுத்ஹுத் என்ற ஒற்றைப் பறவையையே அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தேர்ந்தெடுத்தான்.

( நூல்: 'கத்ஃபுல் ஜனீ அத்தானீ , பக்கம்: 102 )

எனவே, பென்குயின் பறவை இனத்தில் ஒரு பிரிவு தானே என்று நாம் கடந்து சென்று விட முடியாது.

பென்குயின் பறவை எங்கே செல்கிறது?

தனது குடும்பம் மற்றும் கூட்டத்தை விட்டுவிட்டு ஏன் அந்த பென்குயின் தனியே செல்ல வேண்டும்? மற்றவர்கள்போல் தானும் சாதாரண வாழ்க்கையை விரும்பாமல், பென்குயின் ஏதோ ஒன்றைத் தேடிச் செல்கிறதா?

அதற்கு ஏதேனும் மனச் சோர்வா? பைத்தியக்காரத்தனமா? வாழ்க்கைத் தத்துவம் ஏதேனும் அறிந்த பென்குயினா? என்றெல்லாம் சமூக ஊடகங்களில் இணையவாசிகள் கருத்துகளும் கேள்விகளும் எழுப்பி வருகின்றனர்.

இஸ்லாமிய பார்வையில் பதில் கூற நாம் விழைவோமேயானால் சூரா அல் அஃலா (87 வது) அத்தியாயத்தின் மூன்றாவது வசனத்தை மேற்கோள் காட்டலாம்.

سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَی ۟

(நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.

الَّذِیْ خَلَقَ فَسَوّٰی 

அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.

 

وَالَّذِیْ قَدَّرَ فَهَدٰی 

மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.

ஆம், அது எங்கே செல்ல வேண்டும் என அல்லாஹ் வழிகாட்டினானோ அது அதை நோக்கி சென்றது.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் உலகின் எல்லா உயிரினங்களும் இறைவனின் கட்டளைகளுக்கு ஏற்பவே செயல் படுகின்றன.

தேனீக்களை குறித்து பேசும் இரண்டு இறைவசனங்கள் அதற்கு சான்றாகும்.

وَاَوْحٰی رَبُّكَ اِلَی النَّحْلِ اَنِ اتَّخِذِیْ مِنَ الْجِبَالِ بُیُوْتًا وَّمِنَ الشَّجَرِ وَمِمَّا یَعْرِشُوْنَ ۟

உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்),

ثُمَّ كُلِیْ مِنْ كُلِّ الثَّمَرٰتِ فَاسْلُكِیْ سُبُلَ رَبِّكِ ذُلُلًا ؕ یَخْرُجُ مِنْ بُطُوْنِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهٗ فِیْهِ شِفَآءٌ لِّلنَّاسِ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ 

பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. ( அல்குர்ஆன்: 16: 68, 69 )

கூட்டாக வாழும் அமைப்பில் இருந்து விலகி தனியாக, தனிமையில் இருப்பது, தனியாக ஒரு பாதையில் பயணிப்பது இஸ்லாமிய வரலாற்றில் தனித்துவமான ஒன்றாக கவனிக்கப்படுகிறது.

நபி மூஸா அலை அவர்களின் தனிமையான பயணம்...

وَجَآءَ رَجُلٌ مِّنْ اَقْصَا الْمَدِیْنَةِ یَسْعٰی قَالَ یٰمُوْسٰۤی اِنَّ الْمَلَاَ یَاْتَمِرُوْنَ بِكَ لِیَقْتُلُوْكَ فَاخْرُجْ اِنِّیْ لَكَ مِنَ النّٰصِحِیْنَ 

பின்னர், நகரத்தின் ஒரு கோடியிலிருந்து (நன்) மனிதர் ஒருவர் ஓடி வந்து, “மூஸாவே! நிச்சயமாக (இந்நகர்ப்) பிரமுகர்கள் ஒன்று கூடி உம்மைக் கொன்று விட வேண்டுமென ஆலோசனை செய்கிறார்கள்; ஆகவே நீர் (இங்கிருந்து) வெளியேறி விடுவீராக! நிச்சயமாக நாம் உம் நன்மையை நாடுபவர்களில் ஒருவனாவேன்என்று கூறினார்.

 

فَخَرَجَ مِنْهَا خَآىِٕفًا یَّتَرَقَّبُ قَالَ رَبِّ نَجِّنِیْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ

ஆகவே, அவர் பயத்துடனும், கவனமாகவும் அ(ந் நகரத்)தை விட்டுக் கிளம்பி விட்டார்; “என் இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!என்று பிரார்த்தித்தார்.

وَلَمَّا تَوَجَّهَ تِلْقَآءَ مَدْیَنَ قَالَ عَسٰی رَبِّیْۤ اَنْ یَّهْدِیَنِیْ سَوَآءَ السَّبِیْلِ

பின்னர், அவர் மத்யன் (நாட்டின்) பக்கம் சென்ற போது, “என் இறைவன் என்னை நேரான பாதையில் செலுத்தக் கூடும்என்று கூறினார். ( அல்குர்ஆன்: 28: 20-22 )

மூஸா (அலை) அவர்கள் அநியாயக்கார ஆட்சியாளன் ஃபிர்அவ்னின் கொடுங்கோன்மையில் இருந்து தப்பிக்க எகிப்தை விட்டு, இறைநம்பிக்கையோடு இறைவனிடம் பிரார்த்தித்தவராக மத்யனை நோக்கி தனியாக பயணிக்க தொடங்கினார்.

அப்போது மூஸா (அலை) அவர்களுக்கு தெரியாது. தனியொருவராக சென்ற அவர் பயணத்தில் இருந்து திரும்பி வரும் போது தனித்துவமான வரலாற்றுக்கு சொந்தக்காரராய் மிளிர்வார்கள் என்று.

ஆம்! அந்த பயணத்தில் இருந்து திரும்பும் போது தான் நபித்துவத்தோடும், அற்புதங்களை சுமந்த இறைத்தூதராகவும் பரிணமித்தார்கள்.

இப்ராஹீம் அலை அவர்களின் தனிமையான பயணம்...

இறைத்தூதர் இப்ராஹீம் அலை அவர்கள் இறைவனை நிராகரிப்பதிலும், இறைவனுக்கு இணை வைப்பதிலும் மூழ்கிப் போயிருந்த தம் தந்தையை விட்டும், தம் சமூகத்தாரை விட்டும் தனியொருவராக கொள்கைப் பயணத்தை மேற்கொண்டார்கள். அந்த பயணத்தை இறைநம்பிக்கையோடும், பிரார்த்தனையோடும் துவங்கினார்கள்.

அப்போது அவர்களுக்கு அந்த கொள்கைப் பயணம் எவ்வளவு மகத்தான பயணமாக மாறப் போகிறது என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆம்! அந்தப் பயணம் தான் இந்த உலகின் இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களை முன் மாதிரி மனிதராக திகழ வைத்தது.

قَدْ كَانَتْ لَكُمْ اُسْوَةٌ حَسَنَةٌ فِیْۤ اِبْرٰهِیْمَ وَالَّذِیْنَ مَعَهٗ اِذْ قَالُوْا لِقَوْمِهِمْ اِنَّا بُرَءٰٓؤُا مِنْكُمْ وَمِمَّا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَیْنَنَا وَبَیْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَآءُ اَبَدًا حَتّٰی تُؤْمِنُوْا بِاللّٰهِ وَحْدَهٗ اِلَّا قَوْلَ اِبْرٰهِیْمَ لِاَبِیْهِ لَاَسْتَغْفِرَنَّ لَكَ وَمَاۤ اَمْلِكُ لَكَ مِنَ اللّٰهِ مِنْ شَیْءٍ رَبَّنَا عَلَیْكَ تَوَكَّلْنَا وَاِلَیْكَ اَنَبْنَا وَاِلَیْكَ الْمَصِیْرُ 

இப்ராஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது; தம் சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றை விட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்; அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டனஎன்றார்கள். ஆனால் இப்ராஹீம் தம் தந்தையை நோக்கி: அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது; ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்): எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,”

رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِیْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَنَا رَبَّنَا اِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُ 

எங்கள் இறைவா! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்” (என்றும் வேண்டினார்). ( அல்குர்ஆன்: 60: 4, 5 )

தனித்திருப்பதால் சில செயல்களை தனிமையில் செய்வதால் பல்வேறு சிறப்புகள் கிடைப்பதாக இஸ்லாம் கூறுகிறது.

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم:- قَالَ سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ إِمَامٌ عَادِلٌ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللَّهِ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ فِي خَلاَءٍ فَفَاضَتْ عَيْنَاهُ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسْجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ إِلَى نَفْسِهَا قَالَ إِنِّي أَخَافُ اللَّهَ. وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا، حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا صَنَعَتْ يَمِينُهُ

அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம் )

وسأل فَيْضُ بْنُ إِسْحَاقَ الْفُضَيْلَ عَنْ قَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ:

 ﴿ مِنْ خَشِيَ الرَّحْمَنَ بِالْغَيْبِ وَجَاءَ بِقَلْبٍ مُنِيبٍ 

 قَالَ: "الْمُنِيبُ الَّذِي يَذْكُرُ ذَنْبَهُ فِي الْخَلْوَةِ فَيَسْتَغْفِرُ مِنْهُ.

ஃபைள் இப்னு இஸ்ஹாக் அல் ஃபுளைல் (ரஹ்) அவர்களிடம் "எவர்கள், மறைவிலும் அர்ரஹ்மானை அஞ்சி நடந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கும் (அவனையே) முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வருவோருக்கும் (இது வாக்களிக்கப்பட்டிருக்கிறது)." என்ற காஃப் அத்தியாயத்தின் வசனம் குறித்து விளக்கம் கேட்கப்பட்ட போது "முனீப் - இறைவனை நோக்கிய இதயம் கொண்டவர் என்றால் தனிமையில் இருக்கும் போது தான் செய்த பாவங்களை நினைத்து சதாவும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்பவர் என்று பொருள்" என்று கூறினார்கள்.

குழப்பமான காலகட்டத்தில் ஓதுங்கி தனித்து வாழுதல்:

குழப்பங்களில் இருந்து ஒரு முஃமின் ஈடேற்றம் பெற இது இறுதிக்கட்ட வழிமுறையாகும். முஸ்லிம்கள் மத்தியில் பல குழுக்கள், இயக்கங்கள் தோற்றம் பெற்று அவை தலைமைத்துவம் இன்றி சிதறிக் காணப்படும்போது ஒரு முஃமின் தன்னை பாதுகாத்துக்கொள்ள மேற்கொள்ள வேண்டிய இறுதிக்கட்ட நடவடிக்கையாகும்.

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوشِكَ أَنْ يَكُونَ خَيْرَ مَالِ الرَّجُلِ غَنَمٌ يَتْبَعُ بِهَا شَعَفَ الْجِبَالِ وَمَوَاقِعَ الْقَطْرِ يَفِرُّ بِدِينِهِ مِنْ الْفِتَنِ صحيح البخاري

ஒரு மனிதனது செல்வம் ஆட்டு மந்தையாக இருப்பது சிறந்ததாகும் என்றதொரு காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. குழப்பங்களில் இருந்து தனது மார்க்கத்தை பாதுகாத்துக்கொள்ள அவன் அவற்றுடன் மலையடிவாரங்களையும், மழை நீர் தொட்டிகளையும் தேடி ஒதுங்குவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

عَنْ عُثْمَانَ الشَّحَّامِ، قَالَ: انْطَلَقْتُ أَنَا وَفَرْقَدٌ السَّبَخِيُّ إِلَى مُسْلِمِ بْنِ أَبِي بَكْرَةَ وَهُوَ فِي أَرْضِهِ، فَدَخَلْنَا عَلَيْهِ فَقُلْنَا: هَلْ سَمِعْتَ أَبَاكَ يُحَدِّثُ فِي الْفِتَنِ حَدِيثًا؟ قَالَ: نَعَمْ، سَمِعْتُ أَبَا بَكْرَةَ رضي الله عنه يُحَدِّثُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِنَّهَا سَتَكُونُ فِتَنٌ، أَلَا ثُمَّ تَكُونُ فِتْنَةٌ الْقَاعِدُ فِيهَا خَيْرٌ مِنَ الْمَاشِي فِيهَا، وَالْمَاشِي فِيهَا خَيْرٌ مِنَ السَّاعِي إِلَيْهَا، أَلَا فَإِذَا نَزَلَتْ أَوْ وَقَعَتْ فَمَنْ كَانَ لَهُ إِبِلٌ فَلْيَلْحَقْ بِإِبِلِهِ، وَمَنْ كَانَتْ لَهُ غَنَمٌ فَلْيَلْحَقْ بِغَنَمِهِ، وَمَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَلْحَقْ بِأَرْضِهِ»، قَالَ فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ أَرَأَيْتَ مَنْ لَمْ يَكُنْ لَهُ إِبِلٌ وَلَا غَنَمٌ وَلَا أَرْضٌ؟ قَالَ: «يَعْمِدُ إِلَى سَيْفِهِ فَيَدُقُّ عَلَى حَدِّهِ بِحَجَرٍ، ثُمَّ لِيَنْجُ إِنِ اسْتَطَاعَ النَّجَاءَ، اللهُمَّ هَلْ بَلَّغْتُ؟ اللهُمَّ هَلْ بَلَّغْتُ؟ اللهُمَّ هَلْ بَلَّغْتُ؟»، قَالَ: فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ أَرَأَيْتَ إِنْ أُكْرِهْتُ حَتَّى يُنْطَلَقَ بِي إِلَى أَحَدِ الصَّفَّيْنِ، أَوْ إِحْدَى الْفِئَتَيْنِ، فَضَرَبَنِي رَجُلٌ بِسَيْفِهِ، أَوْ يَجِيءُ سَهْمٌ فَيَقْتُلُنِي؟ قَالَ: «يَبُوءُ بِإِثْمِهِ وَإِثْمِكَ، وَيَكُونُ مِنْ أَصْحَابِ النَّارِ».  

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2887]

குழப்பங்கள் ஏற்படும் அறிந்து கொள்ளுங்கள்! குழப்பங்கள் நடந்தே தீரும். அப்போது அமர்ந்திருப்பவர் நடப்பவரை விட சிறந்தவராவார். அதன் பக்கம் நடப்பவர் அதன் அளவில் சென்றுவிட்டவரை விட சிறந்தவராவார். அறிந்து கொள்ளுங்கள் குழப்பங்கள் இறங்கினால் அல்லது நிகழ்ந்தால் யாரிடம் ஒட்டகம் இருக்கின்றதோ அவர் அவரது ஒட்டகத்துடன் சேர்ந்து கொள்ளவும். யாரிடம் ஆட்டு மந்தைகள் இருக்கின்றதோ அவர் தனது ஆடுகளுடன் சேர்ந்து கொள்ளவும். யாரிடம் சொந்தமான காணிகள் இருக்கின்றதோ அவர் தனது காணியில் ஒதுங்கி வாழ்ந்து கொள்ளவும். ஒருவர் பாதுகாப்பை விரும்பினால் அவரது வாளின் கூரை நிலத்தில் தட்டி உடைத்துவிட்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும். அல்லாஹ்வே! நான் எத்தி வைத்துவிட்டேன்; அல்லாஹ்வே! நான் எத்தி வைத்துவிட்டேன், அல்லாஹ்வே! நான் எத்தி வைத்துவிட்டேன் என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே! நான் விரும்பாமல் வற்புறுத்தப்பட்டவனாக ஒரு அணியில் சேர்ந்து போராட நான் பணிக்கப்பட்டிருக்க யாரோ ஒரு மனிதன் என்னை அவனது ஈட்டியினால் அல்லது அம்பினால் என்னைத் தாக்கிவிட்டால் எனது நிலை என்ன? எனக் கேட்டார்கள் அதற்கு அவனது பாவத்தையும் உனது பாவத்தையும் சுமந்து கொண்டு நரகில் நுழைவான் எனப் பதில் அளித்தார்கள். ( நூல்: முஸ்லிம் )

كانَ النَّاسُ يَسْأَلُونَ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ عَنِ الخَيْرِ، وكُنْتُ أَسْأَلُهُ عَنِ الشَّرِّ مَخَافَةَ أَنْ يُدْرِكَنِي، فَقُلتُ: يا رَسولَ اللَّهِ، إنَّا كُنَّا في جَاهِلِيَّةٍ وشَرٍّ، فَجَاءَنَا اللَّهُ بهذا الخَيْرِ، فَهلْ بَعْدَ هذا الخَيْرِ مِن شَرٍّ؟ قالَ: نَعَمْ، قُلتُ: وهلْ بَعْدَ ذلكَ الشَّرِّ مِن خَيْرٍ؟ قالَ: نَعَمْ، وفيهِ دَخَنٌ، قُلتُ: وما دَخَنُهُ؟ قالَ: قَوْمٌ يَهْدُونَ بغيرِ هَدْيِي، تَعْرِفُ منهمْ وتُنْكِرُ، قُلتُ: فَهلْ بَعْدَ ذلكَ الخَيْرِ مِن شَرٍّ؟ قالَ: نَعَمْ، دُعَاةٌ إلى أَبْوَابِ جَهَنَّمَ، مَن أَجَابَهُمْ إلَيْهَا قَذَفُوهُ فِيهَا، قُلتُ: يا رَسولَ اللَّهِ، صِفْهُمْ لَنَا؟ فَقالَ: هُمْ مِن جِلْدَتِنَا، ويَتَكَلَّمُونَ بأَلْسِنَتِنَا، قُلتُ: فَما تَأْمُرُنِي إنْ أَدْرَكَنِي ذلكَ؟ قالَ: تَلْزَمُ جَمَاعَةَ المُسْلِمِينَ وإمَامَهُمْ، قُلتُ: فإنْ لَمْ يَكُنْ لهمْ جَمَاعَةٌ ولَا إمَامٌ؟ قالَ: فَاعْتَزِلْ تِلكَ الفِرَقَ كُلَّهَا، ولو أَنْ تَعَضَّ بأَصْلِ شَجَرَةٍ، حتَّى يُدْرِكَكَ المَوْتُ وأَنْتَ علَى ذلكَ.

الراوي : حذيفة بن اليمان | المحدث : البخاري | المصدر : صحيح البخاري

நபித்தோழர் ஹுதைபா (றழி) கூறுகின்றார்கள்:- மக்கள் நபியர்களிடம் நன்மையைத் பெற்றுத்தரும் காரியங்களைப் பற்றியே வினவுவார்கள். ஆனால் நானோ தீமையைப் பெற்றுத்தரும் விடயங்களைப் பற்றியே நபியவர்களிடம் அதிகம் கேட்டறிவேன். காரணம் யாதெனில் நான் நல்லதை செய்யாவிடிலும் பரவாயில்லை. தீயதில் விழுந்துவிடக் கூடாது என்பதற்காகவே!  

ஒருதடவை நபியிடம் நான் அல்லாஹ்வின் தூதரே! நாம் அன்று ஜாஹிலிய்யத்திலும் வழிகேட்டிலும் இருந்தோம். அப்போதுதான் நீங்கள் சன்மார்க்கமான இஸ்லாத்தை அறிமுகப்படுத்தினீர்கள். நாமும் அதைப் பின்பற்றியதால் தற்போது முஸ்லிம் சமூகம் மிகச் சிறப்பானதொரு நிலையில் உள்ளது. இந்நிலை நீங்கி மீண்டும் பழைய நிலை -ஜாஹிலிய்யத் ஏற்படுமா? என வினவியதற்கு ஆமென நபிகளார் பதிலளித்தார்கள்.

நானோ மீண்டும் அல்லாஹ்வின் தூதரே! அந்த (நவீன ஜாஹிலிய்யத்) நிலை நீங்கி மீண்டும் பழைய நல்ல நிலை திரும்ப வருமா? என்றதற்கு.. ஆம் வரும்தான், ஆனால் முன்னால் இருந்தது போல் இருக்காது. உம்மத்துக்குள் பலவீனம் தோன்றிவிடும் என்று சொல்ல. அதென்ன பலவீனம் என்று கேட்டதற்கு என் உம்மத்தைச் சேர்ந்தவர்களே எனது வழிமுறைகளைப் புறக்கணித்து வேறு அனாச்சாரங்களைப் பின்பற்றுவார்கள். அவர்கள் சில நல்லவற்றையும் செய்யக் காண்பீர்கள்! சில தடுக்கப்பப்பவைகளையும் செய்யக் காண்பீர்! என்றார்கள்.

அந்த நிலைக்குப் பின் திரும்பவும் முஸ்லிம் உம்மத் மார்க்கத்தில் அபாய நிலையை எதிர்கொள்ளுமா? என நான் வினவ, ஆம்! அப்படியொரு காலம் வரும் அக்காலத்தில் நரகின் பக்கம் அழைக்கும் அழைப்பாளர்கள் அதிகரித்து காணப்படுவார்கள். அவர்களின் அழைப்புக்கு பதிலளிப்பவர்களை நரகுக்குள் இழுத்து தள்ளி விடுவார்கள். என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே! நான் அக்காலத்தை அடைந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென வஸிய்யத் செய்யுங்களேன் என்று கேட்டதற்கு ஆம்!! முஸ்லிம் உம்மத்தின் ஜமாஅத்- கூட்டமைப்பையும் அதன் தலைமைத்துவத்தையும் பற்றிப்பிடித்து தலைமைக்குக் கட்டுப்பட்டு பிரிந்து பிளவுபட்டு விடாமல் ஒற்றுமையாக இருப்பீராக எனக் கட்டளையிட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! அக்காலத்தில் முஸ்லிம் தலைமைத்தவமோ ஜமாஅத் கூட்டமைப்போ இல்லாவிட்டால்..... என்று கேட்டதற்கு அப்படியொரு நிலமை ஏற்பட்டால் வழிதவறிய அக்கூட்டங்கள் அனைத்தையும் விட்டுப் பிரிந்து தனிமையில் உனக்கு மரணம் வரும்வரை மரத்தடியில் இபாதத் செய்து கொண்டிருங்கள் என்று நபியவர்கள் வஸிய்யத் செய்தார்கள். ( நூல்: புகாரி )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் விளக்கத்தை தந்தருள்வானாக!! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!