Sunday, 9 March 2025

இருள் அகற்றும் இறைமறை - தராவீஹ் சிந்தனை - 10. கர்ப்பத்தின் மர்மம் இஸ்லாமும், அறிவியலும்....

 

இருள் அகற்றும் இறைமறை - தராவீஹ் சிந்தனை - 10.

கர்ப்பத்தின் மர்மம்  இஸ்லாமும், அறிவியலும்....


பத்தாம் நாள் தராவீஹ் தொழுகையைத் தொழுது முடித்தும், ஒன்பதாம் நாள் நோன்பை நிறைவு செய்தும் அமர்ந்திருக்கின்ற நம் அனைவரின் நோன்பையும், தராவீஹ் தொழுகையையும், இன்றைய நாளில் நாம் செய்த தான தர்மங்களையும், இதர வணக்க, வழிபாடுகளையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அங்கீகரித்து அளவிலா நன்மைகளை வழங்கி வாழ்வின் இறுதிவரை தொடர்ந்து வணக்க, வழிபாடுகளில் இன்பத்தோடு ஈடுபட அருள்புரிவானாக! ஆமீன்!

இன்றைய தொழுகையில் ஓதப்பட்ட இறைவசனங்களில் ஒரு இடத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பெண் சமூகத்தின் கர்பப்பை குறித்தும், கர்ப்பத்தில் சுமந்து கொண்டிருக்கும் குழந்தை குறித்தும் உண்டான முழு அறிவும், ஞானமும் தனக்கு இருப்பதாக கூறுகின்றான்.

اَللّٰهُ يَعْلَمُ مَا تَحْمِلُ كُلُّ اُنْثٰى وَمَا تَغِيْضُ الْاَرْحَامُ وَمَا تَزْدَادُ  وَكُلُّ شَىْءٍ عِنْدَهٗ بِمِقْدَارٍ‏

ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்குவதையும், அவை விரிவதையும் அல்லாஹ் நன்கறிவான். ஒவ்வொரு பொருளும் அவனிடம் ஓர் அளவைக் கொண்டு இருக்கின்றது.

عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْكَبِيْرُ الْمُتَعَالِ‏

மறைவானதையும், வெளிப்படையானதையும் (அவன்) நன்கறிபவன்; அவன் மிகவும் பெரியவன்; மிகவும் உயர்ந்தவன். ( அல்குர்ஆன்: 13: 8, 9 )

விஞ்ஞான வளர்ச்சியின் ஊடாக சோனோகிராஃபி எனும் ஸ்கேன் மூலமாக ஒவ்வொரு மாதமும் கருவில் இருக்கும் கருவின்  வளர்ச்சி முதற் கொண்டு கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம், இருதயத் துடிப்பு அதன் உறுப்பு குறைபாடுகள், குழந்தையின் வளர்ச்சி வரை கண்காணிக்கப்படுகிறது.

இதன் காரணமாக மனிதனுக்கு எல்லா வகையான அறிவும் இருக்கிறது, ஆற்றலும் இருக்கிறது என்ற முடிவுக்கு நாம் வந்து விட முடியாது. வந்து விடவும் கூடாது.

விஞ்ஞானத்தால், விஞ்ஞான அறிவு பெற்றிருக்கும் ஒருவரால் பின்வரும் நபி மொழியில் கூறப்படும் இந்த உரையாடலைக் கேட்க முடியுமா? கர்ப்பப்பையில் இருக்கும் இந்த வானவரை காட்சிப் படுத்த முடியுமா? குழந்தையின் விஷயத்தில் நிர்ணயிக்கப்படும் இந்த நான்கு அம்சத்தை அறிந்திட முடியுமா?

அவர் அந்த குழந்தைக்கு உறுப்புக்களை வடிவமைப்பதை திரையில் காட்ட முடியுமா?, என்றால் திட்டவட்டமாக முடியாது எனும் பதிலைத் தான் அவர்களும் தருவார்கள்,  நாமும் தருவோம். அது தான் சத்தியமும் கூட.

عن حُذَيْفَةُ بنُ أَسِيدٍ الغِفَارِيُّ:- سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ يقولُ: إذَا مَرَّ بالنُّطْفَةِ ثِنْتَانِ وَأَرْبَعُونَ لَيْلَةً، بَعَثَ اللَّهُ إلَيْهَا مَلَكًا، فَصَوَّرَهَا وَخَلَقَ سَمْعَهَا وَبَصَرَهَا وَجِلْدَهَا وَلَحْمَهَا وَعِظَامَهَا، ثُمَّ قالَ: يا رَبِّ، أَذَكَرٌ أَمْ أُنْثَى؟ فَيَقْضِي رَبُّكَ ما شَاءَ، وَيَكْتُبُ المَلَكُ، ثُمَّ يقولُ: يا رَبِّ، أَجَلُهُ؟ فيَقولُ رَبُّكَ ما شَاءَ، وَيَكْتُبُ المَلَكُ، ثُمَّ يقولُ: يا رَبِّ، رِزْقُهُ؟ فَيَقْضِي رَبُّكَ ما شَاءَ، وَيَكْتُبُ المَلَكُ، ثُمَّ يَخْرُجُ المَلَكُ بالصَّحِيفَةِ في يَدِهِ، فلا يَزِيدُ علَى ما أُمِرَ وَلَا يَنْقُصُ.

الراوي : عامر بن واثلة أبو الطفيل | المحدث : مسلم | المصدر : صحيح مسلم

ஹுதைஃபா இப்னு அஸீதில் ஃகிஃபாரி (ரலி)  அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  'விந்துத்துளி (நுத்ஃபா)க்குப் பிறகு 42 இரவுகள் கடந்ததும், அல்லாஹ் அங்கே ஒரு வானவரை அனுப்புகிறான், அவர் அதை வடிவமைக்கிறார் அதன் செவிப்புலன், பார்வை, தோல், சதை மற்றும் எலும்புகளை உருவாக்குகிறார். பின்னர் வானவர் கேட்கிறார்: "ஓ இறைவா, அது ஆணா அல்லது பெண்ணா?" உங்கள் இறைவன் தான் விரும்புவதைத் தீர்மானிக்கிறான், வானவர் அதை எழுதுகிறார். பின்னர் வானவர் கேட்கிறார்: "ஓ இறைவா, அதன் ஆயுட்காலம் பற்றி என்ன?" உங்கள் இறைவன் தான் விரும்புவதைத் தீர்மானிக்கிறான், வானவர் அதை எழுதுகிறார். பின்னர் வானவர் கேட்கிறார்: "ஓ இறைவா, அதன் உணவு பற்றி என்ன?" உங்கள் இறைவன் தான் விரும்புவதைத் தீர்மானிக்கிறான், வானவர் அதை எழுதுகிறார். பின்னர் வானவர் கையில் ஏட்டுடன் வெளியே செல்கிறார், கட்டளையிடப்பட்டதில் எதுவும் சேர்க்கப்படவோ அல்லது குறைக்கப்படவோ மாட்டாது". ( நூல்: முஸ்லிம் )

قَالَ الْبُخَارِيُّ: حَدَّثَنَا عَبْدُالْعَزِيزِ بْنُ عَبْدِاللَّهِ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِاللَّهِ، عَنْ أَبِيهِ: أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: مَفَاتِيحُ الْغَيْبِ خَمْسٌ لَا يَعْلَمُهُنَّ إِلَّا اللَّهُ: إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ [لقمان:34].

நபி (ஸல்) அவர்கள் மறைவான ஐந்து விஷயங்களின் திறவுகோல்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள்" என்று கூறி விட்டு சூரத் லுக்மானில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து விஷயங்களைக் குறிப்பிடுவதாக விளக்கினார்கள்,  

"நிச்சயமாக, அல்லாஹ்விடம்தான் அந்த (உலக முடிவு) நேரத்தைப் பற்றிய அறிவு இருக்கிறது, அவன் மழையை இறக்குகிறான், மேலும் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அவன் அறிவான். நாளை ஒரு மனிதன் என்ன சம்பாதிப்பான் என்று தெரியாது, எந்த பூமியில் தான் இறப்பான் என்று யாருக்கும் தெரியாது. நிச்சயமாக, அல்லாஹ் எல்லாம் அறிந்தவன், எல்லாம் அறிந்தவன்"  ( அல்குர்ஆன்: 31: 34 )

இந்த இறைவசனம் கூறும் இன்னொரு பொருள் ஒரு பெண்ணின் பிரசவ காலம்.

 وقال العوفى عن ابن عباس ( وَمَا تَغِيضُ الأرحام ) يعنى السقط ( وَمَا تَزْدَادُ ) . يقول : ما زادت الرحم فى الحمل على ما غاضت حتى ولدته تماما . وذلك أن من النساء من تحمل عشرة أشهر ، ومنهن من تحمل تسعة أشهر ، ومنهم من تزيد فى الحمل ومنهن من تنقص . فذلك الغيض والزيادة التى ذكر الله - تعالى - وكل ذلك بعلمه - سبحانه

அதாவது, ஒரு பெண்ணின் பிரசவ காலத்தின் கூடுதல் குறைவுகளையும் அல்லாஹ்வே மிக அறிந்து வைத்திருப்பதாக குறிப்பிடுகின்றான். என்று திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவர் என்று அழைக்கப்படும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கருத்தை திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகின்றனர். 

இது குறித்து தஃப்ஸீர் குர்துபியிலே மிக விசாலமாகவே விவரிக்கப்பட்டுள்ளது.

وروى أيضا قال : بينما مالك بن دينار يوما جالس إذ جاءه رجل فقال : يا أبا يحيى ! ادع لامرأة حبلى منذ أربع سنين قد أصبحت في كرب شديد ; فغضب مالك وأطبق المصحف ثم قال : ما يرى هؤلاء القوم إلا أنا أنبياء ! ثم قرأ ، ثم دعا ، ثم قال : اللهم هذه المرأة إن كان في بطنها ريح فأخرجه عنها الساعة ، وإن كان في بطنها جارية فأبدلها بها غلاما ، فإنك تمحو ما تشاء وتثبت ، وعندك أم الكتاب ، ورفع مالك يده ، ورفع الناس أيديهم ، وجاء الرسول إلى الرجل فقال : أدرك امرأتك ، فذهب الرجل ، فما حط مالك يده حتى طلع الرجل من باب المسجد على رقبته غلام جعد قطط ، ابن أربع سنين ، قد استوت أسنانه ، ما قطعت سراره

மாலிக் இப்னு தீனார் (ரஹ்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அபூ யஹ்யா அவர்களே! என் மனைவி கர்ப்பம் தரித்து நான்கு ஆண்டுகளாக வயிற்றில் குழந்தையை சுமந்து வருகின்றார்; அவருக்கு இன்று காலை கடுமையான வலி ஏற்பட்டது. துஆ செய்யுங்கள்என்றார்.

இதைக் கேட்டதும், மாலிக் இப்னு தீனார் (ரஹ்) அவர்கள் கடும் கோபமடைந்தவர்களாக என்ன இந்த மக்கள் நம்மை நபி என்று நினைத்துக் கொண்டார்களா? என்று கேட்டுவிட்டு, மேற்கூரிய இறைவசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.

பின்பு, “யாஅல்லாஹ்! அப்பெண்மணியின் வயிற்றில் காற்று மாத்திரம் நிரம்பி இருக்குமானால் உடனே வெளியேற்றிவிடு! அது உண்மையில் குழந்தைப்பேறாக இருக்குமானால் அழகான ஆண்குழந்தையை பிறக்கச் செய்வாயாக! என்று துஆ செய்தார்கள்.

அந்த சபையில் அந்த மனிதரும் நின்று கொண்டிருந்தார்; அப்போது அவரின் உறவினர் ஒருவர் வந்து, அவரின் பெயர் கூறி அழைத்து உமக்கு குழந்தை பிறந்துள்ளதுஎன்றார். அவர் உடனே அங்கிருந்து சென்று விட்டார்.

அதன் பின்னர், ஒருவர் வந்து இப்போது இங்கு வந்து முறையிட்டுச் சென்ற அவரின் மனைவி ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளதாகவும்,  அந்த குழந்தைக்கு நன்கு பல் வளர்ந்து, தலை முடி தோள் புஜம் வரை இருந்ததாகவும் கூறினார்.

 

ويقال : إن محمد بن عجلان مكث في بطن أمه ثلاث سنين ، فماتت به وهو يضطرب اضطرابا شديدا ، فشق بطنها وأخرج وقد نبتت أسنانه

முஹம்மத் இப்னு அஜ்லான் எனும் தாபிஈ அவரின் தாயாரின் வயிற்றில் மூன்று ஆண்டுகள் இருந்ததாகவும், அவரின் தாயார் பிரசவிப்பதற்கு கடுமையான சிரமத்தை சந்தித்ததாகவும், அவர்களின் வயிற்றைக் கிழித்து தான் அவர்களை வெளியே எடுத்ததாகவும், இந்த பிரசவத்திற்கு பிறகு அவரின் தாயார் இறந்ததாகவும் வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

وذكر الغزنوي أن الضحاك ولد لسنتين ، وقد طلعت سنه فسمي ضحاكا .

தஃப்ஸீர் கலையின் தலைசிறந்த மாமேதை இமாம் ளஹ்ஹாக் (ரஹ்) அவர்கள் தமது தாயாரின் வயிற்றில் இரண்டு ஆண்டுகள் இருந்ததாகவும், பிறக்கும் போது நன்கு பல் வளர்ந்த நிலையில் இருந்ததாகவும், ஆதலால் தான் அவருக்கு ளஹ்ஹாக் - சிரித்துக் கொண்டிருப்பவர் என்று பெயரிட்டதாகவும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

وروي أيضا أن رجلا جاء إلى عمر بن الخطاب فقال : يا أمير المؤمنين ! إني غبت عن امرأتي سنتين فجئت وهي حبلى ; فشاور عمر الناس في رجمها ، فقال معاذ بن جبل : يا أمير المؤمنين ! إن كان لك عليها سبيل فليس لك على ما في بطنها سبيل ; فاتركها حتى تضع ، فتركها ، فوضعت غلاما قد خرجت ثنيتاه ; فعرف الرجل الشبه فقال : ابني ورب الكعبة ! ; فقال عمر : عجزت النساء أن يلدن مثل معاذ ; لولا معاذ لهلك عمر

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஒருவர் வந்து, ”அமீருல் முஃமினீன் அவர்களே! நான் வெளியூர் சென்றிருந்தேன். இரண்டு ஆண்டுகளாக ஊரில் இல்லை. வந்து பார்த்தால் என் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள்.

காரணம் கேட்டால் நான் தான் என்கிறாள். விசாரித்து தீர்வைச் சொல்லுங்கள்என்று முறையிட்டார். உமர் அவர்கள் ஆலோசனை செய்து ரஜ்ம் கல்லெறி தண்டனை நிறைவேற்ற முடிவெடுத்தார்கள்.

இதைக் கேள்வி பட்ட முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள், அவள் வேண்டுமானால் தவறு செய்திருக்கலாம்; வயிற்றில் இருக்கும் சிசு ஒரு தவறும் செய்யாதது. ஆகவே, குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர் தண்டனையை நிறைவேற்றுங்கள் என்றார்கள்.

அவகாசம் வழங்கப்பட்டது. ஒரு நாள் முறையிட்ட அந்த நபர் உமர் (ரலி) அவர்களின் சபைக்கு ஓடோடி வந்தார். வந்தவர் அமீருல் முஃமினீன் அவர்களே! கஅபாவின் இறைவனான அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! பிறந்த அந்த குழந்தை எனக்குரியது தான்! அது என் சாயலிலேயே இருக்கின்றது! என்றார்.

இதைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள் முஆத் மட்டும் இல்லை என்றால் இந்த உமர் அழிந்து போயிருப்பார்! என்றார்கள்.

 

وقال حماد بن سلمة : إنما سمي هرم بن حيان هرما لأنه بقي في بطن أمه أربع سنين

மேலும், ஹரிம் இப்னு ஹய்யான் என்பவரும் அவரின் தாயார் வயிற்றில் நான்கு ஆண்டுகள் இருந்தவர்தான் என ஹம்மாத் இப்னு ஸலமா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். ( நூல்: தஃப்ஸீர் அல்குர்துபீ, பாகம்:5, பக்கம்:482,483.)

Most pregnancies last approximately 280 days or 9.5 months, thank goodness! Maximum was pregnant for 317days.

அதிகபட்சமாக ஒரு குழந்தை தாயின் வயிற்றில் 280 நாட்கள் கூடிப்போனால் 317 நாட்கள் இருக்கும், பின்பு பிரசவம் நிகழ்ந்துவிடும் என்றுதான் 1944 ஃபிப்ரவரி 10 –ஆம் தேதிவரை அறிவியல் விஞ்ஞான உலகம் நம்பிக் கொண்டிருந்தது.

ஆனால், டெக்‌ஷாஸ் மாகாணத்தின் ஒரு பெண்மணி 17 மாதமும் 11 நாட்களும் தன் வயிற்றில் குழந்தையை சுமந்து 12 –வது நாளில் தான் பிரசவித்தாள்.  நவீன உலகில் இது தான் (Longest Human Pregnancy On Record) என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. (இறுதியில் உங்களின் பார்வைக்காக அதன் ஆங்கில மொழியாக்கம் இணைக்கப்பட்டுள்ளது)

Generally, a normal human pregnancy last around 280 days, which is slightly more than nine months. During this time, the baby slowly develops enough to survive and grow outside of the womb. Each pregnancy is slightly different, and women can give birth slightly earlier or later and still be considered normal. However, in 1945, a young woman gave birth after 375 days. This is a period of almost a 

year and a half. The woman, Beulah Hunter, was 25 when she gave birth. Doctors claim that the length of her pregnancy is accurate by looking at the date she first tested positive for pregnancy, as well as the date of her last menstrual cycle. Beulah Hunter claimed she had her last menstrual cycle on February 10th in 1944. The first time she tested positive for pregnancy was on March 24th of that same year. Doctors believe that the cause of this long pregnancy was the extremely slow development of the fetus. The baby developed much more slowly than a normal child while in the womb. However, Beulah Hunter's daughter, Penny Diana, was born healthy and normal, ready to face the world, with no outstanding developmental issues apparent at the time.Beulah Hunter's pregnancy is the longest known in which a living child was born. There have been many instances in which a stillborn fetus did not dissipate properly, meaning that the woman did not give birth at the correct time. This gives the appearance of what would seem like an abnormally long pregnancy. Because the children did not survive, though, medical professionals and record keepers do not consider these to be true long pregnancies. Before Beulah Hunter, the longest pregnancy resulting in a living child was only 317 days. Although this is some time short of Beulah Hunter's remarkable lengthy pregnancy, it is still a very long time to be pregnant.More reference links: www.time.comtheophanes.hubpages.com

 

One of the residents to deliver a healthy baby boy last year was Dr. August. Her pregnancy is also of note because it was the longest recorded human gestation on record. Dr. August was pregnant for a staggering 17 months 11 days. This will be noted in the next edition of the Guinness Book of Workl Records.

alt=Previous u2:shapes="_x0000_i1026" v:shapes="_x0000_i1025">Next

இதன் பின்னர் அறிவியல் உலகம் ஒரு பெண்ணின் பிரசவ காலம் அதிசயமாக நீண்டு கொண்டு போகலாம் என ஒப்புக்கொண்டது.

Beijing, 18 August (BelTA - People's Daily) A woman from China's central Hunan province recently set a Guinness World Record with her 17-month-long and counting pregnancy, local media reported

சீனா வில் ஒரு பெண்2016 ம் ஆண்டு 17 மாதங்களில் குழந்தை பெற்றெடுத்து அவரும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். ( நன்றி: சீனாவின் பெல்டா எனும் தினசரி, Beijing, 18 August (BelTA - People's Daily )

அல்லாஹ்வின் ஆற்றலை, அவனுடைய விசாலமான அறிவை முழுமையாக ஈமான் கொண்டவர்களின் பட்டியலில் நம்மையும் சேர்த்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment