Thursday, 17 October 2024

உணவு விஷயத்தில் கவனம் கொள்வோம்!!

 

உணவு விஷயத்தில் கவனம் கொள்வோம்!!


உலக உணவு தினமானது 1945 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதம் 16 -ஆம் தேதி அன்று ஒவ்வொரு வருடமும் சிறப்பாக ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பொதுவாகவே உலக உணவு தினமானது, அன்றாடம் ஒருவேளை உணவு உண்பதற்கு வழியில்லாமல் துன்பப்படும் மக்களுக்கு உணவு வழங்குதல் மற்றும் ஆடம்பர செலவின் மூலம் அதிக உணவு வீணாக்கப்படுவதை தடுத்தல் வேண்டும் என்பதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வாக ஏற்படுத்தும் நோக்கில் அனுஷ்டிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் பசி, பட்டினியால் தவிக்கும் மக்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர். பல நாடுகளில் பட்டினி என்பதே தலையாய பிரச்சனையாக உள்ளது.

உலகளவில் 82 கோடி மக்கள் பசியால் வாடுவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதாவது 9-ல் ஒருவர் பசியில் இருக்கிறார்.

ஒரு புறம் பசி பட்டினியால் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் சாப்பிட தகுதியான உணவுகள் வீணடிக்கப்படுகின்றன.

உலகில் 13 சதவீத உணவு, அறுவடைக்குப் பிறகும், சில்லறை விற்பனைக் கடைகளுக்குச் செல்வதற்கு முன்பும், மளிகைக்கடைகள், உணவகங்கள் மற்றும் வீடுகளுக்குச் சென்ற பிறகு 17 சதவீதம் உணவு வீணாக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் உற்பத்தியாகும் உணவு தானியங்களில் ஏறத்தாழ 40% சதவீதம்

வீணாகிறது .

அதன் மதிப்பு 58000 கோடியாகும். ஒவ்வொரு நாளும் 15000 டன் வீடடிக்கப்படுகிறது என்றும் அதில் 3000 டன் உணவுப் பொருட்கள் சாப்பிடுவதற்கு தகுதியானவையாக இருக்கிறது என்றால் என்ன சொல்ல?

அமெரிக்ககள் தாங்கள் வாங்கும் உணவுப் பொருட்களில் பாதியை வீணாக்குகின்றார்கள். அதன் மதிப்பு ஆண்டுக்கு 66.10 கோடி என்கிறது ஒரு புள்ளி விவரம்.

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஒரு நபருக்கு 50 கிலோ என்ற அளவில் உணவு வீணடிக்கப்படுகிறது. இது உணவை வீணடிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இரண்டாவது இடத்தில் வைத்திருக்கிறது.

எனவே, உணவை வீணடிக்காமல், பசித்திருப்போரின், பட்டினி கிடப்போரின் தேவையறிந்து உணவை பயன்படுத்துவதில் விழிப்புணர்வுடன் செயல் படுவோம்.

நமக்கான உணவு நம்மை வந்தடைந்தே தீரும்!

  وَفِى السَّمَآءِ رِزْقُكُمْ وَمَا تُوْعَدُوْنَ‏

அன்றியும் வானத்தில் உங்கள் உணவும், (மற்றும்) நீங்கள் வாக்களிக்கப் பட்டவையும் இருக்கின்றன. ( அல்குர்ஆன்: 51: 22 )

  وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَ يَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا‌ كُلٌّ فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏

 

இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன. ( அல்குர்ஆன்: 11: 6 )

ஈருலகிலும் உணவு முக்கியத்துவம் வாய்ந்ததே!

  قُلْ مَنْ حَرَّمَ زِيْنَةَ اللّٰهِ الَّتِىْۤ اَخْرَجَ لِعِبَادِهٖ وَالطَّيِّبٰتِ مِنَ الرِّزْقِ‌ قُلْ هِىَ لِلَّذِيْنَ اٰمَنُوْا فِى الْحَيٰوةِ الدُّنْيَا خَالِصَةً يَّوْمَ الْقِيٰمَةِ‌ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ‏

(நபியே!) நீர் கேட்பீராக: அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?” இன்னும் கூறும்: அவை இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கையாளர்களுக்கு (அனுமதிக்கப்பட்டவையே, எனினும் மறுமையில்) அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவையாகவும் இருக்கும்இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக்கூடிய மக்களுக்கு விவரிக்கின்றோம். ( அல்குர்ஆன்: 7: 32 )

எத்தனை ஆண்டுகள் ஆனாலும்?

  وَكَذٰلِكَ بَعَثْنٰهُمْ لِيَتَسَآءَلُوْا بَيْنَهُمْ‌ قَالَ قَآٮِٕلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ  قَالُوْا لَبِثْنَا يَوْمًا اَوْ بَعْضَ يَوْمٍ‌ قَالُوْا رَبُّكُمْ اَعْلَمُ بِمَا لَبِثْتُمْ فَابْعَثُوْۤا اَحَدَكُمْ بِوَرِقِكُمْ هٰذِهٖۤ اِلَى الْمَدِيْنَةِ فَلْيَنْظُرْ اَيُّهَاۤ اَزْكٰى طَعَامًا فَلْيَاْتِكُمْ بِرِزْقٍ مِّنْهُ وَلْيَتَلَطَّفْ وَلَا يُشْعِرَنَّ بِكُمْ اَحَدًا‏

இன்னும் அவர்களிடையே ஒருவரையொருவர் கேட்டுக் கொள்வதற்காக நாம் அவர்களை இவ்வாறு எழுப்பினோம்; அவர்களிலிருந்து சொல்பவர் (ஒருவர்) நீங்கள் எவ்வளவு நேரம் (நித்திரையில்) இருந்தீர்கள்?” எனக் கேட்டார்; “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்எனக் கூறினார்கள்; (மற்றவர்கள்) நீங்கள் (நித்திரையில்) இருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கு அறிந்தவன்; ஆகவே, உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம் (என்றனர்). ( அல்குர்ஆன்: 18: 19 )

இறைக் கட்டளைகளை மீறினால் முதல் அடி உணவில் தான்...

  وَضَرَبَ اللّٰهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ اٰمِنَةً مُّطْمَٮِٕنَّةً يَّاْتِيْهَا رِزْقُهَا رَغَدًا مِّنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِاَنْعُمِ اللّٰهِ فَاَذَاقَهَا اللّٰهُ لِبَاسَ الْجُـوْعِ وَالْخَـوْفِ بِمَا كَانُوْا يَصْنَعُوْنَ‏

மேலும், அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணங் கூறுகிறான்; அது அச்சமில்லாதும், நிம்மதியுடனும் இருந்தது, அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் ஒவ்வோரிடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன - ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது; ஆகவே, அவ்வூரார் செய்து கொண்டிருந்த (தீச்) செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து அவற்றை) அனுபவிக்குமாறு செய்தான். ( அல்குர்ஆன்: 16: 112 )

  لَقَدْ كَانَ لِسَبَاٍ فِىْ مَسْكَنِهِمْ اٰيَةٌ جَنَّتٰنِ عَنْ

 يَّمِيْنٍ وَّشِمَالٍ کُلُوْا مِنْ رِّزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوْا لَهٗ  بَلْدَةٌ طَيِّبَةٌ وَّرَبٌّ غَفُوْرٌ‏

நிச்சயமாக ஸபா நாட்டினருக்கு, அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஓர் அத்தாட்சி இருந்தது. (அதன்) வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள் இருந்தன; “உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (அது மணமுள்ள) வளமான நகரம்; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்” (என்று அவர்களுக்குக் கூறப்பட்டது). ( அல்குர்ஆன்: 34: 15 )

நல்லோர்களாக வாழ்ந்தால்....

فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُوْلٍ حَسَنٍ وَّاَنْۢبَتَهَا نَبَاتًا حَسَنًا  وَّكَفَّلَهَا زَكَرِيَّا كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَۙ وَجَدَ عِنْدَهَا رِزْقًا

قَالَ يٰمَرْيَمُ اَنّٰى لَـكِ هٰذَا قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ‌ اِنَّ اللّٰهَ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏ 

அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்என்று அவள்(பதில்) கூறினாள். ( அல்குர்ஆன்: 3: 37 )

உணவுக்காகவே ஒரு திருவிழா!

قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ اللّٰهُمَّ رَبَّنَاۤ اَنْزِلْ عَلَيْنَا مَآٮِٕدَةً مِّنَ السَّمَآءِ تَكُوْنُ لَـنَا عِيْدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰيَةً مِّنْكَ‌ وَارْزُقْنَا وَاَنْتَ خَيْرُ الرّٰزِقِيْنَ‏

 

மர்யமுடைய மகன் ஈஸா, “அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக; அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்; இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக; நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்என்று (பிரார்த்தித்துக்) கூறினார். ( அல்குர்ஆன்: 5: 114 )

 

உணவு குறித்தான இஸ்லாமிய மார்க்கத்தின் விசாலமான பார்வையில் இருந்து கொஞ்சமாக உங்களின் முன்பாக மேற்கொண்ட இறை வசனங்களை வரிசை படுத்தியுள்ளோம்.

நமது நபி ஸல் அவர்களும்.... உணவும்...

நபி (ஸல்) அவர்களின்  குடும்பத்தினர் நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும் வயிறார உண்டதில்லை என நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர் அபூ ஹுரைரா (ரலி) கூறுகிறார். ( நூல் புகாரி )

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தது முதல் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களது குடும்பத்தினராகிய நாங்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லை என நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) கூறுகிறார். ( நூல் புகாரி )

وعن سعيدٍ المَقْبُريِّ، عَنْ أَبي هُرَيرةَ

 أَنَّه مَرَّ بِقَومٍ بَيْنَ أَيْدِيهمْ شَاةٌ مَصْلِيَّةٌ، فَدَعَوْهُ، فَأَبى أَنْ يَأْكُلَ، وقال

 "خَرج رَسُولُ اللَّه ﷺ مِن الدُّنْيَا ولَمْ يَشْبَعْ مِنْ خُبْزِ الشَّعِيرِ" رواه البخاري

நபி (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழராக இருந்த அபூ ஹுரைரா (ரலி) ஒரு கூட்டத்தினரைக் கடந்து சென்றார். அவர்கள் முன்னே பொறிக்கப்பட்ட ஆடு வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் அபூ ஹுரைராவையும் சாப்பிட அழைத்தனர். நபி (ஸல்) அவர்கள் தீட்டப்படாத கோதுமை ரொட்டியையே வயிறார சாப்பிடாத போது நான் இதைச் சாப்பிட மாட்டேன் என அபூ ஹுரைரா (ரலி) மறுத்து விட்டார். ( நூல் புகாரி )

جاء رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إلى دار أبي الهيثم فتَقَدَّمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أبا بكر وعمر فَاسْتَأْذَنَ عَلَيْهِمْ، وَأُمُّ أَبِي الْهَيْثَمِ تَسْمَعُ السَّلَامَ تُرِيدُ أَنْ يَزِيدَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ السَّلَامِ فَلَمَّا أَرَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْصَرِفَ، خَرَجَتْ أُمُّ أَبِي الْهَيْثَمِ تَسْعَى فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ: قَدْ سَمِعْتُ تَسْلِيمَكَ وَلَكِنْ أَرَدْتُ أَنْ تَزِيدَنَا مِنْ سَلَامِكَ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيْنَ أَبُو الْهَيْثَمِ؟» قَالَتْ: قَرِيبٌ يَا رَسُولَ اللَّهِ ذَهَبَ يَسْتَعْذِبُ لَنَا مِنَ الْمَاءِ، ادْخُلُوا، السَّاعَةَ يَأْتِي، فَبَسَطَتْ لَهُمْ بِسَاطًا تَحْتَ شَجَرَةٍ حَتَّى جَاءَ أَبُو الْهَيْثَمِ مَعَ حِمَارِهِ وَعَلَيْهِ قِرْبَتَانِ مِنْ مَاءٍ فَفَرِحَ بِهِمْ أَبُو الْهَيْثَمِ وَقَرَّبَ تَحِيَّتَهُمْ. وَصَعِدَ أَبُو الْهَيْثَمِ عَلَى نَخْلَةٍ فَصَرَمَ أَعْذَاقًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” حَسْبُكَ يَا أَبَا الْهَيْثَمِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ تَأْكُلُونَ مِنْ بُسْرِهِ وَمِنْ رُطَبِهِ، وَتَلَذُّوا بِهِ، ثُمَّ أَتَاهُمْ بِمَاءٍ فَشَرِبُوا عَلَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا مِنَ النَّعِيمِ الَّذِي تُسْأَلُونَ عَنْهُ» ، ثُمَّ قَامَ أَبُو الْهَيْثَمِ إِلَى شَاةٍ لِيَذْبَحَهَا فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِيَّاكَ وَاللَّبُونَ» ، ثُمَّ قَامَ أَبُو الْهَيْثَمِ فَعَجَنَ لَهُمْ وَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ رُءُوسَهُمْ فَنَامُوا فَاسْتَيْقَظُوا وَقَدْ أَدْرَكَ طَعَامُهُمْ، فَوَضَعَهُ بَيْنَ أَيْدِيهِمْ فَأَكَلُوا وَشَبِعُوا وَحَمِدُوا اللَّهَ، وَأَتَاهُمْ أَبُو الْهَيْثَمِ بِبَقِيَّةِ الْأَعْذَاقِ فَأَصَابُوا مِنْهُ… ولما سلم رسول الله صلى الله عليه وسلم منصرفاً قَالَتْ لَهُ أُمُّ أَبِي الْهَيْثَمِ: لَوْ دَعَوْتَ لَنَا فَقَالَ: «أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ وَأَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ» .

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்கள் சொல்ல தாம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள்:

ஒரு நாள் நண்பகல் நேரத்தில் நபி {ஸல்} அவர்கள் மஸ்ஜிதுன் நபவீயில் அமர்ந்திருந்தார்கள். சிறிது நேரத்தில் அங்கே அபூபக்ர் (ரலி) அவர்களும் வருகை தந்திருக்கின்றார்கள். அப்போது, நபி {ஸல்} அவர்கள் அபூபக்ரே! என்ன இந்த நேரத்தில் இங்கே வருகை தந்திருக்கின்றீர்கள்?” என்று வினவினார்கள். அதற்கு, அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! உங்களை இந்த நேரத்தில் இங்கே வரவைத்தது எதுவோ அதுவே என்னையும் வரவைத்ததுஎன்று பதில் கூறினார்கள்.

சிறிது நேரத்தில் உமர் (ரலி) அவர்களும் அங்கே வருகை தர, நபி {ஸல்} அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வினவியது போன்று வினவ, உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! கடுமையான பசி ஆதலால் இங்கு வந்தேன்என்று கூறினார்கள்.

கொஞ்ச நேரம் அண்ணலார் {ஸல்} அவர்கள் அபூபக்ர், உமர் (ரலி அன்ஹுமா) ஆகியோரோடு உரையாடிவிட்டு தோழர்களே! வாருங்கள்! மூவரும் சேர்ந்து அபுல் ஹைஸம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று வருவோம்!என்று கூறினார்கள்.

நபி {ஸல்} அவர்கள் நடுவே வர, அபூபக்ர் (ரலி) அவர்கள் வலது புறத்திலும், உமர் (ரலி) அவர்கள் இடது புறத்திலும் ஒரு சேர நடந்து வந்து அபுல் ஹைஸம் (ரலி) அவர்களின் வீட்டின் முன் வந்து நின்றார்கள்.

மாநபி {ஸல்} அவர்கள் ஸலாம் கூறினார்கள். வீட்டிலிருந்து பதிலேதும் வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறை ஸலாம் கூற உள்ளிருந்து பதிலேதும் வராததால் நபி {ஸல்} அவர்களும், தோழர்களும் திரும்பி வருவதற்கு ஆயத்தமான போது, “வஅலைக்குமுஸ்ஸலாம்யாரஸூலுல்லாஹ்….” வீட்டின் உள்ளிருந்து உம்மு ஹைஸம் அவர்களின் குரல் கொடுத்தார்கள்.

உம்மு ஹைஸம் அவர்களே! ஏன் மூன்று ஸலாம் வரை மௌனம் காத்தீர்கள்! உடனடியாக பதில் கூறியிருக்க வேண்டாமா? என நபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு, அல்லாஹ்வின் தூதரே! ஸலாம் கூறியது தாங்கள் அல்லவா? தங்களின் ஸலாம் எத்தனை மகத்துவம் நிறைந்தது?!” ஆதலால் தான் சிறிது தாமதித்து பதில் கூறினேன் என்றார்கள்.

நபி {ஸல்} அவர்கள் புன்னகையை மறுமொழியாய் தந்து விட்டு, அபுல் ஹைஸம் எங்கே? என்று வினவினார்கள்.

 

அல்லாஹ்வின் தூதரே! இதோ அருகில் இருக்கிற கிணற்றுக்கு தண்ணீர் கொண்டு வர சென்றிருக்கின்றார். அதோ அந்த மரத்தடியில் சற்று இளைப்பாருங்கள்! இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவார்உம்மு ஹைஸம் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் வீட்டிற்கு வருகின்றார்கள். அங்கே மரத்தின் நிழலில் மாநபி {ஸல்} அவர்களையும், அபூபக்ர், உமர் (ரலி) இருவரையும் பார்த்து பூரிப்படைந்தவராக முக மலர்ச்சியோடு வரவேற்றார்கள்.

உடனடியாக, அருகில் இருந்த பேரீத்த மரங்களில் ஏறி காய்ந்த, ஈரமான இளவட்டமான அனைத்து ரக பழங்களையும் பறித்துக் கொண்டு வந்து அண்ணலாரின் முன் வந்து வைத்து விட்டு அல்லாஹ்வின் தூதரே! தங்களது வருகை எனக்கு கண் குளிர்ச்சியை ஏற்படுத்தி விட்டதுஎன்று கூறி சாப்பிடுமாறு கூறினார்கள்.

மூவரும் திருப்தியாக சாப்பிட்டனர். அருகே வந்த அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் பேரீத்தங்கனியை கொண்டு வரட்டுமா? என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் போதும், கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாருங்கள்!என்று கூறினார்கள்.

நல்ல குளிர்ந்த தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தார் அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள். மூவரும் தண்ணீரை அருந்தினார்கள். பின்பு நபி {ஸல்} அவர்கள் இந்த தண்ணீரும் இறைவனின் அருட்கொடை தான்இது குறித்தும் நீங்கள் மறுமையில் கேட்கப்படுவீர்கள்என்று கூறினார்கள்.

அப்போது, அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! சற்று ஓய்வெடுங்கள்! இன்னும் சிறிது நேரத்தில் உணவு தயாரித்து கொண்டு வருகின்றேன்! சாப்பிட்டு விட்டு செல்லுங்கள்!என்று கூறினார்கள்.

மூவரும் மரத்தின் நிழலில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் உறங்கினார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் உம்மு ஹைஸம், அபுல் ஹைஸம் இருவரும் உணவை தயாரித்து ஆட்டிறைச்சியும், கோதுமை ரொட்டியும் தயார் செய்து நபி {ஸல்} அவர்களின் முன் கொண்டு வைத்து விட்டு மூவரையும் எழுப்பினார்கள்.

கண்விழித்து எழுந்த மூவரும் கை, கால் முகம் கழுவி விட்டு வயிறார உண்டார்கள்.

மூவரும் சாப்பிட்டு முடித்ததும், அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். அப்போது, உம்மு ஹைஸம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்காக துஆ செய்யுங்கள்!என்று கூறினார்கள்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள் நீங்கள் பூமியில் நடமாடுகின்றவர்களில் நல்லோர்களுக்கு உணவளித்திருக்கின்றீர்கள்! பல நாள் சாப்பிடாமல் பட்டினியாய் இருந்தவர்களுக்கு வயிறு நிறைய உணவளித்து இருக்கின்றீர்கள்!

ஆகையால், இறைவன் தன் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு துஆ செய்ய வைத்திருக்கின்றான்! இதோ! வானவர்கள் உங்களுக்காக துஆ செய்து கொண்டிருக்கின்றார்கள்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                      ( நூல்: திர்மிதீ, தஃப்ஸீர் இப்னு கஸீர் )

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا شَقِيقٌ، حَدَّثَنَا أَبُو مَسْعُودٍ الأَنْصَارِيُّ، قَالَ كَانَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ يُكْنَى أَبَا شُعَيْبٍ، وَكَانَ لَهُ غُلاَمٌ لَحَّامٌ، فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْوَ فِي أَصْحَابِهِ، فَعَرَفَ الْجُوعَ فِي وَجْهِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَذَهَبَ إِلَى غُلاَمِهِ اللَّحَّامِ فَقَالَ اصْنَعْ لِي طَعَامًا يَكْفِي خَمْسَةً، لَعَلِّي أَدْعُو النَّبِيَّ صلى الله عليه وسلم خَامِسَ خَمْسَةٍ. فَصَنَعَ لَهُ طُعَيِّمًا، ثُمَّ أَتَاهُ فَدَعَاهُ، فَتَبِعَهُمْ رَجُلٌ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَا أَبَا شُعَيْبٍ إِنَّ رَجُلاً تَبِعَنَا فَإِنْ شِئْتَ أَذِنْتَ لَهُ، وَإِنْ شِئْتَ تَرَكْتَهُ "". قَالَ لاَ بَلْ أَذِنْتُ لَهُ.

அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூஷுஐப் எனும் குறிப்புப் பெயரால் அழைக்கப்படும் ஒருவர் அன்சாரிகளில் இருந்தார். அவருக்கு இறைச்சி விற்கும் பணியாளர் ஒருவர் இருந்தார். (ஒருமுறை) அபூஷுஐப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது நபியவர்கள் தம் தோழர்களுடன் இருந்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்களின் முகத்தில் பசியின் வாட்டத்தைக் கண்டார். உடனே இறைச்சி விற்கும் தம் பணியாளிடம் சென்று, ‘‘ஐந்து பேருக்குப் போதுமான உணவொன்றை எனக்காகத் தயார் செய். நான் அந்த ஐந்து பேரில் ஒருவராக நபி (ஸல்) அவர்களை அழைக்கக்கூடும்என்று சொன்னார்.

உடனே அந்தப் பணியாளர் அவருக்காகச் சிறிய அளவில் ஓர் உணவைத் தயாரித்தார். பிறகு அபூஷுஐப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களை (உணவுண்ண) அழைத்தார்கள். அப்போது நபியவர்களைப் பின்தொடர்ந்து மற்றொருவரும் வந்தார். எனவே, நபி (ஸல்) அவர்கள் ‘‘அபூஷுஐபே! ஒரு மனிதர் எம்மைப் பின்தொடர்ந்து வந்துவிட்டார். நீங்கள் நினைத்தால் (நம்மோடு உணவருந்த) அவருக்கும் அனுமதியளிக்கலாம்; நீங்கள் நினைத்தால் அவரை விட்டுவிடலாம்என்று சொன்னார்கள்.

அதற்கு அபூஷுஐப் (ரலி) அவர்கள், ‘‘(அவரைத் திருப்பி அனுப்ப) வேண்டாம். நான் அவருக்கு அனுமதியளித்து விட்டேன்என்று சொன்னார்கள். ( நூல்: புகாரி )

أنَّ جَارًا لِرَسولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ فَارِسِيًّا كانَ طَيِّبَ المَرَقِ، فَصَنَعَ لِرَسولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ، ثُمَّ جَاءَ يَدْعُوهُ، فَقالَ: وَهذِه؟ لِعَائِشَةَ، فَقالَ: لَا، فَقالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: لَا، فَعَادَ يَدْعُوهُ، فَقالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: وَهذِه؟ قالَ: لَا، قالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: لَا، ثُمَّ عَادَ يَدْعُوهُ، فَقالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: وَهذِه؟ قالَ: نَعَمْ، في الثَّالِثَةِ، فَقَاما يَتَدَافَعَانِ حتَّى أَتَيَا مَنْزِلَهُ.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அண்டை வீட்டுக்காரர் ஒருவர் இருந்தார். பாரசீகரான அவர் நன்கு (மணம் கமழ) குழம்பு சமைக்கக்கூடியவராக இருந்தார். 

அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக உணவு சமைத்துவிட்டு அவர்களை அழைப்பதற்காக வந்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் அருகில் பசியோடு இருந்த தம் துணைவி) ஆயிஷா (ரலி) அவர்களை சைகை செய்து காட்டி "இவரும் (வரலாமா)?" என்று கேட்டார்கள், அவர் (உணவு குறைவாக இருந்ததால்), "இல்லை (வேண்டாம்)" என்று கூறிவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இல்லை (அவ்வாறாயின் நானும் வரமாட்டேன்)" என்று கூறிவிட்டார்கள்.

அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைப்பதற்காக மறுபடியும் வந்தார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவரும் (வரலாமா)?" என்று (ஆயிஷா (ரலி) அவர்களை சைகை செய்து) கேட்டார்கள். அப்போதும் அவர் "இல்லை (வேண்டாம்)" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் "(அவ்வாறாயின் நானும்) இல்லை" என்று கூறிவிட்டார்கள்.

அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைப்பதற்காக மறுபடியும் வந்தார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இவரும் (வரலாமா)?" என்று (ஆயிஷா (ரலி) அவர்களை சைகை செய்து) கேட்டார்கள்.     

அவர் மூன்றாவது முறை "சரி (வரலாம்)" என்றார். பின்னர் இருவரும் ஒருவரையொருவர் பின்தொடர்ந்து அவரது வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தனர்.

உணவு வழங்கியவரை கண்ணியப்படுத்தி இறைவன் இறக்கியருளிய வசனம்....

ஒரு நாள் இரவு நேரம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சபையில் அபுல் முதவக்கில் எனும் ஏழை ஸஹாபியொருவர் வருகை புரிந்தார். வந்தவர் நேராக மாநபி {ஸல்} அவர்களின் அருகே வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் கடுமையான பசியில் இருக்கிறேன். எனக்கு சாப்பிட ஏதாவது உணவு தாருங்கள்என்று கேட்டார்.

நபி {ஸல்} அவர்கள் தங்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லத்திற்கு ஒருவரை அனுப்பி, வீட்டில் ஏதேனும் உணவு இருந்தால் வாங்கி வாருங்கள்! என்று கூறினார்கள்.

சென்றவர், திரும்பி வந்து அல்லாஹ்வின் தூதரே! வீட்டில் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லையாம்!என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாகக் கூறினார்.

பின்பு, ஒருவர் பின் ஒருவராக தங்களின் அத்துணை துணைவியர்களின் இல்லத்திற்கு அனுப்பினார்கள் {ஸல்} அவர்கள்.

 

அத்துணை துணைவியர்களும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய பதிலையே கூறினார்கள்.

பின்னர், உணவு கேட்ட அந்த ஏழை ஸஹாபியை நோக்கி நம்மிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லைஎன்று கூறிவிட்டு சபையினரை நோக்கி நம்முடைய இந்த விருந்தாளியை மகிழ்ச்சிபடுத்துபவர்கள் யாரும் இருக்கின்றீர்களா? அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்.என்று அறிவிப்புச் செய்தார்கள்.

அப்போது, அந்த சபையில் இருந்த அபூதல்ஹா (ரலி) அவர்கள் நான் அழைத்துச் சென்று சந்தோஷப்படுத்தி அனுப்பி வைக்கிறேன்என்று கூறி அழைத்துச் சென்றார்கள்.

வீட்டிற்குள் நுழைந்த அபூதல்ஹா (ரலி) அவர்கள் நடந்த சம்பவங்களை விவரித்து விட்டு, வீட்டில் ஏதாவது உணவு இருக்கிறதா? என்று கேட்டார்கள்.

அதற்கு, அவர்களின் மனைவி நமது குழந்தை சாப்பிடுவதற்கான அளவே உணவு இருக்கிறது என்றார்.

அது கேட்ட அபூதல்ஹா (ரலி) நம் குழந்தையை எப்படியாவது உறங்க வைத்து விடு! உணவு பரிமாறப்படும் இடத்தில் நம் மூவருக்கும் சேர்த்தே உணவுத்தட்டை எடுத்து வை! விருந்தாளியின் தட்டில் நான் உணவை வைத்ததும் நீ விளக்கை அணைத்து விடு! நாம் இருவரும் உணவை உண்பது போல் பாவனை செய்வோம்என்று கூறினார்கள்.

அது போன்றே அங்கு நடந்தேறியது. வயிறு நிரம்பிய அந்த ஏழை ஸஹாபி மகிழ்ச்சியோடு அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.

மறுநாள் காலை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} சபையில் நபித்தோழர்கள் குழுமியிருந்த போது மாநபி {ஸல்} அவர்கள், அபூதல்ஹா (ரலி) அவர்களை அழைத்து நடந்த சம்பவங்களை நபித்தோழர்களிடத்தில் விவரித்து விட்டு, நேற்றிரவு நீரும் உம்முடைய மனைவியும் நடந்து கொண்ட அந்த விதம் குறித்து அல்லாஹ் ரொம்பவே ஆச்சர்யப்பட்டுப் போனான்என்று கூறிவிட்டு..

இதோ இப்போது தான் ஜிப்ரயீல் (அலை) வந்து இந்த செய்தியை கூறிவிட்டு ஓர் இறைவசனத்தை அல்லாஹ் இறக்கியருளியதாக கூறி ஓதிக் காண்பித்தார்கள்.

وَالَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالْإِيمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ

ஹிஜ்ரத் செய்து தங்களிடம் வந்திருப்பவர்களை இவர்கள் நேசிக்கிறார்கள். என்பது மட்டுமல்ல. அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிற வளங்களை தங்களுக்கு மட்டுமே தேவையானதாக அவர்கள் மனதளவில் கூட அவர்கள் நினைப்பதில்லை.

மேலும், தாங்களே தேவையுள்ளவர்களாய் இருந்தாலும் கூட, தங்களை விட பிறருக்கே முன்னுரிமை வழங்குகின்றார்கள்.   ( நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ )

உணவை வீணடிப்பது மட்டும் விரயம் அல்ல பெருமானார் {ஸல்} அவர்களின் வார்த்தையில் கவனம் குவிப்போம்!

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( إِنَّ مِنْ السَّرَفِ أَنْ تَأْكُلَ كُلَّ مَا اشْتَهَيْتَ ) رواه ابن ماجه

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ விரும்பிய அனைத்தையும் உண்பதுகூட விரயம்தான்”. ( நூல்: இப்னுமாஜா )

அல்லாஹ் பசியில் இருந்து, உணவுத் தேவைகள் மிகுதியாவதில் இருந்து பாதுகாப்பானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்! வஸ்ஸலாம்!!!

Thursday, 10 October 2024

இறை நேசர்களின் இலக்கு எது?

 

இறை நேசர்களின் இலக்கு எது?


அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனின் இரண்டு வகையான வாழ்க்கை குறித்து பேசுகின்றான்.

அந்த இரண்டு வகையான வாழ்க்கையை வாழ்கிற அந்த அடியார்களுக்கு பல்வேறு வகையான சிறப்புகளை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வழங்குவதாக போற்றிப் பாராட்டி பேசுகின்றான்.

முதலாம் வகை இறைநம்பிக்கையுடன் கூடிய நல் அமல்கள் நிறைந்த வாழ்க்கை அதற்கு அல்லாஹ் இந்த உலகில் வாழும் போதும், இந்த உலகை விட்டு விடை பெற்றுச் செல்லும் போதும், நாளை மறுமையிலும் சிறப்பான அந்தஸ்துகளை வழங்குகின்றான்.

இந்த உலகில்....

مَنْ عَمِلَ صَالِحًـا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَلَـنُحْيِيَنَّهٗ حَيٰوةً طَيِّبَةً‌ وَلَـنَجْزِيَـنَّهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏

ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். ( அல்குர்ஆன்: 16: 97 )

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمٰنُ وُدًّا‏

நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அர்ரஹ்மான் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான். ( அல்குர்ஆன்: 19: 96 )

உலகை விட்டு விடை பெறும் வேளையில்....

اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰه ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلٰٓٮِٕكَةُ اَلَّا تَخَافُوْا وَلَا تَحْزَنُوْا وَاَبْشِرُوْا بِالْجَـنَّةِ الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ‏

நிச்சயமாக எவர்கள்: எங்கள் இறைவன் அல்லாஹ்தான்என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, “நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.

نَحْنُ اَوْلِيٰٓـؤُکُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ وَلَـكُمْ فِيْهَا مَا تَشْتَهِىْۤ اَنْفُسُكُمْ وَلَـكُمْ فِيْهَا مَا تَدَّعُوْنَ

நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள்; மேலும் (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது - அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். ( அல்குர்ஆன்: 41: 30, 31 )

 

இரண்டாவது வகை வாழ்க்கை இறைநேசத்தின் அடிப்படையில் அமைந்த வாழ்க்கை. இப்படியான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இறை நம்பிக்கையாளர்களுக்கு தனித்தனியாக வழங்கப்படும்  சிறப்புகள் அனைத்தையும் வழங்குவதோடு அதை விட சிறப்பான அந்தஸ்துகளையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வழங்குகின்றான்.

اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ 

(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

الَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَؕ‏

அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.

لَهُمُ الْبُشْرٰى فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ‌ لَا تَبْدِيْلَ لِـكَلِمٰتِ اللّٰهِ‌ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُؕ‏

அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும். ( அல்குர்ஆன்: 10: 62 - 64 )

குறிப்பாக, பஷாரத் எனும் சோபனத்தை இறை நம்பிக்கையாளர்கள் உலகை விட்டு விடை பெறும் தருணத்தில் பெறுகின்ற வேளையில், அதே பஷாரத்தை இறைநேசர்கள் உலகில் வாழும் காலத்திலேயே பெற்றுக் கொள்கின்றார்கள்.

ஆகவே தான் இறை நேசர்கள் நேசிக்கப்படுகின்றார்கள். இறை நேசர்களின் வாழ்க்கை கொண்டாடப்படுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், இறை நம்பிக்கையாளர் ஒருவர் பெறுகிற சுவனத்தின் உயர்ந்த அந்தஸ்து எதுவெனில் அவர் சுவனத்தில் நபிமார்கள், வாய்மையாளர்கள், ஷுஹதாக்கள் இந்த வரிசையில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் "ஸாலிஹீன்கள்" என்று இறை நேசர்களையும் இடம் பெறச் செய்கின்றான்.

وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰٓٮِٕكَ مَعَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصّٰلِحِيْنَ‌ وَحَسُنَ اُولٰٓٮِٕكَ رَفِيْقًا 

யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.

ذٰ لِكَ الْـفَضْلُ مِنَ اللّٰهِ‌ وَكَفٰى بِاللّٰهِ عَلِيْمًا

இந்த அருட்கொடை அல்லாஹ்விடமிருந்து கிடைத்ததாகும்; (எல்லாவற்றையும்) அறிந்து கொள்வதில் அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 4: 69, 70 )

 

இறை நேசருடனான இறைவனின் தொடர்பு என்பது இறை நம்பிக்கையாளருடனான இறைவனின் தொடர்பை விட முற்றிலும் வேறுபட்டதாகும்.

பின்வரும் நபிமொழி மூலம் நாம் அதைப் புரிந்து கொள்ளலாம்.

عَنْ  أَبِي هُرَيْرَةَقَالَ قَالَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّاللَّهَ قَالَ مَنْ عَادَلِي وَلِيًّا فَقَدْآذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَإِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّاافْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِييَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُبِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُبِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُبِهَا وَرِجْلَهُا لَّتِي يَمْشِيبِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَاتَرَدَّ دْتُ عَنْشَيْءٍ أَنَ افَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَاأَكْرَهُ مَسَاءَتَهُ

அல்லாஹ்கூறினான் எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப்பிரகடண்ம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விடவேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நபிலான) வணக்கங்களால் என் பக்கம்நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதி யில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறுநான் அவனை நேசித்துவிடும் போது அவன் கேட்கின்ற செவியாக அவன் பார்க்கின்றகண்ணாக அவன் பற்றுகின்ற கையாக அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன்என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக்கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். (புகாரி6502)

இறைநேசர்களை பகைத்துக்கொள்பவரோடு அல்லாஹ் போரிடுகிறான் என்ற நபிமொழிக்கு விளக்கம் கூறுகிற இப்னு ஹஜர் அல்அஸ்கலானி (ரஹ்) அவர்கள் இந்தவாசகம் இறைநேசர்களை நேசிப்பவர்களை அல்லாஹ் கண்ணியப்படுத்துவான் என்ற கருத்தை தருவதாக குறிப்பிடுகிறார்கள்.

இறை நம்பிக்கையுடைய ஒருவரின் வாழ்க்கைக்கும் இறை நேசர் ஒருவருடைய வாழ்க்கைக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிறது.

இறை நம்பிக்கையாளர்கள் தங்களுடைய வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் இறையச்சத்தை கவனத்தில் கொண்டு செயல் பட வேண்டும்.

ஒரு இபாதத்தை செய்தால் கூட அதன் மூலம் இறையச்சம் கிடைக்கப் பெற வேண்டும் என்று ஆதரவு வைக்க வேண்டும்.

ஆனால், இறை நேச்சர்களைப் பொறுத்தவரையில் அவர்களின் வாழ்க்கை முழுவதும் இயல்பாகவே இறையச்சத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும் என்று அல்லாஹ் சான்று வழங்குகின்றான்.

الَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَؕ‏

அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள். ( அல்குர்ஆன்: 10: 63 )

 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இறை நேசர்களின் விஷயத்தில் விஷேசமான கவனத்தை செலுத்துகின்றான்.

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடனான ஹிள்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தொடர்பு.

நபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடனான ஆஸிமுல் பர்கிய்யா அவர்களின் தொடர்பு.

நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களடனான தாலூத் அவர்களின் தொடர்பு என ஒரு நீண்ட பட்டியலுக்கு உரியது இறைநேசர்களின் மீதான அல்லாஹ் ரப்புல் ஆலமீனுடைய தனிக் கவனம்.

இறை நேசர்களின் இலக்கு இது!!

அவ்லியாக்கள் எனும் இறைநேசர்கள் இந்த உலகில் வாழும் காலத்தில் பெருமானார் (ஸல்) அவர்களின் நபி மொழிக்கு ஒப்ப வாழ்ந்தவர்கள்.

இறைவனின் பக்கமும் இறையருளின் பக்கமும் நெருக்கி வைப்பதிலும், இறை மார்க்கமான இஸ்லாத்தின் பால் மக்களை அழைப்பதிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக வாழ்ந்தவர்கள்.

ஆதலால் தான் உலகெங்கும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள வலிமார்களின் மஜார்களை ஜியாரத் செய்யும் போது ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இறைநேசர் உலகின் ஏதோ ஒரு பாகத்தில் இருந்து வந்து அந்த ஊர் மக்களுக்கும் அதற்கு அருகே உள்ள பகுதிகளுக்கும் இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்தியம்பும் பணியில் தம்மை அர்ப்பணித்து அங்கேயே வாழ்ந்து மரணித்து அடக்கம் செய்யப்பட்டவர்களாவர். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இறைநேசர்களைப் பொருந்திக் கொள்வானாக!

நபித்தோழர்களான ஸஹாபாக்கள் எப்படி இந்த உலகில் பரவி விரவிச் சென்று இந்த உலக மக்களின் மனங்களில் இஸ்லாத்தை கொண்டு வந்து சேர்த்தார்களோ அதே போன்று தான் இறைநேசர்களும்.

بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً

"என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள்" என்கிற ஒற்றை நபிமொழி எப்படி நபித்தோழர்களை உசுப்பியதோ, தீனை கொண்டு சேர்ப்பதற்கு ஊக்கம் தந்ததோ அதே போன்று தான் இறைநேசர்களான வலிமார்களுக்கும் ஒற்றை நபிமொழி தஃவா எனும் அழைப்புப் பணி செய்திட உத்வேகம் கொடுத்தது.

عن سهل  رَضِيَ اللَّهُ عَنْهُ، يَعْنِي ابْنَ سَعْدٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ خَيْبَرَ: «لَأُعْطِيَنَّ الرَّايَةَ غَدًا رَجُلًا يُفْتَحُ عَلَى يَدَيْهِ، يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، وَيُحِبُّهُ اللَّهُ وَرَسُولُهُ»، فَبَاتَ النَّاسُ لَيْلَتَهُمْ أَيُّهُمْ يُعْطَى، فَغَدَوْا كُلُّهُمْ يَرْجُوهُ، فَقَالَ: «أَيْنَ عَلِيٌّ؟»، فَقِيلَ يَشْتَكِي عَيْنَيْهِ، فَبَصَقَ فِي عَيْنَيْهِ وَدَعَا لَهُ، فَبَرَأَ كَأَنْ لَمْ يَكُنْ بِهِ وَجَعٌ، فَأَعْطَاهُ فَقَالَ: أُقَاتِلُهُمْ حَتَّى يَكُونُوا مِثْلَنَا؟ فَقَالَ: «انْفُذْ عَلَى رِسْلِكَ حَتَّى تَنْزِلَ بِسَاحَتِهِمْ، ثُمَّ ادْعُهُمْ إِلَى الإِسْلاَمِ، وَأَخْبِرْهُمْ بِمَا يَجِبُ عَلَيْهِمْ، فَوَاللَّهِ لَأَنْ يَهْدِيَ اللَّهُ بِكَ رَجُلًا خَيْرٌ لَكَ مِنْ أَنْ يَكُونَ لَكَ حُمْرُ النَّعَمِ»

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்: “(கைபர் போரின் போது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'நாளை (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் தரப் போகிறேன். அல்லாஹ் அவரின் கரங்களில் வெற்றியை அளிப்பான்' என்று சொன்னார்கள். எனவே மக்கள் தம்மில் எவரிடம் அது கொடுக்கப்படும் என்ற யோசனையில் இரவெல்லாம் மூழ்கியிருந்தனர். காலையானதும மக்களில் ஒவ்வொருவரும் தன்னிடம் அது கொடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்ட வண்ணம் அல்லாஹ்வின் தூதரிடம் சென்றனர். நபி(ஸல்) அவர்கள் 'அலீ இப்னு அபீ தாலிப் எங்கே?' என்று கேட்டார்கள். மக்கள் 'அவருக்குக் கண்வலி இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் 'அவருக்கு ஆளனுப்பி என்னிடம் அழைத்து வாருங்கள்' என்று உத்தரவிட்டார்கள். அலீ(ரலி) வந்தவுடன் அவர்களுடைய இரண்டு கண்களிலும் (தம் உமிழ்நீரை) உமிழ்ந்து அவர்களுக்காக (நலத்திற்கு) பிரார்த்தனை புரிந்தார்கள். அவர்களுக்கு (அதற்கு முன்) வலியே இருந்ததில்லை என்பதைப் போன்று அவர்கள் (வலி நீங்கி) குணமடைந்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுத்தார்கள். அப்போது அலீ(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! அவர்கள் நம்மைப் போன்று (ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாய்) ஆகும் வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா? என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அவர்களின் களத்தில் இறங்கும் வரை நிதானமாகச் செல்லுங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்திற்கு (வரும்படி) அழையுங்கள். மேலும் இஸ்லாத்தில் அவர்களின் மீது கடமையாகிற அல்லாஹ்விற்குச் செய்யவேண்டிய கடமைகளை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலமாக அல்லாஹ் ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியை அளிப்பது (அரபுகளின் அருஞ் செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்' என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

இன்று நாம் முஸ்லிம்களாக வாழ்வதற்கு என்றோ, எப்போதோ நம் மூதாதையர்களைச் சந்தித்து அவர்களின் இதயங்களில் இஸ்லாத்தை இடம் பெறச் செய்தவர்கள் இறைநேசர்கள் தாம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு வகையில் “இறை நேசர்கள்” என்பவர்கள் அல்லாஹ்வால் நமக்கு வழங்கப்பட்ட மகத்தான அருட்கொடை ஆவார்கள். எனவே, அல்லாஹ் வழங்கிய நிஃமத்தான – அருட்கொடையான இறை நேசர்களை அடிக்கடி நினை கூறிக் கொண்டே இருக்க வேண்டும். இறை நேசர்கள் குறித்து அடிக்கடி பேசிக் கொண்டே இருக்க வேண்டும்.

وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ

மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக. ( அல்குர்ஆன்: 93: 11 )

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)…

ஹிஜ்ரி 470 ரமலான் மாதம் முதல் பிறையன்று (கி.பி. 1077-1078) அப்துல் காதிர், ஜீலான் நகரை ஒட்டிய நீப் எனும் கிராமத்தில பிறந்தார். தந்தையின் பெயர், ஸெய்யிது அபூ ஸாலிஹ், அன்னையர் பெயர் உம்முல் கைர் ஆவார்கள்.

முதல் அழைப்பே முத்தாய்ப்பான அழைப்பானது!

மார்க்ககல்வி கற்பதற்காக பாக்தாத் செல்லப் பெற்றோரிடம் அனுமதி பெற்றார்கள் ஜிலானி (ரஹ்) அவர்கள். சன்மார்க்க ஞானப் பாதையில் அடியெடுத்து வைக்கும்  தம் மகனுக்கு 40 தீனார்கள் கொடுத்து, வாழ்க்கையில் எந்த தருணத்திலும். எக்காரணம் கொண்டும் பொய் பேசிடவே கூடாது என்ற வாக்குறுதி பெற்றுக்கொண்டு மகனை அனுப்பினார்கள் உம்முல் கைர் அவர்கள்.

பிரயாணத்தின் வழியில் கொள்ளையர் கூட்டம் ஒன்று வழிமறித்தது. கொள்ளையர் களில் ஒருவன், ஒரு புறமாக நின்ற அப்துல் காதிர் ஜீலானி (ரழி) அவர்களிடம் ஒரு பேச்சுக்காக, அவரிடம் எதுவுமே இருக்காது என்ற நம்பிக்கையோடு, “நீ என்ன வைத்திருக்கிறாய்?” என வினவினான். என்னிடம் நாற்பது தீனார்கள் இருக்கின்றனஎன்று பதில் வந்தது. ஏழ்மை யான உடையுடனிருந்த அப்துல் காதிரிடம் அத்தனை பொற்காசுகள் இருக்காது என்ற நம்பிக்கையில் கண்டு கொள்ளாமல் சென்றான் கொள்ளையன். கொள்ளை யடிக்கப்பட்ட பொருள்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த தனது தலைவனிடம் அவன் அப்துல் காதிர் ஜீலானி சொன்னதைத் தெரிவித்தான். அத்தலைவன் அப்துல் காதிரை அழைத்து, “எங்கே அப்பணம்?” என்று வினவ, சட்டைப் பையில் உள்ளது எனச் சுட்டிக் காட்டினார் அப்துல் காதிர். உடனே ஒரு கொள்ளையன், சட்டப் பையில் இருந்து நாற்பது பொற்காசுகளை எடுத்துத் தன் தலைவனிடம் கொடுத்தான்.

அந்தத் தலைவனுக்கு ஒரே வியப்பு. தன்னிடம் பணம் இருக்கிறது எனக் கூறி, அதை இழக்க ஒரு வாலிபன் துணிவது அவன் அதுவரை காணாத ஒரு புதிய காட்சியாய் இருந்தது. இத்தனை அபாயமான நிலையிலும், உண்மையைக் கூறுவதேன் என்று அத்தலைவன் கேட்டான்.

எவ்வித நிலையிலும் உண்மையையே கூறுவதாக எனது தாயிடம் சத்தியம் செய்து கொடுத்துள்ளேன்; ஞானம் தேடிச் செல்லும் பாதையில் அந்த வாக்கை நான் காப்பதுதானே முக்கியம்என்று அப்துல் காதிர் ஜீலானி பதிலளித்தார்.

அப்துல் காதிர் (ரஹ்) அவர்களின்  பதிலைக் கேட்ட கொள்ளை கூட்டத்தின் தலைவன் மனதில் இறையச்சம்  உண்டாகியது. அவனுடைய  நெஞ்சிலே  பெரும் மாறுதல் உண்டானது.

தாயின் ஒரு ஆணையை மீறாது நீர் வாக்குறுதியைக் காப்பாற்றிவிட்டீர்; யானோ கொலை கொள்ளைகளில் ஈடுபட்டு, இறைவனின் எத்தனையோ ஆணைகளை மீறி நடந்துவருகிறேன். இனி எனக்கு இந்த வாழ்வு வேண்டாம்என்று கூறி அவன் கொள்ளையிட்ட பொருள்களை உரியவர்களிடம் ஒப்படைக்கச் செய்தான். அவனது கூட்டாளிகளும் மனந்திருந்தினர்.

 

பாக்தாத் நகரை அடைந்த அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் உயர் மார்க்கக் கல்வியை பெற்றார்கள்.

ஆனால், தாம் கற்ற கல்விக்கும் தாம் பார்க்கும் மக்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு இருப்பதைக் கண்டு மனம் வருந்தினார்கள். 

இருபத்து ஐந்து ஆண்டுகள் கடுந்தவமிருந்து தங்களைத் தூய்மைப் படுத்திக்கொண்ட மாபெரும் தவசீலர் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் மகத்தான மாற்றத்தை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று சபதமேற்று அழைப்புப் பணியை கையில் எடுத்தார்கள்.

பல லட்சக்கணக்கான மக்களை தங்களுடைய உருக்கமான உபதேசத்தால் நேர்வழிப்படுத்தி சன்மார்க்கத்திற்குப் புத்துயிர் தந்தார்கள் . ஆகையால், ‘முஹியித்தீன்ஆனார்கள்.

தொடர்ந்து நாற்பதாண்டுகள் சன்மார்க்கத்தின் அழைப்புப் பணியில் முழுமையாக தம்மை அர்ப்பணித்த  முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள்  ஹிஜ் 561 -இல் உடல் நலம் குன்றினார்கள்.

இறுதிக் கணம் வந்ததும் மூன்று முறை அல்லாஹ், அல்லாஹ், அல்லாஹ் என்று அழைத்தார்கள். 91வது வயதில், ரபீவுல் ஆகிர் பிறை பதினொன்றில்

(கி.பி. 1166இல்) இந்த உலகை விட்டும் விடை பெற்றுச் சென்றார்கள்.

இறைநேசர்களை விரும்பும் நாம், இறைநேசர்களை கொண்டாடும் நாம், இறைநேசர்களை நினைவு கூறி விழா எடுக்கும் நாம் தடுக்கி விழுந்த ஒரு இடம் இருக்கிறது. நாம் மறந்து போன ஒரு சுவடு இருக்கிறது.

ஆம்! அது தான் தஃவா எனும் அழகிய அழைப்புப் பணி, சத்திய சன்மார்க்கத்தை நோக்கி மக்களை அழைக்கும் பணி! அவர்களின் வழி நின்று மகத்தான அந்த அழைப்புப் பணியை நாம் முன்னெடுக்கும் போது தான் அவர்களின் மீதான நமது நேசம் முழுமை பெறும்.

அழைப்புப் பணி ஏன்?

1) ஆதாரங்கள் நிலை நாட்டப்பட:

رُسُلًا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلاَّ يَكُونَ لِلنَّاسِ عَلَى اللَّهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا 

தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாரயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்), மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தோனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான்.” ( அல்குர்ஆன்: 4: 165 )

2) நம்மை அழிவிலிருந்து காத்துக்கொள்தவற்காக!:

وَمَا كَانَ رَبُّكَ لِيُهْلِكَ الْقُرَى بِظُلْمٍ وَأَهْلُهَا مُصْلِحُونَ 

‘(நபியே!) ஓர் ஊராரை, அவ்வூரார் சீர்திருந்திக் கொண்டிருக்கும் நிலையில் அநியாயமாக உம் இறைவன் அழிக்கமாட்டான்.” ( அல்குர்ஆன்: 11: 117 )

 

3) நஷ்டத்திலிருந்து காத்துக்கொள்வதற்காக:

وَالْعَصْرِ إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ 

காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).” (அல் அஸ்ர் 103: 1-3).

அழைப்புப் பணியின் சிறப்பு!

1) அழகான வார்த்தை:

وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ 

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரை விட சொல்லால் அழகியவர் யார் (இருக்கின்றார்)?” (புஃஸ்ஸிலத் 41: 33).

2) சிறந்த சமுதாயம்: 

كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنْ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَهُمْ مِنْهُمْ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمْ الْفَاسِقُونَ

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள், (ஏனெனில்) நீங்கள் நல்லதைச்செய்ய ஏவுகிறீர்கள், தீயதை விட்டும் விலக்குகிறீர்கள், இன்னும் அல்லாஹ்வின் மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள், வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் அவர்களில் (சிலர்) நம்பிக்கைகொண்டோராயும் இருக்கின்றனர், எனினும் அவர்களில் பலர் (இறைக்கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.” (ஆலு இம்ரான் 3: 110).

3) சமமான கூலி:

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنْ الْأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ دَعَا إِلَى ضَلَالَةٍ كَانَ عَلَيْهِ مِنْ الْإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا (مسلم).

எவர் நேர்வழியின் பால் மக்களை அழைக்கின்றாரோ அதை ஏற்று செய்தவர்களின் கூலி போல் இவருக்கும் உள்ளது, அவர்களது கூலியில் ஏதும் குறைக்கப்பட மாட்டாது. எவன் வழிகேட்டின் பால் மக்களை அழைக்கின்றானோ அவனுக்கு அதை செய்தவர்களின் கூலி போன்று உள்ளது, அவர்களது கூலியில் ஏதும் குறைக்கப்பட மாட்டாது.என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி), முஸ்லிம்).

4) நல்வாழ்த்து:

عن بْنِ مِلْحَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ …إِنَّ الدِّينَ بَدَأَ غَرِيبًا وَيَرْجِعُ غَرِيبًا فَطُوبَى لِلْغُرَبَاءِ الَّذِينَ يُصْلِحُونَ مَا أَفْسَدَ النَّاسُ مِنْ بَعْدِي مِنْ سُنَّتِي (سنن الترمذي).

நிச்சயமாக மார்க்கம் (இஸ்லாம்) பரதேசமான முறையில் ஆரம்பித்தது, அதே நிலையை மறுபடியும் அடையும். பரதேசிகளுக்கு சுப சோபனம் உண்டாகட்டுமாக! அவர்கள் யாரெனில் எனக்குப் பின் எனது வழிமுறைகளை விட்டும் சீர்கெட்டு இருந்தவர்களை சீராக்குபவர்கள் தான் அவர்கள்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு மில்ஹா தனது தந்தை, பாட்டன் வழியாக அறிவிக்கின்றார்.  ( நூல்: திர்மிதி).

அழைப்புப் பணி செய்யுமாறு அல்லாஹ்வின் கட்டளை:

اُدْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ

‘(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.” (அல்குர்ஆன்: 16: 125).

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً وَحَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ وَلَا حَرَجَ وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ (البخاري)

என்னைப் பற்றி ஒரு செய்தி தெரிந்திருந்தாலும் அதைப் பிறருக்கு எத்திவையுங்கள். நீஙகள் பனூ இஸ்ரேவலர்களைப் பற்றி பேசுவது குற்றமில்லை. எவர் என் மீது வேண்டுமென்று பொய்யுரைப்பாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகில் ஆக்கிக் கொள்ளட்டும்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) நூல்: புகாரி).

அழைப்புப் பணியை கையில் எடுத்து வெற்றிபெற்ற சமூகமாய் மிளிர்வோம்!!

وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ )

மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும், தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.” (அல்குர்ஆன்:  3: 104)

 

இறைநேசர்களை நேசிப்பதோடு நின்று விடாமல் இறைநேசர்களின் வழித்தடத்தில் பயணித்து இறைநெருக்கம் பெறுவோம்! வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக!

ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!