Saturday, 15 March 2025

வழிகாட்டும் வான்மறை - தராவீஹ் சிந்தனை - 16. சிலந்தியின் வீடும்....சிதிலமடைந்த நம்பிக்கையும்....

 

வழிகாட்டும் வான்மறை - தராவீஹ் சிந்தனை - 16.

சிலந்தியின் வீடும்....சிதிலமடைந்த நம்பிக்கையும்....


15 –ஆவது நோன்பை நிறைவு செய்து, 16 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு அடுத்த நோன்பு நோற்பதற்காக  நாம் காத்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் அந்நம்ல், அல் கஸஸ் ஆகிய சூராக்கள் முழுமையாக  ஓதப்பட்டு அல் அன்கபூத் சூராவில் 44 ஆயத்துகள் ஓதப்பட்டுள்ளன.

இன்றைய தராவீஹ் தொழுகையில் இரண்டு உயிரினங்களின் பெயரில் அமைந்த சூராக்கள் இடம் பெற்றுள்ளன. ஒன்று அந் நம்ல் - எறும்பு, இன்னொன்று அல் அன்கபூத் - சிலந்தி.

உலகில் அனைவருக்கும் மிகப்பரிச்சயமான உயிரினம், கடந்த 40 கோடி வருடங்களாய் உலகின் பல பகுதிகளிலும் பரவலாக வாழ்ந்து ஒரு வருகிற உயிரினம். நிலம்,காடு, பாலைவனம், புதர் என உலகின் அனைத்து பகுதிகளிலும் வாழும் ஒரு உயிரினம், வேளாண்சூழலியலில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் இயற்கை பூச்சிக்கொல்லியாய்  அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு உயிரினம், உருவ அமைப்பில் 2-10 mm (மில்லி மீட்டர் ) கூடிப் போனால் 80-90 mm (மில்லி மீட்டர் ) வரை இருக்கும் ஒரு உயிரினம், 

உலகில் ஒட்டுமொத்தமாக வாழும் அந்த உயிரினத்தின் எடையே 25 டன் தான் ஆனால், ஆண்டுக்கு சுமார் 400-800 மில்லியன் டன் உணவுகளை   உட்கொள்கின்ற உயிரினம், சுமார் 8,000 முதல் 10,000 வரையிலான சிறப்பு பூச்சி இனங்களுக்கும், 3,000 முதல் 5000 வரையிலான பறவைகளுக்கும் உணவாகும் ஒரு உயிரினம், தன் வசிப்பிடத்தையே எதிரிகளிடம் இருந்து காக்கும் கேடயமாய் பயன்படுத்தும் ஒரு உயிரினம், 6 முதல் எட்டு கண்கள் வரை உள்ள ஒரு உயிரினம், எட்டுக்கால்களும், அதற்கு மேலாக ஒரு சில கால்களும், இரண்டு விஷக் கொடுக்குகளும் உள்ள ஒரு உயிரினம், நவீன கட்டிடக்கலைக்கு முன்னோடியாக விளங்கும் ஒரு உயிரினம், ஒட்டுமொத்த உலகில் 50000 வகைகள் என்றும் 40000 என்றும், 38000 என்றும், 35000 என்றும் பல்வேறு கருத்துக்களுக்கு இடம்பாடான எண்ணிக்கையில் உள்ள ஒரு உயிரினம்.

பெரும்பான்மையான மனிதர்களுக்கு அரக்நோபோபியா” (Arachnophobia) என்ற  அச்சவுணர்வையும், ஒரு வித ஒவ்வாமையையும் ஏற்படுத்தும் ஒரு உயிரினம், அந்த உயிரினத்தின் பெயரோடு இணைத்து பூச்சி என்று அழைத்தாலும் அவை பூச்சி இனத்தில் சேராது என்று  விலங்கியல் ஆய்வாளர்கள் முரண்படும் ஒரு உயிரினம். ( நன்றி, பிபிசி தமிழ், 15/03/2017, சஞ்சிகை 07/12/2013, தினமலர், 07/04/2022, நியூஸ் 18, 19/08/2021, )

என்ன தலை சுற்றுகிறதா? அந்த உயிரினம் எது என்று அறிய ஆர்வம் மேலிடுகிறதா?

அந்த உயிரினம் குறித்து தான் இன்றைய அமர்வில் நாம் தராவீஹ் சிந்தனையாக பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

அட நம்ம வீட்டில் கூட ஆங்காங்கே நம் கண் முன்னால் காணப்படும் ஒரே உயிரினமான சிலந்தி தான் அந்த உயிரினம்.

இந்த உயிரினத்தின் வீட்டைத் தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இன்று நாம் தராவீஹ் தொழுகையில் ஓதிய 20 ம் ஜுஸ்வில் இடம் பெற்றுள்ள அந்த உயிரினத்தின் பெயரிலேயே இடம் பெற்றுள்ள அல் அன்கபூத் - சிலந்தி என்று அழைக்கப்படும் சூராவில் ஆயத்தில் விமர்சித்து பேசுகின்றான்.

இவ்வளவு சிறப்பம்சங்களைக் கொண்ட சிறிய ஒரு உயிரினமான சிலந்தியின் வீட்டை ஏன் விமர்சிக்கின்றான்? யாரை விமர்சிக்கின்றான்.

مَثَلُ الَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اَوْلِيَآءَ كَمَثَلِ الْعَنْكَبُوْتِ ‌ اِتَّخَذَتْ بَيْتًا ‌وَ اِنَّ اَوْهَنَ الْبُيُوْتِ لَبَيْتُ الْعَنْكَبُوْتِ‌ۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ‏

அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக்கொண்டவர்களுக்கு உதாரணம், சிலந்திப்பூச்சியின் உதாரணம் போன்றது; அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது; இன்னும், நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலவீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும்; இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலவீனத்தை அறிவார்கள்). ( அல்குர்ஆன்: 29: 41 )

இரை தேடுவதில் மதி நுட்பம், இனப் பெருக்கம் செய்வதில் நுண்ணறிவு, வசிப்பிடத்தை உருவாக்குவதில் துரிதம், எநிரிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்வதில் மதியூகம், சூழலியல் பாதுகாப்புக்கு அரண் என்று பிரம்மாண்டமான ஒரு படைப்பாக இருந்தாலும், தமது வசிப்பிடத்தை மிகவும் பலவீனமாக அமைத்து அதன் விளைவாக மிக எளிதில் எதிரிகளுக்கு இரையாகி தம் வாழ்நாளையே சுலபமாக முடித்துக் கொள்ளும் ஒரு உயிரினம் தான் சிலந்தி.

வீடு என்பதன் இலக்கணமே அமைதியும், பாதுகாப்பும் நிலவும் இடம் என்பது தான். அந்த இலக்கணத்தையே தவற விடும் ஒரு உயிரினம் எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தாலும் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. எனவே தான் சிலந்தி வீட்டை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உவமையாகக் கூறுகின்றான்.

படைத்த அல்லாஹ்வை விட்டு விட்டு, அவனிடம் புகலிடம் தேடுவதை மறந்து விட்டு, அவனிடம் வாழ்வாதாரமும், பாதுகாப்பும் கேட்பதை மறுத்து விட்டு, அல்லாஹ்வால் படைக்கப்பட்ட படைப்புகளை வணங்கி அவைகளிடம் அடைக்கலம் தேடி, அவைகளிடம் பாதுகாப்புக் கேட்டு, அவைகளிடம் வாழ்வாதாரம் கேட்டு அவனை மறுத்து, அவனுக்கு இணை கற்பிக்கும் ஒருவனுக்கு அல்லது ஒரு சமூகத்திற்கு அவர்கள் யாரை இறைவனுக்கு நிகராக அல்லது மாற்றாக முன் நிறுத்துகின்றார்களோ அவைகளின் நிலையும், அவர்களின் நிலையும் இந்த "சிலந்தி" யின் வீட்டுக்கு ஒப்பானதாகும்.

ஏன் இந்த உவமைகள்?

இறைவன் குர்ஆனில் இணைவைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக 22:73 , 29:41 வசனங்களில் ஈயையும் சிலந்தியையும் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.

يَا أَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوا لَهُ إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ لَن يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ

மனிதர்களே! (உங்களுக்கோர்) உதாரணம் சொல்லப்படுகிறது.எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்யமாக நீங்கள் அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் (அழைத்துப்)பிரார்த்திக்கிறீர்களோ,அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும், ஒரு ஈயைந்கூட படைக்க முடியாது.மேலும் அவர்களிடமிருந்து (அது) ஒரு பொருளை எடுத்துச் சென்றால் அவர்களால் அந்த ஈயிடமிருந்து அதனைக் கைப்பற்றவும் முடியாது. தேடுவோனும் தேடப்படுபடுவோனும் பலகீனர்களே! (27:73) 

مَثَلُ الَّذِينَ اتَّخَذُوا مِن دُونِ اللَّهِ أَوْلِيَاء كَمَثَلِ الْعَنكَبُوتِ اتَّخَذَتْ بَيْتًا وَإِنَّ أَوْهَنَ الْبُيُوتِ لَبَيْتُ الْعَنكَبُوتِ لَوْ كَانُوا يَعْلَمُونَ

''அல்லாஹ் அல்லாதவற்றை (த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப்பூச்சியன் உதாரணம் போன்றது.அது (தனக்காக) ஓரு வீட்டைக் கட்டடியது. ஆயினும் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலகீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும். இதை அவர்கள் அறிந்து கொண்டால் (தாங்கள் இணையாக எடுத்துக்கொண்டவற்றின் பலகீனத்தைப் புரிந்து கொள்வார்கள். (29:41)

இந்த வசனங்களைக் கேட்ட குரைஷிகள் ''முஹம்மதின் இறைவன் ஈயையும், சிலந்திப்பூச்சியையும் மேற்கோள் காட்ட நாணவில்லை'' என்று இழித்துரைத்தபோதுஇறைவன் பின்வரும் வசனத்தை அருளினான்.

وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ وَمَا يَعْقِلُهَا إِلَّا الْعَالِمُونَ

இந்த உவமைகளை மக்களுக்காகக் கூறுகிறோம். அறிவுடையோரையன்றி வேறு எவரும் இதனை புரிந்து கொள்ள மாட்டார்கள் (29:43)  என்று எடுத்துரைத்தான்.

இந்த சிலந்தியின் அறிவியல் உவமை சிந்திக்க வைக்கும் ஓர் அற்புதமான உவமையாகும்.

சிலந்தி வரலாற்றில் தனித்துவமான ஒரு இடத்தை பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது.

وفى «الحلية» للحافظ أبى نعيم عن عطاء بن ميسرة قال: «نسجت العنكبوت مرتين على نبيين: على داود حين كان جالوت يطلبه. وعلى النبى صلى الله عليه وسلم فى الغار» «3» .

 

அல் ஹாஃபிழ் அபூ நுஐம் (ரஹ்) அவர்கள் அதாவு இப்னு மைஸிரா (ரஹ்) அவர்களின் மூலமாக அறிவிக்கின்றார்கள்:- சிலந்தி இரண்டு முறை இரண்டு நபிமார்களைக் காப்பதற்காக (அல்லாஹ்வின் கட்டளை கொண்டு) வலை பின்னியது. ஒன்று தாவூத் (அலை) அவர்களைக் கொலை ஜாலூத்தும் அவனது படையினரும் துரத்திய போது.

இன்னொன்று நமது நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்ய ஹிஜ்ரத் பயணத்தின் போநு மக்கா குறைஷிகள் துரத்திய போது ஸவ்ர் குகையில் சிலந்தி வலை பின்னியது. ( நூல்: ஹுல்யா )

مرَّةً كان داودُ ملكُ إسرائيلَ – عليه السلامُ – جالساً في جنَّته، فرأى دبُّوراً يأكل عنكبوتاً، ثم جاء أحمقُ وفي يده عصاً وشرع يطردهما. فقال داودُ للقدُّوسِ مباركٌ هو: «يا ربَّ العالمين، ما فائدةُ هذه [المخلوقات] التي برأتَها في العالم؟ الدبُّورةُ تأكلُ العسلَ وتلسعُ ولا فائدةَ منها، والعنكبوتُ ينسجُ كلَّ السنةِ [خيوطَه] ولا يلبسُها، والأحمقُ بلا عقلٍ ويؤذي مخلوقاتكَ، ولا يدركُ وحدانيَّتكَ وجبروتكَ، ولا فائدةَ منه للعالم». قال له القدُّوسُ مباركٌ هو: «داود! أتسخرُ من المخلوقات؟ ستأتي ساعةٌ تحتاج فيها إليهم فتعرف لماذا بُرئوا».

 

وعندما اختبأ [داودُ] في المغارةِ [خوفاً] من الملكِ سؤول (شؤول)، أرسلَ القدُّوسُ مباركٌ هو عنكبوتاً فنسجتْ خيوطَها على فمِ المغارةِ وأغلقتْه. وصلَ سؤولُ ورأى نسيجَ [العنكبوت]، فقال: «لم يدخل [ابن] آدمَ إلى هنا قَطُّ، فلو دخلَ أحدٌ لكان قد مزَّقَ بيتَ العنكبوتِ قطعاً صغيرة»، ثمَّ مضى دون أن يدخل. وعندما خرج داودُ ورأى العنكبوت، وقال لها: «مباركٌ بارئُكِ ومباركةٌ أنتِ! يا ربَّ العالمين، من يصنعُ كصنائعكَ و[من له] جبروتكَ؟ فكلُّ صنائعكَ طيِّبة»..

ஒரு முறை தாவூத் (அலை) அவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து இருந்தார்கள். அப்போது அங்கே ஒரு குளவி வந்து அங்கு வலையை விட்டும் வெளியேறி வந்த சிலந்தியை சாப்பிட பிடித்தது. அப்போது அங்கே மனநலம் பாதித்த ஒருவன் ஒரு குச்சியுடன் வந்தான். அவன் அந்த குச்சியை வைத்து அந்த குளவியை விரட்டிச் சென்றான். 

இதைப் பார்த்த தாவூத் அலை அவர்கள் அல்லாஹ்விடம் அல்லாஹ்வே! இந்த படைப்புகளை எதற்காக படைத்துள்ளாய்? குளவி மலரில் இருந்து தேனை அருந்துகிறது. அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. சிலந்தி பட்டு நூல்களை வெளியாக்குகிறது அதை நெய்து யாரும் ஆடையாக அணிவதில்லை. இதோ இந்த மனநலம் பாதிக்கப்பட்ட இந்த மனிதன் உன்னுடைய படைப்புகளை நோவினை செய்கிறான். இதற்காகத் தான் நீ இவைகளை படைத்தாயா? என்று கேட்டார்.

 

அதற்கு, அல்லாஹ் "தாவூதே! நீர் என் படைப்புகளை கேலி செய்கிறீரா?  ஒரு நேரம் வரும் அப்போது அதன் பக்கம் நீர் தேவையாகுவீர்! அன்று நீர் அந்த படைப்புகள் எதற்காக படைக்கப்பட்டுள்ளன என்பதை உணர்ந்து கொள்வீர்" என்றான்.

அதன் பின்னர் சில  ஆண்டுகளுக்குப் பிறகு, வஞ்சகன் சவுல் (ஜாலூத்)  என்ற மன்னன் தாவூது (அலை) அவர்களை கொலை செய்ய துரத்தி வந்த போது எருசலேமுக்கு அருகிலுள்ள ஒரு குகையில் ஒளிந்து கொண்டபோது,  ஒரு சிலந்தி அந்தக் குகையின் வாசலின் குறுக்கே வலையைப் பின்னியது. சவுல் வலையைக் கண்டதும், தன் ஆட்களை அழைத்து, வலை பின்னப்பட்டு இருக்கிறது . யாரும் உள்ளே நுழைய முடியாது என்பதைக் காட்டியதால், குகையைத் தேடுவது பயனற்றது என்று கூறினான். எனவே தாவூத் (அலை) அவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டது,  பின்னர் அவர் உயிர் பிழைத்து  இஸ்ரவேலின் அரசராக மாறினார்கள். 

அப்போது, தாவூத் (அலை) அவர்கள் "உன்னை இறைவன் அவனுடைய பரக்கத்தால் படைத்துள்ளான். இறைவா! உன் படைப்பாற்றலால் நீ பரக்கத்தானவன்! உன்னைப் போல் இந்த உலகில் காரியங்களை செயல் படுத்தக் கூடியவன் எவன் இருக்கின்றான்?! இந்த உலகில் நீ படைத்துள்ள அனைத்துப் படைப்புகளும் நல்ல ஒரு நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளது" என்றார்கள். ( நூல்: அல் புஸ்தான் ஃபீ இஃராபி முஷ்கலாத்தில் குர்ஆன் )

வரலாற்று அறிஞர்கள் நபி {ஸல்} அவர்கள் வாழும் காலத்தில் நபித்தோழர்களின் ஒரு குழுவுக்கும் சிலந்தி வலை பின்னி அவர்களைப் பாதுகாத்தது என்று. அதற்கு ஆதாரமாக பின்வரும் நிகழ்வைக் குறிப்பிடுகின்றனர்.

قال العلماء: نسج العنكبوت على جماعة غير النبي صلى الله عليه وسلم، : شخص من الصحابة يقال له: «عبد الله بن أنيس» بعثه رسول الله صلى الله عليه وسلم لأجل قتل شخص من الكفار يقال خالد بن نبيح الهذلي، فذهب إليه وهو بالغرفة فقتله ثم احتمل رأسه ودخل في غار فنسجت عليه العنكبوت، وجاءوا لطلبه فلم يجدوا شيئاً، فلما وصلوا إلى باب الغار نسج العنكبوت فانصرفوا راجعين، ثم خرج وسار إلى النبي صلى الله عليه وسلم فلما رأه النبي صلى الله عليه وسلم قال:«أفلح الوجه» قال: وجهك يا رسول الله، ووضع الرأس بين يديه، وأخبره الخبر فدفع إليه عصى كانت بيده وقال:«تُخص بهذه في الجنة» فكانت عنده إلى أن حضرته الوفاة ووصى أهله أن يدفنوها في كفنه ففعلوا، وكانت مدة غيبته ثمان عشرة ليلة.

இப்னு இஸ்ஹாக் (ரஹ்)   அறிவிக்கிறார்கள்:  நபி (ஸல்) அவர்களுக்குக் கடும் நோவினை தந்து வந்த ஸல்லாம் இப்னு அபுல்ஹுகைக் இவனது புனைப் பெயர் அபூராஃபிஎனப்படும். இன்னொரு அறிவிப்பில் அவனது பெயர் காலித் இப்னு நபீஜுல் ஹத்லீ என்று வந்துள்ளது. யூத இனத்தைச் சேர்ந்த இவன் மிகப் பெரிய கொடியவனாக இருந்தான். முஸ்லிம்களுக்கு எதிராக அகழ் போரில் படைகளை ஒன்று திரட்டியவர்களில் இவனும் ஒருவன்.

இவன் போரின் போது முஸ்லிம்களின் எதிரிகளுக்குப் பெருமளவில் பொருளுதவி செய்தான். நபி (ஸல்) அவர்கள் அவனைக் கொல்வதற்கு அனுமதி வழங்கினார்கள். ஐந்து நபர்கள் கொண்ட ஒரு குழு இதற்காக புறப்பட்டுச் சென்றது. இவர்கள் அனைவரும் கஸ்ரஜ் கிளையினரில் ஸலமா குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்களின் தளபதியாக அப்துல்லாஹ் இப்னு அதீக் (ரழி) இருந்தார். அவர்களில் அப்துல்லாஹ் இப்னு உனைஸ் (ரலி) அவர்களும் ஒருவர்.

அனைத்து நபித்தோழர்களும் கோட்டைக்குள் சென்று அபூ ராஃபியைக் கொல்வதில் பங்கெடுத்தனர். அப்துல்லாஹ் இப்னு உனைஸ் (ரழி) என்ற தோழர்தான் அவனை வாளால் வெட்டினார். அப்துல்லாஹ் இப்னு அதீக்கின் கெண்டைக்கால் உடைந்து விட்டதால் மற்ற தோழர்கள் அவரைச் சுமந்து கொண்டு கோட்டைக்குள் தண்ணீர் வருவதற்காக இருந்த குகை போன்ற வழியின் உள் பகுதிக்குள் நுழைந்து கொண்டனர். அந்த நேரத்தில் அந்த இடத்தில் சிலந்தி ஒன்று வலை பின்னியது. கோட்டையில் இருந்த யூதர்கள் நெருப்பை மூட்டி விரைந்து சென்று பல இடங்களில் தேடினர். நபித்தோழர்கள் ஒளிந்திருந்த இடத்தில் தேடியும் சிலந்தி வலை பின்னி இருந்ததால் அவர்களால் நபித்தோழர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்பு யூதர்கள் அனைவரும் தங்கள் தலைவன் நிலையை அறிய திரும்பினர். அதற்குப் பின் நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு அதீக்கை சுமந்து கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தனர் கொய்து வரப்பட்ட அவனுடைய தலையை நபி ஸல் அவர்களின் முன்மாக வைத்தனர். அப்போது நபி ஸல் அவர்கள் தமது கையில் வைத்திருந்த அஸாவை அப்துல்லாஹ் இப்னு உனைஸுக்கு கொடுத்தார்கள். அதை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டாரகள். வாழ்வின் இறுதிக் காலத்தில் மரண நேரத்தில் இருக்கும் போது மாநபி ஸல் அவர்கள் தந்த அந்த அஸாவை தம்மோடு கஃபன் செய்யுமாறு வஸிய்யத் செய்தார்கள். அவர்கள் இந்த உலகை விட்டு விடை பெற்றதன் பின்னர் அவ்வாறே செய்யப்பட்டது. .( நூல்:ஃபத்ஹுல் பாரி, இப்னு ஹிஷாம் )

நவீன வரலாற்றிலும், ஜப்பானிய புராணத்திலும் சிலந்தி இடம் பெற்றுள்ளது...

Yoritomo

Eight hundred years ago Yoritomo, a warrior from Japanese mythology, was running from his enemies after a defeat in battle when he hid inside a large hollow tree. While he was hiding, a spider built a web across the opening. When his enemies found the hollow tree, they were convinced that Yoritomo was not inside because of the web. Yoritomo escaped to become a shogun (an important military leader).

யோரிடோமோ

எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஜப்பானிய புராணங்களில் வரும் ஒரு போர்வீரன் யோரிடோமோ, போரில் தோல்வியடைந்த பிறகு தனது எதிரிகளிடமிருந்து தப்பி ஓடியபோது, ஒரு பெரிய வெற்று மரத்திற்குள் ஒளிந்து கொண்டான். அவன் மறைந்திருந்தபோது, ஒரு சிலந்தி திறப்பின் குறுக்கே ஒரு வலையை உருவாக்கியது. அவனது எதிரிகள் வெற்று மரத்தைக் கண்டதும், வலையின் காரணமாக யோரிடோமோ உள்ளே இல்லை என்று உறுதியாக நம்பினர். யோரிடோமோ தப்பித்து ஒரு ஷோகன் (ஒரு முக்கியமான இராணுவத் தலைவர்) ஆனார்.

Robert the Bruce

In 1306, Robert the Bruce and his army had been fighting against King Edward I of England for control of Scotland. Robert was lying exhausted in a barn when he noticed a spider try to fix its web to a beam six times. On its seventh attempt, the spider succeeded. Robert was inspired, saying,

if at first you don't suceed, try try again

He then gathered together some more followers and they won the next battle. After a successful campaign they eventually defeated Edward's army in 1319.

ராபர்ட் தி புரூஸ்

1306 ஆம் ஆண்டில், ராபர்ட் தி புரூஸ் மற்றும் அவரது படைகள் ஸ்காட்லாந்தின் கட்டுப்பாட்டிற்காக இங்கிலாந்தின் மன்னர் எட்வர்ட் I உடன் போரிட்டுக் கொண்டிருந்தன. ராபர்ட் ஒரு கொட்டகையில் சோர்வாகக் கிடந்தபோது, ஒரு சிலந்தி ஆறு முறை தனது வலையை ஒரு கற்றையில் பொருத்த முயற்சிப்பதைக் கவனித்தார். அதன் ஏழாவது முயற்சியில், சிலந்தி வெற்றி பெற்றது. ராபர்ட் ஈர்க்கப்பட்டு, இவ்வாறு கூறினார்,

முதலில் நீங்கள் வெற்றிபெறவில்லை என்றால், மீண்டும் முயற்சிக்கவும்.

பின்னர் அவர் மேலும் சில பின்தொடர்பவர்களை ஒன்று திரட்டினார், அவர்கள் அடுத்த போரில் வெற்றி பெற்றனர். வெற்றிகரமான பிரச்சாரத்திற்குப் பிறகு அவர்கள் இறுதியில் 1319 இல் எட்வர்டின் இராணுவத்தை தோற்கடித்தனர். ( நன்றி: australianmusem.com, 20/11/2018 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய உவமைகளை உளமாற சிந்தித்து அவனது உள்ளமையை படைப்பாற்றலை சிந்தித்து படிப்பினையும் பாடமும் பெரும் அறிவுடைய மக்களாக நம்மை ஆக்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment