Thursday 14 July 2022

பள்ளிவாசல் நிர்வாகப் பொறுப்பு! அலங்காரமா? அமானிதமா?

 பள்ளிவாசல் நிர்வாகப் பொறுப்பு! அலங்காரமா? அமானிதமா?

துல்ஹஜ் பிறை: 20/12/1443
வெள்ளிக்கிழமை: 20/07/2022

இன்று பொறுப்புகள், பதவி, அதிகாரத்தின் மீதான ஆசைகள் பெருகிப் போயிருப்பதையும் அதை அடைவதற்காக எந்த எல்லை வரை வேண்டுமானாலும் செல்ல தயாராக இருப்பதையும் பரவலாக காண முடிகிறது.

முன்பெல்லாம் குரல் வாக்கெடுப்பில் நடைபெற்ற பள்ளிவாசல் நிர்வாக தேர்ந்தெடுப்பு தற்போது போலீஸின் பலத்த பாதுகாப்போடு தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்படுவதே நம் முன் இருக்கும் சாட்சியாகும்.

இஸ்லாமிய இயக்கங்களும் கட்சிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் பிண்ணனியும் இதன் காரணமாகத் தான் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பெரும்பாலான மக்கள் தாம் வகிக்கும் பொறுப்புகளை ஒரு அலங்காரமாகக் கருதிக் கொண்டு தங்களை ஏமாற்றிக் கொண்டு மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் பதவி - பொறுப்பு என்பது அமானிதம். அமானிதத்தை உரிய முறையில் பேணி மக்களின் நன்னம்பிக்கையைப் பெறுவதோடு இறைவனின் அருளையும் பெற வேண்டும்.

புகழ், அதிகாரம், செல்வாக்கு ஆகிய காரணங்களுக்காகவே பொறுப்புகளைப் பெறுவதற்கு ஆசைப்படுகின்றனர்.

ஆனால், இந்த மூன்று அம்சங்களும் மிகச்சரியான முறையில் பயன் படுத்தப்படுமேயானால் பொறுப்பு வகிப்பவர்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் இறைவனைச் சந்திப்பார்கள்.

ஆகவே இஸ்லாம் பொறுப்பு என்பது ஓர் அமானிதம் என்றும் அதை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. அவ்வாறு இஸ்லாம் வலியுறுத்தும் பொறுப்பை பற்றி இந்த உரையில் காண்போம்..

பொறுப்புகளுக்கு வருபவர்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்வது மிகவும் அவசியமாகும்.

1. இது இறைவன் தந்த அருட்கொடை..


நம்மில் ஒருவருக்குக் கிடைக்கின்ற பதவியாக இருந்தாலும், அந்தஸ்தாக இருந்தாலும், அதிகாரமாக இருந்தாலும், மக்களை நிர்வகிக்கின்ற எந்தப் பொறுப்பாக இருந்தாலும் இறைவனின் தனிப்பெரும் கிருபையினால்  கிடைத்திருக்கின்றது; எத்தனையோ அறிவிற் சிறந்தவர்கள், பட்டம் படித்தவர்கள், பணக்காரர்கள் இருந்தாலும் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு நம்மை இறைவன் தேர்ந்தெடுத்து இந்தப் பதவியைக் கொடுத்திருக்கின்றான் என்று நினைக்க வேண்டும்.

இது இறைவனின் மகத்தான கருணை என்றும் நம்முடைய உள்ளத்தில் ஆழமாகப் பதிய வைக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். 

قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

“ நபியே! நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சியதிகாரம்  அனைத்திற்கும் அதிபதியே! நீ  நாடுகின்றவர்களுக்கு ஆட்சியை அதிகாரத்தை கொடுக்கின்றாய்.  மேலும், நீ  நாடுகின்றவர்களிடமிருந்து  ஆட்சியை, அதிகாரத்தைப் பறிக்கின்றாய். நீ 
நாடுகின்றவர்களுக்கு  கண்ணியத்தை வழங்குகின்றாய். மேலும், நீ  நாடுகின்றவர்களை  இழிவு படுத்துகின்றாய். நலவுகள்  அனைத்தும் உன் கைவசமே  உள்ளன.” (அல்குர்ஆன்: 3: )

قَالَ الَّذِىْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْـكِتٰبِ اَنَا اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ يَّرْتَدَّ اِلَيْكَ طَرْفُكَ‌ؕ فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّىْ‌ۖ لِيَبْلُوَنِىْٓ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُ‌ؕ وَمَنْ شَكَرَ فَاِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهٖ‌ۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّىْ غَنِىٌّ كَرِيْمٌ‏

இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: “உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்: “இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாகும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்” என்று (ஸுலைமான்) கூறினார். (அல்குர்ஆன்: 27: 40)

ஆனால், இன்றைக்குப் பெரும்பாலானோர் தனக்குக் கிடைத்திருக்கின்ற பதவி, அதிகாரம், அந்தஸ்து போன்றவற்றை புகழுக்காகவும், பெருமைக்காகவும், பகட்டுக்காகவும் பயன்படுத்திக் கொண்டிப்பதைப் பார்க்கின்றோம்.

2. அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சமநிலையில் இருக்க வேண்டும்...

طُوبَى لِعَبْدٍ آخِذٍ بِعِنَانِ فَرَسِهِ فِي سَبِيلِ اللَّهِ، أَشْعَثَ رَأْسُهُ، مُغْبَرَّةٍ قَدَمَاهُ، إِنْ كَانَ فِي الحِرَاسَةِ، كَانَ فِي الحِرَاسَةِ، وَإِنْ كَانَ فِي السَّاقَةِ كَانَ فِي السَّاقَةِ، إِنِ اسْتَأْذَنَ لَمْ يُؤْذَنْ لَهُ، وَإِنْ شَفَعَ لَمْ يُشَفَّعْ

அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிந்திட) தன் குதிரையின் கடிவாளத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, பரட்டைத் தலையுடன் இரு கால்களும் புழுதியடைந்தவனாகச் செல்கின்ற அடியானுக்கு சொர்க்கம் கிடைக்கட்டும். (அவன் எத்தகையவன் என்றால்) அவன் (படையின் முன்னணிக்) காவல் அணியில் நியமிக்கப்பட்டிருப்பானாயின் அதிலேயே (ஆட்சேபணை ஏதுமின்றி) இருப்பான்.

பின்னணிப் படையில் நியமிக்கப்பட்டிருப்பானாயின் அதிலும் (எந்த முணுமுணுப்புமின்றி திருப்தியுடன்) இருப்பான். அவன் (யாரையும் சந்திக்க) அனுமதி கேட்டால் அவனுக்கு அனுமதி தரப்படாது; அவன்  பரிந்துரை செய்தால் அது (மக்களால்) ஏற்கப்படாது. (அந்த அளவிற்கு சாமானியனாக, எளியவனாகக் கருதப்படுவான்.) என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.   ( நூல்: புகாரி )

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம். காதிஸிய்யா யுத்தத்திற்காக காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் ஓர் படையை அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் அனுப்பி வைத்திருந்தார்கள்.

காதிஸிய்யா போர் கிஸ்ரா வம்ச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த போர் ஆகும். இதற்குப் பிறகு ஈராக் பகுதி முழுவதும் இஸ்லாமிய நிழலின் கீழ் வந்தது.

படை சென்ற பின்னர் ஒரு நாள் நகர் வலம் வந்து கொண்டிருந்த உமர் (ரலி) அவர்களின் காதில் பேரிடியாய் வந்து விழுந்தது அந்த வார்த்தைகள்.

ஏகத்துவத்தையும், இறை நம்பிக்கையையும் உரசிப்பார்ப்பதாய் உணர்ந்தார்கள் உமர் (ரலி) அவர்கள்.

ஆம்! மக்கள் “காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் தலைமையை ஏற்றுச் சென்றிருக்கும் முஸ்லிம் படை நிச்சயம் வெற்றியுடன் தான் திரும்பும்” என்று பேசிக்கொண்டனர்.

”உடனடியாக அபூ உபைதா இப்னு அல் ஜர்ராஹ் (ரலி) அவர்களின் கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பி இதை கொண்டு காதிஸிய்யாவிற்குச் செல்லுங்கள். அனைத்துப்படை வீரர்களுக்கு மத்தியில் இதைப்படித்துக் காட்டச் சொல்லுங்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் அபூ உபைதா (ரலி)  அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. படைவீரர்களின் ஊடாகச் சென்ற அபூ உபைதா (ரலி)  அவர்கள் தளபதி காலித் (ரலி)  அவர்களிடம் கொடுத்து ஆட்சித்தலைவர் சொன்ன விபரத்தைச் சொன்னார்கள்.

காலித் இப்னு வலீத் (ரலி)  கடிதத்தைப் பிரித்தார்கள்.  படித்தார்கள். அதில் இடம் பெற்றிருந்த வாசகம் இதோ! “ஆட்சித்தலைவர் உமர் அவர்களிடமிருந்து தளபதி மற்றும் படைவீரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்…. இதோ இந்த நிமிடத்திலிருந்து காலித் (ரலி) படைத்தளபதி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக 
அபூ உபைதா (ரலி)  நியமிக்கப்படுகின்றார். இது அமீருல் முஃமினீன் அவர்களின் உத்தரவு!

உடனடியாக முஸ்லிம்கள் அதை ஏற்று செயல்பட்டனர். அதே படையில் ஒரு வீரராக காலித் (ரலி) அவர்கள் பங்கு பெற்றார்கள்.

அபூ உபைதா (ரலி) அவர்களின் தலைமையில் முஸ்லிம்களின் படை வெற்றியோடு மதீனா திரும்பியது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களால் “ஸைஃபுல்லாஹ்” என்று கண்ணியப்படுத்தப்பட்டுள்ளேன்.  ஆகவே, என்னை நீக்கம் செய்தது செல்லாது என்றோ, தனியாய் பிரிந்து சென்று வேறு அணியில் முஸ்லிம்களை ஒன்றிணைப்பேன் என்றோ காலித் அவர்கள் சூளுரைக்கவில்லை.

மாறாக, அதே யுத்தகளத்தில் சாதாரண ஒரு படை வீரராகவே களம் கண்டார்கள் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள்.

பின்னாளில், ஒரு நாள் உமர் (ரலி)  அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் கலீஃபா அவர்களே! ”நான் எந்த ஒரு யுத்தகளத்திலும் இஸ்லாமிய யுத்த விதிகளை மீறியது கிடையாது. எந்த ஒரு மோசடியும் செய்தது கிடையாது. என் தலைமைப் பதவியை தவறாக பயன்படுத்தியதும் கிடையாது. எல்லா நிலையிலும் நான் ஓர் உண்மை இறை விசுவாசியாகவே நடந்து கொண்டிருக்கின்றேன்.

பின்னர் ஏன் நீங்கள் என்னை பதவி நீக்கம் செய்தீர்கள்? என்று கேட்டார்கள்.
قال عمر إني لم أعزل خالدًا عن سخطة ولا خيانة، ولكن الناس فتنوا به، فخفت أن يوكلوا إليه ويُبتلوا به. فأحببت أن يعلموا أن الله هو الصانع، وألا يكونوا بعرض فتنة.

அதற்கு உமர் (ரலி)  அவர்கள்  “என்னுடைய தனிப்பெரும் நேசத்திற்கும், பாசத்திற்கும் உடையவர்கள் நீங்கள். எப்போதும் உங்கள் மீது நான் தனிப்பெரும் கண்ணியம் வைத்துள்ளேன்.  உங்களை மோசடியாளனாகவோ அல்லது வேறு எந்த சிந்தனை கொண்டவனாகவோ நான் காணவில்லை.

மாறாக! அல்லாஹ்வை மட்டுமே நினைத்த இதயங்கள்!  அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடி கெஞ்சிய நாவுகள்! இப்பொது அதை உதறிவிட்டு காலித் போனால் வெற்றி, அவர் தலைமை தான் வெற்றிக்குரிய தலைமை என்று அல்லாஹ்வை மறந்து பேச எத்தனித்து விட்டனர்.

வேறு வழியில்லை உம்மை பதவியிலிருந்து இறக்கினால் தான் இம்மக்களுக்கு அல்லாஹ்வின் உதவி ஞாபகம் வரும் என்பதற்காகத் தான் உம்மை பதவி நீக்கம் செய்தேன்” என்றார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்…. என்று கூறி முக மலர்ச்சியுடன் அங்கிருந்து விடை பெற்றுச்சென்றார்கள் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள்.

அதன் பின்னரும் சாதாரண படை வீரராக தொடர்ந்து முஸ்லிம்களின் வெற்றி பேரணியில்  கலந்து கொண்டார். டமாஸ்கஸையும் ஹிம்மஸையும் சிரியாவின் பிற நகரங்களை வெற்றி கொள்வதிலும் அவர் பெரும் பங்காற்றினார். இராக்கும் சிரியாவும் இஸ்லாமிய உலகிற்கு காலிதின் (ரலியல்லாஹு அன்ஹு ) கொடைகள் என்று சொன்னால் மிகையாகாது ,

தளபதியாக இருந்து பின்னர் சாதாரண வீரராக இருப்பது உங்களுக்கு சிரமமாக இல்லையா என ஒருவர் கேட்டார்

நான் தளபதியாக இருந்த போதும் அல்லாஹ்வுக்காகவே போரிட்டேன். இப்போது சாதாரண வீரனாகவும் அல்லாஹ்வுக்காகவே போரிடுகிறேன். இதில் எனக்கு வித்தியாசம் எதுவும் இல்லை என்றார் காலித் (ரலி) அவர்கள்.
(நூல்: குலஃபாவுர்ரஸூல் {ஸல்},  பக்கம்: 186-187 )

ஆனால், இன்றோ தாம் பொறுப்பு வகிக்கும் போது ஒரு மாதிரியும் பொறுப்பில் இருந்து வெளியே வந்த பிறகு மக்கள் நல பணிகளை செய்வதில் வேறு விதமாகவும் நடந்து கொள்வதைக் காணலாம். மேலும், புதிய பொறுப்புதாரிகள் கொண்டு வரும் பல நல்ல திட்டங்களுக்கு முட்டுக் கட்டையாக இருப்பதும் இவர்கள் தாம்.

3. பொறுப்பு மறுமை வாழ்வை, சுவனத்தை தீர்மானிக்கும் மகத்தான ஆயுதம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا أَبُو الأَشْهَبِ، عَنِ الحَسَنِ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ زِيَادٍ
عَادَ مَعْقِلَ بْنَ يَسَارٍ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ، فَقَالَ لَهُ مَعْقِلٌ إِنِّي مُحَدِّثُكَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ عَبْدٍ اسْتَرْعَاهُ اللَّهُ رَعِيَّةً، فَلَمْ يَحُطْهَا بِنَصِيحَةٍ، إِلَّا لَمْ يَجِدْ رَائِحَةَ الجَنَّةِ
மஅகில் இப்னு யஸார் (ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அன்னாரைச் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில் (ரலி) அவர்கள் “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி (ஸல்) அவர்கள், “ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களது நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக்கூட அவன் பெறமாட்டான்’ என்று சொல்ல நான் கேட்டேன்’’ எனக் கூறினார்கள். ( நூல்: புகாரி )

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
إِنَّكُمْ سَتَحْرِصُونَ عَلَى الإِمَارَةِ، وَسَتَكُونُ نَدَامَةً يَوْمَ القِيَامَةِ، فَنِعْمَ المُرْضِعَةُ وَبِئْسَتِ الفَاطِمَةُ»، 

நீங்கள் அதிகாரத்தை, பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தரும் சுகங்)களிலேயே பதவி(ப் பால்)தான் இன்பமானது. பாலை மறக்கவைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது" என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.                ( நூல்: புகாரி )

4. பொறுப்புகளை கேட்டுப் பெறுவது & பொறுப்புகளைப் பெற போட்டி போடுவதன் ஆபத்தை அஞ்ச வேண்டும்...

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ العَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا وَرَجُلاَنِ مِنْ قَوْمِي، فَقَالَ أَحَدُ الرَّجُلَيْنِ: أَمِّرْنَا يَا رَسُولَ اللَّهِ، وَقَالَ الآخَرُ مِثْلَهُ، فَقَالَ: «إِنَّا لاَ نُوَلِّي هَذَا مَنْ سَأَلَهُ، وَلاَ مَنْ حَرَصَ عَلَيْهِ

நானும் என் சமூகத்தாரில் இரண்டு பேரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். (என்னுடன் வந்த) அவ்விருவரில் ஒருவர், “எங்களுக்குப் பதவி தாருங்கள், அல்லாஹ்வின் தூதரே!’’ என்று கேட்டார். மற்றொருவரும் அவ்வாறே கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “கேட்பவருக்கும் ஆசைப்படுபவருக்கும் நாம் இதை (பதவியை) வழங்கமாட்டோம்’’ என்று சொன்னார்கள். என அபூ மூஸல் அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: புகாரி )

قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَلَا تَسْتَعْمِلُنِي؟ قَالَ: فَضَرَبَ بِيَدِهِ عَلَى مَنْكِبِي، ثُمَّ قَالَ: «يَا أَبَا ذَرٍّ، إِنَّكَ ضَعِيفٌ، وَإِنَّهَا أَمَانَةُ، وَإِنَّهَا يَوْمَ الْقِيَامَةِ خِزْيٌ وَنَدَامَةٌ، إِلَّا مَنْ أَخَذَهَا بِحَقِّهَا، وَأَدَّى الَّذِي عَلَيْهِ فِيهَا

அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் என்னை (ஏதாவது) பொறுப்பில் அமர்த்தக் கூடாதா?’’ என்று நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய கையால் எனது தோள்பட்டையில் அடித்துவிட்டு, ‘‘அபூதர்ரே! நீர் பலவீனமானவர். அதுவோ அமானிதம். யார் அதை கையாள வேண்டிய முறைப்படி கையாண்டு தன் மீதுள்ள கடமையை நிறைவேற்றுகிறாரோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) மறுமை நாளில் அது இழிவாகவும் கைசேதமாகவும் இருக்கும்’’ என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

5.பொறுப்புகளை மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றுபவர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் துஆவும், மறுமையில் நல் வாழ்வும் உண்டு...

عن عائشة رضي الله عنها قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم
يَقُولُ فِي بَيْتِي هَذَا: «اللهُمَّ، مَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئًا فَشَقَّ عَلَيْهِمْ، فَاشْقُقْ عَلَيْهِ، وَمَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئًا فَرَفَقَ بِهِمْ، فَارْفُقْ بِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய இந்த இல்லத்தில் வைத்து, “இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கினால், அவரை நீயும் சிரமத்திற்குள்ளாக்குவாயாக! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர்,  அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டால், நீயும் அவரிடம் மென்மையாக நடந்து கொள்வாயாக!’’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: முஸ்லிம் )

إِنَّ الْمُقْسِطِينَ عِنْدَ اللهِ عَلَى مَنَابِرَ مِنْ نُورٍ، عَنْ يَمِينِ الرَّحْمَنِ عَزَّ وَجَلَّ، وَكِلْتَا يَدَيْهِ يَمِينٌ، الَّذِينَ يَعْدِلُونَ فِي حُكْمِهِمْ وَأَهْلِيهِمْ وَمَا وَلُوا

தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளில் நேர்மையாக நடந்து கொண்டவர்கள் வல்லமையும் மாண்பும் மிக்க அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் வலப்பக்கத்தில் ஒளியாலான மேடைகளில் இருப்பார்கள். அவனுடைய இரு கைகளுமே வலக்கரமே (வளமிக்கதாகும்). அவர்கள் தமது நிர்வாகத்திலும்,  குடும்பத்திலும், தாம் பொறுப்பேற்றுக் கொண்ட (அனைத்)திலும் நியாயமாக நடந்து கொண்டனர் (என்பதே இச்சிறப்புக்குக் காரணம்). ( நூல்: முஸ்லிம் )

6.பொறுப்புகள் குறித்து விசாரணை கட்டாயம் உண்டு...

عن ابن عمر رضي الله عنهما، عن النبي صلى الله عليه وسلم قال: ((كلُّكم راعٍ، وكلُّكم مسؤولٌ عن رعيَّتِه، والأمير راعٍ، والرجل راعٍ على أهل بيته، والمرأة راعية على بيت زوجها وولدِه، فكلُّكم راعٍ، وكلُّكم مسؤول عن رعيَّتِه))؛ متفق عليه.

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே! உங்கள் பொறுப்பில் உள்ளவர் குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சியாளர் தமது பொறுப்பில் உள்ளவர்கள் குறித்து கேள்விகள் கேட்கப்படுவார். குடும்பத்தலைவர் தமது குடும்பத்தார்க்கு அவர் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் சம்பந்தமாக விசாரிக்கப்படுவார். குடும்பத் தலைவியும் பொறுப்பாளரே!  அவர் தமது பொறுப்பில் உள்ள தமது கணவரின் வீட்டார் குறித்தும் தமது பிள்ளைகளுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகள் குறித்தும் கேள்வி கேட்கப்படுவார். எஜமானர் பொறுப்பாளரே! அவர், தமக்குக் கீழே பணிபுரியும் பணியாட்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் குறித்து கேள்விகள் கேட்கப்படுவார்!” என்று  நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

மஸ்ஜித் பரிபாலனம்...

இன்று பள்ளிவாசல் நிர்வாக பொறுப்புகளுக்கு போட்டி நிலவுவதை சமூகத்தில் பார்க்க முடிகிறது.

பள்ளிவாசல் நிர்வாகப் பொறுப்புகள் என்பது இன்று சாதாரணமாக பார்க்கப்படுகிறது.

பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது மராமத்து மற்றும் பராமரிப்பு பணிகள் செய்வது நோன்பு காலங்களில் கஞ்சி காய்ச்சுவது ஈதுல் அள்ஹா அன்று கூட்டு குர்பானி கொடுப்பது என்று குறுகிய வட்டத்திற்குள் அமைந்து விட்டது.

இன்னும் சிலர் மண்டபம் கட்டுவது, கடைகள், காம்ப்ளக்ஸ் கட்டி வருமானத்தை பெருக்குவது போன்றவை தான் பிரதானம் என்று கருதத் தொடங்கி விட்டனர்.

இவையெல்லாம் பள்ளிவாசல் பொறுப்புகளில் நூறில் ஒரு பங்கு தான்.

மீதமுள்ள 99 சதவீதம் சமூகத்தின் நலன் சார்ந்தது. சமூகத்தின் உயர்வு சார்ந்தது. சமூகத்தின் மேம்பாடு சார்ந்தது. சமூகத்தின் உலக மற்றும் மறுமை சார்ந்த வாழ்க்கை கட்டமைப்புடன் தொடர்புடையது.

பெருமானார் ஸல் அவர்களின் பள்ளிவாசலும், கலீஃபாக்கள் அமைத்த பள்ளிவாசல்களும், இஸ்லாமிய ஆட்சியாளர்கள் நிர்மாணித்த பள்ளிவாசல்களும் அப்படித்தான் அமைந்திருந்தன.

பள்ளிவாசல் கட்டுவது, கட்டுவதற்கு உதவுவது, பள்ளிவாசலில் ஜமாஅத்தோடு தொழுவது, வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது, இஃதிகாஃப் இருப்பது எவ்வளவு நன்மைகளைப் பெற்றுத்தருமோ அதே போன்று தான் பள்ளிவாசலோடு நெருங்கிய தொடர்பில் இருப்பதும் சதா எப்போதும் பள்ளிவாசலின் நினைவோடு இருப்பதும் அளப்பரிய நன்மைகளைப் பெற்றுத் தரும்.

وفي الترمذي عن النبي صلى الله عليه وسلم أنه قال :

إذا رأيتم الرجل يعتاد المسجد فاشهدوا له بالإيمان ; لأن الله يقول : { إنما يعمر مساجد الله الآيةقلت : رواه الترمذي كما قال شيخ الإسلام من حديث أبي سعيد الخدري رضي الله عنه وقال : حديث حسن غريب ، ورواه ابن ماجه وابن خزيمة وابن حبان في صحيحيهما والحاكم من طريق دراج أبي السمح عن أبي الهيثم عن أبي سعيد وقال الحاكم صحيح الإسناد .


அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இறையில்லத்தோடு அதிக தொடர்பில் இருப்பவரைக் கண்டால் அவர், இறைநம்பிக்கை உள்ளவர் என்று நீங்கள் சாட்சியம் சொல்லுங்கள்” என்று கூறிய மாநபி {ஸல்} அவர்கள் “அல்லாஹ்வின் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களே!  இறையில்லங்களை நிர்வகிக்கத் தகுதியுடையோர்” என அல்லாஹ் கூறியுள்ளான், என்று கூறினார்கள்.                      ( நூல்: திர்மிதீ )

وعن أبي هريرة قالَ: قالَ رسُولُ اللَّه ﷺ: سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ في ظِلِّهِ يَوْمَ لا ظِلَّ إلَّا ظِلُّهُ: إِمامٌ عادِلٌ، وشابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللَّه تَعالى، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ في المَسَاجِدِ، وَرَجُلانِ تَحَابَّا في اللَّه: اجتَمَعا عَلَيهِ، وتَفَرَّقَا عَلَيهِ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ، وَجَمَالٍ فَقَالَ: إِنِّي أَخافُ اللَّه، ورَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فأَخْفَاها، حتَّى لا تَعْلَمَ شِمالُهُ مَا تُنْفِقُ يَمِينهُ، ورَجُلٌ ذَكَرَ اللَّه خالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ متفقٌ عَلَيْهِ.
அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

எனவே, மேற்கூறிய இரண்டு நபி மொழிகளும் பள்ளிவாசலில் பொறுப்புகளைப் பெற்று சதா பள்ளிவாசலின் நினைவோடும் தொடர்போடும் இருப்பவர்களுக்கான நன்மைகள் குறித்து கூறுவதை விளங்கிக் கொள்ளலாம்.

1. முஸ்லிம்களின் மக்கள் தொகையை கணக்கெடுத்தல்.

பள்ளிவாசலில் நிர்வாகப் பொறுப்பு வகிக்கும் நிர்வாக கமிட்டியின் முதல் பணி இங்கிருந்து துவங்குகிறது.
மஹல்லாவில் வசிக்கும் மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஆண்/பெண், சிறுவர்/ சிறுமியர், குழந்தைகள், முதியோர், விதவைகள், வறியோர், ஏழைகள், ஜகாத் கொடுக்கும் செல்வந்தர்கள், பள்ளிவாசலுடன் தொடர்பில் இருப்பவர்கள், தொடர்பில் இல்லாதவர்கள், குர்ஆன் ஓதத் தெரிந்தவர்கள்/ ஓதத் தெரியாதவர்கள். சமீபத்திய நாட்களில் பிறந்தவர்கள்/ இறந்தவர்கள் என அனைத்து விவரங்களும் அடங்கிய ஒரு ரிஜிஸ்டர் ஆவணப் பதிவு ஒரு மஹல்லாவின் மஸ்ஜிதில் இருப்பது அவசியமாகும்.

ஏனெனில், மதீனாவிற்குள் அடியெடுத்து வைத்த நொடிப்பொழுதுகளில் இருந்து துவங்கிய மாநபி {ஸல்}  அவர்களின் “இந்த உம்மத்தின் உயர்வு குறித்தான கவலை, தீனுல் இஸ்லாத்தின் எழுச்சி குறித்தான சிந்தனை” மாநபி {ஸல்} அவர்கள் மரணத்தை தழுவும் கடைசி நிமிடம் வரை இருந்தது என்று சொன்னால் அது மிகையல்ல.

மதீனாவின் வருகைக்குப் பின்னர் மாநபி {ஸல்} அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் தீர்க்கமான திட்டமிடல், கள ஆய்வு, மதிவியூகம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது.

முஸ்லிம்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பு

பெருமானார் {ஸல்} அவர்கள் மதீனாவிற்கு வந்த பின்னால் மேற்கொண்ட பணிகளில் மிக முக்கியமானது “முஸ்லிம்களின் எண்ணிக்கையை” கணக்கெடுக்கச் சொன்னது தான்.

எந்தளவுக்கு முஸ்லிம்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பது என்றால் வயது வாரியாக,  குடும்ப, கோத்திர வாரியாக,  தலைமுறை வாரியாக,  மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், ஏழை, பணக்காரர்கள், உள்ளூர்,  வெளியூர் வாசிகள் என எல்லாமும் இடம் பெற்றிருந்தது.

இன்னும் சொல்லப்போனால்,  பெரும்பாலான நபித்தோழர்களின் வாழ்க்கைத் தரவுகளை பதிவு செய்து வைத்திருக்கும் தாரீஃக், ஸீரத் என்னும் வரலாற்று ஆசிரியர்களின் நூற்களில் நபித்தோழர்கள் அவர்கள் தம் வீடுகளில் பயன்படுத்திய பண்ட பாத்திரங்கள், அன்றாடம் உடுத்தும் ஆடைகள், யுத்தகளத்திற்கு பயன்படுத்திய ஆயுதங்கள், வாகனிக்க பயன்படுத்திய வாகனங்கள், அவர்களின் தோட்டம் துறவுகள், நில புலன்கள்,  தோட்டத்தில் இருந்த மரங்கள் உட்பட கணக்கெடுக்கப்பட்டது.

உதாரணத்திற்கு ஜுபைர் இப்னு அல் அவ்வாம் (ரலி) அவர்களின் வீடு மற்றும் வணிக, விவசாய பணியாளர்கள் எண்ணிக்கை 1000  நபர்கள் என்பது வரை கணக்கிடப் பட்டுள்ளது.

இஸ்லாத்தின் முதல் யுத்தமான ஹிஜ்ரி இரண்டில் நடைபெற்ற பத்ர் அதில் கலந்து கொண்ட முஹாஜிர்கள் எண்ணிக்கை 82,  அன்ஸார்களில் அவ்ஸ் கோத்திரத்தாரின் எண்ணிக்கை 61,  கஸ்ரஜ் கோத்திரத்தாரின் எண்ணிக்கை 170 மொத்தம் 313.

தவிர்க்க முடியாத காரணங்களால் வர முடியாத நபித்தோழர்கள் எண்ணிக்கை 7. உஸ்மான் (ரலி) (மனைவி நோய்வாய்ப்படுதல்) ஹுதைஃபா (ரலி அவர்களின் தந்தை அல் யமான் (ரலி) (எதிரிகள் தடுத்தல்) அனஸ் இப்னு நள்ர் (ரலி) (வியாபார பயணம் ஷாம்) கஅப் இப்னு மாலிக் (ரலி) (காரணம் அறியப்படவில்லை) இப்னு உமர் (ரலி), பர்ராவு இப்னு ஆஸிப் (ரலி) (சிறுவர் என்ற காரணத்திற்காக தடுக்கப்படல்)

யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் குதிரை 1,  ஒட்டகங்கள் 70.

ஷுஹதாக்கள் முஹாஜிர்களில் 6, அன்ஸார்களில் கஸ்ரஜ் கோத்திரத்தார்களில் 6. அவ்ஸ் கோத்திரத்தார்களில் 2 மொத்தம் 14 ஷுஹதாக்கள்.

ஹிஜ்ரி 3, -ல் உஹத் கலந்து கொண்ட முஸ்லிம் வீரர்கள் எண்ணிக்கை 700, போருக்கு வராமல் புறமுதுகிட்டு ஓடிய நயவஞ்சகர்கள் எண்ணிக்கை 300. ஷுஹதாக்கள் 70. காயமுற்றோர் 630.

ஹிஜ்ரி 5 –ல் அஹ்ஸாப், கலந்து கொண்ட முஸ்லிம் வீரர்கள் 3000.

ஹிஜ்ரி 6 –ல் ஹுதைபிய்யா ஒப்பந்தம் கலந்து கொண்டவர்கள் 1400.

ஹிஜ்ரி  7- ல் கைபர் கலந்து கொண்ட முஸ்லிம் வீரர்கள் 1600, ஷுஹதாக்கள் 20, காயமுற்றோர் 50.

ஹிஜ்ரி 8 –ல் மக்கா வெற்றி கலந்து கொண்ட முஸ்லிம் வீரர்கள் 10000.

ஹிஜ்ரி 8 –ல் ஹுனைன் கலந்து கொண்ட முஸ்லிம் வீரர்கள் 12000.

ஹிஜ்ரி 9 –ல் தபூக் கலந்து கொண்ட முஸ்லிம் வீரர்கள் 30000 க்கும் மேல்.

ஹிஜ்ரி 10- ஹஜ்ஜத்துல் விதாஃ பங்கெடுத்த ஹாஜிகள் 124000 க்கும் மேல்.

அடுத்து நபித்தோழர்களில் ஜன்னத்துல் பகீவிலே நல்லடக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10000. மக்கா, மதீனாவிற்கு வெளியே சிரியா, பலஸ்தீன்,  மிஸ்ர், எகிப்து போன்ற பகுதிகளில் நல்லடக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 30000 என கணக்கெடுப்பு விஷயத்தில் நபித்தோழர்களான மேன்மக்கள் மிகவும் கவனமாக செயல்பட்டார்கள்.

2. மஸ்ஜித் வளாகத்தில் உலக/இஸ்லாமிய கல்விக் கூடங்கள் அமைத்தல்.

மஸ்ஜிதுன் நபவியை ஒட்டிய ஒரிடத்தில் இவர்கள் தங்கி வந்தனர். ஆதரவற்றவர்கள் தங்குவதற்காகவே இந்த இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த இடத்தையே ஸுஃப்பா (திண்ணை) என்பர். இவர்களின் எண்ணிக்கை அவ்வப்போது கூடும்; குறையும். இவர்களில் திருமணம் செய்து கொண்டவர், இறந்து போனவர், பயணம் சென்றவர் ஆகியோரால் அவ்வப்போது இவர்களின் எண்ணிக்கை குறைவதுண்டு.

நூற்றுக்கும் அதிகமானோர் இவ்வாறு இருந்து வந்ததாக அபூநுஐம்(ரஹ்) அவர்கள் ஹுல்யாவில் குறிப்பிட்டுள்ளார்கள்.
 இன்னும் சில வரலாற்று நூற்களில் 70 முதல் 100, என்றும் 300 மேற்பட்டோர் என்று எழுதப் பட்டுள்ளது.

நபி(ஸல்) அவர்கள் தமது பெரும்பாலான நேரங்களில் இவர்களுடன் அமர்ந்திருப்பது வழக்கம். அவர்களோடு அளவளாவுவார்கள். 

இவர்களின் முக்கிய பணி நபி(ஸல்) அவர்களிடமிருந்து குர்ஆனையும் கற்றுக்கொள்வது, மார்க்கச் சட்டங் களைக் கற்றுக் கொள்வதே ஆகும். அல்லது நபி (ஸல்) அவர்கள் யாரிடம் கற்றுக் கொள்ளும் படிக் கூறுகிறார்களோ அவர்களிடம் கற்றுக் கொள்வதாகும். போர் வந்து விட்டால், இவர்களுள் சக்தி பெற்றவர்கள் போருக்காகப் புறப்படுவார்கள். இவர்களுள் முக்கியமானவர் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் ஆவார்கள்.

கலீஃபா அல்வலீத் பின் அப்தில் மலிக் என்பவர் காலம் வரை திண்ணைத் தோழர்கள் வசித்த அந்தத் திண்ணை அப்படியே இருந்தது. மதீனா பள்ளியை விரிவு படுத்த வேண்டும் என்பதற்காக இவர் அதை மாற்றியமைத்து விட்டார். அது தற்போது ‘தக்கத்துல் அக்வாத்’ என அழைக்கப்படுகிறது.

كان ناس من الأسرى يوم بدر لم يكن لهم فداء فجعل رسول الله صلى الله عليه وسلم فداءهم أن يعلموا أولاد الأنصار الكتابة.

பத்ர் யுத்தம் நடைபெற்று முடிந்து இறைமறுப்பாளர்கள் கைதிகளாய்  பிடிக்கப்பட்டு மஸ்ஜிதுந் நபவீயின்  முன்னர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.கைதிகள் தங்களை  விடுவிப்பதற்காக மேற்கொள்ள  வேண்டியவைகளின் ஒன்றாக  கைதிகள் தாங்கள் கற்றறிந்து  வைத்திருப்பதை முஸ்லிம்களுக்கு  கற்றுக் கொடுத்துவிட்டு தம்மை விடுவித்துக் கொள்ளலாம் என்று மாநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

முஸ்லிம்களுக்கு கற்றுக்கொடுக்க  அவர்களென்ன மார்க்க  அறிஞர்களா?

ஆக, உலக அறிவும் முஸ்லிம்கள்  பெற்றிருக்க வேண்டும் என்பதை  பெருமானார் (ஸல்) அவர்கள்  விரும்பினார்கள் என்பதை  இச்சம்பவத்தின் மூலம் அறிய  முடிகிறது.

மஸ்ஜிதுன் நபவீ வளாகத்தில் மார்க்க அறிவும் உலக அறிவும் போதிக்கப்பட்டது என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது.

3. பள்ளிவாசல் வளாகத்தில் மருத்துவமனை அமைத்தல்...


وقد عرف المسلمون أول مستوصف في الإسلام في عهد رسول الله – صلى الله عليه وسلم – عندما أمر بإقامته أثناء غزوة الخندق في (5 هـ - 627 م) على هيئة خيمة في مسجد المدينة لعلاج الجرحى والمصابين وتضميد جراحهم، فكانت بمثابة أول مستشفى حربي متنقل، ويؤكد ذلك ما روته أم المؤمنين السيدة عائشة – رضي الله عنها – حيث قالت: (أصيب سعد يوم الخندق في الأكحل فضرب النبي صلى الله عليه وسلم خيمة في المسجد ليعودوا من قريب، فلم يرعهم – وفي المسجد خيمة من بني غفار – إلا الدم يسيل إليهم فقالوا: يا أهل الخيمة ما هذا الذي يأتينا من قبلكم فإذا سعد يغذو جرحه دما فمات فيها) (يغذو: أي يسيل)

أمر النبي –صلى الله عليه وسلم– أن يتم نقل سعد بن معاذ –رضي الله عنه- إلى "خيمة رفيدة الأسلمية" -التي كانت تعتبر بمثابة أول ممرضة تقوم بعلاج المرضى- لمداواتهم حتى لا يفقدوا الكثير من الدماء، (كان رسول الله -صلى الله عليه وسلم- قد جعل سعد بن معاذ في خيمة لامرأة من أسلم، يقال لها رفيدة، في مسجده، كانت تداوي الجرحى، وتحتسب نفسها على خدمة من كانت به ضيعة من المسلمين، وكان رسول الله -صلى الله عليه وسلم- قد قال لقومه حين أصابه السهم بالخندق: اجعلوه في خيمة رفيدة حتى أعوده من قريب)، وفقا لما جاء في كتاب (السيرة النبوية) لابن هشام.

இஸ்லாமிய வரலாற்றில் முதல் மருத்துவமனை மாநபி ஸல் அவர்கள் வாழும் காலத்தில் நடமாடும் மருத்துவமனைகளாக செயல்பட்டது.

பின்னர் ஹிஜ்ரி 5- ஆம் ஆண்டு ஃகன்தக் யுத்தத்தின் போது மஸ்ஜிதுன் நபவீயின் ஓரப்பகுதியில் நிறுவப்பட்டது.

அந்த மருத்துவமனையின் முதல் மருத்துவராக அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த ருஃபைதா அல் அஸ்லமீ (ரலி - அன்ஹா) என்கிற பெண்மணி மாநபி ஸல் அவர்களால் நியமனம் செய்யப்பட்டார்கள்.

முதல் சிகிச்சையாளராக ஸஅத் இப்னு முஆத் (ரலி - அன்ஹு) சிகிச்சை பெற்றார்கள்.

தங்களுடைய தந்தையின் பாரம்பரிய மருத்துவ சிகிச்சை முறையை கற்று தந்தையிடம் நர்ஸ் - செவிலியராக சேவை செய்து பின்னர் மருத்துவராக உயர்வு பெற்று பல்வேறு செவிலியர்களையும் மருத்துவர்களையும் உருவாக்கினார்.

4. மஸ்ஜித் வளாகம் சேவைகள் மையமாகத் திகழ வேண்டும்...

1. கடன் பட்டோர் மீட்பகமாக...
நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த ஆரம்ப கால கட்டத்தில் பைத்துல்மாலில் அதிகமான பண வசதி இருக்கவில்லை. 
அப்போது, இறந்து போனவர்களுக்கு நடத்தப்படுகிற ஜனாஸா தொழுகை விஷயத்தில் நபி ஸல் அவர்கள் இரண்டு முறைகளைக் கையாண்டனர்.

சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது: இறுதித் தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. “இவர் கடனாளியா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, நபித் தோழர்கள் இல்லை என்றனர்.  அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். 

عن جابر بن عبد الله قال : توفي رجل فغسلناه وكفناه وحنطناه ثم أتينا به رسول الله – صلى الله عليه وسلم – ليصلي عليه ، فقلنا : تصلي عليه ؟ فخطا خطوة ثم قال: " أعليه دين ؟ " قلنا : ديناران ، فانصرف ، فتحملهما أبو قتادة ، فأتيناه ، فقال : أبو قتادة : الديناران عليّ ، فقال رسول الله : " قد أوفى الله حقَّ الغريم وبرئ منهما الميت ؟ قال : نعم ، فصلى عليه ، ثم قال بعد ذلك بيومين : " ما فعل الديناران ؟
 قلت : إنما مات أمس ، قال : فعاد إليه من الغد فقال : قد قضيتها ، فقال رسول الله : الآن بردت جلدته " رواه أحمد وصححه الحاكم وحسنه المنذري

பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது ”இறைத்தூதர் அவர்களே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு 'நபி {ஸல்} அவர்கள் 'இவர் கடனாளியா?' என்று கேட்டபோது 'ஆம்' எனக் கூறப்பட்டது. 'இவர் ஏதேனும்விட்டுச் சென்றிருக்கிறாரோ?' என்று நபி {ஸல்} அவர்கள் கேட்டபோது 'இல்லை' என்றனர்.

 'இவர் எதையேனும்விட்டுச் சென்றிருக்கிறாரோ? என்று நபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள். 'இவர் கடனாளியா? என்று நபி {ஸல்} அவர்கள் கேட்டபோது  'இரண்டு தங்கக் காசுகள் கடன் வைத்திருக்கிறார்' என்று நபித்தோழர்கள் கூறினார்கள்.

நபி {ஸல்} அவர்கள் 'உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்' என்றனர். அப்போது, நடத்துங்கள்' என்றனர். அப்போது அபூ கதாதா (ரலி) 'இவரின் கடனுக்கு நான் பொறுப்பு; தொழுகை நடத்துங்கள்' என்று கூறியதும் நபி {ஸல்} அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.

பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அவரின் கடனை அடைத்து விட்டீரா? என்று என்னிடம் கேட்டார்கள். நான் “அல்லாஹ்வின் தூதரே! நேற்று தானே இறந்திருக்கின்றார்? என்றேன்.

பின்னர், மறுநாள் நானே மாநபி {ஸல்} அவர்களிடம் சென்று “அல்லாஹ்வின் தூதரே! அந்த இரண்டு தீனார் கடனை நான் அடைத்து விட்டேன்” என்றேன். அதற்கு நபி {ஸல்} அவர்கள் “இப்போது தான் அவரின் உடல் மண்ணறையில் குளிர்ந்து இருக்கும்” என்று நவின்றார்கள். (நூல்: புகாரி – 2295)
ஒரு மனிதருக்கு ஜனாஸா தொழுகை என்பது கடைசி தொழுகை, அதில் நபி(ஸல்) அவர்களுடைய துஆ முக்கியமானது. அதைக் கூட கடன்பட்டவர்  இழக்கக் கூடிய நிலை ஏற்பட்டது.

சில ஆண்டுகள் இந்த நிலை தொடர்ந்தது. பின்னர் கைபர் வெற்றி பஹ்ரைன் போன்ற நாடுகள் வெற்றி கொள்ளப்பட்டு பைத்துல்மாலுடைய நிதி அதிகமாகக் கிடைத்தது. இதன் காரணமாக நபி (ஸல்) அவர்கள், “உங்களுடைய சகோதரன் ஒருவன் மரணம் அடைந்து ஏதாவது விட்டுச் சென்றிருந்தால் அதை அவருடைய வாரிசுகள் எடுத்துக் கொள்ளட்டும்.

கடன் பட்டிருந்தால் என்றால் என்னிடம் கொண்டு வாருங்கள்; அதனை நான் நிறைவேற்றுகிறேன். உங்களில் நான் தான் மிகத் தகுதி வாய்ந்தவன்‘ என்று கூறுவார்கள். இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் உறுதிப்படுத்துகின்றன.

روى البخاري ومسلم في صحيحهما عن أبي هريرة رضي الله عنه: أن النبي صلى الله عليه وسلم كان يؤتى بالرجل المتوفى عليه الدين فيسأل: هل ترك لدينه فضلاً؟ فإن حدث أنه ترك لدينه وفاءً صلى، وإلا قال للمسلمين: صلوا على صاحبكم، فلما فتح الله الفتوح قال: "أنا أولى بالمؤمنين من أنفسهم، فمن توفي من المؤمنين، فترك ديناً فعلي قضاؤه، ومن ترك مالاً فلورثته. 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: கடன்பட்டு இறந்தவர் நபி(ஸல்) அவர்களிடம் (ஜனாஸாத் தொழுகைக்காகக்) கொண்டு வரப்படுவார்; அப்போது “இவர் கடனை அடைக்க ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா? என்று கேட்பார்கள். “கடனை அடைப்பதற்குப் போதுமானதை விட்டுச் சென்றிருக்கிறார்‘ என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால், நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள்!‘ என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள்.

அல்லாஹ் அவர்களுக்கு மிகுதியான வெற்றிகளைக் கொடுத்தபோது (அதன் மூலம் செல்வம் குவிந்ததால்), மூமின்களைப் பொறுத்தவரை அவர்கள் விஷயத்தில் நானே அதிக உரிமையுடையவன்! மூமின்களில் யாரேனும் கடன்பட்ட நிலையில் இறந்துவிட்டால் அதை நிறைவேற்றுவது என் பொறுப்பாகும்! யாரேனும் செல்வத்தை விட்டுச் சென்றால் அது அவர்களின் வாரிசுகளுக்குரியதாகும்! என்று கூறினார்கள். (நூல்: புகாரி – 2298)

2. மக்கள் தேவைகள் நிறைவேற்றப் படும் இடமாக...

وفي سنن الترمذي عن بشر بن بشير الأسلمي عن أبيه قال: (لما قدم المهاجرون المدينة استنكروا الماء (لم يستسيغوا طعمه)، وكانت لرجل من بني غفار عين (ينبوع الماء الذي ينبع من الأرض ويجري) يقال لها: رومة، وكان يبيع منها القِربة بمُد (مقدار ما يملأ الرجل كفيه طعاما)، فقال له النبي صلى الله عليه وسلم: تبيعنيها بعين في الجنة؟ فقال: يا رسول الله ليس لي ولا لعيالي غيرها، فبلغ ذلك عثمان رضي الله عنه فاشتراها بخمسة وثلاثين ألف درهم، ثم أتى النبي صلى الله عليه وسلم فقال: أتجعل لي فيها ما جعلت له؟ قال: نعم، قال عثمان: قد جعلتها للمسلمين). 

நபி (ஸல்) அவர்கள் ஹிஜிரத் செய்து மதீனா வந்த புதிதில் முஸ்லிம்களுக்கு தண்ணீர் தேவை அதிகரித்தது வறட்சியான காலமும் கூட அது. மக்கள்அங்கிருக்கும் ரூமத்துல் ஃகிஃபாரி (ரலி) என்கிற நபித்தோழருக்குச் சொந்தமான  பிஃர-ரூமா எனும்  கிணற்றிலிருந்து   முஸ்லிம்கள்ஒரு முத்து விலையாக  கொடுத்து  ஒரு தோல் பை  தண்ணீர்  பெற்றுக் கொண்டிருந்தனர்.

மக்கள் பொருளாதார நெருக்கடியால் ஒரு முத்து அளவிலான உணவுப் பொருளை கொடுத்து தண்ணீர் பெற முடியாமல் தவித்த போது கிணற்றின் உரிமையாளரிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் "தோழரே! சுவனத்தின் ஒரு ஊற்றுக்குப் பகரமாக உமது கிணற்றை எனக்கு விலைக்கு தருவீரா?" என்று கேட்டார்கள்.

அதற்கவர் "அல்லாஹ்வின் தூதரே! எனக்கும் என் குடும்பத்தாருக்கும் அந்த கிணற்றைத் தவிர வேறு எந்த சொத்துக்களும் இல்லை" என்று கூறி மறுத்து விட்டார்.

இந்த தகவலை அறிந்த ஹழ்ரத்  உஸ்மான் (ரலி) அவர்கள்  35000 தீனார் கொடுத்து  முழுக் கிணற்றையும் விலைக்கு வாங்கி  மதினமாநகர் முழுவதுமுள்ள  மக்களெல்லாம் பயன் பெறும் பொருட்டு  அதை வக்ஃபு செய்தார்கள். ( நூல்: திர்மிதீ )

3.வறியோர், எளியோர் வாழ்க்கையை முன்னேற்றும் இடமாக...
நாம் ஏற்கனவே திண்ணைத் தோழர்கள் குறித்து குறிப்பிட்டிருக்கின்றோம். அத்தகைய  திண்ணைத் தோழர்களில் பலருக்கு நல்ல முறையிலான வாழ்க்கை அமைந்திட நபி ஸல் அவர்கள் களம் அமைத்துக் கொடுத்தார்கள்.
தேவையுடையோருக்கு பொருளாதார உதவிகள், இன்னும் சிலருக்கு வீடு மற்றும் திருமணத்திற்கு தேவையான உதவிகள் என பல்வேறு உதவிகளை பெருமானார் ஸல் அவர்கள் செய்தார்கள்.

அந்த நபித்தோழர் அஸ்லம் கோத்திரத்தைச் சார்ந்தவர், தம் சமூக மக்களோடு தூரத்து பகுதியில் இருந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது கொண்ட அன்பினாலும், காதலினாலும் தம் சமூகத்தாரோடு மீண்டும் தம் பகுதிக்குச் சென்று விடாமல் மதீனாவிலேயே மஸ்ஜிதுன் நபவீயின் ஒரு ஓரத்திலே தம் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டவர்.

அவருக்கென்று தாய் வழியிலோ, தந்தை வழியிலோ எவ்வித உறவுகளும் கிடையாது. மதீனா அன்ஸாரிகளுக்கும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தார்களுக்கும் பணிவிடை செய்து கிடைக்கிற உணவை உண்டும் மஸ்ஜிதுன் நபவீயில் உறங்கியும் வாழ்வைக் கழித்து வந்தார்.

சுருங்கச் சொன்னால், மஸ்ஜிதுன் நபவீயை முகவரியாகவும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும், நபியவர்களின் குடும்பத்தாரையும், தனது குடும்பமாகவும், ஸஹாபாக்களை உறவினர்களாகவும், திண்ணைத் தோழர்களை நண்பர்களாகவும்,  எண்ணி வாழ்ந்து கொண்டிருந்த  அவர் தான் ரபீஅத்துல் அஸ்லமீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.

எனவே, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்கு உதவிட வேண்டும் என எண்ணினார்கள்.

عن ربيعة بن كعب الأسلمي ـ رضي الله عنه ـ قال
  كنت أخدم رسول الله ـ صلى الله عليه وسلم ـ، فقال لي: يا ربيعة ألا تزوج؟، قال: قلت: والله، يا رسول الله، ما أريد أن أتزوج، ما عندي ما يقيم المرأة، وما أحب أن يشغلني عنك شيء، فأعرض عني، فخدمته ما خدمته، ثم قال لي الثانية: يا ربيعة، ألا تزوج؟، فقلت: ما أريد أن أتزوج، ما عندي ما يقيم المرأة، وما أحب أن يشغلني عنك شيء، فأعرض عني، ثم رجعت إلى نفسي، فقلت: والله، لرسول الله ـ صلى الله عليه وسلم ـ بما يصلحني في الدنيا والآخرة أعلم مني، والله، لئن قال: تزوج، لأقولن: نعم يا رسول الله، مرني بما شئت .
قال: فقال: يا ربيعة، ألا تزوج؟، فقلت: بلى، مرني بما شئت، قال: انطلق إلى آل فلان، حي من الأنصار، وكان فيهم تراخ عن النبي ـ صلى الله عليه وسلم ـ، فقل لهم: إن رسول الله ـ صلى الله عليه وسلم ـ أرسلني إليكم، يأمركم أن تزوجوني فلانة، لامرأة منهم، فذهبت، فقلت لهم: إن رسول الله ـ صلى الله عليه وسلم ـ أرسلني إليكم، يأمركم أن تزوجوني فلانة، فقالوا: مرحبا برسول الله، وبرسول رسول الله ـ صلى الله عليه وسلم ـ، والله، لا يرجع رسولُ رسولَ الله ـ صلى الله عليه وسلم ـ إلا بحاجته، فزوجوني وألطفوني، وما سألوني البينة .
فرجعت إلى رسول الله ـ صلى الله عليه وسلم ـ حزيناً، فقال لي: ما لك يا ربيعة؟، فقلت: يا رسول الله، أتيت قوما كراما، فزوجوني وأكرموني وألطفوني، وما سألوني بينة، وليس عندي صداق، فقال رسول الله ـ صلى الله عليه وسلم ـ: يا بريدة الأسلمي، اجمعوا له وزن نواة من ذهب، قال: فجمعوا لي وزن نواة من ذهب، فأخذت ما جمعوا لي، فأتيت به النبي ـ صلى الله عليه وسلم ـ فقال: اذهب بهذا إليهم، فقل: هذا صداقها، فأتيتهم، فقلت: هذا صداقها، فرضوه وقبلوه، وقالوا: كثير طيب .
قال: ثم رجعت إلى النبي ـ صلى الله عليه وسلم ـ
حزيناً، فقال: يا ربيعة، ما لك حزين؟، فقلت: يا رسول الله، ما رأيت قوما أكرم منهم، رضوا بما آتيتهم، وأحسنوا، وقالوا: كثيراً طيباً، وليس عندي ما أولم، قال: يا بريدة، اجمعوا له شاة، قال: فجمعوا لي كبشا عظيما سمينا، فقال لي رسول الله ـ صلى الله عليه وسلم ـ: اذهب إلى عائشة، فقل لها: فلتبعث بالمكتل الذي فيه الطعام، قال: فأتيتها، فقلت لها ما أمرني به رسول الله ـ صلى الله عليه وسلم ـ، فقالت: هذا المكتل فيه تسع آصع شعير، لا والله، إن أصبح لنا طعام غيره، خذه، فأخذته، فأتيت به النبي ـ صلى الله عليه وسلم ـ وأخبرته بما قالت عائشة، فقال: اذهب بهذا إليهم، فقل: ليصبح هذا عندكم خبزاً، فذهبت إليهم، وذهبت بالكبش، ومعي أناس من أسلم، فقال: ليصبح هذا عندكم خبزا، وهذا طبيخا، فقالوا: أما الخبز فسنكفيكموه، وأما الكبش فاكفونا أنتم، فأخذنا الكبش، أنا وأناس من أسلم، فذبحناه وسلخناه وطبخناه، فأصبح عندنا خبز ولحم، فأولمت، ودعوت رسول الله ـ صلى الله عليه وسلم ـ فَأَجَابَنِي  ) رواه أحمد .

ஒரு நாள் ரபீஆவை அருகே அழைத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹி  வஸல்லம் என்ன ரபீஆ திருமணம் செய்து கொள்ளவில்லையா?எனக் கேட்டார்கள். மௌனத்தை பதிலாகத் தந்தார் ரபீஆ.

இன்னொரு நாள் மாநபி  (ஸல்)  அவர்கள் அதே கேள்வியை கேட்கிறார்கள். சிரிப்பையும், ஏக்கப்பார்வையையும் பதிலாக தந்து விட்டு செல்கிறார்கள் ரபீஆ.

மூன்றாவது முறையாக மாநபி  (ஸல்)  அவர்கள் அதே கேள்வியை கேட்டபோது, இம்முறை ரபீஆ  (ரலி)  நபி (ஸல்)   அவர்களின் அருகே வந்து மஸ்ஜிதுந் நபவீயின் திண்ணையில் படுத்துறங்கும் இந்த ஏழைக்கு யார் பெண் தருவார்? எனக் கேட்டார்.

உடனே, நபி (ஸல்) அவர்கள் ஒரு வீட்டின் முகவரியை கொடுத்து அந்த வீட்டில் உள்ளவரிடம் நான் உனக்கு பெண் கேட்டதாகச் சொல்லவும் எனக் கூறி அனுப்பினார்கள்.

அந்த முகவரியில் உள்ளவரிடம் சென்று மாநபியின் விருப்பத்தை தெரியப்படுத்திய போது, முதலில் யோசித்த அக்குடும்பத்தினர் பெண் கேட்டு அனுப்பியதும், பெண் கொடுக்குமாறும் கூறுவதும் அல்லாஹ்வின் தூதரல்லவா? எனவே ரபீஆவிற்கு பெண் கொடுக்க முன் வந்தனர்.

நபி (ஸல்) அவர்களிடம் அந்த செய்தியை சொல்லிவிட்டு தனது அடுத்த கவலையை தெரிவித்தார் ரபிஆ (ரலி) ஆம்! பெண் தயார். ஆனால், மஹர் கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லையே என்றார்.

மாநபி (ஸல்) அவர்கள் புரைதத்துல் அஸ்லமீ (ரலி) என்கிற  நபித் தோழரை அழைத்து  மஹர்  வழங்க  ஏதாவது ஏற்பாடு  செய்வீராக!  என்று கட்டளை பிறப்பித்தார்கள்.  பேரீத்தங் கொட்டை அளவிலான  தங்கத்திற்கு ஏற்பாடு செய்து  கொண்டு வந்து அவரிடம் கொடுத்தார்.

அடுத்து, வலீமா கொடுக்க வேண்டுமே? என்ன செய்ய என்றார். மீண்டும் மாநபி (ஸல்) அவர்கள் புரைதத்துல் அஸ்லமீ (ரலி) அவர்களை  அழைத்து வலீமா விருந்து கொடுக்க ஏதாவது ஏற்பாடு செய்வீராக! என்று கட்டளை பிறப்பித்தார்கள். சிறிது நேரத்தில் கொழுத்த ஆட்டை  ஏற்பாடு செய்து கொண்டு வந்தார்.

அடுத்து, குடும்பம் நடத்த வீடு வேண்டுமே, என்ன செய்வேன்!  அல்லாஹ்வின் தூதரே! என்றார். மாநபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட “குமுஸ்” ல் ஒரு சிறு நிலம் இருந்தது.அதை ரபீஆவிடம் தந்தார்கள்.

பின்பு, ரபீஆவின் தூரத்து உறவினர்களையும், நபித்தோழர்களையும் ரபீஆவிற்கு உதவி புரியுமாறு கேட்டுக்கொண்டார்கள். பேரீத்தங்கூரை வேயப்பட்டு வீடு தயார் ஆனது.

அடுத்து வீட்டுக்கு தேவையான சில பாத்திரங்கள், சில மளிகை சாதனங்களுடன் நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் ரபீஆ அவர்களுக்கு ஒரு நிரந்தர முகவரியை ஏற்படுத்தி கொடுத்தனர்.

இறுதியாக, அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள் திருமணத்திற்கு பின் உண்டான வாழ்க்கை வசதிகளுக்காக தங்களின் விவசாய நிலத்தில் சிறு பகுதியை விவசாயம் செய்வதற்காக ரபீஆ  (ரலி) அவர்களுக்கு வழங்கினார்கள். 

     ( நூல்: இஸ்தீஆப்: பாகம்:1 பக்கம்: 270 )

மதீனாவில் நேற்று வரை அவருக்கென்று யாரும் இல்லை. எதுவுல் இல்லை. ஆனால், இப்போது அவருக்கென்று ஒரு மனைவி, அவரின் சுக, துக்கத்தில் பங்கெடுக்க அவருக்கென்று ஒரு குடும்பம், அவருக்கென்று வீடு, வாசல், சொத்து இப்போது ரபீஅத்துல் அஸ்லமீ சமூகத்தில் மதிப்போடு வாழ்ந்து கொண்டிருக்கும் மகத்தான மனிதரில் ஒருவர் ஆவார்.

4. நல்வழி காட்டும் கேந்திரமாக...

عن قبيصة بن مخارق الهلالي رضي الله عنه: قال:' تحمَّلت حَمَالة ، فأتيتُ رسول الله صلى الله عليه وسلم أسأله فيها ، فقال: أقِمْ حتى تأتيَنا الصدقةُ ، فنأمُرَ لك بها ، ثم قال: يا قبيصة ، إنَّ المسألةَ لا تحلّ إلا لأحد ثلاثة: رجل تحمل حمالة ، فَحلَّتْ له المسألة حتى يُصيبَها ، ثم يُمْسِكُ ، ورجُل أصابتهُ جائحة اجتاحت ، فحلّتْ له المسألة حتى يُصيب قوَاما مِنْ عَيْش - أو قال: سِدادا مِنْ عَيْش - ورجل أصابته فاقة ، حتى يقول ثلاثة من ذوي الحِجَا من قومه: لقد أصابت فلاناً فاقة ، فحلّت له المسألة ، حتى يصيبَ قَوَاما من عَيْش - أو قال: سِدَادا من عيش - فما سِوَاُهنَّ من المسألة يا قبيصة سُحْت ، يأكلها صاحبها سُحْتا '.أخرجه مسلم وأبو داود والنسائي.

கபீஸா இப்னுல் மஃகாரிக் அல் ஹிலாலீ (ரலி) கூறுகின்றார்கள்: ”இருவருக்கு மத்தியில் நடைபெற்ற சண்டையை சமாதானம் செய்து வைத்து, அந்த சமாதானத்தை பணத்தை கொடுப்பதன் மூலம் தீர்த்து வைத்து அப்பொறுப்பை தான் ஏற்றுக்கொண்ட நிலையில் அல்லாஹ்வின் தூதரிடம் வந்தேன். சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நான் பொறுப்பேற்ற பணத்தை கொடுக்க என்னிடம் போதுமான பண வசதி இல்லை என்று கூறி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடத்தில் பணத்தை கேட்டேன்.

அதற்கு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்}  ”இவ்விடத்தில் நிற்பீராக, எங்களுக்கு ஸதகாக்கள் வரும் அதனை உமக்கு தருமாறு ஏவுவோம்! சற்று நிற்பீராக! என்று என்னிடம் கூறினார்கள். பிறகு ஹபீஸாவே யாசிப்பது நிர்பந்தமான மூன்று நிலையில் உள்ளவருக்குதான் அனுமதியாகும்.

”ஒருவர், இருவருக்கு மத்தியிலுள்ள சண்டையை சமாதானம் செய்து விட்டு அதில் கொடுக்க வேண்டிய பணத்தை தான் தருவதாக வாக்குறுதி அளித்தவராவார். அவரிடம் கொடுப்பதற்கு பணமில்லை எனும் நிலையில் அவர் யாசிப்பது ஹலாலாகும் அப்பணத்தைப் பெற்றவுடன் யாசிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இன்னொருவர், திடீரென ஏற்படும் பேரிடரின் காரணமாக சொத்து செல்வங்கள் அனைத்தையும் பறிகொடுத்து விட்ட ஒருவர், அவரும் யாசிப்பது அனுமதிக்கப் பட்டதாகும். இது அவர் வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்ளும் வரை தான் பின்னர்  அவர் யாசிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மூன்றாமவர், வறுமையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர். அவரது சமூகத்திலே உள்ள தலைவர்கள், அறிஞர்கள் அவருக்கு உதவி செய்யுமாறு பரிந்துரை செய்கின்கிறார்கள். அந்நபருக்கும் யாசிப்பது அனுமதிக்கப்பட்டதாகும். அவரும் வாழ்வாதாராத்தைப் பெற்றுக்கொள்ளும் வரை தான் பின்னர் அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இதற்குப் பின்னரும் ஒரு மனிதன் கை நீட்டுவானேயானால்,  யாசிப்பதை வழக்கமாக்கிக் கொள்வானேயானால், பிச்சை கேட்பதை தொழிலாக செய்வானேயானால் அவன் ஆகுமாக்கப்படாத ஹராமான உணவையே உண்ணுகிறான்’ என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )

ஒருமுறை நபி {ஸல்}  அவர்களிடம் யாசகம் கேட்டு வந்த ஒருவருக்கு தொழிலுக்கான வழிகளைக்காட்டி வியர்வை சிந்தி உழைத்து உண்ணுமாறு உபதேசித்தார்கள்.

وعن أنس بن مالك : أن رجلا من الأنصار أتى النبي صلى الله عليه وسلم يسأله فقال : " أما في بيتك شيء ؟ " قال بلى حلس نلبس بعضه ونبسط بعضه وقعب نشرب فيه من الماء . قال : " ائتني بهما " قال فأتاه بهما فأخذهما رسول الله صلى الله عليه وسلم بيده وقال : " من يشتري هذين ؟ " قال رجل أنا آخذهما بدرهم قال : " من يزيد على درهم ؟ " مرتين أو ثلاثا قال رجل أنا آخذهما بدرهمين فأعطاهما إياه وأخذ الدرهمين فأعطاهما الأنصاري وقال : " اشتر بأحدهما طعاما فانبذه إلى أهلك واشتر بالآخر قدوما فأتني به " . فأتاه به فشد فيه رسول الله صلى الله عليه وسلم عودا بيده ثم قال له اذهب فاحتطب وبع ولا أرينك خمسة عشر يوما " . فذهب الرجل يحتطب ويبيع فجاء وقد أصاب عشرة دراهم فاشترى ببعضها ثوبا وببعضها طعاما فقال رسول الله صلى الله عليه وسلم : " هذا خير لك من أن تجيء المسألة نكتة في وجهك يوم القيامة

ஒரு முறை மதீனாவைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் ஒருவர் நபிகளாரிடம் யாசகம் கேட்டு வந்தார். அதற்கு நபிகளார் உமது வீட்டில் எதுவும் இல்லையா? என வினவ, விரிப்பாக பயன்படுத்தும் ஒரு போர்வையும், நீர் அருந்துவதற்கான ஒரு பாத்திரமும் இருப்பதாக கூறினார்.

அவை இரண்டையும் தங்களிடம் கொண்டு வரும்படி நபியவர்கள் வேண்டவே, அதனை கொண்டு வந்தார் அவர். நபியவர்கள் அதனை சஹாபாக்களிடம் காட்டி உங்களில் யார் இதனை வாங்கிக் கொள்கிறீர்கள் என கேட்க, ஒரு மனிதர் ஒரு திர்ஹம் கொடுத்து அதனை வாங்கிக்கொள்கின்றேன் என்றார்.

அப்போது, நபியவர்கள் மீண்டு ஒரு திர்ஹத்தை விட யார் அதிகமாகத் தர விரும்புகிறீர்கள் என இரண்டு அல்லது மூன்று முறை கேட்டார்கள்.

உடனே இன்னொரு மனிதர் இரு திர்ஹம் கொடுத்து நான் அவற்றை வாங்கிக்கொள்கின்றேன் என பதிலளிக்க அவரிடம் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டு பணம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

இரு திர்ஹங்களையும் அம்மனிதரிடம் நபியவர்கள் கொடுத்து ஒரு திர்ஹமுக்கு உணவு வாங்கி அதனை உனது குடும்பத்தினருக்கு கொடுத்து விடு. எஞ்சிய திர்ஹமுக்கு ஒரு கோடாரியை வாங்கி அதனை என்னிடம் கொண்டுவா என்றார்கள்.

அதற்கு தனது கையாலேயே கைப்பிடியை செய்து கொடுத்து விறகுகளை வெட்டி அதனை வியாபாரம் செய்,  இன்னும்  15  நாட்களுக்கு என்னை நீ காண வரக்கூடாது என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

அந்த ஏழை முஸ்லிம் விறகுகளைச் சேர்த்து வியாபாரம் செய்யலானார். பத்து திர்கங்களைச் சம்பாதித்து சில பணத்திற்கு உணவுகளை வாங்கியவராக நபிகளாரின் முன் வந்து நின்ற போது,

 நபி {ஸல்} அவர்கள் ”யாசகம் கேட்டு மறுமை நாளில் உமது முகத்தில் புள்ளியிடப்பட்ட ஒரு அடையாளத்துடன் வருவதை விட இப்படி உழைத்து பொருளீட்டி வாழ்வது உமக்கு மிகவும் சிறந்ததாகும்” என்றார்கள். ( நூல்: அபூ தாவூத் )

5. தீர்வுகளைத் தரும் இடமாக....

حَدَّثَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ امْرَأَةَ ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، ثَابِتُ بْنُ قَيْسٍ، مَا أَعْتِبُ عَلَيْهِ فِي خُلُقٍ وَلاَ دِينٍ، وَلَكِنِّي أَكْرَهُ الكُفْرَ فِي الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ؟» قَالَتْ: نَعَمْ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْبَلِ الحَدِيقَةَ وَطَلِّقْهَا تَطْلِيقَةً» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «لاَ يُتَابَعُ فِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ»

ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) ஸாபித் பின் கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன் என்று கூறினார். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸாபித் உனக்கு (மணக் கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்து விடுகிறாயா? என்று கேட்டார்கள். அவர், ஆம் (தந்து விடுகிறேன்) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்! என்று கூறினார்கள்.நூல் : புகாரி 5273

حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ الوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ زَوْجَ بَرِيرَةَ كَانَ عَبْدًا يُقَالُ لَهُ مُغِيثٌ، كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَطُوفُ خَلْفَهَا يَبْكِي وَدُمُوعُهُ تَسِيلُ عَلَى لِحْيَتِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعبَّاسٍ: «يَا عَبَّاسُ، أَلاَ تَعْجَبُ مِنْ حُبِّ مُغِيثٍ بَرِيرَةَ، وَمِنْ بُغْضِ بَرِيرَةَ مُغِيثًا» فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ رَاجَعْتِهِ» قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ تَأْمُرُنِي؟ قَالَ: «إِنَّمَا أَنَا أَشْفَعُ» قَالَتْ: لاَ حَاجَةَ لِي فِيهِ

பரீராவின் கணவர் முகீஸ் அடிமையாக இருந்தார். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அப்பாஸ் அவர்களே! முஃகீஸ், பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா? என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா? என்று பரீராவிடம் கேட்டார்கள். அதற்கு பரீரா அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (இல்லை.) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன் என்றார்கள். அப்போது பரீரா, (அப்படியானால்,) அவர் எனக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டார்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 5283

6. ஆலோசனைகள் மற்றும் சட்ட வழிகாட்டல் வழங்கும் மையமாக...

عن أبي هريرة رضي الله عنه قال : بينما نحن جلوس عند النَّبيِّ صلَّى الله عليه وسلَّم إذ جاءه رجل فقال : يا رسول الله هلكتُ ، قال : ما لك ؟ قال : وقعتُ على امرأتي وأنا صائم [ في رمضان ] فقال رسول الله صلى الله عليه وسلم : هل تجد رقبة تعتقها ؟ قال : لا ، قال : فهل تستطيع أن تصوم شهرين متتابعين ؟ قال : لا ، فقال : فهل تجد إطعام ستين مسكيناً ؟ قال : لا ، قال : فمكث النَّبيُّ صلَّى الله عليه وسلَّم فبينا نحن على ذلك أُتي النَّبي صلَّى الله عليه وسلم بعَرَق – أي : قفة كبيرة – فيها تَمْر ، قال : أين السائل ؟ فقال : أنا ، قال : خذها فتصدَّق به ، فقال الرجل : أعلَى أفقر منِّي يا رسول الله ؟ فو الله ما بين لابتيها - يريد الحرتين - أهل بيت أفقر من أهل بيتي ، فضحك النبي صلى الله عليه وسلم حتى بدت أنيابه ، ثم قال : أطعمه أهلك.. رواه البخاري  ومسلم .

அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் மஸ்ஜிதுன் நபவீயில் அமர்ந்திருந்த போது, அவர்களிடம் ஒரு மனிதர் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்!” என்றார். நபி (ஸல்) அவர்கள், “உமக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “நான் நோன்பு வைத்துக் கொண்டு என் மனைவியுடன் கூடி (இல்லற வாழ்வில் ஈடுபட்டு) விட்டேன்!” என்று அவர் சொன்னார். நபி (ஸல்) அவர்கள் “விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை!” என்றார். “தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் “இல்லை!” என்றார். “அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்குச் சக்தியிருக்கிறதா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் “இல்லை!” என்றார். நபி (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபி (ஸல்) அவர்களிடம்  “அறக்” எனும் அளவையில் பேரீச்சம் பழம் கொண்டு வரப்பட்டது. அப்போது, நபி (ஸல்) அவர்கள் “கேள்வி கேட்டவர் எங்கே?” என்றார்கள். “நான்தான்!” என்று அவர் கூறினார். “இதைப் பெற்று தர்மம் செய்வீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, அம்மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா(நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை!” என்று கூறினார். அப்போது, நபி (ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியுமளவுக்குச் சிரித்தார்கள். பிறகு “இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!” என்றார்கள். (புகாரி 1936)

சம்பந்தப்பட்ட நபர் “நான் அழிந்து விட்டேன்!” என்று கூறிய போதிலும், நபி (ஸல்) அவர்கள் நிதானமாக “என்ன நடந்தது?” என்று கேட்கின்றார்கள். பதட்டத்துடன் வந்தவரது பதட்டத்தைப் போக்குகின்றார்கள். மேலும், தவறைச் செய்து விட்டு வந்தவர், சட்ட ஆலோசனை பெற்று விட்டு, தர்மமும் பெற்றுச் சென்றார்.

حَدَّثَنَا حَامِدُ بْنُ عُمَرَ ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ ، عَنْ حُصَيْنٍ ، عَنْ عَامِرٍ ، قَالَ : سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، وَهُوَ عَلَى الْمِنْبَرِ، يَقُولُ : أَعْطَانِي أَبِي عَطِيَّةً، فَقَالَتْ عَمْرَةُ بِنْتُ رَوَاحَةَ : لَا أَرْضَى حَتَّى تُشْهِدَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : إِنِّي أَعْطَيْتُ ابْنِي مِنْ عَمْرَةَ بِنْتِ رَوَاحَةَ عَطِيَّةً، فَأَمَرَتْنِي أَنْ أُشْهِدَكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ : " أَعْطَيْتَ سَائِرَ وَلَدِكَ مِثْلَ هَذَا ؟ " قَالَ : لَا. قَالَ : " فَاتَّقُوا اللَّهَ وَاعْدِلُوا بَيْنَ أَوْلَادِكُمْ ". قَالَ : فَرَجَعَ فَرَدَّ عَطِيَّتَهُ.

நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் (கூஃபாவில்)மிம்பரின் மீது நின்று கொண்டு என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாய் அம்ரா பின்த்து ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம் நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக்கொள்ளமாட்டேன், என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக,எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன். அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும்படி எனக்குக் கட்டளையிட்டாள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதேப்போன்று கொடுத்துள்ளீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை இல்லை என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள் என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பளிப்பை ரத்துச் செய்தார்கள்.
புஹாரி 2587 ஆமிர் (ரலி).

يروي المؤرخ ابن الأثير في كتابه "أُسد الغابة": أتت أسماء النبي صلى الله عليه وسلم، وهو بين أصحابه فقالت: بأبي وأمي أنت يا رسول الله، أنا وافدة النساء إليك، إن الله بعثك إلى الرجال والنساء كافة فآمنا بك. وإنّا معشر النساء محصوراتٌ مقصوراتٌ قواعدُ بيوتكم ومَقضى شهواتكم وحاملات أولادكم، وإنكم معشر الرجال فُضِّلتم علينا بالجُمَع والجماعات وعيادة المرضى وشهود الجنائز والحج بعد الحج، وأفضل من ذلك الجهاد في سبيل الله، وإنّ الرجل إذا خرج حاجّاً أو معتمراً أو مجاهداً حفظنا لكم أموالكم وغزلنا أثوابكم وربينا لكم أولادكم. أفما نشارككم في هذا الأجر والخير؟..  فالتفت النبي صلى الله عليه وسلم إلى أصحابه بوجهه كلِّه ثم قال: ((هل سمعتم مقالة امرأة قَط أحسن من مساءلتها في أمر دينها من هذه؟)) فقالوا: يا رسول الله، ما ظننا أن امرأة تهتدي إلى مثل هذا. فالتفت النبي صلى الله عليه وسلم إليها فقال: ((افهمي، أيتها المرأة، وأَعْلِمي مَن خلفك من النساء أنّ حُسْنَ تبعُّلِ المرأة لزوجها وطلَبها مرضاته واتباعَها موافقته يَعْدِل ذلك كلّه)). فانصرفت المرأة وهي تهلّل.

ஒருநாள் நபியவர்கள் தம் தோழர்களுடன் அமர்ந்திருந்தபோது அங்கு வந்தார் அஸ்மா பின்த் யஸீத் (ரலி) அவர்கள்.

“அல்லாஹ்வின்தூதரே! என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். முஸ்லிம்பெண்கள், அவர்தம் தூதுவராக என்னைத் தங்களிடம் அனுப்பியுள்ளார்கள். நான்அவர்கள் கூறியதைத் தங்களிடம் தெரிவிக்கிறேன். இங்கு நான் சொல்லப்போகும் அவர்களது கருத்தே என் கருத்தும்கூட.

ஆண்கள் பெண்கள் இரு பாலாருக்கும்பொதுவாகத் தான் அல்லாஹ் தங்களை நபியாக அனுப்பி வைத்துள்ளான். நாங்கள் உங்கள் மீது நம்பிக்கைக் கொண்டோம்; பின்பற்றுகிறோம். பெண்களாகிய நாங்கள் வீட்டின்தூண்களைப் போல் தனித்து வைக்கப்பட்டுள்ளோம். நாங்கள் கணவர்களுக்கு இல்லற சுகம் அளிக்கிறோம்; அவர்களின் பிள்ளைகளைச் சுமக்கிறோம். அவர்கள் ஜிஹாதுக்குச் சென்று விடும் போது அவர்களது வீடு, வாசல், செல்வத்தைப் பாதுகாத்து அவர்களின் பிள்ளைகளையும் பராமரித்து வளர்க்கிறோம்.

ஆண்களுக்கோ ஜமாஅத் - கூட்டுத் தொழுகையும் ஜும்ஆத் தொழுகையும் ஜனாஸா - பிரேத நல்லடக்கத்தில் ஈடுபவதும், ஜிஹாது புரிவதும் என்று பல நல் வாய்ப்புகள் அமைந்திருக்கின்றன.  அல்லாஹ்வின் தூதரே! அவர்களது நற்கூலியில் எங்களுக்கும் பங்கு இருக்கவேண்டுமில்லையா?” என்று வினாவொன்றை எழுப்பினார்கள்.

அது கேட்டு வியந்துபோன நபியவர்கள் தம் தோழர்களிடம் திரும்பி, “தமது மார்க்கம் பற்றிஇத்தனை அழகாக வேறு எந்தப் பெண்ணாவது கேள்வி எழுப்பி, பேசிகேட்டிருக்கிறீர்களா?” என்றார்கள்.


“அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக இல்லை. ஒரு பெண் இந்தளவு தெளிவாய்ப் பேசக்கூடும் என்று நாங்கள் நினைத்ததில்லை.” என்று பதில் கூறினார்கள்.

“அஸ்மா! உன் தோழியரிடம் சென்று சொல், ‘தம் கணவனுக்குச் சிறந்த இல்லத்துணைவியாகவும் அவனது மகிழ்வே தனது நாட்டமாகவும் அவனது தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவளாகவும் ஒரு பெண் அமையும்போது ஆணின் நற்கூலிகள் என்று நீ விவரித்ததற்கு இணையான அனைத்தும் அவளுக்கும் கிடைத்துவிடும்’ என்று.” இறைத் தூதர் சொல்லியதைக் கேட்டு மகிழ்ந்து இறைவனைப் புகழ்ந்தவாறு தக்பீரை முழங்கியவாறு அங்கிருந்து விலகினார் அஸ்மா (ரலி) அவர்கள்.

பள்ளிவாசல் நிர்வாகிகளின் பண்புகள்

பள்ளிவாசலுக்குரிய இலக்கணங்கள்  சொல்லப்பட்டு இருப்பது போன்றே அதனை பரிபாலனம் செய்பவர்களுக்குரிய தகுதிகளும், இலக்கணங்களும் சொல்லப்பட்டு உள்ளன. மார்க்கம் கூறும் கொள்கை மற்றும் இறை நம்பிக்கை சார்ந்த விஷயங்களிலும் செயல்பாடுகளிலும் சரியாக இருக்க வேண்டும். மார்க்கத்தைக் கடைப்பிடிப்பதில் அனைத்து மக்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். இப்படித்தான் பள்ளிவாசல் நிர்வாகிகள் இருப்பார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும். 

9:17 مَا كَانَ لِلْمُشْرِكِيْنَ اَنْ يَّعْمُرُوْا مَسٰجِدَ اللّٰهِ شٰهِدِيْنَ عَلٰٓى اَنْفُسِهِمْ بِالـكُفْرِ‌ؕ اُولٰۤٮِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ ۖۚ وَ فِى النَّارِ هُمْ خٰلِدُوْنَ‏

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். ( அல்குர்ஆன்:9: 17 )

 اِنَّمَا يَعْمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَاَ قَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّكٰوةَ وَلَمْ يَخْشَ اِلَّا اللّٰهَ‌ فَعَسٰٓى اُولٰۤٮِٕكَ اَنْ يَّكُوْنُوْا مِنَ الْمُهْتَدِيْنَ‏

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.
( அல்குர்ஆன்: 9: 18 )

اَ لَّذِيْنَ اِنْ مَّكَّنّٰهُمْ فِى الْاَرْضِ اَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ وَاَمَرُوْا بِالْمَعْرُوْفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ‌ ؕ وَلِلّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ‏

.அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் அதிகார வரம்பைக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் - மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. ( அல்குர்ஆன்: 22: 41 )
இன்றைய  பள்ளிவாசல் நிர்வாகத்தில் பல இடங்களில் வட்டி, வரதட்சணை போன்ற பெரும்பாவங்களிலும், கட்டப் பஞ்சாயத்து, அடிதடி போன்ற சமூகத் தீமைகளிலும் பங்கெடுப்பவர்கள், அறவே பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வராதவர்கள் ஒழுக்க வீழ்ச்சி அடைந்தவர்கள் நிர்வாகிகளாக இருக்கிறார்கள்.

இன்னும் சில இடங்களில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் போர்வையில் கெட்ட கொள்கை உடையோர், வழி தவறிய சிந்தனை கொண்டோர் நிர்வாகிகளாக உள்ளனர்.

அப்துல் அஸீஸ் இப்னு ஸுஹைப்(ரஹ்) கூறினார்:- அனஸ்(ரலி)  அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்கள் வெள்ளைப்பூண்டு குறித்து என்ன சொல்ல நீங்கள் கேட்டிக்கிறீர்கள்?’ என்று வினவப்பட்டது. அதற்கு அனஸ்(ரலி), ‘(அதைச்) சாப்பிட்டவர் நம் பள்ளிவாசலை நெருங்க வேண்டாம் எனக் கூறினார்கள்’ என்று பதிலளித்தார்கள். ( புகாரி )

ஜாபிர்(ரலி) அறிவித்தார். ‘பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( புகாரி )

(குறிப்பு:  துர்வாடையுடன் தொழுகைக்கே வரக்கூடாது என்ற வழிகாட்டல் இருக்கும் போது துர்கொள்கையுடன் பள்ளி நிர்வாகத்திற்கு வருபவர்கள் மேற்கண்ட ஹதீஸை நினைவு படுத்திக்கொள்ளட்டும்)

எனவே, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பள்ளிவாசலும் பராமரிப்பும்...

எந்த நோக்கத்திற்காகப் பள்ளிவாசல் கட்டப்படுகிறதோ அந்த எண்ணம் நிறைவேற வேண்டும்; நீடிக்க வேண்டும் என்றால் அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும். பள்ளிவாசல் கட்டுவதற்கு அளிப்பதைக் காட்டிலும் அதன் பராமரிப்புக்கு நன்கொடை அளிப்பதில் அநேக மக்கள் அலட்சியமாக இருக்கிறார்கள். அல்லாஹ்வின் ஆலயத்திற்காக செலவளிப்பதற்கும் நிச்சயம் நன்மை உண்டு என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அங்கு நிறைவேற்றப்படும் நற்காரியங்கள், வணக்க வழிபாடுகள் மூலம் அதேபோன்று நன்மை நமக்கும் கிடைக்கும்.

 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تَـنْصُرُوا اللّٰهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ اَقْدَامَكُمْ‏

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான். (அல்குர்ஆன்:47:7.)

عن ابن عباس أن امرأة كانت تلقط القذى من المسجد فتوفيت ، فلم يؤذن النبي - صلى الله عليه وسلم - بدفنها ، فقال النبي - صلى الله عليه وسلم - : " إذا مات لكم ميت فآذنوني " وصلى عليها وقال :
 إني رأيتها في الجنة [ لما كانت ] تلقط القذى من المسجد " .

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு பெண்மணி மாநபி {ஸல்} அவர்களின் பள்ளிவாசலில் குப்பை கூளங்களை அகற்றி வந்தார். ஒரு நாள் அப்பெண்மணி இறந்து விட்டார். அவரை அடக்கம் செய்த விவரத்தை நபித்தோழர்கள் அண்ணலாருக்குத் தெரிவிக்கவில்லை.
அண்ணலாருக்குத் தெரிய வந்த போது “உங்களில் ஒருவர் இறந்து விட்டால் எனக்குத் தெரியப்படுத்துங்கள்” என்று கூறிய அண்ணலார், பிறகு அப்பெண்மணிக்காக ஜனாஸா தொழுகை தொழுதார்கள்.
பின்னர், தோழர்களை நோக்கி  “இப்பெண்மணி பள்ளியில் குப்பைக் கூளங்களைச் சுத்தம் செய்து வந்த காரணத்திற்காக சுவனத்தில் இருந்ததை நான் பார்த்தேன்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.              ( நூல்: தப்ரானீ )

عن عائشة قالت أمر رسول الله صلى الله عليه وسلم ببناء المساجد في الدور وأن تنظف وتطيب

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இறைநம்பிக்கையாளர்கள் வாழும் பகுதிகளில் இறையில்லங்களை அமைத்திட உத்தரவிட்டார்கள். 

மேலும், அவைகளை சுத்தமாகவும் நறுமணம் கமழும் இடமாகவும் வைத்திருக்க வேண்டும் என்றும் ஆணையிட்டார்கள்”. ( நூல்:அபூதாவூத்)

கிப்லா திசையில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். இது அவர்களுக்கு மன வருத்தத்தை அளித்தது. அதன் பிரதிபலிப்பு அவர்களின் முகத்திலும் காணப்பட்டது. உடனே அவர்கள் எழுந்து தமது கையால் அதைச் சுரண்டினார்கள். பிறகு ‘‘உங்களில் ஒருவர் தொழுகையில் நின்றுகொண்டிருக்கும்போது ‘அவர் தம் இறைவனுடன் அந்தரமாக உரையாடுகிறார்’ அல்லது ‘அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவருடைய இறைவன் இருக்கின்றான்’. ஆகவே, எவரும் தமது கிப்லாத் திசை நோக்கிக் கண்டிப்பாக உமிழ வேண்டாம். தமது இடப்புறமோ அல்லது தமது பாதங்களுக்கு அடியிலோ உமிழ்ந்துகொள்ளட்டும்’’ என்று கூறிவிட்டுப் பிறகு, தமது மேலங்கியின் ஓர் ஓரத்தை எடுத்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் கசக்கிவிட்டு, ‘‘அல்லது இவ்வாறு அவர் செய்துகொள்ளட்டும்’’ என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

( நூல்: புஹாரி (405) )

ஆகவே, பள்ளிவாசல் - இறையில்ல பொறுப்பு என்பதும், இறையில்ல பராமரிப்பு என்பதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

கவனமாக பயணித்து இறையருளைப் பெறுவோம்!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் நல்லருள் பாளிப்பானாக!!



1 comment:

  1. மாஷா அல்லாஹ் அருமை மெளலானா முஸ்லீமகள் ஒவ்வொருவரும் குறிப்பாக பள்ளி நிர்வாகிகள் அனைவரும் அறிந்து அஞ்சி நடக்க வேண்டிய அரிய தகவல்கள்.

    ReplyDelete