Monday 25 March 2024

பேணுதலான வாழ்வே சிறந்தது!!!

 

தராவீஹ் சிந்தனை:- 15. சிறந்த அமல் & சிறந்த காரியம் தொடர்:- 4.

பேணுதலான வாழ்வே சிறந்தது!!!



அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் 14 -ம் நோன்பை நிறைவு செய்து விட்டு, 15 -ம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

அல்ஹம்துலில்லாஹ்! நபி (ஸல்) அவர்கள் சிறப்பு படுத்திக் கூறிய சில செயல்கள் மற்றும் சில காரியங்கள் மற்றும் சில விஷயங்கள்  குறித்து நாம் பார்க்க வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய அமர்வில் "பேணுதலாக வாழ்வதே சிறப்பு" என்பது தொடர்பாக பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

عن سعد بن أبي وقاص رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: «فضل العلم أحب إلي من فضل العبادة، وخير دينكم الورع»

ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: என்னிடம் வணக்க வழிபாடுகளில் சிறப்பை அடைவதை விட மார்க்க அறிவில் சிறப்பு அடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாகும். உங்கள் மார்க்கம் தொடர்பான விஷயங்களில் பேணுதலே மிகவும் சிறந்ததாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன் )

இன்னொரு அறிவிப்பில்....

عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: «فضلُ العلم أفضل من العبادة وملاك الدين الورع»،

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "வணக்க வழிபாடுகளின் சிறப்பை விட மார்க்க அறிவே மிகவும் சிறப்பானதாகும். மார்க்கத்தின் உயர்வு என்பது பேணுதலில் தான் இருக்கிறது " என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல்: தப்ரானீ )

பேணுதல் மிகவும் போற்றுதலுக்குரியது!!

وقد ثبت عن النبي صلى الله عليه وسلم -فيما رواه البيهقي – في وصيته لأبي هريرة رضي الله عنه : {كن ورعاً تكن أعبد الناس، وكن قنعاً تكن أشكر الناس، وأحب للناس ما تحب لنفسك تكن مؤمنا، وأحسن مجاورة من جاورك تكن مسلماً، وأَقِلّ الضحك؛ فإن كثرة الضحك تميت القلب}

அமல் செய்வதற்கோ அல்லது அமல் செய்பவருக்கு கற்றுக் கொடுப்ப தற்கோ என்னிடமிருந்து இந்த வார்த்தைகளை எடுத்துக் கொள்பவர் யார் என்று நபி ஸல் அவர்கள் கேட்ட போது ஹள்ரத் அபூஹுரைரா ரலி அவர்கள் நான்என்று கூறினார்கள்.உடனே நபி ஸல் அவர்கள் அபூஹுரைரா ரலி அவர்களின் கரத்தைப் பிடித்து 5 விஷயங்களைச் சொன்னார்கள். 1, அல்லாஹ் தடுத்தவைகளைத் தவிர்ந்து பேணுதலோடு இருந்து கொள் நீ  மக்களில் வணக்கசாலியாக ஆகி விடுவாய். 2, அல்லாஹ் உனக்கு பங்கிட்டதை பொருந்திக் கொள்.நீ மக்களில் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவனாக ஆகி விடுவாய். 3, உன் அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய். நீ முஃமினாக ஆகி விடுவாய். 4, உனக்கு விரும்புவதை பிறருக்கும் விரும்பு.நீ முஸ்லிமாக ஆகி விடுவாய். 5, அதிகம் சிரிக்காதே. அதிகம் சிரிப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்து விடும். ( நூல்: அஹ்மது )

பேணுதல் எங்கிருந்து துவங்குகிறது...

   حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ الْهَمْدَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏النُّعْمَانِ بْنِ بَشِيرٍ ‏ ‏قَالَ سَمِعْتُهُ يَقُولُ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏وَأَهْوَى ‏ ‏النُّعْمَانُ ‏ ‏بِإِصْبَعَيْهِ إِلَى أُذُنَيْهِ ‏ ‏إِنَّ الْحَلَالَ بَيِّنٌ وَإِنَّ الْحَرَامَ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ لَا يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنْ النَّاسِ فَمَنْ اتَّقَى الشُّبُهَاتِ ‏ ‏اسْتَبْرَأَ ‏ ‏لِدِينِهِ ‏ ‏وَعِرْضِهِ ‏ ‏وَمَنْ وَقَعَ فِي ‏ ‏الشُّبُهَاتِ ‏ ‏وَقَعَ فِي الْحَرَامِ كَالرَّاعِي ‏ ‏يَرْعَى حَوْلَ ‏ ‏الْحِمَى ‏ ‏يُوشِكُ أَنْ ‏ ‏يَرْتَعَ ‏ ‏فِيهِ أَلَا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ ‏ ‏حِمًى ‏ ‏أَلَا وَإِنَّ حِمَى اللَّهِ مَحَارِمُهُ أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ ‏ ‏مُضْغَةً ‏ ‏إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ ‏

நபி (ஸல்)அவர்கள் கூறியதாக அபூ அப்துல்லாஹ் நுஃமான் இப்னு பஷீர் (ரலீ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஹலாலும்(ஆகுமானவை)தெளிவானது.ஹராமமும் (தடைசெய்யப்பட்டவைகள் ) தெளிவானது. இவ்விரண்டிற்கும் இடையே இவை ஹலாலானவையா?,அல்லது ஹராமானவையா? என்ற சந்தேகத்திற்கிடமான காரியங்களும் உண்டு. அவற்றை அனேகர் அறிந்து கொள்ளமாட்டார்கள்.

எனவே எவர் சந்தேகத்திற்கிடமான காரியங்களிலிருந்தும் ஒதுங்கி இருக்கின்றாரோ,அவர் தனது தீனையும் கண்ணியத்தையும், மரியாதையையும் காப்பாற்றிக் கொண்டவராவார்.மேலும் எவர் சந்தேகத்திற்கிடமானவற்றில் வீழ்ந்து விடுகிறாரோ அவர் ஹராமில் வீழ்ந்து விட்டவராவார்.

அனுமதிக்கப்படாத ஒரு மேய்ச்சல் நிலத்தின் அருகில் தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருக்கையில், அவை தடுக்கப்பட்ட அம்மேய்ச்சல்  நிலத்தின் சென்று மேய்ந்து விடக்கூடிய அச்சத்திற்கு எந்நேரமும் ஆளாகிக் கொண்டிருக்கும் ஓர் மேய்ப்பனுக்கு அவர் ஒப்பாவார். ஒவ்வொரு அரசனுக்கும் சொந்தமான ஒரு மேய்ச்சல் நிலம் உண்டு. அல்லாஹ்வுக்கும் மேய்ச்சல் நிலம் (ஹிமா), அவன் (அனுமதிக்காத ஹரமான) காரியங்களாகும்.உடலில் ஒரு சதைப்  பகுதி உண்டு.

அது சீராய் விடுமானால் உடல் முழுவதும் செம்மையாய் விடுகின்றது. அது கெட்டுவிடுமாயின் உடல் முழுவதும் கெட்டு விடுகின்றது.அந்த சதைப் பகுதி இதயமாகும். ( நூல் :புகாரி )

பேணுதல் தவறி விட்டோம் என்றால்?

وحَدَّثَنِي أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ مَرْزُوقٍ، حَدَّثَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ،قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَيُّهَا النَّاسُ، إِنَّ اللهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا، وَإِنَّ اللهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ، فَقَالَ: {يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا، إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ} [المؤمنون: 51] وَقَالَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ} [البقرة: 172] ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ، يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ، يَا رَبِّ، يَا رَبِّ، وَمَطْعَمُهُ حَرَامٌ، وَمَشْرَبُهُ حَرَامٌ، وَمَلْبَسُهُ حَرَامٌ، وَغُذِيَ بِالْحَرَامِ، فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ؟

மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறை நம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை 23:51) ஓதிக் காட்டினார்கள்

:தூதர்களே! தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங்கள். நீங்கள் செய்வதை நான் நன்கு அறிபவன் ஆவேன்.

பின்னர் ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். அவர் தலைவிரி கோலத்துடனும், புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி என் இறைவா என் இறைவா என்று பிரார்த்திக்கிறார்.

ஆனால், அவர் உண்ணும் உணவு தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; தடை செய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?” என்று கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

عن أبي هريرةَ قال: قال اشْتَرَى رَجُلٌ مِن رَجُلٍ عَقارًا له، فَوَجَدَ الرَّجُلُ الَّذي اشْتَرَى العَقارَ في عَقارِهِ جَرَّةً فيها ذَهَبٌ، فقالَ له الَّذي اشْتَرَى العَقارَ: خُذْ ذَهَبَكَ مِنِّي؛ إنَّما اشْتَرَيْتُ مِنْكَ الأرْضَ، ولَمْ أبْتَعْ مِنْكَ الذَّهَبَ، وقالَ الَّذي له الأرْضُ: إنَّما بعْتُكَ الأرْضَ وما فيها. فَتَحاكما إلى رَجُلٍ، فقالَ الَّذي تَحاكما إلَيْهِ: ألَكُما ولَدٌ؟ قالَ أحَدُهُما: لي غُلامٌ، وقالَ الآخَرُ: لي جارِيَةٌ، قالَ: أنْكِحُوا الغُلامَ الجارِيَةَ وأَنْفِقُوا علَى أنْفُسِهِما منه وتَصَدَّقا

(பனூ இஸ்ராயீலில்) ஒருவர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தன்னுடைய நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம், ‘என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான் நிலத்தைத் தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லைஎன்று கூறினார்.

நிலத்தின் (முந்தைய) உரிமையாளர், ‘நிலததை அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத் தான் உனக்கு நான் விற்றேன். (எனவே, இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டு சென்ற அந்த மனிதர், ‘உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?’ என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், ‘எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்என்று கூறினார். மற்றொருவர், ‘எனக்குப் பெண்பிள்ளை இருக்கிறதுஎன்று கூறினார். தீர்ப்புச் சொல்பவர், ‘அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காவும் அதிலிருந்து செலவழியுங்கள்; தான தர்மம் செய்யுங்கள்என்று தீர்ப்பளித்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று  அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள். ( நூல்: புகாரி : 3472 )

அன்பளிப்புகளில் பேணுதல் வேண்டும்...

فقد روى البيهقي في سننه عن عبد الرحمن بن القاسم حدثنا مالك قال:

  وكان من عمّال عمر بن الخطاب -رضي الله عنه- - نمرقتين

 لامرأة عمر -رضي الله عنه

 فدخل عمر فرآهما فقال: (من أين لك هاتين؟ اشتريتهما؟ أخبريني ولا تكذبيني!) قالت: بعث بهما إليّ فلان، فقال: قاتل الله فلانا إذا أراد حاجة فلم يستطعها من قِبَلِي أتَانِي من قِبَلِ أهلي؛ فاجتذبهما اجتذابا شديدا من تحتِ من كان عليهما جالسا، فخرج يحملهما فتبعته جاريتها فقالت: إنّ صوفهما لنا، ففتقهما وطرح إليها الصّوف، وخرج بهما فأعطى إحداهما امرأة من المهاجرات، وأعطى الأخرى امرأة من الأنصار".

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் மனைவிக்கு, அரசவையில் பணி புரிந்த ஒருவர் இரண்டு தலையணையை அன்பளிப்பாக வழங்குகின்றார். ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அரசவையில் அரசர் சாய்ந்து அமர்கின்ற மாதிரியான இரு தலையணையை தம் வீட்டினுள் பார்க்கிறார்கள்.

உடனே, தன் மனைவியிடம், இந்த இரண்டும் எங்கிருந்து வந்தது? அல்லது நீ விலைக்கு வாங்கினாயா? உண்மையைச் சொல், மறைக்காதே என ஜனாதிபதியாக தன் மனைவியிடம் சற்று வேகத்தோடு கேட்கிறார்கள்.

இதை இன்ன நபர் நமக்கு அன்பளிப்பாக அனுப்பியுள்ளார் என தன் மனைவி கூறிய பதிலைக் கேட்டு, “அல்லாஹ் அவருடன் போரிடுவானாக...எனக் கோபமாகக் கூறினார்கள்.

       அந்த நபர் தனக்கு உண்டான ஒரு தேவையை நிறைவேற்றித் தருமாறு என்னிடம்  வந்தார். அதை நான் அனுமதிக்கவில்லை. இப்போது என் குடும்பத்தினர் வழியாக சமரசம் பேசவே இந்த இரண்டு தலையணையை அன்பளிப்பு என்ற பெயரில் கொடுத்து அனுப்பியுள்ளார்என கூறினார்கள்.

பின்னர் அந்த இரண்டு தலையணையையும் உமர் (ரலி) அவர்கள் தங்களின் மனைவியிடமிருந்து பிடுங்கிச் செல்கிற போது, எதுவும் பேச இயலாது விக்கித்து நின்ற உமர் (ரலி) அவர்களின்  மனைவி தன் கணவர் உமர் (ரலி) அவர்கள் பின் சென்று, அதன் மேல் இருக்கின்ற கம்பளி உறை நம்முடையது என்றதுமே அதை மட்டும் எடுத்துக் கொடுத்து விடுகிறார்கள்.

       பின்பு, ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அதில் ஒன்றை முஹாஜிர்களில் ஒரு பெண்ணுக்கும், இன்னொன்றை அன்ஸாரிகளில் ஒரு பெண்ணுக்கும் அன்பளிப்பாக கொடுத்து விடுகிறார்கள்.   ( நூல்: பைஹக்கீ )

روى البخاري بسنده عن عمر بن عبد العزيز

رحمه الله تعالى -أنه اشتهى يوما التفاح فلم يجد ما يشتري به من ماله، وبينما هو سائر مع بعض أصحابه أهديت إليه أطباق من التّفاح؛ فتناول واحدة فشمّها ثم ردّه إلى مهديه، فقيل له في ذلك

 قال: (لا حاجة لي فيه)

 فقيل له: إنّ رسول الله -صلى الله عليه وسلم كان يقبل الهدية، وأبو بكر وعمر

 فقال: "إنها لأولئك هدية وهي للعمال رشوة

ஜனாதிபதி உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரலி)  அவர்கள் ஒரு நாள் ஆப்பிள் பழம் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் ஆப்பிள் வாங்குவதற்கான பணம் அவர் கைவசம் இல்லை.

அப்போது, அவர்களின் தோழர்களுடன் சபையில் இருந்தபோது ஒரு கூடை ஆப்பிள் அன்பளிப்பு செய்யப்படுகிறது. அவற்றில் ஒரு ஆப்பிளை எடுத்து முகர்ந்து பார்த்து விட்டு, திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள். 

அருகிலிருந்தவர்கள் இதைச் சாப்பிட எவ்வளவு ஆசையுடன் இருந்தீர்கள்? ஏன் சாப்பிடவில்லையா..?”  இது போன்று, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கும், ஃகலீஃபாக்களான அபூபக்ர், உமர் ( ரலி அன்ஹுமா ) ஆகியோருக்கு வழங்கப்பட்டு, அவர்களும் வாங்கி இருக்கின்றார்களே!? எனக் கேட்டார்கள்.

அதற்கு, உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், ஹஜ்ரத் அபூபக்கர் (ரலி), ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களுக்கும் இது போன்ற பொருட்கள் தரப்பட்டது. அது அவர்களுக்கு அன்பளிப்பாகும். 

ஆனால் என்னைப் போன்ற மக்கள் பிரதிநிதியான அரசு ஊழியனுக்கு இன்று வழங்கப்படுகின்ற எல்லா அன்பளிப்புக்களும் யாரோ ஒருவரால் தன் சுய தேவையை முன் வைத்து தரப்படுகின்ற இலஞ்சமே ஆகும். எனவே எனக்கு ஆப்பிள் வேண்டாம் என திருப்பி அனுப்பி விடுங்கள் என உத்தரவிடுகிறார்கள். ( நூல்: தப்ஸிரத்துல் ஹுக்காம் லிஇப்னி ஃபர்ஹூன் (ரஹ்), 1/30 )

وليكن قائده فى ذلك أبو أيوب الأنصارى-رضى الله عنه- وقت حادثة الإفك، قال ابن إسحاق: {أن امرأة أبى أيوب قالت: يا أبا أيوب، أما تسمع ما يقول الناس في عائشة رضي الله عنها؟ قال: نعم، وذلك الكذب، أكُنْتِ فاعلة ذلك يا أم أيوب؟ قالت: لا والله ما كنت لأفعله، قال: فعائشة والله خير منكِ.}

ஆயிஷா (ரலி) அன்ஹா அவர்களின் மீதான இட்டுக்கட்டு மதீனாவில் பரவிக் கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் வெளியே சென்று வந்த அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்களின் மனைவி உம்மு அய்யூப் (ரலி) அவர்கள் தமது கணவரிடம் "அன்பு கணவரே! ஆயிஷா (ரலி) அவர்கள் விஷயத்தில் மக்கள் பேசிக்கொண்டு இருப்பதை நீங்கள் கேட்க வில்லையா?" என்றார்கள். 

ஆம்! மக்கள் பேசுவது எனக்கு தெரியும். ஆனால், ஆயிஷா (ரலி) அவர்களின் விஷயத்தில் மக்கள் பேசுவது பொய்யாகும். தொடர்ந்து தமது மனைவியிடம் "அவர்களோடு இணைந்து நீயும் ஏதும் பேசி விட்டாயா? என்று அபூ அய்யூப் (ரலி) அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு, உம்மு அய்யூப் (ரலி) அவர்கள் "நான் ஒன்றும் பேசவில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இனி நான் அப்படி செய்யப்போவதும் இல்லை " என்று கூறினார்கள்.

அப்போது, அபூ அய்யூபுல் அன்ஸாரி (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஆயிஷா (ரலி) அவர்கள் உம்மை விட மேன்மையானவர்கள், சிறந்தவர்கள்" என்றார்கள்.

اِذْ تَلَـقَّوْنَهٗ بِاَ لْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَ فْوَاهِكُمْ مَّا لَـيْسَ لَـكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَيِّنًا ‌وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِيْمٌ‏

இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும்.

وَ لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ قُلْتُمْ مَّا يَكُوْنُ لَـنَاۤ اَنْ نَّـتَكَلَّمَ بِهٰذَ ا ‌ سُبْحٰنَكَ هٰذَا بُهْتَانٌ عَظِيْمٌ‏

இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, “இதைப் பற்றி நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை; (நாயனே!) நீயே தூயவன்; இது பெரும் பழியாகும்என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா?        ( அல்குர்ஆன்: 24:;15, 16 )

மக்களில் பெரும்பாலானோர் இந்த விவகாரத்தில் பெரும் பிழை செய்து விட்டதாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கண்டித்து இறை வசனத்தையே இறக்கினான். மேலும், இப்படியான கால கட்டத்தில் "இது தெளிவான இட்கடுக்கட்டு" என்று கூறியிருக்க வேண்டாமா? என்றும் கடிந்து கொண்டான்.

 

ஆனாலும் அந்த காலகட்டத்தில் மிக சொற்பமானவர்களே இந்த விஷயத்தில் பேணுதலோடு நடந்து கொண்டார்கள். அதில் அபூ அய்யூப் (ரலி) அவர்கள் மிகவும் பேணுதலோடு நடந்து கொண்டார்கள்.

أنَّ الوَرَعَ عاصِمٌ من الوقوعِ في المعاصي: قالت عائشةُ في شأنِ حادثةِ الإفكِ: «وَكَانَ رَسُولُ اللَّـهِ يَسْأَلُ زَيْنَبَ بِنْتَ جَحْشٍ عَنْ أَمْرِي، فَقَالَ: يَا زَيْنَبُ! مَا عَلِمْتِ؟ مَا رَأَيْتِ؟ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّـهِ! أَحْمِي سَمْعِي وَبَصَرِي، وَاللَّـهِ مَا عَلِمْتُ عَلَيْهَا إِلاَّ خَيْرًا. قَالَتْ: وَهْيَ الَّتِي كَانَتْ تُسَامِينِي،  فَعَصَمَهَا اللَّـهُ بِالْوَرَعِ»

            ஆயிஷா (ரலி) அவர்கள் இட்டுக்கட்டு தொடர்பாக தமது இன்னொரு மனைவி ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது "மக்கள் எதைப் பேசிக் கொண்டு இருக்கின்றார்களோ அதில் இருந்து நான் என் செவியையும், பார்வையையும், உள்ளத்தையும் பாதுகாத்து கொண்டேன். ஆயிஷா (ரலி) அவர்கள் மிகவும் நல்லவர், அவரிடம் காணப்படும் பேணுதல் காரணமாக அல்லாஹ் அர்களைப் பாதுகாப்பான்" என்று கூறினார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பேணுதலான வாழ்வைத் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!

No comments:

Post a Comment