Thursday 10 October 2013

அரியணையில் அமர வைக்கும் வாழ்வின் அரிய தருணங்கள்

அரியணையில் அமர வைக்கும்
வாழ்வின் அரிய தருணங்கள்

மனித வாழ்க்கை என்பது சில போது இன்பமயமாகவும், இன்னும் சிலபோது துன்பமயமாகவும் அமைந்திருக்கிறது.
எது எப்படி இருந்தாலும் மனித வாழ்க்கையை அலங்கரிப்பதும், ரசிக்கவைப்பதும், சில பல அரிய தருணங்களே! ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இந்த அரிய தருணங்கள் பல புதைந்துகிடக்கின்றன.
சிலர் தான் சாதித்த சாதனைகளின் பதிவுகளை அரிய தருணமாக கூறுவர்.
சிலர், தான் உழைத்த உழைப்பின் மூலம் பெற்ற விருதுகளை அரிய தருணமாக கூறுவர்.
இன்னும் சிலரோ தம் திருமண நாட்கள், பிரபலமானவர்களுடைய தொடர்புகள், சந்திப்புகள்,
என அரிய தருணங்களின் நீண்ட பட்டியலை தருவார்கள் இந்த தருணங்கள் எல்லாம் மனதில் நீங்கா நினைவுகளாக இதுபோன்ற சந்தர்ப்பங்கள் இனி வாராதா என ஏக்கங்களாக மனித சிந்தனையில் நீக்கமற நிறைந்திருக்கும்.

ஆனால் இவைகள் மட்டுமே நமது வாழ்வின் அரிய தருணங்கள் அல்ல.
நமது வாழ்வில் வந்து போகின்ற அனைத்து மனித்துளிகளும் அரிய தருணங்களே!
இந்த நாள், இந்தநொடி, இந்த நிமிடம் என எதுவுமே இதற்குமுன் வந்த்தில்லை!
இனி ஒரு போதும், அது வரப்போவதுமில்லை.
ஆகவே, நமது வாழ்வின் அரிய தருணங்களை நாமே தீர்மானிக்க வேண்டும்.
நம் வாழ்வில் அரிய தருணம் எப்போது வரும்? என்று காத்துக்கிடக்கச் சொல்லவில்லை இஸ்லாம்.
மாறாக,
அதை உருவாக்கச் சொல்கிறது,
அதை கொணருமாறு ஏவுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
மறுமை நாளில் ஐந்து விஷயங்களைப் பற்றி கணக்கு தராதவரை எந்தவொரு மனிதனும் அல்லாஹ்வின் நீதி மன்றத்திலிருந்து நகர முடியாது.
1.       உன் வாழ்நாளை எவ்வகையில் கழித்தாய்?
2.       கற்றறிந்த கல்வியின்படி எந்த அளவிற்கு செயல்பட்டாய்?
3.       செல்வத்தை எந்த வழிகளில் பெருக்கினாய்?
4.       எந்த வழிகளில் செலவு செய்தாய்?
5.       உன் உடலை எந்தப் பணிகளில் ஈடுபடுத்தினாய்?
அறிவிப்பாளர்- அபூபர்ஸா அல் அஸ்லம் (ரலி) நூல்: திர்மிதி

இதில் முதல் கேள்வி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த்து.
அது தான் நமது தலைப்பின் கருவும் கூட!
ஏனெனில், மனிதனின் ஆயுள் முழுவதையும் சுற்றித் தான் பல அரிய தருணங்கள் பரவிக் கிடக்கின்றன.
அதை உருவாக்கியவர்களும், தீர்மானித்தவர்களும் எளிதாக பதில் கூறுவதோடு மாத்திரமல்லாமல் எஞ்சிய கேள்விகளுக்கும் இலகுவாக பதில் கூறி தப்பித்து விடுவார்கள்.
எப்படி தீர்மானிப்பது?
     தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது அவர்களிடம் நீங்கள் எந்நிலையில் இருந்தீர்கள்? எனக் கேட்பார்கள். அதற்கு அவர்கள் பூமியில் நாங்கள் பலவீனர்களாய் இருந்தோம் என பதிலளிப்பார்கள்.
அல்லாஹ்வின் பூமி விசாலமானதாய் இருக்கவில்லையை? அதில் நீங்கள் நாட்டைத் துறந்து (ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா? எனத வானவர்கள் மீண்டும் கேட்பார்கள். இவர்களுக்குரிய இடம் நரகம் தான்! மேலும் அது மிக்க் கேடான இடமாகும். ஆனால், எவ்வித முயற்சியையும் மேற்கொள்ள முடியாமல், எந்த வழிவகையும் கிடைக்காமல், உண்மையிலேயே இயலாதவர்களாயிருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை அல்லாஹ் மன்னிக்க்க்கூடும். அல்லாஹ் மகா மன்னிப்பாளனாகவும் பிழை பொறுப்பவனும் ஆவான்”.
அல்குர்ஆன்-4-97,98,99
இந்த இறைவசனம் ஹிஜ்ரத் செய்யாமல் ஊரிலேயே தங்கி விட்டிருந்தவர்களை குறித்து அல்லாஹ்வால் விமர்சித்து இறக்கப்பட்டது.

இந்த இறைவசனம் இறங்கிய செய்தி மதீனாவில் இருந்து மக்காவில் மிகவும் பலவீனமாக, சுகவீனமாக்க் கிடந்த நபித்தோழர் ஆபூளம்ரா (ரலி) அவர்களுக்கு கிடைத்த்து.

என்ன? அல்லாஹ் நம்நிலையை பெண்களோடும், குழந்தைகளோடும் இணைத்துச் சொல்லி இருக்கின்றானே?
என்று கூறி, தமது மக்களை அழைத்து என்னை எப்படியாவது மதீனாவில் கொண்டு. நபி (ஸல்) அவர்களிடம் சென்று விட்டு விடுங்கள், என்று முறையிட்டார்
அவரின் மக்களும் ஒரு கட்டிலில் அவரை தூக்கி சுமந்து மதீனாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் பொது தன்யிலம் எனும் இடத்தில் அபூளம்ரா (ரலி) வஃபாத் ஆகிவிடுகிறார்கள்!
மக்காவில் இருந்த இணை வைப்பாளர்கள் இதை கேள்விபட்டு ஒழுங்காக இங்கேயே இருந்திருந்தால் தமது மரண நேரத்தில் தமது குடும்பத்தார்களை கண்ணாரக் கண்டிருப்பார்.

முஹம்மத், முஹம்மத் என்று கூறி அநியாயமாக போகிற வழியிலேயே ஒரு வழிப் போக்கனைப் போல இறந்து விட்டாரே! என ஏளனமும், கேலியும் செய்தனா.

மதீனாவில் இருந்த ஏனைய நபித்தோழர்களுக்கு இந்த செய்தி எட்டிய போது,

அல்லாஹ் விலக்கு அளித்தவர்களில் ஒருவராக இருந்த போதும், இறையச்சத்தோடும், ஆர்வத்தோடும் ஹிஜ்ரத் செய்து ஹிஜ்ரத் பூமியின் (மதீனாவில்) என்லையில் வைத்து இறந்து, ஹிஜ்ரத் செய்த மொத்த நன்மையையும், பலனையும் அடையாமல் இறந்துவிட்டாரெ என ஏக்கத்தோடும், வருத்த்த் தோடும் கூறிக்கொண்டனர்.

அனைத்தையும் கேட்டகும் ஆற்றல் பெற்றிருக்கும் வல்ல அல்லாஹ் இணைவைப்பாளர்களின் வசை பாடுதலையும் இறை நம்பிக்கையாளர்களின் ஆசை வார்த்தைகளையும் கேட்டுக் கொண்டிருந்தான்.
அடுத்த கணமே....
எவர் அல்லாஹ்வின் வழியில் ஹிஜ்ரத் செய்கின்றாரோ, அவர் பூமியில் கணக்கிலடங்கா தங்கு மிடங்களையும்  வாழ்விற்கான பெரும் வளங்களையும் காண்பார்.
மேலும், எவர் அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கமும் ஹிஜ்ரத் செய்வதற்க்காத்த் தன்னுடையை வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு (வழியிலேயே) அவருக்கு மரணம் ஏற்பட்டு விட்டால், திண்ணமாக அவருக்கு நற்கூலி வழங்குவது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும். கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான்”.
அல்குர்ஆன்-4-40
எனும் இறைவசனத்தை இறக்கியருளி இறை நம்பிக்கையாளர்களின் இதயங்களை இன்புறச் செய்தான், இறை மறுப்பாளர்களின் செவிகளில் இடி விழச் செய்தான்.

இவ்வசனம் இறங்கியதும் ஹிஜ்ரத்திற்கான பயணத்தில் ஏற்படும் மரணத்திற்கு என்ன கூலி என்பதை தீர்வாக தந்துவிட்டல்லவா மரணமெய்திருக்கிறார் அபூளம்ரா (ரலி) என பெருமிதத்துடன் கூறினார்கள்.
நூல்-இஸ்தீஆப் பாகம்2, பக்கம்-9
இஸ்தீஆப் பாகம்3, பக்கம் 131
தஃப்ஸீர் இப்னு கஸீர்- பாகம்1, பக்கம் -710, 711
விதிவிலக்கு அளிக்கப்பட்டவர்களில் ஒருவராக இருந்தும் கூட ஈமானிய மான உணர்ச்சியால் உந்தப்பட்டு தனக்கான அரிய தருணமாக மாற்றியதோடு இறுதி நாள் வரை இந்த உம்மத்திற்கான ஒரு தீர்வையும் அல்லாஹ்விடம் இருந்து பெற்றுத்தந்தார்கள்.

இப்படிச்சொல்வார்கள் மூன்றுவகையான மனிதர்கள் இருக்கின்றார்கள்.
v  சிலர் நேரத்தினால் தள்ளிக் கொண்டு செல்லப்படுகின்றவர்கள் – இவர்கள் அரிய தருணங்களுக்காக தவமிருந்து காத்துக் கிடந்து தங்கள் வாழ்வை வீணாக்குகின்றவர்கள் இவர்கள்
v  வேறு சிலர் நேரத்தை தள்ளிக்கொண்டிருப்பவர்கள் – இவர்கள் காலம் கடந்து பயிருடுபவர்களைப் போன்றவராவர்.
v  மற்றும் சிலர் நேரத்தின் மீது பயணம் செய்பவர்கள் – இவர்கள் தான் நேரத்திற்கு கடிவாளமிட்டு சாதனை படைப்பவர்கள்
மேலே சொன்ன அபூளம்ரா (ரலி) அவர்கள் மூன்றாம் வகை மனிதர்களைச் சார்ந்தவர்கள்

யர்மூக் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரம்
முதல் நாள் சண்டை முடிந்து ஓய்வில் அமர்ந்திருந்தனர் முஸ்லிம் படைவீரர்கள்.
ரோமபுரியின் படைத்தளபதிகளில் ஒருவரான ஜுர்ஜஹ் என்பவர் முஸ்லிம்களின் படைத்தளபதி காலித் பின் வலீத் (ரலி) அவர்களை சந்திக்க விரும்புவதாக அனுமதி வேண்டி நின்றார்.
அனுமதி வழங்கி உள்ளே வரச்சொல்லி ஆணையிட்டார்கள் தளபதி காலித் பின் வலீத் (ரலி) அவர்கள்.
வந்தவர் பணிவாக காலித் (ரலி) அவர்கள் முன் வந்து அமர்ந்தார். பின்னர் நடைபெற்ற உரையாடல் இதோ
ஜுர்ஜஹ் –      காலித் அவர்களே! பொய் சொல்லக்கூடாது உண்மையை
                மட்டும் சொல்ல வேண்டும்.
                ஏனெனில் சுதந்திரமானவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள்
                நான் கேள்விப்பட்டது உண்மையா?
காலித் (ரலி) –   என்ன கேள்வி பட்டீர்கள்?
ஜுர்ஜஹ் -    உங்கள் நபி வானில் இருந்து ஒரு வாளைப் பெற்று
                உங்களுக்கு வழங்கினார்களாம் அதனால் தான் உங்கள்
                வாள் வீச்சுக்கு முன்னால் வல்லரசுகளும், வலிமைவாய்ந்த
                படைகளும் வலுவிழந்து போகிறார்களாம்.
காலித் (ரலி -   அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.
ஜுர்ஜஹ் -    பின்னர் எப்படி உங்களுக்கு அந்தப் பெயர் வந்த்து?
காலித் (ரலி -   அல்லாஹ் எங்களுக்கு ஒரு தூதரை – நபியை
                அனுப்பினான், எங்களில் அவர்களை நம்பியவர்களும்
                இருந்தனர், மறுத்தவர்களும் , பொய்ப்படுத்தியவர்களும்
                இருந்தனர்.
                காலித் (ரலி) தொடர்ந்தார், நான் அவர்களை மறுத்தேன்,
                பொய்ப்படுத்தினேன். பின்பு அல்லாஹ் என் இதயத்தை
                இஸ்லாத்திற்காக வென்றெடுத்தான்.
                அந்த நபியைக் கொண்டு என்னை நேர்வழியில் ஆக்கினான்.
                பின்னர் நான் அவர்களிடத்தில் அக் காலத்திலும்
                இறைவனுக்கும், இறைத்தூதரான உங்களுக்கும் மரணம்
                வரை விசுவாசமாய் இருப்பேன் என வாக்குப் பிரமாணம்
                செய்து கொடுத்தேன்.
                அப்போது என்னை தங்களுக்கு அருகே அழைத்த
                அண்ணலார் நீர் அல்லாஹ்வின் வாள்களில் ஓர் வாள்
                எனக்கூறினார்கள். அன்றிலிருந்து நான் ஸைஃபுல்லாஹ்
                என அழைக்கப்படுகிறேன்.
ஜுர்ஜஹ் -    எதன் பக்கம் நீங்கள் அழைக்கின்றீர்கள்?
காலித் (ரலி)-   ஏகத்துவத்தின் பக்கமும், இஸ்லாத்தின் பக்கமும்.
ஜுர்ஜஹ் -    இன்று ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாலும்
                உங்களுக்கு கிடைத்திருக்கும்  இது போன்ற கூலியும்
                நம்மையும் அவருக்கு கிடைக்குமா?
காலித் (ரலி) -  ஆம்! இதைவிட மிகச் சிறப்பாக கிடைக்கபடும்.
ஜுர்ஜஹ் -    எப்படி உங்களை விட மிகச்சிறப்பான கூலி கிடைக்கும்?
காலித் (ரலி) -  நாங்கள் நபியின் காலத்தில் வாழ்ந்தோம், அல்லாஹ்வின்
                வேச வசனங்கள் நாங்கள் வாழ்ந்த காலத்தில்தான்
                இறங்கியது.
                அல்லாஹ்வின் அற்புதங்களையும், உதவிகளையும்  
                அத்தாட்சிகளையும் கண்ணாறக் கண்டோம். ஆனால், இன்று
                இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறவர்களோ –
                இவையனைத்தையும் காணாமலே நம்பிக்கை
                கொள்கிறார்கள்.
                அல்லாஹ்வை மறைவான நிலையில் நம்பிக்கை
                கொள்ளும் உங்களை கௌரவிக்கும் அல்லாஹ்வின் அருள்
                மிகவும் சிறப்பிற்குரியதல்லவா?
ஜுர்ஜஹ் -      அப்படியென்றால் காலித் (ரலி) அவர்களே எனக்கு இஸ்லாத்தை கற்றுக் கொடுங்கள் மாலையில் தொடங்கிய உரையாடல் அதிகாலை வரைத் தொடர்ந்தது. இஸ்லாத்தின் உயரிய கடமையான தொழுகையையும் ஜுர்ஜஹ் கற்றுக் கொண்டார்.
அதிகாலைத் தொழுகையில் கலந்து கொண்டார்,
இஸ்லாமிய படையின் முதல்வரிசையில் நின்றார்,
ஏகத்துவ புத்துணர்வோடு எதிரிகளின் களம் புகுந்து சுழன்று சுழன்று போரிட்டார்.
அவரின் முழு சிந்தனையும் இறைவனுக்காக, இறை மார்க்கத்திற்காக உயிர் நீத்து ஷஹீத் ஆக வேண்டும் என்பதாகவே இருந்த்தை அவரின் வேகம் முஸ்லிம்களுக்கு உணர்த்தியது.
சுப்ஹானல்லாஹ்....
சிறிது நேரத்தில் அந்த அரியாசனத்தையும் அவர் பெற்றார்.
தனக்கு கிடைத்த தருணத்தை அரிய தருணமாக மாற்றி ஷஹீத் எனும் அரியாசணத்தை அடைந்தார்.
நூல்- ரிஜாலுன் ஹவ்லத் ரசூல் (ஸல்)
பக்கம்-299, 300,301
அன்றொரு நான் எப்போதும் உற்சாகமாய், மகிழ்சிகரமாய் சுற்றிக்கொண்டிருக்கும் ஓர் வாலிபர் வாடிய முகத்தோடு கலைந்த கேசத்தோடு, தளர்ந்த தேகத்தோடு மஸ்ஜிதுந் நபவீயின் ஓர் ஓரத்திலே அமர்ந்திருப்பதைக் கண்ட பெருமானார் மெதுவாக அவ்வாலிபரை நோக்கி சென்றார்கள்.
ஜாபிரே! என்ன? இப்படி ஒடிந்து போய் ஓரமாக அமர்ந்திருக்கின்றீர் என தலையை தடவியவாரே அண்ணலார் கேட்க, அன்போடும், அரவணைப்போடும் கேட்ட அண்ணலாரின் அந்த அணுகுமறையில் தன் பாரத்தை எல்லாம் கண்ணீரோடு இறக்கிவைத்தார் ஜாபிர் (ரலி) அவர்கள்
அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை உஹத் போரில் கலந்து ஷஹீத் ஆகிவிட்டார்..
ஜாபிர் (ரலி) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் உஹது யுத்த்த்தில் கலந்து கொண்டு நிகழ்வே நெகிழ்ச்சியானது
உஹத்திற்கான அழைப்பு அண்ணலாரிடமிருந்து வருகிறது
ஜாபிர் (ரலி)            -  தந்தையே நான் கலந்து கொள்கிறேன்.
அப்துல்லாஹ் (ரலி)-  மகனே! நீ இளைஞன் உனக்கு எதிர் காலத்தில்
                மற்றுமோர் வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால்,
                நான் வயோதிகன் என் ஆயுளில் இன்னொரு
                வாய்ப்பு கிடைப்பது அரிது.
ஜாபிர் (ரலி)            -  யுத்தத்தில் கலந்து கொள்ள வலிமையும், இளமையும்
                     தேவை உங்களிடம் இரண்டுமே இல்லை. வீட்டில்
                     பெண்மக்களுக்கு அணுசரணையாக இருந்துவிடுங்கள்.
                     எனக்கு விட்டுக் கொடுங்கள்.
அப்துல்லாஹ் (ரலி)-  அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக போராடி உயிர்
                     நீக்கும் பாக்கியம் கிடைக்கப் பெறவே நான்
                     ஆசிக்கின்றேன் மேலும் அதற்கான கூலி சுவனம்
                     மாத்திரம் இல்லையென்றால் உனக்கு தான் விட்டுக்
                     கொடுத்திடுவேன். சகோதரன் எனும் முறையில்
                     வீட்டுப் பெண்களுக்கு உரிய கடமைகளை நீயே
                     வீட்டில் இரு.
ஜாபிர் (ரலி)     -    சீட்டுக்குலுக்குவோம், பிறகு யார் என முடிவு
                     செய்வோம்.
                     இறுதியாக அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் பெயரே
                     குலுக்கலில் முன்னிலை பெற்றது.
இப்படித்தான் உஹதில் அவர் கலந்து கொண்டார்.
தொடர்ந்தார் ஜாபிர் (ரலி)
சில கடன்களையும், பெண்மக்களையும் விட்டுச்சென்று விட்டார் என் தந்தை.

அல்லாஹ் உமது காரியத்தை இலகுவாக்குவான்.
என அண்ணலார் (ஸல்) அவர்கள் ஆறுதல் கூறிவிட்டு ஜாபிரே! உமக்கொன்றை சொல்லட்டுமா?
சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே! என்றார், ஜாபிர் (ரலி) அவர்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்-
உனக்கு ஒரு சுபச் செய்தியை சொல்லட்டுமா? அதுவும் உன் தந்தையை ஏறித்து!
அல்லாஹ் உம்முடைய தந்தைக்கு உயிர் கொடுத்தான்,
எல்லோரிடமும் திரைக்கு அப்பாலிருந்து பேசும் வல்ல அல்லாஹ் உம் தந்தையிடம் நேருக்கு நேராக, சமீபமாக இருந்து பேசினான்.
அப்போது அல்லாஹ் என் அடியாரே! என்னிடம் உம் விருப்பத்தைக் கூறும்! அதை நான் நிறைவேற்றுகின்றேன் என்றான்.
அப்போது உன் தந்தை அல்லாஹ்விடம் இறைவாஎன்னை மீண்டும் உலகிற்கு உயிர்கொடுத்து அனுப்பு மீண்டும் ஒருமுறை உனக்காக போராடி உன் மார்க்கத்தின் உயர்வுக்காக காயம்பட்டு மீண்டும் உயிர் நீத்த (ஷஹீதாக) விரும்புகின்றேன் என்றார்.
அப்போது அல்லாஹ்- என்னுடைய நடைமுறையில் முரண் கிடையாது இறந்து போனவர்களை மீண்டும் உயிர் கொடுத்து உலகிற்கு அனுப்ப மாட்டோம் என நாம் விதித்துள்ளோம்என்றான்.
உடனே அப்துல்லாஹ் (ரலி) – அப்படியானால் இது போல் ஆசிக்கின்றவர்களின் நிலை என்ன என்று நீ சொல்லிவிடுஎன்றார்கள்
அப்போது தான் வல்ல ரஹ்மான்.
இறை வழியில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்களாக ஒரு போதும் எண்ணிவிடாதீர்! உண்மையில் அவர்கள் உயிரோடு இருக்கின்றார்கள். அவர்கள் தம் இறைவனிடத்தில் இருந்து தங்களுக்கு தேவையான வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்
அல்குர்ஆன்- 3-169
அல்லாஹ் ஷைத்தானுக்கும் கூட தன்னோடு உரையாடும் அரிய தருணத்தை வழங்கினான்.
ஆனால், அந்த அரிய வாய்ப்பை ஷைத்தான் எவ்வாறு நாசமாக்கினான் என்று அல்குர்ஆனின் பல வசனங்கள் படம் பிடித்து காட்டுகின்றது.
ஆனால், மேன்மையும், தகுதியும் வாய்ந்த அந்த நபித்தோழர் அந்த அரிய தருணத்தை தமக்கும், இந்த உம்மத்திற்குமான அரியாசணமாக மாற்றிக் காட்டினார் என்பதையே மேற்கூறிய சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு,
அரசாங்க வேலை இப்ப வருமா? அப்ப வருமா? என்று காத்து கிடப்பது போன்று.....

நம் வாழ்வினில் எப்போது அரிய தருணம் வரும்? என்று நிறைய பேர் காத்துக் கிடக்கின்றார்கள்.

அது எப்போதும் வருவதில்லை!
அதை நாம் தான் உருவாக்கிட முன்வரவேண்டும்.

அதுவும் இப்போதே....
இங்கேயே.....
இன்றே........
நிகழ் காலத்திலேயே........

அல்லாஹ்!      அரிய தருணங்களை
                அரயாசனமாக்கிடும்
                ஆற்றலை தருவானாக! ஆமீன்.



Thursday 5 September 2013

இஸ்லாத்தின் நிழலில். பேரு பெற்ற மனித சமூகம்.

இஸ்லாத்தின் நிழலில்.
பேரு பெற்ற மனித சமூகம்.
நாம் காணும் சமூகத்தில் ஓர் அங்கம் மனிதன்.தன் வாழ்வில் ஒவ்வொரு நாளும் வெளிப்படுத்தும் தன் சொல், செயல் ஆகியவைகள் உள்ளபடியே மிகச்சரியாக அமைந்திருக்கின்றனவா?என ஆராய்ந்து பார்க்க கடமைப்பட்டுள்ளான்.
சரியாக அமைந்திருக்கும் பட்சத்தில் அதே அமைப்பில் அவன் தன் வாழ்க்கைப்பயணத்தை அமைத்துக் கொள்வது அவசியம்.தவறாக அமைத்திருக்கும் பட்சத்தில் அதை சரி செய்து திருத்திக் கொண்டு வாழ முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஏனெனில் அவன் அல்லது அவள் சமூகத்தில் பல்வேறு தளங்களில் பல்வேறு பொறுப்புகளுடன் வலம்வர வேண்டி இருக்கின்றது.
குழந்தையாக, மாணவனாக, இளைஞனாக, கணவனாக, குடும்பத்தலைவனாக, அரசியல் மற்றும் ஆன்மீக வழிகாட்டியாக, தொண்டனாக, தலைவனாக, ஒரு நிறுவனத்தின் அதிகாரியாக, ஊழியனாக
இப்படி மனித சமூகம் தொடர்புடைய அனைத்து துறைகளிலும்ஏதேனும் ஒரு பெயரில் இந்த உலகில் வாழ வேண்டிய நிலையில் இருக்கின்றான்.
தனக்கு கீழ் உள்ளவர்களுக்கும், தன்னோடு வாழ்பவர்களுக்கும் உண்டான உரிமைகளைப் பேணி வாழ்வதற்கு அவன் முன் வர வேண்டும்.அப்படி வாழ்கிற போது மட்டுமே சமூகத்தில் மனித நேயம் தழைக்கும்.
உரிமைகள் பேணப்படாத, வீணடிக்கிற ஓர் சமூகத்தில் சீர்குலைவும், ஒழுக்கக்கேடும், பிரச்சனையும், அச்சம் நிறைந்த சூழ்நிலையும் நிலவும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை
சர்வதேச அளவில் மனித உரிமைகளுக்கான பிரகடனம் .நா.வால் 1948ல் வெளியிடப்பட்டது.அதில் 30 பிரிவுகளில் 30 உரிமைகள் உள்ளதாகவும் வரையறுக்கப்பட்டது.இதை அனைத்து நாட்டிலும் அந்தந்த நாட்டுச் சட்டங்களுக்கு ஏற்ப பின்பற்றப்பட வேண்டும் என . நா.தெரிவித்து 1966 டிசம்பர் 16ம் தேதி சர்வதேச அலவில் சட்டமாக அங்கீகரித்தது. மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் (1993)ல் தான் இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நூல்: சமூக மதிப்பீட்டுக்கல்வி கல்வி, பக்கம் 21
ஆனால், இஸ்லாமிய மார்க்கம் மனிதன் படைக்கப்பட்ட போதிருந்தே, இப்பூமியில் நடமாடத்தொடங்கிய போதே அவனுக்கான உரிமைகள், கடமைகளை பாதுகாக்க வழிகாட்டியுள்ளது.தன்னைப்போன்றே தன் சக மனிதனையும் பார்க்க வேண்டும், நடத்த வேண்டும் என கட்டளையிடுகின்றது.
இஸ்லாத்தைப் பொறுத்தவரைஒரு மனிதனுக்கான கடமைகளை, உரிமைகளை மூன்றாக பிரித்துள்ளது.
1.      படைத்த இறைவனுக்கு மனிதன் செய்ய வேண்டிய கடமைகள்.
2.      மனிதன் சக மனிதனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்.
3.      மனிதன் தனக்குத் தானே செய்ய வேண்டிய கடமைகள்.
படைத்த இறைவனுக்கு மனிதன் செய்ய வேண்டிய கடமைகளை பொறுத்தமட்டில் ஓர் மனிதன் தவறிழைக்கும் பட்சத்தில், இணைவைத்தல் நீங்கலாக அவனுக்கு இறைவன் நாடினால் தான் அருட்பார்வை கிடைக்கும். தனது விசாலமான மன்னிப்பையும் வழங்கி தண்டனையிலிருந்து பாதுகாப்பும் வழங்கும். அல்லாஹ் கூறுகிறான்:-
திண்ணமாக!அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிப்பதில்லை இதைத்தவிர அனைத்துப் பாவங்களையும் தான் நாடுகின்றவர்களுக்கு மன்னித்து விடுகின்றான். எனவே யார் அல்லாஹ்விற்கு இணை வைக்கின்றானோ அவன் வழிகேட்டில் வெகுதூரம் சென்றுவிட்டான்
(அல்குர் ஆன்: 4:116)
மனிதன் சக மனிதனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை பொறுத்தமட்டில் சம்மந்தப்பட்ட, பாதிப்ப்புக்குள்ளான சக மனிதன் மன்னிக்காதவரை அல்லாஹ்வும் மன்னிப்பதில்லை.அதற்கு தண்டனையோ அல்லது அதற்கான நஷ்ட ஈடோ தரப்பட்டு, மன்னிப்பும் பெறப்பட்டாலொழிய அல்லாஹ் தன் மன்னிப்பை வழங்க மாட்டான்.பாதிக்கப்பட்டவனின் பாதிப்பிற்கு தக்க அவன் அல்லாஹ்வால் ஈருலகிலும் தண்டிக்கப்படுவான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
            “பாதிப்புக்குள்ளானவனின் முறையீட்டிலிருந்துஉங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்
நூல்: மிஷ்காத்
மனிதன் தனக்குத் தானே செய்ய வேண்டிய கடமைகளை பொறுத்தவரையில் சில செயல்களில் தண்டனைகளும், சில செயல்களில் மன்னிப்பும் கிடைக்க வாய்ப்புண்டு. ஆனாலும் எல்லை மீறிச் செயல்படுகிறபோது முழுப் பாதிப்பும் அவனுக்கே!

அல்லாஹ் கூறுகின்றான்:
            “உங்களுடைய கரங்களால் உங்களுக்கு நீங்களை அழிவைத் தேடிக்கொள்ளாதீர்கள்.இஹ்ஸான் எனும் வழிமுறையைக் கடைபிடியுங்கள். நிச்சயமாக! அல்லாஹ் முஹ்சின்களை நேசிக்கின்றான்
அல்குர் ஆன்: 2:195
எனவே, உலகில் அமைதி நிலவ வேண்டுமேயானால், மனித உரிமைகள் பின்பற்றப்படவேண்டும்.தான் எப்படி பிறர் நம்மிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென நினைக்கிறோமோ அது போன்று பிறரிடம் நாம் நடந்து கொள்ள வேண்டும்.
சக மனிதனின் உரிமைகள்:
            அபூதர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன்எந்தச் செயல் சிறந்தது ?தரமானது?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்):
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும், இறைவழியில் அறப்போர் புரிவதும்என்றார்கள்
            நான் கேட்டேன்: எத்தகைய அடிமைகளை விடுவிப்பது சிறந்தது?
            நபி (ஸல்): ‘விலை கூடுதலான, தம் உரிமையாளரிடத்தில் மதிப்பு வாய்ந்த அடிமைகளை விடிவிப்பது சிறந்ததுஎன்றார்கள்
            நான் கேட்டேன்: என்னால் அது இயலவில்லை எனில்?
            அண்ணல் நபி (ஸல்) அவர்கள்: ஒரு பணியைச் செய்து கொண்டிருப்பவனுக்கு நீ உதவி செய்யும் அல்லது தன் பணியைச் சரிவர செய்ய முடியாதவனின் வேலையை நீ செய்து கொடும் என்றார்கள்.
            நான் கேட்டேன்: என்னால் அது இயலவில்லையெனில்?
            நபி (ஸல்): சக மனிதர்களுக்கு துன்பம் தராதீர், இது உமக்கு தர்மமாக திகழும், இதற்காக உமக்கு கூலி கிடைக்கும்.
நூல்: புகார், முஸ்லிம்



ஆட்சியாலர் குடிமக்களின் மீதான உரிமைகள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
            ‘ஒப்பந்தக்காரன் (முஸ்லிமல்லாத குடிமகன்) ஒருவனுக்கு ஒரு முஸ்லிம் அநீதியிழைத்து விட்டாலோ அவனது உரிமையைப் பரித்தாலோ அவனது சக்திக்கு மீறிய (பதுகாப்புவாரியான) சுமைகளை அவன் மீது சுமத்தினாலோ, அவனது பொருள் எதையேனும் பலவந்தமாக எடுத்துக்கொண்டாலோ நான் மறுமை நாளில் இறைவனின் சந்நிதானத்தில் அந்த முஸ்லிம்முக்கு நதிராக தொடுக்கப்படும் வழக்கில் அந்த முஸ்லிம்மல்லாத குடிமகனின் சார்பாக நான் வாதாடுவேன் (நூல்: அபூதாவுத்)
1.      இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் சிறுபான்மை மதத்தவர்களின் மீதான உரிமை பேணப்பட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்
2.      அவர்களின் ஏதேனும் ஒரு உரிமை மறுக்கப்பட்டாலோ அல்லது பறிக்கப்பட்டாலோ மறுமை நாளில் மஹ்ஷர் பெருவெளியில் அவரின் சார்பாக நான் வழக்கறின்ஞராக நின்று வாதிடுவேன் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்.
3.      மேலும் ஆட்சியாலர்கள் தம் கீழூள்ள மக்களின் உரிமைகளை முழுமையாக பேண வேண்டும். அதில் பாகுபாடும், வேறுபாடும் காட்டக்கூடாது.
இமாம் அபூஹனீஃப (ரஹ்) அவர்களின் காலத்தில் கலீஃபா அல் மன்சூர் ஆட்சியாளராக இருந்தார்.மெளஸல் மாகாணத்து மக்கள் அவ்வப்போது கிளர்ச்சி செய்து வந்தனர்.இறுதியில் இனி ஆட்சிக்கு எதிராக ஈடுபட மாட்டோம் என ஒப்பந்தமிட்டு அம்மாகாண மக்கள் கலீஃபா அல்மன்சூரிடம் தந்தனர்.ஹிஜ்ரி 148ல் மீண்டும் அம்மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டபோது கலீஃபா நாட்டின் அனைத்து ஃபுகஹாக்களையும் ஒன்று கூட்டினர்.அபூ ஹனீஃபா (ரஹ்) உட்பட அனைவரும் ஆலோசனை கூடத்திற்கு வந்தனர்.கிளர்ச்சியில் ஈடுபடும் அம்மக்களின் உயிர்களும், உடமைகளும் தமக்கு ஹலாலா?இல்லையா?என அனைவரிடமும் கேட்டார் கலீஃபா.அனைத்து ஃபுகஹாக்களும் ஒப்பந்தத்தை மீறுவது குற்றம்.மேலும், இனி நாங்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டால் எங்கள் உயிர்களும், உடமைகளும் உங்களுக்குச் சொந்தம் என அம்மக்களே ஒப்பந்தம் செய்திருக்கின்றார்கள் என்றனர். ஆக அவர்களை போர் மூலம் அடக்குவது ஆகுமானது தான் என்று ஃப்த்வா தந்தனர்.மேலும் நீங்கள் மன்னிக்க நினைத்தால் அது உங்கள் பெருந்தன்மையை வெளிக்காட்டும் என்றும் கூறினார்கள். அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்கள் சட்ட மேதை இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள்.
            என்ன கருதுகின்றீர்கள்?என இமாமின் மெளனத்தை கலைத்தார் கலீஃபா.

            இமாம் அவர்கள் கூறினார்கள்:
தங்களுக்கு சொந்தமில்லாத, ஒரு விஷயத்தை ஒப்பந்தத்தின் போது மெளஸல் நகர மக்கள் உங்களுக்கு வழங்கிருக்கின்றார்கள்.(அதாவது அவர்களுடைய உயிர்கள்) அவ்விதமே கேட்கக் கூடாத, கேட்க தகுதியற்ற, உரிமையில்லாத நிபந்தனை ஒன்றை நீங்கள் கேட்டுப்பெற்றுள்ளீர்கள்.
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், என்னைக்கொன்று விடுங்கள் என ஒரு மனிதர் யாரிடமாவது கூறினால் அவரைக் கொலை செய்வது ஆகுமா?
ஒரு பெண் திருமணம் செய்யாமலேயே தன்னை அனுபவித்துக்கொள்ள உரிமை வழங்கினால் அது ஹலாலாக ஆகிவிடுமா?என்று கேட்டார்கள்.
இல்லை! அனுமதி, ஹலால் இல்லை! என பதில் கூறினார் அல்-மன்சூர்.
அப்படியென்றால் மெளஸல் மாகாணத்தின் மக்கள் மீது கை வைக்காதீர்கள்! அவர்களுடைய உயிர்களைப் போக்குவது உங்களுக்கு ஹலால் அல்ல! என இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) திட்டவட்டமாக தெரிவித்தார்கள்.
எனவே, அநியாயமாக உயிரையும், உடமைகளையும் பறிப்பது மனிதநேயமற்ற செயல் என்பதையும், தெளிவான உரிமை மீறல் என்பதையும் இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள் இங்கே ஆட்சியாளர் முன் அஞ்சாநெஞ்சத்துடன் கூறினார்கள்.
இப்னுல் அஸீர்; பாகம் 5, பக்கம் 25
தமிழ நூல்: இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும், வீழ்ச்சியும் பாகம் 2, பக்கம் 65
மகளிரின் உரிமைகள்:
உமர் (ரலி) அவர்களின் ஆட்சிகாலம், இறையாண்மையும், இறையாட்சியும், இறைத்தூதரின் வழிகாட்டலிலும் நிறைந்து இலங்கிக் கொண்டிருந்தது.யார் பாதிக்கப்பட்டாலும் ஓடோடிச் சென்று நிவாரணம் தருபவர் உமர் (ரலி) அவர்கள்.
அன்றொரு நாள் இரவு நகர் வலம் செல்கிறார்கள்.தூரத்தில் ஒரு குடுப்பத்தலைவி அழுது கொண்டிருப்பதை பார்க்கின்றார்கள்.தன் கவலையையும், மன ஆதங்கத்தையும் என் நேசர் (கணவர்) என் அருகே இல்லாத இரவுதான் எவ்வளவு நீளமானது?” என கவிதை மூலம் தெரிவித்துக் கொண்டிருந்தார்.அருகே சென்ற உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் அழுததற்கான காரணம் கேட்டார்கள். வந்தவர் உமர் (ரலி) தான் என்று தெரியாத அப்பெண்மணி
            ‘எங்கள் தனிமையை கொஞ்சம் இலகுவாக்கூடாதா?நீண்ட நாட்கள் எங்கள் கணவன்மார்கள் பிரிந்திருப்பதை சற்று குறைக்கக்கூடாதா?இந்த ஆட்சியாளர் உமர் (ரலி) என்று கூறினார்கள்.
            மறுநாள் காலை நபியவர்களின் துனைவியாரும், உமர் (ரலி) அவர்களின் மகளுமான அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்று,
ஒருபெண் தன் கணவனை விட்டுப்பிரிந்து எத்தனை நாள் பொறுமையாக இருக்க முடியும்?என்று கேட்டார்கள்.
அன்னை ஹஃப்ஸா (ரலி)
ஒரு மாதம், இரண்டு மாதம், மூன்று மாதம் கூடிபோனால் நான்கு மாதம் பொறுமை காக்க இயலும் என்று பதில் கூறினார்கள்.
உடனே உமர் (ரலி) அவர்கள்; தமது ஆட்சியின் கீழ் ராணுவப்பிரிவில் பணியாற்றக்கூடாது.4 மாதங்கள் முடிந்து விட்டால் உடனே ஊருக்கு புறப்பட்டு சென்று விட வேண்டும் என சட்டமியற்றினார்கள்.அதனுடைய முதல் நகலை அந்தப் பென்மணியின் கணவனுக்கு அனுப்பிவைத்தார்கள்.
நூல்: குலஃபாவுர்ரசூல் (ஸல்) பக்கம்: 155
ஏழைகளின் உரிமைகள்:
ஒருநாள் இரவு உமர் (ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) அவர்களும் இரவு நேரத்தில் மதீனாவின் ஓர் இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.அப்போது ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது.கேட்ட திசை நோக்கிச் சென்ற உமர் (ரலி) அங்கு சென்று பார்க்கின்றார்கள்.ஒரு தாய் குழந்தையை மடியில் போட்டு குழந்தையை தூங்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.உமர் (ரலி) அவர்கள் வந்து விட்டார்கள்.மீண்டும் சில மணிதுளிகளில் குழந்தை அழுதது. அங்கு சென்ற உமர் (ரலி) அல்லாஹ்வை பயந்து கொள்! உன் குழந்தையை நல்ல முறையில் கவனித்துக் கொள்! என்றார்கள். சிறிது நேரத்தில் அக்குழந்தை மீண்டும் அழுதது வேகமாகச் சென்ற உமர் (ரலி) நாசமாப்போ!நீ நல்ல தாயாக இல்லை.ஏன் மீண்டும் மீண்டும் உன் குழந்தை அழுது கொண்டிருக்கிறது?நான் பலதடவை சொல்லியும் உன் குழந்தையின் அழுகையை ஏன் நிறுத்த முடியவில்லை?அந்தப் பெண்மணி முன்நிற்பவர் உமர்தான் என்று அறியாமல் சொன்னார்.
அல்லாஹ்வின் அடியாரே! நான் என் குழந்தையை பால் குடியிலிருந்து கட்டாயப்படுத்தி மறக்கச் செய்து கொண்டிருக்கின்றேன்.ஆனால், அது மறப்பதற்கு மறுக்கின்றது என்றாள்.
ஏன்?நீ மறக்கடிக்க கட்டாயப்படுத்துகிறாய் என்க்கேட்டார் உமர் (ரலி) அவர்கள்.
            ஏனென்றால், ஆட்சியாளர் உமர் பால் குடி மறக்கடிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பொது நிதியிலிருந்து உதவித்தொகை கொடுக்கின்றாராம் என்றாள்.
சரி! உன் குழந்தைக்கு எத்தனை வயசாச்சு எனக் கேட்டார் உமர் (ரலி).
பிறந்து சில மாதங்களே ஆகியிருக்கிறது?என்றாள் அப்பெண்.
அவசரப்படாதே! உன் குழந்தையின் ஆரோக்கியத்தில் எனக் கூறிய உமர் (ரலி) அங்கிருந்து வெடுக்கென வெளியேறினார்கள்.
மறுநாள் நடந்தவைகளை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
அன்று காலை உமர் (ரலி) எங்களுக்கு ஃப்ஜ்ர் தொழவைத்தார்கள்.தொழுகையில் அவர்கள் ஓதும் சப்தத்தை விட அழுகையின் சப்தம் உயர்ந்திருந்தது. ஒரு வழியாக தொழுதுமுடித்து ஸலாம் வாங்கிய பின் உமர் (ரலி) எழுந்தார்கள்
மக்களே! பால்குடி மறக்கடிப்பதில் அவசரம் காட்டாதீர்கள்! நாம் அனைத்து இஸ்லாமிய குழந்தைகளுக்கும் பொது நிதியிலிருந்து உதவித்தொகையை வழங்குவோம் என்று கூறினார்கள்.இதை உடனே அமுல் படுத்துமாறு அனைத்து மாகாண கவர்னர்களுக்கும் கடிதம் எழுதினார்கள்.
நூல்: குலஃபாவுர்ரசூல் (ஸல்) பக்கம்: 125
உலக நாடுகளில் மனித உரிமைகளைப் பாதுகாத்திடவும், உலகில் அமைதியை நிலைநாட்டிடவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே ஐக்கிய நாடுகள் சபை (.நா. சபை) இந்த அவை பிறப்பித்த மனித உரிமைப் பிரகடனங்கள் வெறும் ஏட்டுச் சுரைக்காயை உள்ளதை அமெரிக்காவின் அடாவடித்தனங்களாலும், இஸ்ரேலின் கொடூரத்தாலும் உணர முடிகின்றது. ஆனால், 1434 ஆண்டுகளுக்கும் முன் நபி (ஸல்) கூறிய மனித உரிமைப் பிரகடனங்கள் இந்த உம்மத்தால், இந்த உம்மத்தின் தலைவர்களால், இந்த உம்மத்தின் இமாம்களால் எப்படி நடைமுறைப்படுத்தப் பட்டது. (இனிமேலும் நடைமுறைப் படுத்தப்படும் இன்ஷா அல்லாஹ்) என்பதைத் தான் மேற்கூறிய சம்பவங்கள் மூலம் நாம் அறிகிறோம்.
இஸ்லாம் மனித உரிமைகளில் மாத்திரமல்ல. பிற உயிரினங்களின் உரிமைகளிலும் கூட கவனம் செலுத்துமாறு கட்டலையிடுகின்றது.
ஒருவன் ஒரு சிட்டுக் குருவியையோ அல்லது அதை விடச் சிறிய குருவியையோ அவற்றிற்கான உரிமையின்றிக் கொன்றுவிட்டால் அது குறித்து அல்லாஹ் நாளை மறுமையில் விசாரிப்பான் என்று நபி (ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! குருவிகளின் உரிமை என்ன?என்று கேட்கப்பட்டது? அவற்றை அறுத்து உண்பதும், தலை அறுத்த பின்னர் அப்படியே வீசியெறிந்து விட்டாமலிருப்பதும் தான் அவற்றின் உரிமையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்
நூல்: மிஸ்காத்
என் ஆட்சிக்குட்பட்ட எல்லையில் தண்ணீரின்றி நாவரண்டுத் திரியும் நாய் குறித்துக் கூட அல்லாஹ் என்னிடம் விசாரிப்பானோ என்று நான் அஞ்சுகிறேன் என உமர் (ரலி) அடிக்கடி கூறுவார்கள்.
ஆக, உயிரினங்களின் உரிமைகளைக் கூட இஸ்லாம் பேணுமாறு வலியுறுத்தும் போது மனித உரிமைகளைப் பேணுவதில் நாம் எந்தளவு கவனம் செலுத்த வேண்டும் என சிந்தித்துப்பார்க்க கடமைபட்டுள்ளோம்.
மேலும், மனித உரிமைகளை மீறுவோர் எத்தகைய நிலைக்கு உள்ளாவர் என மாநபி (ஸல்) அவர்கள் பின்வரும் நபிமோழியில் எச்சரித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள்; ஒன்றுமில்லாதவன் (வறியவன்) என்பவன் யார்?என்று கேட்டார்கள்.மக்கள் எவரிடம் திர்ஹமோ, வேறேந்தப்பொருளுமே இல்லையோ அவரே எங்களில் வறியவர் ஆவார் என்று கூறினார்.அதற்கு அண்ணலார் பின் வருமாறு பதிளாளித்தார்கள்; ஒருவன் மறுமை நாளில் தன் தொழுகையுடனும், நோன்புடனும் தான் வழங்கிய ஜகாத்துடனும் அல்லாஹ்வின் முன் ஆஜராவான்.
அவற்றுடன் அவன் உலகில் எவரையேனும் திட்டிருப்பான்; எவர் மீதாவது இட்டுக்கட்டி அவதூறு கூறியிருப்பான். எவரேனும் ஒருவரின் செல்வத்தைப் பறித்திருப்பான்; எவரையேனும் கொன்றிருப்பான்; எவரையேனும் அடித்திருப்பான்; எனவே அந்த அநீதிக்குள்ளானவர்கள் அனைவரிடையேயும் அவனது நன்மைகள் பங்கிடப்பட்டுவிடும்.பிறகு அவனது நன்மைகள் தீர்ந்துபோய், அநீதிகுள்ளானவர்களின் உரிமைகள் இன்னும் மீதியிருந்தால் அவர்களின் பாவங்கள் அவனது கணக்கில் எழுதப்பட்டுவிடும்.பிறகு அவன் நரகத்தில் வீசியெறியப்படுவான். அத்தகையோரே உண்மையில் ஒன்றுமில்லாதவன் (வறியவன்) ஆவான்
நூல்: முஸ்லிம்
மேலும், அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஒரு மனிதனின் ஈருலக முன்னேற்றத்தை இன்னொரு மனிதனின் உரிமைகளை நிறைவேற்றுவதின் மூலம் தான் அடைய முடியும் என்பதனை தங்களின் வாக்குகளின் மூலம் உறுதிபடுத்திருக்கின்றனர்.
ஏழைகளின் உரிமையைப் பேணுபவரின் சிறப்பு:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; விதவைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும் பாடுபடுபவர் இறைவழியில் போர்புரிபவரைப் போன்றவராவார்.மேலும் அவர் இரவு முழுக்க களைப்படையாமல் நின்று வணங்கிக் கொண்டிருப்பவரைப் போன்றவராவார்; பகலில் தொடர்ந்து நோன்பு நோற்ற வண்ணமிருக்கும் நோன்பாளி போன்றவராவார்.                                                                                            நூல்: திர்மிதி

அண்டை அயலாரின் உரிமையைப் பேணுபவரின் சிறப்பு:
எந்த மனிதர் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று விரும்புகின்றாரோ அவர் பேசும்போது உண்மை பேசட்டும்; அவரிடம் அமானிதமாக ஒரு பொருளை அதன் உரிமையாளைடம் பாதுகாப்பாக ஒப்படைக்கட்டும். தன் அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளட்டும்
நூல்: மிஷ்காத்
அநாதைகளின் உரிமையைப் பேணுபவரின் சிறப்பு:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; நானும் அநாதையைப் பராமரிப்பவனும், ஆதரவற்றவர்களை அரவணைப்பவனும் சுவனத்தில் இப்படி இருப்போம்இதைச் சொல்லிவிட்டு அண்ணலார் நடு விரலையும், சுட்டு விரலையும் காட்டினார்கள். இருவிரல்களுக்கிடையிலும் சிறிது இடைவெளி விட்டிருந்தார்கள்
நூல்: புகாரி
மனைவி, பிள்ளைகள், குடுப்பத்தினரின் உரிமையை பேணுபவரின் சிறப்பு:
மனிதன் மறுமையில் நற்கூலி பெறும் எண்ணத்தில் தன் வீட்டாருக்கு செலவிடும் போது அது அவனுக்கு அறமாக (ஸதகாவாக) அமைந்துவிடுகிறது.என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நான் உங்களுக்கு மிகச் சிறந்த தர்மம் ஒன்றைக் கூறட்டுமா?என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அவசியம் கூறுங்கள் என மக்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள்அது தனக்குப் பொருளீட்டி உணவளிக்கக் கூடியவர் வேறு எவருமில்லை என்ற நிலையில் உன்பக்கம் திருப்பி அனுப்பபட்ட உன்மகள் தான்என்றார்கள்
நூல்: இப்னுமாஜா
இன்னும் ஏராளமான அருள்வளங்களை மனிதனுக்கு அல்லாஹ் வழங்குவதற்கு சக மனிதனின் உரிமைகளை, கடமைகளை நிறைவேற்றுவதில் தான் இணைத்திருக்கின்றான் என்பதை பல்வேறு நபி மொழிகளின் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடிகின்றது. ஆகவே, பிறரின் உரிமைகளை சரிவரப்பேணி மனித நேயப்பண்புடன் வாழும் மாண்பாளனாக நம்மை ஆக்கியருள்வானாக!
ஆமீன்