Wednesday, 21 January 2026

ரமழானுக்கான பயிற்சிப் பட்டறையே புனித ஷ(ஃ)அபான் மாதம்!!!

 

ரமழானுக்கான பயிற்சிப் பட்டறையே

புனித ஷ(ஃ)அபான் மாதம்!!!

அல்லாஹ்வின் மகத்தான கருணையால் பரக்கத் பொருந்திய புனித ஷஅபான் மாதத்தின் பிறை மூன்று, முதல் ஜூம்ஆவில் நாம் அமர்ந்திருக்கின்றோம்.

ஷ(ஃ)அபான் மாதம் என்பது சந்திர மாத கணக்கின்படி எட்டாவது மாதமாகும், ரமழானுக்கு முன்னுள்ள மாதமாகும்.

பரக்கத்தை வேண்டி துஆச் செய்த இரண்டாம் மாதத்தில் நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். எதை அடைய வேண்டும் என்று ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்கின்றோமோ அத்தகைய ரமழானை எதிர் நோக்கி காத்திருக்கின்றோம்.

ஷ(ஃ)அபான் மாதம் ரமலானுக்கு முன்கூட்டி ஒரு தயாரிப்புக்கான மாதமாக அல்லாஹ் நமக்கு வழங்கி இருக்கின்றான்.

கடந்த ரமழான் நம்மை விட்டு விடை பெறும் போது இந்த ரமழானில் குறைவாகவே நாம் அமல் செய்துள்ளோம். இன்ஷா அல்லாஹ்.. அடுத்த ரமழானில் இதை விட கூடுதலாக அமல் செய்வோம் என்று சங்கல்பம், சபதம் எடுத்துக் கொண்ட நம்மில் பலர் அந்த சபதத்தை நிறைவேற்ற உறுதியோடு இருக்க வேண்டும்.

ஏனெனில், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனிடம் சபதம் மேற்கொண்டு நிறைவேற்றாத இரு பிரிவினரை அல்குர்ஆனில் அடையாளப் படுத்தி அவர்களை விமர்சிக்கின்றான்.

அதே வேளையில் அவனிடம் சபதம் மேற்கொண்டு நிறைவேற்றிய இரு பிரிவினரை அல்குர்ஆனில் அடையாளப் படுத்தி அவர்களை புகழ்ந்துரைக்கவும் செய்கின்றான்.

நாம் எந்த இரு சாராராக இருக்கப் போகிறோம்? என்ற வினாவோடு இந்த வார ஜும்ஆ உரைக்குள் செல்வோம்!

அல்லாஹ் விமர்சிக்கும் இரு சாரார்...

هُوَ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِیَسْكُنَ اِلَیْهَا فَلَمَّا تَغَشّٰىهَا حَمَلَتْ حَمْلًا خَفِیْفًا فَمَرَّتْ بِهٖ فَلَمَّاۤ اَثْقَلَتْ دَّعَوَا اللّٰهَ رَبَّهُمَا لَىِٕنْ اٰتَیْتَنَا صَالِحًا لَّنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِیْنَ

அவனே, உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான், அவருடன் கூடி (இணைந்து) வாழ்வதற்காக அவருடைய துணைவியை (அவரிலிருந்தே) படைத்தான் - அவன் அவளை நெருங்கிய போது அவள் இலேசான கர்ப்பவதியானாள்; பின்பு அதனைச் சுமந்து நடமாடிக் கொண்டிருந்தாள்; பின்பு அது பளுவாகவே, அவர்களிருவரும் தம்மிருவரின் இறைவனிடம், “(இறைவனே!) எங்களுக்கு நீ நல்ல (சந்ததியைக்) கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் இருவரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.

فَلَمَّاۤ اٰتٰىهُمَا صَالِحًا جَعَلَا لَهٗ شُرَكَآءَ فِیْمَاۤ اٰتٰىهُمَا فَتَعٰلَی اللّٰهُ عَمَّا یُشْرِكُوْنَ

அவர்களுக்கு (அவர்கள் விருப்பப்படி) நல்ல குழந்தையை அவன் கொடுத்தவுடன், அவர்களுக்கு அவன் கொடுத்ததில் அவ்விருவரும் அவனுக்கு இணைகளைக் கற்பிக்கின்றனர் - இவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.” ( அல்குர்ஆன்: 7: 189, 190 )

وَمِنْهُمْ مَّنْ عٰهَدَ اللّٰهَ لَىِٕنْ اٰتٰىنَا مِنْ فَضْلِهٖ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُوْنَنَّ مِنَ الصّٰلِحِیْنَ

அவர்களில் சிலர், “அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்தால் மெய்யாகவே நாம் (தாராளமான தான) தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள்.

فَلَمَّاۤ اٰتٰىهُمْ مِّنْ فَضْلِهٖ بَخِلُوْا بِهٖ وَتَوَلَّوْا وَّهُمْ مُّعْرِضُوْنَ

(அவ்வாறே) அவன் அவர்களுக்குத் தன் அருட்கொடையிலிருந்து வழங்கியபோது, அதில் அவர்கள் உலோபித்தனம் செய்து, அவர்கள் புறக்கணித்தவர்களாக பின் வாங்கிவிட்டனர்.

فَاَعْقَبَهُمْ نِفَاقًا فِیْ قُلُوْبِهِمْ اِلٰی یَوْمِ یَلْقَوْنَهٗ بِمَاۤ اَخْلَفُوا اللّٰهَ مَا وَعَدُوْهُ وَبِمَا كَانُوْا یَكْذِبُوْنَ

எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். ( அல்குர்ஆன்: 9: 75 - 77 )

அல்லாஹ் புகழ்ந்துரைக்கும் இரு சாரார்...

مِنَ الْمُؤْمِنِیْنَ رِجَالٌ صَدَقُوْا مَا عَاهَدُوا اللّٰهَ عَلَیْهِ فَمِنْهُمْ مَّنْ قَضٰی نَحْبَهٗ وَمِنْهُمْ مَّنْ یَّنْتَظِرُ ؗ وَمَا بَدَّلُوْا تَبْدِیْلًا

முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்; அவர்களில் சிலர் (ஷஹீதாக வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள்; வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் - (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை.

لِّیَجْزِیَ اللّٰهُ الصّٰدِقِیْنَ بِصِدْقِهِمْ وَیُعَذِّبَ الْمُنٰفِقِیْنَ اِنْ شَآءَ اَوْ یَتُوْبَ عَلَیْهِمْ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا

உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்குரிய கூலியை அல்லாஹ் திடமாக அளிப்பான்; அவன் நாடினால் முனாஃபிக்குகளை வேதனையும் செய்வான், அல்லது அவர்களை மன்னிப்பான் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன். ( அல்குர்ஆன்: 33: 23, 24 )

غَابَ عَمِّي أَنَسُ بنُ النَّضْرِ عن قِتَالِ بَدْرٍ، فَقالَ: يا رَسولَ اللَّهِ، غِبْتُ عن أَوَّلِ قِتَالٍ قَاتَلْتَ المُشْرِكِينَ، لَئِنِ اللَّهُ أَشْهَدَنِي قِتَالَ المُشْرِكِينَ لَيَرَيَنَّ اللَّهُ ما أَصْنَعُ، فَلَمَّا كانَ يَوْمُ أُحُدٍ وانْكَشَفَ المُسْلِمُونَ، قالَ: اللَّهُمَّ إنِّي أَعْتَذِرُ إلَيْكَ ممَّا صَنَعَ هَؤُلَاءِ -يَعْنِي أَصْحَابَهُ- وأَبْرَأُ إلَيْكَ ممَّا صَنَعَ هَؤُلَاءِ -يَعْنِي المُشْرِكِينَ-، ثُمَّ تَقَدَّمَ، فَاسْتَقْبَلَهُ سَعْدُ بنُ مُعَاذٍ، فَقالَ: يا سَعْدُ بنَ مُعَاذٍ، الجَنَّةَ ورَبِّ النَّضْرِ، إنِّي أَجِدُ رِيحَهَا مِن دُونِ أُحُدٍ، قالَ سَعْدٌ: فَما اسْتَطَعْتُ يا رَسولَ اللَّهِ ما صَنَعَ، قالَ أَنَسٌ: فَوَجَدْنَا به بِضْعًا وثَمَانِينَ ضَرْبَةً بالسَّيْفِ، أَوْ طَعْنَةً برُمْحٍ، أَوْ رَمْيَةً بسَهْمٍ، ووَجَدْنَاهُ قدْ قُتِلَ وقدْ مَثَّلَ به المُشْرِكُونَ، فَما عَرَفَهُ أَحَدٌ إلَّا أُخْتُهُ ببَنَانِهِ، قالَ أَنَسٌ: كُنَّا نُرَى -أَوْ نَظُنُّ- أنَّ هذِه الآيَةَ نَزَلَتْ فيه وفي أَشْبَاهِهِ: {مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ} [الأحزاب: 23] ، إلى آخِرِ الآيَةِ.

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள்:- "என் தந்தையின் சகோதரர் அனஸ் இப்னு நள்ர்(ரலி) பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்றார். அவர் (திரும்பி வந்தவுடன்) 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் இணைவைப்பவர்களுடன் நடத்திய முதல் போரில் நான் கலந்து கொள்ளவில்லை;

இணைவைப்பவர்களுக்கெதிரான போரில் அல்லாஹ் என்னைப் பங்குபெற வைத்திருந்தால் நான் செய்வதை (வீரமாகப் போரிடுவதை) அவன் நிச்சயம் பார்த்திருப்பான். பின்பு உஹுதுப் போரின்போது முஸ்லிம்கள் தோல்வியுற்ற நேரத்தில் அவர், 'இறைவா! என் தோழர்கள் செய்த (பின்வாங்கிச் சென்ற) செயலுக்காக உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இணைவைப்பவர்கள் செய்த (நபியவர்களுக்கெதிரான) இந்தப் போருக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று அறிவிக்கிறேன்" என்று கூறிவிட்டு, பிறகு (போர்க் களத்தில்) முன்னேறிச் சென்றார்.

ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவருக்கெதிரில் வரக்(கண்டு), 'ஸஅத் இப்னு முஆத் அவர்களே! நான் சொர்க்கத்தையே விரும்புகிறேன். என் தந்தை நள்ருடைய இறைவன் மீது சத்தியமாக! நான் சொர்க்கத்தின் வாடையை உஹுது மலையிலிருந்து பெறுகிறேன்" என்று கூறினார். ஸஅத் (ரலி) இதை நபி(ஸல்) அவர்களிடம் கூறிவிட்டு, 'அவர் செய்த (வீராவேசமான) போரை வர்ணிக்க என்னால் முடியவில்லை, இறைத்தூதர் அவர்களே!" என்று கூறினார். நாங்கள் அவர் உடலில் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் இருந்த எண்பதுக்கும் மேற்பட்ட காயங்களைக் கண்டோம்.

மேலும், இணைவைப்பவர்கள் அவரின் உடல் உறுப்புகளைச் சிதைத்து விட்டிருந்த நிலையில் அவர் கொல்லப்பட்டிருக்கக் கண்டோம். அவரின் சகோதரியைத் தவிர வேறெவரும் அவரை (இன்னாரென்று) அறிந்து கொள்ள முடியவில்லை; அவரின் சகோதரி கூட அவரின் விரல்(நுனி)களை வைத்துத் தான் அவரை அடையாளம் காண முடிந்தது.

"அல்லாஹ்விடம் தாம் கொடுத்த உறுதிமொழியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களிடையே உள்ளனர்." என்கிற ( குர்ஆன் 33:23 ) இறைவசனம் இவர் விஷயத்திலும் இவரைப் போன்ற மற்ற உயிர்த் தியாகிகள் விஷயத்திலும் தான் அருளப்பட்டது என்றே நாங்கள் கருதி வந்தோம். ( நூல்: புகாரி )

 

وقال ابن أبي حاتم : حدثنا أحمد بن الفضل العسقلاني ، حدثنا سليمان بن أيوب بن سليمان بن عيسى بن موسى بن طلحة بن عبيد الله ، حدثني أبي ، عن جدي ، عن موسى بن طلحة ، عن أبيه طلحة قال : لما أن رجع النبي صلى الله عليه وسلم من أحد ، صعد المنبر ، فحمد الله وأثنى عليه ، وعزى المسلمين بما أصابهم ، وأخبرهم بما لهم فيه من الأجر والذخر ، ثم قرأ هذه الآية : ( رجال صدقوا ما عاهدوا الله عليه ) . فقام إليه رجل من المسلمين فقال : يا رسول الله ، من هؤلاء ؟ فأقبلت وعلي ثوبان أخضران حضرميان فقال : " أيها السائل ، هذا منهم " .

தல்ஹா (ரலி) அவர்கள் கூறினார்கள்:- நபி அவர்கள் உஹதுப் போரை முடித்துத் திரும்பிய போது சொற்பொழிவு மேடை மீது ஏறி, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து விட்டு, உஹதுப் போரில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட துயரத்திற்காக அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். இதன் மூலம் அவர்களுக்கு கிடைக்க இருக்கும் சன்மானங்களையும், நன்மைகளையும் அவர்களிடம் தெரிவித்தார்கள். பின்னர் இந்த வசனத்தை (33:23) முழுமையாக ஓதினார்கள்.

அப்போது, நபித்தோழர்களில் ஒருவர் நபி அவர்களை நோக்கி எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் சிலர் தமது இலக்கை அடைந்து விட்டனர்" என்று இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறானே அவர்கள் யார்?" எனக் கேட்டார்.

அந்த நேரத்தில் நான் அந்த சபைக்குள் வந்து கொண்டிருந்தேன். அப்போது நான் ஹள்ரமவ்த் என்ற ஊரின் பிரபல பச்சை நிறத்திலான இரு ஆடைகளை அணிந்திருந்தேன். என்னைப் பார்த்த நபி அவர்கள் "ஓ! கேள்வி கேட்டவரே! இதோ வருகின்றாரே இவரும் அவர்களில் ஒருவர் என்று கூறினார்கள். ( நூல்: தஃப்ஸீர் இப்னு அபீ ஹாத்திம், தஃப்ஸீர் இப்னு கஸீர், தஃப்ஸீர் அத் தபரீ )

எனவே, ரமழான் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியத்தில் இருந்து விடாமல் இந்த ஷ(ஃ)அபானை நல்லறங்களின் விளைநிலமாக பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

ஷ(ஃ)அபான் மாதத்தில் செய்ய வேண்டிய அமல்கள் எது?

ஷ(ஃ)அபான் மாதத்தில் அதிகம் நோன்பு நோற்பதற்கு ஆதாரமாக வந்துள்ள ஹதீஸ்கள்:-

عَنْ عَائِشَةَ رَضِي اللَّه عَنْهَا قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ حَتَّى نَقُولَ لَا يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لَا يَصُومُ فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ إِلَّا رَمَضَانَ وَمَا رَأَيْتُهُ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ

நபி அவர்கள் “(இனி) நோன்பை விடவே மாட்டார்கள்என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி அவர்கள் நோன்பு நோற்பார்கள்: ‘(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பைவிட்டுவிடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷ(ஃ)அபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ سَمِعَ عَائِشَةَ تَقُولُ كَانَ أَحَبَّ الشُّهُورِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَصُومَهُ شَعْبَانُ ثُمَّ يَصِلُهُ بِرَمَضَانَ .

நபி அவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷ(ஃ)அபானும், அதைத் தொடர்ந்துள்ள ரமழானுமாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் செவிமடுத்தாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார்கள். ( நூல்: அபூதாவுத், நஸாயி )

ஷ(ஃ)அபானில் இரு நோன்புகளையாவது நோற்றுவிடு என அல்லாஹ்வின் தூதுர் வலியுறுத்திய செய்தி:-

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ – رضى الله عنهما – أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ لَهُ أَوْ لآخَرَ « أَصُمْتَ مِنْ سَرَرِ شَعْبَانَ ». قَالَ لاَ. قَالَ « فَإِذَا أَفْطَرْتَ فَصُمْ يَوْمَيْنِ ».

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி அவர்கள் என்னிடம்அல்லது நான் செவியுற்றுகொண்டிருக்க மற்றொரு மனிதரிடம்” “நீர் இந்த (ஷ(ஃ)அபான்) மாதத்தின் நடுப்பகுதியில் நோன்பு நோற்றீரா?” என்று கேட்டார்கள். நான், “இல்லைஎன்றேன். நபி அவர்கள், “நீர் (ரமளான்) நோன்பை முடித்ததும் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!என்று கூறினார்கள்.

விடுபட்ட நோன்புகளை நோற்றல்:-

عَنْ أَبِى سَلَمَةَ قَالَ سَمِعْتُ عَائِشَةَ – رضى الله عنها – تَقُولُ كَانَ يَكُونُ عَلَىَّ الصَّوْمُ مِنْ رَمَضَانَ فَمَا أَسْتَطِيعُ أَنْ أَقْضِيَهُ إِلاَّ فِى شَعْبَانَ الشُّغُلُ مِنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- أَوْ بِرَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم

எனக்கு ரமழான் மாதத்தில் விடுபட்ட நோன்புகளை ஷஃபானில் தவிர நிறைவேற்ற முடிவதில்லை. நபி அவர்களுக்கு செய்யும் பணிவிடைகளே அதற்குக் காரணம்என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

ஷ(ஃ)அபானில் அமல்கள் உயர்த்தப்படுகின்றன:-

قَالَ حَدَّثَنِي أَبُو سَعِيدٍ الْمَقْبُرِيُّ قَالَ حَدَّثَنِي أُسَامَةُ ابْنُ زَيْدٍ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَرَكَ تَصُومُ شَهْرًا مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ قَالَ ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الْأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ.

 

உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்கள் நபி அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! ஷ(ஃ)அபானை போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை என்று கூறிய போது, நபி அவர்கள்: மனிதர்கள் ரஜப், ரமழான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள ஒரு (ஷஃஅபான்) மாதம் விஷயத்தில் பாராமுகமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில் அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன் என கூறினார்கள். ( நூல்: நஸாயி, அஹ்மத் ) 

முடிந்தளவு முனைப்புடன் அமல் செய்ய வேண்டிய மாதம் ஷ(ஃ)அபான்:-

عَنْ أَبِي سَلَمَةَ أَنَّ عَائِشَةَ رَضِي اللَّه عَنْهَا حَدَّثَتْهُ قَالَتْ لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرًا أَكْثَرَ مِنْ شَعْبَانَ فَإِنَّهُ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ وَكَانَ يَقُولُ خُذُوا مِنَ الْعَمَلِ مَا تُطِيقُونَ فَإِنَّ اللَّهَ لَا يَمَلُّ حَتَّى تَمَلُّوا وَأَحَبُّ الصَّلَاةِ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَا دُووِمَ عَلَيْهِ وَإِنْ قَلَّتْ وَكَانَ إِذَا صَلَّى صَلَاةً دَاوَمَ عَلَيْهَا.

நபி அவர்கள் ஷ(ஃ)அபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷ(ஃ)அபானில் (சில ஆண்டுகளில்) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள்.  உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்!என்றும் கூறுவார்கள். குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழும் தொழுகையே விருப்பமானதாக இருந்தது.ஒரு தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள். ((அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், நூல்: புகாரி )

ரமழானுக்கு ஒரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நோன்பு நோற்பதற்கு தடை:-

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِي اللَّه عَنْهم عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَتَقَدَّمَنَّ أَحَدُكُمْ رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ أَوْ يَوْمَيْنِ إِلَّا أَنْ يَكُونَ رَجُلٌ كَانَ يَصُومُ صَوْمَهُ فَلْيَصُمْ ذَلِكَ الْيَوْمَ.

ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் எஞ்சி இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ( நூல்: புகாரி )

உதாரணமாக: திங்கள், வியாழன் வழமையாக நோன்பு வைக்கும் ஒருவர், ரமழானுக்கு முந்தியுள்ள ஓரிரு நாட்கள் திங்கள் அல்லது வியாழனாக அமையுமானால் அவருக்கு நோன்பு நோற்பதற்கு அனுமதியுள்ளது என்பதை மேற்கூறிய ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது.

 

عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « إِذَا انْتَصَفَ شَعْبَانُ فَلاَ تَصُومُوا

ஷ(ஃ)அபானின் நடுப்பகுதியை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள் என நபி அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்க்ள அறிவிக்கும் ஹதீஸ் அபூதாவுத் 2339 லும் இன்னும் பல ஹதீஸ் கிரந்தங்களிலும் பதிவாகியுள்ள. 

ஆனால் இந்த செய்தி நிரகாரிக்கப்பட வேண்டியது என இமாம் அப்துர் ரஹ்மான் இப்னு மஹ்தீ, இமாம் அஹ்மத், இமாம் அபூஸர்அதுர் ராஸி, இமாம் அல்அஸ்ரம் போன்ற அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஏனெனில், ஷ(ஃ)அபான் நடுப்பகுதிக்குப் பின் நோன்பு நோற்பது கூடாது என்பது தவறான கருத்தாகும், இன்னும் இச்செய்தி ஆதாரப்பூர்வமான பல செய்திகளுடன் முரண்படுகின்றது. எனவே, ரமழானுக்கு இரு நாட்களுக்கு முன்னர் நோன்பு நோற்கக்கூடாது என்பதே ஆதராப்பூர்வமான செய்தியாகும்.

நபி அவர்கள் பட்ட கவலையும்...    

நபி அவர்கள் விரும்பிய விருப்பமும்....

ذلك شهرٌ يغفل الناس عنه بين رجب ورمضان، وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين، فأحب أن يرفع عملي وأنا صائم".

நபி அவர்கள்: மனிதர்கள் ரஜப், ரமழான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள ஒரு (ஷஃஅபான்) மாதம் விஷயத்தில் பாராமுகமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில் அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன் என கூறினார்கள். ( நூல்: நஸாயி, அஹ்மத் )

இரண்டு காரணங்களை நபி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

ஒன்று, மக்கள் இந்த மாதத்தில் கவனக்குறைவாக இருந்து விடுகின்றார்கள்.

இரண்டாவது, அல்லாஹ்விடம் செயலேடுகள் சமர்ப்பிக்கப்படும் போது அவனுக்கு விருப்பமான அமல் அதில் இடம் பெற்றிருக்க விரும்ப வேண்டும்.

இமாம் இப்னு ரஜப் (ரஹ்) கூறுகின்றார்கள்: ஷஅபானை பற்றி நபி அவர்கள் கூறிய இந்த நபிமொழியிலிருந்து,மக்கள் எல்லாம் அல்லாஹ்வை மறந்து இருக்கின்ற நேரத்தில் நாம் அந்த நேரத்தை வணக்க வழிபாடுகளைக் கொண்டு சீர் செய்ய வேண்டும் என்பது இந்த ஹதீஸிலிருந்து நமக்கு தெரிய வருகிறது" என்று.

மேலும், அறிஞர் பெருமக்கள் நமக்கு சில விளக்கங்களை. கூறுகின்றார்கள்:- 

எப்பொழுதெல்லாம் மக்கள் அல்லாஹ்வை மறந்து கவனக்குறைவாக, அலட்சியத்தில் இருப்பார்களோ, அந்த நேரங்களில் ஒருவர் தனித்து அல்லாஹ்வை வணங்குவது அந்த வணக்கம் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது.

மக்கள் எல்லாம் பாவத்திலும், உலக மோகத்திலும், மறதியிலும் இருக்கும் போது அல்லாஹ்வை மறந்தவர்களாக, அல்லாஹ்வுடைய இபாதத்தை அலட்சியம் செய்தவர்களாக இருக்கும் போது, அந்த மறதியாளர்களுக்கு மத்தியில், அந்த பாவிகளுக்கு மத்தியில், ஒருவர் அல்லாஹ்வை நினைவு கூறுகின்றார் என்றால், அது அல்லாஹ்விற்கு மிகப் பிரியமானது.

இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் பதிவு செய்துள்ள ஒரு ஹதீஸை மஃகல் இப்னு யஸார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- 

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ مُعَلَّى بْنِ زِيَادٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ح وَحَدَّثَنَاهُ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنِ الْمُعَلَّى بْنِ زِيَادٍ، رَدَّهُ إِلَى مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، رَدَّهُ إِلَى مَعْقِلِ بْنِ يَسَارٍ، رَدَّهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْعِبَادَةُ فِي الْهَرْجِ كَهِجْرَةٍ إِلَيَّ» (صحيح مسلم - 2948

 

குழப்பமான சண்டை சச்சரவுகள் நிறைந்த காலங்களில்,ஒரு மனிதர் (அதிலெல்லாம் கலந்து கொள்ளாமல்) அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளில் அவரை ஈடுபடுத்திக் கொண்டார் என்றால் அவர் என்னை நோக்கி என் பக்கம் ஹிஜ்ரத் செய்ததற்கு சமம் ஆவார்" என் நபி அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

«أَقْرَبُ مَا يَكُونُ الرَّبُّ مِنَ العَبْدِ فِي جَوْفِ اللَّيْلِ الآخِرِ، فَإِنْ اسْتَطَعْتَ أَنْ تَكُونَ مِمَّنْ يَذْكُرُ اللَّهَ فِي تِلْكَ السَّاعَةِ فَكُنْ»

அம்ர் இப்னு அபச (ரலி) அறிவிக்கின்றார்கள்:- "ஒரு அடியான் அல்லாஹ்விற்கு மிக நெருக்கமாக இருக்கின்ற நேரம் இரவினுடைய இரண்டாவது பகுதியாகும். அந்த நேரத்தில் அல்லாஹ்வை நினைப்பவர்களில் நீ ஆக முடிந்தால் ஆகிவிடு! என்று அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் சொன்னார்கள். ( நூல் : திர்மிதி ) 

நடு இரவிற்கு முன்போ அல்லது அந்த இரவின் கடைசி பகுதியோ வருவதற்கு முன்பு ஒன்று மனிதன் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பான்‌. அல்லது உலக மோகம் கொண்டவர்கள் ஆடல் பாடல், கேளிக்கைகள் என்று பாவத்தில் மூழ்கி இருப்பார்கள். அந்த நேரத்தில் ஒருவர் எழுந்து அல்லாஹ்வை வணங்குகிறார் என்றால், அல்லாஹ்விடத்தில் துஆ கேட்கின்றார் என்றால், அந்த அடியார் அல்லாஹ்விடத்தில் மிக நெருக்கமாகி விடுகிறார்.

ஷஃஅபான் மாதம் நம் முன்னோர்களான ஸலஃப்புஸ் ஸாலிஹீன்களிடத்தில் மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டதை பார்க்க முடிகின்றது. 

وقال أبو الأحوص: قال لنا أبو إسحاق السبيعي: «يا معشر الشباب، اغتنموا -يعني: قوتكم وشبابكم - قلما مرت بي ليلة إلا وأنا أقرأ فيها ألف آية، وإني لأقرأ البقرة في ركعة، وإني لأصوم: الأشهر الحرم، وثلاثة أيام من كل شهر، والاثنين، والخميس»

அபூ இஸ்ஹாக் ஸஹீக்கி (ரஹ்) அவர்கள் ஹதீஸ் கலையில் மூத்தவர்கள். தாபியீன்களில் மிகவும் பிரசித்தி பெற்றவர்.ஹிஜ்ரி 33 -ல் பிறந்து 127-ல் வஃபாத் ஆனவர்கள்.90 வயது ஆனவர்கள்.

தன்னுடைய மாணவர்களைப் பார்த்து சொன்னார்கள்:- "வாலிப மாணவர்களே! உங்களுடைய வாலிபத்தை ஃகனிமத்தாக நீங்கள் கருதி விடுங்கள். அமல்களுக்கு உண்டான இந்த நேரத்தை வீணடித்து விடாதீர்கள்.

"என் வாழ்க்கையில் பெரும்பாலான இரவுகளில் குறைந்தது ஓராயிரம் வசனங்களை நான் ஓதுவேன். ஒரு ரக்அத்தில் சூரா பகராவை ஓதி முடிப்பேன். புனித மாதங்கள் நான்கு மாதங்களும் முழுமையாக நோன்பு வைப்பேன். ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள், திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் நோன்பு வைப்பேன். ஆனால், இப்போது என்னுடைய வயோதிகத்தினால் கண் பார்வை போய் விட்டது. பலவீனம் அடைந்து விட்டேன். இப்போது எனக்கு அது முடியவில்லை என்று. அதில் சில அமல்கள் தவறி விடுகின்றன" என்று கவலையுடன் கூறினார்கள்.

رواه أبو نعيم في الحلية عن عون بن عبد الله قال: "إن الله -تعالى- ليدخل الجنة قوما فيعطيهم حتى يملّوا، وفوقهم ناس في الدرجات العلى، فلما نظروا إليهم عرفوهم, فيقولون: يا ربنا إخواننا كنا معهم, فبم فضلتهم علينا؟! فيقول: هيهات هيهات، إنهم كانوا يجوعون حين تشبعون، ويظمؤون حين ترووَن، ويقومون حين تنامون، ويشخصون حين تخفضون".

அவ்ன் இப்னு அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:- நாளை மறுமையில் ஒரு கூட்டத்தாரை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சுவனத்தில் நுழைத்து அவர்கள் போதும் போதும் என்று சொல்லுமளவுக்கு அந்தஸ்துகளை வாரி வாரி வழங்குவான். அவர்களின் அந்தஸ்துக்கு மேலாக அந்தஸ்தை பெற்ற சில சுவனவாசிகள் இவர்களை அடையாளம் கண்டு "அல்லாஹ்வே! இவர்களை நாங்கள் அறிவோம். உலகில் இவர்களுடனே நாங்கள் வாழ்ந்தோம். என்ன காரணத்தினால் அவர்களை எங்களுக்கு வழங்கியதை விட இப்படி அந்தஸ்துகளை வழங்கி கவனிக்கின்றாய்? என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் "இவர்கள் நீங்கள் வயிறு நிரம்பி இருக்கும் போது பசியோடு (நோன்பு) இருந்தவர்கள். நீங்கள் தாகம் தீர்த்திருந்த நேரத்தில் தாகத்துடன் இருந்தவர்கள். நீங்கள் உறங்கும் போது விழித்திருந்து அமல் செய்தவர்கள். நீங்கள் இராக்கதைகளில் மூழ்கி இருக்கும் போது இவர்கள் தனித்திருந்து என்னை நினைவு கூர்ந்தவர்கள் என்று பதில் கூறுவானாம்". ( நூல்: அல் ஹில்யா )

عن أنس بن مالك -رَضِيَ اللَّهُ عَنْه-، قال: كان المسلمون إذا دخل شعبان انكبوا على المصاحف فقرؤها وأخرجوا زكاة أموالهم تقوية للضعيف والمسكين على صيام رمضان.

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் மேன்மக்களான நபித்தோழர்கள், தாபியீன்கள் ஷஃபான் மாதம் வந்து விட்டால் குர்ஆனோடு தம்மை பிணைத்துக் கொள்வார்கள். ரமழானை ஏழைகள் சிறந்த முறையில் எதிர் கொள்ள ஜகாத்தை வழங்குவார்கள்.

  قال ابن حجر -رحمه الله-: «كَانَ المُسْلِمُونَ إِذَا دَخَلَ شَعْبَانُ؛ أَكَبُّوا عَلَى المَصَاحِفِ، وَأَخْرَجُوا الزَّكَاةَ».

  فتح الباري (13 /310)           

இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் மேன்மக்களான நபித்தோழர்கள், தாபியீன்கள் ஷஃபான் மாதம் வந்து விட்டால் குர்ஆனோடு தம்மை பிணைத்துக் கொள்வார்கள். ஏழைகள் துயர் நீக்கிட ஜகாத்தை வழங்குவார்கள். ( நூல்: ஃபத்ஹுல் பாரி )

سلمة بن كهيل: "كان يقال شهر شعبان شهر القرَّاء"؛ أي: قرَّاء القرآن الكريم

ஸலமா இப்னு குஹைல் (ரஹி) ஹிஜ்ரி 47-ல் பிறந்து ஹிஜ்ரி 121-ல் இறந்த மிகப்பெரிய தாபியீன்களில் ஒருவர். அவர்கள் இந்த ஷஅபான் மாதத்தைப் பற்றி சொல்வார்கள்: ஷஅபானுடைய மாதம் குர்ஆனை ஓதுகின்ற குர்ஆனை மனப்பாடம் செய்த மக்களுக்குரிய மாதம். ஷஅபானில் குர்ஆனை அதிகமாக ஓதி ரமலானில் குர்ஆனை ஓதுவதற்கு பயிற்சி எடுத்துக் கொள்வதற்கான நேரம்.

அதுபோன்று தாபியீன்களில் ஒருவரான ஹபீப் இப்னு அபீ ஸாபித் (ரஹ்) அவர்கள் இந்த மாதத்தை பற்றி சொல்லும்போது,

وكان حبيب بن أبي ثابت إذا دخل شعبان قال: "هذا شهر القراء", 

அதிகமாக குர்ஆன் ஓதக் கூடிய மாதம் என்று சொல்கின்றார்கள்.

وكان عمرو بن قيس الملائي -رحمه الله- إذا دخل شعبان أغلق حانوته وتفرّغ لقراءة القرآن.

அம்ர் இப்னு கைஸ் அல் மலாயீ தாபியீ (ரஹ்) ஷஅபான் மாதம் வந்துவிட்டால் தன்னுடைய கடையை அடைத்து விட்டு குர்ஆன் ஓதுவதற்காக தன்னை முழுமையாக ஒதுக்கி விடுவார்கள். ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா, லதாயிஃபுல் மஆரிஃபு )

நல்அமல்கள் செய்ய போட்டி போடுவோம்!!

ஒரு முஃமினுடைய நிலைப்பாடு இப்படி இருக்க வேண்டும்; அதாவது அமல்களில் நான் முந்திக் கொண்டே செல்ல வேண்டும். அவரை விட, இவரை விட நான் அமலில் அதிகமாக இருக்க வேண்டும். இதுதான் குர்ஆன் சொல்லக்கூடிய வழிகாட்டல்.

وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ أَيْنَ مَا تَكُونُوا يَأْتِ بِكُمُ اللَّهُ جَمِيعًا

ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். அனைத்துப் பொருட்களின் மீதும்அல்லாஹ் ஆற்றலுடையவன். ( அல்குர்ஆன்: 2: 148 )

 

حَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ حُجْرٍ، جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ، قَالَ ابْنُ أَيُّوبَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: أَخْبَرَنِي الْعَلَاءُ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «بَادِرُوا بِالْأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ، يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا، أَوْ يُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا، يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنَ الدُّنْيَا»

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:- "இருள் நிறைந்த ஒரு பகுதியைப் போன்று (வரவிருக்கும்) குழப்பத்திற்கு (முன்னால்) நற்செயல்களில் போட்டி இடுங்கள். (அந்தக் குழப்பம் வந்தால்) ஒரு மனிதன் முஃமினாக காலைப் பொழுதை அடைந்து மாலையில் காஃபிராகி விடுவான். அல்லது மாலையில் முஃமினாக இருப்பவன் காலையில் காஃபிராகி விடுவான். உலகத்தின் செல்வங்களுக்காகத் தனது மார்க்கத்தை விற்று விடுவான்" என  நபி அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

நன்மையான காரியங்களில் முந்திக் கொள்வதில், போட்டி போடுவதில் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் மத்தியில் கடுமையான போட்டிகள் ஏற்பட்டிருக்கிறது.

وأخرج أحمد في "المسند" (4340) عن ابن مسعود، قال: ((دخل رسول الله صلى الله عليه وسلم المسجد، وهو بين أبي بكر، وعمر، وإذا ابن مسعود يصلي، وإذا هو يقرأ النساء، فانتهى إلى رأس المائة، فجعل ابن مسعود يدعو، وهو قائم يصلي، فقال النبي صلى الله عليه وسلم: اسأل تُعْطَهُ، اسأل تعطه، ثم قال: من سرَّه أن يقرأ القرآن غضًّا كما أُنزل، فليقرأه بقراءة ابن أم عبد، فلما أصبح غدا إليه أبو بكر، ليبشِّره، وقال له: ما سألت الله البارحة؟ قال: قلت: اللهم إني أسألك إيمانًا لا يرتد، ونعيمًا لا ينفد، ومرافقة محمد في أعلى جنة الخلد، ثم جاء عمر فقيل له: إن أبا بكر قد سبقك، قال: يرحم الله أبا بكر، ما سبقته إلى خير قط، إلا سبقني إليه))

உமர் (ரலி) அவர்கள் கூறுவதாவது:- பள்ளியில் ஒரு மனிதர் நின்று தொழுது கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரது ஓதுதலை நின்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவரை (யார் என்று) நாங்கள் அறிந்து கொள்வதற்கு முற்படும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆன் இறக்கப்பட்டவாறு இனிமையாக ஓதுவது யாருக்கு விருப்பமானதாக இருக்கிறதோ அவர் இப்னு உம்மி அப்து (அதாவது இப்னு மஸ்ஊத்) அவர்கள் ஓதுவது போல் ஓதட்டும் என்று கூறினார்கள். பிறகு (தொழுது கொண்டிருந்த) அந்த மனிதர் உட்கார்ந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்.

 

நபி (ஸல்) அவர்கள் (அதிகமாகக்) கேள் உமக்கு வழங்கப்படும். (அதிகமாகக்) கேள் உமக்கு வழங்கப்படும் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக இப்னு மஸ்ஊதிடத்தில் காலையில் சென்று அவருக்கு நற்செய்தி கூறுவேன் என்று நான் கூறிக் கொண்டேன். அவருக்கு நற்செய்தி கூறுவதற்காக காலையில் அவரிடத்தில் சென்றேன்.

ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்கு முன்னால் அவரிடத்தில் சென்று நற்செய்தி கூறிவிட்டதைக் கண்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் எந்த ஒரு நன்மையின் பால் முந்தினாலும் எனக்கு முன்னால் அபூபக்ர் அதன் பால் என்னை முந்தாமல் இருந்ததில்லை. ( நூல்: அஹ்மத் )

روى أبو داود (1678)، والترمذي (3675) عن عُمَرَ بْنِ الْخَطَّابِ، رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: "أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا أَنْ نَتَصَدَّقَ، فَوَافَقَ ذَلِكَ مَالًا عِنْدِي، فَقُلْتُ: الْيَوْمَ أَسْبِقُ أَبَا بَكْرٍ إِنْ سَبَقْتُهُ يَوْمًا، فَجِئْتُ بِنِصْفِ مَالِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ؟)، قُلْتُ: مِثْلَهُ، قَالَ: وَأَتَى أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ بِكُلِّ مَا عِنْدَهُ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ؟) قَالَ: أَبْقَيْتُ لَهُمُ اللَّهَ وَرَسُولَهُ، قُلْتُ: لَا أُسَابِقُكَ إِلَى شَيْءٍ أَبَدًا" والحديث حسنه الألباني في "صحيح أبي داود".

உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- நபி அவர்கள் ஒரு நாள் தர்மங்களைக் கொண்டுவந்து நீங்கள் இங்கு பள்ளியில் ஒன்று சேருங்கள் என்று எங்களுக்கு ஒரு கட்டளை கொடுத்தார்கள். அப்போது என்னிடத்தில் அதிகமாக செல்வம் இருந்தது. உடனே உமர் (ரலி) அவர்கள் முடிவு செய்தார்கள்.

இன்று நான் அபூபக்ரை முந்துவதற்கு உண்டான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று தன்னுடைய செல்வத்தில் பாதியை எடுத்துக்கொண்டு நபி அவர்களிடம் வருகிறார்கள். நபி அவர்கள் அவர்கள் கேட்டார்கள்.

உமரே! உங்களுடைய குடும்பத்திற்கு எதை வைத்து விட்டு வந்தீர்கள். அதற்கு, உமர் ரலி அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே!இங்கு கொண்டுவந்த அளவிற்கு அங்கு என் குடும்பத்திற்கு இருக்கின்றது. பாதியைக் கொண்டு வந்துவிட்டேன். பாதி குடும்பத்திற்கு வைத்து விட்டு வந்தேன். அப்போது அங்கிருந்த அபூபக்கரை பார்த்து நபி அவர்கள் கேட்டார்கள்.

அபூபக்ரே! உங்களது குடும்பத்தாருக்கு எதை வைத்து விட்டு வந்தீர்கள்? அதற்கு, அபூபக்ர் ரலி அவர்கள்"நான் அவர்களுக்காக அல்லாஹ்வையும், ரஸூலையும்" வைத்து விட்டு வந்தேன்.

அப்போது உமர் ரலி அவர்கள் "அபூபக்ரே! ஒருக்காலும் நான் எதிலும் உங்களை முந்தி விட முடியாது என்று. ( நூல் : அபூதாவூத் )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ()அபான் மாதத்தில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு, ரமழானை அடைந்து, நோன்பு நோற்று, ரமழானில் சோர்வின்றி, புத்துணர்ச்சியோடு, ஆவலோடு அமல் செய்யும் நற்பேற்றினை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment