Thursday 26 July 2018

வெற்றுக் கல் அல்ல அது... தியாகச் சுவடுகளைத் தாங்கி நிற்கும் அற்புதக் கல்!...


வெற்றுக் கல் அல்ல அது...
தியாகச் சுவடுகளைத் தாங்கி நிற்கும் அற்புதக் கல்!...

 

இஸ்லாம் சிறப்பித்துக் கூறியிருக்கிற, வலியுறுத்திக் கட்டளைப் பிறப்பித்திருக்கிற எந்த ஒரு அமலை ஓர் இறைநம்பிக்கையாளன் செய்வதாக இருந்தாலும் அதன் மகத்துவங்களையும், தனித்துவங்களையும் உணர்ந்து, உளப்பூர்வமாக செய்ய வேண்டும் என்பதையே அல்லாஹ் விரும்புகின்றான்.

அப்படி, ஓர் இறைநம்பிக்கையாளன் அந்த அமலை செய்து முடிக்கும் பட்சத்தில் அந்த அமலுக்கும், அந்த அமலைச் செய்த இறைநம்பிக்கையாளனுக்கும் அல்லாஹ் மகோன்னதமான மரியாதையையும், உயரிய அங்கீகாரத்தையும், மகத்தான நன்மைகளையும் வழங்கி கௌரவிக்கின்றான்.

தொழுகைக் கடமையாக்கப்பட்டு, அதன் ஒவ்வொரு அம்சங்களும் முழுமைப் படுத்தப்பட்ட தருணம் அது….

ஆம்! ”எவர் ருகூவை அடைந்து கொள்வாரோ அவர் ரக்அத்தை அடைந்து கொள்வார்என மாநபி {ஸல்} அவர்கள் அறிவிப்புச் செய்த ஆரம்ப நாட்களில் நபித் தோழர்கள் எல்லாம் தொழுகையைப் பேணிக்கையாக தொழ வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தனர்.

عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِىِّ قَالَ
كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِي صلى الله عليه وسلم ، فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ : سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ . قَالَ رَجُلٌ وَرَاءَهُ : رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ . فَلَمَّا انْصَرَفَ قَالَ : مَنِ الْمُتَكَلِّمُ ؟ قَالَ : أَنَا . قَالَ
رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا
 أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ
رواه البخاري

அப்படியொரு நாளில் தான் இப்படி ஒரு சம்பவமும்  நடைபெற்றது.. ஆம்! தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டு, இகாமத்தும் சொல்லப்பட்டு நபி {ஸல்} அவர்கள் தொழுகைக்காக தக்பீரும் கட்டி விட்டார்கள்.

வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்த நபித்தோழர் ஒருவர், அவசரமாக உள்ளே நுழைந்து. வேகமாக உளூ செய்து, உள் பள்ளியினுள் நுழைகிற போது, நபி {ஸல்} அவர்கள் ருகூவுக்குச் செல்கின்றார்கள். துரிதமாகச் செயல்பட்டு அந்த நபித்தோழர் ருகூவில் இணைந்து கொள்கின்றார்கள்.

பின்னர், நபி {ஸல்} அவர்கள்ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்என்று கூறி, ருகூவில் இருந்து நிமிர்ந்த போது, அந்த நபித்தோழர் ஒரு ரக்அத் கிடைத்த மகிழ்ச்சியில்...

 رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ

அல்லாஹ்வே! மணமான, நிறைவான, அதிகமான புகழ் எல்லாம் உனக்கே உரித்தானது!” என்று கூறினார்கள்.

தொழுது முடித்த மாநபி {ஸல்} அவர்கள்இன்னின்னவாறு கூறியவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது, ”கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து நான் தான் இன்னின்னவாறு கூறினேன்என்றார்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள்என்ன ஓர் ஆச்சர்யம்! அந்த வார்த்தைகளை நீங்கள் கூறிய போது அதை நன்மையின் பதிவேட்டில் பதிவு செய்வதற்காக 30 க்கும் மேற்பட்ட வானவர்கள் போட்டி போட்டுக் கொண்டனர்என்று கூறினார்கள். ( புகாரி )

தர்மத்தின் வகைகளை, அதன் கிளைகளை வரிசைப்படுத்தி நபி {ஸல்} அவர்கள் தங்களின் தோழர்களுக்கு வழிகாட்டியிருந்த ஆரம்ப நாட்கள் அது

روى البخاري عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلّى الله عليه وسلّم قال: “بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ فَأَخَّرَهُ، فَشَكَرَ اللهُ لَهُ فَغَفَرَ لَهُ

தொழுகைக்காக பள்ளிக்குள் விரைந்து வந்து கொண்டிருந்த நபித்தோழர் ஒருவரை அழைத்து, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்அல்லாஹ் உங்களுக்கு நன்றி கூறினான்; உங்களின் பாவங்களை மன்னித்து விட்டான்என்று கூறினார்கள்.

வந்த அந்த நபித்தோழரும், தொழுது முடித்திருந்த நபித்தோழர்களும் எதற்காக அல்லாஹ்வே நன்றி கூறியிருக்கின்றான்? ஏன் பாவங்களை மன்னித்தான்? என விழிகளால் விடை தேடிய பொழுது

அதற்கான விடையை மாநபி {ஸல்} அவர்கள்தொழுகைக்கு நடந்து வரும் வழியில் மரக்கிளை ஒன்று முறிந்து கீழே விழுந்து கிடந்தது. மக்களுக்கு இடையூறு தராமல் இருக்க அதை அப்புறப்படுத்தி விட்டு வந்தார். அதன் காரணத்தால் அவருக்கு தொழுகையும் தாமதமானது, எனவே, அல்லாஹ் அவருக்கு மன்னிப்பும் வழங்கி, நன்றியும் தெரிவித்தான்என்று நயம்பட நவின்றார்கள்.              ( நூல்: புகாரி )

மேற்கூறிய இந்த இரு நிகழ்வுகளும் அல்லாஹ் ஓர் அடியானின் எந்த செயலைக் கொண்டு ஆனந்தம் அடைகின்றான், மகிழ்ச்சி அடைகின்றான் என்பதைத் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.

எந்த ஒரு அமலும் உளப்பூர்வமாக உணர்ந்து செயல் வடிவம் பெறுகிற போது, அது அல்லாஹ்விடத்தில் மிகவும் உயர்ந்த மதிப்பைப் பெற்று விடுகின்றது.

இப்ராஹீம் {அலை} அவர்களும்…. உயர்ந்து நிற்கிற அவர்களின் பாதச்சுவடுகளும்

முஸ்லிம் சமூகத்தை கொள்கை கோட்பாடுகளில் இருந்து பிறழச் செய்யும் நாசாகார வேலையை முன்னின்று நடத்தி வரும் வஹ்ஹாபிய கூடாரங்கள் விட்டு வைக்காத அம்சங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான குழப்பத்தை விளைவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதில் ஒன்று தான் மகாமு இப்ராஹீம் குறித்த தவறான பிரச்சாரம்.

விபச்சாரக் குற்றச்சாட்டில் கேவலமடைந்துள்ள பீ. ஜெய்னுல் ஆப்தீன் எழுதியிருக்கிற திருக்குர்ஆன் தர்ஜுமாவில் தன் சுய கருத்தை இஸ்லாத்தின் கொள்கை போல் நிலைப்படுத்தி இருக்கின்றார்.

இதோஅவரின் கூற்று: கஅபாவின் கிழக்குத் திசையில் சுமார் 10 மீட்டர் தொலைவில் ஒரு கல் நாட்டப்பட்டுள்ளதைக் காணலாம். அந்தக் கல் மகாமு இப்ராஹீம் என்று மக்களால் குறிப்பிடப்படுகின்றது.

وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى

"(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; மகாமு இப்ராஹீமை தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்”.
(அல்குர் ஆன்- 2:125)

மகாமு இப்ராஹீம் என்பதற்கு இப்ராஹீம் நின்ற இடம், இப்ராஹீம் தங்கியிருந்த இடம் என இரண்டு அர்த்தங்கள் உள்ளன.

இப்ராஹீம் (அலை) அவர்கள் கஅபதுல்லாவைக் கட்டும் போது பல இடங்களில் நின்றிருப்பார்கள். அப்படியெனில் பல மகாமு இப்ராஹீம் இருக்க வேண்டும். ஆனால் ஒரு மகாமு இப்ராஹீம் தான் இருக்கிறது.

எனவே கஅபாவைக் கட்டும் போது நின்ற இடம் என்று பொருள் கொள்ள முடியாது. அது மட்டுமல்ல மகாமு இப்ராஹீம் உள்ள இடத்திலிருந்து கஅபாவைக் கட்ட முடியாது. அங்கிருந்து கை எட்டாத தொலைவில் கஅபா அமைந்துள்ளது.

இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை), ஆகிய இருவரும் கஅபாவை கட்டுவதற்கு பல மாதங்கள் ஆகியிருக்கும். அதற்காக கஅபாவின் அருகில் குடியிருந்து அதைக் கட்டி முடித்திருப்பார்கள்.­ கட்டி முடிக்கும் வரை அங்கேயே தொழுதிருப்பார்கள். அவர்கள் தங்கியும் இருப்பார்கள். அவர்கள் தங்கியும், தொழுத இடமும் தான் மகாமு இப்ராஹீம்.

ஆக இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்கியிருந்த இடத்தையும் ஹஜ்ஜின் போது நினைவு கூற வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் மகாமு இப்ராஹீமைத் தொழுமிடமாக ஆக்கிக் கொள்ளுங்கள் எனக் கட்டளை பிறப்பிக்கின்றான்.

அத்தோடு நின்று விடாமல் இப்போது, இருக்கிற அந்தக் கல்லில் காணப்படும் பாதச் சுவடுகள் பின்னால் வந்த ஆட்சியாளர்களால் பொய்யாக வரையப்பட்டது என்றும் இப்னு ரஜப் ஹம்பலீ (ரஹ்) அவர்களின் கருத்தை ஆதாரமாக முன் வைக்கின்றார்.

மடத்தனமான இந்த பிரச்சாரத்தை ஷரீஆ மற்றும் வரலாற்று ஒளியில் முறியடிப்பதற்கும், உண்மை விளக்கத்தை அறிந்து கொள்வதற்கும் நாம் கடமைப் பட்டிருக்கின்றோம்.

கல்லா? தங்கியிருந்த, தொழுத இடமா?...

ثم جاء بعد ذلك وإسماعيل يبري نبلا تحت دومة قريبا من زمزم، فلما رآه قام إليه فصنعا كما يصنع الوالد بالولد، والولد بالوالد ثم قال: يا إسماعيل إن الله تعالى أمرني بأمر تعينني عليه؟ قال: أعينك قال: إن الله أمرني أن أبني هاهنا بيتا، فعند ذلك رفعا القواعد من البيت فجعل إسماعيل يأتي بالحجارة وإبراهيم حتى ارتفع البناء جاء بهذا الحجر فوضعه له، فقام إبراهيم على الحجر المقام وهو يبني وإسماعيل يناوله الحجارة وهما يقولان { ربنا تقبل منا إنك أنت السميع العليم }

நீண்ட ஹதீஸில் இருந்து ஒரு பகுதி: “ஒரு நாள் இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஸம்ஸம் கிணற்றின் அருகேயிருக்கும் பெரிய மரத்திற்கு கீழே தனது அம்பு ஒன்றைச் செதுக்கிக் கொண்டிருந்தபோது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் வந்தார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்களைக் கண்டதும் இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர்களை நோக்கி எழுந்து சென்றார்கள். ( நெடுநாட்கள் பிரிந்து மீண்டம் சந்திக்கும் போது ) தந்தை மகனுடனும் மகன் தந்தையுடனும் எப்படி நடந்துக் கொள்வார்களோ அப்படி நடந்துக் கொண்டார்கள் ( பாசத்தோடும் நெகிழ்வோடும் வரவேற்றார்கள் ).

பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயீலே! அல்லாஹ் எனக்கு ஒரு விஷயத்தை (நிறைவேற்றும்படி) உத்திரவிட்டுள்ளான் எனறு சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் உஙகள் இறைவன் உஙகளுக்கு கட்டளையிட்டதை நிறைவேற்றுஙகள் என்று சொன்னார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் நீ எனக்கு அந்த விஷயத்தை நிறைவேற்றுதற்கு உதவுவாயா என்று கேட்க இஸ்மாயீல் (அலை) அவர்கள் உஙகளுக்கு நான் உதவுகிறேன் என்று பதிலளித்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அப்படியென்றால் நான் இந்த இடத்தில் ஓர் இறையில்லத்தை (புதுப்பித்து) கட்டவேண்டும் என்று எனக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான் என்று சொல்லிவிட்டு சுற்றியிருந்த இடங்களை விட உயரமாக இருந்த ஒரு மேட்டை சைகையால் காட்டினார்கள்.

அப்போது இருவரும் இறையில்லம் கஅபாவின் அடித்தளஙகளை உயர்த்திக் கட்டினார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்களை கற்களை கொண்டு வந்து கொடுக்கலானார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டளானார்கள். கட்டடம் உயர்ந்து விட்டபோது இஸ்மாயீல் (அலை) அவர்கள் (மகாமு இப்ராஹீம் என்று அழைக்கப்படும்) இந்தக் கல்லைக் கொண்டுவந்து இப்ராஹீம் (அலை) அவர்களுக்காக வைத்தார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் அதன் மீது (ஏறி) நின்று கஅபாவை கட்டலானார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களை எடுத்து தரலானார்கள். அப்போது இருவருமே இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக்கொள். நிச்சயம் நீயே நன்கு செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றாய். (அல்குர்ஆன் 2-127) என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பார் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். இருவரும் அந்த ஆலயத்தைச் சுற்றிலும் வட்டமிட்டு நடந்தபடி இறைவா! எஙகளிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக் கொள்வாயாக!) நிச்சயம் நீயே நன்கு செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாவும் இருக்கின்றாய் (அல்குர்ஆன் 2-127) என்று பிரார்த்தித்தவாறு (கஅபாவை புதுப்பித்துக் கட்டத்) தொடங்கினார்கள். ( நூல்: தஃப்ஸீர் அத் தபரீ, புகாரி)

எங்கிருந்து வந்த கல் அது?..

الركن والمقام من ياقوت الجنة
حسن صحيح صحيح الترغيب 1147
إن الركن والمقام ياقوتتان من ياقوت الجنة طمس الله سبحانه نورهما ولو لم يطمس نورهما لأضاءتا ما بين المشرق والمغرب
صحيح الترمذي

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் {அலை} கஅபாவை கட்டுவதற்காக நிற்பதற்கு பயன் படுத்திய கல்லும், ருக்னும் சுவனத்து மரகதக்கற்களாகும். அல்லாஹ் மாத்திரம் அதனுடைய இயற்கையான ஒளியை பறித்திருக்காவிட்டால் கிழக்கு மற்றும் மேற்கு திசை வரை அதன் ஒளி இப்போதும் இலங்கிக் கொண்டிருக்கும்என்று கூறினார்கள்.         ( நூல்: அத்தர்ஃகீப், திர்மிதி )

அதன் பாதச்சுவடுகள் போலியானதா?...

 "وكانت آثار قدميه ظاهرة فيه ولم يزل هذا معروفا تعرفه العرب في جاهليتها، وقد أدرك المسلمون ذلك فيه أيضا
 كما قال أنس بن مالك
 " رأيت المقام فيه أصابعه وأخمص قدميه.

இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அரபுகள் பரம்பரை பரம்பரையாக வம்சாவளிகள் மூலமாக அறிந்து, இப்ராஹீம் {அலை} அவர்களின் பாதச்சுவடுகளை அந்தக் கல்லில் தெளிவாகவே கண்டிருக்கின்றார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:நான் (மகாமு இப்ராஹீம்) இப்ராஹீம் {அலை} அவர்கள் நின்ற அந்த கல்லில் கால் ரேகைகள் மற்றும் விரல் ரேகைகள் பதிந்து இருந்ததைக் கண்டேன்”.      ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், 1/117 )

தொழும் இடமாக ஆக்கப்பட்டது எப்போது?...

وقال ابن مردويه: حدثنا محمد  بن أحمد بن محمد القزويني، حدثنا علي بن الحسين الجنيد، حدثنا هشام بن خالد، حدثنا الوليد، عن مالك بن أنس، عن جعفر بن محمد عن أبيه، عن جابر، قال: لما وقف رسول الله صلى الله عليه وسلم يوم فتح مكة عند مقام إبراهيم، قال له عمر: يا رسول الله، هذا مقام إبراهيم الذي قال الله: { وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى } ؟ قال: "نعم". قال الوليد: قلت لمالك: هكذا حدثك { وَاتَّخِذُوا } قال: نعم. هكذا وقع في هذه الرواية.

மக்காவாசிகள் தங்களின் மூதாதையர்கள் மூலமாக மகாம் இப்ராஹீமை அறிந்து வைத்து இருந்தாலும் அறியாமைக் காலத்தில் அவர்களிடம் பல்வேறு மூடப்பழக்க வழக்கங்கள் இருந்தும் கூட அவர்கள் மகாம் இப்ராஹீமை எவ்விதத்திலும் கண்ணியப்படுத்தி, பூஜை செய்து வழிபாடு செய்யக் கூடியவர்களாக இருந்திருக்கவில்லை.

இஸ்லாம் மக்காவில் வந்த பின்னரும் கூட அந்த மகாமுக்கு முஸ்லிம்கள் எவ்வித மரியாதையும் செய்யவில்லை. மக்கா வெற்றி கொண்ட பிறகு மாநபி {ஸல்} அவர்கள் கஅபாவைச் சுற்றி வருகின்ற போது, உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம்

அல்லாஹ்வின் தூதரே! இதோ நம் தந்தை இப்ராஹீம் {அலை} அவர்கள் இந்தக் கல்லின் மீது நின்று தானே இந்த கஅபாவைக் கட்டினார்கள். இங்கு நின்று தானே ஹஜ்ஜுக்கான அழைப்பை விடுத்தார்கள். ஏன் நாம் இந்தக் கல் அமைந்திருக்கும் இடத்தை தொழும் இடமாக ஆக்கிக் கொள்ளக் கூடாது? என்று வினாவொன்றை எழுப்பினார்கள்.

அப்போது, அல்லாஹ் 2: 125 –ஆவது வசனத்தை "(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; மகாமு இப்ராஹீமை தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்”. ( அல்குர்ஆன்- 2: 125 ) இறக்கியருளினான்.

அதுவும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தங்களின் ஹஜ்ஜின் போது தான் அதற்கான செயல் வடிவத்தைக் கொடுத்தார்கள்.

حدَّثنا آدم,ُ حدَّثنا شعبةُ, حدَّثَنا عمرُو بنُ دينار, قال: سمعتُ ابنَ عمرَ رضيَ الله عنهما يقول  قِدمَ النبي صلى الله عليه وسلم فطَاف بالبيِت سبعاً, وصلَّى خَلفَ المقام ركعَتين, ثم خرجَ إلى الصَّفاَ, وقد قال الله تعالى
" لقد كانَ لكم في رسول اللهِ أسوةٌ حَسَنةٌ "
 الأحزاب:21.

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி {ஸல்} அவர்கள் கஅபாவை தவாஃப் செய்த பிறகு மகாம் இப்ராஹீம் அருகே நின்று இரண்டு ரக்அத் தொழுதார்கள். பின்னர் ஸஃபா மலக்குன்றை நோக்கி சென்றார்கள். அப்போது, “உங்களுக்கு உங்களின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கின்றதுஎன்ற கருத்தைக் கூறுகின்ற அஹ்ஸாப் அத்தியாயத்தின் 21 –ஆம் வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.                                                   ( நூல்: புகாரி )

வெற்றுக் கால்களுக்கென்ன இவ்வளவு அந்தஸ்து?....

கொள்கை குழப்பவாதிகளின் பார்வையில் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பாதச் சுவடுகள் வெற்றுக் காலடித்தடங்களாகத் தெரிவதால் தான் இவ்வளவு சிறு பிள்ளைத் தனமாக அவர்களால் யோசிக்க முடிகின்றது.

ஏனெனில், நபி {ஸல்} அவர்கள் கூறியுள்ளார்கள்: உமர் (ரலி) அவர்கள் செல்லும் பாதையில் ஷைத்தான் செல்ல மாட்டான்”, உமர் (ரலி) அவர்கள் பார்வையில் இப்ராஹீம் {அலை} அவர்களின் பாதச் சுவடுகள் உயர்ந்ததாகத் தெரிந்தது. அல்லாஹ்வும் தொழுமிடமாக உயர்த்தினான்.

ஏனெனில், இந்த வஹாபியக் கூடாரங்கள் உமர் (ரலி) அவர்கள் எதைச் செய்தாலும் அதற்கு மாற்றமாகவே செய்வார்கள்.

இப்போதும் கூட மகாம் இப்ராஹீமுக்கு முன்னால் தொழுவதைத் தவறு என்றும் கூறுகின்றார்கள். காரணம் ஏன் தெரியுமா?

நபி {ஸல்} அவர்கள் காலத்திலும், அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்திலும் மகாம் இப்ராஹீம் கஅபாவின் சுவரோடு சேர்ந்தே இருந்தது. அந்தக்கல் தவாஃப் செய்வோருக்கு இடைஞ்சலாக இருப்பதைக் கவனத்தில் கொண்டு உமர் (ரலி) அவர்கள் இப்போதிருக்கும் இடத்தில் நகர்த்தி வைத்தார்கள்.

தியாகச் சுவடுகளைத் தாங்கி நிற்கும் அற்புதக் கல்!...

இப்ராஹீம் {அலை} அவர்களின் பாதச் சுவடுகளைத் தாங்கி நிற்கும் அந்தக் கல் வெறும் கல்லல்ல. தியாகத்திற்கே இலக்கணம் வகுத்த இப்ராஹீம் {அலை} அவர்களின் தியாகச் சுவடுகளை இறுதி நாள் வரை பறைசாற்றிக் கொண்டிருக்கும் அற்புதக்கல் அது.

إِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ ()

மேலும், இப்ராஹீமுடைய இறைவன் அவரிடம், ”நீர் முற்றிலும் வழிபட்டவராக (முஸ்லிமாக) ஆகிவிடுவீராக!என்று கூறிய போது, “அனைத்துலகங்களின் அதிபதியான இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டேன்என்று பதில் கூறினார்”.                                             ( அல்குர்ஆன்: 2: 131 )

வாயால் மொழிந்ததோடல்லாமல் வாழ்க்கை முழுவதும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முற்றிலும் வழிபட்டு வாழ்ந்தார்கள் இப்ராஹீம் {அலை} அவர்கள்.

இறைவனுக்கு கட்டுப்பட்டு நடப்பது தான் இறைவன் மீது கொண்டிருக்கிற காதலுக்கான அடையாளம் என்கிற புதியதோர் இலக்கணத்தை வடிவமைத்துக் கொடுத்தவர் இப்ராஹீம் {அலை} அவர்கள்.

அந்தக் கல் சுமந்து கொண்டு நிற்கிற பாதச்சுவடுகளுக்குப் பின்னால் இருக்கிற அல்லாஹ்வின் கட்டளைகளையும், அதற்கு முற்றிலும் வழிபட்ட இப்ராஹீம் {அலை} அவர்களின் செயல்பாடுகளையும் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம்!

அந்தக் கால்கள் நடந்தது, நின்றது, ஓடியது, ஆர்ப்பரித்தது, அடங்கி ஒடுங்கி நின்றது என்ற அத்தனை அசைவுகளுக்குப் பின்னாலும் அவர்களை இயக்கியது அல்லாஹ்வின் கட்டளை என்கிற தாரக மந்திரம் தான்.

வயது முதிர்ந்த நிலையில் அல்லாஹ்விடம் கேட்டு, மன்றாடிப் பெற்றெடுத்த இஸ்மாயீல் மழலையாக, பால்குடிப் பாலகனாக இருக்கும் போது, அல்லாஹ்விடம் இருந்து ஓர் கட்டளை.

உம்மனைவியையும், உம் மகனையும் மக்காவிற்கு அழைத்துச் சென்று அங்கு விட்டு விட்டு, திரும்பிப்பார்க்காமல் வந்து விட வேண்டும்.

எங்கிருக்கின்றது மக்கா? அது எப்படியான ஊர்? என்னென்ன வசதிகள் அங்கே இருக்கிறது? இப்படியான எந்தக்கேள்விகளையும் ரப்பிடம் கேட்காமல் இப்ராஹீம் {அலை} அவர்கள் தம் மனைவியையும், பால்குடி மாறா பாலகனையும் அழைத்துக் கொண்டு ஷாம் தேசத்திலிருந்து மக்காவை நோக்கி கால் நடை பயணமாக வருகின்றார்கள்.

மக்கா வந்ததும், தம் மனைவி மகனை விட்டு விட்டு, அப்படியே ஒன்றும் பேசாமல் திரும்புகின்றார்கள், அவருடைய மனைவி காரணம் கேட்டதற்கு பதில் சொல்லவில்லை.

இரண்டாம் முறைகேட்டும் பதிலில்லை. மூன்றாம் முறை "இது இறைவனின் கட்டளையா?" என்று கேட்டதற்கு இப்ராஹீம் நபி " ஆம் " என்ற பதிலைமட்டும் அளித்து விட்டு, அல்லாஹ்விடம் துஆவும் செய்து விட்டு மீண்டும் ஷாமுக்கு பயணமானார்கள்.

ஷாமுக்கும் ஜித்தாவுக்கும் இன்றைய தொலைதூரம் 1170 கிலோமீட்டர், ஜித்தாவுக்கும் மக்காவுக்கும் தொலைதூரம் 110 கிலோமீட்டர் மொத்தம் 1280 கிலோமீட்டர் ஆகும். 1280+1280 = 2560 தொலை தூரம் இப்ராஹீம் {அலை} அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை செயல்படுத்த கால் நடையாக வந்தார்கள்.

சில வருடங்கள் கழித்து, மீண்டும் அல்லாஹ்வின் கட்டளை கனவு வடிவத்தில் இஸ்மாயீல் {அலை} அவர்களை இறைவனுக்கு அறுத்துப் பலியிடுவது போன்ற தோற்றத்தில் மீண்டும் ஷாமில் இருந்து 1280 கிலோ மீட்டர் நடைபயணம்.

தங்கள் மகனிடத்தில் நடந்த விவரங்களைக் கூறி அதற்கான காரியங்களில் இறங்கி, அல்லாஹ்வும் அவர்களின் தியாக உணர்வை ஏற்றுக் கொண்டு சுவனத்தில் இருந்து ஆட்டை இறக்கி வைத்து குர்பானி கொடுக்கச் சொன்னான்.

இதற்குப் பிறகு, மீண்டும் ஷாமை நோக்கி 1280 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டார்கள் இப்ராஹீம் {அலை} அவர்கள். இப்போதும், 1280+1280 = 2560 தொலை தூரம் இப்ராஹீம் {அலை} அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை செயல்படுத்த கால் நடையாக வந்து சென்றார்கள்.

இதற்குப் பின்னர் இரண்டு தடவை ஸாரா அவர்களின் அனுமதியின் பேரில் ஹாஜர் {அலை} மற்றும் இஸ்மாயீல் {அலை} இருவரையும் சந்திக்க வந்தார்கள்.

இஸ்மாயீல் {அலை} அவர்கள் பருவ வயதை அடைந்த போது, இப்ராஹீம் {அலை} அவர்கள் அருகில் இல்லாத காரணத்தால் இஸ்மாயீல் {அலை} அவர்களுக்கு பெண்பார்த்து ஹாஜார் {அலை} அவர்களே மணமுடித்து வைத்தார்கள்.

روى سعيد بن جبير عن ابن عباس رضي الله عنهما قال : لما أتى إبراهيم عليه وسلم بإسماعيل وهاجر ووضعهما بمكة ، وأتت على ذلك مدة ، ونزلها الجرهميون وتزوج إسماعيل منهم امرأة وماتت هاجر ، واستأذن إبراهيم سارة أن يأتي هاجر ، فأذنت له وشرطت عليه أن لا ينزل فقدم إبراهيم مكة ، وقد ماتت هاجر ، فذهب إلى بيت إسماعيل فقال لامرأته : أين صاحبك ؟ قال ذهب للصيد وكان إسماعيل عليه السلام يخرج من الحرم فيصيد ، فقال لها إبراهيم : هل عندك ضيافة ؟ قالت ليس عندي ضيافة ، وسألها عن عيشهم ؟ فقالت : نحن في ضيق وشدة ، فشكت إليه فقال لها : إذا جاء زوجك فأقرئيه السلام وقولي له فليغير عتبة بابه ، فذهب إبراهيم فجاء إسماعيل فوجد ريح أبيه فقال لامرأته : هل جاءك أحد ؟ قالت : جاءني شيخ صفته كذا وكذا كالمستخفة بشأنه قال فما قال لك ؟ قالت قال أقرئي زوجك السلام وقولي له فليغير عتبة بابه ، قال ذلك أبي وقد أمرني أن أفارقك الحقي بأهلك ، فطلقها وتزوج منهم أخرى ، فلبث إبراهيم ما شاء الله أن يلبث ، ثم استأذن سارة أن يزور إسماعيل فأذنت له وشرطت عليه أن لا ينزل ، فجاء إبراهيم عليه السلام حتى انتهى إلى باب إسماعيل فقال [ ص: 148 ] لامرأته أين صاحبك ؟ قالت ذهب يتصيد وهو يجيء الآن إن شاء الله ، فانزل يرحمك الله ، قال : هل عندك ضيافة ؟ قالت : نعم فجاءت باللبن واللحم ، وسألها عن عيشهم ؟ فقالت : نحن بخير وسعة ، فدعا لهما بالبركة ولو جاءت يومئذ بخبز بر أو شعير وتمر لكانت أكثر أرض الله برا أو شعيرا أو تمرا ، فقالت له : انزل حتى أغسل رأسك ، فلم ينزل فجاءته بالمقام فوضعته عن شقه الأيمن فوضع قدمه عليه فغسلت شق رأسه الأيمن ثم حولت إلى شقه الأيسر فغسلت شق رأسه الأيسر فبقي أثر قدميه عليه ، فقال لها : إذا جاء زوجك فأقرئيه السلام وقولي له قد استقامت عتبة بابك ، فلما جاء إسماعيل ، وجد ريح أبيه فقال لامرأته : هل جاءك أحد ؟ قالت : نعم شيخ أحسن الناس وجها وأطيبهم ريحا ، وقال لي كذا وكذا وقلت له كذا وكذا ، وغسلت رأسه وهذا موضع قدميه فقال : ذاك إبراهيم النبي أبي ، وأنت العتبة أمرني أن أمسكك .

குழந்தை இஸ்மாயீல் (வளர்ந்து) வாலிபரானார். ஜுர்ஹும் குலத்தாரிடம் இருந்து அவர் அரபு மொழியை கற்றுக்கொண்டார். அவர் வாலிபரான போது அவர்களுக்கு பிரியமானவராகவும் அவர்களுக்கு மிக விரும்பமானவராகவும் ஆகிவிட்டார்.

பருவ வயதை அவர் அடைந்த போது அவருக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர். இஸ்மாயீலின் தாயார் (ஹாஜர்) இறந்துவிட்டார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்துக் கொண்ட பின்பு இப்ராஹீம் (அலை) அவர்கள் தாம் விட்டுச் சென்ற (தம் மனைவி மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துக் கொள்வதற்காக (திரும்பி) வந்தார்கள்.

அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை. ஆகவே இஸ்மாயீல் மனைவியிடம் இஹ்மாயீலை குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர் எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார்.

பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர் நாஙகள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம் என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிட்டார்.

உடனே இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி சொல் என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது எவரோ வந்து சென்றிருப்பது போல் உணர்ந்தார்கள்.

ஆகவே எவரேனும் உங்களிடம் வந்தார்களா என்று கேட்டார்கள். அவருடைய மனைவி ஆம் இப்படிப்பட்ட (அடையாளஙகள் கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார் எங்களிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விவரம்) தெரிவித்தேன்.

என்னிடம் உஙகள் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் அவரிடம் நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம் என்று சொன்னேன் என்று பதிலளித்தார்.

அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா என்று கேட்க அதற்கு அவர் ஆம் உங்களுக்கு தன் சார்பாக சலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு உன் நிலைப்படியே மாற்றிவிடு என்று (உஙகளிடம் சொல்லச்) சொன்னார் என்று பதிலளித்தார்.

இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தைதான். உன்னைவிட்டு பிரிந்து விடும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார். ஆகவே நீ உன் (தாய்) வீட்டாருடன் போய் சேர்ந்துக்கொள் என்று சொல்லிவிட்டு உடனே அவரை விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார்.

பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவன் நாடிய காலம் வரை அவர்களை (ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்.

அதன் பிறகு அவர்களிடம் சென்றார். ஆனால் இஸ்மாயீல் (அலை) அவர்களை (இந்த முறையும்) அவர் (அஙகு) காணவில்லை. ஆகவே இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவர் எங்களுக்காக வருமானம் தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் நீஙகள் எப்படியிருக்கிறீர்கள் (நலம்தானா) என்று கேட்டார்கள். மேலும் அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார். அதற்கு இஸ்மாயீலின் துணைவியார் நாஙகள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமாக அல்லாஹ்வைப் புகழ்ந்தார்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் உஙகள் உணவு எது என்று கேட்க அவர் இறைச்சி என்று பதிலளித்தார். அவர்கள் உஙகள் பானம் எது என்று கேட்க தண்ணீர் என்று பதிலளித்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும் தண்ணீரிலும் பரக்கத்தை அருள் வளத்தை அளிப்பாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தாணியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் அருள் வளம் தரும்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித்திருப்பார்கள்.

ஆகவே தான் மக்காவைத் தவிர பிற இடஙகளில் அவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாக பயன்படுத்தி வருபவர்களுக்கு அவை ஒத்தக்கொள்வதே இல்லை என்று சொன்னார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவன் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் உரை. அவரது (வீட்டு) நிலைப்படியை உறுதிபடுத்தி வைக்கும்படி சொல் என்று சொன்னார்கள்.

இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்த போது உங்களிடம் எவரேனும் வந்தார்களா என்று கேட்க அவருடைய மனைவி ஆம் எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார் என்று (சொல்லிவிட்டு) அவரை புகழ்ந்தார். (பிறகு தொடர்ந்து) என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் நாங்கள் நலமுடன் இருக்கிறோம் என்று தெரிவித்தேன் என்று பதில் சொன்னார்.

அவர் உனக்கு அறிவுரை ஏதேனும் சொன்னாரா என்று இஸ்மாயீல் (அலை) கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் உஙகளுக்கு சலாம் உரைக்கிறார் உஙகள் நிலைப்படியை உறுதிப்பபடித்திக் கொள்ளும்படி உஙகளுக்கு கட்டளையிடுகின்றார் என்று சொன்னார்.

இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தை நீ தான் அந்த நிலைப்படி உன்னை (விவாகரத்து செய்யாமல்) அப்படியே மணைவியாக வைத்தக் கொள்ளும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளான் என்று சொன்னார்கள். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ் நாடிய காலம் வரை அவர்களை(ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்கள்.                             ( நூல்: தஃப்ஸீர் அல் பஃக்வீ, அத்தபரீ )

மீண்டும், சில ஆண்டுகளுக்குப் பிறகு அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க கஅபா ஆலயத்தை நிர்மாணிக்க அதே 1280 கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக வந்து கஅபாவை கட்டும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்கள்.

மொத்தம் ஷாமுக்கும் மக்காவுக்கும் இடையே 11,520 கிலோ மீட்டர் பயணித்து இருக்கின்றார்கள். இதில் அல்லாஹ்வின் கட்டளையை செயல் படுத்துவதற்காக அவர்களின் பாதங்கள் சுமார் 6,400 கிலோ மீட்டர் தியாகச் சுவடுகளை சுமந்து நடந்திருக்கின்றது.

அல்லாஹ்வின் பள்ளிக்கு அருகில் கடை வைத்துக் கொண்டும், வீட்டில் வசித்துக் கொண்டும் பாங்கு சப்தம் கேட்டும் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று தொழச் செல்ல மறுக்கும் கால்களைக் கொண்ட நமக்கு எங்கே தெரியப் போகின்றது அல்லாஹ்வின் கட்டளைக்கு வழிப்படுவதற்காக 6,400 கிலோமீட்டர் நடந்த பாதத்தின் வலிகளைப் பற்றி...

அல்லாஹ்வின் கட்டளைக்காக அலைந்து திரிந்த அந்தக் கால்களின் சுவடுகளைத் தாங்கி நின்றிட சுவனத்திலிருந்து குளிர்ச்சியூட்டும் மரகதக்கல்லை அல்லாஹ் வழங்கி கௌரவித்து, அந்தப் பாதச் சுவடுகளை பாதுகாத்து, அந்த இடத்தில் தொழுவதை அல்லாஹ் கட்டளையாக பிறப்பித்து சிறப்பு சேர்த்திருக்கின்றான்.

ஆகவே, இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் எப்படி அல்லாஹ்வின் கட்டளைக்கு பின்னால் இருக்கிற மகத்துவங்களை விளங்கி, உளப்பூர்வமாக அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு வாழ்ந்தார்களோ அது போன்று அல்லாஹ்வின், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் கட்டளைகளை அதன் மகத்துவங்களை, தனித்துவங்களை விளங்கி உளப்பூர்வமாக கட்டுப்பட்டு, வழிபட்டு வாழும் நற்பேற்றை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக!

ஆமீன்!! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!! வஸ்ஸலாம்!!!

Thursday 12 July 2018

ஹஜ் செய்ய ஆசைப்படுவோம்!!

ஹஜ் செய்ய ஆசைப்படுவோம்!!



துல் கஅதா அல்லாஹ் ரப்புல் இஸ்ஸத் புனிதமாக்கியிருக்கிற நான்கு மாதங்களில் ஒன்றாகும். ஹஜ்ஜுடைய அமல்களுக்கான நாட்களும் அங்கிருந்து தான் ஆரம்பமாகும்.

ஹஜ்ஜுப் பயணம் மேற்கொள்கிற புனித பயணாளிகள் பயண அறிவிப்பை சொந்த, பந்தம், அண்டை அயலார், உறவுகள் நட்புகள் மஹல்லா வாசிகள் என அனைவரிடமும் சொல்லத் துவங்குகிற மாதமும் கூட.

விருந்துகள், பிரிவுபச்சாரங்கள், ஹஜ் விளக்க கூட்டங்கள் என இப்போதே நாம் ஹஜ் தொடர்பான பல சபைகளை அலங்கரிக்கத் தொடங்கி இருப்போம்.

இந்த சபைகளைக் கடக்கிற போதோ அல்லது அவைகளில் அமர்கிற போதோ, புனித பயணாளிகளைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கிற போதோ மறக்காமல் அல்லாஹ்விடம் நாம் வைக்க வேண்டிய முக்கிய வேண்டுகோளில் ஒன்று “அல்லாஹ்வே எனக்கும், என் மனைவி மக்களுக்கும், என் குடும்பத்தார்களுக்கும் ஹஜ்ஜை நஸீபாக்குவாயாக! உன்னுடைய உயர்தர ஆலயத்தை தரிசிக்கும் வாய்ப்பை இந்த எளியோனுக்கும் இந்த எளியோனின் மனைவி மக்களுக்கும், இந்த எளியோனின் குடும்பத்தார்களுக்கும் வழங்கி கௌரவிப்பாயாக! என்று மனமுருகி நம்முடைய ஆசையை வெளிப்படுத்த வேண்டும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹஜ் செய்கிற நஸீபை வழங்குவானாக! ஆமீன்!.

இந்த உலகத்தில் வாழக்கூடிய எந்த மனிதனாக இருந்தாலும் அவனுக்கென்று ஏதாவது ஆசை இருக்கும். ஆசைகள் இல்லாத எந்த மனிதனும் இந்தப் பூமிப்பந்தில் இல்லை.

 அல்லாஹ்வால் வழிகாட்டப்படுகிற மகத்தான சமூகமாக வாழக்கூடிய இந்த சமூகத்தில் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கண்டிப்பாக ஆசைகள் இருக்கும். 

அந்த ஆசை மறுமையோடு, மறுமையின் வெற்றிகளோடு இம்மையோடு, இம்மையின் வெற்றிகளோடு இணைந்திருக்கலாம். ஆனால், நாம் ஆசைப்படாமல் ஒரு போதும் கிடைக்காது என்பதை உணர வேண்டும்.

ஆசைப்படுவதை அல்லாஹ்வும், அவன் தூதரும் ஆகுமாக்கியிருக்கின்றார்கள், அதை வெளிப்படுத்துமாறு தூண்டுகின்றார்கள். அதற்காக முயற்சி செய்யுமாறு வலியுறுத்துகின்றார்கள்.

அல்லாஹ் நபி ஜக்கரியா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குடும்பத்தார்களின் சிறப்புக்களை கூறும் போது…

إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا وَكَانُوا لَنَا خَاشِعِينَ (90)

“இவர்கள் யாவரும் நற்பணிகளில் முனைந்து செயற்படுவோராகவும், ஆசைகளோடும், அச்சத்தோடும் நம்மிடம் இறைஞ்சக்கூடியவர்களாகவும், நம்முன் பணிந்தவர்களாகவும் திகழ்ந்தார்கள்.                          ( அல்குர்ஆன்: 21: 90 )

ஆசைப்படு!, அதை வெளிப்படுத்து!

عن أبي هريرة – رضى الله عنه - قال : سمعت النبي صلى الله عليه وسلم يقول إذا تمنى أحدكم فلينظر ما يتمنى فإنه لا يدري ما يكتب له من أمنيته ) رواه احمد

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”உங்களில் ஒருவர் ஆசைப்பட்டால் அவர் எதை ஆசைப்படுகிறார் என்பதை நன்கு சிந்தனை செய்து கொள்ளட்டும். ஏனெனில், அவரின் ஆசைக்கும் கூலி எழுதப்படுகிறது. கூலியை அவர் அறியமாட்டார்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.            ( நூல்: அஹ்மத் )

وعن عائشة رضي الله عنها قال رسول الله صلى الله عليه وسلم : ( إِذَا تَمَنَّى أَحَدُكُم فَلْيُكثِر ، فَإِنَّمَا يَسأَلُ رَبَّهُ عَزَّ وَجَلَّ
 رواه ابن حبان (2403) والطبراني في "الأوسط" (2/301)

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உங்களில் ஒவ்வொருவரும் அதிகமாக ஆசைப்படுங்கள். ஏனெனில், அவர் தன் ஆசைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்கப்போவது தன்னைப் படைத்த ரப்பிடம் தான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                   ( நூல்: இப்னு ஹிப்பான் )

உன் ஆசை எவ்வளவு பெரிதாக இருப்பினும்…

நபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் வெளிப்படுத்திய ஆசையை அல்லாஹ் குறிப்பிடும் போது…

قَالَ رَبِّ اغْفِرْ لِي وَهَبْ لِي مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

“பிறகு அவர் “என்னுடைய இறைவா! என்னை நீ மன்னிப்பாயாக! எனக்குப் பின் எவருக்கும் கிடைக்க முடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக! திண்ணமாக, நீயே மகத்தான கொடையாளன் ஆவாய்”.         ( அல்குர்ஆன்: 38: 35 )

احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلَا تَعْجَزْ وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ  رواه مسلم

உனக்கு பயன் தருகிற அனைத்தின் மீதும் நீ ஆசைப்படு! பின்னர் அதற்காக கஷ்டப்படு! அல்லாஹ்விடம் உதவி கேள்! சோர்ந்து போய்விடாதே! நீ ஆசைப்பட்டது உனக்கு கிடைக்காமல் போய் விட்டால் நான் இப்படி, இப்படி செய்திருந்தால் இப்படி நடந்திருக்கும் என்று கூறாமல் அல்லாஹ் நாடியது தான் நடந்தது என்று சொல்!என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                        ( நூல்: முஸ்லிம் )


ஆசைப்படுகிற போது இரண்டு நிபந்தனைகளை கடைபிடிக்குமாறு இஸ்லாம் வலியுறுத்திக் கூறுகின்றது.

1.   அந்த ஆசைகள் நிறைவேற அல்லாஹ்விடம் உதவி தேடிக் கொண்டே இருப்பது.
2.   ஆசைகளை அடைந்திடும் வரை சோர்ந்து போகாமல் இருப்பது.


மேன்மக்களின் ஆசைகளிலிருந்து….


اجتمع في الحجر عبد الله، ومصعب، وعروة – بنو الزبير – وابن عمر، فقال ابن عمر: تمنوا، فقال ابن الزبير: أتمنى الخلافة، وقال عروة: أتمنى أن يؤخذ عني العلم، وقال مصعب: أتمنى إمرة العراق، فقال ابن عمر: أما أنا فأتمنى المغفرة. قال أبو الزناد: فنالوا ما تمنوا، ولعل ابن عمر قد غُفر له. الذهبي

அபுஸ்ஸினாத் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்: “ஹிஜ்ர் எனும் இடத்தில் ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி) அவர்கள் மூன்று ஆண் மக்களான அப்துல்லாஹ் (ரலி) முஸ்அப் (ரலி) உர்வா (ரலி) ஆகியோரும் உமர் (ரலி) அவர்களின் மகனாரான அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி, ஆகிய நான்குபேர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, இப்னு உமர் ரலி அவர்கள் மற்ற மூவரை நோக்கிஉங்களின் ஆசைகளை கூறுங்கள்! என்றார்கள். அதற்கு, ”நான் கலீபாவாக ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) அவர்களும்,
”நான் கல்வியில் தேர்ச்சி பெற்று மக்களுக்கு கல்வி போதிக்க ஆசைப்படுகிறேன்” என்று உர்வா (ரலி) அவர்களும்,நான் ஈராக் தேசத்தின் அதிகாரியாக ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என முஸ்அப் (ரலி) அவர்களும் கூறினார்கள்.

அப்போது, இப்னு உமர் (ரலி) அவர்கள், “நான் அல்லாஹ்வின் மகத்தான மன்னிப்பை ஆசைப்படுகிறேன்” என்றாகள்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் அபுஸ்ஸினாத் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஜுபைர் (ரலி) அவர்களின் மூன்று ஆண்மக்களும் ஆசைப்பட்டது போலவே அல்லாஹ் அவர்களுக்கு கல்வி, அதிகாரம், அரசியல் தலைமை ஆகியவற்றைக் கொடுத்தான். இன்ஷா அல்லாஹ், இப்னு உமர் ரலி அவர்கள் ஆசைப்பட்ட மஃபிரத்தை அல்லாஹ் அவர்களுக்கு வழங்குவான் என்று நம்பிக்கை கொள்கிறோம்.                         ( நூல்: ஃபவாத்துல் வஃபிய்யாத் )

சில நேரங்களில் நம் ஆசை உயர்வானதாகவும், உளப்பூர்வமானதாகவும் இருக்கும் பட்சத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீனும் அதை ஆசிக்கின்றான்.

உமர் (ரலி) அவர்களின் ஆசையை அல்லாஹ் ரப்புல் ஆலமீனும் ஆசித்ததை பின்வரும் செய்திகளின் மூலம் நம்மால் உணர முடிகின்றது.

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ عُمَرُ بْنُ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، " وَافَقْتُ رَبِّي فِي ثَلاَثٍ: فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، لَوِ اتَّخَذْنَا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى، فَنَزَلَتْ: {وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى} [البقرة: 125] وَآيَةُ الحِجَابِ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، لَوْ أَمَرْتَ نِسَاءَكَ أَنْ يَحْتَجِبْنَ، فَإِنَّهُ يُكَلِّمُهُنَّ البَرُّ وَالفَاجِرُ، فَنَزَلَتْ آيَةُ الحِجَابِ، وَاجْتَمَعَ نِسَاءُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الغَيْرَةِ عَلَيْهِ، فَقُلْتُ لَهُنَّ: (عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبَدِّلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ)، فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:  மூன்று விஷயங்களில் என் ஆசைக்கு ஏற்ப ரப்பும் இறை வசனங்களை இறக்கியருளினான்.  

1..அல்லாஹ்வின் தூதரே! மகாமு இப்ராஹீமை தொழுமிடமாக நாம் ஆக்கலாமே என்று கேட்டேன். அப்போது, "மகாமு இப்ராஹீமில் ஒரு பகுதியை தொழும் இடமாக்கிக் கொள்ளுங்கள்'' எனும் இறைவசனம் அருளப்பெற்றது.

2. பர்தா (சட்டம்) குறித்த இறைவசனமும் இவ்வாறே இறங்கியது. "அல்லாஹ்வின் தூதரே! தங்களின் மனைவியரிடம் நல்லவரும் கெட்டவரும் உரையாடுகின்றனர். எனவே தங்கள் மனைவியரை ஹிஜாபைப் பேணுமாறு தாங்கள் பணிக்கலாமே! '' என்று சொன்னேன். அப்போது ஹிஜாப் குறித்த இறைவசனம் அருளப்பெற்றது.

3. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களின் மனைவியர் அனைவரும் சேர்ந்து கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக நடந்துகொண்டபோது நான் அவர்களிடம், "இறைத்தூதர் உங்களை மணவிலக்குச் செய்துவிட்டால், உங்களைவிடச்  சிறந்த துணைவியரை அல்லாஹ் அவருக்கு வழங்கலாம்'' என்று சொன்னேன். அப்போது இந்த (66:5ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

( அறிவிப்பவர் : அனஸ் (ரலி)  நூல் : புகாரி 402 )

முஸ்லிமுடைய அறிவிப்பில் மேலும் ஒரு விஷயம் சொல்லப்படுகிறது.
حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّىُّ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ قَالَ جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ أَخْبَرَنَا عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ عُمَرُ وَافَقْتُ رَبِّى فِى ثَلاَثٍ فِى مَقَامِ إِبْرَاهِيمَ وَفِى الْحِجَابِ وَفِى أُسَارَى بَدْرٍ.
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மூன்று விஷயங்களில் என் ஆசைக்கு ஏற்ப ரப்பும் இறை வசனங்களை இறக்கியருளினான்.  
அவை: 1. மகாமு இப்ராஹீம் விஷயத்தில், 2. பர்தா விஷயத்தில், 3. பத்ருப் போரில் பிடிக்கப்பட்ட கைதிகள் விஷயத்தில்.  ( நூல் : முஸ்லிம் 6359 )
இதில் பத்ருப்போரில் கைது செய்யப்பட்டவர்கள் விஷயம் மூன்றாவது விஷயமாக சொல்லப்பட்டுள்ளது.
 
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ أُبَيٍّ لَمَّا تُوُفِّيَ، جَاءَ ابْنُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَعْطِنِي قَمِيصَكَ أُكَفِّنْهُ فِيهِ، وَصَلِّ عَلَيْهِ، وَاسْتَغْفِرْ لَهُ، فَأَعْطَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَمِيصَهُ، فَقَالَ: «آذِنِّي أُصَلِّي عَلَيْهِ»، فَآذَنَهُ، فَلَمَّا أَرَادَ أَنْ يُصَلِّيَ عَلَيْهِ جَذَبَهُ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: أَلَيْسَ اللَّهُ نَهَاكَ أَنْ تُصَلِّيَ عَلَى المُنَافِقِينَ؟ فَقَالَ: " أَنَا بَيْنَ خِيَرَتَيْنِ، قَالَ: {اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لاَ تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً، فَلَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ} [التوبة: 80] " فَصَلَّى عَلَيْهِ، فَنَزَلَتْ: {وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا، وَلاَ تَقُمْ عَلَى قَبْرِهِ} [التوبة: 84]

முனாபிக்குகளின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை மரணித்த போது அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முயன்ற போது அதை உமர் (ரலி) அவர்கள் ஆட்சேபித்தார்கள். அதையும் மீறி நபி {ஸல்} அவர்கள் அவனுக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். இனிமேல் இவ்வாறு செய்யக் கூடாது என்று அதைத் தடை செய்து அல்லாஹ் வசனத்தை அருளினான்.

وأخرج ابن أبي حاتم في تفسيره عن أنس قال: قال عمر: وافقت ربي في… هذه الآية: (وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِن سُلَالَةٍ مِّن طِينٍ). الآية فلما نزلت قلت أنا: فتبارك الله أحسن الخالقين. فنزلت: (فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ).

”முஃமினூன் 12 முதல் 14 வரையிலான இறைவசனங்களை நான் ஓதும் போது அல்லாஹ்வின் படைப்பாற்றலையும், மனிதனின் அழகிய தோற்றத்தையும் கண்டு வியந்து “அல்லாஹ் படைப்பாளர்களிலெல்லாம் மிக அழகான படைப்பாளன்” என்று நினைத்தேன். என் உள்ளக்கிடங்கின் ஆசைக்கு தக்கவாறு அல்லாஹ்வும் இறக்கியருளினான் என உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: இப்னு அபீ ஹாத்தம் )

قوله للنبي  صلى الله عليه وسلم : يا رسول الله، لو اتخذنا من مقام إبراهيم مصلى: فنزلت الآية (وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى )[البقرة: 125]. أخرجه الشيخان.
– وقوله: يا رسول الله، إن نساءك يدخل عليهنَّ البر والفاجر، فلو أمرتهن أن يحتجبن، فنزلت آية الحجاب: (وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ) [الأحزاب: 53.]. أخرجه الشيخان.
– وقوله لنساء النبي  صلى الله عليه وسلم  وقد اجتمعن عليه في الغيرة: ( عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبْدِلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ) [ التحريم: 5] فنزلت في ذلك. أخرجه الشيخان.
– وفي التهذيب للنووي: نزل القرآن بموافقته في أسرى بدر. أخرجه مسلم
– وأخرج ابن أبي حاتم في تفسيره عن أنس قال: قال عمر: وافقت ربي في… هذه الآية: (وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِن سُلَالَةٍ مِّن طِينٍ). الآية فلما نزلت قلت أنا: فتبارك الله أحسن الخالقين. فنزلت: (فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ).
– وفي كتاب فضائل الإمامين لأبي عبد الله الشيباني قال: في قصة عبد الله بن أُبَيّ وحديثه في الصحيح عنه قال عمر رضي الله عنه: لما توفي عبد الله بن أُبي دُعي رسول الله  صلى الله عليه وسلم  للصلاة عليه فقام إليه، فقمتُ حتى وقفتُ في صدره فقلت: يا رسول الله، أو على عدوِّ الله ابن أُبَيّ القائل يوم كذا كذا. فواللهِ، ما كان إلا يسيراً حتى نزلت: (وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِّنْهُم مَّاتَ أَبَدًا).
– وفي تحريم الخمر أنه قال: اللهم بيِّنْ لنا في الخمر بياناً شافياً فأنزل الله تحريمها: (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى). فكان منادي رسول الله  صلى الله عليه وسلم  إذا أقيمت الصلاة ينادي: ألا لا يقربنَّ الصلاة سكران. فدعي عمر فقرئت عليه فقال: اللهم بيِّن لنا بياناً شافياً. فنزلت: (إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ). قال عمر: انتهينا، انتهينا. أخرجه مسلم.
– لما أكثر رسول الله صلى الله عليه وسلم من الاستغفار لقوم: قال عمر: سواء عليهم، فأنزل الله: (سَوَاء عَلَيْهِمْ أَسْتَغْفَرْتَ لَهُمْ أَمْ لَمْ تَسْتَغْفِرْ لَهُمْ لَن يَغْفِرَ اللَّهُ لَهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ). قلت: أخرجه الطبراني عن ابن عباس.
– لما استشار صلى الله عليه وسلم الصحابة في الخروج إلى بدر أشار عمر بالخروج فنزلت:  (كَمَا أَخْرَجَكَ رَبُّكَ مِن بَيْتِكَ بِالْحَقِّ) الآية.
– عن ابن مسعود رضي الله عنه قال؛ قال: لما كان يوم بدر جيء بالأسرى؛ فقال رسول الله صلى الله عليه وسلم: “ما تقولون في هؤلاء؟” فقال أبو بكر: يا رسول اللّه، قومك وأهلك، استبقهم واستأمْن بهم، لعل الله أن يتوب عليهم، وخُذْ منهم فديةً تكون لنا قُوّةً على الكفار. وقال عمر رضي الله عنه: يا رسول الله كذَّبُوك وأخْرَجُوك، قَدِّمْهُم نضرب أعناقهم، مَكِّنْ علياً من عقيل يضرب عنقه، ومكنِّي من فلان نسيب لعمر فأضرب عنقه، فإنَّ هؤلاء أئمة الكفر. وقال عبد اللّه بن رواحة: يا رسول الله انظر وادِياً كثيرَ الحطب فأدخلهم فيه ثم أضرم عليهم ناراً. فقال له العباس: قطعتَ رَحِمَك. فسكتَ رسول الله صلى الله عليه وسلم فلم يجبهم وأنزل اللّه تعالى: (مَا كَانَ لِنَبِيٍّ أَنْ يَكُونَ لَهُ أَسْرَى حَتَّى يُثْخِنَ فِي الْأَرْضِ) إلى قوله:(فَكُلُوا مِمَّا غَنِمْتُمْ حَلَالًا طَيِّبًا).
– لما استشار الصحابة في قصة الإفك قال عمر: من زوجكها يا رسول الله؛ قال: الله، قال: أفتظن أن ربك دلَّس عليك فيها، سبحانك هذا بهتان عظيم؟ فنزلت الآية وفيها (سُبْحَانَكَ هَذَا بُهْتَانٌ عَظِيمٌ).
– قصته في الصيام، لما جامع عمر زوجته بعد الانتباه وكان ذلك محرماً في أول الإسلام فنزل: (أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَآئِكُمْ) الآية. أخرجه أحمد في مسنده.
– قوله تعالى: (قُلْ مَن كَانَ عَدُوًّا لِّجِبْرِيلَ). الآية، قلت: أخرجه ابن جرير وغيره من طرق عديدة وأقرَّ بها للموافقة ما أخرجه ابن أبي حاتم عن عبد الرحمن بن أبي ليلى أن يهودياً لقي عمر فقال: إن جبريل الذي يذكره صاحبكم عدو لنا، فقال له عمر: (مَنْ كَانَ عَدُوًّا لِلَّهِ وَمَلَائِكَتِهِ وَرُسُلِهِ وَجِبْرِيلَ وَمِيكَالَ فَإِنَّ اللَّهَ عَدُوٌّ لِلْكَافِرِينَ).
–  قوله تعالى: (فَلاَ وَرَبِّكَ لاَ يُؤْمِنُونَ حَتَّىَ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ). الآية، أخرج قصتها ابن أبي حاتم وابن مروديه عن أبي الأسود قال: اختصم رجلان إلى النبي  صلى الله عليه وسلم  فقضى بينهما، فقال الذي قضى عليه: ردَّنا إلى عمر بن الخطاب، فأتَيا إليه فقال الرجل: قضى لي رسول الله  صلى الله عليه وسلم  على هذا، فقال: ردَّنا إلى عمر، فقال: أكذاك؟ قال: نعم، فقال عمر: مكانكما حتى أخرج إليكما فخرج إليهما مشتملاً على سيفه، فضرب الذي قال: ردَّنا إلى عمر فقتله، وأدبر الآخر. فقال: يا رسول الله، قتل عمر واللهِ صاحبي، فقال: “ما كنت أظن أن يجترئ عمر على قتل مؤمن”، فأنزل الله: (فَلاَ وَرَبِّكَ لاَ يُؤْمِنُونَ) الآية. فأهدر دم الرجل، وبرئ عمر من قتله.
– في الاستئذان في الدخول، وذلك أنه دخل عليه غلامه وكان نائماً فقال: اللهم حرِّم الدخول فنزلت آية الاستئذان: (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ)الآية.
– لما أنزل اللّه على رسوله: (ثُلَّةٌ مِنَ الأوَّلينَ وَقَلِيلٌ مِنَ الآخِرِين). بكى عمر رضي الله عنه فقال: يا نَبِيّ الله، آمنا برسول اللّه  صلى الله عليه وسلم  وصدَّقناه، ومن ينجو منا قليل؟ فأنزل اللّه عز وجل: (ثلة مِنَ الأوَّلينَ وَثُلَّةٌ مِنَ الآخِرِين)فدعا رسول الله  صلى الله عليه وسلم  عمر رضي الله عنه فقال: “قد أنزل الله عز وجلّ فيما قلت” فقال عمر رضي الله عنه: “رضينا عن ربنا وتصديق نبينا”.


இன்னும் சில இறைவசங்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உமர் (ரலி) அவர்கள் ஆசைப்பட்டதற்கிணங்க இறக்கியருளினான் என்பதை திருக்குர்ஆன், ஹதீஸ்களின் விரிவுரை நூற்களில் காணமுடிகின்றது.

மரணத்திற்குப் பின்னர் ஆசைப்பட்ட ஒருவரின் ஆசை..

فعَنْ طَلْحَةَ بْنِ خِرَاشٍ ، قَالَ : سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ يَقُولُ:لَمَّا قُتِلَ عَبْدُ اللهِ بْنُ عَمْرِو بْنِ حَرَامٍ ، يَوْمَ أُحُدٍ ، لَقِيَنِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ، فَقَالَ : يَا جَابِرُ ، أَلاَ أُخْبِرُكَ مَا قَالَ اللهُ لأَبِيكَ ؟ (وَقَالَ يَحْيَى فِي حَدِيثِهِ : فَقَالَ : يَا جَابِرُ ، مَا لِي أَرَاكَ مُنْكَسِرًا ؟ قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللهِ ، اسْتُشْهِدَ أَبِي وَتَرَكَ عِيَالاً وَدَيْنًا ، قَالَ : أَفَلاَ أُبَشِّرُكَ بِمَا لَقِيَ اللهُ بِهِ أَبَاكَ ؟) قَالَ : بَلَى ، يَا رَسُولَ اللهِ ، قَالَ : مَا كَلَّمَ اللهُ أَحَدًا قَطُّ إِلاَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ، وَكَلَّمَ أَبَاكَ كِفَاحًا ، فَقَالَ : يَا عَبْدِي ، تَمَنَّ عَلَيَّ أُعْطِكَ ، قَالَ : يَا رَبِّ ، تُحْيِينِي فَأُقْتَلُ فِيكَ ثَانِيَةً ، فَقَالَ الرَّبُّ سُبْحَانَهُ : إِنَّهُ سَبَقَ مِنِّي أَنَّهُمْ إِلَيْهَا لاَ يَرْجِعُونَ ، قَالَ : يَا رَبِّ ، فَأَبْلِغْ مَنْ وَرَائِي ، قَالَ : فَأَنْزَلَ اللهُ ، تَعَالَى : (وَلاَ تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ).أخرجه ابن ماجة (190) الألباني :حسن الظلال ( 602 ) ، التعليق الرغيب ( 2 / 190 - 191 ).

ஹழ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”என் தந்தை அப்துல்லாஹ் ரலி அவர்கள் உஹது போரில் கொல்லப்பட்ட போது நபி {ஸல்} அவர்கள் என்னை சந்தித்துஜாபிரே! ஏன் கவலையாக இருக்கிறீர்?” என விசாரித்தார்கள்.

அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என் தந்தை உஹதில் ஷஹீதாகிவிட்டார். அவர் குடும்பங்களையும் சில கடன்களையும் விட்டுச்சென்றுள்ளார். அவரின் கடனை அடைத்து, குடும்பத்தை எப்படி நடத்துவது? என யோசனை செய்து  கொண்டிருக்கிறேன் என்று நான் கூறினேன்.

அதைக்கேட்ட அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், அல்லாஹ் உன் தந்தையை எப்படி சந்தித்தான் என்று கூறட்டுமா? என கேட்டார்கள்.
அவசியம் கூறுங்கள் என்றேன்.

அல்லாஹ் யாருடனும் திரையின்றி பேசமாட்டான். ஆனால் உன் தந்தையுடன் நேரடியாக திரையின்றி பேசினான்: ”என் அடியானே!உனக்கு என்ன வேண்டும்?.நீ ஆசைப்படு. அதை உனக்கு நான் கொடுக்கிறேன் என்று அல்லாஹ் கூறினான்.

அதற்கு, உன் தந்தை-ரப்பே! எனக்கு மீண்டும் உயிர் கொடு, அதை உனக்காக (நான் கொல்லப்பட்டு) திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்றார்கள்.
அதற்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன்,  இங்கு வந்தவர்கள் யாரும் திருப்பி உலகுக்கு அனுப்பபடமாட்டார்கள் என்ற என் தீர்ப்பு முந்திவிட்டது.என்று கூறியபோது-

அப்படியானால் என்னைப்பற்றிய செய்திகளையாவது என்னை பிரிந்துவாடும் என் குடும்பத்திற்கு எத்திவைப்பாயாக என கூறினார்கள். அப்போது அல்லாஹ்...

وَلاَ تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ

“அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை மரணித்தவர்கள் என்று எண்ணிவிடவேண்டாம். அவர்கள் உயிருள்ளவர்கள். அவர்கள் ரப்பிடம் உணவளிக்கப்படுகிறார்கள் என்ற ஆயத்தை இறக்கினான்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                ( நூல்: இப்னு கஸீர் )

எனவே, ஈருலகிலும் பயன் தருகிற அனைத்தையும் ஆசைப்படுவோம்!

அல்லாஹ்வே! எங்கள் அனைவருக்கும் ஹஜ் செய்கிற நஸீபைத் தந்தருள்வாயாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!