Thursday, 13 March 2025

அல்லாஹ் ஒரு போதும் நம்மைக் கைவிட மாட்டான்!!!

 

அல்லாஹ் ஒரு போதும் நம்மைக் கைவிட மாட்டான்!!!


இந்திய மக்கள் தொகையில் 13.4 சதவீதம் இருப்பதாக சொல்லப்படும் இந்திய முஸ்லிம் சமூகம் கலவரத்தில் 65 சதவீதம் கொல்லப்படுகின்றார்கள் என்கின்றார் தேசிய காவல்துறை அகாடமியின் ஆய்வாளர் வி.என் ராய்.

இந்திய மக்கள் தொகையில் 13.4 சதவீதம் இருப்பதாக சொல்லப்படும் இந்திய முஸ்லிம் சமூகம் சிறைச்சாலைகளில் 21 சதவீதம் அடைபட்டு கிடக்கின்றனர் என்கிறது தேசிய குற்றப்புலணாய்வு புள்ளி விவரம்.

இந்திய மக்கள் தொகையில் 13.4 சதவீதம் இருப்பதாக சொல்லப்படும் இந்திய முஸ்லிம் சமூகத்தின் சொத்துக்கள், உடமைகள், நிறுவனங்கள், கடைகள் மட்டுமே கலவரங்களின் போது பெருத்த சேதாரத்தை சந்திக்கின்றது என்கிறது கலவரங்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட பல்வேறு கமிஷன்களின் ஆய்வறிக்கை.

மொத்தத்தில் முஸ்லிம்கள் என்பதற்காகவே இந்த தாக்குதல்கள், சேதாரங்கள், சிறைச்சாலைகள், உயிர்ப்பலிகள் நிகழ்த்தப்படுகின்றன என்றால் அது மிகையல்ல.

இந்நிலையில், ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

60 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிதாக நடைபெறும் நிகழ்வாக  ஹோலி பண்டிகையும் ரமலானின் ஜும்ஆவும்  இன்று மார்ச் 14 அன்று ஒரே நாளில் நிகழ்கிறது.

இதனைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள ஜாமா மசூதி உள்பட10 மசூதிகளை திரையிட்டு மூட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

இதன்படி ஹோலியன்று சம்பலில் உள்ள ஷாகி ஜமா மசூதி, லடானியா வாலி மசூதி, தானே வாலி மசூதி, ஏக ராத் மசூதி, குருத்வாரா சாலை மசூதி, கோல் மசூதி, கஜூர் வாலி மசூதி, அனார் வாலி மசூதி மற்றும் கோல் துக்கான் வாலி மசூதி ஆகிய பத்து மசூதிகள் திரையிட்டு மூடப்பட்டுள்ளன.

இரு சமூகங்களுக்கிடையே எந்தக் குழப்பமோ பதற்றமோ ஏற்படாமல் இருக்க 'சௌபாய்' எனப்படும் ஹோலி பண்டிகை ஊர்வலம் நடைபெறும் பாதையில் அடையாளம் காணப்பட்டுள்ள பத்து மசூதிகள் திரையிட்டு மூடிவைக்கப்படும். இது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள வழக்கமான ஒன்றுதான்என்றும்  சம்பல் காவல் துறை எஸ்பி ஷ்ரீஷ் சந்திரா கூறியுள்ளார்.

மேலும், இன்று வெள்ளிக்கிழமை தொழுகையின் நேரம் சௌபாய் ஊர்வலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படும் என்றும், இரு சமூகத்தினரிடையே சச்சரவுகள் ஏற்படாமல் இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நேரத்தில் உ.பி யின் முதல்வர் பேசியிருப்பது முஸ்லிம் சமூகத்திடம் மிகவும் வேதனையையும் ஒரு வித அச்சத்தையும்  ஏற்படுத்தி உள்ளது.

ஹோலி பண்டிகை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படுகிறது, ஆனால் ஒவ்வொரு வாரமும் ஜும்ஆ தொழுகை மேற்கொள்ளப்படுகிறது. தொழுகை சமயத்தில் கொண்டாட்ட மனநிலையில், மற்றவர்கள் மீது  வண்ணங்களை பூச வாய்ப்புள்ளதால் முஸ்லீம்கள் கொண்டாட்டம் முடியும் வரை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்" இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு மாநாட்டில்  முதல்வர் ஆதித்யநாத் யோகி பேசியுள்ளார்.

உண்மையில் இது அப்பட்டமான, திட்டமிட்ட "முஸ்லிம் வெறுப்பு" செயல் என்பதில் ஐயமில்லை.

சமீபகாலமாக நமது தேசத்தில் முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரம் பரவலாக காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

வன்முறைக்கு எதிர்வினை வன்முறை என்றால், வன்முறைக்கு தீர்வு வன்முறை தான் என்றால் இங்கே முஸ்லிம்களுக்கு எதிராக அதிகாரத்தின் மூலம் வன்முறை நிகழ்த்தப்படுகின்றது. ஆட்சியின் பெயரால் வன்முறை நிகழ்த்தப்படுகின்றது. சட்டத்தின் பெயரால், நீதியின் பெயரால், ஊடகத்தின் பெயரால் என்று ஒரு நீண்ட பட்டியலைத் தர முடியும்.

கல்லெடுத்தவனை கல்லால் எதிர்க்கிறோம், வாள் எடுத்தவனை வாளால் எதிர்க்கிறோம் என்றால் மற்ற மற்ற வழிகளில் வன்முறையை நிகழ்த்துபவர்களை எப்படி எதிர் கொள்வது?

முஸ்லிம் சமூகத்தின் மௌனம் ஏன்?

தொடர்ந்து இந்த தேசத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. கலவரங்கள் மூலம் முஸ்லிம்களின் உயிர் மற்றும் உடமைகள் நிர்மூலமாக்கப்படுகிறது. புல்டோசர் மூலம் முஸ்லிம் சமூகத்தின் வாழிடம் அழிக்கப்படுகிறது.

இறையில்லங்கள் இடிக்கப்படுகிறது. எனினும் இந்த சமூகம் இந்த நாட்டின் நீதிமன்றங்கள் எப்படியும் முஸ்லிம் சமூகத்திற்கு நீதியைப் பெற்றுத் தந்து விடும் என்று ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

அதற்கும் மேலாக  மௌனத்தை கலைத்து, பழிக்குப்பழி கலவரத்திற்கு கலவரம் வன்முறைக்கு வன்முறை என்று இந்த சமூகம் களம் காண்பதை வல்லோன் அல்லாஹ்வும் வழிகாட்டி அல்லாஹ்வின் தூதரும் விரும்பாததே காரணம்.

மனிதனின் உணர்வுகளுக்கும் மனிதனின் உடமைகளுக்கும் மனிதனின்  மானத்திற்கும், மனிதனின் மரியாதைக்கும் மனிதனின் உயிருக்கும் இஸ்லாம்  வழங்கியிருக்கும் கண்ணியத்தைப் போன்று உலகில் வேறெந்த மதங்களும்,  கொள்கைகளும், இஸங்களும் வழங்கியதில்லை. இனி எப்போதும் வழங்கப் போவதும்  இல்லை. பின்வரும் இந்த ஓரு இறைவசனமே மகத்தான சான்றாகும்.

وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا

எவரொருவர் ஒரு (மனிதனை) ஆன்மாவை வாழ வைக்கின்றாரோ அவர் உலகின் ஒட்டு மொத்த மனித சமூகத்தையும் வாழ வைத்தவர் போன்றவர் ஆவார்”.    ( அல்குர்ஆன்: 5: 32 )

حدثنا الحسن بن يحيى، حدثنا عمرو بن عاصم، حدثنا صالح المري ، عن سليمان التيمي، عن أبي عثمان، عن أبي هريرة، رضي الله عنه؛ أن رسول الله صلى الله عليه وسلم وقف على حمزة بن عبد المطلب، رضي الله عنه، حين استشهد، فنظر إلى منظر لم ينظر أوجع للقلب منه. أو قال: لقلبه [منه] فنظر إليه وقد مُثِّل به فقال رسول الله صلى الله عليه وسلم: "رحمة الله عليك، إن كنت -لما علمتُ-لوصولا للرحم، فعولا للخيرات، والله لولا حزن من بعدك عليك، لسرني أن أتركك حتى يحشرك الله من بطون السباع -أو كلمة نحوها-أما والله على ذلك، لأمثلن بسبعين كمثلتك.

 فلما سمع المسلمون ذلك قالوا: والله لئن ظهرنا عليهم لنمثلن بهم مثلة لم يمثلها أحد من العرب بأحد قط.

فنزل جبريل، عليه السلام، على محمد صلى الله عليه وسلم بهذه السورة  وقرأ: { وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ } إلى آخر الآية، فكفر رسول الله صلى الله عليه وسلم -يعني: عن يمينه-وأمسك عن ذلك  .

உஹத் யுத்தகளம் முஸ்லிம்களுக்கு தோல்வியோடு முடிந்திருந்த தருணம் அது. ஆராத ரணங்களையும், நெஞ்சமெங்கும் வடுக்களையும் தந்திருந்தது.

இஸ்லாமியப் படையில் உயிர் துறந்தவர்களை அடையாளம் கண்டு, எண்ணிக்கையை கணக்கிட்டுக் கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கு அல்லாஹ்வின் சிங்கம் ஹம்ஜா (ரலி) அவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கிடந்த காட்சி பெருமானார் {ஸல்} அவர்களை நிலைகுலைய வைத்தது.

ஹம்ஜா (ரலி) அவர்கள் உடலின் அலங்கோல நிலையைக் கண்டு மனம் வெதும்பி கோபத்தோடு நபி {ஸல்} அவர்கள் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்! உலகில் நீங்கள் வாழும் போது இரத்த உறவுகளை பேணக்கூடியவராகவும், நன்மையான காரியங்களை செய்யக்கூடியவராகவும் வாழ்ந்து வந்தீர்கள்! பெண்கள் கவலை கொள்வார்கள். எனக்குப் பின் இது ஒரு நடைமுறையாக ஆகிவிடும் என்கிற அச்சம் மாத்திரம் எனக்கு ஏற்படாதிருப்பின் காட்டு மிருகங்களில் வயிறுகளில் இருந்தும், பறவையுடைய வயிறுகளில் இருந்தும் அல்லாஹ் தங்களை எழுப்பவேண்டும் என்பதற்காக (உங்களின் உடலை பறவைகளுக்கும், காட்டு விலங்குகளுக்கும் உணவாக)  இந்த இடத்திலேயே விட்டு விடுவேன்.

ஆனால், எல்லாம் வல்ல இறைவன் எனக்கு அவர்கள் மீது வெற்றியளித்தான் எனில் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்: தங்களின் உயிருக்குப் பதிலாக எதிரிகளின் எழுபது பேரை இது போன்று செய்திடுவேன் என்று கூறினார்கள்.

அப்போது, அருகிலிருந்த நபித்தோழர்களும் எங்களுக்கு அல்லாஹ் வெற்றியை நல்கினான் எனில், அரபுலகத்தில் யாரும் செய்யாத அளவுக்கு மிகவும் கொடூரமான முறையில் பழிக்குப் பழியாக நாங்கள் நடந்து கொள்வோம், நிச்சயம் நாங்கள் நடந்து கொள்வோம் என்றனர்.

பின்னர், நபி {ஸல்} அவர்கள் ஷுஹதாக்களுக்கு தொழுவித்து, நல்லடக்கம் செய்து விட்டு சோகமே உருவாக அமர்ந்திருந்தார்கள். அப்போது, அங்கே அல்லாஹ்வின் திருவசனங்களைத் தாங்கி ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வருகை தந்து

وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ () وَاصْبِرْ وَمَا صَبْرُكَ إِلَّا بِاللَّهِ وَلَا وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُ فِي ضَيْقٍ مِمَّا يَمْكُرُونَ () إِنَّ اللَّهَ مَعَ الَّذِينَ اتَّقَوْا وَالَّذِينَ هُمْ مُحْسِنُونَ ()

மேலும், நீங்கள் பழிவாங்கக் கருதினால், உங்கள் மீது எந்த அளவுக்கு அக்கிரமம் புரியப்பட்டதோ அதே அளவுக்குப் பழிவாங்குங்கள்!  எனினும், நீங்கள் பொறுமையாக இருப்பீர்களாயின் திண்ணமாக, இதுவே பொறுமையைக் கடைபிடிப்பவர்களுக்குச் சிறந்ததாகும்.

நபியே! நீர் பொறுமையுடன் உமது பணியை ஆற்றிக் கொண்டிருப்பீராக! மேலும், நீர் பொறுமையாய் இருப்பதென்பது அல்லாஹ்வின் பேருதவியினால் தான் என்பதையும் விளங்கிக் கொள்வீராக! அவர்களின் செயல்கள் குறித்து நீங்கள் வருந்தவும் வேண்டாம். அவர்களின் சூழ்ச்சிகள் குறித்து மனம் குமுறவும் வேண்டாம்.

எவர்கள் இறையச்சம் கொள்கின்றார்களோ, மேலும் நன்னடத்தையை மேற்கொள்கின்றார்களோ அத்தகையவர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் எனும் அந் நஹ்ல் அத்தியாயத்தின் 126 முதல் 128 வரையிலான வசனங்களை ஓதிக்காண்பித்தார்கள்.

இதன் பின்னர் நபி {ஸல்} அவர்கள் சத்தியத்திற்கான பரிகாரத்தைச் செய்து விட்டு தங்களது சத்தியத்தை முறித்துக் கொண்டார்கள். ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், தஃப்ஸீர் குர்துபீ, தஃப்ஸீர் அல் மள்ஹரீ )

ஆகவே தான் பின் நாளில் வஹ்ஷீ அவர்களையும் ஹிந்தா அவர்களையும் நபி {ஸல்} அவர்கள் மன்னித்தார்கள்.

முஸ்லிம் வெறுப்பு ஏன்?

முஸ்லிம் வெறுப்பு எனும் சித்தாந்தம் தோன்றியதன் பிண்ணனியில் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இஸ்லாம் மிக வேகமாக பரவி வரும் மார்க்கம்..

கிறிஸ்தவ மதத்துக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் இருக்கின்றது. ஆனால், தற்போதைய மக்கள் தொகை வளர்ச்சிப்போக்கு தொடர்ந்தால் அந்த நிலை மாறும்.

உலகின் வேகமாக வளரும் மதம் இஸ்லாமே என்கிறது அமெரிக்காவை தளமாகக்கொண்ட பீவ் ஆய்வு நிலைய ஆய்வறிக்கை. மேலும், 2050 -ல் இந்தியாவே முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடாக இருக்கும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

இன்னொரு புறம், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக இஸ்லாம் உள்ளதாக அமெரிக்காவின் சிஎன்என் செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது. 1.6 பில்லியனிலிருந்து 2.76 பில்லியனாக வரும் 2050 க்குள் உலக இஸ்லாமியரின் மக்கள் தொகை அதிகரிக்கும் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஆய்வறிக்கையை வெளியிட்டது. ( நன்றி: 04/04/2015 http://edition.cnn.com/2015/04/02/living/pew-study-religion/ )

முஸ்லிம் சமூகத்தின் அத்துனை நிலைகளையும் குறி வைத்து தாக்குதல் தொடுத்தால் எந்த மதத்தைச் சேர்ந்தவரும் முஸ்லிமாக முன் வர மாட்டார்கள் என்று ஃபாசிஸம் கணக்குப் போட்டு கச்சிதமாக காய் நகர்த்துகிறது.

இதே நிலையைத் தான் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவைகள் மேற்கொண்டு வருகின்றன.

அல்லாஹ் மாபெரும் சூழ்ச்சியாளன்...

மக்காவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்த போது மக்காவின் தலைவர்கள் இஸ்லாம் பரவுவதற்கான எல்லா வழிகளையும் தங்களுடைய அதிகார பலத்தால் அடைத்து நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த போது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வேறொரு வழியைத் திறந்து விட்டான்.

وكان أبو بكر رجلًا بكَّاءً، لا يملك دمعه حين يقرأ القرآن،  وقد خشينا أن يفتن أبناءنا ونساءنا،

அபூபக்கர் (ரலி) அவர்கள் குர்ஆர் வசனங்களை ஓதும் போது கடுமையாக அழுபவர்களாக இருந்தார்கள். தங்களுடைய மனைவிமார்கள் மற்றும் குழந்தைகளை அபூபக்கரின் அழுகை இஸ்லாத்திற்கு மதம் மாறச் செய்துவிடுமோ என்று அபூபக்கர் (ரலி) அவர்களின் அழுகையை கண்ட இணைவைப்பாளர்கள் பயந்தார்கள்.

فأنفذت قريش جوار ابن الدّغنة، وأمَّنوا أبا بكر، وقالوا لابن الدّغنة: مُرْ أبا بكر فليعبد ربه في داره، فليُصلِّ، وليقرأ ما شاء، ولا يُؤذينا بذلك، ولا يستعلن به، فإنا قد خشينا أن يفتن أبناءنا ونساءنا. قال ذلك ابنُ الدّغنة لأبي بكر.

فطفق أبو بكر يعبد ربه في داره، ولا يستعلن بالصلاة ولا القراءة في غير داره، ثم بدا لأبي بكر فابتنى مسجدًا بفناء داره وبرز، فكان يُصلي فيه، ويقرأ القرآن، فيتقَصَّف عليه نساء المشركين وأبناؤهم، يعجبون وينظرون إليه،.

மக்கத்து குரைஷிகள் இப்னு தகினாவிடம் தமது வீட்டில் தமது இறைவனைத் தொழுது வருமாறும் விரும்பியதை ஓதுமாறும் அதனால் எங்களுக்குத் தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்ளுமாறும் அதை பகிரங்கமாகச் செய்யாதிருக்கும் படியும் அபூபக்கருக்கு நீர் கூறுவீராக. ஏனெனில் அவர் எங்களது மனைவி மக்களை குழப்பி (சோதனைக்குள்ளாக்கி) விடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம் என்றனர். இதை இப்னு தகினா அபூபக்கர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார். பிறகு அபூபக்கர் (ரலி) அவர்கள் வீட்டிற்கு வெளியே தொழுது ஓதி பகிரங்கப்படுத்தாமல் தம் வீட்டிற்குள்ளேயே தம் இறைவனை வணங்கலானார்கள். பிறகு அவர்களுக்கு ஏதோ தோன்ற தமது வீட்டிற்கு முன்புறத்திலுள்ள காலியிடத்தில் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டி வெளியே வந்(து தொழு)தார்கள். அந்தப் பள்ளிவாசலில் தொழவும் குர்ஆன் ஓதவும் தொடங்கினார்கள். இணைவைப்பவர்களின் மனைவிமக்கள் திரண்டு வந்து ஆச்சரியத்துடன் அவரை கவனிக்கலானார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் குர்ஆன் ஓதும் போது (மனம் உருகி வெளிப்படும்) தமது கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுபவராக இருந்தார்கள். இணைவைப்பவர்களான குரைஷிப் பிரமுகர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தியது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி 2297

ஃபிர்அவ்னின் ஒடுக்கு முறையைத் தாண்டி முஸ்லிம் ஆனவர்கள்....

ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று தடுத்து வைத்திருந்த இஸ்லாத்தை ஒழித்து விடக் கூட்டியது தான் "சூனிய மாநாடு" நாட்டில் அறியப்பட்ட அத்தனை சூனியக்காரர்களையும் பெரிய மைதானத்தில் ஒன்று கூட்டினான் ஃபிர்அவ்ன்.

முடிவு என்னவானது? இதோ அல்குர்ஆன் அதற்கான பதிலைச் சொல்கிறது..

அல்லாஹ்வின் அற்புதத்தை மூஸா (அலை) வெளிப்படுத்திய போது, அவன் வழங்கிய அற்புதப் படைப்பான அழகிய கண்ணின் துணை கொண்டு பார்த்து விட்டு, அந்த சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் வீழ்ந்து..

فَأُلْقِيَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوا آمَنَّا بِرَبِّ هَارُونَ وَمُوسَى  قَالَ آمَنْتُمْ لَهُ قَبْلَ أَنْ آذَنَ لَكُمْ إِنَّهُ لَكَبِيرُكُمُ الَّذِي عَلَّمَكُمُ السِّحْرَ فَلَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُمْ مِنْ خِلَافٍ وَلَأُصَلِّبَنَّكُمْ فِي جُذُوعِ النَّخْلِ وَلَتَعْلَمُنَّ أَيُّنَا أَشَدُّ عَذَابًا وَأَبْقَى

சூனியக்காரர்கள் அனைவரும் ஸஜ்தாவில் வீழ்ந்தனர். நாங்கள் ஹாரூன் மற்றும் மூஸாவின் இறைவனை ரப்பாக ஏற்றுக் கொண்டோம்என்று உரக்கக் கூறினார்கள்.

அப்போது ஃபிர்அவ்ன் கூறினான்: நான் உங்களுக்கு அனுமதி அளிக்கும் முன் நீங்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? அவர் தான் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்த உங்களின் குரு என்று இப்போது தெரிந்து விட்டது.

இப்போது, நான் உங்களின் மாறுகை, மாறுகால்களைத் துண்டித்து விடுவேன். மேலும், பேரீச்சம் மரத்தின் கம்பங்களில் அறைந்து உங்களை கொல்லப்போகின்றேன், அப்போது தெரியும் யாருடைய வேதனை மிகக்கடுமையானது என்று”.

قَالُوا لَنْ نُؤْثِرَكَ عَلَى مَا جَاءَنَا مِنَ الْبَيِّنَاتِ وَالَّذِي فَطَرَنَا فَاقْضِ مَا أَنْتَ قَاضٍ إِنَّمَا تَقْضِي هَذِهِ الْحَيَاةَ الدُّنْيَا

அதற்கு, முஸ்லிம்களாக மாறியிருந்த சூனியக்காரர்கள் மறுமொழி பகர்ந்தார்கள்: எங்களைப் படைத்த இறைவன் மீது சத்தியமாக! தெளிவான சான்றுகள் எங்கள் கண்முன்னே நடந்த பின்னரும் நாங்கள் சத்தியத்தை விட உனக்கு ஒரு போதும் முன்னுரிமை தரமாட்டோம்.

எனவே, நீ என்ன செய்ய விரும்புகின்றாயோ செய்து கொள். அதிகபட்சம் இவ்வுலக வாழ்வில் மட்டுமே உன்னால் தீர்ப்பு வழங்க முடியும். திண்ணமாக, நாங்கள் எங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொண்டு விட்டோம்”.    ( அல்குர்ஆன்: 20: 59 – 73 )

நாட்கணக்கில் ஏற்பாடு செய்யப்பட மாநாடு, ஆனால், இஸ்லாத்தை ஏற்ற நிகழ்வும், ஏற்றுக் கொண்ட இஸ்லாத்திற்காக உயிரைத் தறந்த
இவையெல்லாம் ஒரே நாளில் நடந்து முடிந்தது.

எனவே, இஸ்லாமிய பரவுதல் தான் முஸ்லிம் வெறுப்பின் முழு முதற்காரணம் என்றால் அது இந்த உலகத்தை, அமெரிக்காவை, ஐரோப்பிய ஒன்றியத்தை, இந்தியாவை ஆட்கொள்வதை ஒரு போதும் தடுக்க முடியாது.

யார் விரும்பினாலும், வெறுத்தாலும்....

يُرِيدُونَ أَنْ يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَنْ يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் ஒளியைத் ( இஸ்லாமிய மார்க்கத்தை ) தம் வாயால் ஊதி அணைத்து விட அவர்கள் விரும்புகின்றார்கள். ஆயினும் அல்லாஹ் தன் ஒளியை நிறைவு செய்யாமல் விடமாட்டான். இறை நிராகரிப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!” ( அல்குர்ஆன்: 9: 32 )

2. ஏற்றத் தாழ்வு நீக்கி சமத்துவம் பேணப்படுவதால்....

ஷஹாதா எனும் கலிமாவை மொழிந்த மாத்திரத்தில் ஒருவர் இனம் கடந்து, நிறம் கடந்து, மொழி மறந்து, தேசம் கடந்து சக சகோதரனாக பார்க்கப்படுவதை கண்டு அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

وَلَا تَطْرُدِ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِىِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ‌ ؕ مَا عَلَيْكَ مِنْ حِسَابِهِمْ مِّنْ شَىْءٍ وَّمَا مِنْ حِسَابِكَ عَلَيْهِمْ مِّنْ شَىْءٍ فَتَطْرُدَهُمْ فَتَكُوْنَ مِنَ الظّٰلِمِيْنَ

(நபியே!) தங்கள் இறைவனுடைய திருப் பொருத்தத்தை நாடி, எவர் காலையிலும் மாலையிலும், அவனை(ப் பிரார்த்தித்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை நீர் விரட்டி விடாதீர்; அவர்களுடைய கேள்வி கணக்குப் பற்றி உம்மீது பொறுப்பில்லை, உம்முடைய கேள்வி கணக்குப் பற்றி அவர்கள் மீதும் யாதொரு பொறுப்புமில்லை - எனவே நீர் அவர்களை விரட்டி விட்டால், நீரும் அநியாயம் செய்பவர்களில் ஒருவராகி விடுவீர். ( அல்குர்ஆன்: 6: 52 )

قال المشركون : ولا نرضى بمجالسة أمثال هؤلاء - يعنون سلمان وصهيبا وبلالا وخبابا - فاطردهم عنك ; وطلبوا أن يكتب لهم بذلك ، فهم النبي صلى الله عليه وسلم بذلك ، ودعا عليا ليكتب ; فقام الفقراء وجلسوا ناحية ; فأنزل الله الآية . ولهذا أشار سعد بقوله في الحديث الصحيح : فوقع في نفس رسول الله صلى الله عليه وسلم ما شاء الله أن يقع

நபி ஸல் அவர்களின் சமூகம் தந்த இணைவைப்பாளர்களில் சிலர் கப்பாப், பிலால், ஸுஹைப், ஸல்மான் ஃபார்ஸி (ரலி - அன்ஹும்) ஆகியோர் அமர்ந்து இருக்கும் இந்த சபையில் அவர்களுடன் அமர்ந்து நாங்கள் உங்கள் இஸ்லாமிய அழைப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. மாறாக, அவர்களை வெளியே அனுப்பி விடுங்கள். நாங்கள் உங்கள் அழைப்பை செவியேற்கிறோம் என்று சொன்ன போது மாநபி ஸல் அவர்களின் எண்ண ஓட்டத்தில் நிகழ வேண்டிய ஒன்று நிகழவே மேற்கூறிய இறைவசனத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இறக்கியருளினான்.

روى مسلم عن سعد بن أبي وقاص قال: كنا مع النبي صلى الله عليه وسلم ستة نفر، فقال المشركون للنبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: اطرد هؤلاء عنك لا يجترءون علينا، قال: وكنت أنا وابن مسعود ورجل من هذيل وبلال ورجلان لست أسميهما، فوقع في نفس رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ما شاء الله أن يقع، فحدث نفسه، فأنزل الله عز وجل" وَلا تَطْرُدِ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَداةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ".

ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:  நான், இப்னு மஸ்வூத்,பிலால், ஹுதைல் கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர், மற்றும் இருவர் (அவ்விருவரின் பெயரை நான் மறந்து விட்டேன்) அண்ணல் நபி {ஸல்} அவர்களுடன் அமர்ந்திருந்தோம்.

அப்போது, “மக்கத்து இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, இதோ இந்த ஏழைகளை உம்மை விட்டும் விரட்டி விடுவீராக! இல்லாவிட்டால் எங்கள் விஷயத்தில் இவர்கள் துணிச்சல் பெற்றுவிடுவார்கள் என்று கூறினார்கள்.

அப்போது நபி {ஸல்} அவர்களின் மனதில் எது ஏற்பட வேண்டுமென அல்லாஹ் நாடினானோ அது ஏற்பட்டு விட்டது. அப்போது, தான் அல்லாஹ் 

“{முஹம்மதே {ஸல்} தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டி விடாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே, அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராக ஆகிவிடுவீர்! எனும் 6-ஆம் அத்தியாயத்தின் 52 –ஆம் இறைவசனத்தை அல்லாஹ் இறக்கியருளினான். ( நூல்: தஃப்ஸீர் அல்குர்துபீ )

உங்கள் அழிவை நாங்கள் விரும்புபவர்கள் அல்லர். மாறாக, எங்கள் மீதான, தூய இஸ்லாத்தின் மீதான உங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வலியுறுத்துகின்றோம்.

ஏனெனில், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எங்களை அல்குர்ஆனின் மூலம் அப்படித்தான் வழி நடத்துகின்றான்.

இறைவன் தன் வேதத்தில் ஒரு ஊராரிடத்தில் மூன்று தூதர்களை ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பியதையும், அவர்களை ஏற்றுக் கொள்ள மக்கள் மறுத்த நிலையில் ஒருவர் கடைக்கோடியிலிருந்து விரைந்து வந்து இறைவனை நம்பிக்கை கொண்டதையும், அவரை அக்கூட்டத்தார் கொலை செய்த காரணத்தால் அவருக்கு இறைவன் வழங்கும் பரிசுகளைப் பற்றியும், அவர் தன் மரணத்திற்குப் பின்னால் தன் சமூகத்தார் மீது கொண்ட அக்கறையின் வெளிப்பாட்டையும், யாஸீன் என்ற அத்தியாயத்தில் படம்பிடித்துக் காட்டுகிறான். 

وَجَاءَ مِنْ أَقْصَى الْمَدِينَةِ رَجُلٌ يَسْعَى قَالَ يَاقَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِينَ

اتَّبِعُوا مَنْ لَا يَسْأَلُكُمْ أَجْرًا وَهُمْ مُهْتَدُونَ

وَمَا لِيَ لَا أَعْبُدُ الَّذِي فَطَرَنِي وَإِلَيْهِ تُرْجَعُونَ

أَأَتَّخِذُ مِنْ دُونِهِ آلِهَةً إِنْ يُرِدْنِ الرَّحْمَنُ بِضُرٍّ لَا تُغْنِ عَنِّي شَفَاعَتُهُمْ شَيْئًا وَلَا يُنْقِذُونِ

إِنِّي إِذًا لَفِي ضَلَالٍ مُبِينٍ

إِنِّي آمَنْتُ بِرَبِّكُمْ فَاسْمَعُونِ

قِيلَ ادْخُلِ الْجَنَّةَ قَالَ يَالَيْتَ قَوْمِي يَعْلَمُونَ

بِمَا غَفَرَ لِي رَبِّي وَجَعَلَنِي مِنَ الْمُكْرَمِينَ

அந்நகரத்தின் கடைக்கோடியிலிருந்து ஒருவர் விரைந்து வந்து என் சமுதாயமே! தூதர்களை பின்பற்றுங்கள்! உங்களிடம் கூலியைக் கேட்காத நேர்வழி பெற்றோரைப் பின்பற்றுங்கள் என்னை படைத்தவனை நான் எப்படி வணங்காதிருக்க முடியும்? அவனிடமே திரும்ப நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள். அவனன்றி வேறு கடவுள்களை ஏற்படுத்திக் கொள்வேனா? அளவற்ற அருளாளன் எனக்கு ஒரு தீங்கை நாடிவிட்டால் அவர்களின் பரிந்துரை எனக்கு எந்தப் பயனையும் அளிக்காது.

அவர்கள் என்னைக் காப்பாற்றவும் மாட்டார்கள். அப்போது நான் பகிரங்கமான வழிகேட்டில் ஆவேன். நான் உங்கள் இறைவனை நம்பி விட்டேன். எனக்கு செவிசாயுங்கள்என்று கூறினார்.

சொர்க்கத்திற்கு செல்என்று (அவரிடம்) கூறப்பட்டது. அதற்கவர், “என் இறைவன் என்னை மன்னித்ததையும் மரியாதைக்குரியோரில் என்னை ஆக்கியதையும் எனது சமுதாயத்தினர் அறிந்து கொள்ளக்கூடாதா?” என்றார்.

( அல்குர்ஆன்: 30: 20 - 28 )

அதே நேரத்தில் எங்களது சமூகத்தின் நிலை இப்படியே தொடர நாங்கள் கண்டு கொண்டிருக்கவும் மாட்டோம்.

எங்களுக்கு யார் இருக்கிறார்கள் இங்கே? காங்கிரஸ் காக்குமா? சமாஜ்வாதி மீட்குமா? கம்யூனிஸ்ட் அரவணைக்குமா? திரினாமுல் காங்கிரஸ் பாதுகாக்குமா? ஆம் ஆத்மி அடைக்கலம் தருமா?

 எங்களுக்கு இங்கே யார் இருக்கின்றார்கள்? எங்களுக்கென்று இருப்பவன் எங்களைப் படைத்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒருவனே! ஆகவே, தான் அவனிடம் உங்களை ஒப்படைக்கின்றோம்.

வன்முறையாளர்களிடம் சிக்கிக் கொண்ட மனிதர்களை அவ்வளவு எளிதாக மாநபி {ஸல்} அவர்கள் கடந்து போய்விட வில்லை. அவர்களுக்காக கவலைபட்டார்கள். அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். அவர்களுக்காக துஆ செய்தார்கள். வன்முறையாளர்களின் தீங்குகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

கப்பாப் இப்னு அல் அரத் (ரலி) யாஸிர் (ரலி), அபாஜன்தல் (ரலி), போன்றோர் வன்முறையாளர்களிடம் சிக்கித் தவித்த போது ஆறுதல் வார்த்தைகளை கூறினார்கள். அவர்களுக்காக துஆ செய்தார்கள் எனும் செய்தியை வரலாற்றில் பார்க்க முடிகின்றது.

أَبِى هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِى صَلاَةِ الفجر شَهْرًا، يَقُولُ فِى قُنُوتِهِ: "اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ، اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِى رَبِيعَةَ... اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ"، ثم يستمر في دعائه فيقول: "اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى قريش، اللَّهُمَّ اجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِىِّ يُوسُفَ".

قَالَ أَبُو هُرَيْرَةَ: وَأَصْبَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ فَلَمْ يَدْعُ لَهُمْ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ

 "وَمَا تَرَاهُمْ قَدْ قَدِمُوا".

صحيح البخاري ومسلم والسنن

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி {ஸல்} அவர்கள் தொழுகையில் ஒரு மாத காலம் ருகூஉவிற்குப் பிறகு குனூத் (எனும் சோதனைக் காலப்பிராத்தனை) ஓதினார்கள். அவர்கள் "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" என்று கூறியதும்  பின்வருமாறு குனூத் ஓதுவார்கள்:

 இறைவா! (மக்காவில் சிக்கிக்கொண்டிருக்கும்) வலீத் பின் அல்வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறைநம்பிக்கையாளர்களில் ஒடுக்கப் பட்டவர்களை நீ காப்பாற்றுவாயாக!

இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! (உன் தூதர்) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் பஞ்ச ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக!

தொடர்ந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: இதன் பின்னர் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு பிரார்த்திப்பதை விட்டுவிட்டதை நான் பார்த்தேன்.

உடனே நான் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த (ஒடுக்கப்பட்ட) மக்களுக்காகப் பிரார்த்திப்பதை விட்டுவிட்டதாகக் கருதுகிறேன்" என்றேன். அப்போது, "(மக்காவில் சிக்கிக்கொண்டிருந்த) அவர்கள் (மதீனாவுக்குத் தப்பி) வந்துவிட்டதை நீங்கள் பார்க்கவில்லையா?" என்று கேட்கப்பட்டது.

இதே போன்று நாம் நமது தேசத்தின் மூலை முடுக்கெல்லாம் பாதிக்கப்படும் நமது சமூகத்திற்காக துஆ செய்வோம்.

நமது நபி (ஸல்) அவர்கள் மிகவும் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்த ஒரு தருணத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொன்ன ஆறுதல் 

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰى

உம்முடைய இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை. ( அல்குர்ஆன்: 93: 3 )

முஹம்மது  (ஸல்) அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து கிடைத்த வஹீயானது இரு முறைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. இதற்கான முக்கியக் காரணமாக திருக்குர்ஆன் விரிவுரை அறிஞர்களும் புத்திஜீவிகளும், “ஆரம்பமாக இறக்கப்பட்ட அத்தியாயங்கள், வசனங்களின் கருத்துகளை ஆழ்ந்து புரிந்துகொண்டு அதற்கேற்ப அழைப்புப்பணியில் ஈடுபட நபிக்கு வாய்ப்பளிப்பதற்கும், வஹீயின் சுமையைத் தாங்கிக்கொண்டு அதைப் பரீட்சயப்படுத்திக்கொள்ள நபிக்கு அவகாசமளிக்கவுமாகும்எனக் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு இரண்டாவது முறையாக வஹீ அறிவிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டபோது நபியைச் சுற்றியிருந்த இறைநிராகரிப்பாளர்களும் இணைவைப்பாளர்களும், “முஹம்மதை அவரது இறைவன் கைவிட்டுவிட்டான் போலும்என ஏளனமாகக் குத்திக்காட்டி நபிகளாரை மனஉளைச்சலுக்கு ஆளாக்கினர். அவர்களின் சீண்டல்கள் எதற்கும் நபிகளார் மனம் தளறவில்லை; எனினும், அதனால் சற்று வேதனையடைந்தார்கள். ஆகவே இறைநிராகரிப்பாளர்களும், இணைவைப்பாளர்களும் குறிப்பிட்டதுபோல் இறைவன் அவரை கைவிடவில்லை என அறிவிக்கவே இந்த அத்தியாயமான அல்ளுஹா இறக்கப்பட்டது.

روى البخاري ومسلم من حديث جندب - رضي الله عنه - قال: اشتكى النبي - صلى الله عليه وسلم - فلم يَقُم ليلةً أو ليلتين أو ثلاثًا، فجاءت امرأة فقالت: يا محمد، إني لأرجو أن يكون شيطانك قد تركك، لم أرَه قربك منذ ليلتين أو ثلاثة، فأنزل الله - عز وجل -: {وَالضُّحَى * وَاللَّيْلِ إِذَا سَجَى * مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى} [الضحى: 1 - 3].

ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் இப்னி சுஃப்யான்(ரழி) கூறினார் ; (ஒருமுறை) நபி () அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது 'ஓர்இரவு' அல்லது 'இரண்டு இரவுகள்' அவர்கள் (இரவுத் தொழுகைக்காகக் கூட) எழவில்லை. அப்போது ஒரு பெண் (அபூலஹபின் மனைவி உம்மு ஜமீல் என்று சில ரிவாயத்துகளில் சொல்லப்படுகிறது), நபி() அவர்களிடம் வந்து, 'முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டுவிட்டதாகவே கருதுகிறேன். (எனவேதான் ஓரிரு இரவுகளாக உம்மை அவன் நெருங்கவில்லை)' என்று கூறினாள். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், 'முற்பகலின் மீது சத்தியமாக! மேலும், இருண்டுவிட்ட இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உங்களுடைய இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை' எனும் ( அல்குர்ஆன் 93:1-3ஆகிய) வசனங்களை அருளினான். ( நூல்: புகாரி : 4983 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒரு போதும் நம்மை வெறுக்கவோ கைவிடவோ மாட்டான் என்று உறுதியாக நம்புவோம்!

No comments:

Post a Comment