Thursday, 12 September 2024

மாநபி (ஸல்) அவர்களை சந்திக்க ஆவல் கொள்வோம்!!

மாநபி (ஸல்) அவர்களை சந்திக்க ஆவல் கொள்வோம்!!


அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த உலகத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட சங்கையான மாதத்தில் நாம் அமைந்திருக்கின்றோம்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் குறித்து நாம் பேசிக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கின்றோம்.

நாம் நமது நபி முஹம்மத் (ஸல்)  அவர்களை எவ்வாறு புரிந்து வைத்துள்ளோம்.

நம் வாழ்வில் நமது நபி (ஸல்) அவர்களுக்கு எவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொடுத்து வைத்துள்ளோம் என்பதை எல்லாம் நாம் இந்த மாதத்தின் ஊடாக சீர் தூக்கிப் பார்க்க கடமை பட்டுள்ளோம்.

அல்லாஹ்வே நமக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல் அவர்களை நேசிக்குமாறு நமக்கு கட்டளை இட்டுள்ளான்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை நமது உயிரினும் மேலாக மதிக்குமாறு ஆணை பிறப்பித்துள்ளான்‌.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல் அவர்களின் வாழ்வியலையே முற்றிலுமாக பின்பற்றவும் வலியுறுத்தி கூறி இருக்கின்றான்.

ஆகவே, நாம் முழு மனதோடு மாநபி ஸல் அவர்களின் மீது நேசத்தை வெளிப்படுத்த வேண்டும். இதயத்தின் ஆழத்தில் இருந்து நாம் மாநபி ஸல் அவர்களை மதிக்க வேண்டும். உயிர்ப்புடன் நமது வாழ்வியலை மாநபி ஸல் அவர்களின் வாழ்வியலோடு இணைத்துக் கொள்ள வேண்டும். 

எல்லாவற்றுக்கும் மேலாக மாநபி ஸல் அவர்களை சந்திக்க ஆவல் கொள்ள வேண்டும்.

ஏனெனில், நமக்காக, நம்மை சந்திப்பதற்காக மாநபி (ஸல்) அவர்கள் காத்திருப்பதாக தமது ஆவலை 1400 ஆண்டுகளுக்கும் முன்பாக தமது தோழர்களிடம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

عن أَبِي هُرَيْرَةَ رضي الله عنه : " أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى الْمَقْبُرَةَ ، فَقَالَ : ( السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ ، وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لَاحِقُونَ ، وَدِدْتُ أَنَّا قَدْ رَأَيْنَا إِخْوَانَنَا .

قَالُوا : أَوَلَسْنَا إِخْوَانَكَ يَا رَسُولَ اللهِ ؟

قَالَ : أَنْتُمْ أَصْحَابِي ، وَإِخْوَانُنَا الَّذِينَ

ஒரு நாள் உஹதில் மரணமடைந்த ஷஹீத்களை தரிசிக்கச் சென்ற போது "மண்ணறை வாசிகளே! உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டுமாக! அல்லாஹ் நாடும் ஒரு நாளில் நிச்சயமாக உங்களை சந்திக்க இருக்கிறோம்" என்று பெருமானார் (ஸல்) கூறி விட்டு, "நம் சகோதரர்களை சந்திக்க நான் ஆவல் கொண்டவனாக இருக்கின்றேன்" என்று கூறினார்கள்.

 

இறைத்தூதரே! நாங்கள் தங்களது சகோதரர்கள் இல்லையா…?’ என்று தோழர்கள் கேட்கவும், 

قوم يكونون من بعدكم, يؤمنون بي ولم يروني.

இல்லை, நீங்கள் எனது தோழர்கள். எனது சகோதரர்கள் எனக்குப் பின்னால் வருபவர்கள். என்னைப் பார்க்காமலே என் மீது ஈமான் கொண்டவர்கள்’ ( நூல்: அஹ்மத்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு முன்பே ("அல்கவ்ஸர்" எனும்) அத்தடாகத்தினருகில் உங்களுக்காகக் காத்திருப்பேன். அதன் இரு ஓரங்களுக்கு இடையேயுள்ள தூரம், (யமனிலுள்ள) "ஸன்ஆ"வுக்கும் "அய்லா"வுக்கும் இடையே உள்ள தூரத்தைப் போன்றதாகும். அதிலுள்ள கோப்பைகள் (எண்ணிக்கையில்) விண்மீன்களைப் போன்றவையாகும். இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்: புகாரி )

அதற்கு முன்பாக நமக்கு மாநபி (ஸல்) அவர்களை ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு நமக்கு வழங்கப்படும். அது நமது மரணத்திற்கு பிறகான நமது மண்ணறை வாழ்க்கையில் நடைபெறும்.

அந்த சந்திப்பு நமக்கு சரியாக அமையும் பட்சத்தில் நாம் நமது நபி (ஸல்) அவர்களை நாளை மறுமையில் சந்திப்போம்.

فيأتيه ملكان ، فيجلسانه ، فيقولان له : من ربك ؟ فيقول ربي الله ، فيقولان له : ما دينك ؟ فيقول : ديني الإسلام ، فيقولان له : ما هذا الرجل الذي بعث فيكم ؟ فيقول : هو رسول الله ، فيقولان له : ما علمك ؟ فيقول : قرأت كتاب الله فآمنت به وصدقت ،

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஓர் அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, ‘இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என்று முஹம்மத் நபி (ஸல்) குறித்துக் கேட்பர். 

அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தால் இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்எனக் கூறுவான். அவனிடம் (நீ கெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்திலுள்ள உன்னுடைய இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான்…’அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும்என்றும் இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இதன் அறிவிப்பாளரான கதாதா குறிப்பிடுகிறார்

ويأتيه ملكان فيجلسانه ، فيقولان له : من ربك ؟ فيقول : هاه هاه ، لا أدري ، فيقولان له : ما هذا الرجل الذي بعث فيكم ، فيقول : هاه هاه ، لا أدري ،

 

நயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால் இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என அவனிடம் கேட்கப்படும்போது எனக்கொன்றும் தெரியாது; மக்கள் சொல்லிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்எனக் கூறுவான். உடனே நீ அறிந்திருக்கவுமில்லை: (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லைஎன்று கூறப்படும். மேலும் இரும்பு சுத்திகளால் அவன் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான்.அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி). ( நூல்: புகாரி )

இந்த நபிமொழிக்கு விளக்கம் தரும் அறிஞர்கள் "பெருமானார் ஸல் அவர்களின் முகம் காட்டப்பட்டு" இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என அவனிடம் கேட்கப்படும் என்று கூறுகிறார்கள்.

சரியாக அமையாத பட்சத்தில் (அல்லாஹ் பாதுகாத்து அருள்வானாக!) நமது நபி ஸல் அவர்களே நாளை மறுமையில் அவர்களின் அருகே செல்ல விடாமல் நம்மை விரட்டி விடுவார்கள்.

وعند البخاري في صحيحه ( 2194 ) ومسلم (4257) عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لأَذُودَنَّ رِجَالا عَنْ حَوْضِي كَمَا تُذَادُ الْغَرِيبَةُ مِنْ الإِبِلِ عَنْ الْحَوْضِ "

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ("அல்கவ்ஸர்" எனும்) எனது தடாகத்தைவிட்டு, ஒட்டகங்களிடமிருந்து அந்நிய ஒட்டகங்களை விரட்டுவதைப் போன்று சில மனிதர்களை விரட்டுவேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாக வந்துள்ளது. ( நூல்: முஸ்லிம் )

மண்ணறையின் சந்திப்பும் மறுமையின் சந்திப்பும் நமக்கு சாதகமாக அமைய வேண்டுமானால் நமது நபி ஸல் அவர்களை நாம் நேசிப்பதோடு நின்று கொள்ளாமல், நமது நபி ஸல் அவர்களின் வாழ்க்கையை நமது வாழ்க்கையின் முன்மாதிரியாக அமைத்துக் கொள்வதோடு திருப்தி அடைந்து கொள்ளாமல் "நாள் தோறும் நாம் நபி ஸல் அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் கொள்ள" வேண்டும். அதற்காக அல்லாஹ் ரப்புல் ஆலமீனிடம் இரு கரமேந்தி துஆவும் செய்ய வேண்டும்.

அந்த வகையில் நபி (ஸல்) அவர்களுடனான அத்தனை அம்சங்களிலும் முன்மாதிரியாக திகழ்ந்த நபித்தோழர்கள் "பெருமானார் (ஸல்) அவர்களை சந்திக்க எந்தளவு ஆவல் கொண்டிருந்தார்கள் என்பதை வரலாற்றின் ஊடாக நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

நாமும் மாநபி (ஸல்) அவர்களை சந்திக்க ஆவல் கொள்ள வேண்டும் என்பதை கவனப்படுத்த நபித்தோழர்களின் வாழ்வில் இருந்து ஓரிரு நிகழ்வுகளை இதோ உங்கள் செவிகளுக்கு தருகின்றேன்.

மாநபி {ஸல்} அவர்களைக் காணாமல் ஊன், உறக்கம் வேண்டாம்!

وقام أبو بكر يوما في الناس، يدعو إلى الله وإلى رسوله، وثار المشركون على أبي بكر فوطىء، وضرب ضربا شديدا، وجعل عتبة بن ربيعة يضربه بنعلين مخصوفتين يحرفهما بوجهه حتى ما يعرف وجهه من أنفه.

وحملت بنو تيم أبا بكر، وهم لا يشكّون في موته، وتكلّم آخر النهار، فقال: ما فعل رسول الله صلى الله عليه وسلم فمسّوا منه بألسنتهم وعذلوه، ثم قاموا وقالوا لأمه أم الخير: انظري أن تطعميه شيئا، أو تسقيه إياه، فلمّا خلت به ألحّت عليه، وجعل يقول: ما فعل رسول الله صلى الله عليه وسلم؟ فقالت: والله مالي علم بصاحبك.

فقال: اذهبي إلى أم جميل بنت الخطاب، فخرجت حتى أتت أمّ جميل، فمضت معها، ودنت منه أمّ جميل وهي ممن أسلم فسألها عن رسول الله صلى الله عليه وسلم قالت: هذه أمّك تسمع، قال: فلا شيء عليك منها، قالت: سالم صالح، قال: فإنّ لله عليّ ألا أذوق طعاما ولا أشرب شرابا أو آتي رسول الله صلى الله عليه وسلم، فأمهلتا، حتى إذا هدأت الرّجل، وسكن الناس، خرجتا به يتّكىء عليهما، حتى أدخلتاه،

 ورقّ له رسول الله صلى الله عليه وسلم رقة شديدة فقال أبو بكر: بأبي وأمّي يا رسول الله ليس بي بأس إلا ما نال مني الفاسق من وجهي، وهذه أمّي برة بولدها، وأنت مبارك فادعها إلى الله، وادع لها عسى أن يستنقذها بك من النار، فدعا رسول الله صلى الله عليه وسلم لأمّه، ودعاها إلى الله، فأسلمت

ஒருமுறை அபூபக்ர் (ரழி) கல் நெஞ்சக்காரர்களால் கடுமையாக மிதிக்கப்பட்டார்கள்; வன்மையாக அடிக்கப்பட்டார்கள். அந்நேரத்தில் அங்கு வந்த உத்பா, ஆபூபக்ரை செருப்பால் அடித்தது மட்டுமல்ல, அவர்களது முகத்தை செருப்பால் தேய்க்கவும் செய்தான். அவர்களது வயிற்றின் மீது ஏறி மிதித்தான். அவர்களது மூக்கு சிதைக்கப்பட்டதால் மூக்கு அடையாளம் தெரியாத அளவுக்கு ஆகிவிட்டது. தைம்கிளையினர் அன்னாரை ஒரு துணியில் சுமந்து சென்று அவர்களது வீட்டில் வைத்தார்கள். அனைவரும் அவர் இறந்துவிட்டார் என்றே எண்ணி இருந்தார்கள்.

அன்று பகலின் இறுதியில் அவர்கள் பேசத் தொடங்கியபோது அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கிறார்கள்என்றுதான் கேட்டார்கள். இதைக் கேட்ட தைம் கிளையினர் அவரைக் குறை கூறிவிட்டு அன்னாரது தாயார் உம்முல் கைடம் இவருக்கு உணவளியுங்கள்; ஏதாவது குடிக்கக் கொடுங்கள்; அவரை கவனித்துக் கொள்ளுங்கள்என்று கூறிவிட்டு எழுந்துச் சென்றனர்.

 

அன்னாரது தாய் அனைவரும் சென்றபின் உணவு சாப்பிட அவரை வற்புறுத்திக் கொண்டே இருந்தார். ஆனால் அபூபக்ரோ அல்லாஹ்வின் தூதர் என்னவானார்கள்?” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அன்னாரது தாய் உனது தோழரைப் பற்றி அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஒன்றுமே எனக்குத் தெரியாதுஎன்று கூறினார். நீங்கள் கத்தாபின் மகள் உம்மு ஜமீல் (உமரின் சகோதரி) இடம் சென்று நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரித்து வாருங்கள்என்று அபூபக்ர் (ரழி) கூறினார்கள்.

தாயார் உம்மு ஜமீலிடம் வந்து அபூபக்ர் (ரழி) உன்னிடம் முஹம்மது இப்னு அப்துல்லாஹ்வைப் பற்றி விசாரித்து வர என்னை அனுப்பினார்என்று கூற, அவர் எனக்கு அபூபக்ரையும் தெரியாது, முஹம்மது இப்னு அப்துல்லாஹ்வையும் தெரியாது. நீங்கள் விரும்பினால் உங்களுடன் உங்கள் மகனைப் பார்க்க நான் வருகிறேன்என்று கூறினார். அவர் சரிஎனக் கூறவே, உம்மு ஜமீல் அவருடன் அபூபக்ரைப் பார்க்கப் புறப்பட்டார்.

உம்மு ஜமீல் அபூபக்ரை மயக்கமுற்று மரணித்தவரைப் போன்று பார்த்தவுடன் கூச்சலிட்டு அல்லாஹ்வின் மீது சத்தியமாக! கல் நெஞ்சம் கொண்ட இறைநிராகரிப்போரும் பாவிகளும் உங்களை இவ்வாறு செய்துவிட்டார்கள். அல்லாஹ் உங்களுக்காக அவர்களிடம் பழிவாங்க வேண்டுமென நான் ஆதரவு வைக்கிறேன்என்று கூறினார்.

அவரிடம் அபூபக்ர் (ரழி), “அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கிறார்கள்என்று கேட்டதற்கு இதோ உமது தாய் (நமது பேச்சை) கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்என்று கூறவே அவரைப் பற்றி பரவாயில்லை என்று கூறியவுடன் நபி (ஸல்) நல்ல விதமாக பாதுகாப்புடன் இருக்கிறார்கள்என்று உம்மு ஜமீல் கூறினார். அவர்கள் எங்கிருக்கிறார்என்று அபூபக்ர் (ரழி) கேட்கவே அவர்கள் தாருல் அர்கமில் இருக்கிறார்கள்என்றவுடன் அல்லாஹ்வின் தூதரைச் சென்று பார்க்காமல் நான் உண்ணவுமாட்டேன், குடிக்கவுமாட்டேன். இது அல்லாஹ்விற்காக என்மீது கடமையாகும்என்று நேர்ச்சை செய்து கொண்டார்கள்.

அன்னாரது தாயாரும் உம்மு ஜமீலும் ஆள் நடமாட்டங்கள் குறைந்து மக்களின் ஆரவாரங்கள் அமைதியாகும் வரை சற்று தாமதித்து நபி (ஸல்) அவர்களிடம் அவரை அழைத்துச் சென்றார்கள். அபூபக்ர் (ரழி) நடக்க இயலாமல் அவர்கள் இருவர் மீதும் சாய்ந்து நடந்து சென்றார்கள். தாருல் அர்க்கமை அடைந்தனர் மூவரும். அபூபக்ர் (ரலி) அவர்களின் அருகே வந்த பெருமானார் {ஸல்} அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை மென்மையாக வருடி விட்டார்கள்.

பெருமானாரின் ஸ்பரிசத்தால் புத்துணர்ச்சி அடைந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் “என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பண்மாகட்டும்! அல்லாஹ்வின் தூதரே! பாவி ஒருவன் என் முகத்தில் ஏதோ செய்து விட்டான் என்பதற்காக நான் துவண்டு போகப்போவதில்லை! இதோ! என் தாய் என் நலனில் அக்கறை கொண்டவர்கள்! முபாரக்கான நீங்கள் என் தாயாருக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுங்கள்! அவர்களின் ஹிதாயத்திற்காக துஆச் செய்யுங்கள்! உங்களின் துஆ எனது தாயாரை நிரந்தர நரகின் வேதனையில் இருந்து கரை சேர்த்து காப்பாற்றி விடும்!” என்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மாநபி {ஸல்} அவர்கள் சத்திய சன்மார்க்கத்தின் பால் அழைப்பு கொடுத்து விட்டு, அவர்களின் ஹிதாயத்திற்காக துஆச் செய்தார்கள். அபூபக்ர் (ரலி) விரும்பியது போன்றே பெருமானார் {ஸல்} அவர்களுடைய துஆவின் பரக்கத்தால் அவர்களின் தாயார் இஸ்லாத்தை தழுவினார்கள். ( நூல்: ஸீரத்துன் நபவிய்யா லி அபில் ஹஸன் அந் நத்வீ (ரஹ்), ஸீரத் இப்னு ஹிஷாம் )

உங்களைக் காண்பேனா ஹபீபே!? உங்களைக் காண வேண்டுமே காத்தமுன் நபியே!?..

جاء رجل من الأنصار إلى الرسول ﷺ فقال: لأنت أحب إلي من نفسي وولدي وأهلي ومالي، ولولا أني آتيك فأراك لظننت أني سأموت، وبكى الأنصاري، فقال له رسول الله ﷺ: ما أبكاك؟ قال: ذكرت أنك ستموت ونموت فترفع مع النبيين ونحن إن دخلنا الجنة كنا دونك، فكيف نراك وأنت فوقنا ونحن تحت؟ حتى في الجنة لوعة لعدم رؤية الحبيب ﷺ ظنها ذلك الصحابي، فلم يخبره النبي ﷺ بشيء، فأنزل الله

على رسوله ﷺ

وَمَن يُطِعِ اللّهَ وَالرَّسُولَ فَأُوْلَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاء وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا ۝

அன்ஸாரித் தோழர்களில் ஒருவர் நபி அவர்களின் சமூகத்திற்கு வருகை தந்து "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் என்னை விட என் மனைவி மக்களை விட, என் குடும்பத்தை விட, என் செல்வத்தை விட எனது நேசத்திற்குரியவர்கள் ஆவீர்கள். எனினும், இந்த உலகில் நான் உங்களை பார்க்க வேண்டும் என்று நினைத்தால் உங்களை வந்து பார்த்து விடுகிறேன். ஆனால், ஒரு நாள் நான் மரணமடைந்து விடுவேன். என்று சொல்லி விட்டு அழுதார்கள்.

அப்போது, நபி அவர்கள் "எதற்காக அழுகின்றீர்? என்று வினவிய போது, நீங்களும் நாங்களும் ஒரு நாள் மரணித்து போவோம். அதன் பிறகு மறுமை நாளில் நீங்கள் சுவனத்தில் நபிமார்களுடன் உயர்ந்த நிலையில் இருப்பீர்கள். ஒரு வேளை நாங்கள் சுவனம் வந்தால் எப்படி உங்களை பார்ப்போம்? நீங்களோ உயர்ந்த அந்தஸ்தில் இருப்பீர்கள்!. நாங்கள் சுவனத்தில் சாதாரண அந்தஸ்தில் இருப்போம்! நீங்கள் அருகில் இல்லாத அந்த நிலையை எண்ணி அழுகிறேன்" என்று கூறினார். அப்போது தான் அல்லாஹ் "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த் தியாகிகளுடனும் நல்லோருடனும் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்". ( அல்குர்ஆன்:4: 69.) என்ற இறைவசனத்தை இறக்கியருளினான். ( நூல்: தஃப்ஸீர் குர்துபீ )

தனக்கு இழப்பு ஏற்பட்ட போதும்... 

 

جاءت أم سعد بن معاذ، وهي كبشة بنت رافع ـ رضي الله عنها ـ تعدو نحو رسول الله ـ صلى الله عليه وسلم ـ وقد وقف على فرسه، وسعد بن معاذ آخذ بعنان فرسه، فقال سعد: " يا رسول الله! أمّي!، فقال: مرحبا بها، فدنت حتى تأملت رسول الله ـ صلى الله عليه وسلم ـ وقالت: أما إذ رأيتُك سالما فقد أشوت (هانت) المصيبة، فعزّاها رسول الله ـ صلى الله عليه وسلم ـ بعمرو بن معاذ ابنها، ثم قال: ( يا أمّ سعد، أبشري وبشّري أهليهم: أنّ قتلاهم ترافقوا في الجنة جميعا، وقد شفّعوا في أهليهم، قالت: رضينا يا رسول الله، ومن يبكي عليهم بعد هذا؟، ثم قالت: يا رسول الله ادع لمن خلّفوا فقال: اللهم أذهب حزن قلوبهم، واجبر مصيبتهم، وأحسن الخلف على من خُلّفوا ) .

உஹது யுத்தம் நடைபெற்று முடிந்து நபி ஸல் அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட நபித்தோழர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிக் கொண்டு குதிரையின் மீது அமர்ந்து வந்து கொண்டிருந்தார்கள்.

குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்கள் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது, அங்கே ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் தாயார் கப்ஷா பிந்த் ராஃபிஉ (ரலி) அவர்கள் வந்தார்கள்.

இதைக் கண்ட ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்கள் நபி ஸல் அவர்களிடம் தமது தாயார் வந்திருப்பதாக கூறினார்கள்.

அப்போது, அவர்களை நோக்கி திரும்பி "உங்கள் வருகை நல்வரவாகட்டும்! என்று வர வேற்றார்கள். பிறகு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து போனார்கள் நபி ஸல் அவர்கள்.

அப்போது, அருகில் வந்து நின்ற கப்ஷா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! இதோ! உங்களை நான் பார்த்து விட்டேன். உஹது யுத்த களத்தில் இருந்து உங்களைப் பற்றி ஏதேதோ செய்திகள் சொல்லப்பட்டு செய்வதறியாது துடித்துப் போயிருந்தேன்! இதோ! உங்களை கண்டு விட்டேன்.  இது போதும் என் வாழ்வில் எனக்கேற்படும் எந்த துன்பமும் ஒன்றுமே இல்லை!" என்று கூறினார்கள்.

அப்போது நபி ஸல் அவர்கள் உஹதில் ஷஹீதான அவர்களின் இன்னொரு மகனான அம்ர் இப்னு மஆத் (ரலி) அவர்களுக்காக இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்கள்.

பின்னர், உம்மு ஸஅதே! என்றழைத்து நீங்களும்,:யுத்த களத்தில் கொல்லப்பட்டு ஷஹீதான குடும்பத்தார்களும் சோபனத்தை பெற்றுக் கொள்ளுங்கள்!; இறை வழியில் கொல்லப்பட்ட ஷஹீதுகள் அனைவரும் சுவனத்தில் நெருக்கமாக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் குடும்பத்தார்களுக்காக அவர்களுக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள்.

அப்போது, உம்மு ஸஅத் (ரலி) அவர்கள் "நாங்கள் பொருத்திக் கொண்டோம்! அல்லாஹ்வின் தூதரே! இவ்வளவு மகத்தான சோபனங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் யார் தான் அழுது கொண்டிருப்பார்கள்?.

அல்லாஹ்வின் தூதரே! இவ்வளவு மகத்தான சோபனம் வழங்கப்பட காரணமாக இருந்த இந்த உஹது யுத்தத்தில் சில காரணங்களால் பங்கேற்க முடியாமல் போனவர்களுக்காக நீங்கள் துஆ செய்யுங்கள்! என்று கேட்டார்கள்.

அதற்கு, நபி ஸல் அவர்கள் "யாஅல்லாஹ்! கவலைகளால் நிரம்பி இருக்கும் அவர்களின் உள்ளங்களில் இருந்து கவலைகளை அகற்றுவாயாக! அவர்களின் காரியங்களில் பொறுமையை வழங்கியருள்வாயாக! எவரெல்லாம் நியாயமான காரணங்களால் இந்த யுத்தத்தில் பங்கேற்க முடியாமல் போனார்களோ அவர்களுக்கு சிறந்த மாற்றத்தை வழங்கியருள்வாயாக!" என்று துஆ செய்தார்கள். ( நூல்: தபகாத் இப்னு ஸஅதுல் குப்ரா )

தொடர்படியாக இழப்புகளை சந்தித்த போதும்...

عن سعد بن أبي وقاص ـ رضي الله عنه ـ قال: ( مرَّ رسول الله ـ صلى الله عليه وسلم ـ بامرأة من بني دينار وقت أصيب زوجها وأخوها وأبوها مع رسول الله ـ صلى الله عليه وسلم ـ في أُحُد، فلما نُعوا لها قالت: ما فعل رسول الله ـ صلى الله عليه وسلم ـ؟، قالوا: خيراً يا أم فلان، هو بحمد الله كما تحبين، قالت: أرونيه حتى أنظر إليه، قال: فأشير لها حتى إذا رأته قالت:كل مصيبة بعدك جَلل (صغيرة) ) .

உஹதில் ஷஹீதாக்கப்பட்ட ஒவ்வொரு நபித்தோழர்களின் குடும்பத்தார்களையும் சந்தித்து நபி ஸல் அவர்கள் இரங்கல் கூறி ஆறுதல் படுத்திக் கொண்டிந்த தருணம் அது.

அந்த தருணத்தில் பனூ தீனார் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது குடும்பத்தில் தமது தந்தை, தமது கணவர், தமது இரு மகன்கள் ஆகியோரை உஹது களத்தில் இழந்திருந்தார். அவர்கள் நால்வரும் ஷஹீதாக்கப்பட்டிருந்தனர்.

அப்போது அந்த பனூ தீனார் கோத்திரத்தைச் சேர்ந்த அந்தப் பெண்மணியிடம் நபித்தோழர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஷஹீதாக்கப்பட்ட விஷயம் குறித்து சொல்லப்பட்டது. மேலும், நபித்தோழர்கள் அது குறித்து ஆறுதலும் இரங்கலும் தெரிவித்தனர். அப்போது அந்தப் பெண்மணி "நபி ஸல் அவர்கள் எப்படி இருக்கின்றார்கள்? என்று கேட்டார்.

அதற்கு, நபித்தோழர்கள் "இன்னாரின் தாயே! அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! நீங்கள் விரும்புவது போன்றே மாநபி ஸல் அவர்கள் நலமுடன் இருக்கின்றார்கள்" என்றனர்.

அதற்கு அந்தப் பெண்மணி "நபி ஸல் அவர்களை நான் இப்போது பார்க்க வேண்டும். பார்த்து நான் அதை உறுதி செய்து கொள்ள வேண்டும்". என்றார்.

 

அப்போது, நபித்தோழர்கள் "ஓரிடத்தில் நபி ஸல் அவர்கள் நிற்பதை சுட்டிக் காட்டினார்கள்".. மாநபி ஸல் அவர்களைக் கண்ட அந்தப் பெண்மணி "உங்களைக் கண்டு கொண்டேன்! உங்களைக் கண்டதன் பின்னர் எனக்கு ஏற்பட்ட அனைத்து சோதனைகளும் சாதாரணமானவையே!" என்று கூறினார். ( நூல்: அஹ்மத் )

அல் இஸ்தீஆப் ஃபீ மஅரிஃபத்தில் அஸ்ஹாப் என்ற நூலிலும், அல் இஸாபா ஃபீ தம்யீஸிஸ் ஸஹாபா என்ற நூலிலும் மிகவும் விரிவான முறையில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது.

அந்தப் பெண்மணியின் பெயர் ஸுமைரா பிந்த் கைஸ் (ரலி) என்றும், அவருடைய இரு மகன்களின் பெயர் ஸுலைம் (ரலி) நுஃமான் (ரலி) என்றும்  அவரது கணவர் பெயர் ஹாரிஸ் இப்னு ஸஅலபா (ரலி) என்றும், தந்தை பெயர் கைஸ் (ரலி) என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பெண்மணியின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இந்தப் பெண்மணியின் முதல் கணவருக்கு பிறந்த இரண்டு ஆண்மக்களில் ளஹ்ஹாக் (ரலி) பத்ரில் ஷஹீதாக்கப்பட்டார்கள். இன்னொரு மகன் நுஃமான் (ரலி) உஹதிலும், இரண்டாம் கணவருக்குப் பிறந்த குத்பா (ரலி) உஹதுக்கு முன் நடைபெற்ற பிஃர மஊனா நிகழ்வில் ஷஹீதாக்கப்பட்டார்கள். இன்னொரு மகன் ஸுலைம் (ரலி) உஹதில் ஷஹீதாக்கப்பட்டார்கள்.

قالت : هما ولداي ، النعمان وسليم ، قد شرفني الله باستشهادهما ، وإنّي لأرجو الله أن يُلحقني بهما في الجنة .

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பத்ர், பிஃர மஊனா, உஹது என்று தொடர்படியாக இழப்புகளை சந்தித்து வந்த ஸுமைரா (ரலி) அவர்கள் தற்போது கணவரையும், தந்தையையும், குறிப்பாக இரு மகன்களையும் இழந்து நிற்கிறாரே என்று அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய போது "அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்கள் இரண்டு பேரையும் ஷஹீதாக்கி எனக்கு சிறப்பு செய்திருக்கின்றான். அவ்விரண்டு பேரின் மூலமாக என்னை அவர்களுடன் சுவனத்தில் சேர்த்து வைப்பான்" என்று கூறினார்கள்.

மாநபி (ஸல்) அவர்களை பார்க்க வேண்டும். அவர்களை சந்திக்க வேண்டும் ஆவல் மட்டுமே அவர்களின் இதயங்களில் நிரம்பி இருந்ததே தவிர அவர்களின் அப்போதைய இழப்புகள் அவர்களுக்கு பெரிதாகவே தெரியவில்லை.

நான் மரணமாவது எனக்கு மகிழ்ச்சியே!

لا تقولي واحزناه، وقولي وا فرحاه  غدا نلقى الأحبة، محمدا وصحبه

பிலால் (ரலி) அவர்கள் மரணத்தின் விளிம்பில் இருந்த போது அவரது மனைவி வா ஹஸனாஹ்! எனக்கேற்பட்ட கவலையே! என்று புலம்பினார். அப்போது பிலால் (ரலி) அவர்கள் "வா ஃபரிஹாஹ்! எனக்கு ஏற்படும் மகிழ்ச்சியே! கூறிவிட்டு, நாளைக்கு நான் எனது நேசர் முஹம்மத் ஸல் அவர்களையும், எனது நேசர்களான என் (நபித்) தோழர்களையும் சந்திக்க இருக்கின்றேன்" என்று கூறினார்கள்.

ஹிஜ்ரீ 18 ம் ஆண்டி டமாஸ்கஸ் நகரில் தமது 57 வயதில் அவர் மரணமடைந்தார். அங்குள்ள பாபுஸ் ஸகீர் எனும் மைய வாடியில் அடக்கம் செய்யப் பட்டார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் நமது உயிரினும் மேலான நமது நபி முஹம்மத் {ஸல்} அவர்களை சந்திக்கும் நற்பேற்றை தந்தருள்வானாக!

உலகில் நாம் வாழும் காலத்தில் மதீனா சென்று மா நபி {ஸல்} அவர்களைச் சந்தித்து ஸலாம் உரைத்து உளமுருகி நன்றி தெரிவித்து விடும் நற்பேற்றினை நம் எல்லோருக்கும் வழங்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!! 

Thursday, 29 August 2024

அல்குர்ஆனை அரணாக்குவோம்!!

 

அல்குர்ஆனை அரணாக்குவோம்!!


இந்த உம்மத்திற்கு இன்றைய நவீன உலகில் பல தேவைகள் இருக்கின்றது.

நிறைவேறாத பல ஆசைகள் இருக்கின்றது. பல இலட்சியங்களும், கனவுகளும் இருக்கின்றது.

அகதிகளாக ஆக்கப்படுவதில் இருந்து இந்த உம்மத்தை காப்பாற்ற பெரும் ஆற்றல் தேவைப்படுகின்றது. பயங்கரவாத முத்திரையை அகற்ற பேராண்மை தேவைப்படுகின்றது.

கொத்து கொத்தாய் கொல்லப்படுவதில் இருந்து இந்த உம்மத்தை காத்திட அரண் தேவைப்படுகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல், அதிகாரத்தின் தேவை இருக்கின்றது.

இத்தனை தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய பயணத்தில் இந்த உம்மத் தொலைந்து கொண்டிருக்கிறது.

யாராவது குரல் கொடுக்க மாட்டார்களா? என்று அபயம் தேடி அலைகின்றது. 

எங்கே அந்த அபயம்? எங்கே அந்த பேராண்மை? எங்கே அந்த அரண்? இந்தக் கேள்வியை முன் வைத்த தேடலில் இந்த சமுதாயம் விடையாக பெற்றது "கல்வியறிவில் முன்னேற்றம்" வேண்டும் என்ற ஒற்றை மந்திரத்தை தான்.

கடந்த நாற்பதாண்டுகளாக இந்த சமூகம் மாங்கு மாங்கு என்று படிக்கின்றது.  உயர் கல்வியில் உழன்று கொண்டிருக்கின்றது. 

அரசியல் அதிகாரம் கையில் கிடைத்து விட்டதா? என்றால் அதை மட்டும் கேட்க கூடாது.

இந்திய அளவில் மத்திய மற்றும் மாநில அளவிலான எந்த உயர்ந்த பொறுப்புகளிலும் முஸ்லிம் சமூகம் இல்லை.

அப்ப நீங்க கேட்கலாம். இந்த உம்மத் படித்துக் கொண்டு தானே இருக்கிறது? கல்வியில் முன்பை விட முன்னேற்றம் அடைந்து கொண்டு தானே இருக்கிறது? உயர் கல்வியில் உயர்ந்து கொண்டு தானே இருக்கிறது.

ஆம்! எல்லாம் உண்மை தான்! ஆனால், அந்த படிப்புக்காக, கல்வியின் முன்னேற்றத்திற்காக இந்த உம்மத் விலை கொடுத்திருப்பது குர்ஆனை.

கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக குர்ஆனின் தொடர்பு குறைந்த அல்லது முற்றிலும் குர்ஆனின் தொடர்பு இல்லாத ஒரு தலைமுறை இன்று இந்த உம்மத்தில் உருவாகி வருகிறது.

குர்ஆனை பின்னுக்குத் தள்ளி விட்டு இந்த சமூகம் முன்னுக்கு வந்து விடுமா என்ன?

குர்ஆனை பின்னுக்குத் தள்ளி விட்ட எந்த சமூகமும் ஒரு காலத்திலும் முன்னுக்கு வராது.

குர்ஆனின் பரக்கத்தை இழந்து விட்டு எந்தக் கல்வியை கற்றாலும் அது பரக்கத் இல்லாத கல்வியே!

ஆகவே தான் இன்றைய கல்வியைக் கொண்டு சமூகமாக எந்த முன்னேற்றத்தையும் இந்த உம்மத் அடையவில்லை.

தாம் செய்யும் தவறுகளை தவறுகளாகவே எண்ணாத, அதை அழகிய செயலாக கருதுகிறவர்களே நஷ்டவாளிகள் என்று அல்லாஹ் எச்சரிக்கின்றான். 

قُلْ هَلْ نُـنَبِّئُكُمْ بِالْاَخْسَرِيْنَ اَعْمَالًا 

“(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.

اَلَّذِيْنَ ضَلَّ سَعْيُهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُوْنَ اَنَّهُمْ يُحْسِنُوْنَ صُنْعًا‏

யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். ( அல்குர்ஆன்: 18: 103, 104 )

மாநபி (ஸல்) அவர்களை இந்த உம்மத்துக்கு பேருபகாரமாக வழங்கியதாக குறிப்பிடும் அல்லாஹ் அவர்களுடைய மகத்தான சேவைகளில் ஒன்றாக அல்குர்ஆனை ஓதிக் காண்பிப்பது, அதைக் கற்றுத் தருவது, அதன் மூலம் வாழ்வை தூய்மை படுத்துவது ஆகியவற்றையே பிரதானமாக குறிப்பிடுகின்றான். 

لَقَدْ مَنَّ اللّٰهُ عَلَى الْمُؤْمِنِيْنَ اِذْ بَعَثَ فِيْهِمْ رَسُوْلًا مِّنْ اَنْفُسِهِمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்; அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்; அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்; மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர். ( அல்குர்ஆன்: 3: 164 )

ஆகவே தான் பெருமானார் (ஸல்) அவர்களால் தாம் வாழும் காலத்திலேயே தம்மைக் கண்ணால் கண்டு தோழமை கொண்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மனித சமூகத்தை "இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்ட" சமூகமாக அமைக்க முடிந்தது.

குர்ஆன் என்பது இந்த உம்மத்தின் அஸ்திவாரம். குர்ஆனை கையில் எடுத்த எல்லா காலத்தின் சமூகமும் வானளாவிய வெற்றிகளை குவித்தது.

குர்ஆனை கை விட்ட சமூகம் இந்த உலகில் கேள்விக்குறியானது. இது தான் வரலாறு.

இந்த உலகில் சாதனை படைத்தவர்கள், இந்த உம்மத்திற்காக வெற்றி வாகை சூடியவர்கள் என அனைவரின் வாழ்விலும் இடம்பெற்ற ஒரே அம்சம் அல்குர்ஆன் தான். 

في طفولته المبكرة، تأخذه لصلاة الفجر لتريه أسوار القسطنطينية، وتقول له في ثقة: "يا محمد، أنت القائد الذي ستفتح هذه الأسوار، اسمك محمد وهو ما ينطبق على قول رسول الله، فأنت ستكون نعم الأمير".

 

ஒருநாள் ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு தமது மகன் முஹம்மதை தமதருகே அமர வைத்து "முஹம்மதே! பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்ன கான்ஸ்டான்டி நோபிளை வெற்றி வாகை சூடும் தளபதி நீயாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் அந்த தளபதியின் பெயர் முஹம்மது என்று கூறியிருக்கின்றார்கள். உனது பெயரும் முஹம்மது" தான். ஆகவே, பெருமானார் (ஸல்) அவர்களின் புனித வாயால் போற்றிப் பாராட்டப்பட்ட அந்த தளபதி நீயாக இருக்க வேண்டும்" என்று கூறினார்கள்.    

وكان الطفل الصغير ينظر في عيني أمه ويردُّ مستغربًا: "كيف يا أمي أفتح هذه المدينة الكبيرة؟!".

அதற்கு, அந்த பாலகர் "தாயே! இவ்வளவு பெரிய கோட்டையை நான் எப்படி வெற்றி வாகை சூட முடியும்?" என்று கேட்டார்.

فترد عليه الأم: "بالقرآن والقوة والسلاح وحب الناس"، وتمسك يديه وترفعهما إلى السماء داعية: "يا رب، يا عظيم، يا مجيب الدعوات، يا قادر على كل شيء، اجعل ابني هذا الأمير الذي يفتح القسطنطينية، اجعل البركة في هاتين اليدين، واجعل نصر المسلمين يأتي من خلالهما".

அப்போது, அந்த தாயார் "மகனே! அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆனைக் கொண்டும், எல்லா வகையான ஆற்றலை கொண்டும், நீ பார்த்து வளரும் உன் மக்களின் நேசத்தை கொண்டும்" நீ வெற்றி பெறுவாய்! என்றார்கள்.

பின்னர், தமது மகனின் இரு கரங்களையும் தமது கரத்தோடு கோர்த்துப் பிடித்து வானை நோக்கி உயர்த்தி "இறைவனே! மகத்தான ஆற்றல் கொண்டவனே! அடியார்களின் அழைப்புகளுக்கு பதிலளிப்பவனே! அனைத்து வஸ்துக்களின் மீதும் ஆதிக்கம் செலுத்துபவனே! பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிய காண்ஸ்டான்டி நோபிளின் வெற்றித் தளபதியாக என் மகனை நீ ஆக்குவாயாக! 

இறைவனே! எனது மகனின் இரு கரங்களிலும் நீ பரக்கத் செய்வாயாக!

இந்த இரு கரங்களின் ஊடாக இந்த உம்மத்தின் நீண்ட கால கனவாகிய காண்ஸ்டான்டி நோபிளின் வெற்றியை வழங்கியருள்வாயாக!" என்று துஆச் செய்தார்கள்.

أمر السلطان محمد الفاتح الجيش الانكشاري برفع السفن القتالية من البسفور 

ورفعها علي جبل غلطه وانزالها إلى مضيق القرن الذهبي .

وهو ما سبب ذهول للرومان . لأنه لم يستطع أي جيش مهما بلغت قوته أن 

يعبر هذا المضيق بسبب سلسلة القرن الذهبي المشهورة التي تغلق المضيق 

ومن ثم يرمونها بالنار الاغريقية وبالتالي عدد السفن لا يهم أمام تلك الأسطورة 

فخر روما ..وقد استطاع محمد الفاتح بفكرته العظيمة التغلب على أمجاد

 روما وتاريخ روما الذي دام 1700 عام .

حتى قال عنه المؤرخ دوكاس وهو أحد الفرسان القسطنطينية

" ما رأينا ولا سمعنا من قبل بمثل هذا الشيء الخارق، مُحمَّد الفاتح

 يُحوِّلُ الأرض إلى بحارٍ وتعبرُ سُفنهُ فوق قمم الجبال بدلًا من الأمواج.

 لقد فاق مُحمَّد الثاني بهذا العمل الإسكندر الأكبر "..

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பையும், தமது தாயின் ஆசையையும் நிறைவேற்றுவதற்காக . கி.பி 1453ல் சுல்தான் முஹம்மத் தலைமையில் சுமார் 2,65,000 பேரைக் கொண்ட இஸ்லாமியப் படை பைஸாந்தியப் பேரரசின் கோட்டை காண்ஸ்டாண்டிநோபிளை நோக்கி புறப்பட்டது.  

அவருக்கு, “கான்ஸ்டான்டினோபிளை வெற்றிகரமாகப் பெற வேண்டுமானால் எல்லா திசைகளிலும் அதனை முற்றுகையிட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்என்பது நிச்சயமாகத் தெரிந்திருந்தது.

ஏற்கனவே, தரைவழி எல்லைகளை முற்றுகையிட்டிருந்தார். ஆனால், 'அல்கர்னுத் தஹபீ' என்ற நெருக்கடி மிகுந்த நீர்வழியை முற்றுகையிட இயலவில்லை. அது மிகவும் சிரமமான பகுதி.

இதற்கு முன்னரும் எந்த இராணுவமும், எவ்வளவு முயற்சித்தும், அந்தப் பகுதியை கடந்ததில்லை. (இந்த இயற்கையான பாதுகாப்புச் சூழல் காரணமாக நம்மை யாராலும் வெல்ல முடியாது என்ற இறுமாப்பைப் பெற்றிருந்தனர் ரோமப் பைசாந்தியர்கள்) அந்த 'அல்கர்னுத் தஹபீ' பகுதியை யாரேனும் நெருங்கினால், ரோமர்கள் பெரும் சங்கிலிகளை பயன்படுத்தி அந்த வளைகுடாவையே மூடி விடுவார்கள், பின்னர் கிரேக்க நெருப்பால் எதிரிப்படையை ரோமர்கள் தாக்குவார்கள். அதனால் எந்தக் கப்பல்களும் அந்தப் பகுதியைக் கடக்க முடியாமல் இருந்தன.

ஆனால் கலீஃபா முஹம்மத் அல்ஃபாத்திஹ் அவர்கள் தனது மகத்தான போரறிவால் திட்டங்களை தீட்டினார். 1700 ஆண்டு காலமாக நீடித்த ரோமின் வரலாற்றையும் அதன் புகழையும் வீழ்த்தினார். 

அல்கர்னுத் தஹபீ என்ற நீர்வழியாக கப்பல்களை செலுத்தாமல் பாஸ்போரஸ்லிருந்து தரைவழியாக போர்க்கப்பல்களை ஓட்டினார். ஆம். 

இந்த செயற்கரிய செயலைச் செய்திட அல்இன்கிஷாரிய்யாஎன்ற முரட்டுப் படையினரைப் பயன்படுத்தினார்.

போர்க் கப்பல்களை கலத்தாஎன்ற மலை வழியாக ஏற்றி, அல்கர்னுத் தஹபீ என்ற நெருக்கடி மிகுந்த நீர்வழிப் பாதையில் இறக்கினார். இப்படி நடக்கும் என்று ரோம பைசாந்தியர்கள் கற்பனையில் கூட நினைக்கவில்லை. அதிர்ந்தனர் ரோமர்கள்.

கான்ஸ்டாண்டிநோபிளின் குதிரைப்படை வீரர்களில் ஒருவரும் வரலாற்றாசிரியருமான டூக்காஸ் என்பவர் கூறுகிறார்: இது போன்ற அற்புதத்தை இதற்கு முன்னர் நாங்கள் கண்டதுமில்லை. கேட்டதுமில்லை. முஹம்மத் அல்ஃபாத்திஹ், தரையைக் கூட கடலாக மாற்றுகிறார்.

நீரலைகளின் மேல் ஓட்டுவதற்கு பதிலாக மலைமுகட்டின் மேல் போர்க் கப்பல்களை ஓட்டுகிறார். இந்த இரண்டாம் முஹம்மத் என்ற முஹம்மத் அல்ஃபாத்திஹ் மகா அலெக்ஸாண்டையும் தன் செயல் திறத்தால் விஞ்சி விட்டார். ( நூல்: தாரீஹுத் தவ்லத்தில் உஸ்மானிய்யாஇந்த ஒரு குறிப்பு மட்டும் கா.மு இல்யாஸ் ரியாஜி ஹழ்ரத் முகநூல் பதிவில்இருந்து...)

மகத்தான இந்த வெற்றியின் பின்னால் அந்த மாவீரனுக்கு உதவியாய் அமைந்தது அல்குர்ஆன் தான்.

காஸாவின் ஓர் குடிசையில் பிறந்த தன் மகனை உலகறியும் அறிஞராக, புகழ்மிக்க வாழ்க்கைக்குச் சொந்தமானவராக மாற்ற வேண்டும் என்ற வேட்கையோடு இரண்டு வயது பாலகனை தூக்கிக் கொண்டு மக்காவிற்கு வருகின்றார்கள்.

இமாம் ஷாபிஈ அவர்களை உருவாக்குவதில்தில் அவரது தாய் எடுத்துக் கொண்ட முயற்சி அளப்பரியது. இமாம் ஷாஃபிஈ அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்பதில் மிகச் சரியான திட்டத்தை வகுத்து வளர்த்தார்கள்.

ஏழு வயதில் முழுக் குர்ஆனையும் மனனம் செய்ய வைத்து ஹாஃபிளாக உருவாக்கினார்கள்.

இமாம் ஷாஃபிஈ அவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்திக் கொண்டு இருந்தார்கள். அதுவும் அம்பெறியும் விளையாட்டில் பெரும் வீரராக உருவெடுத்தார்கள்.

وأقبل على الرمي ، حتى فاق فيه الأقران ، وصار يصيب من عشرة أسهم تسعة

இமாம் ஷாஃபிஈ அவர்களே கூறுவார்கள்: நான் இலக்கை நோக்கி குறி வைத்து பத்து அம்புகளை எய்கிறேன் என்றால் ஒன்பது அம்புகள் மிகச் சரியாக இலக்கை சென்று அடைந்து விடும், ஒரு அம்பு தான் இலக்கில் இருந்து தவறும்”.

மாபெரும் அறிஞராக உருவெடுக்க வேண்டும் என்கிற கனவைச் சுமந்து நிற்கிற அவரது தாய்க்கு இது கவலையைத் தந்தது.

وجعلت أطلب العلم ، فتقول لي : لا تشتغل بهذا ، وأقبل على ما ينفعك ، فجعلت لذتي في العلم

ஒரு நாள் தனது மகனை அமர வைத்து மகனே! இது போன்ற உனக்கு பயன் தராதவைகளில் கவனம் செலுத்தாதே! உனக்கு பயன் அளிக்கும் விஷயத்தில் உன் கவனத்தைத் திருப்பு!இமாம் ஷாஃபிஈ அவர்கள் கூறுவார்கள்: அதன் பின்னர் எனக்கு அறிவு ஞானத்தைப் பெறுவதில் இன்பம் ஏற்பட்டது.

ثم أقبل على العربية والشعر 

فبرع في ذلك وتقدم . ثم حبب إليه الفقه ، فساد أهل زمانه

பின்பு அரபு மொழியிலும், அரபி இலக்கியத்திலும் தேர்ச்சி பெற்றார்கள். பின்னர் ஃபிக்ஹ் கலையில் கவனம் செலுத்தி அதிலும் தேர்ச்சி பெற்று சம காலத்து பெரும் அறிஞர்களுக்கு நிகராக விளங்கினார்கள்.

அப்போது இமாம் ஷாஃபிஈ அவர்களுக்கு என்ன வயதிருக்கும் என்று நினைக்கின்றீர்கள்? வெறும் 9 வயது தான்.

இமாம் ஷாஃபிஈ அவர்கள் இந்த கல்வியறிவைப் பெற்றுக் கொண்ட கால கட்டம் என்பது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று.

ஏனெனில், படிக்கும் ஆர்வம் இருந்த அவரிடத்தில் படிப்புக்குத் தேவையான வசதி வாய்ப்புகள் இல்லை.

ஆசிரியர் நடத்துகின்ற பாடத்தை எழுதி வைத்திட பேப்பர் கூட இல்லை. அவரது தாயாரிடம் முறையிட்ட போது அரசுக் கருவூலத்தில் பயன்படுத்தப்பட்டு வெளியே வீசப்பட்ட பேப்பர்களை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து எழுதப்படாத மற்றொரு பகுதியிலே எழுதச் சொன்னார்களாம் அவர்களது தாயார்.

இப்படியாக ஒருவாராக படிக்க வைத்தார்கள். தங்களின் மகனை மதீனாவில் பிரபல்யமாக இருக்கும் இமாம் மாலிக் அவர்களிடம் ஹதீஸ் கலையைக் கற்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

அதற்காக அடுத்தக் கட்ட முயற்சியாக இமாம் மாலிக் ரஹ் அவர்கள் எழுதிய முஅத்தாவை மனனமிட வைத்தார்கள்.

حدثنا المزني ، سمع الشافعي يقول : حفظت القرآن وأنا ابن سبع سنين ، وحفظت " الموطأ " وأنا ابن عشر 

        فكان أول ما فعله قبل سفره هو حفظ الموطأ، فحفظه في تسع ليالٍ

இமாம் முஸ்னீ (ரஹ்) அவர்கள் இமாம் ஷாஃபிஈ அவர்கள் வாயிலாக அறிவிக்கின்றார்கள்: நான் ஏழு வயதில் குர்ஆனை மனனம் செய்தேன். பத்து வயதாக இருக்கும் போது முஅத்தாவை மனனம் செய்தேன்என்று இமாம் ஷாஃபிஈ கூறினார்கள். முஸ்னீ ரஹ் அவர்கள் இமாம் ஷாஃபிஈ அவர்கள் வெறும் 9 நாட்களில் மனனம் செய்தார்கள்.

பின்னர் 14 –ஆம் வயதில் இமாம் மாலிக் ரஹ் அவர்களிடம் அழைத்துச் சென்று மாணவராகச் சேர்த்து சுமார் 9 ஆண்டுகள் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் மரணமாகும் வரை அங்கேயே இருந்தார்கள்.

அதன் பின்னர் மக்கா, மதீனா, மிஸ்ர், பக்தாத் என அரபுலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இமாம் ஷாஃபிஈ அறியப்பட்டார்கள்.

அரபுலகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று மார்க்கல்வியை பயிற்றுவித்தார்கள்.

இறுதியாக, ஹிஜ்ரி 198 –இல் மிஸ்ரின் மஸ்ஜித் அம்ர் இப்னுல் ஆஸில் ஆசிரியராகப் பணியாற்றி பல்லாயிரக்கணக்கான அறிஞர் பெருமக்களை உருவாக்கினார்கள்.

இஸ்லாமிய உலகின் அறியப்பட்ட பெரும்பாலான அறிஞர் பெருமக்கள் அது எந்தத் துறை அறிஞர்களாக இருந்தாலும் அவர்கள் இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்களின் மதஹபைப் பின்பற்றக் கூடியவர்களாகவே இருப்பார்கள்.

 

குறிப்பாக, இமாம் பைஹகீ, ஹாகிம் அன்னய்ஸாபூரி, ஜலாலுத்தீன் சுயூத்தி, இமாம் தகபீ, இமாம் கஸ்ஸாலி, இமாம் நவவி, இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி, ஹாபிழ் இப்னு கஸீர், இமாம் புகாரி ஆகியோர்.  ( நூல்: அத் தபகாத்துஷ் ஷாஃபிஈ )

வெறும் அம்பெய்யும் வீரராக அறியப்பட இருந்த ஓர் வீரரை உலகறியும் அறிஞராக, ஃபிக்ஹ் எனும் அறிவுச்சுடரை உலகெங்கிலும் பிரகாசிக்கச் செய்ய இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் தாயார் செய்தது 7 வயதிலேயே முழு குர்ஆனையும் இதயத்தில் நிறைத்து ஹாஃபிழாக ஆக்கியது தான்.

21 –ம் நூற்றாண்டின் சாட்சி..

இன்ஸ்­டா­கிராம், யூட்யூப் உள்­ளிட்ட சமூக வலைத்­த­ளங்­களில் அவரை பல இலட்சம் பேர் பின்­தொ­டர்­கி­றார்கள்.

இளம் தொழில்­மு­னை­வோ­ரான அவர், ‘காரிஸாஎன்ற பெயரில் ஐஸ் க்ரீம் நிறு­வனம் ஒன்றை நடத்­து­கிறார். இன்று ஆறு கிளைகள் மற்றும் 60 பணி­யா­ளர்­க­ளுடன், இந்­நி­று­வனம் வெளி­நா­டு­க­ளிலும் வளை­குடா முழு­வதும் விரி­வ­டைந்­துள்­ளது.

தேசிய அள­விலும், சர்­வ­தேச அள­விலும் பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளுக்கு அவர் நல்­லெண்ணத் தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

மற்­ற­வர்­க­ளுக்கு தன்­னம்­பிக்­கை­ய­ளிக்கும் உரை­களை நிகழ்த்­து­ம் Motivational speaker ஆக திகழ்கிறார். 

ஸ்கூபா டைவிங், கால்­பந்து, ஹைகிங் மற்றும் ஸ்கேட்­போர்டிங் உள்­ளிட்ட பல்­வேறு தீவிர விளை­யாட்டு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கிறார். 

எதிர்­கா­லத்தில் இரா­ஜ­தந்­தி­ரி­யாக வர வேண்டும் என்ற இலட்­சி­யத்­துடன் அர­சியல் விஞ்­ஞா­னத்தில் தனது கல்­லூரிப் பட்­டப்­ப­டிப்பைத் தொடர்ந்து வருகிறார்.

இத்தனைக்கும் அவர் ஒரு மாற்றுத்திறனாளி. இன்னும் சொல்லப் போனால் அவர் ஒரு அரை மனிதர். 

உடலில் குறை­பாடு இருந்­தாலும் அதைப் பொருட்­ப­டுத்­தாமல் தான் விரும்­பிய துறை­களில் முன்­னே­றி­யதால் அவ­ரது வாழ்க்கை இன்று மற்­ற­வர்­க­ளுக்கு ஊக்­க­ம­ளிக்கும் வகையில் பிர­ப­ல­மாகி இருக்­கி­றது என்றால் அது மிகையல்ல. 

யார் அவர்? அவர் தான் 220 பில்லியன் டாலர்கள் செலவளித்து கடந்த நவம்பர் 20, ஞாயிற்­றுக்­கி­ழமை, கத்தாரின் அல் பைத் ஸ்டேடி­யத்தில் நடந்த 2022 -ம் ஆண்டு உலகக் கோப்­பையின் தொடக்க விழாவில் சூரா அல்- ஹு­ஜுராத் வசனம் 13 ஐ ஓதி துவங்கி வைத்த ஃகானிம் அல் மிஃப்தாஹ் என்ற (தற்போது 22 வயது) இளைஞர் ஆவார்.

Ca­u­d­al Re­g­r­e­s­sion Sy­nd­r­o­me எனப்­படும் மரபு ரீதி­யி­லான குறை­பாட்டால் பாதிக்­கப்­பட்­டவர். 

உலகில் பிறக்கும் 25000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்த குறைபாடு இருக்கும் என்று மருத்துவ உலகம் குறிப்பிடும் குழந்தையாக பிறந்தவர். 

இந்தக் குறை­பாட்டைக் கொண்­டோ­ருக்கு பிறக்­கும்­போதே உடலின் கீழ்­பாதி பகுதி இருக்­காது. சக்­கர நாற்­காலி மூல­மா­கவும், கைகளைத் தரையில் ஊன்­றி­ய ­ப­டியும் தான் நடக்க வேண்டும்.

 

ஃகானிம் வயிற்றில் கரு­வாக இருந்­த­போது கலைத்­து­ வி­டும்­படி அவ­ரது தாயிடம் மருத்துவர்கள் வலி­யு­றுத்­தி­ய­தா­கவும், ஆனால் அதற்கு அவர் சம்­ம­திக்­க­வில்லை எனவும் கானிம் அல்-­மிஃப்­தாஹின் இணை­ய­த­ளத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

قال لها الأطباء وأنه حتما سيموت، وإن عاش فستكون حياته شقاء

எந்த அளவுக்கு மருத்துவர்கள் கூறினார்கள் என்றால்... "ஒரு வேளை குழந்தை பிறந்தாலும் கண்டிப்பாக இறந்தே பிறக்கும். தப்பித்தவறி அந்த குழந்தை பிழைத்தாலும் அந்த குழந்தை இந்த உலகில் மிகவும் சிரமத்துடனே வாழும்" என்று எச்சரித்துள்ளனர்.

ஆனால், "நான் இடது காலா­கவும் எனது கணவர் வலது காலா­கவும் இருந்து அந்த குழந்தையை வளர்ப்போம்என்று ஃகானிமின் தாய் தனது கூறி­ய­தா­கவும் அந்த இணை­ய­தளம் குறிப்­பி­டு­கி­றது.

அந்த தாய் அந்த குழந்தைக்கு இரண்டு விஷயங்களை மிகவும் கவனத்தோடு செய்தார்.

ஒன்று தேர்ந்தெடுத்து அழகிய பெயர் வைத்தார்.

ஆம்! ஃகானிம் (غانم) சன்மார்க்கப் போரில் பங்கேற்று வெற்றியோடும், வெகுமதிகளுடனும் திரும்புபவன். அல் மிஃப்தாஹ் (المفتاح) திறவுகோல்.

இரண்டாவதாக அந்த குழந்தையின் கரங்களில் அல்குர்ஆனைக் கொடுத்தது. ஆம்! அந்த குழந்தையை சிறு வயதிலேயே அல் குர்ஆனை அழகிய முறையில் மனனம் செய்த ஹாஃபிழாக உருவாக்கினார் அந்த தாய்.

அவர் வரலாற்றில் மிகவும் ஆச்சரியமான இரண்டு செய்திகள் இடம் பெற்றுள்ளன.

ஒன்று, வளை­குடா பகு­தியில் உள்ள மிக உய­ர­மான, கரடுமுரடான மலைச் சிக­ர­மான ஓமனில் உள்ள ஜபல் அஷ் ஷம்ஸில் கூட ஃகானிம் ஏறி­ சாதனை படைத்துள்ளார்.

இன்னொன்று, 2016 -ம் ஆண்டில் உம்ரா செய்யச் சென்ற அவர் உடல் குறைபாடுகள் இருக்கவே, வீல் சேரில் அமர்ந்து உதவியாளர் ஒருவருடன் தவாஃப் செய்ய ஷரீஆ ரீதியாக அனுமதி இருந்தும் தம் கைகளை ஊன்­றி­ய நிலையில் தவாஃப் செய்ய சவூதி மன்னரிடம் அனுமதி பெற்று கைகளை ஊன்­றி­ய நிலையிலேயே தவாஃபும் செய்தார்.

பாக்கியம் நிறைந்த அல்குர்ஆனை ஒருவர் கையில் எடுத்தால் அவரை அல்லாஹ் எந்த உயரத்திற்கு அழைத்துச் செல்கிறான் என்பதற்கு 21 -ம் நூற்றாண்டின் சாட்சியாக மிளிர்கிறார் ஃகானிம் அல் மிஃப்தாஹ். 

ஆகவே, அல்குர்ஆனை கையில் எடுத்து இந்த உம்மத்தின் அரணாய் அமைப்போம்!! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!