Wednesday 20 March 2024

குறைவாக இருந்தாலும் நிரந்தரமாகச் செய்யும் அமலே சிறந்தது!!

 

தராவீஹ் சிந்தனை:- 11. சிறந்த அமல் & சிறந்த காரியம் தொடர்:- 1.

குறைவாக இருந்தாலும் நிரந்தரமாகச் செய்யும் அமலே சிறந்தது!!



அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் பத்தாவது நோன்பை நிறைவு செய்து விட்டு, 11 -ம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

ரஹ்மத்தினுடைய முதல் பத்தை நிறைவு செய்து மஃக்ஃபிரத்துடைய பத்தின் துவக்க நாளில் நாம் அமர்ந்திருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவன் ரஹ்மத் செய்த மேன்மக்களில் ஒருவராக நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக! அவனுடைய மகத்தான மன்னிப்பை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்!

பெருமானார் {ஸல்} அவர்கள் பல சந்தர்ப்பங்களில் ஃகியாருக்கும், ஃகைருக்கும் ( உங்களில் மிகச் சிறந்தவர் ) ஃகைருன் நாஸ் ( மனிதர்களில் மிகச் சிறந்தவர் ) என்ற அடைமொழியோடு சில நல்ல பண்புகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் பட்டியலிட்டார்கள்.

அப்படி பெருமானார் (ஸல்) அவர்கள் பட்டியலிட்டுக் கூறிய சில நல்ல பண்புகளை இந்த ரமழானில் நாம் கடந்த ஒன்பது அமர்வுகளில் "உங்களில் சிறந்தவர்" எனும் தலைப்பின் கீழ் தொடராக சுமார் 12 சிறந்த நற்குணங்களை கொண்ட சிறந்த மனிதர்கள் குறித்து நபி மொழி மற்றும் வரலாற்று நிகழ்வுகள் ஊடாக நாம் பேசியும் கேட்டும் வந்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! இன்றிலிருந்து அடுத்த பத்து நாட்களின் அமர்வில்  நபி (ஸல்) அவர்கள் சிறப்பு படுத்திக் கூறிய சில செயல்கள் மற்றும் சில காரியங்கள் மற்றும் சில விஷயங்கள்  குறித்து நாம் பார்க்க இருக்கின்றோம்.

அந்த அடிப்படையில் இன்றைய அமர்வில் "எந்த ஒரு காரியத்தையும் நிரந்தரமாக செய்வதே சிறந்தது" என்பது தொடர்பாக பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

حَدَّثَنَا ‏ ‏الْعَبَّاسُ بْنُ عُثْمَانَ الدِّمَشْقِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ لَهِيعَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ الْأَعْرَجُ ‏ ‏سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‏ ‏اكْلَفُوا مِنْ الْعَمَلِ مَا تُطِيقُونَ فَإِنَّ خَيْرَ الْعَمَلِ أَدْوَمُهُ وَإِنْ قَلَّ ‏

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "ஓ மக்களே! உங்கள் சக்திக்கு உட்பட்டதையே  செய்து வாருங்கள்! ஏனெனில், நிச்சயமாக! அமல்களில் சிறந்தது கொஞ்சமாக இருந்தாலும்  நிரந்தரமாகச் செய்து வருவதேயாகும்" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.   ( நூல்: இப்னு மாஜா )

இன்னொரு அறிவிப்பில், "அல்லாஹ்விற்கு விருப்பமான செயல் என்பதாக" கூறப்படுகிறது.

ولما سئل النبي صلى الله عليه وسلم أن الأعمال أحب إلى الله ، قال : أدومه وإن قل ) .

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான அமல்கள் எது?" என்று கேட்கப்பட்டதற்கு, "குறைவாக செய்தாலும் நிரந்தரமாக செய்யும் நல்ல அமல்களே!" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

ஒரு காரியத்தில் நாம் நிரந்தரமாய் இருப்பதற்கு இஸ்லாமிய வழக்கொழியில் இஸ்திகாமத்என்று சொல்லப்படுவது போன்றே தவாம், அத்வம் என்றம் சொல்லப்படும். இது அனைத்துவிதமான காரியங்களுக்கும் மிக அவசியமானதாகும்.

ஒருவர் ஒரு காரியத்தை அவ்வப்போதோ அல்லது நினைத்த நேரத்திலோ செய்வதற்கும், அதே காரியத்தை நிரந்தரமாகச் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது. 

இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் எந்த ஒரு அமலாக இருந்தாலும் அதை விடாமல் நிரந்தரமாகத் தொடர்ந்து செய்யவேண்டும். 

உலகக் காரியங்களில் கூட ஒரு காரியத்தை விடாமல் தொடர்ந்து செய்பவருக்குத்தான் மதிப்பும், மரியாதையும் அதிகம்.

மனிதர்களில் தூயவர்களான நபிமார்களை அல்லாஹ் அமல்களில் நிரந்தரமாக ஈடுபடுமாறு வலியுறுத்துகின்றான்‌.

وقد توجَّه الخطاب إلى صفوة البشر من الأنبياء والرسل بالمداومة على العمل؛ كما قالى تعالى: ﴿ وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ ﴾ [الحجر: 99]، وقال تعالى: ﴿ فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ ﴾ [الشرح: 7]، وقال تعالى: ﴿ وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا ﴾ [مريم: 31].

நமது நபி (ஸல்) அவர்களை நோக்கி கூறும் போது...

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِّنَ السّٰجِدِيْنَ

நீர் (அவர்களது பேச்சைப் பொருட்படுத்தாது) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக!

وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْن

உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! ( அல்குர்ஆன்: 15: 98, 99 )

فَاِذَا فَرَغْتَ فَانْصَبْۙ‏

எனவே, (உமது வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக. ( அல்குர்ஆன்: 94: 7 )

ஈஸா (அலை) அவர்கள் குறித்து...

وَاَوْصٰنِىْ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ مَا دُمْتُ حَيًّا

மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 19: 31 )

மஆரிஜ் எனும் அத்தியாயத்தில் தொழுகையாளிகளின் மாண்புகள் குறித்து பேசும் போது....

إلا المصلين

சில தொழுகையாளிகளைத் தவிர என்று கூறி விட்டு 

அவர்கள் எப்படிப்பட்ட தொழுகையாளிகள்? என்பதை...

 الَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ دَائِمُونَ 

அவர்கள் தொழுகையை விடாமல் நிரந்தரமாக நிறைவேற்றுவார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். 

دَآٮِٕمٌ

(தாயிம்) என்றால் நிலையான, நிரந்தரமான என்று பொருள்.

 دَائِمُونَ

(தாயிமூன்) என்றால் அந்த காரியத்தை நிலையாக நிரந்தரமாகச் செய்பவன் என்று பொருள்.

இந்த பொருளிலேயே...நல்லடியார்களுக்கு சுவனத்தின் உணவும் அதன் நிழலும் நிலையானது, நிரந்தரமானது என்பதைக் குறிப்பிடும்போது دَائِمُ என்ற சொல்லைத்தான் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். (அல்குர்ஆன்: 13:35)

பெருமானார் (ஸல்) அவர்களின் குடும்பத்தார்களின் அமல்கள்....

قال رسول صلى الله عليه وسلم : ( أيها الناس عليكم من الأعمال ما تطيقون فإن الله لا يمل حتى تملوا ، وإن أحب الأعمال إلى الله ما دووم عليه وإن قل وكان آل محمد صلى الله عليه وسلم إذا عملوا عملاً ثبتوه ) أي داوموا عليه ، رواه مسلم .

மனிதர்களே! உங்களால் முடிந்த அளவு நல்ல அமல்களை செய்யுங்கள்! ஏனெனில், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சடைவு அடைய மாட்டான். அல்லாஹ்விடம் அடியார்களின் அமல்களில் குறைவாக இருந்தாலும் நிரந்தரமாக செய்யும் அமல்களே மிகவும் பிரியமானதாகும். முஹம்மது நபி ஸல் அவர்களின் குடும்பத்தார்கள் ஒரு அமலைச் செய்தார்கள் என்றால் அதை நிரந்தரமாக என்றென்றும் செய்து வருவார்கள் " என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

பெருமானார் (ஸல்) அவர்களைக் கண்ணால் கண்டு, கரம் பற்றி இறைநம்பிக்கை கொண்டு, அவர்களின் ஸுஹ்பத்தில் - தொடர்பில்  மிகவும் குறைவான காலமே  குறிப்பாக குர்ஆன் இறக்கியருளப்பட்ட 23 ஆண்டு காலத்திலும் சரி, அதற்கு பிந்தைய காலத்திலும் சரி வாழ்ந்த காலத்தில் அந்த உத்தமர்களில் பலர் தங்களுடைய அமல்களை நிரந்தரமாகக் கடைபிடித்து வாழ்ந்து வந்தார்கள்.

அவர்களை அல்லாஹ் அல்குர்ஆனில் அடையாளப் படுத்தும் போது சுமார் தொண்ணூறு இடங்களில் அவர்களின் ஈமானை உறுதி செய்து கூறுகின்றான்.

பல இடங்களில் அல்லாஹ் அவர்களை நம்பிக்கையாளர்களே என நேரடியாகவே அழைக்கின்றான்.

மற்றும் பல இடங்களில் அவர்களை நம்பிக்கையாளர்கள் என்று சான்று பகர்கின்றான். ( பார்க்க:- 3:121, 124, 164, 171, 179, – 4: 84, 95, 115, – 8: 17, 62, 64,65 – 9: 26, 72, 79, 107, 128, – 15: 88, – 24: 30….)

அப்படி என்றால் அவர்களின் அமல்களின் கனத்தை நாம் என்னவென்று சொல்வது?

حدثنا وكيع عن شعبة عن الحكم عن عبد الرحمن بن أبي ليلى عن علي أن فاطمة اشتكت إلى النبي صلى الله عليه وسلم يدها من العجين والرحى ، قال : فقدم على النبي صلى الله عليه وسلم سبي فأتته تسأله خادما فلم تجده ووجدت عائشة فأخبرتها ، قال علي : فجاءنا بعدما أخذنا مضاجعنا فذهبنا نتقدم فقال : مكانكما ، قال : فجاء فجلس بيني وبينها حتى وجدت برد قدمه فقال : ألا أدلكما على ما هو خير لكما من خادم : تسبحانه ثلاثا وثلاثين وتحمدانه ثلاثا وثلاثين وتكبرانه ثلاثا وثلاثين .

في رواية: أن عليا قال: "فما تركتها بعد"، فقالوا له: ولا ليلة صفين، قال: ولا ليلة صفين" [رواه البخاري: 5362، وأحمد: 5362].

وهذا الرجل الذي قال له ذلك جاء في رواية: أنه ابن الكواء.

ابن الكواء يقول لعلي: ولا ليلة صفين؟ فقال: قاتلكم الله يا أهل العراق، نعم ولا ليلة صفين" [رواه أحمد: 838، وقال محققو المسند: "إسناده حسن"].

அலீ இப்னு அபீ தாலிப் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கின்றார்கள்.(என் துணைவியர்) ஃபாத்திமா அவர்கள் (மாவு அரைக்கும்) திரிகை சுற்றியதால் தம் கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (என்னிடம்) முறையிட்டார்.இது தொடர்பாக நபியவர் களிடம் தெரிவிக்கும் படி கூறினேன். எனவே,ஒரு பணியாளரை (தமக்குத் தரும்படி) கேட்க நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஃபாத்திமா சென்றார்கள்.ஆனால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அப்போது வீட்டில் இல்லாததால் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் அது பற்றிக் கூறி (விட்டுத் திரும்பலா)னார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வந்தவுடன் அவர்களிடம் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் விஷயத்தை தெரிவித்தார்கள்.உடனே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் படுக்கைக்குச் சென்றிருந்தோம் (அவர் களைக் கண்டவுடன்) நான் எழுந்திருக்க முற்பட்டேன்.உடனே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்,' (எழுந்திருக்க வேண்டாம்) அந்த இடத்திலேயே இருங்கள்' என்று கூறிவிட்டு எங்களுக்கு நடுவில் வந்து அமர்ந்தார்கள்.அப்போது (என்னைத் தொட்டுக் கொண்டிருந்த) அவர்களின் பாதங்களின் குளிர்ச்சியை என்னுடைய நெஞ்சின் மீது உணர்ந்தேன்.(அந்த அளவுக்கு நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள்.)'பணியாளரை விட உங்களிருவருக்கும் (பயனளிக்கும்) சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?நீங்கள் இருவரும் 'படுக்கைக்குச் சென்றதும்' அல்லது 'விரிப்புக்குச் சென்றதும்' அல்லாஹு அக்பர் (அல்லாஹ் பெரியவன்) என்று முப்பத்து நான்கு முறையும், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்று முப்பத்து மூன்று முறையும்,அல்ஹம்து லில்லாஹ் (புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே) என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள்.இது பணியாளைவிட உங்கள் இரு வருக்கும் சிறந்ததாகும்.என்றார்கள்.(நூல் புகாரி-3705,முஸ்லிம் எண் -2727)

இன்னொரு அறிவிப்பில் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், "இவ்வாறு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய நாளிலிருந்து அதை நான் ஓதாமல் விட்ட தில்லை"என்று சொன்னார்கள்.அப்போது "ஸிஃப்பீன் போர் நடைபெற்ற இரவில் கூடவா?" என்று கேட்கப்பட்டது.அதற்கு அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்,"ஸிஃப்பீன் போர் நடை பெற்ற இரவில் கூட இதை ஓதாமல் இருந்ததில்லை" என பதிலளித்தார்கள்.(நூல்,புகாரி,எண் -5362,முஸ்லிம், எண்-2727)

جاء في صحيح مسلم (728) من طريق دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ ، عَنِ النُّعْمَانِ بْنِ سَالِمٍ ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ ، قَالَ : حَدَّثَنِي عَنْبَسَةُ بْنُ أَبِي سُفْيَانَ ، فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ بِحَدِيثٍ يَتَسَارُّ إِلَيْهِ ، قَالَ : سَمِعْتُ أُمَّ حَبِيبَةَ ، تَقُولُ : سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ :   مَنْ صَلَّى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً فِي يَوْمٍ وَلَيْلَةٍ ،  بُنِيَ لَهُ بِهِنَّ بَيْتٌ فِي الْجَنَّةِ  .

قَالَتْ أُمُّ حَبِيبَةَ : فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ عَنْبَسَةُ :  فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ أُمِّ حَبِيبَةَ ، وَقَالَ عَمْرُو بْنُ أَوْسٍ : مَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ عَنْبَسَةَ ، وَقَالَ النُّعْمَانُ بْنُ سَالِمٍ : مَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ عَمْرِو بْنِ أَوْسٍ .

அந்நுஃமான் பின் ஸாலிம் அவர்கள் அம்ர் பின் அவ்ஸ் அவர்களை தொட்டும் கூறுகின்றார்.எனக்கு அன்பஸா பின் அபீ ஸுப்யான் அவர்கள் கூறினார்.இதை எனக்கு உம்மு ஹபீபா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்.அதில் நான் நபிகளார் கூறியதை கேட்டேன்.முஸ்லிமான ஒரு அடியான் அல்லாஹ்வுக்காக தினமும் பர்ழ் -கட்டாயம்- அல்லாத சுன்னத்தான தொழுகைகள் 12 ரக்அத்துக்கள் தொழுது வந்தால் அவருக்கு சுவனத்தில் ஒரு வீடு கட்டப் படும்என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அவர்களின் மனைவி உம்மு ஹபீபா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்:1727).

உம்மு ஹபீபா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்"நான் இதை நபிகளார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து கேட்டது முதல் இச்செயலை நான் விட்டதேயில்லை.மேலும் அன்பஸா அவர்கள் கூறுகின்றார் நான் இதை உம்மு ஹபீபா ரலியல்லாஹு அன்ஹா அவர்களி டமிருந்து கேட்டது முதல் நான் இதை விட்டது கிடையாது என.

மேலும் அம்ர் பின் அவ்ஸ் அவர்கள் "நான் இதை அன்பஸா விடமிருந்து கேட்டது முதல் விட்டதே கிடையாது" என.

மேலும் அந்நுஃமான் பின் ஸாலிம் அவர்கள் குறிப்பிடுகின்றார் நான் இதை அம்ர்பின் அவ்ஸிடமிருந்து கேட்டது முதல் கைவிட் டதில்லை என.

عن عوف بن مالك الأشجعي رضي الله عنه قال: (كنا عند رسول الله صلى الله عليه وسلم تسعة أو ثمانية أو سبعة، فقال صلى الله عليه وسلم: ألا تبايعون رسول الله؟ وكنا حديث عهدٍ ببيعة، فقلنا: قد بايعناك يا رسول الله! فقال صلى الله عليه وسلم: ألا تبايعون رسول الله؟ قال: فبسطنا أيدينا وقلنا: قد بايعناك يا رسول الله! فعلام نبايعك؟ قال صلى الله عليه وسلم: على أن تعبدوا الله ولا تشركوا به شيئا، والصلوات الخمس، وتطيعوا، وأسرَّ كلمة خفية، ولا تسألوا الناس شيئا. قال عوف: فلقد رأيتُ بعض أولئك النفر يسقط سوط أحدهم، فما يسأل أحدا يناوله إياه) رواه مسلم. 

அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் உட்பட ஏழு அல்லது எட்டு அல்லது ஒன்பது நபர்கள் நபி ஸல் அவர்களுடன்  அமர்ந்திருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் எங்களை நோக்கி நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடத்தில் பைஅத் எடுக்க வில்லையா? என்று மூன்று முறை கேட்டார்கள். மூன்று முறையும் நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் பிரமாணம் செய்கிறோம் என்று கூறினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அவனுக்கு இணை கற்பிக்க கூடாது. ஐங்கால தொழுகைகளைத்  தொழ வேண்டும், அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். மேலும் எந்த ஒரு மனிதனிடத்திலும் எதையும் கேட்கவே கூடாது என்று பிரமாணம் வாங்கினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் கரங்களில் பிரமாணம் கொடுத்த அந்த மனிதர்களில் சிலரை நான் கண்டுள்ளேன் " அவர்களின் கரங்களில் இருந்து கீழே விழும் சாட்டையைக் கூட பிறரிடம் எடுத்து தாருங்கள் என்று கேட்டதில்லை" என்று ‌ ( நூல் முஸ்லிம் )

فعن عمر بن أبي سلمة رضي الله عنه قال: (كنت غلاماً في حجر النبي صلى الله عليه وسلم وكانت يدي تطيش في الصحفة، فقال النبي صلى الله عليه وسلم: يا غلام، سمِّ الله، وكل بيمينك، وكل مما يليك، فما زالت طعمتي بعد) رواه البخاري. قال ابن حجر: "أي لزمت ذلك وصار عادة لي .. وفيه منقبة لعمر بن أبي سلمة لامتثاله الأمر، ومواظبته على مقتضاه".

அம்ர் இப்னு அபூ ஸலமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் சிறுவனாக இருக்கும் போது நபி (ஸல்) அவர்களின் வீட்டில் இருந்தேன். ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என் கை தட்டில் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் "சிறுவனே! அல்லாஹ்வின் பெயர் கூறி சாப்பிடு! வலது கையால் சாப்பிடு! உனக்கு முன்பிருந்தே சாப்பிடு! என்றார்கள். அதன் பின்னர் ஒரு போதும் நான் அப்படி சாப்பிட்டதே இல்லை". ( நூல்: புகாரி )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அனைத்து அமல்களையும் நிரந்தரமாக, நிலையாக செய்ய அருள் புரிவானாக! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

 

No comments:

Post a Comment