Thursday 3 October 2024

அண்ணல் நபி ﷺ அவர்கள் வாழ்வின் ஒரு நாள்!! ( பாகம் – 2 )

 

அண்ணல் நபி அவர்கள் வாழ்வின் ஒரு நாள்!! ( பாகம் – 2 )


ஒட்டுமொத்த உலக மாந்தருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்த நமது நபி அவர்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகளை "அண்ணல் நபி அவர்கள் வாழ்வின் ஒரு நாள்" என்ற உள் தலைப்பின் கீழ் எட்டு பகுதிகளாகப் பிரித்து அதில் இரண்டு பகுதிகளை நாம் பார்த்துள்ளோம்.

1) கண்விழித்ததில் இருந்து ஃபஜ்ர் வரை, 

2) ஃபஜ்ரில் இருந்து சூரிய உதயம் வரை,

இன்ஷா அல்லாஹ்.... அடுத்து நாம் 3) சூரிய உதயம் முதல் ளுஹா நேரம் வரை, 4) ளுஹா நேரத்தில் இருந்து லுஹர் தொழுகை வரை, 5) லுஹர் தொழுகைக்குப் பிறகிலிருந்து அஸர் வரை பார்க்க இருக்கின்றோம்.

ஃபஜ்ர் தொழுகையை தொழாமல் தவற விட்ட போது....

عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ: خطبَنا رسول الله صلى الله عليه وسلم، فقال: «إنكم تَسِيرُونَ عَشِيَّتَكُمْ، وتأتون الماء إن شاء الله غدا»، فانطلَق الناس لا يَلْوِي أحد على أحد، قال أبو قتادة: فبينما رسول الله صلى الله عليه وسلم يسير حتى ابهَارَّ الليلُ، وأنا إلى جنْبه، قال: فَنَعَس رسول الله صلى الله عليه وسلم، فمَاَل عن راحلته، فأتيتُه فدَعَمْته من غير أن أُوقِظه حتى اعتدل على راحلته، قال: ثم سار حتى تَهَوَّرَ الليل، مالَ عن راحلته، قال: فدعمتُه من غير أن أُوقِظه حتى اعتدل على راحلته، قال: ثم سار حتى إذا كان من آخر السَّحَر، مال مَيْلة هي أشد من الميْلتيْن الأولييْن، حتى كاد يَنْجَفِل، فأتيتُه فدعمْته، فرفع رأسه، فقال: «مَن هذا؟» قلت: أبو قتادة، قال: «متى كان هذا مسيرَك مني؟» قلت: ما زال هذا مَسِيري منذ الليلة، قال: «حفظك الله بما حفظت به نبيه»، ثم قال: «هل ترانا نَخْفى على الناس؟»، ثم قال: «هل تَرى من أحد؟» قلت: هذا راكب، ثم قلت: هذا راكب آخر، حتى اجتمعنا فكنا سبعةَ ركْب، قال: فمالَ رسول الله صلى الله عليه وسلم عن الطريق، فوضع رأسه، ثم قال: «احفظوا علينا صلاتنا»، فكان أوَّل مَن استيقظ رسول الله صلى الله عليه وسلم والشمسُ في ظهْره، قال: فقُمْنا فَزِعِين، ثم قال: «اركبوا»، فركبْنا فسِرْنا حتى إذا ارتفعت الشمس نَزَل، ثم دعا بِمِيضَأَة كانت معي فيها شيء من ماء، قال: فتوضأ منها وُضوءا دون وُضوء، قال: وبقي فيها شيء من ماء، ثم قال لأبي قتادة: «احفظْ علينا مِيضَأتك، فسيكون لها نَبَأ»، ثم أذَّن بلال بالصلاة، فصلَّى رسول الله صلى الله عليه وسلم ركعتين، ثم صلَّى الغَداة، فصنع كما كان يصنع كلَّ يوم، قال: وركِبَ رسول الله صلى الله عليه وسلم وركبْنا معه، قال: فجعل بعضنا يَهْمِس إلى بعض ما كفَّارة ما صنعنا بِتَفْريطِنا في صلاتنا؟ ثم قال: «أما لَكُم فيَّ أُسْوة»، ثم قال: «أمَا إنه ليس في النوم تَفْريط، إنما التفريط على من لم يصلِّ الصلاة حتى يجيء وقت الصلاة الأخرى، فمن فعل ذلك فليُصَلِّها حِينَ ينتبه لها، فإذا كان الغد فليصلها عند وقتها»، ثم قال: «ما تَرَوْن الناس صنعوا؟» قال: ثم قال: «أصبح الناس فَقَدُوا نبيهم»، فقال أبو بكر وعمر: رسول الله صلى الله عليه وسلم بَعْدَكم، لم يكن لِيُخلِّفكم، وقال الناس: إن رسول الله صلى الله عليه وسلم بيْن أيديكم، فإن يطيعوا أبا بكر، وعمر يَرْشُدُوا، قال: فانْتهيْنا إلى الناس حين امتدَّ النهار، وحَمِي كل شيء، وهم يقولون: يا رسول الله هَلَكْنا، عطِشْنا، فقال: «لا هُلْكَ عليكم»، ثم قال: «أَطْلِقوا لي غُمَرِي» قال: ودعا بالمِيضَأة، فجعل رسول الله صلى الله عليه وسلم يصُبُّ، وأبو قتادة يَسْقِيهم، فلم يعد أن رأى الناس ماء في الميضأة تكابوا عليها، فقال رسول الله صلى الله عليه وسلم: «أحسنوا المَلَأ كلُّكُم سيَرْوَى» قال: ففعلوا، فجعل رسول الله صلى الله عليه وسلم يصبُّ وأسقِيهم حتى ما بقي غيري، وغير رسول الله صلى الله عليه وسلم، قال: ثم صب رسول الله صلى الله عليه وسلم، فقال لي: «اشرب»، فقلت: لا أشرب حتى تشرب يا رسول الله قال: «إن ساقيَ القوم آخرهُم شربا»، قال: فشربتُ، وشرب رسول الله صلى الله عليه وسلم، قال: فأتى الناس الماء جامِّينَ رِوَاءً، قال: فقال عبد الله بن رباح: إني لأحدِّث هذا الحديث في مسجد الجامع، إذ قال عمران بن حصين انظر أيها الفتى كيف تحدِّث، فإني أحد الركب تلك الليلة، قال: قلت: فأنت أعلم بالحديث، فقال: ممَّن أنت؟ قلت: من الأنصار، قال: حدِّث، فأنتم أعلم بحديثكم، قال: فحدَّثت القوم، فقال عمران: لقد شهدت تلك الليلة، وما شَعَرتُ أن أحدا حفظه كما حفظته

அபூகத்தாதா ஹாரிஸ் பின் ரிப்ஈ அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கைபர் போரிலிருந்து திரும்பும்போது)அல்லாஹ்வின் தூதர் () அவர்கள் எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது "இன்று மாலையும் இரவும் நீங்கள் பயணம் செய்து இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) நாளை (காலை) நீங்கள் நீர்நிலையைச் சென்றடைவீர்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே மக்கள் யாரும் யாரையும் திரும்பிப் பார்க்காமல் (விரைவாகப்) பயணம் செய்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடுநிசி நேரம்வரைப் பயணம் செய்தார்கள்.

அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இலேசாக உறக்கம் வரவே, அவர்கள் தமது வாகனத்திலிருந்து சாய்ந்தார்கள். உடனே நான் அவர்களிடம் சென்று அவர்களது உறக்கத்தைக் கலைக்காமல் அவர்களைத் தாங்கிப் பிடித்துக்கொண்டேன். அதையடுத்து அவர்கள் தமது வாகனத்தில் நேராக அமர்ந்து கொண்டார்கள்.

பிறகு தொடர்ந்து பயணம் செய்து இரவின் பெரும்பகுதி கடந்தபோது (மீண்டும்) உறங்கித் தமது வாகனத்திலிருந்து சாய்ந்தார்கள். அப்போதும் நான் அவர்களது உறக்கத்தைக் கலைக்காமல் அவர்களைத் தாங்கிப் பிடித்துக்கொண்டேன். அதையடுத்து அவர்கள் தமது வாகனத்தில் நேராக அமர்ந்துகொண்டார்கள். பிறகு இன்னும் (சிறிது தூரம்) பயணம் செய்து இரவின் இறுதிப் பகுதியானபோது முன்னர் இரு முறை சாய்ந்ததைவிட மிகப் பலமாகச் சாய்ந்து கீழே விழப்போனார்கள். உடனே நான் அவர்களிடம் சென்று அவர்களை (மீண்டும்) தாங்கிப் பிடித்துக்கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையை உயர்த்தி, "யார் அது?" என்று கேட்டார்கள். "அபூகத்தாதா" என்றேன். "நீங்கள் எப்போதிருந்து என்னருகில் பயணம் செய்துவருகிறீர்கள்?" என்று கேட்டார்கள். நான் "இரவிலிருந்து இவ்வாறு உங்கள் அருகிலேயே பயணம் செய்து வருகிறேன்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரை நீங்கள் காத்த காரணத்தால் அல்லாஹ்வும் உங்களைக் காப்பானாக!" என்று பிரார்த்தித்தார்கள்.

பிறகு "நாம் மக்களைவிட்டு மறைந்து (வெகு தொலைவிற்கு வந்து)விட்டோம் என்று நீங்கள் கருதுகிறீர்களா?" எனக் கேட்டார்கள். பின்னர் "மக்களில் யாரேனும் தென்படுகிறார்களா (என்று பாருங்கள்!)?" என்றார்கள். நான், "இதோ ஒரு பயணி" என்றேன். பிறகு "இதோ மற்றொரு பயணி" என்றேன். இறுதியில் நாங்கள் ஏழு பயணிகள் ஒன்றுசேர்ந்து விட்டோம்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பயண வழியிலிருந்து விலகி (ஓரிடத்திற்குச் சென்று உறங்குவதற்காகத்) தமது தலையை (ஓரிடத்தில்) சாய்த்தார்கள். பிறகு, "நீங்கள் எமது தொழுகையைக் காக்கவேண்டும் (நான் உறங்கிவிட்டால் என்னை உறக்கத்திலிருந்து எழுப்ப வேண்டும்)" என்றார்கள். (ஆனால், நாங்கள் அனைவரும் உறங்கி விட்டோம்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தாம் முதலில் கண் விழித்தார்கள். அப்போது சூரிய ஒளி அவர்களது முதுகில் பட்டது. உடனே நாங்கள் திடுக்கிட்டு விழித்தெழுந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) "(இங்கிருந்து உடனே உங்கள் வாகனங்களில்) ஏறிப் புறப்படுங்கள்" என்றார்கள். உடனே நாங்கள் வாகனங்களில் ஏறிப் புறப்பட்டோம். சூரியன் நன்கு உதயமான பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது வாகனத்திலிருந்து) இறங்கினார்கள். பிறகு தண்ணீர் குவளையைக் கொண்டுவரச் சொன்னார்கள். அந்தக் குவளை என்னிடத்தில்தான் இருந்தது. அதில் சிறிதளவு தண்ணீரும் இருந்தது. பிறகு அதிலிருந்த தண்ணீரால் சிக்கனமாக அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அதில் சிறிதளவு தண்ணீர் எஞ்சியது. என்னிடம், "நமக்காக உமது தண்ணீர் குவளையைப் பத்திரமாகப் பார்த்துக்கொள். விரைவில் இதில் ஒரு (அதிசய) சம்பவம் நிகழவிருக்கிறது" என்றார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறிப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். நாங்களும் வாகனத்தில் ஏறி அவர்களுடன் சென்றோம். அப்போது எங்களில் சிலர் சிலரிடம் "நமது தொழுகை விஷயத்தில் நாம் செய்துவிட்ட குறைபாட்டிற்குப் பரிகாரம் என்ன?" என்று இரகசியமாகப் பேசிக்கொண்டோம்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அறிவீர்: என்னிடம் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறதல்லவா?" என்று கேட்டுவிட்டு, "அறிவீர்: உறக்கத்தால் குறைபாடு ஏற்பட்டுவிடுவதில்லை; குறைபாடெல்லாம் ஒரு தொழுகையை மறுதொழுகை நேரம் வரும்வரை தொழாமல் இருப்பதுதான். இவ்வாறு செய்துவிட்டவர் அது பற்றிய உணர்வு வந்தவுடன் தொழுதுகொள்ளட்டும். மறுநாளாகிவிட்டால் அந்த நாளின் தொழுகையை உரிய நேரத்தில் தொழுதுகொள்ளட்டும்"என்றார்கள்.

பிறகு "மக்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?" என்று (தம்முடன் இருந்த தோழர்களிடம்) கேட்டுவிட்டு, "மக்கள் தங்களுடைய நபியைக் காணாமல் தேடிக்கொண்டிருப்பார்கள்; அபூபக்ரும் உமரும் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உங்களைப் பின்னால் விட்டுவிட்டுச் சென்றுவிடமாட்டார்கள்" என்று கூறுவார்கள். ஆனால், மற்றவர்களோ, "(இல்லை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு முன்பே சென்றுவிட்டார்கள்" என்று கூறுவார்கள். மக்கள் அபூபக்ர் மற்றும் உமர் ஆகிய இருவருக்கும் கட்டுப்பட்டு நடந்தால் அவர்கள் நேர்வழியடைவார்கள்" என்று கூறினார்கள்.

பிறகு நாங்கள் மக்களிடம் நண்பகல் நேரத்தில் சென்றடைந்தோம். அப்போது (வெப்பத்தால்) பொருட்களெல்லாம் சூடேறி விட்டிருந்தன. மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அழிந்தோம்; எங்களுக்கு (கடுமையான) தாகம் ஏற்பட்டுள்ளது"என்று கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்களுக்கு எந்த அழிவும் இல்லை" என்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "எனது சிறிய பாத்திரத்தை எடுத்து வாருங்கள்!" என்று கூறி அந்த நீர்குவளையைக் கேட்டார்கள். பின்னர் (அதிலிருந்து சிறிது தண்ணீரை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஊற்ற,அதை நான் மக்களுக்குப் புகட்டிக்கொண்டிருந்தேன். மக்கள் அந்தக் குவளையில் தண்ணீரைக் கண்டதுதான் தாமதம், (அதைப் பெறுவதற்காக முண்டியடித்து) அதன் மீது விழுந்தனர். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இங்கிதம் பேணுங்கள். உங்கள் அனைவரின் தாகமும் தீரும்" என்றார்கள். அவவாறே மக்கள் நடந்துகொண்டனர்.

இவ்விதம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் ஊற்ற அதை நான் மக்களுக்குப் புகட்டிக்கொண்டிருந்தேன். இறுதியில் என்னையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் தவிர வேறெவரும் மிஞ்சவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் ஊற்றியபடி என்னிடம் "நீங்கள் பருகுங்கள்!" என்றார்கள். நான் "தாங்கள் பருகாதவரை நான் பருகமாட்டேன், அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மக்களுக்குத் தண்ணீர் புகட்டுபவரே அவர்களில் இறுதியாகப் பருக வேண்டும்" என்றார்கள். ஆகவே, நான் பருகினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பருகினார்கள். பிறகு மக்கள் தாகம் தணிந்து மகிழ்ச்சியடைந்தவர்களாக அந்த நீரை நோக்கி வந்தனர்.

இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் இந்த ஹதீஸை ஜுமுஆப் பள்ளிவாசலில் அறிவித்துக்கொண்டிருந்தேன். அப்போது (அங்கிருந்த) இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், "இளைஞரே! நீங்கள் என்ன அறிவிக்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள். ஏனெனில்,அன்றிரவு பயணம் செய்த குழுவினரில் நானும் ஒருவனாவேன்" என்றார்கள். நான், "அப்படியானால், நீங்கள்தாம் இந்த ஹதீஸ் தொடர்பாக நன்கு அறிவீர்கள்" என்றேன். அதற்கு இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் "நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்?" என்று கேட்டார்கள். நான், "அன்சாரிகளில் (மதீனாவாசிகளில்) ஒருவன்" என்றேன். அதற்கு அவர்கள், "அப்படியானால் நீங்களே அறிவியுங்கள். (அன்சாரிகளாகிய) நீங்கள்தாம் உங்களது ஹதீஸ் தொடர்பாக நன்கு அறிவீர்கள்" என்றார்கள். ஆகவே, நான் மக்களிடம் (இந்த ஹதீஸை) அறிவித்தேன். அப்போது இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், "அன்றிரவு (பயணத்தில்) நானும் கலந்துகொண்டேன். ஆனால், நீங்கள் இதை மனனமிட்டதைப் போன்று வேறெவரும் மனனமிட்டிருப்பார்கள் என்று நான் கருதவில்லை" என்றார்கள். ( நூல்: புகாரி )

فمات أبو قتادة وهو ابن سبعين سنة، وكأنه ابن خمس عشرة سنة ،فرضي الله عن أبي قتادة وأرضاه لحفظه رسول الله - صلى الله عليه وسلم.

அபூகதாதா (ரலி) அவர்கள் இந்த உலகத்தை விட்டும் தமது 70 வதாவது வயதில் விடை பெற்றார்கள். ஆனால், அன்னாரின் முகமும் தேகமும் 15 வயது இளைஞரின் தோற்றம் கொண்டவராக இருந்தார்கள். ( நூல்: அல் அஃலாம் லிஸ் ஸர்கலீ, அல் ஃபாயிஸூன பி துஆயின் நபி லி உமர் ஸய்யிதீ )

சூரிய உதயத்திற்குப் பிறகு.....

بعد شروق الشمس، كان يدور على زوجاته، .

சூரிய உதயத்திற்குப் பிறகு மாநபி ஸல் அவர்கள் பள்ளிவாசலில் இருந்து வெளியேறி மனைவிமார்கள் வீட்டுச் செல்வார்கள். 

வீட்டின் உள்ளே வேந்தர் நபி ஸல் அவர்கள்.....

வீட்டிற்குள் நுழையும் முன்னர் இறைக் கட்டளைகளுக்கு மாற்றமானது எதுவும் உள்ளதா? என நபி ஸல் அவர்கள் கவனிப்பார்கள்.

حَدَّثَنَا يَسَرَةُ بْنُ صَفْوَانَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ القَاسِمِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي البَيْتِ قِرَامٌ فِيهِ صُوَرٌ، فَتَلَوَّنَ وَجْهُهُ ثُمَّ تَنَاوَلَ السِّتْرَ فَهَتَكَهُ، وَقَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ أَشَدِّ النَّاسِ عَذَابًا يَوْمَ القِيَامَةِ الَّذِينَ يُصَوِّرُونَ هَذِهِ الصُّوَرَ»

நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்த போது உருவங்கள் உள்ள திரைச் சீலையைத் தொங்க விட்டிருந்தேன். அதைக் கண்டதும் அவர்களின் முகம் மாற்றமடைந்தது. அதைக் கிழித்து எறிந்து விட்டு ஆயிஷாவே! அல்லாஹ்வின் படைப்பைப் போல் படைக்க முற்படுபவர்களே கியாமத் நாளில் கடுமையான தண்டனைக்குரியவர்கள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) ( நூல் : புகாரி )

பெருமானார் {ஸல்} அவர்கள் வீட்டில் நுழையும் முன்பாக இப்படி நடந்து கொள்வதற்கு காரணமும் இருக்கின்றது. வெளியூருக்கு பயணம் செல்வதற்கு முன்பாக ஒரு நாள் நடைபெற்ற சம்பவமே அது. இதோ!..

حَدَّثَنَا أَبُو صَالِحٍ مَحْبُوبُ بْنُ مُوسَى حَدَّثَنَا أَبُو إِسْحَقَ الْفَزَارِيُّ عَنْ يُونُسَ بْنِ أَبِي إِسْحَقَ عَنْ مُجَاهِدٍ قَالَ حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَانِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام فَقَالَ لِي أَتَيْتُكَ الْبَارِحَةَ فَلَمْ يَمْنَعْنِي أَنْ أَكُونَ دَخَلْتُ إِلَّا أَنَّهُ كَانَ عَلَى الْبَابِ تَمَاثِيلُ وَكَانَ فِي الْبَيْتِ قِرَامُ سِتْرٍ فِيهِ تَمَاثِيلُ وَكَانَ فِي الْبَيْتِ كَلْبٌ فَمُرْ بِرَأْسِ التِّمْثَالِ الَّذِي فِي الْبَيْتِ يُقْطَعُ فَيَصِيرُ كَهَيْئَةِ الشَّجَرَةِ وَمُرْ بِالسِّتْرِ فَلْيُقْطَعْ فَلْيُجْعَلْ مِنْهُ وِسَادَتَيْنِ مَنْبُوذَتَيْنِ تُوطَآَنِ وَمُرْ بِالْكَلْبِ فَلْيُخْرَجْ فَفَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِذَا الْكَلْبُ لِحَسَنٍ أَوْ حُسَيْنٍ كَانَ تَحْتَ نَضَدٍ لَهُمْ فَأُمِرَ بِهِ فَأُخْرِجَ قَالَ أَبُو دَاوُد وَالنَّضَدُ شَيْءٌ تُوضَعُ عَلَيْهِ الثِّيَابُ شَبَهُ السَّرِيرِ رواه أبو داود

சென்ற இரவு உங்கள் வீட்டுக்கு நான் வருவதற்குத் தடையாக இருந்தவை என்னவென்றால், உங்கள் வீட்டில் ஒரு மனிதனது உருவச் சிலையும், உருவம் பொறித்த திரைச்சீலை ஒன்றும், நாய் ஒன்றும் இருந்தது தான். உருவச் சிலையின் தலையை அகற்றுமாறும், உருவப்படங்கள் உள்ள திரைச்சீலையைக் கிழித்து மதிப்பில்லாமல் மிதிபடும் இரண்டு தலையணைகளாக்கிக் கொள்ளுமாறும், நாயை வெளியேற்றுமாறும் உங்கள் (குடும்பத்துக்கு) கட்டளையிடுங்கள்'' என்று ஜிப்ரீல் (அலை) என்னிடம் கூறினார்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) ( நூல்கள் : அபூதாவூத், அஹ்மத்,  திர்மிதீ )

நபி (ஸல்) அவர்கள் தன் வீட்டில் நுழைந்தால் முதலில் மிஸ்வாக் செய்து பற்களை தூய்மையாக துப்புரவு செய்துவிட்டு பேச ஆரம்பிப்பார்கள் என ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள். (நூல் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் வீட்டில் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என ஆயிஷா (ரழி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள் மனிதர்களில் ஒரு மனிதராக இருந்து, தனது ஆடைகளை அவர்களே கழுவுவார்கள். தனது ஆட்டில் பால் கறப்பார்கள். தனக்காகவும் பணி செய்து கொள்வார்கள்என பதிலலித்தார்கள்.

أنه كان النبي صلى الله عليه وسلم في بيته في خدمة أهله يحلب الشاة يخصف النعل، يخدمهم في بيتهم،

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் மக்களில் சிலர் வந்து, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வீட்டில் என்ன செய்து கொண்டிருப்பார்கள்?” என்று வினவியதற்கு, “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வீட்டில் தமது அறுந்து போன செருப்பைத் தைப்பார்கள். தமது ஆடையின் கிழிசலையும் தாமே தைப்பார்கள். வீட்டு வேலைகளையும் எங்களோடு இணைந்து செய்வார்கள். ஆடுகளின் பாலைக் கறந்து தருவார்கள்என்று பதிலளித்தார்கள்.                         ( நூல்: புகாரி )

வீட்டினுள் ஆடம்பரமான எதையும் நபி ஸல் அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்...

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ حَدَّثَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ الْمُهَلَّبِيُّ، عَنْ مُجَالِدِ بْنِ سَعِيدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ

 دَخَلَتْ عَلَيَّ امْرَأَةٌ مِنَ الْأَنْصَارِ، فَرَأَتْ فِرَاشَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبَاءَةً ثَنِيَّةً، فَانْطَلَقَتْ، فَبَعَثَتْ إِلَيَّ بِفِرَاشٍ حَشْوُهُ الصُّوفُ، فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَا هَذَا يَا عَائِشَةُ؟» ، قَالَتْ

 فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ فُلَانَةُ الْأَنْصَارِيَّةُ دَخَلَتْ عَلَيَّ، فَرَأَتْ فِرَاشَكَ، فَذَهَبَتْ، فَبَعَثَتْ إِلَيَّ بِهَذَا، فَقَالَ: «رُدِّيهِ يَا عَائِشَةُ» ، قَالَتْ: فَلَمْ أَرُدَّهُ، وَأَعْجَبَنِي أَنْ يَكُونَ فِي بَيْتِي، حَتَّى قَالَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ، قَالَتْ: فَقَالَ: «رُدِّيهِ يَا عَائِشَةُ فَوَاللَّهِ لَوْ

شِئْتُ لَأَجْرَى اللَّهُ عَزَّ وَجَلَّ مَعِيَ جِبَالَ الذَّهَبِ وَالْفِضَّةِ

ஒரு நாள் மாநபி {ஸல்} அவர்கள் வீட்டிற்குள் நுழைகின்றார்கள். நபிகளாரின் புருவம் வியப்பால் உயர்கிறது. ஆம்! தாம் அமரும் இடத்தைப் பார்க்கின்றார்கள். அங்கே அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய புத்தம் புதிய விரிப்பொன்று விரிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறார்கள்.

இப்போது, நபி {ஸல்} அவர்கள் வீட்டின் இன்னொரு புறத்தில் அமர்ந்திருந்த தமது அருமைத்துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி ஆயிஷாவே! நான் காணும் இந்த விரிப்பு என்ன? எங்கிருந்து வந்தது? யார் தந்தது?” என அன்பொழுக வினவினார்கள்.

அதற்கு, அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அன்ஸாரிப் பெண்மணி ஒருவர் வந்தார். என்னோடு அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது உங்களுடைய விரிப்பைப் பார்த்து இது யாருடையது? எனக் கேட்டார். நான் அல்லாஹ்வின் தூதருடையது என்றேன். அதற்கு, அந்தப் பெண்மணி இந்த இத்துப்போன, கிழிசல் உடைய பழைய விரிப்பிலேயா அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அமர்வார்கள்? உறங்குவார்கள்?” என்று கேட்டு விட்டு நேராக வீட்டிற்குச் சென்றார். பின்னர், நீங்கள் காணும் இந்த அழகிய விரிப்பைக் கொடுத்தனுப்பினார்என்று பதில் கூறினார்கள்.

இது கேட்டதும் அண்ணலாரின் முகம் மாறிப்போனது. ஆயிஷாவே! இதை அந்த அன்ஸாரிப் பெண்மணியிடம் சென்று திருப்பிக் கொடுத்து விட்டு வாருங்கள்!என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அதற்கு, ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! விரிப்பு பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கின்றதே! அவசியம் திருப்பிக் கொடுக்க வேண்டுமா?” என்று கேட்டார்கள்.

 

அப்போது, அண்ணலார் ஆயிஷாவே! இதை அந்த அன்ஸாரிப் பெண்மணியிடம் சென்று திருப்பிக் கொடுத்து விட்டு வாருங்கள்!என்று நபி {ஸல்} அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.

பின்னர், ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி ஆயிஷாவே! நான் விரும்பி கேட்டால் இதோ இருக்கிற இந்த மலைகளை ( அருகில் தெரிந்த மலைகளை காட்டி) தங்கமாகவும், வெள்ளியாகவும் அல்லாஹ் மாற்றித் தந்து விடுவான்என்று கூறினார்கள்.

ويعود عند أوّل وقت صلاة الضحى إلى المسجد، ليعلّم أصحابه ويرشدهم، وقد ينجز ما عليه فعله من أموره الخاصة

வீட்டில் இருந்து ளுஹாவுடைய ஆரம்ப நேரத்தில் வெளியேறி மஸ்ஜிதுக்கு வந்து விடுவார்கள். நபி ஸல் அவர்கள் தங்களது தோழர்களுக்கு மார்க்க விஷயங்களை கற்றுக் கொடுப்பார்கள் தேவையான வழிகாட்டலை வழங்குவார்கள்.

வீட்டிற்கு செல்ல வேண்டிய மிகவும் முக்கியமான தேவை ஏதும் இருப்பின் மீண்டும் வீட்டிற்கு சென்று வருவார்கள்.

சில போது வீட்டிற்கு செல்ல மாட்டார்கள்....

روى الإمام أبو داود رحمه الله تعالى في سننه بسنده عن عبد الله الهوزني قال: (لقيت بلالاً مؤذن رسول الله صلى الله عليه وسلم بحلب فقلت: يا بلال! حدثني كيف كانت نفقة رسول الله صلى الله عليه وسلم؟ قال: ما كان له شيء، كنت أنا الذي ألي ذلك منه منذ بعثه الله تعالى إلى أن توفي رسول الله صلى الله عليه وسلم، وكان إذا أتاه الإنسان مسلماً فرآه عارياً يأمرني فأنطلق فأستقرض، فأشتري له البردة فأكسوه وأطعمه، حتى اعترضني رجل من المشركين فقال: يا بلال! إن عندي سعة فلا تستقرض من أحد إلا مني، ففعلت، فلما أن كان ذات يوم توضأت، ثم قمت لأؤذن بالصلاة فإذا المشرك قد أقبل في عصابة من التجار، فلما أن رآني قال: يا حبشي! قلت: يا لباه! فتجهمني وقال لي قولاً غليظاً، وقال لي: أتدري كم بينك وبين الشهر؟ قال: قلت قريب، قال: إنما بينك وبينه أربع، فآخذك بالذي عليك فأردك ترعى الغنم كما كنت قبل ذلك، فأخذ في نفسي ما يأخذ في أنفس الناس، حتى إذا صليت العتمة رجع رسول الله صلى الله عليه وسلم إلى أهله، فاستأذنت عليه فأذن لي، فقلت: يا رسول الله! بأبي أنت وأمي إن المشرك الذي كنت أتدين منه قال لي: كذا وكذا، وليس عندك ما تقضي عني ولا عندي، وهو فاضحي، فأذن لي أن آبق إلى بعض هؤلاء الأحياء الذين قد أسلموا حتى يرزق الله تعالى رسوله صلى الله عليه وسلم ما يقضي عني، فخرجت حتى إذا أتيت منزلي، فجعلت سيفي وجرابي ونعلي ومجني عند رأسي، حتى إذا انشق عمود الصبح الأول أردت أن أنطلق فإذا إنسان يسعى يدعو يا بلال! أجب رسول الله صلى الله عليه وسلم، فانطلقت حتى أتيته فإذا أربع ركائب مناخات عليهن أحمالهن، فاستأذنت، فقال لي رسول الله صلى الله عليه وسلم: أبشر، فقد جاءك الله تعالى بقضائك، ثم قال: ألم تر الركائب المناخات الأربع؟ فقلت: بلى، فقال: إن لك رقابهن وما عليهن، فإن عليهن كسوة وطعاماً أهداهن إلي عظيم فدَكَ، فاقبضهن واقض دينك، ففعلت، فذكر الحديث، ثم انصرفت إلى المسجد فإذا رسول الله صلى الله عليه وسلم قاعد في المسجد، فسلمت عليه، فقال: ما فعل ما قبلك؟ قلت: قد قضى الله تعالى كل شيء كان على رسول الله صلى الله عليه وسلم فلم يبق شيء، قال: أَفَضَل شيء؟ قلت: نعم، قال: انظر أن تريحني منه، فإني لست بداخل على أحد من أهلي حتى تريحني منه، فلما صلى رسول الله صلى الله عليه وسلم العتمة دعاني فقال: ما فعل الذي قبلك؟ قال: قلت: هو معي لم يأتنا أحد، فبات رسول الله صلى الله عليه وسلم في المسجد وقص الحديث، حتى إذا صلى العتمة -يعني: من الغد- دعاني قال: ما فعل الذي قِبَلك؟ قال: قلت: قد أراحك الله منه يا رسول الله! فكبر وحمد الله؛ شفقاً من أن يدركه الموت وعنده ذلك، ثم اتبعته حتى إذا جاء أزواجه فسلم على امرأة امرأة حتى أتى مبيته، فهذا الذي سألتني عنه

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த பின்னர், முஸ்லிம் ஏழைகள் விஷயத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எவ்வாறு செலவுகள் செய்யப்பட்டன?” என்று பிலால் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது,

பிலால் (ரலி) அவர்கள் இப்படிக் கூறினார்கள்: எங்களிடையே ஏழைகளும், வழிப்போக்கர்களும் உதவி தேடி வருவர். அதுபோது எங்களிடம் எது இருக்குமோ அதைக் கொடுப்போம். எதுவும் இல்லாத போது நபி {ஸல்} அவர்கள் என்னிடத்தில் அந்த ஏழைகளுக்கு ஏதாவது உதவி செய்திடுமாறு கூறுவார்கள்.

நானும் யாரிடமாவது கடன் வாங்கி அவர்களுக்கு உதவிகள் செய்வேன். பின்னர் நபி {ஸல்} அவர்களுக்கு தர்மப்பொருளோ, அல்லது அன்பளிப்புகளோ வருமானால் அதைக் கொண்டு கடனை அடைத்து விடுவேன். இது தான் வழக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில், மக்காவின் இணைவைப்பாளரான பெரிய செல்வந்தர் ஒருவர் என்னை ஒருபோது சந்தித்து உங்களின் விவகாரம் குறித்து நான் கேள்விபட்டேன்.

இனிமேல் நீங்கள் வேறுயாரிடமும் சென்று கடன் வாங்கவேண்டாம். என்னிடமே பெற்றுக் கொள்ளுங்கள். சொல்கிற தவணையில் சரியாகக் கொடுத்தால் போதும் என்றான்.

 

அவ்வாறே நானும் ஒரு சந்தர்ப்பத்தில் தவணையின் அடிப்படையில் கடன் பெற்றிருந்தேன்.

ஒரு நாள் பாங்கு சொல்வதற்காக உளூ செய்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் எனக்கு கடன் கொடுத்த அந்த முஷ்ரிக் சில நபர்களை அழைத்துக் கொண்டு என்னை நோக்கி ஓ கறுப்பு அடிமையே!என்று சப்தமிட்டான். அந்த சப்தத்தைக் கேட்டு நான் நடுங்கிப்போனேன்.

அந்த முஷ்ரிக்கை நோக்கி ஓ கொழுத்தவனே! என்னைப் பயமுறுத்தி விட்டாயே! என்று கேட்டேன்.

அதற்கு, அந்த முஷ்ரிக் ஓ! கறுப்பு அடிமையே! நான் உம்மீது இரக்கப்பட்டு கடனுதவி வழங்கினேன் என்று எண்ணிக் கொண்டாயா? ஒரு போதும் இல்லை. உமக்கு நான் கடன் தர வேண்டும். நீ அதைத் தர முடியாமல் தவிக்க வேண்டும். உன்னை நான் முன்பு போல அடிமைப் படுத்தி, ஒட்டகம் மேய்க்க விடவேண்டும்என்று நினைத்தல்லவா? உமக்கு கடன் தந்தேன்என்றான்.

அதற்கு நான் தவணை முடிய இன்னும் நான்கு நாட்கள் இருக்கத்தானே செய்கிறது?” அதற்கு முன் ஏன் இப்படி வந்து மிரட்டுகின்றாய்என்று கூறினேன். அதனைக் கேட்ட அவன் நான்கு நாட்கள் கழித்து வருவதாக சொல்லி விட்டுச் சென்றான்.

எனக்கு என் முந்தைய அடிமை வாழ்க்கையும், அவனுடைய மிரட்டலும் கண் முன் வரவே பயந்து போய் நபிகளாரின் சபைக்கு ஓடோடி வந்து நடந்தவற்றை நபி {ஸல்} அவர்களிடம் விளக்கிக் கூறி விட்டு, அல்லாஹ்வின் தூதரே! நான் நான்கு நாட்கள் முஸ்லிம்கள் நிறைந்து வாழ்கிற எங்காவது தலைமறைவாக இருக்க விரும்புகின்றேன்.

உங்களிடம் தர்மப்பொருளோ, அல்லது அன்பளிப்புகளோ வந்து விட்டதென்றால் நான் வந்து அதைக் கொண்டு போய் அவனிடம் கொடுத்து விடுகின்றேன்என்றேன்.

அதுகேட்ட அண்ணலார், மிகவும் மௌனமாக இருந்தார்கள். அங்கிருந்து உடனடியாக வீட்டுக்கு வந்த நான் வெளியூர் செல்வதற்கு தயாரானேன்.

அப்போது, என்னிடம் ஒருவர் வந்து பிலால் அவர்களே உங்களை நபி {ஸல்} அவர்கள் வரச் சொன்னார்கள். உடனடியாக செல்லுங்கள் என்றார்.

நானும் உடனடியாக நபிகளாரைக் காண மஸ்ஜிதுன் நபவீக்கு வந்தேன். பள்ளிக்கு வெளியே நான்கு ஒட்டகங்களும் அதன் மீது சாதனங்கள் அடங்கிய மூட்டைகளும் இருக்கக் கண்டேன்.

அப்போது நபி {ஸல்} அவர்கள் முகம் மலர்ந்தவர்களாக இருக்கக் கண்டேன்.

என்னைப் பார்த்ததும் நபி {ஸல்} அவர்கள் பிலாலே சோபனத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்! பள்ளிக்கு வெளியே நான்கு ஒட்டகைகளைப் பார்த்தீர்களா?” இப்போதே அதை ஓட்டிச் சென்று யார் யாருக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதை கொடுத்து விட்டு எனக்கு மன நிம்மதியை ஏற்படுத்துங்கள்என்றார்கள்.

 

நானும் மகிழ்ச்சியோடு வெளியே வந்து யார் யாருக்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சார்பாக கடன் பெறப்பட்டுள்ளதோ அவர்கள் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்என்று பொது அறிவிப்புச் செய்தேன்.

பின்னர் அந்த முஷ்ரிக்கிடம் சென்று அவனுக்கு தரவேண்டிய கடனையும் கொடுத்து விட்டு பள்ளிக்கு வந்தேன்.

என்னைப் பார்த்த நபிகளார் என்ன பிலாலே எல்லா சாதனங்களும் தீர்ந்து விட்டதா? நான் மன நிம்மதி பெற்று விடுவேனா?” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! இன்னும் கொஞ்சம் பொருட்கள் இருக்கின்றனஎன்றேன். அப்படியானால் சீக்கிரம் கொண்டு கொடுத்து விட்டு வாருங்கள்என்றார்கள் நபி {ஸல்} அவர்கள்.

இப்படியாக இரண்டு நாட்கள் நபி {ஸல்} அவர்கள் வீட்டிற்கே செல்லவில்லை. பள்ளியிலேயே இருந்து விட்டார்கள். நானும் கொஞ்சம் கொஞ்சமாக தேவையுடையோர்களைத் தேடிப் பிடித்துச் சென்று உதவிகளைச் செய்தேன்.

மூன்றாவது நாள் இரவு நேரமும் வந்தது. அண்ணலார் முன்பு போலவே என்னிடம் கேட்டார்கள். வெளியே செல்லுங்கள் பிலாலே! வெளியில் தேவையுடையோர் யாராவது தென்பட்டால் அவர்களிடம் கொடுத்து விட்டு என் சுமையைக் கொஞ்சம் குறையுங்கள்என்றார்கள்.

இறுதியாக, ஒரு பிரயாணக்குழுவொன்று வந்தது. அவர்களில் தேவையுடையோருக்கு உண்வும், ஆடையும் கொடுத்த பின் என்னிடம் இருந்த எல்லா பொருட்களும் தீர்ந்து போயின.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் சென்று நான் சொன்னேன். அதைக் கேட்டதும் அண்ணல் {ஸல்} அவர்கள் தக்பீர் கூறியவர்களாக, அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாக பள்ளியை விட்டு எழுந்து சென்றார்கள்.

தங்களின் மனைவியர்களின் வீடுகளின் முன்பு நின்று ஸலாம் கூறி இன்று யார் வீட்டில் தங்கும் முறை என்று கேட்டு விட்டு, அந்த வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மூன்று இரவு மற்றும் மூன்று பகலாக எந்த மனைவியரின் வீட்டிற்கும் செல்லவில்லை. பள்ளியிலேயே தங்கியிருந்தார்கள்.  ( நூல்; அபூதாவூத் )

ளுஹா முதல் லுஹர் வரை....

يصلّي النبيّ نافلة الضحى، فقد روت السيدة عائشة -رضي الله عنها-: (كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الضُّحَى أَرْبَعًا، وَيَزِيدُ مَا شَاءَ اللهُ)،

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் நேரத்தில் நான்கு ரக்அத்கள் (ளுஹா) தொழுவார்கள்; அல்லாஹ் நாடிய அளவு கூடுதலாகவும் தொழுவார்கள். இதை முஆதா அல்அதவிய்யா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.( நூல்: முஸ்லிம்)

 

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، قَالَ: مَا أَخْبَرَنَا أَحَدٌ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:46] صَلَّى الضُّحَى غَيْرُ أُمِّ هَانِئٍ ذَكَرَتْ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ فَتْحِ مَكَّةَ اغْتَسَلَ فِي بَيْتِهَا، فَصَلَّى ثَمَانِيَ رَكَعَاتٍ، فَمَا رَأَيْتُهُ صَلَّى صَلاَةً أَخَفَّ مِنْهَا غَيْرَ أَنَّهُ يُتِمُّ الرُّكُوعَ وَالسُّجُودَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது எனது இல்லத்தில் குளித்து விட்டு எட்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதை விடச் சுருக்கமாக வேறு எந்தத் தொழுகையும் அவர்கள் தொழுததை நான் பார்த்ததில்லை. ஆயினும் ருகூவையும், ஸஜ்தாவையும் முழுமையாகச் செய்தார்கள்  என்று உம்மு ஹானி (ரலி) குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு அபீ லைலா ( நூல்: புகாரீ )

மேற்ச் சென்ற ஹதீஸின் மூலம் ளுஹா தொழுகையை எட்டு ரக்அத்துகளாக தொழலாம் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، حَدَّثَنَا أَبُو التَّيَّاحِ، قَالَ: حَدَّثَنِي أَبُو عُثْمَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: أَوْصَانِي خَلِيلِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِثَلاَثٍ: «صِيَامِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، وَرَكْعَتَيِ الضُّحَى، وَأَنْ أُوتِرَ قَبْلَ أَنْ أَنَامَ»

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறும். ளுஹாநேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறும். உறங்குவதற்கு முன் வித்ருத் தொழுகையை தொழுது விடுமாறும் இந்த மூன்று விஷயங்களை என் தோழர்(ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்!’ ( நூல்: புகாரி )

كان النبيّ -صلى الله عليه وسلم- إذا ارتفعت الشمس وقبل وقت الظهر؛ نام القيلولة؛ لتساعده على التهجّد وقيام الليل، ويقول: «قِيلُوا، فإنَّ الشياطينَ لا تَقِيلُ»

சூரியன் உச்சிக்கு நகரத் தொடங்கியதும் லுஹர் தொழுகைக்கு முன்பாக சிறிது நேரம் உறங்குவார்கள். இந்த தூக்கத்திற்கு கைலூலா - முற்பகலில் தூங்கும் சிறு தூக்கம் என்று பொருள். இந்த தூக்கத்தை குறித்து பெருமானார் (ஸல்) அவர்கள் கூறும் போது "முற்பகலில் சிறிது நேரம் உறங்குங்கள்! ஏனெனில், ஷைத்தான் அந்த உறக்கத்தை உறங்குவதில்லை" என்று கூறுவார்கள்.

كان يستيقظ من القيلولة وقت صلاة الظهر، فيخرج للمصلّى ويصلّي بالناس، وإن كان هناك أمرٌ يريد أن يخبره للمسلمين فإنّه يجتمع بهم، فإذا فرغ عاد إلى بيته ليصلّي فيه سنّة الظهر، وقد يعود ليجالس أصحابه، أو يذهب لقضاء حاجاته.

பெருமானார் (ஸல்) கைலூலா தூக்கத்தில் இருந்து எழுந்ததும் லுஹர் தொழுகைக்காக சென்று விடுவார்கள். லுஹர் தொழ வைத்து முடிந்ததும் ஏதேனும் சொல்ல வேண்டிய அவசியமான விஷயம் இருந்தால் மக்களை ஒன்று திரட்டி சொல்வார்கள். அதன் பின்னர் வீட்டிற்கு சென்று விடுவார்கள். வீட்டிற்கு வந்ததும் லுஹரின் சுன்னத் தொழுகையை தொழுவார்கள். சில போது தங்களுடைய தேவைகளை நிறைவு செய்வார்கள். சில போது மீண்டும் தங்களுடைய தோழர்களுடன் வந்து பள்ளியில் அமர்ந்து விடுவார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் பெருமானார் (ஸல்) அவர்கள் வாழ்ந்த அடிப்படையில் வாழ்வதற்கு தௌஃபீக் செய்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!

No comments:

Post a Comment