Tuesday 2 April 2024

குர்ஆனைக் கற்று, கற்றுக் கொடுப்பவரே சிறந்தவர்!!

 

தராவீஹ் சிந்தனை:- 24. சிறந்த அமல் & சிறந்த காரியம் தொடர்:- 14.
குர்ஆனைக் கற்று, கற்றுக் கொடுப்பவரே சிறந்தவர்!!


அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் 23 -ம் நோன்பை நிறைவு செய்து விட்டு, 24 -ம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! நபி (ஸல்) அவர்கள் சிறப்பு படுத்திக் கூறிய சில செயல்கள் மற்றும் சில காரியங்கள் மற்றும் சில விஷயங்கள்  குறித்து நாம் பார்த்து வருகின்றோம்.

அந்த வகையில் இந்த நாளின் இன்றைய அமர்வில் "குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே சிறந்தவர்" என்ற  நபி மொழியை அடிப்படையாகக் கொண்டு சில விஷயங்களை பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ مِنْهَالٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عَلْقَمَةُ بْنُ مَرْثَدٍ ‏ ‏سَمِعْتُ ‏ ‏سَعْدَ بْنَ عُبَيْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُثْمَانَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ

"குர்ஆனைத் தானும் கற்று பிறருக்குக் கற்று கொடுப்பவரே உங்களில் சிறந்தவர்" என்று நபி (ஸல்)  அவர்கள் கூறியதாக உஸ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: புகாரி, அபூதாவூத், திர்மிதீ )

وقد سُئِل سفيان الثوري رحمه الله عن الجهاد وإقراء القرآن فرجح الثاني، واحتجَّ بهذا الحديث.

ஸுஃப்யானுஸ் ஸவ்ரீ (ரஹ்) அவர்களிடம் ஜிஹாத் மார்க்கப் போரில் பங்கேற்பது சிறந்ததா? குர்ஆனை ஓதுவது சிறந்ததா? எனக் கேட்கப்பட்ட போது மேற்கூறிய இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு "குர்ஆனை ஓதுவதே" சிறந்தது என்று கூறினார்கள்.

أن معلم القرآن ومتعلمه متشبهان بالملائكة والرُسل، كفى معلم القرآن ومتعلمه شرفًا وفخرًا أنهم متشبهون بالملائكة والرسل الكرام، فقد بعث الله تعالى جبريل عليه السلام ليُعلم النبي صلى الله عليه وسلم قال الله عز وجل

 عَلَّمَهُۥ شَدِيدُ ٱلۡقُوَىٰ   النَّجۡم

குர்ஆனைக் கற்பவரும் குர்ஆனை பிறருக்கு கற்பிப்பவரும் பெறுகிற அந்தஸ்தும் சிறப்புமாகிறது. ரஸூல்மார்களுக்கும் நபிமார்களுக்கும் இடையே உள்ள தொடர்பைப் போன்றதாகும்.

ஏனெனில், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஜிப்ரயீல் அலை அவர்களை நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆனைக் கற்றுக் கொடுக்கவே அனுப்பி வைத்தான்.

ஏனெனில், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அந் நஜ்ம் அத்தியாயத்தில் 5 -ம் வசனத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.


عَلَّمَهٗ شَدِيْدُ الْقُوٰىۙ‏

மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.

எப்படி கற்றுக் கொள்ள வேண்டும்?

قوله تعالى : {الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون} [البقرة: 121]

யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்; அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்; யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே!

وهو معنى قول ابن عباس وابن مسعود رضي الله عنهما ... وقيل: يقرءونه حَقَّ قراءته.

இந்த இறை வசனத்திற்கு விளக்கம் தருகிற இப்னு அப்பாஸ் மற்றும் இப்னு மஸ்வூத் ரலி அன்ஹுமா ஆகியோர் "எந்த முறைப்படி ஓத வேண்டுமோ அந்த முறைப்படி ஓத வேண்டும்" என்று பொருள் கூறுகின்றனர்.

قال رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَتَغَنَّ بِالْقُرْآنِ".

யார் குர்ஆனை ராகமாக (தஜ்வீத்துடன்) ஓதவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல. (அறிவிப்பாளர்: பசீர் பின் அப்துல் முன்திர்(ரலி),( நூல்: அபூதாவூத் )

அல்குர்ஆனை எதற்காக கற்றுக் கொள்ள வேண்டும்?

1. நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்காக கற்றுக் கொள்ளுங்கள்!

مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ ، وَالحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا ، لاَ أَقُولُ الْم حَرْفٌ ، وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلاَمٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ

அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு! ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். அலிஃப், லாம், மீம்என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக, அலிஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி) ( நூல் : திர்மிதீ )

عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم

الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ وَالَّذِى يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ

குர்ஆனை நன்கு (மனனம் செய்து) தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக் கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத்தூதர்களுடன் இருக்கின்றார். சிரமம் மேற்கொண்டு தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூலிகள் இருக்கின்றனஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) ( நூல் : முஸ்லிம் )

2. பரிந்துரைக்காக கற்றுக் கொள்ளுங்கள்!

اقْرَءُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِى يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لأَصْحَابِهِ

நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது மறுமை நாளில் அதைச் சார்ந்தவருக்குப் பரிந்துரையாக வரும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி) ( நூல் : முஸ்லிம் )

3. வழிதவறி விடாமல் இருப்பதற்காக கற்றுக் கொள்ளுங்கள்!

قال رسول الله صلى الله عليه وسلم: " أبشروا فإن هذا القرآن طرفه بيد الله وطرفه بأيديكم فتمسكوا به فإنكم لن تهلكوا ولن تضلوا بعده أبدا "

இந்த குர்ஆனின் ஒரு முனை அல்லாஹ்வின் கையிலும் மறுமுனை உங்கள் கைளிலும் உள்ளது. எனவே இதனை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் இம்மையில் வழிதவறமாட்டீர்கள், மறுமையில் அழிவுறவும் மாட்டீர்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) ( நூல்: தப்ரானி )

4. அல்லாஹ்வின் பேச்சாக இருப்பதால் கற்றுக் கொள்ளுங்கள்!

عن جابر بن عبدالله رضي الله عنهما: أن النبي صلى الله عله وسلم كان يقول في خطبته: ((أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهديِ هديُ محمد، وشر الأمور محدَثاتها، وكل بدعة ضلالة))؛ رواه مسلم

பேச்சுக்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகாட்டுதல்களில் மிகச்சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களின் பாதையாகும். தீனில் தீமையானது மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ( நூல்: முஸ்லிம்)

5. உயர்வு பெறுவதற்காக கற்றுக் கொள்ளுங்கள்!

قال رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "إِنَّ اللَّهَ يَرْفَعُ بِهَذَا الْكِتَابِ أَقْوَامًا وَيَضَعُ بِهِ آخَرِينَ

இவ்வேதத்தைக் கொண்டே அல்லாஹ் சில கூட்டத்தாரை உயர்த்துகிறான். மற்றோரு கூட்டத்தினரை இதனைக் கொண்டே தாழ்த்துகிறான். சமுதாய உயர்வு, தாழ்வுக்கு காரணம் குர்ஆனே. (அறிவிப்பாளர்: உமர்(ரலி) – ( நூல்: முஸ்லிம் )

6. நன்மைகளில் குவியல்கள் கிடைப்பதற்காக கற்றுக் கொள்ளுங்கள்!

عَنْ عُقْبَةَ بْنِ عَامرٍ رضي الله عنه قَالَ: خَرَجَ رَسُولُ الله صلّى الله عليه وسلّم وَنَحْنُ في الصُّفَّةِ فَقَالَ: «أَيُّكُمْ يُحِبُّ أَنْ يَغْدُوَ كُلَّ يَوْمٍ إِلَى بُطحَانَ أَوْ إِلَى الْعَقِيقِ فَيَأتِيَ مِنْهُ بِنَاقَتَيْنِ كَوْمَاوَيْنِ، فِي غَيْرِ إِثْمٍ وَلاَ قَطْعِ رَحِمٍ؟»، فقُلْنَا: يَا رَسُولَ اللهِ! نُحِبُّ ذَلِكَ، قَالَ: «أَفَلاَ يَغْدَوُ أَحَدُكُمْ إِلَى المَسْجِدِ فَيَتَعَلَّمَ أَوْ يَقْرَأَ آيَتَيْنِ مِنْ كِتَابِ الله عزّ وجل خَيْرٌ لَهُ مِنْ نَاقَتَيْنِ. وَثَلاثٌ خَيْرٌ لَهُ مِنْ ثَلاَثٍ. وَأَرْبَعٌ خَيْرٌ لَهُ مِنْ أَرْبَعٍ، وَمِنْ أَعْدَادِهِنَّ مِنَ الإِبِلِ؟»

 

நாங்கள் திண்ணையில் அமர்ந்து இருக்கிற சமயத்தில் பெருமானார்(ஸல்) எங்களிடம் வந்து உங்களிடம் பாவம் செய்யாது சொந்த பந்தங்களை துண்டிக்காத நிலையில் ஒவ்வொரு நாளும் புத்ஹான் அல்லது ஹதீக் என்ற இடத்திற்கு சென்று திமில்களுடைய இரண்டு ஓட்டகங்களை கொண்டு வர யார் விரும்புவார்? என வினவினார்கள். நாங்கள் அனைவரும் இதை விரும்புவோம் என்று பதிலளித்தோம். உங்களில் ஒருவர் பள்ளிவாசல் பக்கம் செல்லக்கூடாதா? அவ்வாறு சென்று அல்லாஹ்வுடைய வேத்தில் இரண்டு வசனங்களை ஓதுதல் அல்லது கற்றல் இரண்டு ஒட்டகங்களை விட சிறந்தது. மூன்று வசனங்களை ஓதுவது மூன்று ஒட்டகங்களை விட சிறந்தது. நான்கு வசனங்களை ஓதுவது நான்கு ஒட்டகங்களை விட சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தன்னுடைய இல்லத்திற்கு செல்லும்போது தன்னுடன் நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்களை பெற்றுச் செல்லவேண்டும் என்று விரும்புவாரா? என்று வினவினார்கள். நாங்கள் அனைவரும் அதை விரும்புவோம் என்று கூறினோம். மூன்று (குர்ஆனிய) வசனங்களை உங்களில் ஒருவர் தன்னுடைய தொழுகையில் ஓதுவது அவருக்கு நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்கள் கிடைப்பதை விட சிறந்தது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி) ( நூல்: முஸ்லிம், இப்னுமாஜா )

7. விசாலமான சொர்கத்தை பெறுவதற்காக கற்றுக் கொள்ளுங்கள்!

و قال رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ اقْرَأْ , وَارْتَقِ , وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا , فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَأُ بِهَا".

மறுமை நாளில் குர்ஆனை ஓதி அதனடிப்படையில் நடந்தவரிடம் குர்ஆனிய தோழரே ஓதுவீராக என்று கூறப்படும். மேலும் உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பாரோ அதுதான் சொர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும் என்று கூறப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) ( நூல்: அபூதாவுத், திர்மிதி)

8. குர்ஆனின் வெகுமதிகளை அடைவதற்காக கற்றுக் கொள்ளுங்கள்!

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " يَجِيءُ الْقُرْآنُ يَوْمَ الْقِيَامَةِ ، فَيَقُولُ يَا رَبِّ حَلِّهِ ، فَيُلْبَسُ تَاجَ الْكَرَامَةِ ، ثُمَّ يَقُولُ يَا رَبِّ زِدْهُ ، فَيُلْبَسُ حُلَّةَ الْكَرَامَةِ ، ثُمَّ يَقُولُ يَا رَبِّ ارْضَ عَنْهُ ، فَيَرْضَى عَنْهُ ، فَيُقَالُ لَهُ : اقْرَأْ وَارْقَ وَتُزَادُ بِكُلِّ آيَةٍ حَسَنَةً " أخرجه الترْمذي

குர்ஆனை ஓதிய தோழர் மறுமையில் வருவார். அப்போது குர்ஆன் இறைவா இவருக்கு ஆடையை அணிவி என்று சொல்லும் அப்போது அவருக்கு உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்படும். இறைவா இவருக்கு உன் அருளை வழங்குவாயாக! என்று கூறும். அப்போது அவருக்கு உயர்ந்த சீருடை அணிவிக்கப்படும். பிறகு குர்ஆன் இவரை பொருந்திக் கொள்ளுமாறு சொல்லும் அவரை இறைவன் பொருந்திக் கொள்வான்.

அம்மனிதரிடம் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஒதுவீராக!, அவர் ஒதுகிறபோது ஒவ்வொரு வசனத்திற்க்கும் ஒரு நன்மை அதிகப்படுத்தப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி) ( நூல்: திர்மிதி, இப்னு குஸைமா )

9. பாழாய் போவாமல் இருப்பதற்காக கற்றுக் கொள்ளுங்கள்!

وعنِ ابنِ عباسٍ رضيَ اللَّه عنهما قال : قال رسولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : «إنَّ الَّذي لَيس في جَوْفِهِ شَيْءٌ مِنَ القُرآنِ كالبيتِ الخَرِبِ »  أخرجه الترمذي

குர்ஆனின் சிறு பகுதியேனும் யார் உள்ளத்தில் மனனம் இல்லையோ அவர் உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றது. அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) ( நூல்: திர்மிதி )

10. அமல் செய்வதற்காக கற்றுக் கொள்ளுங்கள்!

عَن النَّوَّاسِ بنِ سَمعانَ رضيَ اللَّه عنهُ قال : سمِعتُ رسول اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يقولُ : «يُؤْتى يوْمَ القِيامةِ بالْقُرْآنِ وَأَهْلِهِ الذِين كانُوا يعْمَلُونَ بِهِ في الدُّنيَا تَقدُمهُ سورة البقَرَةِ وَآل عِمرَانَ ، تحَاجَّانِ عَنْ صاحِبِهِمَا » أخرجه مسلم

குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு அத்தியாயங்கள் அல்பகரா, ஆலஇம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

கற்றுக் கொடுப்பவர் எதனால் சிறந்தவர் ஆகிறார்?

1. நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்கள்!

عن ابن عمر رضي الله عنهما قال :" كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا القرآن ، فإذا مر بسجود القرآن سجد وسجدنا معه"

இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு குர்ஆனைக் கற்றுத் தந்தார்கள். ஸஜ்தா உடைய வசனங்கள் வரும் போது ஸஜ்தா செய்வார்கள். நாங்களும் அவர்களுடன் சேர்ந்து ஸஜ்தா செய்வோம். ( நூல்: அஹ்மத் )

 عن جابر بن عبد الله رضي الله عنهما :" كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا الاستخارة في الأمور كلها كما يعلمنا السورة من القرآن ".

நபி (ஸல்) அவர்கள் குர்ஆனுடைய அத்தியாயங்களை எங்களுக்குக் கற்றுத் தந்தது போல எல்லாக் காரியங்களிலும் நல்லவற்றைத் தேர்வு செய்யக் கூடிய முறையையும் கற்றுத் தந்துள்ளார்கள். ( நூல்: புகாரி )

2. நபித்தோழர்களை கற்றுக் கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள்!

عن عبادة بن الصامت رضي الله عنه قال : ( كان رسول الله صلى الله عليه وسلم يُشغل ، فإذا قدم رجل مهاجر على رسول الله صلى الله عليه وسلم دفعه إلى رجل منا يعلمه القرآن ).

"நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் வேலைகளில் ஈடுபட்டு இருக்கும் போது ஹிஜ்ரத் செய்து யாராவது வருகை தந்தால் அவருக்கு குர்ஆனைக் கற்றுக் கொடுக்குமாறு எங்களிடம் கூறுவார்கள்" என்று உப்பாதா இப்னு ஸாமித் (ரலி) அறிவிக்கின்றார்கள். ( நூல்: அஹ்மத் )

وعن أبي موسى رضي الله عنه :( أن رسول الله صلى الله عليه وسلم بعث معاذا وأبا موسى إلى اليمن ، فأمرهما أن يعلما الناس القرآن )

நபி {ஸல்} அவர்கள் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களையும், அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) அவர்களையும் யமனுக்கு அனுப்பி வைக்கும் போது அங்குள்ள மக்களுக்கு குர்ஆனை கற்றுக் கொடுக்குமாறு ஏவினார்கள்" என்று அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) அறிவிக்கின்றார்கள். ( நூல்: அஹ்மத் )

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு தமது முதல் பிரதிநிதியாக தஃவா செய்ய முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்களை அனுப்பி வைத்த போது கூடவே அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களையும் மக்களுக்கு குர்ஆனை கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக அனுப்பி வைத்தார்கள்.

மேன்மக்களும் விரும்பி கற்றுக் கொடுத்தார்கள்!

மேன்மை தங்கிய நான்கு கலீஃபாக்களும் அதற்கு பிறகு வந்த இஸ்லாமிய ஆட்சியாளர்களும் தங்களுடைய காலத்தில் இஸ்லாமிய எல்லை உலகின் எட்டு திக்குகளிலும் பரவிய போது முதலில் அவர்கள் செய்தது அவர்களை நெறிப்படுத்த கவர்னரையும், அங்குள்ள மக்களுக்கு மார்கத்தையும் குர்ஆனையும் கற்றுக் கொடுக்க சிறந்த முறையில் குர்ஆனை கற்றுக் கொடுக்கும் நபித்தோழர்களைத் தான்.

عن سعد بن عبيدة قال : وأقرأ أبو عبد الرحمن في إمارة عثمان حتى كان الحجاج ، قال أبو عبد الرحمن السلمي : وذاك الذي أقعدني مقعدي هذا.

ومعنى قول أبي عبد الرحمن السلمي :" وذاك الذي أقعدني مقعدي هذا "

" أي : أن الحديث الذي حدث به عثمان في أفضلية من تعلم القرآن وعلمه حمل أبا عبد الرحمن أن قعد ــ في مسجد الكوفة مدة طويلة - يعلم الناس القرآن لتحصيل تلك الفضيلة ".

நாம் தலைப்பிட்டுள்ள ஹதீஸை அறிவிக்கும் அபூ அப்துர்ரஹ்மான் (ரஹ்) இந்த ஹதீஸை அறிவிக்கும் போது ஓரிடத்தை சுட்டிக்காட்டி இந்த இடத்தில் அமர்ந்து தான் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சி காலம் முதற்கொண்டு ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் ஆட்சி காலம் வரை மக்களுக்கு குர்ஆனை கற்றுக் கொடுத்தேன் என்று கூறினார்கள். ( நூல்: ஃபத்ஹுல் பாரீ, பாகம்: 9, பக்கம்: 97 )

 

ومثله أيضا الإمام المقرئ نافع بن عبد الرحمن بن أبي نعيم المدني - أحد القراء السبعة - فقد أقرأ الناس دهرا طويلا يزيد عن سبعين سنة ، لأنه ممن طال عمره.

ஏழு காரிகளில் ஒருவரான அப்துர்ரஹ்மான் இப்னு அபூ நயீமுல் மதனீ (ரஹ்) அவர்கள் சுமார் 70 ஆண்டுகள் மக்களுக்கு குர்ஆனை கற்றுக் கொடுத்தார்கள். நீண்ட ஆயுள் வாழ்ந்த மேன்மக்களில் அவர்களும் ஒருவர். ( மஅரிஃபத்துல் குர்ராவுல் கிபார் லிஇமாமித் தஹபீ, பக்கம் : 64 )

وكذلك الإمام أبو منصور الخياط البغدادي : تخرج على يديه عدد كبير من قراء القرآن ، وقد وصفه الإمام الذهبي بقوله " جلس لتعليم كتاب الله دهرا ، وتلا عليه أمم "

அபூ மன்ஸூர் அல் கய்யாத்துல் பக்தாதீ (ரஹ்) அவர்கள் பல ஆண்டுகளாக மக்களுக்கு குர்ஆனை கற்றுக் கொடுத்தார்கள். பெரிய பல காரிகளை உருவாக்கினார்கள். தகபீ (ரஹ்) குர்ஆனை கற்றுக் கொடுக்க அவர் அமர்ந்தது சில காலம் என்றாலும் குர்ஆன் ஓதும் பெருங்கொண்ட ஒரு சமூகத்தை கட்டமைத்தார்கள். ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா பாகம்: 19, பக்கம் 222 )

وقد لقن العميان دهرا لله ، وكان ينفق عليهم ، حتى بلغ عدد من أقرأهم من العميان سبعين نفسا .

قال الإمام الذهبي :" ومن لقنَّ القرآن لسبعين ضريرا ، فقد عمل خيرا كثيرا "

அதிலும் குறிப்பாக பார்வையற்றவர்களுக்கும் அவர்கள் குர்ஆனை கற்றுக் கொடுத்தார்கள். அவர்கள் குர்ஆனை கற்று முடிக்கும் காலம் வரை அவர்களின் செலவினங்களுக்கு அபூ மன்ஸூர் (ரஹ்) அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். அதன் காரணமாக பார்வையற்ற அந்த மாணவர்களில் எழுபது நபர்கள் காரிகளாக உருவானார்கள். ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா பாகம்: 19, பக்கம் 223 )

وقال السمعاني :" رؤي بعد موته ، فقال : غفر الله لي بتعليمي الصبيان الفاتحة ".

இமாம் ஸம்ஆனீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அபூ மன்ஸூர் (ரஹ்) அவர்களின் வஃபாத்துக்குப் பின்னர் ஒரு நாள் அவர்களை நான் கனவில் கண்டேன். அபூ மன்ஸூர் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்:- "சிறுவர்களுக்கு நான் கற்றுக் கொடுத்த ஸூரத்துல் ஃபாத்திஹாவின் காரணமாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் என்னை மன்னித்தான்" என்று. ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா பாகம்: 19, பக்கம் 224 )

குர்ஆன் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும்!

اِنَّ هٰذَا الْقُرْاٰنَ يَهْدِىْ لِلَّتِىْ هِىَ اَقْوَمُ وَ يُبَشِّرُ الْمُؤْمِنِيْنَ الَّذِيْنَ يَعْمَلُوْنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ اَجْرًا كَبِيْرًا

நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது ( அல்குர்ஆன்: 17: 9 )

 

பெருமானார் (ஸல்) அவர்களை கவிஞர் என்று நிரூபிக்க முனைந்த பலரை குர்ஆன் வசனம் ஹிதாயத்தின் விசாலமான வாசலைத் திறந்து அந்த குர்ஆனுக்கு பணியாளர்களாய் மாற்றியது. 

குர்ஆன் என்ன தான் கூறுகிறது. கேட்டுத் தான் பார்ப்போமே என்று சாதாரணமாக நினைத்த பலரை சாதனை மனிதர்களாக மாற்றியது.

அபூதர் சிறிது நேரத்தை ஒதுக்கி பெருமானார் (ஸல்) அவர்களை சந்தித்ததால் ஃகிபார் மற்றும் அஸ்லம் என இரு கோத்திரத்தார்களுக்கு நேர்வழி நஸீப் ஆகியது.

குர்ஆனை செவியேற்று விடக்கூடாது என்ற நோக்கில் காதில் பஞ்சை வைத்து அடைத்துக் கொண்டு மறைந்து திரிந்தவர்களை மறையின் வழி நின்று வாழும் மகத்தான மாண்பாளர்களாய் மாற்றியது. துஃபைல் இப்னு அம்ர் அத்தவ்ஸி தாம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதோடு தம் கோத்திரமான தவ்ஸ் முழுமைக்கும் இஸ்லாத்தின் நறுமணத்தை நுகரச் செய்தார். அன்று அவர் காதில் இருந்து பஞ்சை எடுக்காமல் போயிருந்தால் இந்த உம்மத்திற்கு ஓர் அபூஹுரைரா கிடைத்திருக்க மாட்டார்.

டாக்டர் மர்ஹூம் கோட்டாறு ஹபீபுல்லாஹ் அவர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரிந்த முன்னாள் மருத்துவர் அவர்கள் எழுதிய பதிவு ஒன்றை எமது நண்பரும் பாவா காஸிம் பள்ளிவாசலின் முன்னாள் தலைவருமான கோட்டாறு ஃபித்ரத்துல்லாஹ் அண்ணன் அவர்களின் முகநூல் பதிவு இது.

இந்தியாவில், குறிப்பாக மேல் ஜாதி  ஹிந்து குடும்பத்தில் பிறந்த தலை சிறந்த டாக்டர்கள் சிலர், இஸ்லாமிய மார்க்கத்தில் தங்களைஇணைத்து கொண்டு தாயீக்களாக - பிரச்சாரகர்களாக , ஹாபிழ்களாக புனித மக்கா நகரில் கஃபாவை சுற்றி வலம் வருவதையும் தொழுகை,  நோன்பு போன்ற இஸ்லாமிய கடமைகளை முழு அர்ப்பணிப்புடன் நிறைவு செய்வதையும் கண்டு  நான் வியந்ததுண்டு.

அப்படி நான் வியந்த இரு ஹாஃபிழ்கள் மக்கா நகரில்  நான் மருத்துராக பணி புரிந்தகாலத்தில் சில நேரங்களில் இவர்கள் எனக்கு ஆசானாக இருந்து குர்ஆனுக்கு சிறந்த விளக்கம் அளித்ததும் உண்டு.

ஒருவர் பெயர் டாக்டர் ரெய்ஹான் இவரது இயற் பெயர் ராமன், பிராமணர். கர்நாடகா மாநிலத்தைச்சார்ந்தவர். இவரது தந்தை சாஸ்திரிகள் மற்றும் கோவில் குருக்கள். இஸ்லாத்தில்இணையும் தனது ஆவலைதந்தையிடம் சொல்ல குர்ஆனை நான் முழுமையாக படித்து இருக்கிறேன். அது சிறந்த வேதம். உனக்கு பிடித்தால் ஏற்றுக் கொள்.. தந்தை அனுமதி தந்த விசயத்தை என்னிடம் சொன்னார் டாக்டர் ரெய்ஹான்.

இவர் மக்கா நகரில் தலைசிறந்த டெர்மடாலஜிஸ்ட்மக்கா நகரில் இவரைத் தெரியாதவர் எவரும் இல்லை. 

அடுத்தவர், டாக்டர் ஷேக் உமர் கேரளாவைச் சார்ந்த நாயர் குடும்பத்தை சார்ந்தவர்.இவரது இயற் பெயர் டாக்டர் ஸ்ரீகுமார் 

மக்கா நகரின் பிரபல ஆசியா பாலி கிளினிக்கில் சீனியர் டெண்டிஸ்ட்  ஆக உள்ளார். இருவரும் இன்றும் மக்கா நகரில் மிகவும் பிரபலமான டாக்டர்கள் 

 

இந்தியாவிலிருந்து செல்லும் ஹஜ் யாத்ரீகர்களுக்கு இவர்கள் இப்போதும் இலவச மருத்துவ ஆலோசனை அளித்து வருகிறார்கள் என்பது சிறப்பு. புனித ஹஜ் 

பற்றி விளக்கம் தருவதும் உண்டு.

நபி (ஸல்) அவர்கள் 23 வருட காலங்களில் குர்ஆனிய போதனைகளின் அடிப்படையில் தோற்றுவித்த சமுதாயத்தை தான் சஹாபாக்கள்என்று சரித்திரம் இன்று அழைக்கிறது.

அல்லாஹ்வும் அவர்களை பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வை பொருந்தி கொண்டார்கள்”.( அல்குர்ஆன்: 98: 8 ) என்று சான்று பகிர்கின்றது.

அதே அல்குர்ஆன் தான் இன்றும் நமக்கு மத்தியில் இருக்கிறது. ஆனாலும் எந்த மாறுதல்களும் நமக்கு ஏற்பட வில்லை என்றால் அது நம்முடைய கோளாறு.

அல்குர்ஆனை முறையாக கற்கவும் இல்லை, கற்றுக் கொள்வதில் ஆர்வமும் இல்லை, கற்றவர்கள் ஓதுவதுமில்லை, படிப்பதில்லை, விளங்குவதில்லை, பின் பற்றுவதில்லை என்றால் என்ன மாற்றம் வந்து விடப் போகிறது?

சிந்திப்போம்! குர்ஆனைக் கற்போம்! குர்ஆனைக் கற்றுக் கொடுப்போம்! கற்றதின் படி செயல்படுவோம்! மனிதர்களில் "சிறந்தவராக" மாற்றம் பெறுவோம்!

No comments:

Post a Comment