Thursday 20 March 2014

அல்லாஹ்வின் ஆற்றல் அளவிட முடியாதது!


           அல்லாஹ்வின் ஆற்றல் அளவிட முடியாதது!






 என்ன தான் விஞ்ஞான வளர்ச்சி மிக வேகமாக முன்னேற்றம் அடைந்திருந்தாலும், புதுப்புது பலவீனங்கள் வெளிப்பட்ட வண்ணம் இருக்கின்றன.
ஐயாயிரம் கிலோமீட்டர் தொலைவு கடல் கடந்து போய் தாக்கும் ஏவுகணைகளையும், அவற்றை இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டே திசைமாறாமல் கணிணி மூலம் இயக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறது நவீன விஞ்ஞான சமூகம்.

ஒருவர் மாறி ஒருவர் செயற்கை கோள்களை விண்வெளியில் இயக்கி புவியாட்சி செய்கிற தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் வலிமை கொண்டிருக்கிறது நவீன விஞ்ஞான சமூகம்.

ஆனாலும், கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசிய ஏர்லைன்ஸின் போயிங் 777 விமானம் 239 பயணிகளுடன் மலேசியாவிற்கும் வியத்நாமிற்கும் இடையே தென்சீனக்கடலின் மீது பறக்கும் போது காணாமல் போனது.

இதுவரை அது குறித்தான தகவல்களை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமாக புதிது புதிதாக ஊடகங்கள் வெளிப்படுத்துவதை நாம் கண்டு வருகின்ற இந்த வேளையில் நமக்கு புலப்படுகிற விஷயம் ஒன்றே ஒன்றுதான்.
மனித அறிவு என்ன தான் விஞ்ஞான உலகில், அறிவியல் யுகத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும் அதன் பரிணாமம் ஒரு குறிப்பிட்ட எல்கை வரை மட்டுமே!

மனிதனால் எல்லை எதுவென்றே என கண்டுபிடிக்க இயலாத எண்ணற்ற பல கோள்களையும், துணைக்கோள்களையும் நாம் வாழ்கிற இப்பிரபஞ்சத்தையும் அதன் பிரம்மாண்டத்தையும் அதி அற்புதமாக படைத்து இயக்கிக் கொண்டிருக்கும் ஓர் ஒப்பற்ற படைப்பாளனை அளவிடும் அளவிற்கு மனித அறிவுக்கு வலிமையில்லை.

நிர்ணயிக்கப்பட்டுள்ள எல்லைக்கு உள்ளே மட்டும் தான் மனித அறிவு இயங்கும். ஆனால், ஒரு போதும் அல்லாஹ்வின் ஆற்றலை, அளப்பெரும் அறிவாற்றலை ஒரு எல்லைக்குள் வைத்து எடைபோட்டுப் பார்க்க மனித சமூகத்தால் இயலாது அப்படி முயற்சிப்பது அறியாமையின் அத்தாட்சியாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்: “ஆனால், உங்களுக்கு மிகக் குறைவாகவே அறிவு ஞானம் வழங்கப்பட்டுள்ளது.”                                                                         ( அல்குர்ஆன்:17:85)


முரண்களின் பிறப்பிடமே அறிவியலும், விஞ்ஞானமும்...

நவீன அறிவியலும், விஞ்ஞானமும் பல்வேறுவிதமான முரண்களைக் கொண்டதாகும். முதலில் ஒன்றைச் சொல்வார்கள் பின்பு அதை மறுத்து ஒன்றைச் சொல்வார்கள். பின்பு அதையும் மறுத்து மூன்றாவதாக ஒன்றை ஆய்வு செய்து சொல்வார்கள்.

பிறகு இன்னொரு ஆய்வாளர் கடைசியாக வந்த மூன்று கருத்துக்களையும் மறுத்து விட்டு முந்தைய ஆய்வே சிறந்ததென்பார். இது அறிவியலில், விஞ்ஞானத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிப்போனதை பார்க்க முடிகிறது.

இப்போதும் அப்படித்தான் நிகழ்ந்துள்ளது. மார்ச் 8 ஆம் தேதி காணாமல் போன விமானத்தைப் பற்றி ஒவ்வோரு நாட்டு ரேடாரும் ஒவ்வொரு விதமாக சொல்வதைக் காண முடிகிறது. ரேடார் என்னவோ ஒன்றுதான் ஆனால், அதன் மூலம் பெறப்படுகிற தகவல்கள் தான் வெவ்வேறாக இருக்கின்றது.

உதாரணத்திற்கு சில தகவல்களைப் பார்ப்போம்.

1.கி.பி.1795 –ல் டாக்டர். சாமுவேல் ஹானிமனால் ஆங்கில மருத்துவத்திற்கு எதிராக ஹோமியோபதி கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கண்டுபிடித்த முதல் மருந்து – சின்ஹோனா (Cinhona)

இது எந்த நோய்க்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா? மலேரியாவிற்காகத்தான்! 1795 முதல் இன்று வரை ஹோமியோபதி மருத்துவர்கள் மலேரியா உள்பட பல்வேறு நோய்களுக்கு இந்த மருந்தை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளார்கள்.
ஆனால், மருத்துவ விஞ்ஞானம் மலேரியா காய்ச்சலுக்கு காரணம் மலேரியா கிருமிகள் தான் (Malaria Parasites). என்று கூறுகின்றது. இதை கண்டுபிடித்தது 1864 –ல், இதை கண்டுபிடித்தவர் லூயிஸ் பாஸ்டர் என்பவர்.

கிருமிகளைக் கொல்லும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது 1929 –ல், முதல் கிருமிக் கொல்லியான (Antibiotic) மருந்தான பென்சிலின் பயங்கரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது என்று இப்போது விஞ்ஞானம் அறிவித்து இருப்பது வேறுவிஷயம்.

மலேரியாவிற்கான மருந்து 1930 களில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ விஞ்ஞானம் கூறுகின்றது.

இங்கே முரண்பாட்டைக் கவனித்தீர்களா? ஏற்கனவே, மருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நோய்க்கு 70 ஆண்டுகளுக்கு பின்பு ஒரு காரணமும், பின்னர் நேர்மாறான ஒரு மருந்தும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

(நூல்: (அ. உமர் ஃபாரூக் M.Acu, D.Ed (Acu)  அவர்கள் எழுதிய ) உடலின் மொழி, பக்கம்:49,50)


2.கி.பி. 1864 –ல் லூயிஸ் பாஸ்டர் என்பவர் உடலில் காணப்படும் நுண்ணுயிர்கள் – கிருமிகள் என்றும் – அக்கிருமிகளே நோய்களைத் தோற்றுவிக்கின்றன என்றும் கூறினார். அதை நிரூபிக்கும் விதமாக பாரீஸ் வியன்னா பல்கலை கழகத்தில் ஒரு ஆய்வை நடத்தினார் பாஸ்டர்.

மாமிசத்துண்டு ஒன்று திறந்த வெளியில் வைக்கப்பட்டது. பல மணி நேரங்களுக்குப் பிறகு அது அழுகி நோயுற்று இருந்தது. அதில் பலவகை கிருமிகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

“நோய்களுக்கு காரணம் – கிருமிகள்! ஒவ்வொரு கிருமியும் ஒவ்வொரு நோயை ஏற்படுத்தும் சக்திபடைத்தவை. இக்கிருமிகள் காற்று, நீர் போன்றவை மூலமாக மனித உடலின் உள்ளே புகுகின்றன”  என்று லூயிஸ் பாஸ்டர் அறிவித்தார். இது தான் இன்றைய மருத்துவ விஞ்ஞானத்தின் அடிப்படை கொள்கை (Infection Theoryகிருமிக்கொள்கை) யாக இருக்கின்றது.

முதன் முதலில் கிருமிகளைக் கண்டுபிடித்த டாக்டர். ஆண்டனி பீச்சாம்ப் இக்கொள்கையை முற்றிலும் நிராகரித்தார். அதே 1864 –ல் பாரீஸ் வியன்னா பல்கலைகழகத்தில் ஆய்வு ஒன்றை நடத்தினார்.

ஒரு மாமிசத்துண்டை காற்றுப் புகாத கண்ணாடிப்பேழையில் வைத்தார். பல மணி நேரங்கள் கழித்து அது அழுகி, நோயுற்று இருந்தது. அதில் பல வகை கிருமிகளும் காணப்பட்டன.

“காற்றின் வழியே கிருமிகள் வருகின்றன என்றால், காற்றே புகாத இந்தப் பேழைக்குள் எப்படி கிருமிகள் வந்தன?”  என பாஸ்டருக்கு சவால் விடுத்த பீச்சாம்ப், தொடர்ந்து தன் ஆய்வுகளின் முடிவை வெளியிட்டார்.

“உடலில் தேங்கியிருக்கும் கழிவுப் பொருட்களிலிருந்து கிருமிகள் உருவாகின்றன. இக்கிருமிகள் கழிவுகளை உணவாக உட்கொண்டு உடலிற்கு நன்மை செய்கின்றன. ஒரு கட்டத்தில் கழிவுகள் தீர்ந்த நிலையில் கிருமிகள் தானே அழிந்து விடுகின்றன”  என்பதே அவர் வெளியிட்ட முடிவாகும்.

இதே கொள்கைதான் உலகெங்கும் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய மருத்துவங்களின் “லிக்கோ கோட்பாடுஎன்று அழைக்கப்படுகிறது.

இதன் பின்னரும் 1869 –ல் மீண்டும் ஓர் ஆய்வை நடத்தி தம் கொள்கையை வலுப்படுத்தினார் பீச்சாம்ப்.

கிருமிகள் பற்றி துவங்கப்பட்ட இப்படியான ஆய்வுகளின் முடிவுகள் லூயிஸ் பாஸ்டரின் கிருமிக்கொள்கைகளுக்கு எதிராகவே இருந்தன.

1892 –ல் பவேரியா நாட்டைச்சார்ந்த டாக்டர். பெட்டின் காபர் என்பவர் கிருமிகளை தன் உணவில் கலந்து உட்கொண்டார். எவ்வித பாதிப்புமின்றி, இதே பரிசோதனையை மீண்டும் மீண்டும் பல்கலைக்கழகங்களில் நிகழ்த்திக் காட்டினார்.

1916 –ல் கனடா நாட்டைச்சார்ந்த டாக்டர். ஜான் பி. பிஃரேசர் என்பவர் கழிவுகளிலிருந்து தான் கிருமிகள் உருவாகின்றன என்று நிரூபித்தார்.

இறுதியில், லூயிஸ் பாஸ்டர் தன் மரணப்படுக்கையில் இருந்த போது “உடல் தான் எல்லாமே; கிருமிகள் ஒன்றுமில்லை” (Tissue is everything; Germ is nothing) என்று தன் ஆய்வுகளுக்கு எதிரான கருத்தை தானே வெளியிட்டார்.

இன்று வரையும் கிருமிக்கொள்கை சர்ச்சைக்குரியதாவே இருந்து வருகின்றது. நமது மருத்துவ பல்கலைக்கழகங்களும் கிருமிக்கொள்கையை ஆங்கில மருத்துவ பாடமாகவும், கிருமி எதிர்ப்புக்கொள்கையை மாற்று மருத்துவப் பாடமாகவும் நடத்திக் கொண்டிருக்கின்றது.

                                     (நூல்: உடலின் மொழி, பக்கம்:52-55)


3.1981 –ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தான் முதன் முதலில் எய்ட்ஸ் நோய் பற்றிய தகவல் உலகிற்கு வெளியாகியது. 1986 வரை 14,000 –க்கும் மேற்பட்டோர் இக்கொடிய நோயால் பாதிக்கப்பட்டனர். இதில் 51 சதவீதம் பேர் இறந்து போயினர். மேலும், இரண்டாவது சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில் 1991 –ஆம் ஆண்டிற்குள் மூன்று லட்சம் பேருக்கு எய்ட்ஸ் வரலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன் நைரோபியில் நடைபெற்ற சர்வதேச மகளிர் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் இந்திய சுகாதார அமைப்பின் அன்றைய கௌரவச் செயலாளர் கிலாடா கலந்து கொண்டு பேசுகையில் “மும்பையிலுள்ள ஒரு கோடி ஜனத்தொகையில் சுமார் ஒரு லட்சம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தில்லியிலுள்ள எழுபது லட்சம் ஜனத்தொகையில் நாற்பதாயிரம் பெண்களும், புனேவில் 15 முதல் 20 சதவிகிதம் வரையிலான திருமணமான பெண்களும் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்என்று குறிப்பிட்டார்.

(நூல்: அ. கான் பாக்கவி அவர்கள் எழுதிய அருள்மறை குர்ஆனும் அறிவியல் கண்டுபிடிப்புகளும், பக்கம்:221-224.)

எய்ட்ஸ் ஏற்படக்காரணம் என்று H.I.V. (Human Immunodeficency Virus) கிருமியைக் கூறியது மருத்துவ உலகம். ஆனால், உலகத்தின் சிறந்த மருத்துவ அறிவியலாளர்கள் சிலர் இதனை கடுமையாக மறுக்கின்றனர்.

சுவிஸ் செஞ்சிலுவைச் சங்க ரத்தவங்கியின் இயக்குநரும், பெர்ன் பல்கலைகழகத்தின் நோய் எதிர்ப்பாற்றல்துறையின் சிறப்பு பேராசிரியருமான டாக்டர். ஆல்பர்ட் ஹாஸ்ஸிக் “எய்ட்ஸ் உயிர்க் கொல்லி நோய் என்று பிரச்சாரம் செய்வதை ஒழிக்க வேண்டும்என்றார். (சண்டே டைம்ஸ், லண்டன் - 3.4.1994)

கலிபோர்னியா பல்கலைகழகத்தின் மரபணுக்கள் துறை பேராசிரியர் டாக்டர். ஹாரி ரூபின் “எய்ட்ஸ் க்கு காரணம் H.I.V. கிருமி தான் என்பதை நிரூபிக்க முடியவில்லைஎன்றார். (சண்டே டைம்ஸ், லண்டன் 3.4.1994)

மரபணு உயிரியல் துறையைச் சார்ந்த பேராசிரியர் டாக்டர். ஹார்வி பியாலி “HIV என்பவை மிகச் சாதாரண கிருமிகள். விஞ்ஞானிகள் கூறும் அசாதாரணமான விளைவுகள் HIV  கிருமிகளால் ஏற்படுவது சாத்தியமே இல்லைஎன்றார்.                              (ஸ்பின், ஜூன் 1992.)

ரசாயனத்துறையில் 1980 –ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற மரபணுத்துறை பேராசிரியர் டாக்டர். வால்டர் கில்பர்ட் “எய்ட்ஸ் நோய்க்கு HIV வைரஸ் காரணமல்ல; மற்ற ஏதேனும் காரணங்களால் எய்ட்ஸ் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லைஎன்றார்.                 (ஆம்னி, ஜூன் 1993)

இவற்றையெல்லாம் விட, முதன் முதலில் HIV  எனும் கிருமியை கண்டுபிடித்த – பாரீஸ் பாஸ்டர் கல்லூரியின் கிருமியியல் துறை பேராசிரியர் டாக்டர். லுக்மோன் ஃபிக்னியர் “HIV  எய்ட்ஸ் க்கு காரணமல்ல; இதைப் பற்றிய ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளில் ஏராளமான குளறுபடிகளும், பித்தலாட்டங்களும் உள்ளன”  என்றார்.       (மியாமி ஹெரால்ட், 23.12.1990)

                                  (நூல்: உடலின் மொழி, பக்கம்:58,59)

ஆக இன்னும் எவ்வளவோ உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். மனித அறிவும், அந்த அறிவால் கண்டுபிடிக்கப் படுகிற நவீன கண்டுபிடிப்புகளும் ஓர் குறிப்பிட்ட எல்லைக்குள்ளே தான் கட்டுண்டு கிடக்கின்றன.

அதோடு மட்டுமின்றி முன்னுக்குப் பின் முரணான பல முரண்கள் அங்கே ஒளிந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், அல்லாஹ்வின் ஆற்றலும், விசாலமான அறிவும் தெரிவிக்கின்ற எந்த ஒன்றிலும் எள் முனையளவு கூட முரணைக் காண இயலாது.

சூரிய சந்திர இயக்கம் குறித்து அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்ற சான்று ஒன்றே போதுமானதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்: “மேலும், இரவு அவர்களுக்கு மற்றொரு சான்று ஆகும். அதிலிருந்து நாம் பகலை அகற்றிவிடும்போது அவர்கள் மீது இருள் சூழ்ந்து கொள்கிறது.

மேலும், சூரியனும் ஒரு சான்றாகும். அது தனக்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. இது பேரறிவு படைத்தோனும், வல்லமை மிக்கவனுமாகிய இறைவனின் நிர்ணயமாகும்.

மேலும், சந்திரன் இன்னொரு சான்றாகும். அதற்கு நாம் பல்வேறு நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். எதுவரையெனில், அது உலர்ந்து வளைந்து போன பேரீச்சம்காம்பு போல் மீண்டும் ஆகிவிடுகின்றது.

சூரியன் சந்திரனைச் சென்றடைய முடியாது. மேலும், இரவு பகலை முந்திவிடவும் முடியாது. ஒவ்வொன்றும் தத்தமது மண்டலங்களில் நீந்திக் கொண்டிருக்கின்றன.                              (அல்குர்ஆன்:36:37-40)
செயற்கைகோள் மூலமாக உலக நாடுகளையே தன் கண்காணிப்பில் வைத்துள்ளதாக மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்காவும், அதை இதுவரை நம்பிக்கொண்டிருந்த உலக மனித சமுதாயமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றது.

கடைசியாக கிடைத்த தகவலின் படி ரேடாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு விமானம் பயணித்ததாக கதை சொல்கிறார்கள்.

எது எப்படியோ மனித அறிவுக்கும், நவீன கண்டுபிடிப்புகளுக்கும் உண்டான எல்லையை தீர்மானிப்பதாக இந்த மாயமாய்ப் போன விமானம் அமைந்து விட்டதை இறை நம்பிக்கையாளன் உணர்ந்து கொள்வான்.


அருள்மறை குர்ஆனும், நவீன விஞ்ஞானமும்...


விஞ்ஞானம் உண்மையேன நம்பிக்கொண்டிருக்கும் பல விஷயங்களை இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. மேலும், அருள்மறை குர்ஆன் என்பது ஓர் அறிவியல் புத்தகமும் இல்லை.

மாறாக, அது ஓர் அத்தாட்சிகள் நிறைந்த அற்புதப் பெரு நூலாகும். இப்பூமியில் அமைந்துள்ள மனித வாழ்வின் அடிப்படை நோக்கத்தை மனிதன் அறிந்து கொண்டு, இயற்கையின் இயல்புகளோடு இணங்கி வாழ்ந்திட வேண்டும் என்று அழைப்பு விடுப்பதே அல்குர்ஆனின் ஆழமான தத்துவமாகும்.

1.டார்வின் கொள்கை

கி.பி. 1809 –ல் பிறந்த டார்வின் 1882 –ல் மறைந்தார். வாழும் காலங்களில் இயற்பியல் (Physics) அறிஞர் என பெரிதும் போற்றப்பட்டார். இவர் தான் பரிணாமக் கொள்கையை உலகிற்கு அறிவித்தார்.

அனைத்து வகைப் படைப்பினங்களும் ஆரம்பத்தில் ஒரே வகையாகத் தான் இருந்தது. பின்னர் தான் பலவகைப் படைப்புக்களாக அவை பரிணமித்தன. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், நீரில் ஒரே செல் மட்டுமே தோன்றியதுஎன்பது தான் டார்வின் தத்துவம் என அறியப்படுகின்றது.

இதை அடிப்படையாகக் கொண்டு மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான். பின்னர் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் தற்போதைய வடிவத்தை எய்தினான் என்று அறிவியல் உலகம் இன்று வரை கூறிக்கொண்டுதான் இருக்கின்றது.
பல்வேறு ஆய்வுகளும், ஆராய்ச்சியின் முடிவுகளும் அது தவறான கொள்கை என்று உணர்த்திய பின்பும் கூட அறிவியல் உலகம் இன்று வரை அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது.

அதற்கு நேர்மாற்றமாக, மனிதன் இப்போதுள்ள நிலையிலேயே தான் முதன் முதலாகத் தோன்றினான் எனக் குர்ஆன் கூறுகின்றது.

பரிணாமம், வளர்ச்சி, படித்தரம் போன்ற எதுவும் அவனுடைய வரலாற்றில் இல்லை என்று குர்ஆன் கூறுகின்றது.

மேலும், படைக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே அவன் மனிதனாக இருந்தான்; பண்பாடு உள்ளவனாக இருந்தான்; முழுஅறிவோடும் உணர்வோடும் இருந்தான் என்றும் குர்ஆன் கூறுகின்றது.

முதல் மனிதர் களிமண்ணால் படைக்கப்பட்டார்; அடுத்தடுத்த மனிதர்கள் விந்தினால் படைக்கப்பட்டனர் என்ற கருத்தை, அல்குர்ஆனில் அல்லாஹ் 15 இடங்களில் கூறுகின்றான்.

மனித இனம் ஆரம்பத்திலிருந்து ஒரே மூலத்திலிருந்து படைக்கப்பட்டது தான் என்றும், ஒரே ஆன்மாவிலிருந்தே மனித இனம் பல்கிப் பெருகியது என்றும் அல்குர்ஆனில் அல்லாஹ் 5 இடங்களில் கூறுகின்றான்.

மனித இனமே உலகில் தோன்றிய உயிரினங்களில் மிகச் சிறந்த உயிரினம் என்பதாக அல்குர்ஆனின் 17:70 –ஆம் வசனமும், 95:8 –ஆம் வசனமும் பேசுகின்றது.

மேலும், மனித இனத்தின் முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் எல்லா நாகரீகமும், அறிவும் நிறைந்தவராகத்தான் படைத்தான் என்பதாக அல்குர்ஆனின் 2:30-33 வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

ஆக, டார்வின் கொள்கை சுத்தப்பொய் என்றும், அடிப்படை ஆதாரம் அற்றது எனவும் அல்குர்ஆன் வலியுறுத்துகிறது.


சில போது, அறிவியல் விஞ்ஞானம் நடைமுறைக்கு அப்பாற்பட்டதாக கருதியிருந்தவைகளில் இஸ்லாமிய வழிகாட்டுதலை மறுப்பேதுமின்றி மண்டியிட்டு உண்மைபடுத்திய சம்பவங்களும் உண்டு.





2.பிரசவகால அவகாசம்.

அதிகபட்சமாக ஒரு குழந்தை தாயின் வயிற்றில் 298 நாட்கள் கூடிப்போனால் 317 நாட்கள் இருக்கும், பின்பு பிரசவம் நிகழ்ந்துவிடும் என்றுதான் 1944 ஃபிப்ரவரி 10 –ஆம் தேதிவரை அறிவியல் விஞ்ஞான உலகம் நம்பிக்கொண்டிருந்தது.

ஆனால், டெக்‌ஷாஸ் மாகாணத்தின் ஒரு பெண்மணி 17 மாதமும் 11 நாட்களும் தன் வயிற்றில் குழந்தையை சுமந்து 12 –வது நாளில் தான் பிரசவித்தாள்.  நவீன உலகில் இது தான் (Longest Human Pregnancy On Record) என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. (இறுதியில் உங்களின் பார்வைக்காக அதன் ஆங்கில மொழியாக்கம் இணைக்கப்படும்)

Longest Human Pregnancy On Record

Generally, a normal human pregnancy last around 280 days, which is slightly more than nine months. During this time, the baby slowly develops enough to survive and grow outside of the womb. Each pregnancy is slightly different, and women can give birth slightly earlier or later and still be considered normal. However, in 1945, a young woman gave birth after 375 days. This is a period of almost a 
year and a half. The woman, Beulah Hunter, was 25 when she gave birth. Doctors claim that the length of her pregnancy is accurate by looking at the date she first tested positive for pregnancy, as well as the date of her last menstrual cycle. Beulah Hunter claimed she had her last menstrual cycle on February 10th in 1944. The first time she tested positive for pregnancy was on March 24th of that same year. Doctors believe that the cause of this long pregnancy was the extremely slow development of the fetus. The baby developed much more slowly than a normal child while in the womb. However, Beulah Hunter's daughter, Penny Diana, was born healthy and normal, ready to face the world, with no outstanding developmental issues apparent at the time.Beulah Hunter's pregnancy is the longest known in which a living child was born. There have been many instances in which a stillborn fetus did not dissipate properly, meaning that the woman did not give birth at the correct time. This gives the appearance of what would seem like an abnormally long pregnancy. Because the children did not survive, though, medical professionals and record keepers do not consider these to be true long pregnancies. Before Beulah Hunter, the longest pregnancy resulting in a living child was only 317 days. Although this is some time short of Beulah Hunter's remarkable lengthy pregnancy, it is still a very long time to be pregnant.More reference links: www.time.comtheophanes.hubpages.com

One of the residents to deliver a healthy baby boy last year was Dr. August. Her pregnancy is also of note because it was the longest recorded human gestation on record. Dr. August was pregnant for a staggering 17 months 11 days. This will be noted in the next edition of the Guinness Book of Workl Records.
PreviousNext

இதன் பின்னர் அறிவியல் உலகம் ஒரு பெண்ணின் பிரசவ காலம் அதிசயமாக நீண்டு கொண்டு போகலாம் என ஒப்புக்கொண்டது.

ஆனால், அல்லாஹ் அல்குர்ஆனில் அர் – ரஅத் அத்தியாயத்தின் 8- ஆம் வசனத்தில் ஒரு பெண்ணின் பிரசவ காலத்தின் கூடுதல் குறைவுகள் குறித்து தாமே மிக அறிந்து வைத்திருப்பதாக குறிப்பிடுகின்றான்.

மாலிக் இப்னு தீனார் (ரஹ்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து “அபூ யஹ்யா அவர்களே! என் மனைவி கர்ப்பம் தரித்து நான்கு ஆண்டுகளாக வயிற்றில் குழந்தையை சுமந்து வருகின்றார்; அவருக்கு இன்று காலை கடுமையான வலி ஏற்பட்டது. துஆ செய்யுங்கள்என்றார்.

இதைக் கேட்டதும், மாலிக் இப்னு தீனார் (ரஹ்) அவர்கள் கடும் கோபமடைந்தவர்களாக “என்ன இந்த மக்கள் நம்மை நபி என்று நினைத்துக் கொண்டார்களா? என்று கேட்டுவிட்டு, மேற்கூரிய இறைவசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.

பின்பு, “யாஅல்லாஹ்! அப்பெண்மணியின் வயிற்றில் காற்று மாத்திரம் நிரம்பி இருக்குமானால் உடனே வெளியேற்றிவிடு! அது உண்மையில் குழந்தைப்பேறாக இருக்குமானால் அழகான ஆண்குழந்தையை பிறக்கச் செய்வாயாக! என்று துஆ செய்தார்கள்.

அந்த சபையில் அந்த மனிதரும் நின்று கொண்டிருந்தார்; அப்போது அவரின் உறவினர் ஒருவர் வந்து, அவரின் பெயர் கூறி அழைத்து “உமக்கு குழந்தை பிறந்துள்ளதுஎன்றார். அவர் உடனே அங்கிருந்து சென்று விட்டார்.

அதன் பின்னர், ஒருவர் வந்து ஆண் குழந்தை பிறந்ததாகவும், நன்கு பல் வளர்ந்து, முடிகள் தோள் புஜம் வரை இருந்ததாகவும் கூறினார்.

முஹம்மத் இப்னு அஜ்லான் எனும் தாபிஈ அவரின் தாயாரின் வயிற்றில் நான்கு ஆண்டுகள் இருந்ததாக அவர்களே கூறியுள்ளார்கள்.

தஃப்ஸீர் கலையின் தலைசிறந்த மாமேதை ளஹ்ஹாக் (ரஹ்) அவர்கள் தமது தாயாரின் வயிற்றில் இரண்டு ஆண்டுகள் இருந்ததாகவும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஒருவர் வந்து, அமீருல் முஃமினீன் அவர்களே! நான் வெளியூர் சென்றிருந்தேன். இரண்டு ஆண்டுகளாக ஊரில் இல்லை. வந்து பார்த்தால் என் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள்.

காரணம் கேட்டால் நான் தான் என்கிறாள். விசாரித்து தீர்வைச் சொல்லுங்கள்என்று முறையிட்டார். உமர் அவர்கள் ஆலோசனை செய்து ரஜ்ம் கல்லெறி தண்டனை நிறைவேற்ற முடிவெடுத்தார்கள்.

இதைக் கேள்வி பட்ட முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள், அவள் வேண்டுமானால் தவறு செய்திருக்கலாம்; வயிற்றில் இருக்கும் சிசு ஒரு தவறும் செய்யாதது. ஆகவே, குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர் தண்டனையை நிறைவேற்றுங்கள் என்றார்கள்.

அவகாசம் வழங்கப்பட்டது. ஒரு நாள் முறையிட்ட அந்த நபர் உமர் (ரலி) அவர்களின் சபைக்கு ஓடோடி வந்தார். வந்தவர் “அமீருல் முஃமினீன் அவர்களே! கஅபாவின் இறைவனான அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! பிறந்த அந்த குழந்தை எனக்குரியது தான்! அது என் சாயலிலேயே இருக்கின்றது! என்றார்.

இதைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள் “முஆத் மட்டும் இல்லை என்றால் இந்த உமர் அழிந்து போயிருப்பார்! என்றார்கள்.

மேலும், ஹரிம் இப்னு ஹய்யான் என்பவரும் அவரின் தாயார் வயிற்றில் நான்கு ஆண்டுகள் இருந்தவர்தான் என ஹம்மாத் இப்னு ஸலமா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

                  (நூல்: தஃப்ஸீர் அல்குர்துபீ, பாகம்:5, பக்கம்:482,483.)

எனவே, அல்லாஹ்வின் ஆற்றலை, அவனுடைய விசாலமான அறிவை யாராலும் ஒரு எல்லைக்குள் நிறுத்தி வைக்கவோ, எடைபோட்டு பார்க்கவோ முடியாது.

ஏனென்றால், அவன் படைப்பாளன், அவனுடைய அறிவு அனைத்தையும் சூழ்ந்து அறிகின்றது, அவன் அனைத்து வஸ்துக்களின் மீதும் ஆற்றல் படைத்தோனாய் இருக்கின்றான்.

ஆகவே, அல்லாஹ்வின் ஆற்றல் தான் அளப்பரியது அளவிடமுடியாதது எனும் முடிவிற்கு நம்மை இந்த விமானம் காணாமல் போன செய்தி அழைத்துச் செல்கிறது.

அல்லாஹ் விளக்கத்தை தருவானாக! ஆமீன்! வஸ்ஸலாம்!




  


















Wednesday 12 March 2014

உன் வெற்றி.. உன் முடிவில்...2 சென்றவாரத் தொடர்ச்சி..



               உன் வெற்றி.. உன் முடிவில்...2
                   சென்றவாரத் தொடர்ச்சி..









உலகில் எந்த ஒரு மனிதனையும், சக மனிதர்கள் மிக எளிதாக அடையாளப்படுத்துவது அவன் பெற்றிருக்கிற வெற்றியைக் கொண்டு தான்.

அது அவன் சார்ந்திருக்கிற துறை ரீதியிலான வெற்றியாக இருக்கலாம். அல்லது குடும்ப ரீதியிலான வெற்றியாக இருக்கலாம்.

நிர்வாக ரீதியிலாகவோ அல்லது அரசியல் தொடர்பானதாகவோ, அல்லது ஆன்மீக ரீதியிலான வெற்றியாகக்கூட இருக்கலாம்.

எந்த வெற்றியாக இருந்தாலும் அதன் பிண்ணனியில் அவன் மேற்கொண்ட முடிவுகளும், அதை அவன் கையாண்ட விதமும்தான் அடிப்படையாக அமைந்திருக்கும்.

இறைமார்க்கம் இஸ்லாமும் அதைத்தான் வெற்றிக்கான இலக்காக, படிக்கல்லாக வகுத்துத்தந்துள்ளது.
இப்லீஸ் மல்வூனாக மாறுவதற்கும், பர்ஸீஸா வழிகேட்டில் வீழ்வதற்கும், பல்ஆம் இப்னு பாவூரா நாயை விட கேவலமான நிலைக்கு தள்ளப்படுவதற்கும் அவர்கள் மேற்கொண்ட தவறான முடிவுகள் தான் காரணமாக அமைந்ததாக அல்குர்ஆன் விளக்கிக் கூறுகின்றது.

எனவே, வாழ்வில் ஒரு மனிதன் மேற்கொள்கிற முடிவு தான் அவன் வாழ்க்கைப் போக்கையே மாற்றுகிறது. அது தான் அவன் வாழ்க்கையின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது என்பதை நாம் விளங்க வேண்டும்.

5. நன்மையளிக்கிற முடிவு (Fair)

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் “இஸ்லாமிய உலகை, இஸ்லாமிய ஆளுமையை, இஸ்லாமிய அரசியல் கலாச்சாரத்தை உலகிற்கு உணர்த்திய பொற்காலம்ஆகும்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் உலகத்தின் அத்தனை ஆட்சியாளர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் வியந்து போற்றும் அளவிற்கு மாட்சிமை பொருந்திய ஆட்சியை வழங்கிய பெருமைக்குச் சொந்தக்காரர் உமர் (ரலி) அவர்கள்.

காரணம் தங்களின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பல்வேறு முக்கியமான தருணங்களின் போதும், குழப்பமான பிரச்சனைகளின் போதும் அவர்கள் மேற்கொண்ட அழகிய முடிவுகள் தான் என உறுதியாகச் சொல்ல முடியும்.

முஆவியா (ரலி) அவர்களை ஷாமின் ஒரு பகுதியான ஹிம்ஸ் –ல் இருந்து பதவி நீக்கம் செய்த பிறகு அந்த இடத்திற்கு நல்ல ஒரு ஆட்சியாளரை அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்பட்டது.
அன்றைய சூழ்நிலையில் இரண்டாம் கூஃபா என்று அழைக்கும் நிலைக்கு பெரும் வர்த்தக நகரமாக ஹிம்ஸ் மாறிக்கொண்டிருந்தது.

அங்குள்ள மக்களும் எந்த ஒரு ஆட்சியாளரையும் பொருந்திப் போகிற மனோ நிலையில் இல்லை. யாரை நியமித்தாலும் ஏதாவது குற்றங்குறைகளை சுமத்தி அவரை பதவியில் நீடிக்க வைப்பதில்லை.

ஆதலால் உமர் (ரலி) அவர்களுக்கு இது பெரும் மன உளைச்சலை தந்து கொண்டிருந்தது.

உடனடியாக அவசர ஆலோசனை மன்றத்திற்கு முக்கியமான நபித்தோழர்களை வரச்சொல்லி ஆணை பிறப்பித்தார்கள்.

ஆலோசனை மன்றம் கூடியதும் உமர் (ரலி) அவர்கள் வருகை புரிந்திருந்தவர்களை நோக்கி “இந்த ஷாம் மக்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நாம் மிருதுவான சுபாவம் கொண்ட ஒருவரை ஆட்சியாளராக நியமித்தால், அவரை பலவீனப்படுத்தி விடுகின்றார்கள்.

 நல்ல வலுவான ஆற்றல் கொண்ட ஒருவரை ஆட்சியாளராக நியமித்தால், அவரின் மீது குறை கூறுகின்றனர். நல்ல நம்பிக்கையும், பலமும் அவர்களை புரிந்து கொண்டு செயல்படும் தன்மையும் கொண்ட ஒருவர் நம்மிடையே இருந்தால் அடையாளம் காட்டுங்கள். அவரை நாம் அம்மக்களுக்கு ஆட்சியாளராக நியமிப்போம்  என்றார்கள்.

அங்கிருந்தவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் மீது சத்தியமாகச் சொல்கின்றேன்! அப்படிப்பட்ட ஒருவர் இன்று இங்கேயே இருக்கின்றார்என்றார். உமர் (ரலி) அவர்கள் பேரார்வத்தோடு யார்? என வினவினார்கள்.

அதற்கவர், உங்கள் மகனார் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தான் அதற்கு முழுத்தகுதியும் வாய்ந்தவர் எனக் கூறினார்.

அப்துல்லாஹ்வை அதற்கான தகுதிகள் உடையவராக நான் கருதவில்லை. அப்படியே அவர் தகுதிபடைத்தவராக இருந்தாலும் அப்படியான நியமனம் எதையும் நாம் அவருக்குச் செய்யமாட்டோம் என்றார்கள்.

                               (நூல்: குலஃபாவுர் ரஸூல் {ஸல்}, பக்கம்:122)

திடீரென உமர் (ரலி) அவர்கள் நான் ஒருவரை கண்டு கொண்டேன். அவர் தான் அம்மக்களுக்கு மிகவும் பொருத்தமானவராக இருப்பார். அவர் வேறு யாருமல்ல ஸயீத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் தான். போய் அழைத்து வாருங்கள் என்று ஆளனுப்பினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் ஸயீத் இப்னு ஆமிர் (ரலி) அவர்களை தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை வரலாற்று ஆசிரியர்கள் கூறும் போது பின்வரும் ஒரு நிகழ்வினை சுட்டிக்காட்டுகின்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த துவக்க காலத்தின் ஒரு நாள் காலைப் பொழுதில், உமர் (ரலி) அவர்களைச் சந்திக்க வருகிறார்கள் ஸயீத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள்.

வழக்கமான சம்பிரதாய விசாரிப்புகள் முடிவடைந்த்தும் ஸயீத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களை நோக்கி “முஃமின்களின் தலைவரான உமர் அவர்களே! இஸ்லாம் உயர்த்திப் பிடிக்கிற சில அரசியல் கொள்கைகளை உங்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

குடிமக்களின் விவகாரங்களில் அல்லாஹ்வை நீங்கள் அதிகம் அஞ்சிக் கொள்ளுங்கள். ஏகனாகிய அல்லாஹ்வின் விவகாரங்களில் எந்த மனிதருக்கும் நீங்கள் அஞ்சிட வேண்டாம்.

உங்களின் வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாட்டை உருவாக்கி விடாதீர்கள். ஏனெனில், சொற்களில் மிகச் சிறந்தது அதை செயலில் கொண்டுவருவது தான்.

அல்லாஹ் உங்களை முஸ்லிம்களின் பொருப்புதாரியாக நியமித்து இருக்கிறான். அவர்களின் விஷயத்தில் பேதங்களின் அடிப்படையில் நீங்கள் நடந்து கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே ஆதரவு வைத்துச் செயல்படுங்கள்.

உங்களுக்கும், உங்கள் வீட்டாருக்கும் விரும்புவதையே, மக்களின் விஷயத்திலும் விரும்புங்கள். உங்கள் விஷயத்திலும், உங்கள் வீட்டாரின் விஷயத்திலும் எதையெல்லாம் நீங்கள் வெறுப்பீர்களோ மக்களின் விஷயத்திலும் வெறுத்துவிடுங்கள்.

சத்தியத்தில் நிலைத்து நின்று, சத்தியத்திற்கே சான்றாய் நீங்கள் விளங்குங்கள். அல்லாஹ்வின் விஷயத்தில் எவருடைய பழிப்புக்கும் நீங்கள் அஞ்ச வேண்டாம்என்று கூறினார்கள்.

                            (நூல்: அல் பிதாயா வன் நிஹாயா, பாகம்:4, பக்கம்:55)

ஸயீத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் வந்ததும், தாம் அவர்களை ஷாமின் ஹிம்ஸ் பகுதிக்கு ஆளுநராக நியமனம் செய்துள்ளதாகக் கூறினார்கள்.

அதைக்கேட்டதும் ஸயீத் (ரலி) அவர்கள், அமீருல் முஃமினீன் அவர்களே! என்னை பெரும் குழப்பத்தில் ஆழ்த்திவிடாதீர்கள்! நான் ஆளுநராகச் செல்ல மாட்டேன்! என்று மறுத்தார்கள்.

கடும் கோபமடைந்த உமர் (ரலி) அவர்கள் “உங்கள் பொறுப்புக்களையும், பிரதிநிதித்துவத்தையும் என் கழுத்தில் சுமத்தி, என்னை தனியாக தவிக்க விட்டு ஓடிடலாமென்று நினைக்கின்றீர்களா? ஒரு போதும் விட மாட்டேன்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஹிம்ஸ் பகுதியின் மக்களுக்கு உம்மை விட சிறந்த ஓர் ஆட்சியாளரை என்னால் தர இயலாது. மறுக்காமல் அல்லாஹ்வின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்!என்றார்கள்.

பின்னர் வேறு வழியின்றி அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள் ஸயீத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள்.

பின்னர் தமது மனைவியோடு ஹிம்ஸ் – க்கு பயணமானார்கள். தமது நன்னடத்தை மற்றும் சிறந்த நிர்வாகம் ஆகியவற்றால் அம்மக்களிடம் ஓர் நிலையான நன் மதிப்பையும் பெற்றுக்கொண்டார்கள்.

 கட்டுப்பாடற்ற தன்மைக்கு பெயர் போன ஷாம் தேசத்து மக்கள் முழுக்க முழுக்க ஸயீத் (ரலி) அவர்களின் ஆளுமையின் கீழ் கட்டுப்பாடான நிலைக்கு மாறிப் போயிருந்தனர்.

இந்நிலை கண்டு ஆச்சர்யப்பட்டுப்போன உமர் (ரலி) அவர்கள், நேரில் சென்று கள ஆய்வு செய்திட அரசியல் நல்லெண்ணப் பயணமாக ஷாம் புறப்பட்டு வந்தார்கள்.

ஷாமின் அத்துனை பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்ட உமர் (ரலி) அவர்கள், தம்மை எதிர்கொண்ட எல்லா மக்களிடமும் ஸயீத் (ரலி) அவர்கள் குறித்து விசாரித்தார்கள். மக்கள் அனைவரும் ஸயீத் (ரலி) அவர்கள் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதை அவர்கள் உதிர்த்த பதில் அதை உறுதிபடுத்தியது.

ஒரு நாள் பொழுது, உமர் (ரலி) அவர்கள் ஸயீத் (ரலி) அவர்களோடு உரையாடிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் “ஸயீதே! ஷாம் தேசத்து மக்கள் அனைவரும் உம்மை நேசித்து, உம் ஆளுமையின் கீழ் ஓரணியாய் செயல்பட என்ன காரணம்?என்று கேட்டார்கள்.

அதற்கு, ஸயீத் (ரலி) அவர்கள் “அமீருல் முஃமினீன் அவர்களே! என்னை ஆளுநராக அனுப்பிய அந்நாளிலேயே “அல்லாஹ்வின் ஷரீஅத்துடைய விஷயத்தில் நான் எவ்வாறு நடந்து கொள்வேன்என்று அம்மக்களிடம் மிகத்தெளிவாக கூறி விட்டேன்.

மேலும் அவர்களுக்கான தேவைகளின் போது நல்லதொரு உதவியாளனாகவும், அவர்களின் தளர்ந்த நேரங்களில் ஆறுதல் சொல்பவனாகவும் நான் அவர்களிடம் நடந்து கொள்கின்றேன்என்று பதில் கூறினார்கள்.

வரலாற்று ஆசிரியர் காலித் முஹம்மத் காலித் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “மிக முக்கியமான தருணத்தில் ஸயீத் (ரலி) அவர்களை தேர்ந்தெடுத்து ஹிம்ஸ் - க்கு ஆளுநராய் அனுப்ப உமர் (ரலி) அவர்கள் எடுத்த அந்த முடிவு தான் அவர்களின் ஆட்சி மிகச்சிறப்பாய் அமைய உதவியது.

ஏனெனில், பின்நாளில் ஃகிலாஃபாவிலே பிரச்சனைகளை ஏற்படுத்தியவர்களாக, கிளர்ச்சியாளர்களாக கூஃபா மற்றும் ஷாம், ஹிம்ஸ் ஆகிய பகுதிகளில் வாழ்ந்தவர்கள் தான் பங்கெடுத்தனர்.

ஆனால், கட்டுப்பாடற்ற தன்மைக்கு பெயர்போன ஷாம் தேசத்து மக்களை, முழுக்க முழுக்க தம் ஆளுமையின் கீழ் ஸயீத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள், கட்டுப்பாடும் ஒழுக்கமும் நிறைந்த மக்களாய் மாற்றிக்காட்டினார்கள்.
                 (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:151 – 159.)


6. நடைமுறைக்கு இணக்கமான முடிவு (Practical Harmonious)

ஹுதைபிய்யா உடன்படிக்கை ஹிஜ்ரி 6-ல் மக்கா குறைஷிகளுக்கும், நபிகளாரின் தலைமையில் உம்ரா செய்யச் சென்ற முஸ்லிம்களுக்கும் இடையே நடைபெற்ற உடன்படிக்கையாகும்.

மக்காவிற்குள் நுழையக்கூடாது என தடுக்கப்பட்ட பின் ஏற்பட்ட உடன்படிக்கையாகும்.

வெளிப்படையாக பார்க்கிற போது இது முஸ்லிகளுக்கு ஏற்பட்ட தோல்வி போன்று தோன்றினாலும் இது தான் இஸ்லாம் உலகம் தழுவிய அளவில் விரிவடைவதற்கு பெரும் அரணாய் அமைந்தது.

உடன்படிக்கையில் கூறப்பட்ட 4 அம்சங்கள்

1.நபியவர்கள் இந்த ஆண்டு திரும்பிச் செல்ல வேண்டும். மக்காவிற்குள் நுழையக்கூடாது. அடுத்த வருடம் முஸ்லிம்கள் உம்ராவிற்கு வந்து மக்காவில் மூன்று நாட்கள் தங்கிக் கொள்ளலாம். சாதாரணமாக ஒரு பயணி தன்னுடன் வைத்திருக்கும் ஆயுதங்களை எடுத்து வரலாம். ஆனால், அவற்றை உறைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கு எவ்வகையிலும் எந்தவித தொந்தரவும் கொடுக்கப்பட மாட்டாது.

2.பத்து ஆண்டுகளுக்கு இரு தரப்பிலும் போர் நடவடிக்கை எடுக்கக் கூடாது. யாரும் எவருக்கும் எவ்வித தீங்கும் செய்யக்கூடாது.

3.எவர் வேண்டுமானாலும் முஹம்மதின் ஒப்பந்தத்திலும், குறைஷியரின் ஒப்பந்தத்திலும் சேர்ந்து கொள்ளலாம். அது அவரவரின் விருப்பத்தைச் சார்ந்தது. எந்த ஒரு கிளையாரும் இந்த இரு வகுப்பாரில் சேர்ந்து கொள்கிறாரோ அவர் அந்த வகுப்பாரையே சேர்ந்தவராவார். அதற்குப் பின் அந்தக் கிளையாருடன் யாராவது அத்துமீறி நடந்து அது அந்த வகுப்பினர் மீது அத்துமீறி நடந்து கொண்டதற்குச் சமமாகும்.

4.குறைஷிகளில் எவராவது தனது பாதுகாவலரான நெருங்கிய உறவினரின் அனுமதியின்றி தப்பித்து முஹம்மதிடம் வந்து சேர்ந்தால், குறைஷியர்களிடம் அவர் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால், முஸ்லிம்களில் எவராவது தப்பித்து குறைஷியர்களிடம் வந்து விட்டால் அவர் மீண்டும் முஹம்மதிடம் ஒப்படைக்கப்பட மாட்டார்.

இந்த ஒப்பந்தம் ஏற்படுத்திய விளைவுகள்

1.முஹம்மது {ஸல்} அவர்களையும், முஸ்லிம்களையும் எப்படியாவது வேரோடு அழித்து விட வேண்டும் என்பதிலேயே குறிக்கோளாக இருந்த குறைஷியர்கள் சமாதான உடன்படிக்கைக்கு பணிந்து வந்ததே முஸ்லிம்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

2.இனி முஸ்லிம்களை எதிர்த்து போராட தங்களிடம் எவ்வித ஆற்றலும் இல்லை என்பதை குறைஷிகள் ஒத்துக் கொண்டது போல் அமைந்து விட்டது.

3.ஒப்பந்தத்தின் முதல் அம்சம் முஸ்லிம்களுக்கு கிடைத்த இரண்டாம் வெற்றியாகும். “இது நாள் வரை முஸ்லிம்களைக் குறைஷிகள் அல்லாஹ்வின் பள்ளியிலிருந்து தடுத்து வந்ததற்கு ஓர் முற்றுப்புள்ளியாய் அது அமைந்து விட்டது.இதுவும் குறைஷிகளுக்கு தோல்வி தான். ஏனெனில், இந்த வருடம் மட்டுமே அவர்களால் தடுக்க முடிந்ததே தவிர வேறெந்த சாதகமும் அவர்களுக்கு இல்லை.

4.ஒப்பந்தத்தின் இரண்டாம் அம்சம் முஸ்லிம்களுக்கு கிடைத்த மூன்றாம் வெற்றியாகும்.  “முஸ்லிம்கள் குறைஷிகளுடன் ஒருபோதும் தாங்களாக போரைத்தொடர்ந்தது கிடையாது. மேலும், இப்படி ஒப்பந்தம் செய்ததால் குறைஷிகளின் அகம்பாவம், ஆணவம் ஆகியவற்றிற்கும், அல்லாஹ்வின் பாதையிலிருந்து தடுக்கும் அவர்களின் வம்புத்தனத்திற்கும் ஒரு முடிவு கட்டப்பட்டது.  மேலும், அவர்கள் வலுவிழந்து தோற்றுப்போனார்கள் என்பதை சுட்டிக் காட்டுவதாயும் அது அமைந்து விட்டது. இதுவும் அவர்களுக்கு ஏற்பட்ட தோல்வியே.

5.ஒப்பந்தத்தின் மூன்றாம் அம்சம் முஸ்லிம்களுக்கு கிடைத்த நான்காம் வெற்றியாகும். “குறைஷிகள் அதுவரை கட்டிக்காத்து வந்த தங்களது தலைமைத்துவத்தை முற்றிலுமாக இழந்து விட்டிருந்தனர் என்பதையும், இனி தங்களை பாதுகாத்துக் கொள்வதே மிக முக்கியம் என்பதை ஒத்துக்கொண்டனர் என்பதையும் எடுத்துக் கூறிற்று.மேலும், இதுவும் அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விதான்.

6.ஒப்பந்த்த்தின் நான்காம் அம்சம் முஸ்லிம்களுக்கு கிடைத்த ஐந்தாம் வெற்றியாகும். “எந்த ஓர் உண்மையான இறை நம்பிக்கையாளனும் அல்லாஹ்வை விட்டோ, அவனின் சத்திய தூதரை விட்டோ, உயர்வான தீனுல் இஸ்லாத்தை விட்டோ, முஸ்லிம்களின் கூட்டமைப்பை விட்டோ விலகிச் செல்ல விரும்ப மாட்டார். அப்படியே விலகிச் சென்றாலும் அது இறைமார்க்கத்திற்கோ, முஸ்லிம்களுக்கோ எவ்வித நஷ்டமும் இல்லை. இந்த நான்காவது அம்சத்தின் மூலமும் குறைஷிகள் தோல்வியைத்தான் தழுவினர்.

(நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:200-203. தமிழ் ரஹீக், பக்கம்:417-423.)


இக்கட்டான ஒரு சூழ்நிலையில் அல்லாஹ்வின் தூதர் எடுத்த நடைமுறைக்கு இணக்கமான அந்த முடிவால் வெறும் இரண்டே ஆண்டுகளில் 1400-க இருந்த முஸ்லிகளின் எண்ணிக்கை ஹிஜ்ரி 8 மக்கா வெற்றியின் போது 10000 –க உயர்ந்ததையும், அயல் நாடுகளில் இஸ்லாம் விரிவடைவதற்கும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அண்ணலாரின் இறுதிஉரையின் போது 100000 –க்கும் மேற்பட்டோர் அணிவகுத்து நிற்பதற்கும் அச்சாரமாய் அமைந்தது என்றால் அது மிகையல்ல.


7. நியாயமான முடிவு (Ethical)

ஃபத்ஹ் மக்கா- மக்கா வெற்றி, முஸ்லிம்கள் இது நாள் வரை அடைந்திருந்த எல்லா துன்பங்களுக்கும் முழுமையான விடை கொடுக்கப்பட்ட நாள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் கரத்தில் முழுமையான அதிகாரங்கள் வரப்பெற்றிருந்த நாள்.

ஒரு புறம் முஸ்லிம்கள் வெற்றியின் மகிழ்ச்சியிலும், மறு புறம் குறைஷிகள் என்ன நடக்குமோ என பீதியிலும் உறைந்திருந்த நாள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கஃபாவின் உள்ளே நுழைந்து அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் முகமாக இரண்டு ரக்அத் தொழுது விட்டு வெளியே வந்தார்கள்.

கஃபாவின் வாசலில் நிலைப்படியை பிடித்துக் கொண்டு, குறைஷிகளை நோக்கி “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன். அவனுக்கு எவ்வித துணையுமில்லை.

அவன் தனது வாக்கை நிலை நாட்டினான்; தன் அடியாருக்கு உதவி செய்தான்; அவனே ராணுவங்கள் அனைத்தையும் தோற்கடித்தான். இதுவரை நடைமுறையில் இருந்து வந்த அல்லாஹ்வின் இந்த இல்லத்தை பராமரிப்பது, ஹாஜிகளுக்கு தண்ணீர் புகட்டுவது ஆகிய இவ்விரண்டைத் தவிர ஏனைய அனைத்துச் சிறப்புக்களையும், மற்ற பொருள் அல்லது உயிர் சம்பந்தப்பட்ட அனைத்து சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் எனது இவ்விரண்டு கால்களுக்குக் கீழ் புதைத்து விட்டேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

தவறாக்க் கொலை செய்து விடுதல் என்பது “ஷிப்ஹுல் அம்தைப் போன்றுதான். (சாட்டை அல்லது கைத்தடி போன்ற கொலைசெய்யப் பயன்படாத ஆயுதங்களால் தாக்கும் போது ஏற்படும் எதிர்பாராத உயிரிழப்புக்கு ஷிப்ஹுல் அம்த்எனப்படும்.) இதற்கு கடுமையான குற்றப் பரிகாரம் கொடுக்கப்பட வேண்டும். அதாவது, 100 பெண் ஒட்டகைகள் கொடுக்க வேண்டும். அதில் 40 சினை ஒட்டகையாக இருக்க வேண்டும்.

குறைஷிக்கூட்டமே! அறியாமைக்காலத்தில் நீங்கள் கடைபிடித்த மூடத்தனமான பழக்கவழக்கங்களையும், முன்னோர்களைக்கொண்டு பெருமையடித்து வந்ததையும் இப்பொழுது அல்லாஹ் போக்கி விட்டான்.

மக்கள் அனைவரும் ஆதமின் சந்ததியினர் ஆவர். என்று கூறிவிட்டு “அல்குர்ஆனின் 49-ஆம் அத்தியாயத்தின் 13-ஆம் வசனத்தை ஓதிக்காண்பித்தார்கள்.

பின்னர், குறைஷிக் கூட்டத்தினரே! நான் உங்களிடம் எவ்விதம் நடந்து கொள்வேன் எனக் கருதுகின்றீர்கள்? என அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கேட்க, “நல்ல முறையில் நடந்து கொள்வீர்கள். நீங்கள் எங்களுக்குச் சிறந்த சகோதரராகவும், எங்களில் சிறந்த சகோதரரின் மகனாகவும் இருக்கின்றீர்கள்என குறைஷிகள் பதில் கூறினார்கள்.

அதற்கு நபி {ஸல்} அவர்கள் “நான் உங்களுக்கு யூஸுஃப் நபி {அலை} அவர்கள் தனது சகோதரர்களுக்குக் கூறியதைப் போன்றுதான் கூறுவேன். உங்களை எவ்வித்த்திலும் பழிக்கப்படாது, நீங்கள் மன்னிக்கப்பட்டவர்கள். நீங்கள் எவ்வித அச்சமும் இன்றி உங்கள் இல்லங்களுக்குச் செல்ல்லாம்என்று கூறினார்கள்.

(நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:226,227. தமிழ் ரஹீக், பக்கம்:495,496.)

கண்ணில் மரண பயமும், எவ்வித ஆதரவும் இன்றி நிராயுதபாணிகளாய் சரணடைந்து, குற்ற உணர்வுடன் கூனிக்குறுகி நின்று கொண்டிருந்த மக்கள் விஷயத்தில் அண்ணல் நபிகளார் மேற்கொண்ட நியாயமான முடிவு உலக மனித வரலாற்றில் இன்றளவும் யாராலும் முறியடிக்க முடியாத சாதனையாக மிளிர்ந்து கொண்டிருப்பதை வரலாறு சொல்லிக் கொண்டிருக்கின்றது.

8.ஆலோசனை செய்து எடுக்கிற முடிவு (Consideration)

ஸபா நாட்டு அரசிக்கு இஸ்லாமிய நற்பேறு கிடைக்க அவர்கள் மேற்கொண்ட ஆலோசனைதான் வழிவகை செய்ததாக அல்குர்ஆன் இயம்புகிறது. (பார்க்க: அல்குர்ஆன்:27:23-44)
அஹ்ஸாப் யுத்தத்தின் வெற்றியைத் தீர்மானிக்க பாரசீகத்தைச் சார்ந்த ஸல்மானுல் ஃபார்ஸி (ரலி) அவர்களின் ஆலோசனையும் முக்கிய பங்கு வகித்ததாக வரலாறு பதிவு செய்திருக்கின்றது.


9.சட்ட ரீதியான முடிவு (Legal)

ஹிஜ்ரி 6, துல்கஅதா மாதம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தாங்கள் கண்ட கனவின் அடிப்படையில் உம்ரா செய்ய 1400 தோழர்களுடன் மக்கா நோக்கி பயணமானார்கள்.

 நபி {ஸல்} தங்களின் நிலையையும், நோக்கத்தையும் உறுதியாகத் தெளிபடுத்திக் கூறவும், குறைஷிகளிடம் ஒரு தூதரை அனுப்ப விரும்பியும் உமர் (ரலி) அவர்களை அழைத்தார்கள்.

ஆனால், உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அங்கு சென்ற பின் எனக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் எனக்காக களமிறங்கிப் போராடும் அதீ இப்னு கஅப் கிளையைச் சார்ந்த எவரும் அங்கில்லை. எனவே, உஸ்மான் (ரலி) அவர்களை அனுப்புங்கள். நீங்கள் விரும்பும் விஷயத்தை அவர் தான் சரியான முறையில் குறைஷிகளிடம் எடுத்து வைப்பார்!என்று கூறினார்கள்.

நபியவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களை அழைத்து “நீர் குறைஷிகளிடம் சென்று, நாம் போருக்காக வரவில்லை; உம்ராவிற்காகத்தான் வந்திருக்கின்றோம் என்று எடுத்துச் சொல்லுங்கள்! பிறகு அவர்களை சத்திய தீனின் பக்கம் அழையுங்கள்! மேலும், மக்காவில் இருக்கும் முஸ்லிகளைச் சந்தித்து வெற்றி நமக்குத்தான் என்ற நற்செய்தியைக் கூறுங்கள்! அல்லாஹ் அவனது மார்க்கத்தை மிக விரைவில் மக்காவில் ஓங்கச் செய்வான். ஆகவே, யாரும் இறைநம்பிக்கையை மறைத்து வாழ வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்களிடம் சொல்லுங்கள்! என்று கூறினார்கள்.

ஆகவே, உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். வழியில் பல்தஹ் எனும் இடத்தை கடந்த போது சில குறைஷிகளை சந்தித்தார்கள். தங்களின் உரையாடலின் போது தாங்கள் மக்காவிற்கு செல்வதின் நோக்கத்தை குறைஷிகளிடம் தெரிவித்தார்கள் உஸ்மான் (ரலி) அவர்கள்.

அதற்கு குறைஷிகள் நீர் சொல்வதை நாங்கள் கேட்டு விட்டோம். நல்ல விஷயம் தான். நீர் உமது நோக்கத்தை நிறைவேற்ற மக்காவிற்குச் செல்ல்லாம்என்றனர்.

கூட்டத்தில் இருந்த அபான் இப்னு ஸயீத் இப்னு அல் ஆஸ் என்பவர் எழுந்து உஸ்மான் (ரலி) அவர்களை வரவேற்று, பின்னர் தம் குதிரைக்கு கடிவாளமிட்டு அதில் தன் பின்னால் அமரவைத்து, அவர்களுக்கு அடைக்கலமும் கொடுத்து மக்காவிற்கு அழைத்து வந்தார்.

மக்கா வந்ததும் குறைஷித்தலைவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் ஆசையை உஸ்மான் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். ஆனால், நீங்கள் வேண்டுமானால் கஅபாவை வலம் வர அனுமதிக்கின்றோம். ஆனால், நபியவர்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். என்று குறைஷிகள் கூறிவிட்டனர்.

ஆனால், உஸ்மான் (ரலி) அவர்கள் நபிகளார் இல்லாமல் தாம் வலம் வர இயலாது என மறுத்து விட்டார்கள்.

குறைஷிகள் உஸ்மான் (ரலி) அவர்களை கையில் காப்பு இட்டு மக்காவில் ஓரிடத்தில் தடுத்து வைத்து விட்டனர். இந்த பிரச்சனையில் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கும் வரை உஸ்மான் அவர்களை அனுப்பாமல் தடுத்து வைத்திடுவோம் என அவர்கள் முடிவெடுத்தனர்.

ஆனால், உஸ்மான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் எனும் செய்தி மக்காவிலும், மக்காவிற்கு வெளியிலும் மிக விரைவாக பரவியது.

இப்படியே முஸ்லிம்களுக்கும் வந்து கிடைத்தது. இந்தச் செய்தி மாநபி {ஸல்} அவர்களிடம் சொல்லப்பட்ட போது “குறைஷியர்களிடம் போர் செய்யாமல் இவ்விடத்தை விட்டு நாம் நகரக்கூடாது.என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

மேலும், தங்களது தோழர்களைப் போருக்காக உடன்படிக்கை செய்து தர அழைத்தார்கள். ஸஹாபாக்கள் உயிர் இருக்கும் வரை போராடுவோம் என்பதாகவும், அதற்காக உயிரைக் கொடுக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் நபிகளாரிடம் ஒப்பந்தம் செய்தார்கள்.

அபூ ஸினான் அல் அஸதீ (ரலி) என்பவர்தான் முதன் முதலில் ஒப்பந்தம் செய்தார். ஸலமா இப்னு அக்வஃ (ரலி) அவர்களோ மூன்று முறை ஒப்பந்தம் செய்தார். அதாவது, மக்கள் ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்த போதும், பின்பு நடுவிலும், பின்னர் இறுதியிலும் ஒப்பந்தம் செய்தார்.

நபி {ஸல்} அவர்கள் தங்களின் ஒரு கையால் மற்றொரு கையைப் பிடித்துக் காட்டி “இந்தக் கை உஸ்மான் சார்பாகஎன்று கூறினார்கள். அதாவது, உஸ்மான் (ரலி) உயிருடன் இருந்தால் இதிலும் பங்கெடுத்து இருப்பார் என்பதை உணர்த்தும் முகமாக நபிகளார் இதைச் செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஒரு மரத்திற்கு கீழ் இவ் உடன்படிக்கையை வாங்கினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபியின் கையைத் தாங்கி பிடித்து இருந்தார்கள். மஃகில் இப்னு யஸார் (ரலி) அவர்கள் மரத்தின் ஒரு கிளையைச் சாய்த்து நபிகளாருக்கு நிழல் தரும் வண்ணமாக பிடித்திருந்தார்கள்.

இந்த உடன்படிக்கையைத் தான் “பைஅத்துர் ரிள்வான் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட இறைபொருத்த்த்திற்குரிய உடன்படிக்கைஎன இஸ்லாமிய வரலாறு சான்று பகர்கின்றது.

அல்லாஹ்வும், இது குறித்து திருமறையில் “இறை நம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்தபோது அல்லாஹ் அவர்களை குறித்து திருப்தி கொண்டான். அவர்களுடைய உள்ளங்களின் நிலைமைகளை அவன் அறிந்திருந்தான். இதனால், அவன் அவர்கள் மீது நிம்மதியை இறக்கியருளினான். விரைவில் கிடைக்கும் வெற்றியையும் அவர்களுக்கு வெகுமதியாக வழங்கினான்.என்று (அல்குர்ஆன்:48:18). குறிப்பிடுகின்றான்.

நிலைமை இவ்வாறிருக்க, முஸ்லிம்கள் தங்கள் மீது பயங்கரமான முறையில் போர் தொடுக்க ஆயத்தமாகி விட்டார்கள். எனும் செய்தி குறைஷிகளுக்குத் தெரியவரவே, இனியும் உஸ்மான் (ரலி) அவர்களை தடுத்து வைத்திருப்பது தங்களுக்கு நல்லதல்ல என்று கருதி உஸ்மான் (ரலி) அவர்களை விடுதலை செய்துவிட்டனர்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், நபித்தோழர்களும் புறப்பட்டு சில எட்டுக்கள் தான் வைத்திருப்பார்கள். அதற்குள் உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கே வந்து விடுகின்றார்கள்.

(நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ, பாகம்:9, பக்கம்:100-102, தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:199.)

இதன் பின்னர் தான் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹுதைபிய்யா உடன்படிக்கை நிகழ்வு நடந்தேறியது.

அன்றும் தூதுவர்கள் கண்ணியப்படுத்தப்பட வேண்டும், அவர்கள் துன்புறுத்தப்படவோ, கொலை செய்யப்படவோ கூடாது எனும் நடைமுறை சட்டரீதியாக மதிக்கப்பட்டு வந்தது.

லாவகமாக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சட்ட ரீதியான அந்த முடிவை கையில் எடுத்து, மூர்க்கத்தனமும் துரோகமிழைக்கும் குணமும் கொண்ட குறைஷிகளை சட்டத்தின் முடிவின் முன் மண்டியிட வைத்து மாபெரும் வெற்றியை ஈட்டினார்கள்.

எனவே, வாழ்க்கையில் வெற்றிகளை குவித்துத் தருகிற, முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்கிற முடிவுகளை மேற்கொள்கிற நல்ல ஆற்றல் படைத்தோராக அல்லாஹ் நம்மை ஆக்கியருள்புரிவானாக!

முன்னேற்றம் தருகிற முடிவுகளை கையாள்கிற தகுதிவாய்ந்தோராக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக!

           ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

                     வஸ்ஸலாம்!!