Sunday, 31 March 2024

பூமியின் நிலப்பரப்பில் சிறந்த இடம்!!

 

தராவீஹ் சிந்தனை:-  22. சிறந்த அமல் & சிறந்த காரியம் தொடர்:- 12.

பூமியின் நிலப்பரப்பில் சிறந்த இடம்!!



அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் 21 -ம் நோன்பை நிறைவு செய்து விட்டு, 22 -ம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

அல்ஹம்துலில்லாஹ்! நபி (ஸல்) அவர்கள் சிறப்பு படுத்திக் கூறிய சில செயல்கள் மற்றும் சில காரியங்கள் மற்றும் சில விஷயங்கள்  குறித்து நாம் பார்த்து வருகின்றோம்.

அந்த வகையில் இந்த நாளின் இன்றைய அமர்வில் "பூமியின் நிலப்பரப்பில் சிறந்த இடம் எது?" என்ற கேள்விக்கு நபி மொழியை அடிப்படையாகக் கொண்டு சில விஷயங்களை பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

الإمام ابن حبان البستي في صحيحه من حديث عبد الله بن عمر رضي الله عنه. وأخرجه الإمام الطبراني في المعجم الكبير من حديث عبد الله بن عمر رضي الله عنه أن رجلا سأل النبي صلى الله عليه وسلم: أي البقاع خير؟ وأي البقاع شر؟ قال: «خير البقاع المساجد، وشر البقاع الأسواق».

பூமியின் நிலப்பரப்பில் சிறந்த இடம் எது? பூமியின் நிலப்பரப்பில் வெறுப்பிற்குரிய கெட்ட இடம் எது? என்று ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் கேட்டார். அப்போது நபி ஸல் அவர்கள்:- "பூமியின் நிலப்பரப்பில் சிறந்த இடம் பள்ளிவாசலாகும். பூமியின் நிலப்பரப்பில்  வெறுப்பிற்குரிய இடம் கடைத்தெருவாகும்" என்று  கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) (நூல்: இப்னு ஹிப்பான் )

இவ்வுலகில் எத்தனையோ இடங்கள், பகுதிகள் இருப்பினும், இவை எல்லாவற்றையும் விட பள்ளிவாசல்கள் தான் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமான இடம் என்று மார்க்கம் சொல்கிறது.

உலகிலேயே மிக சிறந்த இடம் அல்லாஹ்வின் மஸ்ஜித்கள் தான்.

மஸ்ஜித்கள் இஸ்லாமிய அடையாளச் சின்னங்கள், அல்லாஹ்வின் அருளை அவனிடமிருந்து நமக்கு பெற்று தரும் சாதனம்.

மஸ்ஜித்கள் மூலம் தான் நமது வீடும், ஊரும்,  நாடும் செழிப்படைகின்றது.

இன்று மஸ்ஜித்களை அழிப்பதற்காக காவிக்கும்பல்களும், இஸ்லாமிய எதிரிகளும் கடுமையான திட்டம் தீட்டி கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள எல்லா மஸ்ஜித்களையும் கோவில்களாக மாற்ற வேண்டும் என்று முனைப்போடு ஈடுபட்டு வருகின்ற இந்த நேரத்தில் பள்ளிவாசல்களின் மகத்துவம் குறித்து அறிந்து கொள்வதும், பிறருக்கு அறியத் தருவதும் நம் மீது கடமையாகும்.

இந்த நேரத்தில் நாம் நமது நபி ஸல் அவர்கள் எச்சரித்துக் கூறிய கால கட்டத்தில் இருக்கின்றோம் என்பதையும் நினைவில் வைத்திருக்க கடமைப்பட்டுள்ளோம்.

மஸ்ஜித்களில் என்ன செய்ய வேண்டும்?

மஸ்ஜிதுகள் எழுப்பப்படுவதன் நோக்கம் குறித்து அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

1. இறைவனை உயர்த்தி அவனுடைய பெயர்களை  திக்ர்'  நினைவு   கூர்வதற்காக....

فِي بُيُوتٍ أَذِنَ اللَّهُ أَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا اسْمُهُ يُسَبِّحُ لَهُ فِيهَا بِالْغُدُوِّ وَالْآصَالِ

இறை) இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் அவனது பெயர் நினைக்கப்படவும்  அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும்,  மாலையிலும் அவனை சில மனிதர்கள் (ஆண்கள்) துதிக்கின்றனர். ( அல்குர்ஆன்:  24: 36 )

2. பிரார்த்தனை செய்வதற்காகவும், இக்லாஸுடன் இறைவனை வணங்குவதற்காக...

قُلْ أَمَرَ رَبِّي بِالْقِسْطِ وَأَقِيمُوا وُجُوهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ كَمَا بَدَأَكُمْ تَعُودُونَ

எனது இறைவன் நீதியைக் கட்டளையிட்டுள்ளான்'' எனக் கூறுவீராக! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் உங்களின் கவனங்களை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள்! வணக்கத்தை அவனுக்கே உளத்தூய்மையுடன் செய்து, அவனிடமே பிரார்த்தியுங்கள்! உங்களை அவன் முதலில் படைத்தவாறே  மீள்வீர்கள்! ( அல்குர்ஆன்:  7: 29 )

மாநபி {ஸல்} அவர்கள் பள்ளிவாசலில் வைத்து பல்வேறு நேரங்களில் ஓதிய 100 க்கும் மேற்பட்ட துஆக்கள், நபித்தோழர்கள், தாபிஈன்கள், இமாம்கள், அறிஞர் பெருமக்கள் தங்களுடைய வாழ்க்கையின் பல்வேறு பட்ட நிலைகளில் மஸ்ஜித்களில் வைத்து கேட்ட பிரார்த்தனைகளின் தொகுப்புகளை பல்வேறு அறிஞர்கள் எழுதியுள்ளனர்.

عن أبي بن كعب رضي الله عنه قال: كان رجل من الأنصار لا أعلم أحدا أبعد من المسجد منه، وكانت لا تخطئه صلاة، فقيل له: لو اشتريت حمارا لتركبه في الظلماء وفي الرمضاء، قال: ما يسرني أن منزلي إلى جنب المسجد، إني أريد أن يكتب لي ممشاي إلى المسجد، ورجوعي إذا رجعت إلى أهلي. فقال رسول الله صلى الله عليه وسلم : «إن لك ما احتسبت»

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அன்சாரிகளில் ஒருவருடைய வீடு மதீனாவிலேயே (பள்ளிவாசலுக்கு) வெகு தொலைவில் அமைந்திருந்தது. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எல்லாத் தொழுகைகளிலும் தவறாமல் கலந்துகொள்வார். நாங்கள் அவருக்காக (வெகு தொலைவிலிருந்து சிரமப்பட்டு வருகிறாரே என்று) அனுதாபப்பட்டோம்.

இதையடுத்து அவரிடம் நான், “இன்னாரே! நீங்கள் கழுதையொன்றை வாங்கி (அதில் பயணம் செய்து வருவீரா)னால் நன்றாயிருக்குமே! கடும் வெப்பத்திலிருந்தும் விஷ ஜந்துக்களிலிருந்தும் உங்களைக் காத்துக் கொள்ளலாமே?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனது இல்லம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய இல்லத்துடன் (மஸ்ஜிதுந் நபவீ அருகிலேயே கயிறுகளால் இணைத்துக்) கட்டப்பட்டிருக்க வேண்டும் என நான் விரும்பவில்லைஎன்று கூறினார்.

அவர் அவ்வாறு கூறியது எனக்கு மிகுந்த மன வேதனையளிக்கவே நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தேன். நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்(து விசாரித்)தார்கள். அவர் முன்பு (என்னிடம்) கூறியதைப் போன்றே  கூறினார். மேலும், தம் கால் சுவடுகளுக்கு நன்மை பதிவு செய்யப்பட வேண்டுமெனத் தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் எதிர்பார்த்த நன்மை உங்களுக்கு உண்டுஎன்று கூறினார்கள்.  ( நூல்: முஸ்லிம் )

فقال: ما يَسُرُّني أنَّ منزلي إلى جَنْبِ المسجدِ، إِنِّي أريدُ أنْ يُكتبَ لي ممشايَ إلى المسْجدِ، ورُجوعِي إذا رَجَعتُ إِلى أَهْلِي، فقَالَ رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم: «قد جمَعَ اللهُ لك ذلك كلَّه» رواه مسلم.

நான் பள்ளிவாசலுக்கு நடந்துவருவதும் (பள்ளிவாசலில் இருந்து) இல்லத்தாரிடம் திரும்பிச் செல்வதும் எனக்கு (நன்மைகளாக)ப் பதிவு செய்யப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன்என்று அந்த மனிதர் கூறியதாகவும் அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவை அனைத்தையும் சேர்த்து அல்லாஹ் உங்களுக்கு வழங்கிவிட்டான்என்று கூறியதாகவும் முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.

3. தொழுகையை நிலை நாட்டுவதற்காக....

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 عن أنس بن مالك قال : إن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فنزل في علو المدينة في حي يقال لهم بنو عمرو بن عوف ، فأقام فيهم أربع عشرة ليلة ، ثم إنه أرسل إلى ملإ بني النجار فجاءوا متقلدين بسيوفهم ، قال : فكأني أنظر إلى رسول الله على راحلته وأبو بكر ردفه ، وملأ بني النجار حوله حتى ألقى بفناء أبي أيوب ، قال : فكان رسول الله يصلي حيث أدركته الصلاة ، ويصلي في مرابض الغنم ، ثم إنه أمر بالمسجد ، قال : فأرسل إلى ملإ بني النجار فجاءوا ، فقال : ” يا بني النجار ، ثامنوني بحائطكم هذا ” قالوا : لا والله لا نطلب ثمنه إلا إلى الله ، قال أنس : فكان فيه ما أقول ، كان فيه نخل وقبور المشركين وخرب ، فأمر رسول الله بالنخل فقطع ، وبقبور المشركين فنبشت ، وبالخرب فسويت ، قال : فصفوا النخل قبلة ، وجعلوا عضادتيه حجارة ، قال : فكانوا يرتجزون ورسول الله معهم ، وهم يقولون : اللهم إنه لا خير إلا خير الآخره ، فانصر الأنصار والمهاجره.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பிறந்தகத்தைத் துறந்து) மதீனாவுக்கு வந்தபோது மதீனாவின் மேட்டுப் பாங்கான பகுதியில் இறங்கி, “பனூ அம்ர் பின் அவ்ஃப்என்றழைக்கப்பட்டுவந்த ஒரு குடும்பத்தாரிடையே பதிநான்கு நாட்கள் தங்கினார்கள். பிறகு பனூ நஜ்ஜார் கூட்டத்தாருக்கு (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினார்கள். பனூநஜ்ஜார் கூட்டத்தார் (நபியவர்களை வரவேற்கும் முகமாகத்) தம் வாட்களை (கழுத்தில்) தொங்கவிட்டபடி வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகன(ஒட்டக)த்தில் அமர்ந்திருக்க, அவர்களுக்குப் பின்னால் அபூபக்ர் (ரலி) அவர்கள் அமர்ந்திருக்க, பனூநஜ்ஜார் கூட்டத்தார் புடைசூழ அவர்களைக் குழுமியிருந்த காட்சியை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. இறுதியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாகனம் அபூஅய்யூப் (ரலி) அவர்களின் வீட்டு முற்றத்தில் அவர்களை இறக்கிவிட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகை நேரம் வந்தடையும் இடத்திலேயே தொழுகையை நிறைவேற்றுவார்கள்; ஆட்டுத் தொழுவங்களிலும் தொழுவார்கள். (இது அவர்களது வழக்கமாக இருந்தது.) இந்நிலையில்தான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் கட்டும்படி உத்தரவிட்டார்கள். பனூநஜ்ஜார் கூட்டத்தாரை (அழைத்துவரச் சொல்லி) ஆளனுப்பினார்கள். அவர்கள் வந்த போது, “பனூநஜ்ஜார் கூட்டத்தாரே! உங்களுடைய இந்தத் தோட்டத்தை எனக்கு விலைபேசி (விற்று)விடுங்கள்என்று கேட்டார்கள். அதற்கு அக்கூட்டத்தார், “இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கான விலையை நாங்கள் அல்லாஹ்விடமே கோருவோம்என்று கூறி (அத்தோட்டத்தை அளித்த)னர்.

நான் (உங்களிடம்) கூறவிருப்பவைதாம் அத்தோட்டத்தில் இருந்தன: அதில் சில பேரீச்ச மரங்கள்,இணைவைப்பாளர்களின் சமாதிகள், இடிபாடுகள் ஆகியவைதாம் இருந்தன. எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசல் கட்டும்போது அங்கிருந்த) பேரீச்ச மரங்களை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவை வெட்டப்பட்டன. இணைவைப்பாளர் களின் சமாதிகளைத் தோண்டி (அப்புறப் படுத்தி)டுமாறு உத்தரவிட அவ்வாறே அவை தோண்டப்பட்டன. இடிபாடுகளை (அகற்றி)ச் சமப்படுத்தும்படி உத்தரவிட அவ்வாறே அவை சமப்படுத்தப்பட்டன.

பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் பேரீச்ச மரங்களை வரிசையாக நட்டனர். பள்ளிவாசலின் (நுழைவாயிலின்) இரு நிலைக் கால்களாகக் கல்லை (நட்டு)

வைத்தனர். அப்போது ரஜ்ஸ்எனும் ஒருவித யாப்பு வகைப் பாடலை பாடிக்கொண்டிருந்தனர். அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (பாடியபடி பணியில் ஈடுபட்டு) இருந்தார்கள்.

இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை கிடையாது; ஆகவே, (மறுமையின் நன்மைகளுக்காகப் பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ உதவி செய்வாயாக!என்று அவர்கள் பாடினர். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ( நூல்: புகாரி )

 

عن جابر بن عبد الله قال: خلت البقاع حول المسجد، فأراد بنو سلمة أن ينتقلوا إلى قرب المسجد، فبلغ ذلك رسول الله ﷺ، فقال لهم: إنه بلغني أنكم تريدون أن تنتقلوا قرب المسجد قالوا: نعم، يا رسول الله قد أردنا ذلك، فقال: يا بني سلمة دياركم تكتب آثاركم، دياركم تكتب آثاركم

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைச் சுற்றி காலி மனைகள் இருந்தன. பனூசலமா குலத்தார் பள்ளிவாசலுக்கு அருகிலேயே குடியேற விரும்பினர். இந்த விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், “நீங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு அருகில் குடியேறப்போவதாக நான் அறிந்தேனே (அது உண்மையா)?” என்று கேட்டார்கள்.

அதற்கு பனூசலமா குலத்தார் ஆம், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அவ்வாறு விரும்பினோம்என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பனூசலமா குலத்தாரே! உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! உங்கள் காலடிகள் (அளவுக்கு நன்மைகள்) பதிவு செய்யப்படும்; உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! உங்கள் காலடிகள் (அளவுக்கு நன்மைகள்) பதிவு செய்யப்படும்என்று (இரு முறை) கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

4. மார்க்க ஞானம் கற்கும் இடமாக, மார்க்க ஞானம் கற்கப்படும் இடமாக..

ஸலஃபுகளான மேன்மக்கள் மஸ்ஜித்களில் அமர்ந்து மார்க்க ஞானத்தை போதிப்பதையும், மார்க்க ஞானம் போதிக்கும் சபைகளில் சங்கமிப்பதையும் வெகுவாக பேணி வந்தார்கள்.

காரணம் பின் வரும் நபி மொழி தான். நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரமும், நபி ஸல் அவர்களின் அமர்வும் தான்.

أن النبي صلى الله عليه وسلم دخل المسجد فإذا هو بحلقتين إحداهما يقرأون القرآن ويدعون الله تعالى، والأخرى يتعلمون فقال صلى الله عليه وسلم كل على خير، هؤلاء يقرأون القرآن ويدعون الله تعالى فإن شاء أعطاهم وإن شاء منعهم، وهؤلاء يتعلمون، وإنما بعثت معلما فجلس معهم.

நபி (ஸல்) அவர்கள் தமது மஸ்ஜித் நபவியில் நுழைந்து, இரண்டு சபையினரை கடந்து சென்றார்கள். அப்போது, ‘அவர்கள் இரு சாராருமே நன்மையான காரியத்தில்தான் உள்ளனர் (என்றார்கள்), எனினும் அவ்விருசாராரில் ஒரு சாரார் மிகவும் சிறப்பு வாய்ந்தவர், என்றார்கள். இதோ ஒரு சாரார் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். மேலும் அவனிடம் அருளை எதிர்பார்க்கின்றனர். இறைவனை நாடினால் அவன் அவர்களுக்கு கொடுப்பான்; அல்லது கொடுக்காமலும் இருப்பான். மற்றொரு சாராரோ அவர்கள் கல்வி ஞானத்தை தானும் கற்று, அதை அறியாத மக்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். எனவே இவர்கள் தாம் மிகச் சிறந்தவர்கள். நானும் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகத்தான் இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளேன்என்று கூறிவிட்டு, அந்த சபையினரிலேயே அமர்ந்து விட்டார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), ( நூல்: இப்னுமாஜா )

மஸ்ஜிதோடு தொடர்பில் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்...

قد أخرج البخاري ومسلم عن أبي هريرة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: سَبْعَةٌ يُظِلُّهُمْ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لا ظِلَّ إِلا ظِلُّهُ: إمَامٌ عَادِلٌ، وَشَابٌّ نَشَأ فِي عِبَادَةِ الله عز وجل، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ بالْمَسَاجِدِ، وَرَجُلَانِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَى ذلك وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ عز وجل، وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ".

அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம் )

நாம் மஸ்ஜிதோடு ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் கிடைப்பதோடு நாம் எதன் மூலம் தொடர்பில் இருக்கின்றோமோ அதன் நன்மைகளும் கிடைக்கும்.

1. மஸ்ஜிதை தூய்மைப்படுத்தும் பணி மூலமாக....

في الصحيحين من حديث عائشة قالت "رأى في جدار القبلة مخاطا أو بصاقا أو نخامة فحكها " رواه البخاري 407 ومسلم 549 .

கிப்லா திசையில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். இது அவர்களுக்கு மன வருத்தத்தை அளித்தது. அதன் பிரதிபலிப்பு அவர்களின் முகத்திலும் காணப்பட்டது. உடனே அவர்கள் எழுந்து தமது கையால் அதைச் சுரண்டினார்கள். .அறிவிப்பவர்: அனஸ் (ரலி) ( நூல்: புகாரி )

مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى قَبْرِ فِيهِ مَيِّتُ دُفِنَ حَدِيثًا ، فَسَأَلَ أَصْحَابَهُ عَنْهُ فَقَالَ الصَّحَابَةُ : إِنَّهُ قَبْرُ أُمَّ مِحْجَنٍ، وَهِيَ المَرْأَةُ الَّتِي كَانَتْ تُنَظفُ الْمَسْجِدَ، فَعَاتَبَهُمُ النَّبي لا لِأَنَّهُمْ لَمْ يُخْبِرُوهُ بِمَوْتِهَا ، فَيُصَلِّي عَلَيْهَا صَلَاةَ الجِنَازَةِ وَقَالَ: (أَفَلَا آذَنْتُمُونِي؟ فَقَالُوا: كُنْتَ نَائِمًا فَكَرِهْنَا أَنْ نُوقِظَكَ، فَصَلَّى عَلَيْهَا الرَّسُولُ. (مُسْلِم)

மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த ஒரு கறுப்புப் பெண்இறந்துவிட்டார். ஆகவே அவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அப்போது மக்கள், “அவர் உம்மு மிஹ்ஜன் (ரலி) இறந்துவிட்டார்’’ எனக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அது பற்றி (முன்பே) என்னிடம் நீங்கள் அறிவித்திருக்கக் கூடாதா? “அவருடைய அடக்கத்தலத்தை எனக்குக் காட்டுங்கள்’’ என்று கூறிவிட்டு அவரது அடக்கத்தலத்திற்குச் சென்று அவருக்காக பிரார்த்தனைத் தொழுகை (ஜனாஸா) தொழுதார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) ( நூல்: புகாரி )

மஸ்ஜித்களின் உள்ளேயோ வெளியேயோ ஏதேனும் அசுத்தத்தை கண்டால் சத்தமில்லாமல் அதை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

பணியாளர்கள் பார்த்துக் கொள்வார்கள். நிர்வாகிகள் கவனித்துக் கொள்வார்கள் என்று கடந்து செல்வதும், அல்லது சம்பந்தப்பட்ட பணியாளரை அழைத்து சுத்தம் செய்யுமாறு சொல்வதும் சிறந்த பண்பல்ல.

உலகின் மிகவும் தூய்மையான மனிதரான, நபிமார்களின் தலைவரான மாநபி (ஸல்) அவர்களை விட இங்கு யாரும் உயர்ந்தவர்கள் இல்லை. எனவே, உடனடியாக அதை சுத்தம் செய்ய முன் வர வேண்டும்.

2. பரிபாலனம் செய்யும் நிர்வாக அலுவல் மூலமாக....

اِنَّمَا يَعْمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَاَ قَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّكٰوةَ وَلَمْ يَخْشَ اِلَّا اللّٰهَ‌ فَعَسٰٓى اُولٰۤٮِٕكَ اَنْ يَّكُوْنُوْا مِنَ الْمُهْتَدِيْنَ‏

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.( அல்குர்ஆன்: 9: 18 )

3. மஸ்ஜிதின் பரிபாலனத்திற்கு உதவி செய்பவர்களாக...

وقال المؤرخون، حمل تميم من الشام إلى المدينة قناديل وزيتاً ومقطاً «حبل»، ووافق ذلك ليلة الجمعة فأمر غلاماً يقال له أبو البزاد فقام فنشط المقط وعلق القناديل وصب فيها الماء والزيت وجعل فيها الفتيل، فلما غربت الشمس أمر أبا البزاد فأسرجها، وخرج الرسول صلى الله عليه وسلم، إلى المسجد، فإذا بها تزهر، فقال من فعل هذا؟، قالوا تميم الداري يا رسول الله، فقال: نورت الإسلام نور الله عليك في الدنيا والآخرة»،

தமீமுத்தாரி (ரலி)அவர்கள் ஃபாலஸ்தீன் சென்ற போத விளக்கு போன்று வெளிச்சம் தரும் ஒரு பொருளை வாங்கி வந்தார்கள். அதில் தொங்க விடும் கயிறு, திரி வைத்து எரிய விடுவதற்கு கண்ணாடி குடுவை, ஜைத்தூன் எண்ணெய் ஆகியவை இருந்தன. அவர்கள் ஊர் திரும்பி வந்த அந்த நாள் ஜும்ஆ நாளின் இரவாக இருந்தது.

உடனடியாக தமது பணியாளர் அபுல் புஸாதை அழைத்து, அந்த விளக்கை மஸ்ஜிதுன் நபவியில் தொங்க விடச் சொன்னார்கள். பின்னர் மக்ரிப் நேரத்தில் விளக்கு ஏற்றி வைக்குமாறு தம்முடைய பணியாளரிடம் கூறினார்கள்.

மாநபி ஸல் அவர்கள் தொழுகைக்கு மஸ்ஜிதுன் நபவீயிக்குள் பிரவேசிக்கும் போது விளக்கு வெளிச்சத்தில் மஸ்ஜிதுன் நபவி மிக பிரகாசமாக இருந்ததை பார்த்த நாயகம் (ஸல்) அவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்து  யார் இதை செய்தது என்று கேட்க?!தமீமுத்தாரி (ரலி) அவர்கள் தான் செய்தார்கள் என்று நபித்தோழர்கள் சொல்ல, பெருமானார் (ஸல்) அவர்களுக்காக நிறைய துஆ செய்தார்கள். நீங்கள் மஸ்ஜிதை ஒளியாக்கியதற்க்காக அல்லாஹ் உம்முடைய துன்யாவையும்,
ஆகிரத்தையும்  ஒளியாக்குவானாக!  என்று சொன்னார்கள்

இன்னொரு அறிவிப்பில்...சொல்லி விட்டு...   "என்னுடைய எல்லா பெண் மக்களையும் மணம் முடித்து கொடுத்து விட்டேன் இப்போது எனக்கு பெண் மக்கள் இருந்தால் உமக்கு நிக்காஹ் செய்து கொடுத்திருப்பேன்! என்று மிகுந்து மகிழ்ச்சியோடு சொன்னார்கள் என்றும் இடம் பெற்றுள்ளது.

وقال النبي صلى الله عليه وسلم: «من أسرج في مسجد سراجاً لم تزل الملائكة وحملة العرش يصلون عليه ويستغفرون له ما دام ذلك الضوء فيه»

எவர் மஸ்ஜிதை விளக்கு மூலம் வெளிச்சமாக்கி வைக்கின்றாரோ, வானவர்களும், அர்ஷை சுமக்கும் வானவர்களும் அந்த விளக்கு ஒளி தரும் காலம் முழுவதும் அவரின் பாவமன்னிப்புக்காக பிரார்த்தனை செய்கின்றனர்" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

4. பள்ளிவாசலை கட்டுவதன் மூலம் அல்லது விஸ்தரிப்புக்கு உதவுவதன் மூலமாக....

جاء في مسند الإمام أحمد عن ثُمامة بن حَزْن القُشَيْري قال: (أنَّ رسولَ اللهِ -صلى اللهُ عليه وسلَّم- وبعد بني  مسجده وكثر المصلون والعباد، ضاق بهم المسجد وتمنى النبي صلى الله عليه وسلم أن يشتري أحد أصحابه الأغنياء الأرض المجاورة للمسجد ليضمها إليه، فقال مرغبًا: "من يشتري هذه البقعة من خالص ماله فيكون فيها كالمسلمين وله خير منها في الجنة؟" فأسرع عثمان واشترى تلك الرقعة من الأرض بخمسة وعشرين ألفًا، وبعد فتح مكة رأى النبي صلى الله عليه وسلم أن يوسع المسجد الحرام، فعرض على أصحاب أحد البيوت الواسعة الملاصقة للمسجد أن يتبرعوا به، فاعتذروا بأنهم لا يملكون سواه وليس عندهم مؤنة ما يستطيعون تشييد بيت غيره، فترامت الأنباء إلى عثمان، فأقبل إليهم واشتراه بعشرة آلاف دينار، وضمه للمسجد الحرام، فاشتريتُها من خالصِ مالي فجعلتُها بين المسلمينَ

 

அல்லாஹ்வின் மார்க்கத்தில் சாரை சாரையாய் மக்கள் இணைந்து 

கொண்டிருந்த தருணம், மஸ்ஜித் நபவீ நெருக்கடியில் திக்குமுக்காடியது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகிலிருக்கும் இடத்தை யாராவது பெற்றுத்தந்தால் மஸ்ஜித் நவபீயை இன்னும் விஸ்தரித்து இட நெருக்கடியை குறைத்து கொள்ளலாமே என தமது விருப்பத்தை வெளிப்படுத்திய போது உஸ்மான் (ரலி) அவர்கள்15,000 தீனார் கொடுத்து மஸ்ஜிதுக்கு அருகாமையில் இருந்த இடத்தை வாங்கி அர்ப்பணித்தார்கள்.

மாபெரும் வெற்றியான ஃபத்ஹ் மக்காவிற்குப்பின் இஸ்லாமிய எழுச்சி ஹரம் ஷரீஃபிலும் எதிரொலித்தது!  ஆம் அங்கும் இட நெருக்கடி 10,000  தீனார் விலை கொடுத்து அருகே இருந்த இடத்தை வாங்கி (விஸ்தரிக்க)  அற்பணித்தார்கள்.

முஸ்லிம்களின் தேவைகள் அதிகமான போதெல்லாம் தாமாகவே முன்வந்து ஒவ்வொரு முறையும் உஸ்மான் (ரலி) அவர்கள் இறை திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தமது செல்வத்தின் மூலம் பல சமூக சேவைகள் புரிந்துள்ளார்கள். ( நூல்: குலஃபாவுர் ரஸுல் (ஸல்) பக்கம் 185, 186, முஸ்னத் அஹ்மத் )

لما شكا الناس إلى عثمان ضيق المسجد، وطلبوا منه أن يزيد فيه، رأى أن يستشير أهل الرأي من صحابة الرسول  قبل أن يفعل شيئاً، فعرض عليهم الأمر وطلب منهم المشورة. وفي الصحيحين: لما أراد عثمان بناء المسجد، كره الناس ذلك وأحبوا أن يدعه على هيئته، فقال: إنكم قد أكثرتم وإني سمعت رسول الله يقول:- مَنْ بَنَى مَسْجِدًا لِلَّهِ تَعَالَى، ‏قَالَ ‏بُكَيْرٌ ‏حَسِبْتُ أَنَّهُ قَالَ يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّه، بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ[ (صحيح مسلم، الحديث الرقم 828)

உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டிய (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (விரிவுபடுத்தி)க் கட்ட எண்ணியபோது அது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் (மக்களிடம்), “நீங்கள் மிக அதிகமாகவே பேசிவிட்டீர்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யார் அல்லாஹ்வுக்காகப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்’’ என்று கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

5. மஸ்ஜிதை நேசிப்பதன் மூலமாக....

ويدل عليه رواية أحمد ((معلق بالمساجد)) وكذا رواية سلمان ((مِنْ حُبِّها))، وزاد مالك: ((إذا خرج منه حتى يعود إليه))، وهذه الْخَصلة هي المقصودة من هذا الحديث؛ (فتح الباري 2/145)

 

قال ابن رجب رحمه الله، في وصف الرجل المعلَّق قلبُه بالمساجد: فهو يحب المسجد ويألفه لعبادة الله فيه، فإذا خرج منه تعلَّق قلبه به حتى يرجع إليه،

அர்ஷின் நிழலைப் பெற்றுத் தரும் "பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதர்" என்பதற்கு மஸ்ஜிதை நேசிப்பவர் என்று பொருள் கொள்ளப்படும் படும் என்று ஸல்மான் (ரலி) அவர்களும், 

பள்ளிவாசலை விட்டு வெளியே வந்தால் மீண்டும் எப்போது பள்ளிவாசலுக்கு செல்லப் போகிறோம் என்ற ஏக்கம் மனதில் நிழலாடிக்‌ கொண்டிருப்பதற்கு சொல்லப்படும் என்று இமாம் மாலிக் (ரஹ்) அவர்களும், இப்னு ரஜப் ஹம்பலீ (ரஹ்) அவர்களும் விளக்கம் தருகின்றார்கள். ( நூல்: ஃபத்ஹுல் பாரி, ஃபைளுல் கதீர் )

قال المباركفوري في التحفة: لأن المؤمن في المسجد كالسمك في الماء، والمنافق في المسجد كالطير في القفص،

இமாம் முபாரக்பூரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: மஸ்ஜிதின் விஷயத்தில் இறைநம்பிக்கையாளனின் மனசு நீரில் நீந்திச் செல்லும் மீனுக்கும், முனாஃபிக்கின் - நயவஞ்சகனின் விஷயத்தில் கூண்டில் இருக்கும் பறவைக்கும் ஒப்பானதாகும்.

மீனை நீரில் இருந்து பிரித்து விட்டால் மீன் துடி துடித்து விடும், பறவையோ எப்போது கூண்டு திறக்கப்படும் நாம் பறந்து செல்லலாம் என துடியாய் துடித்துக் கொண்டிருக்கும். ( நூல்: துஹ்ஃபா )

முன்னோர்களான ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் மஸ்ஜிதுடனான தொடர்புகள்…

كان عبد الله بن الزبير بن العوام رضي الله عنه يُسمَّى "حَمَام المسجد" من كثرة ملازمته للمسجد.

அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரலி அவர்கள் மஸ்ஜிதோடு இருந்த தொடர்பின் காரணமாக "பள்ளிப்புறா" என்று மக்களால் அழைக்கப்பட்டார்கள்.
وها هو مفتي الحرم شيخ الإسلام أبو محمد عطاء بن أبي رباح - رحمه الله - قال عنه ابن جريج: كان المسجد فراش عطاء عشرين سنة، وكان من أحسن الناس صلاة (السير:5/ 84).

தாபிஈ அதாவு இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்களின் தொழுகையைப் பற்றி இப்படி சொல்லப்படுவதுண்டு. மக்களிலேயே மிகவும் அழகிய முறையில் தொழக் கூடியவர்கள்" என்று. சுமார் இருபதாண்டு காலம் மஸ்ஜிதே அவர்களின் தங்குமிடமாக இருந்தது.

وثابت البناني الإمام الرباني - رحمه الله - الذي قال عنه أستاذه وشيخه أنس بن مالك رضي الله عنه إن للخير مفاتيح، وإن ثابتًا مفتاح من مفاتيح الخير".

ஸாபித் இப்னு புனானீ (ரஹ்) அவர்களைப் பற்றி அவர்களின் ஆசிரியர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் "நிச்சயமாக நன்மைகளுக்கு சில திறவுகோல்கள் இருக்கின்றன. ஆனால், ஸாபித் (ரஹ்) இருக்கின்றாரே "நன்மைகளின் திறவுகோல்களை" தருகிற திறவுகோல் ஆவார்கள்" என்பார்கள்.

قال عنه ابن شوذب: "ربما مشينا مع ثابت البناني، فلا يمر بمسجد إلا دخل فصلى فيه".

இப்னு ஷூதப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஸாபித் இப்னு புனானீ (ரஹ்) பல நேரங்களில் பல இடங்களுக்கு சென்றுள்ளேன். எந்த மஸ்ஜிதைப் பார்த்தாலும் உள்ளே சென்று தொழுது விடுவார்கள்.

والإمام المحدث مسند عصره أبو العباس محمد بن يعقوب الأصم - رحمه الله-: قال عنه الحاكم بلغني أنه أذن سبعين سنة في مسجده؛) الأنساب للسمعاني :1/ 295)، (السير:15/ 455).

هذا والله المعلق قلبه في المساجد، يؤذن سبعين سنة، وقد قال رسول الله صلى الله عليه وسلم من أذن اثنتي عشرة سنة، وجبت له الجنة، وكتب له بتأذينه في كل يوم ستون حسنة، وبإقامته ثلاثون حسنة؛ (رواه ابن ماجه والحاكم عن ابن عمر - رضي الله عنهما - وهو في صحيح الجامع

இமாம் ஹாக்கிம் (ரஹ்) அவர்கள் ஹதீஸ் கலை வல்லுநர் அபுல் அப்பாஸ் முஹம்மது இப்னு யஅகூப் அல் அஸம்மு (ரஹ்) அவர்கள் குறித்து கூறுகையில் "சுமார் 70 ஆண்டுகள் அவர்கள் வசித்த பகுதியின் பள்ளிவாசலில் பாங்கு - தொழுகைக்கு அழைப்பு விடுத்தார்கள் என்று எனக்கு அறிவிக்கப்பட்டது. ( அல் அன்ஸாப் லிஸ் ஸம்ஆனீ )

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: எவர் 12 ஆண்டுகள் பாங்கு சொல்வாரோ அவருக்கு சுவர்க்கம் செல்வது கடமையாகி விட்டது. மேலும், ஒருவர் பாங்கு சொல்வதன் மூலமாக ஒவ்வொரு நாளும் 60 நன்மைகளும் இகாமத் சொல்வதன் மூலமாக 30 நன்மைகளும் அவருக்கு எழுதப்படுகிறது. ( நூல்: இப்னு மாஜா, அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

وسفيان الثوري - رحمه الله -: قال عنه ابن وهب: رأيت سفيان في الحرم بعد المغرب صلي، ثم سجد سجدة، فلم يرفع حتى نودي بالعشاء، وقال عليُّ بن الفضيل رأيت الثوري ساجدًا، فطفت سبعة أشواط قبل أن يرفع رأسه

ஸுஃப்யான் அஸ் ஸவ்ரீ (ரஹ்) அவர்களைப் பற்றி இப்னு வஹப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:- ஒரு நாள் நான் ஹரம் ஷரீஃபிலே மக்ரிப் தொழுகைக்கு பிறகு ஸஜ்தா செய்யப் பார்த்தேன். இஷா பாங்கு சொல்லும் போது தான் ஸஜ்தாவில் இருந்து தலையை உயர்த்தினார்கள்.

அலீ இப்னு ஃபுளைல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஒரு நாள் நான் ஹரம் ஷரீஃபிலே  ஸுஃப்யான் அஸ் ஸவ்ரீ (ரஹ்) அவர்களை ஸஜ்தா செய்யப் பார்த்தேன். அவர்கள் தலையை உயர்த்துவதற்குள் ஏழு தவாஃப் செய்து முடித்து விட்டேன் " என்றார்கள்.

وعمارة المساجد دأبُ الصحابة رضي الله عنهم، والتابعين، والصالحين رحمهم الله؛ قال الإمام الأوزاعي رحمه الله: "خمس كان عليها الصحابة والتابعون لهم بإحسان: لزوم الجماعة، واتباع السنة، وعمارة المساجد، والتلاوة، والجهاد"،

அவ்ஜாயீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து விஷயங்களில் நபித்தோழர்கள் மற்றும் தாபிஈன்கள் மிகவும் பேணுதலோடு காணப்பட்டார்கள். 1. மஸ்ஜித் பரிபாலனம் செய்வது. 2. ஜமாஅத் தொழுகையை கடைபிடிப்பது. 3. ஸுன்னாவை பின்பற்றுவது. 4. குர்ஆன் ஓதுவது. 5. தஹஜ்ஜத் தொழுவது.

قال عمرو ميمون الأودي رحمه الله: "أدركت أصحاب محمد صلى الله عليه وسلم

وهم يقولون: إن المساجد بيوت الله في الأرض، وإنه حق على الله أن يُكرِمَ مَن زاره فيها، وأقام شرعه فيها، ورفعها عن الدَّنَس والشرك".

அம்ர் இப்னு மைமூனுல் அவ்தீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:- நபித்தோழர்கள் "மஸ்ஜித்கள் பூமியின் மேற்பரப்பில் உள்ள அல்லாஹ்வின் இல்லங்களாகும். எவர் மஸ்ஜிதுக்கு வருகை தருவாரோ, ஷரீஆவின் சட்டதிட்டங்களை நிலை நிறுத்துவாரோ, மஸ்ஜிதில் இருந்து அசுத்தத்தையும், ஷிர்க்கான பாவமான காரியங்களையும் அகற்றுவாரோ அவரை கண்ணியம் செய்வதை அல்லாஹ் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்.

இந்த நிலைகள் மஸ்ஜித்களில் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.

من أشراط الساعة أن يعلو صوت الفاسق فيها:
قال عطاء بن يسار رحمه الله: "من أشراط الساعة عُلُوُّ صوت الفاسق في المساجد".

பாவிகள் மஸ்ஜிதின் முற்றத்தில் வந்து தங்கள் குரலை உயர்த்திப் பேசுவது மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும் என்று அதாவு இப்னு யஸார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

من أشراط الساعة أن تُتَّخذ المساجد طُرقًا:
قال عبدالله بن مسعود رضي الله عنه: "كان يُقال: من أشراط الساعة أن يُسلم الرجل على الرجل للمعرفة، وتُتَّخذ المساجد طُرُقًا".

தங்களுக்கு அறிந்தவர்களுக்கு மட்டும் ஸலாம் சொல்கிற போக்கும், மஸ்ஜித்களை நடைபாதையாக மக்கள் பயன்படுத்தும் போக்கும் மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும் என்று இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் கூறினார்கள்.



يأتي زمان يجلس الناس في المساجد همتهم الدنيا:
قال عبدالله بن مسعود رضي الله عنه: "سيأتي على الناس زمان يقعدون في المساجد حِلَقًا حلقًا، إنما همتهم الدنيا، فلا تجالسوهم؛ فإنه ليس لله فيهم حاجة".

ஒரு காலம் வரும் மக்கள் மஸ்ஜிதில் வட்டமாக ஆங்காங்கே அமர்ந்து பேசுவார்கள். அவர்களின் பேச்சும், கவலையும் உலகம் தொடர்புடையதாக இருக்கும். அப்படியான சபையினரோடு நீங்கள் அமராதீர்கள் என்று இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் கூறினார்கள்.
منع الصبيان من اللعب في المساجد:
قال الحافظ ابن رجب رحمه الله: "رُوي عن بعض السلف أن أول ما استنكر من أمر الدين لعب الصبيان في المساجد".

இப்னு ரஜப் ஹம்பலீ (ரஹ்) ஸலஃபுகள் கூறியதாக கூறினார்கள்:- தீனுடைய விஷயங்களில் துவக்கமாக எழும் குழப்பங்களில் அதிகமாக நிகழ்வது குழந்தைகள் மஸ்ஜித்களில் வந்து விளையாடுவார்கள். 

மஸ்ஜித்களை நேசிப்போம்! மாண்பாளனான அல்லாஹ்வின் மகத்தான தனிப் பெரும் கருணையை வாழ்வு முழுவதும் அனுபவிப்போம்!!

Saturday, 30 March 2024

உலகின் தண்ணீரில் சிறந்த தண்ணீர் ஜம்ஜம் தண்ணீர்!!

 

தராவீஹ் சிந்தனை:- 21. சிறந்த அமல் & சிறந்த காரியம் தொடர்:- 11.

உலகின் தண்ணீரில் சிறந்த தண்ணீர் ஜம்ஜம் தண்ணீர்!!


அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் 20 -ம் நோன்பை நிறைவு செய்து விட்டு, 21 -ம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

அல்ஹம்துலில்லாஹ்! நபி (ஸல்) அவர்கள் சிறப்பு படுத்திக் கூறிய சில செயல்கள் மற்றும் சில காரியங்கள் மற்றும் சில விஷயங்கள்  குறித்து நாம் பார்த்து வருகின்றோம்.

அந்த வகையில் இந்த நாளின் இன்றைய அமர்வில் "உலகின் தண்ணீரில் சிறந்த தண்ணீர் எது?" என்ற கேள்விக்கு நபி மொழியை அடிப்படையாகக் கொண்டு சில விஷயங்களை பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

أخرج ابن حبان والطبراني في الكبير من حديث ابن عباس - رضي الله عنهما - قال: قال رسول الله صلى الله عليه وسلم: "خَيرُ مَاءٍ عَلىَ وَجْهِ الأرْضِ مَاءُ زَمْزَمَ، فِيهِ طَعَامٌ مِنْ الطعْمِ، وَشِفاءٌ مِنْ السقْمِ

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:- பூமியில் உள்ள எல்லா நீரை விடவும் ஜம்ஜம் நீர் சிறந்ததாகும் மேலும், பசிக்குஉணவாகவும் நோய்களுக்கு நிவாரணமாகவும்" இருக்கின்றது. ( அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), தப்ரானீ 11167, இப்னு ஹிப்பான் ) 

وفي حديث أبي ذر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم  قال في ماء زمزم : " إنها مباركة إنها طعام طعم "  رواه مسلم

நபிகளார் (ஸல்) கூறினார்கள்: இந்தத் தண்ணீர் அருள் வளம் (பரக்கத்) நிரம்பியதாகவும் உணவாகவும் நோய்களுக்கு நிவாரணமாகவும் இருக்கின்றது. அறிவிப்பாளர்: அபூதர் (ரலி), ஸஹீஹ் முஸ்லிம் 6513,

عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه وسلم ماء زمزم لما شرب له ان شربته تشتشفي به شفاك الله وان شربته لشبعك اشبعك الله به وان شربته لقطع ظمئك قطعه وهي هزمه جبرئيل وسقيا الله اسماعيل- ( دار قطني والحاكم)

ஜம் ஜம் நீர் எந்த நோக்த்திற்காக அருந்தப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேறும் நோய் குணமடைய வேண்டும் என்கின்ற நோக்கத்தில் அருந்தப்பட்டால் நோய் குணமாகும் பசி தீர வேண்டுமென அருந்தினால் பசி தீர்ந்து விடும் ( நூல் ஹாகிம் தார குத்னி)

ஜம்ஜம் நீரின் தனித்துவமான சிறப்புக்கள்..

இந்த மூன்று நபிமொழிகளின் மூலமாக ஜம்ஜம் நீரின் புனிதத்தை இந்த உம்மத் விளங்கிக் கொள்ள முன்வர வேண்டும். ஆறு சிறப்புகள் ஜம்ஜம் நீருக்கு இருக்கின்றன.

1.உலகின் சிறந்த நீர். 2. பரக்கத் நிறைந்தது. 3. நிய்யத் கபூலாகும். 4. பசிக்கு உணவு, 5.நோய்க்கு நிவாரணம், 6. தாகம் தீர்க்கும்.

وهو” سيد المياه وأشرفها وأجلها قدرا، وأحبها إلى النفوس، وأغلاها ثمنا، وأنفسها عند الناس، وسقيا الله إسماعيل” وهو الذي غُسل به صدر النبي صلى الله عليه وسلم مرتين فملئ حكمة وإيمانا

இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுவார்கள்: ஜம்ஜம் நீர் உலகின் அனைத்து நீர்களிலும் முதன்மையானதாகும். அந்த நீர் தரத்தாலும், உயர்வாலும் சிறந்ததாகும்.

விலைமதிக்க முடியாத மனித மனங்களால் அதிகம் விரும்பப்படும் நீராகும்.

இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாகம் தீர்ப்பதற்காக அல்லாஹ்வால் நிகழ்த்தப்பட்ட பேரற்புதம் ஆகும். நமது நபி ஸல் அவர்களின் இதயம் இருமுறை அந்த நீரால் தூய்மைப்படுத்தப்பட்டு இறைநம்பிக்கை மற்றும் அறிவு ஞானத்தால் நிரப்பப்பட்டது. ( நூல்: ஜாதுல்மஆத் )

ويستحب للحاج والمعتمر عند الفراغ من الطواف بالبيت، وقبل البدء السعي الشرب والتضلع من ماء زمزم اقتداءا برسول الله عليه الصلاة والسلام

ஹஜ் மற்றும் உம்ரா செய்பவர்கள் தவாஃபை நிறைவு செய்த பிறகு ஸயீ செய்யும் முன்பாக மாநபி ஸல் அவர்களின் வழக்கத்தை பின்பற்றும் முகமாக ஜம்ஜம் நீரைக் குடிப்பதும், நிரப்பமாகக் குடிப்பதும், அஹ்மதின் ரிவாயத் ஒன்றில் தலையில் ஊற்றிக் கொள்வதும் விரும்பத்தக்க நடைமுறையாகும்.

ஜம்ஜம் உடைய பரக்கத்தும், கபூலாகும் நிய்யத்தும்…

وقد روي فيه قوله عليه الصلاة والسلام:”ماء زمزم لما شرب له” وهو حديث مختلف في حكمه بين مصحح ومضعف، ولكن العمل عليه عند أهل العلم ربما لاعتبار عموم الأحاديث الواردة في شأنه.

"ஜம்ஜம் நீரை எந்த நோக்கத்திற்காக குறிக்கப்படுகிறதோ அந்த நோக்கத்தை அல்லாஹ் நிறைவேற்றுவான்" என்று நபி ஸல் அவர்கள் கூறியதன் அடிப்படையில் குடிக்கும் முன்பாக நமது நோக்கத்தை மிகவும் உயர்வாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், இந்த நபிமொழி ஸஹீஹா? ளயீஃபா? எனும் அபிப்பிராய பேதம் அறிஞர்கள் இடையே நிகழ்தாலும் பெரும்பான்மையான அறிஞர்கள் கூற்றுப்படியும், நபித்தோழர்கள் இமாம்கள், ஹதீஸ் கலை அறிஞர்கள் பெரும்பாலானோரின் அனுபவப்பூர்வமான வழிகாட்டல் படியும் இந்த ஹதீஸ் அமல் செய்ய தகுதியானதாக தரம் உயர்த்தப்படுகிறது. ( நூல்: திப்புன் நபவீ )

 

يقول الحسن بن عيسى: رأيت ابن المبارك دخل زمزم فاستقى دلوا واستقبل البيت ثم قال: اللهم إن عبد الله بن المؤمل حدثني عن أبي الزبير عن جابر أن النبي صلى الله عليه وسلم قال: «ماء زمزم لما شرب له» اللهم أني أشربه لعطش يوم القيامة فشرب

ஹஸன் இப்னு ஈஸா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:- நான் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களை ஜம்ஜம் கிணற்றுக்கு அருகே கண்டேன். கையில் ஒரு வாளியில் ஜம்ஜம் நீரை வைத்துக் கொண்டு கிப்லாவை (கஅபாவை) முன்னோக்கி "அல்லாஹ்வே! நிச்சயமாக அப்துல்லாஹ் இப்னு முஃமல் அவர்கள் என்னிடம் தமக்கு அபுஸ் ஸுபைர் அவர்கள்  ஜாபிர் (ரலி) அவர்கள் நபி ஸல் அவர்கள் கூறியதாக அறிவித்த "ஜம்ஜம் நீரை எந்த நோக்கத்திற்காக குறிக்கப்படுகிறதோ அந்த நோக்கத்தை அல்லாஹ் நிறைவேற்றுவான்" இந்த நபிமொழியை அடிப்படையாகக் கொண்டு உன்னிடம் பிரார்த்தனை செய்கிறேன். "யாஅல்லாஹ் மறுமையில் எனது தாகத்தை நீ தணித்து வைப்பாயாக" என்று துஆச் செய்தார்கள். ( நூல்: தாரீகே திமிஷ்க் )

وقيل لابن خزيمة يوما من أين أوتيت هذا العلم؟ فقال: قال رسول الله صلى الله عليه وسلم: «ماء زمزم لما شرب له» وإني لما شربت ماء زمزم سألت الله علما نافعا

ஹதீஸ் கலை வல்லுநர் அபூபக்ர் இப்னு குஸைமா (ரஹ்) அவர்களிடம் "நீங்கள் இவ்வளவு மார்க்க ஞானம் நிறைந்த அறிஞராக இருக்கின்றீர்களே? அது எப்படி என்று வினவியதற்கு, நான் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவித்த அடிப்படையில் பயன் தரும் கல்வியை வேண்டி துஆச் செய்து ஜம்ஜம் நீரைப் பருகினேன் " என்றார்கள்.

وقال الحاكم: فضائل ابن خزيمة مجموعة عندي في أوراق كثيرة، ومصنفاته تزيد على مائة وأربعين كتابا سوى المسائل، والمسائل المصنفة مائة جزء، وله فقه حديث بريرة في ثلاثة أجزاء

ஹாகிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "இப்னு குஸைமா (ரஹ்) அவர்கள் தொகுத்த பல்வேறு நூல்களின் தொகுப்பு என்னிடம் இருந்தது. அதுவே சுமார் 140 நூல்களாகும். இது போக மஸாயில் - மார்க்க சட்டம் தொடர்பாக அவர்கள் தொகுத்த 100 தொகுப்புகள் என்னிடம் இருந்தது. அதிலும், பரீரா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸ்களைக் கொண்டு அவர்கள் ஃபிக்ஹ் சட்டங்களாக தொகுத்த நூல்களின் எண்ணிக்கை ஏழு ஆகும்.

وبإذن الله تعالى ثم ببركة ماء زمزم الذي شربه أبو بكر بن خزيمة هذا الماء الشريف المبارك بنية العلم، صار إمام الأئمة وركنا كبيرا من أركان السنة النبوية قلما وقولا وعملا

அல்லாஹ்வின் பெருங் கருணையாலும் ஜம்ஜம் நீரின் பரக்கத்தாலும்  பயன் தரும் கல்வி வேண்டும் என்ற எண்ணத்தில் (துஆவில்) குடித்ததால் பெரும் அறிஞராகவும், ஹதீஸ் கலை மற்றும் சட்டக் கலை வல்லுநராகவும்,   நபிமொழியை சொல்லாலும் செயலாலும் அமல் செய்யும் மகத்தான அறிஞராக திகழ்ந்தார்கள். ( நூல்: அல் மஸ்தருஸ் ஸாபிக், தத்கிரத்துல் ஹுஃப்ஃபாள் )

الإمام الزهري عالم متقن،وافر العقل، متبحر في علم السنة النبوية، ومنقطع النظير، وكان مثلا سائرا يضرب به المثل في قوة الحفظ وفي استظهار العلم، حتى قال عن نفسه: “ما استودعت قلبي شيئًا قط فنسيته”، ويقول عنه عصريه عمرو بن دينار التابعي: “ما رأيت أحدًا أنص للحديث من الزهري”  

ومن أسرار تمكن هذا الإمام العجيب في الحفظ ما جاء في سؤال الإمام أحمد بن حنبل لشيخه حيث قال: سألت يحيى بن سعيد من كان أحفظ الزهري أو قتادة؟ فقال: ما فيهما إلا حافظ، ثم قال يحيى: الحفظ نحلة من الله تعالى. وكان قتادة منحولًا، وأما الزهري فإنه حكى عنه أنه قال: رأيت في المنام أشرب ماء زمزم؛ فإنه لما شرب له فقمت فأسبغت الوضوء، وصليت أربع ركعات ثم شربته للحفظ فحفظت، فما سمعت شيئًا فأنسيته

இமாம் ஜுஹ்ரீ (ரஹ்) அவர்கள் மிகப் பெரிய முஹத்திஸாகவும், ஹதீஸ்களை மனனம் செய்த ஹாஃபிழாகவும் திகழ்ந்தார்கள். அவர்களின் மனன ஆற்றலைக் கண்டு வியந்த இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல்

(ரஹ்) அவர்கள் தங்களது ஆசிரியர் யஹ்யப்னு ஸயீத் (ரஹ்) அவர்களிடம் ஹதீஸ்களை மனனம் செய்வதில் கதாதா (ரஹ்) அவர்கள் சிறந்தவரா? இமாம் ஜுஹ்ரீ (ரஹ்) சிறந்தவரா? என்று கேட்டார்கள்.

அதற்கு யஹ்யா (ரஹ்) அவர்கள் "சந்தேகமே வேண்டாம்! இருவருமே சிறந்த ஹாஃபிழ்கள் தாம். எனினும் இமாம் ஜுஹ்ரீ (ரஹ்) அவர்களுக்கு ஆரம்பத்தில் எந்த ஹதீஸை மனனம் செய்தாலும் அடுத்த நொடியே மறந்து விடுமாம். மறதியால் மிகவும் அவதிப்பட்டு வந்தார்கள்.

ஒரு நாள் அவர்கள் தங்களது கனவில்"ஜம்ஜம் நீரை குடிப்பது போல கனவு கண்டார்களாம். அதுவும், இஸ்பாகுல் உளூ என்ற முழுமையாக உளூ செய்து நான்கு ரக்அத்துகள் தொழுது மனன ஆற்றல் அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நின்றவாறு ஜம்ஜம் நீரை குடித்தார்களாம்" அதன் பின்னர் தாம் பிறரிடம் இருந்து கேட்ட எந்த நபிமொழிகளும்  மறக்காமல் நினைவில் இருந்ததாம்" என்று அவர்களே சொன்னார்கள் என்ற இந்த தகவலை இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களிடம் கூறினார்கள். ( நூல்: இக்மாலு தஹ்தீபுல் கமால் )

من أهل العلم من شرب زمزم بنية رواية الحديث عن الشيخ، ومن ذلك ما قصه الإمام الحميدي في مجلس محدِّث الحرم المكي بن عيينة قائلا:” كنا عند سفيان بن عيينة فحدثنا بحديث زمزم: «أنه لما شرب له»، فقام رجل من المجلس ثم عاد.

فقال له: يا أبا محمد! أليس الحديث صحيحا الذي حدثتنا به في زمزم أنه لما شرب له؟

فقال سفيان: نعم.

فقال الرجل: فإني قد شربت الآن دلوا من زمزم على أنك تحدثني بمئة حديث.

فقال سفيان: اقعد. فحدثه بمئة حديث.

ورواية مئة حديث بالعلو في مجلس واحد من هذا الإمام الكبير فريد عصره؛ فرصة كبيرة ونعمة عظيمة ساقها الله إلى هذا التلميذ بسبب شرب ماء الزمزم

இமாம் ஹுமைதீ அவர்கள் இமாம் முஹத்திஸ் அல் மக்கீ இப்னு உயய்னா (ரஹ்) அவர்களின் சபையில் இருந்தோம்.

அப்போது, முஹத்திஸ் அல் மக்கீ (ரஹ்) அவர்கள், ஸுஃப்யான் இப்னு உயைய்னா (ரஹ்) அவர்கள் ஒரு நாள் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது ஜம்ஜம் நீரை எந்த நோக்கத்திற்காக குறிக்கப்படுகிறதோ அந்த நோக்கத்தை அல்லாஹ் நிறைவேற்றுவான்" இந்த நபிமொழியை நடத்திக் கொண்டிருந்தார்களாம்.

சபையில் இருந்த ஒருவர் எழுந்து இந்த ஹதீஸ் ஸஹீஹானதா? என்று கேட்டார்.

அதற்கு, ஸுஃப்யான் (ரஹ்) அவர்கள் ஆம் என்றார்கள். அப்போது அவர் "நான் இப்போது ஜம்ஜம் நீரைப் பருகப் போகிறேன். நீங்கள் நூறு ஹதீஸை இந்த சபையில் இப்போது எனக்கு நீங்கள் அறிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்" என்றார். அது போல ஜம்ஜம் நீரை குடித்து விட்டு வந்தார்.

அவரை அழைத்த ஸுஃப்யான் (ரஹ்) அவர்கள் இங்கே அமருங்கள் என்று ஒரு இடத்தை சுட்டிக் காட்டி"நூறு ஹதீஸை" அறிவிப்பாளர்கள் பெயருடன் அறிவித்தார்களாம். ( நூல்: அல் மஜாலிஸத்து வல் ஜவாஹிருல் இல்ம் )

صنف الإمام أبو عبد الله الحاكم تصانيف كثيرة في علم الحديث ورزق حسن التصنيف، حتى قال ابن عساكر: وقع من تصانيفه المسموعة في أيدي الناس ما يبلغ ألفا وخمسمائة جزء  وقال الحافظ أبو حازم العبدويي: سمعت الحاكم أبا عبد الله إمام أهل الحديث في عصره يقول: شربت ماء زمزم، وسألت الله أن يرزقني حسن التصنيف

இமாம் ஹாகிம் (ரஹ்) அவர்கள் பல கிதாபுகளை எழுதியுள்ளார்கள். 

இமாம் இப்னு அஸாகிர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் வாழ்ந்த காலத்தில் நான் கேள்விப்பட்ட வகையில் அன்றைய மக்களிடம் இமாம் ஹாகிம் அவர்கள் எழுதிய 1500 கிதாபுகள் பயன்பாட்டில் இருந்தது.

அபூ ஹாஸிம் அல் அப்தூயீ (ரஹ்) அவர்கள் இமாம் ஹாக்கிம் (ரஹ்) அவர்கள் கூறியதாக கூறுகின்றார்கள்: நான் ஜம்ஜம் நீரைக் குடிக்கும் போது யாஅல்லாஹ்! மக்களுக்கு பயன் தரும் அழகிய கிதாபுகளை எழுதும் பாக்கியத்தை எனக்கு வழங்குவாயாக! என்று துஆச் செய்தேன்"  என்று கூறினார்களாம். ( ஸியரு அஃலாமின் நுபலா )

قال ابو عبد الله محمد بن علي الترمذي وحدثني ابي رحمه الله دخلت الطواف في ليلة ظلماء فاخذني من البول ماشغلني فجعلت اعتصر حتي اذاني وخفت ان خرجت من المسجد ان اطأ بعض تلك الاقدام وذلك ايام الحج فذكرت هذا الحديث فدخلت زمزم فتضلعت منه فذهب عني الي الصباح( تفسير قرطبي)

 

இமாம் திர்மிதி ( ரஹ்) அவர்கள் தமது தந்தையின் மூலம் அறிவிக்கிறார்கள் ஒரு நாள் இருளான இரவில் தவாப் செய்ய ஹரம் ஷரீபுக்கு சென்றேன் அந்த சமயத்தில் எனக்கு சிறுநீர் கழிக்கும் தேவை ஏற்பட்டது நான் சிறுநீர் கழிக்காமல் அதை அடக்கிக் கொண்டிருந்தேன் வெளியில் சென்றால் மக்களின் பாதங்களை மிதித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும் அது ஹஜ்ஜூடைய காலம் என்பதாலும் அவ்வாறு செய்தேன் அப்போது இந்த ஹதீஸ் எனக்கு நினைவிற்கு வந்தது உடனே ஜம் ஜம் கிணற்றுக்குச் சென்று அதன் நீரை வயிறு நிரம்ப குடித்தேன் அதன் பரக்கத்தால் அடுத்தநாள் காலை வரை எனக்கு சிறுநீர் கழிக்கும் தேவை ஏற்படவில்லை என்றார்கள். (நூல் தப்ஸீர் குர்துபி பாகம் 9)

இது போன்று இன்னும் ஏராளமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் காணக் கிடைக்கின்றன.

நோய்களுக்கு நிவாரணம்..

واستحب بعض الفقهاء التزود من ماء زمزم وحمله إلى البلاد لأنه شفاء لمن استشفى ، وجاء في حديث عائشة رضي الله عنها أنها حملت من ماء زمزم في القوارير ، وقالت : حمل رسول الله صلى الله عليه وسلم  منها ، وكان يصبّ على المرضى ويسقيهم "  رواه الترمذي 4/37 .

நபியவர்கள் தோல் பைகளில் ஜம் ஜம் நீரை எடுத்துச்சென்று, அதை நோயாளிகளுக்கு அருந்தக் கொடுப்பவர்களாக, அந்த நோயாளிகள் மீது ஊற்றுபவர்களாக இருந்தார்கள். (அறிவிப்பு: உர்வா இப்னுல் சுபைர் (ரலி), பைஹகீ 9768, அஸ்ஸஹீஹா 883) 

وكذا كانت عائشة رضي الله عنها تحمل وتخبر أنه صلى الله عليه وسلم كان يفعله وأنه كان يحمله في الأداوي والقرب فيصب منه على المرضى ويسقيهم

இவ்வாறே அன்னை ஆயிஷாவும் இந்த நீரை எடுத்துச் செல்பவராக இருந்தார். அவரிடம் இது குறித்துக் கேட்கப்பட்டபோது, ‘நபியவர்களும் இவ்வாறே எடுத்துச் செல்பவர்களாக இருந்தார்கள்என்று கூறினார். (ஜாமிவுத் திர்மிதீ 963

நபியவர்கள் இந்த நீரை மிகவும் விரும்புவார்கள். மதீனாவில் இருந்தபோது இந்த நீரைக் கேட்டு மக்காவுக்கு ஆள் அனுப்புவது அவர்களின் வழக்கம். 

فقد كتب صلى الله عليه وسلم  إلى سهيل بن عمرو : " إن وصل كتابي ليلاً فلا تصبحن أو نهاراً فلا تمسين حتى تبعث إليّ بماء زمزم ، وفيه أنه بعث بمزادتين وكان حينئذ بالمدينة قبل أن يفتح مكة ، وهو حديث حسن لشواهده ، 

சுஹைல் இப்னு அம்ருக்குப் பின்வருமாறு கடிதம் எழுதினார்கள், ‘எனது இந்தக் கடிதம் உமக்கு இரவில் கிடைத்துவிட்டால், நீ பகல்பொழுதை அடைவதற்குள் ஜம் ஜம் நீரை அனுப்பிவிட வேண்டும். கடிதம் பகலில் கிடைத்தால், மாலைப்பொழுதை அடைவதற்குள்  நீரை அனுப்பிவிட வேண்டும். தாமதம் செய்துவிடாதேஎன்று குறிப்பிடுகிறார்.

சுஹைல் இரண்டு தண்ணீர்ப் பைகள் நிறைய நீரை நிரப்பி அவற்றை ஓர் ஒட்டகத்தில் வைத்து அனுப்பி வைத்தார். (பைஹகீ 202/5) 

ஜம்ஜம் உருவான சுருக்கமான வரலாறு...

இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது மனைவி ஹாஜரையும் கைக்குழந்தை இஸ்மாயீலையும் இறைக்கட்டளைப்படி தன்னந்தனியே விட்டுச் சென்றார்கள். 

அவர் போன பிறகு கைவசம் இருந்த உணவும் தண்ணீரும் தீர்ந்துவிட்ட ஒரு சமயத்தில் குழந்தை அழுகின்றது. ஹாஜர் (அலை) தமக்கு அருகில் இருந்த ஸஃபா, மர்வா ஆகிய இரண்டு மலைக் குன்றுகள் மீதும் ஏறி இறங்கி, எங்காவது தண்ணீர் தென்படுகிறதா என்று தவிக்கிறார்கள். அந்தக் குன்றுக்கும் இந்தக் குன்றுக்குமாக ஏழு தடவை ஏறி இறங்கிவிட்டார்கள். 

குழந்தை இஸ்மாயீல் (அலை) அவர்கள் பசியில் துடித்தபடி கால்களை உதைத்துக்கொண்டு பாலைவன மணலில் கிடந்த அந்தத் தருணத்தில்தான் அவர்களின் கால்களுக்கு அடியிலிருந்து ஊற்றுப் பிறந்தது. இறை உதவி வந்துவிட்டது. 

ஹாஜர் (அலை) அதைக் கண்டு மகிழ்ந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியபடி அந்த ஊற்றை நோக்கி ஜம் ஜம் (நில் நில்) என்றவாறு பாத்தி கட்டினார்கள். 

عن سعيد بن جبير قال: قال ابن عباس - رضي الله عنهما -: قال النبي صلى الله عليه وسلم: يرحم الله أم إسماعيل! لو تركت زمزم ـ أو قال: لو لم تغرف من الماء ـ لكانت عينا معينا

`ஹாஜர் அலை அப்போது அதைத் தடுத்து பாத்திக் கட்டாமல் விட்டிருந்தால், இந்த ஊற்று மறுமைநாள் வரை உலகம் முழுவதும் ஓடக்கூடிய ஆறாக ஆகியிருக்கும்என்று  ஒரு நபிமொழியில் கூறப்பட்டுள்ளது. (நூல்:  புகாரீ) 

ஒருவர் நாற்பது தினங்கள் வரை ஜம் ஜம் நீரை குடித்துக்கொண்டே நோன்பு நோட்பவராகவும் தவாஃபு செய்பவராகவும். நல்ல திடகாத்திரமாகவும் இருந்திருக்கிறார் என இப்னுல் கய்யூம்( ரஹ்) அவர்கள் தங்களுடைய ஜாதுல் மஆது நூலில் எழுதியுள்ளார்கள்.

ஜம்ஜம் நீர் குடிக்கும் முறை..

عن ابن عباس رضي الله عنهما أنه رأى رجلا يشرب من ماء زمزم، فقال: هل تدري كيف تشرب من ماء زمزم؟

قال: وكيف أشرب من ماء زمزم يا أبا عباس؟

فقال: إذا أردت أن تشرب من ماء زمزم فانزع دلوا منها ثم استقبل القبلة، وقل: بسم الله، وتنفس ثلاثا حتى تضلّع، وقل: اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒரு மனிதர் ஜம்ஜம் நீரை குடித்துக் கொண்டிப்பதைக் கண்டார்கள். அவர் அருகில் சென்று ஜம்ஜம் நீரை எப்படி குடிக்க வேண்டும் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். 

அதற்கவர், தெரியாது. எப்படி குடிக்க வேண்டும் என்று கூறுங்கள் என்றார்.

அப்போது, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "தண்ணீரை கையில் எடுத்து கிப்லாவை முன்னோக்கி பிஸ்மில்லாஹ் சொல்லி மூன்று மிடராக வயிறு நிரம்ப குடிக்க வேண்டும். குடிக்கும் போது"அல்லாஹ்வே! உன்னிடம் பயன் தரும் கல்வியையும், விசாலமான வாழ்வாதாரத்தையும், அனைத்து நோய்களில் இருந்து நிவரணத்தையும் கேட்க வேண்டும்" என்று கூறினார்கள்.( நூல்: அல் அஃக்பாரு மக்கா லில் ஃபாக்கிஹி )

ابن عباس رضي الله عنهما أنه قال : " سقيت النبي صلى الله عليه وسلم  من زمزم وهو قائم "  رواه البخاري 3/492 .

நான் நபி(ஸல்) அவர்களிடம் ஜம்ஜம் தண்ணீரில் ஒரு வாளி கொண்டு வந்தேன். அப்போது அவர்கள் அதை நின்று கொண்டு குடித் தார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

ஜம்ஜம் நீரை நின்று கொண்டுதான் குடிக்க வேண்டும் என்பதில்லை. நபி(ஸல்) அவர்களைப் போல் நின்று கொண்டும் குடிக்கலாம் என்பதை அறிகிறோம்.

وقد ذكر الفقهاء آداباً تستحب لشرب ماء زمزم ، منها استقبال الكعبة ، والتسمية ، والتنفس ثلاثاً ، والتضلع منها ، وحمد الله بعد الفراغ ، والجلوس عند شربه كغيره

ஜம் ஜம் நீரை பிஸ்மில்லாஹ் சொல்லி குடிக்க வேண்டும். கிப்லாவை முன்னோக்கி நின்று கொண்டும் உட்கார்ந்து கொண்டும் குடிப்பது  குடித்து முடித்த பிறகு அல்ஹம்துலில்லாஹ் சொல்வது ஆகிய இவை அனைத்தும் முஸ்தப்பாகும்.  நின்று கொண்டுதான் குடிக்க வேண்டும் என்கின்ற கட்டாயம் ஏதுமில்லை. ( நூல்: இர்ஷாதுல் ஃகல்க் இலா தீனில் ஹக், லிஇமாமி முஹம்மது அஸ் ஸுப்கீ, பக்கம்: 236 )

உலகின் சிறந்த நீர் என்ற நபிமொழியை உண்மை படுத்திய 20 –ம் நூற்றாண்டின் ஆய்வு..

Research by Tariq Hussain, Riyadh, By MOINUDDIN AHMED

Come the Hajj season, and I am reminded of the wonders of Zamzam water.

Let me go back to how it all started. In 1971, an Egyptian doctor wrote to the European press, a letter saying that Zamzam water was not fit for drinking purposes. I immediately thought that this was just a form of prejudice against the Muslims and that since his statement was based on the assumption that since the Ka'aba was a shallow place (below sea level) and located in the center of the city of Makkah, the wastewater of the city collecting through the drains fell into the well holding the water.

Fortunately, the news came to King Faisal's ears who got extremely angry and decided to disprove the Egyptian doctor's provocative statement. He immediately ordered the Ministry of Agriculture and Water Resources to investigate and send samples of Zamzam water to European laboratories for testing the portability of the water.

The ministry then instructed the Jeddah Power and Desalination Plants to carry out this task. It was here that I was employed as a desalting engineer (chemical engineer to produce drinking water from sea water). I was chosen to carry out this assignment. At this stage, I remember that I had no idea what the well holding the water looked like. I went to Makkah and reported to the authorities at the Ka'aba explaining my purpose of visit.

They deputed a man to give me whatever help was required. When we reached the well, it was hard for me to believe that a pool  of water, more like a small pond, about 18 by 14 feet, was the well that supplied millions of gallons of water every year to hajis ever since it came into existence at the time of Hazrat Ibrahim(A.S.)many, many centuries ago.

( Source: https://alislaah4.tripod.com/moreadvices2/id21.htm )

டாக்டர் தாரிக் ஹுஸைன் அவர்கள் கூறுகிறார்கள்:- 1971 ல் எகிப்திய டாக்டர் ஒருவர் ஐரோப்பிய  ஆங்கில பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் ஜம் ஜம் தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததல்ல என்றும்  ஜம் ஜம் கிணறு அது ஒரு பள்ளத்தாக்கில் இருப்பதால் மக்கா நகரில் உள்ள கழிவு நீர்கள் பள்ளத்தாக்கில் தேங்கி பூமிக்குள் சென்று ஜம் ஜம் கிணற்று நீரோடு கலந்து விடுகிறது என்று அக்கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.

இதை நான் படித்தவுடனே தெரிந்துகொண்டேன், இது இஸ்லாத்திற்கு எதிரான பொய்ப் பிரச்சாரம் என்று. ஏனென்றால் அது ஒரு பள்ளத்தாக்கில் இருக்கும் அமைப்பை வைத்து ஒரு யூகமாய் கூறப்பட்டதே அல்லாமல் விஞ்ஞானப் பூர்வமாய் அல்ல. இதை அறிந்த அப்போதைய சவூதி மன்னர் ஃபைசல் அவர்கள் கோபமடைந்து எகிப்திய டாக்டரின் யூகத்தை தவறு என்று நிரூபிக்க முடிவெடுத்தார்.

மன்னர் ஃபைசல் அவர்கள் (Ministry of Agriculture and Water Resources ) அமைச்சகத்துக்கு ஜம் ஜம் தண்ணீரை ஆய்வு செய்வதற்கு ஐரோப்பாவிலுள்ள (European laboratories)ஆய்வு நிலையத்திற்கும் ஜித்தாவிலுள்ள (Jeddah Power and Desalination Plants கடல் தண்ணீரை குடி நீராக மாற்றும் சுத்தகரிப்பு நிலையம்)ஆய்வு நிலையத்திற்கும் அனுப்பி வைத்தது. அப்போது நான் கடல் தண்ணீரை குடி நீராக மாற்றும் சுத்தகரிப்பு நிலையத்தில் இன்ஜீனியராக பணி புரிந்து கொண்டிருந்தேன். ஜம் ஜம் தண்ணீரை ஆய்வு செய்யும் பணியை எங்கள் நிலையத்துக்கு ஓப்படைக்கப்பட்டது.

அதன்படி நான் கஃபாவில் உள்ள அதிகாரிகளிடம் விளக்கினேன். அவர்கள் ஆய்வுக்கு ஜம் ஜம் தண்ணீரை எடுக்க ஒரு ஆளை நியமித்து அனுப்பினர். நான் ஜம் ஜம் கிணற்றை பார்க்க நேரிட்டபோது அது 18×14 அடிதான் இருந்தது. பல ஆயிரக்கணக்கான ஹாஜிகளுக்கு பல ஆயிரம் மில்லியன் கணக்கான கேலன் தண்ணீரை நபி இபுராஹீம் அலைஹிஸ்ஸலாம் காலத்திலிருந்து பல நூறு நூற்றாண்டுகளாக அல்லாஹ் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.

நான் எனது ஆய்வை தொடங்கினேன். எனக்கு துணையாக அனுப்பப்பட்ட ஆளிடம் கிணற்றின் ஆழத்தை காட்ட சொன்னேன். அவர் குளித்து விட்டு கிணற்றில் இறங்கிய பொழுது அவரது தோள்பட்டைக்கு சிறிது மேலாகத்தான் கிணற்றின் நீர் மட்டம் இருந்தது, அதாவது சுமார் ஐந்தடி எட்டு அங்குலம். மேலும் அவர் அங்கு வேறு  குழாய்கள் இல்லை என்பதையும் கூறினார். தண்ணீரை ஆய்வு செய்வதற்காக வேண்டி மேலாக உள்ள தண்ணீரை குழாய் மூலம் வேறொரு இடத்திற்கு மாற்றினோம். பிறகு அவரை ஒரே இடத்தில் நிற்கும்படி கூறினேன்..

சிறிது இடைவெளிக்குப்பிறகு இரு கைகளையும் உயர்தியபடி அல்ஹம்துலில்லாஹ்என்று கூறினார். ஊற்று நீர் சுரப்பதை காலில் உணரப்பட்டது. கிணற்றின் ஒவ்வொரு மூலையிலும் ஒரே அளவாக நீர் சுரந்தது. தண்ணீரிலிருந்து சிறிது மாதிரி  எடுத்துக்கொண்டோம். காஃபா அதிகாரிகளிடம் காஃபா அருகில் உள்ள மற்ற கிணறுகளையும் பார்வையிட கோரினேன். அவைகள் எல்லாம் வற்றிய நிலையில் இருந்தன. எங்கள் ஆய்வின் படியும், ஐரோப்பிய ஆய்வின் முடிவின் படியும் ஜம் ஜம் தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது. ஜம் ஜம் தண்ணீருக்கும் மற்றைய தண்ணீருக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் கால்சியமும், மாக்னீசியமும் அளவில் சற்று அதிகம். கால்சியம் சத்து அதிகமிருப்பதால் ஹாஜிகளுக்கு களைப்பை நீக்கி விரைவில் புத்துணர்ச்சி ஏற்பட செய்கிறது. மேக்னீசியம் அதிகமிருப்பதால் தண்ணீரில் கிருமிகள் சேராமல் தடுக்கிறது.

மேலும் ஐரோப்பிய ஆய்வின் படியும் ஜம் ஜம் தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது என்று தெரிய வருவதால் எகிப்திய டாக்டரின் கூற்று ஆதாரமற்றது என்பது தெளிவாகிறது. எங்கள் ஆய்வும் ஐரோப்பிய கூடத்தின் ஆய்வும் ஒன்றாக இருப்பதை அறிந்து மன்னர் ஃபைசல் மகிழ்ச்சியடைந்தார். ( தமிழாக்கம் நன்றி: Readislam.com )

ஜம்ஜம் நீரின் மகத்துவத்தை உணர்ந்து, மாநபி வழிகாட்டுதலின் படி அருந்துவோம்! நம் நிய்யத்துகளை உயர்ந்ததாக ஆக்கி உயர்ந்த இலட்சியங்களை அடைவோம்!!