Saturday, 1 April 2023

அல்லாஹ்வின் அருட்கொடைகளை சிந்தித்துப் பார்ப்போம்!!!

 

அல்லாஹ்வின் அருட்கொடைகளை சிந்தித்துப் பார்ப்போம்!!!

ரமழான் - (1444 - 2023) தராவீஹ் சிந்தனை:- 11.


தினோராவது நாள் தராவீஹ் தொழுகையை நிறைவேற்றி,  பத்தாவது  நோன்பை நோற்று அல்லாஹ்வின் அருள் நிறைந்த மஸ்ஜிதில் இதயத்திற்கு உற்சாகமாகவும்,  ஈமானுக்கு உரமாகவும் அமைந்திருக்கின்ற குர்ஆனின் போதனைகளை செவிமடுக்கும் ஆர்வத்தில் அமர்ந்திருக்கின்றோம். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்முடைய நோன்பையும், தராவீஹ் தொழுகையையும், நம்முடைய இதர நல்லறங்களையும் கபூல் செய்து நிறைவான நன்மைகளை வழங்கியள்வானாக!

இன்றைய தராவீஹ் தொழுகையில் சூரா அர் ரஅத், சூரா, இப்ராஹீம், சூரா அல் ஹிஜ்ர் மற்றும் அந்நஹ்ல் சூராவின் பெரும்பகுதி  ஓதி நிறைவு செய்யப்பட்டது. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த நஹ்ல் சூராவில் பெரும்பகுதியில் மனித குலத்திற்கு தான் வழங்கியிருக்கும் அருட்கொடைகள் குறித்து விரிவாகவே பேசுகின்றான்.. அதில் இரண்டு வசனங்கள் மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.

وَمَا بِكُمْ مِنْ نِعْمَةٍ فَمِنَ اللَّهِ

"மேலும் உங்களுக்குக் கிடைத்துள்ள அருட்கொடைகள் எல்லாம் அல்லாஹ்விடமிருந்து வந்தவைதாம்". ( அல்குர்ஆன்: 16: 53 ).

وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَحِيمٌ

"அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் எண்ணிட முயன்றால் அவற்றை உங்களால் எண்ணிவிட முடியாது". ( அல்குர்ஆன்: 16: 18 ).

இறைவன் மனிதனுக்கு எண்ணிலடங்கா அருட்கொடைகளை வழங்கி இருக்கின்றான். வழங்கிக் கொண்டே இருக்கின்றான். இறைவனின் அருட்கொடைகள் என்பது பரந்து விரிந்தது, மிகவும் விசாலமானது. அந்தளவு இறைவன் நமக்கு அருள்புரிந்துள்ளான்.

அருட்கொடைகளைப் பார்க்கும் முன்பாக அருட்கொடைகள் குறித்தான நம் சிந்தனையில் ஒரு தெளிவு இருக்க வேண்டும். அந்த தெளிவு என்ன? அது இது தான்.

அல்லாஹ்வின் அருட்கொடைய அற்பமாக கருதிவிடக் கூடாது என்று மட்டுமல்ல, அது குறித்து மறுமையில் விசாரிக்கப்படும் என்றும் மார்க்கம் நம்மை எச்சரிக்கிறது.

ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ

பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள். ( அல்குர்ஆன்: 102: 8 )

قال ابن جرير: حدثني الحُسَين بن علي الصدائي، حدثنا الوليد بن القاسم، عن يزيد بن كيسان، عن أبي حازم عن أبي هريرة قال: بينما أبو بكر وعمر جالسان، إذ جاءهما النبي صلى الله عليه وسلم فقال: "ما أجلسكما هاهنا؟ " قالا والذي بعثك بالحق ما أخرجنا من بيوتنا إلا الجوع. قال: "والذي بعثني بالحق ما أخرجني غيره". فانطلقوا حتى أتوا بيت رجل من الأنصار، فاستقبلتهم المرأة، فقال لها النبي صلى الله عليه وسلم: "أين فلان؟ " فقالت: ذهب يستعذب (2) لنا ماء. فجاء صاحبهم يحمل قربته فقال: مرحبا، ما زار العباد شيء أفضل من شيء (3) زارني اليوم. فعلق قربته بكرب نخلة (4) وانطلق فجاءهم بعذق، فقال النبي صلى الله عليه وسلم: "ألا كنت اجتنيت" ؟ فقال: أحببت أن تكونوا الذين تختارون على أعينكم. ثم أخذ الشفرة، فقال النبي صلى الله عليه وسلم: "إياك والحلوب؟ " فذبح لهم يومئذ، فأكلوا. فقال النبي صلى الله عليه وسلم: "لتسألن عن هذا يوم القيامة. أخرجكم من بيوتكم الجوع، فلم ترجعوا حتى أصبتم هذا، فهذا من النعيم" (5) .

ورواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு பகல் அல்லது ஓர் இரவு (தமது இல்லத்திலிருந்து) வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்? என்று கேட்டார்கள்.

அதற்கு, பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே! என்று அவ்விருவரும் பதிலளித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் (புறப்பட்டு வந்தது அதனால்)தான். உங்கள் இருவரையும் வெளியேவரச் செய்ததே என்னையும் வெளியேவரச் செய்தது என்று கூறிவிட்டு, எழுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர்.

அப்போது அந்த அன்சாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அந்தத் தோழரின் துணைவியார் கண்டதும், வாழ்த்துகள்! வருக என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், அவர் எங்கே? என்று கேட்டார்கள்.

அதற்கு அப்பெண், எங்களுக்காக நல்ல தண்ணீர் கொண்டுவருவதற்காக (வெளியே) சென்றுள்ளார் என்று பதிலளித்தார்.

அப்போது அந்த அன்சாரி வந்துவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்) கண்டார். பிறகு எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும் இல்லை என்று கூறிவிட்டு, (திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார்.

அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும் கனிந்த பழங்களும் செங்காய்களும் இருந்தன. அவர், இதை உண்ணுங்கள் என்று கூறிவிட்டு, (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள்.

அவ்வாறே அவர்களுக்காக *அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார். அவர்கள் அனைவரும் அந்த ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிலிருந்தும் உண்டுவிட்டு (தண்ணீரும்) அருந்தினர். *

வயிறு நிரம்பி தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.

பசி உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ( நூல்: முஸ்லிம் (4143) – இப்னு கஸீர் )

எனவே, நாம் நமக்குக் கிடைத்திருக்கும் அருட்கொடைகளைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்முடைய உடல் உறுப்புக்களைக் குறித்து சிந்தித்தாலே புரியும் இறைவனின் அருட்கொடை எவ்வளவு பெரியது என்று.

أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ (8) وَلِسَانًا وَشَفَتَيْنِ

"நாம் அவனுக்கு இரு கண்களையும் ஒரு நாவையும் இரு உதடுகளையும் அளிக்கவில்லையா?" (திருக்குர்ஆன் 90:8,9) என இறைவன் கேட்கின்றான்.

கண் மற்றும் பார்வைத்திறன் எனும் மகத்தான இரண்டு அருட்கொடைகள்..

கருவறையில் முதன் முதலாக செவிப்புலனையும், அடுத்ததாக கண் பார்வையையும், அடுத்ததாக இதயத்துடிப்பையும் செயல்பட வைப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.

ثُمَّ سَوَّاهُ وَنَفَخَ فِيهِ مِن رُّوحِهِ ۖ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ۚ قَلِيلًا مَّا تَشْكُرُونَ

பின்னர், (படைப்பாகிய) அதனைச் செப்பனிட்டுத்தன்னுடைய ரூஹைஅதில்புகுத்தி (உங்களைஉற்பத்திசெய்கிறான்.) உங்களுக்குக் காதுகள், கண்கள், உள்ளங்கள் ஆகியவற்றையும் அவனே அமைக்கிறான். இவ்வாறு இருந்தும் உங்களில் நன்றி செலுத்துபவர்கள் வெகுசிலரே! ( அல்குர்ஆன்: 32: 9 )

إِنَّا خَلَقْنَا الْإِنسَانَ مِن نُّطْفَةٍ أَمْشَاجٍ نَّبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًا

(பின்னர் ஆண், பெண்) கலந்த ஓர் இந்திரியத் துளியைக் கொண்டு நிச்சயமாக நாம் தாம் மனிதனை படைத்தோம். அவனை நாம் சோதிப்பதற்காகவே, செவியுடையவனாகவும் பார்வையுடையவனாகவும் அவனை ஆக்கினோம். ( அல்குர்ஆன்: 76: 2 )

பொதுவாக அனைத்து உயிரினங்களிடமும் காணமுடியுமான ஒரு உறுப்புதான் இந்தக் கண். உயிரினங்கள் ஒவ்வொன்றின் கண்களும் வித்தியாசமான முறையில் படைக்கப்பட்டுள்ளன. சில உயிரினங்களின் கண்கள் முகத்தின் முன்பகுதியிலும் வேறு சில விலங்குகளின் கண்கள் முகத்தின் இறு புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.

சிலந்திகள் தலையைச் சூழ எட்டு கண்களைக் கொண்டுள்ளன. தும்பிகளின் இரண்டு பெரிய கண்களிலும் 30,000 சிறிய கண்கள் காணப்படுகின்றன.  ஆந்தை, வெளவால், பூனை போன்ற உயிரினங்கள் இராக் காலங்களிலும் தெளிவாகப் பார்க்கும் அபார சக்தியைப் பெற்றுள்ளன. கழுகு போன்று கூர்மையான பார்வையை உடைய உயிரினங்களும் இருக்கின்றன. இவ்வாறு நம்மைச் சூழவுள்ள இந்த பசுமையான உலகைப் பார்ப்பதற்கும் அதில் எமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கும் நமக்கும் அல்லாஹ் படைத்து அதில் பார்வையைத் தந்துள்ளான்.

இன்று விஞ்ஞானத்துறையில் மனிதன் வியத்தகு சாதனைகளைச் செய்தும் கூட கண்களின் இயல்பை அடிப்படையாகக் கொண்டு ஒரு போலிக் கண்ணை கூட அமைக்க  அவனால் இன்னும் முடியவில்லை.

கருவில் வளரும் குழந்தையின கண்கள் இயல்பாக அமைவதே ஓர் அதிசயமாக உள்ளது. குழந்தை பிறப்பதற்கு பல வாரங்களுக்கு முன்பே குழந்தைக்கு கண்கள் உருவாகி வளர்ச்சியடையத் துவங்குகிறது என்கிறது மருத்துவ ஆய்வுகள். உடலின் மென்மையான அந்த உறுப்புகள், உடலின் மிக இன்றியமையாத அந்தப்பகுதி, மனிதனுக்கு உணர்வையும் விழிபபையும் வழங்கும் அந்த அவயவம் எங்கே உருவாக்கப்படுவது கருவறையின் இருளில் தான்.

ஒரு சிசு தாயின் கர்ப்பப்பையில் வளரும் 42 ஆம் நாளிலேயே கண் எளிமையான வடிவில் உருவாகி விடுகின்றது. ஆனால் 28 ஆம் வாரத்தில்தான் கண் விழித்திரை  வெளிச்சத்தை உணரும் தன்மையையும் பார்க்கும் ஆற்றலையும் பெறுகின்றது.

மனிதனது கைவிரல் ரேகைகள் எவ்வாறு ஒருவரிலிருந்து இன்னொருவருடன் வித்தியாசப் படுகின்றனவோ அதே போன்றுதான் மனிதனது கண் ரேகைகளும். ஒருவரது கண் ரேகைபோன்று இன்னுமொருவரது கண்ரேகை நிச்சயமாக இருக்காது. அவ்வளவு நுணுக்கமாக அல்லா மனித உருப்புகளைப் படைத்துள்ளான்

ரெடினா (Retina) என்ற பகுதி கண்ணில் உள்ளே உள்ள ஒரு திரை போன்ற அடுக்கு ஆகும்.இதில் பார்வைகளுக்கு தேவையான நரம்பு செல்கள் உள்ளன. ஒரு மனிதனுடைய பார்வை திறனுக்கு ரெடினா என்ற உயிர் உள்ள போட்டோ பிலீம் இன்றியமையாத திசுஆகும். அல்லாஹ்தஆலா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் அருளிய காலங்களில் அறிவியலில் எந்த கண்டுபிடிப்புகள் கிடையாது. இவ்வாறு சூழ்நிலை இருந்த அக்காலத்தில் அல்லாஹ் தன் அருள் மறையில் திருகுர்ஆனில் சூரா ஃபாத்திர் அத்தியாத்தில் வசனம் 8-ல் பார்வைகளை பற்றி இவ்வாறு கூறுகிறான். அதாவது;

أَفَمَن زُيِّنَ لَهُ سُوءُ عَمَلِهِ فَرَآهُ حَسَنًا ۖ فَإِنَّ اللَّهَ يُضِلُّ مَن يَشَاءُ وَيَهْدِي مَن يَشَاءُ ۖ فَلَا تَذْهَبْ نَفْسُكَ عَلَيْهِمْ

حَسَرَاتٍ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِمَا يَصْنَعُ

எவனுக்குத் தீயகாரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு அவனும் அதனை அழகாகக் காண்கிறானோ அவனும், (எவன் தீயகாரியங்களைத் தீயனவாகவே கண்டு அதிலிருந்து விலகிக்கொள்கின்றானோ அவனும் சமமாவார்களா? ஒரு போதும் ஆக மாட்டார்கள்) நிச்சயமாக அல்லாஹ்தான் விரும்பியவர்களைத் தவறான வழியில் விட்டு விடுகிறான். தான் விரும்பியவர்களை நேரானவழியில் செலுத்துகிறான். ஆகவே, (நபியே!) அவர்களுக்காக உங்கள் உயிரையே மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு நீங்கள் கவலைப்படாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.(35:8)

இந்த வசனத்தில் “RAA” என்ற அரபி வார்த்தைக்கு பார்ப்பதுஎன்று அர்த்தம் உள்ளது. ஆங்கிலத்தில் ரெடினா (Retina) என்று அதைக் குறிப்பிடுவர். இது மட்டுமின்றி இதே சூராவில் வசனம் 19வில் குருடனும் பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள் என்றும் , வசனம் 20வில் இருளும் பிரகாசமும் சமமாகாது என்றும் அல்லாஹ் கூறுகிறான். இவை குர்ஆன் முலம் மனித குலத்திற்கு அல்லாஹ் கூறும் அத்தாட்சிகளாகும்.

குருடனும்பார்வையுடையவனும்சமமாக மாட்டார்கள். (35:19)

وَلَا الظُّلُمَاتُ وَلَا النُّورُ

(அவ்வாறே) இருளும்பிரகாசமும் (சமமாகாது).(35:20)

One of the Swiss pharmaceutical companies has started producing a new medicine called “Medicine of Qur'ân” which allows the treatment of cataract without surgery. As the newspaper Ar-Raya, published in Qatar writes, “this drug which was synthesised by an Egyptian doctor Abdul Basit Muhammad from the secretions of human sweat glands & has an effectiveness of 99 % with absolutely no side effects, was registered in Europe & the United States. It is also reported that one of the Swiss companies produces the new drug in the form of liquid & eye drops.

The source of inspiration is Surah Yusuf. Dr Abdul Basit Muhammad emphasised that he obtained his inspiration from Surah Yusuf & said:

“ Once in the morning, I was reading Surah Yusuf. My attention lingered over the 84th & successive ayats (verses). They tell that Prophet Yakub who was mourning his son Yusuf (peace be upon them) in sadness & grief got his eyes turned white & later when people cast over the sorrowful father’s face, the shirt of his son Yusuf, vision returned to him & he was able to see again. Here I started pondering. What could be there in the shirt of Yusuf Alayhis salaam?

 

Finally I arrived at the decision that nothing except sweat could be on it. I concentrated my thoughts over the sweat & its composition. Then I proceeded to the laboratory for research.

I carried out a series of experiments on rabbits. The results turned out to be positive. Later I performed treatment on 250 patients by administering the drug twice a day for 2 weeks.

Finally I achieved 99 % success & said to myself: “ This is the miracle of the Qur'ân” Dr Abdul Basit Muhammad presented the results of his research to institutions in Europe & United States dealing with patenting of new discoveries.

After tests & research were performed, he finalised a contract with a Swiss company on the production of the medicine on the condition that the package should clearly mention-“Medicine of Qur'ân.”

Allah the Almighty said; “And We send down, of the Qur'an, that which is a healing & a mercy to the believers.” (Surah al Isra: 82)

குர்ஆன் கூறும் கண்புரை (Cataract) நோய்விற்கு மருந்து; சுவிஸ் மருந்துக்கம்பெனி குர்ஆனில் கூறப்பட்டுள்ள இறைவசனங்களில் அடிப்படையில் கண்புரை நோய்விற்கு அறுவை சிக்கிசை இல்லாமல் ஒரு அற்புதமான மருந்தை உருவாக்குகிறார்கள். 

இது சம்மந்தமான செய்தி கத்தார் நாட்டின் அர்-ராயா என்ற செய்தித்தாளில் வந்த செய்தியாவது, எகிப்திய மருத்துவரான டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது அவர்கள் மனிதனின் வேர்வை (Secretions of human Sweat Gland) யில் இருந்து 99சதவிதம் பயனுள்ள, எந்த பக்கவிளைவும் இல்லாத ஒரு குறிப்பிட்ட பொருளை எடுத்தார், பின்னர் அதை ஐரோப்பா மற்றும் அமெக்கா போன்ற நாட்டில் பதிவு செய்தார். அந்த குறிப்பிட்ட பொருளில் இருந்து சுவிஸ் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் கண்களுக்கு தேவையான மருந்து தயாரிப்பில் ஈடுப்படுகிறார்கள்.

சூரா யூசுப் என்ற திருக்குர்ஆனின் அத்தியாயமே டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது அவர்கள் கண்புரை நோய்க்கு மருந்து உருவாக்க துண்டியது. அவர் கூறுகிறார், ஒரு நாள் காலை நேரத்தில் சூரா யூசுப் படித்துக் கொண்டு இருந்தேன், அச்சூராவின் 84 மற்றும் அடுத்து வரும் வசனங்கள் என் சிந்தனையை துண்டியது.

اذْهَبُوا بِقَمِيصِي هَٰذَا فَأَلْقُوهُ عَلَىٰ وَجْهِ أَبِي يَأْتِ بَصِيرًا وَأْتُونِي بِأَهْلِكُمْ أَجْمَعِينَ

நீங்கள் என்னுடைய இந்தச்சட்டையைக் கொண்டு போய் என் தந்தை முகத்தில் போடுங்கள். (அதனால் உடனே) அவர் (இழந்த) பார்வையை அடைந்து விடுவார். பின்னர் நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்என்று கூறி அனுப்பினார். ( அல்குர்ஆன்: 12: 93 )

நபி யஅகூப் (அலை) அவர்களுக்கு கவலையினாலும், வருத்தினாலும் கண்புரை நோய் வந்தது, பின்னர் நபி யூசுப் (அலை) அவர்களின் சட்டையினால் யஅகூப் (அலை) அவர்களுக்கு பார்வை மீண்டும் கிடைத்தது.

டாக்டர் இதற்கு என்ன காரணம் இருக்கும் என்ற ஆய்வில் இருந்த சமயத்தில் அவரின் சிந்தனைக்கு வந்த பொருள் தான் மனிதனின் வேர்வை. அவர் அதை சில சோதனை விலங்குகளில் ஆய்வு செய்தார். அது நேர் மறையான தாக்கங்கள் தந்ததின் அடிப்படையில் 250 கண்புரை நோயாளிகளுக்கு அம்மருந்தை தினத்தோறும் இருமுறை என இரண்டு வாரம் தந்தார்.அதில் அவருக்கு 99சதவிதம் வெற்றியை தந்தது. அதன் பின் அவர் ஐரோப்பா மற்றும் அமெரிக்க போன்ற நாட்டில் உள்ள சில ஆய்வு நிருவனங்களுடன்(Medical laboratory) மேலும் சில ஆய்வுகளை செய்து பின்னர் சுவிஸ் நாட்டை மையமாக கொண்ட மருந்து கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்தார். மேலும் அந்த மருந்தில் “Medicine of Quran” என்ற வாசகத்தை பதியவேண்டும் என்ற நிபந்தனையுடன் அதன் உரிமையை தந்துவிட்டார்.

அல்லாஹ் திருக்குர்ஆனில் மனித இனத்திற்கு அருமருந்தாக தந்துள்ளான். இதை தான் அல்லாஹ் கீழ்காணும் வசனத்தில் கூறுகிறான்;

وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا

நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளாகவும் அருமருந்தாகவும் உள்ளவைகளையே இந்தத் திருக்குர்ஆனில் நாம் இறக்கியிருக்கிறோம். எனினும், அநியாயக்காரர்களுக்கோ (இது) நஷ்டத்தையே தவிர (வேறு எதனையும்) அதிகரிப்பதில்லை. ( அல்குர்ஆன்: 17: 82 )

கண் மருத்துவத் துறையில் இஸ்லாமியர்களின் பங்கு..

மருத்துவமும் அறுவை சிகிச்சைகளிலும் அதிகமான கண்டுப்பிடிப்புகள் இந்த 20 மற்றும் 21வது நூற்றாண்டில் தான் பல வந்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் இஸ்லாமிய Golden Ages என்று சொல்லக்கூடிய காலக்கட்டதில் அதாவது கிபி 800 – 1400 காலக் கட்டத்திலேயே முஸ்லிம் மருத்துவர்களான ஹுனைன் பின் இஸ்ஷாக் , அலி பின் அல்-கஹ்ஹால் , அம்மார் பின் அலி அல்-மவ்சிலி, பின் அபி உசைபிஹ் போன்றவர்கள் கண் அறுவை சிசிச்சை பற்றி பல புத்தகங்கள் எழுதியது மட்டும் இல்லாமல் பல அறுவை சிசிச்சைகளும் செய்து கட்டினார்கள். ( நன்றி:- acmyc.com)

கண் எவ்வளவு பெரிய அருட்கொடை?...

روى الحاكم في المستدرك على الصحيحين ج4/ص278, قال رحمه الله:" أخبرني أحمد بن محمد بن سلمة العنزي ثنا عثمان بن سعيد الدارمي ثنا عبد الله بن صالح المقرئ ثنا سليمان بن هرم القرشي وحدثنا علي بن حمشاد العدل ثنا عبيد بن شريك ثنا يحيى بن بكير ثنا الليث بن سعد عن سليمان بن هرم عن محمد بن المنكدر عن جابر بن عبد الله رضي الله عنهما قال خرج علينا النبي صلى الله عليه وسلم فقال:" خرج من عندي خليلي جبريل آنفا فقال يا محمد والذي بعثك بالحق إن لله عبدا من عبيده عبد الله تعالى خمس مائة سنة على رأس جبل في البحر عرضه وطوله ثلاثون ذراعا في ثلاثين ذراعا والبحر محيط به أربعة آلاف فرسخ من كل ناحية وأخرج الله تعالى له عينا عذبة بعرض الأصبع تبض بماء عذب فتستنقع في أسفل الجبل وشجرة رمان تخرج له كل ليلة رمانة فتغذيه يومه فإذا أمسى نزل فأصاب من الوضوء وأخذ تلك الرمانة فأكلها ثم قام لصلاته فسأل ربه عز وجل عند وقت الأجل أن يقبضه ساجدا وأن لا يجعل للأرض ولا لشيء يفسده عليه سبيلا حتى بعثه وهو ساجد قال ففعل فنحن نمر عليه إذا هبطنا وإذا عرجنا فنجد له في العلم أنه يبعث يوم القيامة فيوقف بين يدي الله عز وجل فيقول له الرب أدخلوا عبدي الجنة برحمتي فيقول رب بل بعملي فيقول الرب أدخلوا عبدي الجنة برحمتي فيقول يا رب بل بعملي فيقول الرب أدخلوا عبدي الجنة برحمتي فيقول رب بل بعملي فيقول الله عز وجل للملائكة قايسوا عبدي بنعمتي عليه وبعمله فتوجد نعمة البصر قد أحاطت بعبادة خمس مائة سنة وبقيت نعمة الجسد فضلا عليه

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு நாள் நாங்கள் குழுமியிருந்த சபைக்கு வருகை தந்த அண்ணல் நபி {ஸல்} எங்களை நோக்கி தோழர்களே! கொஞ்ச நேரத்திற்கு முன்பாகத்தான் என் நண்பர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வருகை தந்து வியத்தகு வரலாறு ஒன்றைக் கூறி என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்திப்போனார் என்று கூறி விட்டு எங்களிடம் என்னிடம் வருகை தந்த ஜிப்ரயீல் (அலை) அவர்கள் முஹம்மத் {ஸல்} அவர்களே! சத்தியத்தைக் கொண்டு உங்களை நபியாக அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் அடியார்களில் ஒரு நல்லடியார் இருந்தார்.

அந்த அடியார் நாற்புறமும் கடலால் சூழப்பட்ட மலைப்பிரதேசத்தில் மலையின் உச்சியில் 500 ஆண்டு காலம் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதிலேயே கழித்து வந்தார்.

கடல் சூழ்ந்த  உப்பு நீர் நிறைந்த அந்தப் பகுதியிலும் கூட அல்லாஹ் அவருக்கு மதுரமான ஓர் நீரூற்றை ஓடச் செய்தான். அருகில் ஓர் மாதுளை மரத்தையும் உருவாக்கிக் கொடுத்தான்.

தினமும் மாலை நேரத்தில் மலையின் உச்சியிலிருந்து கீழிறங்கு வரும் அவர் அந்த மாதுளை மரத்திலிருந்து ஒரு கனியை உண்டு விட்டு, அந்த நீரூற்றிலிருந்து சிறிது நீர் அருந்தி விட்டு உளூ செய்து விட்டு மீண்டும் மலை உச்சிக்கு சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு விடுவார்.

ஒரு நாள் அந்த நல்லடியார் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது  யாஅல்லாஹ்! என் உயிர் பிரியும் தருவாயில் என் ரூஹ் உனக்கு நான் ஸஜ்தா செய்யும் நிலையிலேயே பிரிய வேண்டும் என ஆசிக்கின்றேன்! மேலும், என் உடலை மறுமை நாள் பரியந்தம் வரையில் அந்த நிலையிலேயே நீ பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்! மேலும், அதே நிலையிலேயே நான் எழுப்பப்பட வேண்டும்! என்னுடைய இந்த ஆசையை நீ நிறைவேற்றித் தர வேண்டும் என்று கோரினார்.

 

அல்லாஹ்வும் அவரின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அப்படியே செய்தான்.

வானவர்களாகிய நாங்கள் விண்ணுலகத்திலிருந்து பூமிக்கு வரும் போதும், பூமியிலிருந்து விண்ணுலகிற்கு செல்லும் போதும் அவரை அதே நிலையிலேயேக் கண்டோம்.

தொடர்ந்து ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கூறினார்கள்:  நாளை மறுமையில் மஹ்ஷர் பெருவெளியில் மக்களோடு மக்களாக அந்த நல்லடியார் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் நின்றிருப்பார்.

அப்போது, அல்லாஹ் வானவர்களிடம், அவரை நோக்கி இதோ என்னுடைய இந்த அடியானை என் அருளின் துணை கொண்டு சுவனத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்பான்.

அதற்கு, அவர் அல்லாஹ்விடம் அல்லாஹ்வே! நான் செய்த என்னுடைய அமலின் துணை கொண்டு என்னை சுவனத்திற்கு அழைத்துச் செல்லுமாறு வானவர்களுக்கு நீ ஆணையிடுவாய் என்றல்லவா நான் எதிர் பார்த்தேன். ஆனால், நீயோ உன் அருளின் துணை கொண்டு சுவனத்திற்கு அழைத்துச் செல்லுமாறு ஆணையிடுகின்றாய்! அப்படியானால், என்னுடைய 500 ஆண்டு கால இபாதத் என்னவாயிற்று?” என்று வினவுவார்.

அப்போது, அல்லாஹ் தன் வானவர்களுக்கு இந்த அடியானுக்கு நான் வழங்கிய அருட்கொடைகளையும், இந்த அடியான் செய்த இபாதத்களையும் கணக்குப் பாருங்கள் என்று கட்டளையிடுவான்.

அப்போது வானவர்கள் இவரின் 500 ஆண்டு கால இபாதத் அனைத்தும் நீ அவருக்கு வழங்கிய அருட்கொடைகளில் ஒன்றான கண்பார்வைக்கு ஈடாகி விட்டது.

நீ வழங்கிய மற்றெந்த அருட்கொடைகளுக்கும் ஈடாக வேறெந்த அமலும் அவரின் பதிவேட்டில் இல்லை என்று அல்லாஹ்விடம் கூறுவார்கள்.

கூறுவார்கள்.

فيقول أدخلوا عبدي النار قال فيجر إلى النار فينادي رب برحمتك أدخلني الجنة فيقول ردوه فيوقف بين يديه فيقول يا عبدي من خلقك ولم تك شيئا فيقول أنت يا رب فيقول كان ذلك من قبلك أو برحمتي فيقول بل برحمتك فيقول من قواك لعبادة خمس مائة عام فيقول أنت يا رب فيقول من أنزلك في جبل وسط اللجة وأخرج لك الماء العذب من الماء المالح وأخرج لك كل ليلة رمانة وإنما تخرج مرة في السنة وسألتني أن أقبضك ساجدا ففعلت ذلك بك فيقول أنت يا رب فقال الله عز وجل فذلك برحمتي وبرحمتي أدخلك الجنة أدخلوا عبدي الجنة فنعم العبد كنت يا عبدي فيدخله الله الجنة قال جبريل عليه السلام إنما الأشياء برحمة الله تعالى يا محمد". هذا حديث صحيح الإسناد

  அது கேட்ட அல்லாஹ் வானவர்களிடம் இதோ இந்த அடியானை நரகத்திற்கு இழுத்துச் செல்லுங்கள் என்பான்.

 

அவர் நரகத்திற்கு இழுத்து செல்லப்படுவார். வழி நெடுக அவர் இறைவா! உன் அருளின் துணை கொண்டே என்னை சுவனத்தில் நுழையச்செய்! என அலறுவார்.

அந்த அலறலைக் கேட்டதும் அல்லாஹ் வானவர்களிடம் அந்த அடியானை என் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள்! என்பான். அவர் அல்லாஹ்வின் திருமுன் நிறுத்தப்படுவார்.

அப்போது, அல்லாஹ்வுக்கும் அந்த அடியானுக்கும் இடையே நடக்கின்ற அந்த உரையாடல் இதோ….

அல்லாஹ்: என் அடியானே! ஒன்றுமே இல்லாமல் இருந்த உன்னை படைத்தது யார்?

அடியான்: நீ தான் என் இறைவா!

அல்லாஹ்: என் அடியார்களிலேயே 500 ஆண்டு கால ஆயுளையும், வணக்க வழிபாடுகள் செய்கிற ஆற்றலையும் கொடுத்து உன்னை வாழ வைத்தது யார்?

அடியான்: நீ தான் என் இறைவா!

அல்லாஹ்: கடலும் உப்பு நீரும் சூழ்ந்த இடத்தில் மதுரமான நீரூற்றையும் , புற்பூண்டுகளே முளைத்திடாத பாறையிலிருந்து மாதுளை மரத்தையும் உனக்குக் கொடையாக வழங்கியது யார்?

அடியான்: நீதான் என் இறைவா!

அல்லாஹ்: உன் ரூஹ் ஸஜ்தா  சிரம் பணிந்த நிலையில் பிரிய வேண்டும் என்று நீ ஆசித்த போது உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுத்தது யார்?

அடியான்: நீதான் என் இறைவா!

இந்த உரையாடலை முடித்து வைக்கும் முகமாக, இறுதியாக அல்லாஹ் அந்த அடியானிடம் என் அடியானே! இவை அனைத்தும் என் அருளின் மூலமாகத்தான் நீ பெற்றாய்! இப்போதும், நீ என் அருளின் துணை கொண்டு தான் சுவனத்திற்கும் செல்ல இருக்கின்றாய்! அடியானே! என் அடியார்களில் நீ நல்லவனே என்று கூறி விட்டு வானவர்களை நோக்கி இதோ இந்த என் அடியானை என் அருளின் துணை கொண்டு சுவனத்தில் கொண்டு போய் விட்டு விடுங்கள்! என்பான்.

இதைக் கூறி விட்டு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என்னிடம் முஹம்மத்  {ஸல்}  அவர்களே! ஓர் அடியானைச் சுற்றி ஈருலகிலும் நடைபெறும் அத்துனை காரியங்களும் அல்லாஹ்வின் அருளின் துணை கொண்டே தான் அமையப் பெறுகின்றது  என்று கூறி விடை பெற்றுச் சென்றார் என்று நபி {ஸல்} அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.                 (  நூல்: முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன் )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் அவனுடைய அருட்கொடைகளை நினைவு கூர்வதற்கும், அதற்காக நாவாலும், உள்ளத்தாலும், உடலாலும், பொருளாலும் நன்றி செலுத்தும் நற்பேற்றைத் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்! வஸ்ஸலாம்!!!

Friday, 31 March 2023

முக அழகும் அக அழகும் கொண்ட அழகிய இறைத்தூதர் யூஸுஃப் (அலை) அவர்கள்!!!

 

முக அழகும் அக அழகும் கொண்ட                                    அழகிய இறைத்தூதர் யூஸுஃப் (அலை) அவர்கள்!!!

ரமழான் - (1444 - 2023) தராவீஹ் சிந்தனை:- 10.


பத்தாவது நாள் தராவீஹ் தொழுகையை நிறைவேற்றி, ஒன்பதாவது  நோன்பை நோற்று அல்லாஹ்வின் அருள் நிறைந்த மஸ்ஜிதில் இதயத்திற்கு உற்சாகமாகவும்,  ஈமானுக்கு உரமாகவும் அமைந்திருக்கின்ற குர்ஆனின் போதனைகளை செவிமடுக்கும் ஆர்வத்தில் அமர்ந்திருக்கின்றோம். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்முடைய நோன்பையும், தராவீஹ் தொழுகையையும், நம்முடைய இதர நல்லறங்களையும் கபூல் செய்து நிறைவான நன்மைகளை வழங்கியள்வானாக!

இன்றைய தராவீஹ் தொழுகையில் சூரா யூசுஃப்  ஓதப்பட்டது. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த சூராவில் நபி யூசஸுஃப் (அலை) அவர்களின் முழு வரலாற்றையும் ஆரம்பம் முதல் இறுதி வரை அழகு பட விவரிக்கிறான்.

மற்றெந்த சூராவுக்கும் இல்லாத இரண்டு சிறப்பு இந்த சூராவுக்கு உண்டு.

ஒன்று:- ஒரே சூராவில் ஒரு நபியின் வரலாறு முழுமையையும் சொல்லி இருப்பது.
இரண்டு:- இந்த சூராவின் ஆரம்ப வசனங்களில் யூஸுஃப் (அலை) அவர்களின் வரலாற்றை "அழகிய வரலாறு" என்று குறிப்பிட்டு விட்டு இந்த சூராவின் இறுதி வசனத்தில் இந்த வரலாற்றில் படிப்பினையும் முஃமின்களுக்கு நேர்வழியும், ரஹ்மத்தும் இருக்கிறது என்று கூறி முடிப்பது.

نَحْنُ نَقُصُّ عَلَيْكَ اَحْسَنَ الْقَصَصِ بِمَاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ هٰذَا الْقُرْاٰنَ وَاِنْ كُنْتَ مِنْ قَبْلِهٖ لَمِنَ الْغٰفِلِيْنَ‏

(நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் - இதற்குமுன் (இது குறித்து) ஏதும் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர்.

لَـقَدْ كَانَ فِىْ قَصَصِهِمْ عِبْرَةٌ لِّاُولِى الْاَلْبَابِ‌ؕ مَا كَانَ حَدِيْثًا يُّفْتَـرٰى وَلٰـكِنْ تَصْدِيْقَ الَّذِىْ بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيْلَ كُلِّ شَىْءٍ وَّهُدًى وَّرَحْمَةً لِّـقَوْمٍ يُّؤْمِنُوْنَ

(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது; இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.

யூஸுஃப் (அலை) அவர்களின் அழகிய இந்த வரலாறு ஆயிரமாயிரம் படிப்பினைகளை சுமந்தது.

யூஸுஃப் சூராவில் அமைந்திருக்கிற படிப்பினைகளை குறித்து 70 க்கும் மேற்பட்ட தனி ரிஸாலாக்களையே நமது முன்னோர்களான இமாம்கள் எழுதி குவித்துள்ளனர்.

அப்படியான அவர்களின் வரலாறு தரும் படிப்பினைகளில் ஒன்று யூஸுஃப் (அலை) அவர்கள் வாழும் காலமெல்லாம் ரகசியங்களை பேணும் இமயமாக திகழ்ந்தார்கள் என்பது தான்.

வாழ்க்கையில் மிக உச்சத்தில் இருந்த தருணம் அது. எகிப்து நாட்டின் உயரிய பொறுப்பில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் போது வஞ்சகம் செய்த அவர்களின் சகோதரர்கள் யூஸுஃப் (அலை) அவர்கள் தங்களது சகோதரர் தான் என அறிந்து கொண்டு " நிச்சயமாக நீர் தாம் யூஸுஃபோ? நீ வாழக்கூடாது என்று தானே நாங்கள் உன்னை கிணற்றில் தூக்கி போட்டோம். ஆனால், இன்றோ நீ எங்களின் துயர் துடைக்கும் இடத்தில் வந்து நிற்கின்றாயே? எப்படி இந்த இடத்திற்கு நீ வந்தாய்?” என்ற இத்தனை கேள்விகளை உள்ளடக்கிய ஒற்றைக் கேள்வியை கேட்ட போது..அவர்கள் வாழ்க்கையில் தாம் சந்தித்த எதையும் சொல்லவில்லை. மாறாக, இரண்டே இரண்டு வார்த்தை தான் சொன்னார்கள். 1.இறையச்சம், 2. பொறுமை இவைகள் தான் என்னுடைய இந்த உச்சத்திற்கு காரணம் என்று.

فَلَمَّا دَخَلُوْا عَلَيْهِ قَالُوْا يٰۤاَيُّهَا الْعَزِيْزُ مَسَّنَا وَاَهْلَنَا الضُّرُّ وَجِئْنَا بِبِضَاعَةٍ مُّزْجٰٮةٍ فَاَوْفِ لَنَا الْكَيْلَ وَتَصَدَّقْ عَلَيْنَاؕ اِنَّ اللّٰهَ يَجْزِى الْمُتَصَدِّقِيْنَ‏

அவ்வாறே அவர்கள் (மிஸ்ரையடைந்து) யூஸுஃப் முன்னிலையில் வந்து அவரிடம்; “அஜீஸே! எங்களையும் எங்கள் குடும்பத்திலுள்ளவர்களையும் பெருந்துயர் பற்றிக்கொண்டது; நாங்கள் சொற்பமான பொருளையே கொண்டுவந்திருக்கின்றோம்; எங்களுக்கு நிரப்பமாகத் (தானியம்) அளந்து கொடுங்கள்; எங்களுக்கு (மேற்கொண்டு) தானமாகவும் கொடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நற்கூலி வழங்குகிறான்என்று கூறினார்கள்.

قَالَ هَلْ عَلِمْتُمْ مَّا فَعَلْتُمْ بِيُوْسُفَ وَاَخِيْهِ اِذْ اَنْتُمْ جٰهِلُوْنَ

அதற்கு அவர்?) “நீங்கள் அறிவீனர்களாக இருந்த போது, யூஸுஃபுக்கும் அவர் சகோதரருக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று வினவினார்.

 قَالُوْۤا ءَاِنَّكَ لَاَنْتَ يُوْسُفُ‌ؕ قَالَ اَنَا يُوْسُفُ وَهٰذَاۤ اَخِىْ‌ قَدْ مَنَّ اللّٰهُ عَلَيْنَاؕ اِنَّهٗ مَنْ يَّتَّقِ وَيَصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ‏

அப்போது அவர்கள்) நிச்சயமாக நீர் தாம் யூஸுஃபோ? என்று கேட்டார்கள்; (ஆம்!) நான் தாம் யூஸுஃபு (இதோ!) இவர் என்னுடைய சகோதரராவர்; நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்திருக்கின்றான்; எவர் (அவனிடம் பயபக்தியுடன் இருக்கிறார்களோ, இன்னும் பொறுமையையும் மேற்கொண்டிருக்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்வோர் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிடமாட்டான்என்று கூறினார்.

யூஸுஃப் (அலை) அவர்கள் சொல்லியிருக்க முடியும், நீங்கள் ஏன் என்னை கொல்ல முயற்சித்தீர்கள்? நம் தந்தை என் மீது மட்டும் பாசமாக இருக்கின்றார் என்று. ஏன் நம் தந்தை என் மீது பாசமாக இருந்தார் தெரியுமா? அது ஒரு கனவு. அந்தக் கனவே என் மீது பாசம் கொள்ள தூண்டியது. என்று சொல்லியிருக்க முடியும். ஆனால், தந்தை தான் உம் சகோதரர்களிடம் சொல்லக் கூடாது என்று சொல்லி விட்டாரே!

சொல்லக்கூடாது என்று சொல்லப்பட்ட ஒரு ரகசியத்தை எப்படி அவ்வளவு எளிதாக சொல்லி விட முடியும்?.

சரி நீங்கள் கிணற்றில் போட்டு விட்டு வந்து விட்டீர்கள். அதற்கு பின் என்ன நடந்தது தெரியுமா? என்னை ஒரு கூட்டம் கிணற்றிலிருந்து மீட்டெடுத்து, சந்தையில் விற்கப்பட்டு, அரசர் விலை பேசி வாங்கி அரண்மனைப் பணியாளனாகச் சேர்ந்து அங்கே அரசியின் ஆசைக்கு உடன்பட மறுத்து அப்பப்பா எவ்வளவு பெரிய போராட்டத்தை தான் கடந்து விட்டேன். இதையாவது சொல்லி விட முடியுமா? என்றால், அரசர் தான் அரசி உம்மோடு நடந்து கொண்ட எதையும் “நம் மூவருக்கு மட்டும் தெரிந்ததாக இருக்கட்டும்! இது குறித்து எங்கும், எப்போதும், யாரிடமும் தெரிவித்து விடாதே! என்று சொல்லி விட்டாரே?. அவர் ரகசியமாக இருக்கட்டும் என்று சொன்ன பிறகு எப்படித் தான் அதைக் கூற முடியும்? அப்போது மட்டுமல்ல, அவர்களின் சகோதரர்கள் மட்டுமல்ல, சிறையில் இருந்த போது அறிமுகமான சக கைதிகளிடமும் கூட தாம் கடந்து வந்த பாதை குறித்து ஒரு போதும் வாய் திறந்ததில்லை. தம் ஆரம்ப கால வாழ்க்கை தம் தந்தையால் பாதுகாக்கப்பட வேண்டிய ரகசியம் என்றும், இடைப்பட்ட இளமைக்கால வாழ்க்கை அரசரால் பாதுகாக்கப்பட வேண்டிய ரகசியம் என்றும் உறுதிமொழி வாங்கி விட்டார்களே ஆதலால் தாம் வாழும் வரை இந்த இரு ரகசியங்களையும் தன்னுள்ளே புதைத்துக் கொண்டு தொட முடியாத இமயமாய் உயர்ந்து நிற்கின்றார்கள். ஆதலால் தான் இது வெறும் வரலாறல்ல. அழகிய வரலாறு என்று அல்லாஹ்வால் அறிமுகப்படுத்தப் படுகின்றது.

தந்தை பாதுகாக்கச் சொன்ன ரகசியம்..

 اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ لِىْ سٰجِدِيْنَ‏ قَالَ يٰبُنَىَّ لَا تَقْصُصْ رُءْيَاكَ عَلٰٓى اِخْوَتِكَ فَيَكِيْدُوْا لَـكَ كَيْدًا ؕ اِنَّ الشَّيْطٰنَ لِلْاِنْسَانِ عَدُوٌّ مُّبِيْنٌ‏

சூரியனும், (பதினொரு) நட்சத்திரங்களும் தனக்கு 'சுஜூது' செய்வதாக (சிரம்பணிவதாக) தான் கண்ட கனவு ஒன்றை  (சிறுவராக இருந்த) யூசுப்f அவர்கள் தனது தந்தையான இறைத்தூதர் யஃகூப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் தெரிவித்தபோது தந்தை மகனுக்குக் கூறிய வார்த்தையாக பின்வருமாறு  அல்லாஹ் கூறுவதை நன்கு சிந்தித்துப் பாருங்கள். *அதற்கவர், 'என் அருமை மகனே! உனது கனவை உன் சகோதரர்களிடம் கூறாதே. (அப்படி நீ கூறினால்) அவர்கள் உனக்குக் கடுமையாக சூழ்ச்சி செய்வார்கள். நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க விரோதியாவான்' எனக் கூறினார்”*. (அல்குர்ஆன், 12:05 )

அரசர் பாதுகாக்கச் சொன்ன ரகசியம்…

يُوْسُفُ اَعْرِضْ عَنْ هٰذَا  وَاسْتَغْفِرِىْ لِذَنْۢبِكِ اِنَّكِ كُنْتِ مِنَ الْخٰطِٮـِٕيْنَ

யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்என்றும் கூறினார்.

 

ரகசியம் படும் பாடு!!

இன்று நம்மிடையே ரகசியங்கள் என்ன பாடுபடுகின்றது என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

நாம் ஒருவரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி இதை யாரிடமும் சொல்லாதே என்று சொல்லி விட்டு எங்காவது சென்று வருவதற்குள் நம்மிடமே வந்து ஒருவர் எப்பா உனக்கு விஷயம் தெரியுமா? இப்படி இப்படியாம்பா? என்பார்.

இரு நண்பர்களுக்கு இடையேயான ரகசியம், இரு குடும்ப உறவுகளுக்கு இடையேயான ரகசியம், கணவன் மனைவிக்கு இடையேயான ரகசியம், ஒரு அறையில் நடந்த ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் இன்று கடைவீதியில், ஹவ்ள்க்கடியில், குழாயடியில், முகநூலில், இன்ஸ்டாவில், வாட்ஸ்அப்பில் சர்வதேச அளவில் உலா வருகின்றது.

ரகசியத்தை பாதுகாப்பதும் அமானிதமே..

فعن جابر بن عبد الله رضي الله عنهما عن النبي -صلى الله عليه وسلم-\' قال: «إذا حَدَّثَ الرَّجُلُ الحَديثَ ثم الْتَفَتَ فَهِي أَمَانَةٌ. رواه الترمذي وحسنه

وعنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ , قَالَ : سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِىَّ , يَقُولُ : قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم:إِنَّ مِنْ أَعْظَمِ الأَمَانَةِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ الرَّجُلَ يُفْضِى إِلَى امْرَأَتِهِ وَتُفْضِى إِلَيْهِ ثُمَّ يَنْشُرُ سِرَّهَا. رواه مسلم

ஒருவர் மற்றவரிடம் ஒரு செய்தியைக் கூறிவிட்டு, அங்கும் இங்கும் திரும்பிப் பார்த்துக் கொண்டால், அந்தச் செய்தி நம்பி ஒப்படைக்கப்பட்டதாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: அபூதாவூத்)

ஒருவர் ஒரு செய்தியைக் கூறிவிட்டு, இதை ரகசியமாக வைக்க வேண்டும் என்று சொல்ல வில்லை. மாறாக, அதை சொன்ன அந்த நேரத்தில் அவரது செய்கை அதை பகிரங்கப்படுத்தக்கூடாது என்ற விதத்தில் அமைந்திருந்தால், அதுவும் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானித செய்தியாகும். நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருளைப்  பாதுகாப்பது போன்று அந்த செய்தியைப் பாதுகாப்பதும் அவசியமாகும்.

நம்பகத்தன்மை குறைந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்பதற்கு பின்வரும் நபிமொழி சான்றாகும்.

حَدَّثَنَا ‏ ‏يُونُسُ ‏ ‏وَسُرَيْجٌ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏فُلَيْحٌ ‏ ‏عَنْ ‏ ‏هِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏بَيْنَمَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏جَالِسٌ يُحَدِّثُ الْقَوْمَ فِي مَجْلِسِهِ حَدِيثًا جَاءَ أَعْرَابِيٌّ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَتَى السَّاعَةُ قَالَ فَمَضَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُحَدِّثُ فَقَالَ بَعْضُ الْقَوْمِ سَمِعَ فَكَرِهَ مَا قَالَ وَقَالَ بَعْضُهُمْ بَلْ لَمْ يَسْمَعْ حَتَّى إِذَا قَضَى حَدِيثَهُ قَالَ أَيْنَ السَّائِلُ عَنْ السَّاعَةِ قَالَ هَا أَنَا ذَا يَا رَسُولَ اللَّهِ قَالَ إِذَا ضُيِّعَتْ الْأَمَانَةُ فَانْتَظِرْ السَّاعَةَ قَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ ‏ ‏أَوْ قَالَ مَا ‏ ‏إِضَاعَتُهَا قَالَ ‏ ‏إِذَا ‏ ‏تَوَسَّدَ ‏ ‏الْأَمْرَ غَيْرُ أَهْلِهِ فَانْتَظِرْ السَّاعَةَ ‏

நபி (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியிடம் நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் உலக அழிவு நாளை நீ எதிர்பார்க்கலாம்என்றார்கள். அவர் இறைத்தூதரே, அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்?’ என்று கேட்டதற்கு, ‘ஆட்சியதிகாரம், நீதி நிர்வாகம் போன்ற எந்தப் பொறுப்பும் அதற்குத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது மறுமை நாளை எதிர்பார்த்துக் கொள்என நபி (ஸல்) பதிலளித்தார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

மேலும், நம்பகத்தன்மையை பாழ்படுத்தினால் நரகமும், அதை பாதுகாத்தால் சொர்க்கமும் உண்டு  என்பதை பின்வரும் நபி மொழி விளக்குகின்றது.

حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْهَاشِمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏إِسْمَاعِيلُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَمْرٌو ‏ ‏عَنِ ‏ ‏الْمُطَّلِبِ ‏ ‏عَنْ ‏ ‏عُبَادَةَ بْنِ الصَّامِتِ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏اضْمَنُوا لِي سِتًّا مِنْ أَنْفُسِكُمْ أَضْمَنْ لَكُمْ الْجَنَّةَ اصْدُقُوا إِذَا حَدَّثْتُمْ وَأَوْفُوا إِذَا وَعَدْتُمْ وَأَدُّوا إِذَا اؤْتُمِنْتُمْ وَاحْفَظُوا فُرُوجَكُمْ وَغُضُّوا أَبْصَارَكُمْ وَكُفُّوا أَيْدِيَكُمْ ‏

என்னிடம் உங்களில் ஆறு விஷயங்களில் பொறுப்பேற்பவருக்கு நான் உங்களுக்கு சொர்க்கத்தை பிணையாக பெற்றுத் தருகிறேன். நீங்கள் பேசினால் உண்மை பேசுங்கள், நீங்கள் வாக்களித்தால் நிறைவேற்றுங்கள், உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை நிறைவேற்றுங்கள், உங்களது மறைவிடங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள், உங்களது பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுங்கள், உங்களது கரங்களை தீங்கிலிருந்து தடுத்துக் கொள்ளுங்கள்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: உப்பாதா பின் ஸாமித் (ரலி), நூல்: அஹ்மது)

அல்லாஹ்வின் பார்வையில் மகாக்கெட்டவன்…

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ عَنْ عُمَرَ بْنِ حَمْزَةَ الْعُمَرِىِّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَعْدٍ قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِىَّ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم

إِنَّ مِنْ أَشَرِّ النَّاسِ عِنْدَ اللَّهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ الرَّجُلَ يُفْضِى إِلَى امْرَأَتِهِ وَتُفْضِى إِلَيْهِ ثُمَّ يَنْشُرُ سِرَّهَا

மறுமையில் அல்லாஹ்விடம் மிக மிகக் கெட்ட  மனிதன் யாரெனில், தானும் தனது மனைவியும் இல்லறத்தில் ஈடுபட்ட  பின்னர் அவளது அந்தரங்கத்தை பிறரிடம் பரப்புபவன் தான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். ( நூல் : முஸ்லிம் )

ரகசியத்தை வெளிப்படுத்துவது முனாஃபிக்கின் செயலாகும்...

عبدالله بن عمر رضي الله عنهما، أن النّبي صلّى الله عليه وسلم قال: (أربع من كنّ فيه كان منافقا خالصا؛ ومن كانت فيه خصلة منهنّ كانت فيه خصلة من النفاق حتى يدعها: إذا اؤتمن خان، وإذا حدّث كذب، وإذا عاهد غدر، وإذا خاصم فجر ) « رواه البخاري... »

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்: நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய  நயவஞ்சகன்  ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். 1-  நம்பினால் துரோகம் செய்வான்.  2-  பேசினால் பொய்யே பேசுவான். 3-  ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான். 4- விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்”. ( நூல்: புகாரி - 34).

ரகசியம் வெளியானதால்…

حَدَّثَنِي الحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ صَبَّاحٍ، حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: زَعَمَ عَطَاءٌ، أَنَّهُ سَمِعَ عُبَيْدَ بْنَ عُمَيْرٍ، يَقُولُ: سَمِعْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمْكُثُ عِنْدَ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ، وَيَشْرَبُ عِنْدَهَا عَسَلًا، فَتَوَاصَيْتُ أَنَا وَحَفْصَةُ: أَنَّ أَيَّتَنَا دَخَلَ عَلَيْهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلْتَقُلْ: إِنِّي أَجِدُ مِنْكَ رِيحَ مَغَافِيرَ، أَكَلْتَ مَغَافِيرَ، فَدَخَلَ عَلَى إِحْدَاهُمَا، فَقَالَتْ لَهُ ذَلِكَ، فَقَالَ: «لاَ، بَلْ شَرِبْتُ عَسَلًا عِنْدَ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ، وَلَنْ أَعُودَ لَهُ» فَنَزَلَتْ: {يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ} [التحريم: 1]- إِلَى – {إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ} [التحريم: 4] لِعَائِشَةَ وَحَفْصَةَ: {وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ} [التحريم: 3] لِقَوْلِهِ: «بَلْ شَرِبْتُ عَسَلًا»

நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம் (அவர்களின் அறையில் அதிக நேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். எனவே, (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள் நபி(ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா? என்று கூறிட வேண்டும்என்று கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம்.

எங்களில் ஒருவரிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசிவைத்திருந்தபடி கூறினோம். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(அப்படியெல்லாம்) ஒரு குறையும் நடந்திடவில்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரின் அறையில்) தேன் அருந்தினேன். (அவ்வளவுதான் சத்தியமாக) இனிமேல் ஒருபோதும் இவ்வாறு செய்யமாட்டேன்என்று கூறினார்கள். எனவே, ‘நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கிறீர்கள்?’ என்று தொடங்கி நீங்கள் இருவரும் இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே நன்று)என முடியும் (திருக்குர்ஆன் 66:1-4) வசனங்களை அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி-5267 

(இந்த 66:4 வது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) நீங்கள் இருவரும்என்பது ஆயிஷா(ரலி) அவர்களையும், ஹஃப்ஸா(ரலி) அவர்களையுமே குறிக்கிறது. (திருக்குர்ஆன் 66:3 வது வசனத்தில்) நபி தம் துணைவியரில் ஒருவரிடம் (ஹஃப்ஸா ரலி )  நான் தேன் தான் அருந்தினேன். (சத்தியமாக இனி நான் அதனை அருந்தமாட்டேன். இது குறித்து யாரிடமும் சொல்லி விடாதே)என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்‌. ஆனால்,  அதை வெளிப்படுத்திய போது அல்லாஹ் அதையும் கண்டித்து வசனத்தை இறக்கினான். 

ரகசியத்தைப் பாதுகாத்த மேன்மக்கள்…

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ ، أَخْبَرَنَا شُعَيْبٌ ، عَنِ الزُّهْرِيِّ ، قَالَ : أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللهِ أَنَّهُ سَمِعَ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا يُحَدِّثُ

 

أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ حِينَ تَأَيَّمَتْ حَفْصَةُ بِنْتُ عُمَرَ مِنْ خُنَيْسِ بْنِ حُذَافَةَ السَّهْمِيِّ ، وَكَانَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَدْ شَهِدَ بَدْرًا تُوُفِّيَ بِالْمَدِينَةِ قَالَ عُمَرُ فَلَقِيتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ فَعَرَضْتُ عَلَيْهِ حَفْصَةَ فَقُلْتُ إِنْ شِئْتَ أَنْكَحْتُكَ حَفْصَةَ بِنْتَ عُمَرَ قَالَ سَأَنْظُرُ فِي أَمْرِي فَلَبِثْتُ لَيَالِيَ فَقَالَ : قَدْ بَدَا لِي أَنْ لاَ أَتَزَوَّجَ يَوْمِي هَذَا قَالَ عُمَرُ فَلَقِيتُ أَبَا بَكْرٍ فَقُلْتُ إِنْ شِئْتَ أَنْكَحْتُكَ حَفْصَةَ بِنْتَ عُمَرَ فَصَمَتَ أَبُو بَكْرٍ فَلَمْ يَرْجِعْ إِلَيَّ شَيْئًا فَكُنْتُ عَلَيْهِ أَوْجَدَ مِنِّي عَلَى عُثْمَانَ فَلَبِثْتُ لَيَالِيَ ثُمَّ خَطَبَهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَأَنْكَحْتُهَا إِيَّاهُ فَلَقِيَنِي أَبُو بَكْرٍ فَقَالَ لَعَلَّكَ وَجَدْتَ عَلَيَّ حِينَ عَرَضْتَ عَلَيَّ حَفْصَةَ فَلَمْ أَرْجِعْ إِلَيْكَ

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உமர் (ரலி) அவர்கள், தனது மகள் ஹஃப்ஸா (ரலி) விதவையானபோது கூறுகிறார்கள்: நான் உஸ்மான் (ரழி) அவர்களைச் சந்தித்து அவரிடம், ”நீங்கள் விரும்பினால் ஹஃப்ஸாவை மணம் முடித்து வைக்கிறேன்என்று கூறினேன். உஸ்மான் (ரலி) என் விஷயத்தில் நான் யோசனை செய்து கொள்கிறேன்என்றார். சில நாட்கள்வரை நான் எதிர்பார்த்திருந்த பின், உஸ்மான் (ரலி) என்னைச் சந்தித்து, ”இப்போது எனக்கு திருமணம் செய்து கொள்ளும் நோக்கமில்லைஎன்று கூறிவிட்டார். பின்பு அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களை சந்தித்து, ”நீங்கள் விரும்பினால் ஹஃப்ஸாவை உங்களுக்கு திருமணம் செய்து தருகிறேன்என்று கூறினேன். அபூபக்கர் (ரலி) எதுவும் பதில் கூறாமல் மெªனமாக இருந்தார். அப்போது நான் உஸ்மான் (ரலி) மீது கோபம் கொண்டதைவிட அதிகமாகக் கோபமடைந்தேன்.

சில நாட்களுக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை பெண் கேட்டார்கள்; மணமுடித்துக் கொடுத்தேன். அப்போது அபூபக்கர் (ரலி) என்னைச் சந்தித்து, ”நீங்கள் என்னிடம் ஹஃப்ஸாவை மணந்து கொள்ளுமாறு கேட்டதற்கு நான் எந்தப் பதிலையும் சொல்லவில்லை என்பதற்காக என் மீது கோபமடைந்தீர்கள் அல்லவா?” என்று கேட்டார்கள். நான் ஆம்என்றேன். நீங்கள் என்னிடம் கூறியபோது என்னை பதில்கூறத் தடுத்த காரணம் நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பற்றி (விசாரித்ததை) நினைவு கூர்ந்ததை நான் அறிந்தி ருந்தேன். நான் நபி (ஸல்) அவர்களின் ரகசியத்தை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்யாமல் விட்டிருந்தால் நான் ஹஃப்ஸாவை ஏற்றுக் கொண்டிருப்பேன்என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

 عن أنس : أَتَانَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ، وَنَحْنُ صِبْيَانٌ ، فَسَلَّمَ عَلَيْنَا ، وَأَرْسَلَنِي فِي حَاجَةٍ ، وَجَلَسَ فِي الطَّرِيقِ يَنْتَظِرُنِي ، حَتَّى رَجَعْتُ إِلَيْهِ ، قَالَ : فَأَبْطَأْتُ عَلَى أُمِّ سُلَيْمٍ ، فَقَالَتْ : مَا حَبَسَكَ ؟ فَقُلْتُ : بَعَثَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فِي حَاجَةٍ ، قَالَتْ : مَا هِيَ ؟ قُلْتُ : إِنَّهَا سِرٌّ ، قَالَتْ : فَاحْفَظْ سِرَّ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم. البُخَارِي\"في (الأدب المفرد)

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். எங்களுக்கு ஸலாம் கூறினார்கள். என்னை அழைத்து ஒரு வேலைக்காக அனுப்பி வைத்தார்கள். என் தாயிடம் நான் தாமதமாகச் சென்றபோது, ”ஏன் தாமதம்?” என்று என் தாய் கேட்டார். நான், ”நபி (ஸல்) அவர்கள் என்னை ஒரு வேலையாக அனுப்பி வைத்தார்கள்என்றேன். என் தாயார், ”என்ன வேலை?” என்று கேட்டார். நான் அது ரகசியம்என்றேன். தாயார், ”நபி (ஸல்) அவர்களின் ரகசியத்தைப் பற்றி எவரிடமும் சொல்லிவிடாதே…” என்று கூறினார். அனஸ் (ரலி) அவர்களின் மாணவர் ஸாபித் (ரஹ்) அவர்களிடம், ”ஸாபித்தே! அல்லாஹவின் மீது ஆணையாக! அந்த ரகசியத்தை யாரிடமாவது நான் சொல்வதாயிருந்தால் அதை உம்மிடம் சொல்லி இருப்பேன்என்று கூறினார்கள். ( நூல்: முஸ்லிம்)

حَدَّثَنَا مُوسَى ، عَنْ أَبِي عَوَانَةَ ، حَدَّثَنَا فِرَاسٌ ، عَنْ عَامِرٍ ، عَنْ مَسْرُوقٍ حَدَّثَتْنِي عَائِشَةُ أُمُّ الْمُؤْمِنِينَ قَالَتْ

إِنَّا كُنَّا أَزْوَاجَ النَّبِيِّ صلى الله عليه وسلم عِنْدَهُ جَمِيعًا لَمْ تُغَادَرْ مِنَّا وَاحِدَةٌ فَأَقْبَلَتْ فَاطِمَةُ – عَلَيْهَا السَّلاَمُ – تَمْشِي لاَ وَاللَّهِ مَا تَخْفَى مِشْيَتُهَا مِنْ مِشْيَةِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَلَمَّا رَآهَا رَحَّبَ قَالَ مَرْحَبًا بِابْنَتِي ثُمَّ أَجْلَسَهَا عَنْ يَمِينِهِ ، أَوْ عَنْ شِمَالِهِ ثُمَّ سَارَّهَا فَبَكَتْ بُكَاءً شَدِيدًا فَلَمَّا رَأَى حُزْنَهَا سَارَّهَا الثَّانِيَةَ إِذَا هِيَ تَضْحَكُ فَقُلْتُ لَهَا أَنَا مِنْ بَيْنِ نِسَائِهِ خَصَّكِ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بِالسِّرِّ مِنْ بَيْنِنَا ثُمَّ أَنْتِ تَبْكِينَ فَلَمَّا قَامَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم سَأَلْتُهَا عَمَّا سَارَّكِ

நபி (ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கிக் கொண்டிருந்த போது) நபி (ஸல்) அவர்களின் துணைவியர்களான எங்களில் ஒருவர் கூட விடுபடாமல் நாங்கள் அனைவரும் அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது (நபியவர்களின் புதல்வியார்) ஃபாத்திமா (ரலி) நடந்து வந்தார்.

அல்லாஹ்வின் மீதாணையாக! அவரின் நடை நபி (ஸல்) அவர்களின் நடைக்கு ஒத்ததாகவே அமைந்திருந்தது. ஃபாத்திமாவைக் கண்ட போது நபி (ஸல்) அவர்கள், “என் மகளே! வருக!என்று வாழ்த்தி வரவேற்றார்கள். பிறகு அவரைத் தமது வலப்பக்கத்தில் அல்லது இடப்பக்கத்தில் அமர்த்திக் கொண்டு, அவரிடம் ரகசியமாக ஏதோ சொன்னார்கள். அதைக் கேட்ட போது ஃபாத்திமா பலமாக அழுதார். அவருடைய துக்கத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ இரகசியம் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார்.

அப்போது நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடையே இருந்து கொண்டு ஃபாத்திமாவிடம், “எங்களை விட்டு விட்டு உங்களிடம் மட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரகசியம் சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களேஎன்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தவுடன் அவர்கள் கூறிய ரகசியம் பற்றி ஃபாத்திமாவிடம் கேட்டேன்.

அதற்கு ஃபாத்திமா அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ரகசியத்தை பரப்ப நான் விரும்பவில்லைஎன்று கூறி விட்டார். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த போது ஃபாத்திமா அவர்களிடம் நான், “உங்கள் மீது எனக்குள்ள உரிமையை முன்வைத்துக் கேட்கிறேன். அந்த ரகசியம் என்ன என்று நீங்கள் சொல்லியே ஆக வேண்டும்என்றேன். ஃபாத்திமா, “சரி இப்போது (தெரிவிக்கிறேன்)என்று கூறிவிட்டு (பின்வருமாறு) தெரிவித்தார்.

முதலாவது முறை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ரகசியம் சொன்ன போது, “எனக்கு ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஒருமுறை குர்ஆனை ஓதிக் காட்டி நினைவூட்டுவார். ஆனால் அவர் இந்த ஆண்டு இரண்டு முறை அதனை ஓதிக் காட்டினார். என் இறப்பு நெருங்கி விட்டதாகவே நான் கருதுகிறேன். ஆகவே நீ அல்லாஹ்வை அஞ்சிக் கொள். பொறுமையாக இரு. நான் உனக்கு முன்னால் நல்லபடி சென்று விடுவேன்என்று சொன்னார்கள். ஆகவே தான் நான் உங்களுக்கு முன்னிலையில் அவ்வாறு அழுதேன்.

எனது பதற்றத்தைக் கண்ட போது, நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக, “ஃபாத்திமா! இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்குஅல்லது இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்குநீ தலைவியாக இருக்க விரும்பவில்லையா?” என்று ரகசியமாகக் கேட்டார்கள். (  அறி : ஆயிஷா (ரலி), நூல்: புகாரி-6285 , 6286, 3263 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ரகசியத்தைப் பேணி வாழும் நன்மக்களாக நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!