வழிகாட்டும்
வான்மறை - தராவீஹ் சிந்தனை - 15.
ஜமாஅத் தொழுகையைப்
பேணுவோம்!!
14 –ஆவது நோன்பை
நிறைவு செய்து,
15 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு
அடுத்த நோன்பு நோற்பதற்கான ஆயத்தப்பணிகளில் நாம் ஈடுபட்டு இருக்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும்
கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க,
வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக
நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!
இன்றைய நாளின்
தராவீஹ் தொழுகையில் அந்நூர், அல் ஃபுர்கான், அஷ் ஷுஅரா ஆகிய சூராக்கள் ஓதப்பட்டுள்ளன.
துவக்கமாக
ஓதப்பட்ட சூரா அந்நூரின் 37 வது ஆயத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சில மனிதர்களை
அவர்களிடம் காணப்படும் சில பண்புகளால் சிலாகித்து கூறுகிறான்.
அவர்களே அவனை நினைவு
கூர்பவர்கள் என்கிறான். அவர்களே மறுமையை அதிகம் அஞ்சுபவர்கள் என்கிறான்.
அவர்களின் அழகிய
அந்தப் பண்புகளுக்காக அவன் தன்னுடைய தனிப்பட்ட அருளை அவர்களுக்கு அதிகப்
படுத்துவதாகவும் புகழ்ந்து தொடர்ந்து அடுத்த 38 வது ஆயத்தில் கூறுகின்றான். யார்
அவர்கள்?
அவர்களின் அந்த அழகிய பண்பாடு என்ன?
நிச்சயமாக நாம்
பார்க்க வேண்டும் தானே?!
அப்போது தானே நாமும் அவர்களில் ஒருவராக இணைய முடியும்.
வாருங்கள்! அவர்கள் யாரென்று பார்த்து வருவோம்!
رِجَالٌ لَا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ
وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ
الْقُلُوبُ وَالْأَبْصَارُ (37) لِيَجْزِيَهُمُ اللَّهُ أَحْسَنَ مَا عَمِلُوا
وَيَزِيدَهُمْ مِنْ فَضْلِهِ وَاللَّهُ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ
மனிதர்களில் சிலர்
(இருக்கின்றார்கள்) அவர்கள் அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை (முறையாக) நிறைவேற்றுவதை விட்டும், ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ, கொடுக்கல் வாங்கலோ பராமுகமாக்க மாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள்
அஞ்சுவார்கள்.
அவர்கள்
செய்துகொண்டிருந்ததற்கு மிக அழகானதை அவர்களுக்கு அல்லாஹ் கூலியாகக்
கொடுப்பதற்காகவும்,
இன்னும் தன் அருளிலிருந்தும் அவன் அதிகப்படுத்துவதற்காகவும்
(துதி செய்கின்றனர்);
மேலும், அல்லாஹ் தான்
நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான். ( அல்குர்ஆன்: 24:
37, 38 )
وقال
أبو هريرة : إن رجلين كانا في عهد النبي -
صلى الله عليه وسلم - أحدهما بياعا فإذا سمع النداء بالصلاة ، فإن كان الميزان
بيده طرحه ، ولا يضعه وضعا ، وإن كان بالأرض لم يرفعه . وكان الآخر قينا يعمل
السيوف للتجارة ، فكان إذا كانت مطرقته على السندان أبقاها موضوعة ، وإن كان قد
رفعها ألقاها من وراء ظهره إذا سمع الأذان ؛ فأنزل الله تعالى هذا ثناء عليهما
وعلى كل من اقتدى بهما
மாநபி ஸல்
அவர்களின் காலத்தில் இரண்டு மனிதர்கள் வாழ்ந்தார்கள். ஒருவர் நிறுத்துக்
கொடுக்கும் வியாபாரம் செய்து வந்தார். இன்னொருவர் வாட்கள் உருவாக்கும் பட்டறை
வைத்திருந்தார். முதாலாமவர், தொழுகைக்கான அழைப்பு
பாங்கு சொல்லப்பட்டால் தராசை கையில் வைத்து ஏதேனும் பொருளை நிறுத்துக்
கொண்டிருந்தால் அப்படியே கீழே வைத்து விட்டு, ஜமாஅத் தொழுகைக்காக
பள்ளிக்கு விரைவார். பாங்கு சொல்லும் நேரத்தில் தராசு கீழே இருக்கும் நிலையில்
எவரேனும் பொருள் வாங்க வந்தால் தராசை கையில் எடுக்காமல் அப்படியே வைத்து விட்டு
ஜமாஅத் தொழுகைக்காக பள்ளிக்கு விரைந்து செல்வார்.
இரண்டாமவர், வாள் உருவாக்க நெருப்பில் காய்ச்சி சுத்தியலால் வாளை சுத்தியலால் அடித்துக்
கொண்டிருக்கும் போது தொழுகைக்கான அழைப்பு பாங்கு சொல்லப்பட்டால் அப்படியே
சுத்தியலை போட்டு விட்டு ஜமாஅத் தொழுகைக்காக பள்ளிக்கு விரைவார்.
அதே நேரத்தில்
சுத்தியலை காய்ச்சிய வாளை அடிக்க மேவை உயர்த்திய நிலையில் தொழுகைக்கான அழைப்பு
பாங்கு சொல்லப்பட்டால் சுத்தியலை அப்படியே முதுகுக்குப்
பின்னால் போட்டு விட்டு ஜமாஅத் தொழுகைக்காக பள்ளிக்கு விரைந்து செல்வார். மேற்கூறிய இறை
வசனம் இவ்விரண்டு மனிதர்களின் செயல் தொடர்பாகவே அருளப்பட்டது" என அபூஹுரைரா
(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
روى
عمرو بن دينار القهرماني ، عن سالم ، عن عبد الله بن عمر ، رضي الله عنهما ، أنه
كان في السوق فأقيمت الصلاة ، فأغلقوا حوانيتهم ودخلوا المسجد ، فقال ابن عمر :
فيهم نزلت : ( رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله ) . رواه ابن أبي حاتم ،
وابن جرير .
அப்துல்லாஹ் இப்னு
உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு நாள் மதீனாவின் கடை வீதி ஒன்றின்
வழியாக நடந்து வந்து கொண்டிருந்த போது தொழுகைக்கான அழைப்பு கொடுக்கப்பட்டது.
அப்போது அந்த கடைவீதியில் வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் கடைகளை பூட்டி விட்டு
ஜமாஅத் தொழுகையில் பங்கேற்க பள்ளிவாசலுக்கு வேகமாக சென்றார்கள். இந்த வியாபாரிகள்
தொடர்பாக இந்த இறைவசனம் இறக்கியருளப்பட்டது. ( நூல்; தஃப்ஸீர் இப்னு கஸீர் )
وقال
ابن أبي حاتم : حدثنا محمد بن عبد الله بن بكر الصنعاني ، حدثنا أبو سعيد مولى بني
هاشم حدثنا عبد الله بن بجير ، حدثنا أبو عبد رب قال : قال أبو الدرداء ، رضي الله
عنه : إني قمت على هذا الدرج أبايع عليه ، أربح كل يوم ثلاثمائة دينار ، أشهد
الصلاة في كل يوم في المسجد ، أما إني لا أقول : " إن ذلك ليس بحلال "
ولكني أحب أن أكون من الذين قال الله : ( رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله ) .
இந்த இறைவசனம்
இறங்கிய பின்னர்,
மதீனாவின் கடைவீதியில் இருந் தமது கடையை இன்னொருவருக்கு
கொடுத்து விட்டு,
"நான் இருந்து கொண்டிருக்கும் இந்த இடத்தில் நின்றவாரே ஒரு
நாளைக்கு முன்னூறு தீனார் வியாபாரம் செய்து விடுவேன். அதே நேரத்தில் ஒவ்வொரு
நாளும் பள்ளிவாசலில் ஜமாஅத் தொழுகையிலும் பங்கேற்று கொள்வேன். நான் இந்த வருமானம்
எனக்கு ஹலால் இல்லை என்று சொல்ல மாட்டேன். மாறாக, நான் இந்த வசனத்தில் சொல்லப்படும் மனிதர்களில் ஒருவராக இருக்கவே
விரும்புகிறேன்" என்று அபுத்தர்தா ( ரலி) அவர்கள் கூறினார்கள்.
وقال
عمرو بن دينار الأعور : كنت مع سالم بن عبد الله ونحن نريد المسجد ، فمررنا بسوق
المدينة وقد قاموا إلى الصلاة وخمروا متاعهم ، فنظر سالم إلى أمتعتهم ليس معها أحد
، فتلا سالم هذه الآية : ( رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله ) ثم قال :
هم هؤلاء .
அம்ர் இப்னு
தீனாருல் அஃவர் (ரஹ்) தாபிஈ அவர்கள் கூறினார்கள்: நான் ஸாலிம் இப்னு அப்துல்லாஹ்
அவர்களோடு இருந்தேன். அப்போது அருகில் இருக்கும் மஸ்ஜிதுக்கு தொழச் செல்ல நாடி
இருவரும் மதீனாவின் கடைவீதியில் நடந்து வந்தோம். அந்த கடைவீதியின் வியாபாரிகள்
தொழுகைக்காக சென்றிருந்தார்கள். அவர்களின் கடைகளில் இருந்த பொருட்களை ஒரு துணியால்
மூடி இருந்தார்கள். அவர்களின் கடைகளிலோ, அவர்களின் பொருட்களை
பாதுகாக்கவோ எவரும் அந்த கடை வீதியில் இல்லை". இதை வியப்போடு பார்த்து கடந்து
போய்க் கொண்டிருக்கும் போது ஸாலிம் இப்னு அப்துல்லாஹ் அவர்கள் மேற்கூறிய
இறைவசனத்தை ஓதி விட்டு அல்லாஹ் கூறும் மேன்மக்கள் இவர்கள் தாம்! என்று சொன்னார்கள்.
( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )
எந்த
மதீனாவாசிகளின் கடைவீதியின் வியாபாரிகள் தொடர்பாக இறைவசனம் இறக்கியருளப்பட்டதோ, அந்த கடைவீதியும்,
அந்த வியாபாரிகளும் மாநபி ஸல் அவர்களின் மறைவுக்குப்
பின்னரும்,
காலங்கள் பல கடந்த பின்னரும் அந்த புகழுக்கு
சொந்தக்காரர்களாவே வாழ்ந்தார்கள்.
ஐவேளைத் தொழுகையைக் கூட்டாகத் தொழுவது இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களில்
ஒன்றாகும்.
ذٰلِك
وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ
இதுதான் (இறைவன்
வகுத்ததாகும்): எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மைப்படுத்துகிறாரோ, நிச்சயமாக அது இதயங்களில் உள்ள இறையச்சத்தின் வெளிப்பாடாகும். ( அல்குர்ஆன்: 22:
32 )
இஸ்லாம் முஸ்லிம்
உம்மத்தின் ஒற்றுமையையும் உறவையும் பலப்படுத்தும் விதத்தில் சில ஒன்றுகூடல்களை
ஏற்படுத்தியுள்ளது.
தினமும் ஐவேளை
பள்ளியில் தொழுகைக்காக ஒன்றுகூடல்,வாரம் ஒரு முறை ஊரிலுள்ள
மக்கள் அனைவரும் ஜும்ஆவில் ஒன்று கூடல்,வருடத்திற்கு இரு முறை
பெருநாள் தொழுகைக்காக ஒன்று கூடல்,வருடத்திற்கு ஒரு முறை
உலக அளவில் அரபாவில் ஒன்று கூடல்,கால, சூழல் மாற்றங்களின் போது ஊர் மக்கள் ஒன்று கூடல்,(உதாரணமாக,
வரட்சியின் போது மழை வேண்டித் தொழுவதற்காகவும், சூரிய சந்திர கிரகணங்களின் போது கிரகணத் தொழுகைக்காக ஒன்று கூடுவதையும்
குறிப்பிடலாம்.)
இந்த ஒன்று
கூடல்களில் ஐவேளைத் தொழுகையையும் ஜமாஅத்தாக கூட்டாக நிறைவேற்றுவதற்காக ஒன்று
கூடுவதும் ஜமாஅத்தாகத் தொழுவதும் இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட வழிமுறையாகும்.
ஆகவே தான் ஜமாஅத்தாகத்
தொழுவது அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.
ஜமாஅத் தொழுகையில் பங்கேற்பவரே நேரிய வழியில் (ஹிதாயத்தில்)
நீடித்திருப்பார்...
عن ابن
مسعود رضي الله عنه قال : ( مَن سرَّه أن يلقى الله تعالى غدا مسلماً، فليحافظ على
هؤلاء الصلوات حيث ينادى بهن، فإن الله شرع لنبيكم صلى الله عليه وسلم سُنن الهدى،
وإنهنَّ مِن سُنن الهدى، ولو أنكم صليتم في بيوتكم كما يصلي هذا المتخلف في بيته،
لتركتم سنة نبيكم، ولو تركتم سنة نبيكم، لضللتم، ولقد رأيتنا وما يتخلَّف عنها إلا
منافق معلوم النفاق، ولقد كان الرجل يُؤتى به، يُهادى بين الرجلين حتى يقام في
الصف ) رواه مسلم
அப்துல்லாஹ் பின்
மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: யார் நாளை (மறுமை நாளில்) முஸ்லிமாக
அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் தொழுகை அறிவிப்புச் செய்யப்படும்
இடங்களில் (பள்ளிவாசல்களில்) இந்தத் தொழுகைகளைப் பேணி வரட்டும். ஏனெனில், அல்லாஹ் உங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நேரிய வழிகளைக் காட்டியுள்ளான்.
(கூட்டுத்) தொழுகைகள் நேரிய வழிகளில் உள்ளவையாகும். கூட்டுத் தொழுகையில் கலந்து
கொள்ளாமல் தமது வீட்டிலேயே தொழுது கொள்ளும் இன்ன மனிதரைப் போன்று நீங்களும் உங்கள்
வீடுகளிலேயே தொழுது வருவீர்களானால் நீங்கள் உங்கள் நபியின் வழிமுறைகளைக்
கைவிட்டவர் ஆவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் கைவிட்டால் நிச்சயம்
நீங்கள் வழிதவறிவிடுவீர்கள்.
யார் அங்கத்
தூய்மை (உளூ) செய்து,
அதைச் செம்மையாகவும் செய்து பின்னர் இப்பள்ளிவாசல்களில்
ஒன்றை நோக்கி வருகிறாரோ அவர் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் அவருக்கு அல்லாஹ்
ஒரு நன்மையை எழுதுகிறான்;
அவருக்கு ஒரு தகுதியை உயர்த்துகிறான்; அவருடைய பாவங்களில் ஒன்றை மன்னித்துவிடுகிறான். நான் பார்த்தவரை எங்களிடையே
நயவஞ்சகம் அறியப்பட்ட நயவஞ்சகரைத் தவிர வேறெவரும் கூட்டுத் தொழுகையில் கலந்து
கொள்ளாமல் இருந்ததில்லை. (எங்களில் நோயாளியான) ஒரு மனிதர் இரு மனிதருக்கிடையே
தொங்கியவாறு அழைத்துவரப்பட்டு (கூட்டுத்) தொழுகையில் நிறுத்தப்பட்டதுண்டு. ( நூல்: முஸ்லிம் )
ஜமாஅத் தொழுகையின் நன்மைகள்...
حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ
عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ: «صَلاَةُ الجَمَاعَةِ تَفْضُلُ صَلاَةَ الفَذِّ بِسَبْعٍ
وَعِشْرِينَ دَرَجَةً»
தனித்துத் தொழுவதை
விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ( நூல்கள்: புகாரீ 645, முஸ்லிம் 1038
)
ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவம்!!
وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَلْتَقُمْ
طَائِفَةٌ مِنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ
(நபியே) நீர் அவர்களுடன்
(போர்க்களத்தில்) இருக்கும் போது அவர்களுக்குத் தொழுகை நடாத்தினால் அவர்களில் ஓர்
அணியினர் உம்முடன் தமது ஆயுதங்களை ஏந்தியவர்களாக (தொழுவதற்கு) நிற்கட்டும்……” ( அல்குர்ஆன்: 4: 102 )
இந்த வசனமானது
ஜமாஅத் தொழுகையின் சட்டத்தை எடுத்துக் காட்டுகின்றது. யுத்த நேரமாக இருந்தாலும்
அந்த நேரத்திலும் தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றப்பட வேண்டுமென்பதற்காகத்தான் படு
பயங்கரமான சூழ்நிலையிலும் எப்படி தொழ வேண்டுமென்ற விதி முறையை அல்லாஹ் சொல்லித்
தந்திருக்கிறான். முதலாவது ஒரு கூட்டம் தொழ மற்றைய சாரார் பாதுகாப்புக் கடமையில்
ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டும். பின்னர் பாதுகாப்பு கடமையில் இருந்த சாரார்
தொழுகையிலும் தொழுகையில் இருந்த கூட்டம் பாதுகாப்புக்கும் வந்து பின்பு இமாமுடன்
சேர்ந்து இரு சாராரும் தொழுகையை முடிக்க வேண்டுமென்ற ஒழுங்கினை மார்க்கம்
பிரத்தியேகமாக சொல்லித் தந்திருப்பதானது ஜமாஅத் தொழுகை பர்ளு ஐன் (எல்லோர் மீது
கடமை) ஆன கடமைதான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.
عن أبي
هريرة رضي الله عنه أن رسول الله –صلى الله عليه وسلم- قال: "إن أثقل الصلاة
على المنافقين صلاة العشاء وصلاة الفجر، ولو يعلمون ما فيهما لأتوهما ولو حبواً.
ولقد هممت أن آمر بالصلاة فتقام ثم آمر رجلاً يصلي بالناس، ثم أنطلق معي برجال
معهم حزم من حطب إلى قوم لا يشهدون الصلاة، فأحرق عليهم بيوتهم بالنار"
அபூஹுரைரா (ரழி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நயவஞ்சகர்கள் மீது பாரமான
தொழுகை இஷாத் தொழுகையும் பஜ்ர்த் தொழுகையுமாகும். இதில் உள்ள சிறப்புகளை அவர்கள்
தெரிந்து கொண்டால் தரையில் தவழ்ந்து, தவழ்ந்தாவது வருவார்கள்.
ஒரு மனிதரை மக்களுக்கு தொழுகை நடாத்துமாறு ஏவி விட்டு பள்ளிக்கு ஜமாஅத் தொழுகைக்கு
சமூமளிக்காதவர்களது வீடுகளுக்கு விறகு கட்டைகளைக் கொண்டு சென்று அவர்களது வீடுகளை
எரிப்பதற்கு மனம் நாடுகிறது” என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். ( நூல்: புகாரி முஸ்லிம் )
وفي
رواية للإمام أحمد عنه –صلى الله عليه وسلم-: "لولا ما في البيوت من النساء
والذرية، أقمت صلاة العشاء وأمرت فتياني يحرقون ما في البيوت بالنار"
"வீடுகளில்
பெண்களும் சிறார்களும் இல்லாதிருப்பார்களானால் நான் இஷாத் தொழுகையை
நிறைவேற்றிவிட்டு (சமுகம் தராதவர்களது) வீடுகளை எரிக்குமாறு கட்டளையிட்டிருப்பேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ،
عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ هَمَمْتُ أَنْ
آمُرَ بِحَطَبٍ، فَيُحْطَبَ، ثُمَّ آمُرَ بِالصَّلاَةِ، فَيُؤَذَّنَ لَهَا، ثُمَّ
آمُرَ رَجُلًا فَيَؤُمَّ النَّاسَ، ثُمَّ أُخَالِفَ إِلَى رِجَالٍ، فَأُحَرِّقَ
عَلَيْهِمْ بُيُوتَهُمْ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ يَعْلَمُ أَحَدُهُمْ،
أَنَّهُ يَجِدُ عَرْقًا سَمِينًا، أَوْ مِرْمَاتَيْنِ حَسَنَتَيْنِ، لَشَهِدَ
العِشَاءَ»
எனது உயிர் எவன்
வசமிருக்கின்றதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! விறகுகளைக் கொண்டு வருமாறு நான்
கட்டளையிட்டு,
அதன்படி விறகுகள் கொண்டு வரப்பட்டுப் பின்னர் தொழுகைக்கு
அழைக்குமாறு நான் உத்தரவிட்டு, அதன்படி தொழுகைக்கு அழைக்கப்பட்டு,
பின்னர் ஒருவரை மக்களுக்குத் தொழுவிக்குமாறு கட்டளையிட்டு, அதன்படி அவர் தொழுகை நடத்திய பின்னர் தொழுகைக்கு வராமலிருக்கின்றவர்களின்
வீடுகளுக்குச் சென்று வீட்டோடு அவர்களை எரித்து விட என் மனம் நினைத்ததுண்டு" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா
(ரலி)
( நூல்கள்: புகாரி, முஸ்லிம் )
قال أبو
داود في سننه: حدثنا حفص بن عمر ثنا شعبة عن أبي إسحاق عن عبدالله بن أبي بَصير عن
أُبَي بن كعب، قال: صلَّى بنا رسول الله صلى الله عليه وسلم يومًا الصبح، فقال:
((أشاهد فلان؟))، قالوا: لا، قال: ((أشاهد فلان؟))، قالوا: لا، قال: ((إن هاتين
الصلاتين أثقل الصلوات على المنافقين، ولو تعلَمون ما فيها لأتيتُموها ولو حبوًا
على الرُّكَب، وإن الصف الأول على مثل صفِّ الملائكة، ولو علمتم ما فضيلته
لابتدرتُموه، وإن صلاة الرجل مع الرجل أزكى من صلاته وحده، وصلاته مع الرجلين أزكى
من صلاته مع الرجل، وما كثُر فهو أحب إلى الله تعالى)).
ஒரு முறை நபி (ஸல்)
அவர்கள் பஃஜ்ருடைய தொழுகையை எங்களுக்கு தொழுவித்தார்கள். இன்ன மனிதர்
வந்திருக்கின்றாரா? இல்லை என்று சொன்னார்கள் இன்ன மனிதர் வந்திருக்கின்றாரா? இல்லை என்று சொன்னார்கள். நிச்சயமாக இந்த இரு தொழுகைகளும் நயவஞ்சகர்களுக்கு
சிரமமானதாகும்.
அந்த இரு
தொழுகையின் (சிறப்புகளை) அவர்கள் அறிவார்களானால் முழங்கால்களால் தவழ்ந்த
நிலையிலாவது சமூகமளித்திருப்பார்கள். நிச்சயமாக (தொழுகையின்) முதல் வரிசையானது
வானவர்களின் வரிசையைப் போன்றதாகும். அதன் சிறப்பை நீஙகள் அறிவீர்களானால் மிக
வேகமாக அதன் பால் விரைவீர்கள். ஒருவர் மற்றொருவருடன் (கூட்டாக) தொழுவது தனியாகத்
தொழுவதை விட சிறப்பானதாகும். இருவருடன் (கூட்டாகத்) தொழுவது, ஒருவருடன் (கூட்டாகத்) தொழுவதை விட சிறப்பானதாகும். இவ்வாறு எண்ணிக்கை
அதிகரிக்க அதிகரிக்க (அது) அல்லாஹவின் விருப்த்திற்குரியதாக இருக்கும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அறிவிப்பவர்: உபை இப்னு கஃப் (ரலி), ( நூல்: அபூதாவுத் ).
இந்த நான்கு
நபிமொழிகளிலும் நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு ஜமாஅத் தொழுகையை நிறைவேற்ற வருகை
தராதவர்களை கடுமையாக எச்சரித்திருப்பதானது ஜமாஅத்துடன் தொழுவதன் முக்கியத்துவத்தை
தெளிவாகவே உணர்த்துகிறது.
عن أبي
هريرة عن النبي ﷺ أنه أتاه رجل أعمى وقال يا رسول الله ليس لي قائد يلائمني إلى
المسجد فهل لي من رخصة أن أصلي في بيتي؟ فقال له النبي ﷺ هل تسمع النداء إلى الصلاة؟
فقال: نعم. قال: فأجب
கண் பார்வையற்ற
ஸஹாபி ஒருவர் நபி (ஸல்)
அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே என்னுடைய இரு
கண்களாலும் பார்க்க முடியாது. பள்ளிக்கு அழைத்து வருவதற்காக எந்தவொரு
உதவியாளர்களும் கிடையாது. எனவே எனக்கு வீட்டில் தொழுது கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்க அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி வழங்கி
விட்டு மீண்டும் அந்த ஸஹாபியை அழைத்து அதான் சொல்வது கேட்கின்றதா? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட உடன் அந்த ஸஹாபி ஆம்
என்றார். எனவே நீர் பள்ளிக்கு சமூகளிப்பீராக” என்று கூறினார்கள். (
நூல்: முஸ்லிம் )
மேற்கண்ட இந்த
நபிமொழியை கூர்ந்து கவனித்தால்
கண் பார்வையற்று இருந்து பள்ளிக்கு அழைத்து வருவதற்கு
யாருமே இல்லாத மனிதரே கட்டாயம் ஜமாஅத் தொழுகையை நிறைவேற்ற பள்ளிக்கு வர வேண்டும்
என்றால் கடமையான தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதன் முக்கியத்துவம் என்ன என்பதை புரிந்து
கொள்ளலாம்.
لفظ لمسلم: ((ورجل معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه)) قال
الإمام النووي رحمه الله في شرحه: معناه شديد الحب لها، والملازمة للجماعة فيها
எவரது உள்ளம்
இறையில்லத்துடன் ஒன்றிப்போயிருக்கிறதோ அவருக்கு நாளை மறுமையில் அர்ஷின் கீழ் நிழல்
கிடைக்கும்”
என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன்
அலைஹி).
இமாம் நவவி (ரஹ்)
அவர்கள் இந்த ஹதீஸுக்கு விளக்கம் அளிக்கும் பொழுது ‘உள்ளம் இறையில்லத்துடன் ஒன்றிப்போயிருப்பதென்பது” மஸ்ஜிதுடன் உள்ள இருக்கமான தொடர்பு, கூட்டுத்தொழுகையில்
தவராது பங்கேற்றல் ஆகியவையாகும்,
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நாம் வாழும் காலமெல்லாம்
ஜமாஅத் தொழுகையைத் தவற விடாது, பேணுதலாக நிறைவேற்ற அருள்புரிவானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்!
யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment