வழிகாட்டும்
வான்மறை - தராவீஹ் சிந்தனை - 14.
தொழுகையை நிலை
நாட்டுவோம்!!!
13 –ஆவது நோன்பை
நிறைவு செய்து,
14 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு
அடுத்த நோன்பு நோற்பதற்கான ஆயத்தப்பணிகளில் நாம் ஈடுபட்டு இருக்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும்
கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க,
வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக
நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!
இன்றைய நாளின்
தராவீஹ் தொழுகையில் அல்முஃமினூன் என்ற அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை அல்லாஹ்
சுபஹானஹு தஆலா எத்தகைய ஒரு பாசத்தோடு, ஒரு பிரியத்தோடு, ஒரு மதிப்போடு,
ஒரு கண்ணியத்தோடு நல் அடியார்களை நினைவு கூறுகிறான்!
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
(2) وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ (3) وَالَّذِينَ هُمْ
لِلزَّكَاةِ فَاعِلُونَ (4) وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ (5) إِلَّا
عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ
مَلُومِينَ (6) فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ (7)
وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ (8) وَالَّذِينَ هُمْ
عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ (9) أُولَئِكَ هُمُ الْوَارِثُونَ (10)
الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ
திட்டமாக நம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். அவர்கள் தங்கள் தொழுகையில் மிகுந்த பணிவுடன் உள்ளச்சமுள்ளவர்களாக இருப்பார்கள். இன்னும், அவர்கள் வீணான விஷயங்களை விட்டு விலகி இருப்பார்கள். இன்னும், அவர்கள் ஸகாத்தை சரியாக நிறைவேற்றுவார்கள். இன்னும்,
அவர்கள் தங்கள் மர்மஸ்தானங்களை (விபச்சாரத்தை விட்டும் ஓரின சேர்க்கையை விட்டும்) பாதுகாப்பார்கள். தங்கள் மனைவியர்களிடம்; அல்லது, தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களிடம் தவிர. (ஆகவே, அவர்கள் மற்ற பெண்களிடம் தங்கள் ஆசையை தீர்க்க மாட்டார்கள்.) நிச்சயமாக இ(த்தகைய)வர்கள் பழிக்கப்படுபவர்கள் அல்லர்.
இன்னும், அவர்கள் தங்கள் பொறுப்புகளையும் தங்கள் உடன்படிக்கையையும் கவனித்து நடப்பார்கள். இன்னும், அவர்கள் தங்கள் தொழுகைகளை பேணி பாதுகாப்பார்கள். அவர்கள்தான் (சொர்க்கத்தை) சொந்தமாக்கிக் கொள்பவர்கள்,
‘ஃபிர்தவ்ஸ்’ (என்னும்) சொர்க்கத்தை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்வார்கள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். ( அல்குர்ஆன்: 23 : 1-11)
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் இந்த வசனத்தில் ஒரு முஃமின் இறைநம்பிக்கையாளரிடம் காணப்படும் ஆறு
பண்புகளால் மறுமையில் வெற்றியை வழங்கி அதன் பரிசாக ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை
வழங்குவதாக வாக்களிக்கின்றான்.
முஃமின்களின் வெற்றிக்கான பண்புகளை அல்லாஹ் பட்டியலிட்டு குர்ஆனின் பல இடங்களில் கூறுகின்றான். பிரதான பண்பாகவும், அடிப்படை பண்பாகவும் அல்லாஹ் கூறுவது தொழுகையை தான்.
قَدْ
أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ (2)
“திண்ணமாக, இறை நம்பிக்கையாளர்கள் வெற்றி
பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையவர்கள் எனில் தங்களுடைய தொழுகையில் பயபக்தியை மேற்கொள்கின்றார்கள்”. ( அல்குர்ஆன்: 23:
1,2 )
يَاأَيُّهَا
الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ
الصَّابِرِينَ (153)
“இறைநம்பிக்கையாளர்களே! தொழுகையை கொண்டும், பொறுமையை
கொண்டும் உதவி
தேடுங்கள். திண்ணமாக, அல்லாஹ் பொறுமையாளர்களோடு
இருக்கின்றான்”. ( அல்குர்ஆன்: 2: 153 )
إِنَّ
الْإِنْسَانَ خُلِقَ هَلُوعًا (19) إِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعًا (20) وَإِذَا
مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا (21) إِلَّا الْمُصَلِّينَ (22) الَّذِينَ هُمْ عَلَى
صَلَاتِهِمْ دَائِمُونَ (23)
மனிதன் பதற்றக்காரனாக படைக்கப்பட்டிருக்கின்றான். ஒரு துன்பம் அவனுக்கு வந்தால் பொறுமை இழந்து போகின்றான். அதே நேரம் வசதி வாய்ப்புகள் வந்தால் கஞ்சத்தனம் செய்ய முற்படுகின்றான். ஆயினும், தொழுகையாளிகள் (இத்தகைய தவறான பண்புகளில் இருந்து விடுபட்டிருக்கின்றார்கள்) தவிர. ஏனெனில், அவர்கள் தொழுகையை நிரந்தரமாக நிறைவேற்றுவார்கள்”. ( அல்குர்ஆன்: 70:
19-23 )
அல்லாஹ் அருள்மறையில் நேரடியாக 70 முறை மறைமுகமாக 15 முறை என சுமார் 85 இடங்களில் தொழுகையைப் பற்றி பேசுகின்றான்.
அப்படியான இறைவசனங்களில் இந்த மூன்று வசனங்களும் மிகவும் முக்கியமானதாகும்.
ஒரு வசனம் வெற்றியையும், இன்னொரு வசனம் இறை உதவியையும் குறிப்பிடுகிறது. மூன்றாவது வசனம் சாதாரணமான மனித
பண்புகளையே மாற்றும் வல்லமை தொழுகைக்கு உண்டு என்று கூறுகிறதென்றால் அசாதாரணமான நிலைகளில் இருந்து நம்மை மாற்றாதா என்ன?
நம்முடைய வெற்றியையும், இறை உதவியையும் தீர்மானிக்கிற நம்முடைய நிலைமைகளை மாற்றுகிற ஆற்றல் கொண்ட தொழுகை இன்று நம்மிடையே எப்படி இருக்கிறது?
தொழுகை நேரத்தில்
நம்மைக் காண யாராவது வந்தால் அப்புறம் தொழுது கொள்ளலாம் என்று
தாமதப்படுத்துகின்றோம்.. இல்லை என்றால் தொழாமல் விட்டு விட்டு நேரம் கிடைக்கும்
போது தொழுது கொள்கிறோம். இது சரியான செயல் அல்ல. இந்த நிலையை
நாம் மாற்ற வேண்டும்.
ويوم
جاء وفد نجلاان من اليمن مسلمين، وسألوه أن يبعث معهم من يعلمهم القرآن والسنة
والاسلام، قال لهم رسول الله:
" لأبعثن معكم رجلا أمينا، حق أمين، حق أمين.. حق أمين"..!!
وسمع
الصحابة هذا الثناء من رسول الله صلى الله عليه وسلم، فتمنى كل منهم لو يكون هو
الذي يقع اختيار الرسول عليه، فتصير هذه الشهادة الصادقة من حظه ونصيبه..
يقول
عمر بن الخطاب رضي الله عنه:
، فرحت الى الظهر مهجّرا، فلما صلى بنا رسول الله
صلى الله عليه وسلم الظهر، سلم، ثم نظر عن يمينه، وعن يساره، فجعلت أتطاول له ليراني..
فلم يزل
يلتمس ببصره حتى رأى أبا عبيدة بن الجرّاح، فدعاه، فقال: أخرج معهم، فاقض بينهم
بالحق فيما اختلفوا فيه.. فذهب بها أبا عبيدة؟..!!
ஒரு முறை யமனின்
நஜ்ரான் பகுதியைச் சார்ந்த சில முஸ்லிம்கள் தங்களுக்கு மார்க்கவிஷயங்களை கற்றுத் தரவும்,தங்கள் பகுதியில்
அழைப்புப்பணி செய்யவும்,தங்களுக்கு இமாமத் செய்யவும் ஒருவரை தங்களோடு அனுப்பி வைக்குமாறு மாநபி {ஸல்}
அவர்களிடம் வேண்டி நின்றனர்.
அப்போது நபி {ஸல்} அவர்கள் ”உங்களோடு நம்பிக்கையான ஒருவரை அனுப்பி வைக்கிறேன்” என்றுகூறினார்கள். இந்த நேரத்தில் லுஹர் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. நபிகளார் கூறிய அந்த நம்பிக்கையாளராக நாமாக இருக்க மாட்டோமா? என்று ஒவ்வொரு ஸஹாபியும்
ஆசைப்பட்டனர்.
இகாமத்
சொல்லப்பட்டது, நபி {ஸல்} அவர்கள் தொழ வைத்தார்கள்.
உமர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள். தொழுது முடித்ததும் நபி {ஸல்} அவர்கள் வலது புறம் பார்த்தார்கள் ,பின்பு இடது புறம் பார்த்தார்கள். என் மீது நபியவர்களின் பார்வை பட வேண்டும், என்னை அழைக்க வேண்டும் என்பதற்காக குதிங்காலால் ஊனி எட்டி எட்டிப் பார்த்தேன்.
இறுதியாக நபி {ஸல்} அவர்களின் பார்வை அபூ உபைதா அல் ஜர்ராஹ் {ரலி} அவர்களைச் சென்றடைந்தது. பின்னர் நபி {ஸல்} அவர்கள் அபூ உபைதாவை அழைத்தார்கள், பின்னர் நஜ்ரான் முஸ்லிம்களை அழைத்து இதோ இவரை அழைத்துச்
செல்லுங்கள். “ஒவ்வோர் உம்மத்திற்கும் ஓர் நம்பிக்கை யாளர் உண்டு.என்னுடைய
உம்மத்தின் நம்பிக்கையாளர் அபூ உபைதா அல் ஜர்ராஹ் {ரலி}” என்று கூறினார்கள். ( நூல்:ரிஜாலுன்
ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:241
)
இங்கே யமனின் நஜ்ரான் வாசிகளின் வருகை ஒன்றும் சாதாரணமாக நடந்த விஷயமல்ல.
இந்த வருகைக்கும் முன்பாக யமனின் நஜ்ரானிய கிருஸ்துவ பாதிரிமார்கள்
வருகை தந்து, பெரிய அளவிலான
முஜாதலாவும், முபாஹலாவும் நடை பெற்றிருந்தது. தோல்வியுற்று சென்ற நஜ்ரான் வாசிகளின் ஒரு பிரிவினர் தான் இப்போது இஸ்லாத்தை ஏற்ற நிலையில் வருகை தந்திருந்தனர்.
பெருமானார் {ஸல்} அவர்கள் ஒருவருக்கு ஹிதாயத் கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள்? அவர்களோடு உறவாட, அளவளாவ எவ்வளவு ஆசைப்படுவார்கள்?
ஆனால், அதை விட மிகப்பெரிய மகிழ்ச்சி அவர்களுக்கு முன்பாக காத்திருந்தது. ஆம்! அல்லாஹ்விடம் உறவாட, அளவளாவிட தொழுகைக்கான அழைப்பு அப்போது விடப்பட்டது.
பெருமானார் {ஸல்} அவர்களை வருகை
தந்திருந்தவர்களை அங்கேயே ,அப்படியே
விட்டு விட்டு தொழுகைக்கு சென்று விட்டார்கள்.
பள்ளிவாசல் அருகே
குடியிருந்தும்,
பள்ளிவாசல் அருகே கடந்து சென்றும் தொழுகை நேரத்தில் தொழாமல்
இருக்கின்றோம். இந்த செயல் சரியல்ல. இந்த நிலையை மாற்ற வேண்டும்.
عَنْ
أبي المنذرِ أُبَيّ بنِ كعبٍ - رضي اللهُ عنه - قال: كان رَجُلٌ لا أعلمُ رجلًا
أبعدَ مِنَ المسجدِ منه، وكان لا تُخطِئهُ صلاةٌ، فقيل له - أو فقلتُ له -: لو
اشْتريتَ حمارًا تركبه في الظلماءِ وفي الرَّمضاءِ، فقال: ما يَسُرُّني أنَّ منزلي
إلى جَنْبِ المسجدِ، إِنِّي أريدُ أنْ يُكتبَ لي ممشايَ إلى المسْجدِ، ورُجوعِي
إذا رَجَعتُ إِلى أَهْلِي، فقَالَ رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم: «قد جمَعَ
اللهُ لك ذلك كلَّه» رواه مسلم.
உபை இப்னு கஅப்
ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். நான்
அறிந்தவரை அவரது வீட்டைத் தவிர வேறெந்த வீடும் பள்ளியிலிருந்து வெகுதூரத்தில்
இல்லை. அவர் எந்தத் தொழுகைக்கும் இமாம் ஜமாஅத்தை தவறவிட மாட்டார். அவரிடம், ‘நீங்கள் ஒரு கழுதையை வாங்கினால் கடுமையான இருள் மற்றும் கடின வெயிலின்போது
வாகனிக்க உதவியாக இருக்குமே!’ என்று கூறப்பட்டபோது அவர்
கூறினார்: ‘நான் எனது இல்லம் மஸ்ஜிதுக்கு அருகில் இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு
முறையும் மஸ்ஜிதுக்கு வந்து எனது குடும்பத்தாரிடம் திரும்பும்போதும் நான் நடக்கும்
ஒவ்வொரு அடியும் நன்மையாகப் பதிவு செய்யப்பட வேண்டுமென விரும்புகிறேன்’ என்றார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘(உமக்கு நீர் விரும்பும்) அது அனைத்தையும் சேர்த்து அல்லாஹ் அருள்புரிவானாக!’ என்று கூறினார்கள். ( ஸஹீஹ் முஸ்லிம் )
ஜமாஅத் தொழுகையில்
நம்மில் பலர் கவனமற்று இருக்கின்றோம். இது சரியல்ல. மாற்றம் செய்ய முன்வர
வேண்டும்.
அல்லாமா குஷைரீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஒரு செய்தி: “ஒரு நாள் மக்ரிப் தொழுகையின்
நேரம், மஸ்ஜிதுன் நபவீயில் பாங்கொலி சப்தம் கேட்டு சாரை சாரையாய் மக்கள் பள்ளிக்கு
விரைந்து வந்து கொண்டிருந்தார்கள்.
அப்துர் ரஹ்மான்
இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களும் பள்ளிக்குள் வருகை தருகின்றார்கள். அதே நேரத்தில், ஷாமிற்கு வியாபாரப் பொருட்களோடு சென்ற அவரின் வணிகக் கூட்டத்தினரும் அங்கே
வருகை தருகின்றார்கள்.
அவர்களோடு பேசிவிட்டு, அவர்கள் கொண்டு வந்த
லாபத்தைப் பெற்றுக் கொண்டு இருக்கும் போது இகாமத் சொல்லப்படுகின்றது.
அதற்குள் தக்பீர்
தஹ்ரீமா அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களுக்கு தப்பி விடுகின்றது. தொழுகையில் நபி {ஸல்} அவர்கள் வல் அஸ்ர் சூராவை ஓதினார்கள். தொழுகை முடிந்து வெளியே
வந்த அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் தம்முடைய லாபம் அனைத்தையும் தர்மம் செய்து விட்டார்கள்.
தூரத்தில் நின்று
கவனித்துக் கொண்டிருந்த அண்ணலார் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களை அழைத்து காரணம் வினவிய போது,நடந்தவற்றைக் கூறி விட்டு, நீங்கள் தொழுகையில் ”இன்னல் இன்ஸான லஃபீ ஃகுஸ்ர்” என்று ஓதும் போது சிறு லாபத்திற்காக பெரும் நன்மையை (தக்பீர் தஹ்ரீமாவின்) நன்மையை இழந்து விட்டோமே! பெருத்த
நஷ்டமல்லவா?” என்று உணர்ந்தேன்.ஆதலால் தான் அந்த லாபமனைத்தையும் தர்மம் செய்து விட்டேன்
என்று கூறினார்கள்.
இது கேட்ட
நபிகளார் உண்மையில் உம்முடைய தர்மம் சிறந்ததே! என்றாலும் நீர் இழந்த
அந்த தக்பீர் தஹ்ரீமாவின் நன்மையை இதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியாது” என்று கூறினார்கள்.
இதன் பின்னர்
ஜமாஅத்தோடு, அவ்வல் தக்பீரோடு தொழுவதை அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் பிரயாணத்திலும் சரி, ஊரில் இருக்கும் போதும் சரி ஒரு போதும் விட்டதில்லை.
இதற்குப் பின்
முன்பை விட அவர்கள் தன தர்மம் செய்வதை அதிகப் படுத்திக்கொண்டார்கள்.
عَنْ
جَعْفَرِ بنِ أترقان، قَالَ:
بَلَغ َنِي أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بنَ عَوْفٍ أَعْتَقَ
ثَلاَثِيْنَ أَلْفَ بَيْتٍ
எந்த
அளவுக்கென்றால், கடனின் பெயரால் அடமானத்திற்கு வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் முப்பதாயிரம்
வீடுகளை தன் சொந்த பணத்தைக் கொண்டு மீட்டுக் கொடுத்தார்கள். ( நூல்: நுஜ்ஹத்துல்
மஜாலிஸ் )
நம்மில் பலர்
தொழாமலேயே இருக்கின்றார்கள். அவர்கள் மனந்திருந்தி மரணம் வரை தொழக் கூடியவர்களாக
மாற சபதம் ஏற்க வேண்டும்.
مَشْهَدُ
ذَلِكَ الحَدَثِ يُصَوِّرُ لَنَا أَمِيرَ المُؤْمِنِينَ عُمَرَ بْنَ الخَطَّابِ
يَخْرُجُ مِنْ دَارِهِ إِلَى مَسْجِدِ رَسُولِ اللهِ -صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ-، حَتّى إِذَا دَخَلَ المَسْجِدَ جَعَلَ يُسَوِّي الصُّفُوفَ، وَيَقُولُ
"اسْتَوُوا
حَتَّى إِذَا لَم يَرَ فِيهِمْ خَلَلاً تَقَدَّمَ
فَكَبَّرَ لِصَلاَةِ الفَجْرِ، وَالنَّاسُ لاَ يَكَادُ يَعْرِفُ بَعْضُهُمْ
بَعْضًا مِنَ الظَّلاَمِ.
وَبَعْدَ التَّكْبِيرِ وَفِي أَثْنَاءِ قِرَاءَةِ
الفَاتِحَةِ يَنْطَلِقُ مُجْرِمٌ مَجُوسِيٌّ قَدِ اخْتَرَقَ قَلْبَهُ غَيْظٌ
وَحِقْدٌ عَلَى الإِسْلامِ، فَتَحَرَّكَ مِنْ طَرَفِ الصَّفِّ بِسُرْعَةٍ نَحْوَ
الخَلِيفَةِ، وَمَعَهُ خِنْجَرٌ ذَاتُ طَرَفَيْنِ، فَوَسَّطَهَا بَطْنَ
الفَارُوقِ، ثُمَّ أَتْبَعَهَا بِطَعَنَاتٍ عِدَّةٍ.
وَيَسْقُطُ الفَارُوقُ -رَضِيَ اللهُ عَنْهُ- مُضرجًا
بِدِمَائِهِ، وَيَنْقَطِعُ صَوْتُهُ عَنِ النَّاسِ، فَجَعَلَ مَنْ كَانَ فِي
خَلْفِ الصُّفُوفِ أَوْ أَطْرَافِهَا يُسَبِّحُونَ، سُبْحَانَ اللهِ، سُبْحَانَ
اللهِ!!
وَانْطَلَقَ المَجُوسُيُّ أَبُو لُؤْلُؤَةُ يَشُقُّ
الصُّفُوفَ لاَ يَمُرُّ عَلَى أَحَدٍ إِلاَّ طَعَنَهُ بِخِنْجَرِهِ المَسْمُومِ،
حَتَّى طَعَنَ ثَلاثَةَ عَشْرَ رَجُلاً، فَتَقَدَّمَ نَحْوَهُ عَبْدُ الرَّحْمَنِ
بْنُ عَوْفٍ فَطَرَحَ عَلَيْهِ بُرْنُسًا لَهُ، وَاجْتَمَعَ عَلَيْهِ الرِّجَالُ،
فَلَمَّا تَيَقَّنَ المَجُوسُيُّ أَنَّهُ مَأْخُوذٌ لاَ مَحَالَةَ نَحَرَ نَفْسَهُ
بِالسِّكِّينِ ذَاتِهَا.
وَيُحْمَلُ الفَارُوقُ إِلَى بَيْتِهِ وَقَدْ أُغْشِي
عَلَيْهِ، وَجُمُوعُ النَّاسِ تَتَقَاطَرَ إِلَى دَارِهِ، وَقَدْ بَلَغَ بِهِمُ
الخَوْفُ مِنْ مَصِيرِهِ كُلَّ مَبْلَغٍ، وَيَجْتَمِعُ الصَّحَابَةُ عَلَى رَأْسِ
عُمَرَ وَقَدْ أَسْفَرَ الصُّبْحُ.
فَجَعَلُوا يُنَادُونَهُ بِاسْمِهِ وَلَقَبِهِ وَعُمَرُ
لا يَرُدُّ لَهُمْ كَلامًا، فَقَالَ بَعْضُ الصَّحَابَةِ مِمَّنْ يَعْرِفُ حَالَ
عُمَرَ: إِنَّكُمْ لَنْ تَفْزَعُوهُ بِشَيْءٍ مِثْلَ الصَّلاةِ، فَقَالُوا:
"الصَّلاةُ يَا أَمِيرَ المُؤْمِنِينَ، الصَّلاةُ"، فَانْتَبَهَ عُمَرُ
مِنْ غَشْيَتِهِ، وَفَتَحَ عَيْنَهُ، وَقَالَ: "الصَّلاةُ وَاللهِ".
ثُمَّ سَأَلَ ابْنَ عَبَّاسٍ: أَصَلَّى النَّاسُ؟! قَالَ: نَعَمْ، فَقَالَ
عُمَرُ: "لاَ حَظَّ فيِ الإِسْلامِ لِمَنْ تَرَكَ الصَّلاةَ"، ثُمَّ
دَعَا بِالمَاءِ فَتَوَضَّأَ وَصَلَّى وَجُرْحُهُ يَنْزِفُ دَمًا.
துல்ஹஜ் மாதத்தின்
26ம் பிறை மறைந்து பொழுது புலர்ந்துகொண்டிருந்தது என்றும் போல் அன்றும் காலைத்
தொழுகையை கலீஃபா உமர் (ரலியல்லாஹு அன்ஹு) நடத்திகொண்டிருந்த போது அபூ லூலு
என்றழைக்கப்பற்ற பைரோஸ் என்னும் நிஹாவந்தை சேர்ந்த ஒரு மஜூசி முஸ்லிம்களைப் போல்
வேடம் தரித்து தொழுகை அணியில் இருந்தான்.
திடீரென பாய்ந்து
கலீஃபா அவர்களின் உடலில் தனது குறு வாளால் குத்தினான். அடுத்தடுத்து ஆறு முறைகள்
குத்தினான். அடிவயிற்றில் பட்ட ஆழமான தாக்குதல் கலீஃபா அவர்களை அயரச்செய்தது.
சற்று பின் நகர்ந்து தன் பின்னே நின்ற ஹஸ்ரத் அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃப்
(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கரம் பற்றி தொழுகை நடத்துமாறு முன் நகர்த்தி விட்டு
கீழே சாய்ந்தார்கள்.
அணியில் தொழுதுகொண்டிருந்த ஸஹாபாக்கள் திடுக்கிட்டு பைரோஸை
பிடிக்க பாய்ந்தார்கள். பைரோஸ் பிடிபடுவதிலிருந்து தப்பிக்க தன் குறுவாளை சுழற்றிய
படியே ஓடினான். அதன் தாக்குதல் 13 ஸஹாபாக்களின் மேல் பட்டு
அதில் அறுவர் இறந்தனர்.
இறுதியாக ஓர்
ஈராக்கிய வீரர் முரட்டுத் துணியை அவன் முகத்தின் மேலாக வீசி அவனை பிடித்து
விட்டார். இனி தான் தப்பிக்க முடியாதென உணர்ந்த அவன் அந்த குறுவாளாலேயே தன்னையும்
குத்தி தற்கொலை புரிந்துகொண்டான். பின்னர் மயக்க நிலையில் இருந்த கலீஃபா அவர்கள்
வீடு சேர்க்க பட்டார்கள்.
மரணத்தின் மடியில் மூன்று நாட்கள் வரை எல்லா அறபோதங்களையும்
செய்துகொண்டிருந்த கலீஃபா அவர்கள் தொழுகைக்கான அழைப்பொலி கேட்கும்போதெல்லாம்
இரத்தம் வடிந்துகொண்டிருந்த நிலையிலேயே தொழுதுக்கொண்டார்கள். “தொழுகையை விட்டவனுக்கு இஸ்லாத்தில் இடம் இல்லை” என்றார்கள் கலீஃபா.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்
அனைவருக்கும் வாழ்வின் இறுதி காலம் வரை தொழுகையை பேணி, உள்ளச்சத்தோடு தொழக்கூடிய பாக்கியத்தை
தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment