Monday, 10 March 2025

வழிகாட்டும் வான்மறை - தராவீஹ் சிந்தனை -11. கால்நடைகளின் பால் உற்பத்தி பற்றி அல்குர்ஆன்!!

 

வழிகாட்டும் வான்மறை - தராவீஹ் சிந்தனை -11.

கால்நடைகளின் பால் உற்பத்தி பற்றி அல்குர்ஆன்!!


அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் பத்தாவது நோன்பை நிறைவு செய்து விட்டு, 11 -ம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

ரஹ்மத்தினுடைய முதல் பத்தை நிறைவு செய்து மஃக்ஃபிரத்துடைய பத்தின் துவக்க நாளில் நாம் அமர்ந்திருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய ரஹ்மத்தைப் பெற்ற மேன்மக்களில் ஒருவராக நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக! அவனுடைய மகத்தான மன்னிப்பைப் பெற்றவர்களாக நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக! ஆமீன்!

இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட நஹ்ல் சூராவின் 66 வது வசனத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்னுடைய மகத்தான வல்லமைக்கு ஒரு சான்றை சமர்ப்பித்து அதில் படிப்பினை இருப்பதாக இந்த உலகிற்கு, அவனை நம்பிக்கை கொண்டுள்ள ஈமானிய மக்களுக்கு அறைகூவல் விடுகின்றான்.

இறைவனை முற்றிலும் நம்பாத நாத்திகர்கள் "இயற்கை" தந்த வரம் என்றும், உலக மக்களின் பெரும்பாலனவர்களின் சமீபகாலம் வரை நம்பிக்கையாக இருந்த "கால்நடைகளின் இரத்தம் தான் பால்" என்ற தவறான நம்பிக்கையையும் தகர்த்தெறியும் விதமாக அந்த வசனத்தில் அல்லாஹ் தனது வல்லமையை எடுத்தியம்புகின்றான்.

وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُمْ مِمَّا فِي بُطُونِهِ مِنْ بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ

நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினைஇருக்கின்றது, அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக நாம் தான் (தாராளமாகப்) புகட்டுகிறோம். ( அல்குர்ஆன்: 16: 66 )

பொதுவாக உயிரினங்களுக்கு வயிற்றுப்பகுதி என்ற அமைப்பு இருக்கும்.

இங்குதான் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகி அந்த செரிமானமாகிய உணவு புரதச்சத்தாக மாறி இரத்தத்தில் கலநது நமக்கு உடல் வலிமையைத் தருகிறது 

ஆனால் இந்த வயிற்றுப்பகுதி ஒருசில கால்நடைகளுக்கு அதாவது பசுமாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள் மற்றும் மான்கள் ஆகியவற்றிற்கு மட்டும் தனியாக அமைந்து அவை மனிதனுக்கு பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பசுமாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள் மற்றும் மான்கள் ஆகிய கால்நடைகளுக்கு அதன் வயிறுப்பகுதி நான்கு தனித்தனி அறைகளாக அமைந்துள்ளன.

அவைகளாவன: 1.RETICULUM (ரெடிகுழம்), 2. RUMEN,   (ரூமென்), 

3. OMASUM,  (ஓமசம்), 4. ABOMASUM (அபோமசம்) இங்கு குறிபிடத்தக்க அம்சம் என்னவெனில் மேற்கண்ட கால்நடைகளுக்கு மட்டுமே அமைந்துள்ள இந்த 4 அடுக்கு பகுதிகள் பன்றி முதலான மற்ற மிருகங்களுக்கு கிடையாது என்பதே!. ( நன்றி: https://extension.msstate.edu/publications/understanding-the-ruminant-animal-digestive-system )

 

இந்த அமைப்புகளின் ஊடாக ஆராய்ச்சியைத் துவங்கிய ஆய்வாளர்கள் 21 ம் நூற்றாண்டின் இறுதியில் "இரத்தம் பாலாக ஆவதில்லை. மாறாக உண்ணுகின்ற உணவுகள் சிறு குடலுக்குச் சென்று அரைக்கப்பட்டுக் கூழாக ஆகும். குடலில் உள்ள உறிஞ்சிகள் அதிலிருந்து சத்துக்களை உறிஞ்சுகின்றன.

இவ்வாறு உறிஞ்சப்படும் பொருட்களை இரத்தம் இழுத்துச் சென்று பாலை உற்பத்தியாக்கும் மடுக்களில் சேர்க்கிறது. அங்கே பாலாக உருமாறுகிறது.

அதாவது சாணத்துக்கும், இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப்பட்ட பொருளில் இருந்து தான் பால் உற்பத்தியாகிறது என்ற 21ஆம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின் கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தனது அருள் மறையிலே எவ்வித விஞ்ஞான அறிவும் இல்லாத காலத்திலேயே அல்குர்ஆனின் ஒரு வசனத்தில் இந்த பேருண்மையை விளக்கி இருக்கின்றான்.

இந்த குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை தான் என்பதை நவீன ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் அவ்வப்போது நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன.

உலகிலேயே அதிகமாக பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா தான். 2022-23ஆம் ஆண்டில் இந்திய நாட்டின் மொத்த பால் உற்பத்தி 230.58 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட குழந்தைப் பருவத்தைக் கடந்த பிறகு, மனிதனைத் தவிர வேறு எந்த மிருகமும் வாழ்நாள் முழுவதும் பால் குடிப்பதில்லை, குறிப்பாக வேறு மிருகத்தின் பாலை.

புதிய கற்காலத்தின் போது மனிதர்களுக்கு பல விதமான சத்துக் குறைபாடுகள் இருந்தன. எனவே அதை பூர்த்தி செய்ய, கால்நடைகளை அதிகம் வளர்த்து, கிடைக்கும் பாலை தினமும் அருந்தும் வழக்கம் தோன்றியது. அந்த காலத்தில் விவசாய பொருட்களை மட்டுமே நம்பி இருக்க முடியாத நிலை இருந்ததால் தோன்றிய இந்த பழக்கம், 10,000 வருடங்களாக சமூகத்தில் தொடர்கிறது". என்கிறார் மருத்துவர் அருண் குமார். ( நன்றி: பிபிசி தமிழ் 06/03/2024 )

கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக நாம் தான் (தாராளமாகப்) புகட்டுகிறோம். ( அல்குர்ஆன்: 16: 66 )

என்னென்ன வகைகளில் எல்லாம் பாலை அருந்துபவர்களுக்கு அது இனிமையைத் தருகிறது என்ற உண்மையை உலக அறிவியல் ஆராய்ச்சிகள் தற்போது சொல்லிக் கொண்டே இருக்கின்றன. அவைகளில் சிலதை மட்டும் இங்கு பார்ப்போம்.

1. பசும் பாலில் உள்ள சத்துக்கள்...

ஒரு மனிதனுக்கு ஊட்டச்சத்துக்களில் புரோட்டீன், கால்சியம் ஆகியவை இன்றியமையாமையாதவையாக உள்ளன. இவைகள் பசும் பாலில் அதிகமாக காணப்படுகின்றது. கால்சியம் எலும்பு நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

 

பசும்பாலில் விட்டமின் ஏ, பி12, தையாமின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளது.

பசும்பாலில் தயாரிக்கப்படும் வெண்ணெய், நெய் போன்றவைகளில் கால்சியம் உள்ளதால் இது மனிதனின் தற்காப்பு சிஸ்டம் அதாவது IMMUNE SYSTEM-ஐ மேம்படுத்துகிறது.

பசும் பாலில் புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி12, வைட்டமின் டி, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தாதுக்கள், வைட்டமின்கள்,கொழுப்புகள், புரதம் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்திருப்பதால் இது முக்கிய பானமாக பார்க்கப்படுகிறது. ஆயுர்வேதத்தின் படி பால் ஊட்டச்சத்து மற்றும் செரிமான பண்புகளால் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.பசும்பாலில் 90% சதவீதம் நீர்த்தன்மை உண்டு.

நாட்டு பசும்பாலில் உள்ள பீட்டா கெசின் என்னும் புரதம் உடலை வலிமை அடைய செய்கிறது. கலப்பின பசும்பாலில் உள்ள பீட்டா கெச் என்னும் புரதம் பீட்டா  கேசோ மார்பின் என்று சொல்லப்படுகின்ற நமது உடலுக்கு ஒவ்வாத புரதப்பொருட்களை உணவுப் பாதையில் உண்டாக்குகின்றது.

2. எருமைப்பாலில் உள்ள சத்துக்கள்...

பொதுவாக பால் என்றாலே அதிகமாக எடுத்துக்கொள்ளப்படுவது பசும்பால் தான். அதற்கடுத்து எருமைப் பால். கலோரிகளைப் பொறுத்தவரை நூறு கிராம் பசும்பாலில் 67 கலோரிகள் உள்ளது, ஆனால் எருமைப் பாலில் 117 கலோரிகள் உள்ளது. இதனால் தான் எருமைப் பால் தொடர்ந்து குடித்தால் உடல் எடை கூடுகிறது" என்கிறார் மருத்துவர் அருண் குமார்.

"நூறு கிராம் பசும்பாலில் கால்சியம் சத்து 120 என்ற அளவிலும், எருமைப் பாலில் 210 என்ற அளவிலும் உள்ளது. புரதங்களைப் பொறுத்தவரை பசும்பாலில் 3.2 என்ற அளவிலும், எருமைப் பாலில் 4.3 என்ற அளவிலும் உள்ளது. ஆனால் இது கேசின் புரதம், அதாவது இவ்வகை புரதங்கள் ஜீரணத்திற்கு உகந்தவை அல்ல. இதனால் தான் நமது குடலில் லாக்டேஸ் என்சைம் இல்லையென்றால் பல உடல்நலப் பிரச்னைகள் உண்டாகும் என்று முன்னர் கூறப்பட்டது.

அதே போல கொழுப்பைப் பொறுத்தவரை பசும்பாலில் 4.1, எருமைப் பாலில் 6.5. எனவே எருமைப்பாலில் தான் சத்துக்கள் அதிகமாக உள்ளன" என்கிறது ஓர் ஆய்வு.

3. ஆட்டுப் பாலில் உள்ள சத்துக்கள்...

ஒரு கப் ஆட்டுப்பாலில் 329 மிலி கிராம் கால்சியம் உள்ளது. இது மாட்டுப்பாலில் உள்ளதைவிட அதிகம். கூடுதலாக, பாலில் உள்ள கால்சியத்தை உறிஞ்சத் தேவையான வைட்டமின்டிஊட்டச்சத்தும்  இருப்பதால், எலும்புகளுக்கு அதிக வலிமையைக் கொடுக்கிறது. எலும்புப்புரை நோய் உள்ள நோயாளிகளுக்கு எலும்பு முறிவை தடுக்கும் திறன் ஆட்டுப்பாலுக்கு இருப்பது ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இரும்பு, மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் ஆட்டுப்பாலில் அதிக அளவில் இருப்பது ஒரு சிறந்த வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. ஆரோக்கியமான எடைஇழப்பிற்கு உதவக்கூடிய புரதம் மற்றும் கால்சியம் மிகுந்துள்ளது.மாட்டுப்பாலைவிட, ஆட்டுப்பாலில் குறைந்த அளவே கொழுப்பு உள்ளதால் எளிதில் செரிமானம் ஆகிவிடும்.

ஆட்டுப்பாலில் இருக்கும்  லிபிட்டுகள் மனப்பதற்றத்தை குறைப்பதையும், மேலும் இதில் உள்ள லினோலிக் அமிலம் மூளை வளர்ச்சியைத் தூண்டுவதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

4. ஒட்டகப் பாலில் உள்ள சத்துக்கள்...

5000 ஆண்டுகளாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள நாடோடி மக்களின் பாரம்பரிய உணவுகளில் ஒட்டகப் பால் ஒரு பகுதியாக இருந்து வருகிறது, மேலும், அரபு நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா, மற்றும் இந்தியாவின் வட மாநிலங்களில் ஒட்டகப் பால் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது, 

மேலும், ஒட்டகப் பாலில் இன்சுலின் போன்ற புரதங்கள் இருப்பதால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை அளிக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன.

ஒட்டகப் பாலில், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் வைட்டமின் ஏ பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதைத் தவிர புரதம் கால்சியம் மற்றும் தாதுக்கள் அடங்கிய ஊட்டச்சத்து மிக்க பால் இது.

ஒட்டக பாலின் மருத்துவ பலன்களில், பாலியல் தொடர்பான பிரச்சனையை தீர்க்கும் குணமும் அடங்கும். ஆண்மையின்மையை போக்கும் ஆற்றல் ஒட்டக பாலுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவர்கள் ஒட்டகப் பாலை அருந்துவதால், நல்ல பலன் கிடைக்கும்.

வைட்டமின் ஏ நிறைந்த ஒட்டகப்பால், மாலைக்கண் நோய் வருவதை தடுக்கிறது, மேலும் இதில் உள்ள வைட்டமின் கே கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பசும்பாலுக்கும் ஒட்டக பாலுக்கும் அடிப்படை வித்தியாசங்கள் உண்டு. ஒட்டகப் பாலில் அதிக அளவு இரும்பு, ஜின்க், பொட்டாசியம் , காப்பர் , சோடியம், மக்னீசியம் போன்றவை உள்ளன. பசும்பாலை விட அதிக புரத சத்து உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் பி2 அதிகமாக உள்ளது. பசும்பாலை விட கொலெஸ்ட்ரால் குறைவாக உள்ளது. ஒட்டகப் பாலில் லாக்டோஸ் குறைவாக இருக்கும். ஆகவே லாக்டோஸ் அதிகம் எடுத்துக்கொள்ள முடியாதவர்களும் பருகும் விதத்தில் இருக்கும். ஆன்டிபாக்டீரியால் மற்றும் அன்டிவைரல் தன்மை பசும்பாலை விட அதிகம் உள்ளது.

ஒட்டகப் பாலில் நோய் எதிர்ப்பு புரதம் அதிகமாக உள்ளதால், நோயெதிர்ப்பு மண்டலத்தை தாக்கும் கிருமிகளை உள்ளே வரவிடாமல் செய்கிறது. மல்டிபிள் செலெரோசிஸ், க்ரோன் போன்ற வியாதிகள் வராமல் தடுக்கிறது.

 

ஆட்டிசத்துக்கான அறிகுறியை குறைக்கிறது. சில நேரங்களில் ஆட்டிசம் பாதிக்கப்பட்டவரை முற்றிலும் குணப்படுத்துகிறது. ஒட்டக பாலில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்ட் தன்மை தான் ஆட்டிஸத்தின் அறிகுறியை குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

ஆட்டிசம் நோயாளிகள் ஒட்டக பாலை எடுத்துக் கொள்வதன் மூலம் சாந்தமான மன நிலையுடன், குறைந்த வெறித்தன்மையுடன் , தன்னை தானே அழித்துக்கொள்ளும் தன்மை குறைந்தும் காணப்படுவதாக கூறுகின்றனர்.

ஆல்பா ஹைட்ராக்சில் என்று ஒரு கூறு ஓட்டக பாலில் இருக்கிறது. அது மென்மையான கோடுகள் மற்றும் சுருக்கங்கள் சருமத்தில் தோன்றாமல் தடுக்கிறது. இதனால் வயது முதிர்வு தடுக்கப்படுகிறது. ( நன்றி: தினமலர், ஜீ நியூஸ், சமயம். காம், her zindagi.com, சுவனப்பிரியன்.காம் )

சொர்க்கத்திலும் தொடரும் பாலுடனான தொடர்பு..

مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ فِيهَا أَنْهَارٌ مِنْ مَاءٍ غَيْرِ آسِنٍ وَأَنْهَارٌ مِنْ لَبَنٍ لَمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَارٌ مِنْ خَمْرٍ لَذَّةٍ لِلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِنْ عَسَلٍ مُصَفًّى وَلَهُمْ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ وَمَغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ كَمَنْ هُوَ خَالِدٌ فِي النَّارِ وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ

இறையச்சமுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத (தெளிந்த) நீரைக்கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மதுரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லாவிதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தில் எவன் நிரந்தரமாகத் தங்கியிருந்து, அவர்கள் கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) அவர்களுடைய குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா? ( அல்குர்ஆன்: 47: 15 )

ஒரு கோப்பை பால் இந்த உம்மத்தின் தரத்தை நிர்ணயித்தது....

  حَدَّثَنا عَبْدَانُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَنْبَسَةُ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ ابْنُ المُسَيِّبِ: قَالَ أَبُو هُرَيْرَةَ: " أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةَ أُسْرِيَ بِهِ بِإِيلِيَاءَ بِقَدَحَيْنِ مِنْ خَمْرٍ، وَلَبَنٍ فَنَظَرَ إِلَيْهِمَا فَأَخَذَ اللَّبَنَ، قَالَ جِبْرِيلُ: الحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَاكَ لِلْفِطْرَةِ، لَوْ أَخَذْتَ الخَمْرَ غَوَتْ أُمَّتُكَ

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டிருந்த போது நபிகளாருக்கு ஒரு கோப்பையில் மதுபானமும், இன்னொரு கோப்பையில் பாலும் வழங்கப்பட்டது. அப்போது நபிகளார் {ஸல்} அவர்கள் பாலை அருந்துவதற்காக தேர்ந்தெடுத்தார்கள். அதைக் கண்ணுற்ற ஜிப்ரயீல் (அலை) அவர்கள், உங்களை நேரான காரியத்தின் வழி நடத்திய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! என்று கூறி விட்டு,

அல்லாஹ்வின் தூதரே! இயற்கையான பானத்தையே நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். நீங்கள் மதுவை தேர்ந்தெடுத்திருப்பீர்களேயானால் உங்களது சமுதாயம் வழிகெட்டுப் போயிருக்கும்என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  ( நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ, பாகம்:6, பக்கம் 173 )

ஒரு மிடரு பால் சமத்துவத்தைப் பறைசாற்றியது....

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أُتِيَ بِلَبَنٍ قَدْ شِيبَ بِمَاءٍ، وَعَنْ يَمِينِهِ أَعْرَابِيٌّ، وَعَنْ يَسَارِهِ أَبُو بَكْرٍ، فَشَرِبَ، ثُمَّ أَعْطَى الْأَعْرَابِيَّ، وَقَالَ:((الْأَيْمَنَ فَالْأَيْمَنَ)).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுடைய இதே வீட்டில் எங்களிடம் வந்து தண்ணீர் புகட்டும்படி கேட்டார்கள். ஆகவே நாங்கள் எங்களுடைய ஓர் ஆட்டின் பாலை அவர்களுக்காகக் கறந்தோம். பிறகு நான் எங்களுடைய இந்தக் கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து அதை அவர்களுக்கு கொடுத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் இடப் பக்கத்தில் அபூபக்கர் (ரலி) அவர்களும் வலப்பக்கத்தில் ஒரு கிராமவாசியும் இருந்தனர். நபி (ஸல்)அவர்கள் பாலைக் குடித்து முடித்தவுடன் தமது (பாலின்) மீதத்தை கிராமவாசிக்குக் கொடுத்தார்கள். பிறகு வலப்பக்கத்திலிருப்பவர்களே முன்னுரிமையுடையவர்கள். ஆகவே வலப்ப்பத்திலிருப்பவர்களுக்கே முதலிடம் கொடுங்கள் என்று கூறினார்கள். இறுதியில் அனஸ் (ரலி) அவர்கள் அது நபிவழியாகும் அது நபிவழியாகும் என்று மும்முறை கூறினார்கள் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: புகாரி )

ஒரு மிடரு பால் நபி ஸல் பரக்கத்தை உணர்த்தியது....

وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ: أن النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ بِشَرَابٍ فَشَرَبَ مِنْه، وَعَن يمِينِهِ غُلامٌ وَعَنْ يَسارِهِ الأشْياخُ، فَقالَ: للغُلامِ: "أتأذَنُ لي أن أعْطِيَ هَؤُلَاءِ؟ "، فَقالَ الغُلام: وَالله يا رَسُولَ الله لا آثَرْتُ بِنَصِيبِي مِنْكَ أحَدًا فَتَلَّه رَسُولِ الله صلى الله عليه وسلم فِي يَدِهِ. مُتَّفَقٌ عَلَيْهِ)

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து அவர்கள் (பால்) குடித்தார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் மக்களில் மிகக் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவரும் இடப்பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். எனவே, நபி (ஸல்) அவர்கள் (அச்சிறுவரை நோக்கி), ‘சிறுவனே! நான் இதை முதியவர்களுக்குக் கொடுத்துவிட எனக்கு நீ அனுமதியளிக்கிறாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், ‘இறைத்தூதர் அவர்களே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக் கூடிய மீதத்தை எவருக்கும் நான்விட்டுக் கொடுக்க மாட்டேன்என்று கூறினார். எனவே, நபி (ஸல்) அவர்கள், (அந்தப் பாலில்) தாம் (குடித்து) மீதம் வைத்ததை அந்தச் சிறுவருக்கே கொடுத்துவிட்டார்கள். அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஅது (ரலி), ( நூல்: புகாரி )

ஒரு ஆட்டின் பால் ஹிதாயத்தின் வாசலைத் திறந்தது...

 

حدثنا علي بن سعيد الرازي ، ثنا مكرم بن محرز الخزاعي ، حدثني أبي ، عن حزام بن هشام ، عن أبيه ، عن جده حبيش بن خالد : " أن رسول الله - صلى الله عليه وسلم - حين خرج من مكة وخرج منها مهاجرا إلى المدينة هو وأبو بكر ومولى أبي بكر عامر بن فهيرة ودليلهما الليثي عبد الله بن أريقط مروا على خيمتي أم معبد الخزاعية وكانت برزة جلدة تحتبي بفناء القبة ، ثم تسقي وتطعم فسألوها لحما وتمرا ؛ ليشتروه منها فلم يصيبوا عندها شيئا من ذلك ، وكان القوم مرملين مسنتين فنظر رسول الله - صلى الله عليه وسلم - إلى شاة في كسر الخيمة فقال : " ما هذه الشاة يا أم معبد ؟ " قالت : شاة خلفها الجهد عن الغنم ، قال : " هل بها من لبن ؟ " قالت : هي أجهد من ذلك ، قال : " أتأذنين إلي أن أحلبها ؟ " قالت : نعم ، بأبي أنت وأمي ، إن رأيت بها حلبا فاحلبها ، فدعا بها رسول الله فمسح بيده ضرعها ، وسمى الله تعالى ، ودعا لها في شاتها فتفاجت عليه ودرت واجترت ، ودعا بإناء يربض الرهط ، حلب فيها ثجا حتى علاه البهاء ، ثم سقاها حتى رويت ، وسقى أصحابه [ ص: 255 ] حتى رووا ، وشرب آخرهم - صلى الله عليه وسلم - ، ثم أراضوا ، ثم حلب فيها ثانيا بعد بدء حتى ملأ الإناء ، ثم غادره عندها ، ثم بايعها وارتحلوا عنها ، فقلما لبثت حتى جاء زوجها أبو معبد يسوق أعنزا عجافا يساوكهن هزلا ضحى مخهن قليل ، فلما رأى أبو معبد اللبن عجب وقال : من أين لك هذا اللبن يا أم معبد والشاة عازب حيال ، ولا حلوبة في البيت ؟ فقالت : لا والله ، إلا أنه مر بنا رجل مبارك ، من حاله كذا وكذا ، قال : صفيه لي يا أم معبد

நபி ஸல் அவர்கள் ஹிஜ்ரத் பயணத்தின் போது  குஜாஇய்யா கிளையைச் சேர்ந்த உம்மு மஅபத்என்ற பெண்ணின் இரண்டு கூடாரங்களைக் கண்டார்கள். (அந்தக் கூடாரங்கள் மக்காவிலிருந்து 130 கி.மீ. தூரத்தில் உள்ள குதைத்என்ற ஊரின் எல்லையில் முஷல்லல்என்ற இடத்தில் இருந்தது. இந்த உம்மு மஅபத்வீரமும், துணிவுமிக்கவர் ஆவார்.) இவர் எப்போதும் தனது கூடாரத்தின் வெளியில் அமர்ந்துகொண்டு தன்னைக் கடந்து செல்பவர்களுக்கு உணவும், நீரும் வழங்கி வருவார். அவரைப் பார்த்த நபி (ஸல்) அவர்களும் அபூபக்ரும் உன்னிடம் எதுவும் சாப்பிட இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னிடம் ஏதாவது இருப்பின் நான் உங்களுக்கு விருந்தளிப்பதில் குறைவு செய்ய மாட்டேன். ஆட்டு மடியிலும் பால் இல்லையே! இந்த ஆண்டு மிகப் பஞ்சமாக இருக்கின்றதுஎன்று கூறினார்.

நபி (ஸல்) அவர்களின் பார்வை கூடாரத்தின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஓர் ஆட்டின் மீது பட்டது. உம்மு மஅபதே! இது என்ன ஆடு?” என்று கேட்டார்கள். அவர் இது ஆட்டு மந்தையுடன் சேர்ந்து மேய்ந்துவர முடியாத அளவுக்கு பலவீனமான ஆடுஎன்றார். அது பால் தருமா?” என்று நபி (ஸல்) கேட்டார்கள்.

அது மிக மெலிந்ததாயிற்றே!என்று அப்பெண் கூறினார். நான் அந்த ஆட்டில் பால் கறந்துகொள்ள எனக்கு அனுமதியளிக்கிறாயா?” என்று நபி (ஸல்) கேட்க, “எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டுமாக! அதில் பால் இருக்கிறது என்று நீங்கள் கருதினால் தாராளமாக கறந்து கொள்ளுங்கள்என்றார் அப்பெண்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பிஸ்மில்லாஹ்’ (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறி அல்லாஹ்விடம் பிரார்தித்தார்கள். அல்லாஹ்வின் அருளால் ஆட்டின் மடி பாலால் நிரம்பி சொட்டியது. ஒரு நடுத்தரமான பாத்திரத்தை எடுத்துவரக் கூறி அதில் பால் கறந்தார்கள். பாத்திரம் நிரம்பவே முதலில் அப்பெண்மணிக்கு குடிக்கக் கொடுத்தார்கள். அவர் குடித்து தாகம் தீரவே பின்பு தனது தோழர்களுக்குக் கொடுத்தார்கள். அவர்களுக்குப் பின்பு நபி (ஸல்) குடித்தார்கள். பின்பு மற்றொரு முறை அந்த பாத்திரம் நிரம்பப் பால் கறந்து அப்பெண்மணியிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்.

சிறிது நேரத்தில் அப்பெண்ணின் கணவர் அபூ மஅபத், மெலிந்த நடக்க இயலாத பலவீனமான ஆடுகளை ஓட்டிக்கொண்டு அங்கு வந்தார். அங்கு பால் கறக்கப்பட்டிருப்பதைப் பார்த்தவுடன் ஆச்சரியமடைந்து இந்தப் பால் உனக்கு எங்கிருந்து கிடைத்தது? வீட்டில் பால் சுரக்கும் ஆடு இல்லை மற்ற ஆடுகளும் தூரமாக இருந்தன. எப்படி உனக்கு பால் கிடைக்க முடியும்?” என்று கேட்டார். அதற்கு அப்பெண் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஒரு நல்ல பாக்கியம் பெற்ற மனிதர் இங்கு வந்தார். அவர் இப்படி இப்படியெல்லாம் பேசினார். அவன் நிலை இப்படி இப்படி இருந்ததுஎன்று வருணித்தார். அதற்கு அவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக! குறைஷிகள் தேடும் மனிதராகத்தான் அவர் இருக்க வேண்டும் என்று கூறி அவரைப் பற்றி முழுமையாக எனக்கு விவரித்துக் கூறுஎன்றார்.

அப்பெண், நபி (ஸல்) அவர்களின் அழகிய பண்புகளை கேட்பவர் கண்முன் காண்பது போன்று வருணித்துக் கூறினார்.  

قال أبو معبد : هو والله صاحب قريش الذي ذكر لنا من أمره ما ذكر بمكة ولقد هممت أن أصحبه ، ولأفعلن إن وجدت إلى ذلك سبيلا .

அப்போது அபூ மஅபத் அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர் குறைஷிகள் தேடும் மனிதர்தான். குறைஷிகள் இவரைப் பற்றி ஏராளம் கூறியிருக்கின்றனர். நான் அவருடன் தோழமை கொள்ள வேண்டுமென்று திட்டமாக நினைத்திருந்தேன். அதற்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நான் அதைச் செய்வேன்என்றார்.

فمضى ثلاث ليال ما ندري أين توجه رسول الله صلى الله عليه وسلم، إذ أقبل رجل من الجن من أسفل مكة يغني بأبيات غنى بها العرب، وإن الناس ليتبعونه يسمعون صوته وما يرونه، حتى خرج بأعلى مكة:

جزى الله رب الناس خير جزائه

 رفيقين قالا خيمتي أم معبد

 هما نزلاها بالهدى واهتدت به

لقد فاز من أمسى رفيق محمد  

 فيا لقصي ما زوى الله عنكم

به من فعال لا تجارى وسؤدد [ ص: 256 ]  

ليهن بني كعب مكان فتاتهم

ومقعدها للمؤمنين بمرصد  

 سلوا أختكم عن شاتها وإنائها

فإنكم إن تسألوا الشاة تشهد

 دعاها بشاة حائل فتحلبت عليه

صريحا ضرة الشاة مزيد

இந்நேரத்தில், மக்காவில் உள்ளவர்களோ உயர்ந்த சப்தம் ஒன்றைச் செவிமடுத்தார்கள். ஆனால், அந்த சப்தம் கொடுப்பவரை அவர்கள் பார்க்க முடியவில்லை. அந்த சப்தமாவது:

அர்ஷின் அதிபதியான அல்லாஹ் நற்கூலி வழங்கட்டும்!

உம்மு மஅபதின் கூடாரத்தில் தங்கிச் சென்ற இரு தோழர்களுக்கு.

அவர்கள் நலமுடனே தங்கி நலமுடனே போனார்கள்.

முஹம்மதுக்கு தோழராகும் பாக்கியம் பெற்றவர் வெற்றியடைந்தார்.

குஸை வம்சமே! என்ன கைசேதம்! தலைமையையும் சிறப்பையும்

உங்களை விட்டுவிட்டு அல்லாஹ் அவருக்கு வழங்கி விட்டான்.

கஅபு குடும்பத்துக்கு வாழ்த்துக்கள் பல! அவருடைய திருமதியின் இல்லம் அருமையானது! அது இறைவிசுவாசிகளுக்கு தங்குமிடமானது!

உங்கள் சகோதரியிடம் ஆடு, பாத்திரம் பற்றி வினவுங்கள்!

நீங்கள் ஆட்டிடம் கேட்டால் அதுவும் சான்று பகரும்!

قالت: فلما سمعنا قوله عرفنا حيث توجه رسول الله صلى الله عليه وسلم

அஸ்மா பின்த் அபூபக்ர் (ரழி) கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் எங்கு சென்றார்கள் என்று எங்களுக்குத் தெரியாமல் இருந்தது. அப்போது மக்காவின் கீழ் பகுதியிலிருந்து ஒரு ஜின் இக்கவிதைகளைப் பாடியது. மக்கள் சப்தம் வரும் திசையை நோக்கி சப்தத்தைக் கேட்டுக் கொண்டே சென்றார்கள். ஆனால் பாடுவது யார்? என்று தெரியவில்லை. பின்பு அந்த சப்தம் மக்காவின் மேல்புறத்தின் வழியாக மறைந்துவிட்டது. அந்த ஜின்னின் சப்தத்தைக் கேட்டபோது நபி (ஸல்) மதீனாவை நோக்கி சென்றிருக்கலாம் என்று நாங்கள் தெரிந்து கொண்டோம். ( நூல்: ஜாதுல் மஆது, முஸ்தத்ரகுல் ஹாகிம் )

வாழ்க்கையை பரிசளித்த பால் பாத்திரம்....

وعن أبي عَبْد الرَّحْمَن عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخطَّابِ، رضيَ اللهُ عنهما قَالَ: سَمِعْتُ رسولَ الله ﷺ يَقُولُ: انْطَلَقَ ثَلاَثَةُ نَفَرٍ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ حَتَّى آوَاهُمُ الْمبِيتُ إِلَى غَارٍ فَدَخَلُوهُ، فانْحَدَرَتْ صَخْرةٌ مِنَ الْجبلِ فَسَدَّتْ عَلَيْهِمْ الْغَارَ، فَقَالُوا: إِنَّهُ لاَ يُنْجِيكُمْ مِنْ هَذِهِ الصَّخْرَةِ إِلاَّ أَنْ تَدْعُوا الله تعالى بصالح أَعْمَالكُمْ قَالَ رجلٌ مِنهُمْ: اللَّهُمَّ كَانَ لِي أَبَوانِ شَيْخَانِ كَبِيرانِ، وكُنْتُ لاَ أَغبِقُ قبْلهَما أَهْلاً وَلا مالاً  فنأَى بِي طَلَبُ الشَّجرِ يَوْماً فَلمْ أُرِحْ عَلَيْهمَا حَتَّى نَامَا فَحَلبْت لَهُمَا غبُوقَهمَا فَوَجَدْتُهُمَا نَائِميْنِ، فَكَرِهْت أَنْ أُوقظَهمَا وَأَنْ أَغْبِقَ قَبْلَهُمَا أَهْلاً أَوْ مَالاً، فَلَبِثْتُ وَالْقَدَحُ عَلَى يَدِى أَنْتَظِرُ اسْتِيقَاظَهُما حَتَّى بَرَقَ الْفَجْرُ وَالصِّبْيَةُ يَتَضاغَوْنَ عِنْدَ قَدَمي فَاسْتَيْقظَا فَشَربَا غَبُوقَهُمَا. اللَّهُمَّ إِنْ كُنْتُ فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَفَرِّجْ عَنَّا مَا نَحْنُ فِيهِ مِنْ هَذِهِ الصَّخْرَة، فانْفَرَجَتْ شَيْئاً لا يَسْتَطيعُونَ الْخُرُوجَ مِنْهُ.

(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், ‘நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்என்றனர். அவர்களில் ஒருவர், ‘இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கி விட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை.

குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்துஎனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய வல்லமையை, ஆற்றலை உணர்ந்து அவனை கலப்பற்ற முறையில் வணங்கி வழிபட்டு வாழும் நல்ல தௌஃபீக்கை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்!ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment