Thursday, 9 February 2023

நில நடுக்கம்! பாடங்களும்.. படிப்பினைகளும்…

 

நில நடுக்கம்! பாடங்களும்.. படிப்பினைகளும்…


துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள் கிழமை அன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்7.8 ஆக பதிவாகியது. இது அந்நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து திங்கட்கிழமை பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கமும் 6.0 ரிக்டர் அளவில் மூன்றாவது நிலநடுக்கமும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டாவது நாளான செவ்வாய் கிழமையன்றும் மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 என பதிவாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்பின் 5 வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்  5.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கம் லெபனான் மற்றும் சைப்ரஸ் வரை உணரப்பட்டது. தொடர்ந்து டஜன் கணக்கில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.

இரு நாடுகளிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்படுவதால் மக்கள் மிகவும் அச்சத்தில் இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியா உட்பட உலகின் 45 நாடுகள் நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள இந்த வேளையில் இரு நாடுகளிலும் 30000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வரும் தகவல்கள் உள்ளபடியே கவலையைத் தருகிறது.

இந்த நிலநடுக்கம் இப்பகுதியில் இதுவரை இல்லாத மிகவும் பலமான நிலநடுக்கம் என்பதோடு, கடந்த 50 ஆண்டுகளில் மிக பயங்கரமானதாகும்.

துருக்கியின் 10 மாகாணங்களில், வானளாவிய கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட 11,000 க்கும் அதிகமான கட்டிடங்கள் அந்த நிலநடுக்கத்தில் அழிக்கப்பட்டன.

மொத்தத்தில், 1.4 மில்லியன் குழந்தைகள் உட்பட 23 மில்லியன் பேர் இந்த நிலநடுக்கத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) மதிப்பிடுகிறது. 

'இது இப்போது உடனடியாக செயல்பட வேண்டிய தருணம்' என்று WHO இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்தார். 'கடந்து செல்லும் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மணி நேரமும், உயிரோடிருப்பவர்களைக் கண்டு பிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன  என்றார்.

துருக்கி தீவிரமான பூகம்ப மண்டலங்களில் ஒன்றாக உள்ளது.  மேலும், உலகிலேயே அதிக நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஜப்பானுக்கு அடுத்து துருக்கியும் ஒன்றாகும். ஏனென்றால் துருக்கி அனடோலியன் தட்டில் அமர்ந்திருப்பது தான் காரணம்.

மேலும், தற்போதைய நில நடுக்கத்தால் துருக்கி உலக வரைபடத்தில் இருந்து 10 மீட்டர் நகர்ந்துள்ளதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இத்தாலி நிலநடுக்க ஆய்வாளர், புவியியல் வல்லுனர் கார்லோ டோஃலோனி வெளியிட்டுள்ள அறிக்கையில், துருக்கியின் நில அடுக்குகள் 10 மீட்டர் வரை நகர்ந்து உள்ளன. துருக்கி மொத்தமாக இதனால் 10 மீட்டர் அல்லது அதற்கும் மேல் நகர்ந்து இருக்கலாம். சிரியா இதைவிட கொஞ்சம் குறைவாக நகர்ந்து இருக்கலாம். ஆனால் இது முதல் கட்ட தகவல்களின் அடிப்படையில்தான் சொல்லப்படுகிறது. முழுமையான விவரங்கள் கிடைத்த பின் துருக்கி எவ்வளவு தூரம் நகர்ந்தது என்று சொல்ல முடியும் என்று கூறப்பட்டு உள்ளது. மொத்தம் 190 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பகுதிகளில் நிலம் அப்படியே பெயர்ந்து, வெடித்து உள்ளது. இதனால் மொத்த துருக்கியும் மொத்தமாக இதனால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் வெளியே தெரிந்த நிலநடுக்கத்தை விட தெரியாத நிலநடுக்கங்கள் 5-6 சிறிய அளவில் இடை இடையே ஏற்பட்டு உள்ளன. இதனால் துருக்கி தற்போது இருக்கும் இடத்தில் இருந்து லேசான தென் மேற்கு திசையில் நகர்ந்து உள்ளது, என்று அந்த ஆய்வாளர் குறிப்பிட்டு உள்ளார். ( நன்றி: ஒன் இந்தியா, 09/02/2023 )

துருக்கி நில நடுக்கத்திற்கான காரணங்கள் என்ன?

1.   முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு இன்மை..

பயங்கரமான இந்த நிலநடுக்கம் ஏற்படுவதை முன்கூட்டியே ஒருவர் துல்லியமாக கணித்துள்ளார். ஆம், நெதர்லாந்தை சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளரான பிரான்க் ஹுகர் பீட்ஸ் என்பவர் புவியியல் ஆய்வு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

இவர் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி தனது டவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் கூறியிருப்பதாவது மத்திய-தெற்கு துருக்கி, சிரியா, ஜோர்டான், லெபனான் போன்ற பகுதிகளில் 7.5 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கூடிய விரைவிலோ அல்லது தாமதமாகவோ வரும்எனக் கூறியிருந்தார். ஆனால் அதனை அப்போது யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

2.   பாதுகாப்பான கட்டமைப்பும், கட்டிட அமைப்பும் இன்மை...

உலகின் அதிக நில அதிர்வு ஏற்படுவதில் இரண்டாம் இடத்தில் உள்ள 'ஆல்பைட் பெல்ட்' (Alpide Belt) என்றழைக்கப்படும் அந்தப் பகுதியில் தான் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. பெரும் அபாயப் பகுதியில் அமைந்துள்ள அது, நிலநடுக்க பேரிடர்களுக்கு நீண்டகால முன்வரலாறைக் கொண்டுள்ளது. உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, துருக்கியில் 1999 மர்மாரா நகரின் பூகம்பத்தில் கிட்டத்தட்ட 18,000 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பத்தாயிரக் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

தற்போதைய பேரிடர் ஏற்பட இருந்ததைக் குறித்து விஞ்ஞானிகள் அதிகரித்தளவில் எச்சரித்துள்ளனர் என்பதோடு, கட்டிடங்களைப் பலப்படுத்துமாறும் அவ்வாறு செய்யவில்லை என்றால் அதற்காக உயிர்களின் பயங்கர விலை கொடுக்க வேண்டி வரும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஜனவரி 2020 இல் துருக்கியில் ஏற்பட்ட எலாஜிக் (Elazığ) நகர நிலநடுக்கத்திற்குப் பின்னர், புவியியல் பொறியாளர்கள் சபைத் தலைவர் ஹுசெயின் ஆலன் கூறுகையில், இஸ்தான்புல் தவிர, நேற்றைய நிலநடுக்கத்தால் பெரும் சேதமடைந்த கஹ்ராமன்மாராஸ் மற்றும் ஹாடே உட்பட 18 நகர மையங்கள், 'நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறு கொண்ட முக்கிய அபாயப் பகுதிகளாக உள்ளன என்றார். ஒரு பெரிய நிலநடுக்கத்தில், அங்கே உள்ள கட்டிடங்கள் 'அழிக்கப்படலாம்' என்று அவர் தெரிவித்தார்.

துருக்கியின் மிகவும் மதிப்பிற்குரிய புவியியலாளர்களில் ஒருவரும், நிலநடுக்க அதிர்வுகளைத் தாங்கும் நகரங்களைக் கட்டமைப்பதை அறிவுறுத்துபவருமான பேராசிரியர் டாக்டர் நாசி கோருர், ஜப்பானுக்கும் துருக்கிக்கும் இடையிலான ஒப்பீட்டை நீண்ட காலமாக சுட்டிக் காட்டியுள்ளார்.

2011 இல் 7.4 ரிக்டர் அளவிலான ஃபுக்குஷிமா நிலநடுக்கத்தில் வெறும் நான்கு பேர் மட்டுமே உயிரிழந்தனர், அதேவேளையில் 1999 இல் அதே அளவில் ஏற்பட்ட மர்மாரா நிலநடுக்கத்தில் சுமார் 20,000 பேர் இறந்தனர் என்றவர் எழுதினார். தற்போதைய கஹ்ரமன்மராஸ் நிலநடுக்கத்தில் ஏறக்குறைய அனைத்து மரணங்களையுமே தடுத்திருக்கலாம் என்பதை இது அடிக்கோடிடுகிறது.

கோருர் இந்தப் பிராந்தியத்தில் மிகப் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான அபாயத்தைப் பல ஆண்டுகளாக கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். அந்த நிலநடுக்கத்திற்குப் பின்னர் நேற்றிரவு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறுகையில், இந்த இழப்புகளைத் தடுக்க அவரது குழு ஒரு திட்டத்தைத் தயாரித்திருந்ததாகவும், ஆனால் அதிகாரிகள் அதை புறக்கணித்து விட்டதாகவும் கோருர் கூறினார்.

துருக்கி எதிர் கொள்ள இருக்கும் இன்னுமோர் நில நடுக்கம்?

கோருர் மீண்டும் ஒரு மிகப் பெரிய இஸ்தான்புல் நிலநடுக்கம் குறித்தும் எச்சரித்தார். குறைந்தபட்சம் 16 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த மிகப்பெரும் நகரில் 7 ரிக்டர் அளவிலான ஒரு நிலநடுக்கம் எதிர்பார்க்கப்படுகிறது. முதலாளித்துவ எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சி (CHP) கட்டுப்பாட்டில் உள்ள இஸ்தான்புல் நகர சபை, வெறும் 14,000 உயிரிழப்புகள் 'மட்டும்' ஏற்படுத்தும் என்று வாதிடுகிறது. உண்மையான இறப்பு எண்ணிக்கை 400,000 ஐ தாண்டும் என்று கோருர் கணிக்கிறார்.

நிலநடுக்க அதிர்வுகளைத் தாங்கும் வகையான வீடுகளைக் கட்டுவது ஒரு முக்கிய உலகளாவிய பிரச்சினையாகும்,

சர்வதேச பேரிடர் அபாய விஞ்ஞான இதழில் (International Journal of Disaster Risk Science) 2021 இல் சீன, ஆஸ்திரேலிய, அமெரிக்க, கனேடிய மற்றும் ஜேர்மன் விஞ்ஞானிகள் எழுதிய ஒரு கட்டுரை, 2015 இல் அதிர்ச்சிகரமாக 1.5 பில்லியன் பேர் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்பதைக் கண்டறிந்துள்ளது. இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. முக்கியமாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் தெற்காசியாவின் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இது அதிகரித்து வருகிறது.  

நில நடுக்கம் என்றால் என்ன?

சில வினாடிகள், அல்லது சில நிமிடங்கள். அவ்வளவுதான் நிலநடுக்கத்தின் வாழ்க்கை. ஆனால் அதற்குள் பல்லாயிரம் உயிர்களைக் காவு வாங்கி விடுகிறது நிலநடுக்கம். 

பூமியின் மேற்பரப்பு (Lithosphere) பெரும் பாளங்களாக அமைந்துள்ளது.

இவை நகரும் பிளேட்டு களாக இருக்கிறது. இந்தப் பிளேட்டுகள் ஒரு வருடத் திற்கு ஒரு செ.மீ. முதல் சுமார் 13 செ.மீ. வரை நகர்கிறது. அவ்வாறு நகரும்போது நாம் நில நடுக்கத்தை உணர்கிறோம். 9.0 ரிக்டருக்கும் கூடுதலானவை பெரும் பாதிப்பை ஏற்படுத்துவன ஆகும். ஆகவே, நிலநடுக்கம். எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

நிலநடுக்கம் அல்லது பூகம்பம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்படும் போது, தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இதனை டெக்டோனிக் தட்டுகள் என்று கூறலாம். இந்த அதிர்வுகள் ரிக்டர் அளவு நிலநடுக்கமானியினால்  அளக்கப்படுகிறது. அந்த வகையில் அதிர்வுகள் 3 ரிக்டருக்கும் குறைவாக இருந்தால் நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். லேசான நிலநடுக்கம் ஏற்படும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பதிவாகியிருந்தால் அது பூமியில் பலத்த சேதம் மற்றும் சுனாமியை ஏற்படுத்தும்.

டெக்டோனிக் தட்டு என்றால் என்ன, அவற்றின் இயக்கம் பூகம்பங்களை எவ்வாறு ஏற்படுத்துகிறது?

பூமியின் பல பகுதிகளிலும், புவி அதிர்ச்சிகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றன. எனினும் அந்த அதிர்ச்சி ஓரிடத்தில் மிகுதியானால், அதைப் பூகம்பம் என்பர். நமது பூமியின் லித்தோஸ்பெரிக் மேற்பரப்பு  டெக்டோனிக் தட்டை உருவாக்குகிறது. 

இந்த தட்டுகள் பெரிய, ஒழுங்கற்ற வடிவிலான திடமான பாறைகளாகும். அவை கண்டம் மற்றும் கடல்சார் லித்தோஸ்பியரால் ஆனவை. 

அதாவது, பூமியின் மேற்பரப்பு, மலைகளும், குன்றுகளும், பள்ளத்தாக்குகளும், சமவெளிகளும், ஆறுகளும், கடல்களும் நிறைந்தது. கடினமான பாறைகள் காற்றாலும், ஆறுகளாலும் சிறிது சிறிதாக உடைக்கப்பட்டு மலையடிவாரங்களில் தட்டுகளாக படிகின்றன. இதே செயல்முறை ஆண்டுதோறும் நடப்பதால் டெக்டோனிக் தட்டுகள் ஒன்றன் மீது ஒன்றாகப் படிகின்றன.

இந்த டெக்டோனிக் தட்டுகள் தொடர்ந்து மெதுவாக நகரும் போது அவை உராய்வு காரணமாக அவற்றின் விளிம்புகளில் சிக்கிக்கொள்ளும். விளிம்பில் உள்ள அழுத்தம் உராய்வைக் கடக்கும்போது, அது பூகம்பத்தை விளைவிக்கும். 

அத்தகைய எதிர்வினை பூமியின் மேலோடு வழியாக அதாவது பூமியின் இடைபடுகை வழியாக பயணிக்கும் அலைகளின் வடிவத்தில் ஆற்றலை வெளியிடுகிறது. இது இறுதியில் பூமியின் மேற்பரப்பான நிலப்பரப்பை  உலுக்குகிறது. இந்த பூகம்பம் சம அளவிலான ஒரே மூலத்தால் உருவாக்கப்பட்டு பூமிக்குள்ளேயே அல்லது அதன் மேற்பரப்பில் பரப்பப்படுவதால் அவை நில அதிர்வு அலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

பூகம்பம் எதை உருவாக்குகிறது?

பூகம்பங்கள் நான்கு முக்கிய வகை மீள் அலைகளை உருவாக்குகின்றன. அவற்றில் இரண்டு பூமிக்குள் பயணிக்கும் உடல் அலைகள் என்று அழைக்கப்படுகின்றன. மற்ற இரண்டும் பூமியின் மேற்பரப்பில் பயணிப்பதால் மேற்பரப்பு அலைகள் என்று அழைக்கப்படுகின்றன. நில அதிர்வு அலைகளின் வீச்சு மற்றும் அதிர்வெண் ஆகியவை நிலநடுக்கமானி எனப்படும் ஒரு கருவியால் பதிவு செய்யப்படுகிறது.

பூமிக்கடியில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு போன்றவற்றை சேகரிப்பதற்காக மனிதனால் செயற்கையான முறையில் சிறிய பூகம்பங்களும் உருவாக்கப்படுகின்றன. நில அதிர்வு ஆய்வுகளின்படி, செயற்கையான நில அதிர்வு அலைகள் மூலம் தான் சில புதைபடிவ எரிபொருள் தொழில்கள் இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி பற்றிய தரவைக் கண்டுபிடிக்கின்றன என்பது தெரியவந்துள்ளது. 

இயற்கையான பூகம்பங்கள் பொதுவாக புவியியல் மாற்றங்களால் நிகழ்கின்றன. அவை பூமியின் மேலோட்டத்தின் அதாவது இடைப்பகுதியில் உள்ள பாறைகளில் ஒரு பிளவை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாகவே பூமியின் நிலப்பரப்பில் அதிர்வுகள் ஏற்படுகின்றன. ( நன்றி:- NEWS 18 tamil JANUARY 23, 2021 )

சன்மார்க்க ரீதியில் முஸ்லிம்களாகிய நாம் சிந்திக்க வேண்டிய அம்சங்களும் உள்ளன.

1.பூமி மனிதனுக்காகவே பிரத்யேகமாக படைக்கப்பட்ட ஒரு படைப்பு..

நாம் வாழும் பூமியின் மேற்பகுதி சுமார் 70 சதவீத (கடல்) நீராலும், 30 சதவீதம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. 

வானத்தைப் போலவே பூமியிலும் பல அடுக்குகள் இருப்பதாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குர்ஆனில் கூறிய வசனத்தை மெய்ப்பிக்கும் வகையில் இன்றைய விஞ்ஞானிகள் ஆய்வும் அமைந்துள்ளது.

‘‘அல்லாஹ்தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியில் இருந்தும் அவற்றைப் போலவும் படைத்தான். அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளை இறங்கிக் கொண்டே இருக்கிறது’’ (திருக்குர்ஆன்–65:12)

ஏழு வானங்களையும், பூமியில் அவற்றைப் போலவும் படைத்ததாகத் திருமறையில் அல்லாஹ் குறிப்பிடும்  இந்த அம்சத்தை  நாம் வாழும் இந்தப் பூமியைப் போன்றே இந்த பிரபஞ்சத்தில் மேலும் ஆறு பூமிகள் இருப்பதாக இந்த வசனத்திற்கு நாம் பொருள் விளங்கிக் கொள்ளக்கூடாது. 

மாறாக, எவ்வாறு விண்ணில் ஏழு வானங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதோ, அவ்வாறே பூமியும் அதுபோன்று படைக்கப்பட்டுள்ளது என்றே பொருள் கொள்ள வேண்டும்.

நாம் வாழும் பூமியின் கட்டமைப்பு என்பது நான்கு முக்கிய அடுக்குகளைக் கொண்டுள்ளது. இவை மேல் அடுக்கான (கிரஸ்ட்) பூமித்தட்டு, அதற்குக் கீழே அமைந்துள்ள மேன்டில்எனப்படும் இரண்டாம் அடுக்கு, (இன்னர் கோர், அவுட்டர் கோர்,) உட்கரு எனப்படும் மைய அடுக்கு ஆகும். 

பூமியின் அடுக்குகளில் இந்த நான்கு அடுக்குகள் முக்கியமானவை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இன்னும் சில அடுக்குகள் இருப்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டாலும் அதை பிரித்தறியவில்லை.

 

பல அடுக்குகளைக் கொண்ட இந்த பூமியில் தான் மனிதர்களான நம்மை அவனுடைய பிரதிநிதிகளாக படைத்து வாழ வைத்துள்ளான்.

இந்த பூமியும், பூமியில் வாழும் நாமும் படைத்தவனின் கட்டளைக்களுக்கு உட்பட்டே இயங்கிக் கொண்டு இருக்கின்றோம் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

2.   பாவத்தை கை விடுவோம்! பாவ மன்னிப்பை கையில் எடுப்போம்!!

ஒரு ஊர் மக்கள் ஈமான் கொண்டு இறையச்சத்துடன் நடந்தால் வானம்-பூமியின் பரக்கத்துகளை மட்டுமே அவர்களுக்காக அல்லாஹ் திறந்து விடுவதாகக் கூறுகின்றான். 

وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَلَكِنْ كَذَّبُوا فَأَخَذْنَاهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ

நிச்சயமாக, இக்கிராமங்களில் உள்ளவர்கள் நம்பிக்கை கொண்டு, (அல்லாஹ்வை) அஞ்சி நடந்தால் அவர்களுக்கு வானம் மற்றும் பூமியில் இருந்து பாக்கியங்களைத் திறந்து விடுவோம்.                           ( அல்குர்ஆன்: 7: 96 )

ஆனால்,  இறை போதனைகளை ஒரு சமூகம் மறந்து நடக்கும் போது அவர்களுக்கு எல்லாவற்றின் வாசல்களையும் திறந்து விடுவோம் என்று அல்லாஹ் கூறுகின்றான்.  அதாவது, அவர்களுக்குப் பொருளாதார வாசலும் திறக்கப்படும். அதில் அழிவுகளும், முஸீபத்துகளும் சேர்ந்தே திறக்கப்படும் என அல்குர்ஆன் கூறுவது சிந்திக்க வேண்டிய அம்சமாகும்.

فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّى إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُمْ بَغْتَةً فَإِذَا هُمْ مُبْلِسُونَ

அவர்களுக்கு உபதேசிக்கப்பட்டதை அவர்கள் மறந்து விட்ட போது, சகலவற்றின் வாயில்களையும் அவர்களுக்கு நாம் திறந்து விட்டோம். தமக்கு வழங்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியாக இருந்த போது திடீரென அவர்களை நாம் பிடித்தோம். அப்போது அவர்கள் (அனைத்து நலன்களிலிருந்தும்) நிராசையடைந்து விட்டனர்.                                 ( அல்குர்ஆன்: 6: 44 )

ابن أبي الدنيا حديثا مرسلا: «إن الأرض تزلزلت على عهد رسول الله صلى الله عليه وسلم، فوضع يده عليها، ثم قال: اسكني، فإنه لم يأن لك بعد، ثم التفت إلى أصحابه، فقال: إن ربكم ليستعتبكم فأعتبوه،

ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்தோழர்களோடு அமர்ந்திருக்கும் ஓர் சபையில் நில நடுக்கத்தின் பிரதிபலிப்பை மக்களோடு அண்ணலாரும் உணர்ந்த போது தோழர்களை நோக்கிய நபிகளார் மக்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு தண்டனை கொடுக்க நாடுகின்றான். எனவே, நீங்கள் அவனிடம் பாவமன்னிப்புக் கோரி தண்டனையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்என்று கூறினார்கள்.                                                                       ( நூல்: இப்னு அபித் துன்யா )

وكتب عمر بن عبد العزيز إلى الأمصار: أما بعد؛ فإن هذا الرجف شيء يعاتب الله عز وجل به العباد، وقد كتبت إلى الأمصار أن يخرجوا في يوم كذا وكذا، في شهر كذا وكذا، فمن كان عنده شيء فليتصدق به، فإن الله عز وجل يقول: {قد أفلح من تزكى - وذكر اسم ربه فصلى} [سورة الأعلى: 14 - 15]. وقولوا كما قال آدم: {ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين} [سورة الأعراف: 23]. وقولوا كما قال نوح: {وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين} [سورة هود: 47]. وقولوا كما قال يونس: {لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين} [سورة الأنبياء: 87]. 

உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் ஒன்றின் போது அது பாதித்த ஊர்களின் கவர்னர்களின் வாயிலாக வசிக்கும் மக்களுக்கு கடிதம் மூலம் “வசதி வாய்ப்புள்ளவர்கள் தர்மம் செய்யுங்கள், ஆதம் (அலை), நூஹ் (அலை) ஆகியோர் ஓதிய துஆக்களையும், யூனுஸ் (அலை) அவர்களின் யூனுஸ் கலிமாவையும் ஓதுங்கள்” என்றார்கள். ( நூல்: இப்னு அபித் துன்யா )

3.   மனிதனுக்காக எப்போதும் மரணம் காத்துக் கொண்டே இருக்கும்..

மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது

பெர்லின் சாரிட் பல்கலைக்கழகம் மற்றும் ஓஹியோவில் உள்ள சின்சினாட்டி பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஜென்ஸ் ட்ரேயரின் தலைமையின் கீழ் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

மரணத்தின் இறுதி கட்டத்தில் மூளையில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பதோடு, மரணத்தின் இறுதித் தருணத்தில் இருக்கும் மனிதனை எப்படி காப்பாற்றலாம் என்பதும் இந்த ஆய்வின் முக்கியமான நோக்கங்களாக இருந்தது.

இந்த ஆய்வுக்காக, சில (9) நோயாளிகளின் குடும்பத்தினரின் முன்னனுமதியை பெற்று, நோயாளிகளின் நரம்பு மண்டலத்தை விஞ்ஞானிகள் நெருக்கமாக கண்காணித்தார்கள்.

சாலை விபத்துகளில் படுமோசமாக காயமடைந்தவர்கள், பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பால் (கார்டியாக் அரெஸ்ட்) பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை விஞ்ஞானிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுத்தினார்கள்.

மரணிக்கும் நேரத்தில் மனிதர்களின் மூளையும், விலங்கின் மூளையும் ஒன்றுபோல் செயல்படுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

ஜென்ஸ் ட்ரேயர் தலைமையிலான விஞ்ஞானிகளின் குழு மனிதர்களைப் பொறுத்தவரை இந்த செயல்முறையை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள விரும்பியது. அதனால் சில நோயாளிகளின் மூளைகளின் நரம்பியல் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன.

மின்முனையக் கீற்றுகளை (Electrode strips) பயன்படுத்தி இந்த நோயாளிகளை மயக்க நிலையில் இருந்து மீட்டெடுக்க முயற்சி செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.

ஒன்பது நோயாளிகளில் எட்டு பேருடைய மூளையின் அணுக்கள், மரணத்தை தவிர்க்க முயற்சிப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். மூளையின் அணுக்களும், நரம்பணுக்களும் இதயத் துடிப்பு நின்ற பிறகும்கூட வேலை செய்ததை அவர்கள் கண்டறிந்தனர்.

மேலும், இந்த ஆராய்ச்சியின் முடிவில் ஜென்ஸ் ட்ரேயர் இவ்வாறு கூறுகிறார்: "சோடியம் அயனிகளின் ஊடுருவலால், நரம்பு மண்டலத்தின் பிளாஸ்மா சவ்வின் உள்ளேயும் வெளியேயும் இடையே ஏற்படும் ஆற்றல் வேறுபாட்டால் ஏற்படும் இழப்பு, அணுக்களின் உருமாற்றத்தை தொடங்குகிறது. ஆனால் இது மரணம் அல்ல. ஏனெனில் மீண்டும் உடலில் மின்முனைவை அளித்து, அதை மீட்டெடுக்க முடியும். இதனால் மரணத்தில் இருந்து மனிதனை மீட்டெடுத்து, இறப்பை தவிர்க்க முடியும்." 

எனினும், இறப்பை தவிர்ப்பதற்கான நடைமுறைகளை கண்டறிய இன்னும் நிறைய ஆராய்ச்சிகளை செய்ய வேண்டியிருக்கிறது. இதற்கான ஆராய்ச்சியும், மரணத்தை போன்றே சிக்கலானது என்று கூறுகிறார் ஜென்ஸ் ட்ரேயர். அதாவது, மரணம் தொடர்புடைய கேள்விகளுக்கு பதில் கிடைப்பதும் எளிதானதில்லை. ( நன்றி: பிபிசி தமிழ் 28/112022 )

ஆனால், இஸ்லாம் இவ்வுலகிற்கு கூறும் மிகவும் முக்கியமான அறை கூவல் ஒன்று உண்டு.

அது மரணம் குறித்தான உறுதியான ஒற்றை அறை கூவல்.

قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ

நபியே! அவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள். வெருண்டோடும் மரணம் உங்களை நிச்சயமாக பிடித்துக் கொள்ளும் என்று சொல்லுங்கள். எந்த மரணத்தில் இருந்து நீங்கள் வெருண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணத்தை பார்த்து பயந்து ஓடுகிறீர்களோ நிச்சயமாக அது உங்களை சந்தித்தே தீரும். (அல்குர்ஆன் 62 : 8)

أَيْنَمَا تَكُونُوا يُدْرِكْكُمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ

நீங்கள் எங்கிருந்த போதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். மிகப் பலமான உயர்ந்த கோட்டை கொத்தளத்தின் மீது நீங்கள் இருந்த போதிலும் சரியே. (அல்குர்ஆன் 4 : 78)

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இவ்வாறு கூறுகிறான்:-

إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ

مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ

وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ

வலது புறத்தில் ஒருவரும், இடது புறத்தில் ஒருவருமாக இருவர் அவன் செய்யும் செயலை குறிப்பெடுத்து கொண்டிருக்கின்றனர். மனிதன் எதை கூறிய போதிலும் அதனை எழுத காத்துக்கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகிறது. மரணத்தின் கஷ்டம் மெய்யாகவே வந்து விடும் பட்சத்தில் அவனை நோக்கி நீ தப்பிவிட கருதியது இதுதான் என்று கூறப்படும். (அல்குர்ஆன் : 50:17 - 19)

وَلَنْ يُّؤَخِّرَ اللّٰهُ نَفْسًا اِذَا جَآءَ اَجَلُهَا‌ؕ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ

.      ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 63: 11 )

فَلَوْلَاۤ اِذَا بَلَغَتِ الْحُـلْقُوْمَۙ‏

وَاَنْتُمْ حِيْنَٮِٕذٍ تَـنْظُرُوْنَۙ‏.

وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْكُمْ وَلٰـكِنْ لَّا تُبْصِرُوْنَ

  فَلَوْلَاۤ اِنْ كُنْتُمْ غَيْرَ مَدِيْنِيْنَۙ‏ 

تَرْجِعُوْنَهَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏

மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது - அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை. எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் -  நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே?".
(
அல்குர்ஆன்: 56: 83 - 87 )

அல்லாஹ் தாவூத் (அலை)அவர்களுடைய இபாதத்களை போற்றி புகழ்ந்து அல்குர்ஆனிலே நமக்கு நினைவூட்டுகிறான்-

وَوَهَبْنَا لِدَاوُودَ سُلَيْمَانَ نِعْمَ الْعَبْدُ إِنَّهُ أَوَّابٌ

தாவூதுக்கு சுலைமானை நாம் மகனாக தந்தருள் புரிந்தோம். அவர் மிக நல்லடியார். மெய்யாகவே அவர் ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை நோக்கி நின்றார். ( அல்குர்ஆன் 38 : 30 ) என அல்லாஹ் தாவூத் (அலை) அவர்களை குர்ஆனிலே நினைவு கூறுகிறான்.

வார நாட்களில் ஒவ்வொரு நாளையும் தாவூத் (அலை) தர்தீப் செய்து வைத்திருப்பார்கள். மக்களை சந்தித்து நற்செய்தி கூறுவதற்காக, ஆட்சி அதிகாரங்களை நிர்வகிப்பதற்காக, குடும்பத்திற்காக, பிறகு அல்லாஹ்வை வணங்குவதற்காக. முற்றிலும் வணக்க வழிபாட்டை தவிர வேறு எதையும் அந்த நாளில் செய்ய மாட்டார்கள்.

தாவூத் (அலை) வணக்க வழிபாட்டுக்காக, யாரும் தொந்தரவு செய்து விடாமல் வணக்க வழிபாட்டில் மிக கவனத்தோடு, அந்த திக்ரிலே தொழுகையிலே மூழ்கி இருப்பார்கள். திடீரென்று ஒரு மனிதர் வருகிறார். அப்போது தாவூத் (அலை) அவர்கள் கேட்கிறார்கள். நீங்கள் யார்? என்று. அவர் கூறுகிறார்:- நான்தான் மலக்குல் மவ்த். தாவூத் (அலை) திகைத்து நிற்கிறார்கள், மலக்குல் மவ்த் சொல்கிறார்கள்;

أنا من لا يهاب الملوك ، ولا تمنع منه القصور ، ولا يقبل الرشوة

மன்னர்களை நான் பயப்படமாட்டேன். அவர்களின் அரண்மனை என்னை தடுத்து நிறுத்தாது. நான் யாரிடமும் லஞ்சம் வாங்க மாட்டேன். 

அப்போது தாவூத் (அலை) சொல்கிறார்கள்; அப்படி என்றால் நீங்கள் மலக்குல் மவுத் ஆக தான் இருக்க வேண்டும் என்று. 

أتيتني ولم أستعد بعد

يا داود أين فلان قريبك ؟ أين فلان جارك ؟ قال : مات ، قال : أما كان لك في هؤلاء عبرة لتستعد ؟!

மலக்குல் மவ்த் அவர்களே! நீங்கள் என்னிடத்தில் வந்துவிட்டீரே! இன்னும் நான் அதற்கான தயாரிப்பு செய்யவில்லையே! 

அதற்க்கு மலக்குல் மவுத் "தாவூதே!உன்னுடைய இன்ன உறவினர் எங்கே? உன்னுடைய இன்ன அண்டை வீட்டார் எங்கே? யாரெல்லாம் இறந்து விட்டார்களோ அவர்களை எல்லாம் நினைவு கூறி உன்னுடைய அந்த உறவினர் எங்கே? உன்னுடைய அந்த அண்டைவீட்டார் எங்கே? என்று கேட்கிறார். 

அப்போது தாவூத் (அலை) அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள் என்று. உடனே மலக்குல் மவ்த் கேட்கிறார். அவர்கள் இறந்ததை நீங்கள் பார்த்தீர்கள் அல்லவா? உமக்கு அவர்களிலே படிப்பினை இருக்கவில்லையா?

சகோதரர்களே! ஒரு நபியுடைய நிலைமை இப்படி என்றால், நம்முடைய நிலையை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பொதுவாக பேரிடர்கள், இயற்கைச் சீற்றங்கள் போன்றவை அல்லாஹ்வின் தண்டனையாக, கோபப்பார்வையாக இருந்த போதிலும் அதில் இறந்து போகிற முஸ்லிம்கள், முஃமின்கள் குறித்து நாம் நல்லவைகளையே எண்ண வேண்டும். அவர்கள் பாவிகள் என்ற முடிவுக்கு நாம் வந்து விடக்கூடாது.

வெள்ளம், மழை, சுனாமி பூகம்பம், நில நடுக்கம், தீ விபத்து, வாகன விபத்து என்று பல வகையிலும் மனிதர்கள் மரணிக்கிறார்கள்.

திடீர் என்று மரணம் அடைவது துர்மரணம் என்று பரவலாக நம்பப்படுகிறது.  இந்த நம்பிக்கைக்கு ஆதாரம் எதுவும் இல்லை.

 

திடீர் மரணத்தை விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடியதாக சில ஹதீஸ்கள் உள்ளன. எனினும் இது துர்மரணம் என்பதற்காகக் கூறப்பட்டதாக நாம் புரிந்து கொள்ள முடியாது.

ஏனெனில் திடீர் மரணம் என்பதும் நல்ல மரணமே என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ஈமானுடன் வாழும் ஒருவருக்கு இது போல் ஏற்படும் திடீர் மரணம் நன்மையைத் தான் தரும் என்பதை இந்தச் சான்றுகளிலிருந்து அறியலாம்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " الشُّهَدَاءُ خَمْسَةٌ: المَطْعُونُ، وَالمَبْطُونُ، وَالغَرِقُ، وَصَاحِبُ الهَدْمِ، وَالشَّهِيدُ فِي سَبِيلِ اللَّهِ "

பிளேக் நோயில் இறந்தவர்கள், வயிற்றுப் போக்கில் இறந்தவர்கள், தண்ணீரில் மூழ்கி இறந்தவர்கள், இடிபாடுகளில் இறந்தவர்கள், மற்றும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் ஆகியோர் உயிர் தியாகிகள் (ஷஹீத்கள்) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 654, 721, 2829,

ஷஹீத்கள் என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்கள்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். அதற்கு நபித்தோழர்கள் யார் போருக்குச் சென்று கொல்லப்படுகிறாரோ அவர் தான் என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் என் சமுதாயத்தில் உயிர் தியாகிகள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர் ஷஹீத் ஆவார். வயிற்றுப் போக்கால் இறந்தவர் ஷஹீத் ஆவார். பிரசவத்தின் போது மரணிக்கும் பெண்ணும் ஷஹீத் ஆவார் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி) ( நூல்: அஹ்மத் 17129, 21627, 21628, 21644, 21694 )

حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمٌ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الطَّاعُونُ شَهَادَةٌ لِكُلِّ مُسْلِمٍ»

பிளேக் நோய் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஷஹாதத் (உயிர் தியாகி) என்ற நிலையைத் தரும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) ( நூல்: புகாரி 2830, 5732 )

மேலும், நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பல நபித்தோழர்களுக்குத் திடீர் மரணம் நிகழ்ந்துள்ளது. அதைத் துர்மரணம் என்று நபி (ஸல்) அவர்கள் கருதவும் இல்லை. அதைத் துர் மரணம் என்று அடையாளப் படுத்தவும் இல்லை.

حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أُمِّي افْتُلِتَتْ نَفْسُهَا، وَأَظُنُّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ، فَهَلْ لَهَا أَجْرٌ إِنْ تَصَدَّقْتُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»

ஒரு சமயம் ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து என் தாய் திடீரென்று மரணித்து விட்டார். அவர் பேசியிருந்தால் தர்மம் செய்யச் சொல்லியிருப்பார். எனவே அவர் சார்பில் நான் தர்மம் செய்தால் அவருக்கு அதன் நன்மை கிடைக்குமா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ( நூல்: புகாரி 1388, 2760 )

இது போல் திடீர் மரணம் அடைந்த எவரது மரணத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் துர்மரணம் என்று கூறியதில்லை.

நபி ஸல்) அவர்களின் காலத்தில் இதுப்போன்ற அழிவு ஏன் ஏற்படவில்லை?

أَنَّ عُبَادَةَ بْنَ الصَّامِتِ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَانَ شَهِدَ بَدْرًا وَهُوَ أَحَدُ النُّقَبَاءِ لَيْلَةَ الْعَقَبَةِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَحَوْلَهُ عِصَابَةٌ مِنْ أَصْحَابِهِ بَايِعُونِي عَلَى أَنْ لَا تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا وَلَا تَسْرِقُوا وَلَا تَزْنُوا وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ وَلَا تَأْتُوا بِبُهْتَانٍ تَفْتَرُونَهُ بَيْنَ أَيْدِيكُمْ وَأَرْجُلِكُمْ وَلَا تَعْصُوا فِي مَعْرُوفٍ فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوقِبَ فِي الدُّنْيَا فَهُوَ كَفَّارَةٌ لَهُ وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا ثُمَّ سَتَرَهُ اللَّهُ فَهُوَ إِلَى اللَّهِ إِنْ شَاءَ عَفَا عَنْهُ وَإِنْ شَاءَ عَاقَبَهُ فَبَايَعْنَاهُ عَلَى ذَلِك * رواه البخاري

பத்ருப்போரில் கலந்துகொண்டவரும், இரவில் நடந்த அகபா உடன்பாட்டில் கலந்து கொண்ட (பன்னிரண்டு) தலைவர்களில் ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, “அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்) இணையாக்கமாட்டீர்கள் என்றும், திருட மாட்டீர்கள் என்றும், விபசாரம் புரியமாட் டீர்கள் என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும், நீங்களாக அவதூறு எதனையும் புனைந்துகொண்டு வரமாட்டீர்கள் என்றும், எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்!

உங்களில் எவர் (இந்த உறுதிமொழியின் மீது) நிலைத்திருக்கிறாரோ அவருக்குரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலகவாழ்வில்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்என்ற சொன்னார்கள். உடனே நாங்கள் அவற்றுக்காக நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம். (நூல் : புகாரி 18 7056)

عُبَادَةَ بْنِ الصَّامِتِ وَهُوَ مَرِيضٌ قُلْنَا أَصْلَحَكَ اللَّهُ حَدِّثْ بِحَدِيثٍ يَنْفَعُكَ اللَّهُ بِهِ سَمِعْتَهُ مِنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ دَعَانَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَايَعْنَاهُ فَقَالَ فِيمَا أَخَذَ عَلَيْنَا أَنْ بَايَعَنَا عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي مَنْشَطِنَا وَمَكْرَهِنَا وَعُسْرِنَا وَيُسْرِنَا وَأَثَرَةً عَلَيْنَا وَأَنْ لَا نُنَازِعَ الْأَمْرَ أَهْلَهُ إِلَّا أَنْ تَرَوْا كُفْرًا بَوَاحًا عِنْدَكُمْ مِنْ اللَّهِ فِيهِ بُرْهَانٌ * رواه البخاري

நாங்கள் உற்சாகமாயிருக்கும் போதும் சோர்ந்திருக்கும் போதும் வசதியாயிருக்கும் போதும் சிரமத்திலிருக்கும் போதும் எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும் போதும் கூட (ஆட்சித் தலைவரின் கட்டளை யை)ச் செவியேற்று (அவருக்குக்) கீழ்ப்படிந்து நடப்போம்; ஆட்சியதிகாரத்திலிருப்பவர் களுடன் நாங்கள் சண்டையிடமாட்டோம்; எந்த விஷயம் பகிரங்கமான இறைமறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளரிடம் நாங்கள் கண்டாலே தவிரஎன்று எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும். (நூல் : புகாரி 7056)

يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لَا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِينَ وَلَا يَقْتُلْنَ أَوْلَادَهُنَّ وَلَا يَأْتِينَ بِبُهْتَانٍ يَفْتَرِينَهُ بَيْنَ أَيْدِيهِنَّ وَأَرْجُلِهِنَّ وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ 60:12

நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 60:12)

தீமை பெருகி விட்டால் நல்லவர்கள் அழிக்கப்படுவார்களா? 

قَالَتْ زَيْنَبُ بِنْتُ جَحْشٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ قَالَ نَعَمْ إِذَا كَثُرَ الْخَبَثُ * رواه البخاري

நான் அல்லாஹ்வின் தூதரே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்து விடுவோமாஎன்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்; தீமை பெருகிவிட்டால்…” என்று பதிலளித்தார்கள். (நூல் : புகாரி 3346)

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நில நடுக்கத்தில் இறந்து போனவர்களுக்கு ஷஹீத்களின் அந்தஸ்தை வழங்கியருள்வானாக! அவர்களின் பிழைகளை பொறுத்தருள்வானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு சிரந்த பகரத்தை வழங்கியருள்வானாக!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்! வஸ்ஸலாம்!!!

Thursday, 26 January 2023

தனிமையில் இறையச்சம்!!!

தனிமையில் இறையச்சம்!!!

சிலர் சமூகத்தின் பார்வையில் இருக்கும் போதும், பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் போதும், நல்லவர்களாய், பத்தரை மாத்து  தங்கமாய் மிளிர்கிறார்கள். வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதென்ன!!மார்க்கக் கடமைகளை ஆர்வத்தோடு  செவ்வனே செய்வதென்ன அப்படித்தான் இருக்கிறார்கள்; தீமைகளை விட்டும் காத தூரம் தள்ளி நிற்கிறார்கள். ஆனால், தனியாக இருக்கும் சமயங்களில், மார்க்கம் தடுத்த காரியங்களில் சர்வ சாதாரணமாக ஈடுபடுகிறார்கள். தங்களது கடமைகளிலும் பொறுப்புகளிலும் பொடும்போக்குத் தனமாக இருக்கிறார்கள். இத்தகைய அரை குறையான அல்லாஹ்வின் பயம் ஓர் இறை நம்பிக்கையாளருக்கு அழகல்ல.

எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் பொதுவெளியில் இருக்கும் அல்லாஹ்வின் பயம் யாருமே பார்த்திடாத தனித்திருக்கும் சமயத்திலும்  நம்மிடம் இருப்பது அவசியம்.

ஏனெனில், அதுவே ஒரு  இறை நம்பிக்கையாளரிடம் இருக்கும் ஈமானுக்கும் இறையச்சத்திற்கும் முழுமையான சான்றாகும்.

அகிலத்தின் அருட்கொடை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்ட பிரார்த்தனைகளில் ஒன்று.

أن النبي صلى الله عليه وسلم كان يسأله ربه ويقول: «وأسألك خشيتك في الغيب والشهادة» (رواه النسائي، وأحمد، وابن حبان وغيرهم).

அல்லாஹ்வே! பொதுவிலும் மறைவிலும் உனக்கு பயந்து வாழும் பாக்கியத்தை உன்னிடம் கேட்கின்றேன்" என்று நபி ஸல் அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள். ( நூல்: இப்னு ஹிப்பான் )

தமக்கு அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரை ஒன்றை நல்குமாறு வேண்டி நின்ற அபூதர் ரலி அவர்களுக்கு 

وقد أوصى بذلك أبا ذرٍ رضي الله عنه حين قال له: «أوصيك بتقوى الله في سِرِّ أمرك وعلانيته» (رواه الإمام أحمد).

அபூதர்ரே! உம் பொது வாழ்க்கையிலும் தனிமையிலும் அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு அறிவுரை பகர்கிறேன்"! என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஹ்மது)

ஒட்டுமொத்தமாக இந்த முழு சமூகத்தின் கவனத்திற்கும் எச்சரிக்கை செய்யும் முகமாக

فقال عليه الصلاة والسلام: «اتق الله حيثما كنت» (من حديثٍ رواه الترمذي)

"நீங்கள் எங்கிருந்த போதும் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்! என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதி )

எனவே, தனிமையில் இருக்கும் போது அல்லாஹ்வைப் பற்றிய அச்சம் மிகவும் அவசியமான ஒன்று என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.

 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அருள்மறைக் குர்ஆனின் பல்வேறு வசனங்களில்  வாயிலாக மனித குலத்துக்கு அறிவுரை கூறும் போது,

 اِنَّ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِيْرٌ‏

தனிமையில் தமது இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.    ( அல்குர்ஆன்: 67: 12 )

யார் தனிமையில் இறைவனை அஞ்சுகின்றாரோ அத்தகையவருக்கு மகத்தான, பிரம்மாண்டமான கூலியைத் தயாரித்து வைத்திருப்பதாக இறைவன் வாக்குறுதி வழங்குகின்றான்.

الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ وَهُمْ مِّنَ السَّاعَةِ مُشْفِقُوْنَ‏

அவர்கள் தனிமையில் தமது இறைவனை அஞ்சுவார்கள். யுகமுடிவு நேரம் பற்றியும் அஞ்சுவார்கள்.  ( அல்குர்ஆன்: 21: 49 )

தனிமையில் அல்லாஹ்வைப் பயந்து பாவச் செயலில் ஈடுபடாமல் தற்காத்துக் கொள்பவரே, மறுமை நாளையும் அஞ்சுபவர் என்று இறைவன் உத்தரவாதம் வழங்குகின்றான்.

اِنَّمَا تُنْذِرُ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ وَاَقَامُوا الصَّلٰوةَ ؕ وَمَنْ تَزَكّٰى فَاِنَّمَا يَتَزَكّٰى لِنَفْسِهٖ ؕ وَاِلَى اللّٰهِ الْمَصِيْ

தனிமையில் இருக்கும்போது தமது இறைவனை அஞ்சி, தொழுகையை நிலைநாட்டியோரையே நீர் எச்சரிக்கை செய்வீர். பரிசுத்தமாக நடப்பவர் தமக்காகவே பரிசுத்தமாகிக் கொள்கிறார். அல்லாஹ்விடமே திரும்புதல் உள்ளது.(அல்குர்ஆன்:35:18)

தனிமையில் தன்னைத் தானே பாவச் செயலில் ஈடுபடாமல் தற்காத்துக் கொள்வாரேயானால், அது நிச்சயமாக அவரைப் பரிசுத்தப்படுத்தும் என்று இறைவன் உத்தரவாதம் வழங்குகின்றான்.

اِنَّمَا تُنْذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِىَ الرَّحْمٰنَ بِالْغَيْبِۚ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَّاَجْرٍ كَرِيْمٍ‏

இந்த அறிவுரையைப் பின்பற்றி அளவற்ற அருளாளனைத் தனிமையில் அஞ்சுவோரைத்தான் நீர் எச்சரிப்பீர். அவருக்கு மன்னிப்பு பற்றியும் மரியாதைக்குரிய கூலி பற்றியும் நற்செய்தி கூறுவீராக!  ( அல்குர்ஆன்: 36: 11 )

தனிமையில் இறைவனை அஞ்சுவோருக்கு இறைவனின் புறத்திலிருந்து கிடைக்கின்ற மரியாதைக்குரிய கூலிக்குச் சொந்தக்காரர்களாக மாறி விட முடியும் என்று அல்லாஹ் சான்று பகர்கின்றான்.

எச்சரிக்கை!!

தனிமையில் நாம் மட்டும் தான் இருக்கிறோம். நாம் செய்யும் பாவம் நம்மைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. யாரும் பார்க்க வில்லை என்று ஒருவன் நினைத்தால் அந்த நொடியிலேயே அவனிடம் குஃப்ர் - இறை நிராகரிப்பு ஏற்பட்டு விடுகிறது என்று பல்வேறு வசனங்கள் எச்சரிக்கின்றது.

 

وقال في سورة الحديد: {وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ} [من الآية:4]، وفي سورة النساء: {إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيباً} [النساء من الآية:1]. وفي سورة الممتحنة: {وَأَنَا أَعْلَمُ بِمَا أَخْفَيْتُمْ وَمَا أَعْلَنْتُمْ} [الممتحنة من الآية:1]

يَعْلَمُ خَآئِنَةَ ٱلْأَعْيُنِ وَمَا تُخْفِى ٱلصُّدُورُ [الغافر -19]

... إلى آخر هذه الآيات.

"நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவனு(அல்லாஹ்வு)ம் இருக்கின்றான். நீங்கள் செய்வதை அல்லாஹ் (மிகத் தெளிவாக) பார்த்துக் கொண்டு இருக்கின்றான்". 

"திண்ணமாக! அல்லாஹ் உங்களை கண்காணித்துக் கொண்டு இருக்கின்றான்".

"நீங்கள் உங்கள் உள்ளங்களில் மறைப்பதையும், வெளிப்படையாக செய்வதையும் நான் மிகவும் அறிவேன்".

"அவன் (அல்லாஹ்) கண்கள் செய்யும் மோசடிகளையும், உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பதையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்". 

எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு வசனத்தில் அல்லாஹ் பின் வருமாறு குறிப்பிடுவான்.

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ مَا يَكُوْنُ مِنْ نَّجْوٰى ثَلٰثَةٍ اِلَّا هُوَ رَابِعُهُمْ وَلَا خَمْسَةٍ اِلَّا هُوَ سَادِسُهُمْ وَلَاۤ اَدْنٰى مِنْ ذٰ لِكَ وَلَاۤ اَكْثَرَ اِلَّا هُوَ مَعَهُمْ اَيْنَ مَا كَانُوْا‌ۚ ثُمَّ يُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا يَوْمَ الْقِيٰمَةِ‌ ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏

நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை; இன்னும் ஐந்து பேர்களி(ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை; இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை - அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன்.                       ( அல்குர்ஆன்: 58: 7 )

நாம் என்னதான் வெளிப்படையாக நல்ல பல அமல்களை செய்தாலும், நல்லவனாக வலம் வந்தாலும், தனிமையில் மறைவான சூழலில் இருக்கும் போது இறைவனுக்கு அஞ்சி நடக்கவில்லையென்றால், மறுமையில் நாம் அடைகின்ற கைசேதம் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.

حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ الرَّمْلِيُّ قَالَ: حَدَّثَنَا عُقْبَةُ بْنُ عَلْقَمَةَ بْنِ حَدِيجٍ الْمَعَافِرِيُّ، عَنْ أَرْطَاةَ بْنِ الْمُنْذِرِ، عَنْ أَبِي عَامِرٍ الْأَلْهَانِيِّ، عَنْ ثَوْبَانَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ

«لَأَعْلَمَنَّ أَقْوَامًا مِنْ أُمَّتِي يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ بِحَسَنَاتٍ أَمْثَالِ جِبَالِ تِهَامَةَ بِيضًا فَيَجْعَلُهَا اللَّهُ عَزَّ وَجَلَّ هَبَاءً مَنْثُورًا . قَالَ ثَوْبَانُ : يَا رَسُولَ اللَّهِ صِفْهُمْ لَنَا جَلِّهِمْ لَنَا - أظهر مواصفاتهم - أَنْ لَا نَكُونَ مِنْهُمْ وَنَحْنُ لَا نَعْلَمُ ؟

قَالَ : أَمَا إِنَّهُمْ إِخْوَانُكُمْ وَمِنْ جِلْدَتِكُمْ وَيَأْخُذُونَ مِنْ اللَّيْلِ كَمَا تَأْخُذُونَ وَلَكِنَّهُمْ أَقْوَامٌ إِذَا خَلَوْا بِمَحَارِمِ اللَّهِ انْتَهَكُوهَا . رواه ابن ماجه»

எனது உம்மத்தில் ஒரு கூட்டத்தாரை நான் அறிவேன். மறுமை நாளில் திஹாமாஎனும் மலைகள் அளவுக்கு நன்மைகளுடன் அவர்கள் வருவார்கள். அவர்களின் நன்மைகளை அல்லாஹ் பரப்பப்பட்ட புழுதியாக ஆக்குவான்என்று நபியவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர்களைப் போன்று நாங்கள் ஆகிவிடாமல் இருப்பதற்காக அவர்களைப் பற்றி எங்களுக்குக் கூறுங்கள்! அவர்களை எங்களுக்குத் தெரியாது!என்றோம்.

அதற்கு நபியவர்கள் அவர்கள் உங்களின் சகோதரர்கள், உங்களைச் சார்ந்தவர்கள் நீங்கள் இரவு வணக்கத்தில் ஈடுபடுவதைப் போன்றே அவர்களும் இரவில் வணக்கம் புரிவார்கள். ஆயினும் அல்லாஹ்வின் தடைகளை மீறுவதற்கான சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு வாய்த்தால் அல்லாஹ் தடை செய்தவற்றைச் செய்து விடுவார்கள். அவர்களே அக்கூட்டத்தினர்என்று கூறினார்கள். ( நூல்: இப்னு மாஜா )

இந்தச் செய்தியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்ற மிக முக்கியமான வாசகத்தை நாம் உற்று நோக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

அதாவது, திஹாமா எனும் மலை அளவுக்கு நன்மை செய்தவர்களின் நன்மைகளை அல்லாஹ் பரப்பப்பட்ட புழுதியாக மாற்றி விடுவான். அத்தகைய கைசேதப்பட்டவர்களின் அடையாளங்கள் குறித்து நபித்தோழர்கள் கேட்கும் போது, ஒற்றை வார்த்தையில், இரத்தினச் சுருக்கமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைத்தார்கள்.

அதாவது, உங்களைப் போன்றே வணக்க வழிபாடுகளில், மார்க்க காரியங்களில் கவனமாக இருப்பார்கள். இரவு வணக்கத்தில் ஈடுபடுவார்கள்; ஆனால் தனித்திருக்கும் போதும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதும் தடை செய்யப்பட காரியங்களை சர்வ சாதாரணமாகச் செய்து முடிப்பார்கள்" என்று.

கண்ணியத்திற்குரியோர்!!

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

قِيلَ: يَا رَسُولَ اللَّهِ مَنْ أَكْرَمُ النَّاسِ؟ قَالَ: «أَتْقَاهُمْ» قَالُوا: لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ، قَالَ: «فَيُوسُفُ نَبِيُّ اللَّهِ»

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதரே! மக்களில் கண்ணியத்திற்குரியவர் யார்?’’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “அவர்களில் இறையச்சமுடையவரே’’ என்று பதிலளித்தார்கள். மக்கள், “நாங்கள் இதைப் பற்றி உங்களிடம் கேட்கவில்லை’’ என்றனர். உடனே, நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் அல்லாஹ்வின் தூதரான யூசுஃப் அவர்கள் தாம் (மக்களில் கண்ணியத்திற்குரியவர்கள்)’’ என்று சொன்னார்கள். ( நூல்: புகாரி )

யார் அல்லாஹ்வுக்கு அஞ்சி வெளிப்படையிலும் தனிமையிலும் பயபக்தியுடன் வாழ்கிறாரோ, அவரே மக்களில் கண்ணியத்திற்குரியவர் என்றார்கள். மேலும், இறையச்சத்தின் முன்மாதிரி நபி யூஸுஃப் (அலை) அவர்கள் தனிமையில் இருந்த போதும் கூட, அல்லாஹ்வின் அருளால் தன்னுடைய கற்பை, தன்னுடைய எஜமானியிடமிருந்து தற்காத்துக் கொண்டார். இவரும் மக்களில் கண்ணியத்திற்குரியவர் என்றார்கள்.

எனவே, தனிமையில் இறையச்சம் உள்ளவர்கள் கண்ணியத்திற்குரியவர்களாவர்.

وكان عمر بن الخطاب رضي الله عنه يسير في طريق ومعه الأحنف بن قيس، فمروا على راعي غنم فقال له عمر: يا راعي الغنم! بعنا شاة من هذه الغنم، فقال الراعي: إنني والغنم مملوكين لسيدي ولا أملك شيئاً، فقال: بعنا شاة وقل: أكلها الذئب، فرفع الغلام بصره إلى السماء وقال: وأين الله؟ فبكى عمر رضي الله عنه حتى اخضلت لحيته، وذهب إلى سيد هذا الراعي واشتراه وأعتقه، وقال: كلمة أعتقتك في الدنيا وأرجو الله أن تعتقك من النار يوم القيامة.

உமர் (ரலி) அவர்கள் ஒரு நாள் அஹ்னஃப் இப்னு கைஸ் (ரஹ்) அவர்களுடன் வீதியொன்றின் வழியாக சென்றார்கள்.  அப்போது அங்கே ஒரு இடையன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அவனருகே சென்ற உமர் (ரலி) அவர்கள் "இடையனே! இந்த ஆடுகளில் ஒரு ஆட்டை விலைக்கு தருகிறாயா?" என்று கேட்டார்கள்.

அதற்கவன் "நானும் இந்த ஆடுகளும் என் எஜமானனுக்கு சொந்தமானவர்கள்! நான் இந்த ஆடுகளுக்கு சொந்தக்காரன் அல்ல. எனவே, உங்களுக்கு நான் இதை விற்பனை செய்ய முடியாது' என்று கூறினான்.

அப்போது, உமர் (ரலி) அவர்கள் "எங்களுக்கு ஒரு ஆட்டை விற்று விடு. உன் எஜமான் ஒரு ஆடு குறைகிறதே? அது எங்கே என்று கேட்டால் அந்த ஆட்டை ஓநாய் அடித்துச் சாப்பிட்டு விட்டது! என்று சொல்லி விடு"  என்றார்கள்.

அதற்கு அந்த இடையன் " வானத்தின் பக்கம் பார்த்தவாறு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எங்கே சென்று விட்டான்? இந்த காரியங்களை எல்லாம் அவன் பார்த்துக் கொண்டு இருக்க வில்லையா?" என்று கேட்டான்.

அது கேட்ட உமர் (ரலி) அவர்கள்"தங்களது தாடி நனையும் அளவுக்கு அழுதார்கள். பின்னர் அந்த ஆட்டு இடையனோடு சென்று அவன் எஜமானிடம் அவனை விலைக்கு வாங்கி உரிமை விட்டார்கள். 

பின்னர் அவனை நோக்கி "நீ சொன்ன ஒரு வார்த்தை உலகில் நீ விடுதலை பெறுவதற்கு காரணமாக அமைந்தது. அதே வார்த்தையால் நாளை மறுமையில் நரகில் இருந்தும் உமக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்று நான் ஆதரவு வைக்கிறேன்" என்று கூறினார்கள். ( நூல்: பிதாயா வன் நிஹாயா, அல்பயானு வத் தப்யீன் )

جاء رجل إلى شقيق البلخي وقال له: إن ذنوبي كثيرة، وقلبي قاسٍ، وعيني متحجرة، ولا أبكي من خشية الله، وأقع في المعاصي فعظني، قال له: إذا أردت أن تعصي الله فاخرج من أرض الله قال: أين أذهب والأرض كلها لله؟ قال: إذا أردت أن تعصي الله فلا تأكل من رزق الله.

قال: ومن أين آكل إلا من رزق الله؟ قال: إذا أردت أن تعصي الله وأنت تسكن في أرضه وتأكل من رزقه، فاذهب إلى مكان لا يراك فيه أحد.

ஒரு மனிதர் ஷகீக் அல் பல்ஃகீ (ரஹ்) அவர்களிடம் வந்து, "நான் பெரும் பாவியாக இருக்கிறேன். என் இதயம் வறண்டு போய் விட்டது. என் கண்கள் அல்லாஹ்வைப் பயந்து அழ மறுக்கிறது. தொடர்ந்து பாவத்தில் மூழ்கிக் கொண்டே போகிறேன்!. எனக்கு உபதேசம் செய்யுங்கள்! நான் பாவத்தில் இருந்து மீண்டு வர வேண்டும்" என்றார்.

அப்போது, ஷகீக் (ரஹ்) அவர்கள்:- "உனக்கு ஏதாவது பாவம் செய்ய தோன்றியது என்றால் அல்லாஹ் வாழ்வதற்கு வழங்கி இருக்கும் இந்த பூமியில் இருந்து கண் காணாத ஏதாவது இடத்திற்கு சென்று விடு! என்றார்கள்.

அதற்கவர், "பூமி முழுவதும் அல்லாஹ்விற்கு உரியதாக இருக்கும் போது வேறு எங்கு நான் செல்ல முடியும்? என்றார்.

அப்படியென்றால், "உனக்கு ஏதாவது பாவம் செய்ய தோன்றியது என்றால் அல்லாஹ் வழங்கி இருக்கும் ரிஜ்கை உண்ணாதே!" என்றார்கள்.

அதற்கவர், உணவு முழுவதுமே அல்லாஹ் வழங்கியிருக்க வேறு எதை நான் உண்பேன்? என்று கேட்டார்.

அப்படியென்றால், "உனக்கு ஏதாவது பாவம் செய்ய தோன்றியது என்றால் அல்லாஹ் வழங்கி இருக்கும் ரிஜ்கை உண்டு, அவன் வாழ வழி செய்திருக்கும் இந்த பூமியில் இருந்து கொண்டு உன்னை யாரும் காணாத ஒரு இடத்திற்கு சென்று நீ பாவத்தை செய்! என்றார்கள்.

قال: وأين أذهب والله يراني في كل مكان؟ قال: إذا أردت أن تعصي الله وأنت تسكن في أرض الله وتأكل من رزقه وهو يراك، فإذا جاء ملك الموت يقول لك: قد حان موتك، فقل له: لا.

لن أذهب معك، أنا رجل لا أحب القبور، أنا أحب القصور والزوجات، أما القبور فليس فيها إلا وحشة، أنا لا أستطيع أن أنام في غرفة أو عمارة لوحدي، قال: لن يطيعني ملك الموت فيما أريد.

அதற்கவர், அல்லாஹ் அனைத்து இடங்களையும் பார்த்துக் கொண்டிருக்க நான் எவ்வாறு யாரும் காணாத இடத்திற்கு சென்று பாவம் செய்வது? என்றார்.

 

அப்படியென்றால், உனக்கு ஏதாவது பாவம் செய்ய தோன்றியது என்றால் அல்லாஹ் வழங்கி இருக்கும் ரிஜ்கை உண்டு, அவன் வாழ வழி செய்திருக்கும் இந்த பூமியில் இருந்து கொண்டு, அவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் உனக்கு மரணம் நெருங்கி உன்னிடம் ரூஹைக் கைப்பற்றும் வானவர் வந்து உனக்கு "மரணம் அடையும் நேரம் வந்து விட்டது" என்று கூறும் போது, அந்த வானவரிடம் "நான் உம்மோடு வர மாட்டேன். மேலும், நான் மண்ணறையை விரும்புபவனும் அல்லன். மாடமாளிகைகளையும், அந்த மாளிகையில் அழகிய துணைவியரோடும் துயில் கொள்பவன் நான். மேலும், மண்ணறை என்பது தனிமையின் வீடு!, வெறுமையின் வீடு! அங்கு வந்து தங்குவதென்பதும் உறங்குவதென்பதும் என்னால் முடியாத காரியம் என்று நீ சொல்" என்றார்கள்.

அதற்கவர், என் வார்த்தைகளுக்கெல்லாம் ரூஹைக் கைப்பற்றும் வானவர் கட்டுப்பட மாட்டார்.

قال: إن أردت أن تعصي الله وأنت تسكن في أرضه وتأكل من رزقه وهو يراك، وتعرف أنه سيدعوك بالموت، فإذا أمر الله الملائكة يوم القيامة أن يأخذوك إلى النار فارفض أن تذهب معهم! وقل: والله لا أدخل النار، أنا رجل أريد الجنة، هل يطيعونك يوم القيامة؟ قال: لا؛ لأن الله يقول: {عَلَيْهَا مَلائِكَةٌ غِلاظٌ شِدَادٌ} [التحريم:٦] قال العلماء: غلاظ في الخلقة، شداد في الأخلاق.

قال صلى الله عليه وسلم: (والذي نفسي بيده! يؤتى بجهنم يوم القيامة تقاد بسبعين ألف زمام، مع كل زمام سبعون ألف ملك، وإن الملك الواحد ليأخذ بيده هكذا فيلقي سبعين ألفاً في النار).

ஒரு வேளை இதையெல்லாம் கடந்து மறுமையை அடைந்து உன் பாவத்தின் காரணமாக, அல்லாஹ் வானவர்களிடம்  உன்னை பிடித்து நரகில் போடச் சொல்வான். அப்போது நீ அந்த வானவர்களுடன் செல்ல மறுத்து விடு! பின்னர் அவர்களிடம் "நான் நரகத்திற்கெல்லாம் வரமாட்டேன். நான் சுவனத்தை விரும்பும் மனிதன். சுவனத்தில் தான் நான் இருப்பேன்" என்று சொல்! என்றார்கள்.

பின்னர், அவரை நோக்கி அந்த வானவர்கள் உன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு உன்னை நரகில் இருந்து விடுவித்து விடுவார்களா?" என்று கேட்டார்கள்.

அதற்கவர், இல்லை அவர்கள் அப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டார்கள். மாறாக, அல்லாஹ் அருள் மறையில் கூறும் "அதில் (நரகில்) (குணத்தால்) கடுமையான (உடல் பலத்தால்) பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்". ( அல்குர்ஆன்: 66: 6 ) தன்மை கொண்டவர்கள். என்றும்,

 

நாளை மறுமை நாளில் நரகம் கொண்டு வரப்படும் போது அதில் எழுபதாயிரம் கடிவாளங்கள் இடப்பட்டிருக்கும்.ஒவ்வொரு கடிவாளத்தையும் எழுபதாயிரம் மலக்குகள் இழுத்துக் கொண்டு வருவர். மேலும், ஒரு வானவர் தனது கரத்தினால் எழுபதாயிரம் நபர்களை நரகத்தில் போடுவார்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்பதையும் நான் அறிவேன் என்று அவர் கூறுவார்.

அப்போது, ஷகீக் அல் பல்கீ (ரஹ்) அவர்கள் உன்னை சுவனத்தில் நுழைவதைத் தடுக்கும் பாவச் செயல்களைச் செய்வதில் தான் உனக்கு எவ்வளவு ஆனந்தம் இருக்கிறது!? உன்னை நரகத்தில் நுழையச் செய்யும் பாவங்களை செய்வதில் தான் உனக்கு எவ்வளவு ஆசை இருக்கிறது!?

தனிமையில் அமர்ந்து அல்லாஹ்விடம் அழுது மன்றாடி உன்னை தூய்மை படுத்திக் கொள்! என்று உபதேசம் செய்து அனுப்பி வைத்தார்கள்.  ( நூல்: அத் தவ்வாபீன் லி இமாமி இப்னு குதாமா ரஹ்... )

இதே சம்பவம் இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்களிடம் வந்து ஒருவர் உரையாடியதாகவும் சில நூற்களில் காணப்படுகிறது.

இமாம் சுஃப்யான் இப்னு உயைனா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நம்முடைய வெளிரங்கம்  நம்முடைய உள்ரங்கம் பற்றி சொல்லக்கூடிய ஒரு அழகான வார்த்தையை பாருங்கள்;

يقول سفيان بن عُيَينة - رحمه الله -: "إذا وافَقتِ السَّريرة العلانية فذلك العدل، وإذا كانت السريرة أفضل من العلانية فذلك الفضْل، وإذا كانت العلانية أفضَل مِن السَّريرة فذلك الجور""صفوة الصفوة" (2: 234)

ஒரு மனிதன் நல்லதை பேசுகின்றான்; நல்லதின் பக்கம் அழைக்கின்றான்; அவனுடைய வெளிரங்கத்தை பார்த்தால் நல்லவனாக தோன்றுகிறது; அவனுடைய உள்ளமும் அப்படியே இருந்து விட்டால் அது நீதம்.ஒரு மனிதன் பேசுவதை விட அவன் வெளிப்படுத்துவதை விட அவனது உள்ளம் சிறப்பாக இருந்ததுவிட்டால் அதுவோ மிகப்பெரிய சிறப்பு; அதாவது அவனுடைய செயலில் வெளிப்படக்கூடிய தக்வாவை விட அவன் உள்ளத்தில் இருக்கக்கூடிய தக்வா சிறந்ததாக இருக்கிறது; அதுவோ மிகச் சிறப்பு.

அடுத்ததாக சொல்கிறார்கள்; (அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் மன்னிக்க வேண்டும்) நாம் இந்த குணத்தில் தான்   இருக்கிறோமா என்ற பயத்தில் நாம் இருக்க வேண்டும்; ஒரு மனிதன் பேசுகின்றான்; அவனது பேச்சு என்னமோ சிறப்பாக இருக்கின்றது; ஆனால் அவன் உள்ளம் அப்படி இல்லை;  அந்தரங்கம் அப்படியில்லை; வெளிப்படுத்துவது என்னவோ ஹஸன் பஸரியை போன்று, முஹம்மது இப்னு சீரினைப்  போன்று. ஆனால் அவனது உள்ளமோ பிர்அவ்னைப் போன்று இருக்கின்றது;  அவனுடைய உள்ளமோ காரூனுடைய உள்ளத்தைப் போன்று இருக்கின்றது; வெளிப்பாடுகள் பெரிதாக இருக்கின்றது; ஆனால் உள்ரங்கமோ கெட்டுப்போய் இருக்கின்றது; இதுதான் மிகப்பெரிய அநியாயம்; மிகப் பெரிய அக்கிரமம் என்றுகூறினார்கள். ( நூல்: ஸிஃபதுஸ் ஸஃப்வா )

தனிமையில் இருக்கும் போது இதைச் செய்தால்....

وسأل فَيْضُ بْنُ إِسْحَاقَ الْفُضَيْلَ عَنْ قَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ:

 ﴿ مِنْ خَشِيَ الرَّحْمَنَ بِالْغَيْبِ وَجَاءَ بِقَلْبٍ مُنِيبٍ 

 قَالَ: "الْمُنِيبُ الَّذِي يَذْكُرُ ذَنْبَهُ فِي الْخَلْوَةِ فَيَسْتَغْفِرُ مِنْهُ.

ஃபைள் இப்னு இஸ்ஹாக் அல் ஃபுளைல் (ரஹ்) அவர்களிடம் "எவர்கள், மறைவிலும் அர்ரஹ்மானை அஞ்சி நடந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கும் (அவனையே) முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வருவோருக்கும் (இது வாக்களிக்கப்பட்டிருக்கிறது)." என்ற காஃப் அத்தியாயத்தின் வசனம் குறித்து விளக்கம் கேட்கப்பட்ட போது "முனீப் - இறைவனை நோக்கிய இதயம் கொண்டவர் என்றால் தனிமையில் இருக்கும் போது தான் செய்த பாவங்களை நினைத்து சதாவும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்பவர் என்று பொருள்"  என்று கூறினார்கள்.


وفي الخلوات لذة المناجاة، يقول مسلم بن يسار: "مَا تَلَذَّذَ الْمُتَلَذِّذُونَ بِمِثْلِ الْخَلْوَةِ بِمُنَاجَاةِ اللهِ عَزَّ وَجَلَّ"،

முஸ்லிம் இப்னு யஸார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: தனிமையில் அல்லாஹ்வோடு முனாஜாத்திஅல் ஈடுபடுபவர்கள் பெறுகிற இன்பத்தைப் போன்று வேறு எவரும் பெறுவதில்லை".


ويقول محمد بن يوسف: "مَنْ أَرَادَ تَعْجِيلَ النِّعَمِ فَلْيُكْثِرْ مِنْ مُنَاجَاةِ الْخَلْوَة".

முஹம்மது இப்னு யூசுஃப் (ரஹ்) அவர்கள் "விரைவாக அல்லாஹ் ரப்புல் ஆலமீனின் அருட்கொடைகளை பெற விரும்புபவர்கள் தனிமையில் அல்லாஹ்வுடனான முனாஜாத்தை அதிகரிக்கட்டும்" என்று கூறினார்கள்.


الخلوة عند الصالحين موطن محاسبة النفس واستصلاح عيبها، فقد عنّف عمر بن الخطاب رضي الله عنه أحدَ رعيته، ثم دخل بيته فافتتح الصلاة، فصلى ركعتين، ثم جلس، فقال: "يا ابن الخطاب، كنت وضيعاً فرفعك الله، وكنت ضالاً فهداك الله، وكنت ذليلاً فأعزّك الله، ثم حملك على رقاب المسلمين، لجأ رجل يستعديك فضربته، ما تقول لربك غداً إذا أتيته؟ "، يقول الأحنف بن قيس: فجعل يعاتب نفسه معاتبة ظننت أنه من خير أهل الأرض. رواه ابن عساكر.

அஹ்னஃப் இப்னு கைஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு நாள் உமர் (ரலி) அவர்கள் தங்களது பணியாளர் ஒருவரை ஏதோ ஒரு காரணத்திற்காக கண்டித்தார்கள். பின்னர் தமது வீட்டிற்கு சென்றார்கள். இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். பின்பு அமர்ந்து "கத்தாபின் மகன் உமரே! நீ தாழ்ந்த நிலையில் இருந்தாய்! அல்லாஹ் உன் நிலையை உயர்த்தினான். நீ வழிகேட்டில் வீழ்ந்து கிடந்தாய். அல்லாஹ் ஹிதாயத்தை வழங்கி உன்னை நேர் படுத்தினான். நீ இழிவானவனாக இருந்தாய்  அல்லாஹ் உனக்கு கண்ணியத்தை வழங்கினான். இப்போது உன்னை முஸ்லிம்களை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கி கௌரவித்துள்ளான். ஆனால், நீயோ உன் பொறுப்பின் கீழ் தவறிழைத்த ஒருவனை இலகுவாக தண்டித்து விட்டு வந்து விட்டாய்! நாளை மறுமை நாளில் உம் இறைவனான அல்லாஹ்விடம் இந்த செயல் குறித்து முறையிட்டால் என்ன பதில் சொல்லப் போகிறாய்?" என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டு இருந்தார்கள்". இப்படித்தான் உமர் (ரலி) அவர்கள் தம்மைத் தாமே கடுமையாக கண்டிக்கும் குணம் கொண்டவர்களாக இருந்தார்கள். என்று கூறி விட்டு "நிச்சயமாக பூமியில் வாழ்பவர்களிலேயே உமர் (ரலி) அவர்கள் சிறந்தவர்களாக நான் கருதுகிறேன்" என்று கூறினார்கள். ( நூல்: இப்னு அஸாக்கிர் )

ودمعة الخشية في الخلوة سبب للاستظلال بظل الله سبحانه يوم القيامة، يقول الرسول صلى الله عليه وسلم: "سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله"، ومنهم: "رجل ذكر الله خالياً ففاضت عيناه". رواه البخاري ومسلم. 

அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான் என நபி ஸல் அவர்கள் கூறிய அந்த ஏழு கூட்டத்தாரில்
"தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் " இவர்களும் ஒரு கூட்டத்தார் ஆவார்கள்.

وتلاوة القرآن في الخلوة من أعظم ما يصلح القلب ويوفق لحسن الختام، لَمَّا حَضَرَتْ أَبَا بَكْرٍ بْنَ عَيَّاشٍ الْوَفَاةُ بَكَتْ أُخْتُهُ، فَقَالَ: لَا تَبْكِ؛ انْظُرِي إِلَى تِلْكَ الْخَزَانَةِ أَوِ الزَّاوِيَةِ الَّتِي فِي الْبَيْتِ قَدْ خَتَمَ أَخُوكِ فِي هَذِهِ الزَّاوِيَةِ ثَمَانِيَةَ عَشَرَ أَلْفٍ خَتْمَةٍ.

அபூபக்ர் இப்னு அய்யாஷ் (ரஹ்) அவர்களின் இறுதி நேரத்தில் சக்ராத்தின் போது அவரது சகோதரி அழுது கொண்டு இருந்தார். அப்போது அபூபக்ர் இப்னு அய்யாஷ் (ரஹ்) அவர்கள் "சகோதரியே! அழாதே! அதோ வீட்டில் இருந்த ஒரு குர்ஆனைக் காட்டி உம் சகோதரர் பதினெட்டாயிரம் முறை இந்த குர்ஆனை முழுமையாக முடித்து வைத்திருக்கிறார்". என்றார்.

وصدقة الخلوة أحرى ما يكون قبولها، كان علية بن زيد رجلاً من أصحاب النبيّ - صلى اللَّه عليه وسلّم -، فلما حضّ على الصدقة جاء كلّ رجل منهم بطاقته وما عنده، فقال علية بن زيد: اللَّهمّ إنه ليس عندي ما أتصدّق به، اللَّهمّ إني أتصدّق بعرضي على من ناله من خلقك، فأمر رسول اللَّه - صلى اللَّه عليه وسلّم - منادياً، فنادى: أين المتصدق بعرضه البارحة؟ فقام علية، فقال: قد قبلت صدقتك. رواه ابن مردويه والبيهقي في الشعب بنحوه وله شاهد صحيح كما قال الحافظ.

நபி {ஸல்} அவர்கள் தபூக் யுத்தத்திற்கு புறப்படும் முன்பாக யுத்தத்திற்கு நிதி திரட்டும் முகமாக நபித்தோழர்களை அனுதினமும் ஆர்வமூட்டினார்கள். ஒவ்வொரு நபித்தோழரும் அவரவர் சக்திக்கு ஏற்ப பொருளாதாத்தை கொண்டு வந்து கொடுத்தனர். இந்த யுத்தத்தில் பங்கேற்க முடியாமலும், பொருளாதாரத்தை கொடுக்க முடியாமலும் ஏழ்மையில் வாடிய உல்பா இப்னு ஜைத் (ரலி) அவர்கள் இதற்காக மிகவும் வருந்தினார்கள். ஒவ்வொரு நாளும் தம் இயலாமையை நினைத்தும் கொடுக்க முடியவில்லையே என நினைத்தும் வேதனை அடைந்தார்கள்.

அன்றொரு நாள் தஹஜ்ஜத் தொழுது விட்டு "அல்லாஹ்வே! என்னுடைய மானத்தை உனக்காக தர்மம் செய்கிறேன். என்னுடைய இந்த நிலை கண்டு விமர்சித்தோர், கேலி பேசியோர் என உம் படைப்புகளில் என்னோடு நடந்து கொண்டவர்களோடு நான் மனம் பொறுத்தவைகளுக்காக நீ தரும் கூலியை உன் பாதையில் தர்மம் செய்கிறேன்! என்று அழுது மன்றாடினார்கள்.

அன்றைய சுபுஹ் தொழுகையின் ஜமாஅத் தொழுகையிலும் பங்கேற்றார். தொழுது முடித்ததும் நபி ஸல் அவர்கள் ஒரு நபித்தோழரை அழைத்து "இன்று அதிகாலை நேரத்தில் அல்லாஹ்விடம் இன்னின்னவாறு பிரார்த்தனை செய்த மனிதர் இங்கு இருக்கிறாரா?" என்று அறிவிக்கச் சொன்னார்கள். அந்த நபித்தோழர் அறிவித்ததும் "உல்பா இப்னு ஜைத் (ரலி) அவர்கள் எழுந்து தாம் தான் அப்படி பிரார்த்தித்ததாக" கூறினார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள்"அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உம்முடைய தர்மத்தை ஏற்றுக் கொண்டான்" என்று கூறினார்கள். (நூல்: அல் இஸாபா )

தனிமையில் அல்லாஹ்வைப் பயந்து வாழும் நஸீபை நம் அனைவருக்கும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!