Thursday 15 December 2022

மாண்புயர் குர்ஆனை மனனம் செய்வோம்! மகத்தான உயர்வைப் பெறுவோம்!! பாகம் – 1.

 

மாண்புயர் குர்ஆனை மனனம் செய்வோம்!

மகத்தான உயர்வைப் பெறுவோம்!!

பாகம் – 1.



இன்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

ஐ.நா உட்பட பல்வேறு நாடுகள், தொண்டு நிறுவனங்கள், அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என பல தரப்பட்ட அமைப்பினரும் சிறந்த சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகின்றனர்.

"வாழ்நாள் சாதனையாளர் விருது" இதுவும் பல்வேறு துறைகளில் வழங்கப்பட்டு வருகிற உயரிய விருதுகளில் ஒன்றாகும்.

பல வகையிலும் சமூகத்திற்கு உதவியாகவும் துறை ரீதியாக பிறருக்கு பயனாகவும், உந்து சக்தியாகவும் திகழ்பவர்களுக்கு அனைத்து துறைகளிலும் இந்த விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில் கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகில்  செயல் பட்டு வருகிற அல் ஃபலாஹ் நர்சரி & பிரைமரி பள்ளி நிர்வாகம் சாமானிய ஏழை முஸ்லிம் ஷேக் முஹ்யித்தீன் என்பவருக்கு "வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கி கௌரவித்துள்ளது.

இதே விருதை தமிழகத்தின் மிகப்பெரிய அமைப்புக்கள் ஏதேனும் வழங்கி இருந்தால் தளம் தளமாக வளம் வந்திருக்கும்.

பல்வேறு மாஷா அல்லாஹ், லைக், ஹார்ட்டீன் என பாராட்டு மழையில் அந்த எளிய முஸ்லிம் நனைக்கப் பட்டிருப்பார்.

பெரும்பாலான வாட்ஸ் அப், முகநூல் போன்ற தளங்கள் எதிலும் பெரியளவில் இது பகிர்ந்து கொள்ளப்படாதது ஆச்சர்யத்தை தந்தது.

அப்படி என்ன அந்த எளிய முஸ்லிம் பெரியவர் சாதித்து விட்டார்? என்று தானே கேட்கிறீர்கள்.

தாம் பெற்றெடுத்த ஐந்து பெண்மக்களையும் திருக்குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழாக்களாக ஆக்கி இருக்கிறார்.

ஒரு ஊரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து மக்களும் திருக்குர்ஆனை மனனம் செய்திருப்பது என்பது தமிழகத்தில் இது தான் முதல் முறை என்று நான் நினைக்கிறேன்.

அவரின் எளிய இல்லத்தை வல்லோன் அல்லாஹ்வின் வசனங்களை பாதுகாக்கும் "தாருல் குர்ஆன்" ஆக மாற்றி விட்டார்.

ஷேக் முஹ்யித்தீன் கதீஜா தம்பதியர்களின் 

ஐந்து ஹாஃபிழாக்கள்

1. ஹாஃபிழா ஹன்ஸா

2. ஹாஃபிழா ஃபாத்திமா 

3. ஹாஃபிழா ஆயிஷா

4. ஹாஃபிழா தஸ்பீஹா

5. ஹாஃபிழா ஜைனப்

 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அந்த குடும்பத்தாரைப் பொருத்திக் கொள்வானாக!

ஈருலகத்தின் அனைத்து ஃகைர் பரக்காத்துகளையும் நிரப்பமாக வழங்கியருள்வானாக!!

( இந்த தகவலைப் பெறுவதற்கு துணை நின்ற திண்டுக்கல் அப்துர் ரஹ்மான் யூசுஃபி ஹழ்ரத் அவர்களுக்கும், நத்தம் இமாம் இக்பால் யூசுஃபி ஹழ்ரத் அவர்களுக்கும், நத்தம் ஹாஜி நிஜாம் அவர்களுக்கும், முழுமையான தகவலைத் தந்த நத்தம் அல் ஃபலாஹ் பள்ளியின் ஆசிரியர் ஹுஸைன் அவர்களுக்கும் ஜஸாக்குமுல்லாஹு ஃகைரன் )

குர்ஆன் மனனம் அவசியம் ஏன்?

நாம் வாழும் காலம் ரித்தத் - மதம் மாற்றம் பெருகிக் கொண்டிருக்கும் காலமோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு காதலுக்காக மதம் மாறுவது, மன இச்சைகளுக்காக மதம் மாறுவது, எக்ஸ் முஸ்லிம் என்று பெருமையாக கூறிக் கொண்டு திரிவது, முஸ்லிம் என்ற போர்வையில் இருந்து கொண்டு நாத்திகம் பேசுவது என தன்னை மாற்றிக் கொண்டிருக்கும் "முஸ்லிம்" எனும் பெயரில் "காஃபிராக" ஒளிந்து கொண்டு நடமாடிக் கொண்டிருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக மறைமுகமாக  பெருகி வரும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ரித்தத் பெருகி வரும் காலத்தில் நாம் மிகவும் விவேகமாகவும், விழிப்புணர்வோடும் செயல் பட கடமைப்பட்டுள்ளோம்.

ரித்தத்துக்கு எதிராக வேகமாக செயல்பட நாம் ஒன்றும் கலீஃபா அபூபக்ர் (ரலி) ஆட்சி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்க வில்லை  என்பதை முதலில்  உணர்ந்து கொள்ள வேண்டும்.

அபூபக்ர் (ரலி) அவர்களைப் போன்றோ அவர்களின் காலத்தில் வாழ்ந்த மேன்மக்களைப் போன்றோ ஈமானிய தரம் கொண்டவர்களாகவும் நாம் இல்லை என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும்.

ரித்தத் எங்கெல்லாம் நிகழ்ந்ததாக வரலாறு குறிப்பிடுகிறதோ அங்கெல்லாம் குர்ஆன் உடனான தொடர்பில் இருந்து இந்த சமூகம் விலகியதே அடிப்படைக் காரணம் என்று வரையறுக்கிறது.

இன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு மக்தப் மதரஸாக்களுக்குச் சென்று குர்ஆன் ஓதி வந்த சிறார்களை இந்த உம்மத் இழந்திருக்கிறது.

அல்லாஹ்வின் ஆலயமாம் மஸ்ஜிதில் அமர்ந்து குர்ஆன் ஓதும் பெரும் எண்ணிக்கையிலான மக்களை இந்த உம்மத் இழந்திருக்கிறது.

மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு இஷா வரை வீடுகளில் அருள்மறையை ஓதும் பெண்களை இந்த உம்மத் இழந்திருக்கிறது.

குர்ஆனை இதயத்தில் சுமக்கும் சுமந்த குர்ஆனை இதமாக ஓதும் ஹாஃபிழ் கூட்டத்தை இந்த உம்மத் இழந்திருக்கிறது.

தஃப்ஸீர் வகுப்புகளில் அமர்ந்து அருள் மறையின் அமுதத்தை பருகி வந்த பெரும் கூட்டத்தை இந்த உம்மத் இழந்திருக்கிறது.

 

இப்படியாக இந்த உம்மத் குர்ஆன் உடைய தொடர்பில் இருந்து வெகு தூரம் விலகிச் சென்று கொண்டு இருக்கிறது.

எனவே ரித்தத்தில் இருந்து நாமும் எதிர் வரும் நம் தலைமுறையினரும் பாதுகாக்கப்பட வேண்டுமானால் குர்ஆன் உடனான நம்முடைய தொடர்பை நாம் பலப்படுத்த வேண்டும்.

ஏனெனில், அபூபக்ர் ரலி அவர்களின் ஆட்சிக் காலத்திற்கு பிறகு ஆட்சியாளராக வந்த உமர் (ரலி) அவர்கள் உடனடியாக மேற்கொண்ட பணிகளில் இரண்டு அம்சங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஒன்று ஹாஃபிழ்களைக் கொண்டு தராவீஹ் தொழுகையை நடைமுறைப் படுத்தியது.

இரண்டாவது முஸ்லிம்கள் வசிக்கும் அனைத்துப் பகுதிகளிலும் மதரஸாக்களை நிறுவியது.

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட ரித்தத் தொடராமல் விரிவடைந்த 22 1/2 லட்சம் சதுர மைல் பரப்பளவுள்ள இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை பாதுகாத்தார்கள் உமர் (ரலி) அவர்கள்.

இன்னும் தெளிவாக சொல்வதென்றால் குர்ஆனுக்கு மட்டுமே சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும் ஆற்றல் இருக்கிறது.

அல்லாஹ் கூறுகிறான்:- 

شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ 

"ரமளான்  மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்;         (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது". ( அல்குர்ஆன்: 2: 185 )

குர்ஆன் உடனான தொடர்பில் ஆக உயர்ந்தது அதை உள்ளத்தில் மனனமாக சுமந்து அதை ஹாஃபிழாக இருந்து பாதுகாப்பதாகும்.

குர்ஆனோடு தொடர்பில்...

குர்ஆனோடு தொடர்பில் இருக்கிற எவரையையும் குர்ஆன் சங்கை படுத்தாமல் இருப்பதில்லை. உயர்த்தாமல் இருப்பதும் இல்லை.

ஏனெனில்... குர்ஆன் என்பது...

1.   மிகவும் சங்கையானவனின் வார்த்தையும், பேச்சும் ஆகும்.

اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ

“மிகவும் சங்கையானவனாகிய உமது இரட்சகனின் பெயரால் ஓதுவீராக!” ( அல் குர்ஆன்: 96: 3 )

2.   மிகவும் சங்கையாக்கப்பட்ட (லவ்ஹுல் மஹ்ஃபூல்) ஏட்டில் பாதுகாக்கப்படும் வார்த்தை.

فِي صُحُفٍ مُكَرَّمَةٍ (13)

“இது (இந்த குர்ஆன்) லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் மிக்க சங்கையாக்கப்பட்ட ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது”. ( அல்குர்ஆன்: 80: 13 )

3.   சங்கையானவர்களால் பதிவு செய்யப்பட்ட வேதம் அது.

بِأَيْدِي سَفَرَةٍ (15) كِرَامٍ بَرَرَةٍ (16)

“எழுதுபவர்களின் கைகளினால் அது பதிவு செய்யப்பட்டது. அவர்கள் யாரெனில் மிகவும் சங்கையான(வான)வர்கள், மிகவும் நல்லவர்கள்”. ( அல்குர்ஆன்: 80: 15, 16 )

4.   குர்ஆனும் சங்கையானதே..

إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ

“நிச்சயமாக! இது மிக்க சங்கையான குர்ஆனாகும்”. ( அல்குர்ஆன்: 56: 77 )

ஆகவே, அக்ரமான அல்லாஹ்வின் வார்த்தையான, முக்கர்ரம் ஆன ஏட்டில் கிராம் ஆன வானவர்களால் பதிவு செய்யப்பட்ட கரீம் ஆன சங்கை மிகு குர்ஆனோடு யார் தொடர்பில் இருப்பாரோ நிச்சயம் அவர் சங்கையானவராகவே ஈருலகிலும் இருப்பார்.

கலாநிதி அஹ்மத் ஈஸா கூறுகிறார்கள்.

1-   ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அல்குர்ஆனை கொண்டுவந்தார்கள்

வானவர்களிலே மகத்தானவராக ஆனார்கள்.

2-   அல்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது

படைப்பினங்களின் தலைவரானார்கள்.

3-   அல்குர்ஆன் முஹம்மத் (ஸல்) அவர்களின் சமூகதிற்க்கு வழங்கப்பட்டது ,

முஹம்மத் (ஸல்) அவர்களின் சமூகம் ஏனய சமூகத்தினரை விட சிறந்த சமூகமானது.

4- அல்குர்ஆன் ரமலான் மாதத்தில் இறங்கியது ,ஏனய மாதங்களை விட

சிறந்த மாதமாக ரமலான் மாதம் ஆனது.

5- அல்குர்ஆன் லைலத்துல் கத்ரீன் இரவில் இறங்கியது ,ஏனய

இரவுகளை விட சிறந்ததாக ஆனது. ஆக அல்குர்ஆன் இதயத்தில்

பிரவேசித்தால் என்ன ஆகும்?

எனவே எமது உள்ளத்தில் இந்த குர்ஆனை நாம் கொண்டு சேர்க்க வேண்டும்.

அப்போது தான் நமது உள்ளம் ஒளிமயமாகும்.

குர்ஆனை மனனமிடுவதன் சிறப்பு:-

عن عائشة رضي اللَّه عنها قالتْ : قال رسولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « الَّذِي يَقرَأُ القُرْآنَ وَهُو ماهِرٌ بِهِ معَ السَّفَرةِ الكرَامِ البررَةِ ، والذي يقرَأُ القُرْآنَ ويتَتَعْتَعُ فِيهِ وَهُو عليهِ شَاقٌّ له أجْران » [ متفقٌ عليه

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: “குர்ஆனை மனனமிட்டு ஓதுபவர் சங்கை மிகுந்த வானவர்களுடன் இருப்பார். ஒருவருக்கு அது கடினமாக இருந்த போதிலும், கவனமாக அதனை ஓதினால் அவருக்கு இரண்டு கூலிகள் உண்டு. ( நூல்: புகாரி : 4937, முஸ்லிம் )

أيحب أحدكم أن يذهب إلى بطحان -إلى واد في المدينة- فيأتي بناقتين عظيمتين في غير إثم ولا قطيعة رحم؟ قالوا: يا رسول الله! كلنا يحب ذلك، فقال عليه الصلاة والسلام:: لأن يغدو أحدكم إلى المسجد فيتعلم آيتين من كتاب الله خير له من ناقتين عظيمتين، وثلاث خير من ثلاث، وأربع خير من أربع وأمثالهن من الإبل،

நாங்கள் திண்ணையில் அமர்ந்து இருக்கும் சமயத்தில் நபி(ஸல்) எங்களிடம் வந்து உங்களிடம் பாவம் செய்யாது சொந்த பந்தங்களை துண்டிக்காத நிலையில் ஒவ்வொரு நாளும் புத்ஹான் அல்லது ஹதீக் என்ற இடத்திற்கு சென்று திமில்களுடைய இரண்டு ஓட்டகங்களை கொண்டு வர யார் விரும்புவார்? என வினவினார்கள். நாங்கள் அனைவரும் இதை விரும்புவோம் என்று பதிலளித்தோம். உங்களில் ஒருவர் பள்ளிவாசல் பக்கம் செல்லக்கூடாதா? அவ்வாறு சென்று அல்லாஹ்வுடைய வேத்தில் இரண்டு வசனங்களை ஓதுதல் அல்லது கற்றல் இரண்டு ஒட்டகங்களை விட சிறந்தது. மூன்று வசனங்களை ஓதுவது மூன்று ஒட்டகங்களை விட சிறந்தது. நான்கு வசனங்களை ஓதுவது நான்கு ஒட்டகங்களை விட சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தன்னுடைய இல்லத்திற்கு செல்லும்போது தன்னுடன் நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்களை பெற்றுச் செல்லவேண்டும் என்று விரும்புவாரா? என்று வினவினார்கள். நாங்கள் அனைவரும் அதை விரும்புவோம் என்று கூறினோம். மூன்று (குர்ஆனிய) வசனங்களை உங்களில் ஒருவர் தன்னுடைய தொழுகையில் ஓதுவது அவருக்கு நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்கள் கிடைப்பதை விட சிறந்தது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபுஹூரைரா(ரலி) முஸ்லிம் இப்னுமாஜா).

روى الترمذي (2914) وأبو داود (1464) عن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم قال :" يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأ بها " والحديث صححه الألباني في السلسلة الصحيحة (5/281) برقم 2240

மறுமை நாளில் குர்ஆனை ஓதி அதனடிப்படையில் நடந்தவரிடம் குர்ஆனின் தோழரே ஓதுவீராக என்று கூறப்படும். மேலும் உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பாரோ அதுதான் சொர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும் என்று கூறப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) ஆதாரம்: அபூதாவுத் திர்மிதி.

فعَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " يَجِيءُ الْقُرْآنُ يَوْمَ الْقِيَامَةِ ، فَيَقُولُ يَا رَبِّ حَلِّهِ ، فَيُلْبَسُ تَاجَ الْكَرَامَةِ ، ثُمَّ يَقُولُ يَا رَبِّ زِدْهُ ، فَيُلْبَسُ حُلَّةَ الْكَرَامَةِ ، ثُمَّ يَقُولُ يَا رَبِّ ارْضَ عَنْهُ ، فَيَرْضَى عَنْهُ ، فَيُقَالُ لَهُ : اقْرَأْ وَارْقَ وَتُزَادُ بِكُلِّ آيَةٍ حَسَنَةً " [ أخرجه الترْمذي وقال : حديث حسن صحيح ] ،

குர்ஆனை ஓதிய தோழர் மறுமையில் வருவார். அப்போது குர்ஆன் இறைவா! இவருக்கு ஆடையை அணிவிஎன்று சொல்லும் அப்போது அவருக்கு உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்படும். இறைவா இவருக்கு உன் அருளை வழங்குவாயாக! என்று கூறும். அப்போது அவருக்கு உயர்ந்த சீருடை அணிவிக்கப்படும். பிறகு குர்ஆன் இவரை பொருந்திக் கொள்ளுமாறு சொல்லும் அவரை இறைவன் பொருந்திக் கொள்வான். அம்மனிதரிடம் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஒதுவீராக! அவர் ஒதுகிறபோது ஒவ்வொரு வசனத்திற்கும் ஒரு நன்மை அதிகப்படுத்தப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபுஹூரைரா(ரலி) திர்மிதி, இப்னு குஸைமா.)

குர்ஆனை மனனமிட்டவர் அதனோடுள்ள தொடர்பை குறைப்பதோ , அல்லது அதன் வசனங்களை மறப்பதோ கூடாது.

عَنْ عَبْدِ اللَّهِ بنِ مسعود قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : ( بِئْسَمَا لأَحَدِهِمْ يَقُولُ نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ بَلْ هُوَ نُسِّيَ ، اسْتَذْكِرُوا الْقُرْآنَ ، فَلَهُوَ أَشَدُّ تَفَصِّيًا مِنْ صُدُورِ الرِّجَالِ مِنَ النَّعَمِ بِعُقُلِهَا ) . رواه البخاري ( 4744) ومسلم ( 790 ) .

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:- “இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை *நான் மறந்து விட்டேன்* என்று ஒருவர் கூறுவது இதுதான் *அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும்.* வேண்டுமானால் *மறைக்கவைக்கப்பட்டுவிட்டது* என்று அவர் கூறட்டும் குர்ஆனை தொடர்ந்து ஓதி நினைவுபடுத்தி வாருங்கள் .ஏனெனில் *ஒட்டங்களை* விடவும் வேகமாக மனிதர்களின் எண்ணங்களில் இருந்து குர்ஆன் தப்பக் கூடியதாகும். ( நூல்: புகாரி, 5032 )

இப்னு உமர் ரலி அறிவிக்கிறார்கள்: “குர்ஆனை (பார்த்தோ அல்லது மனனமாகவோ) ஓதுகின்றவரின் நிலையெல்லாம், கயிற்றால் கட்டி வைக்கப்பட்ட *ஒட்டகத்தின் உரிமையாளரின்* நிலையை ஒத்திருக்கிறது. அதனை அவர் கண்காணித்து வந்தால் தன்னிடமே அவர் அதை தக்க வைத்துக் கொள்ளலாம். அதை அவிழ்த்து விட்டு விட்டால் அது ஓடிப்போய் விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி: 5031 )

நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனோடு தொடர்பு வைத்திருந்தவர்களுக்கு கொடுத்த முக்கியத்துவம்..

حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ ، أَخْبَرَنَا عَبْدُ اللهِ ، أَخْبَرَنَا لَيْثُ بْنُ سَعْدٍ ، حَدَّثَنِي ابْنُ شِهَابٍ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا

أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَجْمَعُ بَيْنَ الرَّجُلَيْنِ مِنْ قَتْلَى أُحُدٍ فِي ثَوْبٍ وَاحِدٍ ثُمَّ يَقُولُ أَيُّهُمْ أَكْثَرُ أَخْذًا لِلْقُرْآنِ فَإِذَا أُشِيرَ لَهُ إِلَى أَحَدِهِمَا قَدَّمَهُ فِي اللَّحْدِ وَقَالَ أَنَا شَهِيدٌ عَلَى هَؤُلاَءِ وَأَمَرَ بِدَفْنِهِمْ بِدِمَائِهِمْ وَلَمْ يُصَلِّ عَلَيْهِمْ وَلَمْ يُغَسِّلْهُمْ.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரில் கொல்லப்பட்டவர்களை இரண்டிரண்டு பேராக ஒரே ஆடையில் கஃபனிட்டுவிட்டு, “”இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?” எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக் காட்டப்பட்டதும் அந்த ஒருவரது உடலைக் கப்றின் உட்குழியில் முதலில் வைத்துவிட்டு, “”இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாவேன்எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்துடனேயே அடக்குமாறு கட்டளையிட்டார்கள். இவர்கள் நீராட்டப்படவில்லை; இவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவுமில்லை. ( நூல்: புகாரி ) 

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَبِى نَضْرَةَ عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-

« إِذَا كَانُوا ثَلاَثَةً فَلْيَؤُمَّهُمْ أَحَدُهُمْ وَأَحَقُّهُمْ بِالإِمَامَةِ أَقْرَؤُهُمْ ».

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் மூன்று பேர் இருந்தால் அவர்களில் ஒருவர் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்; அவர்களில் நன்கு ஓதத் தெரிந்தவரே அவர்களுக்குத் தொழுவிக்க அதிகத் தகுதியுடையவர் ஆவார்.

அறி : அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : முஸ்லிம்-1191 

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ قَالَ : حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ عَنْ عُبَيْدِ اللهِ عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ

لَمَّا قَدِمَ الْمُهَاجِرُونَ الأَوَّلُونَ الْعُصْبَةَ – مَوْضِعٌ بِقُبَاءٍ – قَبْلَ مَقْدَمِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَؤُمُّهُمْ سَالِمٌ مَوْلَى أَبِي حُذَيْفَةَ ، وَكَانَ أَكْثَرَهُمْ قُرْآنًا.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: முதல்கட்டமாக (மதீனாவிற்கு நாடு துறந்து வந்த) முஹாஜிரீன்கள்-குபா பகுதியில் உள்ள- அல்உஸ்பா எனும் இடத்திற்கு வந்(து சேர்ந்)த போது அங்குள்ள மக்களுக்கு அபூஹுதைஃபா (ரலி) அவர்களின் அடிமை சாலிம் (ரலி) அவர்களே அவர்களுக்கு தலைமை தாங்கித் தொழுவித்துக்கொண்டிருந்தார்கள். இது நபி (ஸல்) அவர்கள் நாடு துறந்து (மதீனாவிற்கு) வருவதற்கு முன்பு நடைபெற்றது. அவர் (சாலிம்) குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவராக இருந்தார். ( நூல்: புகாரி ) 

 

 

 

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ ، عَنْ أَيُّوبَ ، عَنْ أَبِي قِلاَبَةَ ، عَنْ عَمْرِو بْنِ سَلِمَةَ ، قَالَ: قَالَ لِي أَبُو قِلاَبَةَ : أَلاَ تَلْقَاهُ فَتَسْأَلَهُ ، قَالَ فَلَقِيتُهُ فَسَأَلْتُهُ ، فَقَالَ :كُنَّا بِمَاءٍ مَمَرَّ النَّاسِ ، وَكَانَ يَمُرُّ بِنَا الرُّكْبَانُ ، فَنَسْأَلُهُمْ : مَا لِلنَّاسِ ، مَا لِلنَّاسِ ؟ مَا هَذَا الرَّجُلُ ؟ فَيَقُولُونَ : يَزْعُمُ أَنَّ اللَّهَ أَرْسَلَهُ ، أَوْحَى إِلَيْهِ ، أَوْ أَوْحَى اللَّهُ بِكَذَا ، فَكُنْتُ أَحْفَظُ ذَلِكَ الْكَلاَمَ ، وَكَأَنَّمَا يُغْرَى فِي صَدْرِي ، وَكَانَتْ الْعَرَبُ تَلَوَّمُ بِإِسْلاَمِهِمُ الْفَتْحَ ، فَيَقُولُونَ : اتْرُكُوهُ وَقَوْمَهُ ، فَإِنَّهُ إِنْ ظَهَرَ عَلَيْهِمْ فَهُوَ نَبِيٌّ صَادِقٌ ، فَلَمَّا كَانَتْ وَقْعَةُ أَهْلِ الْفَتْحِ ، بَادَرَ كُلُّ قَوْمٍ بِإِسْلاَمِهِمْ ، وَبَدَرَ أَبِي قَوْمِي بِإِسْلاَمِهِمْ ، فَلَمَّا قَدِمَ قَالَ : جِئْتُكُمْ وَاللهِ مِنْ عِنْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم حَقًّا ، فَقَالَ : صَلُّوا صَلاَةَ كَذَا فِي حِينِ كَذَا ، وَصَلُّوا صَلاَةَ كَذَا فِي حِينِ كَذَا ، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ ، فَلْيُؤَذِّنْ أَحَدُكُمْ ، وَلْيَؤُمَّكُمْ أَ

كْثَرُكُمْ قُرْآنًا ، فَنَظَرُوا فَلَمْ يَكُنْ أَحَدٌ أَكْثَرَ قُرْآنًا مِنِّي ، لِمَا كُنْتُ أَتَلَقَّى مِنَ الرُّكْبَانِ ، فَقَدَّمُونِي بَيْنَ أَيْدِيهِمْ ، وَأَنَا ابْنُ سِتٍّ ، أَوْ سَبْعِ سِنِينَ ، وَكَانَتْ عَلَيَّ بُرْدَةٌ ، كُنْتُ إِذَا سَجَدْتُ تَقَلَّصَتْ عَنِّي ، فَقَالَتِ امْرَأَةٌ مِنَ الْحَيِّ : أَلاَ تُغَطُّوا عَنَّا اسْتَ قَارِئِكُمْ ، فَاشْتَزَوْا فَقَطَعُوا لِي قَمِيصًا ، فَمَا فَرِحْتُ بِشَيْءٍ فَرَحِي بِذَلِكَ الْقَمِيصِ.

ஆறு வயதில் இமாமத் செய்த அம்ரு பின் சலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

நாங்கள் அவர்களிடம், “”மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?” என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், “”அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத் தூதராக) அனுப்பியிருப்பதாக…. அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்…. கூறுகிறார்என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக் காட்டிக்) கூறுவார்கள்.

உடனே நான் அந்த (இறை)வாக்கை மனப்பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போல ஆகிவிட்டது. அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஆகவே அவர்கள், “”அவரை அவருடைய குலத்தா(ரான குறைஷிய)ருடன் விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று நிரூபணமாகிவிடும்)என்று சொன்னார்கள். மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி (ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்த போது, “”அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி (ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன்.

நபி (ஸல்) அவர்கள், “”இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள்.

இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக் கட்டும்என்று சொன்னார்கள்எனக் கூறினார்கள்.

ஆகவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்த போது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் (எங்களிடையே) இருக்கவில்லை. ஆகவே, (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய(சிறு)வனாக இருந்தேன்.

நான் ஒரு சால்வையைப் போர்த்தி யிருந்தேன். நான் சஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. ஆகவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், “”உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?” என்று கேட்டார்.

ஆகவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை. (அறி: அம்ர் பின் சலமா (ரலி),  நூல்: புகாரி )

روى مسلم أن نافع بن عبدالحارث لقي عمر بعسفان، وكان عمر يستعمله على مكة، فقال: مَن استعملت على أهل الوادي؟ فقال: "ابنُ أَبْزَى" قال: ومَن ابن أبزى؟ قال: مولًى من موالينا، قال: فاستخلفت عليهم مولًى؟! قال: إنه قارئ لكتاب الله - عز وجل - وإنه عالِم بالفرائض، ثم قال عمر: أما إن نبيَّكم - صلى الله عليه وسلم - قد قال: ((إن الله يرفع بهذا الكتاب أقوامًا ويضع به آخرين)).

நாஃபிஉ இப்னு அப்துல் ஹாரிஸ் (ரலி) அவர்களை உமர் ரலி அவர்கள் மக்காவின் கவர்னராக நியமித்து இருந்தார்கள். இந்நிலையில் ஹஜ் செய்வதற்காக வந்திருந்த நாஃபிவு ரலி அவர்களை அஸ்ஃபான் எனும் இடத்தில் சந்தித்தார்கள். 

யாரை உங்களுக்கு பகரமாக நியமித்து விட்டு வந்திருக்கின்றீர்கள் என்று உமர் ரலி அவர்கள் கேட்டதற்கு நான் அப்ஸாவை நியமித்து விட்டு வந்திருக்கிறேன் என்று கூறினார் நாஃபிவு ரலி அவர்கள்.

அப்ஸாவா? யார் அவர்? என்று உமர் ரலி அவர்கள் வினவியதற்கு "நமக்கு கிடைத்த அடிமைகளில் ஒரு அடிமை" அவர் என்று பதில் கூற, என்னது குறைஷிகள் பெரும்பான்மையாக வாழும் பகுதிக்கு அடிமையை கவர்னராக நியமித்து விட்டு வந்தீர்களா? என ஒரு வித பதட்டத்துடன் உமர் (ரலி) அவர்கள் கேட்க, அப்ஸா குர்ஆனை மனனம் செய்தவராவார் மேலும், ஷரீஆவின் முக்கிய கடமைகளின் சட்டங்களை அறிந்த அறிஞர் ஆவார் " என்று நாஃபிவு ரலி பதில் கூறினார்கள்.

இதைக் கேட்ட உமர் ரலி அவர்கள் நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள்  "நிச்சயமாக அல்லாஹ் இந்த குர்ஆனைக் கொண்டு சிலரின் கண்ணியத்தை உயர்த்துகிறான். சிலரின் கண்ணியத்தை தாழ்த்துகின்றான்" என்று கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

நமக்கும் குர்ஆனுக்குமிடையேயான உறவை உள்ளடக்கியுள்ள ஒரு அழகிய துஆவை அடையாளப்படுத்திய நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் அதை செவியேற்றார்களோ, அவர் அதைக் கற்க வேண்டும். அந்த துஆ:-

اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ، ابْنُ عَبْدِكَ، ابْنُ أَمَتِكَ، نَاصِيَتِي بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي، وَنُورَ صَدْرِي، وَجَلَاءَ حُزْنِي، وَذَهَابَ هَمِّي

யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உனது அடியான். உன்னுடைய அடியானின்மகன், உன்னுடைய அடியாளின் மகன்.  என் முன்னெற்றி ரோமம் உன் கைவசம் உள்ளது.  உன் தீர்ப்பு என்னில் செல்லுபடியாகிக் கொண்டிருக்கிறது. உன் முடிவு என்னில் நீதமாகவே உள்ளது. உனக்கே உரிய ஒவ்வொரு பெயரால் அதை உனக்குப் பெயராக நீ வைத்திருக்கிறாய்.  அல்லது உன்னுடைய வேதத்தில் நீ இறக்கி வைத்திருக்கிறாய், அல்லது உன்னுடைய படைப்பினங்களில் எந்த ஒருவருக்காவது நீ அதைக் கற்றுத் தந்திருக்கிறாய்.  அல்லது உன்னிடமுள்ள மறைவானவற்றின் அறிவில் அதை உனக்கே தெரிந்தெடுத்து வைத்திருக்கிறாயே, அத்தகையவற்றைக் கொண்டு குர்ஆனை என்னுடைய இதயத்தின் வசந்தமாக, என் நெஞ்சத்தின் ஒளியாக, என் கவலையை நீக்கக்கூடியதாக, மற்றும் என் துக்கத்தைப் போக்கக் கூடியதாக நீ ஆக்கி வைக்குமாறு உன்னிடம் நான் கேட்கிறேன்.

இன்ஷா அல்லாஹ்… இதன் தொடர்ச்சி அடுத்த வாரம் இடம் பெறும்..

4 comments:

  1. மாஷா அல்லாஹ் மிக அருமை

    ReplyDelete
  2. குர்ஆன் தொடர்பின் அத்தியாவசியத்தை சிறந்ததொரு கோணத்தில் பதிவு செய்தீர்கள் மௌலானா ஜஸாக்கல்லாஹ் ஹைரன்

    ReplyDelete
  3. அல் ஹம்து லில்லாஹ் ஹஜ்ரத்

    ReplyDelete
  4. அருமை. நல்ல பதிவு

    ReplyDelete