Thursday, 13 June 2024

அரஃபா நாள் நோன்பும், அய்யாமுத் தஷ்ரீக் தக்பீரும்…

 

அரஃபா நாள் நோன்பும், அய்யாமுத் தஷ்ரீக் தக்பீரும்…


மகத்துவமும் சிறப்பும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான துல்ஹஜ் மாதத்தின் துவக்க முதல் பத்து நாட்களின் சிறப்பு வாய்ந்த ஜும்ஆ நாளில் நாம் அமர்ந்திருக்கின்றோம்.

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களைப் பற்றி அல்லாஹ் இப்படிக் கூறுகிறான். 

وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ

காலத்தின் மீது சத்தியமாக மேலும் பத்து இரவுகளின் மீது சத்தியமாக  என்று 89 அல் ஃபஜ்ர் அத்தியாயத்தில் குறிப்பிடுகிறான்.

எனவே, படைத்த இறைவனே சத்தியமிட்டுக்கூறிய கண்ணியமிக்க அந்த நாட்களில் நாம்  இருக்கின்றோம். 

பத்து இரவுகள் என்று இங்கு குறிப்பிடுவது துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களாகும். என இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி), இப்னு சுபைர் (ரஹ்), முஜாஹித் (ரஹ்), போன்ற அறிஞர்களின் கூற்றை ஆதாரமாக குறிப்பிடுகின்றார்கள்.  ( இப்னு கஸீர் : 8 / 413 )

நாம்  சங்கையான இந்த மாதத்தின் அரஃபா நாளையும், தியாகத் திருநாளையும், அய்யாமுத் தஷ்ரீக் உடைய நாட்களையும் எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அந்த நாட்களின் சங்கையை மகத்துவத்தை நாம் அறிந்தே வைத்திருக்கின்றோம்.

இந்த ஜும்ஆ உடைய நாளில் நாம் அந்த சங்கையை மகத்துவத்தை  ஒரு முறை நினைவு படுத்திக் கொள்வோம்.

அரஃபா நாளின் சிறப்பு:-

அரஃபா நாள் என்பது இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாக இருக்கிறது. 

 1) அல்லாஹ் புகழ்ந்து பேசும் நாள்..

அபூஹுரைரா மற்றும் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் (ரலி) ஆகியோர் போன்றோர் அறிவிக்கிறார்கள் :

عن ابن عمر أن النبي صلى الله عليه وسلم قال: إن الله تعالى يباهي ملائكته عشية عرفة بأهل عرفة، فيقول: انظروا إلى عبادي أتوني شعثا غبرا. رواه أحمد وصححه الألباني.

'நிச்சயமாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அரஃபா தினத்தின் மாலையில் அரஃபாவிற்கு வந்திருக்கக்கூடிய மக்களை குறித்து மலக்குமார்களிடம் புகழ்ந்து பேசுகிறான். "எனது மலக்குமார்களே! எனது அடியார்களை நோக்கி பாருங்கள். அவர்களில் அந்தஸ்த்து உள்ளவர்கள், அந்தஸ்து இல்லாதவர்கள் என அனைவரும் பரட்டை தலையுடையவர்களாகவும், புழுதி படிந்தவர்களாகவும் என்னிடம் வந்துள்ளார்கள்" என்று அல்லாஹ் கூறுகிறான் என்று நபி கூறினார்கள். நூல்: (முஸ்னத் அஹ்மத்)

2) அடியார்கள் நரக விடுதலை பெறும் மகத்தான நாள்:-

عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال: ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة، 

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:'அல்லாஹ்  அதிக அதிகமாக  தனது அடியார்களை நரகத்திலிருந்து விடுதலை செய்யக்கூடிய தினம் அரஃபா தினத்தை விட வேறு தினம் இருக்க முடியாது' என்று நபி கூறினார்கள்.

நூல்: (ஸஹீஹ் முஸ்லிம்)

3) சிறந்த துஆ இடம் பெற்றுள்ள நாள்..

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஷுஐபு (ரலி) அறிவிக்கிறார்கள் :

وروى الترمذي عن عمرو بن شعيب عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم قال: خير الدعاء دعاء يوم عرفة، وخير ما قلت أنا والنبيون من قبلي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير

'துஆக்களில் மிகவும் சிறந்த துஆ அரஃபா தினத்தில் செய்யப்படக்கூடிய துஆ நானும் எனக்கு முன் வந்த நபிமார்களும் கூறிய கூற்றுகளில் மிகச் சிறந்த கூற்று லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் ஆகும் என்று நபி கூறினார்கள். (  நூல்: (திர்மதி, முஸ்னத் அஹ்மத்) 

4) சன்மார்க்கம்  இஸ்லாம் பரிபூரணமாக்கப்பட்ட நாள்...

அன்றைய தினத்தில் தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இஸ்லாமிய மார்க்கத்தை பரிபூரணப் படுத்தி கொடுத்தான்.

உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

عن عمر بن الخطاب رضي الله عنه أن رجلا من اليهود قال له: يا أمير المؤمنين، آية في كتابكم تقرءونها، لو علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيدا. قال أي آية؟ قال: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا المائدة:3. قال عمر: قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم: وهو قائم بعرفة يوم الجمعة

'யூதர் ஒருவர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, "யா அமீரல் முஃமினீன்! உங்களுடைய புத்தகத்தில் ஒரு வசனம் இருக்கின்றது. இந்த வசனம் யூதர்களாகிய எங்கள் மீது இறங்கி இருந்தால் அந்த நாளை நாங்கள் பெருநாளாக எடுத்து இருப்போம்" என்று கூறினார்.  அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் "அது எந்த வசனம்?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதன்

இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன், என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாமாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்.

[சூரா அல் மாயிதா: 3] என்ற வசனத்தை ஓதிக் காட்டினான்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்த வசனம் எப்பொழுது நபி மீது அல்லாஹ் இறக்கி வைத்தான் என்று எனக்குத் தெரியும். நிச்சயமாக இந்த வசனமானது நபி   அரஃபா தினத்தன்று அரபாவில் நின்று கொண்டு இருந்த பொழுது அல்லாஹ் சுப்ஹானஹூ வ தஆலா நபி மீது இறக்கி வைத்தான். அந்த அரஃபா தினம் ஜும்ஆ தினமாக இருந்தது" என்று கூறினார்கள். நூல்கள்: (ஸஹீஹ் அல்-புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

      அரஃபா நோன்பு...

இன்று சமூகத்தில் சில அரஃபா நோன்பு குறித்து பெரும் குழப்பத்தை உண்டு பண்ணி வருகிறார்கள்.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثٌ مِنْ كُلِّ شَهْرٍ وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ فَهَذَا صِيَامُ الدَّهْرِ كُلِّهِ صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) ( நூல் : முஸ்லிம் )

மேற்கண்ட ஹதீஸில் அரஃபா நாளில் நோன்பு வைத்தால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

ஹாஜிகள் அரஃபா நாளில் நோன்பு நோற்பது நபிவழி அல்ல.

حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَوْ قُرِئَ عَلَيْهِ قَالَ أَخْبَرَنِي عَمْرٌو عَنْ بُكَيْرٍ عَنْ كُرَيْبٍ عَنْ مَيْمُونَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّاسَ شَكُّوا فِي صِيَامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَرَفَةَ فَأَرْسَلَتْ إِلَيْهِ بِحِلَابٍ وَهُوَ وَاقِفٌ فِي الْمَوْقِفِ فَشَرِبَ مِنْهُ وَالنَّاسُ يَنْظُرُونَ رواه البخاري

மைமூனா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : "அரஃபா நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்களா என்பதில் மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. நான் அரஃபாவில் தங்கியிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பால் பாத்திரத்தைக் கொடுத்தனுப்பினேன். மக்களெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குடித்தார்கள். ( நூல் : புகாரி )

ஹாஜிகள் அல்லாத மற்றவர்கள் அரஃபா நாளில் நோன்பு வைப்பதற்கு முதலில் கூறிய செய்தி ஆதாரமாக அமைந்துள்ளது.

அரஃபா நாள் எது?

துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பதாவது நாளே அரஃபாவுடைய நாள். அவரவர் பகுதியில் பிறை பார்க்கப்பட்டு எப்போது துல்ஹஜ் மாதம் பிறை 9 வருகின்றதோ அந்த நாளே அவருக்கு அரஃபாவுடைய நாள் என்பதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்து நடைமுறையாக இருந்தது.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் பத்தாண்டு வருட காலங்கள் வாழ்ந்துள்ளார்கள். இக்கால கட்டத்தில் மக்காவில் ஹாஜிகள் எப்போது கூடுகிறார்கள் என்று பார்த்து அன்றைய நாளில் தான் மற்ற பகுதியில் உள்ளவர்களும் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறியதாக வரலாற்றில் எந்த ஒரு சான்றும் இல்லை .

அப்படி இருக்குமேயானால், நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து ஒருவரை மக்காவிற்கு அனுப்பி ஹாஜிகள் எப்போது கூடுகிறார்கள் என்பதைப் பார்த்து விட்டு வருமாறு கூறியிருப்பார்கள். அவர் வந்த பிறகு அந்த நாளில் நோன்பு நோற்றிருப்பார்கள்.

ஆனால் ஹதீஸ்களில் இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததாக எந்த ஒரு சம்பவமும் இடம் பெறவில்லை.

முதல் பிறைக்கும், அரஃபவிற்கும் எட்டு நாட்கள் இடைவெளி உள்ளன. இந்த எட்டு நாட்கள் இடைவெளியில் மாநபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு ஆளனுப்பி விசாரித்து ஊர்ஜிதப்படுத்த வாய்ப்புகள் இருந்தும் கூட நபி ஸல் அவர்கள் அப்படி செய்தார்களா? என்றால் அப்படியான எந்த முயற்சியிலும் மாநபி ஸல் அவர்கள் ஈடுபட்டதாக எந்த தரவுகளும் நபிமொழிகளில் இடம் பெற வில்லை.

ஹாஜிகள் அரபாவில் கூடும் நாள் தான் உலகம் முழுமைக்கும் அரஃபா நாள் என்று ஒருவர் கூறினால் இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் தவறிழைத்து விட்டார்கள் என்று நபி ஸல் அவர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி அரஃபா நாளை முடிவு செய்தார்களோ அப்படி முடிவு செய்வதைத் தவறு என்று சொல்லும் எந்தக் கருத்தும் வழிகேடான, பிழையான கருத்தாகும் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள கடமைப் பட்டிருக்கின்றோம்.

ஒரு பேச்சுக்கு இவர்கள் சொல்வது போன்று ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளே உலகின் அனைத்து பகுதி மக்களுக்கும் அரஃபா நாள் என்று நாம் வைத்துக் கொண்டால் உலகில் பல பகுதி மக்களுக்கு அரஃபா நோன்பு என்ற பாக்கியம் கிடைக்காமல் போய் விடும். 

ஹாஜிகள் சுப்ஹுக்குப் பிறகிலிருந்து மக்ரிபுக்கு முன்னர் வரை கூடியிருப்பார்கள். மக்ரிபுக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விடுவார்கள். இது தான் ஹாஜிகளின் அரஃபா நாள். 

அமெரிக்காவைப் பொறுத்த வரை ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நேரத்தில் மக்ரிபை அடைந்திருப்பார்கள். ஹாஜிகள் அரஃபாவை விட்டு வெளியேறும் போது அமெரிக்காவில் சுபுஹு நேரத்தை அடைவார்கள். அரஃபாவில் கூடியிருக்கும் நேரத்தில் நோன்பிருக்க வேண்டும் என்று பொருள் செய்தால் அமெரிக்காவில் இரவு நேரத்தில் தான் நோன்பு நோற்க வேண்டும். 

அல்லாஹ் கூறுவது போல் சுபுஹ் நேரத்திலிருந்து மக்ரிப் வரை நோன்பிருக்க வேண்டுமா? அல்லது இவர்கள் கூறுவது போல் மக்ரிபிலிருந்து சுபுஹ் வரை நோன்பிருக்க வேண்டுமா? 

இஸ்லாம் உலகளாவிய மார்க்கம். அனைவருக்கும் பொதுவான மார்க்கம். இந்த அடிப்படையில் அமெரிக்க முஸ்லிம்களுக்கு நாம் ஒரு வழி சொல்லியாக வேண்டும். அதாவது அரஃபாவில் சுபுஹுக்குப் பின் ஹாஜிகள் தங்குகிறார்கள். அந்த நேரம் அமெரிக்காவில் மக்ரிப் நேரமாகும். மக்ரிப் நேரத்தில் நோன்பு வைக்க முடியாது. அதற்குப் பின் வருகின்ற சுபுஹ் நேரத்திலிருந்து நோன்பை அவர்கள் பிடிக்க வேண்டும் என்று தான் கூறியாக வேண்டும். அவ்வாறு கூறினால் அமெரிக்க மக்கள் சுபுஹை அடைந்து நோன்பு பிடிக்கும் போது ஹாஜிகள் அரஃபா நாளை முடித்து பெருநாள் இரவை அடைந்திருப்பார்கள். 

அமெரிக்க முஸ்லிம்களைப் பொறுத்த வரை சவூதியில் பெருநாள் இரவை அடையும் போது தான் அரஃபா நோன்பு நோற்க வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. 

நோன்பு நோற்பது ஹராமாக்கப்பட்ட பெருநாளில் நோன்பு நோற்கச் சொல்லப் போகிறார்களா? அல்லது அமெரிக்க முஸ்லிம்களுக்கு மட்டும் அரஃபா நோன்பு கிடையாது என்று கூறப் போகிறார்களா? ஹாஜிகள் அரஃபாவில் தங்கும் போது தான் நோன்பு பிடிக்க வேண்டும் என்று தவறான பொருள் கொண்டதால் தான் இந்த விபரீதம் ஏற்படுகிறது. 

அமெரிக்க முஸ்லிம்கள் சுப்ஹு நேரத்திலிருந்து மக்ரிப் நேரம் வரும் வரை நோன்பிருந்தால் ஒன்று ஹாஜிகள் அரஃபாவில் கூடுவதற்கு முன்னால் நோன்பு வைக்க வேண்டும் அல்லது ஹாஜிகள் அரஃபாவை விட்டு வெளியேறி (யவ்முந் நஹ்ர்) பெருநாளை அடைந்த பின்னால் நோன்பு நோற்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் அரஃபாவில் ஹாஜிகள் கூடியிருக்கும் நேரத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது உலகத்தின் ஒரு பகுதி மக்களுக்குச் சாத்தியமில்லாததாக உள்ளது. 

நபி (ஸல்) அவர்களின் போதனை உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தக் கூடியது. உலகின் ஒரு பகுதி மக்களுக்கு அது பொருந்தவில்லை என்றால் அந்தப் போதனையில் தவறு இருக்காது. நாம் விளங்கிக் கொண்டது தவறு என்ற முடிவுக்குத் தான் வர வேண்டும். 

நாம் புரிந்து கொள்ள இலகுவான ஒரு வழி....  

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். (திருக்குர்ஆன் : 2:185) 

பிறை சம்பந்தமான முக்கியமான ஆதாரமாக இந்த வசனம் அமைந்துள்ளது. 

இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள ஃபமன் ஷஹித மின்குமுஷ் ஷஹ்ர என்ற பதத்தை ஆராய்ந்து பார்த்தால். ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமை என்ற கருத்து 

"உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகம் இல்லாமலே கிடைத்து விடும். அப்படியானால் இந்தச் சொற்றொடரின் பயன் என்ன? நடைமுறை வழக்கத்தில் இது போன்ற வார்த்தைகளை யாருமே பயன்படுத்துவதில்லை. 

ஃபமன் ஷஹித மின்குமுஷ் ஷஹ்ர உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ ரமளான் மாதத்தில் நோன்பு கடமை என்பதுடன் வேறு ஏதோ ஒரு செய்தியையும் சொல்வதற்காகவே இந்த வார்த்தைகளை அல்லாஹ் பயன்படுத்தியிருக்க வேண்டும். 

ஏனெனில் தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை விட்டும் அவன் தூயவன். உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகத்தில் இறைவன் கூறவரும் செய்தி என்ன என்பதை இப்போது ஆராய்வோம். 

இதைப் புரிந்து கொள்வதற்கு இது போன்ற நடையில் பயன்படுத்தப்பட்ட சொற்றொடர்களை முன்மாதிரியாக நாம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முந்தைய வசனம் கூட இது போன்ற நடையில் தான் அமைந்திருக்கிறது. அதையே எடுத்துக் கொள்வோம். 

أَيَّامًا مَعْدُودَاتٍ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَهُ وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ அல்லது பயணத்திலிருக்கிறாரோ அவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரம். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது. (திருக்குர்ஆன் : 2:184) 

உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ அல்லது பயணத்திலிருக்கிறாரோ அவர் வேறு நாட்களில் நோன்பு நோற்கட்டும் என்று இந்த வசனத்தில் இறைவன் கூறுகிறான். உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ என்றால் நோயாளியல்லாதவர்களும் உங்களில் இருப்பார்கள் என்ற கருத்து அதில் அடங்கியுள்ளது. 

எல்லோருமே நோயாளிகளாக இருந்தால் யார் நோயாளியாக இருக்கிறாரோ என்று பயன்படுத்த முடியாது. இந்த வசனத்தைப் புரிந்து கொள்வது போல் தான் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இரண்டுமே ஒரே மாதிரியான நடையில் அமைந்த சொற்றொடர்களாகும். உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்றால் உங்களில் அம்மாதத்தை அடையாதவர்களும் இருப்பார்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். 

فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

இந்த வசனங்களில் மட்டுமின்றி திருக்குர்ஆனின் எந்த வசனங்களில் எல்லாம் யார் அடைகிறாரோ யார் போகிறாரோ என்பது போல் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அத்தனை இடங்களையும் இப்படித் தான் புரிந்து கொள்ள முடியும். நேர்வழி பெறுபவர்கள், பெறாதவர்கள் என இரு சாரார் இருக்கும் போது தான் யார் எனது வழியைப் பின்பற்றுகிறாரோ (திருக்குர்ஆன் 2:38) என்று கூற முடியும். 

فَمَنْ فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ

ஹஜ்ஜை மேற்கொள்பவர்களும் ஹஜ்ஜை மேற்கொள்ளாதவர்களும் இருக்கும் போது தான் யார் ஹஜ்ஜை மேற்கொள்கிறாரோ (திருக்குர்ஆன் 2:197) என்று கூற முடியும். 

فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ

குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்பவர்களும் குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்ளாதவர்களும் இருக்கும் போது தான் யார் குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்ளவில்லையோ (திருக்குர்ஆன் 2.196) என்று கூற முடியும். 

இந்த நடையில் இன்னும் பல வசனங்களைக் குர்ஆனிலும், நபிமொழிகளிலும் காணலாம். மனிதர்களின் பேச்சு வழக்கிலும் இத்தகைய வார்த்தைப் பிரயோகங்களைக் காணலாம்.

அல்லாஹ்வின் வேதத்தில் தேவையில்லாத ஒரு வார்த்தை கூட இருக்காது என்பதை நெஞ்சிலிருத்தி ஆராய வேண்டும். 

அம்மாதத்தை ஒருவர் அடைந்திருக்கும் போது மற்றவர் அடைந்திருக்க மாட்டார். ஒருவர் ரமளானை அடைந்த பின் இன்னொருவர் ரமளானை அடைவார். இப்படி இருந்தால் மட்டுமே யார் ரமளானை அடைகிறாரோ என்று கூற முடியும். அனைவரும் ஒரே நேரத்தில் ரமளானை அடைகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். எல்லோருமே அடைந்திருக்கும் போது உங்களில் யார் அடைகிறாரோ எனக் கூறுவது வீணான வார்த்தைப் பிரயோகமாக அமைந்து விடும். 

மரணித்தவர் ரமளானை அடைய மாட்டார்; உயிரோடுள்ளவர் ரமளானை அடைவார் அல்லவா? இதை இறைவன் கூறியிருக்கலாம் அல்லவா? என்று கூற முடியாது. ஏனெனில் குர்ஆன் உயிருள்ளவர்களைப் பார்த்துப் பேசக் கூடியது. உயிருள்ளவர்களை எச்சரிக்கை செய்வதற்காக அருளப்பட்டது. 

உங்களில் என்று முன்னிலையில் பேசப்படுவது உயிருள்ளவர்களை நோக்கித் தான். எனவே உயிருள்ளவர்களில் தான் ரமளானை அடைந்தவர்களும் அடையாதவர்களும் இருப்பார்கள். நோன்பு மட்டுமின்றி குர்ஆனில் கூறப்பட்ட எல்லாக் கட்டளைகளும் உயிரோடு உள்ளவர்களுக்குத் தான். எனவே நுண்ணறிவாளனாகிய அல்லாஹ், உங்களில் உயிரோடு உள்ளவர்கள் நோன்பு நோற்க வேண்டும். செத்தவர்கள் நோன்பு நோற்கத் தேவையில்லை என்று கூறுவானா? யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்பதைக் கண்டு கொள்ளாமல் செல்பவர்களை விட இப்படி விவேகமற்ற விளக்கம் தருபவர்கள் தான் குர்ஆனை அதிகம் அவமதிப்பவர்கள். 

அதாவது உலகில் உயிரோடு வாழக் கூடிய மக்களில் ரமளானை அடைந்தவர்களும் இருக்கலாம். அடையாதவர்களும் இருக்கலாம். அடைந்தவர் நோன்பு பிடியுங்கள். அடையாதவர் எப்போது அடைகிறாரோ அப்போது நோன்பு பிடியுங்கள் என்பதே இதன் கருத்தாக இருக்க முடியும். 

ஒருவர் அடைந்து மற்றவர் அடையாமல் இருப்பாரா? அது எப்படி? அறிவியல் அறிவு வளராத காலத்தில் இவ்வாறு கேட்கலாம். உலகம் தட்டை என்று எண்ணிக் கொண்டிருந்த காலத்தில் இவ்வாறு கேட்கலாம். இன்றைக்குக் கேட்க முடியாது. யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற இறை வசனத்திலிருந்தும் விஞ்ஞான அடிப்படையிலும் உலகில் அனைவரும் ஒரே நேரத்தில் மாதத்தை அடைவதில்லை என்பதை தெரிந்து கொண்டோம். 

மாதத்தை அடைவதில் வித்தியாசம் இருக்கிறது என்றால் 9வது பிறையை அடைவதிலும் வித்தியாசம் இருக்கத் தான் செய்யும். எனவே அரஃபா நோன்பை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மக்காவில் என்றைக்கு துல்ஹஜ் பிறை 9ஆக இருக்குமோ அன்று மக்காவில் அரஃபா நாள். நமக்கு துல்ஹஜ் பிறை 9 அன்று நமக்கு அரஃபா நாள். இது தான் அந்த ஹதீஸின் பொருள். 

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை நாம் இருக்கின்ற நவீன உலகத்தில் இருந்து மட்டுமே பார்க்கக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்தில் அவர்கள் எப்படி நடைமுறைப்படுத்தினார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்த போது ஹாஜிகள் அரஃபாவில் கூடியுள்ளார்கள். அரஃபாவில் ஹாஜிகள் கூடிய செய்தியை அறிந்து, அதன் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு வைக்கவில்லை. தங்களுடைய பகுதியில் பார்க்கப்பட்ட பிறையின் அடிப்படையில் தான் அரஃபா நாள் நோன்பைத் தீர்மானித்தார்கள். ( நன்றி:https://aleemqna.blogspot.com/2014/10/blog-post.html?m=1 ) 

அய்யாமுத் தஷ்ரீக் உடைய நாட்களில் தக்பீர் சொல்வது....

قال الله تعالى : {وَاذْكُرُواْ اللّهَ فِي أَيَّامٍ مَّعْدُودَاتٍ ( البقرة 203 )

அல்லாஹ்வின் பெயரை எண்ணப்பட்ட  நாட்களில் நீங்கள் கூறுங்கள் …. 22:203 என்ற வசனத்திற்கு விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்கள்: எண்ணப்பட்ட  நாட்கள் என்பது துல் ஹஜ் மாதத்தின் 9,10,11,12,13 அஸர் வரையிலான அய்யாமுத் தஷ்ரீக் நாட்கள் ஆகும். என்று கூறுகின்றார்கள் ( நூல்: தஃப்ஸீர் துர்ருல் மன்ஸூர் )

இது தஷ்ரீக் நாட்கள் ஆகும். இது இப்னு உமர் மற்றும் பெரும்பாலான அறிஞர்களின் கருத்து. (:நூல்: லதாயிஃபுல் மஆரிஃப் ப: 500 ) 

وَعَنْ نُبَيْشَةَ الهُذَلِيِّ رَضِيَ اللهُ عَنهُ قالَ: قالَ رَسُولُ الله صلى الله عليه وسلم: «أيَّامُ التَّشْرِيقِ أيَّامُ أكْلٍ وَشُرْبٍ، وَذِكْرٍ؟». أخرجه مسلم.

நுபைஸத்துல் ஹுதலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-  "அய்யாமுத் தஷ்ரீக் (11, 12, 13 வது தினம்) ஆகிய இந்த அனைத்து தினங்களும் (பெருநாள் தினங்களாகும்). மேலும் இந்த நாட்களில் உணவுகளை  உண்டு, நீராதாரங்களை குடித்து சந்தோஷமாக இருக்க கூடிய நாளாகவும், திக்ர் (தக்பீர்) உடைய நாளாகவும் இருக்கிறது" என்று நபி கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

حَدَّثَنَا ‏ ‏سُرَيْجُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمَلِيحِ ‏ ‏عَنْ ‏ ‏نُبَيْشَةَ الْهُذَلِيِّ ‏ ‏قَالَ ‏‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيَّامُ التَّشْرِيقِ ‏ ‏أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ ‏

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ يَعْنِي ابْنَ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ الْحَذَّاءِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمَلِيحِ ‏ ‏عَنْ ‏ ‏نُبَيْشَةَ ‏ ‏قَالَ ‏ ‏خَالِدٌ ‏ ‏فَلَقِيتُ ‏ ‏أَبَا الْمَلِيحِ ‏ ‏فَسَأَلْتُهُ فَحَدَّثَنِي بِهِ فَذَكَرَ عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏هُشَيْمٍ ‏ ‏وَزَادَ فِيهِ وَذِكْرٍ لِلَّهِ

அய்யாமுத் தஷ்ரீக் (எனும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு அடுத்த மூன்று) நாட்கள், உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : நுபைஷா பின் அம்ரிப்னு அவ்ஃப் அல்ஹுதலீ (ரலி)

குறிப்பு : அபூகிலாபா வழி அறிவிப்பில், “எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த அபுல்மலீஹ் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது, அவர்களிடம் இந்த ஹதீஸைப் பற்றிக் கேட்டேன். அப்போது மேற்கண்ட ஹதீஸை அவர்கள் எனக்கு அறிவித்ததோடு, கூடுதலாக, ‘இறைவனை நினைவுகூர்(ந்து திக்ரு செய்)வதற்கும் உரிய நாளாகும்என்பதை அதிகப்படியாக அறிவித்தார்கள்என்று காலித் அல்ஹத்தா (ரஹ்) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

உக்பா இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கக்கூடிய ஹதீஸில், "நிச்சயமாக அரஃபா தினம் ( ஒன்பதாவது தினம்), யவ்முந் நஹ்ர் (பத்தாது தினம்), அய்யாமுத் தஷ்ரீக் (11, 12, 13 வது தினம்) ஆகிய இந்த அனைத்து தினங்களும் பெருநாள் தினங்களாகும். மேலும் இந்த நாட்களில் உணவுகளை பெற்று சந்தோஷமாக இருக்க கூடிய நாளாகவும், தக்பீர் உடைய நாளாகவும் இருக்கிறது" என்று நபி கூறினார்கள். ( நூல்கள்: ஸுனன் அபுதாவூத், திர்மிதி, நஸாஈ)

يكبر من صبح يوم عرفة إلى العصر من أخر أيام التشريق ، وهذا قول عمر وعلي وابن عباس وابن مسعود وجابر وعمار والزهري وكحول وسفيان وأحمد وأبو ثور ،وحكى ابن قدامة إجماع الصحابة على ذلك

منها : ذكر الله عزَّ وجل عقب الصلوات المكتوبات بالتكبير في أدبارها ، وهو مشروعٌ إلى آخر أيام التشريق عند جمهور العلماء .

ومنها : ذُكره بالتسمية والتكبير عند ذبح النُسك ، فإن وقت ذبح الهدايا والأضاحي يمتدُّ إلى آخر أيَّام التشريق .

ومنها : ذكر الله عزَّ وجل على الأكل والشرب ، فإن المشروع في الأكل والشرب أن يُسمي الله في أوله ، ويحمده في آخره ، وفي الحديث عن النبي صلى الله عليه وسلم : " إن الله عزَّ وجل يرضى عن العبد أن يأكل الأكلة فيحمده عليها ، ويشرب الشَّربة فيحمده عليها " رواه مسلم ( 2734 )

ومنها : ذِكره بالتكبير عند رمي الجمار أيام التشريق ، وهذا يختصُّ به الحجاج .

ومنها : ذكر الله تعالى المطلق ، فإنه يُستحب الإكثار منه في أيام التشريق ، وقد كان عُمر رضي الله عنه يُكبر بمنىً في قبته ، فيسمعه الناس فيُكبرون فترتج منىً تكبيراً ، وقد قال تعالى : ( فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آبائكم أو أشد ذكراً . فمن الناس من يقول ربَّنا آتنا في الدنيا وماله في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ) .

1) தக்பீர் ஓதுவதன் மூலம் பரிந்துரைக்கப்பட்ட தொழுகைக்குப் பிறகு உடனடியாக அல்லாஹ்வை நினைவு கூர்தல். பெரும்பாலான அறிஞர்களின் கூற்றுப்படி, தஷ்ரிக் நாட்கள் முடியும் வரை இது பரிந்துரைக்கப்படுகிறது.

2) பலியிடும் பிராணியை அறுக்கும் போது பிஸ்மில்லாஹ் என்றும் அல்லாஹு அக்பர் என்றும் கூறி அவனை நினைவு கூர்தல். ஹதி மற்றும் உதியாவை அறுப்பதற்கான நேரம் தஷ்ரிக் நாட்கள் முடியும் வரை நீடிக்கும்.

3) உண்ணும் போதும் குடிக்கும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்தல். சாப்பிடும்போதும் குடிக்கும்போதும் ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் என்றும், இறுதியில் அல்லாஹ்வைப் புகழ்வதும் (அல்ஹம்து லில்லாஹ் என்று சொல்லுங்கள்) என்றும் விதிக்கப்பட்டுள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்ட ஹதீஸின் படி: "அல்லாஹ் தனது அடிமையைப் புகழ்ந்து ஏதாவது சாப்பிடும்போதும், அதற்காக எதையாவது குடிக்கும்போதும் அவரை விரும்புகிறான்." (முஸ்லிம் விவரித்தவர், 2734)

4) தஷ்ரீக் நாட்களில் ஜமாரத்தின் மீது கல்லெறியும் போது தக்பீர் கூறி அவரை நினைவு கூர்தல் . இது ஹஜ் யாத்ரீகர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

பொதுவாக அல்லாஹ்வை நினைவு கூர்தல். தஷ்ரிக் நாட்களில் அதிக திக்ர் செய்வது முஸ்தஹப் ஆகும்.

وقال البخاري كان ابن عمر وأبو هريرة رضي الله عنهما يخرجان إلى السوق في أيام العشر يكبران ويكبر الناس بتكبيرها. وقال: وكان عمر يكبر في قبته بمنى فيسمعه أهل المسجد فيكبرون، ويكبر أهل الأسواق حتى ترتج منى تكبيراً. وكان ابن عمر يكبر بمنى تلك الأيام وخلف الصلوات وعلى فراشه، وفي فسطاطه ومجلسه وممشاه تلك الأيام جميعاً

 

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி), அபூஹுரைரா (ரழி) ஆகிய இரு நபித் தோழர்களும் (துல் ஹஜ்)பத்து நாட்களிலும் கடை வீதிகளுக்குச் சென்று தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் தக்பீர் கூறுவதை செவியுற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள். ( நூல்: புகாரி :  1/ 339 )

உமர் (ரழி) அவர்கள்  மினாவில் தனது கூடாரத்தில் உரத்த குரலில் தக்பீர் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இதைக் கேட்ட பள்ளிவாசலில் உள்ளவர்களும்,  கடைத்தெருக்களில் உள்ளவர்களும் மினாவே அதிரும் அளவுக்கு தக்பீர் சொல்லுவார்கள்.

இப்னு உமர் (ரழி) அவர்கள் மினாவில் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும், கூடாரத்திலும்,படுக்கையிலும், மஜ்லிஸிலும், அனைத்து நாட்களிலும் தக்பீர் சொல்லக் கூடியவர்களாக இருந்தார்கள்…. நூல்: புகாரி 4/123.

وقد استحب كثيرٌ من السلف كثرة الدعاء بهذا في أيام التشريق .

பல சலஃப்கள் தஷ்ரிக் நாட்களில் நிறைய துஆச் செய்வதை முஸ்தஹப் என்று கருதினர். ( நூல்: இப்னு ரஜப் ஹம்பலீ (ரஹ்) எழுதிய லதாயிஃப் அல்-மஆரிஃப், ப. 500 )

தக்பீர் வாசகத்தின் வடிவமைப்பை இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:-

فقال الإمام الشافعي رحمه الله :

 اللَّهُ أَكْبَرُ  اللَّهُ أَكْبَرُ اللَّهُ لَا إلَهَ إلَّا اللَّهُ وَاَللَّهُ أَكْبَرُ الله اكبر ولله الحمد 

اللَّهُ أَكْبَرُ  اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا وَسُبْحَانَ اللَّهِ وبحمده بُكْرَةً وَأَصِيلًا لَا إلَهَ إلَّا اللَّهُ وَلَا نَعْبُدُ إلَّا اللَّهَ مُخْلِصِينَ له الدَّيْنَ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ لَا إلَهَ إلَّا اللَّهُ وَحْدَهُ صَدَقَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ واعز جنده وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ لَا إلَهَ إلَّا اللَّهُ وَاَللَّهُ أَكْبَرُ الله اكبر ولله الحمد 

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்,

லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்

அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து

அல்லாஹு அக்பர் கபீரா

வல் ஹம்து லில்லாஹி கசீரா

வ சுபஹானல்லாஹி வபிஹம்திஹீ புக்ரதவ்   வ அ-சீலா

லா இலாஹ இல்லல்லாஹு வலா நஃعபுது இல்லா இயாஹு முخஹ்லிசீன லஹுدத்தீன வலவ் கரிஹல் كகாஃபிரூன்

லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தா ,  வ சதக வعஅதா, வ நசர அப்தா

வ அزஸ்ஸ ஜு(ன்)ந்தா வ ஹزஸமல் அஹ்زஸாப வحஹ்தா

லா இலாஹ  இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்

அல்லாஹு அக்பர் , வ லில்லாஹில் ஹம்து.

தக்பீர் சொல்வது எதற்காக:-

وَلِتُکَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏

உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).

( அல்குர்ஆன்: 2: 185 )

ஒரு முஸ்லிமுடைய வாழ்வில் தக்பீர் அதிகம் தொடர்புடைய மகத்தான வார்த்தையாகும்..

பிறந்த குழந்தையாக இருக்கும் நிலையில் காதுகளில் ஒலிக்கப்படுவதில்  இருந்து குழிக்குள் அடக்கம் செய்யப்படும் முன்பு ஜனாஸா தொழுகை வரை  வாழ்வில் தக்பீர் தொடர்ந்து வருகிறது.

மகிழ்ச்சியின் அடையாளமாக, வீரத்தை பறைசாற்றும் முகமாக, வெற்றி வாகை சூடும் போது எழுச்சிக் குரலாக, எதிரிகளின் அச்சத்தின் போது அபயக்குரலாக, தொழுகைக்கான அழைப்பாக, தொழுகையின் அணிகலனாக, ஹஜ்ஜின் கம்பீர முழக்கமாக, குர்பானியின் ஓர் அங்கமாக என்று தக்பீரின் முழக்கம் என்பது நீண்ட பட்டியலைக் கொண்டதாகும்.

நாளொன்றுக்கு ஒரு இறைநம்பிக்கையாளர் கடமையான மற்றும் உபரியான தொழுகை மூலம் மட்டுமே  342 முறையும் அத்தோடு ஐந்து நேர தொழுகைக்குப் பிறகு, தூங்கும் முன்பு என அவர் 6×34=204 தடவை அத்தோடு அவர் பாங்குக்கு வழக்கமாக பதில் சொல்பவராக இருந்தால் 30 முறை என மொத்தமாக 596 முறை தக்பீர் சொல்கிறார்.  

இந்த உலகில் இந்த பெரும் பாக்கியம் தொழுகையில் இஃக்லாஸாக ஈடுபடும் ஒரு இறைநம்பிக்கையாளரைத் தவிர வெறெவருக்கும் கிடைப்பதில்லை.

Thursday, 6 June 2024

அல்லாஹ் வழங்கும் முடிவுகளை பொருந்திக் கொள்வோம்!!!

 

அல்லாஹ் வழங்கும் முடிவுகளை பொருந்திக் கொள்வோம்!!!


வாழ்க்கையில் அனைவரும் ஏதேனும் சோதனைகளை சந்தித்து வருகிறோம்.

சிலருக்கு நாட்பட்ட சோதனைகள் இருக்கலாம். சிலருக்கு காலம் கடந்து தலைமுறை தலைமுறையாக சோதனைகள் இருக்கலாம்.

எல்லா சோதனைகளுக்கும் தீர்வு உண்டு. இந்த உலகில் தீர்வே இல்லாமல் எந்த சோதனைகளும் இல்லை.

சோதனைகளுக்கு தீர்வாக வரும் முடிவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

முடிவுகளை ஏற்றுக் கொள்கிற விஷயத்தில் மனிதர்கள் பல்வேறு வகையினாராக இருக்கின்றனர்.

ஒரு இறைநம்பிக்கையாளனைப் பொறுத்தவரை அவன் எதிர் கொள்ளும் பிரச்சினையின் தீர்வாக வரும் முடிவு எதுவாக இருந்தாலும் அல்லாஹ்வின் மீது பொறுப்பு சாட்டி விட்டு மனதார ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

இது தான் சாமானிய இறைநம்பிக்கையாளர் முதற் கொண்டு ஈமானிய உச்சத்தில் இருக்கும் இறைத்தூதர் வரை இஸ்லாம் கடைபிடிக்க தூண்டும் அளவுகோல் ஆகும்.

فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ‏

நபியே!  அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான். ( அல்குர்ஆன்: 3: 159 )

وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏

இன்னும் உறுதியாக நம்பிக்கை கொண்டோர் எல்லாம், அல்லாஹ்வின் மீதே உறுதியாக நம்பிக்கை வைக்கட்டும்என்று கூறினார்கள்.

( அல்குர்ஆன்: 14: 11 )

وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُوْنَ

உறுதியாக நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வின் மீதே உறுதியாக நம்பிக்கை வைக்கட்டும் (என்றும் கூறினார்கள். ( அல்குர்ஆன்: 14: 12 )

அத்தியாயம் யூசுஃப் பல்வேறு படிப்பினை புதையல்களை தன்னகத்தே கொண்டுள்ள மகத்தான அத்தியாயம் ஆகும்.

மிக முக்கியமாக வாழ்க்கையில் தொடர்படியாக பிரச்சினைகளை, சோதனைகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு  ஆறுதலையும், மீண்டு வரும் வழிகளையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எப்படியும் நம்மைப் பாதுகாத்து காப்பாற்றி விடுவான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை படிப்பினையாக வழங்குகிற அத்தியாயம் ஆகும்.

அங்கே நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு அறியாத பருவத்தில் இருந்து இளமைப் பருவம் வரை பிரச்சினையும் சோதனையும் சூழ்ந்தது.

 

அங்கே நபி யஅகூப் (அலை) அவர்களுக்கு முதலில் யூசுஃப் பின்னர் புன்யாமீன் தொடர்ந்து குற்றம் செய்து வரும் இதர மகன்கள் என பிரச்சினையும் சோதனையும் இருந்தது.

அங்கே நாட்டு மன்னனுக்கு பிரச்சினையும் சோதனையும் காத்திருந்தது.

சகோதரனுக்கு இழைத்த மாபெரும் தீங்கின் காரணமாக குற்ற உணர்வால் உந்தப்பட்ட யூசுஃபின் சகோதரர்களுக்கு சகோதரர் யூசுஃபின் அன்பும், வல்லோன் அல்லாஹ்வின் மன்னிப்பும் தேவைப்பட்டது.

அரசியும் குற்ற உணர்வால் உந்தப்பட்டு அல்லாஹ்வின் அடைக்கலத்தை ஆதரவு வைத்து காத்திருந்தார்.

எல்லோருக்குமான பிரச்சினைகளை அவர்கள் சந்தித்த சோதனைகளை வரிசையாக பட்டியலிடும் அல்லாஹ் அவர்களின் ஒவ்வொருவரின் சோதனைகளில் இருந்து அவர்கள் எவ்வாறு வெளியேற்றப்பட்டார்கள். பாதுகாக்கப்பட்டார்கள் என்று அணிவகுத்து கூறுகின்றான்.

ஆக, நான் ஆரம்பத்தில் சொன்னது போன்று எல்லா சோதனைகளுக்கும் தீர்வு உண்டு. இந்த உலகில் தீர்வே இல்லாமல் எந்த சோதனைகளும் இல்லை. என்பதை அத்தியாயம் யூசுஃப் பறை சாற்றி நிற்கின்றது.

யூனுஸ் (அலை) அவர்களை மீன் வயிற்றில் இருந்து ஈடேற்றம் தந்த அல்லாஹ் இது போன்றே இறைநம்பிக்கையாளர்களுக்கும் அவர்களின் சோதனைகளில் இருந்து ஈடேற்றம் நல்குவதாக அறிவிக்கின்றான்.

யூனுஸ் (அலை) அவர்களின் சமூகத்தை கடும் வேதனையில் இருந்து காப்பாற்றிய பிறகு, இது போன்றே இறைநம்பிக்கையாளர்களுக்கும் அவர்களின் சோதனைகளில் இருந்து ஈடேற்றம் நல்குவதாக அல்லாஹ் அறிவிக்கின்றான்.

ஆக நமக்கான எந்த சோதனையும் நமக்கு நிரந்தரமானதல்ல.

நாம் மிகவும் எதிர்பார்த்த தேர்தல் முடிவு இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பது தான்.

ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக நமக்கு பெரிய சோதனையாக, முஸ்லிம் சமூகத்திற்கு வெளிப்படையாகவே தீங்கு செய்து வந்த ஃபாசிச கும்பல் மீண்டும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க இருப்பது நமக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது.

இந்த முடிவை நாம் எதிர் பார்த்திருக்கா விட்டாலும் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

ஏனெனில், எந்தக் காலத்திலும் எந்தக் காரியத்தின் முடிவும் நம் கையில் இல்லை.

எல்லாம் நம்மை படைத்த அல்லாஹ்வின் கையில் இருக்கிறது என்று நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

தற்போது ஏற்பட்டுள்ள சிறிய அளவிலான இந்த மாற்றத்தை அடுத்த தேர்தலில் முழுமையான ஆட்சி மாற்றத்திற்கான அஸ்திவாரமாக அல்லாஹ் அமைத்திடுவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன் 

 

நமது விருப்பங்கள் எதுவாயினும் அல்லாஹ்வின் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும்..

حدثنا موسى بن إسماعيل حدثنا عبد الواحد حدثنا عاصم عن أبي عثمان عن أسامة بن زيد قال كان ابن لبعض بنات النبي يقضي فأرسلت إليه أن يأتيها فأرسل إن لله ما أخذ وله ما أعطى وكل إلى أجل مسمى فلتصبر ولتحتسب   فأرسلت إليه فأقسمت عليه فقام رسول الله صلى الله عليه وسلم وقمت معه ومعاذ بن جبل وأبي بن كعب وعبادة بن الصامت فلما دخلنا ناولوا رسول الله الصبي ونفسه تقلقل في صدره حسبته قال كأنها شنة فبكى رسول فقال سعد بن عبادة أتبكي ؟ فقال إنما يرحم الله من عباده الرحماء

رواه البخاري

உஸாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி {ஸல்} அவர்களின் அன்பு மகளார் ஜைனப் (ரலி) அவர்கள் என் மகன் உயிர் பிரியும் தருவாயில் உள்ளான்; எனவே, தாங்கள் வருகை தரவேண்டும்என்று சொல்லியனுப்பினார்கள்.

 

அதற்கு, அண்ணலார் தங்கள் மகளாருக்கு ஸலாம் கூறியனுப்பினார்கள், மேலும், “அல்லாஹ் வாங்கிக் கொள்வதனைத்தும் அவனுடையதேயாகும். ஒவ்வொரு விஷயமும் அவனிடம் முடிவானதும், காலநிர்ணயம் நிச்சயிக்கப்பட்டதுமாகும்.

 

எனவே, நீ மறுமையில் கூலி பெரும் எண்ணத்துடன் பொறுமையை மேற்கொள்வாயாக!என்றும் சொல்லியனுப்பினார்கள்.

 

இதற்குப் பின்னரும் ஜைனப் (ரலி) அவர்கள் அண்ணலார் அவசியம் வருகை தர வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியனுப்பினார்கள்.

தங்களது மகளாரின் வற்புறுத்தல் காரணமாக அண்ணலார் தங்களின் தோழர்கள் முஆத் இப்னு ஜபல், ஸஅத் இப்னு உப்பாதா, உபை இப்னு கஅப், ஸைத் இப்னு ஸாபித், (ரலி அன்ஹும்) ஆகியோருடன் ஜைனப் (ரலி) அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள்.

குழந்தை அண்ணலாரிடம் கொண்டு வரப்பட்டது. அண்ணலார் தம் மடியின் மீது குழந்தையை அமர்த்திக் கொண்டார்கள். அப்போது, அக்குழந்தையின் உயிர் சிறிது, சிறிதாகப் பிரிந்து கொண்டிருந்தது. இந்தக் காட்சியைக் கண்டு நபி {ஸல்} அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வெள்ளமென வழிந்தோடலாயிற்று.

அப்போது, ஸஅத் இப்னு உப்பாதா (ரலி) அவர்கள் இது என்ன? தாங்கள் அழுகின்றீர்களே?” என்று ஆச்சர்யத்தோடு கேட்டார்கள்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள் இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளத்தில் வைத்துள்ள கருணை உணர்ச்சியாகும்என்று இன்னொரு அறிவிப்பில் அழுகை உணர்வுகளின் வெளிப்பாடாகும்என்று கூறினார்கள்.                 ( நூல்: புகாரி )

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகளார் தமது தந்தையான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தால் துஆச் செய்து ஏதேனும் மாற்றம் நிகழும் என்றெண்ணி மீண்டும் மீண்டும் அழைத்திருப்பார்கள்.

ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மகளாரிடம் கூறிய அறிவுரை "அல்லாஹ்வின் முடிவை ஏற்றுக் கொள்!" என்பது தான்.

அல்லாஹ்வின் நியதி இது தான்....

حدثنا مالك بن إسماعيل: حدثنا زهير، عن حميد، عن أنس رضي الله عنه قال: كان للنبي ﷺ ناقة تسمى العضباء، لا تسبق، قال حميد: أو لا تكاد تسبق، فجاء أعرابي على قعود فسبقها، فشق ذلك على المسلمين حتى عرفه، فقال: (حق على الله أن لا يرتفع شيء من الدنيا إلى وضعه). طوله موسى، عن حماد، عن ثابت، عن أنس، عن النبي صلى الله عليه وسلم.

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- நபிகள் நாயகம் அவர்களிடம் 'அள்பா' என்று பெயர் வைக்கப்பட்ட ஓர் ஒட்டகம் ஒன்று இருந்தது. அந்த ஒட்டகம் பந்தயத்தில் வேறு எந்த வொரு ஒட்டகமும் முந்த முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக்கூடிய) தாக இருந்தது. அப்போது கிராமவாசி ஒருவர் ஆறு வயதுக்குட்பட்ட ஓர் ஒட்டகம் ஒன்றின் மீது வந்தார். அந்த ஒட்டகம் நபிகள் நாயகம் அவர்களின் ஒட்டகத்தை முந்தியது. இது முஸ்லீம்களுக்கு மன வேதனையை அளித்தது. இதை அறிந்த நபிகள் நாயகம் அவர்கள் "உலகில் உயர்ந்து விடுகிற பொருள் எதுவாயினும் (ஒரு நாள்) அதைக் கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் நியதியாகும்" என்று கூறினார்கள். ( நூல்: புகாரி:- 2,872 / 6,501 )

மாநபி (ஸல்) அவர்களின் ஒட்டகம் தோற்றுப் போய் விட்டதே என்று அங்கலாய்த்துக் கொண்ட தம் தோழர்களிடம் மாநபி ஸல் அவர்கள் கூறிய அறிவுரை மிகவும் கவனிக்கத் தக்கதாகும்.

நபி (ஸல்) விரும்பிய தாயிஃபும், அல்லாஹ் வழங்கிய முடிவும்...

عَنِ ابْنِ شِهَابٍ ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ، أَنَّ عَائِشَةَ , رَضِيَ اللَّهُ عَنْهَا , حَدَّثَتْهُ أَنَّهَا قَالَتْ لِرَسُولِ اللَّهِ , صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : يَا رَسُولَ اللَّهِ , هَلْ أَتَى عَلَيْكَ يَوْمٌ كَانَ أَشَدَّ مِنْ يَوْمِ أُحُدٍ ؟ قَالَ : " لَقَدْ لَقِيتُ مِنْ قَوْمِكِ ، وَكَانَ أَشَدَّ مَا لَقِيتُ مِنْهُمْ يَوْمَ الْعَقَبَةِ إِذْ عَرَضْتُ نَفْسِي عَلَى ابْنِ عَبْدِ يَا لَيْلِ بْنِ عَبْدِ كُلالٍ فَلَمْ يُجِبْنِي إِلَى مَا أَرَدْتُ

ஒரு முறை ஆயிஷா  (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் உங்களது வாழ்வில் உஹது யுத்த்த்தை விட மிக சோதனையான ஒரு கட்ட்த்தை சந்தித்த்துண்டா? என்று கேட்ட போது நபி (ஸல்) ஆமாம் தாயிபில் தாயிப் வாசிகளை சந்தித்ததே என் வாழ்வில் மிகச் சோதனையான கால கட்டம் என்று கூறினார்கள்.

 

பெருமானார் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் முடிவைப் பொருந்திக் கொண்ட விதம்...

«اللهم إليك أشكو ضعف قوتي وقلة حيلتي وهواني على الناس، اللهم يا أرحم الراحمين أنت رب المستضعفين وأنت ربي إلى من تكلني؟ إلى بعيد يتجهّمني أو إلى عدو ملكته أمري، إن لم يكن بك عليّ غضب فلا أبالي ولكن عافيتك هي أوسع، إني أعوذ بنور وجهك الذي أشرقت له الظلمات، وصلح عليه أمر الدنيا والآخرة من أن تنزل بي غضبك أو تحل بي سخطك لك العتبى حتى ترضى لا حول ولا قوة إلا بك»

அல்லாஹ்வே! எனது ஆற்றல் குறைவையும் எனது திறமைக் குறைவையும் மனிதர்களிடம் நான் மதிப்பின்றி இருப்பதையும் உன்னிடமே முறையிடுகிறேன்! கருணையாளர்களிலெல்லாம் மிகப் பெரிய கருணையாளனே! நீதான் எளியோர்களைக் காப்பவன் நீதான் என்னைக் காப்பவன்!

நீ என்னை யாரிடம் ஒப்படைக்கிறாய்? என்னைக் கண்டு முகம் கடுகடுக்கும் அந்நியனிடமா? அல்லது என்னுடைய காயத்தை நீ உரிமையாக்கிக் கொடுத்திடும் பகைவனிடமா? உனக்கு என்மீது கோபம் இல்லையானால் (இந்த கஷ்டங்களையெல்லாம்) நான் பொருட்படுத்தவே மாட்டேன். 

எனினும், நீ வழங்கும் சுகத்தையே நான் எதிர்பார்க்கிறேன். அதுவே எனக்கு மிக விசாலமானது. உனது திருமுகத்தின் ஒளியினால் இருள்கள் அனைத்தும் பிரகாசம் அடைந்தன் இம்மை மறுமையின் காரியங்கள் சீர்பெற்றன. அத்தகைய உனது திருமுகத்தின் ஒளியின் பொருட்டால் உனது கோபம் என்மீது இறங்குவதிலிருந்தும் அல்லது உனது அதிருப்தி என்மீது இறங்குவதிலிருந்தும் நான் பாதுகாவல் கோருகிறேன். 

அல்லாஹ்வே! நீயே! பொருத்தத்திற்குரியவன். நீ பொருந்திக் கொள்ளும்வரை உன் கோபத்திலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன். 

அல்லாஹ்வே! பாவத்திலிருந்து தப்பிப்பதும், நன்மை செய்ய ஆற்றல் பெறுவதும் உனது அருள் இல்லாமல் முடியாது.

தாயிஃப் நகரில்.....

நபித்துவத்தின் பத்தாவது ஆண்டு நபி (ஸல்) மக்காவிலிருந்து 60 மைல் தொலைவிலுள்ள தாம்ஃபிற்குச் சென்றார்கள். (இது கி.பி. 619 மே மாதம் இறுதி அல்லது ஜுன் மாத ஆரம்பத்தில் ஆகும்). நபி (ஸல்) அவர்கள் தங்களது அடிமை ஜைது இப்னு ஹாஸாவுடன் கால்நடையாகச் சென்றார்கள். திரும்பும்போதும் கால்நடையாகவே திரும்பினார்கள். வழியிலிருந்த ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் இஸ்லாமிய அழைப்பு கொடுக்கப்பட்டும், அக்கூட்டத்தால் எவரும் இஸ்லாமிய அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.

قال عبد ياليل بن عمرو: إنه سيمرط (أي سيمزق) ثياب الكعبة إن كان الله أرسلك.

أما مسعود فقال: أما وجد الله أحدًا غيرك.

وأما الثالث حبيب فقد قال -وهو يحاول أن يصطنع الذكاء مع شدة غبائه- قال: والله لا أكلمك أبدًا، إن كنت رسولاً لأنت أعظم خطرًا من أن أرد عليك الكلام، ولئن كنت تكذب على الله ما ينبغي أن أكلمك.

وقال لهم: "إذ فعلتم ما فعلتم فاكتموا عني

நபி (ஸல்) அவர்கள் தாயிஃபிற்குச் சென்றடைந்தபோது அங்கு வசித்து வந்த ஸகீஃப் கூட்டத்தாரின் தலைவர்களும் அம்ர் இப்னு உமைர் அஸ்ஸகபிஎன்பவனின் பிள்ளைகளுமான 1) அப்து யாலில், 2) மஸ்ஊது, 3) ஹபீப் என்ற மூன்று சகோதரர்களிடம் சென்றார்கள். அவர்களிடம் இஸ்லாமைப் பரப்புவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரினார்கள். ஆனால், அவர்களில் ஒருவன் உன்னை அல்லாஹ் தூதராக அனுப்பியது உண்மையென்றால் நான் கஅபாவின் திரைகளைக் கிழித்து விடுவேன்என்று கூறினான். மற்றொருவன் அல்லாஹ்வுக்கு உன்னைத் தவிர நபியாக அனுப்ப வேறொருவர் கிடைக்கவில்லையா?” என்று கேட்டான்.

மூன்றாமவன், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உன்னிடம் ஒருபோதும் பேச மாட்டேன். நீ உண்மையில் தூதராக இருந்தால் உனது பேச்சை மறுப்பது எனக்கு மிக ஆபத்தானதாகும். நீ அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவராக இருந்தால் உன்னிடம் பேசுவதே எனக்குத் தகுதியல்லஎன்று கூறினான். அப்போது நபி (ஸல்) இதுதான் உங்கள் முடிவாக இருந்தால் நமது இந்த சந்திப்பை (மக்களுக்கு வெளிப்படுத்தாமல்) மறைத்துவிடுங்கள்என்று கூறினார்கள்.

நபி (ஸல்) தாயிஃபில் பத்து நாட்கள் தங்கி அங்குள்ள மற்ற எல்லா தலைவர்கள், பிரமுகர்களைச் சந்தித்து இஸ்லாமிய அழைப்பு விடுத்தார்கள். ஆனால், அவர்களில் எவரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாததுடன் தங்களது ஊரைவிட்டு உடனடியாக வெளியேறும்படியும் கூறி, நபி (ஸல்) அவர்கள் மீது வம்பர்களை ஏவிவிட்டனர். நபி (ஸல்) அவர்கள் ஊரைவிட்டு வெளியே செல்ல முயன்றபோது அங்குள்ள வம்பர்களும் அடிமைகளும் ஒன்றுகூடி அவர்களை ஏசிப்பேசினர்.

இறுதியில் மக்களின் கூட்டம் அதிகமாகி அவர்கள் அனைவரும் இரு அணிகளாக நின்று கொண்டு, நபி (ஸல்) அவர்களின் மீது கற்களை எறிந்தனர். அதிகமான கற்களை நபி (ஸல்) அவர்களின் குதிகால் நரம்பை நோக்கி எறியவே அவர்களது பாதணிகளும் இரத்தக் கறைகளாயின. நபி (ஸல்) அவர்களுடன் இருந்த அவர்களது அடிமை ஜைது இப்னு ஹாஸா நபியவர்களைக் காப்பதற்காக தங்களையே கேடயமாக்கிக் கொண்டார்கள். இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ( நூல்: ஸீரத் இப்னு ஹிஷாம் )

யூனுஸ் (அலை) அவர்கள் விருப்பமும்... அல்லாஹ்வின் முடிவும்...

وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ (139) إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ (140) فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِينَ (141) فَالْتَقَمَهُ الْحُوتُ وَهُوَ مُلِيمٌ (142) فَلَوْلَا أَنَّهُ كَانَ مِنَ الْمُسَبِّحِينَ (143) لَلَبِثَ فِي بَطْنِهِ إِلَى يَوْمِ يُبْعَثُونَ (144) فَنَبَذْنَاهُ بِالْعَرَاءِ وَهُوَ سَقِيمٌ (145) وَأَنْبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِنْ يَقْطِينٍ (146) وَأَرْسَلْنَاهُ إِلَى مِائَةِ أَلْفٍ أَوْ يَزِيدُونَ (147)

யூனுஸ் (அலை) அவர்கள் ஒரு இலட்சம் அல்லது அதைவிட கூடுதல் எண்ணிக்கை  கொண்ட ஒரு சமூகத்திற்கு  நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். யூனுஸ்  (அலை) அவர்கள் சிலை வணக்கம் கூடாது அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று போதித்தார். அந்த மக்கள் நபியின் போதனையை ஏற்கவில்லை. எனவே, உங்களுக்கு அழிவு வரும் என்று எச்சரித்து விட்டு ஊரை விட்டும் யூனுஸ்  (அலை) அவர்கள் வெளியேறிவிட்டார்கள். 

ஒரு நபி தனது ஊரை விட்டும் வெளியேறுவதென்றால் அல்லாஹ்வின் கட்டளை வர வேண்டும். யூனுஸ்  (அலை) அவர்கள் தனது சுய முடிவில் சென்றார்கள்.

அதே நேரத்தில் யூனுஸ்  (அலை) அவர்களின் சமூகத்தினர் வேதனையின் அடையாளத்தைக் கண்டு அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டனர். அவர்களின் ஈமானும் தவ்பாவும் அவர்களை அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து பாதுகாத்தது.

அதே போன்று ஊரை விட்டு வெளியேறிய யூனுஸ் அலை அவர்கள் ஒரு துறைமுகத்திற்கு வந்தார்கள். 

ஒரு கப்பல் இருந்தது. அதில் மக்கள் நிறைந்திருந்தனர். இவர் போய் அந்தக் கப்பலில் ஏறிக் கொண்டார். கப்பல் கடலில் பயணித்தது. இடை நடுவில் கப்பல் அலை மோத ஆரம்பித்தது. இவ்வாறு ஆபத்து வந்ததால் கப்பலில் உள்ளவர்களின் பெயர்களை எழுதி சீட்டுக் குலுக்கி யாருடைய பெயர் வருகின்றதோ அவரைக் கடலில் குதிக்கச் சொல்வது அந்த காலத்தில் வாழ்ந்த அந்த மக்களின் மரபாகும். இந்த அடிப்படையில் சீட்டுக் குலுக்கிய போது யூனுஸ் நபியின் பெயர்தான் வந்தது. அவர் கடலில் குதித்தார்.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. மிகப் பிரம்மாண்டமான ஒரு மீன் யூனுஸ் நபியை விழுங்கிக் கொண்டது. யூனுஸ் நபி மீனின் வயிற்றுக்குள் சென்றார். தான் சோதிக்கப்படுவதை அறிந்தும் கொண்டார். அவர் மீன் வயிற்றில் இருந்து கொண்டு,

فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ (87)

உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. நீ தூய்மையானவன். நான் அநீதமிளைத்தோரில் ஆகிவிட்டேன்! (திருக்குர்ஆன் 21:87) என்று பிரார்த்தித்தார்.

அல்லாஹ் அவரது பிரார்த்தனையை அங்கீகரித்தான். மீன் அவரை கரையில் துப்பியது. அவர் கடற்கரையில் பலவீனமான நிலையில் இருக்கும் போது அல்லாஹ் சுரைக்காய் கொடியை வளரச் செய்து அவருக்கு நிழல் கொடுத்தான்.

யூனுஸ் (அலை) அவர்களும் சோதனையில் இருந்து மீண்டு கொண்டார்.

யூனுஸ் (அலை) சம்பந்தப்பட்ட இந்த சம்பவம் திருக்குர்ஆனில் 37:139- 148, 68:48-50, 21:87-88 ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ளது.

ஆட்சி மாற்றத்திற்காக நாம் செய்த துஆக்களின் நிலை?

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஆட்சி மாற்றத்திற்காக நாம் துஆ செய்திருக்கின்றோமே? ஹாஜிகள் கஅபாவில் துஆ செய்தார்களே? அந்த துஆக்களின் நிலை என்ன? என்று நம் மனதில் கேள்வி எழுந்தால் அதற்கான பதிலை இரண்டு வகையில் நாம் பெறலாம்.

ஒன்று நாம் துஆச் செய்தோம். ஆனால், அந்த துஆவில் நமக்கு உறுதி இல்லை. ஏனெனில், நம்மில் பெரும்பாலானோர் அவர்கள் EVM மில் மோசடி செய்து வெற்றி பெற்று விடுவார்கள் என்று புலம்பிக் கொண்டு இருந்தோம்.

துஆவின் மீது நமக்கு நம்பிக்கை குறைந்து போனதும் ஒரு காரணம் எனலாம்.

 قال رسول الله "صلى الله عليه وسلم": (ادْعُوا الله وَأَنْتُمْ مُوقِنُونَ بِالْإِجَابَةِ، وَاعْلَمُوا أَنَّ اللهَ لَا يَسْتَجِيبُ دُعَاءً مِنْ قَلْبٍ غَافِلٍ لَاهٍ)، رواه الترمذي.

"அல்லாஹ் பதில் தருவான் என்ற உறுதியுடன் அவனிடம் துஆ செய்யுங்கள். கவனக்குறைவான மறதியான இதயத்திலிருந்து வெளிவரக்கூடிய பிரார்த்தனைக்கு அல்லாஹ் பதில் அளிக்க மாட்டான்" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

இல்லை,  இல்லை நாம் உறுதியாக நம்பியே துஆச் செய்துள்ளோம் என்றால் அல்லாஹ் அந்த நம்பிக்கையை ஒரு போதும் வீணாக்க மாட்டான்.

தற்போது அல்ல விரைவில் ஏதேனும் மாற்றம் நிகழழாம். அல்லது மறுமையில் அதற்கான பிரதிபலன் கிடைக்கும். அல்லது நமது பாவங்கள் மன்னிக்கப்படலாம். அல்லது நமக்கு வர இருக்கும் ஆபத்து தடுக்கப்படலாம்.

ما منْ رجلٌ يدعو اللهَ بدعاءٍ إلا استُجيبَ لهُ, فإما أنْ يُعجِّل لهُ في الدنيا، وإما أن يدِّخرَ لهُ في الآخرةِ، وإما أنْ يكفِّر عنهُ ذنوبَهُ بقدرِ ما دعا ما لمْ يدعُ بإثمٍ أو قطيعةِ رحمٍ، أو يستعجلَ، قالوا يا رسولَ اللهِ،وكيف يستعجلُ ؟ قال : يقول دعوتُ ربي فما استجابَ لي

الراوي: أبو هريرة المحدث: الترمذي - المصدر: سنن الترمذي -الصفحة أو الرقم: 3677

அடியான் கேட்கின்ற அனைத்து துஆக்களுக்கும் அகீகாரம் உண்டு. அடியான் துஆ கேட்கும் போது மூன்றில் ஒரு விஷயம் நடைபெறும். 1,அவன் கேட்டது உலகத்திலேயே கிடைத்து விடும்.அல்லது 2, மறுமையில் அதற்கான பிரதிபலன் கிடைக்கும்.அல்லது 3, அவன் கேட்ட துஆவின் அளவு அவன் பாவங்கள் மன்னிக்கப்படும்.

துஆவில் மூன்று விஷயங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். 1, பாவமான காரியம் குறித்து கேட்காமல் இருக்க வேண்டும். 2, துஆ கேட்பவன் உறவை முறிக்காதவனாக இருக்க வேண்டும். 3, அவசரம் காட்டாமல் இருக்க வேண்டும். {திர்மிதி}

இன்னொரு ஹதீஸில் அவனுக்கு வர இருக்கும் ஆபத்தை அல்லாஹ் நீக்குவதாக வந்திருக்கிறது.

 

يقول النبي "صلى الله عليه وسلم": (ما من مسلم يدعو الله عز وجل بدعوة ليس فيها إثم ولا قطيعة رحم إلا أعطاه الله بها إحدى ثلاث خصال: إما أن يعجل له دعوته، وإما أن يدخرها له في الآخرة، وإما أن يصرف عنه من السوء مثلها. قالوا: إذن نكثر، قال: الله أكثر) رواه أحمد

நாம் கேட்கும் எந்த துஆவும் வீணாகுவதில்லை. ஒழுங்காக முறைப்படி கேட்கப்பட்ட எந்த துஆவுக்கும் பலன் இல்லாமல் இல்லை. கபூலாகும் விதங்கள் மாறலாமே தவிர துஆக்கள் வீணாகாது. எனவே கேட்பதை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். கிடைக்க வில்லையே என்று கவலைப்படவும் கூடாது. சீக்கிரம் கபூலாக வேண்டும் என்று அவசரப்படவும் கூடாது.

ஏனெனில், மூஸா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னை அழிக்குமாறு துஆச் செய்து விட்டு நாற்பதாண்டு காலம் காத்திருந்தார்கள். அதன் பின்னரே ஃபிர்அவ்னை அல்லாஹ் அழித்தொழித்தான்.

ஒரு வேளை அல்லாஹ் ஃபிர்அவ்னுக்கும், ஃபிர்அவ்னின் கூட்டத்தாருக்குமான முடிவை இந்த கூட்டத்திற்கும் இறுதி முடிவாக வைத்திருக்கலாம்.

எனவே, அல்லாஹ்வின் முடிவுகளை நம்புவோம்! அல்லாஹ் வழங்கும் முடிவுகளையே பொருந்திக் கொள்வோம்!!

அல்லாஹ்விடம் நாம் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருவோம்! அல்லாஹ் நமக்கு போதுமானவன்!

رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

 எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக!

எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக!

எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக!

எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” ( அல்குர்ஆன்: 2: 286 )