Wednesday, 13 March 2024

அல்லாஹ்விடம் சிறந்த அண்டை வீட்டார்!!

 

தராவீஹ் சிந்தனை: 3, உங்களில் சிறந்தவர் தொடர்:- 2,

அல்லாஹ்விடம் சிறந்த அண்டை வீட்டார்!!


அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் இரண்டாவது நோன்பை நிறைவு செய்து விட்டு, மூன்றாம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

பெருமானார் {ஸல்} அவர்கள் பல சந்தர்ப்பங்களில் ஃகியாருக்கும், ஃகைருக்கும் ( உங்களில் மிகச் சிறந்தவர் ) ஃகைருன் நாஸ் ( மனிதர்களில் மிகச் சிறந்தவர் ) என்ற அடைமொழியோடு சில நல்ல பண்புகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் பட்டியலிட்டார்கள்.

அப்படி பெருமானார் (ஸல்) அவர்கள் பட்டியலிட்டுக் கூறிய சில நல்ல பண்புகளை இந்த ரமழானில் நாம் தொடராகப் பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

இரண்டாவதாக  இன்றைய அமர்வில்  சிறந்த அண்டை வீட்டார் குறித்து நாம் பார்க்க இருக்கின்றோம்.

அல்லாஹ்விடம் சிறந்த அண்டை வீட்டார்!

அந்த வகையில் பெருமானார் (ஸல்) அவர்கள் சிறந்த (வர்) மனிதர்கள் என்று அடையாளப்படுத்தி பட்டியல் இட்டவர்களில் "சிறந்த அண்டை வீட்டாராக" விளங்கும் ஒருவரும் ஆவார்.

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَيْوَةُ ‏ ‏وَابْنُ لَهِيعَةَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏شُرَحْبِيلُ بْنُ شَرِيكٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيَّ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏خَيْرُ الْأَصْحَابِ عِنْدَ اللَّهِ خَيْرُهُمْ لِصَاحِبِهِ وَخَيْرُ الْجِيرَانِ عِنْدَ اللَّهِ خَيْرُهُمْ لِجَارِهِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் பார்வையில் தோழமையால் மிகச் சிறந்தவர் தமது தோழர்களிடமும் சிறந்து விளங்குபவரே. அல்லாஹ்வின் பார்வையில் சிறந்த அண்டை வீட்டுக்காரர் யாரெனில் தனது அண்டை வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே.” ( நூல்:  ஸுனனுத் திர்மிதி )

மனித வாழ்வில் உறவுகள் என்பது மகத்தான கொடையாகும். உறவுகள் தான் வாழ்வில் அவன் முன்னேறுவதற்கும் மன அறுதல் அடைவதற்கும் மிகப்பெரிய பாலமாக அமைந்துள்ளது. 

இந்த உறவுகள் என்பது இரத்த பந்தத்தின் மூலமும், திருமண பந்தத்தின் மூலமும், ஈமானிய சொந்தத்தின் மூலமும் பழக்கத்தின் மூலமும் உருவாகிறது. 

இந்த உறவுகளை நல்லமுறையில் கவனித்து வருபவன் இம்மையிலும் மறுமையிலும் நல்லநிலையில் வாழ்வான். 

இப்படியான இந்த உறவு முறைகளில் அண்டைவீட்டாருடன் ஏற்படும் உறவுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தாக அமைந்துள்ளது. இந்த உறவுகள் நமக்கு நல்லமுறையில் அமைய வேண்டும். 

சிறந்த அண்டை வீட்டார் அமைவது   ஒரு முஸ்லிமுக்கு கிடைக்கும் நற்பாக்கியங்களில் ஒன்றாகும். அவர்கள் மூலம் மனநிம்மதி, சந்தோஷம் போன்ற நற்பாக்கியங்களை அடைகிறார். பின்வரும் ஹதீஸில் நல்ல அண்டை வீட்டார் அமைவதை ஒரு நற்பாக்கியம் என்று கூறி நபி (ஸல்) அவர்கள் உயர்வுபடுத்தினார்கள்.

عَنْ نَافِعِ بْنِ عَبْدِ الْحَارِثِ -رضي الله عنه-، قَالَ : قَالَ رَسُولُ الله:- (( مِنْ سَعَادَةِ الْمَرْءِ الْجَارُ الصَّالِحُ ، وَالْمَرْكَبُ الْهَنِيءُ ، وَالْمَسْكَنُ الْوَاسِعُ)).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஸாலிஹான அண்டை வீட்டார் அமைவதும், விசாலமான வீடும், சிறந்த வாகனமும் உலகில் ஒரு முஸ்லிமின் வாழ்வு ஈடேற்றம் பெற்றதற்கான அடையாளமாகும்.” ( நூல்: முஸ்னத் அஹமத் )

பெருமானார் (ஸல்) அவர்கள் தீய, கெட்ட அண்டை வீட்டார் அமைந்து விடக்கூடாது என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: كَانَ مِنْ دُعَاءِ النَّبِيِّ

(( اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَارِ السُّوءِ فِي دَارِ الْمُقَامِ، فَإِنَّ جَارَ الدُّنْيَا يَتَحَوَّلُ)).

யாஅல்லாஹ்!  தீய, கெட்ட அண்டை வீட்டார் அமைவதில் இருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று நபி ஸல் அவர்கள் பிரார்த்தனை செய்ததாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

எப்போதுமே நம்மில் பலர் சராசரியாக வாழ்வதை விரும்புவதில்லை. மாறாக, சிறந்த நிலையில் வாழ்வதையே விரும்புகிறார்கள்.

உலக வாழ்க்கையில் இவ்வளவு கவனம் எடுக்கும் போது மறுமை வாழ்வோடு தொடர்புடைய நாம் நமது வாழ்க்கையை எவ்வளவு சிறந்த வாழ்க்கையாக அமைத்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

அல்லாஹ்விடம் சிறந்த அண்டை வீட்டாராக விளங்க ....

1. நோவினையை சகித்துக் கொள்ள வேண்டும்.

عَنْ مُطَرِّفِ بن عَبْدِ اللهِ بْنِ الشِّخِّيرِ ، عَنْ أَبِي ذَرٍّ الغفاري رضى الله عنه، أَنَّ رَسُولَ اللهِ قَالَ: (إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يُحِبُّ ثَلَاثَةً ) ومِنْ هَؤُلَاءِ الثَّلَاثَةُ الَّذِينَ يُحِبُّهُمُ اللهُ عَزَّ وَجَلَّ: (رَجُلٌ كَانَ لَهُ جَارُ سُوءٍ، يُؤْذِيهِ، فَصَبَرَ عَلَى أَذَاهُ، حَتَّى يَكْفِيَهُ اللهُ إِيَّاهُ بِحَيَاةٍ، أَوْ مَوْتٍ)

وصححه الألباني في صحيح الترغيب والترهيب

அபூதர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் நீண்ட ஒரு பொன்மொழியை அறிவிக்கிறார்கள். அதில் வருவதாவது மூன்று நபர்களை அல்லாஹ் நேசிக்கிறான். அவர்களில் ஒருவர் தனது கெட்ட அண்டை வீட்டாரின் நோவினையை சகித்து வாழ்பவர். எவர் அண்டை வீட்டாரின் நோவினையை சகித்து வாழ்வாரோ அல்லாஹ் அவரின் வாழ்வு, மற்றும் மரணத்திற்கு போதுமானவானாக இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : ஹாகிம் 2446 - முஸ்னத் அஹமத், முஃஜமுத் தப்ரானி )

2. ஸாலிஹான முஸ்லிமாக வாழ வேண்டும்..

 

روي عن ابن عمر رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: «إن الله عز وجل ليدفع بالمسلم الصالح عن مائة أهل بيت من جيرانه البلاء، ثم قرأ: ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض». (رواه الطبراني في الكبير والأوسط)

"நிச்சயமாக அல்லாஹ் ஸாலிஹான ஒரு முஸ்லிமின் செயல்பாடுகளின் மூலமாக அவனது அண்டை வீட்டார்களில் நூறு அண்டை வீட்டார்களை சூழ்ந்துள்ள சோதனைகளை நீக்கி விடுகின்றான்" என்று கூறி விட்டு நபி ஸல் அவர்கள் "மனிதர்களில் சிலரைக் கொண்டு சிலருக்கு ஏற்படும் தீங்குகளை அல்லாஹ் நீக்கி விட வில்லை என்றால் இந்த பூமியில் குழப்பம் மிகைத்து விடும்" என்ற பகராவின் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

3. நல்லவனாக உம்மை நிலை நிறுத்த வேண்டும்...

قال عبدالله قال رجل يا رسول الله كيف لي أن أعلم إذا أحسنت أو أسأت؟ قال: إذا سمعت جيرانك يقولون قد أحسنت فقد أحسنت وإذا سمعتهم يقولون قد أسأت فقد أسأت». (رواه أحمد والطبراني، وعبدالله هو ابن سعود واسناده جيد).

ஒருவர் நபி ஸல் அவர்களின் சமூகம் வந்து, நான் நல்லவனா? கெட்டவனா? என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உமது அண்டை வீட்டார் உம்மை நல்லவன் என்று கூறக் கேட்டால் நீ "நல்லவன்" என்றும், உம்மை கெட்டவன் என்று கூறக் கேட்டால் நீ "கெட்டவன்" என்பதை உறுதி செய்து கொள்!" என்று பதிலளித்தார்கள். ( நூல்: அஹமது )

4. உம் நடவடிக்கையால் சீர் திருத்த வேண்டும்..

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ : حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَجْلَانَ قَالَ : حَدَّثَنَا أَبِي ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَجُلٌ : يَا رَسُولَ اللَّهِ ، إِنَّ لِي جَارًا يُؤْذِينِي ، فَقَالَ : انْطَلِقْ فَأَخْرِجْ مَتَاعَكَ إِلَى الطَّرِيقِ ، فَانْطَلَقَ فَأَخْرِجَ مَتَاعَهُ ، فَاجْتَمَعَ النَّاسُ عَلَيْهِ ، فَقَالُوا : مَا شَأْنُكَ ؟ قَالَ : لِي جَارٌ يُؤْذِينِي ، فَذَكَرْتُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : انْطَلِقْ فَأَخْرِجْ مَتَاعَكَ إِلَى الطَّرِيقِ ، فَجَعَلُوا يَقُولُونَ : اللَّهُمَّ الْعَنْهُ ، اللَّهُمَّ أَخْزِهِ . فَبَلَغَهُ ، فَأَتَاهُ فَقَالَ : ارْجِعْ إِلَى مَنْزِلِكَ ، فَوَاللَّهِ لَا أُؤْذِيكَ/

முஹம்மது இப்னு அப்துல்லாஹ் (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து கூறினார்: “(அல்லாஹ்வின் தூதரே!) எனது அண்டை வீட்டுக்காரர் எனக்கு துன்பமிழைக்கிறார்நபி (ஸல்) அவர்கள் பொறுமையாக இருஎன்றார்கள். அவர் மீண்டும் வந்து கூறினார்: எனது அண்டை வீட்டுக்காரர் எனக்கு நோவினை தருகிறார்.நபி (ஸல்) அவர்கள்: பொறுமையாக இருஎன்று கூறினார்கள். அவர் மீண்டும் மூன்றாவது முறையாக கூறினார்: எனது அண்டை வீட்டுக்காரர் எனக்கு நோவினையளிக்கிறார்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “(வீட்டிலுள்ள) உமது சாமான்களை எடுத்து வீதியிலே வைத்துவிடு. உம்மிடம் எவரேனும் வந்து காரணத்தை விசாரித்தால் என்னுடைய அண்டை வீட்டுக்காரர் எனக்கு நோவினை தருகிறார் என்று கூறும். (மக்கள் அனைவரும் அவனை ஏசுவார்கள்; அதனால்) அவர் மீது அல்லாஹ்வின் சாபம் எற்பட்டுவிடும் என்று கூறினார்கள். அவரும் அப்படியே செய்தார். இதனை அறிந்த அவரின் அண்டை வீட்டார் ஓடோடி வந்து “உன் வீட்டு சாமான்களை எடுத்துக் கொண்டு உன் வீட்டிற்குள் செல்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இனி ஒரு போதும் நான் உமக்கு நோவினை தரமாட்டேன்” என்றார். (ஹயாத்துஸ் ஸஹாபா)

5. மறுமையில் நமக்கு எதிராக இறைவன் முன் வழக்கு தொடர அனுமதிக்க விட்டு விடக்கூடாது...

قال رسول الله صلى الله عليه وسلم «كم من جار متعلق بجاره يوم القيامة يقول: يا رب هذا أغلق باب دوني فمنع معروفه» (أخرجه البخاري في الأدب المفرد».

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எத்தனையோ நபர்கள் மறுமை நாளில் தமது அண்டை வீட்டாரை பிடித்துக் கொள்வார்கள். இறைவனே! என்னைத் தவிர்ப்பதற்காக அவர் தனது வாசலை மூடிவிட்டார்; அதன் மூலம் தனது உபகாரத்தைத் தடுத்துக் கொண்டார்என்று கூறுவார். (அல் அதபுல் முஃப்ரத்)

6. தீங்கே செய்தாலும் நல்லதே செய்ய வேண்டும்.

يروى أن رجلاً جاء إلى ابن مسعود رضي الله عنه فقال له: «إن لي جاراً يؤذيني ويشتمني ويضيق عليّ، فقال: اذهب فإن هو عصى الله فيك فأطع الله فيه».

ஒரு மனிதர் இப்னு மஸ்வூத் ரலி அவர்களிடம் வந்து என் அண்டை வீட்டார் சதாவும் என்னை பழித்துக் கொண்டும், எனக்கு தீங்கிழைத்துக் கொண்டும் எனக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டும் இருக்கின்றார்.  நான் என்ன செய்வது? என்று கேட்டார்.

அதற்கு இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் "உன் விஷயத்தில் அவர் அல்லாஹ்விற்கு மாறு செய்கிறார். அவர் விஷயத்தில் நீ அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு அவன் ஏவி இருக்கும் அடிப்படையில் அவருடன் நடந்து கொள்வீராக!" என்றார்கள்.

7. நம்மைப் போலவே நமது அண்டை வீட்டாரையும் கருத வேண்டும்.

وَحَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ:- "وَالَّذِى نَفْسِى بِيَدِهِ لاَ يُؤْمِنُ عَبْدٌ حَتَّى يُحِبَّ لِجَارِهِ – أَوْ قَالَ لأَخِيهِ – مَا يُحِبُّ لِنَفْسِهِ

எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! தமக்கு விரும்பியதை தன் அண்டைவீட்டாருக்கு அல்லது தன் சகோதரனுக்கு விரும்பாத வரை ஒரு அடியான் (உண்மையான) நம்பிக்கை கொண்டவனாக மாட்டான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : முஸ்லிம் (65???)

8. அனைத்திலும் முன்னுரிமை தர வேண்டும்.

நமது வீட்டை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் முதலில் அண்டைவீட்டாரிடம் விலைக்கு வாங்கிக் கொள்கிறீர்களா? என்று கேட்க வேண்டும். அவர் தேவை இல்லை என்றால் மட்டுமே மற்றவரிடம் விற்பனை செய்யவேண்டும். இதுவும் அண்டைவீட்டாருக்கு இருக்கும் உரிமைகளில் ஒன்றாகும்.

حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ ، أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ قَالَ

وَقَفْتُ عَلَى سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ فَجَاءَ الْمِسْوَرُ بْنُ مَخْرَمَةَ فَوَضَعَ يَدَهُ عَلَى إِحْدَى مَنْكِبَيَّ إِذْ جَاءَ أَبُو رَافِعٍ مَوْلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَال يَا سَعْدُ ابْتَعْ مِنِّي بَيْتَيَّ فِي دَارِكَ فَقَالَ سَعْدٌ وَاللَّهِ مَا أَبْتَاعُهُمَا فَقَالَ الْمِسْوَرُ وَاللَّهِ لَتَبْتَاعَنَّهُمَا فَقَالَ سَعْدٌ وَاللَّهِ لاَ أَزِيدُكَ عَلَى أَرْبَعَةِ آلاَفٍ مُنَجَّمَةٍ ، أَوْ مُقَطَّعَةٍ قَالَ أَبُو رَافِعٍ لَقَدْ أُعْطِيتُ بِهَا خَمْسَمِئَةِ دِينَارٍ وَلَوْلاَ أَنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ الْجَارُ أَحَقُّ بِسَقَبِهِ مَا أَعْطَيْتُكَهَا بِأَرْبَعَةِ آلاَفٍ وَأَنَا أُعْطَى بِهَا خَمْسَ مِئَةِ دِينَارٍ فَأَعْطَاهَا إِيَّاهُ

நான் ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடம் தங்கியிருந்தேன். அப்போது மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் வந்து, தமது கையை எனது தோள்புஜங்களில் ஒன்றில் வைத்தார்கள். அப்போது (அடிமையாயிருந்து) நபி (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அபூராஃபிவு (ரலி) அவர்கள் வந்து ஸஅதே! உமது வீட்டிலுள்ள எனக்குச் சொந்தமான இரண்டு அறைகளை என்னிடம்மிருந்து வாங்கிக் கொள்வீராக!எனக் கூறினார்கள். அதற்கு ஸஅத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவற்றை நான் வாங்கமாட்டேன். என்றார்கள்.

அருகிலிருந்த மிஸ்வர் (ரலி) அவர்கள், ஸஅத் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் மீது ஆணையாக நீர் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்என்றார்கள். அப்போது ஸஅத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக! தவணை அடிப்டையில் நாலாயிரம் வெள்ளிக் காசைத் தவிர உமக்கு அதிமாகத் தரமாட்டேன்என்று கூறினார்கள். அதற்கு அபூராஃபிவு (ரலி) அவர்கள் ஐநூறு தங்கக் காசுகளுக்கு அது கேட்கப்பட்டுள்ளது.

அண்டை வீட்டில் இருப்பவர் அண்மையில் இருப்பதால் அவரே அதிகம் உரிமை படைத்தவர்என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுறாவிட்டால் ஐநூறு தங்கக் காசுக்கு கேட்கப்பட்டதை நாலாயிரம் வெள்ளிக்காசுக்கு உமக்கு விற்க மாட்டேன்என்று கூறிவிட்டு ஸஅதுக்கே விற்றார்.  அறிவிப்பவர் : அம்ர் பின் ஷரீத், நூல் :புகாரீ (2258)

9. நற்பண்புள்ள அண்டை வீட்டாரை விலை மதிக்க முடியாத அருட்கொடையாகக் கருத வேண்டும். 

باع أبو الجهم العدوي داره بمائة ألف درهم، ثم قال: بكم تشترون جوار سعيد بن العاص جاري، كم تدفعون الآن على الجوار، قالوا: وهل يشترى جوار قط؟ قال: ردوا عليَّ داري وخذوا دراهمكم، والله لا أدع جوار رجل إن فقدت سأل عني، وإن رآني رحب بي، وإن غبت حفظني، وإن شهدت قربني، وإن سألته أعطاني، وإن لم أسأله ابتدأني، وإن نابتني جائحة فرج عني، فبلغ ذلك سعيداً، فبعث إليه بمائة ألف درهم.

அபூ ஜஹ்ம்  என்பவருக்கு கடுமையான பண நெருக்கடி ஆதலால் தாம் குடியிருக்கும் வீட்டை விற்க முன் வந்தார். ஆச்சர்யம் என்னவென்றால் அவர் வீட்டிற்கு ஒரு லட்சம் திர்ஹமை விலையாக நிர்ணயம் செய்தது தான். வீடு கேட்டு வந்த எல்லோரும் விலையை கேட்டு விட்டு, இந்த வீட்டிற்கு 100 திர்ஹமே அதிகம். இதிலும் 1’00000 திர்ஹமா?” என திகைத்துப் போயினர். அப்படி என்ன தான் அந்த வீட்டில் இருக்கிறது என அனைவரும் வினவிய போது அபூ ஜஹ்ம் கூறினார் என் பக்கத்து வீட்டில் ஸயீத் இப்னுல் ஆஸ் [ரலி} என்ற பெருந்தன்மையான மனிதர் குடியிருக்கிறார். 

அவரின் குண நலன்களை நீங்கள் அறிவீர்களேயானால் நான் நிர்ணயித்த விலை சரிதான் என்று ஒத்துக் கொள்வீர்கள். அவருக்கு நான் தீங்கு பல செய்திருக்கின்றேன். ஆனால், எனக்கு ஒரு போதும் அவர் தீங்கிழைத்ததில்லை. மாறாக, எனக்கு உபகாரம் செய்திருக்கிறார். நான் அவரிடம் பல முறை மடத்தனமாக நடந்திருக்கின்றேன். ஆனால், அவர் என்னுடன் சகிப்புத்தன்மையோடு நடந்து கொள்கின்றார். நான் ஊரில் இருந்தால் என்னோடு நேசம் பாராட்டுவார். நான் வெளியூர் சென்று விட்டால், நான் திரும்பி வரும் வரை என் வீட்டையும், என் வீட்டாரையும் பாதுகாத்துக் கொள்வார். 

என் தேவையை அவராகவே முன் வந்து நிறைவேற்றித் தருவார். எனக்கு ஏதாவது துன்பம் நேரிட்டால், துவண்டு போய் விடுவார். அதைக் களைவதில் மும்முரமாக ஈடுபடுவார். என்ன செய்ய என் போதாத காலம் எனக்கு பண நெருக்கடி மட்டும் இல்லை என்றால் ஒரு போதும் அவரை விட்டும் பிரியமாட்டேன்என்றார். 

இந்த செய்தியை கேள்வி பட்ட ஸயீத் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்கள் உமக்கு பக்கத்து வீட்டுக் காரனாய் இருக்க நான் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நீயே என் பக்கத்து வீட்டாளனாய் இரு என்று கூறி ஒரு லட்சம் திர்ஹத்தை நானே தருகின்றேன் என்று கூறி ஒரு லட்சம் திர்ஹத்தை அன்பளிப்பாக வழங்கினார்கள் ஸயீத் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்கள்.    ( நூல்: வஃப்யாத்துல் அஃயான், பாகம்:2, பக்கம்;535 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நாளை மறுமையில் அவனிடம் சிறந்தவர்களின் பட்டியலில் நம் அனைவரையும் இடம் பெறச் செய்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்! வஸ்ஸலாம்!!!

Tuesday, 12 March 2024

தூய்மையான உள்ளமும், வாய்மையான நாவும்…

 

தராவீஹ் சிந்தனை:- 2, உங்களில் சிறந்தவர் தொடர்:- 1.

தூய்மையான உள்ளமும், வாய்மையான நாவும்… 


அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் முதலாவது நோன்பை நிறைவு செய்து விட்டு, இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

பெருமானார் {ஸல்} அவர்கள் பல சந்தர்ப்பங்களில் ஃகியாருக்கும், ஃகைருக்கும் ( உங்களில் மிகச் சிறந்தவர் ) ஃகைருன் நாஸ் ( மனிதர்களில் மிகச் சிறந்தவர் ) என்ற அடைமொழியோடு சில நல்ல பண்புகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் பட்டியலிட்டார்கள்.

அப்படி பெருமானார் (ஸல்) அவர்கள் பட்டியலிட்டுக்கூறிய சில நல்ல பண்புகளை இந்த ரமழானில் நாம் தொடராகப் பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

துவக்கமாக இன்றைய அமர்வில் நாம் மஹ்மூமுல் கல்ப் மற்றும் ஸதூகுல் லிஸான் என்ற இரு உயரிய பண்புகள் குறித்து நாம் பார்க்க இருக்கின்றோம்.

மனிதர்கள் தங்களுக்கு இருக்கும் வாழ்க்கை நிலையில் மட்டுமல்ல, பண்புகளிலும் பழக்க வழக்கங்களிலும் வேறுபட்டும் வித்தியாசப்பட்டும் இருக்கிறார்கள். 

ஆகையினால், ஒருவரை சிறந்தவர் என்று முடிவு செய்வதற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான காரணங்களைக் குறிப்பிடுகிறார்கள். வேறுபாடான வித்தியாசமான கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.

ஒருவருடைய காரியத்தையோ பண்பையோ காரணமாக வைத்து அவரைச் சிறந்தவர் என்று சொல்வது ஒருவருடைய பார்வையில், கண்ணோட்டத்தில் சரியாக இருக்கும் அதேசமயம், மற்றவர்களின் பார்வையில் தவறாக இருக்கும். 

காரணம், ஒருவரிடம் தாங்கள் விரும்பும் எதிர்பார்க்கும் பண்பு இருப்பதைப் பொறுத்து அவரை நல்லவர் என்று முடிவு செய்கிறார்கள். தங்களது சுய விருப்பு வெறுப்புகளை அடிப்படையாக வைத்து தீர்மானம் செய்கிறார்கள். 

நம்மைப் பற்றி முழுமையாக அறிந்திருக்கும் ஏகஇறைவனும் அவனிடம் இறைச்செய்தியைப் பெறும் இறைத்தூதரும், ஒருவரைச் சிறந்தவர் என்று சொல்வது இவ்வாறு இருக்காது. 

உண்மையில் அவர்கள் சிறந்தவர்களாக இருப்பார்கள். மக்களிடம் இருக்கும் எண்ணங்கள் மற்றும் செயல்களை மையமாக வைத்து அவர்களில் சிறந்தவர்கள் யார்? என்பது குறித்து மார்க்கம் கூறும் சில தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.

மனிதர்களில் நல்லவர்களாக உள்ளவர்கள் மிக மிகக் குறைவானவர்களே!!

قال الشيخ محمد عمر بازمول حفظه الله تعالى:-

 علّمني ديني: أن الصالح من الناس قليل، كالإبل المئة لاتكاد فيها واحدة تصلح!

عن الزهري قال: أخبرني سالم بن عبدالله، أن عبدالله بن عمر رضي الله عنهما قال: سمعت رسول الله صلّى الله عليه وسلم يقول: « إنّما الناس كالإبل المئة، لاتكاد تجد فيها راحلة»

அஷ்ஷெய்க் முஹம்மத் உமர் பாஸ்மூல் (ஹஃபிழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- நூறு ஒட்டகங்கள் இருந்தால் (பயணத்திற்கு) சரிவரக்கூடியதாக ஒன்று அவற்றில் கிடைப்பது அரிதாக இருப்பது போல, மனிதர்களில் நல்லவர்களாக இருப்பவர்கள் மிகக் குறைவானவர்களாகவே இருக்கின்றனர். (இதை) என் மார்க்கம் எனக்குக் கற்றுத் தந்திருக்கின்றது!

ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்கள் (பொதி சுமக்கும்) நூறு ஒட்டகங்களைப் போன்றவர்கள். அவற்றில், பயணத்திற்குப் பயன்படும் ஒட்டகத்தை நீ காண்பது அரிதாகும்!

{ நூல்: புகாரி – 6498 / முஸ்லிம் – 4978 }

وَقَالَ ابن بَطَّالٍ: مَعْنَى الْحَدِيثِ: أَنَّ النَّاسَ كَثِيرٌ ، وَالْمَرْضِيَّ مِنْهُمْ قَلِيلٌ

குறைபாடுகளுடைய மனிதர்கள் உலகத்தில் நிறையவே இருந்துகொண்டிருக்கின்றனர்; ஆனால், அவர்களில் சிறப்புக்குரியவர்களாகவும் இறைவனின் திருப்திக்குரியவர்களாகவும் இருப்பவர்கள் மிகக் குறைவானவர்கள் ஆவார்கள்”! என்று இமாம் ஃகத்தாபீ, இமாம் இப்னு பத்தால் (ரஹிமஹுமல்லாஹ்) போன்றோர் இந்த ஹதீஸுக்கு விளக்கம் அளித்துள்ளனர். { பார்க்க: ‘fபத்ஹுல் பாரீ’, 11/343 }

روى ابن ماجه عن عبدالله بن عمرو رضي الله عنهما قيل لرسول الله صلى الله عليه وسلم: «أي الناس أفضل؟ قال: كل مخموم القلب صدوق اللسان. قالوا: صدوق اللسان نعرفه، فما مخموم القلب؟ قال: هو التقي النقي، لا اثم فيه، ولا بغي ولا غِلّ ولا حسد» وفي الزوائد: هذا اسناد صحيح رجاله ثقات.

மக்களில் சிறந்தவர் யார் என்று நபி அவர்களிடம் கேட்கப்பட்ட போது மஹ்மூமுல் கல்ப் ஸதூகுல்லிஸான் என்று சொன்னார்கள். ஸதூகுல்லிஸான் என்றால் உண்மை பேசக்கூடியவர்கள் என்பது எங்களுக்கு புரிகின்றது. மஹ்மூமுல் கல்ப் என்றால் என்ன என்று கேட்டார்கள். அதற்கு பாவங்களோ அக்கிரமங்களோ பொறாமையோ குரோதங்களோ இல்லாத உள்ளத்தூய்மையுள்ள இறையச்சமுள்ள மனிதர் என்று கூறினார்கள். ( இப்னுமாஜா : 4216 )

அமைதியான உள்ளம் என்பது அல்லாஹ்வின் அளப்பரிய அருட்கொடைகளிலிருந்தும் உள்ளவையாகும். சுவர்க்கவாசிகள் சுவர்க்கம் நுழையும் போது அவர்களுக்கு கொடுக்கப்படக் கூடியவையும் ஆகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:அவர்களின் உள்ளங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கிவிடுவோம். அவர்கள் சகோதரர்களாக கட்டில்களின் மீது ஒருவரை ஒருவர் முன்னோக்கியிருப்பர்.” (அல்குர் ஆன்: 15: 47 )

அமைதியான உள்ளமுடையவர்கள் உலகிலேயே நிம்மதியாக வாழ்வார்கள். மறுமையில் அதனை கனீமத்தாக பொற்றுக் கொள்வார்கள்  சுவர்கம் நுழைவதற்கு காரணியாகவும் அமையும்.

இப்னு ஹஸம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: சிலர் தப்பான எண்ணங்களை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டு தீய விஷயங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பெரும் பாவங்களை செய்கின்றனர். மறுமையில் நரகிலும் நுழைய கிற்கு வழிகோலுகின்றனர். இதனால் எந்தவித தப்பும் செய்யாத பெரியவர்களையும் சிறியவர்களையும் அழிக்கின்றனர். அவர்களுக்கு சோதனைகளையும் ஏற்படுத்துகின்றனர். இத்தகையவர்கள் இதன் மூலம் தனக்கு எந்த நன்மையும் இல்லை என்பதை அறிந்தால் இத்தகைய தீய செயல்களில் ஈடுபட மாட்டார்கள். இவர்கள் தங்களது எண்ணத்தை தூய்மைப்படுத்தி தீயவற்றை விட்டுவிட்டு நல்ல விஷயங்களை முற்படுத்தி செய்தால் சந்தோஷமானவர்களாக இவ்வுலகில் வாழ்வார்கள்; மறுமையில் சுவர்கத்துக்கும் நுழைவார்கள்”.

أخرج ابن أبي الدنيا عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ مرسلًا عن رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أنه قال

  أَوَّلُ مَنْ يَدْخُلُ مِنْ بَابِ الْمَسْجِدِ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ، فَدَخَلَ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ رَضِيَ الله عَنْه، فَقَالَ لَهُ رَجُلٌ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَذَا وَكَذَا فَأَيُّ عَمَلٍ لَكَ أَوْثَقُ تَرْجُو بِهِ؟ قَالَ

 إِنّي لَضَعِيفٌ وَإِنَّ أَوْثَقَ مَا أَرْجُو بِهِ لَسَلَامَةُ الصَّدْرِ وَتَرْكُ مَا لَا يَعْنِينِي

وأصله في الصحيح

முஹம்மத் இப்னு கஅபுல் குறழீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: மாநபி {ஸல்} அவர்கள் தங்களின் முன்பாக திரண்டிருந்த சபையொன்றில் இன்று இந்த வாசலில் யார் முதலில் நுழைகின்றாரோ அவர் சுவனவாசி என்று மஸ்ஜிதுன் நபவீயின் முன் வாசலை காண்பித்துக் கூறினார்கள்.

அந்த அறிவிப்பைக் கேட்டதில் இருந்து மாநபித்தோழர்கள் அனைவரின் பார்வையும் அங்கு நோக்கி இருந்தது.

உள்ளே ஒருவர் நுழைகின்றார்! அனைவரின் முகத்திலும் சந்தோஷம்! ஆம்! யூதபாதிரியாக இருந்து அல்லாஹ்வின் தூதரின் கரம்பிடித்து சத்திய சன்மார்க்கத்தை ஏற்ற அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள் தான் அந்த சோபனத்தைத் தட்டிச் சென்றார்கள்.

சபையில் இருந்த ஒருவர் எழுந்து, நேராகச் சென்று அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்களிடம் மாநபி {ஸல்} அவர்கள் சொன்ன சோபனத்தைச் சொல்லி விட்டு உங்களுக்கு இந்த சோபனம் கிடைப்பதற்கு உங்களிடம் இடம் பெற்றிருக்கின்ற எந்த அம்சத்தை காரணமாக கூறுவீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு, அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள் நான் வயது முதிர்ந்தவன், உடல் பலவீனமானவன் ( என்னால் மிகப்பெரிய வணக்க வழிபாடுகளைச் செய்ய இயலாது. அப்படிச் செய்தால் அல்லவா நான் அவைகளைக் காரணமாக கூறமுடியும் ) என்றாலும் மாநபி {ஸல்} அவர்கள் கூறிய சோபனத்தைப் பெறுவதற்கு காரணமாக என்னிடம் காணப்படுகிற இரண்டு அம்சங்களை ஆதரவு வைக்கிறேன்.

எப்போதும் என் உள்ளத்தை அனைத்து வகையான அழுக்குகளில் இருந்தும் தூய்மை படுத்தி வைத்திருக்கின்றேன். 2. எனக்கு தேவை இல்லாத, அவசியம் இல்லாத எந்த ஒன்றிலும் நான் ஈடுபடுவதில்லைஎன்று பதில் கூறினார்கள்.  ( நூல்: இப்னு ஹிப்பான் )

عن أنس بن مالك رضي الله عنه قال: (كنا جلوساً مع رسول الله صلى الله عليه وسلم فقال: ((يطلع عليكم الآن رجل من أهل الجنة))، فطلع رجل من الأنصار ينظف لحيته من وضوئه، قد تعلق نعليه في يده الشمال، فلما كان الغد قال النبي صلى الله عليه وسلم مثل ذلك، فطلع ذلك الرجل مثل المرة الأولى، فلما كان اليوم الثالث قال النبي صلى الله عليه وسلم مثل مقالته أيضاً، فطلع ذلك الرجل على مثل حاله الأولى، فلما قام النبي صلى الله عليه وسلم، تبعه عبد الله بن عمرو بن العاص فقال: (إني لاحيت أبي، فأقسمت أن لا أدخل عليه ثلاثاً فإن رأيت أن تؤويني إليك حتى تمضي فعلت) قال: نعم، قال أنس وكان عبد الله يحدث أنه بات معه تلك الليالي الثلاث، فلم يره يقوم من الليل شيئاً غير أنه إذا تعار وتقلب على فراشه ذكر الله عز وجل وكبّر حتى يقوم لصلاة الفجر. قال عبد الله غير أني لم أسمعه يقول إلا خيراً فلما مضت الثلاث ليال، وكدت أن احتقر عمله، قلت: (يا عبد الله إني لم يكن بيني وبين أبي غضب ولا هجر ثم، ولكن سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لك ثلاث مرات يطلع عليكم الآن رجل من أهل الجنة، فطلعت أنت الثلاث مرات، فأردت أن آوي إليك لأنظر ما عملك فأقتدي به، فلم أرك تعمل كثير عمل، فما الذي بلغ بك ما قال رسول الله صلى الله عليه وسلم؟) فقال:ما هو إلا ما رأيت، قال فلما ولّيت دعاني فقال: (ما هو إلا ما رأيت، غير أني لا أجد في نفسي لأحد من المسلمين غشاً ولا أحسد أحداً على خير أعطاه الله إياه)، فقال عبدالله: (هذه التي بلغت بك وهي التي لا نطيق)

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு அமர்ந்திருந்தோம்,

அப்போது நபி (ஸல்) அவர்கள் இப்போது ஒரு மனிதர் வருவார் அவர் சுவனவாசிஎன்று கூறினார்கள்.

அப்போது,  எங்கள் முன்பாக ஒரு அன்ஸாரித் தோழர், உளு செய்த தண்ணீரின் ஈரம் சொட்டச் சொட்ட, இடது கையில் செருப்பைத் தூக்கியவாறு பள்ளியில் நுழைந்தார்.

இரண்டாவது முறையும், நபிகளார் அது போன்று கூறவே, அவர்தான் எங்கள் முன் தோன்றினார்,

மூன்றாவது முறையும் நபிகளார் அது போன்று கூறவே அவர்தான் எங்கள் முன்பாக வந்தார்..

சபையில் இருந்து நபி (ஸல்) அவரகள் எழுந்து சென்று விட்ட பிறகு,

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள், நேராக அவரிடம் சென்று நான் என் தந்தையிடம் சண்டையிட்டு, மூன்று நாள் வீட்டிற்கு வரமாட்டேன் என சத்தியமிட்டு கூறிவிட்டேன். ஆகவே, மூன்று நாள் உங்களோடு உங்கள் வீட்டில் தங்கிக் கொள்ளலாமா?” என்று கூறினார்.

அதற்கு அந்த அன்ஸாரித் தோழர் சரி என சொல்லிவிட்டார்,பிறகு, அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவரோடு தங்கிய அந்த நாட்களைப்பற்றி என்னிடம் விவரித்தார்.

அவர் ஒருநாளும் இரவுத் தொழுகையில் ஈடுபடவில்லை,ஆனால், படுக்கையில் புரண்டால் அல்லாஹ்வை நினைவு கூறுவார். பாங்கு சொன்னதும் விழித்து ஃபஜ்ர் தொழ செல்வார். மற்றபடி நம்மைப் போன்றுதான் வணக்க வழிபாடுகளைச் செய்கின்றார். வேறு ஒன்றும் சிறப்பாக செய்ய நான் காணவில்லை.

பின்பு, நான் அவரிடம், நான் ஒன்றும் என் தந்தையோடு பிணங்க வில்லை. மாறாக, மாநபி (ஸல்) அவர்கள் கூறிய சோபனத்தையும், அதைத் தொடர்ந்து மூன்று முறை நீங்களே வந்த்தையும் வைத்து, உங்களோடு இருந்து உங்களுடைய பிரத்யேகமான அமலைக் கண்ணுற்று நானும் கடைபிடிக்கவே ஆவல் கொண்டு உங்களோடு தங்கினேன்.

ஆனால், அப்படியொன்றும் நீங்கள் உயர்வாக அமல் செய்ய நான் காணவில்லை" என்றேன்.

மேலும், நான் நபிகளார் சொன்னால் அது உண்மையாகத் தான் இருக்கும், சொல்லுங்கள் இப்போதே! அந்த உயர்வான நல்லறம் எது? என்று கேட்டேன்.

அப்போது, அவர் கூறினார்:

எப்போதும் நான் மற்றெந்த முஸ்லிம்களின் மீதும், குரோதமோ, பகைமையோ கொண்டதில்லை. அல்லாஹ் எனக்கு கொடுத்தைக்கொண்டு நான் திருப்தி கொள்கின்றேன். எந்த சந்தர்ப்பத்திலும் பிறருக்கு வழங்கப்பட்டிருக்கும் எந்த பாக்கியத்தின் மீதும் நான் பொறாமை கொண்டதில்லை. என்றார்”. அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள், ‘இந்தவிஷயமே எம்மால் செய்ய முடியாத காரியமாகும். (ஹதீஸின் சுருக்கம்) ( நூல்: அஹ்மத், முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக், பஜ்ஜார், நஸாயி )

قال أحد الحكماء: من طلب الله بالصدق، أعطاه مرآة يبصر فيها الحق والباطل. وقيل إن ربعي بن حراش لم يكذب كذبة قط، وكان له ابنان عاصيان على الحجاج فطلبهما، فلم يعثر عليهما فقيل للحجاج: إن أباهما لم يكذب كذبة قط لو أرسلت إليه فسألته عنهما. فاستدعى أباهما فقال: أين أبناؤك؟ قال هما في البيت فأستغرب الحجاج، وقال لأبيهما: ما حملك على هذا وأنـا أريد قتلهما، فقال: لقد كرهت أن ألقى الله تعالى بكذبة فقال الحجاج: قد عفونا عنهما بصدقك ... ذاك والله الصدق

ஞான மேதைகளில் ஒருவர் கூறுகின்றார்கள்:- "எவர் வாய்மையான சொல்லை பேசுவதன் மூலம் அல்லாஹ்வை தேடுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துப் பார்க்கும் மகத்தான சக்தியை வழங்குவான்‌.

ஹஜ்ஜாஜின் காலத்தில் வாழ்ந்த ரிப்ஈ இப்னு ஹிராஸ் (ரஹ்)  வாழ்நாளில் ஒரு முறை கூட பொய்யே பேசியதில்லை.

அவர்களுக்கு இரண்டு ஆண் மக்கள் உண்டு. அந்த ஆண் மக்கள் இருவரும் ஹஜ்ஜாஜுக்கு எதிராக புரட்சி செய்பவர்களில் உள்ளவர்கள். நீண்ட நாட்களாக அவர்களை ஹஜ்ஜாஜ் தேடிக் கொண்டு இருந்தார்.

ஆனால், அவர்கள் எங்கு தலைமறைவாக இருக்கின்றார்கள் என்று ஹஜ்ஜாஜின் படை வீரர்களுக்கு தெரியவில்லை. ஒரு கட்டத்தில் தேடித் தேடி அவர்கள் சோர்ந்தும் போய் விட்டனர்.

இப்படியாக, இருவரும் தேடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஹஜ்ஜாஜிடம் ஒருவர் வந்து"நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் அந்த இரு இளைஞர்களின் தந்தையிடம் சென்று அவர்கள் எங்கு தலைமறைவாக இருக்கின்றார்கள்? என்று கேட்டு விட வேண்டியது தானே?! அவர் அவர்கள் தலைமறைவாக இருக்கும் இடத்தை சொல்லி விடப்போகிறார். ஏனெனில், அவர்களின் தந்தை தம் வாழ்நாளில் இது வரை பொய் பேசியதே இல்லையாம்" என்று மக்கள் பிரபல்யமாக பேசிக் கொள்கிறார்கள் என்றார்.

இதைக் கேட்ட ஹஜ்ஜாஜ் வேகமாக ரிப்ஈ இப்னு ஹிராஸ் (ரஹ்) அவர்களின் இல்லத்திற்கு வந்து "உமது இரண்டு மகன்களும் எங்கே தலைமறைவாக இருக்கின்றார்கள்? என்று கேட்டார்.

அதைக் கேட்ட ரிப்ஈ (ரஹ்) அவர்கள்"எனது இரண்டு மகன்களும் வீட்டின் உள்ளே தான் இருக்கின்றனர்" என்றார்கள்.

ஹஜ்ஜாஜ் ரிப்ஈ (ரஹ்) அவர்களின் இரண்டு மகன்களையும் தமது கஸ்டடியில் எடுத்து விட்டு, எமது ஆட்சிக்கு எதிராக புரட்சி செய்து வரும்  உமது இரண்டு ஆண் மக்களையும் கொல்வதற்காகவே  இது  வரை நான் தேடியலைந்தேன்.

"உம்மிடம் கேட்டதும் தாமதிக்காமல் வீட்டில் தான் இருக்கின்றார்கள் என்று எப்படி கொஞ்சம் கூட தயங்காமல் உண்மை கூறினீர்" என்று கேட்டார் ஹஜ்ஜாஜ்.

அப்போது, ரிப்ஈ இப்னு ஹிராஸ் (ரஹ்) அவர்கள் "நாளை மறுமையில் ஒரு பொய்யனாக அல்லாஹ்வை சந்திப்பதை நான் வெறுக்கின்றேன்" என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட ஹஜ்ஜாஜ், "நீர் பேசிய உண்மையின் காரணமாக "மரண தண்டனை விதிக்கப்பட்ட உமது இரண்டு மகன்களின் தண்டனையும் ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகின்றது" என்றார் ஹஜ்ஜாஜ்.

 

 

 

இறைவா! எங்களது உள்ளத்தை முஸ்லிம்களுக்கு மத்தியில் எந்த வித கோபமும், குரோதமும், பிரச்சினையும் இல்லாத ஈடேற்றமான உள்ளமாக மாற்றுவாயாக!   எங்களுடைய நாவுகளை எப்போதும் உண்மை பேசக் கூடியதாக ஆக்கியருள்வாயாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!