Tuesday, 11 March 2025

வழிகாட்டும் வான்மறை - தராவீஹ் சிந்தனை - 12. வரலாற்று சிறப்பு வாய்ந்த நான்கு மஸ்ஜித்கள்!

 

வழிகாட்டும் வான்மறை - தராவீஹ் சிந்தனை - 12.

வரலாற்று சிறப்பு வாய்ந்த நான்கு மஸ்ஜித்கள்!


பதினொன்றாம் நோன்பை நிறைவு செய்து, 12 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு அடுத்த நோன்பு நோற்பதற்கான ஆயத்தப்பணிகளில் நாம் ஈடுபட்டு இருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் அல் இஸ்ராஃ, அத்தியாயம் நிறைவு செய்யப்பட்டு, அல் கஹ்ஃப்  அத்தியாயத்தின் பெரும் பகுதி ஓதப்பட்டிருக்கின்றது.

இரண்டு அத்தியாயங்களிலும் பல இடங்களில் மனித குலத்திற்கு தேவையான அற்புதமான வழிகாட்டல்கள், இம்மை, மறுமை சார்ந்த பல்வேறு கட்டளைகள் என அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பேசுவான்.

அல் இஸ்ரா சூராவின் முதல் வசனத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் விண்ணேற்றப் பயணம் குறித்த நிகழ்வை விவரிக்கும் போது மஸ்ஜிதுல் ஹராம் குறித்தும் மஸ்ஜிதுல் அக்ஸா பைத்துல் முகத்தஸ் குறித்தும் இந்த உம்மத்துக்கு நினைவூட்டுகின்றான்.

سُبْحٰنَ الَّذِىْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَـرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَا‌ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏

தன்னுடைய அடியாரை ஓரிரவில் (கஃபாவாகிய) மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவுப் பயணம் செய்வித்த ஒருவன் (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; (மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய) அது எத்தகையதென்றால், அதனைச் சுற்றியுள்ள பகுதியை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு நாம் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். ( அல்குர்ஆன்: 17: 1 )

இந்த பூமியில் இறைத் தூதர்களால் கட்டப்பட்ட மஸ்ஜித்கள் நான்கு  உள்ளன.

1. மஸ்ஜிதுல் ஹராம்.

2. மஸ்ஜிதுன் நபவி.

3. பைத்துல் முகத்தஸ்.

4. மஸ்ஜிதுல் குபா

இவற்றில் மஸ்ஜிதுன் நபவி, மஸ்ஜிதுல் குபா இந்த இரண்டு மஸ்ஜித்களும்  நபி صلى الله عليه وسلم  அவர்களால் கட்டப்பட்டன. 

அந்த வகையில் இந்த நான்கு மஸ்ஜித்களும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மஸ்ஜித்களாக இடம் பெறுகின்றது.

மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மஸ்ஜித் அந் நபவீ மற்றும் மஸ்ஜித் அல் அக்ஸா ஆகியவற்றில் தொழுவதன் சிறப்பு...

حَدَّثنا إبراهيم بن حُمَيد، قَال: حَدَّثنا مُحَمد بن يزيد بن شداد، قَال: حَدَّثنا سَعِيد بن سالم القداح، قَال: حَدَّثنا سَعِيد بْنُ بَشِيرٍ عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُبَيد اللَّهِ، عَن أُمِّ الدَّرْدَاءِ، عَن أَبِي الدَّرْدَاءِ، رَضِي اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُول اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم: فَضْلُ الصَّلاةِ فِي المسجد الحرام على غيره مِئَة أَلْفِ صَلاةٍ وَفِي مَسْجِدِي أَلْفُ صَلاةٍ وَفِي مسجد بيت المقدس خمسمِئَة صَلاةٍ. مسند البزار = البحر الزخار (10/ 77)

وَرُوِّينَا فِي حَدِيثِ أَبِي الدَّرْدَاءِ وَجَابِرٍ مَرْفُوعًا : فَضْلُ الصَّلاَةِ فِي الْمَسْجِدِ الْحَرَامِ عَلَى غَيْرِهِ مِئَةُ أَلْفِ صَلاَةٍ ، وَفِي مَسْجِدِي هَذَا أَلْفُ صَلاَةٍ وَفِي مَسْجِدِ بَيْتِ الْمَقْدِسِ خَمْسُمِئَةِ صَلاَةٍ.

السنن الصغير للبيهقي {ط العلمية} (1/ 456)

மற்ற பள்ளிகளிலும் தொழும் நன்மையை விட) மஸ்­ஜிதுல் ஹராமில் தொழு­வது ஒரு இலட்சம் மடங்கு சிறந்தது. எனது பள்­ளியில் (மஸ்­ஜி­துன்ந­பவியில்) தொழு­வது 1000 மடங்­காகும். பைதுல் மக்­திஸில் தொழு­வது 500 மடங்கு சிறந்ததுஎன்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்( ரலி) நூல்: ஸகீர் பைஹகீ)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ رَبَاحٍ، وَعُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صَلاَةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ، إِلَّا المَسْجِدَ الحَرَامَ»

صحيح البخاري (2/ 60)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : (புகாரி: 1190) .

மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மஸ்ஜித் அந் நபவீ மற்றும் மஸ்ஜித் அல் அக்ஸா ஆகியவற்றை நோக்கி பயணம் செய்வதன் சிறப்பு....

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ ‏ ‏أَنَّ ‏ ‏عِمْرَانَ بْنَ أَبِي أَنَسٍ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏سَلْمَانَ الْأَغَرَّ ‏ ‏حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يُخْبِرُ: ‏ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّمَا يُسَافَرُ إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ ‏ ‏مَسْجِدِ الْكَعْبَةِ ‏ ‏وَمَسْجِدِي ‏ ‏وَمَسْجِدِ إِيلِيَاءَ

 

கஅபா (அமைந்துள்ள) பள்ளிவாசல், எனது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல், (ஜெரூஸலத்திலுள்ள) ஈலியா (அல்அக்ஸா) பள்ளிவாசல் ஆகிய மூன்று பள்ளிவாசல்களுக்கு மட்டுமே (அதிக நன்மை நாடி) பயணம் மேற்கொள்ளப்ப(ட வேண்)டும்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) ( நூல்: புகாரி )

மஸ்ஜிதுல் ஹராமின் சிறப்பு....  

பூமியில் உருவான முதல் இறை இல்லம் மஸ்ஜிதுல் ஹராமாகும்.

، عن أبى ذر الغفارى، رضى الله تعالى عنه، قال: قلت يا رسول الله أى مسجد وضع فى الأرض أولا؟ قال: "المسجد الحرام"، قال: قلت ثم أى؟ قال: "المسجد الأقصى"، قلت: كم كان بينهما؟ قال: "أربعون سنة، ثم أينما أدركتك الصلاة فصله، فإن الفضل فيه"،  (رواه البخارى)

அபூதர் அல்ஃகிஃபாரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதலாவது அடித்தளமிப்பட்ட மஸ்ஜித் எது? எனக் கேட்டேன். மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்ஹராம் எனக் கூறினார்கள். அதன் பின் எது? எனக் கேட்டேன். "அல்மஸ்ஜிதுல் அக்ஸா" எனக் கூறினார்கள்.  இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட கால அளவு எ‌வ்வளவு எனக் கேட்டேன். நாற்பது ஆண்டுகள் எனக் கூறி விட்டு, தொழுகையை  நீ எங்கிருந்த போது அடைந்து கொண்டாலும் அங்கு தொழுது கொள் எனக் கூறினார்கள். (புகாரி)

1. மஸ்ஜித் அல் ஹரமில் கஅபா

عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «تُفْتَحُ أَبْوَابُ السَّمَاءِ وَيُسْتَجَابُ الدُّعَاءُ فِي أَرْبَعَةِ مَوَاطِنَ: عِنْدَ الْتِقَاءِ الصُّفُوفِ، وَعِنْدَ نُزُولِ الْغَيْثِ، وَعِنْدَ إِقَامَةِ الصَّلَاةَ، وَعِنْدَ رُؤْيَةِ الْكَعْبَةِ» رواه البيهقي والطبراني

அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான்கு இடங்களில் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. 1. போரில் இரு அணிகள் நேருக்கு நேர் சந்திக்கும் போது. 2. மழை இறங்கும் போது. 3. தொழுகை தொழுது முடித்ததும். 4. கஅபாவைப் பார்க்கும் போது.

أماكن استجابة الدعاء داخل الحرم المكي، أولها باب الملتزم الذي كان يلتزم به النبي صلى الله عليه وسلم، ويقع ما بين باب الكعبة والحجر الأسود، وثانيها: باب الحطيم ويقع ما بين الحجر الأسود وحجر إسماعيل هذه المنطقة سميت باب الحطيم، لأن الله يحطم الظالمين بدعاء المظلومين، ثالثها: المنطقة الواقعة تحت ميزاب الكعبة أو حجر إسماعيل وسميت ميزاب لأن الله يذيب المعاصي فيها، رابعها: عند باب المستجاب وهذا الباب مغلق تماما ويقع في الجهة المقابلة بالتمام للباب الكعبة الذي يفتح وأطلق عليه بعض العلماء باب المستجار لأن الله يجيب المضطر إذا دعاه، خامسها: الركن اليماني الذي قال عنه النبي أنه يحط الخطايا حطا، سادسها: جبل الصفا وجبل المروة إذا وقف عندهما الشخص ظهره للجبل ووجهه ناحية الكعبة ودعا الله بما يشاء وهو موقن بالإجابة فيستجيب الله له. سابعها: المسعى بين الصفا والمروة.

 

ذكر الحسن البصري (رحمه الله) في رسالته المشهورة إلى أهل مكة أن الدعاء يستجاب في خمسة عشر موضعا: في الطواف - وعند الملتزم - وتحت الميزاب - وفي البيت - وعند زمزم - وعلى الصفا والمروة - وفى المسعى - وخلف المقام - وفي عرفات - وفي المزدلفة - وفي منى وعند الجمرات الثلاث".

2- புனித கபாவின் உள்ளே:

மஸ்ஜித் அல் ஹராமின் மிகச்சிறந்த இடம் கப்பாவிற்குள் உள்ளது. அதன் உள்ளே ஒருவர் செய்யும் துஆ எப்போதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

(இங்கே, சாதாரண பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. உலகத் தலைவர்கள் மட்டுமே கப்பாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.இது வருடத்திற்கு மூன்று முறை சுத்தம் செய்வதற்காக திறக்கப்படும், மன்னர் அதை சுத்தம் செய்கிறார்.)

3- மஸ்ஜிதுல் ஹராமில் ஸஃபா மற்றும் மர்வா:

இந்த இடம் மஸ்ஜித் அல்-ஹராமில் உள்ளது, அங்கு துஆக்கள் ஒருபோதும் நிராகரிக்கப்படுவதில்லை, ஏனெனில் இது நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் தாயார் பீபி ஹாஜரா (அலை) இங்கும் அங்கும் தண்ணீருக்காக (சயீ) ஓடிய புனித இடம். துஆ செய்யும் போது,  எப்போதும் ஏற்றுக்கொள்ளப்படும்.

4- மஸ்ஜித்-அல்-ஹராமில் மீசாப் இ ரஹ்மத்தின் கீழ்:

மீசாப் இ ரெஹ்மத் என்பது காபாவின் உச்சியில், ருக்ன் இ ஷாமி மற்றும் ருக்ன் இ இராக்கியின் நடுவில் அமைந்துள்ள ஒரு தங்கத் துளி ஆகும், அங்கிருந்து மழைநீர் ஹதீமில் விழுகிறது.  மீசாப் இ ரெஹ்மத்திற்குக் கீழே செய்யப்படும் ஒவ்வொரு துஆவும் எப்போதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

5- மஸ்ஜிதுல் ஹராமில் உள்ள ஹஜ்ருல் அஸ்வத் (கருப்புக் கல்):

أخرج الإمام أحمد من حديث ابن عمر أن النبي صلى الله عليه وسلم قال: إن مسح الركن اليماني والركن الأسود يحط الخطايا حطاً. ولم نقف على أن الدعاء عنده مستجاب

ஹஜ்ருல் அஸ்வத் "கருப்புக் கல்" என்றும் அங்கீகரிக்கப்படுகிறது, இது சொர்க்கத்திலிருந்து வந்து நபி இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டது, மஸ்ஜித்-அல்-ஹராமில் உள்ள காபாவின் மூலையில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு செய்யப்படும் துஆ ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

6- மஸ்ஜித்-அல்-ஹராமில் ஹதீம் / ஹிஜ்ர் இஸ்மாயில்:

ஹதீம் என்பது கபாவை ஒட்டியுள்ள வட்டம் போன்ற இடம். ஹதீம் காபாவின் உள் பகுதியாக அங்கீகரிக்கப்படுகிறது. ஹதீமில் இரண்டு ரக்அத் தொழுகைகளை தொழுபவர் கபாவிற்குள் தொழுதவருக்கு சமம். ஹதீம் அல்லது ஹிஜ்ர் இஸ்மாயிலில் தொழுவதன் வெகுமதி புனித கபாவிற்குள் தொழுவதற்கு சமம். ஹிஜ்ர் இஸ்மாயில் அல்லது ஹதீம் என்பது மஸ்ஜித்-அல்-ஹராமில் துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு இடமாகும்.

7- மஸ்ஜித்-அல்-ஹராமில் முல்தஸிம்:

முல்தஸிம் என்பது குற்றத்தை அறிவிக்கும் இடம். இது மஸ்ஜித்-அல்-ஹராமில் உள்ள புனித கப்பாவின் நான்கு பக்கங்களில் ஒன்றாகும்; மக்கள் அங்கு சென்று மன்னிப்பு கேட்கிறார்கள்; அவர்கள் முல்தாஸிமில் தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்கிறார்கள். இது ஒரு பக்கத்தில் ஹஜ்ரு அஸ்வத் மற்றும் மறுபுறம் காபாவின் கதவுடன் அமைந்துள்ள பகுதி. தவாஃப் முடிந்த பிறகு, ஒருவர் இந்த இடத்திற்கு வந்து துஆ செய்ய வேண்டும். அந்த துஆ ஒப்புக் கொள்ளப்படும்.

وقال ابن عباس: إن ما بين الحجر والباب لا يقوم فيه إنسان فيدعو الله بشيء إلا رأى في حاجته

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் "ஹஜர் அல்-அஸ்வத்துக்கும் கஃபாவின் கதவுக்கும் இடையில் செய்யப்படும் எந்தவொரு துஆவும் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான அறிகுறிகள் நிச்சயமாகக் காணப்படும்" என்று கூறுகிறார்கள். 

"ஹஜர் அல்-அஸ்வதுக்கும் கதவுக்கும் இடைப்பட்ட பகுதி முல்தஸம் என்று அழைக்கப்படுகிறது. அல்லாஹ் அங்கு ஒரு மனிதன் எதைக் கேட்டாலும் அதை வழங்குவான், மேலும் அங்கிருந்து அவன் எதிலிருந்து அடைக்கலம் தேடுகிறானோ அதிலிருந்து அவனைக் காப்பாற்றுவான்" என்று முஜாஹித் (ரலி) கூறுகிறார்கள்.

8. மஸ்ஜித்-அல்-ஹராமில் மதாஃப்:

أما في باقي الطواف فهو مخير بين الذكر والدعاء وقراءة القرآن.، قال ابن قدامة في "المغني" (3/187): "ويستحب الدعاء في الطواف، والإكثار من ذكر الله تعالى؛ لأن ذلك مستحب في جميع الأحوال، 

புனித கஅபாவைச் சுற்றி  தவாஃப் செய்யும் பகுதி மதாஃப் ஆகும்.  தவாஃப் செய்யும்போது,  மதாஃப் பகுதியில் இருக்கும் வரை  அனைத்து பிரார்த்தனைகளும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று ஹதீஸில் கூறப்படுகிறது.

9. மஸ்ஜித்-அல்-ஹராமில் ருக்னுல் யமானீ.

أخرج الإمام أحمد من حديث ابن عمر أن النبي صلى الله عليه وسلم قال: إن مسح الركن اليماني والركن الأسود يحط الخطايا حطاً. ولم نقف على أن الدعاء عنده مستجاب

இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ருக்னுல் யமானியில் செய்யப்படும் துஆ ஒப்புக் கொள்ளப்படும். ( நூல்: அஹ்மத் )

وعن أبي هريرة، أن النبي صلى الله عليه وسلم قال: " وكل به سبعون ملكًا - يعني الركن اليماني - فمن قال: اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة {ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار} . قالوا: آمين. رواه ابن ماجة

ருக்னுல் யமானியின் மூலையில் 70 மலக்குகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்விடத்தில் துஆச் செய்பவர்களின் துஆக்களுக்கு ஆமீன் கூறுகின்றனர். (இப்னுமாஜா)

மதீனாவின் சிறப்பு...

عن أنس بن مالك قال : إن رسول الله ﷺ قدم المدينة فنزل في علو المدينة في حي يقال لهم بنو عمرو بن عوف ، فأقام فيهم أربع عشرة ليلة ، ثم إنه أرسل إلى ملإ بني النجار فجاءوا متقلدين بسيوفهم ، قال : فكأني أنظر إلى رسول الله على راحلته وأبو بكر ردفه ، وملأ بني النجار حوله حتى ألقى بفناء أبي أيوب ، قال : فكان رسول الله يصلي حيث أدركته الصلاة ، ويصلي في مرابض الغنم ، ثم إنه أمر بالمسجد ، قال : فأرسل إلى ملإ بني النجار فجاءوا ، فقال : ” يا بني النجار ، ثامنوني بحائطكم هذا ” قالوا : لا والله لا نطلب ثمنه إلا إلى الله ، قال أنس : فكان فيه ما أقول ، كان فيه نخل وقبور المشركين وخرب ، فأمر رسول الله بالنخل فقطع ، وبقبور المشركين فنبشت ، وبالخرب فسويت ، قال : فصفوا النخل قبلة ، وجعلوا عضادتيه حجارة ، قال : فكانوا يرتجزون ورسول الله معهم ، وهم يقولون : اللهم إنه لا خير إلا خير الآخره ، فانصر الأنصار

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனாவின் மேற்புறத்தில் வசித்த வந்த பனூ அம்ரு பின் அவ்ஃபு எனும் கோத்திரத்தினருடன் பதினான்கு நாட்கள் தங்கினார்கள். பின்னர் பனூநஜ்ஜார் கூட்டத்தினரை அழைத்து வருமாறு கூறினார்கள். (தங்கள்) வாள்களைத் தொங்க விட்டவர்களாக அவர்கள் வந்தனர். நபி (ஸல்) அவர்கள் தம் வாகனத்தின் மீது அமர்ந்திருந்ததும் வாகனத்தில் அவர்களுக்குப் பின்னால் அபூபக்ர் (ரலி) அமர்ந்திருந்ததும் அவர்களைச் சுற்றி பனூநஜ்ஜார் கூட்டத்தினர் நின்றதும் இன்றும் என் கண் முன்னே நிழலாடுகிறது. நபி (ஸல்) அவர்களின் ஒட்டகம் அபூ அய்யூப் (ரலி) வீட்டுக்கு முன்னால் உள்ள பகுதியில் அவர்களை இறக்கியது. தொழுகையின் நேரத்தை (எப்பொழுது) எங்கே அடைகிறார்களோ, அங்கே தொழுவது நபி (ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது. ஆடுகள் கட்டும் இடங்களில் கூடத் தொழக் கூடியவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தனர். அவர்கள் பள்ளிவாசல் கட்டும் படி ஏவினார்கள்.

பனூநஜ்ஜார் கூட்டத்தினரை அழைத்து வரச்சொல்லி அவர்களிடம் உங்களின் இந்தத் தோட்டத்தை எனக்கு விலைக்குத் தாருங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டனர். அதற்கு அவர்கள் இதற்கான விலையை அல்லாஹ்விடம் தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றனர். (அவ்விடத்தில்) பள்ளிவாசல் கட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அவ்விடத்தில் இணைவைப்பவர்களின் சமாதிகள் இருந்தன. அங்கு சில உபயோகமற்றப் பொருட்களும் சில பேரீச்ச மரங்களும் இருந்தன. அங்குள்ள கப்ருகளைத் தோண்டி அப்புறப்படுத்துமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். அவ்வாறே அவை தோண்டப்பட்டன. அப்பூமியைச் சமப்படுத்துமாறு கட்டளையிட அதுவும் சமப்படுத்தப்பட்டது. பேரீச்சமரங்களை வெட்டுமாறு கட்டளையிட அவையும் வெட்டப்பட்டன. பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் பேரீச்ச மரங்களை வரிசையாக நட்டனர். அதன் இரண்டு ஓரங்களிலும் கற்களை வைத்தனர். பாடிக்கொண்டே(அங்கிருந்த)பாறைகளை அப்புறப்படுத்தினர். இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மையில்லை! அன்ஸார்களுக்கு, முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பளிப்பாயாக! என்று கூறியவர்களாக நபி (ஸல்) அவர்களும் (சேர்ந்து பாறைகளை அப்புறப்படுத்துபவர்களாக) அவர்களுடன் இருந்தனர்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ زَيْدِ بْنِ رَبَاحٍ وَعُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) ( நூல் : புகாரி )

عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «ما بين بيتي ومنبري روضة من رياض الجنة، ومنبري على حوضي».  

[صحيح] - [متفق عليه

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எனது இல்லத்திற்கும் எனது சொற்பொழிவு மேடைக்கும் இடைப்பட்ட பகுதி சொர்க்கப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். எனது சொற்பொழிவு மேடை, எனது ஹவ்ளுல் கவ்ஸர் தடாகத்தின் மீது அமைந்துள்ளது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( புகாரி )

மஸ்ஜிதுந்நபவிக்குச் செல்பவர்கள்  இந்த இடத்திலும் தொழுது கொள்ளலாம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  குறிப்பிட்ட ஆயிரம் மடங்கு சிறந்தது என்ற அந்தஸ்து மஸ்ஜிதுந்நபவீ முழுமைக்கும் உரியதாகும்.

ஷஃபாஅத்தை சொந்தமாக்கும் மாநபி ஸல் அவர்களின் சந்திப்பு....

மஸ்ஜிதுன் நபவியில் இரு ரக்அத் தொழுது விட்டு பின் நபி (ஸல்), அவர்களின் ரவ்ளாவையும், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), ஆகியோரின் கப்ருகளை தரிசித்து ஸலாம் சொல்ல வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் புனித ரவ்ளாவை தரிசிக்கும் ஒருவர்:

السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ

'அஸ்ஸலாமு அலைக அய்யுஹன் நபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு'.

(பொருள்: நபியே உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் அவனது அருளும் அவனது பரகத்தும் உண்டாவதாக)

 

அபூ பக்கர் (ரலி) கப்றை தரிசிக்கும் போது: அஸ்ஸலாமு அலைக யா அபாபக்ர் (ரலி)'. (பொருள்: அபூ பக்ர் (ரலி) அவர்களே அல்லாஹ்வின் சாந்தி உங்களுக்கு உண்டாவாதாக).

உமர் (ரலி) கப்ரை தரிசிக்கும் போது:அஸ்ஸலாமு அலைக யா உமர் (ரலி).

(பொருள்: உமர் (ரலி) அவர்களே அல்லாஹ்வின் சாந்தி உங்கள் மீது உண்டாவதாக)

رواه البخاري ومسلم من حديث علي ـ رضي الله عنه ـ أن رسول الله صلى الله عليه وسلم قال: المدينة حرم ما بين عير إلى ثور، فمن أحدث فيها حدثا أو آوى محدثا، فعليه لعنة الله والملائكة والناس أجمعين، لا يقبل منه يوم القيامة صرف ولا عدل.

மதீனா இதில் இருந்து இது வரை ஒரு புனித பூமியாகும், அங்குள்ள மரங்கள் வெட்டப்படமாட்டாது, அங்கு மார்க்கத்தில் எந்த நூதனமும் ஏற்படுத்தக் கூடாது, அங்கு யாராவது மார்கத்தில் புதுமையை உண்டாக்கினால் அவனுக்கு அல்லாஹ்வினதும், வானவர்களினதும், முழு மனித சமுதாயத்தினதும் சாபம் இருக்கிறதுஎன நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி); நூல்: புஹாரி. ஹ. எண்: 1736.

حدثنا عبدالله بن محمد: حدثنا وهب بن جرير: حدثنا أبي: سمعت يونس، عن ابن شهابٍ، عن أنسٍ

عن النبي ﷺ قال: اللهم اجعل بالمدينة ضعفي ما جعلتَ بمكة من البركة،

யாஅல்லாஹ் மக்காவுக்கு செய்த அருளை விட இரு மடங்கு மதீனாவுக்க அருள் புரிவாயாகஎன நபிகளார் (ஸல்) அவர்கள் பிரார்தித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி); நூல்: புகாரி. ஹ. எண்: 1752.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ( عَلَى أَنْقَابِ المَدِينَةِ مَلاَئِكَةٌ لاَ يَدْخُلُهَا الطَّاعُونُ ، وَلاَ الدَّجَّالُ ).

தஜ்ஜால் மதீனாவிற்குள் நுழைய முடியாது, அன்றைய நாளில் மதீனாவுக்கு ஏழு வாயில்கள் இருக்கும், ஒவ்வொரு வாயிலிலும் இரு வானவர்கள் இருப்பார்கள்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபீ பக்ரா (ரலி)., நூல் : புகாரி. ஹ. எண்: 1746.)

பைத்துல் முகத்தஸில் தொழுவதன் சிறப்பு.... மற்றும் பைத்துல் முகத்தஸின் சிறப்பு....

பைத்துல் மக்­திஸ் பள்ளிவாசலில் ஒரு தொழுகை தொழுவதின் சிறப்பு பற்றி பலவகையான அறிவிப்புகள் வந்துள்ளன.

عن أبي ذر رضي الله عنه قال : تذاكرنا ونحن عند رسول الله: أيهما أفضل : مسجد رسول الله ﷺ أو مسجد بيت المقدس؟ فقال رسول الله ﷺ : «صلاة في مسجدي هذا أفضل من أربع صلوات فـيـه ، ولنعم المصلى ، ولـيـوشـكـن أن يكون للرجل مثل شطن (هو الحبل) فرسه من الأرض حيث يرى منه بيت المقدس خير له من الدنيا جميعاً ، أو قال : خير من الدنيا وما فيها».

هذا أفضل من أربع صلوات فـيـه، أي : بمائتين وخمسين صلاة

250 மடங்கு சிறந்தது: பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-8230 .

عن أبي الدرادء رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال:) الصلاة في المسجد الحرام تفضل على غيره بمائة ألف صلاة وفي مسجدي ألف صلاة وفي مسجد بيت المقدس خمسمائة صلاة

500 மடங்கு சிறந்தது: பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-4142 .

روي عن عبد الله بن عمر رضي الله عنهما أنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول:) الصلاة في بيت المقدس خير من ألف صلاة فيما حواله إلا في المسجد الحرام ومسجدي هذ

1000 மடங்கு சிறந்தது: பார்க்க: அபூதாவூத்-457 .

وعن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:) صلاة الرجل في بيته بصلاة وصلوته في مسجد القبائل بخمس وعشرين صلاة وصلوته في المسجد الذي يجمع فيه بخمسمائة صلاة وصلوته في المسجد الأقصى بخمسين ألف صلاة وصلوته في المسجد الحرام بمائة ألف صلاة (.

50 ஆயிரம் மடங்கு சிறந்தது: பார்க்க: இப்னு மாஜா-1413 .

عن ابن عباس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:) صلاة في المسجد الحرام بمائة ألف صلاة والصلاة في مسجدي بألف صلاة والصلاة في المسجد الأقصى بعشرين ألف صلاة (.

20 ஆயிரம் மடங்கு சிறந்தது:

والصلاة في المسجد النبوي بألف صلاة ، فتكون الصلاة في المسجد الأقصى بمائتين وخمسين صلاة

இவற்றில் சிலர் 250 மடங்கு சிறந்தது என்ற செய்தியையும், வேறு சிலர் 1000 மடங்கு சிறந்தது என்ற செய்தியையும் சரியானது என்று கூறியுள்ளனர்.

பூமியில் உருவான இரண்டாவது இறை இல்லமே அக்ஸா பள்ளியாகும்.

 

، عن أبى ذر الغفارى، رضى الله تعالى عنه، قال: قلت يا رسول الله أى مسجد وضع فى الأرض أولا؟ قال: "المسجد الحرام"، قال: قلت ثم أى؟ قال: "المسجد الأقصى"، قلت: كم كان بينهما؟ قال: "أربعون سنة، ثم أينما أدركتك الصلاة فصله، فإن الفضل فيه"،  (رواه البخارى)

அபூதர் அல்ஃகிஃபாரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் .அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதலாவது அடித்தளமிப்பட்ட மஸ்ஜித் எது? எனக் கேட்டேன். மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்ஹராம் எனக் கூறினார்கள். அதன் பின் எது? எனக் கேட்டேன். "அல்மஸ்ஜிதுல் அக்ஸா" எனக் கூறினார்கள்.  இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட கால அளவு எ‌வ்வளவு எனக் கேட்டேன். நாற்பது ஆண்டுகள் எனக் கூறி விட்டு, தொழுகையை  நீ எங்கிருந்த போது அடைந்து கொண்டாலும் அங்கு தொழுது கொள் எனக் கூறினார்கள். (புகாரி)

أخرج الإمام أحمد والنسائي وابن ماجه عن عبد الله بن عمرو عن رسول الله صلى الله عليه وسلم قال:  لَما فرغ سليمان بن داود عليهما السلام من بناء بيت المقدس، سأل الله عز وجل ثلاثًا: أن يؤتيه حكمًا يصادف حكمه، وملكًا لا ينبغي لأحد من بعده، وأنه لا يأتي هذا المسجد أحدٌ لا يريد إلا الصلاة فيه إلا خرج من ذنوبه كيوم ولدته أمه"، فقال رسول الله صلى الله عليه وسلم: أما اثنتين فقد أعطيهما، وأرجو أن يكون قد أعطي الثالثة"؛ (صحيح ابن ماجه: 1408).

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:- நபி சுலைமான் (அலை) அவர்கள் பைத்துல் முகத்தஸை கட்டி முடித்த பிறகு மூன்று துஆக்களை கேட்டார்கள். 1. தமக்கு அறிவு ஞானத்தை கேட்டார்கள். 2. தமக்குப் பின்னர் இந்த உலகத்தில் எவருக்கும் வழங்கப்படாத அளவுக்கு ஆட்சி அதிகாரத்தை கேட்டார்கள். 3. எவர் இந்த மஸ்ஜிதிலே தொழ வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டும் வருகை தருவாரோ அவர் தொழுது முடித்து இந்த மஸ்ஜிதில் இருந்து வெளியேறும் போது அவரின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டவராக அவரின் தாய் வயிற்றில் இருந்து வெளியாகும் போது எப்படி தூய்மையாக இருந்தாரோ அது போன்று தூய்மையாக இங்கிருந்து தூய்மையாக வெளியாக வேண்டும். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முந்தைய இரண்டு துஆக்களையும் கபூல் செய்தான். மூன்றாவது துஆவை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கபூல் செய்ய வேண்டும்" என்று நான் அல்லாஹ்விடம் ஆதரவு வைக்கின்றேன்" என்று கூறினார்கள். ( நூல்: இப்னுமாஜா )

عن أبي المهاجر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:) من صلى في بيت المقدس غفرت ذنوبه كلها

அபுல் முஹாஜிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- எவர் பைத்துல் முகத்தஸ்ஸிலே தொழுவாரோ அவரின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

 

சத்தியத்தை நிலை நாட்ட போராடும் மக்கள் வசிக்கும் இடம்....

عن أبي أمامة الباهلي رضي الله عنه أن رسول الله ﷺ قال:“لاتزال طائفة من أمتي ظاهرين على الحق، لعدوهم قاهرين، لا يضرهم من خالفهم، إلا ما أصابهم من لأواء، فهم كالإناء بين الأكلة، حتى يأتيهم أمر الله وهم كذلك، قالوا: يا رسول الله، وأين هم؟ قال: ببيت المقدس، وأكناف بيت المقدس”. رواه الطبري في تهذيب الآثار برقم1158، بإسناد صحيح، ووثق رجاله محققه العلامة محمود شاكر.

அபூ உமாமா அல் பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- 

எனது சமூகத்தில் ஒரு குழுவினர்  மறுமை நாள் தோன்றும் வரையில் போராடிக்கொண்டிருப்பார்கள்; சத்திய மார்க்கத்தைச் சார்ந்து நின்று (மற்றெல்லா கொள்கை, கோட்பாடுகளையும் ) மிகைத்த நிலையில் காணப்படுகின்ற அந்தக் குழுவினருக்கு துரோகம் இழைக்கின்றவர்களினால் அவர்களுக்கு எத்தகைய தீங்கும் ஏற்படப் போவதில்லை." அவர்கள் எங்கே வசிப்பார்கள் என்று நபித்தோழர்கள் கேட்ட போது, திமிஷ்க் மற்றும் பைதுல் மக்திஸின் வாயில் அருகிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் வாசிப்பார்கள்" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்னத் அஹ்மத்/ மஜ்மஉஸ் ஸவாயித் )

முதல் கிப்லா.....

عن البراء بن عازب رضي الله : " أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَوَّلَ مَا قَدِمَ المَدِينَةَ نَزَلَ عَلَى أَجْدَادِهِ ، أَوْ قَالَ أَخْوَالِهِ مِنَ الأَنْصَارِ، وَأَنَّهُ صَلَّى قِبَلَ بَيْتِ المَقْدِسِ سِتَّةَ عَشَرَ شَهْرًا ، أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا ، وَكَانَ يُعْجِبُهُ أَنْ تَكُونَ قِبْلَتُهُ قِبَلَ البَيْتِ ، وَأَنَّهُ صَلَّى أَوَّلَ صَلاَةٍ صَلَّاهَا صَلاَةَ العَصْرِ، وَصَلَّى مَعَهُ قَوْمٌ ، فَخَرَجَ رَجُلٌ مِمَّنْ صَلَّى مَعَهُ ، فَمَرَّ عَلَى أَهْلِ مَسْجِدٍ وَهُمْ رَاكِعُونَ ، فَقَالَ: أَشْهَدُ بِاللَّهِ لَقَدْ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَلَ مَكَّةَ ، فَدَارُوا كَمَا هُمْ قِبَلَ البَيْتِ " رواه البخاري

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபாவை நோக்கித் தொழ வேண்டுமென ஆசைப்பட்டார்கள். அப்போது 'நீர் வானத்தை நோக்கி உம்முடைய முகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருப்பதை அறிவோம்' (திருக்குர்ஆன் 02:144) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே கஅபாவை முன்னோக்கித் தொழ ஆரம்பித்தார்கள். '(யூதர்களின் சில அறிவீனர்கள்) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவைவிட்டுத் திருப்பிவிட்டது எது? என்று கேட்கின்றனர். 'கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியோரை அவன் நேர்வழியில் நடத்துவான்' என்று (நபியே!) கூறும்!' (திருக்குர்ஆன் 02:142) என்ற வசனம் அருளப்பட்டதும் ஒருவர் நபி(ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டு வெளியே வந்து அன்ஸாரிக் கூட்டத்தாரிடம் சென்றார். அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி அஸர் தொழுது கொண்டிருந்தபோது, 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தொழுதேன். அவர்கள் கஅபாவை முன்னோக்கித் தொழுதார்கள் என்று நான் சாட்சி சொல்கிறேன்' என்று அவர் அவர்களிடம் கூறினார். உடனே தொழுது கொண்டிருந்தவர்கள் கஅபாவை முன்னோக்கித் திரும்பினார்கள்" என பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். ( நூல்: புகாரி )

அக்ஸாவை கட்டியது யார்? எப்போது?

 "إن أول من أسس المسجد الأقصى آدم عليه السلام، وقيل الملائكة، وقيل سام بن نوح عليه السلام، وقيل يعقوب عليه السلام"، وقال كذلك: "وقد وجدت ما يشهد ويؤيد قول من قال: إن آدم عليه السلام هو الذى أسس كلا المسجدين.   (أورد ابن حجر فى الفتح كتاب أحاديث الأنبياء)

புகாரியின் பிரசித்திபெற்ற விரிவுரை நூலான ஃபத்ஹுல் பாரியில் நபிமார்கள் தொடர்பான அத்தியாயத்தில் இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி (ரஹ்) அவர்கள் அக்ஸா பள்ளியைக் கட்டியது பற்றிய விளக்கத்தில்:  அக்ஸா பள்ளிக்கு முதலில் அடித்தளமிட்டவர் ஆதம் நபியே  எனக் கூறிய பின்,  இரண்டாவது கருத்தாக வானவர்கள், மூன்றாவது கருத்தாக நூஹ் நபியின் மகன் ஸாம், நான்காவது கருத்தாக யாகூப் (அலை)  என உறுதியற்ற சொற்பிரயோகத்தின் மூலம் இமாம் அவர்கள் விளக்கி இருப்பதன் மூலம் ஆதம் (அலை) அவர்கள் கஃபாவிற்கு அடித்தளம் இட்டு நாற்பது ஆண்டுகள் கழித்து அக்ஸாவிற்கு முதலில் அடித்தளம் இட்டார்கள் என்ற முடிவிற்கு வரலாம் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

தற்போதைய அமைப்பில் இருக்கின்ற அக்ஸாவை  உமைய்யா ஆட்சியாளரான அப்துல் மலிக்  பின் மர்வான் அவர்கள்  ஹிஜ்ரி  73 ம் ஆண்டு கட்டியதாக வாகிதீ, அல் கலபீ, யாகூபி , அத்தபரி, இப்னு ருஷ்த் போன்ற இஸ்லாமிய வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பைத்துல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்பட்டது எப்போது? யாரால்?

முதல் வெற்றி நபி யூஷஃ இப்னு நூன் (அலை) அவர்கள்....

عن أبي هريرة عن رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال: (غزا نبي من الأنبياء) الحديث أخرجه مسلم وفية قال: (فغزا فأدنى للقرية  حين صلاة العصر أو قريبا من ذلك فقال للشمس أنت مأمورة وأنا مأمور اللهم أحبسها  على شيئا فحبست عليه حتى فتح الله عليه

அபூ ஹுரரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தியில் யூஷஃ இப்னு நூன் பைத்துல் முக்கதஸை கைப்பற்ற சென்ற போது அல்லாஹ் அவருக்காக சூரியனை (மறையாது) பிடித்துக் கொண்டான்; இது இவரைத் தவிர வேறு எந்த மனிதனுக்காகவும் மறையாது பிடிக்கப்படாது. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )

 

மறுமை நாளுக்கு முன்னால் நிகழவிருக்கும் ஆறு முக்கிய நிகழ்வுகள்  என்ற ஒரு  ஹதீஸின் தொடரில் فتح بيت المقدس பைத்துல் மக்திஸ்) வெற்றி கொள்ளப்படுவதும் ஒன்றாகும்" என நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியானது தமது காலம் கூட அதற்கான பலத்தை எட்டவில்லை, தமது தோழர்களின் காலம் அதை எட்டும் என்ற பொருளில்தான் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

عن عوف بن مالك قال: أتيت النبي صلى الله عليه وسلم في غزوة تبوك وهو في قبة من أدَم فقال: "اعدد ستا بين يدي الساعة، موتي، ثم فتح بيت المقدس، ثم موتانٌ يأخذ فيكم كقُعَاص الغنم، ثم استفاضة المال حتى يعطى الرجل مائة دينار فيظل ساخطا، ثم فتنة لا يبقى بيت من العرب إلا دخلته، ثم هدنة تكون بينكم وبين بني الأصفر، فيغدِرون فيأتونكم تحت ثمانين غاية، تحت كل غاية اثنا عشر ألفا

தபூக் போரின் போது நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஒரு தோல் கூடாரத்தில் இருந்தார்கள். அப்போது மறுமை ஏற்படுவதற்கு முன்னர் ஆறு (முக்கிய) நிகழ்வுகள் ஏற்படும். அவற்றை எண்ணிக்கொள் என்று கூறிவிட்டு,

எனது மரணம், பைதுல் முகத்தஸ் வெற்றி எனக் கூறினார்கள்.அறிவிப்பவர்: அவ்ப் இப்னு மாலிக் (ரலி),  ( நூல்: புகாரி )

இறைத் தூதரின் காலத்தில் முன்னறிவிப்பு செய்யப்பட்டு இரண்டாம் கலீஃபா  உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் ஹிஜ்ரி 16ம் ஆண்டு (கி.பி. 636) அந்த முன்னறிவிப்பு நடந்தேறியது. 

பைத்துல் மக்திஸின் வெற்றியை உறுதி செய்வதில் பிரதான தளபதியாக அம்று பின் ஆஸ் (ரழி) அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டாலும் தனது போர் யுக்திகளால் ஷாம் தேசத்தையே சுருட்டிய மாவீரரான "இந்த உம்மத்தின் நம்பிக்கை நட்சத்திரம்" என்ற சிறப்பு பெயருக்குரிய அபூ உபைதா ஆமிர் இப்னு அல் ஜர்ராஹ்  (ரழி) அவர்களின் தலைமையில் காலித் பின் வலீத், யஸீத் பின் அபீசுஃப்யான், ஷுரஹ்பீல் பின் ஹஸனா போன்ற முக்கிய படைத் தளபதிகளின் பங்காற்றுதலோடு 35.000.  எண்ணிக்கையிலான முஸ்லிம் படை வீரர்களோடு சென்று  அபூ உபைதா (ரழி) அவர்கள் குத்ஸைக் கைப்பற்றினார்கள் என்ற வரலாற்றுக் குறிப்பும் பதிவு  செய்யப்பட்டுள்ளது. இதை இமாம் இப்னு கஸீர் ரஹி அவர்கள்   தமது அல்பிதாயா வன் நிஹாயாவில் குறிப்பிடுவதை பார்க்கின்றோம்.

وقد ظلت إسلامية عربية منذ العهدة العمرية الآنفة الذكر سنة (15هـ-  636م) حتى سنة (1387هـ - 1967م) باستثناء فترة الحروب الصليبية (1099م - 1187م)

இந்த வெற்றியைத் தக்கவைக்க முடியாமல்  நான்கு நூற்றாண்டுகளாக இஸ்லாமிய ஆட்சியை சீரழித்த ஃபாதிமிய்யா என்ற ஷீஆ குழுக்களின் ஆட்சி காலத்தில்  பிரஞ்சு, மற்றும் தாத்தாதாரிய சிலுவை வணங்கிகளிடம் எழுபதாயிரம் முஸ்லிம்களின் உயிர்த்தியாகத்தோடு பைத்துல் முகத்தஸ் 1099 -ல் பறிகொடுக்கப்பட்டு  88 ஆண்டுகள் சிலுவைப் போராளிகளின் ஆதிக்கத்தில் இருந்த குத்ஸை மாவீரர் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபீ (ரஹி) அவர்கள் ஷீஆக் கயவர்களை ஒழித்துக்  கட்டிய பின்னால் கி.பி. 1187ல் பாலஸ்தீனம் உட்பட பைத்துல் முகத்தஸை மீண்டும் கைப்பற்றினார்கள். 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மீண்டும் பைத்துல் முகத்தஸை முஸ்லிம் சமூகத்தின் வசம் தந்தருள்வானாக!

மஸ்ஜிதுல் குபாவின் சிறப்பு...

ஹிஜ்ரா (ஹிஜ்ரா) க்குப் பிறகு குபா கிராமத்திற்கு வந்த நபி (ஸல்) அவர்கள் குல்தூம் பின் ஹத்ம் (رضي الله عنه) அவர்களின் வீட்டில் பல நாட்கள் தங்கி, அவரது நிலத்தில் மஸ்ஜித் குபாவின் அடித்தளத்தை அமைத்தனர். நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ராவுக்கு முன்பு, முஸ்லிம்கள் சில சமயங்களில் வெள்ளிக்கிழமை தொழுகையை அருகிலேயே இருந்த  ஸஅத்இப்னு கைஸமா (رضي الله عنه) அவர்களின் வீட்டில் தொழுது வந்தனர். இந்த வீட்டின் இருப்பிடம் மஸ்ஜித் குபாவின் நவீன விரிவாக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது, ஆனால் குல்தூம் பின் ஹத்ம் (رضي الله عنه) அவர்களின் வீட்டின் இருப்பிடம் மஸ்ஜித் குபாவின் தென்மேற்கில் சில கற்பாறைகளால் குறிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகளுக்காக நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுடன் கற்கள், பாறைகள் மற்றும் மணலைத் தானே சுமந்து சென்றனர். 

عن الشموس- بفتح الشين المعجمة- بنت النعمان رضي الله عنها قالت : «نظرت إلى رسول الله صلى الله عليه وسلم حين قدم ونزل وأسس هذا المسجد : مسجد قباء ، فرأيته يأخذ الحجر أو الصخرة حتى يهصره الحجر ، وأنظر إلى بياض التراب على بطنه أو سرته فيأتي الرجل من أصحابه ويقول : يا رسول الله بأبي أنت وأمي أعطني أكفك ، فيقول : «لا خذ مثله» ، حتى أسسه 

அல்-ஷிமூஸ் பின்த் அல்-நுஃமான் கூறியதாக அல்-தபரானி மேற்கோள் காட்டினார்கள், "இந்த மசூதியைக் கட்டும்போது நபி (ஸல்) அவர்களை நான் பார்த்தேன். அவர் தனது முதுகில் கற்களையும் பாறைகளையும் சுமந்து செல்வார், அது வளைந்து போகும் வரை. அவரது உடையிலும் வயிற்றிலும் தூசி படிந்திருப்பதையும் நான் கண்டேன். ஆனால் அவரது தோழர்களில் ஒருவர் தனது சுமையை எடுக்க வரும்போது, அவர் வேண்டாம் என்று கூறிவிட்டு, தோழரைச் சென்று அதே போன்ற சுமையைச் சுமக்கச் சொல்வார்."

مسجد قباء أسس على التقوى، ، فلما نزل قوله تعالى: لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين [سورة التوبة: 108

மஸ்ஜித் குபாவின் சிறப்பு சூரா தௌபாவில் உள்ள பின்வரும் குர்ஆன் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது:  "...முதல் நாளிலிருந்தே பக்தியின் மீது நிறுவப்பட்ட ஒரு பள்ளிவாசல் நிச்சயமாக நீங்கள் அதில் நிற்பதற்கு மிகவும் தகுதியானது..." [9:108]

قال رسول الله صلّى الله عليه وسلّم:(من تطَهَّرَ في بيتِهِ، ثمَّ أتى مسجدَ قباءٍ، فصلَّى فيهِ صلاةً، كانَ لَهُ كأجرِ عمرةٍ

எவர் தனது வீட்டில் இருந்து வுழூச் செய்து சென்று இம்மஸ்ஜிதில் இரண்டு ரக்அத் தொழுகிறாரோ அல்லாஹ் அவருக்கு ஒரு உம்ராவை நிறைவேற்றிய கூலியை வழங்குகிறான்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

عن سعد بن أبي وقّاص رضي الله عنه، أنّ رسول الله -صلّى الله عليه وسلّم- قال:(لأَن أُصلِّيَ في مسجِدِ قُباءَ رَكْعتينِ أحبُّ إليَّ من أن آتيَ بيتَ المقدسِ مرَّتينِ، 

மஸ்ஜித் குபாவில் இரண்டு ரக்அத் தொழுவது அவர் இரண்டு முறை பைத்துல் முகத்தஸிற்கு சென்று வருவதை விட எனக்கு மிக விருப்பமானதாகும்.

عبد الله بن عمر رضي الله عنه، من أنّ رسول الله صلّى الله عليه وسلّم: (كان يأتي قباءَ، يعني كلَّ سبتٍ، كان يأتيه راكبًا وماشيًا

அப்துல்லாஹ் பின் தீனார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள், “நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் (சில நேரங்களில்) நடந்தும், சில நேரங்களில் (சில நேரங்களில்) சவாரி செய்தும் குபா பள்ளிவாசலுக்குச் செல்வார்கள்

நன்மைகளின் குவியல்களான இந்த நான்கு மஸ்ஜித்களையும் தரிசிக்கும் பாக்கியத்தையும், அங்கு ஸஜ்தா செய்யும் பாக்கியத்தையும் நன் அனைவருக்கும் நம் மனைவி மக்கள் நம் குடும்பத்தார்கள் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

2 comments:

  1. ருக்னுல்யமானி மில் 70மலக்கா?70ஆயிரமா?

    ReplyDelete
    Replies
    1. وعن أبي هريرة، أن النبي صلى الله عليه وسلم قال: " وكل به سبعون ملكًا - يعني الركن اليماني - فمن قال: اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة {ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار} . قالوا: آمين. رواه ابن ماجة

      Delete