இருள் அகற்றும் இறைமறை – தராவீஹ் சிந்தனை
– 9.
நன்றி கெட்ட நடத்தையை விட்டொழிப்போம்!!!
அல்லாஹ்வின்
மகத்தான கருணையால் 8
வது நோன்பை நோற்று ஒன்பதாம் நாள் தராவீஹ் தொழுகையை
நிறைவேற்றி அமர்ந்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்!
தராவீஹ்
தொழுகையில் நேற்றுடன் பத்து ஜுஸ்வுகள் நிறைவு பெற்றன. இன்று பதினோறாம் ஜுஸ்வும்
பனிரெண்டாம் ஜுஸ்வின் கால் ஜுஸ்வும் ஓதப்பட்டது.
இன்றைய தராவீஹ்
தொழுகையிலல் ஓதப்பட்ட பல்வேறு வசனங்களில் இரண்டு இடங்களில் அல்லாஹ் மனிதனின் நன்றி
கெட்ட தனத்தை விமர்சிக்கின்றான். கண்டிக்கின்றான்.
தனக்கு ஒரு
காரியம் நடக்க வேண்டும் என்றால் இறைவனிடம் உருகிக் கேட்பதும் அந்த காரியத்தை
இறைவன் நடத்திக் கொடுத்த பிறகு இறைவனுக்கு மாறு செய்கிற பண்பை அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் கடுமையாக கண்டிக்கின்றான்.
வசனம்: 1.
هُوَ الَّذِىْ يُسَيِّرُكُمْ فِى الْبَرِّ
وَالْبَحْرِؕ حَتّٰۤى اِذَا كُنْتُمْ فِى الْفُلْكِ ۚ وَ جَرَيْنَ بِهِمْ
بِرِيْحٍ طَيِّبَةٍ وَّفَرِحُوْا بِهَا جَآءَتْهَا رِيْحٌ عَاصِفٌ وَّجَآءَهُمُ
الْمَوْجُ مِنْ كُلِّ مَكَانٍ وَّظَنُّوْۤا اَنَّهُمْ اُحِيْطَ بِهِمْ
دَعَوُا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَۙ
لَٮِٕنْ
اَنْجَيْتَـنَا مِنْ هٰذِهٖ لَنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِيْنَ
அவனே உங்களைத்
தரையிலும்,
கடலிலும் பயணம் செய்யவைக்கிறான்; (சில சமயம்) நீங்கள் கப்பலில் இருக்கும்போது நல்ல காற்றினால் (கப்பலிலுள்ள)
அவர்களை அவை (சுமந்து) செல்கின்றன; அதனைக்கொண்டு அவர்கள்
மகிழ்ச்சியடைந்திருக்கும் பொழுது, புயல் காற்று வீசி
எல்லாப்பக்கங்களிலிருந்தும் அவர்கள் மீது அலைகள் மோதும்போது "நிச்சயமாக
அலைகளால் சூழப்பட்டோம் (தப்ப வழியில்லையே!)" என்று அவர்கள் எண்ணுகிறார்கள், அச்சமயத்தில்,
"நீ எங்களை இதிலிருந்து காப்பாற்றிவிட்டால், மெய்யாகவே நாங்கள் நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்" என்று அல்லாஹ்வை -
அவனுக்கே வணக்கத்தைக் கலப்பற்றவர்களாக ஆக்கிப் பிரார்த்திக்கின்றார்கள்.
فَلَمَّاۤ
اَنْجٰٮهُمْ اِذَا هُمْ يَبْغُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَـقِّ ؕ يٰۤـاَ
يُّهَا النَّاسُ اِنَّمَا بَغْيُكُمْ عَلٰٓى اَنْفُسِكُمْۙ مَّتَاعَ الْحَيٰوةِ
الدُّنْيَا
ثُمَّ
اِلَـيْنَا مَرْجِعُكُمْ فَنُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
அவன் அவர்களைக்
காப்பாற்றிவிட்டதும் அவர்கள் பூமியின் மீது நியாயமில்லாது அழிச்சாட்டியம்
செய்கிறார்கள்;
மனிதர்களே! உங்கள் அழிச்சாட்டியங்கள் எல்லாம் உங்களுக்கே
கேடாக முடியும்;
(இது) உலக வாழ்வின் (அற்ப) சுகமேயாகும்; பின்னர்,
நம்மிடமே உங்கள் திரும்புதல் இருக்கிறது; அப்போது,
நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு நாம் அறிவிப்போம்.
( அல்குர்ஆன்: 10:
22, 23 )
இதே
அத்தியாயத்தில் ஒரு மனிதன் தனக்கு ஒரு காரியம் நடக்க வேண்டும் என்றால் எப்படி
எல்லாம் இறைவனிடம் இறைஞ்சுகின்றான் என்று கூறிய பின்பு அவனின் நன்றி கெட்ட நடத்தை
எப்படி இருக்கிறது என்பதையும் பதிவு செய்கின்றான்.
وَاِذَا
مَسَّ الْاِنْسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنْۢبِهٖۤ اَوْ قَاعِدًا اَوْ
قَآٮِٕمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهٗ مَرَّ كَاَنْ لَّمْ
يَدْعُنَاۤ اِلٰى ضُرٍّ مَّسَّهٗ كَذٰلِكَ زُيِّنَ لِلْمُسْرِفِيْنَ مَا كَانُوْا
يَعْمَلُوْنَ
மனிதனை (ஏதேனும்
ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக்கொண்டோ, அல்லது உட்கார்ந்துகொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ
(அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கின்றான்; ஆனால்,
நாம் அவனைவிட்டும் அவனுடைய துன்பத்தை நீக்கிவிடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்காதது போலவே
(அலட்சியமாகச்) சென்றுவிடுகிறான்; இவ்வாறே வரம்பு
மீறுபவர்களுக்கு அவர்கள் செய்துகொண்டிருந்த தீயவை அழகாக்கப்பட்டுவிடுகின்றன. ( அல்குர்ஆன்: 10:
12 )
வசனம்: 2.
وَمَا ظَنُّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ يَوْمَ الْقِيٰمَةِؕ اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَى النَّاسِ وَلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَشْكُرُوْنَ
அல்லாஹ்வின் மீது
பொய்யைக் கற்பனை செய்பவர்கள் மறுமை நாளைப் பற்றி என்ன எண்ணுகின்றனர்? (அது பொய்யென எண்ணிக்கொண்டனரா?) நிச்சயமாக அல்லாஹ்
மனிதர்கள் மீது அருளுடையவனாக இருக்கின்றான்; எனினும், அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. ( அல்குர்ஆன்: 10: 60 )
செல்வத்தை கேட்கின்றான் கொடுத்தால்....
وَمِنْهُمْ
مَّنْ عَاهَدَ اللّٰهَ لَٮِٕنْ اٰتٰٮنَا مِنْ فَضْلِهٖ لَـنَصَّدَّقَنَّ
وَلَنَكُوْنَنَّ مِنَ الصّٰلِحِيْنَ
அவர்களில் சிலர், "அல்லாஹ் தன் அருளிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்தால், மெய்யாகவே நாம் (தாரளமாகத் தான) தர்மம் செய்வோம்; இன்னும்,
நல்லோர்களாகவும் நிச்சயமாக நாம் ஆகிவிடுவோம்" என்று
அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள்.
فَلَمَّاۤ
اٰتٰٮهُمْ مِّنْ فَضْلِهٖ بَخِلُوْا بِهٖ وَتَوَلَّوْا وَّهُمْ مُّعْرِضُوْنَ
(அவ்வாறே) அவன், அவர்களுக்குத் தன் அருளிலிருந்து வழங்கியபோது, அதில் அவர்கள் உலோபித்தனம் செய்து, அவர்கள்
புறக்கணித்தவர்களாகப் பின்வாங்கிவிட்டனர். ( அல்குர்ஆன்: 9: 75, 76 )
மழலைச் செல்வங்களை கேட்கின்றான் கொடுத்தால்....
هُوَ
الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّـفْسٍ وَّاحِدَةٍ وَّجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ
اِلَيْهَا فَلَمَّا تَغَشّٰٮهَا حَمَلَتْ حَمْلًا خَفِيْفًا فَمَرَّتْ بِهٖ
فَلَمَّاۤ اَثْقَلَتْ دَّعَوَا اللّٰهَ رَبَّهُمَا لَٮِٕنْ اٰتَيْتَـنَا صَالِحًا
لَّـنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِيْنَ
அவன் உங்களை ஒரே
மனிதரிலிருந்து படைத்தான்;
அவரிலிருந்து அவருடைய துணைவியை அவளிடம் அவர் மன அமைதி
பெறுவதற்காகப் படைத்தான்: அவர் அவளை நெருங்கியபோது, அவள் இலேசான சுமையைச் சுமந்தாள்; பின்பு, அதனுடன் நடமாடிக்கொண்டிருந்தாள்; பின்பு, அது பளுவாகவே,
அவர்களிருவரும் தம்மிருவரின் இறைவனிடம், "(இறைவனே!) எங்களுக்கு நீ (சந்ததியில்) நல்லதைக் கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் இருவரும் நன்றி உள்ளவர்களாக இருப்போம்" என்று
பிரார்த்திக்கின்றனர்.
فَلَمَّاۤ
اٰتٰٮهُمَا صَالِحًـا جَعَلَا لَهٗ شُرَكَآءَ فِيْمَاۤ اٰتٰٮهُمَا فَتَعٰلَى
اللّٰهُ عَمَّا يُشْرِكُوْنَ
அவ்விருவருக்கும்
(அவர்கள் விருப்பப்படி குழந்தையை) நல்லதை அவன் கொடுத்தவுடன், அவர்களுக்கு அவன் கொடுத்ததில் அவ்விருவரும் அவனுக்கு இணையாளர்களை ஆக்கினார்கள்; இவர்கள் இணைவைப்பதைவிட்டும் அல்லாஹ் தூய்மையானவன். ( அல்குர்ஆன்: 7: 189, 190 )
மொத்தத்தில் மனிதர்களில் பெரும்பாலானவர்கள் எப்படி இருக்கின்றார்கள் தெரியுமா? அதையும் இறைவனே சொல்கின்றான்.
اِنَّ
الْاِنْسَانَ لِرَبِّهٖ لَـكَنُوْدٌ
நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 100: 5 )
وَهُوَ الَّذِي أَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ إِنَّ
الْإِنْسَانَ لَكَفُورٌ
இன்னும்; அ(ல்லாஹ்)வன் தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை
உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான். (
அல்குர்ஆன்: 22:
66 )
اِعْمَلُوْۤا
اٰلَ دَاوٗدَ شُكْرًا وَقَلِيْلٌ مِّنْ عِبَادِىَ الشَّكُوْرُ
"தாவூதின்
சந்ததியினரே! நன்றி செலுத்துங்கள்; மேலும், என் அடியார்களிலிருந்து நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே" (என்று
கூறினோம்). ( அல்குர்ஆன்: 34:
13 )
مر
سيدنا عمر بن الخطاب رضي الله عنه ذات يوم برجل في السوق، فإذا بالرجل يدعو
ويقول:(اللهم اجعلني من عبادك القليل. اللهم اجعلني من عبادك القليل) فقال له
سيدنا عمر : من أين أتيت بهذا الدعاء؟
فقال
الرجل: إن الله يقول في كتابه العزيز: (وقليل من عبادي الشكور).
فبكى
سيدنا عمر وقال : كل الناس أفقه منك يا عمر. اللهم اجعلنا من عبادك القليل.
،
ஒரு நான் கலீஃபா
உமர் (ரலி) அவர்கள்
கடை வீதியில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களைக் கடந்து ஒரு மனிதர் சென்று கொண்டிருந்தார்.
அவர்
"அல்லாஹ்வே! சொற்பமான எண்ணிக்கையில் உள்ள உன் அடியார்களில் என்னையும் ஒருவனாக
நீ ஆக்குவாயாக!" என்று துஆ கேட்டுக் கொண்டே சென்று கொண்டிருந்தார்.
அவரை அழைத்த உமர்
(ரலி) அவர்கள் நீர் ஓதும் துஆ புதிதாக உள்ளதே! இந்த துஆவை எங்கிருந்து கற்றுக்
கொண்டீர்?
என்று கேட்டார்கள்.
அதற்கவர், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன் அருள் மறையிலே "என் அடியார்களிலிருந்து நன்றி
செலுத்துவோர் சொற்பமானவர்களே என்று கூறுகின்றானே! ஆகவே தான் நான் இப்படி துஆ
செய்கிறேன்" என்றார்.
அதைக் கேட்ட உமர்
ரலி அவர்கள் "உமரே! அனைத்து மனிதர்களும் மார்க்க விஷயத்தில் உம்மை விட
மிகவும் ஞானம் உள்ளவர்களாக இருக்கின்றனர்" என்று தம்மைத் தாமே கூறிவிட்டு "அல்லாஹ்வே! சொற்பமான எண்ணிக்கையில் உள்ள உன் அடியார்களில் என்னையும் ஒருவனாக
நீ ஆக்குவாயாக!" என்று துஆச் செய்தார்களாம். ( நூல்: முஸன்னஃப் இப்னு அபீ
ஷைபா, அஜ் - ஜுஹ்த் லிஇமாமி அஹ்மத் இப்னு ஹம்பல் )
நபி மூஸா (அலை) அவர்களின் நண்றியுணர்வும்... பனூ இஸ்ராயீலின் நன்றி கெட்ட
நடத்தையும்....
நைல் நதி பிளந்து
ஃபிர்அவ்னிடம் இருந்து காப்பாற்றப்பட்டு, அதே நைல் நதியில்
ஃபிர்அவ்னும் அவனது படைகளும் அல்லாஹ்வின் மகத்தான அற்புதத்தால் அழிக்கப்பட்டதன்
பின்னர் பனூ இஸ்ரவேலர்களின் நன்றி கெட்ட குணத்தை அல்லாஹ் வெளிச்சம் போட்டுக்
காட்டுகின்றான்.
وَجَاوَزْنَا
بِبَنِىْۤ اِسْرَاۤءِيْلَ الْبَحْرَ فَاَ تَوْا عَلٰى قَوْمٍ يَّعْكُفُوْنَ عَلٰٓى
اَصْنَامٍ لَّهُمْ قالُوْا يٰمُوْسَى اجْعَلْ لَّـنَاۤ اِلٰهًا كَمَا لَهُمْ
اٰلِهَةٌ قَالَ اِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُوْنَ
நாம் இஸ்ராயீலின்
சந்ததியினரைக் கடல் கடந்துசெல்ல வைத்தோம்; தங்களுக்குரிய
விக்கிரகங்களை ஆராதனை செய்துகொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே அவர்கள் வந்தார்கள்; அப்போது அவர்கள்,
"மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப்போல் நமக்கும்
நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக!" என்று வேண்டினர்; "நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்" என்று
அவர் (மூஸா அவர்களிடம்) கூறினார்.
اِنَّ
هٰٓؤُلَۤاءِ مُتَبَّرٌ مَّا هُمْ فِيْهِ وَبٰطِلٌ مَّا كَانُوْا يَعْمَلُوْنَ
"நிச்சயமாக இவர்கள்
எதில் இருக்கிறார்களோ அது அழியக்கூடியது; இன்னும், அவர்கள் செய்பவையாவும் (முற்றிலும்) வீணானது" (என்றும் கூறினார்).
قَالَ
اَغَيْرَ اللّٰهِ اَبْغِيْكُمْ اِلٰهًا وَّهُوَ فَضَّلَـكُمْ عَلَى الْعٰلَمِيْنَ
(அன்றியும்,) "அல்லாஹ் அல்லாதவனையா நான் உங்களுக்கு இறைவனாகத் தேடுவேன்? அவனோ உங்களை அகிலத்தாரைவிட மேன்மையாக்கி வைத்துள்ளான்" என்றும் அவர்
கூறினார். ( அல்குர்ஆன்: 7:
138 - 140 )
حدثنا
أحمد بن خالد الشيباني، عن عيسى بن يونس، عن الأعمش، عن أبي وائل، عن عبدالله قال:
قال رسول الله صلى الله عليه وسلم: : قَالَ لِي جَبْرَئِيلُ عليه السلام : أَ لَا
أُعَلِّمُكَ الْكَلِمَاتِ الَّتِي قَالَهُنَّ مُوسَى عليه السلام حِينَ انْفَلَقَ
لَهُ الْبَحْرُ ؟
قَالَ ،
قُلْتُ : بَلَى .
قَالَ :
قُلِ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ وَ إِلَيْكَ الْمُشْتَكَى وَ بِكَ الْمُسْتَغَاثُ
وَ أَنْتَ الْمُسْتَعَانُ وَ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
الْعَلِيِّ الْعَظِيمِ
قال
عبدالله: فما تركتهن مذ سمعتهن من رسول الله صلى الله عليه وسلم.
وقال
أبو وائل: ما تركتهن مذ سمعتهن من عبدالله.
وقال
الأعمش: ما تركتهن مذ سمعتهن من أبي وائل.
ஒரு சமயம்
ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வருகை தந்து, நபியே இஸ்ரவேலர்களுக்காக நைல்நதியை அல்லாஹ் பிளந்த போது
மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்து கூறிய வார்த்தைகளை நான் உங்களுக்கு அறிவித்து தரட்டுமா? என்று கேட்க,
ஆம்! அவசியம் அறிவித்துத் தாருங்கள்!" என்று நபி ஸல்
அவர்கள் கூறினார்கள். அப்போது, ஜிப்ரயீல் (அலை) அவர்கள்
பின் வரும் துஆவை
"இறைவா உனக்கே எல்லா புகழும்.
சிரமத்தில் முறையிடுபவனின் முறையீடு உன் பக்கமே உள்ளது நீயே
உதவிதேட தகுந்தவன். தீமையைவிட்டு விலகவும் நன்மையைசெய்யவும் சக்தி உன்னைக்கொண்டே
உள்ளது" என்று ஓதிக் காட்டினார்கள்.
நான் இந்த துஆவை
நபியிடம் கேட்டதில் இருந்து விட்டதேயில்லை. என்று அப்துல்லாஹ்வும், அவரிடம் இருந்து அறிவிக்கின்ற அபூவாயிலும், அவரிடம் இருந்து
அறிவிக்கின்ற அஃமஷ் (ரஹ்) அவர்களும் கூறுகின்றார்கள். ( நூல்: தப்ரானி, பைஹகீ )
துஆவின் ஊடாக நன்றியை வெளிப்படுத்துவோம்....
عن
النوّاس بن سمعان قال : سرقت ناقة رسول الله صلى الله عليه وسلم فقال لئن ردها
الله لأشكرن ربي ، فوقعت في حي من أحياء العرب فيهم امرأة مسلمة ، فوقع في خلدها
أن تهرب عليها ، فرأت من القوم غفلة فقعدت عليها ثم حركتها فصبحت بها المدينة ،
فلما رأها المسلمون فرحوا بها ، ومشوا بمجيئها حتى أتوا رسول الله صلى الله عليه
وسلم فلما رأها قال { الحمد لله } فانتظروا هل يحدث رسول الله صلى الله عليه وسلم
صوماً أو صلاة؟ فظنوا أنه نسي فقالوا : يا رسول الله قد كنت قلت لئن ردها الله
لأشكرن ربي . قال : ألم أقل الحمد لله.
நவ்வாஸ் இப்னு
ஸம்ஆன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- ஒரு தடவை நபி (ஸல்)
அவர்களின் ஒட்டகம் திருடப்பட்டது . அப்போது நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ் எனக்கு ஒட்டகத்தை திரும்பத் தந்தால் நான் அவனுக்கு நன்றி
செலுத்துவேன்" என்று கூறினார்கள்.
அந்த ஒட்டகத்தை அரபி
கோத்திரத்தார்களில் ஒரு கோத்திரத்தார் திருடி இருந்தனர் அந்த கோத்திரத்தில் ஒரு
ஸாலிஹான பெண்ணும் இருந்தார் இந்த விஷயத்தை அறிந்த அப்பெண் இரவோடு இரவாக
அக்கூட்டத்தார் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்த ஒட்டகத்தில் ஏறி பயணித்து காலையில் நபி ஸல் அவர்களிடம் கொண்டு வந்தார்.
அங்கே, கட்டப்பட்டிருந்த ஒட்டகத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும்
சந்தோஷப்பட்டார்கள் ஒட்டகத்தை கண்டவுடன் الحمد لله
என்று கூறி அல்லாஹ்வை நபி ஸல் அவர்கள் புகழ்ந்தார்கள் வேறு எதுவும்
செய்யவில்லை. ஆனாலும் இதற்கு நன்றியாக நபி ஸல் அவர்களின் ஒரு நோன்பையோ அல்லது
தொழுகையையோ அறிவித்து அதை செய்வார்கள்என்று மக்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் நபி ஸல்
அவர்கள் அவ்வாறு எதுவும் செய்யவில்லை ஒரு வேலை நபி ஸல் அவர்கள் "தாங்கள்
சொல்வதை மறந்திருப்பார்களோ" என்று எண்ணிய நபித்தோழர்கள் "நபி (ஸல்)
அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! ஒட்டகத்தை இறைவன் திரும்பத்தந்தால் நன்றி
செழுத்துவேன் என்று கூறினீர்களே!?" என்று கூறிய பொழுது நபி
அவர்கள் சொன்னார்கள் நான்
الحمد لله என்று கூறவில்லையா? என்று கேட்டார்கள்.
( நூல்: தஃப்ஸீர் ஜாமிஉல் பயான் லிஇமாமி இப்னு ஜரீர் அத் தபரீ
)
நபி (ஸல்) அவர்கள்
நன்றி தெரிவிப்பதற்காக பரந்த கருத்துக்களை உள்ளடக்கிய
வார்த்தைகளையும் கற்றுத்தந்துள்ளார்கள,
அவற்றை கூறுவதால்
ஒரு தடவையிலேயே ஆயிரக்கணக்கான தடவை நன்றி தெரிவித்த நன்மை கிடைத்துவிடும். அந்த
வார்த்தைகள் இவைகள் தான்.
في
رواية الطبراني : نزل عليه جبريل عليه السلام فقال يا محمد ان سرك ان
تعبدالله حق عبادته
اللَّهُمَّ
لَكَ الْحَمْدُ حَمْدًا دَائِمًا مَعَ دَوَامِكَ ولَكَ الْحَمْدُ حَمْدًاخَالِدًا
مَعَ خُلُودكَ ، وَلَكَ الْحَمْدُ حَمْدًا دَائِمًا لَا مُنْتَهَى لَهُ دُونَ
مَشِيئَتِكَ، وَلَكَ الْحَمْدُ حَمْدًا لَا يُرِيدُ قَائِلُهَا إِلَّا رِضَاكَ،
وَلَكَ الْحَمْدُ حَمْدًا عِنْد طَرَفَةِ كُلّ عَيْنٍ وَتَنَفُّسِ كُلّ نَفْسٍ.
كنز العمال 4954]
أخرجه
البيهقى فى شعب الإيمان (4/95 ، رقم 4389
ஒரு நாள் ஜிப்ரயீல் (அலை) நபி ஸல் அவர்களின் சமூகம் வருகை தந்து
"முஹம்மது அவர்களே! அல்லாஹ்வை அவனுக்கு உவப்பான வகையிலே, அவனை வணங்குவதற்கு உரித்தான வகையிலே வணங்கியதாக நீர் உணரும் போது, "யா அல்லாஹ் ! உன்னுடைய நிலைத்த தன்மையோடு கூடிய நிரந்தர நன்றி உனக்கே உரியது , உன்னுடைய நீடித்த தன்மையோடு கூடிய நீடித்த நன்றி உனக்கே உரியது , உன்னின் நாட்டமின்றி முடிந்து போகாத முடிவில்லாத நன்றி உனக்கே உரியது . உன்
திருப்தியை மட்டுமே நோக்கமாக கொண்டு நன்றி தெரிவிப்பவரின் நன்றியைப் போன்ற நன்றி
உனக்கே உரியது ,
கண்ணிமைக்கும் ஒவ்வொரு நொடியும் , விடும் ஒவ்வொரு மூச்சின் போதும் நன்றி உனக்கே உரியது" என்று அல்லாஹ்வைப்
புகழ்ந்து நன்றி செலுத்துவீராக!" என்று கூறினார்கள். ( நூல்: தப்ரானீ, கன்ஜுல் உம்மால் )
عبدالله
بن غنام البياضي: أنَّ رسول الله ﷺ قال: مَن قال حين يُصبح: اللَّهُمَّ مَا
أَصْبَحَ بِي مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ فَمِنْكَ وَحْدَكَ لاَ
شَرِيكَ لَكَ، فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْر", فقد أدَّى شُكره يومه،
ومَن قال مثل ذلك حين يُمسي فقد أدَّى شُكر ليلته
அப்துல்லாஹ் இப்னு
Gகன்னாம் (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) அவர்கள்
அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிப்பதற்காக கீழ்காணும் வார்த்தைகளை சொல்லித்தந்தார்கள். “யா அல்லாஹ்! எனக்கோ அல்லது உன்னுடைய படைப்புகளிலிருந்து யாருக்கேனும் எந்த ஒரு பாக்கியமும் கிட்டி இருந்தாலும் அது உன்னிலிருந்து
மட்டுமே கிடைத்ததாகும். உனக்கு யாதொரு இணையுமில்லை, எனவே உனக்கே புகழ்,
உனக்கே நன்றி உரித்தாகுக!" என்று கூறி விட்டு, நபி (ஸல்) கூறினார்கள் எவர் இந்த வார்த்தைகளை காலையில் சொல்வாரோ அவர் அந்த
நாளின் நன்றியை நிறைவேற்றி விட்டார்.எவர் இந்த வார்த்தைகளை மாலையில் சொல்வாரோ அவர்
அன்றைய இரவின் நன்றியை நிறைவேற்றி விட்டவராவார். ( நூல்: நஸயீ, அபூதாவூத் )
தண்ணீரின் விலை என்ன?..
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் இந்த உலகத்தில் நமக்கு வழங்கியிருக்கிற அருட்கொடைகள் ஏராளம்.
وَإِنْ
تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا
“அல்லாஹ்வின் அருட்கொடைகளை
நீங்கள் எண்ணிவிட முயன்றால் அவற்றை உங்களால் எண்ணவே முடியாது”. ( அல்குர்ஆன்: 16:
18 )
وَمَا
بِكُمْ مِنْ نِعْمَةٍ فَمِنَ اللَّهِ
“மேலும், உங்களுக்கு கிடைத்திருக்கிற வாழ்க்கை வசதிகள் எல்லாமுமே அல்லாஹ்வின்
அருட்கொடைகள் தாம்”. ( அல்குர்ஆன்: 16:
53 )
அல்லாஹ் நமக்கு
தந்துள்ள அருட்கொடைகளில் தண்ணீர் மிகவும் மகத்தான அருட்கொடை.
اَفَرَءَيْتُمُ
الْمَآءَ الَّذِىْ تَشْرَبُوْنَ
நீங்கள்
குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?
ءَاَنْـتُمْ
اَنْزَلْـتُمُوْهُ مِنَ الْمُزْنِ اَمْ نَحْنُ الْمُنْزِلُوْنَ
மேகத்திலிருந்து
அதை நீங்கள் இறக்கினீர்களா?
அல்லது நாம் இறக்குகிறோமா?
لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ
நாம் நாடினால், அதை உப்பாக
ஆக்கியிருப்போம்;
(இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா? ( அல்குர்ஆன்: 56:
68 - 70 )
தண்ணீரின் தேவையை
உணர தவறினால் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்
புள்ளி விவரங்களுடன் கூறுகின்றனர்.
குறிப்பாக உலக
அளவில் 5-ல் 1
குழந்தை தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றது.
அதேபோல், ஆசியாவில் 15.5
கோடி குழந்தைகள் தண்ணீர் பற்றாக்குறையால் வறட்சியான
பகுதிகளில் வசிக்கிறார்கள்.
நாட்டில் 6.85 கோடி மக்கள் போதுமான தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால் வசிப்பிடங்களில் இருந்து
இடம் பெயர்ந்துள்ளனர்.
உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.
இதேநிலை தொடரும்
பட்சத்தில்,
உலகில் வரும் 2050-ம் ஆண்டுக்குள்
சுமார் 570
கோடி மக்கள் ஒரு ஆண்டில் ஒரு மாதமாவது தண்ணீர் பஞ்சத்தால்
அவதிப்படுவார்கள் என ஐக்கிய நாட்டு சபை எச்சரித்துள்ளது.
உலக சுகாதார
அமைப்பின் 2022
ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின் படி தண்ணீர் பற்றாக்குறையினால்
1.4 மில்லியன் மக்கள் மரணத்தை சந்திக்கின்றனர்.
மேலும் 74 மில்லியன் மக்கள் சுகாதாரமற்ற நீரினைப் பருகி நோய்வாய்ப்பட்டு வருகின்றனர்.
மேலும் உலகத்தில் விநியோகிக்கப்படும் 44 சதவீதம்
வீட்டுநீரானது குடிப்பதற்கு உகந்தது அல்ல என்று 2021ல் ஐநாவின் ஒரு ஆய்வு கூறுகிறது.
இவ்வளவும் தண்ணீரை
மட்டுமே மையப்படுத்தி உள்ள ஆய்வுகள் ஆகும்.
ஆகவே மனித
வாழ்வுக்கு இன்றியமையாத ஒன்றான தண்ணீரை எவ்வித சிரமமும் இன்றி நமக்கு வழங்கி
வருகிற அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டாமா?
فَلَوْلَا
تَشْكُرُوْنَ
மேற்கூறிய சூரா
வாகிஆவின் 60
ம் ஆயத்தில் அல்லாஹ்வே கேட்கின்றான்:- "நீங்கள் நன்றி
செலுத்த வேண்டாமா?"
دخل ابن
السماك يوماً، على أمير المؤمنين هارون الرشيد، فوافق أن وجده يرفع الماء إلى فمه
ليشرب فقال: ناشدتك الله يا أمير المؤمنين أن تنتظر به قليلاً. فلما وضع الماء
قال له: أستحلفك بالله تعالى، لو أنك مـُنعت هذه الشربة من الماء، فبكم كنت
تشتريها؟ قال: بنصف ملكي، قال: اشرب هنأك الله، فلما شرب قال: أستحلفك
بالله تعالى، لو أنك منعت خروجها من جوفك بعد هذا، فبكم كنت تشتريها؟ قال:
بملكي كله
فقال
يا أمير المؤمنين
إن ملكا تربو عليه شربة ماء، وتفضله بولة واحدة، لخليق ألا يـُنافس فيه، فبكى
هارون الرشيد، حتى ابتلت لحيته.
இப்னு ஸிமாக்
ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அமீருல் முஃமினீன் ஹாரூன் ரஷீத் பாதுஷா ரஹிமஹுல்லாஹு அலைஹி
அவர்களைச் சந்திக்க வருகை தந்தார்கள்.
அப்போது அமீருல்
முஃமினீன் ஹாரூன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தண்ணீர் பருகுவதற்காக தங்களின் வாயருகே
தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டு சென்று ஒரு மிடரு குடித்தார்கள்.
குடித்து
முடிக்கும் வரை காத்திருந்த இப்னு ஸிமாக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “அமீருல் முஃமினீன் அவர்களே! அல்லாஹ்வை முன்னிருத்தி உங்களிடம் கேட்கிறேன். “ நீங்கள் குடிக்கும் இந்த ஒரு மிடரு நீர் உங்களுக்கு கிடைக்காமல் போனால் என்ன
விலை கொடுத்து இந்த நீரை நீங்கள் வாங்குவீர்கள்?” என்று கேட்டார்கள்.
அதற்கு, ஹாரூன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “என் அரசாட்சியின் பாதி
இடங்களை விலையாகக் கொடுத்து இந்த ஒரு மிடரு நீரை வாங்குவேன்” என்று பதில் கூறினார்கள்.
அல்லாஹ்
உங்களுக்கு அன்பளிப்பாய் தந்திருக்கும் இந்த நீரை பருகுவீராக! என்று இப்னு ஸிமாக்
ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்.
மீண்டும் ஒரு
மிடரை அமீருல் முஃமினீன் ஹாரூன் ரஹிமஹுல்லாஹ் குடித்து முடித்ததும் “அமீருல் முஃமினீன் அவர்களே! அல்லாஹ்வை முன்னிருத்தி உங்களிடம் கேட்கிறேன். “ நீங்கள் குடித்த இந்த ஒரு மிடரு நீர் உங்களின் வயிற்றுக்குள் சென்று, சிறுநீராக வராமல் தடைபட்டு போனால் என்ன விலை கொடுத்து சிறுநீரை நீங்கள்
வெளியேற்றுவீர்கள்?”
என்று கேட்டார்கள்.
அதற்கு, ஹாரூன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “என் முழு அரசாட்சியையும்
விலையாகக் கொடுத்து இந்த சிறுநீரை வெளியேற்றுவேன்” என்று பதில் கூறினார்கள்.
இது கேட்ட இப்னு
ஸிமாக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “அமீருல் முஃமினீன் அவர்களே!
பார்த்தீர்களா?
உங்கள் அரசாட்சி என்பது ஒரு மிடர் குடிநீருக்கும், ஒரு முறை கழிக்கிற சிறுநீருக்கும் கூட பொறுமதியாக இல்லை. ஆனால், நீங்கள் பொறுமதி பெறாத இந்த ஆட்சியதிகாரத்திலேயே அனுதினமும் மூழ்கிப்போய்
கிடக்கின்றீர்கள்”
என்றார்களாம்.
அது கேட்ட, அமீருல் முஃமினீன் ஹாரூன் ரஷீத் பாதுஷா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் தாடி
நனையும் அளவுக்கு அழுதார்களாம். ( நூல்: வஃப்யாத்தில் அஃயான், ஸியரு அஃலாமின் நுபலா )
நன்றி கெட்ட
நடத்தையை விட்டொழித்து நன்றியுணர்வுடன் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன்
நம் அனைவருக்கும் அருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!
வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment