Sunday 26 March 2023

விட்டுக் கொடு! உச்சம் தொடுவாய்!!

 

விட்டுக் கொடு! உச்சம் தொடுவாய்!!

ரமழான் – (1444 – 2023 ) – தராவீஹ் சிந்தனை:- 5.


ஐந்தாம் நாள் தராவீஹ் தொழுகையை நிறைவேற்றி, நான்காம் நாள் நோன்பை நோற்று அல்லாஹ்வின் அருள் நிறைந்த மஸ்ஜிதில் இதயத்திற்கு உற்சாகமும், ஈமானுக்கு உரமும் தருகிற குர்ஆனின் போதனைகளை செவிமடுக்கும் ஆர்வத்தில் அமர்ந்திருக்கின்றோம்.

இன்று ஓதப்பட்ட சூரா அல் மாயிதா அத்தியாயத்தின் 28 முதல் 30 வரையிலான  வசனங்கள் பின்வருமாறு பேசுகின்றது.

لَٮِٕنْۢ بَسَطْتَّ اِلَىَّ يَدَكَ لِتَقْتُلَنِىْ مَاۤ اَنَا بِبَاسِطٍ يَّدِىَ اِلَيْكَ لِاَقْتُلَكَ‌ ۚ اِنِّىْۤ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِيْنَ‏

அன்றியும், “நீ என்னை வெட்டுவதற்காக என்னளவில் உன் கையை நீட்டு வாயானால் நான் உன்னை வெட்டுவற்காக என் கையை உன்னளவில் நீட்ட மாட்டேன் - ஏனெனில் நான் நிச்சயமாக உலகங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்).

 اِنِّىْۤ اُرِيْدُ اَنْ تَبُوْٓءَا۟بِاِثْمِىْ وَ اِثْمِكَ فَتَكُوْنَ مِنْ اَصْحٰبِ النَّارِ‌ۚ وَذٰ لِكَ جَزٰٓؤُا الظّٰلِمِيْنَ‌ۚ‏‏

என்னுடைய பாவத்தையும் உன்னுடைய பாவத்துடன் நீ சுமந்து கொண்டு வருவதையே நிச்சயமாக நான் விரும்புகிறேன்; அப்பொழுது நீ நரகவாசிகளில் ஒருவனாகிவிடுவாய். இது தான் அநியாயக்காரர்களின் கூலியாகும் (என்றும் கூறினார்),

 فَطَوَّعَتْ لَهٗ نَفْسُهٗ قَـتْلَ اَخِيْهِ فَقَتَلَهٗ فَاَصْبَحَ مِنَ الْخٰسِرِيْنَ‏

(இதன் பின்னரும்) அவருடைய மனம் தம் சகோதரரைக் கொன்றுவிடுமாறு தூண்டிற்று; ஆகவே அவர் (தம்) சகோதரரைக் கொலை செய்துவிட்டார்; அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் ஒருவர் ஆகிவிட்டார்.          ( அல்குர்ஆன்: 5: 28-30 )

நபி ஆதம் (அலை) அவர்களின் இரு மக்களிடையே (ஹாபீல் - காபீல்)  நடைபெற்ற நிகழ்வைக் காட்சிப் படுத்தும் வசனங்கள் இவை. இந்த உலகில் நடைபெற்ற முதல் கொலைக் குற்றமும் முதல் உயிர்ப்பழியும் இது தான்.

தன் சொந்த சகோதரர் மீது கொண்ட குரோதமும் தன் சொந்த சகோதரருக்கு விட்டுக் கொடுத்து நடக்க வேண்டிய தருணத்தில் தனக்கானதாக சொந்தம் கொண்டாடிய ஒருவரின் விவேகமற்ற செயலால் நடைபெற்ற துயரச் சம்பவத்தை தாங்கி நிற்கும் வசனங்கள் இவை.

இங்கே அல்லாஹ் சுட்டிக் காட்ட விரும்புவது பிறருக்கான ஹக்கை பிறருக்கு சொந்தமான ஒன்றை உனக்கானதாக கருதாதே! உனக்கானதாக, உனக்கே சொந்தமான ஒன்றாக இருந்தாலும் நீ அதை விட்டுக் கொடுத்து விடு! என்பதைத் தான்.

ஆம்! இந்த உலகில் இன்றளவும் நடைபெறுகிற பல்வேறு மனக்கசப்புகளுக்கும் பிரச்சினைகளுக்கும், பிரிவுகளுக்கும், குற்றங்களுக்கும் முழு முதற் காரணமாக அமைந்திருப்பது விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாமல் இருப்பது தான் என்றால் அது மிகையாகாது.

பொதுவாக நற்குணங்கள் குறித்து நாம் மிகவும் அலட்சியமாகவே இருக்கின்றோம்.

நற்குணங்களின் அவசியம் குறித்து நாம் கொஞ்சம் கூட கவலைப்படுவதும் இல்லை. ஆனால், நற்குணம் எந்த அளவுக்கு அவசியமானது என்பதை நபித்தோழர்களான ஸஹாபாக்கள் அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் வழங்கினார்கள் என்பதை ஒரு சம்பவத்தில் மூலம் பார்க்கலாம்.

حدثنا عبد الله بن محمد قال حدثنا أبو عامر قال حدثنا عبد الجليل بن عطية عن شهر عن أم الدرداء قالت قام أبو الدرداء ليلة يصلى فجعل يبكى ويقول اللهم أحسنت خلقي فحسن خلقي حتى أصبح فقلت يا أبا الدرداء ما كان دعاؤك منذ الليلة إلا في حسن الخلق فقال يا أم الدرداء إن العبد المسلم يحسن خلقه حتى يدخله حسن خلقه الجنة ويسئ خلقه حتى يدخله سوء خلقه النار والعبد المسلم يغفر له وهو نائم فقلت يا أبا الدرداء كيف يغفر له وهو نائم قال يقوم أخوه من الليل فيتهجد فيدعو الله عز وجل فيستجيب له ويدعو لأخيه فيستجيب له فيه

உம்முத்தர்தா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:"
(
என் கணவர்) அபுத்தர்தா (ரழி) அவர்கள் இரவில் தொழும்போது அழ ஆரம்பித்தவர்களாக இறைவா என்னுடைய தோற்றத்தை நீ அழகாக்கி விட்டாய். ஆகவே என்னுடைய குணத்தையும் அழகாக்குவாயாகஎன்று காலை நேரம் வரும் வரை கூறிக் கொண்டே இருந்தார்கள்.

அப்போது நான் அபுத்தர்தாவே இரவு முழுக்க குறுகிய நற் குணம் பற்றியே நீங்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தீர்களே?” என்று கேட்டேன். அப்போது அபுத்தர்தா(ரழி) அவர்கள் உம்முத்தர்தாவே ஒரு முஸ்லிமான அடியானின் நற்குணம் அழகியதாக இருப்பின் அவனுடைய அழகிய நற்குணத்தால் சுவர்க்கத்தில் அவனை அது புகுத்திவிடும். அவனின் குணம் தீயதாக இருப்பின் அவனுடைய தீய குணம் அவனை நரகில் புகுத்திவிடும்.

ஒரு முஸ்லிமான அடியான் தூங்கிக் கொண்டிருக்கும் போதும் அவனுக்குப் பாவமன்னிப்பு வழங்கப்படும்என்று கூறினார்கள். அபுத்தர்தாவே ஒருவன் தூங்கிக் கொண்டிருக்க அவனுக்கு எவ்வாறு பாவ மன்னிப்பு வழங்கப்படும்என்று நான் கேட்டேன். அவனுடைய சகோதரன் இரவில் நின்று வணங்கி தஹஜ்ஜத் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறான் அல்லாஹ் அவனது பிரார்த்தனையை ஏற்றுக்கொள்கிறான்.

மேலும் தூங்கிக் கொண்டிருக்கும் தன் சகோதரனுக்காகவும் பிரார்த்தனை செய்கிறான். அவன் விஷயத்திலேயும் அவனது பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்கிறான். என்று அபுத்தர்தா (ரழி) கூறினார்கள். நூல்: அல்அதபுல் முஃப்ரத் 290)

 

وروى البخاري (4065) عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : لَمَّا كَانَ يَوْمَ أُحُدٍ هُزِمَ الْمُشْرِكُونَ فَصَاحَ إِبْلِيسُ : أَيْ عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ ! فَرَجَعَتْ أُولَاهُمْ فَاجْتَلَدَتْ هِيَ وَأُخْرَاهُمْ ( أي وهم يظنون أنهم من العدو ) فَنَظَرَ حُذَيْفَةُ فَإِذَا هُوَ بِأَبِيهِ الْيَمَانِ فَقَالَ : أَيْ عِبَادَ اللَّهِ أَبِي أَبِي ! فَوَاللَّهِ مَا احْتَجَزُوا حَتَّى قَتَلُوهُ . فَقَالَ حُذَيْفَةُ : غَفَرَ اللَّهُ لَكُمْ .

وقَالَ ابْنُ إسْحَاقَ : وَحَدّثَنِي عَاصِمُ بْنُ عُمَرَ بْنِ قَتَادَةَ ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ ، قَالَ :

" وَأَمّا حُسَيْلُ بْنُ جَابِرٍ فَاخْتَلَفَتْ عَلَيْهِ أَسْيَافُ الْمُسْلِمِينَ فَقَتَلُوهُ وَلَا يَعْرِفُونَهُ فَقَالَ حُذَيْفَةُ : أَبِي ! فَقَالُوا : وَاَللّهِ إنْ عَرَفْنَاهُ، وَصَدَقُوا!! قَالَ حُذَيْفَةُ : يَغْفِرُ اللّهُ لَكُمْ وَهُوَ أَرْحَمُ الرّاحِمِينَ . فَأَرَادَ رَسُولُ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ أَنْ يَدِيَهُ، فَتَصَدّقَ حُذَيْفَةُ بِدِيَتِهِ عَلَى الْمُسْلِمِينَ ، فَزَادَهُ ذَلِكَ عِنْدَ رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ خَيْرًا "

"سيرة ابن هشام" (2 / 86)

ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள்: "உஹுதுப் போரின் (தொடக்கத்தின்)போது இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது இப்லீஸ், அல்லாஹ் அவனைக் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்என்று கத்தினான். உடனே, முஸ்லிம்களில் முன் அணியினர் (எதிரிகள் என்றெண்ணி, பின் அணியினரை நோக்கித்) திரும்பிச் செல்ல, பின் அணியினருடன் (மோலேற்பட்டுப்) போரிட்டுக் கொண்டனர். அப்போது ஹுதைஃபா(ரலி), தம் தந்தை யமான் அவர்கள் அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார்கள். எனவே, ‘அல்லாஹ்வின் அடியார்களே! என் தந்தை! என் தந்தை!என்று (உரக்கக்) கூவினார்கள். (ஆனால்) அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரைவிட்டும்) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா(ரலி) (தம் தந்தையைக் கொன்றவர்களை நோக்கி), ‘அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா(ரஹ்) கூறினார்.

அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுதைஃபா(ரலி) (இவ்வாறு மன்னித்தால் அவர்கள்) அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை அவர்களிடம் நல்ல பலன் இருந்து கொண்டேயிருந்தது. (ஆதாரம் : புகாரி)

 

தம் தந்தையைக் கொன்றவர்களிடத்திலும் ஹுதைஃபா (ரலி) அவர்கள் காட்டிய பரிவு மேலும் அவர்களின் பாவம் மன்னிக்கப்படவேண்டும் என்று அவர்கள் செய்த துஆ! இதிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினைகள் ஏராளம்.

حَدَّثَنِي ‏ ‏مَالِك ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَنَّ ‏ ‏الضَّحَّاكَ بْنَ خَلِيفَةَ ‏ ‏سَاقَ خَلِيجًا ‏ ‏لَهُ مِنْ ‏ ‏الْعُرَيْضِ ‏ ‏فَأَرَادَ أَنْ يَمُرَّ بِهِ فِي أَرْضِ ‏ ‏مُحَمَّدِ بْنِ مَسْلَمَةَ ‏ ‏فَأَبَى ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏فَقَالَ لَهُ ‏ ‏الضَّحَّاكُ ‏ ‏لِمَ تَمْنَعُنِي وَهُوَ لَكَ مَنْفَعَةٌ تَشْرَبُ بِهِ أَوَّلًا وَآخِرًا وَلَا يَضُرُّكَ فَأَبَى ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏فَكَلَّمَ فِيهِ ‏ ‏الضَّحَّاكُ ‏ ‏عُمَرَ بْنَ الْخَطَّابِ ‏ ‏فَدَعَا ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏مُحَمَّدَ بْنَ مَسْلَمَةَ ‏ ‏فَأَمَرَهُ أَنْ يُخَلِّيَ سَبِيلَهُ فَقَالَ ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏لَا فَقَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏لِمَ تَمْنَعُ أَخَاكَ مَا يَنْفَعُهُ وَهُوَ لَكَ نَافِعٌ تَسْقِي بِهِ أَوَّلًا وَآخِرًا وَهُوَ لَا يَضُرُّكَ فَقَالَ ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏لَا وَاللَّهِ فَقَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏وَاللَّهِ لَيَمُرَّنَّ بِهِ وَلَوْ عَلَى بَطْنِكَ فَأَمَرَهُ ‏ ‏عُمَرُ ‏ ‏أَنْ يَمُرَّ بِهِ فَفَعَلَ ‏ ‏الضَّحَّاكُ

ளஹ்ஹாக் பின் ஃகலீஃபா (ரலி) அவர்கள், அரீள் என்ற இடத்தில் இருந்து ஓர் நீரோடையைத் தோண்டி, அதனை முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்களுடைய நிலத்தினூடாகக் கொண்டுவர நாடினார். மஸ்லமா (ரலி) அதனைத் தடுத்தார். அப்போது ளஹ்ஹாக் (ரலி) அவரிடம் கேட்டார்: ‘‘அது உங்களுக்கும் நன்மை பயக்கும் செயல்தானே... பின்னர் ஏன் நீங்கள் தடுக்கின்றீர்கள்?. முதாலவதாகவும் கடைசியாகவும் நீங்கள்தானே அதிலிருந்து பயனடைவீர்கள்?. அதன் மூலம் உங்களுக்கு எவ்வித தீங்கும் ஏற்படப்போவதும் இல்லையே’’.

ஆயினும் மஸ்லமா (ரலி) சம்மதிக்கவில்லை. ஆகவே ழஹ்ஹாக் (ரலி), உமர் (ரலி) அவர்களிடம் இது குறித்து முறையிட்டார். மஸ்லமா (ரலி) அவர்களை அழைத்து, நீரோடைக்கான தடையை நீக்கி வழி ஏற்படுத்திக் கொடுக்குமாறு உமர் (ரலி) உத்தரவு பிறப்பித்தார். அப்போதும் மஸ்லமா (ரலி), ‘‘முடியாது’’ என்று கூறினார். அதனைச் செவியுற்ற உமர் (ரலி) கூறினார்: ‘‘அல்லாஹ்வின் மீது ஆணை! அந்த நீரோடையை நான் தோண்டத்தான் செய்வேன். அது உமது வயிற்றுக்கு மேலாகச் செல்வதாக இருந்தாலும் சரியே’’. பின்னர் அவருடைய நிலத்தினூடாக தோண்டுமாறு உமர் (ரலி) உத்தரவு பிறப்பித்தார். ளஹ்ஹாக் (ரலி) அவ்வாறே செய்தார். ( நூல்: முஅத்தா லிஇமாமி மாலிக் )

விட்டுக் கொடுப்பவரையே அல்லாஹ் விரும்புகிறான்!

جثا رجلان على ركبهما يوم القيامة عند رب العباد سبحانه وتعالى، قال أحدهما: “يا ربي إنه قد ظلمني في الدنيا، خذ بحقي منه يا ربي”.

فيقول الله سبحانه وتعالى: “أعطه من حسناتك”.

الآخر: “لقد فنيت جميع حسناتي يا ربي”.

فيقول الأول: “فليأخذ من سيئاتي يا ربي”.

هنا يحزن النبي صلى الله عليه وسلم كثيرا بسبب دخول أحد من أمته النار بظلم لأخيه في الدنيا

நாளை மறுமையில் இரண்டு அடியார்களுக்கு இடையே நடைபெறும் உரையாடலை மாநபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களிடையே சொல்லிக் கொண்டிருந்தார்கள் அப்போது ஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்கள் முகத்தில் கவலை தோய்ந்த நிலையில் இருந்தது. 

இருவரில் ஒருவர் அல்லாஹ்வின் முன் வந்து நின்று "அல்லாஹ்வே! உலகில் வாழும் காலத்தில் இவர் எனக்கு அநீதம் இழைத்து வந்தார். ஆகவே, அதற்கான என் பங்கை நீ அவரிடம் இருந்து பெற்றுக் கொடு!" என்பார்.

அப்போது குற்றம் சாட்டப்பட்ட அடியானை நோக்கி "உன் நன்மைகளை அவனுக்கு வழங்கு"  என்பான். அதற்கவர், என் இறைவா! என் நன்மைகள் எல்லாம் அழிந்து போயிற்று" என்பார்.

இதைக் கேட்ட முதலாமவர் "அப்படியென்றால் அல்லாஹ்வே! அவரின் அநீதத்தை கணக்கிட்டு அதற்கு நிகரான என் பாவங்களை எடுத்து அவருக்கு வழங்கிடு" என்பார்.

இந்த தருணத்தில் தம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் தன் சகோதரருக்கு இழைத்த அநீதியால் நரகை நோக்கி செல்கிறாரே என்ற கவலை நபி ஸல் அவர்களை சூழ்ந்து கொண்டது.

فيقول الله سبحانه وتعالى للمظلوم الذي يريد أن يأخذ بحقه من أخيه: “انظر إلى الجنة”، فتنكشف له الجنة بما فيها من قصور وأنهار ومناظر بديعية، فيسأل الرجل ربه: “يا ربي لمن هذه القصور، لأي نبي أو لأي صديق أو لأي شهيد؟

فيجيبه خالقه: “كل هذا لمن أعطى ثمنه”.

فيسأله الرجل: “يا ربي ومن يملك ثمنها؟

فيجيبه رب العباد: “أنت تملك الثمن”.

قال: “وما ثمنها يا ربي؟

அப்போது அல்லாஹ் முதலாமவரை நோக்கி "அழகும், அழகிய காட்சிகளும் ஆறுகளும், கோட்டைகளும் கொண்ட சுவனத்தைக் காண்பித்து"இதோ! இந்த சுவனத்தைப் பார்!" என்பான்.

 

சுவனத்தின் ரம்மியமான அழகைக் கண்ட அந்த அடியார் "அல்லாஹ்வே! இந்த சுவனத்தை யாருக்கு வழங்குவதற்காக வைத்திருக்கின்றாய்?". இது எந்த நபிக்கு வழங்குவதற்காக வைத்திருக்கின்றாய்?". இல்லை, எந்த ஸித்தீக் - உண்மையாளருக்கு வழங்குவதற்காக வைத்திருக்கின்றாய்?". இல்லை, எந்த ஷஹீத் - மார்க்கப் போராளிக்கு வழங்குவதற்காக வைத்திருக்கின்றாய்?". என்று கேட்பார்.

அதற்கு, அல்லாஹ்"இதன் விலையை யார் தருகிறார்களோ? அவருக்கு நான் வழங்குவதற்காக வைத்துள்ளேன்" என்பான்.

அப்போது அந்த அடியார், "யார் இந்த மாளிகையை விலை கொடுத்து வாங்க முடியும்?"  என்று வியப்புடன் கேட்பார்.

அதற்கு, அல்லாஹ் "உன்னால் கூட அதை விலைக்கு வாங்க முடியும்" என்று அல்லாஹ் சொன்னான்.

அதற்கவர், "என்னிடத்தில்  விலைக்கு வாங்கும் அளவுக்கு என்ன இருக்கிறது?" எனக் கேட்பார். 

قال سبحانه وتعالى: “العفو عن أخيك”، فقال: “لقد عفوت عنه يا ربي”.

فيقول رب العباد: “خذ بيد أخيك وادخلا الجنة”، وهنا ضحك النبي صلى الله عليه وسلم بفرحة.

அப்போது அல்லாஹ், "உன் சகோதரனை மன்னித்து தண்டிக்கப்பட வேண்டும் என்ற உன் மனோநிலையை விட்டுக் கொடுத்து விடு! " என்பான்.

அதற்கு அந்த அடியார் "இதோ! நான் மன்னித்து விட்டேன் " என் இறைவனே!" என்பார்.

அப்போது அல்லாஹ் "உன் சகோதரரின் கரங்களைப் பிடி! (அவர் பிடித்ததும்) நீங்கள் இருவரும் சுவனத்தில் நுழையுங்கள்" என்பான்.

இதை சொல்லும் போது நபி ஸல் அவர்கள் மகிழ்ச்சியால் சிரித்தார்கள். ( நூல்: ஸிஃபதுஸ் ஸஃப்வா )

விட்டுக் கொடுப்பவருக்கு மன்னிப்பை வழங்குகின்றான் அல்லாஹ்..

عن ابن عمر – رضي الله عنهما – أنه كان مريضا، فاشتهى سمكة طرية، فالتُمست له بالمدينة، فلم توجد حتى وُجدت بعد كذا وكذا يوم، فاشتُريت بدرهم ونصف، وشويت، وحُملت له على رغيف، فقام سائل على الباب، فقال للغلام : لفها برغيف، وادفعها له .

فقال الغلام : أصلحك لله، اشتهيتها منذ كذا وكذا يوم، فلم نجدها، فلما وجدناها، واشتريناها بدرهم ونصف أمرت أن ندفعها له، نحن نعطيه ثمنها .

فقال : لفها، وادفعها إليه .

فقال الغلام للسائل : هل لك أن تأخذ درهما وتدع هذه السمكة ؟

فأخذ منه درهما، وردها، فعاد الغلام وقال له : دفعت له درهما وأخذتها منه .

فقال له : لفها، وادفعها إليه، ولا تأخذ منه شيئا، فإني سمعت رسول الله – صلى الله عليه وسلم – يقول : ” أيما امرئ اشتهى شهوة فرد شهوته ، وآثر بها على نفسه غفر الله له ” .

இப்னு உமர் ரலி அவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. அவர்களின் மனம் பொரித்த மீன் சாப்பிட ஆவல் கொண்டது. 

ஆனால், மதீனாவின் எந்த கடை வீதியிலும் மீன் கிடைக்கவில்லை. எப்படியோ ஒரு நாள் ஒரு கடையில் ஒன்றரை திர்ஹம் கொடுத்து மீன் வாங்கி வந்து பொரித்து ரொட்டியோடு சேர்த்து சாப்பிட ஆரம்பிக்கும் போது வாசலில் ஒரு ஏழை உணவை யாசித்தார். அப்போது இப்னு உமர் ரலி அவர்கள் தம்முடைய பணியாளரிடம் அந்த ஏழையிடம் கொண்டு கொடுக்குமாறு கூறினார்கள்.

அதற்கு அந்த பணியாளர் "கடந்த சில நாட்களாக நீங்கள் ஆசைப்பட்ட, விலை அதிகமாக கொடுத்து வாங்கிய மீனை சாப்பிடாமல் இப்படி ஏழையிடம் கொடுக்கச் சொல்கின்றீர்களே? என்று கொடுக்க மறுத்த போது இப்னு உமர் ரலி அவர்கள் ஏழைக்கு கொடுத்து விடுமாறு பணித்தார்கள்.

ஏழையின் அருகே வந்த அந்த பணியாள் இதோ ஒரு திர்ஹம் இருக்கிறது. இதைப் பெற்றுக் கொண்டு உணவை என்னிடமே தந்து விடுகின்றீரா? என கேட்ட போது, அந்த ஏழை அதற்கு ஒத்துக் கொண்டு ஒரு திட்டத்தை பெற்றுக் கொண்டு உணவை திரும்ப கொடுத்து  விட்டார்கள்.

இதை இப்னு உமர் ரலி அவர்களிடம் தெரிவித்த போது இப்னு உமர் ரலி அவர்கள் அந்த உணவையும் அந்த ஏழையிடம் திருப்பிக் கொடுக்குமாறு பணியாளருக்கு உத்தவிட்ட பிறகு "நான் நபி ஸல் அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன் "ஒருவர் ஒன்றை விரும்பி அதை தனக்கானதாக ஆக்கிக் கொள்கிற நேரத்தில் இன்னொருவரின் விருப்பத்திற்காக விட்டுக் கொடுக்கின்றார் என்றால் அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னிக்கிறான்" என்றார்கள்.

மாநபி {ஸல்} அவர்களின் அருகாமையை விட்டுக் கொடுத்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்!

 

لما طُعِن أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنهما قال لابنه عبد الله اذهب إلى أُمِّ المؤمنين عائشة رضي الله عنها فقل: يقرأ عمر ابن الخطَّاب عليك السَّلام، ثمَّ سلها أن أُدْفَن مع صاحبيَّ. قالت: كنت أريده لنفسي، فلأوثرنَّه اليوم على نفسي. فلمَّا أقبل، قال له: ما لديك؟ قال: أذنت لك يا أمير المؤمنين. قال: ما كان شيء أهمَّ إليَّ من ذلك المضجع، فإذا قُبِضت فاحملوني، ثمَّ سلِّموا، ثمَّ قل: يستأذن عمر بن الخطَّاب، فإن أذنت لي فادفنوني، وإلَّا فردُّوني إلى مقابر المسلمين..

உமர் (ரலி) அவர்கள் அபூ லுஃலுவுல் ஃபைரோஸி என்பவனால் குத்தப்பட்டு ஷஹீதாகும் நிலையில் மரணத்தின் விளிம்பில் இருக்கும் போது தம்முடைய மகன் இப்னு உமர் (ரலி) அவர்களை அழைத்து நேராக ஆயிஷா ரலி அவர்கள் சமூகத்திற்கு சென்று நான் ஸலாம் சொன்னதாக சொல்லிய பிறகு "என் தந்தை உமர் ரலி அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் அருகே நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்புகின்றாராம். நீங்கள் அனுமதி தருவீர்களா? என்று கேட்கச் சொன்னார் " என்று தம் மகனிடம் சொல்லி அனுப்பினார்கள்.

அன்னை ஆயிஷா ரலி அவர்களிடம் இப்படி உமர் ரலி அவர்களின் ஆசையை தெரிவித்த போது உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரலி) அவர்கள்  நான் எனக்கான இடமாக அதை ஆக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், இப்போது உமர் (ரலி) அவர்களின் விருப்பத்திற்காக என் விருப்பத்தை விட்டுக் கொடுக்கின்றேன்" என்றார்கள்.

அங்கிருந்து விடைபெற்று தம் தந்தையின் அருகே வரும் போது ஆவல் பூக்க உமர் (ரலி) "உம்முல் முஃமினீன் உன்னிடம் என்ன சொன்னார்கள்? என்று கேட்டார்கள்.

அதற்கு இப்னு உமர் ரலி அவர்கள் "சம்மதித்து விட்டார்கள்" என்று கூற, அது கேட்ட உமர் (ரலி) அவர்கள் "எனக்கு பெருமானார் (ஸல்) அவர்களின் அருகே கிடைத்த இந்த இடமே எனக்கு இந்த உலகில் உயர்ந்த அம்சமாகும் " என்று கூறினார்கள்.

பின்னர் தம் மகனை அழைத்து"நான் இறந்த பிறகு என் உடலை சுமந்து சென்று நபி ஸல் அவர்களின் அருகே அடக்கம் செய்ய முற்பட்டு ஏதோ ஒரு காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்டால் முஸ்லிம்களின் பொது மையவாடியில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வழங்கியருள்வானாக!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment