Wednesday 15 December 2021

Are You not a rational man? உங்களில் நேர்மையான மனிதர் ஒருவர் கூட இல்லையா? (ஔரங்கசீப் உண்மை வரலாறு)

 

Are You not a rational man?

உங்களில் நேர்மையான மனிதர் ஒருவர் கூட இல்லையா?

(ஔரங்கசீப் உண்மை வரலாறு)



இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமய, சமூக, பூகோள மாற்றங்களுக்கு தமது பெரும் பங்களிப்பைச் செய்தவர்கள் முகலாய பேரரசர்கள். இவர்களின் ஆட்சிக்காலத்தை (கி.பி 1526 முதல் 1858 வரை, ஹிஜ்ரி 932 முதல் 1274 வரை) இந்திய வரலாற்றின் பொற்காலமாக வரலாற்றாசிரியர்கள் போற்றிப் புகழ்கின்றார்கள்.

சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக முகலாயர்களின் ஆட்சியில் இந்தியா மிளிர்ந்தது, ஒளிர்ந்தது என்றால் அது மிகையல்ல 

துருக்கியில் கலீஃபா ஸுலைமானும், பிரான்ஸை 1-ஆம் பிரான்சிஸ்ஸும், ஜெர்மனியை 5 –ஆம் சார்லஸ்ஸும், இங்கிலாந்தை 8 –ஆம் ஹென்றியும் கோலோச்சிய கால கட்டத்தில் தான் இந்தியாவின் முகலாயப்பேரரசு 1526 –ம் ஆண்டு பாபர் அவர்களின் தலைமையில் உதயமானது. ஆம்! 16 –ம் நூற்றாண்டின் ஆசியாவின், மிகப் பெரும் ஆட்சியாளர் என வரலாற்று ஆய்வாளர் வின்ஸ்ஸன் ஸ்மித் போற்றிப் புகழும் முகலாயர்களின் முதல் ஆட்சியாளராக பரிணமித்தார் பாபர் அவர்கள்.

ஆனால், முகலாயர்கள் என்றாலே இந்த இந்திய தேசத்துக்கு எதிரானவர்கள், இந்து மக்களையும், இந்து மதக்கடவுளர்களையும் இழிவு செய்தவர்கள் என்ற தோற்றத்தை பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற சங்கப்பரிவார கூட்டங்கள் வரலாற்றை திரித்து அவதூறு மலங்களை அள்ளி வீசி வருகின்றனர்.

அப்படியான அவதூறுகளில் ஒன்றைத் தான் நமது பாரதப்பிரதமர் நரேந்திர மோடியும் கடந்த 13/12/2021 அன்று வாரணாசியில் ரூ.339 கோடியில் கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் புதிய வளாகம் 1. திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து விட்டு பேசுகையில். 

ஔரங்கஜீப்பின் அராஜகங்களை வரலாறு கண்டது. மதவெறி மூலம் கலாச்சாரத்தை அழிக்க முயன்றவர்களை வரலாறு கண்டது. ஆனால், இந்த நாட்டின் மண் உலகில் மற்ற பகுதிகளை விட வேறுபாடானது.  ஒரு ஔரங்கஜீப் இருந்தால் சிவாஜியும் இருப்பார்என குறிப்பிட்டுள்ளார். ( நன்றி: தி இந்து தமிழ், 13/12/2021, 7.பி.எம் )

இந்திய அரசியலில் முகலாயர்கள் மீதான இது போன்ற விமர்சனங்களை மத்தியிலும், பல மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும் பாஜக தலைவர்களே தொடுத்து வந்திருக்கின்றனர் 

முதன் முதலாக பாரதப்பிரதமர் கட்சியின் விசுவாசத்தை, ஆர்.எஸ்.எஸின் சித்தாந்தத்தை நாட்டு மக்களின் முன்பாக வெளிப்படுத்தி இருக்கின்றார்.

தலையை உயர்த்திப் பார்க்க வைக்கும் தாஜ்மஹல் தொடங்கி, தலைகுனிந்து நெற்றியை ஸஜ்தாவில் கிடத்தும் பள்ளிவாசல்களைத் தொடர்ந்து, சாலைகளின் பெயர்கள் வரை இந்த விமர்சனங்கள் நீளும்.

பாஜக வின் சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோம்முகலாய ஆட்சி இந்திய கலாச்சாரத்துக்கு ஒரு கறைஎன்றார். மத்திய அமைச்சர் பி.கே சிங் டெல்லியில் இருக்கும் அக்பர் சாலையின் பெயரை மஹாரானா பிரதாப் சாலை என மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். பாஜக வின் தலைவர் ஷாய்னா என்.சி, ”அக்பர் ஹிட்லரைப் போன்றவர்என்று கூறி டெல்லியின் சாலை பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.

முகலாய அரசர்களை பற்றி எதன் அடிப்படையில் இந்த பாஜக வினர் விமர்சிக்கின்றனர்? கடந்தகால, நிகழ்கால முஸ்லிம்கள் தொடர்பான விவரங்கள் பாஜக கட்சியின் தலைவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கின்றது?.

முகலாய ஆட்சியாளர்கள் குறித்த வரலாற்றுக் கண்ணோட்டம்

ஜெர்மன்-அமெரிக்க வரலாற்றாசிரியர் ஆண்ட்ரே கண்டர் ஃபிராங்க் 1998ஆம் ஆண்டில் எழுதிய "ரீஓரியண்ட்: குளோபல் எகானமி இன் தி ஏஷியன் ஏஜ்" (Reorient: Global Economy in the Asian Age) புத்தகத்தில், "இந்தியாவும் சீனாவும் பதினெட்டாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் பொருளாதார ரீதியாக ஆதிக்கம் செலுத்தியது உண்மைதான். இந்த காலகட்டத்தில் இந்தியாவை ஆண்டது முகலாய ஆட்சியாளர்கள்".

இந்த இரு நாடுகளும் முழு உலகையும் ஆதிக்கம் செலுத்தியதாக ஃபிராங்க் குறிப்பிட்டுள்ளார். இங்கிருந்துதான் பல வரலாற்றாசிரியர்கள் இந்த கருத்தை முன்னெடுத்துச் சென்றார்கள்.

இந்தியாவின் இடைக்கால வரலாற்றை பார்ப்பதற்கு பல்வேறுபட்ட அணுகுமுறைகள் உள்ளன. அதில் ஒன்று இடதுசாரி வரலாற்றாளர்கள். அவர்களின் கருத்துப்படி, இந்தியாவின் இடைக்கால வரலாறு பல்வேறு விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. இடைக்கால காலப்பகுதியில் விரைவான நகரமயமாக்கல், கட்டிடக்கலை சிறப்பு முக்கியத்துவம் பெற்றது மற்றும் மையப்படுத்தப்பட்ட ஆட்சி முறை உருவாக்கப்பட்டது என்பது அவர்களின் நம்பிக்கை.

பிரிட்டிஷ் அரசர் முதலாம் ஜேம்ஸின் முதல் அதிகாரப்பூர்வ தூதரான சர் தாமஸ் ரோ, வர்த்தகத்திற்கான வாய்ப்புகளை கண்டறிவதற்காக 17ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார்.

ஜஹாங்கீரின் ஆட்சிக்காலத்தைப் பற்றி அறிந்துக் கொள்வதற்கு சர் தாமஸ் ரோயின் பயணம், வரலாற்று ஆதரமாக கருதப்படுகிறது. ஜஹாங்கிர் காலத்தின் முக்கியமான வரலாற்று ஆதாரமாக சர் தாமஸ் ரோவின் எழுத்துகள் கருதப்படுகின்றன. 1615 முதல்1619 வரை தாமஸ் தாமஸ் ரோ இந்தியாவில் இருந்தார்.

இந்தியாவின் மத்தியகால வரலாற்று நிபுணரான பேராசிரியர் ஹர்பன்ஸ் முகியாவின் கருத்துப்படி, ''எந்தவொரு காலகட்டத்திலும், செல்வந்தர்கள், மத்திய வர்கத்தினர், ஏழைகள் என மூன்று வகையாக பிரிக்கலாம். அதுபோன்றுதான் இந்தியாவின் மத்திய காலத்திலும் மூன்று வர்கத்தை சேர்ந்த மக்களும் இருந்தனர்.''

புகழ்பெற்ற இடைக்கால வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் சொல்கிறார், ''பாரதிய ஜனதா கட்சியின் உண்மையான பிரச்சனை முகலாய ஆட்சியாளர்கள் முஸ்லிம்கள் என்பதே. முஸ்லிம்கள் வெளிநாட்டவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதே அவர்களின் நினைப்பு''.

முகலாயர்களின் ஆட்சியில் ஏழைகளின் நிலை என்ன? ஹர்வம்ஷ் முகியா கூறுகிறார், ''ஏழ்மை நிலை இருந்தாலும், இந்தியாவில் பிச்சை எடுப்பவர்கள் என்று யாரையுமே பார்க்கமுடியவில்லை என்று முகலாயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வருகைதந்த ஐரோப்பிய பயணிகள் இதுகுறித்து வியப்பு தெரிவித்தார்கள்''.

"பஞ்சம்-பட்டினி என்பது எல்லா காலங்களிலும் ஏற்படுவது, அதேபோல் வெள்ளமும் ஏற்படும். ஆனால் இதுபோன்ற பேரழிவுகளை சமாளிக்க முழுமையாக உதவி வழங்கும் வகையில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. முகலாய காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. இலவசமாக வேலை செய்ய யாருமே அனுமதிக்கப்படவில்லை". ( நன்றி: பிபிசி நியூஸ் தமிழ், 26 அக்டோபர் 2017 )

வரலாற்று நிழலில் ஔரங்கசீப்

1946 இல் ஜவஹர்லால் நேரு எழுதிய 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா' என்ற புத்தகத்தில் ஒளரங்கசீப் கடுமையானவர் மற்றும் பழமைவாத சிந்தனைகளைக் கொண்டவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கருத்து தவறானது என்று மறுக்கிறார் அமெரிக்க வரலாற்றாசிரியர் ஆண்ட்ரி ட்ரஷ்கே. தமது 'ஒளரங்கசீப்-தி மேன் அண்ட் தி மித்' (Aurangzeb: The Man and the Myth) என்ற புத்தகத்தில், இந்துக்களின் மீது கொண்ட வெறுப்பால்தான் ஒளரங்கசீப் ஆலயங்களை அழித்ததாக கூறுவதும் தவறு என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

நேவார்க் ரூட்ஜர்ஜ் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய வரலாற்றுப் பேராசிரியராக பணியாற்றும் ஆண்ட்ரி ட்ரஷ்கே, ஒளரங்கசீப் மீதான இதுபோன்ற கருத்துகளுக்கு ஆங்கிலேய ஆட்சிக்கால வரலாற்றாசிரியர்களே காரணம் என்கிறார். ஆங்கிலேய ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி என்ற கொள்கையின்படி, இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரிப்பதற்கு வரலாற்றாசிரியர்கள் ஊக்குவிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

ஒளரங்கசீப்பின் ஆட்சிகாலம் 20 ஆண்டுகள் குறைவாக இருந்திருந்தால் நவீன வரலாற்றாசிரியர்கள் அவருடைய வரலாற்றை வித்தியாசமாக புரிந்து கொண்டிருக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறார் ஆண்ட்ரி ட்ரஷ்கே.

15 கோடி மக்களை 49 ஆண்டு காலம் ஆட்சி செய்தார் ஒளரங்கசீப். அவரது ஆட்சிக்காலத்தில் ஏறக்குறைய இந்திய துணைக்கண்டம் முழுவதுமே முகலாய ஆட்சியின் கீழ் இருந்தது.

மகாராஷ்டிராவின் குல்தாபாத் நகரில் ஆடம்பரம் ஏதும் இல்லாமல் எளிமையான கல்லறையில் ஒளரங்கசீப் புதைக்கப்பட்டார் என்கிறார் ட்ரஷ்கே. இதற்குமாறாக, அரசர் ஹுமாயூனுக்காக செந்நிற கற்களால் அழகான கல்லறை டெல்லியில் கட்டப்பட்டது. அதேபோல் ஷாஜகான் ஆடம்பரமாக கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தாஜ்மஹாலில் புதைக்கப்பட்டார்.

'ஒளரங்கசீப் ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்களை சிதைத்தார் என்பது தவறு. அவர்களது நேரடி கட்டளையால் உடைக்கப்பட்ட ஆலயங்களின் எண்ணிக்கை ஒரு டஜனைத் தாண்டாது. இந்துக்களின் விரோதி என அழைக்கப்பட்ட அவரது ஆட்சியின்போது உண்மையில் இந்துக்களுக்கு எதிராக பெரிய கொடுமைகள் எதுவும் நடக்கவில்லை. உண்மையில், முக்கியமான அரசுப் பதவிகளில் இந்துக்களை பணியமர்த்தினார் ஒளரங்கசீப்' என்கிறார் ட்ரஷ்கே.

யார் அந்த ஒளரங்கசீப்?

1618 நவம்பர் மூன்றாம் தேதியன்று டாஹோட் என்ற இடத்தில் ஒளரங்கசீப் பிறந்தபோது இந்தியாவின் பேரரசாராக இருந்தவர் அவரது தாத்தா ஜஹாங்கீர். ஷாஜகான் - மும்தாஜ் தம்பதியரின் நான்கு மகன்களின் மூன்றாவது மகன் ஒளரங்கசீப்.

இஸ்லாமிய இலக்கியங்களிலும், துருக்கிய இலக்கியங்களிலும் விருப்பம் கொண்ட ஒளரங்கசீப், கையெழுத்துப் பிரதிகளை எழுதுவதில் சிறந்தவர் 

ஷாஜகானின் நான்கு மகன்களுக்கிடையே சிம்மாசனத்திற்கான போட்டி சிறு வயதிலேயே தொடங்கிவிட்டது. அரசியல்ரீதியான பதவிகளுக்கு அனைத்து வாரிசுகளுக்கும் சமமான உரிமை இருப்பதாக மத்திய ஆசியாவில் அந்தக் காலத்தில் கருதப்பட்டது.

ஷாஜகான் தனது மூத்த மகன் தாரா ஷிகோஹ் அரசனாக வேண்டும் என்று விரும்பினார். ஆனால், தந்தைக்கு பிற்கு இஸ்லாமிய அரசின் பொறுப்பை ஏற்க தன்னைவிட வேறு யாருக்கும் தகுதி இல்லை என்று கருதினார் ஒளரங்கசீப்.

தாரா ஷிகோஹ்வின் திருமணத்திற்குப் பின்னர், சுதாகர் மற்றும் சூரத் சுந்தர் என்ற இரண்டு யானைகளுக்கு இடையே போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் ஷாஜகான் என்று ஆண்ட்ரி ட்ரஷ்கே ஒரு சுவராஸ்யமான சம்பவத்தை குறிப்பிடுகிறார்.

யானைகளை மோதவிட்டு வேடிக்கைப் பார்ப்பது முகலாயர்களின் விருப்பமான பொழுதுபோக்கு. போட்டியின்போது குதிரையில் அமர்ந்திருந்த ஒளரங்கசீப்பை நோக்கி கோபத்துடன் திரும்பியது சுதாகர் என்ற யானை. தன்னருகில் வந்த சுதாகரின் நெற்றியில் ஈட்டியால் தாக்கினார் ஔரங்கசீப். இதனால் யானையின் சீற்றம் இன்னும் அதிகமாகி, தும்பிக்கையை சுழற்றியது.

யானை மோதிய வேகத்தில் குதிரையில் அமர்ந்திருந்த ஔரங்கசீப் நிலத்தில் வீழ்ந்தார். போட்டியை பார்க்க அங்கு கூடியிருந்த ஒளரங்கசீப்பின் சகோதரர் ஷுஜா மற்றும் ராஜா ஜெய்சிங் உட்பட பலர் ஔரங்கசீப்பை காப்பாற்ற முயன்றனர். ஆனால் மற்றொரு யானையான ஷ்யாம் சுந்தர், தனது போட்டியாளரான சுதாகரிடம் சண்டைக்கு வந்ததால் அதன் கவனம் திரும்பிவிட்டது.

மீண்டும் யானைகளுக்கு இடையிலான சண்டை தொடங்கியது. சீற்றம் மிகுந்த யானை தாக்கினாலும், அச்சமின்றி அதனை ஈட்டியால் தாக்கிய ஒளரங்கசீப்பின் தீரம் அனைவராலும் பேசப்பட்டது. ஷாஜகானின் அரசவைக் கவிஞர் அபூ தாலிப் கான் இந்த சம்பவத்தை தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மற்றொரு வரலாற்றாசிரியர் அகில் கான் ரஜி, தனது 'வகீயத்-ஏ-ஆலம்கிரி' என்ற புத்தகத்தில், பலர் ஒளரங்கசீப்பை காப்பாற்ற முயன்றபோதிலும், அண்ணன் தாரா ஷிகோஹ், தம்பியை காப்பாற்ற எந்தவித முயற்சிகளையும் செய்யவில்லை என்பதை குறிப்பிட்டிருக்கிறார்.

ஷாஜகானின் அரசவை வரலாற்றாசிரியரும் இந்த சம்பவத்தை குறிப்பிட்டிருக்கிறார். 1610ஆம் ஆண்டு ஷாஜகான் தனது தந்தை ஜாஹாங்கீரின் முன்னிலையில் பயங்கரமான சிங்கத்தை கட்டுப்படுத்திய சம்பவத்துடன், ஒளரங்கசீப்பின் செயலை அவர் ஒப்பிடுகிறார்.

இந்திய வரலாற்றில் இருக்கும் மாபெரும் கேள்வி என்ன தெரியுமா? ஆறாவது முகலாய பேரரசரசராக ஔரங்கசீப்பிற்கு பதிலாக மிதவாதியும், அரியணைக்கு உரியவர் என்று கருதப்பட்ட மூத்த வாரிசுமான தாரா ஷிகோஹ் அரியணை ஏறியிருந்தால் என்ன நடந்திருக்கும் 

"உண்மையில் முகலாய பேரரசை வழி நடத்தும் வலிமையோ, திறமையோ அற்றவர் ஷிகோஹ். சிம்மாசனத்திற்காக சகோதரர்கள் நால்வரும் மோதிக்கொண்டாலும், தந்தையின் ஆதரவு மூத்த மகன் தாரா ஷிகோஹ்க்கே இருந்தது. ஆனால், ஒளரங்கசீப்புக்கு இருந்த அரசியல் அறிவும், விவேகமும், விரைந்து செயல்படும் திறமையும் வேறு யாரிடமும் இல்லை." என்கிறார் ஆண்ட்ரி ட்ரஷ்கே. ( நன்றி: பிபிசி தமிழ் நியூஸ், 23 ஜனவரி 2020 )

ஔரங்கசீப் எப்படிப்பட்டவர்?

ஒளரங்கசீப் பொல்லாதவர். கெட்டவர். இரக்கக் குணமே இல்லாதவர். மக்களை வரிகளால் வாட்டி வதைத்தவர். ஹிந்துக் கோயில்களை இடித்தவர். தன் தந்தையை வயதான காலத்தில் சிறையில் வைத்துக் கொடுமைப்படுத்தினார். ஒளரங்கசீப்பால் தான் முகலாயப் பேரரசே முடிவுக்கு வந்தது

முகலாய வம்சத்தின் கடைசிப் பேரரசர் ஒளரங்கசீப் பற்றி நம் பாடப்புத்தகங்கள் சொல்லும் விஷயங்கள் இப்படி எதிர்மறையாகத்தான் இருக்கின்றன.

பேணுதலான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் ஒளரங்கசீப்...

முகலாய முதல் பேரரசர் பாபர், சிறந்த பாடகர் ஹூமாயூன் என்ற ஒரு சிறைக்கைதியின் குரல் வளத்தால் ஈர்க்கப்பட்டு, அவரையே தன் அரசவைப் பாடகராக்கிக் கொண்டார். |அக்பருக்கு இசையில் ஆர்வம் மிக அதிகம் அவரது அவையிலேயே முப்பதுக்கும் மேற்பட்ட சிறந்த இசைக்கலைஞர்கள் இருந்தனர்அதில் தான்சேன் குறிப்பிடத்தக்கவர்.

ஷாஜஹான் மிகவும் இனிமையாகப் பாடக்கூடியவர்சரி , ஔரங்கசீப்?

முதலில் ஔரங்கசீப் அவையிலும் இசைக்கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள் இருந்தனர் ஆனால் அவர் ஆட்சிக்கு வந்த பதினோராவது இஸ்லாம் ஆண்டிலிருந்து அவற்றுக்குத் தடைவிதித்தார் மத நெறிகளின் படி இசை, ஆடல் நடனம் போன்ற சிற்றின்பங்கள்கூடாது ஔரங்கசீப்பும் அதைத்தான் கொள்கையாகக் கடைபிடிக்க ஆரம்பித்தார்]

அவரது அவையில் இசைக்கலைஞர்களோ, நடனக் கலைஞர்களோ இடம் பெறவில்லை முந்தைய காலத்தில் அவையில் இடம் பெற்றிருந்த கலைஞர்களுக்கு அரசு சார்பில் மானியம் வழங்கி உதவினார்.)

முகலாயப் பேரரசின் கீழ்வரும் எந்த மன்னரும், பிரபுக்களும் இது போன்ற கேளிக்கைளில் ஈடுபடக் கூடாது என்று கட்டளை போட்டவர் ஔரங்கசீப், இன்னொரு சுவாரசியமான தகவலும் உண்டு ஔரங்கசீப் வீணை வாசிப்பதில் வல்லவர்

ஔரங்கசீப் தன் வாழ்வில் பாதிக்கும் மேல் போர்களங்களிலேயே கழித்திருக்கிறார்ஆனால் எப்பேர்பட்ட போர்களத்தில் இருந்த போதும் தொழுகை வேளையில் அதை செய்யத் தவறியதில்லைபோர் நடக்கும் இடத்திலேயே ஒரு ஓரமாக தன் தொழுகையை முடித்துவிட்டு, பின் தாக்குதலைத் தொடர்வார்.

மற்றபடி, அரண்மனையில் அவர் இருக்கும் நாள்களிலும் தொழுகைக்கான நேரங்களை பொருத்து மற்ற வேளைகளை அமைத்துக் கொண்டார் காலை ஐந்து மணிக்கே எழுந்துவிடும் ஒளரங்கசீப், முதல் தொழுகையான ஃபஜரை முடிப்பார் பின் இஸ்லாம் சம்பந்தப்பட்ட நூல்களை வாசிப்பார்

ஏழு மணிக்குப்பின் காலை உணவை முடிப்பார் ஏழரைக்குள் அரசவைக்கு வந்துவிடுவார் அதற்குப் பின் உண்மைகளை ஆராய்வார் .வழக்குகளை விசாரிப்பார் குர்ஆனின் படி தீர்ப்புகளை வழங்குவார்

எட்டரை மணிக்கு மேல் அரண்மனை மாடத்தில் வந்து நிற்பார் அங்கிருந்து ஒளரங்கசீப்பை பார நோக்கினால் எழுனை நதியின் அழகை ரசிக்கலாம் ஃப்பதற்காக நதியின் கரையில் மக்கள் திரண்டு நிற்ப்பர். (அரண்மனை மாடத்திலிருந்து அரசர்கள் மக்களுக்குக் காட்சித்தருவதென்பது ஒரு வழக்கம் ஆனால் இது இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரானது என்பதால், அந்த வழக்கத்தை நிறுத்திக்கொண்டார் ஔரங்கசீப்

அதற்குப்பின் வீரர்களின் போர்ப் பயிற்சியை பார்வையிடுவார் யானைச் இந்த நேரத்தில் ஒவ்வொரு வெள்ளியன்றும் சண்டையைப் பார்த்து ரசிப்பார். டெல்லியிலுள்ள ஜூம்மா மசூதிக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்

காலை ஒன்பது மணியிலிருந்து, பதினோரு மணி வரை அரசவை சிம்மாசனத்தில் அமர்ந்து மக்கள் பணிகளை கவனிப்பார் அதற்குப்பின் தனிப்பட்ட விருந்தினர்களையும், பிற ஆட்சியாளர்களையும், வெளி மன்னர்களையும் சந்திப்பதற்கு நேரம் கொடுத்திருப்பார்.

ஔரங்கசீப்புக்கு ஒவ்வொரு மாகாணத்தின் அதிகாரிகளிடமிருந்து வரும் கடிதங்கள் செய்தி வாசித்துக் காண்பிக்கப்படும் அவற்றுக்கான பதில்களை

ஔரங்கசீப் அளிப்பார் சிலக் குறிப்பிட்ட உடனுக்குடன் கடிதம் எழுதப்படும் (பனிரெண்டு கடிதங்களுக்கு மட்டும் ஒளரங்கசீப்பே தன் கைப்பட பதில் எழுதுவார் பின் ஓய்வு மணிக்கு மதிய உணவு சாப்பிடுவார் 1 மதியம் இரண்டு மணி என்பது லுஹர்.தொழுகைக்கான நேரம்

இரண்டரை மணிக்கு மீண்டும் அரசாங்கப்பணிகளைச் செய்வார் முடித்த பின் அஸர் தொழுகை

ஐந்தரை மணிக்கு விருந்தினர்களின் மரியாதையை ஏற்றுக் கொள்வார் பின் காஸ் அவைக்குச் இ அந்தத் தொழுகை முடிந்ததும் திவானி மக்ரிப் தொழுகை |அங்கு சிறிது நேரம் பணியாற்றுவார் செல்வார் ஏழரை மணிக்குச் சபையைக் கலைப்பார்.இஷா தொழுகையை மேற்கொள்வார் எட்டு மணிக்குச் இரவு உணவு [ பின்பு புத்தகங்களை வாசிப்பார் .பின் இஸ்லாம் மார்க்க தியானத்தில் ஈடுபடுவார் உறங்கச் செல்வார்.

இவை தான் ஔரங்கசீப்பின் அன்றாட நடவடிக்கைகள் இவை சில நாள்கள் மட்டும் அவசர காரியத்தலைப் பொறுத்து மாறுபடும் பொதுவாக வெள்ளிக்கிழமையன்று நீதிவிசாரணை கிடையாது.

ஔரங்கசீப், இருபத்து நான்கு மணிநேரத்தில் மூன்று மணி நேரமே உறங்கினார் வேலை தவிர மீதமிருந்த ஓய்வு நேரங்களில் எல்லாம் இஸ்லாமிய தரையில் தான் பட மார்க்க நூல்களைப் படிப்பதில் செலவிட்டார்ப்பார் [கொரின்தா என்ற புளிப்புச் சுவை நிறைந்த ஔரங்கசீப் மாமிசம் உண்ணாதவர்

பழத்தை விரும்பிச் சாப்பிடுவார். |அரசாங்க கஜானா பணமானது மக்களுக்கே உரியது, அரசு குடும்பத்தினர் செலவழிப்பதற்காக அல்ல என்பதில் ஔரங்கசீப் மிகவும் உறுதியாக இருந்தார் தன் சொந்தச் செலவுகளுக்கா ஒரு போதும் அவர் கஜானாவை உபயோகிக்க மாட்டார்.

பொதுவாக மன்னர்கள் தன் பிறந்த நாளில் தகதக உடையணிந்து, உடல் முழுவதும் ஜொலிஜொலிக்கும் நகைகள் அணிந்து மக்களுக்குக் காட்சி கொடுப்பதைப் பாரம்பர்யமாக வைத்திருந்தார்கள்ஆனால் எளிமை விரும்பியான ஔரங்கசீப், தன் பிறந்தநாள் கொண்டாட்டங்களை எல்லாம் அனுமதிக்கவில்லை அன்றைய தினத்தையும் சாதாரண தினமாகவே எடுத்துக் கொண்டார்"

ஔரங்கசீப்புக்குக் குல்லா தைப்பதில் ஆர்வம் உண்டுஅதே போல, குர்ஆனை தன் கைப்பட எழுதுவதில் அதீத விருப்பம் இருந்தது அந்த இரண்டையும் விற்றுக் கிடைக்கும் பணத்தில் தன் தனிப்பட்ட செலவுகளைப் பார்த்துக் கொண்டார்.

மதுவை வெறுத்தவர் தன் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் மதுவைத் தடை உல்லாச அதே போல கேளிக்கை விடுதிகளை இழுத்து மூடினார் செய்தார்] போதைப் பொருள்களையும் நிகழச்சிகள் நடத்தக் கூடாதென்று உத்தரவிட்டார் ஒழித்தார்.

இறந்த கணவனின் சடலத்தை வைத்து எரிக்கும்போதே, அதே நெருப்பில் மனைவியும் குதித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் பழக்கம் ஹிந்துக்களிடையே அதிகமாக இருந்தது இது உடன்கட்டை அல்லது சதி

ஒருமுறை போர்களத்தில் இறந்த ஒரு வீரனின் உடலை எரித்துக் கொண்டிருந்தார்கள் அப்போது அவனது மனைவியை அந்த நெருப்பில் குதிக்கச் சொல்லி சுற்றியிருந்தவர்கள் கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள்

அப்போது ஔரங்கசீப் அங்கு வந்தார் அந்த செயலைத் தடுத்தார்

அங்கிருந்தவர்கள், தங்கள் மத விஷயத்தில் தலையிடக் கூடாதென்று வாதம்

செய்தனர்.

ஆனால் ஔரங்கசீப் விடவில்லை 'இது அநயாயம் இனி இத்தகைய இந்தச் சம்பிரதாயத்தைத் தடை கொடுமைகள் முகலாயப் பேரரசில் நடக்கக் கூடாது

'செய்கிறேன்' என்று உத்தரவு பிறப்பித்தார்.

நௌரோஸ் Navroz) என்ற பண்டிகையை அக்பர் உருவாக்கியிருந்தார் வண்ணமையமான கொண்டாட்டங்கள் மிகவும் உல்லாசமான திருவிழா அது அந்தத்திருவிழாவின் இறுதியில் பேரரசரின் எடைக்குச் சமமான பொன நிறைந்தது வைர ஆபரணங்களை மக்களுக்கு கொடுக்கும் வழக்கம் இருந்தது.

வீணாக அரசாங்கப்பணத்தை கேளிக்கைகளுக்காக செலவழிக்க விரும்பாத

ஔரங்கசீப் நௌரோஸ் பண்டிகையை தடைச் செய்தார்.

ஒளரங்கசீப்பின் லட்சியமாக இருந்தது இதுதான். இந்தியா முழுவதும் முகலாயர்களின் ஆட்சியின் கீழ் வர வேண்டும். இஸ்லாமியச் சட்டப்படி (ஷரீயத்) ஆட்சி நடத்த வேண்டும் என்பதே ஒளரங்கசீப்பின் எண்ணம். அதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காககத் தான் போராடிக்கொண்டிருந்தார்.

தன் லட்சியத்தை நிறைவேற்ற ஒளரங்கசீப் பிற மதத்தினர்களைக் கொடுமைப்படுத்தினார். ஹிந்துக்கள் மீது அதிக வரிகளை விதித்தார், அவர் ஆட்சியில் இஸ்லாமியர்களைத் தவிர மற்ற மதத்தினர் பெரும் துன்பத்திற்கு ஆளாயினர், அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டன. இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். அவருடைய ஆட்சியில் தான் ஏராளமான ஹிந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டன. இவையெல்லாம் ஒளரங்கசீப் ஆட்சிக் காலம் பற்றிப் பொதுவாகக் கூறப்படும் செய்திகள்.

ஆனால், ஔரங்கசீப் அவர்களின் ஆட்சியின் போது பாரசீகர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என யாவரும் தங்களது மதக்கடமைகளை ஆற்ற முடிந்ததாக கேப்டன் அலெக்ஸாண்டர் ஹாமில்டன் குறிப்பிடுகின்றார்.

வரிகள் விதித்து வாட்டினாரா ஒளரங்கசீப்?..

ஒளரங்கசீப் ஆட்சியில் சில புதிய வரிகள் விதிக்கப்பட்டாலும், நடைமுறையில் இருந்த சில வரிகள் நீக்கப்பட்டன என்பதே உண்மை.

ஹிந்துக்கள் தீபாவளியின் போது வீடுகளில், வீதிகளில், கோயில்களில் வரிசையாக விளக்குகளை ஏற்றுவர். அதே போல, முஹர்ரம் பண்டிகையின் போது தீபங்கள் ஏற்றுவது முஸ்லீம்களின் வழக்கமாக இருந்து வந்தது. இந்த தீப அலங்காரங்கள் செய்ய வேண்டும் என்றால், தனியாக வரி செலுத்த வேண்டியிருந்தது. ஒளரங்கசீப் அதை ரத்துசெய்தார்.

கங்கை என்பது, ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் நதி. அதில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்பது அவர்களது நம்பிக்கை. ஆனால் முகலாயர்கள் ஆட்சியில், கங்கை நதியில் ஹிந்துக்கள் நீராட வரி செலுத்த வேண்டியதிருந்தது. ஒளரங்கசீப் அந்த வரி தேவையில்லை, யார் வேண்டுமானாலும் கங்கையில் நீராடலாம் என்று அறிவித்தார்.

இறந்தவர்களின் அஸ்தியைக் கங்கையில் கரைப்பதென்பது ஹிந்துக்களின் சடங்குகளில் ஒன்று. அதற்கும் தனியாக வரி வசூலிக்கப்பட்டு வந்தது. அந்த வரியும் ஒளரங்கசீப் காலத்தில் நீக்கப்பட்டது.

நதிகளில் மீன்கள் பிடிப்பதற்குக்கூட வரி இருந்தது. பால் கறந்து விற்பதற்கும் வரி, பாத்திரங்கள் செய்து விற்பதற்கும் வரி, காய்கறிகள் விற்பதற்கும் வரி எல்லாமே ஒளரங்கசீப் காலத்தில் நீக்கப்பட்டன.

மாட்டின் சாணத்தைத் தட்டி, காய வைத்தால் அது வரட்டியாகிவிடும். அதை அடுப்பெரிப்பதற்கும், இறந்தவர்களின் உடலை எரிப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் அந்த வரட்டியை உபயோகிப்பதற்குக் கூட தனியாக வரிவிதிக்கப்பட்டிருந்தது. அதுவும் நீக்கப்பட்டது.

இவை போக ஒடுக்கப்பட்ட ஹிந்து விதவைப் பெண்களை மறுமணம் செய்து கொள்பவர் அரசுக்கு வரி செலுத்த வேண்டியிருந்தது. அதை மாற்றினார் ஒளரங்கசீப். ஹிந்து பண்டிகைகளின் போதும், கோயில் திருவிழாக்களின் போதும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் சந்தைகள் போடுவது வழக்கம். அதற்கு வியாபாரிகள் செலுத்த வேண்டிய வரி, ரத்து செய்யப்பட்டது.

இஸ்லாமியப் பேரரசின் கீழ் வாழும் இஸ்லாமியர் அல்லாத மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரி, ஜிஸ்யா (Jizya). அதாவது தங்கள் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் இஸ்லாமியர் அல்லாத மக்கள் ஜிஸ்யா வரியை செலுத்திவந்தனர். அக்பர் தவிர பிற முகலாய மன்னர்களின் ஆட்சியில் இந்த ஜிஸ்யா வரி வழக்கத்தில் இருந்தது. அரசின் பாதுகாப்புச் செலவுக்காக வாங்கப்பட்ட இந்த வரியிலிருந்து, முதியோர், பிச்சைக்காரரர்கள், ஊனமுற்றோர், துறவிகள், கிருஸ்தவ குருமார்கள, அந்தணர்கள், குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

1679-ல் ஒளரங்கசீப் தன் தன் பேரரசு முழுவதும் ஜிஸ்யா வரியினை கொண்டுவந்தார். ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய பிற மதத்தினர்களுக்கு இந்த வரி விதிக்கப்படவில்லை.

வரியைத் தவணை முறையில் செலுத்த மக்கள் அனுமதிக்ப்பட்டனர். பணமாக அன்றி, பொருளாகக் கூட செலுத்தும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. மிகவும் கஷ்டத்தில் இருப்பவருக்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்டது.

நல்ல உடல் நலத்துடன் இருக்கும் இஸ்லாமியர்கள் ராணுவத்தில் பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்டனர். 'ராணுவத்தில் சேராமல் வரிகட்டிக்கொள்கிறேன்' என்று கேட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

பொதுநிர்வாகம், ராணுவத்தில் பதவிகள் ரேங்க் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. மன்ஸப்தாரி முறை என்று அழைக்கப்பட்ட இது பழைய டெல்லி சுல்தான்களும் மங்கோலியர்களும் பின்பற்றி வந்ததாகும்.

ரேங்க் என்பது 10 முதல் 5000 வரை இருந்தது. 10 என்பது மிகவும் சாதாரண நிலை. 5000 மிகவும் உயரிய பதவிக்குரிய ரேங்க். இந்த ரேங்க் பட்டியலில் வருபவர்கள் மன்ஸப்தார்ஸ் என்று அழைக்கப்பட்டனர். பாபர், அக்பர் காலத்தில் இருந்தே இந்த மனஸப்தாரி முறை கடைபிடிக்கப்பட்டது.

எந்த ரேங்க் கொண்டவரும் நேரடியாக மன்னரின் கீழ் பணியாற்றுபவர்களாகத்தான் அர்த்தம். 5000 ரேங்க் கொண்ட ஒரு மன்ஸப்தார், 1000 ரேங்க் கொண்ட இன்னொரு மன்ஸப்தாரை அதிகாரம் செய்ய முடியாது.

இந்த மனஸப்தாரி முறையில் அக்பர் சில முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவந்தார். முக்கியமாக, ரேங்க் 5000 என்பதை 7000 வரை உயர்த்தினார். ஒளரங்கசீப்பும் அதைக் கடைபிடித்தார். ஒளரங்கசீப் நியமித்தவர்களில் ஐந்தில் ஒரு பங்கு ஹிந்து மன்ஸப்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மிகவும் அதிகமான பகுதிகளை ஆண்ட ஒரே முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் தான். அவர் காலத்தில் தெற்கே தமிழகத்தின் செஞ்சியிலிருந்து* வடக்கே காஷ்மீர் வரையலும் மேற்கே ஆஃப்கானிஸ்தானிலிருந்து கிழக்கே வங்காளம் வரையிலும் முகலாயர்கள் வசம் இருந்தது. கொவா மட்டும் போர்த்துகீசியர்களிடம் இருந்தது.

தெற்கே தக்காணபபகுதிகளை எல்லாம் தாண்டி, தமிழகத்துக்குள்ளும் முகலாயப்பேரரசு வேர்விட்டது. சுல்பிகார் கான் என்பவர் ஒளரங்கசீப்பின் தளபதிகளுள் முக்கியமானவர் தக்காணப் போர்கள் பலவற்றில் வெற்றிகரமாக செயல்பட்டவர்.

அவர் முகலாயப்படைகளோடு தெற்கு நோக்கி மேலும் மேலும் முன்னேறினார். 1690-ல் செஞ்சிக்கு வந்தார். கோட்டை முற்றுகையிடப்பட்டது. 1698-ல் செஞ்சிக் கோட்டை முகலாயர்கள் வசமானது. அதன் பெயர் நஸரஜ்கட்டா என்று பெயர் மாற்றிவைக்கப்பட்டது.

அதற்குப்பின் ராஜபுத்திர தளபதியான 'சொரூப்சிங்', செஞ்சியின் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார்.

அத்தனை பெரிய பேரரசரை ஒற்றையாளாக நிர்வகிப்பதென்பது எவ்வளவு பெரிய காரியம். டெல்லியிலோ, ஆக்ராவிலோ இருந்துக்கொண்டே செயல்படுவது சரிபடாது என்று உணர்ந்த ஒளரங்கசீப், பெரும்பாலும் தக்காணப்பகுதிகளில் தன் இருப்பை அமைத்துக்கொண்டார். அதனால் அவர் காலம் வரையிலும் நிர்வாகத்தில் பெரும் குளறுபடிகள் எல்லாம் உண்டாகவில்லை.

பல சமயங்களில் அவரது மகன்களே, ஒளரங்கசிப்பிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். கோல்கொண்டா அரசரோடு நேர்ந்து சதி நடவiடிக்கைகளில் ஈடுபட்ட தன் மகனைப் பன்னிரண்டு ஆண்டுகள் சிறையில் அடைத்தவர் ஒளரங்கசிப். பிற மகன்களும் அவ்வப்போது, இம்மாதிரி தண்டனைகளை அனுபவித்திருக்கின்றனர்.

பாபர் காலத்தில் ஆரம்பித்த போர்கள். முகலாயர்களின் எல்லையை விரிவாக்க எத்தனை உயிர்ப் பலிகள். கிட்டதட்ட இந்தியாவே தன் கையில் என்ற நிலையில் அதனைக் கட்டிக் காக்க வேண்டாமா? எவ்வளவு பெரியபொறுப்பு அது. அதனால் தான் நிhவாகத்தில் கடுமையாகவே நடந்துக் கொண்டார் ஒளரங்கசீப்.

கோயில்களை இடித்தாரா ஒளரங்கசீப்?...

பேரரசின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்று ஹிந்து கோயில்கள் சம்பந்தப்பட்டது.

முகலாயப்பேரரசின் ஆளுகைக்குட்பட்ட புராதானக் கோயில்கள் எவற்றையும் அழிக்கக்கூடாது. அதே சமயத்தில் புதிய கோயில்கள் எதையும் இனி கட்டவும் அனுமதி கிடையாது.

இது தான் ஒளரங்கசீப் போட்ட உத்தரவு தவிர, ஏற்கெனவே இருந்த கோயில்களை இடிக்கச் சொல்லி அவர் கட்டளையிட்டது கிடையாது. ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமை ஒளரங்கசீப் காலத்தில் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை.

சைவ சமயத்தை பரப்பியவர்களில் குமரகுருபரர் முக்கியமானவர். அவர் ஒளரங்கசீப் காலத்தில் வாழ்ந்தவர் தான் (1625 - 1688). வட இந்தியாவில் சைவ சமயத்தை பரப்பியதில் முக்கிய பங்கு அவருக்கு உண்டு.

குமர குருபரர், காசியில் சைவ மடாலயலங்களை அமைப்பதற்காக, ஒளரங்கசீப் நிலங்களை வழங்கினார் என்று வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. அதே போல, பலவேறு கோயில்களுக்கு மானியங்கள் வழங்கியதற்கான குறிப்புகளும் இருக்கின்றன.

காசியில் விஸ்வநாதர் கோயிலை ஒளரங்கசிப் இடிக்கச்சொல்லி உத்திரவிட்டார். அக்கோயில் இடிக்கப்பட்டது. அதற்கு காரணமாக கூறப்படும் சம்பவம் இதுதான். ஒரு ஹிந்து ராஜாவின் ராணிகள், காசியில் குளிக்க வந்தனர். அந்த ராணிகளுள் ஒருவர், கோயிலில் வைத்து அவமானப்படுத்தப்பட்டார். இதனால் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாக மற்ற ஹிந்து ராஜாக்கள் முறையிட்டனர். விஸ்வநாத விக்கிரகம் அங்கிருந்து அகற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது.

கோயில் மட்டுமல்ல, கோல்கொண்டாவில் மசூதி ஒன்று இடிக்கப்பட்டதாகவும் கூறுவார்கள். கோல்கொண்டா மன்னன், தானஷா, பல ஆண்டுகள் வரியெதுவும் கட்டாமல், அந்த பணத்தை புதைத்து மசூதி ஒன்றைக் கட்டிவிட்டான். கோபமடைந்த ஒளரங்கசீப், மசூதியை இடிக்கச்சொன்னார். பணம் மீட்கப்பட்டது.

மற்றபடி ஒளரங்கசீப் ஆட்சியில் கட்டாய மத மாற்றங்கள் இருந்ததாகக் கூறப்படும் தகவல்களில் உண்மை இல்லை. தன்னிடம் சரணடைந்த சிற்றரசர்களை மதம் மாறச் சொல்லியெல்லாம் கட்டாயப்படுத்தவும் இல்லை.

ஆடம்பரத்தை விரும்பினாரா ஒளரங்கசீப்?...

ஆடம்பரத்தை விரும்பாத மனிதர் அவர். ஒரு பேரரசராக இருந்தாலும் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்துவந்தவர். அவ்வளவு செலவு செய்து தன் தந்தை, தாய்காக தாஜ்மஹால் கட்டியதையே விரும்பாதவர்., இன்னொரு கருஞ்சலவைக் கல் மாளிகை கட்டுவதற்காக, ஷாஜஹான் எடுத்த முயற்சிகளைத் தடுத்தவர். இருந்தாலும் ஒளரங்கசீப் சில முக்கியமான சின்னங்களை கட்டினார்.

லாஹூரில் பாட்ஷாய் மஸ்ஜித் (Bhadshai Masjidh) என்ற மிகப் பெரிய மசூதியைக் கட்டினார். மெக்காவுக்கு அடுத்தபடியாக, மிகப்பெரிய வெளிப்புற வழிபாட்டுத்தளத்தை கொண்டது இந்த மசூதி.

டெல்லி செங்கோட்டை வளாகத்தில், மோடி மஸ்ஜித் (Moti Masjidh) என்ற சிறிய மஸ்ஜித் ஒன்றையும் கட்டினார்.

லாஹூர் கோட்டையைச் சுற்றியிருக்கும் பதிமூன்று நுழைவாயில்களில் ஒன்றான 'ஆலம் கீர்' என்ற பிரமாண்டமான கட்டடம் ஒளரங்கசீப்பால் கட்டப்பட்டது தான்.

எளிமையாகவும், நிர்வாகத்தில் கண்டிப்பாகவும் இருந்ததால் தான் ஒளரங்கசீப்பால் முகலாயப்பேரரசை கட்டிக்காக்க முடிந்தது. அவை இல்லாததால் தான் அவருடைய வாரிசுகள் பேரரசை இழந்தனர். ( நன்றி: ஆசிரியர் முகில் எழுதிய ஒளரங்கசீப் புத்தகம் )

வரலாற்றுத் திரிபுகளின் வித்தகர்கள்...

முகலாய அரசர்களை இந்த பாஜக வினர் விமர்சிக்கின்றனர் என்றால் அது வரலாற்று திரிபுகள் தான் என்றால் அது மிகையல்ல. கடந்தகால, நிகழ்கால முஸ்லிம்கள் தொடர்பான விவரங்கள் பாஜக கட்சியின் தலைவர்களுக்கு இபடித்தான் எங்கிருந்தோ கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

கடந்த 2014 –ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தில்லியில் கூடிய 'இந்திய வரலாற்றுப் பேராயம்' மிகுந்த வேதனையுடன், 'ஏற்கனவே மெய்ப்பிக்கப்பட்டுள்ள வரலாற்று உண்மைகளைத் திரிக்கும் நோக்கில் யாரும் பேசவோ, செயல்படவோ வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியா முழுவதிலுமிருந்து அங்கு வந்து கூடிய 300 -க்கும் மேற்பட்ட வரலாற்றுப் பேராசிரியர்களும், ஆய்வாளர்களும் நிறைந்திருந்த ஒரு பொதுக்குழுக் கூட்டத்தில் அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

வரலாற்று ஆய்வாளர்களின் வேதனைக்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரும், முதன்மையானவரும், நம் இந்தியப் பிரதமர் மோடி என்பதே மேலும் கவலைக்குரியதாய் உள்ளது. 25.10.2014 அன்று மும்பையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையைத் திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, அறிவியலுக்கு முரணான, நகைப்புக்குரிய சில செய்திகளைப் பேசியுள்ளார். மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள கர்ணன் பாத்திரம், அன்றே ஜெனடிக் அறிவியல் வளர்ந்துள்ளது என்பதற்கான சாட்சி என்றும், இந்துக்கள் வணங்கும் விநாயகர் உருவம், அன்றே பிளாஸ்டிக் சர்ஜரி இந்தியாவில் இருந்துள்ளது என்பதைக் காட்டுகிறது என்றும் அவர் உரையாற்றி உள்ளார். யாரோ ஒரு மருத்துவர் யானையின் தலையையும், மனித உடலையும் ஒன்று சேர்த்து விநாயகர் உருவத்தை ஒட்டு அறுவை சிகிச்சை முறையில் உருவாக்கி உள்ளார் என்னும் 'தன் அரிய கண்டுபிடிப்பினை' அவர் அங்கு வெளியிட்டுள்ளார்.

சங்கிகளின் சமீபத்திய திரிபு...

விக்கிமீடியா பவுண்டேஷன் என்ற நிறுவனம் தனது வலைத்தளமான விக்கிபீடியாவைத் தொடங்கியதன் நோக்கமே, ஒரு கலைக் களஞ்சியம் ஒட்டுமொத்த சமூகத்தினராலும் உருவாக்கப்படுவதாக இருக்க வேண்டும் என்ற ஜனநாயக அடிப்படைதான்.

ஜிம் வேல்ஸ் மற்றும் லேரி சேங்கர் என்ற இருவரும் விக்கி உரிமையாளர்கள். அவர்கள், ‘நடுநிலைமை என்பதே விக்கி பீடியாவின் தாரக மந்திரம்என்கிறார்கள். அதனால்தான், எந்தத் தலைப்பைக் குறித்து எவர் ஒருவர் கட்டுரை எழுதினாலும் அதனை எடிட் செய்யும் உரிமை அதன் பதிவாளர்கள் அனைவருக்கும் உரியதாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. முரண்பட்ட கருத்துக்களுக்கு இடையே உரையாடலை உருவாக்குவதையும் அதன் மூலம் பொது உண்மை என்று ஏதும் இருந்தால் அதை நோக்கிச் செல்வதுமே இதன் நோக்கம்.

எப்போதும் பாசிசத்தையும் பொய்யையும் புரட்டையுமே நம்பிக் கொண்டிருக்கும் வலதுசாரி சக்திகளுக்கு இந்த ஜனநாயகத்தன்மையும் வெளிப்படைத்தன்மையும் எரிச்சலைத் தருகின்றன. அதனால்தான் இதனுள்ளே பதிவாளர்கள் போல் ஊடுருவி அதனை தங்கள் புரட்டான கருத்தியலுக்கு ஏற்ப மாற்ற முயல்கிறார்கள்.இந்த திருத்தல் வேலை என்பது எப்போதும் நடப்பதுதான். முன்பு இது அரிதாக நடந்துகொண்டிருந்தது. இப்போது, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஜரூராக நடக்கத் தொடங்கிவிட்டது என்பதுதான் விஷயம் 

இந்தியாவின் வரலாறு, பண்பாடு தொடர்பான கட்டுரைகள் தொடங்கி, சமகால அரசியல் நிகழ்வுகள் தொடர்பான கட்டுரைகள் வரை அனைத்தையும் தங்கள் கருத்தியலுக்கு ஏற்ப உண்மைக்கு மாற்றாக திருத்த முயல்கிறார்கள் ஆளும் வலதுசாரிகள்.இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த ஆண்டு நடைபெற்ற சிஏஏவுக்கு எதிரான தில்லி மாணவர்கள் போராட்டம் தொடர்பான விக்கிபீடியா கட்டுரைகளில் தொடர்ந்து வலதுசாரிகளால் செய்யப்படும் திரிபுகள்தான்.

இந்த வருடம் (2020) பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்திருந்தபோதுதான் பிரச்னையைத் தொடங்கினார்கள் சங்பரிவார் கும்பல்.

இரண்டு மாதங்களாக அமைதியான முறையில் நடந்துகொண்டிருந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அரசு ஆதரவு ஊடகவியலாளர்கள், ‘டிரம்ப் வருகையை ஒட்டி சர்வதேச லாபி செய்கிறார்களா இஸ்லாமியர்கள்?’ என்று வெறுப்புவாதம் கக்கினார்கள் 

ஆனால், அதற்கு முதல் நாள் தில்லியின் தென் கிழக்குச் சாலையில் அமைதியாகப் போராடிக் கொண்டிருந்தவர்களைக் குறிப்பிட்டு, பிஜேபியின் தலைவர்களில் ஒருவரான கபில் மிஸ்ரா, ‘டிரம்ப் இருப்பதால் நாங்கள் அமைதியாக இருக்கிறோம். அவர் சென்றுவிட்டால் எங்களை உங்களால் (காவல்துறையால்) கட்டுப்படுத்த இயலாதுஎன்று கிட்டத்தட்ட மிரட்டும் தொனியில் சொன்னார்.

பிப்ரவரி 25ம் தேதி இதை எல்லாம் குறிப்பிட்டு, ‘வடகிழக்கு தில்லி வன்முறைஎன்ற பெயரில் ஒரு கட்டுரையை எழுதினார் ஒரு கட்டுரையாளர். அன்று காலை 9:51 மணிக்கு அவர் அந்தக் கலவரத்தில் என்ன நடந்தது என்பதை முதல் கட்டமாகப் பதிவு செய்கிறார். கொஞ்ச நேரத்தில் அவர் இதனை மேலும் விரிவாக மேலதிகத் தகவல்கள் சேர்த்து மேம்படுத்துகிறார். பிறகு, மற்ற கட்டுரையாளர்களும் அவர்களுக்குத் தெரிந்த விவரங்களை, விடுபட்டவைகளைச் சேர்த்தும், அழகான சொற்களை இணைத்து மொழியை வளமாக்கியும் அக்கட்டுரையை மேலும் பொலிவாக்கத் தொடங்கினார்கள்.

அப்போது ஒரு பெயரிலி பிஜேபியின் கபில் மிஸ்ரா பெயரை அக்கட்டுரையில் இருந்து நீக்கிவிட்டு, வாரிஸ் பதான் என்ற இன்னொருவரின் பெயரை இணைக்கிறார். அவரும் சிஏஏ தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தைச் சொன்னவர்தான் என்றாலும் தில்லி கலவரத்தோடு தொடர்புடையவர் அல்ல என்பதால் கட்டுரையாளர் அவர் பெயரை இந்தக் கட்டுரையின் மையம் கருதி நீக்கித் திருத்தம் செய்கிறார்.

பிறகு இன்னொரு அநாமதேயர் அமைதியான முறையில் என்ற சொல்லை வில்லங்கமான பொருள்தரும்படியாக மாற்றி, போராட்டக்காரர்கள் தொடர்பான தவறான சித்திரத்தை உருவாக்க முயல்கிறார். இதைக் கண்ட கட்டுரையாளர், உடனடியாக அதனை நீக்கி விட்டு பழையபடிக்கு அமைதியான முறையில் என்ற சொல்லை இணைக்கிறார்.சிறிது நேரத்தில் இன்னொரு அனானி, ‘சிஏஏ சட்டத்தைத் தடுப்பதற்கான போராட்டம்என்பதை, ‘அமெரிக்க அதிபரின் வருகையை முன்னிட்டு சர்வதேச கவன ஈர்ப்பை ஏற்படுத்தும் போராட்டம்என்பதாக மாற்றுகிறார். அதையும் கட்டுரையாளர் மீண்டும் சீரமைக்கிறார்..

இப்படி, வரிசையாக ஒருவர் பின் ஒருவராக வந்து அவர்கள் அரசியலுக்குச் சாதமாக மாற்ற முயன்றபடியே இருந்தனர். ஒரு கட்டுரை வலையேற்றப்பட்ட ஓரிரு நாட்களிலேயே அடிக்கடி திருத்தப்படுகிறது எனில் அது அனிச்சையானது அல்ல. அதற்குப் பின்னால் ஒரு கும்பலின் திட்டமிட்ட கைவரிசை இருக்கிறதுஎன்கிறார் விக்கிபீடியா நிறுவனர்

இத்தனை வீடியோக்கள், இத்தனை ஊடகங்களில் இத்தனை செய்திகள், பதிவுகள் இருக்கும் விஷயம் தொடர்பான கட்டுரை ஒன்றையே இந்த சங்பரிவார கும்பல் இவ்வளவு துணிச்சலாக மாற்றத் துணிகிறார்கள் எனில், இந்தியாவின் புராதன வாழ்வை, வரலாற்றை அது தொடர்பான பண்பாட்டுத் தகவல்களை, தரவுகள் எல்லாம் இவர்கள் கையில் கிடைத்தால் எவ்வளவு மாற்றியிருப்பார்கள். எப்படியெல்லாம் திருத்தி எழுதியிருப்பார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

( நன்றி: குங்குமம், இளங்கோ கிருஷ்ணன் எழுதிய திருத்தப்படும் விக்கிபீடியா, திரிக்கப்படும் வரலாறு ஜனவரி, 3/2021 )

எனவே தான் பாஜக மற்றும் சங்கப்பரிவாரக்காரர்களை நோக்கி , இறைத்தூதர் லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களது சமூகத்தாரை நோக்கி கேட்ட கேள்வியைக் கேட்கிறோம்!

أَلَيْسَ مِنْكُمْ رَجُلٌ رَشِيدٌ

 Are You not a rational man?உங்களில் நேர்மையான மனிதர் ஒருவர் கூட இல்லையா?”.

உண்மையை எவ்வளவு ஆழத்தில் புதைத்தாலும் அது காலத்தில் மேல் எழுந்துதான் வரும். அதனை யாரும் மறைக்க முடியாது என்பதே விதி. சமயத்தில் அதிகார போதையில், மமதையில் அதனை மறந்துவிடுகிறார்கள்.

ஆகவே, உண்மை வரலாற்றை உலகிற்கு உரக்கச் சொல்வோம்! இந்த உம்மத்தின் கடந்த கால, நிகழ்கால வரலாற்றைத் திரிபுகளில் இருந்து காப்போம்!!!

      

 

1 comment:

  1. அருமையான அவசியமான பதிவு...
    இதுபோன்று இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய மன்னர்களை பற்றிய வரலாறுகளை குறிப்பாக ஆலிம்கள் அறிந்துவைத்திருப்பது அவசியம்.
    அவைகளை ஆக்கப்படுத்துவதற்க்கும் அல்லாஹ் நல்லுதவி புரிவானாக...

    ReplyDelete