Thursday 15 November 2018

பெண் குழந்தைகளை வளர்ப்பதில் பெருமானார் {ஸல்} அவர்களின் முன்மாதிரி!!!

பெண் குழந்தைகளை வளர்ப்பதில் பெருமானார் {ஸல்} அவர்களின் முன்மாதிரி!!!






நாம் வாழ்கிற நவீன காலத்தில் மனித சமூகத்திற்கு பயன் தருகிற பல்வேறு அம்சங்கள் நாள்தோறும் கண்டு பிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.

எந்த அளவிற்கு கண்டு பிடிப்புகள் பெருகி வருகிறதோ அதே அளவுக்கு மனித சமூகத்திற்கு பயன் தருகிற பண்பாடுகளும், குண நலன்களும் நிறைந்த மனிதர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர்.

நல்ல சிறந்த தலைமுறையைக் கொண்டிருக்கிற ஓர் சமூகத்தில் தான் பண்பாடுகளும், குணநலன்களும் நிறைந்த மனிதர்கள் உருவாகுவார்கள்.

சிறந்த தலைமுறைக்கான உருவாக்கம் என்பது நம் இல்லங்களில் இருந்தே துவங்கப்பட வேண்டும்.

ஆம்! நல்ல குழந்தைகள் உருவாக்கப்பட வேண்டும், அதிலும் குறிப்பாக பெண்மக்கள் அழகிய நற்குணங்களோடு உருவாக்கப்பட வேண்டும்.

இல்லங்கள் தோரும் நல்ல குழந்தைகள் உருவாகத் தொடங்கி விட்டால் இந்தச் சமூகம் முழுமைக்கும் பயன் தருகிற நல்ல தலைமுறையினர் கிடைத்து விடுவார்கள்.

பொதுவாக குழந்தை வளர்ப்பு என்பது இப்போதல்ல, மனித சமூகம் வாழத் துவங்கிய காலம் முதற்கொண்டே சவாலான ஒன்றாகத் தான் இருந்திருக்கின்றது.



முழுமனித வாழ்க்கைக்கும் முன்மாதிரியாக வாழ்ந்த முஹம்மது நபி {ஸல்} அவர்களின் வாழ்க்கையில் குழந்தை வளர்ப்புக்கான முன் மாதிரிகள் நிறையவே காணக்கிடைக்கின்றன.

நான்கு பெண்மக்களுக்கும், மூன்று ஆண் மக்களுக்கும் தந்தையான பெருமானார் {ஸல்} அவர்களுக்கு இவ்வுலகில் தங்கியது என்னவோ நான்கு பெண்மக்கள் தான்.

நான்கு பெண்மக்களுமே ஏகத்துவ வசந்தத்தை நுகர்ந்தவர்கள். ஹிஜ்ரத் பயணத்தையும் மேற்கொண்டவர்கள்.

அந்த வகையில், பெருமானார் {ஸல்} அவர்கள் பெண்மக்களை வளர்ப்பதற்காக மேற்கொண்ட பயிற்சிகளை இந்த சமூகமும் மேற்கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது.

ஏனெனில், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களை தூய திருமறையில் அப்படித்தான் அறிமுகம் செய்கின்றான்.

لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِنْ أَنْفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ (164)

 திண்ணமாக! அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்கு மகத்தான பேருதவி புரிந்துள்ளான். அதாவது, அவர்களிடையே தன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பிப்பவரும், அவர்களின் வாழ்க்கையைத் தூய்மைப் படுத்துபவரும், அவர்களுக்கு வேதத்தையும், நுண்ணறிவையும் கற்றுக் கொடுப்பவருமான ஒரு தூதரை அவர்களில் இருந்தே அவன் அனுப்பினான். ஆனால், அவர்களோ இதற்கு முன்பாக அப்பட்டமான வழிகேட்டில் தான் இருந்தார்கள்”.                             ( அல்குர்ஆன்: 3: 164 )

لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا (21)
உங்களில் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுபவராகவும், அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகின்றவராகவும் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் அல்லாஹ்வின் தூதரின் வாழ்க்கையில் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கின்றது”.                                   ( அல்குர்ஆன்: 33: 21 )

நாம் வாழ்கிற இந்த நவீன காலத்திற்கு தோதுவாக பிரதானமான நான்கு அம்சங்களை நம் வீட்டு பெண்மக்களுக்கு போதித்து வளர்ப்போம்.

1.   வாழ்க்கையில் ஏற்படுகிற சோதனைகளை ஏற்றுக் கொண்டு, அதன் மீது பொறுமையாக இருந்து அதன் முடிவுகளை பொருந்திக் கொண்டு அல்லாஹ்வின் திருப்தியையும், திருப்பொருத்தத்தையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வின் விதியை முழுமையாக நம்பி வாழ வேண்டும் என பெருமானார் {ஸல்} அவர்கள் அருமை மகளார் ஜைனப் (ரலி) அவர்களுக்கு போதித்தார்கள்.

حدثنا موسى بن إسماعيل حدثنا عبد الواحد حدثنا عاصم عن أبي عثمان عن أسامة بن زيد قال كان ابن لبعض بنات النبي يقضي فأرسلت إليه أن يأتيها فأرسل إن لله ما أخذ وله ما أعطى وكل إلى أجل مسمى فلتصبر ولتحتسب   فأرسلت إليه فأقسمت عليه فقام رسول الله صلى الله عليه وسلم وقمت معه ومعاذ بن جبل وأبي بن كعب وعبادة بن الصامت فلما دخلنا ناولوا رسول الله الصبي ونفسه تقلقل في صدره حسبته قال كأنها شنة فبكى رسول فقال سعد بن عبادة أتبكي ؟ فقال
 إنما يرحم الله من عباده الرحماء
رواه البخاري

உஸாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ நபி {ஸல்} அவர்களின் அன்பு மகளார் ஜைனப் (ரலி) அவர்கள்என் மகன் உயிர் பிரியும் தருவாயில் உள்ளான்; எனவே, தாங்கள் வருகை தரவேண்டும்என்று சொல்லியனுப்பினார்கள்.

அதற்கு, அண்ணலார்தங்கள் மகளாருக்கு ஸலாம் கூறியனுப்பினார்கள், மேலும், “அல்லாஹ் வாங்கிக் கொள்வதனைத்தும் அவனுடையதேயாகும். ஒவ்வொரு விஷயமும் அவனிடம் முடிவானதும், காலநிர்ணயம் நிச்சயிக்கப்பட்டதுமாகும்.

எனவே, நீ மறுமையில் கூலி பெரும் எண்ணத்துடன் பொறுமையை மேற்கொள்வாயாக!” என்றும் சொல்லியனுப்பினார்கள்.

இதற்குப் பின்னரும் ஜைனப் (ரலி) அவர்கள் அண்ணலார் அவசியம் வருகை தர வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியனுப்பினார்கள்.

தங்களது மகளாரின் வற்புறுத்தல் காரணமாக அண்ணலார் தங்களின் தோழர்கள்முஆத் இப்னு ஜபல், ஸஅத் இப்னு உப்பாதா, உபை இப்னு கஅப், ஸைத் இப்னு ஸாபித், (ரலிஅன்ஹும்) ஆகியோருடன் ஜைனப் (ரலி) அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள்.

குழந்தை அண்ணலாரிடம் கொண்டு வரப்பட்டது. அண்ணலார் தம் மடியின் மீது குழந்தையை அமர்த்திக் கொண்டார்கள். அப்போது, அக்குழந்தையின் உயிர் சிறிது, சிறிதாகப் பிரிந்து கொண்டிருந்தது. இந்தக் காட்சியைக் கண்டு நபி {ஸல்} அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வெள்ளமென வழிந்தோடலாயிற்று.

அப்போது, ஸஅத் இப்னு உப்பாதா (ரலி) அவர்கள்இது என்ன? தாங்கள் அழுகின்றீர்களே?” என்று ஆச்சர்யத்தோடு கேட்டார்கள்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள்இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளத்தில் வைத்துள்ள கருணை உணர்ச்சியாகும்என்று இன்னொரு அறிவிப்பில்அழுகை உணர்வுகளின் வெளிப்பாடாகும்என்று கூறினார்கள்.                 ( நூல்: புகாரி )

2.   வாழ்க்கை வசதிகளை அனுபவிப்பதில் அல்லாஹ் வழங்கியதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். சிரமமான தருணங்களில் அல்லாஹ்வின் முனாஜாத்தோடு நம்மை இணைத்துக் கொள்கிற போது நம் காரியங்களை அல்லாஹ் இலகுவாக்கித் தருவான் என்கிற மகத்தான செய்தியை அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு இதமாகப் போதித்தார்கள் ஈருலக சர்தார் நபி {ஸல்} அவர்கள்.

عن عَلِيٍّ رضي الله عنه، أَنَّ فَاطِمَةَ رضي الله عنهِا أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم تَشْكُو إِلَيْهِ مَا تَلْقَى فِي يَدِهَا مِنَ الرَّحَى، وَبَلَغَهَا أَنَّهُ جَاءَهُ رَقِيقٌ، فَلَمْ تُصَادِفْهُ، فَذَكَرَتْ ذَلِكَ لِعَائِشَةَ رضي الله عنها، فَلَمَّا جَاءَ أَخْبَرَتْهُ عائشة رضي الله عنها، قَالَ: فَجَاءَنَا وَقَدْ أَخَذْنَا مَضَاجِعَنَا، فَذَهَبْنَا نَقُومُ، فَقَالَ: "عَلَى مَكَانِكُمَا". فَجَاءَ فَقَعَدَ بَيْنِي وَبَيْنَهَا، حَتَّى وَجَدْتُ بَرْدَ قَدَمَيْهِ عَلَى بَطْنِي، فَقَالَ: "أَلاَ أَدُلُّكُمَا عَلَى خَيْرٍ مِمَّا سَأَلْتُمَا؟ إِذَا أَخَذْتُمَا مَضَاجِعَكُمَا -أَوْ أَوَيْتُمَا إِلَى فِرَاشِكُمَا- فَسَبِّحَا ثَلاَثًا وَثَلاَثِينَ، وَاحْمَدَا ثَلاَثًا وَثَلاَثِينَ، وَكَبِّرَا أَرْبَعًا وَثَلاَثِينَ، فَهُوَ خَيْرٌ لَكُمَا مِنْ خَادِمٍ".

ஹள்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : “ஃபாத்திமா (ரலி) அவர்கள் தானே வீட்டு வேலைகள் செய்து வந்ததால் அவர்களின் கைகள் காய்த்துப் போயிருந்தது.

தங்களது தந்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அடிமைகள் வந்திருப்பதை கேள்விப்பட்டு வேலைத் துணைக்கு ஓர் அடிமை வாங்கி வரலாம் என்று தந்தை யிடம் சென்றார்கள்.

அங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இல்லாததால் ஹள்ரத் ஆயிஷா (ரலி) அவர்களிடம் விஷயத்தைக் கூறிவிட்டு வந்து விட்டார்கள்.

பிறகு விஷயம் கேள்விப் பட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஃபாத்திமாவின் வீட்டிற்கு வந்தார்கள்.

என்னிடமும் என் மனைவி ஃபாத்திமாவிடமும் நீங்கள் இருவரும் படுக்கைக்குச் சென்றால் சுப்ஹானல்லாஹ் 33 தடவையும் அல்ஹம்துலில்லாஹ் 33 தடவையும் அல்லாஹு அக்பர் 34 தடவையும் ஓதிக்கொள்ளுங்கள்.

அது உங்களுக்கு பணியாளர் (அடிமை) இருப்பதை விட உங்களுக்கு சிறந்ததாகும்என்று கூறினார்கள். (அதாவது இதை ஓதினால் நீங் கள் பகலில் வேலை செய்ததால் ஏற்பட்ட களைப்பை அல்லாஹ் நீக்கி உங்களுக்கு சிறந்த ராஹத்தை கொடுப்பான்.)                                          ( நூல் : புகாரி )

3.   வாழ்க்கையில் அல்லாஹ்வின் சட்ட, திட்டங்களை மதித்தும், பேணியும் நடப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்பதையும், இன்பத்திற்கும், உணர்வுகளுக்கும் இடம் கொடுத்து விடக்கூடாது என்பதையும் எச்சரிக்கையாகவே தமது புதல்வியார் ஜைனப் (ரலி) அவர்களுக்கு உணர்த்திய உத்தம நபி {ஸல்} அவர்கள்.



மாநபி {ஸல்} அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தை மக்காவில் மேற்கொண்ட மத்திய தருணம் அது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களை உருட்டி, மிரட்டி, ஆசைவார்த்தைகள் கூறி, சமரச முயற்சிகள் மேற்கொண்டு எல்லாவற்றிலும் தோற்றுப் போன குறைஷித் தலைவர்கள் தாருன் நத்வாவில் மாநபி {ஸல்} அவர்களுக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிக்க ஒன்று கூடியிருந்தனர்.

பேச்சைத் துவக்கி வைத்தான் அபூஜஹ்ல் தொடர்ந்து மாநபிக்கு எதிராக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவியதை அனைத்து தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

அடுத்து என்ன செய்வது? என்ற கேள்வியை முன் வைத்த அபூஜஹ்ல் இம்முறை நாம் மேற்கொள்ளும் நடவடிக்கை முஹம்மதை {ஸல் அவர்களை} நிலை குலையச் செய்வதாய் அமைந்திருக்க வேண்டும்என்றான்.
و لما اشتد النزاع بين الرسول صلوات الله و سلامه عليه و بين قريش، قال بعضهم لبعض:
"ويحكم... إنكم قد حملتم عن محمد همومه بتزويج فتيانكم من بناته، فلو رددتموهن إليه لانشغل بهن عنكم..."
فقالوا: "نعم الرأي ما رأيتهم." و مشوا إلى أبي العاص و قالوا له:
"فارق صاحبتك يا أبا العاص، و ردها إلى بيت أبيها، و نحن نزوجك أي امرأة تشاء من كرائم عقيلات قريش."
فقال: "لا والله إني لا أفارق صاحبتي، و ما أحب أن لي بها نساء الدنيا جميعا..."
أما ابنتاه رقية و أم كلثوم فقد طلقتا و حملتا إلى بيته، فسر الرسول صلوات الله عليه بردهما إليه، و تمنى أن لو فعل أبو العاص كما فعل صاحباه، غير أنه ما كان يملك من القوة ما يرغمه به على ذلك، و لم يكن قد شرع – بعد – تحريم زواج المؤمنة من المشرك.

கூட்டத்தில் இருந்த ஒருவன் நம் குடும்பத்தின் நிம்மதியை கெடுத்து விட்டு முஹம்மது மாத்திரம் நிம்மதியாக இருக்கின்றார். அவரின் இரண்டு பெண் மக்கள் நம் குடும்பங்களில் தான் வாழ்க்கைப் பட்டுள்ளனர்.

முஹம்மதின் {ஸல் அவர்களின்} மகள்களான ருகைய்யா (ரலி) மற்றும் உம்மு குல்ஸூம் (ரலி) ஆகியோர் அபூலஹபின் மகன்களான உத்பா, உதைபா ஆகியோருக்கும், ஜைனப் (ரலி) அவர்கள் ரபீஃ என்பவரின் மகன் அபுல் ஆஸ் என்பவருக்கும் வாழ்க்கைப்பட்டுள்ளனர்.

எனவே, அவர்களிடம் சென்று நபிகளாரின் பெண்மக்களை விவாக விலக்கு செய்யுமாறு கோருவோம். விவாக விலக்கு கொடுக்கப்பட்ட தம் பெண்மக்களைக் கண்டதும் முஹம்மது நம் வழிக்கு வந்து விடுவார்என்று கூறினான்.

அவ்வாறே குறைஷித் தலைவர்கள் முதலில் அபூலஹபைச் சென்று சந்தித்து விஷயத்தைச் சொன்னார்கள்.

அவர் உடனடியாக அதை ஏற்றுக் கொண்டு தம் இரு மகன்களுக்கும் தலாக் விடுமாறு உத்தரவிட்டார்.

அவர்கள் இருவரும் தந்தை சொன்னது போன்றே தலாக் விட்டனர். இன்னொரு அறிவிப்பில் லஹப் அத்தியாயம் இறங்கிய போது ரோஷப்பட்ட லஹப் தம் இரு மகன்களையும் அழைத்து தலாக் விடுமாறு ஆணையிட்டார் என்றும் வந்துள்ளது. எனினும், முதல் அறிவிப்பையே சரி என வரலாற்று ஆசிரியர்கள் சரி காண்கின்றனர்.

அடுத்த படியாக குறைஷித் தலைவர்கள் அபுல் ஆஸிடம் வந்து தங்களின் முடிவை தெரிவித்தனர். அபுல் ஆஸ் அவர்களோ ஜைனப் (ரலி) அவர்களுடனான என் உறவு நன்றாக இருக்கும் பட்சத்தில் நான் எப்படி தலாக் விடமுடியும், மேலும், நபியை எதிர்க்க எவ்வளவோ வழிகள் இருக்கிறது. இதற்கு நான் உடன்பட மாட்டேன் என்று கூறி தலாக் விட மறுத்துவிட்டார்.

அபூலஹபின் மகன்களால் திருப்பி அனுப்பட்ட தம் மக்களான ருகைய்யா, உம்மு குல்ஸூம் (ரலி அன்ஹுமா) ஆகியோரின் விஷயத்தில் மாநபி {ஸல்} சற்றும் கவலைப்பட வில்லை. மாறாக, மகிழ்ச்சியே அடைந்தார்கள்.

காரணம், ஈமானும் இறைநிராகரிப்பும் ஒரே இடத்தில் பயணிக்க இயலாது, அதே நேரத்தில் இது குறித்த இறை வழிகாட்டல் எதுவும் அப்போது இறக்கியருளப்படவும் இல்லை.

சிறிது நாளிலேயே உஸ்மான் (ரலி) அவர்களுக்கு நபி {ஸல்} அவர்கள் ருகைய்யா (ரலி) அவர்களை மணம் முடித்துக் கொடுத்தார்கள்.

அடுத்த கொஞ்ச நாளிலேயே இருவரும் ஹபஷாவை நோக்கி தம்பதியராக ஹிஜ்ரத்தும் மேற்கொண்டார்கள்.

நாட்கள் நகர்கிறது. ஹிஜ்ரத் கடமையாக்கப்பட்டு மாநபி {ஸல்} அவர்களும், முஸ்லிம்களும் மதீனாவிற்கு புலம்பெயர்ந்தனர்.

எனினும் ஜைனப் (ரலி) அவர்கள் ஈமான் கொண்டிருந்தாலும் கூட கணவர் அபுல் ஆஸோடு மக்காவிலேயே இருந்து விட்டார்.

و لما هاجر الرسول صلوات الله و سلامه عليه إلى المدينة، و اشتد أمره فيها، و خرجت قريش لقتاله في "بدر" اضطر أبو العاص للخروج معهم اضطرارا...

إذ لم تكن به رغبة في قتال المسلمين، ولا أرب في النيل منهم، و لكن منزلته في قومه حملته على مسايرتهم حملا... وقد انجلت "بدر" عن هزيمة منكرة لقريش أذلت معاطس الشرك، و قصمت ظهور طواغيته، ففريق قتل، و فريق أسر، و فريق نجاه الفرار.

و كان في زمرة الأسرى أبو العاص زوج زينب بنت محمد صلوات الله و سلامه عليه.
فرض النبي عليه الصلاة و السلام على الأسرى فدية يفتدون بها أنفسهم من الأسر، و جعلها تتراوح بين ألف درهم و أربعة آلاف حسب منزلة الأسير في قومه و غناه.

و طفقت الرسل تروح و تغدو بين مكة و المدينة حاملة من الأموال ما تفتدي به أسراها.

فبعثت زينب رسولها إلى المدينة يحمل فدية زوجها أبي العاص، و جعلت فيها قلاده كانت أهدتها لها أمها خديجة بنت خويلد يوم زفتها إليه... فما رأى الرسول – صلى الله عليه و سلم – القلادة غشيت وجهه الكريم غلالة شفافة من الحزن العميق، و رق لابنته أشد الرقة، ثم التفت إلى أصحابه و قال:

(إن زينب بعثت بهذا المال لافتداء أبي العاص، فإن رأيتم أن تطلقوا لها أسيرها و تردوا عليها مالها فافعلوا).
فقالوا: "نعم، و نعمة عين يا رسول الله."

غير أن النبي عليه الصلاة و السلام اشترط على أبي العاص قبل إطلاق سراحه أن يسير إليه ابنته زينب من غير إبطاء...
فما كاد أبو العاص يبلغ مكة حتى بادر إلى الوفاء بعهده...
فأمر زوجته بالاستعداد للرحيل، و أخبرها بأن رسل أبيها ينتظرونها غير بعيد عن مكة، و أعد لها زادها و راحلتها، و ندب أخاه عمرو بن الربيع لمصاحبتها و تسليمها لمرافقيها يدا بيد.

இந்நிலையில், பத்ர் யுத்தம் நடைபெற்றது. முஸ்லிம்களுக்கு அதில் வெற்றியும் கிடைத்தது. மக்கா குறைஷிகள் கைதியாக பிடிக்கப்பட்டார்கள். அந்த கைதிகளில் ஒருவராக அபுல் ஆஸும் இடம் பெற்றிருந்தார்.

கைதிகள் ஈட்டுத் தொகை கொடுத்து தங்களை விடுவித்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பையொட்டி பலர் ஈட்டுத்தொகை கொடுத்து தங்கள் உறவுகளை மீட்டுச் சென்றனர்.

அந்த தருணத்தில் அபுல் ஆஸை மீட்பதற்காக மாநபி {ஸல்} அவர்களிடம் ஒரு வைர மாலை கொடுக்கப்பட்டது. அதைக் கண்ட மாநபி {ஸல்} அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் கரை புரண்டோடியது.

ஆம்! அம்மாலை கதீஜா (ரலி) அவர்களின் கழுத்தை அலங்கரித்த மாலை, ஜைனப் (ரலி) அவர்களின் திருமணத்தின் போது கதீஜா (ரலி) அவர்கள் அன்பளிப்பாக மகள் ஜைனபுக்கு வழங்கினார்கள்.

இப்போது, மாநபித் தோழர்கள் நபி {ஸல்} அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அபுல் ஆஸிற்கான மொத்த ஈட்டுத்தொகையையும் தாங்களே கொடுத்து அபுல் ஆஸை விடுதலை செய்தார்கள்.

விடுதலையான அபுல் ஆஸை அழைத்த பெருமானார் {ஸல்} அவர்கள் அபுல் ஆஸே! நீர் மக்கா சென்றதும் எம் மகள் ஜைனபை இன்ன நாளில் இன்ன இடத்தில் நான் அனுப்புகிற என் தோழர்களிடத்தில் ஒப்படைத்து விடவேண்டும். அங்கிருந்து என் மகள் பத்திரமாக என்னிடம் வந்து சேர்ந்து விடுவார்.

அபுல் ஆஸே! என் மகளில் இதயத்தில் ஈமான் இருக்கிறது, உம் இதயத்தில் இறை நிராகரிப்பு இருக்கிறது இரண்டும் ஒரு சேர ஓரிடத்தில் சங்கமிக்க இயலாது. மேலும், இது விஷயத்தில் இறைவழிகாட்டல் எதுவும் வழங்கப்படவில்லை ஆகவே, நீர் எம் மகளை எம்மிடம் அனுப்பி வைத்து விடவேண்டும்என்றார்கள்.

சரி என்று சொல்லி விட்டுச் சென்ற அபுல் ஆஸ் வாக்களித்தது போன்றே ஜைனப் (ரலி) அவர்களை பத்திரமாக அழைத்து வந்து, சொன்ன நாளில், சொன்ன இடத்தில் மாநபித்தோழர்களிடம் ஒப்படைத்தார்கள்.

أقام أبو العاص في مكه بعد فراق زوجته زمنا، حتى إذا كان قبيل الفتح بقليل، خرج إلى الشام في تجارة له، فلما قفل راجعا إلى مكة و معه عيره التي بلغت مئة بعير، و رجاله الذين نيفوا على مئة و سبعين رجلا، برزت له سرية من سرايا الرسول صلوات الله و سلامه عليه قريبا من المدينة، فأخذت العير و أسرت الرجال، و لكن أبا العاص أفلت منها فلم تظفر به.

فلما أرخى الليل سدوله و استتر أبو العاص بجنح الظلام، و دخل المدينه خائفا يترقب، و مضى حتى وصل إلى زينب، و استجار بها فأجارته...
و لما خرج الرسول صلوات الله و سلامه عليه لصلاة الفجر، و استوى قائما في المحراب، و كبر للإحرام و كبر الناس بتكبيره، صرخت زينب من صفة النساء و قالت:

"أيها الناس، أنا زينب بنت محمد، و قد أجرت أبا العاص فأجيروه. فلما سلم النبيصلى الله عليه و سلممن الصلاة، التفت إلى الناس و قال:
(هل سمعتم ما سمعت؟!).

قالوا: نعم يا رسول الله.
قال: (و الذي نفسي بيده ما علمت بشيء من ذلك حتى سمعت ما سمعتموه، و إنه يجير من المسلمين أدناهم)، ثم انصرف إلى بيته و قال لابنته:

(أكرمي مثوى أبي العاص، و اعلمي أنك لا تحلين له).

ثم دعا رجال السرية التي أخذت العير و أسرت الرجال و قال لهم:

(إن هذا الرجل منا حيث قد علمتم، و قد أخذتم ماله، فإن تحسنوا و تردوا عليه الذي له، كان ما نحب، و إن أبيتم فهو فيء الله الذي أفاء عليكم، و أنتم به أحق).

فقالوا: "بل نرد عليه ماله يا رسول الله".
مضى أبو العاص بالعير و ما عليها إلى مكة فلما بلغها أدى لكل ذي حق حقه، ثم قال:

"يا معشر قريش هل بقي لأحد منكم عندي مال لم يأخذه؟."

قالوا: "لا... و جزاك الله عنا خيرا، فقد وجدناك وفيا كريما."

قال: "أما و إني قد وفيت لكم حقوقكم، فأنا أشهد أن لا إله إلا الله و أن محمدا رسول الله...
ثم خرج حتى قدم على رسول اللهصلى الله عليه و سلمفأكرم وفادته و رد إليه زوجته،

வருடங்கள் உருண்டோடியது. ஃபத்ஹ் மக்காவின் வெற்றிக்கு சில மாதங்களுக்கு முன்னதாக ஷாமில் இருந்து பெரும் வியாபாரப் பொருளோடு ஊர் திரும்பிக் கொண்டிருந்த அபுல் ஆஸின் வியாபாரக் கூட்டம் நபித்தோழர்களால் பிடிக்கப்பட்டது.

வியாபாரப் பொருட்களை அங்கேயே விட்டு, விட்டு மதீனாவில் தஞ்சமானார் அபுல் ஆஸ், அதுவும் அவர் அடைக்கலம் கேட்டு நின்றது ஜைனப் (ரலி) அவர்களிடம்.

அவர் அடைக்கலம் கேட்டு நின்ற நேரம் அதிகாலை சுப்ஹுத்தொழுகையின் நேரம், மாநபி {ஸல்} அவர்கள் வீட்டில் இல்லை, மஸ்ஜிதுன் நபவீக்கு ஓடி வருகிறார் ஜைனப் (ரலி) அவர்கள். அப்போது, அங்கே சுப்ஹுத் தொழுகையின் ஜமாஅத் நடந்து கொண்டிருந்தது.

வந்தவர்கள் கொஞ்சமும் தாமதிக்காமல் மஸ்ஜிதுன் நபவீயின் வாசலில் நின்றவாறு நான் நபி {ஸல்} அவர்களின் மகள் ஜைனப் ஆவேன். நான் அபுல் ஆஸ் க்கு அடைக்கலம் தந்துள்ளேன்என்று உரக்கக் கூறி விட்டு சென்று விட்டார்கள்.

தொழுகையை முடித்த மாநபி {ஸல்} அவர்கள் மக்களை நோக்கி அமர்ந்தவாறு தொழுகையில் நிற்கும் போது நான் கேட்டவற்றை நீங்களும் கேட்டீர்களா? என்று வினவியதற்கு, மக்கள் ஆம்என்றார்கள்.

பின்னர், மக்களை நோக்கி என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! இந்த விஷயத்தை நீங்கள் எப்போது கேட்டீர்களோ அப்போது தான் நானும் கேட்டேன்என்று கூறிவிட்டு விடைபெற்று நேராக மகள் ஜைனப் (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள்.

வந்த பெருமானார் {ஸல்} அவர்கள் மகள் ஜைனப் (ரலி) அவர்களை நோக்கி எனதருமை மகளே! அவரை (அபுல் ஆஸை) கண்ணியமான முறையில் கவனித்துக் கொள்! அவரோடு தனிமையில் இருப்பதை நீ தவிர்த்துக் கொள்! இப்போது நீ அவருக்கு அனுமதிக்கப்பட்ட உறவு முறையில் உள்ளவளாக இல்லை! என்று கூறினார்கள்.

அப்போது, ஜைனப் (ரலி) அவர்கள் அபுல் ஆஸ் என்னைத் தேடி வரவில்லை, மாறாக, அவரின் பொருளைத் தேடி அவர் வந்திருக்கின்றார் என்றார்கள்.

சிறிது நேரத்தில், அவரின் வியாபாரப் பொருட்களை பிடித்த நபித்தோழர்கள் மதீனா வந்தடைந்தனர்.

மாநபி {ஸல்} அவர்கள் மக்களை ஒன்று திரட்டி, மக்களின் முன்பாக அபுல் ஆஸையும், அவரின் வியாரப் பொருட்களையும் வைத்து இதோ! இவரை நீங்களும், நானும் நன்கறிவோம்! இவரின் வியாபாரப் பொருட்களை அல்லாஹ் உங்களின் கரங்களில் தந்திருக்கின்றான். அது உங்களுக்கு உரியது. எனினும், நான் அபுல் ஆஸ் விஷயத்தில் மனித நேயத்தோடு நீங்கள் நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகின்றேன்! மேலும், எனவே, நீங்கள் விரும்பினால் அவரின் வியாபாரப் பொருட்களை அவரிடம் திருப்பிக் கொடுக்கலாம். நீங்கள் கொடுக்க மறுத்தாலும் அதற்கானத் தகுதியும் உங்களுக்கு இருக்கின்றது!என்று கூறினார்கள்.

அது கேட்ட மக்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களே! நாங்கள் அவரின் பொருட்களை அவரிடமே திருப்பிக் கொடுத்து விடுகின்றோம் என்று கூறி திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.

வியாபாரப் பொருட்கள் மீண்டும் கைக்கு கிடைத்த மகிழ்ச்சியோடு அங்கிருந்து விடைபெற்ற அபுல் ஆஸ் நேராக மக்கா வந்து, வியாபாரப் பொருட்களுக்கு உரிய அனைவர்களிடமும் அவர்களின் பொருட்களை ஒப்படைத்தார்கள்.

பின்னர் அவர்களையும், குறைஷிகளையும் ஓரிடத்தில் ஒன்று திரட்டி குறைஷி குல மக்களே! என்னோடு வியாபாரத்தில் கூட்டாகியிருந்த எவருக்கும் நான் உரிய பங்கை கொடுக்காமல் மோசடி செய்திருக்கின்றேனா? என்று கேட்டார்கள்.

அதற்கு அம்மக்கள் அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்கட்டும்! உம்மை நாம் விபரம் தெரிந்த நாள் முதலாக வாய்மையாளராகவும், நேர்மையாளராகவும், கண்ணியமானவராகவுமே கண்டிருக்கின்றோம்!என்று பதில் கூறினார்கள்.

மீண்டும் அபுல் ஆஸ் அவர்கள் மக்களை நோக்கி கலிமா ஷஹாதாவை மொழிந்து நான் தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்!என்று கூறி அங்கிருந்து மதீனா வந்து மாநபி {ஸல்} அவர்களின் கரம் பற்றி முஸ்லிமானார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அபுல் ஆஸ் (ரலி) அவர்களை தம் மகளார் ஜைனப் (ரலி) அவர்களோடு சேர்த்து வைத்தார்கள்.

( நூல்: அல் இஸ்தீஆப் ஃபீ மஅரிஃபத்தில் அஸ்ஹாப் லிஇமாமி இப்னு அப்துல் பர் (ரஹ்)... )

உலகத்திற்கே பண்பாடுகளையும், ஒழுக்கவிழுமியத்தையும் கற்றுக் கொடுத்த மாநபி {ஸல்} அவர்கள் தங்களின் பெண்மக்களுக்கு ஒழுக்கத்தை ஆரம்பத்தில் இருந்தே சொல்லித் தான் வளர்த்தார்கள்.

எனினும், ஒரு நல்ல தந்தையாக அந்தந்த கால சூழ்நிலைக்கு ஏற்ப பெண்மக்களுக்கு போதிக்க வேண்டியதை கட்டாயம் போதித்தே ஆக வேண்டும் என்பதை இந்த உம்மத்திற்கு உணர்த்துகின்றார்கள்.

4.     வாழ்க்கையில் எவ்வகையான நெருக்கடிகளும், தேவைகளும் ஏற்பட்டாலும் நம்மீதான பிறரின் அபிமானத்தை, மரியாதையை இழக்கும் பொருட்டு நம் செயல்பாடுகள் அமைந்து விடக்கூடாது என்பதையும், பிறரிடம் தேவையாகுதல், பிறரைச் சார்ந்து வாழ்தல் ஆகிய பண்புகள் நுழைந்து விட்டால் சுயமரியாதையை இழக்க நேரிடும் என்பதை பக்குவமாக ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள் ஏந்தல் நபி {ஸல்} அவர்கள்.

لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة نزل على أبي أيوب رضي الله عنه سنةً أو نحوها، ثم انتقل إلى منازل حارثة بن النعمان رضي الله عنه، ‏فلما تزوج عليٌ فاطمة قال رسول الله صلى الله عليه وسلم لعلي أطلب منزلاً، فطلب علي منزلاً فأصابه مستأخرا عن النبي صلى الله ‏عليه وسلم قليلا، فبنى بها - أي تزوجها - فيه، فجاء النبي صلى الله عليه وسلم إليها فقال: إني أريد أن أحوُلك إليّ، ‏فقالت لرسول الله: فكلِمْ حارثة بن النعمان أن يتحول عني، وكانت لحارثة بن النعمان منازل قرب ‏منازل النبي عليه السلام بالمدينة، وكان كلما أحدث رسول الله صلى الله عليه وسلم أهلاً تحول له ‏حارثة بن النعمان عن منزلٍ بعد منزل، فقال النبي صلى الله عليه وسلم: لقد استحييت من حارثة بن ‏النعمان مما يتحول لنا عن منازله.‏
فبلغ ذلك حارثة فتحول وجاء إلى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله إنه بلغني أنك تحول ‏فاطمة إليك، وهذه منازلي وهي أسقب بيوت بنـي النجار بك، وإنما أنا ومالي لله ولرسوله، والله يا ‏رسول الله المالُ الذي تأخذ مني أحبُ إليّ من الذي تَدَع، فقال رسول الله: صدقت، بارك الله عليك
 ‏فحوّلها رسول الله إلى بيت حارثة.‏

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஹிஜ்ரத் செய்து வந்த ஆரம்பத்தில் சில மாதங்களாக அபூஅய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்களின் இல்லத்தில் தங்கினார்கள்.

அது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. பின்னர் நபி {ஸல்} அவர்கள் மஸ்ஜிதுன் நபவீக்கு அருகே அதிக எண்ணிக்கையில் வீடுகளைக் கொண்டிருந்த ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களிடம் தங்களின் சிரமம் குறித்து சொல்லி, மஸ்ஜிதுன் நபவீக்கு அருகே இருக்கிற வீடுகளில் ஒன்றை தாம் தங்கி இருக்கும் வீட்டை பெற்றுக் கொண்டு, பகரமாகத் தருமாறு கோரினார்கள்.

அதற்கு, ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்கள் தங்களுடைய வீடுகளில் பெருமானாருக்கு எது பிரியமாக இருக்கின்றதோ அதை எடுத்துக் கொள்ளுமாறு கூறி, தங்களின் ஒரு வீட்டைக் கொடுத்தார்கள்.

இந்நிலையில், அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கும், அலீ (ரலி) அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றது.

பாத்திமா (ரலி) அவர்களது வீடு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வீட்டிலிருந்து சற்று தூரத்தில் இருந்து வந்தது.

ஒரு தடவை பாத்திமா (ரலி) அவர்களிடம் அண்ணலார் உனது வீடு, எனக்குச் சமீபத்தில் இருக்க வேண்டும் என்று எனது மணம் நாடுகின்றது!என்று கூறினார்கள்.

தந்தையே! ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களின் வீடு உங்களுக்கு அருகில் தானே இருக்கின்றது. எனது வீட்டுக்கு பதிலாக அவருடைய வீட்டில் ஒன்றை எனக்குக் கொடுக்கும் படி தாங்கள் அவரிடம் கூறுங்களேன்!என பாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள். 

இதற்கு முன்பொரு தடவையும், அவருடைய வீட்டில் ஒன்றை இவ்வாறு மாற்றியுள்ளேன். இப்பொழுது மீண்டும் அவ்வாறு கேட்க எனக்கு வெட்கமாக இருக்கிறது! என்றார்கள் நபி {ஸல்} அவர்கள்.

ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களுக்கு, நபி {ஸல்} அவர்கள் இவ்வாறு கூறியச் செய்தி எட்டியதும், உடனே ஓடோடி அண்ணலாரின் சமூகம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே!, பாத்திமா (ரலி) அவர்களுடைய வீடு உங்களுக்கு அருகில் இருக்க வேண்டும், என்று தாங்கள் பிரியப்படுவதாக எனக்குத் தெரிய வந்தது.

இதோ! எனது அத்தனை வீடுகளையும் உங்களுக்கு அர்ப்பணிக்கின்றேன்! இவற்றை விட வேறு எந்த வீடும் தங்களுக்கு அருகில் இல்லைஇவற்றில் எதை விரும்புகின்றீர்களோ அதனை மாற்றிக் கொள்ளுங்கள்!

அல்லாஹ்வின் தூதரே! என்னிடமுள்ள எல்லா பொருட்களுமே, அல்லாஹ்வுக்கும் அவனது தூதரான உங்களுக்கும் உரியனவே! அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகின்றேன்! இவை என்னிடம் இருப்பதை விட தங்களிடம் இருப்பதையே நான் விரும்புகின்றேன்!என்று கூறினார்கள்.

இதனைக் கேட்டு மகிழ்ந்த அண்ணலார், “நீர் உண்மையையே கூறுகின்றீர்! என்று கூறி ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களுக்கு வாழ்வின் பரக்கத் - அபிவிருத்திக்காக துஆவும் செய்தார்கள்.

அவ்வாறே தங்கள் விருப்பப்படி ஃபாத்திமா (ரலி) அவர்களுக்காக வீட்டை மாற்றிக் கொண்டார்கள்.                   ( நூல்: தபகாத்துல் குப்ரா லி இமாமி இப்னு ஸஅத் (ரஹ்).. )

எனவே, பெருமானார் {ஸல்} அவர்கள் பெண்மக்களை உருவாக்கியதன் அடிப்படையில் நம் வீட்டு பெண்மக்களையும் உருவாக்குவோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அத்தகைய பாக்கியத்தை நம் வீட்டு பெண்மக்கள் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!